மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

31.12.12

Mini Story: அடுத்தவர்களைக் குறை சொல்லும் முன்பு நாம் என்ன செய்ய வேண்டும்?

Mini Story: அடுத்தவர்களைக் குறை சொல்லும் முன்பு நாம் என்ன செய்ய வேண்டும்?

இளம் தம்ப்திகள் ஒரு பழைய வீட்டிற்குக் குடிபோனார்கள். அது மாடி வீடு.

பக்கத்து வீட்டு பெண்மணி, அந்த அதிகாலை நேரத்தில், துணிகளைத் துவைத்து முடித்து, கொடிக் கம்பியில் காயப் போட்டுக்கொண்டிருந்தாள்.

அதைத் தன் வீட்டு ஜன்னல் கண்ணாடி வழியே பார்த்த இளம் மனைவி தன் கணவனிடம் சொன்னாள்: “பக்கத்து வீட்டுப் பெண் சரியாகவே துவைக்க வில்லை. அங்கங்கே  அழுக்கு அப்படியே நிற்கிறது. ஒரு வேளை சோப்பை மாற்றினால், துணிகள் பளிச்சிடலாம்"

அதைத் தன் மனைவியின் வற்புறுத்தலுக்காகப் பார்த்த கணவன், அமைதியாக இருந்தான். ஒன்றும் சொல்லவில்லை.

அது தொடர்ந்தது. அடுத்தடுத்த இரண்டு நாட்களும், ஜன்னல் கண்ணாடி வழியே எட்டிப்பார்த்துவிட்டு அவ்வாறே குறை சொன்னாள்.

ஒரு மாதம் ஓடி விட்டது.

அன்று காலையில், ஜன்னல் வழியே அடுத்த வீட்டு மொட்டை மாடியில் காயப் போட்டிருக்கும் துணைகளைப் பார்த்து அசந்து விட்டாள் நம் நாயகி. அவைகள் சுத்தமாகவும்,  பளிச்சென்றும் இருந்தன!

ஆச்சரியம் மேலிட, தன் கணவனிடம் சொன்னாள்: “இந்த அதிசயத்தைப் பாருங்கள். இப்போதுதான் அடுத்த வீட்டுக்காரி, சரியாகத் துவைத்து இருக்கிறாள். அவளுக்கு யார்  சொல்லிக் கொடுத்தார்கள் என்று தெரியவில்லை!? ”

அவளுடைய் அன்புக் கணவன் அமைதியாகச் சொன்னான்: “இன்று அதிகாலையில் எழுந்து, நமது வீட்டு ஜன்னலை நான் நன்றாக துடைத்திருக்கிறேன். collins Liquid  போட்டுத் துடைத்திருக்கிறேன்.”

மனைவி வாயடைத்துப்போய் விட்டாள். அவளால் மேற் கொண்டு ஒன்றும் பேச முடியவில்லை.

அடுத்தவர்களைக் குறை சொல்லும் முன்பு, நமது பக்கம் ஒழுங்காக இருக்கிறதா என்று பார்த்துக் கொள்ள வேண்டும்!
---------------------------------------------------------------------------------------------------------------------------------
மின்னஞ்சலில் வந்தது. மொழியாக்கம் மட்டும் அடியவனுடைய கைவண்ணம்!

அன்புடன்
வாத்தியார்
 

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

21 comments:

  1. மிகவும் நல்ல பதிவு....

    ReplyDelete
  2. குருவிற்கு வணக்கம் ,
    நல்ல கருத்து ,
    நம்மை நாம் முதலில் பார்க்கவேண்டும்
    நன்றி

    ReplyDelete
  3. அய்யா வணக்கம் . அடுத்தவர்களை குறை சொல்லும்போது , தன்னை அளவீடு செய்துகொள்ள வேண்டும் என்ற கருத்து கதையில் தெளிவாக தெரிகின்றது . நன்றி

    ReplyDelete
  4. அடுத்த வீட்டு சன்னலை
    அப்படி பார்ப்பதே தவறு என்று

    உணராத அந்த அம்மணி இந்த
    உண்மையையா உணர போகிறாள்

    குறை சொல்லும் மனப்பாங்கு
    குறைவாக இன்று எல்லோரிடமுண்டு

    வருந்தட்டும் அவர்கள் எனபாருமுண்டு
    திருந்தட்டும் அவர்கள் என்பாருமுண்டு

    தவறுகளை நியாயப் படுத்துவது தான்
    தவறு,நிறையும்குறையும் எதார்த்தமே

    இன்று இந்த பாடலினை
    இப்போ சுழல விடுகிறோம்..

    உள்ளம் என்பது எப்போதும்
    உடைந்து போகக்கூடாது,

    என்ன இந்த வாழ்க்கை என்ற
    எண்ணம் தோன்றக்கூடாது!

    எந்த மனிதன் நெஞ்சுக்குள்
    காயமில்லை சொல்லுங்கள்!

    காலப் போக்கில் காயமெல்லாம்
    மறைந்து போகும் மாயங்கள்!

    (முதல் வரி கண்டுபிடியுங்கள்)

    ReplyDelete
  5. Dear Sir,
    Wish you a Happy and Prosperous New Year 2013!
    Regards
    Ashok Kumar

    ReplyDelete
  6. அடுத்தவர்களைக் குறை சொல்லும் முன்பு, நமது பக்கம் ஒழுங்காக இருக்கிறதா என்று பார்த்துக் கொள்ள வேண்டும்!

    வாழ்க்கைப் பாடம் ..!

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும்
    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...!

    ReplyDelete
  7. வாத்தியார் ஐயாவிற்கும், அன்பு சகோதர சகோதிரிகளுக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.வரும் புத்தாண்டில் அனைவரும் மகிழ்ச்சியுடன் இருக்க இறைவன் அருள்வாராக!

    ReplyDelete
  8. வண்க்கம் ஐயா,30 வயதிற்கு மேல் ல்க்னத்தை வைத்து பலன் சொல்வதற்கு பதிலாக, சந்திர ராசியை வைத்து பலன் சொல்லவேண்டும் என்று கூறுகிறார்களே அது சரீங்களா? நன்றி ஐயா.

    ReplyDelete
  9. அனைவருக்கும்
    இனிய புத்தாண்டு
    நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  10. ////Blogger Prasanna Venkatesh said...
    மிகவும் நல்ல பதிவு....////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  11. ///Blogger Udhaya Kumar said...
    குருவிற்கு வணக்கம் ,
    நல்ல கருத்து ,
    நம்மை நாம் முதலில் பார்க்கவேண்டும்
    நன்றி////

    கரெக்ட்! நன்றி உதயகுமார்!

    ReplyDelete
  12. ////Blogger eswari sekar said...
    vanakam sir/////

    நல்லது. உங்களின் வருகைப் பதிவிற்கும் வணக்கத்திற்கும் நன்றி!

    ReplyDelete

  13. Blogger Gnanam Sekar said...
    அய்யா வணக்கம் . அடுத்தவர்களை குறை சொல்லும்போது , தன்னை அளவீடு செய்துகொள்ள வேண்டும் என்ற கருத்து கதையில் தெளிவாக தெரிகின்றது . நன்றி/////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  14. ///Blogger அய்யர் said...
    அடுத்த வீட்டு சன்னலை
    அப்படி பார்ப்பதே தவறு என்று
    உணராத அந்த அம்மணி இந்த
    உண்மையையா உணர போகிறாள்/////

    உணர மாட்டார் என்று எதை வைத்து சொல்கிறீர்கள் சுவாமி?

    ReplyDelete
  15. ////Blogger arul said...
    nice post////

    நல்லது. நன்றி!

    ReplyDelete
  16. ////Blogger Ashok said...
    Dear Sir,
    Wish you a Happy and Prosperous New Year 2013!
    Regards
    Ashok Kumar/////

    உங்களுடைய புத்தாண்டு வாழ்த்தைக் கண்டு அக மகிழ்வு கொண்டேன் மிக்க நன்றி. இந்தப் புத்தாண்டு உங்களுக்கும் வளமையையும், மகிழ்ச்சியையும் தரும்படி அமையட்டும்!!!!
    வாழ்த்துக்களுடன்
    வாத்தியார்

    ReplyDelete
  17. ////Blogger இராஜராஜேஸ்வரி said...
    அடுத்தவர்களைக் குறை சொல்லும் முன்பு, நமது பக்கம் ஒழுங்காக இருக்கிறதா என்று பார்த்துக் கொள்ள வேண்டும்!
    வாழ்க்கைப் பாடம் ..!
    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும்
    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...!////

    உங்களுடைய புத்தாண்டு வாழ்த்தைக் கண்டு அக மகிழ்வு கொண்டேன் மிக்க நன்றி. இந்தப் புத்தாண்டு உங்களுக்கும் வளமையையும், மகிழ்ச்சியையும் தரும்படி அமையட்டும்!!!!
    வாழ்த்துக்களுடன்
    வாத்தியார்

    ReplyDelete
  18. ////Blogger Geetha Lakshmi A said...
    வாத்தியார் ஐயாவிற்கும், அன்பு சகோதர சகோதிரிகளுக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.வரும் புத்தாண்டில் அனைவரும் மகிழ்ச்சியுடன் இருக்க இறைவன் அருள்வாராக!////

    உங்களுடைய புத்தாண்டு வாழ்த்தைக் கண்டு அக மகிழ்வு கொண்டேன் மிக்க நன்றி. இந்தப் புத்தாண்டு உங்களுக்கும் வளமையையும், மகிழ்ச்சியையும் தரும்படி அமையட்டும்!!!!
    வாழ்த்துக்களுடன்
    வாத்தியார்

    ReplyDelete
  19. ////Blogger Geetha Lakshmi A said...
    வண்க்கம் ஐயா,30 வயதிற்கு மேல் ல்க்னத்தை வைத்து பலன் சொல்வதற்கு பதிலாக, சந்திர ராசியை வைத்து பலன் சொல்லவேண்டும் என்று கூறுகிறார்களே அது சரீங்களா? நன்றி ஐயா.////

    இல்லை. தவறு!

    ReplyDelete
  20. ////Blogger kimu said...
    அனைவருக்கும்
    இனிய புத்தாண்டு
    நல்வாழ்த்துக்கள்.////

    உங்களுடைய புத்தாண்டு வாழ்த்தைக் கண்டு அக மகிழ்வு கொண்டேன் மிக்க நன்றி. இந்தப் புத்தாண்டு உங்களுக்கும் வளமையையும், மகிழ்ச்சியையும் தரும்படி அமையட்டும்!!!!
    வாழ்த்துக்களுடன்
    வாத்தியார்

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com