மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

19.8.14

Astrology: quiz 67: Answer: தேர்ந்து மனிதன் வாழும் வகைக்கு தெய்வத்தின் கட்டளை ஆறு


Astrology: quiz 67: Answer: தேர்ந்து மனிதன் வாழும் வகைக்கு தெய்வத்தின் கட்டளை ஆறு

புதிர் எண் 67ற்கான விடை

19.8.2014

நேற்றையப் பதிவில், அன்பர் ஒருவரின் ஜாதகத்தைக் கொடுத்து, அதை அலசி, இரண்டு கேள்விகளுக்கான பதிலை எழுதும்படி கேட்டிருந்தேன்.

கேட்கப்பெற்றிருந்த கேள்விகள்:

1. கல்வி நிலை பற்றி அலசி எழுதுங்கள். அதாவது ஜாதகர் படித்தவரா அல்லது படிக்காதவாரா? படித்தவர் என்றால் எதுவரை படித்தவர்? படிக்காதவர் என்றால் ஏன் படிக்கவில்லை?
2. ஜாதகரின் 7ஆம் வீட்டை அலசிப் பதில் எழுதுங்கள். அவருக்கு திருமணம் நடைபெற்றதா? அல்லது திருமணமாகவில்லையா? திருமணம் நடைபெற்றது என்றால் எப்போது நடைபெற்றது? திருமணமே ஆகவில்லை என்றால், ஏன் ஆகவில்லை

சரியான பதில் என்ன என்பதை முதலில் பார்ப்போம்.

1. ஜாதகர் பட்டப் படிப்பு படித்தவர்.
2. ஜாதகருக்கு அவருடைய  திருமணம் தாமதமாக அவருடைய 32ஆவது வயதில் நடைபெற்றது. 

ஜாதகப்படி, அதற்கு என்ன காரணம் என்பதைப் பார்ப்போம்.



கன்னி லக்கினம். லக்கினத்தில் குரு பகவான். லக்கினத்தில் குரு பகவான் இருந்தாலே அது ஆசீர்வதிக்கப்பெற்ற ஜாதகம்  (Blessed Horoscope) என்று நான் அடிக்கடி சொல்வதைபோல ஜாதகருக்கு எல்லாம் கிடைத்தது. படிப்பு, நல்ல வேலை. திருமணம், நல்ல மனைவி, இரண்டு குழந்தைகள் என்று எல்லாம் அமைந்தது. லக்கினாதிபதி விரையத்தில் அமர்ந்தாலும், லக்கினத்தில் வந்து அமர்ந்த குரு பகவான் அந்த நஷ்டத்தை ஈடு கட்டினார்.

கஜகேசரி யோகம் உள்ளதைப் பாருங்கள். அதுபோல ஆதி யோகம், பேரி யோகம், விபரீத ராஜ யோகம் போன்ற மொத்தம் 15 யோகங்கள் ஜாதகத்தில் உள்ளன. அவைகளும் வேலை செய்தன.
----------------------------------------------
1. நான்காம் அதிபதி குரு திரிகோணம் ஏறியதால், அவர் ஜாதகரின் படிப்பிற்கு உதவி செய்தார். வித்யாகாரகன் 12ல் மறைந்தாலும், குரு பகவான் தனது அதிகாரத்தில் அதைச் செய்தார்.

2. களத்திரகாரகன் 12ல் மறைந்ததாலும், 2ல் இருக்கும் ராகு மற்றும் மாந்தியின் அமைப்பால், ஜாதகருக்குக் குடும்பவாழ்க்கை தாமதமானது. 13 வயதில் இருந்து 30 வயதுவரை நடைபெற்ற புதன் மகா திசையும் ஆதரவாக இல்லை. 7ஆம் அதிபதி திரிகோணத்தில் அமர்ந்து 7ஆம் வீட்டைத் தன்னுடைய நேர் பார்வையில் வைத்திருப்பதால், இது திருமணம் மறுக்கப்பெற்ற ஜாதகம் இல்லை. கோள்சாரக் குரு மிதுனத்திற்கு வந்தவுடன் பாதிப்புக்கள், தடைகளை விலக்கிக் கொண்டு ஜாதகனின் திருமணத்தை நடத்திவைத்தார். அவருடன் சேர்ந்து அப்போது நடைபெற்ற சுக்கிரபுத்தியில், புத்தி நாதன் சுக்கிரனும் அதற்கு உதவி செய்தார்.

குரு பகவான் வலுவாக இருந்தால், ஜாதகருக்கு எல்லாம் கிடைக்க அவர் உதவுவார் என்பதற்கு உதாரண ஜாதகம் இது.
----------------------------------------
போட்டியில் மொத்தம் 26 பேர்கள் கலந்து கொண்டு உள்ளார்கள்.  அவர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள்.
அவர்களில் 11 பேர்கள் மட்டும் இரண்டு கேள்விகளுக்கும் உரிய பதில்களை எழுதியுள்ளார்கள். அவர்களுக்கு எனது மனம் உவந்த பாராட்டுக்கள்.
பாராட்டுப் பெற்றவர்களின் பெயர்கள், அவர்களுடைய பின்னூட்டத்துடன் கீழே உள்ளது.மேலும் கலந்து கொண்ட மற்றவர்களுக்கும் எனது பாராட்டுக்கள். Better luck for them next time!

அன்புடன்
வாத்தியார்
-------------------------------------------------------
1
/////Blogger ramesh kumar said...
படிப்பு:
ஆரம்ப திசை சனி திசை,படிப்பில் தடங்கல் வர வாய்ப்பு எனினும்,அவர் UG படித்திருக்க வாய்ப்பு உண்டு.ஏன் எனில் 2 ம் இடம் கல்வி,அங்கு இரு பாவிகள்,கல்வித்தடை,4 ம் அதிபதி குரு 1 ல் ,கேந்திர அதிபதிய தோஷம் எனினும்,சந்திரன் பார்வை.ஆக தோஷம் அடிபட்டு டிகிரி படித்திருக்க வாய்ப்பு உண்டு.....
திருமணம்:
25 முதல் 27 க்குள் திருமணம் நடந்திருக்கும்.புதன் திசை குரு புத்தியில்.உபய ராசி லக்னம்,திருமணம் வாழ்க்கை இனிப்பது கடினம்
Monday, August 18, 2014 9:59:00 AM/////
---------------------------------------------
2
/////Blogger BLAKNAR said...
லக்னாதிபதி 12ல், தன் வாழ்க்கை தனக்கு அல்ல.
பட்ட படிப்பு (குரு சந்திர பார்வை) மற்றும் ஆராய்ச்சி அறிவு உண்டு(செவ்வாய், புதன் சேர்க்கை).
4,7க்கு உரிய குரு லக்கினத்தில் மேலும் தேய்பிறை சந்திரன் பார்வை, குரு சந்திர யோகம் நிச்சயம் பட்ட படிப்பு படித்தவர். லக்கினத்தில் குரு இருந்தாலே கவலை வேண்டாம்.(வாத்தியாரின் பழைய பாடம்).
செவ்வாய், புதன் சேர்க்கை எல்லா துறையிலும், குறிப்பாக ஆராய்ச்சி துறையில் வல்லமையை தந்தனர்.
திருமணம் உண்டு. 
திருமணம் புதன் திசையில், இனிதே நடந்து இல்லற சுகத்தையும் அன்யோன்யதையும் கொடுத்தனர்.
கன்னி லக்கினதிற்கு யோக காரகனாகிய புதன் 12ல், தனது திசை முடிந்ததும் ஜாதகரை கை விட்டு விட்டான். கேது திசை சுழற்றி அடித்திருக்கும். பிள்ளைகளால் சுகம் இல்லை.
அன்புள்ள மாணவன்,
பா. லக்ஷ்மி நாராயணன்
தூத்துக்குடி
Monday, August 18, 2014 11:05:00 AM//////
--------------------------------------------
3
/////Blogger Regunathan Srinivasan said...
Dear sir,
jadhagakarar kanni lagnam.4th and 7th house lord jupiter is placed in 1st house.4th house is for education and 7th house is for marriage.from 1st house jupiter looks at 5th ,7th and 9th house.9th house signifies higher learning.so person should be minimum master degree holder and should have been married as well.
Regards,
S.Regunathan
Monday, August 18, 2014 12:28:00 PM///// 
---------------------------------------------
4
//////Blogger Prakash Kumar said...
DOB-August 14,1957 9.00 AM -Chennai (approxi)
Jathagar Meena Rasi Kanni laganthil piranthavar. Laganathipathi Budhan 12il ooruku ulaigum jathagar.
1.Eduction:4th house owner guru in laganam.it his friend's house and looking 5th place. eventhough pudhikaragan budhan in 12th house, (9th house from 4th house good position)
live started with sani dasa and then budhan (12il amarthavar)dasa,
Guru in lagana might have allowed jagathakar to get atleast one degree.
2.Marriage: 7th house owner in lagna and 7il amartha moon looking directly to lagnam. Marriage might have happened lately, at the age of 33 to 35, during Kethu dasa -sun or moon bhudhi when Kochaara guru in his 11th position. alagana manaivi kidaithirukum but aduthu vantha Chevvai or Raghu bhuddhil manmurivu nadaipetruirukkam.
2il raghu+mandhi, kalthirakaran+bhakkiya isthanathipathi+Kudampathi sukuran in 12th place is worst placement (udan 8th house owner Chevvai). kudumpa valkai nadathavidamatterkkal.
Note: After Kethu dasa, 12il amartha sukaran dasa. generally 12il amarntha kirakkathin dasa mosamaga irukum.
Ore Aruthalana vishyam , Guru in Lagnam and looking direcltly to manakaran Moon. Jathagaruku nall mana valimai kuduthirparkkal (ethaiyum thangum ithayaum).
Monday, August 18, 2014 2:06:00 PM//////// 
---------------------------------------------------
5
///////Blogger vanikumaran said...
ஜாதகர் உயர் கல்வி வரை படித்தவர். உயர் கல்விக்கான 5ம் அதிபதி சனி மூன்றாம் பார்வையால் 5ல் வைத்துள்ளார். 5ம் வீட்டை குரு பார்க்கிறார். வித்யாதிபதி புதனை பாக்யாதிபதி சுக்கிரன் பார்க்கிறார்
7ம் வீட்டில் லாபாதிபதி சந்திரன். உடன் குரு பார்வை காரகன் சுக்கிரன் விரையத்தில் உடன் அஸ்டமாதிபதி லக்கினாதிபதி. அஸ்டமாதிபதி செவ்வாய் பார்வை 7ம் வீட்டில்
குரு பார்வை 7ம் வீட்டில் இருப்பதால் காலம் கடந்து தாய் வழி உறவில் திருமணம் நட்ந்திருக்கும். இரண்டாம் வீட்டில் raagu மாந்தி அதிபதி சுக்கிரன் 12ல் காரகன் குரு 2க்கு 12ல் சுபர் பார்வை இல்லாததால் குடும்பம் இல்லாதிருக்கும். அல்லது பிரிந்திருக்கும்
Monday, August 18, 2014 2:44:00 PM//////
---------------------------------------------------------
6
///////Blogger valli rajan said...
Dear Guruji,
1. 7th Lord in Lagna
2. Gaja kesari yogam and 11th lord in 7th House.
3. 3 and 8 lord mars aspects 7th place.
4. Rahu and mandi in 2nd house, bad for family life.
5. Jupiter in good position and But Venus in 12th house.
There will be marriage but marred with difficulties. Marriage period Mercury dasa in Guru sub period.
Education.
1.Mecury in 12th house.
2.4th lord in 1st house, good 
position.
3. Guru aspect in 5th house.
He is educated but don't have higher education.
Monday, August 18, 2014 2:46:00 PM/////
---------------------------------------------
7
/////Blogger kmr.krishnan said...
4ம் வீட்டு அதிபதி குரு 11ம் வீட்டு அதிபதி சந்திரனால் பார்க்கப்படுவதால் படிப்பு உண்டு. படிப்புக் கார‌கன் புதன் பாக்கியாதிபதி சுக்ரனுடன் இருப்பதாலும் படிப்பு உண்டு.ஆனால் இவர்களை 6ம் வீட்டு அதிபன் சனி பார்ப்பதாலும், 8ம் வீட்டு அதிபதி செவ்வாயுடன் இணைந்ததாலும், இவர்கள் மூவரும் 12ல் மறைந்ததாலும் தடை தாமதங்களுடனான படிப்பு. 10 வயதுவரை சனிதசா வேறு. உடல் நிலையிலும் சிரமங்கள். எனவே பள்ளிப்படிப்பை தட்டுத்
தாடுமாறி முடிக்க வாய்ப்பு.5ம் வீட்டுக்கு குருபார்வை இருப்பதால் ஆன்மீகக் கல்வி சுயமாக கற்று குருவாக விளங்க‌ வாய்ப்பு.4,8,12 படிப்பு,
ஞானத்துக்க்கான இடங்கள். 4ம் அதிபதி கேந்திரம், 8ல் கேது, 12ல் சுக்ரன் புதன் இவர் ஒரு ஆன்மீக குருவாக இருக்க வாய்ப்பு.
கஜகேசரியோகம் உள்ளது. புததசா, குருபுக்தியில் 27/28 வயதில் ஏற்கனவே தெரிந்த பெண்ணுடன் திருமணம்.
4,8,12 படிப்பு, ஞானத்துக்க்கான இடங்கள். 4ம் அதிபதி கேந்திரம், 8ல் கேது, 12ல் சுக்ரன் புதன் இவர் ஒரு ஆன்மீக குருவாக இருக்க வாய்ப்பு.
Monday, August 18, 2014 3:24:00 PM/////
------------------------------------------------------
8
//////Blogger Ravichandran said...
Ayya,
Please find my answers:
1. He must be studied good. Because during his study time, he has undergone Bhudhan Dasa which is lagna for him & Guru is sitting in lagna. one more reason: Bhudhan & Sukran combination gives Nupunathuva Yogam.
2. He must be married twice. Because first marriage would have got, because of Guru is aspecting 7th house and Chandran is aspecting in lagna. i.e. Gaja Kesari Yogam. But due to following reasons be must be undergone second marriage. a) Sukran is in 12 th house b) second house occupied by Rahu and MAndhi c) 8th house occupied by ketu. There is no good planet is aspecting 2nd and 8th house. 
Your Student,
Trichy Ravi
Monday, August 18, 2014 5:53:00 PM///// 
------------------------------------------------
9
/////Blogger Selvam Velusamy said...
வணக்கம் குரு,
ஜாதகர் கல்லூரி படிப்பு படித்தவர். காரணம் 4குடைய குரு லக்னத்தில், நிபுணத்துவ யோகம் மற்றும் 4ம் இடத்திற்கு எந்த பாவகிரக சேர்க்கை & பார்வையும் இல்லை. இளமையில் சனி தசை நடந்தாலும் கன்னி லக்னத்திற்கு திரிகோனமாகிய 5மிடதிர்க்கு அதிபதி ஆகவே கெடுபலன் சற்று குறைவாகவே இருந்திருக்கும்.
இவருக்கு 27வயதில் கண்டிப்பாக திருமணம் நடந்திருக்கும். காரணம் 7குடைய குரு லக்னத்தில் மற்றும் 7ம் இடத்திற்கு எந்த பாவகிரக சேர்க்கை & பார்வையும் இல்லை. இவருக்கு இருதார யோகம் உள்ளது. காரணம் லாபாதிபதி சந்திரன் 7இல். எனவே கண்டிப்பாக ஒரு திருமணமாவது நடந்திருக்கும்.
நன்றி
செல்வம்
Monday, August 18, 2014 8:01:00 PM//////
-----------------------------------------------------------
10
////Blogger thozhar pandian said...
இலக்கினத்தில் குரு. 4ம் வீடு மற்றும் 7ம் வீடு அதிபதியும் குருவே. அவர் இலக்கினத்தில் இருப்பது மிகச் சிறந்த அமைப்பு. கல்வி காரகரும் இலக்கினாதிபதியுமான புதன் இலக்கினத்திற்கு 12ல் மறைந்ததால் எதிர் நீச்சல் போட்டு வாழ்க்கை நடத்த வேண்டிய ஜாதகம். புதனுக்கும் சுக்கிரனுக்கும் சனி பார்வை உண்டு. சனிக்கு செவ்வாயின் பார்வை உண்டு. இது அவ்வளவு சிறந்த அமைப்பாக தெரியவில்லை. ஆனால் குரு இலக்கினத்தில் இருப்பதாலும், குரு சந்திர யோகம் இருப்பதாலும், தக்க சமயத்தில் உதவிகள் கிடைக்கும். கல்வி காரகர் புதனும் 4ம் வீட்டிற்கு 9ம் வீடான 12ம் வீட்டில் இருப்பதால், கல்வி கிடைத்திருக்கும். பட்டப் படிப்பு முடித்திருப்பார். முதுநிலை கல்வி கிடைத்திருப்பதற்கு வாய்ப்பு இருப்பதாக தெரியவில்லை. களத்திரகாரகர் சுக்கிரன் 7ம் வீட்டிற்கு 6ல். ஆனால் 7ம் வீட்டு அதிபதி குரு இலக்கினத்தில். இந்த காரணத்தால் ஜாதகருக்கு திருமணம் நடந்திருக்கும். ஆனால் தாமதமாக நடந்திருக்கும். சுக்கிர தசை தொடங்கியவுடன், அதாவது 36 வயதிற்கு மேல் திருமணம் உண்டு. குரு பலம் இந்த ஜாதகருக்கு கை கொடுக்கும்.
Monday, August 18, 2014 9:58:00 PM/////
---------------------------------------------------------
11
/////Blogger Chandrasekaran Suryanarayana said...
QUIZ NO. 67 வணக்கம்
14/08/1957 ஆம் ஆண்டு காலை 10.00 மணிக்கு உத்திரட்டாதி நட்சத்திரத்தில் கன்னி ராசியில் ஜாதகர் பிறந்தார்.
லக்கினம் (5 பரல்) கன்னி ராசி யோககாரன் சுக்கிரன்,
லக்கினாதிபதி புதன் 12ம் வீட்டில் செவ்வாயுடன் கூட்டு. மேலும் யோககாரன் சுக்கிரனுடனும் கூட்டு.
கல்வி:
4ம் வீடு தனுசு ராசி, 27 ப‌ரல்கள், 4ம் வீட்டு அதிபதி குரு (7 பரல்) லக்கினத்தில், மீனத்திலிருக்கும் சந்திரனின் 7ம் பார்வை லக்கினதில் இருக்கும் குருவின் மீது பார்ப்பதால் பாபகர்த்தாரி தோஷத்தினால் பாதிப்பு எற்படாது. கஜகேசரி யோகமும் உள்ளது.
5ம் வீடு நுண்ணறிவு, 5ம் விட்டு அதிபதி சனி 3ல் அமர்ந்து 3ம் பார்வையால் 5ம் வீட்டை பார்க்கிறார். குருவின் 5ம் பார்வையால் அந்த தோஷதையும் நிவர்த்தி செய்து விடுகிறார்.
பிரச்சனைக்குரியவன் கல்விகார‌கன் புதன். 12ல் தீய கிரகத்துடன் செவ்வாயுடன் கூட்டு சேர்ந்து, சனியின் 10ம் பார்வை அவர் மேல் விழுவதாலும், 4ம் வீட்டு அதிபதி குருவும், காரகன் புதனும் 2/12 என்னும் பாதக நிலமையில் உள்ளனர்.கல்விக்கு கஷ்ட்டத்தை உண்டாக்கினார். அடுத்து வந்த புத தசையில் குரு புக்தியிலிருந்து.அதாவது 25 வயதிலிருந்து கல்விக்கு தட‌ங்கல்.
ஜாதகர் இலக்கியத்தில் பட்ட படிப்பு வரை படித்து இருப்பார்.
திருமணம்;
7ம் வீட்டு அதிபதி குரு லக்கினதில் (7 பரல்)
7ம் வீட்டில் சந்திரன் (4 ப‌ரல்) இருப்பதால் அழகான மனைவி அமைவார்.
குருவும், சந்திரனும் ஒருவருக்கு ஒருவர் 7ம் பார்வையில் உள்ளனர். கஜகேசரி யோகத்தினால் பலம் பொருந்தியுள்ளது. 25 வயதில் குரு புக்தியில் திருமணம் நடைபெற வாய்ப்புள்ளது.
2ம் வீட்டு அதிபதி களத்திரகாரகன் சுக்கிரன் 12ம் வீட்டில் செவ்வாயுடன் கூட்டு.
2ம் வீட்டில் மாந்தி இருப்ப‌தால் குடும்பம் பிரிவு எற்பட வாய்ப்புள்ளது.
2ம் வீட்டில் 22 பரல்கள்.குடும்ப ஸ்தானம் பல‌வீனமாக‌ உள்ளது.
குருவின் 9ம் பார்வை பாக்கியஸ்தானமான சுக்கிரன் வீட்டில் பார்ப்பதாலும், சில பிரச்சினைகளுக்கு பிறகு குடும்பம் அமைய வாய்ப்புள்ள‌து.
5ம் வீட்டின் மீது சனியின் 3ம் பார்வை உள்ள‌தால் குழந்தை தாமதமாக பிறக்க வாய்ப்புள்ளது.
மேலும், சூரியனின் 7ம் பார்வை 5ம் வீட்டின் மீது பார்ப்பதாலும், குருவின் 5ம் பார்வை 5ம் வீட்டின் மீது பார்ப்பதாலும், ஆண் குழந்தை பிறக்க வாய்ப்புள்ளது.
சந்திர‌சேகரன் சூரியநாராயணன்
Tuesday, August 19, 2014 1:43:00 AM///////
======================================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

10 comments:

  1. குரு பகவான் வலுவாக இருந்தால், ஜாதகருக்கு எல்லாம் கிடைக்க அவர் உதவுவார் என்பதற்கு உதாரண ஜாதகம் இது.

    Thank you for the valuable answer sir. I remember one of your lesson you had mentioned based on our previous birth we had done good/bad things. guru will place accordingly.

    ReplyDelete
  2. அன்புடன் வாத்தியார் அய்யவுக்கி வணக்கம் ...ஜாதகருக்கு பாபா கர்தாரி யோகம் விடுவிக்க பட்டு விட்டதா. ???

    அதாவது 12ல் செவ்வாய் ..2ல் ராகு +மாந்தி ..அல்லது ஏதேனும் விதி விலக்கு உள்ளதா??..

    எதாவது ஓரிடத்தில் அதிகமான சுபர்கள் இருந்தால் அந்த இடத்தில இருக்கும் பாபர் செயல இழப்பார்...நீங்கள் கற்று கொடுத்தது. அப்போ 12ல் இருக்கும் புதனும் சுக்கிரனும் சுபர்கள் ஆகி விட்டனர்..அப்படித்தான ??அட அட .அப்படி இருந்து யோசித்து இருந்தால் மற்ற குரு..இருப்பை நன்றாக கணித்து இருக்கலாமே.. தவறு செய்து விட்டேனே...???அடுத்த முறை இன்னும் நிதான பட வேண்டும்...நன்றி வாத்தியார் அய்யா..!!

    ReplyDelete
  3. செவ்வாய் மகம் 4 ல், பூரம் 4ல் புதன், சுக்ரன் உத்திரம் ஒன்றில் இருக்கின்றனர்.
    எனவே செவ்வாய்க்கு அடுத்து அடுத்து இரண்டு சுபக்கிரகங்கள் நடுவில் இருப்பதால் இதனை பாபகர்த்தாரி யோகத்தில் லக்கினம் மாட்டியதாகக் கொள்ள முடியாது என்று தோன்றுகிறது.

    எனது பதிலையும் பாஸ் பட்டியலில் சேர்த்ததற்கு ஐயாவுக்கு நன்றி!

    கே.முத்துராமகிருஷ்ணன்(லால்குடி)
    kmrk1949@gmail.com

    ReplyDelete
  4. ayya
    guru laknathil amarvathu or 7 il amarnthu lakkinathai parvai seivathu idhil ethu melum sirappu

    ReplyDelete
  5. இன்று, நாளை, நாளை மறுநாள் 20,21, 22 ஆகஸ்டு நான் வெளியூர் பயணம். அடுத்த புதிர் முடிந்தால் 23 தேதிக்குப்பின்னர் வெளியிடுங்கள் ஐயா! இது ஒரு வேண்டுகோள் மட்டுமே.இதுவரை புதிர் ஒன்றைக் கூட நான் தவற விட்டதில்லை. பாதிக்குப் பாதி சரியான விடையும் கொடுத்துள்ளேன்.
    ஆகவே தான் இந்த வேண்டுகோள்.

    ReplyDelete
  6. /////Blogger Prakash Kumar said...
    குரு பகவான் வலுவாக இருந்தால், ஜாதகருக்கு எல்லாம் கிடைக்க அவர் உதவுவார் என்பதற்கு உதாரண ஜாதகம் இது.
    Thank you for the valuable answer sir. I remember one of your lesson you had mentioned based on our previous birth we had done good/bad things. guru will place accordingly./////

    முன்வினைகளுக்குத் தகுந்தாற்போல பிறப்பு அமையும். குரு பகவானுக்குத் தகுந்தாற்போல பிறப்பு அமையாது!

    ReplyDelete
  7. /////Blogger hamaragana said...
    அன்புடன் வாத்தியார் அய்யவுக்கி வணக்கம் ...ஜாதகருக்கு பாபா கர்தாரி யோகம் விடுவிக்க பட்டு விட்டதா. ???
    அதாவது 12ல் செவ்வாய் ..2ல் ராகு +மாந்தி ..அல்லது ஏதேனும் விதி விலக்கு உள்ளதா??..
    எதாவது ஓரிடத்தில் அதிகமான சுபர்கள் இருந்தால் அந்த இடத்தில இருக்கும் பாபர் செயல இழப்பார்...நீங்கள் கற்று கொடுத்தது. அப்போ 12ல் இருக்கும் புதனும் சுக்கிரனும் சுபர்கள் ஆகி விட்டனர்..அப்படித்தான ??அட அட .அப்படி இருந்து யோசித்து இருந்தால் மற்ற குரு..இருப்பை நன்றாக கணித்து இருக்கலாமே.. தவறு செய்து விட்டேனே...???அடுத்த முறை இன்னும் நிதான பட வேண்டும்...நன்றி வாத்தியார் அய்யா..!!//////

    லக்கினம்தான் பாபகர்த்தாரி யோகத்தில் சிக்கியுள்ளது. லக்கினாதிபதி சிக்கவில்லை. அதையும் பாருங்கள்! அத்துடன் கீழே கே. முத்துராமகிருஷ்ணரின் பின்னூட்டம் உள்ளது. அதையும் படியுங்கள்!

    ReplyDelete
  8. //////Blogger kmr.krishnan said...
    செவ்வாய் மகம் 4 ல், பூரம் 4ல் புதன், சுக்ரன் உத்திரம் ஒன்றில் இருக்கின்றனர்.
    எனவே செவ்வாய்க்கு அடுத்து அடுத்து இரண்டு சுபக்கிரகங்கள் நடுவில் இருப்பதால் இதனை பாபகர்த்தாரி யோகத்தில் லக்கினம் மாட்டியதாகக் கொள்ள முடியாது என்று தோன்றுகிறது.
    எனது பதிலையும் பாஸ் பட்டியலில் சேர்த்ததற்கு ஐயாவுக்கு நன்றி!
    கே.முத்துராமகிருஷ்ணன்(லால்குடி)
    kmrk1949@gmail.com/////

    உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி!

    ReplyDelete
  9. ////Blogger karthi said...
    ayya
    guru laknathil amarvathu or 7 il amarnthu lakkinathai parvai seivathu idhil ethu melum sirappu/////

    இரண்டுமே சிறப்பானதுதான். அவர் அமரும் வீடு யாருடைய வீடு என்பதை வைத்துப் பலன்கள் சற்று மாறுபடும்!

    ReplyDelete
  10. Blogger kmr.krishnan said...
    இன்று, நாளை, நாளை மறுநாள் 20,21, 22 ஆகஸ்டு நான் வெளியூர் பயணம். அடுத்த புதிர் முடிந்தால் 23 தேதிக்குப்பின்னர் வெளியிடுங்கள் ஐயா! இது ஒரு வேண்டுகோள் மட்டுமே.இதுவரை புதிர் ஒன்றைக் கூட நான் தவற விட்டதில்லை. பாதிக்குப் பாதி சரியான விடையும் கொடுத்துள்ளேன்.
    ஆகவே தான் இந்த வேண்டுகோள்.

    கவலையை விடுங்கள்! அடுத்த புதிர் 24ம் தேதிக்கு மேலேதான்! இதுபோன்ற தனிப்பட்ட வேண்டுகோள்களை பின்னூட்டத்தில் பதிவிடாமல், மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்தினால் நல்லது!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com