மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

30.8.10

எல்லா வேலைகளுக்கும் லாயக்கானவன் எவன்?

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
எல்லா வேலைகளுக்கும் லாயக்கானவன் எவன்?

கேள்வி - பதில்கள் (இரண்டாவது சீஸன்) பகுதி.13
உங்களின் கேள்விகள் - வாத்தியாரின் பதில்கள்
++++++++++++++++++++++++++++++++++++++===========
மின்னஞ்சல் எண்.40
S. தினேஷ் மாதவன்
S.Dinesh
பொறியாளர்
சென்னை
வயது 21

Question 1 :
Why Guru,Sani, Sevvai have three aspects (Paarvai)?

அவைகள் ஜோதிடத்தின் அடிப்படை விதிகளின்படி உள்ளதாகும். அதை நமக்கு வகுத்துக்கொடுத்தவர்கள் வராஹிமிஹிரர், பராசுரர் போன்ற முனிவர்கள். ரிஷிகள். அந்த மூன்று கிரகங்களுக்கு மட்டும் பார்வையில் அதிகப் படியான சலுகைகள் ஏன் என்பதற்கு யாரைக் கேட்க முடியும்? அந்த முனிவர்கள், ரிஷிகள் எல்லாம் ஐந்தாம் மற்றும் ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்கள்.

இந்திய அரசியல் சட்டப்படி ஜனாதிபதிதான் நாட்டின் முதல் குடிமகன் என்றாலும், அவரைவிட, அதிகமான அதிகாரங்களுடன், சக்தியுடன் (power) விளங்குபவர் நாட்டின் பிரதமர். அவருக்கு ஏன் அந்த அதிகப்படியான (அதாவது முதல் குடிமகனைவிட) சலுகைகள் என்று நீங்கள் கேட்டால் என்ன பதில் சொல்லமுடியும்? இந்திய அரசியல் சட்டத்தை உருவாக்கியவர்களைத்தான் கேட்க முடியும்? நம்மால் அது முடியுமா? அதுபோலத்தான் இதுவும்!

Question 2 :
To calculate Bukthi,Antharang is there any formula?

தசையையும், புக்தியையும் கணிப்பதற்கு சூத்திரங்கள் உள்ளன. அந்தரங்களுக்கு இருப்பதாகத் தெரியவில்லை. பஞ்சாங்கங்களைப் பார்த்துத் தெரிந்து கொள்ள வேண்டும்.

Question 3 :
what are the planetary positions to possess "intuition power"?

இந்திய ஜோதிடத்தில் பல மேன்மைகள் உள்ளன. அதன் ரகசியங்களை அல்லது அதிசயங்களை முழுமையாகத் தெரிந்து கொள்ள முடியாது அல்லது விளக்க முடியாது. அவற்றில் நீங்கள் குறிப்பிடும் அந்த "intuition power"ம் ஒன்று. அதைத் தெய்வ சக்தி அல்லது தெய்வ அருள் என்று எடுத்துக்கொள்ளலாம். தெய்வபக்தி நிறைந்த சிலருக்கு அபூர்வமாக அந்த சக்தி கிடைக்கும்.

ஜோதிடத்தில் ஆழ்ந்த அறிவும் இந்த தெய்வசக்தியையும் கொண்ட மனிதர் ஜாதகப் பலன்களைச் சிறப்பாகச் சொல்வார். பொட்டில் அடித்த மாதிரி சரியாகச் சொல்வார். பழசைச் சொல்லும்போது கேட்பவன் மிரண்டு போவான். தொடர்ந்து எதிர்காலத்தைச் சொல்லும்போது. அசந்து போவான். விதிக்கப்பட்டுள்ளது எல்லாம் முன்பே எழுதப்பட்டுள்ளது (தலை எழுத்து) ஜாதகத்தின் மூலம் அதைச் சொல்ல முடியும் என்பதற்குச் சான்றாக விளங்குபவர்களே அவர்கள்தான்.

அவர்களுக்கு அந்த சக்தி எப்படிக்கிடைத்தது?

கண்டுபிடிக்க முடியாது?

அள்ளிக்கொண்டுபோய் கட்டித் தொங்கவிட்டு, அடித்துக் கேட்டாலும் அதைக் கண்டுபிடிக்க முடியாது (உங்கள் வயதிற்காக இதைச் சொல்கிறேன்)

விளக்கம் போதுமா?

Question 4 :
How to find whether Love Marriage will be Success or not?

திருமணத்தை ஏன் பிரிக்கிறீர்கள்? காதல் திருமணம் என்றாலும் பெற்றோர் செய்துவைத்த திருமணம் என்றாலும் திருமணம் திருமணம்தான்! திருமணங்கள் வெற்றியில் முடிவதற்கு ஒரு காரணம்தான். தம்பதிகளுக்குள் எல்லாம் ஒத்துப்போய் விட்டது. அதைப்பற்றி யாரும் கேள்விகள் கேட்கமாட்டார்கள். அல்லது கவலைப்பட மாட்டார்கள். தோல்வியில் முடிவதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. அதை மட்டும் தெரிந்து கொள்ள அல்லது அதுபோல் நடந்துவிடக்கூடாதே என்கின்ற எச்சரிக்கை உணர்வு மேலிடும்போது ஜாதகங்களை ஆராய வேண்டும்.

ஆண், பெண் இருவரின் ஜாதகங்களையும் ஆராய வேண்டும். இருவரின் ஏழாம் வீடு, குடும்ப ஸ்தானம், லக்கினம் ஆகிய மூன்றையும் அலச வேண்டும். தோஷங்களை அலச வேண்டும் இருவருக்கும் அல்லது இருவரில் ஒருவருக்கு புனர்பூ தோஷம் இருக்கக்கூடாது. இரண்டாம் அதிபதி எட்டில் அமர்ந்துள்ள பெண் கணவனுடன் குடும்பம் நடத்தமாட்டாள் (பொது விதி) அவளுடைய திருமண வாழ்க்கை விவாகரத்தில் முடியும். இது போன்று பல அமைப்புக்கள் உள்ளன. ஜோதிடம் என்பது கடல். அதைக் குடத்தில் அடைக்க முடியாது. அதாவது ஒருவரியில் பதில் சொல்ல முடியாது.

அதைப்பற்றி 50 பக்கங்களுக்கு எழுதலாம். இதுவரை நிறைய  எழுதியுள்ளேன். பழைய பாடங்களைப் படியுங்கள்.
-----------------------------------------------------------------------------------------------------
மின்னஞ்சல் எண்.41
ஸ்ரீஸ்தன்

அன்புள்ள ஆசிரியருக்கு  வணக்கம்
தங்கள் வேலை அல்லது தொழில் சம்பந்தமாக எழுதிய பாடங்கள் மிக சிறப்பாக இருந்து. சிலர் தங்கள் வேலைகளில் அல்லது தொழில்களில் மிக கண்ணும் கருத்துமாக இருகின்றனர். சிறு சுகவீனம் வந்தால் என்ன அல்லது வேறு அவசிய விடயங்கள் இருந்தால் என்ன தங்கள் வேலைக்கு அல்லது தொழிலுக்கு செல்வதை எக்காரணம் கொண்டும் தவிர்ப்பதில்லை. இதற்கு எந்த அமைப்பு காரணம் என்று தயவு செய்து தங்களுக்கு வசதிப்படும் பொழுது விளக்க முடியுமா என்று பணிவன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்
நன்றி
தங்கள் வகுப்பு  மாணவன்
ஸ்ரீ

சிலபேர் சோம்பேறிகளாக இருப்பார்கள். சிலர் சுறுசுறுப்பாக இருப்பார்கள். சிலபேர் பிடிவாதம் நிறைந்தவர்களாக இருப்பார்கள். சிலர் எதையும் அனுசரித்துப் போகக்கூடியவர்களாக இருப்பார்கள். சில பேர்கள் முன் கோபக்காரர்களாக இருப்பார்கள். சிலர் சாந்த சொரூபியாக இருப்பார்கள். சிலர் சிடுமூஞ்சியாக இருப்பார்கள். சிலர் சிரித்தமுகமாக இருப்பார்கள் இப்படி எழுதிக்கொண்டே போகலாம்.

காரணம் என்ன?

எல்லாம் வாங்கிவந்த வரம்!

ஜாதகப்படி சொன்னால், இவை எல்லாம் குணம் சம்பந்தப்பட்ட விஷயங்கள். “இவன் ரெம்ப நல்லவன்டா. எப்படி அடிச்சாலும் தாங்கிக்கிட்டுச் சும்மா இருக்கான்டா” என்று சொல்கிறார்கள் இல்லையா? அதுவும் குணம் சம்பந்தப்பட்ட விஷயம்தான்.

லக்கினம், லக்கினாதிபதி & லக்கினத்தில் அமரும் கிரகங்களை வைத்து அவைகள் ஆளாளுக்கு வேறுபடும்
உதாரணத்திற்கு லக்கினாதிபதியுடன் சனி சேர்ந்தால் ஆசாமி சோம்பேறியாக வழுவட்டையாக இருப்பான். லக்கினாதிபதியுடன் செவ்வாய் கை கோர்த்தால் ஆசாமி படு சுறுசுறுப்பாக இருப்பான். லக்கினாதிபதியுடன் சுக்கிரன் சேர்ந்தால் ஆசாமி எல்லா வேலைக்கும் லாயக்கான ஆளாக இருப்பான் (எல்லா வேலைகளும் என்றால் அர்த்தம் தெரியுமல்லவா?)
--------------------------------------------------------------------------------------------------------------
மின்னஞ்சல் எண்.42
செ.பழனிமுருகன்

வணக்கம்,

1. லக்னாதிபதி நன்றாக இருக்க வேண்டும் என்று பல முறை கூறியுள்ளீர்கள்,ஆனால் ராசியாதிபதி, நட்சத்திராதி பதியை பொருத்து ஒரு சந்தேகம்., ராசியாதிபதி, நட்சத்திராதிபதி ஒரு ஜாதகத்தில் சுபராக வந்தால் நற்பலன்கள் கூடுமா மற்றும் பாபராக வரும்போது தீமைகள் குறையுமா, அவற்றிற்கான தசா-புத்தி பலன்களையும் தருக?

பள்ளிக்கூடத்தில் கோடிட்ட இடங்களை நிரப்புக என்று கேள்விகளைத் தருவார்கள். அதுபோல உள்ளது உங்கள் கேள்வி

சூப்பர் டீலக்ஸ் - வோல்வா - Air suspension with air condition - பேருந்தாக இருந்தால் பயணத்தின் சுகம் கூடுமா? அல்லது அதே பேருந்து இவை ஒன்றுமே இல்லாமல் அறுதப் பழசாக - சீட்டெல்லாம் கிழிந்து குஷன் இல்லாமல் - FC பண்ணாத வண்டியாக - 15 வருடம் பழசான வண்டியாக இருந்து, பயணித்தால் சுகம் குறைந்து அவதிகள் அதிகமாகுமா என்று கேட்பதுபோல உள்ளது.

இல்லாள் (மனைவி) குணவதியாக வந்தால் வாழ்க்கை என்பது டீலக்ஸ் பஸ் பயணம் போன்று சுகமாக இருக்கும். இல்லாள் சண்டாளியாக வந்தால் வாழ்க்கை ஓட்டை பஸ்ஸில் பயணம் செய்வதைப்போன்று இருக்கும்.

ராசியாதிபதி, நட்சத்திராதிபதி சுபராக வந்தால் வாழ்க்கை டீலக்ஸ் பஸ் பயணம். ராசியாதிபதி, நட்சத்திராதிபதி பாபக்கிரகமாக வந்தால் வாழ்க்கை ஓட்டை பஸ் பயணம்

தப்பிக்க முடியாது. பஸ்சை விட்டுக் குதிக்க முடியாது. கூடுதல் குறைவுகள் எல்லாம் பார்க்க முடியாது. பயணித்தே ஆகவேண்டும்

"பாதை வகுத்த பின்னே பயந்தென்ன லாபம்
பயணம் நடத்திடு முடிந்திடும் பாபம்!"

----- கவியரசர் கண்ணதாசன்.

நல்ல மனையாள் கிடைத்தால் உங்களைப் பிடிக்கமுடியாது. மோசமான துணைவி என்றால் நீங்கள் தத்துவ ஞானியாகிவிடுவிர்ர்கள். அதைத்தான் ஆங்கிலத்தில் Better half, Bitter half என்று பிரித்துச் சொல்வார்கள்.
நீங்கள் அனுசரித்துப்போனால் Bitter halfகூட Better halfஆக மாறிவிடும்.

விளக்கம் போதுமா?

2. பிறந்த எண்ணிற்கான ஆதிக்க கிரகம், ஜாதகத்தில் பாவியாக வந்தால் மோதிரம் அணியலாமா?

நீங்கள் மோதிரம் போட்டுக்கொள்வதால் பாவியாக உள்ள சனி அல்லது ராகு அல்லது கேது அல்லது செவ்வாய் எல்லாம் கல்லால் ஏற்படவிருக்கும் encounter shots களுக்குப் பயந்து நல்லவர்களாக மாறிவிடுவார்களா என்ன?
அதெல்லாம் மாறமாட்டார்கள். எல்லாம் விதிப்படிதான் நடக்கும். விதித்தபடிதான் அவர்களும் தங்களுடைய சேஷ்டைகளைச் செய்வார்கள்.

பிறகு கற்களால் ஏற்படும் பயன் என்ன?

குறிப்பிட்ட கற்கள் அதற்குரிய கிரகத்தின் magnetic rays களைக் குவித்து ஜாதகனுக்கு ஏற்படவுள்ள நன்மைகளைக் கூட்டித்தரும். சுலபமாக்கும் enhancement என்று வைத்துக்கொள்லுங்களேன். தொலைக்காட்சிப் பெட்டிகளுக்கு booster என்னும் கருவி இருக்கிறது இல்லையா? அதைப்போல என்று வைத்துக்கொள்ளூங்கள்

3. லக்னாதிபதி பாதக ஸ்தானத்திற்கும் அதிபதியாக வரும்போது , 
(எ.கா) விருச்சிக லக்னத்திற்கு செவ்வாய் 1&6க்கு அதிபதி., 
செவ்வாய் (6,8,12)ல் மறைந்தால் '' கெட்டவன் கெட்டிடில் நன்று '' 
என்று கொள்வதா இல்லை லக்னாதிபதி (6,8,12)ல் மறைந்து  
விட்டது தீமை எனக் கொள்வதா?

லக்கினாதிபதியை எப்படிக் கெட்டவன் என்று சொல்கிறீர்கள்? உங்கள் படத்தின் (ஜாதகத்தின்) நாயகன் அவர்தான். உங்கள் மொழியில் சொன்னால் அவர்தான் ஹீரோ.அவரைப்போய்க் கெட்டவன் என்று சொல்கிறீர்களே? உங்கள் படம் எப்படி Box Office Hit ஆகும்? அல்லது நூறு நாட்கள் ஓடும்?

நாயகன் 6 அல்லது 8 அல்லது 12ஆம் வீடுகளில் அமர்ந்தால், கதையில் அதிகமான முடிச்சுகளையும் (knots) திருப்பங்களையும் (turns)  எதிர்பார்ப்புக்களையும் (supense) கொடுப்பார். திரைக்கதை சுவாரசியம் மிகுந்ததாக இருக்கும். கடைசி ரீல் வரை படம் தொய்வில்லாமல் இருக்கும். வாழ்க்கையில் எதிர் நீச்சல் போடலாம். சீக்கிரம்  ஞானியாகிவிடலாம்.

4. விபரீத-ராஜயோகத்தில் உள்ள கிரகங்கள் உச்சம், ஆட்சி, நட்பு பெறுவதற்கும், பகை, நீசம் பெறுவதற்குமான பலன்கள் என்ன?

என்ன வேறுபாடு என்று கேட்கிறீர்கள் இல்லையா? 

Multinational Banks like Bank of America, Citi Bank (மேல்நாட்டு வங்கிகள்) Nationalised Banks in India (தேசிய வங்கிகள்), Private Banks in India (தனியார் வங்கிகள்), Co-operative Banks, (கூட்டுறவு வங்கிகள்) Village Banks (கிராம வங்கிகள்) என்றுள்ள வங்கிகளில் வேலை பார்ப்பவர்களுக்கு கிடைக்கும் சம்பளமும் (Salary), வேலைபார்க்கும் சூழ்நிலையும் (working conditions) ஒரே மாதிரி இல்லாமல், மலைக்கும் மடுவிற்கும் உள்ள வித்தியாசங்களுடன் இருக்குமில்லையா? அதுபோலத்தான் நீங்கள் கேட்டுள்ளதும் இருக்கும்.

விளக்கம் போதுமா?

பத்தாது என்றால் சொல்லுங்கள். மீண்டும் வருகிறேன்!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
(தொடரும்)

அன்புடன்,
வாத்தியார்

வாழ்க வளமுடன்!

41 comments:

  1. Vanakam sir,
    Today's question and answer is going interesting sir... I have a question, if for example 2nd house lord is hidden in 12th will the girl can run the family, plus in 2nd house 30 parals....will it be helpful?

    Thanks
    Thanuja

    ReplyDelete
  2. அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,
    மிகவும் சிறப்பான. பதில்கள் .

    நன்றி
    தங்களன்புள்ள மாணவன்

    வ.தட்சணாமூர்த்தி
    2010-08-30

    ReplyDelete
  3. வாத்தியார் ஐயா வணக்கம்.

    சில விளக்கம் தேவை

    பட்சி சாஸ்திரம் (விக்ரமாதித்தன் கடைகளில் வருமே அபூர்வ பறவைகள் ) மற்றும் சாமுத்திரிக லட்சணம் பற்றியும் கொஞ்சம் கூறுங்களேன் வகுப்பறையில் ஐயா

    >>>>>>>>>>>>><<<<<<<<<<<<<<<<<<

    கீழ்க்கண்ட கூற்று இந்த உலகில் உள்ள அனைத்து நாட்டு மனிதருக்கும் இருக்கும் தானே

    "intuition power"ம் ஒன்று. அதைத் தெய்வ சக்தி அல்லது தெய்வ அருள் என்று எடுத்துக்கொள்ளலாம். தெய்வபக்தி நிறைந்த சிலருக்கு அபூர்வமாக அந்த சக்தி கிடைக்கும்.

    >>>>>>>>>>>>>>>>><<<<<<<<<<<<<<<<<<

    " என்னத்ததான் உருண்டு புரண்டாலும் முதிகில் ஓட்டும் மணல்தான் ஓட்டும் என்பது தானே உண்மை "! இந்த உண்மைமையை நன்றாக புரிந்து இருந்தும் சில மற்றும் பல நேரங்களில் வண்டி சக்கரம் (மனம்) தடம் மாறுவது மட்டும் ஏனோ ?

    வரவர மாமியார் கழுதை போல ஆனா காதையாக ஆகுது கதை

    இது தான் விதிக்கப்பட்டது அல்லது நடக்கும் என்று தெரிந்தும் பாழாய்ப்போன மனது மட்டும் அமைதி அடையவே மாட்டுகுது எமது அருமை வாத்தியார் ஐயா

    >>>>>>>>>>>>>>>>>><<<<<<<<<<<<<<<<<

    தங்களுடைய கடைசி பெஞ்சு மாணவனும் ஞானியாக போரானே :-)))

    இப்படி எல்லாம் சொல்லி மனதை தேற்றிக்கொள்ள வேண்டியது தான் வேறு என்ன பன்ன முடியும்

    ReplyDelete
  4. Please tell me whether it is correct for Dasa, Bhukthi and Antharam calulation?
    Kethu - 5.833%, Sukran - 16.666%, Suriyan - 5.000%, Chandran - 8.333%, Sevvai - 5.833%, Rahu - 15.000%, Guru - 13.333%, Sani - 15.833%, Bhudan - 14.166%. For example Surya Dasa = 120Yx5% = 6 years, Surya Bhukthi = 6Yx5% = 3M, 18D, Surya Andhram = 108Dx5% = 5D, 24Na
    Y=Years, M=Months, D=Days, Na=Nazhigai

    ReplyDelete
  5. இனிய காலை வணக்கம் ,,,,

    அய்யா இன்றைய தலைப்பு மற்றும் பாடம் அசத்தலாக உள்ளது,,,,,லக்னாதிபதி ராகு உடன் சேர்ந்து இருந்தால் ஆசாமி எப்ப்டி இருப்பார்....

    நன்றி வணக்கம்....

    ReplyDelete
  6. அருமை. லக்னாதிபதி 12, 6 அல்லது குறைந்த பரல்களுடன் இருந்து ராசி நாதன் வலுவுடன் இருந்தால் பலன் எப்படி அய்யா?

    ReplyDelete
  7. /////Alasiam G said...
    அருமை ஐயா!/////

    நல்லது. நன்றி ஆலாசியம்!

    ReplyDelete
  8. //////Thanuja said...
    Vanakam sir,
    Today's question and answer is going interesting sir... I have a question, if for example 2nd house lord is hidden in 12th will the girl can run the family, plus in 2nd house 30 parals....will it be helpful?
    Thanks
    Thanuja//////

    30 பரல்கள் இருக்கிறதே. கவலையை விடுங்கள். குடும்ப வாழ்க்கை நன்றாக இருக்கும். இல்லையென்றால் 30 பரல்கள் கிடைத்ததற்கான மதிப்பு/பலன் என்ன?

    ReplyDelete
  9. //////V Dhakshanamoorthy said...
    அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,
    மிகவும் சிறப்பான. பதில்கள் .
    நன்றி
    தங்களன்புள்ள மாணவன்
    வ.தட்சணாமூர்த்தி/////

    நல்லது. நன்றி தட்சணாமூர்த்தி!

    ReplyDelete
  10. //////kannan said...
    வாத்தியார் ஐயா வணக்கம்.
    சில விளக்கம் தேவை
    பட்சி சாஸ்திரம் (விக்ரமாதித்தன் கடைகளில் வருமே அபூர்வ பறவைகள் ) மற்றும் சாமுத்திரிக லட்சணம் பற்றியும் கொஞ்சம் கூறுங்களேன் வகுப்பறையில் ஐயா/////

    ஏற்கனவே பலர் ஜோதிடத்தைக் கிளி ஜோதிடம் போன்றது என்று நினைத்துக் கொண்டு இங்கே வந்து தகறாறு செய்கிறார்கள். இதில் பட்சி சாஸ்திரத்தை எழுதினால் பிரித்து மேய்ந்துவிடுவார்களே சுவாமி!
    >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
    //////கீழ்க்கண்ட கூற்று இந்த உலகில் உள்ள அனைத்து நாட்டு மனிதருக்கும் இருக்கும் தானே
    "intuition power"ம் ஒன்று. அதைத் தெய்வ சக்தி அல்லது தெய்வ அருள் என்று எடுத்துக்கொள்ளலாம். தெய்வபக்தி நிறைந்த சிலருக்கு அபூர்வமாக அந்த சக்தி கிடைக்கும்.//////

    ஏற்கனவே அந்த தெய்வ அருள் பெற்றவர்களும் மனிதர்கள்தானே! அதனால் இது அனைவருக்கும் பொருந்தும்!
    >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
    ////////"என்னதான் உருண்டு புரண்டாலும் முதுகில் ஓட்டும் மணல்தான் ஓட்டும் என்பது தானே உண்மை "! இந்த உண்மைமையை நன்றாக புரிந்து இருந்தும் சில மற்றும் பல நேரங்களில் வண்டி சக்கரம் (மனம்) தடம் மாறுவது மட்டும் ஏனோ ?
    வரவர மாமியார் கழுதை போல ஆனா காதையாக ஆகுது கதை
    இது தான் விதிக்கப்பட்டது அல்லது நடக்கும் என்று தெரிந்தும் பாழாய்ப்போன மனது மட்டும் அமைதி அடையவே மாட்டுகுது எமது அருமை வாத்தியார் ஐயா//////

    முதலில் மனதைக் கட்டுப்படுத்த பழகிக்கொள்ளுங்கள். மற்றதெல்லாம் தானாகக் கிடைக்கும்!
    >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
    /////// தங்களுடைய கடைசி பெஞ்சு மாணவனும் ஞானியாகப் போகிறானே :-)))
    இப்படி எல்லாம் சொல்லி மனதை தேற்றிக்கொள்ள வேண்டியது தான் வேறு என்ன பண்ண முடியும்//////

    அவநம்பிக்கை எதற்கு? நீங்கள் எதுவாக ஆகவேண்டும் என்று திடமாக நம்புகிறீர்களோ - அதுவாக ஆக முடியும். நம்பிக்கைதான் எல்லாவற்றிற்கும் அடிப்படை!

    ReplyDelete
  11. அய்யா,

    இன்றைய பதில்கள் அருமை

    மிக்க அன்புடன்
    வெங்கடேசன்

    ReplyDelete
  12. Dear Sir

    Good Morning..

    Kelviyum Badhilum Arumai Sir.

    Thank you

    Loving Student
    Arulkumar Rajaraman

    ReplyDelete
  13. /////sellaprasad said...
    Please tell me whether it is correct for Dasa, Bhukthi and Antharam calulation?
    Kethu - 5.833%, Sukran - 16.666%, Suriyan - 5.000%, Chandran - 8.333%, Sevvai - 5.833%, Rahu - 15.000%, Guru - 13.333%, Sani - 15.833%, Bhudan - 14.166%. For example Surya Dasa = 120Yx5% = 6 years, Surya Bhukthi = 6Yx5% = 3M, 18D, Surya Andhram = 108Dx5% = 5D, 24Na
    Y=Years, M=Months, D=Days, Na=Nazhigai/////

    தசை புத்தி கணக்கிடுவதற்கான சூத்திரத்தை முன்பாகவே பதிவில் கொடுத்திருக்கிறேன். படித்துப்பாருங்கள்.

    ReplyDelete
  14. //////astroadhi said...
    இனிய காலை வணக்கம் ,,,,
    அய்யா இன்றைய தலைப்பு மற்றும் பாடம் அசத்தலாக உள்ளது,,,,,லக்னாதிபதி ராகு உடன் சேர்ந்து இருந்தால் ஆசாமி எப்படி இருப்பார்....
    நன்றி வணக்கம்..../////

    அது அவர் சேர்ந்திருக்கும் லக்கினாதிபதியைப் பொறுத்து மாறுபடும். சூரியனுடன் சேர்ந்தால் உடல் உபாதைகள். சந்திரனுடன் சேர்ந்திருந்தால் மன உபாதைகள் இப்படி மாறுபடும்!. பொதுவாக ராகு கக்கினாதிபதியுடன் சேர்ந்திருப்பது நன்மையான அமைப்பல்ல!

    ReplyDelete
  15. என்னக்கு 8 லக்கினாதிபதி- தேடிகிட்டே இருக்கேன் !

    ReplyDelete
  16. //////Govindasamy said...
    அருமை. லக்னாதிபதி 12, 6 அல்லது குறைந்த பரல்களுடன் இருந்து ராசிநாதன் வலுவுடன் இருந்தால் பலன் எப்படி அய்யா? /////

    லக்கினாதிபதியையும் ராசிநாதனையும் ஒன்று சேர்த்து எதற்காக வம்புக்கு இழுக்கிறீர்கள்? இருவரும் தனித்தனித் தன்மையை உடையவர்கள்.

    ReplyDelete
  17. ////venkatesan.P said...
    அய்யா,
    இன்றைய பதில்கள் அருமை
    மிக்க அன்புடன்
    வெங்கடேசன்////

    நன்றி வெங்கடேசன்!

    ReplyDelete
  18. /////Arulkumar Rajaraman said...
    Dear Sir
    Good Morning..
    Kelviyum Badhilum Arumai Sir.
    Thank you
    Loving Student
    Arulkumar Rajaraman////

    நல்லது. நன்றி ராஜாராமன்!

    ReplyDelete
  19. ////profit500 said...
    எனக்கு 8 லக்கினாதிபதி- தேடிக்கிட்டே இருக்கேன் !/////

    எட்டு லக்கினாதிபதியா? அல்லது 8ல் லக்கினாதிபதியா? சொல்வதைத் தெளிவாகச் சொல்லுங்கள்!

    ReplyDelete
  20. நவாம்சத்தில் சனி சந்திரன் பரிவர்த்தனை பெற்று ராசி சக்கரத்தில் சந்திரன் சனி-யின் பார்வை-யில் இருந்தால் புனர்பூ தோஷம் உண்டா?
    ஏதும் பரிகாரம் உள்ளதா?
    i feel it is a worst dosham for marriage life... அல்லது இதற்கும் மேல் அப்பன் சுப்பன் எல்லாம் உள்ளதா?

    ReplyDelete
  21. //லக்கினாதிபதியுடன் சுக்கிரன் சேர்ந்தால் ஆசாமி எல்லா வேலைக்கும் லாயக்கான ஆளாக இருப்பான் (எல்லா வேலைகளும் என்றால் அர்த்தம் தெரியுமல்லவா?)//

    Thanks for the lessons, what if Lagnathipathy Guru(in 11th House) and Sukra(in 4th House) is in parivarthana :)

    ReplyDelete
  22. //இந்திய ஜோதிடத்தில் பல மேன்மைகள் உள்ளன. அதன் ரகசியங்களை அல்லது அதிசயங்களை முழுமையாகத் தெரிந்து கொள்ள முடியாது அல்லது விளக்க முடியாது. அவற்றில் நீங்கள் குறிப்பிடும் அந்த "intuition power"ம் ஒன்று.//

    சரியான பார்வை. நன்றி!

    ReplyDelete
  23. ஐயா இன்றைய பதில்களுக்கு நன்றி,
    ஒரு சிறு ஐயம்,
    ராசி நாதனும், நட்சத்திர நாதனும் தீய வீடுகளுக்கு சொந்தக்காரர்கள் ஆகும் பொழுது அவர்களின் தன்மை எப்படி இருக்கும், பாதி நல்லவன் பாதி கெட்டவனா? அல்லது லக்னாதிபதி போல் இவர்களும் நாயகர்களா?
    இவன்
    இரா.புரட்சிமணி

    ReplyDelete
  24. /////Iyappan said...
    நவாம்சத்தில் சனி சந்திரன் பரிவர்த்தனை பெற்று ராசி சக்கரத்தில் சந்திரன் சனி-யின் பார்வை-யில் இருந்தால் புனர்பூ தோஷம் உண்டா?
    ஏதும் பரிகாரம் உள்ளதா?
    i feel it is a worst dosham for marriage life... அல்லது இதற்கும் மேல் அப்பன் சுப்பன் எல்லாம் உள்ளதா?////

    எல்லாவ்ற்றிற்கும் மேலாக அப்பனும் சுப்பனும் உள்ளார்கள். அப்பன் பழநியில் உள்ளான். சுப்பன் சுவாமி மலையில் உள்ளான்! அவனை வணங்குங்கள். தோஷம் எல்லாம் நீங்கிவிடும்.

    ReplyDelete
  25. /////Raja said...
    //லக்கினாதிபதியுடன் சுக்கிரன் சேர்ந்தால் ஆசாமி எல்லா வேலைக்கும் லாயக்கான ஆளாக இருப்பான் (எல்லா வேலைகளும் என்றால் அர்த்தம் தெரியுமல்லவா?)//
    Thanks for the lessons, what if Lagnathipathy Guru(in 11th House) and Sukra(in 4th House) is in parivarthana :)/////

    பரிவர்த்தனைக்கான பாடத்தை நடத்தியுள்ளேனே சுவாமி. அதைப் படியுங்கள். உங்கள் சொந்த ஜாகத்தில் ஏற்படும் சந்தேகங்களுக்கு எல்லாம் பழைய பாடங்களில் பதில் உள்ளது. முதலில் அவற்றைப் படியுங்கள்

    ReplyDelete
  26. //////Tamilulagam said...
    உங்கள் தளத்திற்க்கான வாசகர்களை அதிகமாக்க, உங்கள் பதிவுகளை தமிழ் உலகம் - இல் இணைக்கவும்////

    தகவலுக்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  27. /////kmr.krishnan said...
    //இந்திய ஜோதிடத்தில் பல மேன்மைகள் உள்ளன. அதன் ரகசியங்களை அல்லது அதிசயங்களை முழுமையாகத் தெரிந்து கொள்ள முடியாது அல்லது விளக்க முடியாது. அவற்றில் நீங்கள் குறிப்பிடும் அந்த "intuition power"ம் ஒன்று.//
    சரியான பார்வை. நன்றி!/////

    நல்லது. நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  28. /////R.Puratchimani said...
    ஐயா இன்றைய பதில்களுக்கு நன்றி,
    ஒரு சிறு ஐயம்,
    ராசி நாதனும், நட்சத்திர நாதனும் தீய வீடுகளுக்கு சொந்தக்காரர்கள் ஆகும் பொழுது அவர்களின் தன்மை எப்படி இருக்கும், பாதி நல்லவன் பாதி கெட்டவனா? அல்லது லக்னாதிபதி போல் இவர்களும் நாயகர்களா?
    இவன்
    இரா.புரட்சிமணி//////

    நீங்களே சொல்லிவிட்டீர்கள். சொந்தக்காரர்களாகும்போது என்று. சொந்தக்காரர்கள் (உடையவர்கள் அல்லது உரியவர்கள்) ஆன பிறகு அவர்களும் நாயகர்கள்தான்! அதில் என்ன சந்தேகம்?. மகரராசிக்காரகளுக்கு சனி ராசி அதிபதி. அவர் அந்த ராசிக்காரர்களுக்கு, நாயகன் என்ற முறையில் பல சலுகைகளை அள்ளிக் கொடுப்பார்.
    முதலில் அவர்களைக் கடுமையான உழைப்பாளிகள் ஆக்குவார். அதற்கான வாய்ப்பை ஏற்படுத்தித்தருவார்.
    இப்படி ஒவ்வொரு நாயகனும் செய்வார்!

    ReplyDelete
  29. //லக்கினாதிபதியுடன் சுக்கிரன் சேர்ந்தால் ஆசாமி எல்லா வேலைக்கும் லாயக்கான ஆளாக இருப்பான் (எல்லா வேலைகளும் என்றால் அர்த்தம் தெரியுமல்லவா?)//

    எனக்கும் லக்னாதிபதி சுக்கிரனுடன் இருக்கிறாரே.

    திருமண வாழ்க்கைக்கு புனர்பூ தோஷம் மட்டுமல்ல வேறு தோஷங்களும் பிரச்சினையைக் கொடுக்கலாம். Yes, we need a scape goat for our woes. வாழ்க்கையில் சிலர் தாங்கள் செய்யும் தவறுகளுக்கு எதன் மீதாவது பழி போட வேண்டும். அதற்கு சமய சஞ்சீவியாக இருப்பது இந்த தோஷங்கள்தான்.

    ReplyDelete
  30. //லக்னாதிபதி பாதக ஸ்தானத்திற்கும் அதிபதியாக வரும்போது ,
    (எ.கா) விருச்சிக லக்னத்திற்கு செவ்வாய் 1&6க்கு அதிபதி.,
    செவ்வாய் (6,8,12)ல் மறைந்தால் '' கெட்டவன் கெட்டிடில் நன்று ''
    என்று கொள்வதா இல்லை லக்னாதிபதி (6,8,12)ல் மறைந்து
    விட்டது தீமை எனக் கொள்வதா?

    லக்கினாதிபதியை எப்படிக் கெட்டவன் என்று சொல்கிறீர்கள்? உங்கள் படத்தின் (ஜாதகத்தின்) நாயகன் அவர்தான். உங்கள் மொழியில் சொன்னால் அவர்தான் ஹீரோ.அவரைப்போய்க் கெட்டவன் என்று சொல்கிறீர்களே? உங்கள் படம் எப்படி Box Office Hit ஆகும்? அல்லது நூறு நாட்கள் ஓடும்?

    நாயகன் 6 அல்லது 8 அல்லது 12ஆம் வீடுகளில் அமர்ந்தால், கதையில் அதிகமான முடிச்சுகளையும் (knots) திருப்பங்களையும் (turns) எதிர்பார்ப்புக்களையும் (supense) கொடுப்பார். திரைக்கதை சுவாரசியம் மிகுந்ததாக இருக்கும். கடைசி ரீல் வரை படம் தொய்வில்லாமல் இருக்கும். வாழ்க்கையில் எதிர் நீச்சல் போடலாம். சீக்கிரம் ஞானியாகிவிடலாம்.//
    வாத்தியாருக்கு,
    அவர் கேட்ட கேள்வி மாதிரிதான் நானும் நினைத்திருந்தேன்(ஒரு வேலை பாடங்களை தப்பாக படிச்சிட்டேனோ ?),
    1.
    லக்கினாதிபதி (செவ்வாய், சூரியன், சனி முதலியன) அசுப கிரகங்கள் இல்லையா , அதாவது கெட்டவன் இல்லையா ?? (மறுபடியும் எல்லாப் படத்தையும் ஒரு வருடத்துக்கு படிக்கனுமா வாத்தியாரே?)
    2.
    மேஷ லக்கின அதிபதி செவ்வாய், ஆறாம் (மறைவிடமான) இடமான கன்னியில் 'சனி'யுடன் சேர்ந்திருந்தால்
    வேறு சிறப்பு பலன்கள் உண்டா வகுப்பறை ஆசிரியரே !! (பத்தாம் இடத்தில் கேது, லக்கினத்தில் சந்திரன்) ?? :-(

    3.
    மேலும் //சீக்கிரம் ஞானியாகிவிடலாம்//
    இதில் உள்குத்து உண்டா , உண்மைப் பொருளை வாத்தியார் விளக்கவும்??

    ReplyDelete
  31. வணக்கம் சார்,
    இன்றைய பாடம் ரொம்ப நல்லாயிருந்தது. ரொம்ப நன்றி சார். கடல் தாண்டும் யோகம் யார் யாருக்கு அமையும் இந்த பாடத்திற்க்கு சுட்டி வேண்டும்
    நான் தேடிப்பார்த்தேன் சார். நாளைக்கும் நான் பார்ப்பேன். தொந்தரவுக்கு
    மன்னிக்கவும்.
    சுந்தரி

    ReplyDelete
  32. ananth said...
    //லக்கினாதிபதியுடன் சுக்கிரன் சேர்ந்தால் ஆசாமி எல்லா வேலைக்கும் லாயக்கான ஆளாக இருப்பான் (எல்லா வேலைகளும் என்றால் அர்த்தம் தெரியுமல்லவா?)//
    எனக்கும் லக்னாதிபதி சுக்கிரனுடன் இருக்கிறாரே.
    திருமண வாழ்க்கைக்கு புனர்பூ தோஷம் மட்டுமல்ல வேறு தோஷங்களும் பிரச்சினையைக் கொடுக்கலாம். Yes, we need a scape goat for our woes. வாழ்க்கையில் சிலர் தாங்கள் செய்யும் தவறுகளுக்கு எதன் மீதாவது பழி போட வேண்டும். அதற்கு சமய சஞ்சீவியாக இருப்பது இந்த தோஷங்கள்தான்.////////

    பிரச்சினை சில காரணங்களால் ஏற்படும். அது எதனால் என்று பார்க்க வேண்டும். ஒரு கிரகத்தின் மீது மட்டும் பழி சொல்வது தவறு.

    ReplyDelete
  33. /////'BLUESPACE' ARIVUMANI, GERMANY said...
    //லக்னாதிபதி பாதக ஸ்தானத்திற்கும் அதிபதியாக வரும்போது ,
    (எ.கா) விருச்சிக லக்னத்திற்கு செவ்வாய் 1&6க்கு அதிபதி.,
    செவ்வாய் (6,8,12)ல் மறைந்தால் '' கெட்டவன் கெட்டிடில் நன்று ''
    என்று கொள்வதா இல்லை லக்னாதிபதி (6,8,12)ல் மறைந்து
    விட்டது தீமை எனக் கொள்வதா?
    லக்கினாதிபதியை எப்படிக் கெட்டவன் என்று சொல்கிறீர்கள்? உங்கள் படத்தின் (ஜாதகத்தின்) நாயகன் அவர்தான். உங்கள் மொழியில் சொன்னால் அவர்தான் ஹீரோ.அவரைப்போய்க் கெட்டவன் என்று சொல்கிறீர்களே? உங்கள் படம் எப்படி Box Office Hit ஆகும்? அல்லது நூறு நாட்கள் ஓடும்?
    நாயகன் 6 அல்லது 8 அல்லது 12ஆம் வீடுகளில் அமர்ந்தால், கதையில் அதிகமான முடிச்சுகளையும் (knots) திருப்பங்களையும் (turns) எதிர்பார்ப்புக்களையும் (supense) கொடுப்பார். திரைக்கதை சுவாரசியம் மிகுந்ததாக இருக்கும். கடைசி ரீல் வரை படம் தொய்வில்லாமல் இருக்கும். வாழ்க்கையில் எதிர் நீச்சல் போடலாம். சீக்கிரம் ஞானியாகிவிடலாம்.//
    வாத்தியாருக்கு,
    அவர் கேட்ட கேள்வி மாதிரிதான் நானும் நினைத்திருந்தேன் (ஒரு வேளை பாடங்களை தப்பாக படிச்சிட்டேனோ ?),
    1.
    லக்கினாதிபதி (செவ்வாய், சூரியன், சனி முதலியன) அசுப கிரகங்கள் இல்லையா , அதாவது கெட்டவன் இல்லையா ?? (மறுபடியும் எல்லாப் படத்தையும் ஒரு வருடத்துக்கு படிக்கனுமா வாத்தியாரே?)///////

    சிம்மலக்கினத்திற்கு சூரியன் அதிபதி. மேஷம் மற்றும் விருச்சிக லக்கினங்களுக்கு செவ்வாய் அதிபதி, மகரம் மற்றும் கும்ப லக்கினங்களுக்கு சனி அதிபதி. ஆக லக்கின அதிபதி அந்தந்த ஜாதகர்களுக்கு கெட்டவன் இல்லை. ஹீரோ தான்!
    >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
    //////2.
    மேஷ லக்கின அதிபதி செவ்வாய், ஆறாம் (மறைவிடமான) இடமான கன்னியில் 'சனி'யுடன் சேர்ந்திருந்தால்
    வேறு சிறப்பு பலன்கள் உண்டா வகுப்பறை ஆசிரியரே !! (பத்தாம் இடத்தில் கேது, லக்கினத்தில் சந்திரன்) ?? :-(///////

    இப்படி உதிரியான கிரக நிலைகளை வைத்துக்கொண்டு, தான்தோன்றித்தனமாகப் பதில் சொல்வது தவறாகிவிடும்.
    நீங்களும் முழு ஜாதகத்தைக் கொடுத்துக் கேள்வியை முறையாகக் (specific questions) கேட்கவேண்டும். பதில் சொல்பவரும் ஜாதகத்தை அலசி முறையாகப் பதில் சொல்ல வேண்டும். அதுதான் முறையானதாகும்!
    >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
    3.
    மேலும் //சீக்கிரம் ஞானியாகிவிடலாம்//
    இதில் உள்குத்து உண்டா , உண்மைப் பொருளை வாத்தியார் விளக்கவும்??///////

    உள்குத்து ஒன்றும் இல்லை. மறைந்துவிடும் கிரகங்களால் ஜாதகன் பல கசப்பான அனுபவங்களைப் பெறுவான். அந்த அனுபவங்கள் அவனுக்கு ஞானத்தைக் கொடுக்கும்
    >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

    ReplyDelete
  34. /////sundari said...
    வணக்கம் சார்,
    இன்றைய பாடம் ரொம்ப நல்லாயிருந்தது. ரொம்ப நன்றி சார். கடல் தாண்டும் யோகம் யார் யாருக்கு அமையும் இந்த பாடத்திற்க்கு சுட்டி வேண்டும்
    நான் தேடிப்பார்த்தேன் சார். நாளைக்கும் நான் பார்ப்பேன். தொந்தரவுக்கு
    மன்னிக்கவும்.
    சுந்தரி/////

    ஒன்பதாம் வீட்டிற்கான பாடத்தைப் படியுங்கள்!

    ReplyDelete
  35. ஆசிரியர் அவர்களுக்கு, மிகச்சிறப்பாக அமைந்துள்ளது உங்கள் கேள்வி-பதில்கள். நன்றி.

    ReplyDelete
  36. ////தங்கம்பழனி said...
    ஆசிரியர் அவர்களுக்கு, மிகச்சிறப்பாக அமைந்துள்ளது உங்கள் கேள்வி-பதில்கள். நன்றி. ////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  37. நாயகன் 6 அல்லது 8 அல்லது 12ஆம் வீடுகளில் அமர்ந்தால், கதையில் அதிகமான முடிச்சுகளையும் (knots) திருப்பங்களையும் (turns) எதிர்பார்ப்புக்களையும் (supense) கொடுப்பார். திரைக்கதை சுவாரசியம் மிகுந்ததாக இருக்கும். கடைசி ரீல் வரை படம் தொய்வில்லாமல் இருக்கும். வாழ்க்கையில் எதிர் நீச்சல் போடலாம். சீக்கிரம் ஞானியாகிவிடலாம்.

    பதில் மிக சுவாரசியம்.

    ReplyDelete
  38. வாத்தியாரின் அருமையான பதில்களுக்கு நன்றி !!
    தொந்தரவிற்கு மன்னிக்கவும், கீழ் கண்டவைகளை நான் ஒரு புத்தகத்தில் படித்தேன். நீங்களும் பாடங்களில் இவ்வாறாகவே கூறி உள்ளதாக ஞாபகம்!! வாத்தியார் மீண்டும் ஒருமுறை சரி தானா என உறுதி செய்யவும், (பாவ கிரகம் என இங்கே உள்ளதற்கு ஒரு உதாரணமும் கொடுக்கவும்),?? நன்றி வாத்தியார் ஐயா..

    //லக்னாதிபதி சுப கிரகமாகி 3, 6, 8, 12-ல் மறையக் கூடாது. லக்னாதிபதி பாவ கிரகமாகி 8, 12-ல் மறையக் கூடாது. நீசம் பெற்றிருந்தால் நீசபங்கம் பெறுவது மிக அவசியமாகும். நீசாம்சம் பெறுவது சிறப்பாகாது. அஸ்தமனம் பெறுவது, பாவ கிரக சம்பந்தம் பெறுவது, கிரக யுத்தத்தில் சிக்கிக் கொள்வது போன்றவை பரிகாரத் திற்கு உட்பட்டவையாகும்.

    லக்னாதிபதி பாவ கிரகமாகி சத்ரு ஸ்தானத்தில் நின்றால் சத்ருநாசம், எதிரியை வசியம் செய்தல், சட்டம், காவல், ராணுவத் தில் பணி, மருத்துவத் துறையில் பணி, ஏராளமான மறைமுக வருமானங்கள், ஆளடிமை பெறுதல் போன்றவை உண்டா கும். சுப கிரகமாகி லக்னாதிபதி 6-ல் மறைந்தால் நோய், கடன், விபத்து, எதிரிகள் தொந்தரவு, பில்லி, சூன்யம், செய்வினை போன்ற உபாதைகள் உண்டாகும்.//

    ReplyDelete
  39. ////Radha said...
    நாயகன் 6 அல்லது 8 அல்லது 12ஆம் வீடுகளில் அமர்ந்தால், கதையில் அதிகமான முடிச்சுகளையும் (knots) திருப்பங்களையும் (turns) எதிர்பார்ப்புக்களையும் (supense) கொடுப்பார். திரைக்கதை சுவாரசியம் மிகுந்ததாக இருக்கும். கடைசி ரீல் வரை படம் தொய்வில்லாமல் இருக்கும். வாழ்க்கையில் எதிர் நீச்சல் போடலாம். சீக்கிரம் ஞானியாகிவிடலாம்.
    பதில் மிக சுவாரசியம்./////

    ஜோதிடம் படிப்பதற்கு மருந்தைப் போல கசக்கும். அதில் சுவாரசியம் என்கின்ற தேனைக் கலந்து கொடுத்தால் அனைவரும் படிப்பார்கள் என்பதற்காக அப்படிச் செய்கிறேன் சகோதரி. இல்லையென்றால் இத்தனை பேர்கள் இங்கே வந்து படிப்பார்களா என்ன?

    ReplyDelete
  40. ////'BLUESPACE' ARIVUMANI, GERMANY said...
    வாத்தியாரின் அருமையான பதில்களுக்கு நன்றி !!
    தொந்தரவிற்கு மன்னிக்கவும், கீழ் கண்டவைகளை நான் ஒரு புத்தகத்தில் படித்தேன். நீங்களும் பாடங்களில் இவ்வாறாகவே கூறி உள்ளதாக ஞாபகம்!! வாத்தியார் மீண்டும் ஒருமுறை சரி தானா என உறுதி செய்யவும், (பாவ கிரகம் என இங்கே உள்ளதற்கு ஒரு உதாரணமும் கொடுக்கவும்),?? நன்றி வாத்தியார் ஐயா..
    //லக்னாதிபதி சுப கிரகமாகி 3, 6, 8, 12-ல் மறையக் கூடாது. லக்னாதிபதி பாவ கிரகமாகி 8, 12-ல் மறையக் கூடாது. நீசம் பெற்றிருந்தால் நீசபங்கம் பெறுவது மிக அவசியமாகும். நீசாம்சம் பெறுவது சிறப்பாகாது. அஸ்தமனம் பெறுவது, பாவ கிரக சம்பந்தம் பெறுவது, கிரக யுத்தத்தில் சிக்கிக் கொள்வது போன்றவை பரிகாரத் திற்கு உட்பட்டவையாகும்.
    லக்னாதிபதி பாவ கிரகமாகி சத்ரு ஸ்தானத்தில் நின்றால் சத்ருநாசம், எதிரியை வசியம் செய்தல், சட்டம், காவல், ராணுவத்தில் பணி, மருத்துவத் துறையில் பணி, ஏராளமான மறைமுக வருமானங்கள், ஆளடிமை பெறுதல் போன்றவை உண்டா கும். சுப கிரகமாகி லக்னாதிபதி 6-ல் மறைந்தால் நோய், கடன், விபத்து, எதிரிகள் தொந்தரவு, பில்லி, சூன்யம், செய்வினை போன்ற உபாதைகள் உண்டாகும்.//

    பாவ கிரகமோ அல்லது சுபக்கிரகமோ, கிரகங்கள் மறையக்கூடாது. சனி பாபக் கிரகம்தான். ஆனால் அவர்தான் கர்மகாரகன். உங்களை வேலையில் அமர்த்துபவர் அவர்தான். அவர் மறைவது நன்மையளிக்காது.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com