மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

24.10.12

எதையும் இழக்கவில்லை என்ற நிலை எப்போது?

எதையும் இழக்கவில்லை என்ற நிலை எப்போது?

இன்று விஜயதசமி. துர்கா தேவியை வணங்கும் நாள்!

   "If you lose your wealth, you have lost nothing,
    If you lose your health, you have lost something,
    But if you lose your character, you have lost everything."

தேவி தன் பக்தர்களின் துன்பங்களைப் போக்குபவள். நமக்கு ஏற்படும் தடைகளை நீக்குபவள். மேற்சொன்ன இழப்புக்கள்  எதுவும் நமக்கு இல்லாமல் செய்யக்கூடியவள். அனைவரும் துர்கையை வணங்குகள்.

தேனினும் இனிய தன் குரலால் திருமதி சுசீலா அவர்கள் பாடியுள்ள துர்கைப் பாடலின் கானொளி வடிவத்தைக் கீழே கொடுத்துள்ளேன். அனைவரும் கேட்டு
மகிழுங்கள்.

Our sincere thanks to person who up loaded this video clipping!


அன்புடன்
வகுப்பறை வாத்தியார்

+++++++++++++++++++++++++++++++++++

Durga Puja festival epitomizes the victory of Good over Evil
அதைப்பற்றி மேலும் நீங்கள் தெரிந்து கொள்ள கீழே ஒரு சுட்டியைக் கொடுத்துள்ளேன்:

http://en.wikipedia.org/wiki/Durga_Puja

மேலதிகத் தகவல்கள்:

The word "Durga" in Sanskrit means a fort, or a place which is difficult to overrun. Another meaning of "Durga" is "Durgatinashini," which literally translates into "the one who eliminates sufferings." Thus, Hindus believe that goddess Durga protects her devotees from the evils of the world and at the same time removes their miseries.

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!


18 comments:

  1. மிக அற்புதமான, 'ஜெய ஜெய தேவி' பாடல் காணொளி தந்தமைக்கு மிக்க நன்றி. கேட்கும் போதே, ஒரு உற்சாகம் ஏற்படுவது கண்கூடு. துர்க்கை என்ற திருநாமத்தின் அர்த்தங்களை வரிசைப்படுத்தியமை இன்னும் சிறப்பு.

    எனக்குத் தெரிந்த சில மேலதிகத் தகவல்கள்,

    1. தேவர்களை துன்பத்தில் இருந்து காத்தருளியதால், துர்க்கா என்றும், (தேவானாம் துர்க்தேஸ் த்ரானாத்
    துர்கேதி பரிகீர்த்திதா)
    2. அம்பிகையை நினைத்த மாத்திரத்தில், பாவங்கள் நம்மை விட்டு விலகி விடுவதால் துர்க்கா என்றும்,
    (துரிதம் கச்சதி ஸம்ருத்யா தஸ்மாத்
    துர்கேதி கீர்த்திதா)

    3. துர்கமன் என்ற அசுரனை சம்ஹாரம் செய்ததால், துர்க்கா என்றும் அழைக்கப்படுகிறாள்.
    (துர்க மாஸூர ஹந்த்ரீத்வாத்
    துர்கேதி பரிகீர்த்திதா).

    எவளுக்கு அப்பாற்பட்டு வேறொன்றுமில்லையோ, யார் தாண்டமுடியாத சம்சார
    சாகரத்தை தாண்டுவிப்பவளோ அவளே, துர்க்கை என்று போற்றப்படுகிறாள் என்று தேவி உபநிஷதம் கூறுகிறது.

    அற்புதமான பதிவைத் தந்த தங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி. அனைவருக்கும், வெற்றித் திருநாள் நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. குருவிற்கு வணக்க,ம்
    நன்றி.

    ReplyDelete
  3. யாவுமாகி அதனியக்க முமாகி
    எங்கும் நிறைந்தவளே அம்மா!
    எத்தனை கரங்கள் உனக்கு
    இத்தனை பேரையும் அணைக்க!

    நீலநயனங்கள் ஆழக் கடல்களோ
    நீலாம்பரி மார்பகங்கள் மேருவோ
    பாதச் சுவடுகள் அது
    மாதவ முனிகள் மாளிகையோ

    கொஞ்சும் சலங்கைகள் அதை
    மிஞ்சும் நினது சிரிப்போ!
    அழகின் அழகே நல்
    அமுதக் குடமே அருமருந்தே!

    உயிரின் உயிரே ஏழேழு
    உலகத்தின் உண்மைப் பொருளே
    கருணைக் கடலே கவின்மிகு
    கற்பக நறு மலரே!

    உந்தன் பிள்ளை நானுனை
    உரிமையோடு கேட்கிறேன் மறுக்காதே
    ஒரே.... ஒரு.... கணம்
    ஒரே.... ஒரு.... முறை
    உந்தன் மடியிலெனை இருத்துவாயே!

    மலரின் மெல்லிய இதழ்களால்
    அமிழ்தினும் இனிய தொரு
    அழகு முத்த மொன்றை
    அம்மா எனக்கு தருவாயோ!

    பிறை சூடியச் சூரியனே!
    மறை போற்றும் நாயகியே!
    சிறைப் பட்ட என்னை
    கறை ஏற்றுவாய் தாயே!

    அனைவருக்கும் வாழ அருளாவாய் அன்னையே எனவேண்டி
    அன்பான வாழ்த்துக்களையும் கூறிக் கொள்கிறேன்.

    ReplyDelete
  4. மன்னிக்கணும் எழுத்துப் பிழை..

    பிறை சூடியச் சூரியனே!
    மறை போற்றும் நாயகியே!
    சிறைப்பட்ட என்னை கறைபோக்கி
    கரை ஏற்றுவாய் தாயே!

    ReplyDelete
  5. 'ஜெய ஜெய தேவி'என்ற சிறப்பான பாடல் தந்த தங்களுக்கு என் நன்றி.

    ReplyDelete
  6. அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    பல முறை முயற்சித்தும் திரு. கிருஷ்னமூர்த்தி கொடுத்த என்னுக்கு தொடர்பு கொள்ள முடியவில்லை, தொடர்ந்து எங்கேஜ் டோன் ஒலிக்கிறது.

    ReplyDelete
  7. character என்று சொல்லி கேள்விபட்டதுண்டு; தாங்கள்
    courage என்று பதிவுக்கு தகுந்ததாற் போல் சொல்வது வேறு மாதிரியுள்ளது

    இல்லையென்பாருக்குத்தான்
    வெற்றி தேவை..

    உண்டு என்பாருக்கு
    என்ன தேவை..

    ஓட்டலில் சாப்பிட போய் அங்கு
    சாப்பிட்ட 2 அயிட்டத்திற்கு திருப்தியடையாமல்
    சாப்பிடாத 200 அயிட்டங்களுக்க வருந்துபவருக்கே வெற்றி தேவை

    இருக்கட்டும் இன்று சுவைக்க
    இந்த பாடலினை சுழல விடுகிறோம்

    தோல்வி நிலையென நினைத்தால்
    மனிதன் வாழ்வை நினைக்கலாமா?

    வாழ்வை சுமையென நினைத்து
    தாயின் கனவை மிதிக்கலாமா?

    விடியலுக்கில்லை துரம்
    விடியும் மனதில் என்ன பாரம்

    நெஞ்சம் முழுதும் வீரம் இருந்தும்
    கண்ணில் ஏன் ஈரம்

    ReplyDelete
  8. ///ஜி ஆலாசியம் said...
    மன்னிக்கணும் எழுத்துப் பிழை..///

    கறை தெரிகிறது சிங்கையாரே..
    கரையேற்ற வேண்டுதலும் புரிகிறது..

    கறை பட்டவுடன் ஒத்துக் கொள்வதால்
    கலரில்ல (வெள்ளை) வேட்டி கட்டுகிறோம்

    லுங்கி என்பது உடுத்த ஒரு
    அங்கி போலிருந்தும் அது

    அழுக்கை ஒத்துக் கொள்வதேயில்லை
    அதனாலே வெள்ளை வேட்டிக்கு ஜே!!

    ReplyDelete
  9. Dear Vathiyar,
    As per the original quote by Woodrow Wilson
    "If you lose your wealth, you have lost nothing,
    If you lose your health, you have lost something,
    But if you lose your character, you have lost everything."

    However, I point this out with lots of 'courage' and 'character', thanks for the post

    ReplyDelete
  10. ////Blogger Parvathy Ramachandran said...
    மிக அற்புதமான, 'ஜெய ஜெய தேவி' பாடல் காணொளி தந்தமைக்கு மிக்க நன்றி. கேட்கும் போதே, ஒரு உற்சாகம் ஏற்படுவது கண்கூடு. துர்க்கை என்ற திருநாமத்தின் அர்த்தங்களை வரிசைப்படுத்தியமை இன்னும் சிறப்பு.
    எனக்குத் தெரிந்த சில மேலதிகத் தகவல்கள்,
    1. தேவர்களை துன்பத்தில் இருந்து காத்தருளியதால், துர்க்கா என்றும், (தேவானாம் துர்க்தேஸ் த்ரானாத்
    துர்கேதி பரிகீர்த்திதா)
    2. அம்பிகையை நினைத்த மாத்திரத்தில், பாவங்கள் நம்மை விட்டு விலகி விடுவதால் துர்க்கா என்றும்,
    (துரிதம் கச்சதி ஸம்ருத்யா தஸ்மாத்
    துர்கேதி கீர்த்திதா)
    3. துர்கமன் என்ற அசுரனை சம்ஹாரம் செய்ததால், துர்க்கா என்றும் அழைக்கப்படுகிறாள்.
    (துர்க மாஸூர ஹந்த்ரீத்த்
    துர்கேதி பரிகீர்த்திதா).
    எவளுக்கு அப்பாற்பட்டு வேறொன்றுமில்லையோ, யார் தாண்டமுடியாத சம்சார
    சாகரத்தை தாண்டுவிப்பவளோ அவளே, துர்க்கை என்று போற்றப்படுகிறாள் என்று தேவி உபநிஷதம் கூறுகிறது.
    அற்புதமான பதிவைத் தந்த தங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி. அனைவருக்கும், வெற்றித் திருநாள் நல்வாழ்த்துக்கள்.////

    உங்களின் நல் வாழ்த்துக்களுக்கு நன்றி சகோதரி!

    ReplyDelete
  11. /////Blogger Udhaya Kumar said...
    குருவிற்கு வணக்க,ம்
    நன்றி.////

    நல்லது நன்றி நண்பரே!

    ReplyDelete
  12. Blogger ஜி ஆலாசியம் said...
    யாவுமாகி அதனியக்க முமாகி
    எங்கும் நிறைந்தவளே அம்மா!
    எத்தனை கரங்கள் உனக்கு
    இத்தனை பேரையும் அணைக்க!
    நீலநயனங்கள் ஆழக் கடல்களோ
    நீலாம்பரி மார்பகங்கள் மேருவோ
    பாதச் சுவடுகள் அது
    மாதவ முனிகள் மாளிகையோ
    கொஞ்சும் சலங்கைகள் அதை
    மிஞ்சும் நினது சிரிப்போ!
    அழகின் அழகே நல்
    அமுதக் குடமே அருமருந்தே!
    உயிரின் உயிரே ஏழேழு
    உலகத்தின் உண்மைப் பொருளே
    கருணைக் கடலே கவின்மிகு
    கற்பக நறு மலரே!
    உந்தன் பிள்ளை நானுனை
    உரிமையோடு கேட்கிறேன் மறுக்காதே
    ஒரே.... ஒரு.... கணம்
    ஒரே.... ஒரு.... முறை
    உந்தன் மடியிலெனை இருத்துவாயே!
    மலரின் மெல்லிய இதழ்களால்
    அமிழ்தினும் இனிய தொரு
    அழகு முத்த மொன்றை
    அம்மா எனக்கு தருவாயோ!
    பிறை சூடியச் சூரியனே!
    மறை போற்றும் நாயகியே!
    சிறைப் பட்ட என்னை
    கறை ஏற்றுவாய் தாயே!
    அனைவருக்கும் வாழ அருளாவாய் அன்னையே எனவேண்டி
    அன்பான வாழ்த்துக்களையும் கூறிக் கொள்கிறேன்./////

    உங்களுடைய பின்னூட்டத்திற்கும், கவிதைக்கும் நன்றி ஆலாசியம்

    ReplyDelete
  13. /////Blogger ஜி ஆலாசியம் said...
    மன்னிக்கணும் எழுத்துப் பிழை..
    பிறை சூடியச் சூரியனே!
    மறை போற்றும் நாயகியே!
    சிறைப்பட்ட என்னை கறைபோக்கி
    கரை ஏற்றுவாய் தாயே!////

    எழுத்துப்பிழை சகஜம்தான். ஒருமுறைக்கு இருமுறை படித்தால், அதுவராமல் தவிர்க்கலாம். அதனால் பெரிய குற்றம் ஒன்றும் இல்லை!

    ReplyDelete
  14. ////Blogger V Dhakshanamoorthy said...
    'ஜெய ஜெய தேவி'என்ற சிறப்பான பாடல் தந்த தங்களுக்கு என் நன்றி.////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  15. ////Blogger thanusu said...
    அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
    பல முறை முயற்சித்தும் திரு. கிருஷ்னமூர்த்தி கொடுத்த என்னுக்கு தொடர்பு கொள்ள முடியவில்லை, தொடர்ந்து எங்கேஜ் டோன் ஒலிக்கிறது.////

    என்ன காரணம் என்று தெரியவில்லை. உங்களுடைய முயற்சிக்கு நன்றி!

    ReplyDelete
  16. /////Blogger அய்யர் said...
    character என்று சொல்லி கேள்விபட்டதுண்டு; தாங்கள்
    courage என்று பதிவுக்கு தகுந்ததாற் போல் சொல்வது வேறு மாதிரியுள்ளது/////

    நான் என் நினைவில் உள்ளதை எழுதினேன். பதிவிற்குத் தகுந்தாற்போல சொல்லவில்லை
    இதே செய்தியை இன்னொரு அன்பரும் சொல்லியிருக்கிறார். இன்றைய பின்னூட்டத்தில் அதுவும் உள்ளது.
    பதிவில் அந்த வரிகளை நீக்கி விட்டேன். அதனால் ஒன்றும் பெரிய இழப்பில்லை

    ReplyDelete
  17. //////Blogger Leo said...
    Dear Vathiyar,
    As per the original quote by Woodrow Wilson
    "If you lose your wealth, you have lost nothing,
    If you lose your health, you have lost something,
    But if you lose your character, you have lost everything."
    However, I point this out with lots of 'courage' and 'character', thanks for the post////

    தகவலுக்கு நன்றி, நண்பரே! நான் என் நினைவில் இருந்ததை எழுதினேன். இப்போது பதிவில் திருத்தம் செய்துவிட்டேன்.

    ReplyDelete
  18. nalla padal ennku mugavum pittathu vannakam sir

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com