மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

16.10.11

மின்னஞ்சல்களைப் பற்றி பகவான் கிருஷ்ணர் என்ன சொன்னார்?


வாரமலர்: இன்றைய வாரமலரை இரண்டு ஆக்கங்கள் அலங்கரிக்கின்றன. முதலில் வருவது வகுப்பறையின் சீனியர் மாணவர் எழுதியது. அடுத்தது வாத்தியார் எழுதியது. இரண்டையும் படித்து மகிழுங்கள். உங்கள் கருத்தை எழுதுங்கள்!
+++++++++++++++++++++++++++++++++++++

1
அவர் மனைவிக்கு எத்தனை கானா பைகள்?

கானா பைகள் என்பதற்கு அர்த்தம் தெரியாதவர்கள் முழுப் பதிவையும் படிக்கவும்!
--------------------------------------------------------------------------------------------------------------------
என்னைப் போல ஓர் அம்மாஞ்சிக்கு வயிற்று நோவு வந்து சேரந்தது. வைத்தியரிடம் போனான். வைத்தியர் என்றால் ஏ,பி,சி,டி 26 எழுத்துக்களையும் போட்டுக்கொண்டு இருக்கிறாரே அந்த ஆங்கில டாக்டர் இல்லை.நாட்டு வைத்தியர்.

"உமது நோயை 3 வேளை மருந்தில் சரி பண்ணி விடுகிறேன்".

"ஆஹா! மகிழ்ச்சி ,மகிழ்ச்சி ! மருந்தை எடுத்துக் கொடும்"

ஒரு சூரணம், ஒரு கஷாயம் கொடுத்தார். 5 அணா பீஸ் கொடுத்துவிட்டு வாசல் வரை வந்துவிட்ட நோயாளியை வைத்தியர் திரும்ப அழைத்தார்.

"இந்த மருந்து நன்றாக‌ வேலை  செய்ய ஒரு 'கண்டிஷன்' இருக்கே!அதை நான் சொல்லலியே!"

"என்ன 'கண்டிஷன்'?"

"மருந்து சாப்பிடும் போது குரங்கு ஞாபகம் மட்டும் வரக்கூடாது."

"வந்தால் என்ன ஆகும்?"

"என்ன ஆகும்?! மருந்து வேலை செய்யாது.அப்புறம் என்னைக் குறை சொல்லக் கூடாது. குரங்கை நினைக்காமல் மருந்தைச் சாப்பிடும்."

'சரி' என்று அம்மாஞ்சி வீட்டுக்கு வந்து மருந்தைச் சாப்பிடக் கையில் எடுத்தார்.

வைத்தியர் போட்ட 'கண்டிஷன்' நினைவுக்கு வந்தது.கூடவே குரங்கு ஞாபகம் வந்தது.

அம்மாஞ்சி மருந்தை சாப்பிட்டரா, வயிற்று நோவு சரியாயிற்றா என்று முடிவைக் கேட்காதீர்கள்.எனக்குச் சொன்ன என் தாத்தா முடிவைச் சொல்லவில்லை.

இந்தக் கதை எதுக்கு இப்போ?

ஏனென்றால், நான் வகுப்பறைக்கு எதாவது எழுத வேண்டுமானால் உடனே என் மனதில் தோன்றுவது சப்பான்(ஜப்பான்தான், தமிழ் ஆர்வத்தால் சப்பான் ஆகிவிட்டது)மைனர்வாள் தான்.

"ஆகா! சண்டை வந்தது பிராமணா; சாத‌த்து மூட்டையைக் கீழே வையும்!"என்று டெல்லிக்காரவுக கிளம்ப வேண்டாம்.(அந்தக் கதை அப்புறம் சொல்கிறேன்)

மைனர்வாளை டார்வின் தியரி படி நம் மூதாதையுருடன் ஒப்பிட்டு விட்டதாகப் பின்னூட்டம் போட வேண்டாம் என்று டெல்லிக்கு புறா மூலம் ஓலை அனுப்பி விட்டேன்.

வகுப்பறயை பற்றி நினைத்தாலே வாத்தியாருக்கு முன்னால் மைனர்வாள் தான் மனக்கண் முன் வந்து நிற்கிறார்.

மனோதத்துவ டாக்டரை கேட்டேன். "ஆமாம்! இது ஜேப்பன்னோ மைனரோ ஃபோபியா" என்ற புதுவிதமான மன நிலை. மன நோய் வகையில் சேர்க்க முடியாது.மன நிலைப்பாடுதான்.ஆனால் இதை சரியாகக் கவனிக்காவிடில் மனநோயில் கொண்டு விட்டுவிடும்" என்றார்.

"கவனிப்பது என்றால் எப்பூடி?"

"எப்பூடின்னா?அப்படித்தான். அடிக்கடி மைனர் உம்மைக் காலை வாரவும், நீர் அவரைக் கையைப்பிடித்து இழுக்கவுமாக இருந்து கொண்டே இருக்கவும்.அப்போ உங்களுக்குள்ள ஒரு 'இது'வந்துடும். மைனரோ ஃபோபியா முற்றாது."

'சரி'ன்னு வந்துட்டேன்.

நான் சாமியார்களைப் பற்றி எழுதினால் மைனருக்கு ஆகுமா ஆகாதா என்ற ஆராய்ச்சி. அனுஷ்கா சர்மா கனுஷ்கா கர்மா என்றெல்லாம் எழுத வரமாட்டேன் என்கிறது என்ன செய்ய?

விவேகானந்தர் பற்றி எழுதினால், 'கீதையைவிட ஃபுட்பால் சிறந்தது என்று விவேக் சொல்லியிருக்கார்' என்று அந்த ஃபுட் பாலாலேயே தாக்குகிறார்.

அதனாலே எனக்கு கட்டுரைக்கான செய்திப் பஞ்சம் வந்துவிட்டது.இந்த வாரம் அதிகம் மூளையை கசக்கி எழுதியுள்ளேன்.

ஃபுட் பால் விஷயம் போலவே confidence trickster matter ஒன்று விவேகானந்தருடன் தொடர்புடையது.

ஒரு சோப்பளாங்கி விவேகானந்தரிடம் போய் ஞான உப‌தேசம் கேட்டான். ஒன்றுக்கும் உதவாத அவனிடம் சொன்னார்,"நீ நான் நம்பும் படி ஏதாவது டூப் சொல்லி என்னை நம்ப‌ வை பார்க்கலாம்" என்றார்.

அவன் சொன்னானா என்று தெரியவில்லை.ஆனால் என் வாழ்க்கையில் அப்படி ஏமாந்த நிகழ்வைச் சொல்கிறேன்.

தஞ்சைக்கு நான் வந்து ஒரு சில வாரங்களே ஆகியிருந்தது. யாரையும் அதிகம் பழக்கம் இல்லை. ஒருவருடைய இயல்பும் பிடிபடாத சமயம்.

மதிய‌ உணவு இடை வேளையில் எல்லோரும்  சேர்ந்து அமர்ந்து உண்போம்.

அந்த சமயத்தில் பல செய்திப் பரிமாற்றங்கள் நடைபெறும்.

காய்கனி எந்தக் கடைத் தெருவில் மலிவு, தஞ்சாவூரிலேயே சிறந்த டைலர் யார்,தொலைகாட்சி நிகழ்ச்சிகள் தெரிகிறதா இல்லை வெறும் கோடுதானா, பாக்கெட் பால் நல்லதா, கைப்பால் நல்லதா ..... இப்படிப் பல.

தங்க‌ம் விலையில் இருந்து,பாய்லர் பற்ற வைக்க சாண‌ உருண்டை வரை பல விஷயங்கள் பேசுவோம்.

என் insufficient time. அதாங்க, போறாத காலத்தின் போது, காபி பற்றிய பேச்சு சாப்பாட்டு மஹாசபையில் அலசப்பட்டது.

"எந்தக் கடையில் காப்பித் தூள் வங்கற?"

ஒருவர் சொன்னார்: 'ராமன்ஸ்'

'நாதன்ஸ் தான் பெஸ்ட்'

'நாங்க‌ லியோ தாம்பா'

'நரசூஸ்தான் பாரம்பரியமானது.'

நான் மெளன‌மாகத்தான் இருந்தேன்.

"என்னா முத்து பேச்சைக் காணோம்" என்றார் அவர்.

அவர்னா? அவர்தான். எனக்கு ஆப்பு வைக்கப் போகிறவர்.

நான் சொன்னேன்:"நாங்க 3 விதமான சீட்ஸ் வாங்கி ஒரு விகிதத்தில் கலந்து மண்சட்டியில் தினமும் வறுத்து, அவ்வப் போது கை மெஷினில் அறைத்து ஃபில்டரில் வடிகட்டி, கறந்த பால் காய்ச்சி, மிதமான சர்க்கரை சேர்த்து
....."

'தினமுமா?'

"ஆம்!காலை மாலை இரண்டு வேளையும்!"

'எப்படி முடிகிறது?'

"நல்ல காபி சாப்பிட வேண்டும் என்ற ஆர்வம் தான். ஜென் புத்த மதத்தில் டீ சாப்பிடுவதே ஒரு சடங்கு போல இருக்குமாம்.அதுபோல காலையில் காபி தயாரிப்பதையே ஒரு தியானம் போலச் செய்கிறோம்."

"ஆகா! கேட்கவே சுகமாக இருக்கே! காபியின் மணத்தையும் சுவையையும் உன் பேச்சே கொண்டு வந்து விட்டதே.ஒரு நாள் வீட்டுக்கு அழைத்து அந்தக் காபியை எனக்குக் கொடேன்."

"பேஷா! எப்போ வருகிறீர் சொல்லும்."

"நாளை சனிகிழமை! அரை நாள் தான் அலுவலகம்! நாளை மாலை 4 மணிக்கு வருகிறேன்."

வீட்டில் வந்து சொன்னேன்!

மறுநாள், கேசரி, அடை,அவியல், காபி என்று மெனுவைப் போட்டார்கள்.

சொன்ன நேரத்திற்கு வந்துவிட்டார்.

மகிழ்ச்சியுடன் வரவேற்று சிற்றுண்டியைக் கொடுத்தோம்.

காபியை சாப்பிட்டுவிட்டு  'ஆகா, ஓகோ' என்று புகழ்ந்தார்.

"தேவாமிர்தம்னா இதுதான்!அடடா என்ன சுவை, என்ன மணம்!!"

வீட்டுப் பெண்களுக்கு உச்சி குளிர்ந்துவிட்டது.

"என் வீட்டில் அவளுக்குத்தான் உடம்பே சரியில்லை.அத‌னால் சரியான சமையல்,காபி, டிபன்  சாப்பிட்டு 5 வருஷம் ஆயிற்று.5 வருஷம் கழித்து இன்றுதான் நல்ல டிபன் காபி"

"அடை இன்னொன்று சாப்பிடுங்கள்.காபி இன்னொரு கப் தரவா?"

'ஆகா, கொடுங்கள்' என்று கேட்டு மீண்டும் மீண்டும் புகழ்ச்சியான வார்த்தைகளைச் சொல்லி ஒரு அன்னியோன்னியத்தை வர வழைத்துவிட்டார்.

பெண்கள் மகுடி கேட்ட பாம்பாக மாறிப் போனார்கள்.

"அவளுக்கு ஹிஸ்டெரெக்டமி(கர்பப்பை) ஆபரேஷன். இன்னும் 2 நாளில் வைத்து உள்ளது. 3000/= ஆகும்.(1974) பணம் தான் இல்லை. என்ன செய்யப் போகிறேனோ!? எல்லாம் பகவான் மேல் பாரத்தை போட்டு விட்டு இருக்கேன்"

'அதென்ன. நாங்கள் இல்லையா? கவலைபடாதீர்கள்.'

மந்திரித்து விட்டது போல எல்லோரும் கிளம்பி வீட்டையே கவிழ்த்துப்போட்டுத் தேடி 3000/= தேர்த்தி அவருக்குத் தக்க மரியாதைகளுடன்
கொடுத்தோம்.

"இப்படிப்பட்ட மனுஷாளை நான் பார்த்ததே இல்லை. எங்க‌ தஞ்சாவூர்காராள் இல்லையோல்லியோ நீங்கள்?அதான். இந்த ஊர்க்காரப்பசங்க எச்சக் கையால் காக்காய் ஓட்டமாடான்.ரொம்ப அபூர்வம்னா இப்படிப்பட்ட மனுஷாளைப் பார்கிறது! சரி வரேன். ரொம்ப தேங்ஸ்!"

காலில் வெந்நீர் பட்டவரைப் போல ஓடிவிட்டார்.

மறுநாள் ஞாயிறு. அலுவலகம் விடுமுறை.

திங்கள் அவர் அலுவலகத்திற்கு வரவில்லை.

மதியம் சாப்பாட்டு மஹாநாட்டில் எல்லோரும் பேசிக்கொண்டு இருந்தோம்.

"சார் இன்னிக்கு ஏன் வரவில்லை தெரியுமோ?"

"அவனுக்கென்ன வராததிற்குக் காரணம்? எந்த சீட்டாட்ட கிளப்பில் விழுந்து கெடக்கிறானோ? எவ்வள்வு ஸ்டேக்கோ? யாருக்குத் தெரியும்?"

எனக்கு 'பகீர்' என்றது.

"இல்லை, சனிக்கிழமை என்னிடம் சொன்னார், அவர் பார்யாளுக்கு யுடெரஸ்ஆபரேஷன் அப்படின்னு"

"அவன் பார்யாளுக்கு எத்தனை யுட்ரஸ் இருக்குமோ யாருக்குத் தெரியும்? ஊர் பூரா வாரா வார‌ம் இதே கதையைச் சொல்லிக் கடன் வாங்கிண்டு ஓடிப் போய்டுவான். பார் சாயங்காலம் அவன் பார்யாள் விசாரிச்சுண்டு வருவா பார்."

சொல்லிவைத்தார் போல மாலை அலுவலக வாசலில் அந்தப் பெண் வந்து நின்று கொண்டிருந்தார்.முதல் முறையாக அவரைப் பார்க்கிறேன். சோகமயமான மஹாலட்சுமி!

"யார்? யார்? கொடுத்தா பணம் அவருக்கு? எந்த கிளப்பில இருக்கார்? எதாவது சொல்லிண்டு போனாரா? இங்கயானா அவரோட அம்மாவுக்கு ரொம்ப சீரியசா இருக்கு.ஆத்தில ஒரு குந்துமணி அரிசி இல்லை. கிழவிக்கு கஞ்சி காய்ச்சக் கூட குருணை இல்லை. பொறுப்பே இல்லாம எங்கயோ சொல்லிக்காம சீட்டாட போய்ட்டாரே!"

நான் பேச்சு வராமல் நின்றேன். பணம் போனது எனக்குப் பெரிசாகத் தெரியவில்லை.

இக்கட்டான நிலையில் குடும்பததை விட்டு விட்டு, சீட்டாடப் பொய் சொல்லிப் பணம் பறித்துக்கொண்டு போயுள்ளாரே அந்த மனிதர்.சே! என்ன மனுஷன் இவர்!

பாத்திரம் அறிந்து அளிக்கச் சொன்ன பெரியவர்கள் எவ்வளவு முன் யோசனை உடையவர்கள்.

புத்திக் கொள்முதல்!

அப்புறம்?

அப்புறம் என்ன, விழுப்புரம்?

அவர் திருந்தினாரா? அவர் திருந்துவதற்கு ஏற்பட்ட சம்பவம் எது என்றெல்லாம் வளர்க்க இது கதையல்ல. நிஜம்!

வாழ்க வளமுடன்!
ஆக்கியோன்: வகுப்பரையின் மூத்த மாணவர்களில் ஒருவரான
கே. முத்துராமகிருஷ்ணன் (லால்குடி)


கர்ப்பப் பைகள் என்று தலைப்பில் போடாமல், க.பைகள் என்று சுறுக்கிப் போட்டுள்ளேன். க. என்ற எழுத்து கானாவாக மாறியதற்குக் காரணம் எங்கள் பகுதி சொல்வழக்குகள்தான் காரணம் - வாத்தியார்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
 வாரமலர் - பகுதி இரண்டு

மின்னஞ்சல்களைப் பற்றி பகவான் கிருஷ்ணர் என்ன சொன்னார்? 

பஞ்சபூதங்கள் ஐந்தல்ல - ஆறு!

நிலம், நீர், நெருப்பு, காற்று, வானம் ஆகியவற்றுடன் மின்னஞ்சலும் சேர்ந்து தற்சமயம் உள்ள பூதங்கள் மொத்தம் ஆறு!

மின்னஞ்சல்களை மற்றவர்களுக்கு அனுப்ப வேண்டிய கட்டாய கர்மச் செயல்! The Karma of Forwarding Emails to One and All

பகவத் கீதை - புது அத்தியாயம் - எண் 19

அர்ஜுனன்:  வாசுதேவா, எனக்கு வரும் எண்ணற்ற மெயில்களை மற்றவர்களுக்கு அனுப்பும் - Forwarding Emails - அடாவடி வேலையை,
மன்னிக்கமுடியாத செயலை நான் எப்படிச் செய்வேன்? அதுவும் உயிரினும் மேலான நண்பர்களுக்கும், உற்றார்களுக்கும், உறவினர்களுக்கும்,
வயதில் மூத்தவர்களுக்கும் மதிப்பிற்கு உரியவர்களுக்கும் எப்படி அவற்றை நான் அனுப்புவேன். மனம் ஒப்பவில்லையே?

கிருஷ்ணர்:  இன்றைய காலகட்டத்தில், நண்பன், எதிரி, உறவினன் அந்நியன் இளைஞன், வயோதிகன் என்ற பேதங்கள் (பிரிவுகள்) கிடையாது.
அனைவரும் சமமானவர்களே! வேண்டியவர்களே! எதையாவது சொல்லி நீ தப்பிக்க முடியாது. அதுதான் இணைய தர்மம் (Net-Dharma) மின்னஞ்சல் பெட்டிக்குள் நுழைந்து பார்ப்பதற்குத் தயங்காதே. வந்திருக்கும் அத்தனை மெயில்களையும் அனைவருக்கும் ஃபார்வேர்ட் செய். உன்னிடமிருந்து எதிர்பார்க்கப்பெறும் கர்மா அது ஒன்றுதான். நீ கடைபிடிக்க வேண்டிய தர்மமும் அதுதான்!

அர்ஜுனன்: மாதவா, என் மனசாட்சிக்கும், ஆன்மாவிற்கும் ஒவ்வாத செயலைச் செய்யச் சொல்லி என்னைக் கட்டாயப் படுத்தாதீர்கள்.
சங்கடத்திற்கு உள்ளாக்காதீர்கள்!

கிருஷ்ணர்: குந்திபுத்திரனே! இன்று நிலவும் மாயவட்டத்திற்கு நீ ஒன்றும் விதிவிலக்கல்ல! டாலரும், யென்னும், யூரோகரன்சியும் ஆட்சி செய்யும்
இன்றைய உலகிற்கு உனக்கு நீயே கமிட்டாகி உள்ளாய். நீ என்பது உன்னையும், உன்னுடைய கணினி மவுஸையும் சேர்த்துக் குறிக்கும்! அதை மறந்து விடாதே! மெயில்கள் 25 ஆண்டுகாலமாக கோலோட்சிக்கொண்டுள்ளன. நீ வைகுண்டம் போனாலும் போவாய். அவைகள் போகாது. தொடர்ந்து அவைகள் இங்கேயே நிற்கக்கூடியவை. ஆட்சி செய்யக்கூடியவை. மாயைக்குள் படுத்துக்கொள்ளாதே! எழுந்து உட்கார்! உனது  கடமையைச் செய்! வரும் மெயில்களில் ஒன்றையும் விடாமல் அனைத்தையும் அனைவருக்கும் ஃபார்வேர்ட் செய்!

அர்ஜுனன்:  கண்ணா, மாய உலகத்தில் மின்னஞ்சலுக்கு உரிய முக்கியத்தைக் கொஞ்சம் தெளிவுறச் சொல்லுங்கள்

கிருஷ்ணர்:  அப்படிக்கேள். இப்போது சொல்கிறேன். மின்னஞ்சல் இவ்வுலகின் ஆறாவது பூதம். E*mail is the 6th element in the universe நிலம், நீர், நெருப்பு, காற்று, வானம் ஆகியவற்றுடன் மின்னஞ்சலும் சேர்ந்து தற்சமயம் உள்ள பூதங்கள் மொத்தம் ஆறு! மின்னஞ்சல்களை உருவமுள்ளவைகள் என்று உணரவும் முடியாது. உருவமில்லாதவைகள் என்று ஒதுக்கவும் முடியாது. அவைகளுக்கு  உயிருண்டு. ஆனால் மரணமில்லை. மின்னஞ்சல்கள் ஒரு மகத்தான வேலையைச் செய்கின்றன. மின்னஞ்சல்களைப் படிப்பதன் மூலமும்,  மற்றவர்களுக்கு அவற்றை அனுப்புவதன் மூலமும் தங்கள் நேரம் சரியான விதத்தில் செலவிடப்படுவதாக மக்கள் நம்புகிறார்கள். தங்கள்
அறிவையும், முயற்சியையும் தாண்டி தாங்கள் சாதிப்பதாக, சாதனை செய்வதாக அவர்கள் எண்ணுகிறார்கள். ஆன்மா ஒரு உடலை விட்டு
நீங்கி பிரிதொரு உருவம் எடுப்பதைப்போல மின்னஞ்சல்களும் ஒரு கணினியில் இருந்து இன்னொரு கணினிக்குப் போய்ச் சேருகிறது.
அவைகள் உலகை விட்டு நீங்குவதும் இல்லை. அழிவதும் இல்லை.

அர்ஜுனன்:  பகவானே, மின்னஞ்சல்களின் உண்மையான தன்மைகள் என்ன?

கிருஷ்ணர்:  நெருப்பால் அவற்றை எரிக்க முடியாது. காற்றுடன் கலந்து அவைகள்காணாமல் போகாது. அவற்றைத் வெற்றி கொள்ளவும் முடியாது. தோல்வி அடையச் செய்யவும் முடியாது. உன்னுடைய பரிபூரண ஆன்மாவைப்போல மின்னஜ்சல்களும் நிலையானவை. நீ  உன்னுடைய  வில்லில் இருந்து செலுத்தும் அம்புகளைப் போல அல்ல அவைகள். சமயங்களில் நீ ஃபார்வேர்ட் செய்யும் மின்னஞ்சல்கள் வழி  தவறினாலும்  உன்னிடமே திரும்ப வந்து சேரக்கூடிய தன்மை உடையவை! நீயும் வேண்டிய மட்டும் திரும்பத் திரும்ப எத்தனை முறைகள்  வேண்டும் என்றாலும் ஒரு க்ளிக்கில் அந்த நபருக்கே அவற்றை அனுப்பலாம். இப்போது புரிகிறதா அவற்றின் உண்மையான தன்மை மற்றும்  மேன்மை?

அர்ஜுனன்: வாசுதேவா, கோடி வந்தனங்கள் உமக்கு உரித்தாகுக! மூடிக் கிடந்த என் கண்களைத் திறந்துவிட்டீர்கள். மெயில்களின் மேன்மையை  நன்கு புரிந்துகொண்டேன். இதுவரை நான் செய்து வந்த தவறு எனக்கு விளங்குகிறது. இதுவரை எனக்கு வந்த மெயில்கள் அனைத்தையும்  படித்துப் பார்ப்பதிலேயே எனது நேரத்தைச் செலவிட்டேன். வேறு எந்த வேலையையும் நான் செய்யவில்லை. யாருக்கும் அவற்றை ஃபார்வேர்ட்  செய்யவில்லை. இன்று முதல் என்னை நான் மாற்றிக்கொள்கிறேன். படிப்பதைவிட அவற்றை மற்றவர்களுக்குப் ஃபார்வேர்ட் செய்வதுதான்  முக்கியம் என்பதை உணர்ந்துவிட்டேன். அதுதான் தர்மமும் கூட. சிம்ப்பிளாக ஃபார்வேட் பட்டனை அமுக்கி, அங்கிங்கெனாதபடி  அனைவருக்கும் அவற்றை அனுப்பி வைக்கிறேன். அதர்மத்திற்கு எதிராக நடக்கும் இன்றைய குருஷேத்திர யுத்தத்தில் அனைவரையும் பங்கு  கொள்ளச் செய்ய அதுதான் சிறந்த வழி!

கிருஷ்ணர்:  வெற்றி, தோல்வி எல்லாம் உன் கையில் இல்லை. செயல் மட்டுமே உன் வசம். பலன் உன் கையில் இல்லை. அனுப்புவதோடு
நிறுத்திக் கொள். கிடைக்கும் ஒவ்வொருவன் கையிலும் அதை விட்டுவிடு.
அது ஒன்றுதான் உன்னுடைய தலையாய கடமை. ததாஸ்து!

- மின்னஞ்சலில் வந்த சரக்கு. மொழிமாற்றம் மட்டும் அடியவனுடைய கைவண்ணம் புதிய அத்தியாயம் எப்படி உள்ளது சாமிகளா? ஒரு வரி எழுதுங்கள்!
அன்புடன்
வாத்தியார்

------------------------------------------------------------------------------------------------

83 comments:

  1. ஆக்கத்தை வெளியிட்டமைக்கு நன்றி ஐயா!

    கீதை 19ம் அத்தியாயமும் ஜோர்தான்.ஆமாம். இந்த forward
    சள்ளை பெரிய தொல்லைதான்.தினமும் 25ஆவது டெலீட் போடுகிறேன்.

    ReplyDelete
  2. "இப்படிப்பட்ட மனுஷாளை நான் பார்த்ததே இல்லை. எங்க‌ தஞ்சாவூர்காராள் இல்லையோல்லியோ நீங்கள்?அதான்.......ரொம்ப அபூர்வம்னா இப்படிப்பட்ட மனுஷாளைப் பார்கிறது!" ஐயா, kmr.k, 40 ஆண்டுகள் தஞ்சைவாசியான உங்களுக்கும் தஞ்சைவாசிகளின் மனம், எழுத்துகளிலும் தஞ்சைவாசியின் மணம் வந்துவிட்டது. உங்கள் ஊர்க்கார்களை வாறுவதில் (திருவாரூர், நாகப்பட்டிணம் என்று எல்லாம் இப்பொழுது பிரிந்து வந்ததுதானே) சலைக்கவில்லை நீங்கள். மாண்புமிகு மைனர்வாளும், அவரது தில்லி தாய்க்குல கொ. ப. செயும் எதிர்வாதத்தில் ஒரு பிடிபிடிப்பார்கள். ஆஹா. ஆவலுடன் காத்திருக்கிறேன். நன்றி தொடர்ந்த நல்ல நிகழ்வுகளை தொகுத்து நகைச்சுவையாய் அளிப்பதற்கு.

    அனைவரிடமும் ..."சக மனிதர்களிடமும் இறைவனைக் காண்" என்பதை உணர்த்த எல்லோரிடமும் கடவுளின் ஆற்றல் (ஆக்கல், காத்தல், அழித்தல் திறன் /Ctrl+N ஆக்கல், Ctrl+S காத்தல், Ctrl-Alt-Del அழித்தல்) இருப்பதை உணருங்கள் என அடுத்து வகுப்பறை ஆசிரியர் ஐயா பாடம் நடத்துவார் என நம்புகிறேன். நன்றி நகைச்சுவை பதிவுகளை வழங்குவதற்கு. அடுத்து சமூக வலைப்பதிவில் பொழுதை செலவிடுவதைப் பற்றியும் நகைச்சுவையாய் ஒரு ஆக்கத்தை எதிர் பார்க்கிறேன்.

    ReplyDelete
  3. kmrk ஏமாந்த கதை நன்று..
    இதுபோலே கடன் வாங்கிக் கழித்தல் நடத்தும் மகானுபவான்களுக்கு என்று ஸ்பெஷல் குணங்கள் உள்ளது..
    1 .இவர்கள் ஊரெங்கும் கிட்டத்தட்ட ஒரே கதையை சொல்லி ஆட்டையைப் போடுவதையே தொழிலாகக் கொண்டவர்கள்..
    2 .அப்படி வாங்கத் தேர்வு செய்வது புதிய ஆளாக இருக்கும்.(அவர்களுக்குத்தான் அபிமானம் இருக்கும்.)
    3. அப்படி கடன் வாங்கும்போது கண்டிப்பாகத் திருப்பிக்கொடுக்கும் தேதியைச் சொல்லித்தான் வாங்குவார்கள்..(அடுத்த மாசம் அஞ்சாம்தேதி சம்பளம் வந்ததும் முதல் நாளே வந்துடுறேன்..)
    4. அப்படி கடன் வாங்கும் இடங்களுக்குள்(எமாளிகளுக்குள்)கலந்து பேச்சுவார்த்தைகள் இல்லாத இடமாகத் தேர்வு செய்வார்கள்..
    5.பிரச்சினைகளாக மனதை உருக்கும் விஷயங்களைப் பேசுவார்கள்..(மகன் படிப்பு,மனைவு உடம்பு சரியில்லாதது,)
    6.கொடுத்தவர் ரொம்பப் பிரெஸ்ஸர் கொடுத்துத் திரும்பக் கேட்டால் வேறெங்காவது ஓரிடத்தில் இதே பிட்டைப் போட்டு ரொடேஷன் பண்ணுவார்கள்..
    (இது ரொம்ப அபூர்வம்.திடீரென்று ஒருநாள் ஊரையே கூட மாற்றிவிடுவார்கள். )
    7.ஆனால் இவர்கள் ரோசக்காரர்கள்..இந்தப் பிசாத்து அமௌன்ட்டுக்குன்னு இந்தப் புடுங்கல் புடிங்குறியே?
    என்பது போலே மேலும்கீழும் பார்ப்பார்கள்..ஏதோ கடன்கொடுத்தவர்கள் கடன்கேட்டுப் போய் அவர்கள் வீட்டுப் படியேறி நிற்பதுபோலே ஒரு மாயத் தோற்றத்தை சுற்றத்தாரிடம் தோற்றுவிக்க முயற்சி செய்வார்கள்..
    8.இவர்களின் வழக்கமான ஆடம்பரங்களுக்கு கொஞ்சமும் குறைவிராது..வீட்டில் டிவி,ஆளுக்கொரு செல்போன்,தோணும்போது ஹோட்டல் டிஃபன்,கூப்பிடு தூரத்துக்கெலாம் கூட ஆட்டோ..என்று பட்டியல் நீளும்..(குடும்பத்தில் எல்லோருமே இவர்களின் எஜெண்டுகளாகச் செயல்படுவார்கள்..)
    9.இவர் போய் இப்படிச் செய்வாரா என்ற ஒரு களையான முகபாவம் இருக்கும்.
    10.சைகாலோஜி தெரிந்து பேச்சைக் கொண்டுபோவதில் வல்லவர்கள்..எங்கே ஆரம்பித்து எங்கே பிட்டைப் போட்டால் பட்டென்று காரியம் முடியும் என்று ஒரு தேர்ந்த மார்க்கெடிங் ஆளுக்குள்ள கைங்கர்யம் இருக்கும்..

    மேற்படி ஆளு வாரார்...ஜாக்ரதை..

    (பி.கு) இவர்களுக்கெல்லாம் கூட நேரம் வரும்போது நல்ல ஆடம்பரமான வாழ்க்கை அமைகிறது..
    கடன் கொடுத்தவன்கூட அண்ணாந்து பார்க்கும்படி..
    இறைவனையே எமாற்றிவிட்டர்களோ?

    ReplyDelete
  4. ஐயா! இன்றைய இரண்டு கட்டுரைகளும் அருமை. கே.எம்.ஆர். என்ன தடம் மாறிப் போய்விட்டாரா? 'வெண்ணை' போன்ற வெள்ளை மனம் கொண்ட அவரை யாரோ இப்படி ஏமாற்றிவிட்டார்களே! கேட்க வருத்தமாகத்தான் இருக்கிறது. சும்மா சொல்லக்கூடாது. அவர் கொஞ்சம் ஏமாளியாகத்தான் இருந்திருக்கிறார். இப்போதெல்லாம் அப்படிச் சொல்ல முடியாது. அலுவலக அனுபவம் அவருக்குப் பாடம் சொல்லிக் கொடுத்திருக்கிறது போலும். ஐயா, இன்றைக்கு கணிப்பொறியின் ஆதிக்கம் பஞ்ச பூத ஆதிக்கத்திலும் மேலானது. காற்றும், நீரும், நெருப்பும் கூட இல்லாமல் இருந்துவிடலாம், இந்த ஈ.மெயில், இன்டர்நெட் இல்லாமல் இருக்க முடியாது. சிந்தனைக்குத் தினமும் நல்ல வேலை கிடைக்கிறது. வாழ்க தங்கள் பணி! (எனக்கும் வயதாகிவிட்டதால் வெளியில் சென்று சுற்றமுடியவில்லை. கம்ப்யூட்டரே கதி என்றிருக்கிறேன். என்னைப் போன்றவர்களைக் காப்பாற்றத்தான் இது வந்திருக்கிறது என்று நினைக்கிறேன்.)

    ReplyDelete
  5. NHK ஸ்பெஷல் என்று ஜப்பான் டிவி ப்ரோக்ராம் ரொம்பப் பிரசித்தி..இதிலே KMRK சொன்ன நம்ம முன்னோர்கள் பத்தி எடுத்திருக்கிறார்கள்..நல்ல ப்ரோக்ராம்..

    மேக்அப் போடாத குரங்கு பார்க்க நல்ல அழகாக இருக்கும்..

    குரங்கின் தாவுகின்ற தன்மை அதன் சுறுசுறுப்பைக் காட்டும்..

    ஒரு கிளையிளிருந்து மறுகிளைக்குத் தாவும்போது சற்று பிடி நழுவினாலும் கரணம் தப்பினாலும் மரணம்தான்..எதிர்க்கிளையில் வலுவில்லாது முறிந்து போனாலும் அதோகதிதான்..

    சரியாகக்கணித்து இந்த ரிஸ்க் பயணத்தை மேற்கொள்ளும் குரங்குகளின் வாழ்க்கை இன்றைய புத்திசாலித்தனமான CEOக்களின் (movers & shakers)கம்பெனி தாவும் கலைக்கு ஒரு நல்ல பாடம்..

    (பி.கு. அக்காலத்துத் தேவர்களெல்லாம் இந்த வகைதான் என்று ராமாயணம் சொல்கிறது..

    வராக அவதாரமும் இருக்கிறது என்று கேள்விப்பட்டிருக்கிறேன்..

    நாங்களெல்லாம் இந்த வகையென்றால் அந்த வகை எந்த வகையோ?)

    ReplyDelete
  6. வாத்தியாரின் மொழியாக்கம் செய்யப்பட்ட 'மெயில் ஃபார்வர்டிங்' அஸ்திரம்..இன்று..ரொம்ப பேருக்கு போழுதுபோக்காய்ப் போய்விட்டது..நல்ல புனைவு..

    ReplyDelete
  7. //////// வகுப்பறயை பற்றி நினைத்தாலே வாத்தியாருக்கு முன்னால் மைனர்வாள் தான் மனக்கண் முன் வந்து நிற்கிறார்.

    மனோதத்துவ டாக்டரை கேட்டேன். "ஆமாம்! இது ஜேப்பன்னோ மைனரோ ஃபோபியா" என்ற புதுவிதமான மன நிலை. மன நோய் வகையில் சேர்க்க முடியாது.மன நிலைப்பாடுதான்.ஆனால் இதை சரியாகக் கவனிக்காவிடில் மனநோயில் கொண்டு விட்டுவிடும்" என்றார்.

    "கவனிப்பது என்றால் எப்பூடி?"

    "எப்பூடின்னா?அப்படித்தான். அடிக்கடி மைனர் உம்மைக் காலை வாரவும், நீர் அவரைக் கையைப்பிடித்து இழுக்கவுமாக இருந்து கொண்டே இருக்கவும்.அப்போ உங்களுக்குள்ள ஒரு 'இது'வந்துடும். மைனரோ ஃபோபியா முற்றாது."

    'சரி'ன்னு வந்துட்டேன்.////////

    ஏது..kmrk மேட்டருலே இந்த "ஜேப்பன்னோ மைனரோ ஃபோபியா" ஒரு டெர்ரரான விஷயமா ஆயிடுச்சு போல இருக்கே..
    எதுக்கும் டாக்டர் சொல்றாப்புலே கேட்டு கரெக்ட்டா செய்யுங்க சார்..
    நீங்க மறதியிலே மைனரு காலை வாரி விடாம இருக்கணும்..
    அவருதான் உங்களைக் காலை வாரி வுடணும்..ஞாபகமா செய்யுங்க..
    டாக்டர் வார்த்தை..ரொம்ப முக்கியம்..

    ReplyDelete
  8. மெயின் டாபிக் கதையின் போக்கு ரொம்ப ரசிக்கத் தகுந்த வகையில் இருந்தது..வரிக்கு வரி..பாராட்டலாம்..எல்ல வரிகளுமே..நல்ல ஃப்லொ..அதுவும் ஆரம்பத்துலே 'மைனர் இருக்கானா?'ன்னு எல்லாப் பக்கமும் தேடிக்கிட்டே நீங்க (ஷெர்லக் ஹோம்ஸ் ஆளு- அதான் சார் உங்க பழைய ஹீரோ கணக்கா)

    கிளாஸ் ரூமுக்குள்ளே நுழைஞ்ச ஸீன் இருக்கே..ஹையோ..

    செம காட்டு காட்றீங்க சார் நீங்க..செம த்ரில்லர் கணக்கா..கலக்குறீங்க போங்க..

    ReplyDelete
  9. இடையிடையே தஞ்சாவூரைவிட்டு தப்பிச்சுட்டோம்குற நினைப்புலே தஞ்சாவூர்க்காரன் பத்தி

    "இப்படிப்பட்ட மனுஷாளை நான் பார்த்ததே இல்லை. எங்க‌ தஞ்சாவூர்காராள் இல்லையோல்லியோ நீங்கள்?அதான். இந்த ஊர்க்காரப்பசங்க எச்சக் கையால் காக்காய் ஓட்டமாடான்.ரொம்ப அபூர்வம்னா இப்படிப்பட்ட மனுஷாளைப் பார்கிறது! சரி வரேன். ரொம்ப தேங்ஸ்!" என்று உங்களுக்கு ஆப்பு வெச்சவர் பேசினதாக ஒரு வாக்கியத்தை சொல்லியிருக்கீங்க..

    அவரு எங்கே இருக்காருன்னு நம்ம தஞ்சாவூரார் ரொம்ப கோவமா தம்பிக்கோட்டை அரிவாள் சகிதமாத் தேடிக்கிட்டு இருக்கார்..

    உடனே அவரை எங்கேயாவுது பக்கத்து கோர்ட்டிலே சரண்டர் ஆயிடச் சொல்லிடுங்க..

    உங்களை உசுப்பேத்திவிடன்னு ஏதோ தெரியாம சொல்லிட்டாரு.. பாவம்..

    ReplyDelete
  10. கிருஷ்ணன் சார்,
    ஒரு கேட்ட அனுபவம்.... இருந்தும் நல்ல அனுபவமே.... இந்த மூவாயிரம் மூற்றுகொடியை கூட காத்து நிற்கும் சர்வ வல்லமை படைத்தது...
    இதில் உள்துறை அமைச்சகத்தின் அனுமதி பெற்றதும்... நிதி அமைச்சரின் (எங்க வீட்டில் நான் வெளி உறவுத் துறை அமைச்சரே! பெரும்பாலும் இப்படி தான் இருக்கும் என நம்புகிறேன்) உடன் நிதி... ஒதுக்கீடு கிடைக்கப் பெற்றதும் அவரின் (சீட்டரசனின்) வாய் சாமர்த்தியம். மறுப்பதற்கே வழி இல்லாமல் போய் விட்டது... உணர்ச்சி வசப்படும் போது (இரக்கம்) அதாவது ஏறும் போது புத்தியின் அளவு தானாக இறங்கி விடுகிறது.

    அதுக்குத் தான் அப்பச்சியைக் கேட்டால்.. "ஆச்சியை ஒருவார்த்தைக் கலந்தினுக்கினு சொல்றேன் மானி" என்றும் ஆச்சியிடம் கேட்டால் அப்பச்சியை கேட்டுக்கினு சொல்றேன்பா" அதிலேயும் இல்லை ஆச்சி, அப்பச்சிட்ட நான் கேட்டிட்டேன்! என்றால் அதுசரி அப்பச்சி.... நானும் அவுகள்ட்ட ஒரு வார்த்தைக் கேட்டுக்கனும்ல... என்பார்கள். இப்படி உணர்ச்சி வசப் படாமல் நேரம் எடுத்துக் கொண்டு கேட்டுவருபவரையும் பக்கத்தில் இல்லாத போது கலந்துக் கொண்டு முடிவு சொல்லுவாகன்னு கேள்விப் பட்டிருக்கிறேன்....

    நம்ம வாத்தியாரையாத் தான் சொல்லணும்.

    தங்களின் அனுபவம் அனைவருக்கும் பாடம். பதிவுக்கு நன்றிகள் சார்.
    அன்புடன்,
    ஆலாசியம் கோ

    ReplyDelete
  11. கீதையின் (புதிய) புது அத்தியாயமும்.. புனைவும் அருரை சார்.

    ReplyDelete
  12. ///மாண்புமிகு மைனர்வாளும், அவரது தில்லி தாய்க்குல கொ. ப. செயும் எதிர்வாதத்தில் ஒரு பிடிபிடிப்பார்கள். ஆஹா. ஆவலுடன் காத்திருக்கிறேன். நன்றி தொடர்ந்த நல்ல நிகழ்வுகளை தொகுத்து நகைச்சுவையாய் அளிப்பதற்கு.///
    நன்றி தேமொழி அவர்களே! ஜப்பான்காரர் படித்துவிட்டு பாராட்டியும்,குட்டியும் பின்னூட்டம் இட்டுவிட்டார். டெல்லி கொ ப‌ செ வரவை ஆவலுடன் எதிர் பார்க்கிறேன்.

    ReplyDelete
  13. ///kmrk ஏமாந்த கதை நன்று..///

    நல்ல வேளை, ஏமாந்தது நன்று என்று சொல்லாமல் விட்டீர்கள் மைனர்வாள்!

    ReplyDelete
  14. ////// தேமொழி said...
    மாண்புமிகு மைனர்வாளும், அவரது தில்லி தாய்க்குல கொ. ப. செயும் எதிர்வாதத்தில் ஒரு பிடிபிடிப்பார்கள். ஆஹா. ஆவலுடன் காத்திருக்கிறேன்.//////
    நான் உங்களின் கருத்து பார்க்கும் முன்பே, ஏற்கனவே இதுகுறித்து எனது அறிவிப்பை வெளியிட்டுவிட்டேன்..
    அவர் டெல்லியிலே முகாமிட்டுள்ளபடியால் உள்ளாட்சி விவகாரங்களில் தலையிடுவாரா என்று தெரியவில்லை..
    உணர்ச்சிவசப்பட்டு சிவகங்கைச் சீமையிலேருந்து நீங்கள் உங்கள் உடைவாளை உயர்த்தி விடாமல் இருந்தால் சரி..
    தஞ்சை பற்றி உங்கள் அபிமானத்துக்கு என்றென்றும் தஞ்சையோர் சிவகங்கைச் சீமைக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறார்கள் ராணி..

    ReplyDelete
  15. ///சைகாலோஜி தெரிந்து பேச்சைக் கொண்டுபோவதில் வல்லவர்கள்..எங்கே ஆரம்பித்து எங்கே பிட்டைப் போட்டால் பட்டென்று காரியம் முடியும் என்று ஒரு தேர்ந்த மார்க்கெடிங் ஆளுக்குள்ள கைங்கர்யம் இருக்கும்..///

    பத்து பாயிண்டுகளும் சரிதான் என்றாலும் இந்த பத்தாவது பாயிண்ட் தான் மனங் கவரும் பாயிண்ட்.

    இவ்வளவு அநுபவத்தோடு லிஸ்டு போடுவதைப் பார்த்தால் மைனரிடமே ஆட்டையைப் போட்ட ஆளுக இருக்காகளோ?

    ReplyDelete
  16. காதலோடு வேதம் இப்போ
    கட்டாயமா அஞ்சுன்னு இன்றைய

    கவிஞன் ராசய்யா படத்தின் பாடல்
    "காதல் வானிலே" சொன்னது போல்

    கீதையோட 19வது அத்தியாயம்
    கீறப்போகிறது சீறுபவர்கள் ஜாக்கிரதை

    அந்த கீதையையே சரியில்லை என
    அய்யர் சொல்லும் கருத்துக்கு

    கொடிபிடித்து வாதம் செய்ய வரும் சில
    பிடிவாதகாரர்களுக்கும் வழக்கம் போல்

    வணக்கமும்
    வாழ்த்துக்களும் சொல்லி

    ரசிக்க தந்த 2ஆம் பதிவு
    ருசிக்கவில்லை என்று கருத்து சொல்லி

    அய்யர்

    காபி சாப்பிட்டு சுமார் 25 வருடமாகிறது
    சோபிக்கவில்லை அந்த முதல் பதிவும்

    அய்யருக்கு...


    வகுப்புக்கு வரும் அறிஞரை
    வரவேற்போம்..

    அறிவாளிகள்
    சிறந்த எண்ணங்களை விவாதிக்கின்றனர்,
    நடுத்தரமானோர் நிகழ்ச்சிகளை விவாதிக்கின்றனர்,
    சாதாரணமானோர் மக்களை விவாதிக்கின்றனர்.

    ReplyDelete
  17. ///மேற்படி ஆளு வாரார்...ஜாக்ரதை..///

    அதாரு?

    ReplyDelete
  18. //இவர்களுக்கெல்லாம் கூட நேரம் வரும்போது நல்ல ஆடம்பரமான வாழ்க்கை அமைகிறது..கடன் கொடுத்தவன்கூட அண்ணாந்து பார்க்கும்படி..
    இறைவனையே எமாற்றிவிட்டர்களோ?///

    இறைவனை ஏமாற்றமுடியாது. மேலும் மேலும் தவறு செய்யவே அவர்களுக்கு
    தானாக வாய்ப்பு அதிகரிக்கிறது.திகார் ஜெயிலில் அடுத்து யார் என்ற கேள்வியைப் பார்த்துமா இறைவன் ஏமாந்து விட்டார் என்கிறீர்கள்?

    ReplyDelete
  19. /// 'வெண்ணை' போன்ற வெள்ளை மனம் கொண்ட அவரை யாரோ இப்படி ஏமாற்றிவிட்டார்களே!///

    சரி, புரிகிறது கோபாலன் ஜி! அந்த நபர் இடதோடு தொடர்புடையவர்.தகப்பன் சாமி.கண்ணனின் உணவுக்கும் அவருக்கும் தொடர்பில்லை.

    ReplyDelete
  20. ///மேக்அப் போடாத குரங்கு பார்க்க நல்ல அழகாக இருக்கும்..///

    ஆரைப் போல‌ன்னு சொல்லலாம்ல மைனர்வாள்?!

    ReplyDelete
  21. ///நீங்க மறதியிலே மைனரு காலை வாரி விடாம இருக்கணும்..
    அவருதான் உங்களைக் காலை வாரி வுடணும்..ஞாபகமா செய்யுங்க..
    டாக்டர் வார்த்தை..ரொம்ப முக்கியம்..///

    ஆமாம். சில சமயம் இந்த ஃபோபியாவாலே கை எது, கால் எதுன்னு குழப்பமாயிடுது.

    ReplyDelete
  22. ///மெயின் டாபிக் கதையின் போக்கு ரொம்ப ரசிக்கத் தகுந்த வகையில் இருந்தது..வரிக்கு வரி..பாராட்டலாம்..எல்ல வரிகளுமே..நல்ல ஃப்லொ..அதுவும் ஆரம்பத்துலே 'மைனர் இருக்கானா?'ன்னு எல்லாப் பக்கமும் தேடிக்கிட்டே நீங்க (ஷெர்லக் ஹோம்ஸ் ஆளு- அதான் சார் உங்க பழைய ஹீரோ கணக்கா)

    கிளாஸ் ரூமுக்குள்ளே நுழைஞ்ச ஸீன் இருக்கே..ஹையோ..

    செம காட்டு காட்றீங்க சார் நீங்க..செம த்ரில்லர் கணக்கா..கலக்குறீங்க போங்க..///

    நன்றி மைனர்வாள்.

    ஆமா! என்னிய வச்சி காமெடி கீமடி பண்ணலியே!

    ReplyDelete
  23. ///தஞ்சாவூரார் ரொம்ப கோவமா தம்பிக்கோட்டை அரிவாள் சகிதமாத் தேடிக்கிட்டு இருக்கார்..///

    சிறுவயதில் பட்டுக்கோட்டையில் இருந்தவர் தான் நமது தஞ்சாவூரார்.புதுக்கோட்டை, பட்டுக்கோட்டை, தம்பிக்கோட்டை, எல்லா கோட்டைகளும் அவருக்கு அத்துப்படி. இயற்கையாகவும் சொல் பொறுக்காதவர்தான்.
    அவர் ஓர் ஆங்கிலேயர் போல நிறம் உடையவர்.கோவப்படுத்தினால் அவர் முகம் சிவப்பதை பார்த்து ரசித்துள்ளோம்.
    நான் கொடுத்துள்ள க்ளூவை வைத்து அவர் ஆளை அறிதிருப்பார்.
    தில்லையாடிக்கு அல்லது அண்ணன் கோவிலுக்குப்
    போகும் போது அந்த நபர் ஊரைத் தாண்டித்தான் போக வேண்டும். அவர் இருக்காரா என்று தெரியவில்லை.

    கோபாலன் ஜி! மைனர் சேஃபா கடல் கடந்து உட்கார்ந்துண்டு கொம்பு சீவரார். நாம ஏதாவது செய்துவிட்டு அல்லல் பட வேண்டாம். சாவதானம்!நிதானம்.

    ReplyDelete
  24. ///மேக்அப் போடாத குரங்கு பார்க்க நல்ல அழகாக இருக்கும்..///

    ///ஆரைப் போல‌ன்னு சொல்லலாம்ல மைனர்வாள்?!///

    மாண்புமிகு மைனர்வாள் லக்கினத்தில சுக்கிரன் இருக்கிரவரைப் பற்றி சொல்கிறார் ஐயா.

    ReplyDelete
  25. ///தஞ்சை பற்றி உங்கள் அபிமானத்துக்கு என்றென்றும் தஞ்சையோர் சிவகங்கைச் சீமைக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறார்கள்///

    தம்பிக்கோட்டை அரிவாள் வாங்க ஒரு கூட்டமே புறப்பட்டாச்சா, மாட்டினா தீர்ந்தேன்

    ReplyDelete
  26. மர்ம முடிச்சு ஒன்றை போட்டு மண்டைக் குடைச்சல் உண்டாக்கிவிட்டார் கே.எம்.ஆர். இவரது இந்தப் புதிருக்கு விடைகாண நான் இப்போது மயிலாடுதுறைக்குத்தான் செல்ல வேண்டும், காவிரியில் ஸ்நானம் செய்ய. இதுவும் ஒரு புதிர்தான். கே.எம்.ஆரும். ஜப்பான்காரரும், தமிழ் விரும்பியும் காலை வாரிவிடும் அழகை நான் காவிரிக் கரையில் அமர்ந்து கொண்டு பார்க்கத்தான் மாயூரம் பயணம். அது சரி ஐயர் என்னவோ சொல்லுகிறாரே, எண்ணங்களை விவாதிப்பது, நிகழ்ச்சிகளை விவாதிப்பது, மனிதர்களை விவாதிப்பது என்றெல்லாம், அது என்ன? கொஞ்சம் யாராவது விளக்குங்கள். இங்கு யாருக்காக‌, என்ன காரணத்துக்காக இப்படியொரு விளக்கத்தைக் கொடுத்திருக்கிறார்? நான் 'கல்கி'யையும், 'ஜெயகாந்தனை'யும் படித்தவன். லா.சா.ராமாமிர்தத்தைப் படித்ததில்லை.

    ReplyDelete
  27. ///தங்களின் அனுபவம் அனைவருக்கும் பாடம். பதிவுக்கு நன்றிகள் சார்.
    அன்புடன்,
    ஆலாசியம் கோ///


    பாராட்டுக்களுக்கு நன்றி ஆலாசியம் அவர்களே!

    ReplyDelete
  28. ///அறிவாளிகள்
    சிறந்த எண்ணங்களை விவாதிக்கின்றனர்,
    நடுத்தரமானோர் நிகழ்ச்சிகளை விவாதிக்கின்றனர்,
    சாதாரணமானோர் மக்களை விவாதிக்கின்றனர்.///

    இதில் தாங்கள் முதல் நிலையிலும் நாங்கள் கடைநிலையிலும் இருக்கிறோம்
    ஐயர் அவர்களே!

    சிறிது சிறிதாக எங்களையும் உங்கள் நிலைக்கு உயர்த்துங்கள் ஐயர் அவர்களே!

    ReplyDelete
  29. ///அது சரி ஐயர் என்னவோ சொல்லுகிறாரே, எண்ணங்களை விவாதிப்பது, நிகழ்ச்சிகளை விவாதிப்பது, மனிதர்களை விவாதிப்பது என்றெல்லாம், அது என்ன? கொஞ்சம் யாராவது விளக்குங்கள். இங்கு யாருக்காக‌, என்ன காரணத்துக்காக இப்படியொரு விளக்கத்தைக் கொடுத்திருக்கிறார்? நான் 'கல்கி'யையும், 'ஜெயகாந்தனை'யும் படித்தவன். லா.சா.ராமாமிர்தத்தைப் படித்ததில்லை.///

    "எண்ணங்கள் என்றால் நடைமுறைக்குக் கொஞ்சமும் உதவாத(கவைக்கு உதவாத) தத்துவச் சிக்கல்கள் என்று பொருள் கொள்ளலாகும் என்ப!"

    இது காஷ்மீரில் நிறுவப்பட்ட‌ ஒரு 'மத'மேதை கொடுத்துள்ள விளக்கம்.
    இது எழுதப்பட்ட புத்தகம் ஆங்கிலேயர்கள் திருடிச் சென்று விட்டனர். எனவே ஐயர் ஆதாரம் கேட்டு குடைய வேண்டாம்.

    'லா ச ரா' வில் உள்ள 'லா' லால்குடி.

    லா ச ரா வை நமது வகுப்பறையில் உள்ள அறிவாளிகள் எத்தனை பேர் படித்து உள்ளனர் என்று தெரிவிக்கவும்.

    படிக்காதவர்கள் எல்லாம் ஐயரிடம் மின் அஞ்சலில் விளக்கம் கேட்கவும்.

    ReplyDelete
  30. ///////////தேமொழி said...


    ///மேக்அப் போடாத குரங்கு பார்க்க நல்ல அழகாக இருக்கும்..///

    ///ஆரைப் போல‌ன்னு சொல்லலாம்ல மைனர்வாள்?!///

    மாண்புமிகு மைனர்வாள் லக்கினத்தில சுக்கிரன் இருக்கிரவரைப் பற்றி சொல்கிறார் ஐயா.//////////


    'லக்கினத்தில் புதனும் சுக்கிரனும் சேர்ந்து இருக்குறவுகளைப் பத்தி எழில் ராகுவுடன் கூடிய சுக்கிரன் உள்ள ஆள் பேசலாமா?'
    அப்பிடிப் பேசினால்
    'ஐயோ..பத்திகிச்சு' ன்னு ஆகாமல் இருக்குமான்னு'ன்னு வாத்தியார்தான் கிளாஸ் எடுக்கணும்..

    ReplyDelete
  31. ///////kmr.krishnan said...
    இவ்வளவு அநுபவத்தோடு லிஸ்டு போடுவதைப் பார்த்தால் மைனரிடமே ஆட்டையைப் போட்ட ஆளுக இருக்காகளோ?/////


    12 லே செவ்வாய் இருக்குற ஆளுங்களுக்கு எல்லாம் இப்படி அனுபவம் இருக்கும்ன்னு தோணுது..

    அதுனாலே இப்பலாம் ஜாக்கிரதையா நீங்க சொன்னமாதிரி பாத்திரமறிந்து போடுதல் என்கிற கணக்கில் ஆரம்பமுதலே இவர் எதற்கு பிட்டைப் போடுகிராரென்று தெரிந்தாலும் கூட பாவம் என்று அவரது முகம் கோணாது 'அவர் கடன்கேட்டு நான் கொடுக்கிறேன்' என்கிற அமைப்பிலே முடிந்தபோது கொடுத்துவருகிறேன்..ஏமாந்துவிட்டோம் என்ற எண்ணம் நெருடலாக இருக்கக்கூடாதல்லவா?

    கேட்பவர்களும் எல்லோரிடமும் கேட்டுவிட மாட்டார்கள்..பணம் இருப்பவர்கள் எல்லோரும் மனமுவந்து கொடுத்துவிடவும் மாட்டார்கள்..

    'சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்..

    இட்டார் பெரியோர்..இடாதார் இழிகுலத்தோர்..பட்டாங்கில் உள்ளபடி..'

    ReplyDelete
  32. kmr.krishnan said...


    ///மெயின் டாபிக் கதையின் போக்கு ரொம்ப ரசிக்கத் தகுந்த வகையில் இருந்தது..வரிக்கு வரி..பாராட்டலாம்..எல்ல வரிகளுமே..நல்ல ஃப்லொ..அதுவும் ஆரம்பத்துலே 'மைனர் இருக்கானா?'ன்னு எல்லாப் பக்கமும் தேடிக்கிட்டே நீங்க (ஷெர்லக் ஹோம்ஸ் ஆளு- அதான் சார் உங்க பழைய ஹீரோ கணக்கா)

    கிளாஸ் ரூமுக்குள்ளே நுழைஞ்ச ஸீன் இருக்கே..ஹையோ..

    செம காட்டு காட்றீங்க சார் நீங்க..செம த்ரில்லர் கணக்கா..கலக்குறீங்க போங்க..///

    நன்றி மைனர்வாள்.

    ஆமா! என்னிய வச்சி காமெடி கீமடி பண்ணலியே!/////


    எனக்கு எப்பவுமே செய்ததை சொல்லிக்காட்டும் பழக்கமில்லை..

    ReplyDelete
  33. /////கோபாலன் ஜி! மைனர் சேஃபா கடல் கடந்து உட்கார்ந்துண்டு கொம்பு சீவரார். நாம ஏதாவது செய்துவிட்டு அல்லல் பட வேண்டாம். சாவதானம்!நிதானம்.\\\\\

    நானேன் அந்த வேலையெல்லாம் செய்யப்போறேன்..அவருதான் பேருலேயே தஞ்சாவூரை வெச்சுருக்குரவரஆச்சேன்னு சொன்னேன்..அதான்..

    ReplyDelete
  34. பாத்திரம் அறிந்து அளிக்கச் சொன்ன பெரியவர்கள் எவ்வளவு முன் யோசனை உடையவர்கள்.

    புத்திக் கொள்முதல்!

    அருமையான ஆக்கங்களுக்குப் பாராட்டுக்கள்>

    ReplyDelete
  35. /// kmr.krishnan said...
    இதில் தாங்கள் முதல் நிலையிலும் நாங்கள் கடைநிலையிலும் இருக்கிறோம்
    ஐயர் அவர்களே!

    சிறிது சிறிதாக எங்களையும் உங்கள் நிலைக்கு உயர்த்துங்கள் ஐயர் அவர்களே!///

    தாங்கள் எந்த நிலையில் இருந்து இதை சொல்வதாக தெரியவில்லை என்றாலும்

    யாரும் யாரையும் அவரவர் விருப்பத்திற்கு மாற்ற முடியாது..

    அவர்களாவே தான் மாற வேண்டும்..
    ஒரு வேளை மற்றொருவர் மாற்றினால்

    அவர் மீண்டும் பழைய நிலைக்கு சென்றுவிடக் கூடும்..

    நீங்கள் அந்த பாணியை விரும்பாததால் உங்கள் விருப்பத்திற்கேற்ப பதில்..

    ReplyDelete
  36. /// kmr.krishnan said...


    ///அது சரி ஐயர் என்னவோ சொல்லுகிறாரே, அது என்ன? கொஞ்சம் யாராவது விளக்குங்கள். இங்கு யாருக்காக‌, என்ன காரணத்துக்காக இப்படியொரு விளக்கத்தைக் கொடுத்திருக்கிறார்?

    தஞ்சை தோழரின் வினாவிற்கு விடையாக...

    அய்யர் முன்பு பின்ஊட்டங்களில் தினமும் குறள் எழுதி வந்தார்

    பின்னர் கவிஞரின் வரிகளை எழுதி வந்தார் இந்த வரிசையில் அறிஞர்களின் சிந்தனைகளை எழுத அனுமதிவாங்கி அதை செய்து வருகிறார்

    தினக் காலண்டர்களில் ராசிபலன் மற்றும் ஒரு சிந்தனை இருக்குமே அது போல என வைத்துக் கொள்ளுங்களேன்..


    ///"எண்ணங்கள் என்றால் நடைமுறைக்குக் கொஞ்சமும் உதவாத(கவைக்கு உதவாத) தத்துவச் சிக்கல்கள் என்று பொருள் கொள்ளலாகும் என்ப!"///

    திருவாளர் லால்குடியாரின் விளக்கத்திற்கு பாரட்டுக்கள்..

    எல்லோருமே நீங்கள் விரும்பும் படி அதே teamல் இருக்கக் கூடாது தான்..

    பொதிகை மலைக்கு ஒரு அகத்தியர் போல
    ஏற்றமும் மாற்றமும் மாறித்தான் ஆக வேண்டும்..

    இன்னமும் சொல்ல என்ன இருக்கிறது..

    "சிலரோடு கவிதைகளை துய்க்க வேண்டும்" என்ற சொன்ன கவிஞர் வைரமுத்துவின் இந்த வரிகளை நினைவில் கொண்டு


    புல்லோடு ஒப்பிடு செடி உயரமில்லை
    செடியோடு ஒப்பிடு மரம் உயரமில்லை
    மரத்தோடு ஒப்பிடு மலை உயரமில்லை
    மலையோடு ஒப்பிடு நிலா உயரமில்லை

    அப்போ நிலை உயரம் தானே
    இல்லை
    அதனினும் உயரம் நம் எண்ணத்திற்கு வரவில்லை

    அமைதி கொள்கிறோம்
    அன்பு வணக்கங்களுடன்,...

    ReplyDelete
  37. ஐயா அருமையான பதிவு இன்று இமெயில்,இண்டர்நெட் இல்லாமல் ஏது உலகம்.பின்னிப்பெடல் எடுத்துவிட்டீர்கள் சூப்பர்.எங்கே மலேசியா ஆனந்த் அண்ணனைக் காணோம்.

    ஐயா மின்னஞ்சல் பாடங்கள் குறித்து கேட்டிருந்தேன்.

    ReplyDelete
  38. //// கே.எம்.ஆரும். ஜப்பான்காரரும், தமிழ் விரும்பியும் காலை வாரிவிடும் அழகை நான் காவிரிக் கரையில் அமர்ந்து கொண்டு பார்க்கத்தான் மாயூரம் பயணம். ////
    ஹா..ஹா..ஹா... செய்யணும்னு இல்ல... வேற வழி இல்லாம போச்சே...

    புரிந்தவர்களுக்கு புரியட்டும் புரியாதவர்களுக்கு புரியாமலே இருக்கட்டும்.

    இற்றைய சிந்தனையாக கவிஞரின் வரிகளோடு முடிக்கிறேன்,,

    நடக்கும் என்பார் நடக்காது
    நடக்காது என்பார் நடந்து விடும்
    கிடைக்கும் என்பார் கிடைக்காது
    கிடைக்காது என்பார் கிடைத்து விடும்

    நன்றி..
    ஆலா.

    ReplyDelete
  39. ////அறிவாளிகள்
    சிறந்த எண்ணங்களை விவாதிக்கின்றனர்,
    நடுத்தரமானோர் நிகழ்ச்சிகளை விவாதிக்கின்றனர்,
    சாதாரணமானோர் மக்களை விவாதிக்கின்றனர்.////

    போச்சா... இங்கேயும் பிரிவா!
    எப்படியோ மேலே இருக்கிறவுங்க கீழே இருக்கிறவுங்கள
    தூக்கி மேலேக் கொண்டு போகணும் ஆமாம்,
    அதை தான் துவாரக கிருஷ்ணனும் (நம்ம கிருஷ்ணன் சாரும்) சொல்லிருக்கார்
    நானும் வேண்டுறேன்....

    ReplyDelete
  40. ///விளக்கத்தைக் கொடுத்திருக்கிறார்? நான் 'கல்கி'யையும்,
    'ஜெயகாந்தனை'யும் படித்தவன். லா.சா.ராமாமிர்தத்தைப் படித்ததில்லை.////

    இது எனக்குப் புரியல?!... கீதையை குறைகண்ட மேதாவியோன்னு நினைக்கிறேன். விட்டிடுவோம்.
    அதே போல, இருந்தும் எங்கள் பாரதி பித்தர் திரு.வெ.கோ ஐயா அவர்களே
    படிக்க விருபவில்லை எனும் போது... தெரிந்துக் கொள்ளாமல் இருப்பதே நன்று..
    ஆக, ஐயருக்கு மெயில் அது விசயமாக எதுவும் கேட்கவில்லை.

    ReplyDelete
  41. ///12 லே செவ்வாய் இருக்குற ஆளுங்களுக்கு எல்லாம் இப்படி அனுபவம் இருக்கும்ன்னு தோணுது..///

    அப்படின்னா நல்ல வேலை நான் ஏமார்ந்து பெரியோராக விரும்பலப்பா!

    ReplyDelete
  42. ///தம்பிக்கோட்டை அரிவாள் சகிதமாத் தேடிக்கிட்டு இருக்கார்..////

    அப்படியா! ... நான் நினைச்சேன் திருப்பாச்சி மட்டும் தான் அப்படின்னு நினைச்சேன்....
    திருப்பாச்சி... சோழவந்தான், வத்தலக்குண்டு இவைகள் தான் நமக்கு அத்துபடி...

    இருந்தாலும் தஞ்சாவூருக்கு வரும் போது பாரதியோட
    மீசையை வளர்த்துக் கொண்டு வருவது நல்லுதுன்னு சொல்றீங்க..

    ReplyDelete
  43. ///புல்லோடு ஒப்பிடு செடி உயரமில்லை
    செடியோடு ஒப்பிடு மரம் உயரமில்லை
    மரத்தோடு ஒப்பிடு மலை உயரமில்லை
    மலையோடு ஒப்பிடு நிலா உயரமில்லை///

    என்ன ஆச்சு ஐயரே... கொண்டு கூட்டுப் பொருள் கொள்ளவேண்டுமா?

    ReplyDelete
  44. ///தமிழ் விரும்பி said...
    அப்படின்னா நல்ல வேலை நான் ஏமார்ந்து பெரியோராக விரும்பலப்பா!///

    'எதையும் தாங்கும் இதயம் வேணும்'ன்னு அண்ணா சொன்னாரில்லையா?
    அதுக்குத்தான் எங்களுக்கெல்லாம் இப்புடி எக்ஸர்சைஸ்...நீங்களும் பெரியோர்தான்..நேரம்காலம்வந்தா..

    ReplyDelete
  45. /////தமிழ் விரும்பி said... இருந்தாலும் தஞ்சாவூருக்கு வரும் போது பாரதியோட
    மீசையை வளர்த்துக் கொண்டு வருவது நல்லுதுன்னு சொல்றீங்க../////
    உங்க மீசையை வளர்த்துக்கிடுங்க..போதும் ஏன் பாரதியை தொந்தரவு பண்ணிக்கிட்டு?..

    ReplyDelete
  46. ////"நல்ல காபி சாப்பிட வேண்டும் என்ற ஆர்வம் தான். ஜென் புத்த மதத்தில் டீ சாப்பிடுவதே ஒரு சடங்கு போல இருக்குமாம்.அதுபோல காலையில் காபி தயாரிப்பதையே ஒரு தியானம் போலச் செய்கிறோம்."\\\\\

    இங்கே ஜப்பானில் tea ceremony என்று புனிதத்துவம் நிறைந்ததாக சொல்லி அந்த கணங்களை கொண்டாடுகிறார்கள்..

    ReplyDelete
  47. ///'லக்கினத்தில் புதனும் சுக்கிரனும் சேர்ந்து இருக்குறவுகளைப் பத்தி எழில் ராகுவுடன் கூடிய சுக்கிரன் உள்ள ஆள் பேசலாமா?'///

    மைனர்வாள்... இப்படி நான் எதிர்பார்த்த பதிலையே நீங்களும் தருவீங்கன்னு நானும் எதிர்பார்த்தேன். நீங்கள் அதுக்குன்னு predictable.

    அது சரி இப்ப ...
    "12 லே செவ்வாய் இருக்குற ஆளுங்களுக்கு எல்லாம் இப்படி அனுபவம் இருக்கும்ன்னு தோணுது.."
    அப்படின்னு போற போக்கில ஒரு குண்ட தூக்கி போட்டுட்டு போயிட்டீங்களே. மாமாவுக்கு 12 லே செவ்வாய், அவர எல்லோரும் சுலபமா ஏமாற்றுவாங்கலோன்னு கவலையாய் இருக்கு.
    (இதுக்கும், "அதான் நிரூபணம் ஆய்டுச்சேன்னு" பதில் சொல்லுவீங்களோ?)

    ReplyDelete
  48. லா ச ரா= லால்குடி சப்தரிஷி ராமாமிர்தம் தமிழ் எழுத்தாளர்கள் பட்டியலில் முக்கிய இடத்தைப் பிடித்தவர்.

    "நெருப்பு என்று சொன்னால் வாய் வேகவேண்டும்’ என்று எழுதினார் லா.ச.ரா. அதற்கு ஒரு நிரூபணமாகவும் சாட்சியமாகவும் திகழ்பவை அவரது கதைகள். சொல்லின் உக்கிரத்தை தமிழில் பாரதிக்குப்பின் அத்தனை மூர்க்கமாக நெருங்கிச் சென்றவர் லா.ச.ரா.வே என்று சொல்லும் அளவுக்கு அவரது மொழி மந்திரத்தன்மையும் விசையும் கொண்டதாக இருக்கிறது."

    உடுமலை.காம்

    என்ன, வெகு ஜனப்பத்திரிகை மட்டும் படித்துக்கொண்டு இருப்பவர்களுக்கு,
    லா ச ரா முதல் சுற்றில் விளங்க மாட்டார். குழப்பமாகஇருக்கும்.
    வார்த்தை விளையாட்டு என்று ஒதுக்கி விடாமல் தொடர்ந்து வாசித்தால் மெதுவாகப் புரியும்.

    அவருடைய 'ஜனனி' நாவல் படித்து இருக்கிறேன்.வலையில் சில சிறு கதைகள்கிடைக்கலாம்.தேடிப்பார்க்கவும்

    ஐயருடைய நடை நமக்கு விளங்கிக்கொள்ள முடியவில்லை என்பதை லா ச ராவுக்கு ஒப்பிட்டு கோபால்ஜி அங்கதம் செய்துள்ளார்.

    ReplyDelete
  49. ////அது சரி இப்ப ...
    "12 லே செவ்வாய் இருக்குற ஆளுங்களுக்கு எல்லாம் இப்படி அனுபவம் இருக்கும்ன்னு தோணுது.."
    அப்படின்னு போற போக்கில ஒரு குண்ட தூக்கி போட்டுட்டு போயிட்டீங்களே. மாமாவுக்கு 12 லே செவ்வாய், அவர எல்லோரும் சுலபமா ஏமாற்றுவாங்கலோன்னு கவலையாய் இருக்கு.
    (இதுக்கும், "அதான் நிரூபணம் ஆய்டுச்சேன்னு" பதில் சொல்லுவீங்களோ?)////

    எனக்கு, மைனர் இரண்டுபேருக்குமே 12ல் செவ்வாய்.அங்கே மாமாவுக்குமா?
    மற்றவர்களிடம் ஏமாருவது இருக்கட்டும். உங்களிடம் எப்பூடி?

    ReplyDelete
  50. //நீங்கள் அந்த பாணியை விரும்பாததால் உங்கள் விருப்பத்திற்கேற்ப பதில்..//

    ஐயர் அவர்களே!

    நீங்கள் குழப்பாமல் சொல்ல வந்ததை நேரடியாகச் சொல்லி விளங்க வைத்தால்
    நாங்கள் எல்லோருமே விரும்புவோமில்ல!

    உங்கள் பாதை சைவசித்தாந்தம் என்று நினைக்கிறேன்.அதில்தான் உங்கள் முழுக் கவனம் என்றால் எளிய சொற்களில், புதுக்கவிதை பாணியைத் தவிர்த்து,
    பாடம் சொல்லலாமே.விருப்பம் உள்ளவர்கள் பயிலட்டுமே.

    இப்போது நீங்கள் நடந்து கொள்ளும் முறை 'இதுகளுக்கெல்லாம் என்ன புரியப் போகிறது. எனக்குத் தெரிந்து இருப்பது சாதாரணர்களுக்குக் கிடையாது. மேட்டிமைக் காரர்களுக்குத்தான்' என்பதாக ஒரு பாவத்தை வெளிப்படுத்துகிறது.
    நான் நினப்பது சரியில்லை என்றால் உங்கள் செயலால் அதனை நிரூபியுங்கள்.

    ReplyDelete
  51. kmr.krishnan said...
    ///எனக்கு, மைனர் இரண்டுபேருக்குமே 12ல் செவ்வாய்.அங்கே மாமாவுக்குமா?
    மற்றவர்களிடம் ஏமாருவது இருக்கட்டும். உங்களிடம் எப்பூடி?///

    ஐயா, நான் ரொம்ப நல்லவளாக்கும் :) ஒருத்தர் ஏமாறுற மாதிரி சரடு விடுறதும் ஒரு திறமையாச்சே, அதுக்கு முகபாவம் அவங்க பேசறப்ப ஒத்துழைக்கனுமே. அந்த கலைல நான் கொஞ்சம் வீக். என்னக் கூட்டுக் களவாணியா வச்சு ஒரு காரியம் செய்ய முடியாதுன்னு பள்ளி நாட்களில் என் தோழிகள் எனக்கு சான்றிதழ் கொடுத்திருக்காங்க. என் பருப்பு மாமாவிடம் வெந்ததில்லை.

    படிக்கும் காலத்தில் மாமாவுடைய சமவயது ஜோசியர் தோழர், மாமா 'வாழ்க்கையே வெறுத்து தற்கொலை பண்ணிக்கலாம்னு பாழுங் கிணற்றில் குதித்தாலும் அவருக்கு அங்கே புதையல் காத்திருக்கும்', அப்பேற்பட்ட அதிர்ஷ்டசாலின்னு சொன்னாராம். மாமாவும் இனிமேல் தப்பிக்க வாய்ப்பில்லை என்று 30 வயதில் கல்யாணம் செய்ய விதியே என தலையை அசைத்து சம்மதித்த பொழுது, அவர் வீட்டில் என்னை தேர்ந்தெடுத்தார்கள். இதிலிருந்து தெரிகிறதா மாமா எப்பேர்பட்ட அதிர்ஷ்டசாலி என்று. :)

    ReplyDelete
  52. ////// kmr.krishnan said...
    லா ச ரா= லால்குடி சப்தரிஷி ராமாமிர்தம் தமிழ் எழுத்தாளர்கள் பட்டியலில் முக்கிய இடத்தைப் பிடித்தவர்.

    "நெருப்பு என்று சொன்னால் வாய் வேகவேண்டும்’ என்று எழுதினார் லா.ச.ரா. அதற்கு ஒரு நிரூபணமாகவும் சாட்சியமாகவும் திகழ்பவை அவரது கதைகள். சொல்லின் உக்கிரத்தை தமிழில் பாரதிக்குப்பின் அத்தனை மூர்க்கமாக நெருங்கிச் சென்றவர் லா.ச.ரா.வே என்று சொல்லும் அளவுக்கு அவரது மொழி மந்திரத்தன்மையும் விசையும் கொண்டதாக இருக்கிறது."

    உடுமலை.காம்////



    அப்படி என்றால் தேடித் பார்க்கிறேன்...

    நன்றிகள் கிருஷ்ணன் சார்.

    ReplyDelete
  53. ///kmr.krishnan has left a new comment

    நீங்கள் குழப்பாமல் சொல்ல வந்ததை///

    - கலங்கிய குளத்தில் கால் வைக்காமலிருந்தால் குளம் தெளிவடைகிறது என்று ஒரு முறை பின் ஊட்டமிட்டது நினைவில் வருகிறது

    - தவறான பேருந்தில் ஏறியபின் போக வேண்டிய இடத்திற்கு போக முடியாமல் போனால் பேருந்தையோ நடத்துனரையோ அல்லது ஓட்டுனரையோ காரணம் சொல்வது எப்படி சரியாக இருக்க முடியும்?

    ///உங்கள் பாதை சைவசித்தாந்தம் என்று நினைக்கிறேன்.அதில்தான் உங்கள் முழுக் கவனம் என்றால் ///

    - அப்படி அது தான் பாதை என்று சொன்னது யார் ? தாங்கள் அப்படி நினைத்துக் கொண்டு கருத்துச் சொன்னால் என்ன செய்ய..

    We can reply to the facts and not to illusions.
    என்பது தாங்களும் அறிவீர்கள் தானே

    ///இப்போது நீங்கள் நடந்து கொள்ளும் முறை 'இதுகளுக்கெல்லாம் என்ன புரியப் போகிறது. எனக்குத் தெரிந்து இருப்பது சாதாரணர்களுக்குக் கிடையாது. மேட்டிமைக் காரர்களுக்குத்தான்' என்பதாக ஒரு பாவத்தை வெளிப்படுத்துகிறது.///

    - அதற்கு என்ன செய்ய ...ஓட்டையான பலுனை ஊதிப்பார்க்க உங்கள் அன்பு அய்யருக்கு விருப்பமில்லை என்பதனை தாங்களும் அறிவீகள் தானே..

    ///நான் நினப்பது சரியில்லை என்றால் உங்கள் செயலால் அதனை நிரூபியுங்கள். ///

    - அய்யருக்கு கபடி விளையாட பிடிக்காது என்பதை சொல்லித்தான் ஆக வேண்டுமா என்ன?

    இப்படி ஒவ்வொன்றாக பதில் எழுத வேண்டாமென நினைத்தோம்... இருப்பினும்...

    "வான் சிறப்பு" அதிகாரத்தை படித்துக் கொண்டிருக்கும் போது வந்த சிந்தனை அப்படியே உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்

    விண்ணில் இருந்து பெய்யும் மழைத்துளி சுத்தமானது தான்

    அது விழும் இடத்தை பொறுத்து

    கடலில் விழுந்தால் அது உப்பாக குப்பையில் விழுந்தால் அது கறுப்பாக

    என அதன் தன்மை மாறுகிறது

    தவறு மழைத்துளி மீதா.. அப்படி
    தவறி விழுந்த இடத்தின் மீதா..

    ReplyDelete
  54. இரண்டு ஆக்கங்களிலும் வரிக்கு வரி நகைச்சுவை இழையோடுகிறது.

    ReplyDelete
  55. மைனர்வாளை டார்வின் தியரி படி நம் மூதாதையுருடன் ஒப்பிட்டு விட்டதாகப் பின்னூட்டம் போட வேண்டாம் என்று டெல்லிக்கு புறா மூலம் ஓலை அனுப்பி விட்டேன்.//

    மைனரைக் காப்பாற்றிவிட்டீர்கள் கம்மேன்ட்டிலிரிந்து. சரி அடுத்த முறை கவனிச்சுப்போம்.

    ReplyDelete
  56. இது கதையல்ல. நிஜம்!//

    இத எங்கியோ எப்பவோ படிச்சா மாதிரி இருக்கே???!!!!!

    ReplyDelete
  57. அவரது தில்லி தாய்க்குல கொ. ப. செயும் எதிர்வாதத்தில் ஒரு பிடிபிடிப்பார்கள். //

    என்னது கொ.ப.செ. வா? மைனருக்கா? யார் நானா? நெவர்................. (சிவாஜி ஸ்டைலில் படிக்கவும்). அவரே ஒரு ஸ்டேட்மென்ட் ல தெளிவா சொல்லியிருக்காரு 'எதிரிக்கட்சி தலைவின்னு'.

    ReplyDelete
  58. மேற்படி ஆளு வாரார்...ஜாக்ரதை..//

    மைனர் ஒரு புத்தகமே போடற அளவுக்கு அனுபவம் / சரக்கு இருக்கும் போலிருக்கே?

    ReplyDelete
  59. அவர் டெல்லியிலே முகாமிட்டுள்ளபடியால் உள்ளாட்சி விவகாரங்களில் தலையிடுவாரா என்று தெரியவில்லை..//

    தலையிடுவாராவா? கண்டிப்பா தலையிடுவோம்.

    ReplyDelete
  60. அந்த கீதையையே சரியில்லை என
    அய்யர் சொல்லும் கருத்துக்கு//

    ????!!!!

    ReplyDelete
  61. ////Uma said...
    //அவரது தில்லி தாய்க்குல கொ. ப. செயும் எதிர்வாதத்தில் ஒரு பிடிபிடிப்பார்கள். //

    என்னது கொ.ப.செ. வா? மைனருக்கா? யார் நானா? நெவர்................. (சிவாஜி ஸ்டைலில் படிக்கவும்).////

    அவரா நம்ம கட்சிக்கு வரார்ன்னு சொன்னதும் சரின்னு அமைதி காத்தேன்..அவரின் ஆணவம் இன்னும் குறையவில்லை..

    கொ.ப.செ. என்றால் அடுத்த வாரிசு என்று பொருள்..அதுகூடத்தெரியாம இருக்குறவுகளை எல்லாம் நம்ம கட்சியிலே சேர்த்து என்ன ஆகப் போகுது..லூஸ்லே விடுங்க தேமொழி..
    நாளை நடக்க இருக்கும் எதிர்க்கட்சியிலிருந்து நம் கட்சிக்கு வந்து சேரும் லட்சோபலட்சம் அன்புத் தோழர்களின் இணைப்புவிழாக் கூட்டத்தில் திடீரென்று இவர் தலை காட்டினாலும் தலைகாட்டுவார்..
    என்ட்ரிபாஸ் கொடுக்கவேண்டாமென்று
    செக்யூரிட்டி கிட்டே கண்டிச்சு சொல்லிடுங்க..

    ReplyDelete
  62. ////தேமொழி said... 'வாழ்க்கையே வெறுத்து தற்கொலை பண்ணிக்கலாம்னு பாழுங் கிணற்றில் குதித்தாலும் அவருக்கு அங்கே புதையல் காத்திருக்கும்', அப்பேற்பட்ட அதிர்ஷ்டசாலின்னு சொன்னாராம். மாமாவும் இனிமேல் தப்பிக்க வாய்ப்பில்லை என்று 30 வயதில் கல்யாணம் செய்ய விதியே என தலையை அசைத்து சம்மதித்த பொழுது, அவர் வீட்டில் என்னை தேர்ந்தெடுத்தார்கள். இதிலிருந்து தெரிகிறதா மாமா எப்பேர்பட்ட அதிர்ஷ்டசாலி என்று. :)\\\\\\\\\\

    நான் ஏற்கனவே சொல்லியிருக்கேன்..அவர் பெரிய அதிஷ்டசாலின்னு..12 லே செவ்வாய்ங்குற ஒரே காரணம் நானா எடுத்து விட்டது..வாத்தியார் கத்திரி காணாமப் போச்சுங்குற ஒரே காரணத்துக்காக ஜோசிய சமாச்சாரமெல்லாம் இதே ரீதியிலே டெவெலோப்

    பண்ணவேணாம் ன்னு நினைக்கிறேன்..ஆயிரத்தெட்டு ஆங்கிள்ளே பார்க்கவேண்டிய விஷயம்தான் ஜாதகம்..அதுனாலே கொஞ்சம் விஷயம் தெரிஞ்சுக்குவோம்..நடப்பதை ஸ்போர்டிவ்ஆ எடுத்துக்குவோம்..முடிஞ்ச அளவு இண்டரெஸ்டிங்கா இருக்கப்பார்ப்போம்..

    தானும் உம்மணாமூஞ்சியா இருந்து மத்தவுங்களையும் அப்பிடியே ஆக்காம இருக்குறதே ஒரு பெரிய சமூகசேவைன்னு நினைக்கிறேன்..

    எல்லோருக்குமே பலப் பல பிரச்சினைகள்..இந்த 337 தான் நான் தொடர்ந்து இந்த வலைப்பூவைத் தொடர்வதற்குக் காரணம்..கிட்டத்தட்ட கொஞ்சம் இதை ரியலைஸ் பண்ணின ஆளுங்க நடமாட்டம்தான் இங்க ஜாஸ்தி...

    ReplyDelete
  63. ////தேமொழி said...

    நீங்கள் அதுக்குன்னு predictable.//

    Thanks.I take it as a compliment ..

    ReplyDelete
  64. ////தேமொழி said... அந்த கலைல நான் கொஞ்சம் வீக். ////////

    கொஞ்சம் வீக்..இங்க கொஞ்சம்=10 பெர்சென்ட் ன்னு வெச்சுக்குவோம்.. அப்போ பாலன்ஸ் 90 பெர்சென்ட் ரொம்ப ஸ்ட்ரோங்..ன்னுதானே அர்த்தம்..எப்புடியோ நீங்களே ஒத்துக்கிட்டீங்கோ..

    ReplyDelete
  65. /////Uma said...
    மேற்படி ஆளு வாரார்...ஜாக்ரதை..//

    மைனர் ஒரு புத்தகமே போடற அளவுக்கு அனுபவம் / சரக்கு இருக்கும் போலிருக்கே?///

    எனக்கு அவ்வளவா அறிஞர் சொற்களை மேற்கோள் காட்டிப் பேசத் தெரியாது..பெரும்பாலும் அனுபவ அறிவுதான்..

    அனுபவசாலி தன் அனுபவங்களினால் பாடம் படிக்கிறான்..இழப்புகள் அதிகம்..ஆனால் அனுபவம் உண்டு..

    புத்திசாலி அடுத்தவர்களின் அனுபவத்திலிருந்து பாடம் படிக்கிறான்..இழப்புகள் இல்லை..ஆனால் அனுபவமும் இல்லை..

    இதுவும் என் சொந்தக்கருத்துதான்..

    (என்ன புத்தகம் போட்டுறலாமா?)

    ReplyDelete
  66. minorwall said...
    ///உங்களைப் போன்ற பெரியமனசு கொண்ட தாய்க்குலங்களின் ஆதரவு இதே ரீதியில் தொடர்ந்தால் மைனர் 'மாண்புமிகு மைனர்' ஆகும் நாள் வெகுதொலைவில் இல்லை என்றே தோன்றுகிறது..///

    Uma said...
    ///சரி சரி பகல்ல எத்தனை நேரம் தூங்குவீங்க? எந்திரிச்சி சமையல் வேலையைக் கவனிங்க.///

    Uma said...
    ///என்னது கொ.ப.செ. வா? மைனருக்கா? யார் நானா? நெவர்................. (சிவாஜி ஸ்டைலில் படிக்கவும்). அவரே ஒரு ஸ்டேட்மென்ட் ல தெளிவா சொல்லியிருக்காரு 'எதிரிக்கட்சி தலைவின்னு'.///

    நான்தான் தப்பா நினைச்சுட்டேன். என்ன உமா, எதிர்க் கட்சி தலைவியா நீங்கள்? அப்ப மைனர்வாள் கொடுத்த அறிக்கை கூட்டணி முயற்சி அறிக்கையோ? அதையும் கனவு என்று சொல்லிவிட்டீர்களே. அடடா ...

    ReplyDelete
  67. minorwall said...
    ///என்ன புத்தகம் போட்டுறலாமா?///

    யோசிக்காதீங்க, போட்டுடுங்க ...கொள்கை விளக்க புத்தகமா இருக்கும், அப்படியே பிற்காலத்தில் உதவியாகவும் இருக்கும். ஆட்சிக்கு வந்த பின் பள்ளிப் பாடத்திட்டத்தில் நுழைச்சி இளைய சமுதாயம் வழியாக உங்கள் புகழ் பாட வச்சுடலாம்

    ReplyDelete
  68. \\\\\ தேமொழி said...
    minorwall said...
    ///என்ன புத்தகம் போட்டுறலாமா?///

    யோசிக்காதீங்க, போட்டுடுங்க ...கொள்கை விளக்க புத்தகமா இருக்கும், அப்படியே பிற்காலத்தில் உதவியாகவும் இருக்கும். ஆட்சிக்கு வந்த பின் பள்ளிப் பாடத்திட்டத்தில் நுழைச்சி இளைய சமுதாயம் வழியாக உங்கள் புகழ் பாட வச்சுடலாம்//////

    என்ன செய்வது? வரலாற்றை அடுத்த தலைமுறைக்கு கடத்திச் செல்லவேண்டிய பெரும் பொறுப்பு நமக்கு இருக்கிறதல்லவா?
    இதை அவுகளும் நாமளும் மாற்றி மாற்றி நமக்கு வேணுங்குறதை எழுதி, வேணாங்குறதை அழித்து, ஸ்டிக்கர் ஒட்டி என்று துக்ளக் போலே செய்வதும் கூட வரலாறுதானே?

    சமீபத்தில் ஒரு வரலாற்றை ஆய்வு செய்த ப்ளாக் வலைப்பூவைப் படித்தேன்..

    அதில் காஷ்மீரிலேதான் எசுநாதருக்கும்,மோசசுக்கும் சமாதி இருக்கிறது என்று குறிப்பிட்டு
    இஸ்ரவேலுக்கு இறைத்தூதர் தருவதாக வாக்களிக்கப்பட்ட நிலம் காஷ்மீர்தான்
    என்று வரலாற்று ரீதியிலான விஷயங்களை நிறைய மேற்கோள் காட்டி எழுதப்பட்டிருந்தது..
    இவர் எந்த உள்நோக்கத்தோடு இப்படி எழுதுகிறார் என்று புரியவில்லை..வரலாறு படிக்காமல் வாதாடவும் வழியில்லை..
    சயின்ஸ்,மாத்ஸ் குரூப் எடுத்துப் படிச்சுட்டு, டிகிரி முடிச்சதும், சாப்ட்வேர்லே பூந்து நல்ல சம்பளத்துக்கு MNC லே பூந்துடணும்குற ஒரே குறிக்கோளோட போயிக்கிட்டிருக்குற இளைய சமுதாயத்துக்கு
    வரலாறு, பூகோளம் எல்லாம் அவசியமா?ன்னு கூட சில சமயங்களில் நினைச்சுப் பார்த்துருக்கேன்..
    அதுனாலே நாம நமக்கு வேண்டிய சிலபஸ் லே புக் ப்ரிபேர் பண்ணவேண்டிய கட்டாயத்துலேதான் இருக்கோம்..

    ReplyDelete
  69. ///சயின்ஸ்,மாத்ஸ் குரூப் எடுத்துப் படிச்சுட்டு, டிகிரி முடிச்சதும், சாப்ட்வேர்லே பூந்து நல்ல சம்பளத்துக்கு MNC லே பூந்துடணும்குற ஒரே குறிக்கோளோட போயிக்கிட்டிருக்குற இளைய சமுதாயத்துக்கு
    வரலாறு, பூகோளம் எல்லாம் அவசியமா?ன்னு கூட சில சமயங்களில் நினைச்சுப் பார்த்துருக்கேன்..
    அதுனாலே நாம நமக்கு வேண்டிய சிலபஸ் லே புக் ப்ரிபேர் பண்ணவேண்டிய கட்டாயத்துலேதான் இருக்கோம்..///

    மைனர்வாள்! எம் என் சியில் ஓரளவு பண‌மும், புகழும் வந்த பின்னர், பலரும் வரலாறு, புவியியல்,இலக்கியம், தத்துவம், ஆன்மீகம் என்று வருவதையும் பார்த்துவிட்டேன். என்ன‌ கொஞ்சம் தாமதமாக வருகிறார்கள்.

    அவர்களுக்காகவாவது இந்த 'சப்ஜெக்டை'யெல்லாம் அழித்துவிடாமல் காப்பாற்ற வேண்டியது மூத்தவர்களின் பொறுப்பு.

    ReplyDelete
  70. kmr.krishnan said...
    /// எம் என் சியில் ஓரளவு பண‌மும், புகழும் வந்த பின்னர், பலரும் வரலாறு, புவியியல்,இலக்கியம், தத்துவம், ஆன்மீகம் என்று வருவதையும் பார்த்துவிட்டேன். என்ன‌ கொஞ்சம் தாமதமாக வருகிறார்கள்.
    அவர்களுக்காகவாவது இந்த 'சப்ஜெக்டை'யெல்லாம் அழித்துவிடாமல் காப்பாற்ற வேண்டியது மூத்தவர்களின் பொறுப்பு.///

    ஐயா, நூற்றுக்கு நூறு உண்மையான கருத்து இது. நம் வகுப்பறை மாணவர்கள் பலரும் ஜோசியம் பற்றி பள்ளி நாட்களில் படிக்க நினைத்திருக்க மாட்டோம். ஏதேதோ படித்துவிட்டு என்னெனவோ செய்து கொண்டிருந்தாலும், நாம் ஆவலுடன் தேடி வரும் பொழுது அந்த கலையை கற்பிக்க வகுப்பாசிரியர் போல ஒரு சிலர் அதைக் கற்பித்து கலையை தொடரச் செய்கிறார்கள். அவர்கள் ஆர்வத்திற்கும், பொறுமைக்கும், சேவைக்கும் நன்றி கூற வேண்டும்.

    ReplyDelete
  71. அவரா நம்ம கட்சிக்கு வரார்ன்னு சொன்னதும் சரின்னு அமைதி காத்தேன்//

    இது எப்ப நடந்துது ம்ம்? சூரியன் மேற்கே உதித்தாலும் உதிக்கலாம், கடல் நீர் ஒரே நாளில் வற்றினாலும் வற்றலாம். இதுமட்டும் என்றைக்கும் நடக்கவே நடக்காது.

    லட்சோபலட்சம் அன்புத் தோழர்களின் இணைப்புவிழாக் கூட்டத்தில் திடீரென்று இவர் தலை காட்டினாலும் தலைகாட்டுவார்..என்ட்ரிபாஸ் கொடுக்கவேண்டாமென்று செக்யூரிட்டி கிட்டே கண்டிச்சு சொல்லிடுங்க..//

    கனவுகளே கனவுகளே கலைந்து செல்லுங்கள்...............

    ReplyDelete
  72. அனுபவசாலி தன் அனுபவங்களினால் பாடம் படிக்கிறான்..இழப்புகள் அதிகம்..ஆனால் அனுபவம் உண்டு..
    புத்திசாலி அடுத்தவர்களின் அனுபவத்திலிருந்து பாடம் படிக்கிறான்..இழப்புகள் இல்லை..ஆனால் அனுபவமும் இல்லை..//

    அட அட என்னா ஒரு தத்துவம், என்னா ஒரு தத்துவம்! புல்லரிக்குது!

    ReplyDelete
  73. (என்ன புத்தகம் போட்டுறலாமா?)//

    ஏற்கனவே விரயாதிபதி லக்னத்துல டென்ட் போட்டு படுத்திருக்காரு. எதுக்கும் யோசிச்சு செய்யுங்க.

    ReplyDelete
  74. அப்ப மைனர்வாள் கொடுத்த அறிக்கை கூட்டணி முயற்சி அறிக்கையோ? அதையும் கனவு என்று சொல்லிவிட்டீர்களே.//

    தனியா ஈ ஓட்டி ஓட்டி அவர் ரொம்ப அயர்ந்துவிட்டார். அதான் இப்படி அறிக்கை விடறார், ஹி ஹி

    ReplyDelete
  75. ஸ்டிக்கர் ஒட்டி என்று துக்ளக் போலே செய்வதும் கூட வரலாறுதானே?//

    MNC லே பூந்துடணும்குற ஒரே குறிக்கோளோட போயிக்கிட்டிருக்குற இளைய சமுதாயத்துக்கு
    வரலாறு, பூகோளம் எல்லாம் அவசியமா?//

    என்............னா.............து? வரலாறு, பூகோளம்லாம் அவசியமில்லையா? இவர் தப்பித்தவறி ஆட்சிக்கு வந்துவிட்டால் அது 'துக்ளக்' ஆட்சியைவிடக் கேவலமானதாக இருக்கும் என்பதற்கு இதைவிட சிறந்த எடுத்துக்காட்டு தேவையா

    மக்களே? சிந்தியுங்கள், செயல்படுங்கள்!

    ReplyDelete
  76. //////////கனவுகளே கனவுகளே கலைந்து செல்லுங்கள்...............///////

    அடுத்த வரியைப் பாடிடப்போறேன்..நீங்க கட்சிக் கூட்டத்துக்கு வர்றதுக்கு மறந்ததேன்..?

    ReplyDelete
  77. //எனக்குச் சொன்ன என் தாத்தா முடிவைச் சொல்லவில்லை.// சார், தாத்தாவுக்கு தான் முடிவுத் தெரியும்னு சொல்லுரீங்க... நீங்கள் எஸ்கேப் ஆயுட்டிங்க..

    //'இது'வந்துடும்.// ஓ... அதுவா..

    //அதிகம் மூளையை கசக்கி எழுதியுள்ளேன்// மூளையை மட்டுமா?

    //நீ நான் நம்பும் படி ஏதாவது டூப் சொல்லி என்னை நம்ப‌ வை பார்க்கலாம்" என்றார்.// ஞானக்கடல் விவேகானந்தரிடம் எப்படி... அதுவும் ஒன்றுக்கும் உதவாத ஒரு சோப்பளாங்கி. எப்படி அய்யா!!! ஒரு வேலை இப்படி "நான் உன்னை விவேகானந்தர் என்ற பெயரில் இந்த உலகமரிய‌ச் செய்வேன்னு சொல்லிருப்பாரோ.

    //ச்சால தேங்ஸன்டி சார்// மிக்க நன்றிங்க அய்யா.

    எனக்கு தெரிந்த நாள் வரை எங்கள் வீட்டில், தாய்பாலுக்கு பிறகு கற‌ந்த பசும்பால் தான். கடந்த சில வருடங்களைத் தவிற வீட்டில் எப்போழுதும் மாடுகள் இருக்கும். பாருங்கள் ஓய்வு வங்கி அதிகாரி அவர்களின் அனுபவங்கள் எனது நாட்களையும் நோன்டுகின்றது. ஸந்தை மேளாலர் சண்டைக்கு வருவார் பாறுங்கள்.

    //காய்கனி எந்தக் கடைத் தெருவில் மலிவு, தஞ்சாவூரிலேயே சிறந்த டைலர் யார்,தொலைகாட்சி நிகழ்ச்சிகள் தெரிகிறதா இல்லை வெறும் கோடுதானா, பாக்கெட் பால் நல்லதா, கைப்பால் நல்லதா ..... இப்படிப் பல.

    தங்க‌ம் விலையில் இருந்து,பாய்லர் பற்ற வைக்க சாண‌ உருண்டை வரை பல விஷயங்கள் பேசுவோம்// எப்பாடி!.. குல்ல நரி தகவல் மையம் இதெல்லாம் எல்லோருக்கும் ஒலிப‌ர‌ப்பினார்க‌ளா, இல்ல‌யா???

    ReplyDelete
  78. ///அட அட என்னா ஒரு தத்துவம், என்னா ஒரு தத்துவம்! புல்லரிக்குது//
    ///தனியா ஈ ஓட்டி ஓட்டி அவர் ரொம்ப அயர்ந்துவிட்டார். அதான் இப்படி அறிக்கை விடறார், ஹி ஹி///
    ///என்............னா.............து? வரலாறு, பூகோளம்லாம் அவசியமில்லையா? இவர் தப்பித்தவறி ஆட்சிக்கு வந்துவிட்டால் அது 'துக்ளக்' ஆட்சியைவிடக் கேவலமானதாக இருக்கும் என்பதற்கு இதைவிட சிறந்த எடுத்துக்காட்டு தேவையா

    மக்களே? சிந்தியுங்கள், செயல்படுங்கள்!///

    உங்க ப்ளாக் அட்ரஸ் குடுங்க..அங்க வந்து கச்சேரியை வச்சுக்குவோம்..இதுக்குமேல இங்க வேண்டாம்..bye ...

    ReplyDelete
  79. //நான் சொன்னேன்:"நாங்க 3 விதமான சீட்ஸ் வாங்கி ஒரு விகிதத்தில் கலந்து மண்சட்டியில் தினமும் வறுத்து, அவ்வப் போது கை மெஷினில் அறைத்து ஃபில்டரில் வடிகட்டி, கறந்த பால் காய்ச்சி, மிதமான சர்க்கரை சேர்த்து..// ஆத்தாடி... பெரியவுக நல்லா செஞ்சி சாப்டுட்டு வாழ்ந்திருக்கரீங்க, பாருங்க எங்களைப்போன்ற இளம் தலைமுரை தெரியாத எதேதோ தே‍‍‍=யிலை தூள் வண்ண‌ங்களிலும், காபி கொட்டையின் அரோமா நருமனத்திலும் மெய் மரந்து விடுகின்றோம். கதாசிரியர் காப்பிக்கு கூட‌ கொடுக்கும் அக்கரை கண்டு வியக்கின்றேன். நான் போன வீடெல்லாம் காபி கொடுத்து கெலப்பி விட்டவர்கள்தான் அதிகம். எங்க‌ த‌லைமுரைக்கு நாங்க‌ எங்க‌போக‌..

    //சோகமயமான மஹாலட்சுமி!// அட புது வக்காபுலரி எனக்கு.

    க. என்ற எழுத்து உன்மையில் கானாமல் போவத‌ற்கு த‌ங்கள் பகுதி சொல்வழக்குகள்தான் நிக்ஷ்ய‌ காரணம்.

    கானா பைகள் கதை மொத்தத்தில் ஒரு படத்தில் அல்வாவுக்கு ஆட்டம் போடும் கலைவாணி ஞாபகம் தருகின்றது.


    //....ளே! வேண்டியவர்களே! // (கட்டழகி நமிதா சொல்றதா நினைச்சிக்கவும்)ஓவ்வொரு ப்ரெண்டும் தேவ‌ ம‌ச்சான்.

    //மின்னஜ்சல்களும் நிலையானவை. நீ உன்னுடைய வில்லில் இருந்து செலுத்தும் அம்புகளைப் போல அல்ல அவைகள். சமயங்களில் நீ ஃபார்வேர்ட் செய்யும் மின்னஞ்சல்கள் வழி தவறினாலும் உன்னிடமே திரும்ப வந்து சேரக்கூடிய தன்மை உடையவை! // ஓடிருடா கைப்புள்ள.

    ஒரு வரி போதுமா அய்யா..:)

    ReplyDelete
  80. ///கானா பைகள் கதை மொத்தத்தில் ஒரு படத்தில் அல்வாவுக்கு ஆட்டம் போடும் கலைவாணி ஞாபகம் தருகின்றது.///

    பின்னூடத்திற்கு நன்றி! ஆனால் இது பராட்டுத்தானே?
    எந்தப்படம், என்ன காட்சி அது?

    ReplyDelete
  81. அய்யகோ, இந்த பக்கம் வேண்டாம் அய்யா. சகோதரர் சிவபிரகாஷத்தின் பின்னோட்டத்தை வெளியிட்டதற்கு வகுப்பு ஆசிரியர் அவர்களுக்கும், அதை படித்து பதிலளித்த தங்களுக்கும் நன்றிகள் பல.

    படம் ‍ தூங்கா நகரம்.

    வர வர வகுப்பரையில் ஒரே அய்யங்கள், அதுவும் சிறு கைகலப்புப் போல கருத்துரைகள்.

    ந‌ம்மில் ஒற்றுமை நீங்கின் அனைவ‌ருக்கும் தாழ்வே என்று வகுப்பரையில் ப‌‌டித்த‌ மேற்கோளின் பொருள் நன்கு புல‌ப்ப‌டுகின்ற‌து.

    பள்ளிப்பருவத்தில் எனது தையல் ஆசிரியை இதுப் போன்ற சன்டையிடும் மாணவ, மாணவியரை அழைத்து நேருக்கு நேர் நின்று, ஒருவர் கையை ஒருவர் பிடிக்கச்செய்து குலுக்க சொல்லுவார். அதுவும் எல்லா மாணவர்களின் முன் ஆசிரியரின் தலைமையில் நடைபெரும். ஆனால் இங்கே இனையத்தில் அது சாத்தியமா?

    அய்யா பலமுறை சொல்லும் வரிகள், பிற‌ட்சனையை அந்த பழநி ஆண்டவரிடம் விட்டுவிடுங்கள். வகுப்பு இள‌சுகல வீட்டுப்பாடம் செய்ய விடாமல் குழப்பத்தில் ஆழ்த்த நடக்கும் சதி என்று நினைக்கின்றேன் :)

    அய்யா இத்தகு சீனியர் மாண‌வர்களின் விவாத‌த்தை தவறாக கருதாது பெருந்தன்மைதான். எனது வயதிற்கு கருத்துரை சொல்ல தகுதியில்லை.

    சரி இதுப்போன்ற விவாதம் செய்ய ஜாதகத்தில் செவ்வாய் உட்சம் பெற்று லக்னத்திலோ(மேஷம்), அல்லது அதற்கருகிலோ இருக்க வேண்டுமோ அய்யா.
    சரி அதில் வெற்றிப்பெற என்ன கிரகாச்சாரம் வேண்டும் அய்யா?
    பகவான் கருனைப் போதும் சரியா:)

    ReplyDelete
  82. உங்க ப்ளாக் அட்ரஸ் குடுங்க..//

    ப்ளாக் இருக்கிறது, ஆனா எதுவும் பதிவு போடவில்லை.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com