மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

27.8.14

Astrology: quiz 68: Answer: காலம் வரும் வேளையிலே காத்திருப்பேன் பொன்மயிலே


Astrology: quiz 68: Answer: காலம் வரும் வேளையிலே காத்திருப்பேன் பொன்மயிலே!

புதிர் எண் 68ற்கான விடை

27.8.2014
--------------------------------------
கொடியிலே மல்லிகைப்பூ மணக்குதே மானே
எடுக்கவா தொடுக்கவா துடிக்கிறேன் நானே
பறிக்கச் சொல்லித் தூண்டுதே பவழமல்லித் தோட்டம்
நெருங்க விடவில்லையே நெஞ்சுக்குள்ளே கூச்சம்

கொடியிலே மல்லிகைப்பூ மணக்குதே மானே
கொடுக்கவா தடுக்கவா தவிக்கிறேன் நானே

மனசு தடுமாறும் அது நெனச்சா நிறம் மாறும்
மயக்கம் இருந்தாலும் ஒரு தயக்கம் தடை போடும்
நித்தம் நித்தம் உன் நெனப்பு நெஞ்சுக்குழி காயும்
மாடு ரெண்டு பாதை ரெண்டு வண்டி எங்கே சேரும்
பொத்தி வெச்சா அன்பு இல்ல சொல்லிப்புட்டா வம்பு இல்ல
சொல்லத்தானே தெம்பு இல்ல இன்பதுன்பம் யாரால

பறக்கும் திசையேது இந்தப் பறவை அறியாது
உறவோ தெரியாது அது உனக்கும் புரியாது
பாறையிலே பூ முளைச்சு பார்த்தவங்க யாரு
அன்பு கொண்ட நெஞ்சத்துக்கு ஆயுசு நூறு
காலம் வரும் வேளையிலே காத்திருப்பேன் பொன்மயிலே
தேதி வரும் உண்மையிலே சேதி சொல்வேன் கண்ணாலே
(கொடியிலே)

படம்: கடலோரக் கவிதைகள்
இசை: இளையராஜா
பாடியோர்: ஜெயச்சந்திரன், எஸ்.ஜானகி

நல்ல பாடல்: அதற்காகப் பதிவிட்டுள்ளேன்!
----------------------------------------------
நேற்றையப் பதிவில், அன்பர் ஒருவரின் ஜாதகத்தைக் கொடுத்து, அதை அலசி, இரண்டு கேள்விகளுக்கான பதிலை எழுதும்படி கேட்டிருந்தேன்.

கேட்கப்பெற்றிருந்த கேள்விகள்:

1. கல்வி நிலை பற்றி அலசி எழுதுங்கள். அதாவது ஜாதகர் படித்தவரா அல்லது படிக்காதவாரா? படித்தவர் என்றால் எதுவரை படித்தவர்? படிக்காதவர் என்றால் ஏன் படிக்கவில்லை?
2. ஜாதகரின் 7ஆம் வீட்டை அலசிப் பதில் எழுதுங்கள். அவருக்கு திருமணம் நடைபெற்றதா? அல்லது திருமணமாகவில்லையா? திருமணம் நடைபெற்றது என்றால் எப்போது நடைபெற்றது? திருமணமே ஆகவில்லை என்றால், ஏன் ஆகவில்லை

சரியான பதில் என்ன என்பதை முதலில் பார்ப்போம்.

1. ஜாதகர் கஷ்டப்பட்டு பள்ளி இறுதியாண்டுவரை படித்தவர். அதாவது அந்தக் காலத்து SSLC
1. ஜாதகருக்கு அவருடைய  திருமணம் அவருடைய 28ஆவது வயதில் நடைபெற்றது. 

ஜாதகப்படி, அதற்கு என்ன காரணம் என்பதைப் பார்ப்போம்.


ஜாதகம்

1. தனுசு லக்கின ஜாதகம். லக்கினாதிபதி நீசம். பயனில்லாத அமைப்பு
2. ஆனாலும் லக்கினாதிபதி 2ல் 11ஆம் அதிபதி (லாபாதிபதி) உடன் சேர்ந்திருப்பது ஆறுதல்
3. பாக்கிய ஸ்தானத்தில் சனி மற்றும் விரையாதிபதி (12th Lord) செவ்வாய் கூட்டாக சேர்ந்து உள்ளார்கள். கேடான அமைப்பு
4. ஆனால் அதே செவ்வாய் ஐந்தாம் இடத்திற்கும் அதிபதி. அவர் சிறந்த கோண வீட்டில் அமர்ந்துள்ளது நன்மையளிக்கும்.
5. நான்காம் வீட்டில் அஷ்டமாதிபதி சந்திரன் (8th Lord) அமர்ந்துள்ளார். கூடவே ராகுவும் உள்ளார். இருவராலும் அந்த வீடு பாழ்பட்டுள்ளது.
அத்துடன் அந்த வீட்டின் மேல் செவ்வாயின் பார்வையும் உள்ளது. சுகக் கேடு. கல்வித்தடை என்று எல்லாக் கோளாறுகளுக்கும் இடமளிக்கும் அமைப்பு. ஆனால் அந்த வீட்டுக்காரன் குரு, அந்த வீட்டுக்குப் பதினொன்றில் அமர்ந்துள்ளது நன்மையானது.
6. வித்யாகாரகன் புதன் 12ல் அமர்ந்துவிட்டான். அத்தோடு அஸ்தமனம் வேறு.
7. ஆனாலும் சுபக்கிரகங்களான குரு, சந்திரன், சுக்கிரன் ஆகிய மூவரும் அம்சத்தில் வலுவாக உள்ளார்கள்.
8. அம்சத்தில் குரு ஆட்சி பலத்துடன் தனது சொந்த வீட்டில் இருக்கிறார். ஆகவே அவர் ஜாதகனுக்கு உதவி செய்து பள்ளிப் படிப்பை முடிக்க வைத்தார்
10. அதேபோல சந்திரனும் ராகுவை உதறிவிட்டு நவாம்சத்தில் தனித்து இருக்கிறார். சுக்கிரனும் அம்சத்தில் அம்ச லக்கினத்தில் இருந்து 7ஆம் வீட்டைப் பார்க்கிறார்
6. 7ஆம் அதிபதி புதனும், பாக்கியாதிபதி சூரியனும் ஒன்று சேர்ந்துள்ளார்கள். அதே போல லக்கினாதிபதியும், களத்திரகாரகனும் ஒன்று சேர்ந்திருக்கிறார்கள். ஆகவே திருமணம் மறுக்கப்பெற்ற ஜாதகம் இல்லை இது. திருமணம் நடக்க வேண்டும். நடந்தது. சுக்கிர  திசை புதன் புத்தியில் திருமணம் நடந்தது.

நவாம்சம் என்பது ராசியின் விரிவாக்கம் (Magnified version of a rasi) ஒரு கிரகம் ராசியில் நீசம் பெற்று இருந்தாலும், அம்சத்தில் ஆட்சி அல்லது உச்சம் பெற்று இருந்தால் அதைத்தான் அந்தக் கிரகத்தின் உண்மையான நிலைப்பாடாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
----------------------------------------
போட்டியில் மொத்தம் 31 பேர்கள் கலந்து கொண்டு உள்ளார்கள்.  அவர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள்.
அவர்களில் 18 பேர்கள் மட்டும் இரண்டு கேள்விகளுக்கும் உரிய பதில்களை எழுதியுள்ளார்கள். அதில் சில ஒட்டி எழுதப்பட்டுள்ளது. ஆனால் உறுதியாக எழுதப்படவில்லை.
எழுதும்போது திருமணம் ஆனாவர் அல்லது ஆகாதவர் என்று தெளிவாக எழுத வேண்டாமா? இருக்கலாம் என்று ஏன் எழுதுகிறீர்கள்?
அதுபோல படிப்பைக் குறிப்பிடும்போது ஆரம்பக் கல்வி என்று சிலர் எழுதியுள்ளார்கள்.
ஆரம்பக் கல்வி என்றால் 5 ஆம் வகுப்பு வரை (Elementary school level)
பத்தாம் வகுப்பு அல்லது 11ஆம் வகுப்பு என்றால் பள்ளி இறுதியாண்டு வரை(higher secondary school)
இனிமேல் அவ்வாறு குறிப்பிட்டு எழுதினால் மட்டுமே விடைகள் தேர்வாகும்
சரியாக எழுதியவர்களுக்கும் ஒட்டி எழுதியவர்களுக்கும் எனது மனம்  பாராட்டுக்கள்.
பாராட்டுப் பெற்றவர்களின் பெயர்கள், அவர்களுடைய பின்னூட்டத்துடன் கீழே உள்ளது.
மேலும் கலந்து கொண்ட மற்றவர்களுக்கும் எனது பாராட்டுக்கள். Better luck for them next time!

அன்புடன்
வாத்தியார்
-------------------------------------------------------
1
//////Blogger rm srithar said...
    Respected Sir,
    Education:-
    He not complete his education, only Lower Basic level.
    Reason:- 4th house In charge Ju is in Neecham.
    Marriage:- He got married in between Year of 1967 to 1968.
    But marriage life is not success may be separation or widow.
    Reson:- 7th House Me is in 12th House.
    Regards
    Rm.srithar
    Tuesday, August 26, 2014 8:12:00 AM/////

what is meant by lower basic level?
----------------------------------------------------------
2
////Blogger Prakash Kumar said...
    Respected Sir,
    Jagathakar DOB:Dec 1 1949 7.50 AM (chennai).Meena Rasi, Danusu laganam.
    Education: 6 to 8th vathu varai padithirupar.
    Kalvikaragan bhudhan 12il, viraijaythi chevvai in parvai 4il athudan 4il ragahu veru. guru or bhudhan not aspecting 4th house.
    4il amarngatha chandran- Kemadurma (avayogam).Poor. (Kutti sukuran padikka vidathu -vathiyyar lesssons)
    padipu thadai pettru irukalam, 12il ulla bhu-aditya yogam+ Laganthiruku iruppakamum subarkal, jagathakaruku ethaiyum elithail kattrukollum arivai koduthirparkal. vivasayam seipavaraga irupar.
    Marriage: 24th vayathil or missing that change will be marrried at the age of 31 (marriage nadanthirukalam)
    Kalathirakaran sukaran, laganathipathi guru 2il, 7th house owner antha vettriuku 6il amaranthanlum, jagatharuku nadai pettra sukura dasa guru bhudhi il (71/2 sani vidaipettra pothu -Kudampathi pathi yum avera. so may be) or bhudhan bhudhi il marriage might have happpened (Kochara guru 7il irukumpothu).
    7th house owner getting aspect of Chevvai may delay the marriage.
    Puthisali manaivi kidaithirupar.
    Manaivi sollupechu kettu kalam thalli kondurupar.
    Tuesday, August 26, 2014 9:04:00 AM//////

இருக்கலாம் என்ற ஈரெட்டான பதில் எதற்கு?
உறுதியான பதிலை எழுத வேண்டாமா?
--------------------------------------------------------------
3
//////Blogger Selvam Velusamy said...
    வணக்கம் குரு,
    ஜாதகர் பள்ளி படிப்பு வரை முடிதிருக்கவே வாய்ப்பு உள்ளது. காரணம் நான்கிற்குடைய குரு நீச்சம், கல்விகாரகன் புதன் அஸ்தமனம், கல்விகாரகனுக்கும் நான்காமிடதிற்கும் செவ்வாய் பார்வை, நான்கில் ரகு சந்திரன் கூட்டணி அதனால் மனக்காரகன் கெட்டான், சந்திரன் அட்டமாதியனதால் நான்கில் அமர்ந்தது சரியல்ல மற்றும் தனுசு லக்ன வில்லன் சுக்கிரன் குருவோடு இணைந்ததும் சரியல்ல.
    திருமணம் சற்று தாமதமாக 31 வயதில் நடந்திருக்கும். காரணங்கள் ஏழாம் அதிபதி புதன் லக்னதிர்க்கு12இல் அத்துடன் அஸ்தமனம், பாக்கியாதிபதி சூரியனும் 12இல் மறைவு, குடும்பாதிபதி சனி செவ்வாயோடு சேர்கை, சுக ஸ்தானத்தில் ராகு.
    நன்றி
    செல்வம்
    Tuesday, August 26, 2014 9:11:00 AM/////
-----------------------------------------------------------------
 
5  
/////Blogger Chandrasekharan said...
    Respected Sir,
    1.) Lagnadhipathy & 4-m adhipathy Guru Neecham + Maandhi.
    2.) Asthamadhibathy chandran 4-il + Raghu and Kedhu Paarvai.
    3.) 12-m adhipathy chevvai paarvai 4-il.
    4.) 12 vayadhil Sukhra Dhasa (Kutti sukhran kootti kedukkum)
    Jadhagar 6 - 8-m vaguppu padhithirundhal periya visayam. Degree kalvi karkkum amaippu illai.
    5.) 7-m adhipathy Budhan 12-il and avaradhu veetirku 6-il Mosamana amaippu.
    6.) 5-m adhipathy chevvai 7-m adhipathy budhanai than special paarvai 4-m paarvayaga parkiraar. Guru + Sukhran kootani adhanal Jadhagar Love marriage seidhiruppar. Sukhra dhasavil thirumanam nadadhirukkum. 12-m adhipathy and 9-m adhibathy parivardhanai (Indha parivardhanai nalla parivardhanai illai.) Neenda kaalam nilaitha thirumana valkai illai. Thirumana vaalkai konja kalamdhan. soorya dhasa guru bukthi-il jadhagarin manaivi irandhiruppar.
    Thank You.
    Tuesday, August 26, 2014 9:38:00 AM/////
------------------------------------------------------
 6  
//////Blogger bg said...
    Date of birth : Dec 1 1949
    App time : 8.50 a.m.
    Education
    4 th house occupied by Moon and Rahu, 4 th lord JU in debility
    Both are not favourable positions.
    Karaka ME in 12 th house also not good for education.
    Less chance for higher education.
    Marriage
    7 th lord associate with Sun in the 12 th house.
    Marriage may take place during Sun disha.
    Tuesday, August 26, 2014 10:42:00 AM///////
--------------------------------------------------------
7
///////Blogger sundar said...
    since chandran(8thlord)+Raghu in 4 th place and guru neecham+sukran+
    manthi in 2 nd place and puthan in 12 th place..he cannot continue his studies in school itself...but sooriyan+puthan combination he is talent or legend in some areas beyond education..
    2.7 th lord in 12th place along sooriyan reveals ..he will get marry very late..(sukran+manthi+neecha guru) also reveals this.
    Tuesday, August 26, 2014 10:46:00 AM/////
--------------------------------------------------------
8
////////Blogger amuthavel murugesan said...
    மதிப்பிற்குற்ய ஐயா,
    புதிர் தொடர் - பகுதி அறுபத்தியெட்டுக்கான பதில்
    1.புடிப்பு - படிப்பைப் பாதியில் விட்டவர்- 4ல் ராகு மற்றும் செவ்வாயின்
    5 ஆம் பார்வை 4 ஆம் வீட்டின் மீது.5 ஆம் இடத்து அதிபதி 12ல்
    சிறு வயது சுக்கிரதிசை
    2.ஜாதகருக்கு திருமணம் :திருமணம் நடைபெற்று இருக்கும்.
    சுக்கிரன் வர்கோத்மம் பெற்று உள்ளது.
    சுக்கிரனும் குருவும் 2ல் இருப்பது.
    இப்படிக்கு
    மு.சாந்தி
    Tuesday, August 26, 2014 11:51:00 AM///////

பாதியில் என்றால் எந்த வகுப்பு வரை?
----------------------------------------------------------------
9
///////Blogger GOWDA PONNUSAMY said...
    அய்யா அவர்களுக்கு வணக்கங்கள்.
    1).ஜாதகர் பள்ளி இறுதி வகுப்பை தாண்டி இருக்க மாட்டார்.
    2).திருமணம் நடந்து இருக்கும்.27 வயதிற்க்கு மேல் சுக்கிரன் தசையில் புதன் புக்தியில் நடந்திருக்கும்.
    அலசல்:
    லக்கினம், நான்காம் அதிபதி குரு 2ல் நீச்சம்.6,11 க்குடைய சுக்கிரனுடனும் மாந்தியுடனும் சேர்க்கை.வித்யா காரகன் புதன் 12ல் மறைவு.பக்கியாதிபதியான சூரியனின் சேர்க்கை.9ல் இருக்கும் செவ்வாயின் பார்வை.
    குரு அமர்ந்த வீட்டதிபதி சனி லக்கினத்திற்க்கு 9ல் அமர்வு,நீச்சபங்கமடந்துள்ளது.
    குரு,சுக்கிரன் சேர்க்கை 2ல் நிபுணத்துவத்தை தந்தாலும் உடன் இருக்கும் மாந்தியின் சேர்க்கை யோகத்தை கெடுத்து விட்டது.
    நாலில் அமர்ந்த சந்திரனும் ராகுவின் சேர்க்கை மற்றும் கேதுவின் பார்வையும் பள்ளி இறுதி வகுப்பையும் தாண்ட முடியாதவாறு செய்துள்ளது.
    2).களத்திராதிபதி புதன் 12ல் மறைந்து பாக்கியாதிபதி சூரியனுடன் சேர்க்கை.கூடவே 9ல் இருக்கும் செவ்வாயின் பார்வை.சூரியன் வர்க்கோத்தமம்.
    களத்திரகாரகன் சுக்கிரன் வர்க்கோத்தமும் பெற்று, நவாம்சத்தில் களத்திராதிபதி புதனுடன் சேர்க்கை பெற்றதும் ஜாதகருக்கு திருமணத்தை நடத்திவைத்துள்ளது.
    3).லக்னாதிபதி குரு, குடும்பஸ்தானத்தில் அமர்ந்து, நீச்ச பங்கம் அடைந்ததுடன்,குடும்ப காரகனாகவும் உள்ளார். களத்திரகாரகனுடன் சேர்க்கை பலம் திருமணத்தை நடத்தியிருக்க வேண்டும்.
    =பொன்னுசாமி.
    Tuesday, August 26, 2014 1:16:00 PM///////
---------------------------------------------------------
10
//////Blogger murali krishna g said...
    ஜாதகர் மீன ராசி . ரேவதி நட்சத்திரம். தனுசு லக்னம். ராசி மற்றும் லக்னாதிபதி குரு 2-ல் நீசம். மாந்தி மற்றும் அசுர குரு சுக்கிரனுடன் கூட்டணி. 9-ல் சனி செவ்வாய்.
    1) ஜாதகர் பள்ளி படிப்பை முடித்து இருந்தால் ஆச்சரியம் தான். பள்ளி படிப்போடு கல்வி தடை. கல்லூரி சென்று இருக்க மாட்டார் !.
    காரணங்கள் : (1) கல்வி காரகன் குரு நீசம்.
    (2) குரு மாந்தியோடும் சுக்கிரனோடும் கூட்டணி !
    (3) நான்காம் அதிபதியும் குருவே !. அவர் நீசம் !
    (4) நான்காம் இடத்தில் சந்திரனும் ராகுவும் கூட்டணி !. சர்ப்ப தோஷம் ! நான்காம் வீடு
    கெட்டு விட்டது !
    (5) புத ஆதித்ய யோகம் இருந்தாலும் அது விரய ஸ்தானத்தில் ! பலன் அளிக்கவில்லை !
    2) ஜாதகருக்கு திருமணம் நிச்சயம் உண்டு ! காதல் கலப்பு திருமணம் ! .
    காரணங்கள் : 1) சனி செவ்வாய் 9-ல் கூட்டணி.
    2) ராகுவுக்கு செவ்வாய் பார்வை !
    3) சுக்ரன் குடும்ப ஸ்தானத்தில் குருவுடன் கூட்டணி !
    4) ஏழாம் இட பரல்கள் 31.
    5) புதன் விரய ஸ்தானத்தில் அஸ்தமனம் ஆகி இருந்தாலும் அவர் நட்சத்திர அதிபதி . அதனால் திருமணத்தை களத்தீரக்கார்கன் சுக்கிர தசையில் புதன் புக்தியில் நடத்தி முடித்தான் !.
    Tuesday, August 26, 2014 1:18:00 PM///////
--------------------------------------------------------------
11
///////Blogger S.Namasu said...
    மதிப்பிற்குரிய வாத்தியார் அய்யா:
    ஜோதிட புதிர் போட்டி எண் 68ற்கான எனது கணிப்பு:-
    1.ஜாதகர் பள்ளி படிப்பு வரை பயின்று இருப்பார்.
    *தனுசு லக்கனம், மீன ராசி, லக்கன மற்றும் 4மிட (கல்வி ஸ்தானம்)அதிபதி "குரு" 2மிடத்தில் "நீசம்"[ஆனால் நவாம்சத்தில் ஆட்சி]உடன் 6&11 மிட அதிபதி "சுக்கிரன்" மற்றும் "மாந்தி" உள்ளனர்.
    *கல்வி ஸ்தானத்தில் 8மிட அதிபதி "சந்திரன்" மற்றும் "ராகு" உள்ளனர்.மேலும் செவ்வாயின் 8ம் பார்வையையும், கேதுவின் 7ம் பார்வையையும் பெறுகின்றது.
    *கல்வி காரகன் "புதன்" 12மறைந்துள்ளார். உடன் "சூரியன்" இருப்பதனால் "புதஆதித்திய" யோகமாகிறது. புத்திசாலியாக இருப்பார்.
    *11வ:11மா:29நா வயதிற்கு மேல் சுக்கிர தசையினால் (குட்டி சுக்கிரன் கூடி கெடுக்கும்) படிப்பு பள்ளியோடு முடிந்திருக்கும்.
    2.ஜாதகருக்கு (27வ:11மா:29நா - 30வ:09மா:29நா வயதில்) திருமணம் நடந்திருக்கும்.
    *7மிட அதிபதி "புதன்" 12ல் 9மிட அதிபதி "சூரியனுடன்" இனைந்து மறைந்துள்ளார். (9&10 ம் ஆவதால் "தர்மகர்மதிபதி யோகம்)
    *7ம் மிடம் எந்த கிரக பார்வையையும் பெறவில்லை.
    *களத்திர காரகன் "சுக்கிரன்" 2ம்மிடத்தில் மாந்தி& லக்கன அதிபதி குருவுடன் சேர்ந்துள்ளார்.
    *சுக்கிரன் வர்தகோமம் (ராசி மற்றும் அம்சத்தில் ஒரே வீடு)ஆகியுள்ளார்.
    * எனவே ஜாதகரின் சுக்கிர தசை புதன் புத்தியில்(27வ:11மா:29நா - 30வ:09மா:29நா வயதில்)திருமணம் நடந்திருக்கும்.
    உபரிகை
    *2மிடத்தில் மாந்தி உள்ளதனால் குடும்ப வாழ்க்கை சுமாராகத்தான் இருக்கும்.
    *2,6,10 மிடத்தின் ஆதிக்கத்தால் இது தன ஜாதகம்.
    சுபம்.
    Tuesday, August 26, 2014 1:39:00 PM//////
----------------------------------------------------------------------
12
//////Blogger valli rajan said...
    Guruji,
    1. Wanning moon in 4 house good but with rahu not favorable.
    2.4 lord in 2nd house with mandi.
    3. mercury in 12 house.
    4. mars aspect in 4 house.
    5. 5th lord in 9th house.
    He is moderately educated but will have keen intelligence.
    Marraige life.
    1. 7 lord and 9 lord in 12 house.
    2. 2nd lord in 9th house.
    3. Guru and venus in 2nd house good but mandi in 2 house will give in fight in family.
    4. mercury in 12th house is not good as per your recent posting.
    5. venus in vargothamam. Jupiter in good poistion in navamsa.
    There is marraige in sukara dasa and mercury sub period.
    Tuesday, August 26, 2014 2:53:00 PM//////
--------------------------------------------------------
13
/////Blogger Sivachandran Balasubramaniam said...
    மதிப்பிற்குரிய ஐயா !!!
    புதிர் எண்: 68 இற்கான பதில்
    அன்பர்: தனுசு லக்கினம், லக்கினாதிபதி குரு 2இல் நீசம், உடன் ஆறாம்அதிபதி சுக்கரன், மாந்தி. குரு நீச்சமாக இருந்தாலும் அம்சத்தில் ஆட்சி. கல்விஸ்தானத்தில் எட்டாம்அதிபதி சந்திரன், மற்றும் ராகு. கல்விகாரகன் புதன் சூரியனுடன் இணைந்து நிபுணத்துவம் தந்தாலும் இவர்கள் இருப்பதோ 12இல் ( மறைவுஸ்தானத்தில்). ஆகவே இந்த ஜாதகர் மிகுந்த சிரமத்துடன் பள்ளிப்படிப்பை முடிக்கலாம். அதற்கு மேல் படிக்க வந்த கேது, சுக்கர திசைகள் கைகொடுக்காது. தடைபட்ட கல்வி. உயர்கல்வி பெறவில்லை.
    களத்திரகாரகன் சுக்கரன் சனி வீட்டில் ( நட்பு வீட்டில்). உடன் லக்கினாதிபதி குரு. ஏழாம்அதிபதி புதன் 12 இல் மறைவு. இருந்தாலும் ஜாதருக்கு சுக்கர திசை புதன் புத்தி 28 ஆம் வயதில் தொடங்கி 31 ஆம் வயது வரை உள்ளது. அன்றைய கோள்சார ரீதியில் பார்த்தால் 29 - 30 ஆம் வயதில் திருமணம் நடை பெற அதிக வாய்ப்புள்ளது.
    இப்படிக்கு
    சிவச்சந்திரன்.பா
    Tuesday, August 26, 2014 5:40:00 PM//////
-------------------------------------------------------
14
//////Blogger Srinivas said...
    The native is born on 1/Dec/1949 at around 8:58am, considering chennai as birth place.
    1. Lagnathipathi Guru is in 2nd house along with 6th and 11th house lord Sukran and also maandhi.
    Lagnathipathi is neecham.
    2. Bagyathipathi Sun is in 12th house along with 7th and 10th house lord Budhan. 5th lord Chevvai and 9th lord Sun are in
    parivathanai. 5th lord Chevvai is aspecting Sun and Budhan.
    3. Saturn and Chevvai combination in 9th house which will lead to intermittent issues in native's life.
    Education:
    a. 4th house lord Jupiter is neecham and is in 2nd house along with 6th house lord Sukran and maandhi.
    b. Budhan is in 12th house along with Sun and is combust. Budhan is aspected by 5th house lord chevvai.
    c. Valarpirai chandran is in 4th house along with rahu and this will lead to confused state of mind.
    Chandran is the 8th house lord.
    d. 5th lord chevvai (functionally benefic) is aspecting the 4th house.
    Considering all the above aspects, the native wouldn't have studied very well. He would have struggled to complete
    the degree itself.
    Marriage:
    1. Sukran is the 6th house lord and is in 2nd house along with neecha lagnathipathi and maandhi. So second house is also
    affected.
    2. 7th lord is budhan and it is combust and is in 12th house along with Sun.Though the the combination of
    9th house lord and 7th/10th lord forms a raja yoga, the native will not receive its benefit fully as the combination
    is in 12th house.
    3. 2nd house lord Sani is in 9th house along with 5th lord Chevvai.
    Considering all the above aspects, the native would have delay in getting married. The native would have got married in the end of the
    sukra dasa (in budhan budhi possibly) or in the surya dasa. The marriage would have been problematic.
    Regards,
    Srinivasan.
    Tuesday, August 26, 2014 5:52:00 PM/////
-------------------------------------------------------------
15  
//////Blogger kmr.krishnan said...
    ஜாதகர் 1 டிசம்பர் 1949 அன்று காலை 9மணி 0 நிமிடம் 15 வினாடிக்குப்பிறந்தவர். பிறந்த இடம் சென்னை என்று எடுத்துக்கொண்டேன்.
    நானும் 1949ல் பிறந்தவன் ஆனதால், சனி, குரு ராகு கேது இருக்கும் இடங்களைப் பார்த்தவுடனேயே 1949ல் பிறந்தவர் என்பது புரிந்துவிட்டது. அதன் பின்னர் ஜாதகத்தை தசாஇருப்புக்கு ஏற்ப ஃபைன் ட்யூனிங் செய்ய 5 நிமிடமே ஆனது.
    4ம் இடத்து அதிபதி குரு ஆனதால் ஜாதகர் படிக்க வேண்டும். ஆனால் அவர் 2ல் நீசம் அடைந்து மாந்தியுடன் கூட இருக்கிறார். மேலும் சுக்கிரன் ஆறாம் வீட்டு அதிபதி. அவருடன் 4ம் அதிபதி நிற்பதும் கல்வியினை பாதித்துவிட்டது.
    படிப்புக்கான காரகன் புதன் தன் விட்டுக்கு ஆறிலும்,சூரியனால் அஸ்தங்கதம் அடைந்ததும் 12ல் மறைந்ததும் படிப்புக்கு உதவியாக இருக்காது.
    எட்டாம் வீட்டு அதிபதி சந்திரன் 4ல் சென்று அமர்ந்ததும் அவரோடுகூட ராகு அமர்ந்ததும் படிப்புக்கு உதவவில்லை.
    5வயதுமுதல் 12 வயது வரை கேதுதசா. எல்லாவகையிலும் தடங்கல்தான்.
    பள்ளிப்படிப்பை முடிப்பதே கடினம்தான். ஆரம்பப்பள்ளிப் படிப்பை முடித்திருப்பார்.அவ்வளவுதான்.
    திருமணம்: ஏழாம் வீட்டு அதிபதி புதன் 12ல் மறைந்து சூரியனால் எரிக்கப்பட்டு விட்டார்.களத்திரகாரகன் சுக்கிரன் இரண்டில் மாந்தியுடன் கூட்டணி.எனவே தாமதத் திருமணம். சுக்ரதசா புத புக்தியில்31,32 வயதில் திருமணம்.
    Tuesday, August 26, 2014 9:18:00 PM//////

ஆரம்பப்பள்ளி என்றால் எதுவரை சுவாமி?
-----------------------------------------------------------
16
//////Blogger Narayanan V said...
    வணக்கம் ஜயா
    புதிர் எண் 68 கான விடை
    கல்வி நிலை
    1) லக்னாதிபதியான குரு(கல்விகாரகனும் கூட) 2ல் மாந்தி யுடன் சேர்க்கை, லக்னாத்தின் பாபகர்த்தாரி யோகம், 4ல் ராகு எல்லாம் சேர்ந்து பள்ளி படிப்புடன் கண்டிப்பாக காலி ஆகி இருக்கும்.
    கல்யாணம்
    2) 7ம் வீட்டு காரன் 12 ல் மறைவு, காரகன் சுக்கிரன் மாந்தி சேர்க்கை, இருந்தாலும் நவாம்சத்தில் சுக்கிரன் வர்கோத்தம் ஆகியிருப்பதால் கண்டிப்பாக சுக்கிரதிசையில் கல்யாணம் ஆகி இருக்கும்
    நாராயணன், புதுச்சேரி
    Tuesday, August 26, 2014 9:28:00 PM/////

பள்ளிப் படிப்பு என்றால் எந்த வகுப்பு வரை என்பதை எழுத வேண்டாமா?
------------------------------------------------------------
17
//////Blogger sivaradjane said...
    1. ஜாதகரின் 4 ம் வீட்டில் 8ம் அதிபதி சந்திரன்,உடன் ராகு.4 ம் அதிபர் குரு நீசன்,உடன் 6 ம் அதிபர் சுக்கிரன் சேர்க்கை.4 ம் வீட்டிற்கு செவ்வாயின் பார்வை. எனவே ஜாதகர் ஆரம்ப கல்வியோடு படிப்பை நிறுத்தியிருப்பார்.
    2.7 அதிபதியும் ,பாக்யாதிபதி சூரியனும் 12 ல் மறைவு.7ம் அதிபதி புதனுக்கு செவ்வாயின் 4ம் பார்வை.
    லக்னாதிபதி குரு 2ல் நீசம் ,உடன் களத்திரகாரனும் 6 ம் அதிபதியுமாகிய சுக்கிரன்.
    ஆனால் அம்சத்தில் களத்திரகாரகன் சுக்கிரனுடன் 7ம் அதிபன் ’புதன் சேர்க்கை.சுக்கிரன் வர்கோத்தமமாகி வலுவில் உள்ளார். குருவும் அம்சத்தில் ஆட்சியில் உள்ளார். சனி,செவ்வாய் சேர்க்கை உள்ளதால் தாமத திருமணம். 32 வயதிற்கு மேல் திருமணம் நடந்திருக்கும். ஆனால் குடும்ப வாழ்க்கை மகிழ்சியாய் இருந்திருக்காது. பிரிந்திருக்கக் கூடும்.
    Sivarajan
    (pondicherry)
    Wednesday, August 27, 2014 1:19:00 AM///////

ஆரம்பக்கல்வி என்றால் எந்த வகுப்பு வரை?
-------------------------------------------------------------
18
////// Blogger thozhar pandian said...
    இலக்கினாதிபதியும் 4ம் வீட்டு அதிபதியுமான குரு 2ம் வீட்டில். ஆனால் உடன் மாந்தி. கல்விகாரகர் புதன் இலக்கினத்திற்கு 12ல், ஆனால் 4ம் வீட்டிற்கு 9ல். நவாம்சத்தில் 4ம் வீட்டு குரு ஆட்சி. 4ல் இராகு இருப்பது சிறப்பல்ல. பட்டப்படிப்பிற்கு வாய்ப்பில்லை. பள்ளிப் படிப்போடு கல்வி முடிந்திருக்கும்.

    குடும்ப ஸ்தானத்தில் மாந்தி இருப்பது சிறப்பில்லை. களத்திரகாரகரும் மாந்தியுடன் இருக்கிறார். 7ம் வீட்டு புதன் இலக்கினத்திற்கு 12ல், 7ம் வீட்டிற்கு 6ல். உடன் பாக்கியாதிபதி சூரியன் இருப்பது நல்லதே. ஆனால் அவரும் இலக்கினத்திற்கு 12ல் மறைந்து விட்டார். செவ்வாயின் பார்வை 7ம் வீட்டு அதிபதியின் மேல் படுகிறது. மன காரகர் சந்திரனும் இராகுவுடன் கூட்டணியில் இருக்கிறார். மன வேதனைகளும் குழப்பங்களும் நிறைந்திருக்கும். திருமணம் மறுக்கப்பட்ட ஜாதகம் என்றே தோன்றுகிறது. குடும்பகாரகரும் களத்திரகாரகரும் 2ம் வீட்டில் இருப்பதால், சுக்கிர தசையில் திருமணம் நடந்திருக்கலாம், ஆனால் நிலைத்திருக்காது.
    Wednesday, August 27, 2014 2:54:00 AM///////

எதற்காக 2 விதமான பதில்கள்? தோன்றுகிறது, நடந்திருக்கலாம் என்றெல்லாம்  எழுதாமல் உறுதியான பதிலை எழுதுங்கள் பாண்டியரே!
======================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

11 comments:

  1. Thank you sir,

    hereafter I will answer correctly.

    One suggestion:
    new students like me should need lot of various quizs like this, to analyse each house and gain knowledge. please keep going.

    You're awesome !

    Your Student:
    Prakash.K

    ReplyDelete
  2. மிக அழகாக விளக்கி உள்ளீர்கள். அம்சத்தில் குரு ஆட்சி என்று சொல்வது, கொடுத்திருக்கும் dataவை வைத்து சொல்லக்கூடியது அல்ல அல்லவா? நட்சத்த்திக்காலை வைத்து தானே சொல்லணும்? அம்சத்தை பற்றி சொன்னது எப்படி?

    ஆனால் உங்கள் தமிழ் அழகு. பழைய ந்யூஸ் தான் என்றாலும் பாராட்டை எப்போதும் சொல்லலாம் அல்லவே?

    புவனேஷ்

    ReplyDelete
  3. dear sir

    சனி கேதுபோன்ற தீய வர் 10இல் ராகு இருந்தால் தொழில் முடக்கம் உருவாகும் என்பது சரியா

    thank u

    ReplyDelete
  4. பதிவிற்கும், தலைப்பு மற்றும் பாடலுக்கும் என்ன தொடர்பென்றே தெரியவில்லை அய்யா.

    ReplyDelete
  5. அன்புடன் வாத்தியார் அய்யாவுக்கு வணக்கம் ..
    தாங்களின் அலசல்.. !!!அது சரி வாத்தியார் வாதியருதான் மாணவன் மாணவந்தானே என்றுமே..!!!
    நன்றி

    ReplyDelete
  6. ////Blogger Prakash Kumar said...
    Thank you sir,
    hereafter I will answer correctly.
    One suggestion:
    new students like me should need lot of various quizs like this, to analyse each house and gain knowledge. please keep going.
    You're awesome !
    Your Student:
    Prakash.K//////

    உங்களின் யோசனைக்கு நன்றி. செய்யலாம்.

    ReplyDelete
  7. ///Blogger Bhuvaneshwar D said...
    மிக அழகாக விளக்கி உள்ளீர்கள். அம்சத்தில் குரு ஆட்சி என்று சொல்வது, கொடுத்திருக்கும் dataவை வைத்து சொல்லக்கூடியது அல்ல அல்லவா? நட்சத்திக்காலை வைத்து தானே சொல்லணும்? அம்சத்தை பற்றி சொன்னது எப்படி?
    ஆனால் உங்கள் தமிழ் அழகு. பழைய ந்யூஸ் தான் என்றாலும் பாராட்டை எப்போதும் சொல்லலாம் அல்லவே?
    புவனேஷ்////

    ராசியை(நட்சத்திரத்தில்) ஒன்பது பிரிவாகப் பிரித்து வருவதுதானே அம்சம். நட்சத்திரப் பாதங்கள் ராசிக்கு மட்டும்தானே அம்சத்திற்கு ஏது சுவாமி?

    ReplyDelete
  8. /////Blogger ashokdiyan said...
    dear sir
    சனி கேதுபோன்ற தீயவர் 10இல் ராகு இருந்தால் தொழில் முடக்கம் உருவாகும் என்பது சரியா
    thank u/////

    சனி தொழில்காரகன். அவன் எப்படி முடக்குவான்? ராகுவினால் வேலையில் ஒரு திருப்தி இல்லாத நிலை உண்டாகும். அடிக்கடி தொழில் மாற்றமும் ஏற்படும். 10ஆம் இடத்து அதிபதியை வைத்தும் பார்க்கவேண்டும்!

    ReplyDelete
  9. /////Blogger Indian said...
    பதிவிற்கும், தலைப்பு மற்றும் பாடலுக்கும் என்ன தொடர்பென்றே தெரியவில்லை அய்யா./////

    தொடர்பு இருக்கிறது. யோசித்துப் பாருங்கள்!

    ReplyDelete
  10. //////Blogger hamaragana said...
    அன்புடன் வாத்தியார் அய்யாவுக்கு வணக்கம் ..
    தாங்களின் அலசல்.. !!!அது சரி வாத்தியார் வாத்தியாருதான் மாணவன் மாணவன்தானே என்றுமே..!!!
    நன்றி/////

    என்றுமே என்பது சரியல்ல. வாத்தியார் ஒரு ஏணி மாதிரிதான். நன்றாகப் படித்து, வாத்தியாரைவிட மேன்மையாக வந்தவர்கள் உண்டு!

    ReplyDelete
  11. Rasiyil ucham but navamsathil neesam enral ethai eduppathu sir?

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com