மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

19.9.10

மைனரை மயக்கிய குரல்!

மைனரின் படம்.

பின்னணியில் தெரிவது, ஜப்பானில் உள்ள ஒரு சுற்றுலாத்தளம். 
நம்மூர் கொடைக்கானலைப்போல சுற்றிலும் மலைகள், நீர் நிறைந்த பெரிய ஏரி என்று எப்படி அசத்தலாக இருக்கிறது பாருங்கள்.

மைனரின் முதுகில் இருப்பது அவரது உடைமைகள் (Ipod, digital camera, நீச்சல் உடைகள், துண்டுகள், வாசனைத் திரவியங்கள் அடங்கிய பை.)

நம்மூர் என்றால் - இதற்கென்றே - அதாவது இதைப் போன்றவற்றை சுமந்து வருவதற்கென்றே மைனரின் பண்ணை ஆட்கள் உடன் வருவார்கள். ஜப்பானில் அதற்கெல்லாம் வழியில்லை.
----------------------------------------------------------------------------------------



மைனரின் எழில்மிகு க்ளோஸப் தோற்றம்!
-------------------------------------------------------------------------------------------------
இன்றைய வாரமலரை மைனரின் ஆக்கம் ஒன்று நிறைக்கிறது. 
படித்து மகிழுங்கள்
-----------------------------------------------------------------------------------------------------
Over to his  post
____________________________________________________________
மைனரை மயக்கிய குரல்!

ஸ்டாப்பிங் வந்துவிட்டது என அறிவிப்பு வர சுதாரித்து எழுந்தேன். ஒரு 1000 yen நோட்டைத் டிக்கெட்டிங் மெஷினுக்குள் திணித்து 240 yen போக மெஷின் துப்பிய மீதிச் சில்லறையை  எடுத்துக்கொண்டு பஸ்ஸை விட்டு இறங்கினேன்..நம்மூர் பஸ்களில் நாள்தோறும் கண்டக்டரிடம் சில்லறைக்கு சண்டைபோடும் பலரும் ஒரு கணம் மனதிற்குள் நிழலாக வந்துபோனார்கள்!

முன்னிரவின் இதமான சூடு கலந்த காற்று நடைபாதையோர மரங்களில் இருந்து  மெல்லிய சத்தத்துடன் என்னுடலைத் தழுவியவண்ணம் உடன்வர நானும் சுகமாக நடக்க ஆரம்பித்தேன்.

இத்தகைய இதமான தருணங்களில் அவசரம் எதுமின்றி மெதுவாய் நடப்பது ஓர் அலாதி சுகம்தான்..iPod இல் இருந்து 'எங்கும் நிறைந்த இயற்கையில் என்ன சுகமோ'  என்று பாடலும் சூழலுக்கு சுருதி சேர்த்தது.என்ன ராகம் என்றெல்லாம் எனக்கு சுத்தமாகத் தெரியாவிட்டாலும் என் மனதுக்கு இனியவை என்று தோன்றுகிறவற்றை சேகரிப்பது ஒரு அலாதியான விஷயம்தான்!

'லல்ல..லலல்லா..லலா ..லல்ல...லல்ல..லலல்லா' என்று உற்சாகத் சத்தத்துடன் பாடல் இனிமையாக ஒலிக்கிறது..இந்த வகை சத்தமிடலுடன் கூடிய பாடல்கள் இப்போது வெளி வருவதில்லை. அதனால்தானோ என்னவோ மனதில் அதிகம் நிற்பதுமில்லை..கேட்டாலும் ஓரிரு மாதங்களில் சலிப்புதட்டி விடுகிறது..என்று எண்ணமிட்டவாறே நடந்து சிக்னலை அடைந்தேன்.

இரு மருங்கிலும் கண்ணுக்கெட்டிய தூரம் வரை ஒரு வண்டியுமே இல்லாவிட்டாலும் சிக்னல் விழுவதற்காகக்  காத்திருப்பது ஒருவகையில் நேரத்தை விரயமாக்கும் முட்டாள்தனமாகத் தோன்றினாலும் பக்கத்திலே சிக்னலையே அண்ணாந்து பார்த்தவண்ணம் நின்றிருக்கும் ஜப்பானியர்கள் இருவரைப் பார்த்ததும் வேறு வழியில்லாமல் நானும் நின்றேன்.

ஒரு வழியாக ஸ்டேஷன் பக்கத்திற்கு நெருங்கி எலக்ட்ரானிக் ஷாப்பிங் மாலுக்குள் நுழைந்தேன்.

“வாங்க..வாங்க” ன்னு ஆசை ஆசையாய் அழைப்பதற்கென்றே இரண்டு சின்னப் பெண்ங்களைக் குட்டைப் பாவாடையுடன் நிறுத்தி வைத்திருந்தார்கள். ‘ஹாய்’ என்றபடியே..நுழைந்து ரிசெப்ஷனிஸ்ட்டைக் கேட்க 'தேர்ட்  ப்ளோர்' என்று இங்கிலிஷில் சொன்னாள்.

எஸ்கலேட்டரில் பயணித்து இரண்டாம் தளத்துக்கு வந்துசேர்ந்தேன்..நான் நினைத்தது சரியாகவே இருந்தது. அவளுக்கு தெரிந்தது 'தேர்ட் ப்ளோர்' என்ற இங்கிலீஷ் சொல் மட்டுமே. நம்ம ஊரிலே 'தேர்ட்  ப்ளோர்' என்றால் கிரௌண்ட் ப்ளோர் தவிர்த்து எண்ணணும்..அதாவது கிரௌண்ட் ப்ளோர் கணக்கிலே வராது..அது நம்ம ஊர் ஸ்டைல்..

இங்கே ஜப்பானில் கிரௌண்ட் ப்ளோர் பர்ஸ்ட் ப்ளோர் ஆகிடும். .ரிசெப்ஷனிஸ்ட் சொன்னது ஜப்பானிஸ் வழக்கில்தான். வார்த்தை மட்டுமே நமக்குத் தெரிந்த இங்கிலீஷ்..அதனைக் கணக்கில் கொண்டுதான் நான் செகண்ட் ப்ளோர்க்கு சரியாக வந்திருந்தேன். என்ன? தலையை சுத்துதா? மாடி ஏறி வந்த எனக்கே தலை சுத்தலை..  உங்களுக்குச் சுத்தினா எப்படி?

இன்னும் எவ்வளவோ இருக்கே. இது தனி உலகம். காரணம் இருக்கு. நம்ம ஊரு மாதிரி இங்கிலீஷ்காரன் கிட்டேருந்து சுதந்திரம் வாங்கின நாடு இல்லையே ஜப்பான்? அதனால இங்க இந்த மாதிரி விஷயங்களிலே ஏகப்பட்ட மாற்றங்கள் இருக்கும்..இங்கிலீஷ் மேல கொஞ்சம் மோகம் இந்த தலைமுறைக்கு இருந்தாலும் படிக்கிறது தலைவலி.  நம்ம ஊர் போலே வேலைக்கு  சேர இங்கிலீஷ் அவசியம் என்று தாய்மொழி மட்டுமே தெரிஞ்சவுங்க வேலை கிடைக்காமல் அவதிப்படுவதில்லை.. கத்துக் கொடுக்குற இடத்தில் அவுங்க இருக்காங்க. இங்கிலீஷ் ஒரு எக்ஸ்ட்ரா - பிட்டிங் தான். இங்கிலீஷ் நுனிநாக்கில் பேசும் எந்த ஜப்பானியரும் தெரியாத விஷயத்தை தோளைக் குலுக்கி 'I dont know' என்று சொல்வதில்லை. வீண் குலுக்கல்கள் இல்லை. ரொம்பப் பணிவாக சாதாரணமாகப் பேசும் ஆட்கள்தான் அதிகம்..

சொல்லப்போனால் இங்கிலீஷ் உடன் சேர்ந்து வளர்ந்துவிடும் இத்தகைய குணாதிசயங்களைக் கிண்டலடிப் பவர்களே இங்கே அதிகம்..

நம்ம நாட்டுலேதான் இதே மைனஸ் பாயிண்ட்டை பிளஸ் பாயிண்ட்டாக்கி BPO indusrty , software industry என்று GDP எகிறுகிற வளர்ச்சி.  இவர்களின் டெக்னாலஜியை உலகளவுக்கு கொண்டு சேர்க்க வியாபாரத்துக்கு என்று பல நாடுகளுக்கும் பரவ என்று அவசியத்தினால் இப்போதான் அதுவும் இந்த 2008 -2009 recession க்கு பிறகுதான் அதிகமாக இங்கிலீஷ் தாக்கம் தெரிகிறது. yen என்கிற இவர்களின் பண மதிப்பு ஏறியே இருப்பதால் (கடந்த 14 வருடங்களில் 85yen = 1 US டாலர் என்ற அளவுக்கு இறங்கியதில்லை..)எனவே உலக அரங்கில் வர்த்தகம் செய்ய ஜப்பானியப் பொருட்களை வாங்க முடியாமல் (பண மதிப்பு ஏறியே இருப்பதால்) உலக நாடுகள் திணறும் நிலை..இதனால் ஜப்பானிய ஏற்றுமதி பாதிக்கும் அபாயம்..பண மதிப்பை குறைக்க வழி செய்யலாமா? என்று ஆராய்ச்சி செய்து வருகிறார்கள்..ஏறி விட்டிருக்கும் பண மதிப்பைக் குறைக்க ஆராய்ச்சி..கேட்பதற்கே கொஞ்சம் காமெடியாக இல்லை.

சரி..வந்த வேலையைக் கவனிப்போம்..என்று காமெரா செக்சனுக்குள் நுழைந்தேன்..அள்ளிக் குவிக்கப்பட்டிருந்த வகை வகையான டிஜிடல் காமெராக்கள்..ஒரு காமெராவை மீன் தொட்டிக்குள் தண்ணீருக்குள் வைத்து விளம்பரம் செய்திருந்தார்கள்..வாட்டர் ப்ரூப் என்று.  பிரமிப்பாக இருந்தது. அதே சமயம் என் ஸ்டைலுக்கு 'damper proof, shock proof எல்லாம் எப்படி? தூக்கித் தரையில் வீசிக் காண்பிப்பார்களோ?' என்ற எண்ணமும் தோன்றியது..

எல்லாம் மின்னிணைப்பு கொடுக்கப்பட்ட நிலையில். எடுத்து உபயோகித்துப் பார்த்தபின் அந்த மாடல் வேண்டுமானால் வாங்கிக்கொள்ளலாம். சற்று நேரம் லயித்து வெவ்வேறு காமிராக்களை பார்த்து சுற்றிக் கொண்டிருந்துவிட்டு வீடியோ கேமரா எங்கே வைத்திருக்கிறார்கள் என்று தேடி அந்த செக்சனுக்கு ஒரு வழியாக வந்து சேர்ந்தேன்..

எல்லா கம்பெனி மாடல்களையும் நோட்டம் விட்டு விட்டு, ஒரு வழியாகக் கடைசியில் சோனி கம்பெனி மாடலுக்கு அருகில் வந்து நின்ற வண்ணம் அங்கு தூரத்தில் நின்றிருந்த சேல்ஸ்மேனை அழைக்கத் திரும்பினேன்.

என்னைக் கண்டு அவர் கொஞ்சம் பயந்து பக்கத்து தூணில் ஒளிவதுபோல் தெரிந்தது. ஒருவேளை புதிதாய் வேலைக்குச் சேர்ந்தவராயிருக்கும்..இல்லை foreigner என்றால் கொஞ்சம் allergy. இங்கிலீஷ் பிரச்சினை ஆக இருக்கும்..சரி..மேனுவல்களைப் புரட்டிப் பார்க்கலாம் என்றால், ஒன்று கூட இங்கிலிஷில் இல்லை.

சுற்றுமுற்றும் பார்த்தால் அடுத்த வரிசையில்  ஒரு பெண்மணி என்னை விட மோசமாக திருதிருவென்று முழித்துக்கொண்டு நின்றிருந்தாள். வெளிநாட்டுக்காரி என்பது நல்லாவே புரிந்தது.

யுரோப்பியனா? யுறேசியனா?என்று கொஞ்சம் தெளிவாகப் புரியவில்லை..இங்கே வசிக்கும் வெளிநாட்டுக்காரர்கள் பெரும்பாலும் பிரேசில், பெரு, ஸ்பெயின் என்று போர்சுக்கீசே அல்லது ஸ்பானிஷ் மொழி பேசுபவர்களே அதிகம்..இருந்தபோதிலும் புருவத்தை உயர்த்திப் பார்த்தவண்ணம் 'may I help you?'  என்று சிநேகப்புன்முறுவலை உதிர்த்து வைத்தேன்...

என் கதையே இன்னும் தெரியலை..சேல்ஸ்மேனைத்தேடி இன்னும் ஒண்ணுமே ஆரம்பிக்கலை..இதுக்குள்ளே இந்த  'may I help you?'  ரொம்ப அவசியம்தானா? என்று கொஞ்சம் எனக்குள் கேள்வி எழுந்தாலும். நம்மைப் போலவே திணறும் வெளிநாட்டுக்காரர்களுக்கு சற்று உதவி செய்தால் என்ன குறைந்து விடுவோம் என்றும் ஒரு பதிலும் ஒலிக்கவே..அதற்குள் இந்த வினாடி இடைவெளியை சைலஜாவின் குரல் கலைத்தது..' ya ..I m looking  for  this digicam , I want  to get a brochure . but I cant speek japaneese ' என்று தயங்கிய குரலில் சைலஜா.

'that and all no issue ' இது நான்..கொஞ்சம் தோளைக் குலுக்கியபடி.

'I will help you ..I can speek japanese well ' என்றேன்..அந்த காமிராவை கையில் எடுத்து சுழற்றியபடியே..அவளுக்கு நான் ஒரு ஆபத்பாந்தவனாகத் தெரிந்தது அப்பட்டமாக அவள் கண்ணில் தெரிந்தது..

'how long have you been living here in Japan?' எனது ஜப்பானியப் புலமையை உறுதி செய்ய அவளுக்கு இந்தக் கேள்வி தேவைப்பட்டிருக்கலாம்.

'jz  reacent three years'  இந்தக் குறுகிய காலத்தில் நான் ஜப்பானீஸ் மொழியில் பேசுவது பேசுவது பற்றி கேட்பவர் பெரும்பாலும் வியந்து பாராட்டுவதால் அதே பாராட்டை இவளிடமும் பெற ' jz reacent ' என்ற வார்த்தைகள் எனக்குத் தேவைப்பட்டது..

' oh, really ?....great... brilliant ..!' என்றாள்..இப்படியாக காமெரா வாங்க வந்த எங்களுக்கு சொந்தக் கதைப் பரிமாறல் ரொம்ப முக்கியமாய்ப் போனது..

ஒரு சேல்ஸ்மேனைக் கூப்பிட்டு அதன் டெக்னிகல் features பற்றி விலாவாரியாக விசாரித்து அவளுக்கு இங்கிலிஷில் விளக்க சேல்ஸ்மென் என் இங்கிலீஷ் புலமையைப் பார்த்து வியப்பிலாழ்ந்து போனான். அந்த சேல்ஸ்மனுக்கு  இங்கிலிஷும் சைலஜாவுக்கு ஜப்பானிசும் தெரியாதது எவ்வளவு வசதியாகப் போய்விட்டது?

ஒரு வழியாக அவளுக்கு விளக்கி ஒரு canon காமெராவை வாங்கிக் கொடுத்தபோது (பணம் அவள்தான் கொடுத்தாள்) ரொம்பத்தான் நெகிழ்ந்து  போனாள்..

'can we have some coffee together ' என்ற போது என்னால் மறுக்க முடியவில்லை..பக்கத்து மக்.டொனால்ட்லே Snacks cum coffee சாப்பிட்டவண்ணம் இன்னும் கொஞ்சம் கதைகளைப்பேசி விசிடிங் கார்ட்களை பரிமாறிக்கொண்டு  'call me at ur free time yaar '  என்று சைலஜா குழைந்தபோது எனக்குப் பிரிய மனசே இல்லை..

கனத்த இதயத்தோடு விடைபெற்ற அந்தக் கணங்களில்தான் அவள் சொன்ன அந்த கடைசி வார்த்தை எனக்கு உறைத்தது..free time ...!!!!!

வாட்சைப் பார்த்தேன்..மணி..9.37 ஆஹா.. லாஸ்ட் பஸ் 9:30 க்குன்னு பஸ் கண்டக்டர் சொன்னாரே..சிலீர்னு உறைத்தாலும்..ச்சே..எப்படி இப்படி மறந்து போனோம்?

ஏதோ ஒரு குற்றஉணர்வு..டாக்ஸி பிடித்தால் கிட்டத்தட்ட நம்மூரு ரூபாயிலே சொன்னால் 5000ரூபாய். பொட்டில் அறைந்தாற்ப் போலே போய்விடும்.

வீடியோ காமிராவும் வாங்கலை..ஏன்..விசாரிக்கக் கூட இல்லை. ச்சே..இப்படி ஆளுங்க யாராவுது இருப்பாங்களா? ஏதோ ஏமாந்தது போல ஒரு உணர்வு. சைலஜா விவரமாய் ஏதோ என்னை ஏமாற்றி நஷ்டப்படுத்தி விட்டது போலே..நானாத்தானே பேச்சு கொடுத்தேன்..வேண்டாம்..

தூரத்தில் ஏதோ drum சவுண்டும் flute சவுண்டும் கலந்த  ஜப்பானியப் பழைய பாடலும் கேட்கிறது..

சோகப் பாட்டு மாதிரித் தெரியலை..ஆனாலும் எனக்கு என்னமோ சோகப் பாட்டாத்தான் கேட்கிறது..

அப்படி என்னதான் பண்ணிடப் போறோம்..வீட்டுக்குப் போயி.. பெரிசா..சரி..சரி.. லூஸ்லே விடு..

ஏன்னால் நாளைக்கும் லீவுதான்..(எனக்கு லீவு..சரி..உங்களுக்கு? இப்பிடியே நடந்துட்டே போயி  நடந்த கதையை சொல்லி முடிக்குறதுக்குள்ளே ஒரு வாரம் ஆயிடும் போலருக்கே.. சரி.. இன்னைக்கு இத்தோட முடிச்சுக்குவோமா?

- ஆக்கம்:  நெப்போலியன் ஞானப்பிரகாசம்,  டோக்கியோ, ஜப்பான்.
---------------------------------------------------------------------------------------------------------------------


வாழ்க வளமுடன்!

82 comments:

  1. உள்ளேன் ஐயா !

    minor - ரின் ரியல் டய்டில் சாங்

    தம்பி! தம்பி!

    என்ன வேண்டும்?
    பழம் வேண்டும்.

    என்ன பழம்?
    வேர் பழம்.

    என்ன வேர் ?
    வெட்டி வேர்.

    என்ன வெட்டி?
    விறகு வெட்டி.

    என்ன வெறகு?
    பனை வெறகு.

    என்ன பனை ?
    தாலி பனை.

    என்ன தாலி?
    விருந்தாளி. :-)))

    ReplyDelete
  2. இரு மருங்கிலும் கண்ணுக்கெட்டிய தூரம் வரை ஒரு வண்டியுமே இல்லாவிட்டாலும் சிக்னல் விழுவதற்காகக் காத்திருப்பது ஒருவகையில் நேரத்தை விரயமாக்கும் முட்டாள்தனமாகத் தோன்றினாலும் பக்கத்திலே சிக்னலையே அண்ணாந்து பார்த்தவண்ணம் நின்றிருக்கும் ஜப்பானியர்கள் இருவரைப் பார்த்ததும் வேறு வழியில்லாமல் நானும் நின்றேன்.//

    த‌னி ம‌னித ஒழுக்கம், விதிக‌ளை மீறாத மனிதர்கள்,இவைகளை வைத்துத்தான் ஒரு நாடு நன்முறையில் இயங்குகிறதா என்பதை கணிக்கமுடியும். ஜப்பானியர் எப்போதுமே இவ் விஷயங்களில்‌ முன்ன‌ணிய‌ர்தான்.
    ந‌‌கைச்சுவை உண‌‌ர்வு குன்றாம‌ல் ஜப்பா‌னிய‌ பொது வாழ்க்கையின் மேன்மையை அழ‌காக‌
    வெளிக்கொணர்ந்த மை‌ன‌ருக்கு ஒரு 'ஓ' போடுங்க!

    ஜப்பானுக்கு 1899 போல சென்ற சுவாமி விவேகானந்தர்,அங்குள்ள புத்த அமைப்புக்களை பார்த்துவிட்டு, "ஜப்பானில்தான் நமது
    அத்வைத‌ம் ந‌டைமுறையில் க‌டைப்பிடிக்க‌ப்ப‌டுகிற‌து.என‌வே ஜ‌ப்பான் மிக‌ப்பெரிய‌ அள‌வில் முன்னேரும்" என்றார். இல‌ங்கையில் புத்த‌ம‌த‌ அமைப்புக்களைப் பார்த்துவிட்டு,"எதிர்ம‌றையான‌ க‌ருத்தோட்ட‌ங்க‌‌ள்
    தென்ப‌டுகின்ற‌ன‌.இந்த‌ நாடு பெரும் குழ‌ப்ப‌ங்க‌‌ளில் ஆழும்" என்றார் சுவாமிஜி.

    ஜ‌ப்பா‌னிய‌ர்க‌ள் முனேற்ற‌த்திற்கான‌ கார‌ண‌ங்க‌ளை மைன‌ர் தொட‌ர்ந்து சுட்டிக்காட்ட‌ வேண்டுகிறேன்.

    ReplyDelete
  3. அருமை நண்பர் நெப்போலியன் ஞானப்பிரகாசம் அவர்களின் ஆக்கம் படிக்க ஆர்வத்தைத் தூண்டியது. அதிலும் அவருக்கு (அது யார் சைலஜா?) காமரா வாங்க வந்த பெண்ணிடம் ஏற்பட்ட ஈர்ப்பு யாருக்கும் ஏற்படக்கூடியது தான், ஏன் கிழவனுக்குக்கூட, அப்படியிருக்கும்போது கட்டிளம்காளையான அவருக்குக் கேட்க வேண்டுமா. அந்த இனிய குரலுக்காக கடைசி பஸ் என்ன எதனையும் இழக்கலாம் அல்லவா? சுவாரசியமான இடத்தில் தமிழ்ப்பத்திரிகை தொடரும் போடுவது போல போட்டுவிட்டார். அடடா! என்ன தமிழ் நடை. விறுவிறுப்பும், அடுத்தது என்ன என்று தெரிந்து கொள்ள ஆர்வமும் ஏற்படுத்துகிறது. நீங்கள் தொடர்ந்து எழுதுங்கள் திரு மைனர். தமிழ்நடை அவ்வளவு அபூர்வமாக இருக்கிறது. எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. தல!
    கையை கொஞ்சம் நன்னாக காட்ட புடாதானோ!

    ஆளைபார்த்தல் தமில்நாட்டுகார தமிழன் தான் என்பதில் ஒன்னும் சம்சியம் இல்ல.

    இருதய ரேகையை பார்த்தல் பாசக்காரனாக தெரியுதிங்க தல!

    அழகு பைங்கிளி வந்தாத்ச வரணுமா? இருதய ரேகை சொல்லுது :-)))

    கை பெரு விரல் வளையும் போல் இருக்கே
    நீங்களும் வளைய வேண்டியதிக்கு கட்டாயம் வலைவீங்க தல!

    முகம் மற்றும் மூக்கின் அமைப்பு என்னவோ
    கேரள பிரதிபட்ச நேதாவ் (எதிர்கட்சி தலைவர்) உம்மன் சாண்டியை ஒத்து வருவதால் முக்கிய அமைச்சர் ஆகுவீர்கள் போல தோணுது :-)))

    உடல் வாகு (அங்கலட்சணம் சாஸ்திரம்) இரண்டாம் உலகத்ததின் போது நடந்த சம்பவம் நடந்தாலும் அலட்டிக்காத மைனர்வாலாக்கும்.

    சோலைவனத்தில் உள்ள மைனர் முடி மட்டும் பாலைவனத்தில் உள்ளது போல ஒரு பிரமை.

    யோகா, தியானம் கராத்தே செய்தால் எம்மைபோல உடல்வாகு வர (சாஸ்திரம்) உண்டு

    தங்களுக்கு மைனர் பட்டம் தந்தவர் யாரோ ?

    ஆக! எலக்ட்ரோனிக்ஸ் பொத்தமரதடியில் ஞானத்தை கற்கும் எலக்ட்ரோனிக்ஸ் மைனரோ?

    ReplyDelete
  5. /////kannan said...
    உள்ளேன் ஐயா !
    minor - ரின் ரியல் டய்டில் சாங்

    தம்பி! தம்பி!
    என்ன வேண்டும்?
    பழம் வேண்டும்.
    என்ன பழம்?
    வேர் பழம்.
    என்ன வேர் ?
    வெட்டி வேர்.
    என்ன வெட்டி?
    விறகு வெட்டி.
    என்ன வெறகு?
    பனை வெறகு.
    என்ன பனை ?
    தாலி பனை.
    என்ன தாலி?
    விருந்தாளி. :-)))/////

    இது பம்மல் சம்பந்த முதலியார் காலத்துப் பாட்டு. புதிதாக ஏதாவது எழுதுங்கள் சாமி!

    ReplyDelete
  6. kmr.krishnan said...
    இரு மருங்கிலும் கண்ணுக்கெட்டிய தூரம் வரை ஒரு வண்டியுமே இல்லாவிட்டாலும் சிக்னல் விழுவதற்காகக் காத்திருப்பது ஒருவகையில் நேரத்தை விரயமாக்கும் முட்டாள்தனமாகத் தோன்றினாலும் பக்கத்திலே சிக்னலையே அண்ணாந்து பார்த்தவண்ணம் நின்றிருக்கும் ஜப்பானியர்கள் இருவரைப் பார்த்ததும் வேறு வழியில்லாமல் நானும் நின்றேன்.//
    த‌னி ம‌னித ஒழுக்கம், விதிக‌ளை மீறாத மனிதர்கள்,இவைகளை வைத்துத்தான் ஒரு நாடு நன்முறையில் இயங்குகிறதா என்பதை கணிக்கமுடியும். ஜப்பானியர் எப்போதுமே இவ் விஷயங்களில்‌ முன்ன‌ணிய‌ர்தான்.
    ந‌‌கைச்சுவை உண‌‌ர்வு குன்றாம‌ல் ஜப்பா‌னிய‌ பொது வாழ்க்கையின் மேன்மையை அழ‌காக‌
    வெளிக்கொணர்ந்த மை‌ன‌ருக்கு ஒரு 'ஓ' போடுங்க!
    ஜப்பானுக்கு 1899 போல சென்ற சுவாமி விவேகானந்தர்,அங்குள்ள புத்த அமைப்புக்களை பார்த்துவிட்டு, "ஜப்பானில்தான் நமது
    அத்வைத‌ம் ந‌டைமுறையில் க‌டைப்பிடிக்க‌ப்ப‌டுகிற‌து.என‌வே ஜ‌ப்பான் மிக‌ப்பெரிய‌ அள‌வில் முன்னேரும்" என்றார். இல‌ங்கையில் புத்த‌ம‌த‌ அமைப்புக்களைப் பார்த்துவிட்டு,"எதிர்ம‌றையான‌ க‌ருத்தோட்ட‌ங்க‌‌ள்
    தென்ப‌டுகின்ற‌ன‌.இந்த‌ நாடு பெரும் குழ‌ப்ப‌ங்க‌‌ளில் ஆழும்" என்றார் சுவாமிஜி.
    ஜ‌ப்பா‌னிய‌ர்க‌ள் முனேற்ற‌த்திற்கான‌ கார‌ண‌ங்க‌ளை மைன‌ர் தொட‌ர்ந்து சுட்டிக்காட்ட‌ வேண்டுகிறேன்.///

    உங்களுடைய பாராட்டுக்கள் மைனருக்கு டானிக் மாதிரிப் பயன்படும். இன்னும் ஒரு உற்சாகத்துடன் எழுதுவார் என்று நம்பலாம்.

    ReplyDelete
  7. Thanjavooraan said...
    அருமை நண்பர் நெப்போலியன் ஞானப்பிரகாசம் அவர்களின் ஆக்கம் படிக்க ஆர்வத்தைத் தூண்டியது. அதிலும் அவருக்கு (அது யார் சைலஜா?) காமரா வாங்க வந்த பெண்ணிடம் ஏற்பட்ட ஈர்ப்பு யாருக்கும் ஏற்படக்கூடியது தான், ஏன் கிழவனுக்குக்கூட, அப்படியிருக்கும்போது கட்டிளம்காளையான அவருக்குக் கேட்க வேண்டுமா. அந்த இனிய குரலுக்காக கடைசி பஸ் என்ன எதனையும் இழக்கலாம் அல்லவா? சுவாரசியமான இடத்தில் தமிழ்ப்பத்திரிகை தொடரும் போடுவது போல போட்டுவிட்டார். அடடா! என்ன தமிழ் நடை. விறுவிறுப்பும், அடுத்தது என்ன என்று தெரிந்து கொள்ள ஆர்வமும் ஏற்படுத்துகிறது. நீங்கள் தொடர்ந்து எழுதுங்கள் திரு மைனர். தமிழ்நடை அவ்வளவு அபூர்வமாக இருக்கிறது. எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.//////

    இனிய குரலுடைய பெண்ணிற்கு ஒரு பெயர் கொடுக்க வேண்டும் என்பதற்காக மைனர் அப்பெண்ணை ஜைலஜா என்று குறிப்பிட்டுள்ளார். வேறொன்றுமில்லை. உங்கள் வாயாலயே மைனர் பாராட்டுக்களை வாங்கிவிட்டார். இனி, ஒரு புது உத்வேகத்துடன் மேலும் மேலும் எழுதுவார் என்று எதிர்பர்க்கலாம்!

    ReplyDelete
  8. kannan said...
    தல!
    கையை கொஞ்சம் நன்னாக காட்டபுடாதா?!
    ஆளைப்பார்த்தல் தமில்நாட்டுகார தமிழன் தான் என்பதில் ஒன்னும் சம்சியம் இல்ல.
    இருதய ரேகையை பார்த்தல் பாசக்காரனாக தெரியுதிங்க தல!
    அழகு பைங்கிளி வந்தாத்ச வரணுமா? இருதய ரேகை சொல்லுது :-)))
    கை பெரு விரல் வளையும் போல் இருக்கே
    நீங்களும் வளைய வேண்டியதிக்கு கட்டாயம் வலைவீங்க தல!
    முகம் மற்றும் மூக்கின் அமைப்பு என்னவோ
    கேரள பிரதிபட்ச நேதாவ் (எதிர்கட்சி தலைவர்) உம்மன் சாண்டியை ஒத்து வருவதால் முக்கிய அமைச்சர் ஆகுவீர்கள் போல தோணுது :-)))
    உடல் வாகு (அங்கலட்சணம் சாஸ்திரம்) இரண்டாம் உலகத்ததின் போது நடந்த சம்பவம் நடந்தாலும் அலட்டிக்காத மைனர்வாலாக்கும்.
    சோலைவனத்தில் உள்ள மைனர் முடி மட்டும் பாலைவனத்தில் உள்ளது போல ஒரு பிரமை.
    யோகா, தியானம் கராத்தே செய்தால் எம்மைபோல உடல்வாகு வர (சாஸ்திரம்) உண்டு
    தங்களுக்கு மைனர் பட்டம் தந்தவர் யாரோ ?
    ஆக! எலக்ட்ரோனிக்ஸ் போதிமரத்தடியில் ஞானத்தை கற்கும் எலக்ட்ரோனிக்ஸ் மைனரோ?////

    அவர் கையை எங்கே காட்டினார்? ரேகை பார்த்துப் பலன் சொல்வதற்கு?

    போட்டோவை எடுத்தது அவருடைய இல்லத்தரசிதான் சாமி! இன்னொரு பைங்கிளி எதற்கு? மைனர் வீட்டில் இல்லத்தரசியிடம் தர்ம அடி வாங்குவதற்கா?

    ReplyDelete
  9. ///// முன்னிரவின் இதமான சூடு கலந்த காற்று நடைபாதையோர மரங்களில் இருந்து மெல்லிய சத்தத்துடன் என்னுடலைத் தழுவியவண்ணம் உடன்வர நானும் சுகமாக நடக்க ஆரம்பித்தேன்//////

    காற்றுக்குத் தான் எத்தனை நல்லப் பண்பு,
    இங்கு குளிராய் வீசும் காற்றே!
    அங்கே சற்றே சூடேறி வீசுகிறாயே!!
    ஓ... நீ ஜப்பான் காற்றல்லவா அதனால் தான் தேவை அறிந்து உன்னை மாற்றிக் கொள்கிறாய்.

    ///// கொஞ்சம் கதைகளைப்பேசி விசிடிங் கார்ட்களை பரிமாறிக்கொண்டு 'call me at ur free time yaar ' என்று சைலஜா குழைந்தபோது எனக்குப் பிரிய மனசே இல்லை..////
    பாவம் மைனர்... உங்க ஜோல்லுளே நீங்களே வழுக்கி விழுந்திட்டீங்க.....

    /////சைலஜா விவரமாய் ஏதோ என்னை ஏமாற்றி நஷ்டப்படுத்தி விட்டது போலே..நானாத்தானே பேச்சு கொடுத்தேன்..வேண்டாம்..//////
    கடைசிடில் தெளிவாகிடீங்க....
    பட்டபின்பு ஞானி......

    எதார்த்தத்தை நன்றாகச் சொல்லி உள்ளீர்கள்.
    நன்றி பாராட்டுகள்.

    ReplyDelete
  10. கலக்குறீங்க மைனர். சுஜாதா அவர்கள் தன்னை முன்னிலை படுத்தி எழுதுவார். அதுபோல் சிறப்பாக உள்ளது. தொடருங்கள்.

    ReplyDelete
  11. ரேகை சாஸ்திரம், சாமுத்த்ரிகா லட்சணம் பற்றி நீங்க புது கிளாஸ் ரூம் ஸ்டார்ட் பண்றதா ஏதோ ஐடியா இருக்காப்லே இருக்கே..
    டைட்டில் சாங் லாம் எதுக்கு கண்ணன்..? அதுவும் என்னான்னே புரியாம இப்புடி ஒரு சாங்..
    மைனரைத்தான் கமென்ட் அடிச்சீங்களே தவிர கதைக்குள்ளே இன்னும் போகவேயில்லே?

    ReplyDelete
  12. வாத்தி ஐயா

    மண்டை காங் ஆகி போகி உள்ளது என்னவோ உண்மை தான் சில நாட்களாக
    அதோடு வகுப்புக்கு வருவதே போதும் போதும் என்று ஆகிவிடுகின்றது

    இதில் புது பாட்டு எல்லாம் எங்க ஐயா?

    பெரிய காமெடி தெரியுமா? 25 வருடத்திற்கு முன்னர் படித்த பாடல் அப்படியே மனதில் ஆனால், இப்பம் படிப்பதோ ஆண்டவனுக்கே வெளுட்சம்.

    ReplyDelete
  13. ////////////////
    kmr.krishnan said...
    ந‌‌கைச்சுவை உண‌‌ர்வு குன்றாம‌ல் ஜப்பா‌னிய‌ பொது வாழ்க்கையின் மேன்மையை அழ‌காக‌
    வெளிக்கொணர்ந்த மை‌ன‌ருக்கு ஒரு 'ஓ' போடுங்க! \\\\\\\\\\\\\\\\\\\\\
    மிக்க நன்றி..KMRK சார்..
    பார்த்து பார்த்து பிரமிக்க விஷயங்கள் எவ்வளவோ இருக்கின்றன..
    ஆங்கங்கே சொல்லிச் செல்லவில்லையெனில் ஏதோ அதிசயமா ஜப்பன்லே இருக்கானு பெருமையடிச்சுக்குறான்னு நினைச்சுக்கத் தோணும்..
    அதனாலே ஒரு சின்ன விஷயத்தை இப்படி முயற்சி பண்ணினேன்..அது தங்களின் கவனத்தில் பட்டு வாழ்த்தும் பெற்றிருப்பது குறித்து மகிழ்ச்சி..
    இங்கும் சரியில்லயோ என எண்ணத்தோன்றும் விஷயங்களையும் நான் எழுத்தில் வடிக்க தவற மாட்டேன்..
    இங்கேயே வசிக்கும் போதிலும் இங்கே குடியுரிமை பெறாத காரணத்தாலும்
    (பெற விருப்பமும் இல்லை ) என்றென்றும் இந்தியாவின் குடிமகனாகவே இருப்பதாலும்
    ஏனைய சொந்தங்கள் அனைத்தும் இன்றும் இந்தியாவில்
    பொது வாழ்வின் முறைமைஇன்மையால் படும் அல்லல்களை நினைக்கும்போதும்
    இங்குள்ள பொது வாழ்வின் எந்த விஷயங்களை பார்க்கும்போதும் இந்தியாவின் நிலையை இணைத்துப் பார்க்கும்படி
    மனநிலை அமைந்து விடுகிறது..
    உதாரணத்துக்கு கடந்த பத்தாண்டுக்கும் மேல் நான் சென்னையில் வசித்தவன்..சென்ட்ரலில் இருந்து எலெக்ட்ரிக் ட்ரெயின் செல்லும் தடங்களில் எல்லா ஸ்டேஷன்களிலும் லெவல் கிராசிங் இருக்கும் ..ஓவர் பிரிட்ஜ்ஜும் இருக்கும்..
    ஆனால் கிட்டத்தட்ட 90 % க்கும் மேலான பாதசாரிகளும் சரி. சைக்கிள் , டூ வீலர் என்று சகலருமே
    கேட் போட்டிருந்தாலும் உள்ளே நுழைந்து இரு புறமும் ட்ரெயின் வருகிறதா என்று பார்த்த வண்ணம் கடந்து கொண்டிருப்பார்கள்..
    கிட்டத்தட்ட எல்லா கேட்களிலுமே இதே நிலைதான்..
    நான் மட்டும் ஓவர்ப்ரிட்ஜில் ஏறினால் சரியான முட்டாள் நானாகத்தான் இருப்பேன்.. இதை எப்படி சரி செய்வது? மக்களை மட்டுமே குற்றம் சொல்லிப் புண்ணியமில்லையே..அவர்களின் இந்த அவசரகதி வாழ்க்கைக்கு புறக்காரணிகள் எவ்வளவோ? நீண்ட பெருமூச்சு மட்டுமே..

    ReplyDelete
  14. good morning sir...

    மைனரின் முதுகில் இருப்பது அவரது உடைமைகள் (Ipod, digital camera, நீச்சல் உடைகள், துண்டுகள், வாசனைத் திரவியங்கள் அடங்கிய பை.)

    நம்மூர் என்றால் - இதற்கென்றே - அதாவது இதைப் போன்றவற்றை சுமந்து வருவதற்கென்றே மைனரின் பண்ணை ஆட்கள் உடன் வருவார்கள். ஜப்பானில் அதற்கெல்லாம் வழியில்லை.

    sema punch oda pathiva potrukinga ....minor anna super ....continue ,,,

    thank u so much

    ReplyDelete
  15. ////////////////
    Thanjavooraan said... அருமை நண்பர் நெப்போலியன் ஞானப்பிரகாசம் அவர்களின் ஆக்கம் படிக்க ஆர்வத்தைத் தூண்டியது. அதிலும் அவருக்கு (அது யார் சைலஜா?) காமரா வாங்க வந்த பெண்ணிடம் ஏற்பட்ட ஈர்ப்பு யாருக்கும் ஏற்படக்கூடியது தான், ஏன் கிழவனுக்குக்கூட, அப்படியிருக்கும்போது கட்டிளம்காளையான அவருக்குக் கேட்க வேண்டுமா. அந்த இனிய குரலுக்காக கடைசி பஸ் என்ன எதனையும் இழக்கலாம் அல்லவா? சுவாரசியமான இடத்தில் தமிழ்ப்பத்திரிகை தொடரும் போடுவது போல போட்டுவிட்டார். அடடா! என்ன தமிழ் நடை. விறுவிறுப்பும், அடுத்தது என்ன என்று தெரிந்து கொள்ள ஆர்வமும் ஏற்படுத்துகிறது. நீங்கள் தொடர்ந்து எழுதுங்கள் திரு மைனர். தமிழ்நடை அவ்வளவு அபூர்வமாக இருக்கிறது. எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.\\\\\\\\\\\\
    நடையை ரசித்துப் பாராட்டியதற்கு மிக்க நன்றி அய்யா..
    தஞ்சாவூரார் இள வயது சம்பவங்களை எழுத்தில் வடித்தால் வாரமலர் இன்னும் களை கட்டுமோ?
    ///////////ஏன் கிழவனுக்குக்கூட, அப்படியிருக்கும்போது கட்டிளம்காளையான அவருக்குக் கேட்க வேண்டுமா.
    அந்த இனிய குரலுக்காக கடைசி பஸ் என்ன எதனையும் இழக்கலாம் அல்லவா? \\\\
    உங்கள் இளமை ததும்பும் வரிகள் இதற்கு சாட்சி..
    சந்தித்த கணங்களில் கீச்சுக்குரல் மட்டுமே அடையாளமாக இருந்ததால் அந்தப் பெண்ணுக்கு (பாடகி)சைலஜா என்றே கடைசி வரை சொல்லிவிட்டேன்..
    உண்மையில் அவள் பெயர் grace. சில சம்பவங்கள் மாற்றப் பட்டிருக்கின்றன..கதையின் சுவாரஸ்யம் கருதி..

    ReplyDelete
  16. ///////////////
    Alasiam G said...
    பாவம் மைனர்... உங்க ஜோல்லுளே நீங்களே வழுக்கி விழுந்திட்டீங்க.....//////////

    சுழட்டி சுழட்டி அடிச்சால் இடறி விழுவாம எப்புடி?

    ////////////////
    கடைசிடில் தெளிவாகிடீங்க....
    பட்டபின்பு ஞானி......\\\\\\\\\\\

    எங்க தெளிவாகுறது? எப்டி ஞானியாவுறது?

    இது இப்பிடித்தான் கடைசி வரைக்கும்..
    எவ்வளவோ போச்சு..இழப்புகள்..இனிமையான அனுபவங்களின் நினைவுகள் மட்டுமே மிச்சம்..
    ஒண்ணு கிடைச்சா இன்னொண்ணு கிடைக்காதில்லே?

    தங்கள் ரசனைக்கு நன்றி..

    ReplyDelete
  17. மிநோர்வால் said...

    அழகு பைங்கிளி வந்தாத்ச? வரணுமா? இருதய ரேகை சொல்லுது :-)))


    { போட்டோவை எடுத்தது அவருடைய இல்லத்தரசிதான் சாமி! இன்னொரு பைங்கிளி எதற்கு? மைனர் வீட்டில் இல்லத்தரசியிடம் தர்ம அடி வாங்குவதற்கா? Sunday, September 19, 2010 6:55:00 அம }


    ஐயா! நம்ம minor அண்ணாச்சியை போய்! அதுவும் நானாக்கும், ஒரு பொழுதும் அப்படி நினைக்கவில்லை ஐயா! நினைக்கவில்லை.


    " தாயே சக்கமா " இது என்னம்மா உலகம் தலைகீழ சுற்றுது ஞாயமா?

    நல்வாழ்த்துக்கள் தோழரே! நன்றாக வந்தமைக்கு.


    இன்று, எமது தவறை ஜப்பானில் இருந்துகொண்டு சுட்டி காண்பித்து விட்டீர் தங்களையும் அறியாமல்


    அது... அது.... வகுப்பறை முடிந்த பின்னர் சொல்லுகின்றேன் சரியா.

    ok

    பசிகின்றவனுக்கு......" பசியாற வைப்பதை காட்டிலும், பசியாறும் வழியை சொல்லி தருவதில் தான் மனிதாபிமானமே " உள்ளது.

    தாளத்தோடு சுருதி கலப்பது போல
    கற்றலோடு ஞானம் கலப்பது போல
    தாய்மையோடு அன்பு கலப்பது போல
    கண்டிப்போடு அரவணைப்பும் கலப்பது போல

    அல்லவா இன்றைய அருமை
    " கிளாஸ் " உள்ளது.

    அதைத்தான் தங்களுக்கே உரிய பாணியில் சொல்லி உள்ளீர்கள் இன்றைய கதையில் . என்ன தல சரிதானே ?

    ReplyDelete
  18. /////////////
    krish said...

    கலக்குறீங்க மைனர். சுஜாதா அவர்கள் தன்னை முன்னிலை படுத்தி எழுதுவார். அதுபோல் சிறப்பாக உள்ளது. தொடருங்கள்.\\\\\\\\\\\\\\\\\\\\\
    நன்றி..krish ...
    இது எனக்கு மூன்றாவது கதை..முதலில் எழுதியது கல்லூரியில் நண்பர்களுக்காக சங்கமம் என்று ஒரு இதழுக்காக..நண்பர்கள் தொடர்ந்து எழுத ஊக்கமளித்தும் கல்லூரி நான்கே வருடங்களில் முடிந்து விட்டதால் வாய்ப்புகள் இல்லை..அதன் பின் கிட்டத்தட்ட பதினைந்து ஆண்டுகளுக்கும் மேல் எழுதியதில்லை..பத்திரிகைக்கு எழுதி பழக்கமும் இல்லை..என் எழுத்தை விளம்பரப் படுத்துங்கள் என்று கெஞ்சுவது போல ஒரு உணர்வு..அதனால் விருப்பமும் இல்லை..
    ஆசிரியரின் வாரமலர் இதற்கெல்லாம் ஒரு கமா போட்டிருக்கிறது.. சுஜாதா எழுத்தில் இணைத்துப் பேசும்போது கூச்சமாக உள்ளது..
    புளகாங்கிதத்தில் புல்லரிச்சுப் போச்சு..போங்க..

    ReplyDelete
  19. ///////////
    astroadhi said...
    good morning sir...

    மைனரின் முதுகில் இருப்பது அவரது உடைமைகள் (Ipod, digital camera, நீச்சல் உடைகள், துண்டுகள், வாசனைத் திரவியங்கள் அடங்கிய பை.)

    நம்மூர் என்றால் - இதற்கென்றே - அதாவது இதைப் போன்றவற்றை சுமந்து வருவதற்கென்றே மைனரின் பண்ணை ஆட்கள் உடன் வருவார்கள். ஜப்பானில் அதற்கெல்லாம் வழியில்லை.

    sema punch oda pathiva potrukinga ....minor anna super ....continue ,,,

    thank u so much \\\\\\\\\\\\\\\\

    நானும் பேச்சு வாக்குலே மத்த கமென்ட்ஸ் பத்தி எழுதிட்டு இது பத்தி எழுதாம வுட்டுட்டேன்..
    நீங்க ஞாபகப் படுத்துனதுக்கு நான்தான் நன்றி சொல்லணும் தளபதி..
    சுப்பையா சாருக்கு இதே பழகிப் போச்சு..என்னை ஓட்டுறதுன்னா அவருக்கு அல்வா சாப்புடுற மாதிரி..
    நானும் இதுலே பழகி கண்ணை மறைச்சுடுச்சு..இதெல்லாம் ரொம்ப ஓவரா இல்லே..ன்னு உமாதான் அடிக்கடி கேப்பாங்க..இன்னிக்கு நான் இதக் கேக்குறேன்..
    ஏன் சார்..உங்களுக்கே இது நியாயமா இருக்கா?
    ஆமா சார்,
    நீங்க எப்டி கரெக்டா அது கொடைக்கானல் மாதிரி ஒரு tourist place ..அப்டி இப்டின்னு அள்ளி வுட்டுருந்தீங்க..
    உண்மையிலேயே படிச்சுட்டு ஷாக் ஆயிட்டேன்..அது உண்மையிலேயே Nikko என்று ஒரு hilstation .
    போன மாசம் ஒரு ட்ரிப் போயிருந்தேன்..அங்கே எடுத்ததுதான்..
    lake chuzen ..infront of futarasan temple ..Mt .Nantaisan க்கு ஏறி போகும் இடம்.. Nikko had been a center of Shinto and Buddhist mountain worship for many centuries before Toshogu was built in the 1600s, and Nikko National Park continues to offer scenic, mountainous landscapes, lakes, waterfalls, hot springs, wild monkeys and hiking trails.

    ReplyDelete
  20. அய்யா,

    மைனர் வால் சொல்வது மிகவும் சரியே.
    தனி மனித ஒழுக்கம் என்பது ஜப்பானில் மிகவும் உயர்ந்த நிலையில் உள்ளது என்பதை எனது நண்பன் மூலமாக நான் ஏற்கனேவே அறிந்து இருந்தேன். அது போன்று நமது நாடும் மாற வேண்டும் என்று ஆண்டவனை வேண்டுவோம்.

    மைனர் வால்,
    உங்கள் ஆக்கம் சிறப்பாக உள்ளது. வாழ்த்துகள்

    மிக்க அன்புடன்
    வெங்கடேசன்

    ReplyDelete
  21. மைனர் சொந்தப்பெயர் தெரிந்து விட்டதே........ நெப்போலியன் ஞானப்பிரகாசம், பெயருக்கு ஏற்றார் போல் அவருடைய குணங்களும் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    ReplyDelete
  22. என்னா தளபதி ஆதியார் நேத்திவரைக்கும் mufty லே இருந்தீங்க..இன்னிக்கு இப்பிடி மிடுக்கா uniform pose லே கலக்குறீங்கோ?

    ReplyDelete
  23. ////நம்மூர் என்றால் - இதற்கென்றே - அதாவது இதைப் போன்றவற்றை சுமந்து வருவதற்கென்றே மைனரின் பண்ணை ஆட்கள் உடன் வருவார்கள். ஜப்பானில் அதற்கெல்லாம் வழியில்லை./////

    /////நானும் பேச்சு வாக்குலே மத்த கமென்ட்ஸ் பத்தி எழுதிட்டு இது பத்தி எழுதாம வுட்டுட்டேன்..
    நீங்க ஞாபகப் படுத்துனதுக்கு நான்தான் நன்றி சொல்லணும் தளபதி..
    சுப்பையா சாருக்கு இதே பழகிப் போச்சு..என்னை ஓட்டுறதுன்னா அவருக்கு அல்வா சாப்புடுற மாதிரி..
    நானும் இதுலே பழகி கண்ணை மறைச்சுடுச்சு..இதெல்லாம் ரொம்ப ஓவரா இல்லே..ன்னு உமாதான் அடிக்கடி கேப்பாங்க..இன்னிக்கு நான் இதக் கேக்குறேன்..
    ஏன் சார்..உங்களுக்கே இது நியாயமா இருக்கா? /////

    காலையிலகொஞ்சம் அவசரமாக வெளியில போனதால நானும் இத விட்டுட்டேன்.
    இல்லை மைனர்.... சுப்பையா சர்ர் உங்கள மட்டும் ஒட்டல!!!
    வெளியூருல துப்புப் படுற (மன்னிக்கணும் நான் வெளியூரில் இருப்பதாலும், மேலும் , என்னிடம் "பாரின் / ஸ்டேட்ஸ் என்று யாராவது சொன்னால் ஓ.... துப்புப் படுரார்களா? என நான் சொல்வதுண்டு...) நாம் எல்லாத்துக்கும் வைத்த ஆப்புத் தான் அது...

    அதென்னமோ சொர்க்கமே என்றாலும் அது நம்ம ஊருப் போல வருமா? என்பது உண்மைத்தான் நாங்களும் ஏத்துகிறோம் சார்...................
    நாட்டை மட்டும் அல்ல, சொந்த பந்தங்களை மட்டும் அல்ல, புண்ணிய பூமியை மட்டும் அல்ல, பலரும் வாழ்க்கையே துழைத்தது தான் உண்மை.... தலைத் தீபாவளி, பொங்கல், திருவிழா, இப்படி இன்னும் பலவோடு..... சிலருக்கு பெற்றோரை கடைசியாகக் கூட பார்க்க கொடுத்து வைக்க வில்லை.

    ஊருலே ஒரு நல்ல வேளையில் இருக்க வழியில்லை யார நோவது....
    மொத்தத்தில் ஒன்பதாம் இடம் சரியில்ல அந்த இடத்து அதிபதியோ பன்னிரெண்டில் மறைந்து விட்டான்.......
    யார் கண்டா, வெள்ளைக் காரண உலகமெல்லாம் பரவ விட்டு உலகப் பொது மொழியை உண்டாக்கிய ஆண்டவன், தமிழனை உலகமெல்லாம் பரப்பி கலாச்சாரத்தையும், யோகாவையும் பரப்ப எத்தனித்து இருக்கிறானோ என்னமோ?

    எங்களுக்குள்ளும் இழந்த..... ஏக்கம் புரையோடிக் கிடக்குது சார்ர்ர்ரர்.

    ReplyDelete
  24. //////////
    venkatesan.P said...
    மைனர் வால் சொல்வது மிகவும் சரியே.
    தனி மனித ஒழுக்கம் என்பது ஜப்பானில் மிகவும் உயர்ந்த நிலையில் உள்ளது என்பதை எனது நண்பன் மூலமாக நான் ஏற்கனேவே அறிந்து இருந்தேன். அது போன்று நமது நாடும் மாற வேண்டும் என்று ஆண்டவனை வேண்டுவோம்.

    மைனர் வால்,
    உங்கள் ஆக்கம் சிறப்பாக உள்ளது. வாழ்த்துகள்..////////////
    மாற்றுதல் அல்லது மாறுதல் எல்லாம் தாண்டி கண்ணில் பட்டதை மனதில் உறைத்ததை கதையுடன் கலந்து கொடுத்தேன்..படித்து விமர்சித்ததற்கு நன்றி.
    சில சமயங்களில் பார்த்தால் ஒரு தக்காளி ரூ.50 ..நன்கு கத்தரிக்காய் ரூ.100 ..குறைந்த பட்ச விலையாக (minimum unit price) ரூ.50 என்றாகிவிடும்போது வீட்டு வாடகைக்கு மட்டுமே துண்டாக எப்படியும் ரூ.20000 , combined tax & insurance என்று ஒரு ரூ.15 -20000 என்று ஒரு சராசரி வாழ்க்கைக்கே இவர்கள் போராடவேண்டிய நிலை..அதிகபட்ச விலையாக மிகமிகமிகக் கடின உழைப்பைக் கொடுத்து(நம்மால் ஜீரணிக்க முடியாத அளவு) இந்த வாழ்வைத் தக்கவைக்கப் போராடவேண்டியிருக்கிறது..எல்லா சராசரி ஜப்பானியரின் நிலையும் இதுதான்...
    எளிதான அவசிய வாழ்க்கைக்கான மாதச் செலவுகளுடன் இவ்வளவு சிரமப்படாமல் படுத்துக்கிட்டே சுகமாய் வாழ வழிகள்
    இருக்கும் இந்தியாவை நினைத்தால் சொர்க்கம்தானே?

    ReplyDelete
  25. //////////
    R.Puratchimani said...

    மைனர் சொந்தப்பெயர் தெரிந்து விட்டதே........ நெப்போலியன் ஞானப்பிரகாசம், பெயருக்கு ஏற்றார் போல் அவருடைய குணங்களும் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.\\\\\\\\\\\

    நன்றி..புரட்சி..நீங்க நுமேரோலேஜி பாப்பீங்களோ?

    ReplyDelete
  26. Dear Minorwall Anna,

    Super,

    ஊருலே ஒரு நல்ல வேளையில் இருக்க வழியில்லை யார நோவது....

    யார் கண்டா, வெள்ளைக் காரண உலகமெல்லாம் பரவ விட்டு உலகப் பொது மொழியை உண்டாக்கிய ஆண்டவன், தமிழனை உலகமெல்லாம் பரப்பி கலாச்சாரத்தையும், யோகாவையும் பரப்ப எத்தனித்து இருக்கிறானோ என்னமோ?

    எங்களுக்குள்ளும் இழந்த..... ஏக்கம் புரையோடிக் கிடக்குது சார்ர்ர்ரர்.///

    Sathiyama ithu unmai anna, abroad Valkkai sathanaikalai vida elapukkal (Vethanai) athikam...

    Orula oru nall velai kidacha nalla irukkum!!!!!!!!!!!!

    Rds

    Pandian

    ReplyDelete
  27. minorwall said....
    என்னா தளபதி ஆதியார் நேத்திவரைக்கும் mufty லே இருந்தீங்க..இன்னிக்கு இப்பிடி மிடுக்கா uniform pose லே கலக்குறீங்கோ?

    ஒன்னும் இல்ல தல உங்க தளபதி ன்னா டெரர் லுக்கிங் ல இருந்தா தான் மத்தவங்க பயப்படுராங்க அதான்....ரொமாண்டிக் லுக் ல இருந்தா காமடி பண்றாக அதான்.....

    ReplyDelete
  28. Minor maamu,
    Maththavangalukku uthavara vishayaththil appdiye ennai urichchu vachirukkeenga maamu..
    he...he...
    G.Nandagopal

    ReplyDelete
  29. bhuvanar said...
    நீங்க quote பண்ணி கமென்ட் பண்ணினதெல்லாம் நான் சொல்லல..ஆலாசியம் சார் சொன்னது..
    மற்றபடி நீங்க ஒத்துக்கிட்டாப் போலே இழப்புகள் பல..ஒன்றை இழந்துதான் ஒன்றைப் பெற முடியும்..
    நல்லது...உங்கள் அனுபவங்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள்..

    ReplyDelete
  30. இளைஞரே உங்கள் முதுவில் என்னதான் இருக்கட்டுமே இதயத்தில் அன்பு உள்ளதே அதுவே போதும் தமிழன் என்ற உணர்வோடு தலை நிமிர்ந்து நிற்க
    வாழ்க வளமுடன்

    ReplyDelete
  31. ///////////
    Alasiam G said...
    வெளியூருல துப்புப் படுற (மன்னிக்கணும் நான் வெளியூரில் இருப்பதாலும், மேலும் ,
    என்னிடம் "பாரின் / ஸ்டேட்ஸ் என்று யாராவது சொன்னால் ஓ.... துப்புப் படுரார்களா? என நான் சொல்வதுண்டு...)\\\\\\\\\\\\\\\\\\

    உள்ளூரில் வக்கு இல்லாதவனிடம் துப்புப் படுவதைவிட வக்கு உள்ள வெளியுர்க்காரனிடம் துப்பு படுவது என்னவோ கொஞ்சம் ஆறுதல்தான்..
    உள்ளூரிலே கூட வேலையில் இருப்பவர்களில் என்று ரேட்டிங் படி பன்னாட்டு நிறுவனங்களின் ஊழியர்கள்தானே முதலிடம்..
    இவர்களிலும் ஃபோரீன் ட்ரிப் எதிர்பார்த்து காத்திருப்பில் இருப்போர்தான் இங்கும் ரேட்டிங் படி முதலிடம்..
    இதில் இன்னும் காமெடி என்னவென்றால் இந்த பெரிய சாப்ட்வேர் நிறுவனங்கள் வெளிநாட்டுக்கு தங்கள் ஊழியரை அழைத்துச் செல்லும் போது எங்கே இவர்கள் நேரடியாக
    வெளிநாட்டு கம்பனிகளில் தாவி விடுவார்களோ என்ற பயத்தில் குறிப்பிட்ட கால காண்ட்ராக்ட் விசா அதிலும் intra company transfer visa என்று தாவ முடியாத பணயக்கைதிகளாய் கொண்டுசென்று சம்பாதிக்கிறார்கள்..compare பண்ணினால் we are logically @ higher levels என்பதையும் விட்டுக் கொடுப்பதற்கில்லை..
    நான் இங்கே எந்த இடத்திலும் தன்மானத்துக்கு பங்கம் வரும் விஷயங்கள் எழும் போது விட்டுக்கொடுப்பதில்லை..
    சில சமயங்களில் பிழைப்புத்தேடி நாடுவிட்டு நாடு வந்தவர்கள் என்ற வகையிலான விமர்சனங்கள் சில புரியாத இனவெறி கொண்ட உள்ளூர்க்காரர்கள்
    செய்வதுண்டு..அது நம்மூர்களிலும் கூட வந்தேறிகள் என்று விமர்சிக்கப்படுவதும் உண்டு..இவர்களின் இந்தவகை வாதங்களுக்குக் காரணம் சுய பச்சாதாபம்தான்..
    எங்கே வந்தவர்களால் தங்கள் வாய்ப்பு பறிபோய் விட்டதோ/விடுமோ என்ற ஆதங்கம்தான் காரணம்..
    ஒண்ட வந்த பிடரி ஊர் பிடாரியை விரட்டியது என்ற கதை நம்மூர் வழக்கில் உள்ளதுதானே?
    அந்த பொலிடிக்ஸ் எல்லாம் பண்ணித்தான் நானெல்லாம் இங்கே நிலை கொண்டுள்ளேன்..
    உடைத்துத் துவம்சம் செய்யும் ஆற்றல் இல்லாதோர் எதிரிகள் வலையில் விழுவது என்பது எங்கும் உள்ளதுதானே..
    இங்குதான் ஆறாமிடம், சோதிடம் எல்லாம் நுழைந்து கொள்ளும்..

    ReplyDelete
  32. ////////////
    astroadhi said...
    ஒன்னும் இல்ல தல உங்க தளபதி ன்னா டெரர் லுக்கிங் ல இருந்தா தான் மத்தவங்க பயப்படுராங்க அதான்....
    ரொமாண்டிக் லுக் ல இருந்தா காமடி பண்றாக அதான்.....\\\\\\\\\\\

    அடடே..நானே அதுனாலதான் இந்த காமோப்லேஜ் கமாண்டோ get up விட்டு வெளிலே வரலை.தளபதி...நீங்க..நீங்கதான்..
    நம்ம iphone ஆபரேஷன் லே அட்டாக் ஆகி புறநானூற்று வீரத்தை பறைசாற்ற நெஞ்சிலே வீரத் தழும்போட நேத்திக்கி பேசினாரே..நல்லா இருக்காரில்லே?
    நேத்திக்கு அவர் பேசிட்டுருக்கும்போதே வாக்கிடாக்கி சிக்னல் கிடைக்கலை.. ஓவர்..ஓவர்..

    ReplyDelete
  33. ///////////// G.Nandagopal said...

    Minor maamu,
    Maththavangalukku uthavara vishayaththil appdiye ennai urichchu vachirukkeenga maamu..
    he...he...
    G.Nandagopal //////////


    பாம்பின் கால் பாம்பறியும்..


    நீங்க ஒருத்தர்தான் தெளிவாப் புரிஞ்சுக்கிட்டு நம்ம பெருந்தன்மையப் பத்தி சொல்லிருக்கீங்க மாப்ளே..


    ஆலாசியம் சார் இதப் போய் ஜொள்ளு கிள்ளுங்குராரு...

    ReplyDelete
  34. மதுரை சரவணன் எப்பிடி இருக்கீங்க? இந்த தடவை iPod சாங் உங்களுக்குப் புடிச்சுருந்துச்சா?

    ReplyDelete
  35. அட டா... அடடா அடை மழைடா!
    வாத்தியார் வகுப்பில் புயல் மழைடா!
    ******
    என்ன தாலி? விருந்தாளி. :-)))
    Sunday, September 19, 2010 5:38:00

    மேற்கண்ட பாடல் மண்ணின் வேந்தன்
    ஆன minorin விருந்தாளிக்கு
    ( அதாங்க சைலஜா விற்கு )
    **********
    இந்தபாடல் சைலஜா என்றபேருக்காக

    குத்தடி குத்தடி சைலஜா
    குனிந்து குத்தடி சைலஜா
    பந்தலிலே பாகற்காய்
    தொங்குதடி நோலாக்கு
    பையன் வந்தால் பார்த்துக்கோ
    பழம் கொடுத்தா வாங்கிக்கோ
    சில்க் சட்டையை மாட்டிக்கோ
    திங்கு திங்கினு குதிட்சிக்கோ!

    ReplyDelete
  36. /////////////
    natarajan said...

    இளைஞரே உங்கள் முதுவில் என்னதான் இருக்கட்டுமே இதயத்தில் அன்பு உள்ளதே அதுவே போதும் தமிழன் என்ற உணர்வோடு தலை நிமிர்ந்து நிற்க
    வாழ்க வளமுடன்\\\\\\\\\\\\\\\\

    நன்றி அய்யா..

    உங்கள் அன்புக்குத் தலை வணங்குகிறேன்..நம் நாடு, நம் மொழி, நம் மக்கள் என்று நம்மிணைவுக்கு காரணமாகிய இணையத்துக்கு(இணையப் பின்னணி தொழிநுட்ப வல்லுனருக்கு) இந்த வேளையில் நன்றி சொல்லிக்கொள்கிறேன்....

    ReplyDelete
  37. வழக்கம்போலே ஆசிரியர் ஒன்றுமே சொல்லவில்லை..இதுவரை..
    எழுத்தின் தன்மை பற்றி..உங்கள் விமர்சனத்தை...
    உங்கள் கமென்ட் ஆர்வத்துடன் எதிர்பார்க்கிறேன்.....

    ReplyDelete
  38. ////////////
    astroadhi said...
    ஒன்னும் இல்ல தல உங்க தளபதி ன்னா டெரர் லுக்கிங் ல இருந்தா தான் மத்தவங்க பயப்படுராங்க அதான்....
    ரொமாண்டிக் லுக் ல இருந்தா காமடி பண்றாக அதான்.....\\\\\\\\\\\

    அடடே..நானே அதுனாலதான் இந்த காமோப்லேஜ் கமாண்டோ get up விட்டு வெளிலே வரலை.தளபதி...நீங்க..நீங்கதான்..
    ///

    இன்னனுமா பாஸ் இந்த ஊரு நம்மள நம்பிட்டு இருக்கு ஹையோ ஹையோ....

    ReplyDelete
  39. மைனர் அண்ணா narration of the story super...
    உங்க கூடியே பயணித்தது மாதிரி இருந்துச்சி...
    உங்க கிட்ட இருந்து இன்னும் எதிர் பார்க்கிறோம்...

    ReplyDelete
  40. minorwall said....
    ///// அது நம்மூர்களிலும் கூட வந்தேறிகள் என்று விமர்சிக்கப்படுவதும் உண்டு..இவர்களின் இந்தவகை வாதங்களுக்குக் காரணம் சுய பச்சாதாபம்தான்../////

    உண்மைத்தான் அது தான் எனது ஆதங்கமும் திறமையும், புத்தியும், நான் பிறந்து வளர்ந்த நாட்டிற்கு பயன் படாமல் போனதும் அதற்கான அரசியல் அமைப்பும் வகுப்பு விகிதாச்சாரமும் கூட முக்கியக் காரணம். திறமைக்கும் புத்திசாலித் தனத்திற்கும் மதிப்பு எங்கு கிடைக்கிறதோ அங்கு முதலில் சந்தோசமும் தைரியமும் கொண்டு வேலைச் செய்யலாம். உள்ளூரு, வெளியூரு, மஜாரிட்டி, மைனாரிட்டி, பரம்பரைப் பணக்காரன், திடீர் பணக்காரன், பிழைக்கவந்தவன், மண்ணின் மைந்தன், பரம்பரையாக ஆண்டவன், இவன் கொங்கு நாடு, வன்னிய நாடு, செந்தமிழ்நாடு, இன்னும் என்ன என்னவோ நாடு.... என்னமோ நான் இருக்கும் நாட்டில் மூன்றுப் பிரிவு அதில் நான் ஒருப் பிரிவு அவ்வளவுத் தான்.

    என்னைப் படைத்தவனுக்குத் தெரிந்து தான் என்னை இங்கு கொண்டு வந்து விட்டு விட்டான். கொஞ்சம் நிம்மதியாக வாழ்ந்து விட்டுப் போகட்டுமே என்று.... எப்படியோ எல்லோரும் நன்றாக சந்தோசமாக இருக்க அவன் அருளட்டும்.

    நமது கழிவறையை நாமேக் கழுவிக் கொள்கிறோம் (அதை மகாத்மா வேறு காரணத்திற்காக செய்தார்) நமக்கு அது தான் இங்கு நியதி..... வசதி இருந்தால் அதுக்கும் ஆள் பிடிக்கலாம்...

    எப்படியோ ராஜசேகர் சர்மாவை நினைவில் கொள்வோம் பதினெட்டுக் கோடியைக் கொடுத்து தான் படித்த பல்கலை கழகத்திற்கு நன்றியைக் காட்டிக் கொண்டு விட்டார். நாமும் இங்கு புலம்புவது எல்லாம் பிறந்த நாட்டின் மீது உள்ள அக்கறையும் கவலையுமே அன்றி வேறெதுவும் அல்ல கேளிசியா அல்ல. பெருமை ஆயிரம் அல்ல கோடி இருக்கலாம்..... அமிர்தமே இருந்தாலும் அது இருக்கு செம்புப் பாத்திரம் களிம்பூறினால் அதை எப்படி பருக முடியும்.???

    சிறு வயதில் அரசியல் பொது சேவை, அரசு அலுவலகம், தனியார் துறை (எனது முதல் வேலையே கோயம்புத்தூர் ஒப்பன்னக் காரத் தெருவில் இருந்த மதுரா வகித்த தான், சம்பந்தமில்லாமல் கிடைப்பதே செய்வது தானே நல்லது என்று பல நிலைகளில் புகுந்து, கடைசியாக காத்து அடித்துக் கொண்டு வந்து விட்டது... அதனால் இப்படிக் கூறுவேன், அதிலும் பழையத் தலைவர்களை அடிக்கொடிடத் தான் முடியும்....

    நான் கல்யாணம் செய்து கொண்டுவிட்டேன் காமராஜர் அல்ல,
    நான் பிள்ளைகள் பெற்றுள்ளேன் அண்ணா, எம்.ஜி.ஆர். அல்ல,
    எனக்கு குடும்பம் இருக்கிறது வாஜ் பாயும், அப்துல்கலாமும் அல்ல,
    இவர்களைப் போல் நாட்டின் மீதும் நான் பிறந்த சமூகத்தின் மீதும் (தமிழினம்) தீராத பற்றும் பாசமும் இருக்கிறது.
    உங்களைப் போல் எல்லோருக்கும் அமையுமா? என்றக் கேள்வி வரலாம், பதில் தெரிய வில்லை சர்வேசனைக் கேட்க வேண்டும்....
    எனக்கு இரண்டில் உட்ச செவ்வாய் ஆக நான் கூறுவது வேறு விதமாகக் தான் புரிந்துக் கொள்ளப் படும்..... எனது என்ன வெளிப்பாடு மாத்திரமே. நன்றி...

    "யாதும் ஊரே யாவரும் கேளீர்".
    நாமும் ராஜசேகர் சர்மாவின் வழியைப் பின்பற்ற முயல்வோம்.......

    ReplyDelete
  41. minorwall said....
    //////"ஆலாசியம் சார் இதப் போய் ஜொள்ளு கிள்ளுங்குராரு..."//////
    20 ல் ஜொள்ளு இல்லைனாலும்....
    40 ல்லேயும் ஜொள்ளு இருக்குனாலும்
    மன வியாதின்னு அர்த்தம் பார்த்துக்கங்க, அம்புடுத்தான் சொல்வேன்..........

    ReplyDelete
  42. /////minorwall said...
    ///////////
    astroadhi said...
    good morning sir...
    மைனரின் முதுகில் இருப்பது அவரது உடைமைகள் (Ipod, digital camera, நீச்சல் உடைகள், துண்டுகள், வாசனைத் திரவியங்கள் அடங்கிய பை.)
    நம்மூர் என்றால் - இதற்கென்றே - அதாவது இதைப் போன்றவற்றை சுமந்து வருவதற்கென்றே மைனரின் பண்ணை ஆட்கள் உடன் வருவார்கள். ஜப்பானில் அதற்கெல்லாம் வழியில்லை.
    sema punch oda pathiva potrukinga ....minor anna super ....continue ,,,
    thank u so much \\\\\\\\\\\\\\\\
    நானும் பேச்சு வாக்குலே மத்த கமென்ட்ஸ் பத்தி எழுதிட்டு இது பத்தி எழுதாம வுட்டுட்டேன்..
    நீங்க ஞாபகப் படுத்துனதுக்கு நான்தான் நன்றி சொல்லணும் தளபதி..
    சுப்பையா சாருக்கு இதே பழகிப் போச்சு..என்னை ஓட்டுறதுன்னா அவருக்கு அல்வா சாப்புடுற மாதிரி..
    நானும் இதுலே பழகி கண்ணை மறைச்சுடுச்சு..இதெல்லாம் ரொம்ப ஓவரா இல்லே..ன்னு உமாதான் அடிக்கடி கேப்பாங்க..இன்னிக்கு நான் இதக் கேக்குறேன்..
    ஏன் சார்..உங்களுக்கே இது நியாயமா இருக்கா? //////

    உங்களை ஓட்ட முடியுமா மைனர்? கோவையில் இருந்து, டோக்கியோவில இருக்கிற உங்களை எப்படி ஓட்ட முடியும்? அதுக்கெல்லாம் இன்னும் டெக்னாலஜி வரலை!

    ReplyDelete
  43. //////minorwall said...
    வழக்கம்போலே ஆசிரியர் ஒன்றுமே சொல்லவில்லை..இதுவரை..
    எழுத்தின் தன்மை பற்றி..உங்கள் விமர்சனத்தை...
    உங்கள் கமென்ட் ஆர்வத்துடன் எதிர்பார்க்கிறேன்.....///////

    எளிய நடையில் நன்றாக இருக்கிறது. அதனால்தான் வலையில் ஏற்றினேன். வலையில் ஏற்றியதே மறைமுகமான விமர்சனம். நேரம் கிடைக்கும் போது எழுதுங்கள் மைனர். உங்களுக்குள் ஒளிந்திருக்கும் எழுத்து வன்மையை முழுமையாக வெளிப்படுத்துங்கள்.

    ReplyDelete
  44. தம்பி மைனர்வாள்,

    இன்றுதான் வாசிக்க முடிந்தது. உங்கள் எழுத்து நடை பிரமிக்க வைக்கின்றது.
    எழுத்து நடை வளரவும் பலம்பெறவும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  45. Over to her post//

    ?????????????????????

    ReplyDelete
  46. மைனர் நிஜமாகவே நன்றாக இருந்தது. தொடர்ந்து எழுதவும்.

    ReplyDelete
  47. முன்னிரவின் இதமான சூடு கலந்த காற்று நடைபாதையோர மரங்களில் இருந்து மெல்லிய சத்தத்துடன் என்னுடலைத் தழுவியவண்ணம் உடன்வர நானும் சுகமாக நடக்க ஆரம்பித்தேன்.//

    ம்ம், இப்போவே பிரபல எழுத்தாளர் சாயல் அடிக்குது.

    ReplyDelete
  48. இந்த வகை சத்தமிடலுடன் கூடிய பாடல்கள் இப்போது வெளி வருவதில்லை. அதனால்தானோ என்னவோ மனதில் அதிகம் நிற்பதுமில்லை..கேட்டாலும் ஓரிரு மாதங்களில் சலிப்புதட்டி விடுகிறது//

    இது எனக்கும் அடிக்கடி தோன்றும். இப்போ வரும் பாடல்களை அதனாலேயே கேட்பதில்லை. எப்போது 'ஹம்' செய்தாலும் இளையராஜாவின் 80 - 90 ல் வந்த பாடல்களைத்தான். (ரஹ்மானின் சில பாடல்களைத் தவிர)

    ReplyDelete
  49. Alasiyam said..
    minorwall said....
    //////"ஆலாசியம் சார் இதப் போய் ஜொள்ளு கிள்ளுங்குராரு..."//////
    20 ல் ஜொள்ளு இல்லைனாலும்....
    40 ல்லேயும் ஜொள்ளு இருக்குனாலும்
    மன வியாதின்னு அர்த்தம் பார்த்துக்கங்க, அம்புடுத்தான் சொல்வேன்..........

    There is no age barrier for jollu..
    Ithellaam iyarkayaa uruvathu..namalla khetta ellam nadakkuthu...
    ithellaam sirustiyin magimai thalaivaa..
    G.Nandagopal

    ReplyDelete
  50. எஸ்கலேட்டரில் பயணித்து இரண்டாம் தளத்துக்கு வந்துசேர்ந்தேன்.//
    மாடி ஏறி வந்த எனக்கே தலை சுத்தலை.. உங்களுக்குச் சுத்தினா எப்படி?//

    என்னதான் 2 வரி பாராட்டிட்டாலும் ஒரு தப்பாவது கண்டுபிடிக்கலன்னா ராத்திரி தூக்கம் வராது அதான்.

    ReplyDelete
  51. நம்மைப் போலவே திணறும் வெளிநாட்டுக்காரர்களுக்கு சற்று உதவி செய்தால் என்ன குறைந்து விடுவோம்//
    அந்த சேல்ஸ்மனுக்கு இங்கிலிஷும் சைலஜாவுக்கு ஜப்பானிசும் தெரியாதது எவ்வளவு வசதியாகப் போய்விட்டது?//

    இதப் பத்தி நான் எதுவும் சொல்லலை.

    ReplyDelete
  52. சுஜாதா எழுத்தில் இணைத்துப் பேசும்போது கூச்சமாக உள்ளது..
    புளகாங்கிதத்தில் புல்லரிச்சுப் போச்சு..போங்க..//

    இதுக்கு நான் எப்போதும் சொல்றதுதான்.

    ReplyDelete
  53. அதற்கான அரசியல் அமைப்பும் வகுப்பு விகிதாச்சாரமும் கூட முக்கியக் காரணம்.//

    நான் முதலில் இதப் பத்தின என் அனுபவத்தைத்தான் எழுதலாம்னு இருந்தேன். ஆனா அது வேற மாதிரி திசை திருமபிடும்னுதான் எழுதலை. 12 ல் கணிதம், இயற்பியல், உயிரியல் படிச்சுட்டு கல்லூரியில் வரலாறு படித்த கொடுமைனாலேயே சின்ன வயசுலேர்ந்து நான் வச்சிருந்த குறிக்கோளையே தலை முழுகிட்டு, இப்போ என்னவாவோ இருக்கேன்.

    ReplyDelete
  54. சென்ற பின்னுட்டத்தின் தொடர்ச்சி.

    ஆங்கிலம் தெரியாம வேலை கிடைக்காதுன்னு இருக்கும்போது, பாராளுமன்றத்துக்குப் போகத் தடையில்லைங்கரதுதான் இடிக்குது. அரசியல்வாதிகளுக்கு மட்டும் எந்த ஒரு தகுதி நிர்ணயமும் கிடையாது.

    ReplyDelete
  55. G.Nandagopal said...
    /////Ithellaam iyarkayaa uruvathu..namalla khetta ellam nadakkuthu...
    ithellaam sirustiyin magimai thalaivaa../////
    சரி வீட்டில அல்லது ஊர்ல அடிவாங்கனும்னு இருந்தா யாரு மாத்த முடியும்..........
    நேரம் நல்ல இருந்தா உடனே மாட்டீங்கிக்குவேங்க இல்லைன்னா?
    நம்ம பில்லு, டைகர் ஐயாக்கலப் போல பின்னாலத் தெரியும்....

    மைனர் இதுல சைவர்
    சும்மா விளையாட்டுக்கு சொன்னாரு
    நானும் விளையாட்டுக்குச் சொன்னேன்
    விடுங்கப்பா! கோபமே வராதவருக்கே வந்திடப் போகுது..........):

    ReplyDelete
  56. ////// 12 ல் கணிதம், இயற்பியல், உயிரியல் படிச்சுட்டு கல்லூரியில் வரலாறு படித்த கொடுமைனாலேயே சின்ன வயசுலேர்ந்து நான் வச்சிருந்த குறிக்கோளையே தலை முழுகிட்டு, இப்போ என்னவாவோ இருக்கேன்.//////

    பிறகு எந்தக் கணக்குல 2020 வல்லரசுன்னு சொல்றாங்கன்னு தெரியல?

    ReplyDelete
  57. //////அரசியல்வாதிகளுக்கு மட்டும் எந்த ஒரு தகுதி நிர்ணயமும் கிடையாது//////
    பரீட்ச்ச்யே இல்லாம பதவிக்கு வர அதுமட்டும் தான் வழி....

    ஒரே ஒரு சின்னப் பரீட்சை அதையும் அவுங்க தாய் மொழியிலே வச்சாப் போதும்...
    சின்னக் கேள்விகள் பத்து மட்டும்.
    தேசப் பிதா பிறந்த வருடம், ஊர்.
    சுதந்திரம் கிடைத்த வருடம் தேதி நேரம்
    குடியரசு ஆனது எப்போது?
    மூவர்ணக் கொடியின் அர்த்தம் என்ன? நடுவில் உள்ள சக்கரம் என்னச் சொல்லுது?
    தேசியகீதம் எழுதியது யார்? பிழையில்லாமல் சொல்லுக / எழுதுக?
    இடம் சுட்டிப் பொருள் விளக்குக...
    ஜாலியன் வாலாபாக்
    தண்டி
    சோமநாத புரம்
    முதல் சுதந்திரப் போர்...
    இவைகளுக்கு டுக்க்கில்லாமல் பாசானவே போதும்

    ReplyDelete
  58. /////நான் முதலில் இதப் பத்தின என் அனுபவத்தைத்தான் எழுதலாம்னு இருந்தேன். ஆனா அது வேற மாதிரி திசை திருமபிடும்னுதான் எழுதலை./////
    பாதிக்கப் பட்ட நீங்க உங்க உண்மையான அனுபவத்தை சொல்ல தடை இருக்காது.......
    அறிவு, திறமை ஒரு தனி மனித சொத்து அதை அன்கீகரீக்கலனா யாருமே அனுபவிக்க முடியாமப் போய்விடும்........

    பொருளாதாரத்தில் தாழ்ந்தவனுக்கு உதவலாம்...
    படிக்க வழித் தெரியாதவனுக்கு உதவலாம்......
    ஆனால் என்னமோ...போங்க.....
    ஆனால் ஒரு...... வேண்டாம்...... தொலையிது...
    என்னத் தெரியும்.. இல்ல யாரைத் தெரியும்...
    சட்பிகட் பையை யாருக் கேட்டா?...
    பெட்டி எங்கே!....... போ வரும்.....

    சர்வேசா! ஏதாவது செய்.... புண்ணிய பூமியில் தர்மம் சீரழிகிறது... வீணைகள் புழுதியில் எறியப்படுகிறது...

    ReplyDelete
  59. பாதிக்கப் பட்ட நீங்க உங்க உண்மையான அனுபவத்தை சொல்ல தடை இருக்காது......//

    அது என்னன்னா அங்க இருக்கிற இட ஒதுக்கீடுதான் பெரிய பிரச்சனை. நான் பி.எஸ். சி கணிதம் படிக்கணும்னு நினைச்சேன். ஆனா என்ன விட மட்டமான மதிப்பெண்கள் எடுத்தவங்களுக்கெல்லாம் கிடைச்சது, எனக்கு அவங்களாவே வரலாறு கொடுத்தாங்க. (இதுல நீங்களே யோசிச்சுப் பாருங்க, 2 க்கும் எதாவது சம்பந்தம் இருக்கான்னு). இத நான் வெளிப்படையா எழுதினா வேற மாதிரி திசை திருப்பறவங்க நிறைய பேர் இருக்காங்க.

    முன்னேறனும்னு நினைக்கிறவங்களுக்கு வாய்ப்பு கிடைக்கறதில்ல. வாய்ப்பு கிடைச்சவங்கள்ள நிறைய பேர் ஒழுங்கா வேலை செய்யறதில்லை. இங்க ஒரு தடவை அரசாங்க ஆஸ்பத்திரிக்குப் போனப்ப 2 பேர் வலியில துடிச்சிடிருந்தாங்க, ஆனால் நர்ஸ் உக்காந்து வம்படிச்சிட்டிருந்தாங்க. இது ஒரு உதாரணம்தான், இன்னும் என் அனுபவத்திலேயே நிறைய இருக்கு.

    ReplyDelete
  60. உமா எங்கே காணோமே என நினைத்தேன்.
    ஆலாசியம் நானும் வல்லரசு படம் தான் என்று நினைப்பவன் தான். சஷி தரூர் எழுதிய Elephant, Tiger and Cellphone புத்தகத்தை படிக்கும் வரை. நம் நாடு எவ்வளவு வளர்ந்து விட்டது அதற்கு காரணம் நாம் குறைகாணும் அரசியல்வாதிகள்தான் என்று அறிய வியப்பாக இருக்கிறது.

    ReplyDelete
  61. மகேஷ் ராஜ் said...
    தேங்க்ஸ் மகேஷ் ராஜ் அவர்களே....

    ReplyDelete
  62. ////////////////
    Iyappan said...

    மைனர் அண்ணா narration of the story super...
    உங்க கூடியே பயணித்தது மாதிரி இருந்துச்சி...
    உங்க கிட்ட இருந்து இன்னும் எதிர் பார்க்கிறோம்...\\\\\\\\\\\

    நன்றி Iyappan...narration பத்தி பாராட்டுக்கு நன்றி..

    கூடவேத்தானே இருக்கீங்க..அது என்ன 'மாதிரி' இருந்துச்சு?

    தொடர்ந்து தாக்குதல் நடத்துனா வர்றவுங்க போறவுங்க பாதிச்சுடமாட்டாங்க?

    நிதானமா ஆற அமர தாக்குதல தொடருவோம்..டேக் கேர்...

    ReplyDelete
  63. /////////////

    SP.VR. SUBBAIYA said...

    எளிய நடையில் நன்றாக இருக்கிறது. அதனால்தான் வலையில் ஏற்றினேன். வலையில் ஏற்றியதே மறைமுகமான விமர்சனம். நேரம் கிடைக்கும் போது எழுதுங்கள் மைனர். உங்களுக்குள் ஒளிந்திருக்கும் எழுத்து வன்மையை முழுமையாக வெளிப்படுத்துங்கள்.\\\\\\\\\\\\\\\

    நன்றி சார்..வலையில் ஏற்றினாலும் நீங்கள் கதைத்தொகுப்பே வெளியிட்டுள்ள எழுத்தாளர்..

    அதனால்தான் உங்களின் கருத்தை கேட்டேன்..

    இதுவரை நானும் மறந்துவிட்டேன்....

    'கதையல்ல..'என்று நான் எழுதியனுப்பிய தலைப்பை மாற்றி 'மைனரை மயக்கிய குரல்' என்று கேட்சிங்கா..மேச்சிங்கா... தலைப்பு கொடுத்து அசத்தியதற்கு நன்றி..

    ReplyDelete
  64. ////////
    krishnar said...
    தம்பி மைனர்வாள்,
    இன்றுதான் வாசிக்க முடிந்தது. உங்கள் எழுத்து நடை பிரமிக்க வைக்கின்றது.
    எழுத்து நடை வளரவும் பலம்பெறவும் வாழ்த்துக்கள்.\\\\\\\\\\\\\\\\

    பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் நன்றி சார்..

    ReplyDelete
  65. //////////////////
    Uma said...
    மைனர் நிஜமாகவே நன்றாக இருந்தது. தொடர்ந்து எழுதவும்.
    ம்ம், இப்போவே பிரபல எழுத்தாளர் சாயல் அடிக்குது.///////////

    தங்கள் மனங்கனிந்த பாராட்டுக்கு நன்றி..

    ReplyDelete
  66. /////////////
    Uma said...
    இது எனக்கும் அடிக்கடி தோன்றும். இப்போ வரும் பாடல்களை அதனாலேயே கேட்பதில்லை.
    எப்போது 'ஹம்' செய்தாலும் இளையராஜாவின் 80 - 90 ல் வந்த பாடல்களைத்தான். (ரஹ்மானின் சில பாடல்களைத் தவிர)//////////////////

    உண்மைதான்..நமக்குப் பிடித்தவற்றை மட்டுமே கேட்டு ரசிப்பதுதான் நம் மனசுக்கு நல்லது..
    நல்லது.. உள்ளத்து உணர்வுகளை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி..நீங்கள் கர்நாடிக் சங்கீதம் பயின்றவரோ?

    ReplyDelete
  67. //////
    There is no age barrier for jollu..
    Ithellaam iyarkayaa uruvathu..namalla khetta ellam nadakkuthu...
    ithellaam sirustiyin magimai thalaivaa..
    G.நந்தகோபால்\\\\\\\\\\
    ///////////////
    Alasiam G said...
    சரி வீட்டில அல்லது ஊர்ல அடிவாங்கனும்னு இருந்தா யாரு மாத்த முடியும்..........\\\\\\\\\

    வீட்டுலே பெத்த குழந்தையை அடிச்சாலே இப்போ அரெஸ்ட் பண்ண சட்டம் வந்துடுச்சு..இதெல்லாம் privacy சமாச்சாரங்கள்..
    மத்தபடி ரெண்டு பேர் கருத்துமே சரிதான்..அவுங்கவுங்க வாழும் காலகட்டம்..
    மனசைப் பொறுத்ததுதான்..எல்லாமே..ரசனை என்பதே மனசைப் பொறுத்துதானே?
    இன்டர்நெட் காலத்தில் 'dating ' காலகட்டம் இன்று..
    பூனை கண்ணைப் மூடிக்கிட்டால் உலகம் இருண்டுடும்னு நினைக்குறது போலே..
    இப்படி எதுவுமே நாட்டிலே நடக்கலை..என்று பேசுவோரும் இருக்கத்தான் செய்கின்றார்கள்..

    இந்த விஷயங்களைஎல்லாம் கொண்டு பார்த்தால் மாப்ள நந்தாவும் இன்னும் சைவம்தான்..


    /////////////// கோபமே வராதவருக்கே வந்திடப் போகுது..........):\\\\\ அது யாரு?

    ReplyDelete
  68. ///////////
    Uma said...
    எஸ்கலேட்டரில் பயணித்து இரண்டாம் தளத்துக்கு வந்துசேர்ந்தேன்.//
    மாடி ஏறி வந்த எனக்கே தலை சுத்தலை.. உங்களுக்குச் சுத்தினா எப்படி?//
    என்னதான் 2 வரி பாராட்டிட்டாலும் ஒரு தப்பாவது கண்டுபிடிக்கலன்னா ராத்திரி தூக்கம் வராது அதான்.\\\\\\\\\\\\\\\

    டைப்பினப்போவே நினைச்சேன்..தெரியும்..ஒருதரம் கூட எடிட் பண்ணலை..அபிடியே upload ண்ணினேன்..
    நீங்க கண்ணுல விளக்கெண்ணை வுட்டுடுத்தான் படிப்பீங்கன்னு நினைக்கலை..
    எபிடியோ உங்க வேலையைக் காட்றீங்க..பதிலுக்கு நாங்களும்..

    நாங்க எபிடியாவுது வீடியோ கேமராவை வாங்கியே தீருவோம்ங்குற கொள்கைப் பிடிப்புலே வேகத்துலே
    எஸ்கலேட்டரிலயே நடந்துட்டே ஏறியும் போனோமாக்கும்?
    இது எப்பிடி இருக்கு?உங்க தூக்கம் போச்சா?

    ReplyDelete
  69. ///////////Uma said...
    சுஜாதா எழுத்தில் இணைத்துப் பேசும்போது கூச்சமாக உள்ளது..
    புளகாங்கிதத்தில் புல்லரிச்சுப் போச்சு..போங்க..//

    இதுக்கு நான் எப்போதும் சொல்றதுதான்.////////////

    'இது உங்களுக்கே ரொம்ப ஓவராத் தெரியல?'
    இதுதானே அது?

    ReplyDelete
  70. //////////////////
    Uma said...

    சென்ற பின்னுட்டத்தின் தொடர்ச்சி.
    ஆங்கிலம் தெரியாம வேலை கிடைக்காதுன்னு இருக்கும்போது, பாராளுமன்றத்துக்குப் போகத் தடையில்லைங்கரதுதான் இடிக்குது. அரசியல்வாதிகளுக்கு மட்டும் எந்த ஒரு தகுதி நிர்ணயமும் கிடையாது.\\\\\\\\\\\\\\

    எந்த நாட்டுலேயும் இந்த அளவுக்கு முற்றிலும் வேறுபட்ட மொழிகள் கொண்ட பெரிய மாநிலங்கள் இல்லைன்னு நினைக்குறேன்..
    இந்த அமைப்பே சரியில்லாமல் இருக்கிறது..இதனால்தான் பல குழப்பங்களே..

    அதுனாலே..மத்தியில் அரசு என்பது பேருக்குத்தானே தவிர மாநில அரசுகளுக்கே முழு முடிவெடுக்கும் நடைமுறை அதிகாரம்..

    மாநிலத்திலேயும் தலைகாட்டுற அளவுக்குத்தான் மத்திய அரசுக்கு பவர்..

    மாநிலத் தலைவர்களுக்கு என இருக்கும் அடிப்படை உரிமையான மொழியில் கை வைத்தால் இந்த தேசிய இணைப்பு என்பதே கேள்விக்குறியாகும்..

    இதெல்லாம் இருந்துமே தங்கள் விருப்பத்துக்கு மாநில விஷயங்களை காதில் கேட்காது மத்திய அரசும், மத்திய அரசை சட்டை செய்யாது மாநில அரசுகளும் செயல்படுவது என்பது..

    அனேகமாக உலகத்திலேயே..இந்தியாவில்தான் இருக்கும்..நடக்கும்..

    சிக்கல்தான்..

    ReplyDelete
  71. ////////////

    Uma said...

    அரசியல்வாதிகளுக்கு மட்டும் எந்த ஒரு தகுதி நிர்ணயமும் கிடையாது.\\\\\\\\\\\\\\



    நடைமுறையில் அரசியல் பண்ணுவதற்கு என்று பல தகுதிகள் இருக்கின்றன..

    அவையெல்லாம் இருப்பவர்கள்தான் அங்கே ஆண்டுகொண்டுள்ளனர்..

    அரசியலில் வெற்றி என்பது எளிதானது போன்ற பார்வையும்,

    யார் வேண்டுமானாலும் அரசியல் செய்து விட முடியும் என்ற பார்வையும் சரியல்ல..

    நாமெல்லாம் just spectaters மட்டுமே..விலகி இருப்பது நல்லதே..

    உண்மையில் அரசியல் என்பது அபாயமானது.... அவற்றில் survival of the fittest

    என்ற அடிப்படையில் மட்டுமே ஆளுமை தீர்மானிக்கப்படுகிறது..

    ஆடுகளத்தில் முடிந்தவன் மட்டுமே தீர்மானிக்கலாம்..WWF போலவே..

    விமர்சித்தோ, வருத்தப் பட்டோ புண்ணியமில்லை..

    அவர்களும் பலவற்றையும் இழந்துதான் அரசியலில் நிலைக்க முடியும்..

    இதே சோதிட விளக்கங்கள் இங்கும் பொருந்தும்..

    ஏன், உங்களையும் என்னையும் இந்தளவுக்குக் கூட விமர்சிக்க விடாமல் அலைக்கழிக்கும் தடுக்கும் அளவுக்கு வல்லமை ஒருவருக்கு உண்டென்றால் அரசியல்வாதிக்கு மட்டுமே..

    ReplyDelete
  72. ///////////////Uma said...

    இதப் பத்தி நான் எதுவும் சொல்லலை.//////////

    ஏன், சொல்றதுதானே?

    ReplyDelete
  73. /////////////////
    Uma said...

    அதற்கான அரசியல் அமைப்பும் வகுப்பு விகிதாச்சாரமும் கூட முக்கியக் காரணம்.//

    நான் முதலில் இதப் பத்தின என் அனுபவத்தைத்தான் எழுதலாம்னு இருந்தேன். ஆனா அது வேற மாதிரி திசை திருமபிடும்னுதான் எழுதலை. 12 ல் கணிதம், இயற்பியல், உயிரியல் படிச்சுட்டு கல்லூரியில் வரலாறு படித்த கொடுமைனாலேயே சின்ன வயசுலேர்ந்து நான் வச்சிருந்த குறிக்கோளையே தலை முழுகிட்டு, இப்போ என்னவாவோ இருக்கேன்.\\\\\\\\\\\\\

    இதப் பத்தி சொந்தப் பதிவுலேதான் நீங்க எழுதணும்..

    ReplyDelete
  74. ///////kannan said...

    இன்று, எமது தவறை ஜப்பானில் இருந்துகொண்டு சுட்டி காண்பித்து விட்டீர் தங்களையும் அறியாமல்


    அது... அது.... வகுப்பறை முடிந்த பின்னர் சொல்லுகின்றேன் சரியா. \\\\\\\
    ennathu athu?
    give me ur mail id

    ReplyDelete
  75. ஐயப்பன் குறள்லாம் சொல்லி அசத்துறீங்கோ?
    எபிடியோப் பெரியாளாவே இருந்தீங்கன்னா சந்தோசம்தான்..
    நீங்க அடிக்குற கமென்ட் வெச்சு என்ன மாதிரி இந்தப்பக்கம்லாம் எட்டிப் பாக்காத ஆள்ன்னு நினைச்சேன்..
    கணக்கு தப்பாயிடுச்சு..

    ReplyDelete
  76. நீங்கள் கர்நாடிக் சங்கீதம் பயின்றவரோ?//

    முன்னாடி கொஞ்சம் கற்றுக்கொண்டு விட்டு விட்டேன். இப்போது திரும்ப கிளாசுக்குப் போய்க்கொண்டிருக்கிறேன்.

    ReplyDelete
  77. நாங்க எபிடியாவுது வீடியோ கேமராவை வாங்கியே தீருவோம்ங்குற கொள்கைப் பிடிப்புலே வேகத்துலே
    எஸ்கலேட்டரிலயே நடந்துட்டே ஏறியும் போனோமாக்கும்?//

    குப்புற விழுந்தாலும் ......................................................

    ReplyDelete
  78. 'இது உங்களுக்கே ரொம்ப ஓவராத் தெரியல?'
    இதுதானே அது?//

    உங்களுக்குப் புரியாம இருக்குமா?

    ReplyDelete
  79. எழுத்து நடை மிக அருமை
    இது போன்ற பயணக் கட்டுரைகள் நிறைய எழுதுங்கள்
    அந்தந்த நாட்டுக் கலாச்சாரங்கள் வாழ்வியல் ஒழுக்கங்கள் பற்றி தெரிந்து கொள்ள உதவும்
    இதயம் பேசுகிறது மணியனுக்குப் பிறகு பயணக் கட்டுரைகள் மிக அரிதாகி விட்டது

    ReplyDelete
  80. சுஜாதா பாலகுமாரன் அனுராதாரமணன் S.ராமகிருஷ்ணன் என்று சிறந்த எழுத்தாளர்களைப் படித்து
    முள்ளும் மலரும் முதல்மரியாதை உதிரிப்பூக்கள் போன்ற சிறந்த திரைக் காவியங்களை ரசித்து பொழுது போக்கும் அன்பர் nithya அவர்களின்
    எனது எழுத்து நடை பற்றிய விமர்சனத்துக்கு நன்றி..
    சுப்பையா வாத்தியார் சொல்ல ஏதோ எழுத ஆரம்பித்து அது என்னைச் சுற்றிய விஷயங்களின் தொகுப்பாக அமைய சுவாரஸ்யத்துக்காக என்று என் பாணியை அப்படியே சொல்ல கடைசியில் பார்த்தால் பயணக் கட்டுரை என்று விமர்சனமாகிப் போனது..
    வேறொரு நண்பரும் இதே பெயரில் விமர்சித்து இருந்தார்..எனக்கும் பயணக்கட்டுரைகள் படித்த ஞாபகமே மனதில் இல்லை..
    மிக்க நன்றி..

    ReplyDelete
  81. /////minorwall said...
    சுஜாதா பாலகுமாரன் அனுராதாரமணன் S.ராமகிருஷ்ணன் என்று சிறந்த எழுத்தாளர்களைப் படித்து
    முள்ளும் மலரும் முதல்மரியாதை உதிரிப்பூக்கள் போன்ற சிறந்த திரைக் காவியங்களை ரசித்து பொழுது போக்கும் அன்பர் nithya அவர்களின்
    எனது எழுத்து நடை பற்றிய விமர்சனத்துக்கு நன்றி..
    சுப்பையா வாத்தியார் சொல்ல ஏதோ எழுத ஆரம்பித்து அது என்னைச் சுற்றிய விஷயங்களின் தொகுப்பாக அமைய சுவாரஸ்யத்துக்காக என்று என் பாணியை அப்படியே சொல்ல கடைசியில் பார்த்தால் பயணக் கட்டுரை என்று விமர்சனமாகிப் போனது..
    வேறொரு நண்பரும் இதே பெயரில் விமர்சித்து இருந்தார்..எனக்கும் பயணக்கட்டுரைகள் படித்த ஞாபகமே மனதில் இல்லை..
    மிக்க நன்றி../////

    வீட்டில் இருந்து காமெரா வாங்கச் சென்றதை எழுதுனீர்கள் இல்லையா? அதுவே பயணக்கட்டுரைதான். அதைப்போல, நீங்கள் பயணிக்கும் ஊர்களைப் பற்றி எழுதுங்கள் மைனர். it is simple!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com