மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

19.10.11

Astrology: உலகைக் கலக்கிய பெண்ணின் ஜாதகம்!

-----------------------------------------------------------------------------------
Astrology: உலகைக் கலக்கிய பெண்ணின் ஜாதகம்!

உலகை எப்படிக் கலக்க முடியும் என்பவர்கள் பதிவைவிட்டு விலகவும். மற்றவர்கள் தொடரவும்!

ஆமாம். சாதாரணப் பெண் அல்ல அவர். உலகையே கலக்கிய அழகான பெண். அவருடைய அந்த அழகுதான் உலகையே கலக்கியது. பலரைக் கிறங்கடித்தது. The Most Photographed lady of the century' என்ற பெயரைப் பெயரைப் பெற்றுத்தந்தது. அவருடைய பெயரே ஒரு மந்திரச் சொல்லாக விளங்கிய காலம் உண்டு.

போதும் சஸ்பென்ஸ்! யாரென்று சொல்லுங்கள் என்கிறீர்களா?

சரி, சொல்கிறேன். அவருடைய பெயர் ‘மர்லின் மன்றோ’

தெரியுமல்லவா? தெரியாவிட்டால் அவரைப் பற்றிய முழு விவரங்களுக்கான வலைத்தளத்தின் சுட்டியைக் கொடுத்துள்ளேன். படித்துவிட்டுப் பிறகு இங்கே வாருங்கள். அதுதான் நம் இருவருக்கும் நல்லது!

Link URL: http://en.wikipedia.org/wiki/Marilyn_Monroe
-----------------------------------------------------
அவருடைய சிறுவயது வாழ்க்கை மிகவும் அவலமாக இருந்திருக்கிறது. தந்தையும் சரியில்லை. தாயும் சரியில்லை. வளர்ப்புப் பேற்றோர் களிடமும், பிறகு வளர்ப்புக் காப்பகங்களிலும் வளர்ந்தார். இருபது வயதில் விமான உதிரிப்பாகங்களைத் தயாரிக்கும் ஒரு தொழிற்சாலையில் வேலைபார்த்து வயிற்றைக் கழுவினார். அதிர்ஷ்டம் ‘டேவிட் கொனோவர்’ என்னும் இராணுவ புகைப்படக்காரர் மூலம் வந்தது. இவரின் அழகைப் பார்த்த அந்த நபர், இவரை விதம் விதமாக புகைப்படங்கள் எடுத்துப் பத்திரிக்கைகளுக்குக் கொடுக்க, அதன் மூலமாக விளம்பர மாடலாகமாறி, கடைசியில் அமெரிக்கத் திரைஉலகம் இவரை பலவந்தமாகத் தூக்கிக்கொண்டுபோய் விட்டது.

அதற்குப் பிறகு?

சுமார் 15 ஆண்டு காலம் 32 திரைப்படங்களில் நடித்துப் பேரும் புகழும் பெற்றதோடு உலகம் முழுவதும் எண்ணற்ற இரசிகர்களையும் பெற்றார்
The seven years itch (1955), Bus Stop (1956), Let us make Love (1960), The misfits (1961) போன்ற படங்கள் பெரும் வெற்றியைப் பெற்றன.

20th Century Fox, The Columbia Pictures, United Artists, Metro-Goldwyn Mayer போன்ற ஹாலிவுட்டின் பிரபல திரைப்பட நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு இவரை வைத்துப் படங்களை எடுத்தன

நடிகை, பாடகி, மாடல்பெண், ஷோ கேர்ள் என்று பன்முகத்திறமை கொண்டவர். அதைவிட முக்கியமாக major sex symbol (இந்தத் தகவல் மைனர்/களுக்காக) 50 - 60 களில் வியாபார ரீதியில் வெற்றிகரமான பல திரைப்படங்களில் நடித்துக் கலக்கியவர்

ஆனால் அவரது 36ஆவது வயது முடிந்தவுடன், ஆயுள்காரகன் சனீஷ்வரன் அவருக்குப் போர்டிங் பாஸைக் கைகளில் திணித்து, இந்த உலகைவிட்டே அவரை அனுப்பி வைத்துவிட்டான். தற்கொலை செய்து தன் உயிரை மாய்த்துக்கொண்டார். அதிக அளவு உட்கொண்ட தூக்க மாத்திரைகள் அதற்குக் காரணம். (Over dose of sleeping pills). சிலர் அதை விபத்து என்றும் சொல்வார்கள். எதாக இருந்தால் என்ன? பல ரசிகர்களைக் கலங்க வைத்துவிட்டு அம்மணி போய்விட்டார்!


அவருடைய ஜாதகத்தை இன்று அலசுவோம் (எல்லாம் ஒரு பயிற்சிக்காகத்தான்)
--------------------------------------------------------------------------------
---------------------------------------------------------------------------------


பெயர்: மர்லின் மன்றோ
பிறந்த தேதி 1.6.1926
பிறந்த ஊர்: லாஸ் ஏஞ்சல்ஸ், யு.எஸ்.ஏ
பிறந்த நேரம்: காலை 9:30 மணி
நட்சத்திரம்: அவிட்டம்
லக்கினம்: கடகம்
கர்ப்பச்செல் இருப்பு: செவ்வாய் மகா திசையில் 5 ஆண்டுகள், 5 மாதங்கள், 15 நாட்கள்
காலமான தேதி 5.8.1962
வாழ்ந்த காலம்: 36 ஆண்டுகள் 2 மாதங்கள் 4 நாட்கள்
முதல் 30 ஆண்டுகள் கிறிஸ்துவ மதத்தையும், கடைசி ஆறு ஆண்டுகள் யூத மதத்தையும் தழுவினார்.

அவிட்ட நட்சத்திரத்தில் பிறந்தால், பிறந்த வீட்டில் தவிட்டுப் பானை கூட மிஞ்சாது என்பார்கள். அது வெறும் சொல்லடை என்று ஒதுக்கிவிடலாம். ஆனால் அம்மணி ஜாதகத்தில் அது உண்மையாகியிருக்கிறது.

ஜாதகத்தின் சிறப்பு அம்சங்கள்.

சுபக்கிரங்களான குரு, சந்திரன், சுக்கிரன் ஆகிய மூன்றும் வலுவாக உள்ளன.
சந்திரன் கேந்திரத்தில் உள்ளார்
சுக்கிரனும் அவ்வாறே உள்ளார்
குரு பகவான் எட்டில் போய் உட்கார்ந்து கொண்டாலும், கடக லக்கினத்திற்கு யோககாரகனான செவ்வாயுடன் கூட்டணி போட்டு வலுவாக உள்ளார். கடக லக்கினத்திற்கு 5, மற்றும் 10ஆம் இடங்களுக்கு உரியவன் செவ்வாய். ஒரு திரிகோண இடம் மற்றும் ஒரு கேந்திரத்திற்கு அதிபதியான செவ்வாய்தான் கடகத்திற்கு யோககாரகன்.அதை மனைதில் கொள்க!
கர்மகாரகன் (Authority for Profession) சனீஷ்வரன் உச்சம் பெற்றுள்ளான்.
எந்த கிரகமும் கிரக யுத்தத்தில் சிக்கவில்லை!

சசமகா யோகம், சுனபா யோகம், அமலா யோகம், சதா சஞ்சார யோகம் போன்ற துக்கடா யோகங்கள் மட்டும் உள்ளன. குறிப்பிடும்படியாக பலத்த யோகங்கள் எதுவும் இல்லை.

கிரகங்களின் சுயவர்க்கப்பரல்கள்:
குரு - 7 பரல்கள்
புதன் - 5 பரல்கள்
சூரியன் - 4 பரல்கள்
சுக்கிரன் - 4 பரல்கள்
சந்திரன் - 3 பரல்கள்
செவ்வாய் - 3 பரல்கள்
சனி - 2 பரல்கள்

முதல் 2 கிரகங்கள் நல்ல பரல்களுடன் இருக்கின்றன. மற்ற கிரகங்கள் by placement அதை ஈடு கட்டிவிட்டன. சனி (உச்ச வீடு) சந்திரன் (கேந்திரம்) சுக்கிரன் (கேந்திரம்) செவ்வாய் (யோககாரகன் பதவி) சூரியன் (லாபஸ்தானம்)  ஆக மொத்தம் எல்லாக் கிரகங்களுமே வலுவாக உள்ளன!
===============================================

ராசிச் சக்கரம்
 சுயவர்க்கப்பரல்கள் கட்டம் கட்டிக்க் காட்டப்பெற்றுள்ளன!
-------------------------------------------------------------------------------

சரி இப்போது அலசுவோம்:

1. ஜாதகி கடக லக்கினக்காரர். கடக லக்கினம் அரச கிரகங்கள் இரண்டில் ஒன்றான சந்திரனுக்கு உரிய வீடு. இவர் ஜாதகத்தில் சந்திரன் கேந்திரத்தில் அமர்ந்து லக்கினத்தைத் தன் நேர் பார்வையில் வத்திருக்கிறார். அதனால் ஜாதகிக்கு நிற்கும் சக்தியைக் (Standing Power) கொடுத்தார்.

2. லக்கினத்தில் சந்திரன் இருந்தாலும் அல்லது லக்கினத்தைச் சந்திரன் பார்த்தாலும் அழகான தோற்றத்தைக் கொடுக்கும். ஜாதகிக்குப் பேரழகை ஏழில் அமர்ந்து லக்கினத்தைப் பார்க்கும் சந்திரன் கொடுத்தது.

3. புத்தி மற்றும் வித்தைகளுக்கு உரிய நாதன் புதன், தன் சுயவர்க்கத்தில் 5 பரல்களுடன் இருப்பதைக் கவனியுங்கள். ஜாதகிக்கு நல்ல புத்திசாலித்தனத்தை - கிடைத்த வாய்ப்பைத் தக்க வைத்துக்கொள்ளும் புத்திசாலித்தனத்தை புதன் வழங்கினார்.

4. சரி, அம்மணியின் மார்க் ஷீட்டைப் பார்ப்போம். மொத்த மதிப்பெண்கள் 337ல்:

அவருடைய ஜாதகத்தில் தீய இடங்களான 3, 6, 8 & 12 ஆம் இடங்களின் பரல்களைக் கூட்டுங்கள்.

3ல் -  28
6ல் -  36
8ல் -  31
12ல் - 23
------------------
     118

இந்த 4 இடங்களுக்கும் சேர்ந்து 112 ஐத் தாண்டக்கூடாது  (337 வகுத்தல் 3 = 112) ஆனால் எத்தனை இருக்கிறது பார்த்தீர்களா? 118 உள்ளது. தீமைகள் அதிகமாக இருந்துள்ளன.

சரி கேந்திர, கோணங்களைக் கூட்டுங்கள்
1ல் -  29
5ல் -  29
9ல் -  33
4ல் -  28
7ல் -  24
10ல் - 22
-------------------
      165

இந்த ஆறு இடங்களுக்கும் சேர்ந்து இருக்க வேண்டியது 168 (337 வகுத்தல் 2 = 168) ஆனால் அதிலும் 3 பரல்கள் குறைவாக இருந்திருக்கிறது. அதாவது ஜாதகத்தில் தீமைகளே அதிகமாக இருந்திருக்கின்றன

5. நான்கில் சனி நல்ல தாய் அமையவில்லை. ஒன்பதாம் வீட்டின் அதிபதி குரு அந்த வீட்டிற்குப் பன்னிரெண்டில் அத்துடன் நவாம்சத்தில் சூரியனுடன் சனியின் சேர்க்கை அதனால் நல்ல தந்தை அமையவில்லை.

6. ஏழாம் வீடு பாபகர்த்தாரி யோகத்தில். ஒரு பக்கம் கேது மறுபக்கம் செவ்வாய். அத்துடன் ஏழாம் வீட்டில் குறைவான (24) பரல்களே உள்ளன. நல்ல திருமண வாழ்க்கை அமையவில்லை. அம்மணி 3 முறைகள் திருமணம் செய்து கொண்டுள்ளார். மூன்று திருமணங்களுமே விவாகரத்தில் முடிந்தன.

கணவர்களின் பட்டியல்:
1. James Dougherty (1942 - 1946)
2. Joe DiMaggio (1954 - 1954)
3. Arthur Miller (1956 - 1961)

7. எட்டாம் வீட்டில் செவ்வாய். களத்திர தோஷம். உடன் குரு இருக்கிறாரே என்று கேட்காதீர்கள். அவனுக்கு ஆறாம் இடத்து வில்லன் வேலையையும் செய்ய வேண்டிய கட்டாயம். எட்டில் செவ்வாய் இருந்தால் திருமணம் பிரிவில் (Separation) முடியும் என்பது விதி. அம்மணி வாழ்வில் அது மூன்று முறைகள் அரங்கேறியுள்ளது.

8. குழந்தை பாக்கியத்திற்கான ஐந்தாம் வீடும் பாபகர்த்தாரி யோகத்தில் சிக்கியுள்ளது. ஒரு பக்கம் சனி. மறுபக்கம் கேது. அத்துடன் இந்த ஜாதகத்தின் ஐந்தாம் வீட்டு அதிபதியான செவ்வாயும், புத்திரகாரகனான (Authority for Children) குருவும் ஒன்றாக எட்டில் போய் அமர்ந்து விட்டார்கள். அதனால் இரண்டு முறை கருவில் உருவான குழந்தைகள் கருவிலேயே சிதைந்துவிட்டன.

9. தொழில் ஸ்தானத்தில் (பத்தாம் இடத்தில்) சுக்கிரன். சுக்கிரன் இருந்தால் கலைத்தொழில். அத்துடன் கர்மகாரகன் சனியின் நேரடிப்பார்வையில் - அதுவும் உச்சம்பெற்ற சனியின் நேரடிப் பார்வையில் பத்தாம் இடம் உள்ளது. அதனால் அவர்கள் இருவரும் சேர்ந்து ஜாதகியை உலகப் புகழ் பெற்ற நடிகையாக்கினார்கள். ஜாதகி தான் நுழைந்த துறையின் சிகரத்தை எட்டிப் பிடித்தார்
Venus in the 10th house is considered one of the best indicators for success. Those with Venus in the tenth will contribute something positive and loving to the world, and pleasure comes from their career or professional life. 

10. கடக லக்கினத்திற்கு யோககாரகனான செவ்வாய், தனகாரகன் குருவுடன் சேர்ந்து இரண்டாம் வீட்டை தன் பார்வையால் மேன்மைப் படுத்தி ராகு திசையில் ஜாதகிக்குக் கிடைக்காத பணத்தை குரு திசையில் வாரி வழங்க உதவினான்.

11. ஆறில் கேதுவும் மூன்றில் மாந்தியும் அமர்ந்து ஜாதகிக்கு அசாத்திய துணிச்சலை வழங்கினார்கள். உலகப் புகழ் பெற்ற நடிகை என்றால் எத்தனை பேரைச் சமாளிக்க வேண்டியது இருக்கும் அதற்குத் துணிச்சல் வேண்டாமா?

12. ஏழில் இருந்த லக்கினாதிபதி ஜாதகிக்கு நேர்மையான குணத்தை நல்கினான். இளம் வயதில் எடுக்கப்பெற்ற தன்னுடைய நிர்வாணப் படங்களைத் தான் புகழ் பெற்றிருந்த காலத்தில், படங்களை எடுத்த புகைப்படக்காரர் அவற்றைப் பணத்திற்காக பத்திரிக்கைக்காரர்களிடம் கொடுத்துவிட அவைகள் பெரிய களேபரத்தை உண்டாக்கின. பட நிறுவனங்கள் அதை மறுத்து அறிக்கைவிடச் சொன்னபோது ஜாதகி மறுத்துவிட்டார். அவரே பத்திரிக்கை நிருபர்களை வரவழைத்து, அவை தன்னுடைய படங்கள்தான் என்று நேர்மையாக ஒப்புக்கொண்டார். வறுமையால் தான் வாடிய காலத்தில் பணத்திற்காக அதைச் செய்ய வேண்டிய சூழலில் சிக்கினேன் என்று சொன்னார். அந்த நிகழ்வு மக்களிடையே அவருக்குப் பெரும் அனுதாபத்தை உண்டாக்கியது.

13. தசா புத்திகள் எப்படி விளையாடியுள்ளன என்பதைப் பார்ப்போம். தசா புத்திகள்தான் உரிய பலன்களை உரிய நேரத்தில் தரக்கூடியவை. அதை மனதில் கொள்க!

பிறந்த தேதி : 1.6.1926 + செவ்வாய் மகாதிசை இருப்பு 5 ஆண்டுகள் 5 மாதங்கள் 15 நாட்கள் + ராகு மகா திசை 18 ஆண்டுகள் ஆக அவருடைய 23ஆவது வயதுவரை பல சிரமங்களுக்கு ஆளாகியிருக்கிறார். (ராகு 12ல்) அதற்குப் பிறகு பாக்கியாதிபதி குரு பகவான் வந்து  கைகொடுத்திருக்கிறார். சுமார் 13 ஆண்டு காலம் சுகமான வாழ்க்கை. செல்வச் செழிப்பான வாழ்க்கை. செல்வச்செழிப்பு என்றால் சுகம் இருக்காதா என்ன?

14. அதே குரு திசையில் செவ்வாய் புத்தி துவங்கியதும் ஜாதகியை கேடுகள் சூழ்ந்தன. புத்தி துவங்கி 20 நாட்களில் ஜாதகி மரணமடைந்தார்.
குரு மகா திசையில் செவ்வாய் புத்தி 16.7.1962இல் துவங்கியது. ஜாதகி 5.8.1962ல் உயிர் நீத்தார். எட்டில் செவ்வாய் இருந்தால் பொதுவாகத் துர் மரணம். எட்டாம் இடத்தில் இருந்த செவ்வாய் தனது புத்தியில் (ஆறாம் இடத்தானின் மகா திசையில் அதை செய்து முடித்தான்) அந்த வீட்டில் இருவரும் ஒன்றாக இருப்பதைக் கவனியுங்கள். அத்துடன் ஜாதகத்தில் ஆயுள்காரகன் சனி இரண்டு பரல்களை மட்டுமே கொண்டு பலவீனமாக உள்ளான். அதனால் ஜாதகிக்கு அற்ப ஆயுள். 36 வயதில் அந்தப் பேரழகியின் கதை முடிந்து விட்டது.

The eighth house indicates death, losses, adversity, misery, misfortune, separation etc. If Mars in the 8th house in the horoscope is likely to cause his own death. 

அலசலில் ஏதாவது விடுபட்டிருந்தால், வகுப்பறையின் மூத்த மாணவர்களான திருவாளர்கள் KMRK யும், திருவாளர் மலேசிய ஆனந்த் அவர்களும் வந்து சொல்வார்கள்.

தேவையான அளவு அலசிவிட்டேன். இன்னும் அலசினால் உங்களுக்கும் போரடிக்கும். ஆகவே இத்துடன் நிறைவு செய்கிறேன்

அன்புடன்
வாத்தியார்
++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!

41 comments:

  1. sir,

    thanks for the deep analysis. depth and insightful..

    ReplyDelete
  2. அருமையான அலசல் ஐயா. அதிக அள‌வில் புகைப்படம் எடுக்கப்பட்டவர் என்கிறீர்கள். இருந்தபோது மட்டும் அல்ல. இப்போதும் அப்படியே.
    இலண்டன் மேடம் துச்சாடில் மர்லினைச் சுற்றிதான் அதிகக் கூட்டம்.என்னால் புகைப்படம் எடுக்க முடியவில்லை. அவ்வளவு கூட்டம்.

    பட்த்தில் அமர்ந்த சுக்கிரன் கலைத்துறை சார்ந்த வேலையைக் கொடுத்தான் என்பது மட்டும் சொல்லத் தோன்றுகிறது. மற்றபடி இவ்வளவு உழைப்புக் கொடுக்கக் கூடிய வாத்தியார் வேறு யாருமே இல்லை.

    ReplyDelete
  3. வணக்கம் வாத்தியார்,

    ஜாதக அலசலுக்கு நன்றி.
    தசா புத்தி அலசலுடன் மேலும் அப்போதுள்ள கோசாரத்தையும் சேர்த்துக் கொண்டால் அலசல் என்னும் உணவுக்கு மேலும் ஒரு கறியாகச் சேரும்.நன்றி.

    ReplyDelete
  4. //தேவையான அளவு அலசிவிட்டேன்//

    ஆமாம். நல்ல அலசல் ...
    (வலுவான பரல்களுடன் சஷ்டமாதிபதி அஷ்டமத்தில் அமர்ந்து தன் தசாரம்பத்தில் விபரீத ராஜயோகம் அளித்துள்ளான் போலும். )

    மிக்க நன்றி.

    ReplyDelete
  5. Sir vanakam,
    Arumaiyana alasal.
    Thank you sir.

    ReplyDelete
  6. Ayya,

    Oru Kalaku kalakintinga...

    Sincere Student,
    Trichy Ravi

    ReplyDelete
  7. குருவே. இந்த மாரக அதிபதி விஷயம்தான் ஜாதகங்களில் உதைக்கிறது.7,2,பாதக அதிபதிகளைத் தவிர 3,6,8,12அதிபதிகளும் மரணத்தைக் கொடுக்கக் கூடியவர்கள் என்று விதிகள் இருக்கிறதா? முதலில் எட்டாம் இடத்தைப் பார்த்து அற்பாயுளா, மத்திம ஆயுளா, தீர்க்க ஆயுளா என்று பார்த்து விட்டு பின்னர் மாரக தசை பற்றிப் பார்க்க வேண்டுமா?

    மேலும் பல அமைப்புகள் சரியில்லை என்றாலும் ஏதாவது ஒரு அமைப்பு சரியாக இருந்தால் பலன்கள் நன்றாக இருக்கும் என்று சொல்ல முடியுமா?

    அதேபோல் ஒரு வீடு நிறைய பரல்கள் பெற்றிருந்தாலும் பாப கர்த்தாரி யோகத்தால் பலன்கள் கெட்டு விடுவதைப் பார்க்கிறோம். அப்பொழுது முதலில் பாப கர்த்தாரி அமைப்பைப் பார்த்து விட்டுப் பின்னர்தான் வீட்டின் பலத்தைப் பார்க்க வேண்டுமா?

    ReplyDelete
  8. நல்ல அலசல். systematic analysis.

    10க்கு உரிய செவ்வாய் தனது இடத்திலிருந்து 11ம் இடத்தில் இருப்பதால் அவரது தொழிலில் உச்சமடைந்தார் எனச் சொல்லலாமா அய்யா?

    ஒரு சந்தேகம். பாப கர்த்தாரி யோகத்தில் லக்கினாதிபதி (சனி, செவ்வாய் மற்றும் சூரியன்) களையும் கெடு கிரகங்களாகக் கொள்ள வேண்டுமா அல்லது அவைகளுக்கு விலக்கு உண்டா?

    எட்டில் கேது இருந்தால் மாரகம் வியாதியால் எனக் கொள்ளலாமா?

    அலசலுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  9. ஹாலிவுட்டின் நாயகி மர்லின் மன்றோவின் ஜதக அலசல்,
    மிக அருமையான அலசல்,

    மிக்க நன்றி,
    முருகராஜன்,

    ReplyDelete
  10. Guru Vanakkam,

    Idhu namma aalu!!! (en laganathai sonnen) Mathapadi there is no other similarity. Thanks for the alasal.

    Ramadu.

    ReplyDelete
  11. குருவிற்கு வணக்கம், யோகர்களான குரு, செவ்வாய் 8 ஆம் இடத்தில் மறைந்தாலும் அவர்கள் திசையில் யோகத்தை தருவார்களா? ஆம் என்றால், யோகர்கள் கெடகூடாது என்பதன் என்றால் என்ன? ; கேள்வில் குற்ற்ம் இர்ருந்தால் மன்னியுயங்கள்.

    தங்களுடைய சேவைக்கு நன்றி.

    ReplyDelete
  12. மர்லின் மன்றோ
    உன் அழகு
    மங்கா புகழ் அடைந்துவிட்டது என்றோ .

    கவியரசர் உன் ஊரில் இருந்திருந்தால்
    "நிலவும் ஒரு பெண்ணாகி" என்ற பாடலை
    உனக்காகவே பாடியிருப்பார்
    அல்லது
    இளமை கவிஞர் பிறந்திருந்தாலும்
    "அவள் ஒரு நவரச நாடகம்"என்ற பாடலை
    உனக்காகவே பாடியிருப்பார்.

    குரு பார்க்க எட்டமிடது சனி
    உச்சதிலிருந்தாலும்
    செய்யவில்லை சரியாக தன் பனி.

    உனக்கு யோகாதிபதி செவ்வாய்
    அதற்காக உறக்கம் தேடி
    அவர் புக்தியிலா செல்வாய்.

    பாவை உன் அழகை காண
    மேலோகம் எதிர்பார்த்தது ,
    அதனால்
    பரல்கள் பதம் பார்த்தது.

    ReplyDelete
  13. Vanakkam ayya,
    Today's Horoscope analysis is crystal clear to understand.Its a sad thing to learn that who had beautifull personality haven't got in their personal Life.
    Ayya,I'm a big fan of michael jackson and would you please analyse his Horoscope in the coming classes.Thanx once again for taking some teaching us good lessons.

    ReplyDelete
  14. Ayya,I'm a big fan of michael jackson and would you please analyse his Horoscope in the coming classes.Thanx once again for taking some teaching us good lessons.

    ReplyDelete
  15. Dear sir,
    Why the suyavarga paralgal of ascendant is not considered in to account.please explain..

    ReplyDelete
  16. லக்கினத்திற்கு 7ல் இருக்கும் சந்திரன் அவருக்கு திருமணத்தை நடத்தி வைத்தார் என்றால், சுக்கிரனுக்கு 7ல் இருக்கும் சனி அது நிலைக்காமல் செய்து விட்டார். ஒழுக்கம், கற்பு இவற்றிற்கான 4ம் இடத்தை சனி நன்றாகவே பதம் பார்த்திருக்கிறார். நிர்வான படம் என்பதோடு மட்டுமில்லாமல் பலரோடு கிசு கிசுக்கப் பட்டிருக்கிறார்.

    ReplyDelete
  17. 2,7ம் இடத்ததிபதிகள் மாரகம் செய்வதில் முதன்மையானவர்கள். அடுத்து 3,8ம் அதிபதிகள். இந்த இடத்தாதிபதிகளுடன் சேர்ந்தவர்கள் அல்லது இந்த இடங்களில் இருப்பவர்களுக்கும் மாரகம் செய்வதில் பங்கு இருக்கிறது.

    ReplyDelete
  18. /// குரு - 7 பரல்கள் . கடக லக்கினத்திற்கு யோககாரகனான செவ்வாய், தனகாரகன் குருவுடன் சேர்ந்து இரண்டாம் வீட்டை தன் பார்வையால் மேன்மைப் படுத்தி ராகு திசையில் ஜாதகிக்குக் கிடைக்காத பணத்தை குரு திசையில் வாரி வழங்க உதவினான்.

    இந்த ஜாதகத்தின் ஐந்தாம் வீட்டு அதிபதியான செவ்வாயும், புத்திரகாரகனான (Authority for Children) குருவும் ஒன்றாக எட்டில் போய் அமர்ந்து விட்டார்கள். இரண்டு முறை கருவில் உருவான குழந்தைகள் கருவிலேயே சிதைந்துவிட்டன. ///

    ஒரே கிரக அமைப்பு / சேர்க்கை நன்மையை வாரி வழங்குவதையும் அதுவே கேடு /பீடைக்கும் சமயங்களில் வழிவகுப்பதையும் சுட்டிக்காட்டி உணர்த்திய மேன்மைக்கு நன்றி.

    On reading this I was reminded of the days when I met Astrologers in Chennai. They held 6'th house Rahu in my horoscope , as the reason for my traumatic past in Rahu dasa and also added that same position of Rahu will give me immunity against bad elements/enemies and confer prosperity in the future.

    ReplyDelete
  19. மிக அருமையான அலசல்

    ReplyDelete
  20. ஆசிரியர் எமது தவறுகளை திருத்த வேண்டுகிறேன்.







    லக்னாதிபதி நின்ற வீட்டோன் உச்சம் பெற்றது சிறப்பு.





    கடக லக்னத்திற்கு யோககாரர்களான குருவும் செவ்வாயும் (தர்ம கர்மாதிபதிகள் ) இணைந்து 8-இல் மறைந்தாலும், அவ்வீட்டுக்கு அதிபதியான சனி உச்சம் பெற்றதால் சிறப்பான பலனை கொடுத்தார்கள்.



    நான்காமாதிபதி சுக்கிரன் தன் வீட்டை பார்ப்பது சிறப்பு.

    ReplyDelete
  21. ////Blogger sriganeshh said...
    sir,
    thanks for the deep analysis. depth and insightful../////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  22. /////Blogger kmr.krishnan said...
    அருமையான அலசல் ஐயா. அதிக அள‌வில் புகைப்படம் எடுக்கப்பட்டவர் என்கிறீர்கள். இருந்தபோது மட்டும் அல்ல. இப்போதும் அப்படியே. இலண்டன் மேடம் துச்சாடில் மர்லினைச் சுற்றிதான் அதிகக் கூட்டம்.என்னால் புகைப்படம் எடுக்க முடியவில்லை. அவ்வளவு கூட்டம்.
    பட்த்தில் அமர்ந்த சுக்கிரன் கலைத்துறை சார்ந்த வேலையைக் கொடுத்தான் என்பது மட்டும் சொல்லத் தோன்றுகிறது. மற்றபடி இவ்வளவு உழைப்புக் கொடுக்கக் கூடிய வாத்தியார் வேறு யாருமே இல்லை./////

    நல்லது. உங்களின் பாராட்டிற்கு நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  23. Blogger krishnar said...
    வணக்கம் வாத்தியார்,
    ஜாதக அலசலுக்கு நன்றி.
    தசா புத்தி அலசலுடன் மேலும் அப்போதுள்ள கோசாரத்தையும் சேர்த்துக் கொண்டால் அலசல் என்னும் உணவுக்கு மேலும் ஒரு கறியாகச் சேரும்.நன்றி.///////

    செய்தால் போகிறது. அடுத்து வரும் அலசல்களில் செய்யலாம்!

    ReplyDelete
  24. ///Blogger Srinivasa Rajulu.M said...
    //தேவையான அளவு அலசிவிட்டேன்//
    ஆமாம். நல்ல அலசல் ...
    (வலுவான பரல்களுடன் சஷ்டமாதிபதி அஷ்டமத்தில் அமர்ந்து தன் தசாரம்பத்தில் விபரீத ராஜயோகம் அளித்துள்ளான் போலும். )
    மிக்க நன்றி.//////

    நல்லது. உங்களின் கருத்திற்கு நன்றி!

    ReplyDelete
  25. /////Blogger Nareshkumar said...
    Sir vanakam,
    Arumaiyana alasal.
    Thank you sir./////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  26. /////Blogger Ravichandran said...
    Ayya,
    Oru Kalaku kalakintinga...
    Sincere Student,
    Trichy Ravi/////

    உங்கள் வயதிற்குக் கலக்கல்தானே பிடிக்கும்:-)))
    நன்றி நண்பரே!

    ReplyDelete
  27. Blogger Jagannath said...
    குருவே. இந்த மாரக அதிபதி விஷயம்தான் ஜாதகங்களில் உதைக்கிறது.7,2,பாதக அதிபதிகளைத் தவிர 3,6,8,12அதிபதிகளும் மரணத்தைக் கொடுக்கக் கூடியவர்கள் என்று விதிகள் இருக்கிறதா? முதலில் எட்டாம் இடத்தைப் பார்த்து அற்பாயுளா, மத்திம ஆயுளா, தீர்க்க ஆயுளா என்று பார்த்து விட்டு பின்னர் மாரக தசை பற்றிப் பார்க்க வேண்டுமா?
    மேலும் பல அமைப்புகள் சரியில்லை என்றாலும் ஏதாவது ஒரு அமைப்பு சரியாக இருந்தால் பலன்கள் நன்றாக இருக்கும் என்று சொல்ல முடியுமா?///////

    3 & 8 ற்கு உரியவர்களும் மாரகத்தைச் செய்யக்கூடியவர்கள்தான். 3 ஆம் இடம் எட்டிற்கு எட்டாம் வீடு. ஆயுள்காரகனின் வலிமைதான் ஆயுளுக்கான முதல் தகுதி
    ---------------------------------------------------------------------------
    ////அதேபோல் ஒரு வீடு நிறைய பரல்கள் பெற்றிருந்தாலும் பாப கர்த்தாரி யோகத்தால் பலன்கள் கெட்டு விடுவதைப் பார்க்கிறோம். அப்பொழுது முதலில் பாப கர்த்தாரி அமைப்பைப் பார்த்து விட்டுப் பின்னர்தான் வீட்டின் பலத்தைப் பார்க்க வேண்டுமா?////

    ஆமாம். ஆமாம்!

    ReplyDelete
  28. Blogger Govindasamy said...
    ////நல்ல அலசல். systematic analysis.
    10க்கு உரிய செவ்வாய் தனது இடத்திலிருந்து 11ம் இடத்தில் இருப்பதால் அவரது தொழிலில் உச்சமடைந்தார் எனச் சொல்லலாமா அய்யா?/////

    சொல்லலாம். குறைந்த முயற்சி. அதிகப்பலன்!
    -----------------------------------------------------------------
    ////ஒரு சந்தேகம். பாப கர்த்தாரி யோகத்தில் லக்கினாதிபதி (சனி, செவ்வாய் மற்றும் சூரியன்) களையும் கேடான கிரகங்களாகக் கொள்ள வேண்டுமா அல்லது அவைகளுக்கு விலக்கு உண்டா?//////

    சுபகிரகங்கள் மூவரைத் தவிர மற்ற கிரகங்கள் அனைத்தும் கேடான (தீய) கிரகங்களே
    -------------------------------------------------------------------------
    /////எட்டில் கேது இருந்தால் மாரகம் வியாதியால் எனக் கொள்ளலாமா?
    அலசலுக்கு நன்றிகள்.///////

    அது பொது விதி! பொதுவிதி எல்லோருக்கும், எல்லா இடங்களிலும் செல்லாது.
    ---------------------------------------

    ReplyDelete
  29. //////Blogger RMURUGARAJAN said...
    ஹாலிவுட்டின் நாயகி மர்லின் மன்றோவின் ஜாதக அலசல்,
    மிக அருமையான அலசல்,
    மிக்க நன்றி,
    முருகராஜன்,/////

    நல்லது. நன்றி முருகராஜன்!

    ReplyDelete
  30. ////Blogger RAMADU Family said...
    Guru Vanakkam,
    Idhu namma aalu!!! (en laganathai sonnen) Mathapadi there is no other similarity. Thanks for the alasal.
    Ramadu./////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  31. ////Blogger vrajesh said...
    குருவிற்கு வணக்கம், யோகர்களான குரு, செவ்வாய் 8 ஆம் இடத்தில் மறைந்தாலும் அவர்கள் திசையில் யோகத்தை தருவார்களா? ஆம் என்றால், யோகர்கள் கெடகூடாது என்பதன் என்றால் என்ன? ; கேள்வில் குற்ற்ம் இருந்தால் மன்னியுயங்கள்.
    தங்களுடைய சேவைக்கு நன்றி./////

    கெட்டாலும் மேன்மக்களே; சங்கு சுட்டாலும் வெண்மைதரும். யோககாரனும் அப்படித்தான். குறைவாகத்தருவான்!

    ReplyDelete
  32. Blogger thanusu said...
    மர்லின் மன்றோ
    உன் அழகு
    மங்கா புகழ் அடைந்துவிட்டது என்றோ .
    கவியரசர் உன் ஊரில் இருந்திருந்தால்
    "நிலவும் ஒரு பெண்ணாகி" என்ற பாடலை
    உனக்காகவே பாடியிருப்பார்
    அல்லது
    இளமை கவிஞர் பிறந்திருந்தாலும்
    "அவள் ஒரு நவரச நாடகம்"என்ற பாடலை
    உனக்காகவே பாடியிருப்பார்.
    குரு பார்க்க எட்டமிடத்து சனி
    உச்சதிலிருந்தாலும்
    செய்யவில்லை சரியாக தன் பணி.
    உனக்கு யோகாதிபதி செவ்வாய்
    அதற்காக உறக்கம் தேடி
    அவர் புக்தியிலா செல்வாய்.
    பாவை உன் அழகை காண
    மேலோகம் எதிர்பார்த்தது ,
    அதனால்
    பரல்கள் பதம் பார்த்தது.///////

    எழுதி உள்ளது
    எல்லாம் நல்லது

    ReplyDelete
  33. /////Blogger R.Srishobana said...
    Vanakkam ayya,
    Today's Horoscope analysis is crystal clear to understand.Its a sad thing to learn that who had beautifull personality haven't got in their personal Life. Ayya,I'm a big fan of michael jackson and would you please analyse his Horoscope in the coming classes.Thanx once again for taking some teaching us good lessons.//////

    பார்க்கலாம். பாராட்டிற்கு நன்றி!

    ReplyDelete
  34. /////Blogger sundar said...
    Ayya,I'm a big fan of michael jackson and would you please analyse his Horoscope in the coming classes.Thanx once again for taking some teaching us good lessons.//////

    பார்க்கலாம். பாராட்டிற்கு நன்றி!

    ReplyDelete
  35. /////Blogger Sundar said...
    Dear sir,
    Why the suyavarga paralgal of ascendant is not considered in to account.please explain..///////

    கிரகங்களுக்கு, ஆதிபத்தியம், இடம், சேர்க்கை, பார்வை என்று பல உள்ளன. அதுபோல லக்கினத்திற்கு என்ன இருக்கிறது? அதனால் லக்கினத்திற்கு சுயவர்க்கம் இல்லை!

    ReplyDelete
  36. /////Blogger ananth said...
    லக்கினத்திற்கு 7ல் இருக்கும் சந்திரன் அவருக்கு திருமணத்தை நடத்தி வைத்தார் என்றால், சுக்கிரனுக்கு 7ல் இருக்கும் சனி அது நிலைக்காமல் செய்து விட்டார். ஒழுக்கம், கற்பு இவற்றிற்கான 4ம் இடத்தை சனி நன்றாகவே பதம் பார்த்திருக்கிறார். நிர்வாணப் படம் என்பதோடு மட்டுமில்லாமல் பலரோடு கிசு கிசுக்கப் பட்டிருக்கிறார்.//////

    அம்மணிமேற் கொண்ட மரியாதைக்காகத்தான், நான் கற்பைப் பற்றிக்குறிப்பிடவில்லை. நன்றி ஆனந்த்!

    ReplyDelete
  37. ////////Blogger ananth said...
    2,7ம் இடத்ததிபதிகள் மாரகம் செய்வதில் முதன்மையானவர்கள். அடுத்து 3,8ம் அதிபதிகள். இந்த இடத்தாதிபதிகளுடன் சேர்ந்தவர்கள் அல்லது இந்த இடங்களில் இருப்பவர்களுக்கும் மாரகம் செய்வதில் பங்கு இருக்கிறது.//////

    உண்மைதான். நன்றி ஆனந்த்

    ReplyDelete
  38. Blogger Arul Murugan. S said...
    /// குரு - 7 பரல்கள் . கடக லக்கினத்திற்கு யோககாரகனான செவ்வாய், தனகாரகன் குருவுடன் சேர்ந்து இரண்டாம் வீட்டை தன் பார்வையால் மேன்மைப் படுத்தி ராகு திசையில் ஜாதகிக்குக் கிடைக்காத பணத்தை குரு திசையில் வாரி வழங்க உதவினான்.
    இந்த ஜாதகத்தின் ஐந்தாம் வீட்டு அதிபதியான செவ்வாயும், புத்திரகாரகனான (Authority for Children) குருவும் ஒன்றாக எட்டில் போய் அமர்ந்து விட்டார்கள். இரண்டு முறை கருவில் உருவான குழந்தைகள் கருவிலேயே சிதைந்துவிட்டன. ///
    ஒரே கிரக அமைப்பு / சேர்க்கை நன்மையை வாரி வழங்குவதையும் அதுவே கேடு /பீடைக்கும் சமயங்களில் வழிவகுப்பதையும் சுட்டிக்காட்டி உணர்த்திய மேன்மைக்கு நன்றி.//////

    ஆமாம். கிரகங்கள் இரண்டையுமே செய்யக்கூடியவை. நன்றி அருள்முருகன்!

    ReplyDelete
  39. /////Blogger vprasanakumar said...
    மிக அருமையான அலசல்////

    நல்லது. உங்களின் பாராட்டிற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  40. ////Blogger RAJ said...
    ஆசிரியர் எமது தவறுகளை திருத்த வேண்டுகிறேன்.
    லக்னாதிபதி நின்ற வீட்டோன் உச்சம் பெற்றது சிறப்பு.
    கடக லக்னத்திற்கு யோககாரர்களான குருவும் செவ்வாயும் (தர்ம கர்மாதிபதிகள் ) இணைந்து 8-இல் மறைந்தாலும், அவ்வீட்டுக்கு அதிபதியான சனி உச்சம் பெற்றதால் சிறப்பான பலனை கொடுத்தார்கள்.
    நான்காமாதிபதி சுக்கிரன் தன் வீட்டை பார்ப்பது சிறப்பு.//////

    பின்னூட்டத்தில் வரிகளுக்கு நடுவில் எதற்கு அத்தனை இடைவெளி?
    1. கரெக்ட்
    2. கடக லக்கினத்திற்கு யோககாரகன் ஒருவன்தான். அவன் செவ்வாய்
    3. சரிதான்!

    ReplyDelete
  41. /// தொழில் ஸ்தானத்தில் சுக்கிரன். சுக்கிரன் இருந்தால் கலைத்தொழில். அத்துடன் கர்மகாரகன் சனியின் நேரடிப்பார்வையில் - அதுவும் உச்சம் பெற்ற சனியின் நேரடிப் பார்வையில் பத்தாம் இடம் உள்ளது ///

    மேலும் லக்னத்திற்கு மட்டுமல்லாது ராசிக்கும் சனி கேந்திரம் பெறுவது(அதுவும் கேந்திர ஸ்தானங்களின் சிகரமான தசம கேந்திரத்தில்),மற்றும் அந்த வீட்டு அதிபதி சுக்கிரன் கேந்திரத்தில் அமர்ந்து வீட்டை பார்வை செய்வது, due to these reasons I think her horoscope may be cited as an example of one among the strongest & best fortified Sasa Yoga.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com