மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

26.7.12

Astrology சுகங்களை எப்போது இழக்க நேரிடும்?

Astrology சுகங்களை எப்போது இழக்க நேரிடும்?

Key Points - பகுதி 3

பாபகர்த்தாரி யோகத்தால் பாதிக்கப்பெறும் வீடுகளுக்கான பொதுப்பலன்கள்

இது ஒரு அவயோகம். அதை முதலில் நினைவில் வையுங்கள்.

ஒரு வீட்டின் இருபுறமும் தீய கிரகங்கள் நின்றால் அதாவது இருந்தால், அந்த வீடு இந்த பாப கர்த்தாரி யோகத்தால் பாதிக்கப்படும்.

1
ஒன்றாம் வீடு - அதாவது லக்கினம் பாபகர்த்தாரி யோகத்தால் பாதிக்கப்பெற்றிருந்தால், அந்த ஜாதகன் அடிக்கடி நோய்வாய்ப்படுவான். விபத்துக்கள் நேரிடும். எப்போதும் ஏதாவது ஒரு மன அழுத்தம் (Tension) இருக்கும்.
2.
இரண்டாம் வீடு: இழப்புக்கள் ஏற்படும். அது பெரும்பாலும் பணம் சம்பந்தப்பட்டதாக இருக்கும். (2nd house is the house of finance and family affairs) குடும்ப வாழ்க்கையில் பிரச்சினைகள் உண்டாகும். குடும்பத்தைவிட்டுப் பிரிந்திருக்க நேரிடும். குடும்பத்தை வைத்து மன அழுத்தங்கள் உண்டாகும்
3.
மூன்றாம் வீடு: மரியாதைக்கு பங்கம் ஏற்படும். உடன்பிறப்புக்களை இழக்க நேரிடும் (Loss of siblings) உடன்பிறப்புக்கள், மற்றும் நண்பர்களுடன் தேவையில்லாத விரோதங்கள் ஏற்படும்.
4.
நான்காம் வீடு: பெற்றோர்களை இழக்க நேரிடும். வாழ்க்கையில் சுகங்களை இழக்க நேரிடும். அமைதியை இழக்க நேரிடும். தண்ணீரில் கண்டங்கள் ஏற்படும்.
5.
ஐந்தாம் வீடு: குழந்தைகளுக்கு, குழந்தைகளை வைத்து ஜாதகனுக்கு சிரமங்கள், கஷ்டங்கள், துன்பங்கள் ஏற்படும். எப்போதும் மன நிம்மதி இருக்காது.
6.
ஆறாம் வீடு: தொழிலில், வேலையில் கஷ்டங்கள் உண்டாகும். விரோதிகளால், விரோதங்களால் அடிக்கடி மனதில் பய உணர்வு மேலோங்கி இருக்கும்.
7.
ஏழாம் வீடு: மனைவி அல்லது கணவன் அடிக்கடி நோய்வாய்ப்படுவான். அவர்களால் சிரமப்பட நேரிடும். அவர்களால் விரையங்கள் ஏற்படும்.
8.
எட்டாம் வீடு: வறுமை நிலவும். கடன்கள் உண்டாகும். நோய்கள் உண்டாகும். சிரமமான வழ்க்கை வாழ நேரிடும். பயணங்கள் அலுப்பை ஏற்படுத்தும்.
9.
ஒன்பதாம் வீடு: தந்தையை இழக்க நேரிடும். வறுமையான சூழல்கள் உண்டாகும். வறுமை வாட்டி எடுக்கும்.
10.
பத்தாம் வீடு: வேலையில், தொழிலில் பல பின்னடைவுகள் ஏற்படும் (There will be set backs in career)
11.
பதினொன்றாம் வீடு: காதுகளில் பிரச்சினைகள் ஏற்படும். கேட்கும் தன்மையில் குறைபாடுகள் உண்டாகும். வீட்டு மாப்பிள்ளையைப் பறிகொடுக்க நேரிடும்.
12
பன்னிரெண்டாம் வீடு: தூக்கமின்மையால் அவதிப்பட நேரிடும். ஆரோக்கியம் கெட்டு மருத்துவமனைக்கு அலைய நேரிடும். பலவிதமான பணச் செலவுகள் ஏற்பட்டு படுத்தி எடுக்கும்.

எல்லாமே பொதுப்பலன்கள். அவரவர்களின் ஜாதகத்தின் தன்மையைப் பொறுத்து இது கூடலாம் அல்லது குறையலாம் அல்லது இல்லாமல் போகலாம். அதையும் மனதில் கொள்ளவும்

இது மேல்நிலை வகுப்பிற்காக எழுதப்பெற்ற பாடங்களில் ஒன்று, அனைவருக்கும் பயன்படட்டும் என்று அதை இன்று வகுப்பறையில் வலை ஏற்றியுள்ளேன்!

அன்புடன்
வாத்தியார்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

24 comments:

  1. காலை வணக்கம் ஐயா,
    நல்ல பாடம் தந்தமைக்கு நன்றி.
    -----
    புவனேஷ்

    ReplyDelete
  2. good morning sir. when you say evil planets, do you mean general evil planets ( sun, jupiter, saturn, mars , rahu, ketu, waxing moon) or malefic planets for particular lagna ?

    ReplyDelete
  3. குருவிற்கு வணக்கம்
    பாபகர்த்தாரி பாடம் நன்றாக உள்ளது
    நன்றி

    ReplyDelete
  4. ஐயா, ரிசப மற்றும் துலாம் லக்கினத்துக்கு சனி யோககாரன் மற்றும் கேந்திராதிபத்ய தோசத்தால் சுப கிரகமாகிறார். அவர் இவ்விரு லக்கினங்களுக்கு 2மிடத்திலும் 12ல் ராகுவோ கேதுவோ இருந்தாலும் பாபகர்த்தாதி யோக கணக்கில் வருமா? பலன் எப்படி இருக்கும்?

    ReplyDelete
  5. நிறைய தெரிந்து கொள்ள ஏதுவாக இருக்கிறது.
    மிக்க நன்றி !
    இதற்கு என்ன பரிஹாரம் செய்வது ?
    பொதுவில்,பரிகாரங்கள் ஒரு ஜாதகருக்கு
    எந்த அளவில் பலிக்கும் ?
    அதற்கு எந்த 'வீடு' பார்க்க வேண்டும் ?

    ReplyDelete
  6. /////Blogger Bhuvaneshwar said...
    காலை வணக்கம் ஐயா,
    நல்ல பாடம் தந்தமைக்கு நன்றி.
    -----
    புவனேஷ்/////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி புவனேஷ்!

    ReplyDelete
  7. /////Blogger Balaji said...
    good morning sir. when you say evil planets, do you mean general evil planets ( sun, jupiter, saturn, mars , rahu, ketu, waxing moon) or malefic planets for particular lagna ?/////

    முதல் நிலை தீய கிரகங்கள்: சனி, ராகு & கேது
    இரண்டாம் நிலை தீய கிரகங்கள்: செவ்வாய், சூரியன்

    ReplyDelete
  8. /////Blogger Udhaya Kumar said...
    குருவிற்கு வணக்கம்
    பாபகர்த்தாரி பாடம் நன்றாக உள்ளது
    நன்றி////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  9. /////Blogger Arul said...
    ஐயா, ரிசப மற்றும் துலாம் லக்கினத்துக்கு சனி யோககாரன் மற்றும் கேந்திராதிபத்ய தோசத்தால் சுப கிரகமாகிறார். அவர் இவ்விரு லக்கினங்களுக்கு 2மிடத்திலும் 12ல் ராகுவோ கேதுவோ இருந்தாலும் பாபகர்த்தாதி யோக கணக்கில் வருமா? பலன் எப்படி இருக்கும்?////

    சனி இரண்டு வேலைகளையும் செய்யக்கூடியவர். ஆகவே அவர் கணக்கில் வருவார்!

    ReplyDelete
  10. /////Blogger ஸ்ரவாணி said...
    நிறைய தெரிந்து கொள்ள ஏதுவாக இருக்கிறது.
    மிக்க நன்றி !
    இதற்கு என்ன பரிஹாரம் செய்வது ?
    பொதுவில்,பரிகாரங்கள் ஒரு ஜாதகருக்கு
    எந்த அளவில் பலிக்கும் ?
    அதற்கு எந்த 'வீடு' பார்க்க வேண்டும் ?////

    காசு செல்வழித்துச் செய்யும் பரிகாரம் எல்லாம் பரிகாரம் அல்ல!
    இறைவழிபாடே உண்மையான பரிகாரம். அத்துடன் ராமேஷ்வரம், திருநாகேஸ்வரம், காளஹஸ்தி போன்ற ஸ்தலங்களுச்சென்று அங்கே உறையும் இறைவனை மனம் உருகப் பிரார்த்தித்து வருவதும் நன்மையளிக்கும்!

    ReplyDelete
  11. ///பதினொன்றாம் வீடு: காதுகளில் பிரச்சினைகள் ஏற்படும். கேட்கும் தன்மையில் குறைபாடுகள் உண்டாகும். வீட்டு மாப்பிள்ளையைப் பறிகொடுக்க நேரிடும்.///

    இது புதியத் தகவல் எனக்கு.. பாவ கர்த்தாரி செய்த பாவங்களுக்குத் தகுந்தாற் போல் செயல் படும் போலிருக்கிறது.

    இன்றையப் பாடத்திற்கு நன்றிகள் ஐயா!

    ReplyDelete
  12. அய்யா மாலை வணக்கம் .

    ReplyDelete
  13. ayya vanakam.. naala padam .. ayya eppzthu sani bagavan kannil ..ullara thulaml ullra . vakragathi enral kanni rasi paduthma .. o..

    ReplyDelete
  14. பாவகர்த்தாரி யோகத்தில் மாட்டிகொண்ட கிரகத்துக்கு குருவின் பார்வை இருப்பின் நன்மை செய்யுமா அய்யா.

    ReplyDelete
  15. ////Blogger அய்யர் said...
    இது
    வருகை பதிவு/////

    உங்களின் வருகைப் பதிவிற்கு நன்றி!

    ReplyDelete
  16. //////Blogger ஜி ஆலாசியம் said...
    ///பதினொன்றாம் வீடு: காதுகளில் பிரச்சினைகள் ஏற்படும். கேட்கும் தன்மையில் குறைபாடுகள் உண்டாகும். வீட்டு மாப்பிள்ளையைப் பறிகொடுக்க நேரிடும்.///
    இது புதியத் தகவல் எனக்கு.. பாவ கர்த்தாரி செய்த பாவங்களுக்குத் தகுந்தாற் போல் செயல்படும் போலிருக்கிறது.
    இன்றையப் பாடத்திற்கு நன்றிகள் ஐயா!/////

    உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி ஆலாசியம்!

    ReplyDelete
  17. //////Blogger Gnanam Sekar said...
    அய்யா மாலை வணக்கம் ./////

    உங்களின் வருகைப் பதிவிற்கு நன்றி!

    ReplyDelete
  18. //////Blogger eswari sekar said...
    ayya vanakam.. naala padam .. ayya eppzthu sani bagavan kannil ..ullara thulaml ullra . vakragathi enral kanni rasi paduthma .. o../////

    சனி இப்போது வக்கிர சுழற்சியில் கன்னியில் உள்ளார். வக்கிர நிவர்த்தி பெற்றதும் சரியாகிவிடும். பொறுத்திருங்கள்!

    ReplyDelete
  19. /////Blogger thanusu said...
    பாவகர்த்தாரி யோகத்தில் மாட்டிகொண்ட கிரகத்துக்கு குருவின் பார்வை இருப்பின் நன்மை செய்யுமா அய்யா./////

    ஓரளவிற்குச் செய்யும். ஒரு ஜாதகன் மருத்துவமனையில் படுத்திருந்தால், மருத்துவமனை செலவுகளுக்கு குரு ஏற்பாடு செய்வார். ஆனால் வலியும், வேதனையும் இல்லாமல் போகாது. ஜாதகன்தான் பொறுத்துக்கொள்ள வேண்டும்.
    விளக்கம் போதுமா?

    ReplyDelete
  20. Dear Sir,

    Hope you are doing good. My question is what if 11th house has mars and jupiter and 12th house has moon and venus
    1st house has saturn, mercury and sun.
    Is 12th is in avayogam? Please explain.

    ReplyDelete
  21. பாப கர்த்தாரி அவ யோகத்தின் பலாபலன்கள் பற்றிய பாடம் மிகவும் உபயோகமானது..! வாத்தியார் ஐயாவிற்கு மிக்க நன்றி!

    ReplyDelete
  22. //ஐந்தாம் வீடு: குழந்தைகளுக்கு, குழந்தைகளை வைத்து ஜாதகனுக்கு சிரமங்கள், கஷ்டங்கள், துன்பங்கள் ஏற்படும். எப்போதும் மன நிம்மதி இருக்காது.//

    இந்த அமைப்புள்ளவர்கள் எங்கே நிம்மதி எங்கே நிம்மதி அங்கே எனக்கோர் இடம் வேண்டும் என்று பாடும் மனநிலையில் இருப்பார்கள் போலும்.

    எந்த இடம் பாப கர்த்தாரி யோகத்தில் பாதிக்கப் பட்டிருந்தாலும் அதன் காரகத்துவம் பாதிக்கப் படும். வேறு நல்ல அமைப்புகள் அதை சரி செய்யாத பட்சத்தில், என்று புரிகிறது.

    எனக்கு 10ம் வீடு பாப கர்த்தாரி யோகத்தால் பாதிக்கப் பட்டிருக்கிறது. இதை சரி செய்ய வேறு நல்ல அமைப்புகள் இருக்கின்றன.

    வேறொரு வருமானம் வருவதால் இப்போது இருக்கும் வேலையை விட்டு விடலாம் என்று நினைத்தாலும் இந்த வேலை என்னை விடமாட்டேன் என்கிறது.

    ReplyDelete
  23. நன்றாக இருக்கும் கோயில்களுக்கு
    சென்று பரிகாரம் செய்வதை மட்டும்
    இல்லாமல் நலிந்து, கேட்பார் /
    பார்ப்பார் / கவனிப்பார் / பூஜை இன்றி
    இருக்கும் பண்டைய கோயில்களுக்கு
    உடலுதவியாகவோ / பண
    உதவியாகவோ செய்வது குரு
    அருளாலும், இறை அருளாலும்
    ஜென்ம ஜென்மமாய் தொடரும்
    பாவங்களில் இருந்து விடுதலை
    கிடைப்பது மட்டும் அல்லாமல்
    இனி வரும் உலகத்தையாரையும், சந்ததியினரையும் நன்றாக வாழ வழி
    செய்யும். இது மட்டும் இன்றி உதவி
    செய்கின்றவருடைய பித்ருக்களுக்கும் குரு அருளாலும், இறை அருளாலும் நல்ல நிலை கிட்டுவதோடு
    பித்ருக்களுடைய ஆசிர்வதாமும்
    கிட்டும்.

    உதாரணத்திற்கு ராகு/கேது சம்மந்தமுடைய தோஷ நிவர்த்திக்கு காலஹஸ்தி / கீழ்பெரும்பள்ளம் /
    திருநாகேஸ்வரம் சென்று பூஜை / பரிகாரம் செய்வது மட்டும்
    அல்லாமல், நாகநாத சுவாமி, நாகேஸ்வரர், திருப்பாம்புரம் நாகம்
    சம்பந்த / பெயர் கொண்ட சிவன் கோயில்கள், சேஷம் சம்பந்த / பெயர் கொண்ட பெருமாள்
    கோயில்கள், ராகு/கேது கிரகங்களுக்கு அதிபதி தெய்வங்கள் (துர்க்கை, பிள்ளையார்) சம்பந்தம் உடைய
    கோயில் திருப்பணிகளுக்கு உடலுதவியாகவோ / பண உதவியாகவோ செய்வது அளப்பரிய பலன்களை அளிக்கும்.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com