மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

10.10.11

Astrology ஆப்பிளின் ஜாதகம்!

------------------------------------------------------------------------------------
Astrology ஆப்பிளின் ஜாதகம்!

ஆப்பிளுக்கு ஏதைய்யா ஜாதகம் என்று கேட்பவர்கள் எல்லாம் பதிவை விட்டு விலகவும். மற்றவர்கள் மேலே தொடரவும்!

ஆப்பிள் என்றால் கிலோ நூறு ரூபாய்க்கு - அதுவும் உடலுக்குக் கேடான வாக்ஸில் முக்கி எடுத்துக் காய வைத்துப் பிறகு விற்கிறானே - அந்த ஆப்பிள் அல்ல! An apple a day..keeps the doctor away...Lala lal laa..Lala lal laa" என்று பாடிக்கொண்டே நீங்கள் கடித்துத் தின்னும் ஆப்பிள் அல்ல!

இது வித்தியாசமான ஆப்பிள். உலகையே கலக்கிய ஆப்பிள். ஆமாம். கணினி உலகத்தில், அலைபேசி உலகத்தில், இசை உலகத்தில் (IPod) பல புரட்சிகளைச் செய்த ஆப்பிள். ஆப்பிள் என்ற ஒற்றைச் சொல்லில் அனைவராலும் அறியப்படும் ஆப்பிள். ஆப்பிள் கம்ப்யூட்டர் நிறுவனத்தின் நிர்வாக மேலாளராக  இருந்து சமீபத்தில் புத்தபகவானின் திருவடியை அடைந்த திருவாளர் ஸ்டீவ் ஜாப்ஸ் அவர்களைத்தான் நான் ஆப்பிள் என்று செல்லமாகக் குறிப்பிடுகிறேன்.

அவர் ஏன் கைலாசம், வைகுண்டம் அல்லது பரமபிதாவின் திருவடிகளுக்குச் செல்லாமல் புத்தபகவானின் திருவடிக்குச் செல்ல வேண்டும் என்று சந்தேகம் எழுபவர்கள் எல்லாம், அவரது முழு வரலாற்றையும் படிக்கும்படி கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள். இணையத்தில் ஏராளமான பக்கங்களில் இன்றும் அவர் வாழ்கிறார். இறந்த பிறகும் கதைகள், செய்திகள், பாராட்டுக்கள் வடிவாக வாழ்கிறார். என்றும், வாழ்வார்!!!

அவருடைய ஜாதகத்தை இன்று அலசுவோம்.

எதற்காக அதை அலச வேண்டும்?

நம் வகுப்பறைக் கண்மணி ஒருவர் நியூஜெர்சியில் இருந்து அதை அலசித் தரும்படி வேண்டுகோள் விடுத்திருந்தார். அது ஏற்கப்பட்டு, அவருக்காக அலசப்படுகிறது. இந்தப் பதிவு அந்த நியூஜெர்சி கண்மணிக்கு சமர்ப்பணம்!



++++++++++++++++++++++++++++++++++++++
தெரிந்த மொழியில் ஒரு திரைப்படத்தைப் பார்ப்பதற்கும், தெரியாத மொழியில் ஒரு திரை படத்தைப் பார்ப்பதற்கும் பல வேறுபாடுகள் உள்ளன.
முழி பிதுங்கிவிடும்.

அதுபோல அனைவருக்கும் தெரிந்த ஒருவரின் ஜாதகத்தை அலசுவது சுலபம். படிப்பவர்களுக்கும் எளிதாகக் காரணகாரியங்கள் புரியும். அதுபோல் புதிதாக ஒருவரின் ஜாதகத்தை அலசும்போது அவரைப் பற்றிய குறிப்புக்களைக் கொடுத்துவிட்டால், படிப்பதற்கு ஏதுவாக இருக்கும். பாடமும் விளங்கும்.
180 டிகிரி சாய்மானத்தில் மண்டையில் ஏறும்.

ஸ்டீவ் ஜாப்ஸைப் பற்றி ஒன்றும் தெரியாதவர்கள், அவருடைய வாழ்க்கைக் குறிப்பை முதலில் படித்து விட்டுப் பிறகு இங்கே அலசலுக்கு வாருங்கள். அதுதான் படிக்கும் உங்களுக்கும் நல்லது. எழுதும் எனக்கும் நல்லது.
அதற்கான சுட்டி (URL) இங்கே உள்ளது!
  --------------------------------------------------------------------
Over to his horoscope
-------------------------------------------------------------------- 



கிரகங்களின் சுயவர்க்கப் பரல்கள் கட்டம் கட்டிக் காட்டுள்ளேன்
- உங்கள் செள்கரியத்திற்காக
அத்துடன் சர்வாஷ்டகவர்க்கத்தில் 30 பரல்களுக்கு மேல் பெற்றுள்ள வீடுகளையும் கட்டம் கட்டிக் காட்டியுள்ளேன்!

நவாம்சத்தில் சுக்கிரனும், குருவும் வர்கோத்தமம் பெற்றுள்ளன. 
அதாவது இராசி மற்றும் அம்சத்தில் ஒரே இடத்தில் உள்ளன. 
அதை சிகப்புக் கட்டக் கட்டி சுட்டிக்காட்டியுள்ளேன். 
சந்திரன் நீசம் பெற்றுள்ளதையும் வட்டமிட்டுக் காட்டியுள்ளேன்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
பெயர்: ஸ்டீவ் ஜாப்ஸ்
பிறந்த தேதி: 24.02.1955
பிறந்த நேரம்: மாலை 7:15 மணி
பிறந்த இடம்: சான்பிரான்சிஸ்கோ, யு.எஸ்.ஏ
லக்கினம்: சிம்ம லக்கினம்
நட்சத்திரம்: உத்திரட்டாதி (மீன ராசி)
கர்ப்பச்செல் இருப்பு: சனிதிசையில் 3 ஆண்டுகளும் 20 நாட்களும்

ஜாதகத்தின் சிறப்பு அம்சங்கள்:

கர்மகாரகன் சனீஷ்வரன் உச்சம்.
வளர்பிறைச் சந்திரன்.
புதன் தனித்து நிற்பதால் சுபபலம்.
சுபகிரகமான குரு பதினொன்றில்
சுப கிரகமான சுக்கிரன் திரிகோணம் பெற்றுள்ளார்
எந்த கிரகமும் அஸ்தமனம் ஆகவில்லை
எந்த கிரகமும் மற்றொரு கிரகத்துடன் கிரகயுத்ததில் இல்லை

ஜாதகத்தில் உள்ள யோகங்கள்:

1. சுனபா யோகம்
2. கஜகேசரி யோகம்
3. வசுமதி யோகம்
4. அமலா யோகம்

கிரகங்களின் சுயவர்க்கப்பரல்கள்:
புதன் - 8 பரல்கள்
சந்திரன் - 5 பரல்கள்
சுக்கிரன் - 5 பரல்கள்
சனி - 4 பரல்கள்
செவ்வாய் - 4 பரல்கள்
சூரியன் - 3 பரல்கள்
குரு - 3 பரல்கள்

முதல் 3 கிரகங்கள் நல்ல பரல்களுடன் இருக்கின்றன. மற்ற கிரகங்கள் by placement அதை ஈடு கட்டிவிட்டன. சனி (உச்ச வீடு) செவ்வாய் (திரிகோண வீடு) சூரியன் (கேந்திர வீடு) குரு லாபஸ்தானத்தில். ஆக மொத்தம் எல்லாக் கிரகங்களுமே வலுவாக உள்ளன!

உத்திரட்டாதி நட்சத்திரத்தின் சிறப்பு: மனமறிந்து பேசும் திறமை. விஞ்ஞானம் மற்றும் தொழில் நுட்பங்களில் ஆர்வம்!
-----------------------------------------------------------------
சரி இப்போது அலசுவோம்:

1. ஜாதகர் சிம்ம லக்கினக்காரர். சிம்ம லக்கினக்காரர்கள் அனைவருமே ஒரு விதத்தில் நாயகர்கள்தான் (ஹீரோக்கள்) உதாரணத்திற்கு நம் ரஜினி மற்றும் கமல் இருவருமே சிம்ம லக்கினக்காரர்கள். சினிமாக்காரர்களைச் சொன்னால் தான் நமக்கு (என்னையும் சேர்த்துத்தான்) எளிதில் விளங்கும் அரச கிரகமான சூரியனின் சொந்த வீடு சிம்மம். அதனால்தான் அதற்கு சிங்கத்தை அடையாளமாகக் கொடுத்தார்கள். சிங்கம் எப்போதுமே ஹீரோதானே சாமிகளா?

2. சிம்ம லக்கினம் மட்டும் அல்லாமல் அதன் அதிபதி கேந்திரத்தில் அமர்ந்து லக்கினத்தைத் தன் நேரடிப்பார்வையில் வைத்திருப்பது மிகவும் சிறப்பிற்குரியது - உங்கள் வீட்டிற்கு எதிரில் நீங்கள் பெஞ்சைப் போட்டு அமர்ந்திருப்பதைப் போல!!! எவனாவது அத்துமீறி நுழைய முடியுமா?

சிம்ம லக்கினக்காரர்களுக்கு, எந்த சூழ்நிலையையும் தங்கள் கட்டுப்பாடுக்குள் கொண்டுவரும் அல்லது வைத்திருக்கும் சாமர்த்தியம் இயற்கையாகவே உள்ளவர்கள். நம்பிக்கைக்கு உரியவர்கள். தாக்குப் பிடிக்கும் சக்தி உள்ளவர்கள். வாய்ப்புக்களைத்தேடி அவர்கள் செல்லமாட்டார்கள். வாய்ப்புக்கள் அவர்களைத் தேடி வரும்.

3. புத்தி மற்றும் வித்தைகளுக்கு உரிய நாதன் புதன், தன் சுயவர்க்கத்தில் அவர் 8 பரல்களுடன் இருப்பதைக் கவனியுங்கள். சுயவர்கத்தில் ஒரு கிரகத்தின் அதிகபட்சப் பரல்கள் 8 மட்டுமே. இங்கே அவர் எட்டுப் பரல்களுடன் இருப்பதால், ஜாதகருக்கு அதீதமான புத்திசாலித்தனத்தை வழங்கினார். அந்த அதீத புத்திசாலித்தனம்தான் அவருடைய பல கண்டுபிடுப்புக்களுக்கு ஆதாரமாக, உதவியாக இருந்திருக்கிறது.

  கேந்திரம் மற்றும் திரிகோணங்கள் குறியிட்டுக் காட்டப் பெற்றுள்ளது

4. எல்லோருக்கும் பரல்கள் 337தான். எல்லோரையும் போல ஸ்டீவ் ஜாப்ஸிற்குக் கிடைத்ததும் 337 தான். அமெரிக்கர் என்பதற்காக அவருக்குக் கூடுதலாகக் கிடைக்குமா என்ன?

அவருடைய ஜாதகத்தில் தீய இடங்களான 3, 6, 8 & 12 ஆம் இடங்களின் பரல்களைக் கூட்டுங்கள்.

3ல் -  31
6ல் -  35
8ல் -  24
12ல் - 19
------------------
     109

இந்த 4 இடங்களுக்கும் சேர்ந்து 112 ஐத் தாண்டக்கூடாது  (337 வகுத்தல் 3 = 112) ஆனால் எத்தனை இருக்கிறது பார்த்தீர்களா? குறைவாகத்தான் இருக்கிறது. அதனால் கிடைத்த அந்த 337ல் சராசரிக்கும் குறைவாகத்தான் தீமைகள் உள்ளன.

சரி கேந்திர, கோணங்களைக் கூட்டுங்கள்
1ல் -  30
5ல் -  27
9ல் -  28
4ல் -  32
7ல் -  22
10ல் - 37
-------------------
      176

இந்த ஆறு இடங்களுக்கும் சேர்ந்து இருக்க வேண்டியது 168 (337 வகுத்தல் 2 = 168) ஆனால் 8 பரல்கள் அதிகமாக இருக்கிறது. அதாவது ஜாதகத்தில் தீமைகள் குறைந்து நன்மைகள் அதிகமாக இருந்திருக்கின்றன

5. தொழில் ஸ்தானத்தில் (பத்தாம் வீட்டில்) 37 பரல்கள். அந்த வீட்டு அதிபதி சுக்கிரன் திரிகோணத்தில் (லக்கினத்தில் இருந்து) ஐந்தாம் வீட்டில். அதுவும் தன்னுடைய சுயவர்க்கத்தில் 5 பரல்களுடன் வலுவாக உள்ளார். இந்தப்படை போதுமா? இன்னும் கொஞ்சம் வேண்டுமா என்று கேட்பதைப்போல தொழில்காரகன் (authority for work) சனீஷ்வரன் உச்சம் பெற்றுள்ளான். கேட்க வேண்டுமா? எல்லாம் கூடி விட்டது. மனிதர் சாதித்துக் காட்டியிருக்கிறார்! தான் நுழைந்த துறையில் அடித்து நொறுக்கி அனைத்தையும் மாற்றிக் காட்டியிருக்கிறார்.

“எங்கிட்ட மோதாதே நான் வீராதி வீரனடா” என்று பாட்டுப் பாடும் அளவிற்கு சாதனைகளை அரங்கேற்றி இருக்கிறார்.

துவக்கத்தில் ஒரு கார் ஷெட்டில் வைத்துத் தன் தொழிலைத் துவங்கியவர், அசுர வளர்ச்சி பெற்று, அமெரிக்காவின் 42வது பணக்காரர் என்ற அந்தஸ்தைப் பெற்றிருந்திருக்கிறார்

1984--முதல் மக்கிண்டாஷ் அறிமுகம்
2001- ஐ-பாட் அறிமுகம்
2007 ஐ ஃபோன் அறிமுகம்
2010 ஐ பேட்(i pad) அறிமுகம்.

6. சிம்ம லக்கினத்திற்கு யோககாரகனான செவ்வாய், திரிகோணம் பெற்றதுடன், திரிகோணங்களில் உயர்ந்த இடமான ஒன்பதாம் வீட்டில் அமர்ந்து, இவருக்குப் பல யோகங்களைக் கொடுத்துள்ளான். அவற்றுள் முக்கியமானது எடுத்த காரியங்களில் வெற்றி. செவ்வாய் ஆற்றலுக்கு உரிய கிரகம் அதை மறந்து விடாதீர்கள்.

7. பணத்திற்கு உரிய இடமான 2ஆம் வீடு மற்றும் 11ஆம் வீடு (அண்டா & பைப் உதாரணம் சொல்வேனே அதை ஞாபகப் படுத்தில்லொள்ளுங்கள்) ஆகிய இரு வீடுகளுக்கும் அதிபதியான புதன் 8 பரல்களுடன் செமை ஸ்ட்ராங்காக இருந்ததனால், ஜாதகருக்குப் பெரும் பண வரவை உண்டாக்கி, அமெரிக்காவின் Top 50க்குள் ஒருவராக்கினான்.

8., கல்வி ஸ்தானமான நான்காம் வீடு பாபகர்த்தாரி யோகத்தில். ஒரு பக்கம் சனி, மறுபக்கம் ராகுவும் மாந்தியும்.  புதன் நன்றாக இருந்ததால் பட்டப்படிப்பு வரைக்கும் சென்றவர், இந்த பாபகர்த்தாரி யோகத்தினால் படிப்பை முடித்து பட்டம் வாங்க முடியவில்லை. drop out ஆனார்

9. தாய்க்கு காரணமான சந்திரன் அமசத்தில் நீசமடைந்தான். அத்துடன் தாய்க்குரிய நான்காம் வீடு பாபகர்த்தாரி யோகத்தில் மாட்டிக்கொண்டுள்ளது. நல்ல தாய் கிடைக்கவில்லை. மணமாகாத கல்லூரி மாணவிக்குப் பிறந்த ஜாதகரை, பெற்றதாய் பெற்றவுடன் வேறு ஒரு தம்பதியருக்குக் குழந்தையை சுவீகாரம் கொடுத்துவிட்டுப் போய்விட்டாள்.

10. ஏழாம் வீட்டில் 22 பரல்கள் மட்டுமே. அது மனைவிக்கு உரிய இடம். அங்கே பரல்கள் குறைந்தாலும், அதன் அதிபதி சனி உச்சம் பெற்றதால் இவருக்கு இல்லறம் நடத்த ஒரு பெண்ணைப் பிடித்துக்கொடுத்தான்..

11. அதுபோல குடும்பஸ்தானத்தில் 24 பரல்கள் அதுவும் சொல்லிக் கொள்கிறாற்போல இல்லை. அந்த வீட்டு அதிபதி அதிக பட்ச பரல்களுடன் இருந்ததால் குடும்ப வாழ்க்கையை உண்டாக்கிக் கொடுத்தான்.

12. ஐந்தாம் வீட்டு அதிபனும், புத்திரகாரனுமாகிய குரு 28 பரல்கள் உள்ள இடத்தில் வலுவாக அமர்ந்ததோடு, ஐந்தாம் வீட்டையும் பார்வையில் வைத்திருந்ததால் ஜாதகருக்குக் குழந்தைச் செல்வங்களைக் கொடுத்தான்.

13. ஆறாம் வீடு பாபகர்த்தாரி யோகச் சிக்கலில். ராகுவிற்கும் சூரியனுக்கும் மத்தியில். அதனால் கடுமையான நோய் உண்டானது.

14. எட்டாம் வீடும் பாபகர்த்தாரி யோகச் சிக்கலில். சூரியனுக்கும், செவ்வாய்க்கும் மத்தியில். அதனால் பூரண ஆயுள் கிடைக்கவில்லை. 56 வயதில் மரணமடைந்தார்

15. தசா புத்திகள் எப்படி விளையாடியுள்ளன என்பதைப் பார்ப்போம். தசா புத்திகள்தான் உரிய பலன்களை உரிய நேரத்தில் தரக்கூடியவை. அதை மனதில் கொள்க!

பிறந்த தேதி : 24.2.1955 + சனி மகாதிசை இருப்பு 3 ஆண்டுகள் 20 நாட்கள் + புதன் மகா திசை 17 ஆண்டுகள் ஆக அவருடைய இருபதாவது வயதில் கேது பகவான் வந்து அவர் தோளில் ஏறி அமர்ந்து, கழுத்தைக் கட்டிப்பிடித்துக் கொண்டு மனிதரை ஏழு ஆண்டுகள் சிரமப் படுத்தியிருக்கிறான். அவர் ஒரு வேளைச் சாப்பாட்டிற்காக ஹரே ராமா ஹரே கிருஷ்ணா மண்டபத்தில் காத்துக்கிடந்து சாப்பிட்டதெல்லாம் இக்காலம்தான். கல்லூரிப் படிப்பை முடிக்க விடாமல் செய்ததும் அதே கேது திசைதான்.

அதற்குப் பிறகு சுக்கிர மகாதிசை. வர வேண்டிய நேரத்தில் சுக்கிர மகா திசை வந்து சேர்ந்தது. சுக்கிர மகா திசை இந்த வயதில்தான் வர வேண்டும். பல் முளைத்த காலத்தில் அல்லது பல் கொட்டிப்போன காலத்தில் வந்து என்ன சாமி பயன்? அனுஷ்கா சர்மாவைப் போன்ற அழகான பெண்ணை எந்த வயதில் திருமணம் செய்து கொள்ள வேண்டும்? அறுபத்தைந்து வயதில் இடுப்பு வலி, முட்டி வலி என்று பலவிதமான வலிகள் வந்து படுத்தி எடுக்கும் காலத்தில் திருமணம் செய்து கோள்வது உசிதமா? தகுமா? அடுக்குமா? எழுந்து சென்று ஒரு முளம் மல்லிகைப்பூவைக்கூட  வாங்கிக் கொடுக்க முடியாத காலத்தில் அனுஷ்கா சர்மாவாவது? ஷ்ரேயா ரெட்டியாவது? ஆளைவிட்டால் போதுமென்று இருக்காதா? அது போல சுக்கிரதிசை நடு வயதில்தான் வரவேண்டும். அப்போதுதான் அது அள்ளிக்கொடுப்பதையெல்லாம் அனு அனுவாக இரசிக்க முடியும்!

சுக்கிர மகா திசை 20 ஆண்டு காலம். அதுவும் ஜாதகத்தில் சிறப்பாக உள்ள, பத்தாம் வீட்டு அதிபதியின் காலம். ஒரு ஆண்டு இரண்டு ஆண்டுகள் அல்ல - மொத்தம் 20 ஆண்டுகள். 27 வயது முதல், 47 வயதுவரை, சுக்கிரன் அருகிருந்து அனைக்க, உம்மா கொடுக்க, ஜாதகர் பல வெற்றி வாகைகளைச் சூடினார்.
பல கண்டு பிடிப்புக்களை உலகமே வியக்கத்தந்து, தானும் தன் தொழிலில் சிகரத்தை சர்வ சாதாரணமாக எட்டிப் பிடித்தார்.

நடுவில் இரண்டொரு இறக்கங்கள் இருந்தன. தான் துவங்கிய நிறுவனத்தை விட்டு வெளியேறியது. புதிய நிறுவனத்தை ஆரம்பித்தது. மீண்டும் தான் ஆரம்பித்த நிறுவனத்திற்கே திரும்பி வந்து அதைத் தூக்கி நிறுத்தியது போன்ற நிகழ்வுகள். அதற்கெல்லாம் காரணம் என்ன என்று கடைசி பெஞ்ச் கண்மணி பின்னூட்டத்தில் கேட்கக்கூடும். அதற்கான காரணத்தை இங்கேயே சொல்லி விடுகிறேன். அதற்கெல்லாம் காரணம் நடுவில் வந்து சென்ற வேண்டாத மற்ற கிரகங்களின் புத்திகள் (Sub periods of malefic lords)

5.03.1982ல் ஆரம்பித்த சுக்கிர மகாதிசை 15.3.2002ல் முடிவிற்கு வந்தது. அதற்குப் பிறகு 6ஆண்டுகள் சூரியதிசை. சூரிய மகாதிசையில் சனி புத்தி நடைபெற்ற காலம் 19.01.2005 முதல் 1.01.2006 வரை. அந்த காலத்தில்தான் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. கணயத்தில் புற்று நோய் உண்டானது. சனி ஆறாம் இடத்திற்கும் அதிபதி அதை மனதில் கொள்க! ஜாதகத்தில் சூரியன் பலமாக உள்ளதால் தாக்குப் பிடித்தார். அது முடிந்து அடுத்தது சந்திரதிசை துவங்கியது. எட்டாம் இடத்தில் அமர்ந்திருப்பவனின் திசை. அவன் விரையத்துக்குச் சொந்தக்காரன். அத்துடன் அம்சத்தில் நீசம் பெற்று செல்லாக் காசாகி விட்டவன். அவனுடைய திசையில் எட்டாம் இடத்து அதிபதி குருவின் புத்தியில், 5.10.2011 அன்று அந்த மேதை கதை முடிந்து விட்டது. ராசிக்கு ஏழில் தற்சமயம் இருக்கும் கோள்சாரச் சனியின் பங்கு அதில் முக்கியமானது. அத்துடன் குருவுடன் இருக்கும் கேதுவின் சேர்க்கையும் முக்கியமானது.

அலசலில் ஏதாவது விடுபட்டிருந்தால், வகுப்பறையின் மூத்த மாணவர்களான திருவாளர்கள் KMRK யும், திருவாளர் மலேசிய ஆனந்த் அவர்களும் வந்து சொல்வார்கள்.

இன்னும் அலசினால் என் கை வலிக்கும், உங்களுக்கும் போரடிக்கும். ஆகவே இத்துடன் நிறைவு செய்கிறேன்

அன்புடன்
வாத்தியார்
-------------------------------------------------------------------------------------
வாழ்க வளமுடன்!

115 comments:

  1. அருமையான அலசல்,

    தகவல்களைத் தந்த அன்பர் ஆண்டனி அவர்களுக்கு ஒரு வணக்கம்.. "அண்ணா வணக்கம்ணா"
    எனது பங்கிற்கு அலசலில் ஒரு கும்மு.....
    குருவும் கேதுவும் சேர்க்கையின் காரணமாக (ஐந்திற்குரியவனும், எட்டிற்கு உரியவனும் மான குரு ஏழாம் பார்வையில் அந்த வீட்டையும் வைத்திருக்கிறான்).
    கூரிய புத்தி (அறிவோடு) ஞானம் (ஆன்மீக) சேர்க்கை தான் அவரின் ஆசாரம தரிஷனம் எல்லாம்.
    அலசல் அருமை சார்.

    நன்றி.
    ஆலாசியம் கோ.

    ReplyDelete
  2. 12ம் அதிபதியின் தசாவில் இறந்த மூன்றாவது ஜாதகத்தையும் பார்த்து விட்டேன். மாரகம் செய்வதில் 2,7 அதிபதிகள் முதன்மையானவர்கள், அடுத்து 3,8ம் அதிபதிகள். இவர்கள் தசையில் தப்பித்தாலோ அல்லது வராமல் போனாலோ 12ம் அதிபதியின் தசையில் நிச்சயம் மரணம் ஏற்படும் என்று தாண்டவமாலை என்னும் புராதன ஜோதிட நூல் சொல்கிறது.

    ReplyDelete
  3. சுக்கிரனும் ராகுவும் சேர்ந்து அவருக்கு பொழுதுபோக்குத்துறையிலும் (pixar animation, Walt Disney etc) , வலுவான புதன் அதையே கணினித் துறையிலுமாக சோபிக்க வைத்தார்கள் (the aesthetic appeal of his products is to be noted). நிறைய ஏற்ற இறக்கங்கள் வந்தது கிரக அமைப்புகளினால் (வரிசையாக அமர்ந்திருப்பதைக் கவனிக்கலாம். They are in 2/12 positions, which is not good during their respective dasa-bhukti). உச்ச சனியும் ஆட்சியிலுள்ள செவ்வாயும் வாழ்க்கையில் முக்கியமானவை என்றாலும், இருவரும் ஒன்றை ஒன்று நேருக்கு நேர் பார்ப்பதும் மேலும் நவாம்சத்தில் சனியுடன் ராகு சேர்ந்திருப்பதும் , குருவும் புதனும் அஷ்டம சஷ்டமர்களாய் இருப்பதுவும் கவனிக்கப் படவேண்டியது ... இவை எல்லாம் வாதிதியார் பாடங்களைத் திரும்பத் திரும்ப படிப்பதால் மனதில் படும் அம்சங்களாகும் - நன்றிகள் பல வாத்தியாருக்கும் வகுப்புக் கண்மணிகளுக்கும்.

    ReplyDelete
  4. இன்றைய பாடம் மிகவும் சிறப்பானது மற்றும் பாதுகாக்கப்படவேண்டிய ஒன்று. கல்லூரியிலிருந்து படிப்பை பாதியில் உதறி, வெற்றியின் சிகரங்களை தன் அதீத புத்திசாலித்தனத்தின் மூலமும், அயராத உழைப்பின் மூலமும் அடைந்த ஒரு மேதையின் வாழ்க்கை நிகழ்வுகளை ஜோதிட அறிவியலின் மூலம் அனைவரும் புரிந்து கொள்ளும் அளவுக்கு அலசியது மிகவும் அருமை.

    ReplyDelete
  5. வாத்தியாரே.. சும்மா
    வெளுத்து கட்டிட்டீங்க... ; வாத்தியார்

    விளக்கும் விதம் எங்களுக்கு கிடைத்த
    வெகுமதி.. வெகு 'மதி'..

    தாராளமாக மிகு மதி என சொல்லலாமா
    தமிழ்விரும்பி கருத்துச் சொல்லட்டும்

    காட்டுதேனில்
    கனிந்த பளாச்சுளையினை ஊறவைத்து

    அது பழசு
    அதனால் இப்படி சொல்கிறோம்..

    தங்க கீரிடத்தில்..
    தங்கும் படி பதித்த வைரக்கல்லும்

    என எதார்த்தமாக அமைந்த பாடமும்
    எடுத்துத் தந்த தோழமை நிறைந்த

    நியூ ஜெர்சியை சேர்ந்த
    நிஜத்திற்கும் நன்றிகள் பாராட்டுக்கள்..

    apple a day என்ற சொல்லடையே
    a pill a day = apple a day என இருக்கும்..

    கரை வேட்டிகள் எல்லாம்
    கறையேற துடிக்கும் இந்நாளில்..

    இப்படி ஒரு அருமையான சிந்தனைக்கு
    இன்னமும் நன்றி சொல்லியபடியே.

    இன்றைய வகுப்பிற்கு வரும் அறிஞரை
    இன்முகத்துடன் வரவேற்போம்..


    "ஒரு செயலை ஒரு சொல்லில் மாற்றுவதை விட, ஒரு சொல்லை ஒரு செயலில் மாற்றுவது மிகக்கடினமானது என்பது ஒவ்வொருவருக்கும் தெரியும்"
    -மாக்ஸிம் கார்க்கி.

    ReplyDelete
  6. ஐயா, பதிவின் தலைப்பை பார்த்தவுடன் நான் ஆப்பிள் நிறுவனத்தின் ஜாதகத்தை அலசப் போவதாக நினைத்தேன் (as per details found on the Internet it was established in Cupertino, California on April 1, 1976 and incorporated January 3, 1977, the company was called Apple Computer, Inc. for its first 30 years, but dropped the word "Computer" on January 9, 2007 to reflect the company's ongoing expansion into the consumer electronics market in addition to its traditional focus on personal computers). அந்த அலசல் கட்சிகள், நாட்டின் ஜாதகங்களை அலசுவது போல் இருக்கும் எனவும் நினைத்தேன். ஆனால் நீங்கள் ஸ்டீவ் ஜாப்சும் ஆப்பிளும் வேறல்ல என்று கருத்தினை வலியுறுத்தி உள்ளீர்கள்.

    வழக்கமான எளிய நடையில் அருமையான ஜாதக அலசல் நன்றி. வந்தால் ஸ்டீவ் ஜாப்சுக்கு வரும் சுக்கிரதசை போல் வர வேண்டும் என்பதை ஒத்துக் கொள்கிறேன். வாழ்வில் சுக்கிர திசையே வராமல் அடுத்த தசைகளின் காலங்களில் துண்டு துண்டாக வரும் சுக்கிர புக்திப் பலன்கள் எதையும் உருசேர விடாமல் அடுத்த பாதகமான புக்தியில் காணாது போய் விடுகிறது...தொடர்ந்து பெய்யும் கொட்டும் மழைக்கும், காய்ந்த மண்ணில் விழும் தூறலுக்கும் உள்ள வித்தியாசம் போல.

    ///கிரகங்களின் சுயவர்க்கப் பரல்கள் கட்டம் கட்டிக் காட்டுள்ளேன் - உங்கள் செள்கரியத்திற்காக அத்துடன் சர்வாஷ்டகவர்க்கத்தில் 30 பரல்களுக்கு மேல் பெற்றுள்ள வீடுகளையும் கட்டம் கட்டிக் காட்டியுள்ளேன்!///
    நான் காணும் வழி கற்கும் (visual learner) வகையை சேர்ந்த மாணவி என்பதால் இந்த படங்கள் மிகவும் உதவியாக இருந்தன, நன்றி. அத்துடன் ஆண்டனி சான்ட்டியாகோவிற்கும் நன்றி.

    ReplyDelete
  7. நல்ல அலசல்..என்ன 'பிராண்ட் சோப்பு' ன்னு சொல்லவே இல்லியே?

    ReplyDelete
  8. ////iyer said...
    வாத்தியாரே.. சும்மா
    வெளுத்து கட்டிட்டீங்க... ; வாத்தியார்

    விளக்கும் விதம் எங்களுக்கு கிடைத்த
    வெகுமதி.. வெகு 'மதி'..

    தாராளமாக மிகு மதி என சொல்லலாமா
    தமிழ்விரும்பி கருத்துச் சொல்லட்டும்

    காட்டுதேனில்
    கனிந்த பளாச்சுளையினை ஊறவைத்து

    அது பழசு
    அதனால் இப்படி சொல்கிறோம்..

    தங்க கீரிடத்தில்..
    தங்கும் படி பதித்த வைரக்கல்லும்///

    ஓ! தாராளமாக சொல்லலாமே!!

    இன்னும் தெளிவாய் சொன்னால்
    கடல் பொங்கி,
    காட்டாறுபோல் ஓடி
    புயல் போல்வீசி
    புலிப் போல் பாய்ந்து
    பூகம்ப அலைபோல்
    உயர்ந்து.....

    வகுப்பறை
    நடுவே வீசம்படும்
    கேள்விக் கணைகள்
    யாவையும்.....

    நடுக்கடல் போலும்,
    அணைவடி வெள்ளம் போலும்
    புனல் வீசும் தென்றல் போலும்

    தெளிவானப் பார்வையால்
    புலிகளையும் பூனையாக்கி (வேகத்தில்)
    பூகம்ப அலைகளை
    புதுப் புனல் நீரலைகளாக்கியே....

    வேடிக்கையும், விவேகமும்,
    விறுவிறுப்பும், வியப்பும்,
    இன்னும் பல அற்புத உணர்வு கலந்து
    அழகாய் பாடம் நடத்தும்
    வாத்தியார் அவர் அனுபவத்தால்..
    நிறைமதி உடையவரே!

    என்றே நானும் உரைப்பேன்
    மாணாக்கர் யாவரும் உரைப்பார்.

    நன்றிகள் ஐயா!

    அன்புடன்,
    ஆலாசியம் கோ.

    ReplyDelete
  9. Sir,

    Analysis of steve jobs chart is really informative.I have one doubt you said there is no asthamanam in his chart. But marcury is in 6th position and moon is in 8th position?
    May i now the reason?

    Thank you

    ReplyDelete
  10. அய்யா வணக்கம்
    இன்றைய பாடம் மிகவும் அருமை. ஜாதகத்தை எப்படி அலசுவது என்று தங்களது விளக்கங்கள் மிகவும் அருமை.
    நன்றி.

    ReplyDelete
  11. லக்கினாதிபதிக்கு குருவின் ஒன்பதாம் பார்வை படுவதும் கவனிக்கப்படவேண்டியதொன்று..(குரு ஐந்தாமாதியல்லாமல் எட்டாமாதியும்)
    1 .புதன் மறைவு ஸ்தானத்தில் இருந்தாலும் 35 பரல் சுயவர்க்கம் 8 என்கிற ரீதியில் 2 ,11 இடங்களுக்குரிய பலனைத் தந்தார் என்று பொருள்கொள்ளலாமா?
    ஆக மறைவு ஸ்தானத்தில் இருந்தாலும் ஒரு கிரகம் வலுவாக இருந்தால் பலன்தரும் என்பதில் மறைவு விதி அடிபட்டுப் போகிறது..
    2 .பத்தாமிடத்துக்கு 37 பரல் இருந்து லாப ஸ்தானத்துக்கு இதை விட 9 பரல் குறைவாக 28 தான் இருப்பது இவ்வளவு லாபம் பெற
    எப்படி காரணமாக அமைந்தது என்பது புரியவில்லை..
    ஆக லாபம் பெற 10 ஐ விட 11 நின் பரல் அதிகமாக இருக்கவேண்டும் என்ற விதி அடிபட்டுப் போகிறது..
    3 . /////// ஐந்தாம் வீட்டு அதிபனும், புத்திரகாரனுமாகிய குரு 28 பரல்கள் உள்ள இடத்தில் வலுவாக அமர்ந்ததோடு, ஐந்தாம் வீட்டையும் பார்வையில் வைத்திருந்ததால் ஜாதகருக்குக் குழந்தைச் செல்வங்களைக் கொடுத்தான்.//////
    அங்கே ராகுவும் மாந்தியும் இருந்தாலுமே இந்த அமைப்பு அவருக்கு அதை விட பலமான அமைப்பாக இருந்து சாதகமான பலன்தந்தது என ஆகிறது..
    ஆக ராகு,மாந்தியைஎல்லாம் கணக்கில் எடுத்துக்கொள்ளவேண்டியதில்லை என்று கொள்ளலாமா?

    காலசர்ப்ப தோஷம் இல்லாத ஒரு இவ்வளவு வலுவாக கிரகங்கள் அமைந்த ஜாதகரும் 27 வயது வரை கஷ்டப்படுகிறார் என்றால் அது எந்த வகையில் காலசர்ப்பத்திளிருந்து மாறுபடுகிறது?
    சோதிடத்தை பலன்கணிக்கும் போது விதி என்பது ஒரு எதற்கும் பொருந்துவதாக இல்லாமல் நடப்பு நன்றாக அமைந்ததால்
    பாசிடிவ் ஆன விஷயங்களை மட்டும் கணக்கிலெடுத்து நெகடிவை விட்டு விடுவது என்கிற ரீதியில் பலன் சொல்வது நடந்து முடிந்த வாழ்வைப் பற்றிய அலசலில் சரியாக இருக்குமே தவிர நடக்கப்போகும் எதிர்காலத்தைக் கணிப்பதில் எப்படி என்றுதான் புரியவில்லை..

    ReplyDelete
  12. சென்ற பின்னூட்டத்தில் எனது
    கருத்தை பாதியில் நிறுத்தி விட்டேன்...
    /// iyer said...
    வாத்தியாரே.. சும்மா
    வெளுத்து கட்டிட்டீங்க... ; வாத்தியார்

    விளக்கும் விதம் எங்களுக்கு கிடைத்த
    வெகுமதி.. வெகு 'மதி'..

    தாராளமாக மிகு மதி என சொல்லலாமா
    தமிழ்விரும்பி கருத்துச் சொல்லட்டும்

    காட்டுதேனில் ////

    ஓ! மிகவும் தாராளமாக சொல்லலாமே!!

    இன்னும் தெளிவாய் சொன்னால்
    கடல் பொங்கி,
    காட்டாறுபோல் ஓடி
    புயல் போல்வீசி
    புலிப் போல் பாய்ந்து
    பூகம்ப அலைபோல்
    உயர்ந்து.....

    வகுப்பறை
    நடுவே வீசம்படும்
    கேள்விக் கணைகள்
    யாவையும்.....

    நடுக்கடல் போலும்,
    அணைவடி வெள்ளம் போலும்
    புனல் வீசும் தென்றல் போலும்

    தெளிவானப் பார்வையால்
    புலிகளையும் பூனையாக்கி (வேகத்தில்)
    பூகம்ப அலைகளை
    புதுப் புனல் நீரலைகளாக்கியே....

    வேடிக்கையும், விவேகமும்,
    விறுவிறுப்பும், வியப்பும்,
    இன்னும் பல அற்புத உணர்வு கலந்து
    அழகாய் பாடம் நடத்தும்
    வாத்தியார் அவர் அனுபவத்தால்..
    நிறைமதி உடையோர் ஆவார்...
    (என்றே நானும் உரைப்பேன்
    மாணாக்கர் யாவரும் உரைப்பார்.)

    அதனாலே, அப்படி இருக்க
    அவர் தம் பாடமும்
    விளக்கமும் அதனால்
    நாம் பெரும் அறிவும்
    மாபெரும் வெகுமதியே!

    வாழ்க வளர்க வாத்தியாரின் தொண்டு..

    ReplyDelete
  13. அய்யா, 12ம் அதிபதியின் தசை மரணத்தில் கொண்டு விடுமா..?

    இது ஆனந்தின் குறிப்பைக் கண்டு வந்த அய்யம்.

    வழக்கம் போலவே அலசல் நன்று.

    ReplyDelete
  14. Respected Sir,

    Happy to read ur articles and impressed to make analysis.


    Thanks a lot for u and the classroom friend from america.

    Kind regards,
    Ravi

    ReplyDelete
  15. Blogger தமிழ் விரும்பி said...
    அருமையான அலசல்,
    தகவல்களைத் தந்த அன்பர் ஆண்டனி அவர்களுக்கு ஒரு வணக்கம்.. "அண்ணா வணக்கம்ணா"
    எனது பங்கிற்கு அலசலில் ஒரு கும்மு.....
    குருவும் கேதுவும் சேர்க்கையின் காரணமாக (ஐந்திற்குரியவனும், எட்டிற்கு உரியவனும் மான குரு ஏழாம் பார்வையில் அந்த வீட்டையும் வைத்திருக்கிறான்).
    கூரிய புத்தி (அறிவோடு) ஞானம் (ஆன்மீக) சேர்க்கை தான் அவரின் ஆசிரம தரிசனம் எல்லாம்.
    அலசல் அருமை சார்.
    நன்றி.
    ஆலாசியம் கோ.//////

    உண்மைதான். நன்றி ஆலாசியம்!

    ReplyDelete
  16. Blogger ananth said...
    12ம் அதிபதியின் தசாவில் இறந்த மூன்றாவது ஜாதகத்தையும் பார்த்து விட்டேன். மாரகம் செய்வதில் 2,7 அதிபதிகள் முதன்மையானவர்கள், அடுத்து 3,8ம் அதிபதிகள். இவர்கள் தசையில் தப்பித்தாலோ அல்லது வராமல் போனாலோ 12ம் அதிபதியின் தசையில் நிச்சயம் மரணம் ஏற்படும் என்று தாண்டவமாலை என்னும் புராதன ஜோதிட நூல் சொல்கிறது.///////

    உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி ஆனந்த்!

    ReplyDelete
  17. /////Blogger Srinivasarajulu.M said...
    சுக்கிரனும் ராகுவும் சேர்ந்து அவருக்கு பொழுதுபோக்குத்துறையிலும் (pixar animation, Walt Disney etc) , வலுவான புதன் அதையே கணினித் துறையிலுமாக சோபிக்க வைத்தார்கள் (the aesthetic appeal of his products is to be noted). நிறைய ஏற்ற இறக்கங்கள் வந்தது கிரக அமைப்புகளினால் (வரிசையாக அமர்ந்திருப்பதைக் கவனிக்கலாம். They are in 2/12 positions, which is not good during their respective dasa-bhukti). உச்ச சனியும் ஆட்சியிலுள்ள செவ்வாயும் வாழ்க்கையில் முக்கியமானவை என்றாலும், இருவரும் ஒன்றை ஒன்று நேருக்கு நேர் பார்ப்பதும் மேலும் நவாம்சத்தில் சனியுடன் ராகு சேர்ந்திருப்பதும் , குருவும் புதனும் அஷ்டம சஷ்டமர்களாய் இருப்பதுவும் கவனிக்கப் படவேண்டியது ... இவை எல்லாம் வாத்தியார் பாடங்களைத் திரும்பத் திரும்ப படிப்பதால் மனதில் படும் அம்சங்களாகும் - நன்றிகள் பல வாத்தியாருக்கும் வகுப்புக் கண்மணிகளுக்கும்./////

    தசா புத்திகளில் 6/8, 1/12 நிலைகள்தான் மோசமானவை!

    ReplyDelete
  18. /////Blogger Karthikeyan said...
    இன்றைய பாடம் மிகவும் சிறப்பானது மற்றும் பாதுகாக்கப்படவேண்டிய ஒன்று. கல்லூரியிலிருந்து படிப்பை பாதியில் உதறி, வெற்றியின் சிகரங்களை தன் அதீத புத்திசாலித்தனத்தின் மூலமும், அயராத உழைப்பின் மூலமும் அடைந்த ஒரு மேதையின் வாழ்க்கை நிகழ்வுகளை ஜோதிட அறிவியலின் மூலம் அனைவரும் புரிந்து கொள்ளும் அளவுக்கு அலசியது மிகவும் அருமை.//////

    படிப்பு கொடுக்கப்படாவிட்டால் நஷ்ட ஈடாக திறமை கொடுக்கப்பட்டிருக்கும். அதை அனைவரும் உணரவேண்டும்!

    ReplyDelete
  19. //////Blogger iyer said...
    வாத்தியாரே.. சும்மா
    வெளுத்து கட்டிட்டீங்க... ; வாத்தியார்
    விளக்கும் விதம் எங்களுக்கு கிடைத்த
    வெகுமதி.. வெகு 'மதி'..
    தாராளமாக மிகு மதி என சொல்லலாமா
    தமிழ்விரும்பி கருத்துச் சொல்லட்டும்
    காட்டுதேனில்
    கனிந்த பளாச்சுளையினை ஊறவைத்து
    அது பழசு
    அதனால் இப்படி சொல்கிறோம்..
    தங்க கீரிடத்தில்..
    தங்கும் படி பதித்த வைரக்கல்லும்
    என எதார்த்தமாக அமைந்த பாடமும்
    எடுத்துத் தந்த தோழமை நிறைந்த
    நியூ ஜெர்சியை சேர்ந்த
    நிஜத்திற்கும் நன்றிகள் பாராட்டுக்கள்..
    apple a day என்ற சொல்லடையே
    a pill a day = apple a day என இருக்கும்..
    கரை வேட்டிகள் எல்லாம்
    கறையேற துடிக்கும் இந்நாளில்..
    இப்படி ஒரு அருமையான சிந்தனைக்கு
    இன்னமும் நன்றி சொல்லியபடியே.
    இன்றைய வகுப்பிற்கு வரும் அறிஞரை
    இன்முகத்துடன் வரவேற்போம்..
    "ஒரு செயலை ஒரு சொல்லில் மாற்றுவதை விட, ஒரு சொல்லை ஒரு செயலில் மாற்றுவது மிகக்கடினமானது என்பது ஒவ்வொருவருக்கும் தெரியும்"
    -மாக்ஸிம் கார்க்கி.///////

    நல்லது. நன்றி விசுவநாதன்!

    ReplyDelete
  20. Blogger தேமொழி said...
    ஐயா, பதிவின் தலைப்பை பார்த்தவுடன் நான் ஆப்பிள் நிறுவனத்தின் ஜாதகத்தை அலசப் போவதாக நினைத்தேன் (as per details found on the Internet it was established in Cupertino, California on April 1, 1976 and incorporated January 3, 1977, the company was called Apple Computer, Inc. for its first 30 years, but dropped the word "Computer" on January 9, 2007 to reflect the company's ongoing expansion into the consumer electronics market in addition to its traditional focus on personal computers). அந்த அலசல் கட்சிகள், நாட்டின் ஜாதகங்களை அலசுவது போல் இருக்கும் எனவும் நினைத்தேன். ஆனால் நீங்கள் ஸ்டீவ் ஜாப்சும் ஆப்பிளும் வேறல்ல என்று கருத்தினை வலியுறுத்தி உள்ளீர்கள்.
    வழக்கமான எளிய நடையில் அருமையான ஜாதக அலசல் நன்றி. வந்தால் ஸ்டீவ் ஜாப்சுக்கு வரும் சுக்கிரதசை போல் வர வேண்டும் என்பதை ஒத்துக் கொள்கிறேன். வாழ்வில் சுக்கிர திசையே வராமல் அடுத்த தசைகளின் காலங்களில் துண்டு துண்டாக வரும் சுக்கிர புக்திப் பலன்கள் எதையும் உருசேர விடாமல் அடுத்த பாதகமான புக்தியில் காணாது போய் விடுகிறது...தொடர்ந்து பெய்யும் கொட்டும் மழைக்கும், காய்ந்த மண்ணில் விழும் தூறலுக்கும் உள்ள வித்தியாசம் போல.
    ///கிரகங்களின் சுயவர்க்கப் பரல்கள் கட்டம் கட்டிக் காட்டுள்ளேன் - உங்கள் செள்கரியத்திற்காக அத்துடன் சர்வாஷ்டகவர்க்கத்தில் 30 பரல்களுக்கு மேல் பெற்றுள்ள வீடுகளையும் கட்டம் கட்டிக் காட்டியுள்ளேன்!///
    நான் காணும் வழி கற்கும் (visual learner) வகையை சேர்ந்த மாணவி என்பதால் இந்த படங்கள் மிகவும் உதவியாக இருந்தன, நன்றி. அத்துடன் ஆண்டனி சான்ட்டியாகோவிற்கும் நன்றி.///////

    பின்னூட்டத்திற்காக உங்களுக்கு நன்றி சகோதரி!

    ReplyDelete
  21. /////Blogger minorwall said...
    நல்ல அலசல்..என்ன 'பிராண்ட் சோப்பு' ன்னு சொல்லவே இல்லியே?//////

    வராஹிமிஹிரா பிராண்ட் வாஷிங் பவுடர் + ஜெய்மானி பிராண்ட் சோப்புத்தூள் + வெந்நீர் (என்னுடைய நடை)சலவை பளிச் சென்று இருக்கிறதல்லவா மைனர்?

    ReplyDelete
  22. Blogger தமிழ் விரும்பி said...
    ////iyer said...
    வாத்தியாரே.. சும்மா
    வெளுத்து கட்டிட்டீங்க... ; வாத்தியார்
    விளக்கும் விதம் எங்களுக்கு கிடைத்த
    வெகுமதி.. வெகு 'மதி'..
    தாராளமாக மிகு மதி என சொல்லலாமா
    தமிழ்விரும்பி கருத்துச் சொல்லட்டும்
    காட்டுதேனில்
    கனிந்த பளாச்சுளையினை ஊறவைத்து
    அது பழசு
    அதனால் இப்படி சொல்கிறோம்..
    தங்க கீரிடத்தில்..
    தங்கும் படி பதித்த வைரக்கல்லும்///
    ஓ! தாராளமாக சொல்லலாமே!!
    இன்னும் தெளிவாய் சொன்னால்
    கடல் பொங்கி,
    காட்டாறுபோல் ஓடி
    புயல் போல்வீசி
    புலிப் போல் பாய்ந்து
    பூகம்ப அலைபோல்
    உயர்ந்து.....
    வகுப்பறை
    நடுவே வீசம்படும்
    கேள்விக் கணைகள்
    யாவையும்.....
    நடுக்கடல் போலும்,
    அணைவடி வெள்ளம் போலும்
    புனல் வீசும் தென்றல் போலும்
    தெளிவானப் பார்வையால்
    புலிகளையும் பூனையாக்கி (வேகத்தில்)
    பூகம்ப அலைகளை
    புதுப் புனல் நீரலைகளாக்கியே...
    வேடிக்கையும், விவேகமும்,
    விறுவிறுப்பும், வியப்பும்,
    இன்னும் பல அற்புத உணர்வு கலந்து
    அழகாய் பாடம் நடத்தும்
    வாத்தியார் அவர் அனுபவத்தால்..
    நிறைமதி உடையவரே!
    என்றே நானும் உரைப்பேன்
    மாணாக்கர் யாவரும் உரைப்பார்.
    நன்றிகள் ஐயா!
    அன்புடன்,
    ஆலாசியம் கோ.//////

    வாத்தியாரை ஒரு லெவலுக்கு மேல் உசுப்பேத்தி விடாதீர்கள். பாவம் அவர்!

    ReplyDelete
  23. Blogger govind said...
    Sir,
    Analysis of steve jobs chart is really informative.I have one doubt you said there is no asthamanam in his chart. But marcury is in 6th position and moon is in 8th position?
    May i know the reason?
    Thank you////

    அன்றைய தேதியில் கிரக நிலைமை அப்படித்தான் இருந்திருக்கிறது சுவாமி. அதற்கெல்லாம் காரணம் இருக்காது!

    ReplyDelete
  24. /////Blogger sekar said...
    அய்யா வணக்கம்
    இன்றைய பாடம் மிகவும் அருமை. ஜாதகத்தை எப்படி அலசுவது என்று தங்களது விளக்கங்கள் மிகவும் அருமை.
    நன்றி.//////

    நல்லது. நன்றி சேகர்!

    ReplyDelete
  25. //////Blogger minorwall said...
    ////////லக்கினாதிபதிக்கு குருவின் ஒன்பதாம் பார்வை படுவதும் கவனிக்கப்படவேண்டியதொன்று..(குரு ஐந்தாமாதியல்லாமல் எட்டாமாதியும்)
    1 .புதன் மறைவு ஸ்தானத்தில் இருந்தாலும் 35 பரல் சுயவர்க்கம் 8 என்கிற ரீதியில் 2 ,11 இடங்களுக்குரிய பலனைத் தந்தார் என்று பொருள்கொள்ளலாமா? ஆக மறைவு ஸ்தானத்தில் இருந்தாலும் ஒரு கிரகம் வலுவாக இருந்தால் பலன்தரும் என்பதில் மறைவு விதி அடிபட்டுப் போகிறது.//////

    ஆகா கொள்ளலாம். அதுதான் அஷ்டகவர்க்கத்தின் மேன்மை!
    -------------------------------------------------------------------------------------
    2 .பத்தாமிடத்துக்கு 37 பரல் இருந்து லாப ஸ்தானத்துக்கு இதை விட 9 பரல் குறைவாக 28 தான் இருப்பது இவ்வளவு லாபம் பெற
    எப்படி காரணமாக அமைந்தது என்பது புரியவில்லை..ஆக லாபம் பெற 10 ஐ விட 11 நின் பரல் அதிகமாக இருக்கவேண்டும் என்ற விதி அடிபட்டுப் போகிறது..///////

    லாப ஸ்தானத்திற்கு பரல்கள் குறைந்தாலும், அதன் அதிபதி பிசாசாக எட்டுப் பரல்களுடன் இருக்கிறாரே - போதாதா? பிசாசு என்னும் போது மற்றவைகள் (விதிகள்) ஓடிப்போய்விடாதா மைனர்?
    ------------------------------------------------------------------------------------
    3 . /////// ஐந்தாம் வீட்டு அதிபனும், புத்திரகாரனுமாகிய குரு 28 பரல்கள் உள்ள இடத்தில் வலுவாக அமர்ந்ததோடு, ஐந்தாம் வீட்டையும் பார்வையில் வைத்திருந்ததால் ஜாதகருக்குக் குழந்தைச் செல்வங்களைக் கொடுத்தான்.//////
    அங்கே ராகுவும் மாந்தியும் இருந்தாலுமே இந்த அமைப்பு அவருக்கு அதை விட பலமான அமைப்பாக இருந்து சாதகமான பலன்தந்தது என ஆகிறது..ஆக ராகு,மாந்தியைஎல்லாம் கணக்கில் எடுத்துக்கொள்ளவேண்டியதில்லை என்று கொள்ளலாமா?///////

    ஒன்று பலமாக இருக்கும்போது அதை எடுத்துக்கொள்ளலாம் மைனர். வானிலை அறிக்கைகளை மீறி புயல், சுனாமி எல்லாம் வருவதில்லையா? அதைப்போலத்தான் இதுவும்!
    -------------------------------------------------------------------------------
    காலசர்ப்ப தோஷம் இல்லாத ஒரு இவ்வளவு வலுவாக கிரகங்கள் அமைந்த ஜாதகரும் 27 வயது வரை கஷ்டப்படுகிறார் என்றால் அது எந்த வகையில் காலசர்ப்பத்திளிருந்து மாறுபடுகிறது?/////

    காலசர்ப்பம் இருந்தால் மட்டுமே இளம் வயதில் கஷ்டம் என்ற கணக்கெல்லாம் இல்லை! நீசமான சந்திரனால் நல்ல தாய் அமையவில்லை. சுவீகாரம் போனார். சுவீகாரம் போன இடமும் சனியின் பார்வையால் ஊற்றிகொண்டு விட்டது. அவர்களும் செல்வந்தராக இருந்து ஜாதகரை வளர்க்கவில்லை. அதனால் கஷ்டம். தொடர்ந்து வந்த கேது திசையும் புரட்டி எடுத்து இருக்கிறது.
    ------------------------------------------------------------------------------
    //////சோதிடத்தை பலன்கணிக்கும் போது விதி என்பது ஒரு எதற்கும் பொருந்துவதாக இல்லாமல் நடப்பு நன்றாக அமைந்ததால்
    பாசிடிவ் ஆன விஷயங்களை மட்டும் கணக்கிலெடுத்து நெகட்டிவை விட்டு விடுவது என்கிற ரீதியில் பலன் சொல்வது நடந்து முடிந்த வாழ்வைப் பற்றிய அலசலில் சரியாக இருக்குமே தவிர நடக்கப்போகும் எதிர்காலத்தைக் கணிப்பதில் எப்படி என்றுதான் புரியவில்லை.//////

    நடக்கப்போகும் விஷயத்தைச் சொல்வதில்தான் குழப்பம் இருக்கும். உங்களின் முதற்கேள்வியை முன் வைத்தால், ஜோதிடன் லாபாதிபதி ஆறில் உள்ளான் என்றும் அதனால் அவனுக்குப் பெருத்த லாபம் இருக்காது என்றும் தன்னுடைய கருத்தைச் சொல்வான். அது பொய்யாகப் போய் விடும். நடக்கப்போவதை இருபக்கமும் அலசிச் சொல்வதில்தான் ஜோதிடத்தின் மேன்மையும், ஜோதிடரின் திறமையும் இருக்கிறது. ஆனால் நடைமுறையில் எல்லாவற்றையும் அலசிச் சொல்லும் அளவிற்கு ஜோதிடர்களும் இல்லை. பொறுமையும் இல்லை. அதனால்தான் அந்தக் காலத்தில் இருந்தது போல முழுவாழ்க்கையையும் அலசி Life பலன்களை எழுதிக்கொடுக்கும் ஜோதிடர்கள் இன்று இல்லை. என் தந்தையாரின் காலத்தில் அப்படி இருந்த இருவரை எனக்குத் தெரியும். ஒருவர் திருச்சூர் ஆசான். இன்னொருவர் கொழிஞ்சாம்பாறையைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி பணிக்கர்!

    ReplyDelete
  26. //////Blogger Govindasamy said...
    அய்யா, 12ம் அதிபதியின் தசை மரணத்தில் கொண்டு விடுமா..?
    இது ஆனந்தின் குறிப்பைக் கண்டு வந்த ஐயம்.
    வழக்கம் போலவே அலசல் நன்று.//////

    சில சமயம் கொண்டுபோய் விடும். அதற்கு ஏன் பயம்? ஐயம் எதற்கு? அவர்தான் தாண்டவமணி மாலை என்னும் ஜோதிட நூலை ஆதாரம் காட்டியுள்ளாரே!

    ReplyDelete
  27. ////Blogger ravichandran said...
    Respected Sir,
    Happy to read ur articles and impressed to make analysis.
    Thanks a lot for u and the classroom friend from america.
    Kind regards,
    Ravi/////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  28. Sir,

    You can see that 6th place got 35 Paral for him. What is the effect due to that.

    ReplyDelete
  29. ஐயா, வளர்ப்பு பெற்றோர்களாயிருந்தாலும் ஸ்டீவ் ஜாப்ஸ் அவர்களை தன் பெற்றோர்கள் என சொல்லவே விரும்பினார். அந்த தாய் தந்தையினரும் அவர்கள் தகுதிக்கு மீறியே பெற்ற தாய்க்கு கொடுத்த வாக்கை காப்பாற்ற அவரை கல்லூரிக்கு அனுப்பினார்கள். வளர்த்த பெற்றோர்கள் உழைத்த பணம் தன் படிப்பிற்காக கரைவதை பொறுக்காமலே அவரும் கல்வியை நிறுத்தினார். ஏகப்பட்ட பாசப் பிணைப்பு இங்கே. ஸ்டீவ் ஜாப்ஸ் வளர்ந்த சூழ்நிலை, தாயை இழந்தோ, மாற்றாந் தாய் கொடுமையில் வாடி அன்பிற்கு ஏங்கிய வாழ்கையாகவோ தோன்றவில்லையே. தேவகியிடம் வளர முடியாவிட்டாலும் யசோதையின் பாச அரவணைப்பில் வளர்ந்த கண்ணன் கதை போல இருக்கிறது.

    an excerpt from this site: http://www.cbsnews.com/stories/2011/10/08/earlyshow/saturday/main20117613.shtml
    "Paul and Clara were his parents. He was very close to his father, very close to his mom," ..... "Although they were not college-educated people, his mother taught him to read at 3 years old, and he was very inspired by it. He said that helped him become curious and, you know, very curious and intelligent person. He loved his adopted father. His father was a mechanic and he used his hands and he always encouraged his son to be creative. So they really inspired him."

    வளர்த்த தாயின் பாசம், தந்தையின் ஆதரவு இவைகள் எப்படி இந்த ஜாதக அமைப்பில் ஈடுகட்டப்பட்டுள்ளது என்று அறிய விரும்புகிறேன்.

    ReplyDelete
  30. /////Blogger Balaji said...
    Sir,
    You can see that 6th place got 35 Paral for him. What is the effect due to that./////

    ஏன் உங்களுக்கு அப்படி இருக்கிறதா? அப்படி இருந்தால் அது Debt, Disease & enemies களுக்கு உரிய இடம். இயற்கையாகவே அதிக பரல்கள் இருப்பதால் ஜாதகனுக்குக் கடனும், எதிரிகளும் இருக்கமாட்டர்கள். இருந்தாலும் ஜாதகனைக் கண்டதும் ஓடிப்போய்விடுவார்கள்.
    நோய் நொடிகள் இருக்காது.

    அதையும் மீறி ஸ்டீவ் ஜாப்ஸிற்கு கடுமையான நோய் ஏற்பட்டதற்குக் காரணம் அந்த வீடு பாபகர்த்தாரி யோகத்தில் சிதைந்துள்ளது! விளக்கம் போதுமா?

    ReplyDelete
  31. /////Blogger தேமொழி said...
    ஐயா, வளர்ப்பு பெற்றோர்களாயிருந்தாலும் ஸ்டீவ் ஜாப்ஸ் அவர்களை தன் பெற்றோர்கள் என சொல்லவே விரும்பினார். அந்த தாய் தந்தையினரும் அவர்கள் தகுதிக்கு மீறியே பெற்ற தாய்க்கு கொடுத்த வாக்கை காப்பாற்ற அவரை கல்லூரிக்கு அனுப்பினார்கள். வளர்த்த பெற்றோர்கள் உழைத்த பணம் தன் படிப்பிற்காக கரைவதை பொறுக்காமலே அவரும் கல்வியை நிறுத்தினார். ஏகப்பட்ட பாசப் பிணைப்பு இங்கே. ஸ்டீவ் ஜாப்ஸ் வளர்ந்த சூழ்நிலை, தாயை இழந்தோ, மாற்றாந் தாய் கொடுமையில் வாடி அன்பிற்கு ஏங்கிய வாழ்கையாகவோ தோன்றவில்லையே. தேவகியிடம் வளர முடியாவிட்டாலும் யசோதையின் பாச அரவணைப்பில் வளர்ந்த கண்ணன் கதை போல இருக்கிறது.
    an excerpt from this site: http://www.cbsnews.com/stories/2011/10/08/earlyshow/saturday/main20117613.shtml
    "Paul and Clara were his parents. He was very close to his father, very close to his mom," ..... "Although they were not college-educated people, his mother taught him to read at 3 years old, and he was very inspired by it. He said that helped him become curious and, you know, very curious and intelligent person. He loved his adopted father. His father was a mechanic and he used his hands and he always encouraged his son to be creative. So they really inspired him."
    வளர்த்த தாயின் பாசம், தந்தையின் ஆதரவு இவைகள் எப்படி இந்த ஜாதக அமைப்பில் ஈடுகட்டப்பட்டுள்ளது என்று அறிய விரும்புகிறேன்./////

    4ல் 32 பரல்கள். லக்கினாதிபதி கேந்திரத்தில், over all ஆக நன்மையளிக்கும் ஸ்தானங்களின் பரல்கள் அதிகம் உள்ளது. இதுபோன்ற காரணங்களால் அவைகள் சரியாகி உள்ளன. தோண்டத் தோண்ட நிறைய விஷயங்கள் கிடைக்கும்!

    ReplyDelete
  32. வேறென்ன முடியும் சொல்ல, நன்றியொன் றல்லாமல்.
    நன்றிகள் பல.

    ReplyDelete
  33. ////Blogger krishnar said...
    வேறென்ன முடியும் சொல்ல, நன்றியொன் றல்லாமல்.
    நன்றிகள் பல.////

    என்ன பாண்டியன் சிம்ப்பிளாக முடித்துவிட்டீர்கள்? மைனர் உங்களை முந்திக்கொண்டு விமர்சனம் செய்து விட்டதால், உஙகளுக்கு “மேட்டர்” ஒன்றும் கிடைக்கவில்லையா?

    ReplyDelete
  34. //தசா புத்திகளில் 6/8, 1/12 நிலைகள்தான் மோசமானவை!//

    அஷ்டம-சஷ்டமம் (6/8) புரிகிறது. ஆனால், 1/12 என்பதை 2/12 என்று குறிப்பிட்டால் சரியாக இருக்கும் என்று படுகிறது. (அதாவது ஒரு கிரகத்திற்கு மற்றொன்று 12-ல் இருந்தால், அந்த 12-ல் உள்ள கிரகத்திற்கு முதல் கிரகம் 2-ல் இருக்கும்). இவற்றின் தசா புக்தி காலங்கள் (அதாவது இந்த அமைப்பில் உள்ள ஒரு கிரகத்தில் வரும் மற்றோர் கிரகத்தின் புக்தி). இந்த ஜாதகத்தில் குரு தசையில் புதன் புக்தியில் அல்லது புதன் தசையில் வரும் குரு புக்தி நன்றாக இருக்காது. மேலும் 2/12 அமைப்பு மற்ற சில கிரகங்களுக்கும் உள்ளது. - இது சரியா அய்யா? அல்லது நான் புரிந்து கொண்டது தவறா? தயவு செய்து விளக்க வேண்டுகிறேன்.

    ReplyDelete
  35. ஜாதக அலசல் மிக மிக அருமை!

    ஜோதிடத்தின் அனைத்து சரங்களையும் பிழிந்து எடுத்து ஸ்டிவ் ஜாப்ஸ் ஜாதகத்தை அலாசி விளக்கியதற்கு மிக்க நன்றி!

    தங்களுக்கு தங்களே நிகர்! தாங்கள் எங்களுக்கு வத்தியாரக கிடைத்தது மிகபெரிய பாக்கியம்!

    என்றும் நன்றியுடன்,
    முருகராஜன்

    ReplyDelete
  36. SP.VR. SUBBAIYA said...
    என்ன பாண்டியன் சிம்ப்பிளாக முடித்துவிட்டீர்கள்? மைனர் உங்களை முந்திக்கொண்டு விமர்சனம் செய்து விட்டதால், உஙகளுக்கு “மேட்டர்” ஒன்றும் கிடைக்கவில்லையா?////

    மைனர் போல எனக்கு ஜாதாகத்தில் அவ நம்பிக்கை இல்லை...நான் எப்போதும் வியப்பது நான் இன்னும் எத்தனை ஆண்டு காலம் இந்த அறிய கலையை பயில வேண்டும் என்பது தான்...

    சில சமயங்களில் இந்த கலை மீது வேறுப்பு வருவது உண்டுதான்...ஆனால் அது எனது அறியாமையின் காரணமாகவே...

    என்னோடைய ஆய்வில் நான் கண்டு பிடித்த உண்மை...ஒருவரின் பிறப்பே (அவர் பிறக்கும் குலம், தாய், தந்தை செய்த புண்ணியங்கள்) பெரும் பங்கு வகிக்கின்றது (பதவி பூர்வ புண்ணியனாம்) ...

    அலசல் சூப்பர் சார்.,

    இன்னும் ஒரு சந்தேகம்...

    ஐரோப்பா அல்லது அமெரிக்களுக்கு அனைவருக்கும் பல பெண்கள் தொடர்பு இருக்குகிரதே... இது எப்படி ?... (எப்புடி ஆன்செர் பண்ணுவீங்க வாத்தியார் ?, ரூம் போட்டு யோசிச்ச கேள்வி தான்... )

    ReplyDelete
  37. //ஜோதிடன் லாபாதிபதி ஆறில் உள்ளான் என்றும் அதனால் அவனுக்குப் பெருத்த லாபம் இருக்காது என்றும் தன்னுடைய கருத்தைச் சொல்வான்//

    இரண்டாம் வீட்டிற்குரியவன் தன் வீட்டிற்கும் அய்ந்தில்/கோணத்தில் இருப்பதால் இந்த பெருத்த லாபம்..

    இது வாத்தியார் சொல்லிக் கொடுத்ததுதான்.

    பாடம் அருமை அய்யா..

    ReplyDelete
  38. //Blogger govind said...
    Sir,
    Analysis of steve jobs chart is really informative.I have one doubt you said there is no asthamanam in his chart. But marcury is in 6th position and moon is in 8th position?
    May i know the reason?
    Thank you////

    அய்யா, இவர் 6ம் இடம் , 8ம் இடம் மறைவுஸ்தானம் என்பதையும், சூரியனுடன் கிரகச் சேர்க்கை அஸ்தமனம் என்பதையும் குழப்பிக் கொண்டிருக்கிறார் என நினைக்கிறேன்.

    இடைப் புகுதலுக்கு மன்னிக்கவும்.

    ReplyDelete
  39. வ‌ணக்கம் அய்யா,
    மிகவும் தெளிவாகவும்,நேர்த்தியாகவும் இன்று பாடம் தந்தமைக்கு நன்றிகள்.
    அய்யா,நானும் சிம்ம லக்கினம்(சந்திர லக்னம்)தான்.ஆனால் ஒரு ஜோதிடர் இந்த அமைப்பு பெண்களுக்கு நல்லது அல்ல என்றும் கூறினார்.இது உண்மையா?
    அய்யா,மேலும் இவ்வாறாக ஜாதக அலசலின் மூலம் அடிப்படை பாடங்கள் மிகவும் எளிதாக மனதில் பதிகின்றது.இவ்வாறு ஜாதக அலசல்கள் தொடர்ந்தால் என் போன்றோர் எளிதில் ஜோதிடத்தை கற்றுணரலாம்.நல்ல பாடத்திற்கு மிக்க நன்றிகள் அய்யா.

    ReplyDelete
  40. Blogger Srinivasarajulu.M said...
    //தசா புத்திகளில் 6/8, 1/12 நிலைகள்தான் மோசமானவை!//
    அஷ்டம-சஷ்டமம் (6/8) புரிகிறது. ஆனால், 1/12 என்பதை 2/12 என்று குறிப்பிட்டால் சரியாக இருக்கும் என்று படுகிறது. (அதாவது ஒரு கிரகத்திற்கு மற்றொன்று 12-ல் இருந்தால், அந்த 12-ல் உள்ள கிரகத்திற்கு முதல் கிரகம் 2-ல் இருக்கும்). இவற்றின் தசா புக்தி காலங்கள் (அதாவது இந்த அமைப்பில் உள்ள ஒரு கிரகத்தில் வரும் மற்றோர் கிரகத்தின் புக்தி). இந்த ஜாதகத்தில் குரு தசையில் புதன் புக்தியில் அல்லது புதன் தசையில் வரும் குரு புக்தி நன்றாக இருக்காது. மேலும் 2/12 அமைப்பு மற்ற சில கிரகங்களுக்கும் உள்ளது. - இது சரியா அய்யா? அல்லது நான் புரிந்து கொண்டது தவறா? தயவு செய்து விளக்க வேண்டுகிறேன்.

    புத்தி நாதன் சிம்மத்தில் உள்ளார். மகாதிசை நாதன் கடகத்தில் உள்ளார். இது என்ன நிலை? அதைச் சொல்லுங்கள்
    அதாவது புத்திநாதன்/திசைநாதன். 1/12 அல்லவா? அஷ்டம சஷ்டமம் போலத்தான் இதுவும்! விளக்கம் போதுமா?

    ReplyDelete
  41. /////Blogger RMURUGARAJAN said...
    ஜாதக அலசல் மிக மிக அருமை!
    ஜோதிடத்தின் அனைத்து சரங்களையும் பிழிந்து எடுத்து ஸ்டிவ் ஜாப்ஸ் ஜாதகத்தை அலசி விளக்கியதற்கு மிக்க நன்றி!
    தங்களுக்கு தங்களே நிகர்! தாங்கள் எங்களுக்கு வத்தியாராகக் கிடைத்தது மிகபெரிய பாக்கியம்!
    என்றும் நன்றியுடன்,
    முருகராஜன்//////

    நான் அப்படி நினைக்கவில்லை! நமக்குத் தெரிந்ததை எழுத வேண்டும் என்ற எண்ணத்தில்தான் எழுதிக்கொண்டிருக்கிறேன். கூகுள் ஆண்டவர் அதற்குத் துணையாக உள்ளது மட்டுமே உண்மையான பாக்கியம்!

    ReplyDelete
  42. Blogger bhuvanar said...
    SP.VR. SUBBAIYA said...
    என்ன பாண்டியன் சிம்ப்பிளாக முடித்துவிட்டீர்கள்? மைனர் உங்களை முந்திக்கொண்டு விமர்சனம் செய்து விட்டதால், உஙகளுக்கு “மேட்டர்” ஒன்றும் கிடைக்கவில்லையா?////
    மைனர் போல எனக்கு ஜாதாகத்தில் அவ நம்பிக்கை இல்லை...நான் எப்போதும் வியப்பது நான் இன்னும் எத்தனை ஆண்டு காலம் இந்த அறிய கலையை பயில வேண்டும் என்பது தான்...
    சில சமயங்களில் இந்த கலை மீது வேறுப்பு வருவது உண்டுதான்...ஆனால் அது எனது அறியாமையின் காரணமாகவே...
    என்னோடைய ஆய்வில் நான் கண்டு பிடித்த உண்மை...ஒருவரின் பிறப்பே (அவர் பிறக்கும் குலம், தாய், தந்தை செய்த புண்ணியங்கள்) பெரும் பங்கு வகிக்கின்றது (பதவி பூர்வ புண்ணியனாம்) ...
    அலசல் சூப்பர் சார்.,
    இன்னும் ஒரு சந்தேகம்...
    ஐரோப்பா அல்லது அமெரிக்களுக்கு அனைவருக்கும் பல பெண்கள் தொடர்பு இருக்குகிறதே... இது எப்படி ?... (எப்புடி ஆன்செர் பண்ணுவீங்க வாத்தியார் ?, ரூம் போட்டு யோசிச்ச கேள்வி தான்... )///////

    இதுக்கெல்லாம் ரூம் போட்டு யோசிக்க வேண்டாம். என்னுடைய பழைய பாடங்களைப் படித்தால் போதும். அனைவருக்கும் என்னும் சொல் தவறானது. இந்தப் பெண் மயக்கம் அனைவருக்கும், அனைத்து நாடுகளுக்கும் பொதுவானது. ஏன் நம்மூரில் இல்லையா? “இவள் கிடைச்சால் எப்படி இருக்கும்?” என்று யோசிக்கும் மனிதர்கள் இங்கே எத்தனை பேர்கள் உள்ளார்கள் தெரியுமா? காமமும் கள்ளத்தனமும் பொதுவானது. ஜாதகத்தில் நான்கு வகைகள் உள்ளன. தர்ம ஜாதகம், தன ஜாதகம், காமஜாதகம், ஞான ஜாதகம். காம ஜாதகக்காரர்கள் எல்லா இடத்திலும் உண்டு. அங்கே வெளிப்படையாக உள்ளார்கள். நம்மூர்களில் பாதிப்பேர் சமூகத்திற்குப் பயந்துகொண்டு திருட்டுத்தனமாகச் செய்வார்கள். அதுதான் உண்மை!

    ReplyDelete
  43. Blogger Govindasamy said...
    //ஜோதிடன் லாபாதிபதி ஆறில் உள்ளான் என்றும் அதனால் அவனுக்குப் பெருத்த லாபம் இருக்காது என்றும் தன்னுடைய கருத்தைச் சொல்வான்//
    இரண்டாம் வீட்டிற்குரியவன் தன் வீட்டிற்கும் அய்ந்தில்/கோணத்தில் இருப்பதால் இந்த பெருத்த லாபம்..
    இது வாத்தியார் சொல்லிக் கொடுத்ததுதான்.
    பாடம் அருமை அய்யா../////

    நீங்கள் சொல்வது சரிதான். அதையும் மீறி, சார், இரண்டாம் வீட்டில் 24 பரல்கள்தானே உள்ளது. குறைந்தது 28 இருக்க வேண்டாமா என்றும் கேட்பார்கள். அதெல்லாம் ஜோதிடத்தில் சகஜம் சுவாமி!

    ReplyDelete
  44. ////Blogger Govindasamy said...
    //Blogger govind said...
    Sir,
    Analysis of steve jobs chart is really informative.I have one doubt you said there is no asthamanam in his chart. But marcury is in 6th position and moon is in 8th position?
    May i know the reason?
    Thank you////
    அய்யா, இவர் 6ம் இடம் , 8ம் இடம் மறைவுஸ்தானம் என்பதையும், சூரியனுடன் கிரகச் சேர்க்கை அஸ்தமனம் என்பதையும் குழப்பிக் கொண்டிருக்கிறார் என நினைக்கிறேன்.
    இடைப் புகுதலுக்கு மன்னிக்கவும்./////

    நல்லது இருவருமே அவருக்கு விளக்கம் சொல்லியுள்ளோம். பொறுத்திருங்கள் கண்மணி என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்!

    ReplyDelete
  45. /////Blogger R.Srishobana said...
    வ‌ணக்கம் அய்யா,
    மிகவும் தெளிவாகவும்,நேர்த்தியாகவும் இன்று பாடம் தந்தமைக்கு நன்றிகள்.
    அய்யா,நானும் சிம்ம லக்கினம்(சந்திர லக்னம்)தான். ஆனால் ஒரு ஜோதிடர் இந்த அமைப்பு பெண்களுக்கு நல்லது அல்ல என்றும் கூறினார்.இது உண்மையா?////

    தவறு! நீங்கள் என்ன மகம் நட்சத்திரமா - அல்லது பூர நட்சத்திரமா?
    -----------------------------------------------------------------
    //////அய்யா,மேலும் இவ்வாறாக ஜாதக அலசலின் மூலம் அடிப்படை பாடங்கள் மிகவும் எளிதாக மனதில் பதிகின்றது.இவ்வாறு ஜாதக அலசல்கள் தொடர்ந்தால் என் போன்றோர் எளிதில் ஜோதிடத்தை கற்றுணரலாம்.நல்ல பாடத்திற்கு மிக்க நன்றிகள் அய்யா.//////

    தினமும் விருந்துச் சாப்பாடு கேட்கிறீர்கள். திகட்டிவிடும். பத்தியச் சாப்பாடு மற்றும் வெரைட்டி ரைஸ் என்று எது கிடைத்தாலும் சாப்பிடப் பழகிக்கொள்ளுங்கள் சகோதரி!

    ReplyDelete
  46. வாத்தியார் ஐயா வணக்கம்.

    நடிகர் வடிவேலு ஒரு படத்தில் மிகவும் அழகாக கூறுவார் அது என்ன வென்றால் இப்பமே கண்ணை கட்டுதே இதில் இன்னும் வேணுமா ?

    வகுப்பறையில் வரும் நமது நாட்டு பெரியவர்களின் ஜாதகத்தை கண்டு தலை சுற்றி கொண்டு இருந்தது .
    இப்பொழுது எல்லோருக்கும் அண்ணனாக விளங்க விரும்பும் நாட்டில் பிறந்த ஆப்பிளையும் தாங்கள் விடுவதாக வில்லை இல்லையா

    ReplyDelete
  47. சார் வணக்கம்,
    இந்த அண்ணா ஜாதகததை நான் தங்களிடம் அலச கேட்கலாம் என்றிருந்தேன்
    ரொம்பநன்றி உச்சம்பெற்ற சனி நீண்ட ஆயுளை த்ரவில்லை புகழின் உச்சிக்கு கொண்டு சென்று விரைவில் ஆயுளை முடித்துவிட்டது பாவம் லக்கன் அதிபதி
    சூரியன் மோசமா நடத்திவிட்டார். மொத்ததில் இவர் புத்தி சாலியான் ஜாதகம்
    மா மேதை இவர் நமக்கு ரொம்ப் பயன்பட்டார்.

    ReplyDelete
  48. ஆசிரியர் அவர்களின் இன்றைய பதிவு மிகவும் அருமை.நான் நினைத்தேன் ஐயா ஆப்பிளின் ஜாதகத்தை அலசுவீர்கள் என்று துவைத்துக் காயப்போட்டுவிட்டீர்கள்.பாபகர்த்தாரி யோகம் 8ம் வீட்டில் உள்ளது என்பது இங்கு சூரியன் லக்கினாதிபதி இல்லையா?.தனக்குத்தானே தோஷத்தை ஏற்படுத்திக் கொள்வானா?.லக்கினத்தைப் பொறுத்தவரை அவரன்றி அணுவும் அசையாதே அப்படியிருக்கையில் அவர் எப்படி என்பது தான் எனது கேள்வி?.(ஏனெனில் எனக்கு 10ம் வீட்டிற்கு இருபுறமும் சூரியன்(9ல்),ராகு(11ல்),பத்தில் புதனும் இருக்கிறார்கள்.அடியேனும் சிம்மலக்கினம் அதனால் தான் கேட்டேன்.)

    ReplyDelete
  49. காலையிலேயே நீண்ட பின்னூட்டம் இட்டேன். அதன் பின்னர் மின்தடை. இப்போது பார்த்தால் என் பின்னூட்டம் மிஸ்ஸிங். முதல் முறை பார்த்தவுடன்
    ஏற்பட்ட எண்ண ஓட்டம் இப்போது வரவில்லை.

    அக்கு அக்காகப் பிரித்து அலசிவிட்டீர்கள்.நல்ல பதிவு.

    செவ்வாய், சனி சமபலம் பெற்று ஒருவரை ஒருவர் நேர் பார்வையாகப் பார்த்தது
    இவர் விஷயத்தில் நன்மையா தீமையா?

    குரு கேது சேர்ந்தது ஆன்மீக நாட்டம் கொள்ள வைத்தது.இல்லையா?

    ReplyDelete
  50. ஐயா!

    கடிகாரம் என்பது அறிவியல் வளர்ச்சிக்கு பின்னர் வந்தது தான் இல்லையா ஐயா . நமது முன்னோர்கள், மேதைகள், ஜோதிட விற்பனர்கள், சித்தர்கள் போன்ற மகா மேதைகள் எப்படி ஐயா கடிகாரம் இல்லாத காலத்தில்
    மிகவும் சரியாக ஜாதகத்தை கணித்து கூறினார்கள்.

    சாமுத்திரிக லட்சணம், கைரேகை , அருள் வாக்கு, பட்சி சாஸ்திரம், ஞானத்தால் பலன் கூறுவதற்கு கடிகாரம் தேவை இல்லை ஆனால் தாங்கள் நடத்தும் பாடதீர்க்கு மூல தாரமே " பிறந்த நேரம், நாள்," இல்லையா ஐயா ?

    ReplyDelete
  51. நல்ல அலசல், விரிவாக பின்னூட்டம் இட இயலவில்லை. ரஜ்ஜு பற்றி ஒரு சந்தேகம் சென்ற பதிவுகளில் ஒன்றில்
    கேட்டிருக்கிறேன். அதற்கு பதில் அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    ReplyDelete
  52. Blogger kannan said...
    வாத்தியார் ஐயா வணக்கம்.
    நடிகர் வடிவேலு ஒரு படத்தில் மிகவும் அழகாக கூறுவார் அது என்ன வென்றால் இப்பமே கண்ணை கட்டுதே இதில் இன்னும் வேணுமா?
    வகுப்பறையில் வரும் நமது நாட்டு பெரியவர்களின் ஜாதகத்தை கண்டு தலை சுற்றி கொண்டு இருந்தது .
    இப்பொழுது எல்லோருக்கும் அண்ணனாக விளங்க விரும்பும் நாட்டில் பிறந்த ஆப்பிளையும் தாங்கள் விடுவதாக வில்லை இல்லையா?//////

    நீங்கள் எதற்கு வடிவேலைத் துணைக்கு அழைக்கிறீர்கள்? வடிவேலனைத் துணைக்கு அழையுங்கள். கண்ணைக் கட்டாது!
    எந்த நாடாக இருந்தால் என்ன?
    பூமி ஒன்றுதான்
    வானம் ஒன்றுதான்
    சூரியனும் ஒன்றுதான்
    ஜோதிடமும் ஒன்றுதான்!

    ReplyDelete
  53. ////Blogger sundari said...
    சார் வணக்கம்,
    இந்த அண்ணா ஜாதகததை நான் தங்களிடம் அலச கேட்கலாம் என்றிருந்தேன்
    ரொம்பநன்றி உச்சம்பெற்ற சனி நீண்ட ஆயுளை தரவில்லை புகழின் உச்சிக்கு கொண்டு சென்று விரைவில் ஆயுளை முடித்துவிட்டது பாவம் லக்கன் அதிபதி சூரியன் மோசமா நடத்திவிட்டார். மொத்ததில் இவர் புத்தி சாலியான் ஜாதகம்
    மாமேதை இவர் நமக்கு ரொம்ப பயன்பட்டார்.////

    முடி சார்ந்த மன்னனும் ஒரு நாள் பிடி சாம்பலாகத்தானே ஆக வேண்டும்? அதற்கு யாரும் விதிவிலக்கல்ல!

    ReplyDelete
  54. //////Blogger Rajaram said...
    ஆசிரியர் அவர்களின் இன்றைய பதிவு மிகவும் அருமை.நான் நினைத்தேன் ஐயா ஆப்பிளின் ஜாதகத்தை அலசுவீர்கள் என்று - துவைத்துக் காயப்போட்டுவிட்டீர்கள்.பாபகர்த்தாரி யோகம் 8ம் வீட்டில் உள்ளது என்பது இங்கு சூரியன் லக்கினாதிபதி இல்லையா?.தனக்குத்தானே தோஷத்தை ஏற்படுத்திக் கொள்வானா?.லக்கினத்தைப் பொறுத்தவரை அவரன்றி அணுவும் அசையாதே///////

    எட்டாம் வீடு பாபகர்த்தாரி யோகத்தால் பாதிப்படைந்துள்ளது. அதுவரை சரி. அதற்கு ஏழில் இருக்கும் லக்கினாதிபதி என்ன செய்ய முடியும்? என்ன சொல்ல வருகிறீர்கள்?

    ReplyDelete
  55. ////Blogger kmr.krishnan said...
    காலையிலேயே நீண்ட பின்னூட்டம் இட்டேன். அதன் பின்னர் மின்தடை. இப்போது பார்த்தால் என் பின்னூட்டம் மிஸ்ஸிங். முதல் முறை பார்த்தவுடன் ஏற்பட்ட எண்ண ஓட்டம் இப்போது வரவில்லை.
    அக்கு அக்காகப் பிரித்து அலசிவிட்டீர்கள்.நல்ல பதிவு.
    செவ்வாய், சனி சமபலம் பெற்று ஒருவரை ஒருவர் நேர் பார்வையாகப் பார்த்தது
    இவர் விஷயத்தில் நன்மையா தீமையா?//////

    என்ன பலம் என்றாலும் அவர்கள் ஒருவரை ஒருவர் பார்ப்பது தீமைதான்! தனித்தனி துறைகள். சனி உச்சம் பெற்றதால் அதற்குரிய வேலையைச் செய்தான். யோககாரகன் செவ்வாய் அவனுக்குரிய வேலையைச் செய்தான். செவ்வாயின் பார்வையால்தான் ஆயுள்காரகன் சனியால் ஜாதகனின் ஆயுளை நீட்டிக்க முடியவில்லை. சனியின் பார்வையால்தான் யோககாரகனால் எல்லா யோகத்தையும் வழங்க முடியவில்லை. குறிப்பாக தந்தை (ஒன்பதாம் இடத்திற்குரிய வேலை அது)

    ////// குரு கேது சேர்ந்தது ஆன்மீக நாட்டம் கொள்ள வைத்தது.இல்லையா?/////

    ஆமாம். நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  56. என் பின்னூட்டத்துக்குப் பதில் அளித்தமைக்கு நன்றி..
    'என்னடா இது கிராஸ் எக்ஸாமினஷன் ரொம்ப பண்றானே இந்த ஆள்' ன்னு கமென்ட்டையே
    போடாமல் விட்டுவிடுவீர்களோ?ன்னு நினைச்சேன்..புல் ஃபார்ம்லே இருக்கீங்க..நல்ல ஃப்ளோலே பதில் சொல்லியிருக்கீங்க..
    மறுபடியும் ஒரு தேங்க்ஸ்..

    ReplyDelete
  57. என்னதான் இருந்தாலும் சின்னப்பொண்ணை இப்புடி பப்ளிக்காக் குளிக்கவுட்டு 'சின்னச் சின்ன ஆசை..சிறகடிக்கும் ஆசை..' பாட்டுப் பாட வெச்சாப்போல இன்னிக்குப் பதிவு போட்ருக்கீங்க..இதெல்லாம் நல்லதுக்கா?எல்லாருமே என்னமாதிரி நல்லவுங்களா இருப்பாங்களா?

    ReplyDelete
  58. //////Blogger kannan said...
    ஐயா!
    கடிகாரம் என்பது அறிவியல் வளர்ச்சிக்கு பின்னர் வந்தது தான் இல்லையா ஐயா . நமது முன்னோர்கள், மேதைகள், ஜோதிட விற்பனர்கள்,

    சித்தர்கள் போன்ற மகா மேதைகள் எப்படி ஐயா கடிகாரம் இல்லாத காலத்தில்
    மிகவும் சரியாக ஜாதகத்தை கணித்து கூறினார்கள்.
    சாமுத்திரிக லட்சணம், கைரேகை , அருள் வாக்கு, பட்சி சாஸ்திரம், ஞானத்தால் பலன் கூறுவதற்கு கடிகாரம் தேவை இல்லை ஆனால்

    தாங்கள் நடத்தும் பாடத்திற்கு மூலாதாரமே " பிறந்த நேரம், நாள்," இல்லையா ஐயா?//////

    அந்தக் காலத்தில் கடிகாரம் இல்லையென்று யார் கூறினார்கள். மணல் கடிகாரம், நீர்க் கடிகாரம் எல்லாம் இருந்திருக்கிறது. மேலும் தெரிந்துகொள்ள இங்கே சென்று பாருங்கள்: http://en.wikipedia.org/wiki/History_of_timekeeping_devices

    ReplyDelete
  59. Blogger Uma said...
    நல்ல அலசல், விரிவாக பின்னூட்டம் இட இயலவில்லை. ரஜ்ஜு பற்றி ஒரு சந்தேகம் சென்ற பதிவுகளில் ஒன்றில்
    கேட்டிருக்கிறேன். அதற்கு பதில் அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.//////

    ரஜ்ஜு பற்றிய விரிவான அட்டவணை உள்ளது. தனி மின்னஞ்சலில் கேளுங்கள் தருகிறேன்!

    ReplyDelete
  60. /////Blogger minorwall said...
    என் பின்னூட்டத்துக்குப் பதில் அளித்தமைக்கு நன்றி..
    'என்னடா இது கிராஸ் எக்ஸாமினஷன் ரொம்ப பண்றானே இந்த ஆள்' ன்னு கமென்ட்டையே
    போடாமல் விட்டுவிடுவீர்களோ?ன்னு நினைச்சேன்..புல் ஃபார்ம்லே இருக்கீங்க..நல்ல ஃப்ளோலே பதில் சொல்லியிருக்கீங்க..
    மறுபடியும் ஒரு தேங்க்ஸ்..//////

    இதுவரை யாருக்கும் அப்படிச் செய்ததில்லை. க்வார்ட்டர், ஹாஃப், என்று கிடையாது. எப்போதுமே ஃபுல்தான் மைனர். நான் ஃபார்மைச் சொல்கிறேன். நீங்கள் காரைக்குடி குறிஞ்சியை நினத்துக்கொள்ளாதீர்கள்!

    ReplyDelete
  61. Blogger minorwall said...
    என்னதான் இருந்தாலும் சின்னப்பொண்ணை இப்புடி பப்ளிக்காக் குளிக்கவுட்டு 'சின்னச் சின்ன ஆசை..சிறகடிக்கும் ஆசை..' பாட்டுப் பாட வெச்சாப்போல இன்னிக்குப் பதிவு போட்ருக்கீங்க..இதெல்லாம் நல்லதுக்கா?எல்லாருமே என்னமாதிரி நல்லவுங்களா இருப்பாங்களா?/////

    இதன் மூலம் தாங்கள் சபைக்கு சொல்ல வரும் செய்தி என்னவோ?
    நீங்கள் நல்லவர் என்பதற்கு வரகுண பாண்டியன் சான்றிதழ் கொடுத்திருக்கிறாரா?

    ReplyDelete
  62. ////Blogger bhuvanar said...
    ஐரோப்பா அல்லது அமெரிக்களுக்கு அனைவருக்கும் பல பெண்கள் தொடர்பு இருக்குகிரதே... இது எப்படி ?...\\\\\\

    இந்தியர்களின்/குறிப்பாகத் தமிழர் பற்றி இப்படி குறைத்துப் பேசுவதை நான் கடுமையாக ஆட்சேபிக்கிறேன்..
    இங்கே விசுவாமித்திரர் காலத்துலேருந்து முனிவர்/ சாமியாரெல்லாம் கூட சல்லாபம் பண்றது சகஜம்தானே?

    நம்ம குரு பிருஹத் பராசரர் பத்தி ஏற்கனவே நான் இந்த ரீதியிலே கமென்ட் அடிச்சதுண்டு..லார்ட் கிருஷ்ணா பத்தி ஏதும் புதுசா விளக்கம் சொல்ல வேண்டியதில்லே.. .

    ReplyDelete
  63. "எந்த கிரகமும் அஸ்தமனம் ஆகவில்லை
    எந்த கிரகமும் மற்றொரு கிரகத்துடன் கிரகயுத்ததில் இல்லை"

    பதிலுக்கு எனது நன்றிகள்!சூரியனுடன் கிரக யுத்ததில் எந்த கிரகமும் இல்லை,ஆனால் சுக்கிரனும் ராகுவும் மற்றும் குருவும் கேதுவும் கிரக யுத்ததில் உள்ளன.நான் மறைவு இடத்தை அஸ்தமனம் என்று எடுத்துகொண்டு
    விட்டேன்.இது கிரக யுத்தம் ஆகாதா?

    ReplyDelete
  64. லக்கினாதிபதி என்பதால் சுபத்தன்மை(சுபகிரகம்) உடையதாகக் கருதவேண்டாமா?

    ReplyDelete
  65. Monday, October 10, 2011 5:39:00 PM

    minorwall said...
    ////Blogger bhuvanar said...
    ஐரோப்பா அல்லது அமெரிக்களுக்கு அனைவருக்கும் பல பெண்கள் தொடர்பு இருக்குகிரதே... இது எப்படி ?...\\\\\\

    இந்தியர்களின்/குறிப்பாகத் தமிழர் பற்றி இப்படி குறைத்துப் பேசுவதை நான் கடுமையாக ஆட்சேபிக்கிறேன்..
    இங்கே விசுவாமித்திரர் காலத்துலேருந்து முனிவர்/ சாமியாரெல்லாம் கூட சல்லாபம் பண்றது சகஜம்தானே?

    நம்ம குரு பிருஹத் பராசரர் பத்தி ஏற்கனவே நான் இந்த ரீதியிலே கமென்ட் அடிச்சதுண்டு..லார்ட் கிருஷ்ணா பத்தி ஏதும் புதுசா விளக்கம் சொல்ல வேண்டியதில்லே.. .////

    அனுமாரை மறந்துட்டீன்களே மாம்ஸ்...
    தமிழர்களை நான் குறைவாக எடை போடாவில்லை...ஆனால் நமது ஆட்கள் அட்லீஸ்ட் ஒரு 50 அப்புறம் டோட்டல அவுட் ஆயிராங்களே (கோவில், குளம் என்று சுற்றி கை இருப்பையும் காலி செய்து)...
    நம்ம எக்ஸ்பீரியான்ஸ்ல வேல்லையர்கள் முந்துகிறார்கள் என்பதே எனது அபிப்பிரையம்..

    ReplyDelete
  66. வணக்கம் அய்யா,
    என் சந்தேகத்திற்கு பதில் அளித்தமைக்கு நன்றிகள் கோடி.நான் சிம்மம் லக்னம்,சிம்மம் ராசி ‍ உத்திரம் 1ம் பாதம்.அந்த ஜோதிடர் அவ்வாறு அமைந்தால் வாழ்க்கை போராட்டம் நிறைந்ததாக இருக்கும் என்றார்.

    ReplyDelete
  67. Yes, I got the same paral at 6th place. Also I am simha Lagna.
    Also 7th place got 37 but 7th lord Sani in 12th place sitting on Punarpusa 4 and it is Vargothamam.

    +++++++++++
    Sir,
    You can see that 6th place got 35 Paral for him. What is the effect due to that./////

    ஏன் உங்களுக்கு அப்படி இருக்கிறதா? அப்படி இருந்தால் அது Debt, Disease & enemies களுக்கு உரிய இடம். இயற்கையாகவே அதிக பரல்கள் இருப்பதால் ஜாதகனுக்குக் கடனும், எதிரிகளும் இருக்கமாட்டர்கள். இருந்தாலும் ஜாதகனைக் கண்டதும் ஓடிப்போய்விடுவார்கள்.
    நோய் நொடிகள் இருக்காது.

    அதையும் மீறி ஸ்டீவ் ஜாப்ஸிற்கு கடுமையான நோய் ஏற்பட்டதற்குக் காரணம் அந்த வீடு பாபகர்த்தாரி யோகத்தில் சிதைந்துள்ளது! விளக்கம் போதுமா?

    ReplyDelete
  68. Blogger bhuvanar said...
    /////ஒரு சந்தேகம்...
    ஐரோப்பா அல்லது அமெரிக்களுக்கு அனைவருக்கும் பல பெண்கள் தொடர்பு இருக்குகிறதே... இது எப்படி ?... (எப்புடி ஆன்செர் பண்ணுவீங்க வாத்தியார் ?, ரூம் போட்டு யோசிச்ச கேள்வி தான்... )///////

    SP.VR. SUBBAIYA said...
    ////இதுக்கெல்லாம் ரூம் போட்டு யோசிக்க வேண்டாம். என்னுடைய பழைய பாடங்களைப் படித்தால் போதும். அனைவருக்கும் என்னும் சொல் தவறானது. இந்தப் பெண் மயக்கம் அனைவருக்கும், அனைத்து நாடுகளுக்கும் பொதுவானது. ஏன் நம்மூரில் இல்லையா? “இவள் கிடைச்சால் எப்படி இருக்கும்?” என்று யோசிக்கும் மனிதர்கள் இங்கே எத்தனை பேர்கள் உள்ளார்கள் தெரியுமா? காமமும் கள்ளத்தனமும் பொதுவானது. ஜாதகத்தில் நான்கு வகைகள் உள்ளன. தர்ம ஜாதகம், தன ஜாதகம், காமஜாதகம், ஞான ஜாதகம். காம ஜாதகக்காரர்கள் எல்லா இடத்திலும் உண்டு. அங்கே வெளிப்படையாக உள்ளார்கள். நம்மூர்களில் பாதிப்பேர் சமூகத்திற்குப் பயந்துகொண்டு திருட்டுத்தனமாகச் செய்வார்கள். அதுதான் உண்மை! /////

    அந்த நான்கு வகை ஜாதகங்களைப் பற்றி எனக்கு மறந்து விட்டதால் வகுப்பறையின் நூலகத்தில் தேடினேன் ...மேலும் அறிய விரும்புபவர்களுக்கு உதவியாக இருக்கட்டுமே என்று பாடங்களின் சுட்டிகள் கீழே கொடுக்கப் பட்டுள்ளது...
    http://classroom2007.blogspot.com/2007/03/blog-post_19.html
    http://classroom2007.blogspot.com/2010/01/doubt_23.html

    ReplyDelete
  69. //////// வரகுண பாண்டியன் /////
    யாரு அது..?
    அதே போல..அன்னிக்கே கேக்கணும்னு நினைச்சேன்.. மறந்துட்டேன்..அது என்னது?
    'ஸ்ரீரங்கத்து அ...தே.....' ..எனக்கு வேற மீனிங்லே பட்டது..
    சபையிலே வெச்சு சொல்லமுடியாது..எலாத்துக்கும் வாத்தியார் நீங்க..மெயில் பாடமா சொல்லி விளக்கிப் புரிய வெக்கலாமே..

    ReplyDelete
  70. /////SP.VR. SUBBAIYA said... அதனால்தான் அந்தக் காலத்தில் இருந்தது போல முழுவாழ்க்கையையும் அலசி Life பலன்களை எழுதிக்கொடுக்கும் ஜோதிடர்கள் இன்று இல்லை. என் தந்தையாரின் காலத்தில் அப்படி இருந்த இருவரை எனக்குத் தெரியும். ஒருவர் திருச்சூர் ஆசான். இன்னொருவர் கொழிஞ்சாம்பாறையைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி பணிக்கர்!//////////

    இவுங்க ரெண்டு பெரும் இப்போ இல்லையா சார்..

    ReplyDelete
  71. /////bhuvanar said... ... அனுமாரை மறந்துட்டீன்களே மாம்ஸ்...///////

    ஆறு பாவத்தை அள்ளிக் கொட்டிக்கதீங்க..அப்புறம் சவுதிக்கு அனுப்பிவெச்சுடுவாறு..

    பார்த்துக்கிடுங்க..

    bhuvanar said... ... நம்ம எக்ஸ்பீரியான்ஸ்ல வேல்லையர்கள் முந்துகிறார்கள் என்பதே எனது அபிப்பிரையம்..

    அது என்னவோ கொஞ்சம் உண்மைதான்..ஒத்துக்குறேன்..

    அதுக்காக சுத்தமா நம்ம ஆசியவுடைய பங்களிப்பு சுத்தமா இல்லைன்னு சொல்லமுடியாது..asia carrea , anjali kara ன்னு

    ஆசியா தரப்பிலும்ava lauren போன்ற ஆட்களுக்குப் போட்டியா நிறைய முயற்சிகள் பண்றாங்க..இன்னும் சொல்லப்போனா இப்பத்தான் interracial ஆகிப்போச்சே..இதுலே எங்கேருந்து நீங்க asia, america, europe ன்னு பிரிச்சுப் பார்க்குறது?

    (வாத்தியார் சென்சார் லே தப்பிக்குமா இந்த மேட்டர்?)

    ReplyDelete
  72. /////////SP.VR. SUBBAIYA said... நீங்கள் காரைக்குடி குறிஞ்சியை நினத்துக்கொள்ளாதீர்கள்!//////////

    என்னதான் இருந்தாலும் 'குறிஞ்சி' டிம் லைட் க்கு வேற எந்த இடமுமே ஈடாகலே சார்..நீங்க வேற அதை ஞாபகப்படுத்திட்டீங்க..

    அலங்கார் பை-நைட், அன்னபூர்ணா, சித்ரா மெஸ்..ன்னு ஒண்ணொண்ணா ஞாபகம் வருது போங்க..

    ReplyDelete
  73. dear sir,

    thanks for steve jobs horo analysis.
    it will require some time to assimilate his analysis. Heavy lesson for this week i believe.

    thanks once again.

    ReplyDelete
  74. நான்கு வகை ஜாதகங்களுக்குரிய சுட்டிகளைத் தேடித் தந்த சகோதரி தேமொழிக்கு நன்றி.

    குறுக்கு விசாரணை Cross Exam போன்ற நறுக்கான, அலசப்பட்ட தம்பி மைனரின் வினாக்களும் அதற்கான வாத்தியாரின் மனம் திறந்த பதில்களும் பிரமாதம்.

    மைனருக்கும் நன்றி.

    வாத்தியாருக்கும் நன்றி.

    ReplyDelete
  75. ////Blogger minorwall said...
    ////Blogger bhuvanar said...
    ஐரோப்பா அல்லது அமெரிக்களுக்கு அனைவருக்கும் பல பெண்கள் தொடர்பு இருக்குகிறதே... இது எப்படி ?...\\\\\\
    இந்தியர்களின்/குறிப்பாகத் தமிழர் பற்றி இப்படி குறைத்துப் பேசுவதை நான் கடுமையாக ஆட்சேபிக்கிறேன்..
    இங்கே விசுவாமித்திரர் காலத்துலேருந்து முனிவர்/ சாமியாரெல்லாம் கூட சல்லாபம் பண்றது சகஜம்தானே?////
    நம்ம குரு பிருஹத் பராசரர் பத்தி ஏற்கனவே நான் இந்த ரீதியிலே கமென்ட் அடிச்சதுண்டு..லார்ட் கிருஷ்ணா பத்தி ஏதும் புதுசா விளக்கம் சொல்ல வேண்டியதில்லே.. ////////.

    நீங்கள் சொன்னாலும் யாரும் சீரியசாக எடுத்துக்கொள்ளப்போவதில்லை! நாட்டின் நிலைமை அப்படி!

    ReplyDelete
  76. ////Blogger govind said...
    "எந்த கிரகமும் அஸ்தமனம் ஆகவில்லை
    எந்த கிரகமும் மற்றொரு கிரகத்துடன் கிரகயுத்ததில் இல்லை"
    பதிலுக்கு எனது நன்றிகள்!சூரியனுடன் கிரக யுத்ததில் எந்த கிரகமும் இல்லை,ஆனால் சுக்கிரனும் ராகுவும் மற்றும் குருவும் கேதுவும் கிரக யுத்ததில் உள்ளன.நான் மறைவு இடத்தை அஸ்தமனம் என்று எடுத்துகொண்டு
    விட்டேன்.இது கிரக யுத்தம் ஆகாதா?////////

    ஒரே வீட்டில் இருப்பதால் கிரகயுத்தம் என்று பொருள் அல்ல! இரண்டு கிரகங்களுக்கும் இடையே உள்ள பாகைகளை - அதாவது இடைவெளியையும் பாருங்கள்

    ReplyDelete
  77. ////Blogger Rajaram said...
    லக்கினாதிபதி என்பதால் சுபத்தன்மை(சுபகிரகம்) உடையதாகக் கருதவேண்டாமா?/////

    ஒரு சில மேட்டர்களில் மட்டும்தான் Temporary Benefics என்று அதற்குப் பெயர். இயற்கைக் குணம் & சுபாவம் போகாது!

    ReplyDelete
  78. /////Blogger bhuvanar said...
    minorwall said...
    ////Blogger bhuvanar said...
    ஐரோப்பா அல்லது அமெரிக்களுக்கு அனைவருக்கும் பல பெண்கள் தொடர்பு இருக்குகிரதே... இது எப்படி ?...\\\\\\
    இந்தியர்களின்/குறிப்பாகத் தமிழர் பற்றி இப்படி குறைத்துப் பேசுவதை நான் கடுமையாக ஆட்சேபிக்கிறேன்..
    இங்கே விசுவாமித்திரர் காலத்துலேருந்து முனிவர்/ சாமியாரெல்லாம் கூட சல்லாபம் பண்றது சகஜம்தானே?
    நம்ம குரு பிருஹத் பராசரர் பத்தி ஏற்கனவே நான் இந்த ரீதியிலே கமென்ட் அடிச்சதுண்டு..லார்ட் கிருஷ்ணா பத்தி ஏதும் புதுசா விளக்கம் சொல்ல வேண்டியதில்லே.. .////
    அனுமாரை மறந்துட்டீன்களே மாம்ஸ்...
    தமிழர்களை நான் குறைவாக எடை போடாவில்லை...ஆனால் நமது ஆட்கள் அட்லீஸ்ட் ஒரு 50 அப்புறம் டோட்டல அவுட் ஆயிராங்களே (கோவில், குளம் என்று சுற்றி கை இருப்பையும் காலி செய்து)...
    நம்ம எக்ஸ்பீரியான்ஸ்ல வெள்ளையர்கள் முந்துகிறார்கள் என்பதே எனது அபிப்பிராயம்..//////

    சில விஷய்ங்களைப் பதிவில் எழுத முடியாது! ஆகவே இதை இத்தோடு விட்டுவிடுகிறேன் பாண்டியன்!

    ReplyDelete
  79. ////Blogger R.Srishobana said...
    வணக்கம் அய்யா,
    என் சந்தேகத்திற்கு பதில் அளித்தமைக்கு நன்றிகள் கோடி.நான் சிம்மம் லக்னம்,சிம்மம் ராசி ‍ உத்திரம் 1ம் பாதம்.அந்த ஜோதிடர் அவ்வாறு அமைந்தால் வாழ்க்கை போராட்டம் நிறைந்ததாக இருக்கும் என்றார்./////

    இன்றைய விலைவாசியில், நாளுக்கு நாள் உயரும் தங்கத்தின் விலையால் யார்தான் நிம்மதியாக இருக்கிறார்கள்?

    ReplyDelete
  80. ////Blogger Balaji said...
    Yes, I got the same paral at 6th place. Also I am simha Lagna.
    Also 7th place got 37 but 7th lord Sani in 12th place sitting on Punarpusa 4 and it is Vargothamam./////

    if the seventh lord is in 12th place, the 37 parals obtained by the 7th house will become diluted milk!

    ReplyDelete
  81. ////Blogger தேமொழி said...
    Blogger bhuvanar said...
    /////ஒரு சந்தேகம்...
    ஐரோப்பா அல்லது அமெரிக்களுக்கு அனைவருக்கும் பல பெண்கள் தொடர்பு இருக்குகிறதே... இது எப்படி ?... (எப்புடி ஆன்செர் பண்ணுவீங்க வாத்தியார் ?, ரூம் போட்டு யோசிச்ச கேள்வி தான்... )///////
    SP.VR. SUBBAIYA said...
    ////இதுக்கெல்லாம் ரூம் போட்டு யோசிக்க வேண்டாம். என்னுடைய பழைய பாடங்களைப் படித்தால் போதும். அனைவருக்கும் என்னும் சொல் தவறானது. இந்தப் பெண் மயக்கம் அனைவருக்கும், அனைத்து நாடுகளுக்கும் பொதுவானது. ஏன் நம்மூரில் இல்லையா? “இவள் கிடைச்சால் எப்படி இருக்கும்?” என்று யோசிக்கும் மனிதர்கள் இங்கே எத்தனை பேர்கள் உள்ளார்கள் தெரியுமா? காமமும் கள்ளத்தனமும் பொதுவானது. ஜாதகத்தில் நான்கு வகைகள் உள்ளன. தர்ம ஜாதகம், தன ஜாதகம், காமஜாதகம், ஞான ஜாதகம். காம ஜாதகக்காரர்கள் எல்லா இடத்திலும் உண்டு. அங்கே வெளிப்படையாக உள்ளார்கள். நம்மூர்களில் பாதிப்பேர் சமூகத்திற்குப் பயந்துகொண்டு திருட்டுத்தனமாகச் செய்வார்கள். அதுதான் உண்மை! /////
    அந்த நான்கு வகை ஜாதகங்களைப் பற்றி எனக்கு மறந்து விட்டதால் வகுப்பறையின் நூலகத்தில் தேடினேன் ...மேலும் அறிய விரும்புபவர்களுக்கு உதவியாக இருக்கட்டுமே என்று பாடங்களின் சுட்டிகள் கீழே கொடுக்கப் பட்டுள்ளது...
    http://classroom2007.blogspot.com/2007/03/blog-post_19.html
    http://classroom2007.blogspot.com/2010/01/doubt_23.html/////

    நல்லது. உங்களின் பரோபகாரத்திற்கு நன்றி சகோதரி!

    ReplyDelete
  82. Blogger minorwall said...
    //////// வரகுண பாண்டியன் /////
    யாரு அது..?
    அதே போல..அன்னிக்கே கேக்கணும்னு நினைச்சேன்.. மறந்துட்டேன்..அது என்னது?
    'ஸ்ரீரங்கத்து அ...தே.....' ..எனக்கு வேற மீனிங்லே பட்டது..
    சபையிலே வெச்சு சொல்லமுடியாது..எலாத்துக்கும் வாத்தியார் நீங்க..மெயில் பாடமா சொல்லி விளக்கிப் புரிய வெக்கலாமே..///////

    அ...தே...என்றால் அழகு தேவதைகள் என்று அர்த்தம் மைனர்!

    ReplyDelete
  83. /////Blogger minorwall said...
    /////SP.VR. SUBBAIYA said... அதனால்தான் அந்தக் காலத்தில் இருந்தது போல முழுவாழ்க்கையையும் அலசி Life பலன்களை எழுதிக்கொடுக்கும் ஜோதிடர்கள் இன்று இல்லை. என் தந்தையாரின் காலத்தில் அப்படி இருந்த இருவரை எனக்குத் தெரியும். ஒருவர் திருச்சூர் ஆசான். இன்னொருவர் கொழிஞ்சாம்பாறையைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி பணிக்கர்!//////////
    இவுங்க ரெண்டு பெரும் இப்போ இல்லையா சார்../////

    அவர்கள் இல்லை தச்சன்பாறையில் வேறு ஒருவர் இருக்கிறார்!

    ReplyDelete
  84. ////Blogger minorwall said...
    /////bhuvanar said... ... அனுமாரை மறந்துட்டீன்களே மாம்ஸ்...///////
    ஆறு பாவத்தை அள்ளிக் கொட்டிக்கதீங்க..அப்புறம் சவுதிக்கு அனுப்பிவெச்சுடுவாறு..
    பார்த்துக்கிடுங்க..
    bhuvanar said... ... நம்ம எக்ஸ்பீரியான்ஸ்ல வெள்ளையர்கள் முந்துகிறார்கள் என்பதே எனது அபிப்பிரையம்..
    அது என்னவோ கொஞ்சம் உண்மைதான்..ஒத்துக்குறேன்..
    அதுக்காக சுத்தமா நம்ம ஆசியவுடைய பங்களிப்பு சுத்தமா இல்லைன்னு சொல்லமுடியாது..asia carrea , anjali kara ன்னு
    ஆசியா தரப்பிலும்ava lauren போன்ற ஆட்களுக்குப் போட்டியா நிறைய முயற்சிகள் பண்றாங்க..இன்னும் சொல்லப்போனா இப்பத்தான் interracial ஆகிப்போச்சே..இதுலே எங்கேருந்து நீங்க asia, america, europe ன்னு பிரிச்சுப் பார்க்குறது?
    (வாத்தியார் சென்சார் லே தப்பிக்குமா இந்த மேட்டர்?)///////

    வாத்தியாரின் கத்திரியைக் காணவில்லை! யார் லவட்டியது என்று தெரியவில்லை!

    ReplyDelete
  85. //////Blogger minorwall said...
    /////////SP.VR. SUBBAIYA said... நீங்கள் காரைக்குடி குறிஞ்சியை நினத்துக்கொள்ளாதீர்கள்!//////////
    என்னதான் இருந்தாலும் 'குறிஞ்சி' டிம் லைட் க்கு வேற எந்த இடமுமே ஈடாகலே சார்..நீங்க வேற அதை ஞாபகப்படுத்திட்டீங்க..
    அலங்கார் பை-நைட், அன்னபூர்ணா, சித்ரா மெஸ்..ன்னு ஒண்ணொண்ணா ஞாபகம் வருது போங்க..//////

    கல்லுக்கட்டி, வருவல்சீவல், மொச்சை பெரட்டல் எல்லாம் நினைவில் இல்லையா?

    ReplyDelete
  86. /////Blogger sriganeshh said...
    dear sir,
    thanks for steve jobs horo analysis. it will require some time to assimilate his analysis. Heavy lesson for this week i believe.
    thanks once again.////

    பல விஷயங்களைக் கோர்த்து எழுதுவதற்கு எனக்கு அதிக நேரம் பிடித்த பதிவு இதுதான்!

    ReplyDelete
  87. /////Blogger krishnar said...
    நான்கு வகை ஜாதகங்களுக்குரிய சுட்டிகளைத் தேடித் தந்த சகோதரி தேமொழிக்கு நன்றி.
    குறுக்கு விசாரணை Cross Exam போன்ற நறுக்கான, அலசப்பட்ட தம்பி மைனரின் வினாக்களும் அதற்கான வாத்தியாரின் மனம் திறந்த பதில்களும் பிரமாதம்.
    மைனருக்கும் நன்றி.
    வாத்தியாருக்கும் நன்றி.//////

    இதுபோன்ற கேள்விகள் மூலம்தான் நம்மை நாமே பரிசோதித்துப் பார்த்துக்கொள்ள முடியும் பாண்டியன்!

    ReplyDelete
  88. பதிவுகள் அனைத்தும் அருமை.

    ReplyDelete
  89. //////SP.VR. SUBBAIYA said...

    கல்லுக்கட்டி, வருவல்சீவல், மொச்சை பெரட்டல் எல்லாம் நினைவில் இல்லையா?//////

    இது என்ன லிஸ்ட்ன்னு புரியலே..

    ReplyDelete
  90. /////Blogger krishnar said...
    நான்கு வகை ஜாதகங்களுக்குரிய சுட்டிகளைத் தேடித் தந்த சகோதரி தேமொழிக்கு நன்றி.
    குறுக்கு விசாரணை Cross Exam போன்ற நறுக்கான, அலசப்பட்ட தம்பி மைனரின் வினாக்களும் அதற்கான வாத்தியாரின் மனம் திறந்த பதில்களும் பிரமாதம்.
    மைனருக்கும் நன்றி.
    வாத்தியாருக்கும் நன்றி.//////

    உங்களைப் போன்ற ஆர்வமுள்ளவர்கள் தொடர்ந்து கொடுக்கும் ஊக்கம்தான் ஆசிரியரை தொடர்ந்து எழுதச்செய்கிறது..

    என்னைப்போலே எப்போதாவது பாடத்தில் கவனம் செலுத்தும் ஆட்களையும் பாராட்டி நன்றி சொன்ன உங்களுக்கு ஒரு ஸ்பெஷல் நன்றி..

    ReplyDelete
  91. Some of my doubts arising on breaking my little brain…

    1. Lagna is 149.3 degrees …then why we should not see effects taking virgo as lagna ? If we see from there, Mercury being lagna & 10th lord in 5th (friendly Saturn house) in the nakshatra of moon (lord of 11th house)…can we say justifies his billionaire status acquired through knowledge business.

    2. Lagna lord is in nakshatra of Rahu ….is it sort of eclipse???? Further if we consider point no.1, then lagna lord is in 8th … net effect lagna lord is weak. Is it so….???
    3. Your point no.5 requires further study for me as I feel even though 10th house has high astakavarga points and Saturn is uchha but the dispositor is venus only. Venus will give only creativity which he did. But earning potential has to be from employment or business …here Saturn means employment which he never excelled…so something I am missing here….
    4. considering point no.1 here, then 10 th lord Mercury may give knowledge business which supported by venus creativity ensures money flow….may be am trying to justify too..?

    or alternatively I may be looking his chart wrongly..will stop here and will take this for further study at a later time… with inputs from you.
    Thanks once again for your beautiful analysis...when i go through the same, i am getting lot of insights.

    ReplyDelete
  92. /////SP.VR. SUBBAIYA said...
    அவர்கள் இல்லை தச்சன்பாறையில் வேறு ஒருவர் இருக்கிறார்!///

    நன்றி..பெயர் மட்டும் சொன்னால் போதும் சார்..
    நான் உங்களைத் தொந்தரவு பண்ணாம ட்ரை பண்ணி பார்க்குறேன்..

    ReplyDelete
  93. /////Blogger atchaya said...
    பதிவுகள் அனைத்தும் அருமை.////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  94. /////Blogger sriganeshh said...
    Some of my doubts arising on breaking my little brain
    1. Lagna is 149.3 degrees then why we should not see effects taking virgo as lagna ? If we see from there, Mercury being lagna & 10th lord in 5th (friendly Saturn house) in the nakshatra of moon (lord of 11th house)…can we say justifies his billionaire status acquired through knowledge business.
    2. Lagna lord is in nakshatra of Rahu ….is it sort of eclipse???? Further if we consider point no.1, then lagna lord is in 8th … net effect lagna lord is weak. Is it so….???
    3. Your point no.5 requires further study for me as I feel even though 10th house has high astakavarga points and Saturn is uchha but the dispositor is venus only. Venus will give only creativity which he did. But earning potential has to be from employment or business …here Saturn means employment which he never excelled…so something I am missing here….
    4. considering point no.1 here, then 10 th lord Mercury may give knowledge business which supported by venus creativity ensures money flow….may be am trying to justify too..?
    or alternatively I may be looking his chart wrongly..will stop here and will take this for further study at a later time… with inputs from you.////////

    நீங்கள் கடைசியாகச் சொன்னதுதான் சரி. If & Buts will not work in horoscopes. அனுஷ்கா சர்மா அத்தை மகளாக இருந்தால் எப்படி இருக்கும் என்று யோசிக்காமல் யதார்த்தமாக யோசியுங்கள். பிறந்த நேரத்தை 7.25 (10 நிமிடங்கள் அதிகமாக) என்று வைத்தால் நீங்கள் விரும்பும் லக்கினம் வரும். ஆனால் சிம்மத்தை வைத்து வந்த பரல்கள் வராது. 10ஆம் வீட்டிற்கு 27 பரல்கள் வரும் புதனுக்கு 7தான் வரும். அந்த நேரத்தில் பிறந்தவன் ஒருவன் இருப்பான் அவன் எங்கே இருக்கிறான்? எப்படி இருக்கிறான் என்று தேட வேண்டும். நீங்கள் சொன்னபடி பார்த்தால் 4ல் ராகுவும், மாந்தியும் - சுகக்கேடு இல்லையா? ஜாதகர் சுகமாக வசதியாக அல்லவா (அட்லீஸ்ட் அவருடைய 25 வயதிற்கு மேல்)
    அத்துடன் கன்னி லக்கினம் என்று வைத்தால் எட்டாம் வீட்டின் பலன் வேறுமாதிரி வரும். ஜாதகர் இறந்திருக்க மாட்டார். ஆகவே இருக்கும் ஜாதகத்திற்குப் பலன் பாருங்கள். Border birth என்பதால் மாற்றி யோசிக்காதீர்கள். நீங்களும் குழம்பி என்னையும் குழப்பாதீர்கள்!

    ReplyDelete
  95. ///////Blogger minorwall said...
    /////SP.VR. SUBBAIYA said...
    அவர்கள் இல்லை தச்சன்பாறையில் வேறு ஒருவர் இருக்கிறார்!///
    நன்றி..பெயர் மட்டும் சொன்னால் போதும் சார்..
    நான் உங்களைத் தொந்தரவு பண்ணாம ட்ரை பண்ணி பார்க்குறேன்..//////

    விதி யாரை விட்டது!!!:-))) முகவரி கீழே உள்ளது!

    T.K.Vasudevan
    Astrologer
    Palakkad Mannarkad Road
    Thachampara - 678 593

    (This place is in the 35th kilo meter from Palakkad)

    ReplyDelete
  96. ///விதி யாரை விட்டது!!!:-))) முகவரி கீழே உள்ளது!///////

    Thanks..a lot..

    ReplyDelete
  97. இங்கே விசுவாமித்திரர் காலத்துலேருந்து முனிவர்//

    அதையெல்லாம் தாண்டி வந்தபின்தான் அவருக்கு 'பிரம்மா ரிஷி' பட்டம் கிடைத்தது என்பதையும் பார்க்க வேண்டும் இல்லையா?

    லார்ட் கிருஷ்ணா பத்தி ஏதும் புதுசா விளக்கம் சொல்ல வேண்டியதில்லே.. //

    நம் சிற்றறிவிற்கு எட்டாத விஷயங்கள் கோடிக்கணக்கில் இருக்கின்றன. அவைகளை முழுவதும் ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வர இந்த ஆயுள் போதாது. கிருஷ்ணர் ஒரே நேரத்தில் ஓராயிரம் கோபியரின் மனம் சேர்ந்து கைகோர்த்து நின்றது என்பது நாம் நினைப்பது போல் பூத உடல் தொடர்பல்ல. ஒருவேளை விவாதத்திற்காக அப்படி வைத்தாலும், அவர் மனது வைத்தால் எல்லா பெண்களையுமே அவர் காலடியில் கிடக்க செய்யமுடியாதா? ஏன் சில குறிப்பிட்ட பெண்களுடன் மாத்திரம் பழகினார்? இதற்கு ஒரு கதையும் இருக்கிறது. ராமாயணத்தில் வனவாசத்தின் போது ராமரின் அழகால், தெய்வாம்சத்தால் முனிவர்கள் ஈர்க்கப்பட்டு அவரை கட்டித்தழுவ விரும்பினார்களாம் (அன்புமிகுதியால், பக்தியால்). அதற்கு ராமர் இப்போது வனவாசத்தில் முடியாது என்று மறுத்து அடுத்த ஜென்மத்தில் நீங்கள் விரும்பியது நடக்கும் என்றாராம். அவர்கள்தான் கோபிகைகள் என்று ஒருமுறை படித்தேன். (இதைப்பற்றி மேலும் விரிவாகப்படித்தவர்கள் தொடரலாம்).

    ஒருவேளை கிருஷ்ணரே கற்பனை என்று சொன்னால் அதற்கு என்னிடம் பதில் கிடையாது.

    ReplyDelete
  98. T.K.வாசுதேவன் Astrologer //

    முகவரிக்கு நன்றிகள்!

    ReplyDelete
  99. அனுமாரை மறந்துட்டீன்களே மாம்ஸ்...//

    'அனுமான் சாலீசா' தினமும் படிக்கிறீர்களா இல்லையா? அனுமார் இன்னமும் சிரஞ்சீவியாக இந்த உலகத்தில்தான் இருக்கிறார், ஜாக்கிரதை.

    ReplyDelete
  100. Uma said...
    அனுமாரை மறந்துட்டீன்களே மாம்ஸ்...//

    'அனுமான் சாலீசா' தினமும் படிக்கிறீர்களா இல்லையா? அனுமார் இன்னமும் சிரஞ்சீவியாக இந்த உலகத்தில்தான் இருக்கிறார், ஜாக்கிரதை.////

    பெண் கிடைபதற்கு சிறந்த பரிகாரம் சுந்தர காண்டம் படிப்பது என்று கேள்வி பட்டேன்...தினமும் படிக்க முயற்சிகின்ரேன்...

    ReplyDelete
  101. /// அதற்கு ராமர் இப்போது வனவாசத்தில் முடியாது என்று மறுத்து அடுத்த ஜென்மத்தில் நீங்கள் விரும்பியது நடக்கும் என்றாராம். அவர்கள்தான் கோபிகைகள் என்று ஒருமுறை படித்தேன்.///

    புராணக்கதை சரிதான். கிருஷ்ணரின் செயல்களைப்பற்றி நிறைய விமர்சனங்கள்
    அவர் வாழ்ந்த(?)காலத்திலேயே இருந்துள்ளது போலும். அதற்கு சமாதானமாகவே இந்தக் கதை இடைச் செருகலாகவே சொல்லப்பட்டிருக்க வாய்ப்பு உள்ளது.

    கிருஷ்ணர் பலதார மணம் செய்தது,அவ‌ருடைய அரசகுல பாரம்பரியமே.

    ஜவ‌ஹர்லால் நேருவிற்கும், எம் ஜி ஆருக்கும் இருந்த ஒரு கவர்ச்சியை,குறிப்பாகப் பெண்களிடம் அவர்களுக்கு இருந்த செல்வாக்கை, நேரில் பார்த்தவன் நான்.அதனால் கிருஷ்ணருடைய பெண்கள் தொடர்புடைய புராணக் கதைகள் எனக்கு வியப்பையோ, அதிர்ச்சியையோ அளிக்கவில்லை.

    உமாவின் கவனம் கொஞ்சம் இது போன்ற‌ விஷயங்களில் திரும்பியிருப்பது
    நல்ல திருப்பமதான்.

    ReplyDelete
  102. /////Blogger minorwall said...
    ///விதி யாரை விட்டது!!!:-))) முகவரி கீழே உள்ளது!///////
    Thanks..a lot..///////

    ஐயோ பாவம். இந்தமுறை இந்தப் பாவம் அந்த ஜோதிடருக்காக! உங்களோடு சேர்ந்து இன்னொருவரும் நன்றி சொல்லியிருக்கிறார். ஸ்க்ரோல் டவுன் செய்து பாருங்கள் மைனர்!

    ReplyDelete
  103. ///////Blogger Uma said...
    இங்கே விசுவாமித்திரர் காலத்துலேருந்து முனிவர்//
    அதையெல்லாம் தாண்டி வந்தபின்தான் அவருக்கு 'பிரம்மா ரிஷி' பட்டம் கிடைத்தது என்பதையும் பார்க்க வேண்டும் இல்லையா?
    லார்ட் கிருஷ்ணா பத்தி ஏதும் புதுசா விளக்கம் சொல்ல வேண்டியதில்லே.. //
    நம் சிற்றறிவிற்கு எட்டாத விஷயங்கள் கோடிக்கணக்கில் இருக்கின்றன. அவைகளை முழுவதும் ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வர இந்த ஆயுள் போதாது. கிருஷ்ணர் ஒரே நேரத்தில் ஓராயிரம் கோபியரின் மனம் சேர்ந்து கைகோர்த்து நின்றது என்பது நாம் நினைப்பது போல் பூத உடல் தொடர்பல்ல. ஒருவேளை விவாதத்திற்காக அப்படி வைத்தாலும், அவர் மனது வைத்தால் எல்லா பெண்களையுமே அவர் காலடியில் கிடக்க செய்யமுடியாதா? ஏன் சில குறிப்பிட்ட பெண்களுடன் மாத்திரம் பழகினார்? இதற்கு ஒரு கதையும் இருக்கிறது. ராமாயணத்தில் வனவாசத்தின் போது ராமரின் அழகால், தெய்வாம்சத்தால் முனிவர்கள் ஈர்க்கப்பட்டு அவரை கட்டித்தழுவ விரும்பினார்களாம் (அன்புமிகுதியால், பக்தியால்). அதற்கு ராமர் இப்போது வனவாசத்தில் முடியாது என்று மறுத்து அடுத்த ஜென்மத்தில் நீங்கள் விரும்பியது நடக்கும் என்றாராம். அவர்கள்தான் கோபிகைகள் என்று ஒருமுறை படித்தேன். (இதைப்பற்றி மேலும் விரிவாகப்படித்தவர்கள் தொடரலாம்).
    ஒருவேளை கிருஷ்ணரே கற்பனை என்று சொன்னால் அதற்கு என்னிடம் பதில் கிடையாது.//////

    நீங்கள் சொன்னால் நம்புகிறோம். கற்பனை என நினைப்பவர்கள் நினைத்துவிட்டுப் போகிறார்கள்!

    ReplyDelete
  104. /////Blogger Uma said...
    T.K.வாசுதேவன் Astrologer //
    முகவரிக்கு நன்றிகள்!//////

    ஐயோ பாவம். இந்தமுறை அந்த ஜோதிடருக்காக!:-))))))

    ReplyDelete
  105. ////Blogger Uma said...
    அனுமாரை மறந்துட்டீன்களே மாம்ஸ்...//
    'அனுமான் சாலீசா' தினமும் படிக்கிறீர்களா இல்லையா? அனுமார் இன்னமும் சிரஞ்சீவியாக இந்த உலகத்தில்தான் இருக்கிறார், ஜாக்கிரதை.////

    ஞாபகப்படுத்திற்கு நன்றி அம்மணி!

    ReplyDelete
  106. /////Blogger bhuvanar said...
    Uma said...
    அனுமாரை மறந்துட்டீன்களே மாம்ஸ்...//
    'அனுமான் சாலீசா' தினமும் படிக்கிறீர்களா இல்லையா? அனுமார் இன்னமும் சிரஞ்சீவியாக இந்த உலகத்தில்தான் இருக்கிறார், ஜாக்கிரதை.////
    பெண் கிடைபதற்கு சிறந்த பரிகாரம் சுந்தர காண்டம் படிப்பது என்று கேள்வி பட்டேன்...தினமும் படிக்க முயற்சிகின்றேன்??///////.

    சுந்தரகாண்டம் மனத்துன்பங்கள் போவதற்குப் படிப்பார்கள். பெண் கிடைப்பதற்கு என்று எழுதினால் அது தவறான அர்த்தத்தைக் கொடுக்கும்
    திருமணத்திற்குப் பெண் கிடைப்பதற்கு என்று விளக்கமாகச் சொல்லுங்கள் பாண்டியன்!

    ReplyDelete
  107. //////Blogger kmr.krishnan said...
    /// அதற்கு ராமர் இப்போது வனவாசத்தில் முடியாது என்று மறுத்து அடுத்த ஜென்மத்தில் நீங்கள் விரும்பியது நடக்கும் என்றாராம். அவர்கள்தான் கோபிகைகள் என்று ஒருமுறை படித்தேன்.///
    புராணக்கதை சரிதான். கிருஷ்ணரின் செயல்களைப்பற்றி நிறைய விமர்சனங்கள்
    அவர் வாழ்ந்த(?)காலத்திலேயே இருந்துள்ளது போலும். அதற்கு சமாதானமாகவே இந்தக் கதை இடைச் செருகலாகவே சொல்லப்பட்டிருக்க வாய்ப்பு உள்ளது.
    கிருஷ்ணர் பலதார மணம் செய்தது,அவ‌ருடைய அரசகுல பாரம்பரியமே.
    ஜவ‌ஹர்லால் நேருவிற்கும், எம் ஜி ஆருக்கும் இருந்த ஒரு கவர்ச்சியை,குறிப்பாகப் பெண்களிடம் அவர்களுக்கு இருந்த செல்வாக்கை, நேரில் பார்த்தவன் நான்.அதனால் கிருஷ்ணருடைய பெண்கள் தொடர்புடைய புராணக் கதைகள் எனக்கு வியப்பையோ, அதிர்ச்சியையோ அளிக்கவில்லை./////

    எம்.கே..டி பாகவதரை விட்டுவிட்டீர்களே!

    ReplyDelete
  108. உமாவின் கவனம் கொஞ்சம் இது போன்ற‌ விஷயங்களில் திரும்பியிருப்பது
    நல்ல திருப்பமதான்.//

    வகுப்பறையில் நான் போடும் கமெண்ட்ஸ் ஐக் கொண்டு இதை எழுதியிருக்கிறீர்கள், நன்றி! கவனம் இப்போது திரும்பவில்லை, எப்போதுமே இருந்திருக்கிறது, இப்போதும் இருக்கிறது, இனியும் இருக்கும். புராணக்கதைகள் தாத்தா சொல்லி சின்ன வயதிலேயே அத்துப்படி. இதைத்தவிர இன்னும் கடினமான விஷயங்களையும் படித்துக்கொண்டுதான் இருக்கிறேன். எனக்குள் இருக்கும் ஒரு தேடலே அதற்குக்காரணம். கடவுளையும், ஜோதிடத்தையும், விதியையும் நான் தீவிரமாகவே நம்புகிறேன்.

    ReplyDelete
  109. கிருஷ்ணர் அரசகுலம் என்றால், ராமர் எந்தக் குலம்...
    அப்படிஎன்றால் ராமர் ஏன்? அதைச் செய்யவில்லை..
    அதோடு இவர்கள் ஒன்றும், எம்.ஜி.ஆர். நேரு போன்ற சாதாரண மனிதர்கள் அல்ல..
    அவதாரப் புருஷர்கள்... அப்படி இருக்க இவர்களின் மீது வரும் பலிக்கு தவறான புரிதலுக்கு தெரிந்தவர்கள் விளக்கம் தருவது அவசியமாகிறது.. ஆகவே சகோதிரி உமாவின் சொன்ன புராணக் கதை எதுவானாலும் சரி அதன் தார்ப்பரியம் அர்த்தம் புரிந்துக் கொள்ளவேண்டியதே! அதுவே உண்மை... எனது வாக்கு சகோதிரிக்கே....

    நன்றி,
    ஆலாசியம் கோ.

    ReplyDelete
  110. ///அதனால் கிருஷ்ணருடைய பெண்கள் தொடர்புடைய புராணக் கதைகள் எனக்கு வியப்பையோ, அதிர்ச்சியையோ அளிக்கவில்லை./////

    கிருஷ்ணன் சார் தாங்கள் இதை சொல்லி இருக்கக் கூடாது.... இதை நான் கடுமையா ஆச்சேபிக்கிறேன்...
    கீதா உபதேசம் செய்த அந்தக் கண்ணனா இப்படி செய்திருப்பான்..
    அது புராணக் கதை என்றாலும் எப்படி நீங்கள் இப்படி சொல்லக் கூடும்....
    தயவு செய்து தாங்கள் சொல்லியதை மீண்டும் ஒருமுறை வாசித்துப் பாருங்கள்.

    நன்றி

    ReplyDelete
  111. //////Uma said...
    ஒருவேளை கிருஷ்ணரே கற்பனை என்று சொன்னால் அதற்கு என்னிடம் பதில் கிடையாது..\\\\\\

    ஒப்ஜெக்ஷன் சஸ்டைன்டு..

    கோர்ட் இஸ் அட்ஜௌர்ன்டு..

    ReplyDelete
  112. இறைவனைப் பற்றி பேசும் போது
    (ராமர் கிருட்டிணர் என )
    இவர்களை பற்றி என்ன..பேசுவது?

    அய்யர் இப்படி சொல்கிறார் என
    அப்படி பார்த்தால் வேறென்ன சொல்ல

    அவதார புருஷர்கள் என
    அன்புதோழர் போல் சொன்னால்

    நேற்றைய நித்தி முதல்
    நாளைய புத்தி வரை பட்டியலில்

    பலர் வரக்கூடும்
    சிலர் வாழ பலர் வேண்டுமா..


    பேறு இழவு இன்பமொடு
    மூப்பு சாக்காடு இவ்வாறும்

    முன்கருவுட்பட்டது அவ்விதி அனுபவத்தால் ஏறிடும்

    என்ற சித்தியார் வாக்கை
    நினைவில் கூர்ந்து

    அமைதிகொள்கிறோம்
    ஆரவாமின்றியே..

    ReplyDelete
  113. ஒப்ஜெக்ஷன் சஸ்டைன்டு..
    கோர்ட் இஸ் அட்ஜௌர்ன்டு..//

    ம்ம் என்னை வக்கீல் ஆக்கிட்டு நீங்க ஜட்ஜ் ஆயிட்டீங்களாக்கும்?

    ReplyDelete
  114. ////// Uma said...
    ஒப்ஜெக்ஷன் சஸ்டைன்டு..
    கோர்ட் இஸ் அட்ஜௌர்ன்டு..//

    ம்ம் என்னை வக்கீல் ஆக்கிட்டு நீங்க ஜட்ஜ் ஆயிட்டீங்களாக்கும்?/////////

    ஜட்ஜ்மென்ட் ரிசெர்வ்ட்..

    ReplyDelete
  115. சார், இதுவரை விஐபிக்கள், சமூகத்தில் பின்தங்கியவர்கள், களத்திர தோஷம் உள்ளவர்கள், அற்ப ஆயுள் ஜாதகம் என சுமார் 17 உதாரண ஜாதகங்களை case study ஆக கொடுத்து பல வகையான ஜாதகங்களை எப்படி அலசுவது என ஓர் நல்ல அறிமுகத்தை கொடுத்தீர்கள். அதற்கு முதலில் என் நன்றி.

    நாம் அனைவருமே நமது நண்பர்,உறவினர் வழியில்,பொது இடங்களில், பணியிடங்களில் வெவ்வேறு degree of severity'யில் physically challenged சகோதர, சகோதரிகளை காண்கிறோம். நமது ஜோதிட பாடங்களில்(Theory) ஓவ்வொரு வீட்டிற்கும், கிரகத்திற்கும் Medical Astrology'யில் allot செய்யப்பட்ட உடல் உறுப்பு, வியாதிகளை பார்த்தோம்.சம்பந்தப்பட்ட வீடோ,கிரகமோ பாதிக்கப்பட்டால் the native would acquire corresponding disease எனவும் பார்த்தோம்.

    இருப்பினும் ஊனத்திற்கென்று சில குறிப்பிட்ட கிரக நிலைகள் இருக்குமல்லவா ? அதை எவ்வாறு நாங்கள் கண்டுபிடிப்பது ஐயா ? Even after recognizing such planetary combination, தனது அன்றாட வேலைகளை பிறர் துணையின்றி செய்யுமளவிற்கு mild'ஆன பாதிப்பா அல்லது paraplegia, quadreplegia போன்ற தீவிர பாதிப்பா. அவையும் பிறப்பிலிருந்தே உள்ளவையா, or occured at growing/middle age due to accident என எவ்வாறு கண்டறிவது ஐயா ? I humbly request you to provide a case study of a horoscope of such kind, if possible in the blog Sir. Thanks.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com