மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

14.9.10

இவள் எதற்காக நிற்கிறாள் என்று உங்களால் சொல்ல முடியுமா?


++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
இவள் எதற்காக நிற்கிறாள் என்று உங்களால் சொல்ல முடியுமா?

கேள்வி - பதில்கள் (இரண்டாவது சீஸன்) பகுதி.19
உங்களின் கேள்விகள் - வாத்தியாரின் பதில்கள்
++++++++++++++++++++++++++++++++++++++===========
மின்னஞ்சல் எண்.64
நந்தினி நடராஜன்
   
வணக்கம்  ஐயா ,

நான் சில வருடங்களுக்கு முன் நாடி ஜோதிடம் பார்க்க சென்றேன் 
நாடி ஜோதிடர் என் இடது கை பெருவிரல்  ரேகை எடுத்து சென்றார் .
10 நிமிடங்களுக்கு பிறகு ஒலைகளுடன் வந்தார் .அப்பொழுது 
எனக்கு திருமணமாகவில்லை .எனது பெயர் கசடதபற என்ற 
எழுத்தில் ஆரம்பிக்குமா என்றார். பிறகு 3  ஒலைகள் பின் 4 வது  
ஒலை எனது பெயர் தாய் தந்தை மற்றும் தந்தை தொழில் என 
அனைத்தையும் சொன்னார் .பிறகு நான் தற்காலிகமாக  வேலை விட்டுவிட்டேன் என்றும் சொன்னார் .நான் ஆடிப்போய் விட்டேன் 
காரணம் நான் அப்போதுதான் வேலையை  விட்டிருந்தேன் .பிறகு 
எனது ஜாதகக் கட்டம் எழுதிக் கொடுத்தார் .எனக்கு இந்த வயதில் 
இந்த திசையில் இருந்துதான்  மாப்பிளை வருவார் என்றார்.அந்த 
மாப்பிளை ஜாதகக் கட்டம் இப்படித்தான் இருக்கும் என்றும்
சொன்னார்.அனைத்தையும் பதிவு செய்து கொடுத்தார். வீட்டிக்கு 
வந்ததும் எனது ஜாதகக் கட்டம் (ஒரிஜினல்)  ஒப்பிட்டுப் பர்ர்தேன் .
மிகச் சரியாக இருந்தது . என் திருமணம் நடைபெற்றது .எனது 
கணவரின் ஜாதகக் கட்டம் அவர் சொன்னது போலவே இருந்தது .
ஐயா எனக்கு ஒன்று புரியவே இல்லை.நான் எனது பிறந்த நேரம் 
வருடம்  எதுவும் சொல்ல வில்லை .மிகக் கவனமாக பதிலளித்தேன் .
பிறகு எப்படி அவர் என்னுடைய ஜாதகக் கட்டம்  சரியாக எழுதிக் 
கொடுத்தார்? என்னுடைய கணவரின் ஜாதகக் கட்டம் குரு எங்கே 
இருப்பார் மற்றும் புதன்  சுக்கிரன் சூரியன் எந்த கட்டத்தில் இருப்பார் 
என்று எப்படிச் சொன்னார் ? இது சத்தியமா ? ஒருவருடைய பிறந்த
நேரம் மற்றும் வருடம் இல்லாமல் ஜாதகக் கட்டம் கண்ணிக்க 
இயலாதுதானே ! பிறகு எப்படி அவர் எனது  பெயரைச் சரியாகச் சொல்லியதுடன் பிறந்த நேரம் மற்றும் வருடத்தை சொன்னார்? 
எனக்கு வரப் போகும் கணவரின் ஜாதகக் கட்டம் எப்படி சொல்ல 
முடியும்? தயவுகூறிச் சொல்லுங்கள் ////////

நாடி ஜோதிடத்தைப் பற்றி ஒரு பிரபல ஜோதிடர் அருமையாகச் சொன்னார்.“கடந்த காலத்தை அவர்கள்  அசத்தலாகச் சொல்கிறார்கள். எதிர்காலத்தைச் சொல்வதில்தான் குழப்பம் உள்ளது”

நாடிச் சுவடுகள் பல காண்டங்களாக இருக்கும். நமது நல்ல நேரம்
அவைகள் அடுத்தடுத்துக் கிடைத்தால் சரியாகச் சொல்வார்கள்.
இல்லை என்றால் சொதப்பி அனுப்பிவிடுவார்கள்.

முன்பு கூட்டுக் குடும்ப வாழ்க்கை இருந்த காலத்தில் ஒருவீட்டில்
எல்லா காண்டங்களுக்குமான ஏடுகள் இருந்தன. இப்போது அப்படி இருப்பதாகத் தெரியவில்லை. குடும்பங்கள் அனைத்தும் சுயநலத்தால்
சிதறி மைக்ரோஃபாமிலிகளாக ஆகிவிட்ட நிலையில் சொத்துக்களைப் பங்குவைப்பதைப் போல ஏட்டுச் சுவடிகளையும் பங்கு வைத்துக் கொண்டுவிட்டார்கள்.

அதனால்தான் இன்று நாடி ஜோதிடம் பார்க்கச் செல்லும் பலரும் உங்களைப்போல இல்லாமல் திருப்தியின்றித் திரும்புகிறார்கள்.

காரைக்குடியில் சாரி என்று நாடி ஜோதிடர் ஒருவர் இருந்தார். நீங்கள் சென்றால், உங்களுடன் ஒன்றும் பேச  மாட்டார். உங்களுடைய வலது கைப்பெருவிரல் ரேகையை மட்டும் பதிவு செய்து கொண்டு உங்களை
அனுப்பி விடுவார். இரண்டு மணி நேரம் கழித்து வாருங்கள் என்பார்.
மீண்டும் நீங்கள் செல்லும்போது அசந்துவிடுவீர்கள்.

உங்கள் ஜாதகம், ராசி, அம்சங்கள், மற்றும் தசா இருப்புக்களுடன்,
மற்றும் பலா பலன்களுடன், தயாராக  இருக்கும். அவர் இப்பொது
உயிருடன் இல்லை. அந்தக் கலையை அவர் யாருக்கும்  சொல்லித்
தந்து விட்டும்  போகவில்லை. அதுதான் அவலம்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++
மின்னஞ்சல் எண்.65
திருமதி. கார்த்திகா சிவகுமார்
   
Dear Sir,
Please clarify the following doubts.
1) If a planet is the owner of good and bad house (eg. for leo lagna Jupiter is the 
lord for 5th and 8th houses) What will be the effect?

அவ்வாறன நிலைமை, சுக்கிரன், செவ்வாய், குரு, சனி ஆகிய
நான்கு கிரகங்களுக்கும் உண்டு. அவ்வாறு இரண்டு  வீடுகளுக்கு
அதிபதியாகும் கிரகம், இரண்டு வீடுகளுக்கான பலன்களையும்
தரும்.

எப்படித்தரும்?

வீட்டில் அதிகாரம் செய்யும் கணவன், தன்னுடைய அலுவலகத்தில், தன்னுடைய மேலதிகாரிகளுக்குப் பெட்டிப் பாம்பாக அடங்கி நடப்பதில்லையா? அது போலத்தான் இதுவும்.

உதாரணத்திற்கு, ரிஷப லக்கினத்திற்கு அதிபதி சுக்கிரன். அவனே
அதன் ஆறாம் வீடான துலாத்திற்கும் அதிபதி. நீங்கள் சொல்வது
போல ஒரு நல்ல சேலை மற்றும் ஒரு கிழிந்த சேலை. இரண்டையும்
அவன் தனித்தனியாகக் கட்டிக் கொண்டு, கட்டிக்கொண்டதே
தெரியாமல் ஆடிக் காட்டுவான்.

ரிஷப லக்கின ஜாதகனுக்கு, சுக்கிரன் 12ல் இருக்கிறார் என்று வைத்துக்கொள்ளுங்கள். அதாவது மேஷத்தில் இருக்கிறார் என்று வைத்துக்கொள்ளுங்கள். அது லக்கினத்திற்கு நல்லதல்ல.
லக்கினாதிபதி சீட்டாட்டக் கிளப்பில் (12ல்) போய் உட்கார்ந்து
கொண்டால், ஜாதகன் எல்லாவறிற்கும் போராட வேண்டியதிருக்கும்.

ஆனால் அதே நேரத்தில் ஆறாம் வீடான துலாத்திற்கு, அங்கிருந்து
மேஷம் ஏழாம் வீடு. ஆறாம் அதிபதியாகிய  சுக்கிரன் மேஷத்தில்
அமர்ந்து ஏழாம் பார்வையாகத் தன் ஆறாம் வீட்டைத் தன் பார்வையில் வைத்திருப்பதனால்,  ஜாதகனுக்கு அது  நன்மையளிக்கும் அமைப்பாகும். ஜாதகன்  எதிரிகளைத்  துவம்சம் செய்துவிடுவான்.
நோய்  நொடிகள்  அண்டாது. கடன் கப்பி ஏற்படாது.
உபரிச் செய்தி: அத்துடன் சீட்டாட்டத்தில் பணமும்  கிடைக்கும்.

ஆகவே இரண்டு பெண்டாட்டிகள் என்னும் போது...மன்னிக்கவும்...
இரண்டு வீடுகள் என்னும்போது. ஒவ்வொரு  வீட்டு வாசலிலும்
நின்று கொண்டு, சம்பந்தப்பட்ட ஆசாமி எங்கே நின்று
கொண்டிருக்கிறான் அல்லது எங்கே கூத்தடித்துக்கொண்டிருக்கிறான்
என்று பார்த்து, அவனால் பலன் உண்டா என்று தெரிந்து கொள்ளுங்கள். இரண்டு சம்சாரம் உள்ளவனைக் கேளுங்கள் - யார் மேல் பிரியம் என்று...ஹி.ஹி.. இருவர் மேலும் பிரியம்  என்பான். அதுபோலத்தான் கிரகங்களுக்கும், இரண்டு வீடுகளின் பேரிலும் அவை பிரியமாக
இருக்கும்.

காதை சற்று அருகே கொண்டு வாருங்கள். 12 வீடுகளுக்கும் பலன்
பார்க்கும் ரகசியத்தைச் சொல்லித் தருகிறேன். ஒவ்வொரு
வீட்டிற்கும் தனிதனியாக பலனை ஆராய்ந்து பாருங்கள். அந்த
வீட்டையே லக்கினத்திற்கு சமமாக நினைத்துக்கொண்டு, அந்த
வீட்டின் அதிபதி எங்கே இருக்கிறான் என்று பாருங்கள்.

உதாரணத்திற்குப் பத்தாம் வீடு என்றால், அதை லக்கினமாக நினைத்துக்கொண்டு அதன் அதிபதி எங்கே இருக்கிறார்? அவருடன்
யார்யார் இருக்கிறர்கள்? யாராருடைய பார்வைகள் அந்த வீட்டின்
மேல் விழுகிறது? யாராருடைய பார்வைகள் அவர் மேல் விழுகிறது?
அந்த வீட்டின் சர்வாஷ்டக பரல்கள் என்ன? அவருடைய  சுயவர்க்கப்
பரல்கள் என்ன? அவருக்கு உரிய தசை அல்லது புத்தி எப்போது வர
உள்ளது? என்று பாருங்கள்.  அது உங்களுக்கு கிடைக்கவிருக்கும் வேலைக்கான பதிலத் தரும்.

அத்துடன் கோள்சாரச் சனி லக்கினத்திற்குப் பத்தாம் வீட்டிற்கு
6, 8, 12ஆம் வீடுகளில் சஞ்சாரம் செய்யும்  காலங்களில், (அதாவது
சுற்றி வரும் வேளையில்) வேலையில் பிரச்சினைகள் உண்டாகும்.
நீங்கள் தண்ணீரில்லாக் காட்டிற்குத் தூக்கியடிக்கப்படலாம்.
ஏதாவது தவறு செய்ய நேரிட்டு விசாரணைக்கு உட்பட நேரிடலாம். சஸ்பென்ட்டாக நேரிடலாம். உத்தியோகத்தால் ஊர் மாற்றம் ஏற்பட நேரிடலாம். உத்தியோகத்தையே மாற்ற நேரிடலாம். அது
அத்தனையும் பத்தாம் இடத்திற்கு எதிராகச் சுற்றிவரும் சனியால் அவ்வப்போது நடக்கும்.

விளக்கம் போதுமா?

போதாது என்றால் சொல்லுங்கள். மீண்டும் வருகிறேன்
விளக்கங்களுடன்!

2) Retrogated and debeliated jupiter will act like exalted Jupiter and vice 
versa. Pls explain this. student with regards,
nivedhitha.

வக்கிரகதியிலும் நீசமடைந்தும் உள்ள குரு உச்சனைப் போல நடந்து கொள்வாரா என்கிறீர்களா? எனக்குத் தெரிந்து நடந்து கொள்ள மாட்டார்.
ஒரு கிரகம் உச்சமடையாவிட்டாலும் பரவாயில்லை - நீசமடையக்
கூடாது. ஒரு வியாபாரத்தில் லாபம் வராவிட்டாலும் பரவாயில்லை.
நஷ்டம் வரக்கூடாது. புரிகிறதா சகோதரி?

இன்னும் அழுத்தமான உதாரணம் வேண்டுமா? ஒரு பெண்ணிற்குத் திருமணமாகாவிட்டாலும் பரவாயில்லை. தாய்  வீட்டிலேயே
இருந்து விடுவாள் ஆனால் திருமணமான அடுத்த நாளே விதவை
யானால் என்ன ஆகும்?

உச்சமடைந்த கிரகம் தலை நிறையப் பூ, பொட்டு, கை நிறைய
வளையல்கள் என்று வளைய வரும் பெண்ணிற்குச்  சமம்.
நீசமடைந்த கிரகம் விதவைக்குச் சமம். விளக்கம் போதுமா?
++++++++++++++++++++++++++++++++++++++++++++++
மின்னஞ்சல் எண்.66
ராஜூ ரங்கநாத் என்னும் ருக்மாங்கதன்
   
Dear sir,
     if two debiliated planets[saturn,sun neecham] aspects directly each other,
will it amount to "neesa banga raja  yogam" as there is a say that "neechanai 
neechan paarthaal kittidum rajayogam". sukra is also in debilitation.will  the 
above position of two debilited planets release sukra from debilitation and 
give neesa bangam.if so when will it comes into effect?
My son's  horoscope is given below.
Dhanusu lagnam.moolam 3rd paatham.moon and  mars are in lagna.kedhu in 
second.jupiter and Saturn are in  fifth.raghu in eighth.venus in tenth.sun in eleventh.mercury in twelth. pl. can you clarify?  
thanking   you                                                                     
yours R.Rukmangathan

உதிரியான கிரக நிலைகளைக்கொடுத்து, can you clarify? என்றால் என்னத்தைச் சொல்வது? பீச்சில் நிற்கும் ஒரு  பெண்ணைக் காட்டி -
இவள் யார், இங்கே எதற்காக நிற்கின்றாள் என்று உங்களால் சொல்ல முடியுமா?  என்று கேட்பதுபோல உள்ளது உங்கள் கேள்வி.

முழு ஜாதகத்தையும் கொடுத்து, உங்களுடைய சந்தேகத்தை
நேரடியாகக் குறிப்பாகக் கேட்பதுதான் (by a specific question)  
 முறையானது! அவ்வாறு அனைவரையும் பழகிக்கொள்ள
வேண்டுகிறேன்! அதுதான் நீங்கள் கேட்க நினைக்கும் கேள்விக்கு
உரிய பதிலைப் பெற்றுத்தரும்!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++
(தொடரும்)

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!

78 comments:

  1. நாடி ஜோதிடம் பற்றி நந்தினி நடராஜனின் கருத்து மிகச் சரியானது. அது எப்படி அவ்வளவு சரியாக பல விவரங்களைக் கூறுகிறார்கள். சுவடிகள் இருந்தன, அவர்களால் சொல்ல முடியுமென்பதெல்லாம் சரி, ஆனால் எப்படி இது சாத்தியம். ஆசிரியர் முன்பே சொன்னபடி 'நாடி ஜோதிடம்' பற்றி விரிவாக எழுதினால் பயனுள்ளதாக அமையுமென நினைக்கிறேன்.

    ReplyDelete
  2. "இரண்டு சம்சாரம் உள்ளவனைக் கேளுங்கள் - யார் மேல் பிரியம் என்று...ஹி.ஹி.. இருவர் மேலும் பிரியம் என்பான்"
    இதை வாசிக்கும் போது, மனத்திரையில் வரும் காட்சி.... ஆஹா!
    இது தான் என்னையும் எதாவது எழுதச் (கிறுக்க) சொல்லுகிறது!
    நன்றிகள் ஆசிரியரே!

    ReplyDelete
  3. இவள் எதற்காக இப்படி செய்கிறாள் என்று உங்களால் சொல்ல முடியுமா?
    ருத்திராட்ச மா‌லையில் பிளாஸ்டிக் தாலியை ‌கோர்த்து அணிந்திருந்தார்
    இப்போது பேஷன் என்ற பெயரில் அவர் அணிந்திருந்த பிளாஸ்டிக் தாலியும், ருத்ராட்ச மாலையும் புதிய சர்ச்சையை கிளம்பியிருக்கிறது. தமிழ் பெண்கள் கற்பு குறித்து பேட்டியளித்து வில்லங்கத்தில்................

    எனக்கு இன்று சந்திராஷ்டமம்..... அதைத் தெரிதும் ருத்திராட்சம் என்னை.... நான் வீட்டில் இருக்கும் ருத்திராட்சத்தை குளிக்காமல் கூட தொட மனம் கூசும்.... என்ன (எண்ணக்) கொடுமையோ?.... இதுதான் கலியோ.... இதற்கு இல்லை வேறு வழியோ?....
    நன்றிகள் ஆசிரியரே!

    ReplyDelete
  4. ////Thanjavooraan said...
    நாடி ஜோதிடம் பற்றி நந்தினி நடராஜனின் கருத்து மிகச் சரியானது. அது எப்படி அவ்வளவு சரியாக பல விவரங்களைக் கூறுகிறார்கள். சுவடிகள் இருந்தன, அவர்களால் சொல்ல முடியுமென்பதெல்லாம் சரி, ஆனால் எப்படி இது சாத்தியம். ஆசிரியர் முன்பே சொன்னபடி 'நாடி ஜோதிடம்' பற்றி விரிவாக எழுதினால் பயனுள்ளதாக அமையுமென நினைக்கிறேன்.//////

    உண்மையைச் சொன்னால் எனக்கு விவரமாகத் தெரியாது. போய்விட்டு வந்தவர்கள் சொல்லிய செய்திகளை வைத்துத்தான் சற்று அறிவேன்.

    அதுபற்றிய விவரத்தை சிறு குறிப்பாகக் கீழே கொடுத்துள்ளேன்:
    The source point of Nadi Astrology leaves can be traced back to approximately more then 2000 years. It is said that the Seven Maharishis (sages) Agasthya, Kausika, Vyasa, BoharBrigu, Vasishtha and Valmiki had predicted and then written life of each individual on leaves of a palm tree by their spiritual powers. These Nadi leaves were initially stored in the premises of Tanjore Saraswati Mahal of Tamilnadu State in India.

    The British rulers later showed interest in the Nadi leaves concerned with herbs and medicine, future prediction etc; but ironically left most of the Nadi prediction leaves to their loyal people. Some leaves get destroyed and some very auctioned during the British rule.

    Some Nadi leaves were anyhow possessed by the families of astrologers in Vaitheeswarankoil from Tanjore Saraswati Mahal Library. At about 13th century these leaves were rediscovered by the forefathers which were lying unclaimed in Vaitheeswarankoil and realized their tremendous value and created the copies of the predictions on the palm leafs and created them their exact duplicates. Then these Nadi leaves were passed down from generation to generation make predictions, astrologers earn their lively hood from them. It has become profession which was provided by their ancestors to them, the son got trained by his father and the father by his father to make Nadi predictions. The prediction written on the leaf is in ancient Tamil in form of poems, same as language used in ancient temple of Tamil nadu.

    ReplyDelete
  5. ////Alasiam G said...
    "இரண்டு சம்சாரம் உள்ளவனைக் கேளுங்கள் - யார் மேல் பிரியம் என்று...ஹி.ஹி.. இருவர் மேலும் பிரியம் என்பான்"
    இதை வாசிக்கும் போது, மனத்திரையில் வரும் காட்சி.... ஆஹா!
    இது தான் என்னையும் எதாவது எழுதச் (கிறுக்க) சொல்லுகிறது!
    நன்றிகள் ஆசிரியரே!/////

    மனத்திரையில் வரும் காட்சி சுவாரசியமாக இருந்தால் எழுதலாம்!

    ReplyDelete
  6. ////Alasiam G said...
    இவள் எதற்காக இப்படி செய்கிறாள் என்று உங்களால் சொல்ல முடியுமா?
    ருத்திராட்ச மா‌லையில் பிளாஸ்டிக் தாலியை ‌கோர்த்து அணிந்திருந்தார்
    இப்போது பேஷன் என்ற பெயரில் அவர் அணிந்திருந்த பிளாஸ்டிக் தாலியும், ருத்ராட்ச மாலையும் புதிய சர்ச்சையை கிளம்பியிருக்கிறது. தமிழ் பெண்கள் கற்பு குறித்து பேட்டியளித்து வில்லங்கத்தில்................
    எனக்கு இன்று சந்திராஷ்டமம்..... அதைத் தெரிந்ததும் ருத்திராட்சம் என்னை.... நான் வீட்டில் இருக்கும் ருத்திராட்சத்தை குளிக்காமல் கூட தொட மனம் கூசும்.... என்ன (எண்ணக்) கொடுமையோ?.... இதுதான் கலியோ.... இதற்கு இல்லை வேறு வழியோ?....
    நன்றிகள் ஆசிரியரே!/////

    ஆமாம், கலி முற்றிக்கொண்டிருக்கிறது. இன்று 8 பேருக்கு ஒருவன்தான் நல்லவன். பகவான் அவதரிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. அவர் வந்துதான் தட்ட வேண்டியவர்களையெல்லாம் தட்ட வேண்டிய இடத்தில் தட்ட வேண்டும்.:-)))))))

    ReplyDelete
  7. இதோடு இன்று என் கோட்டா முடிகிறது.......

    1990 -களில் இந்தக் கலி மண்ணு சிங்கப்பூரில் தொலைக்காட்சியில் பேட்டிக் கொடுத்தப் போது, தனது கழுத்தில் இருந்த மஞ்சக் கையிற்றை கட்ட விரலால் தூக்கி காட்டி, இது தான் அவர் (ஒரு பெரிய நடிகரின் மகன்) கட்டியத் தாலி என்று கூறியது.... என் இருக் கண்களாலே அதைக் கண்டேன்.

    ReplyDelete
  8. ///Blogger Alasiam G said...
    இதோடு இன்று என் கோட்டா முடிகிறது.......
    1990 -களில் இந்தக் கலி மண்ணு சிங்கப்பூரில் தொலைக்காட்சியில் பேட்டிக் கொடுத்தப் போது, தனது கழுத்தில் இருந்த மஞ்சக் கையிற்றை கட்ட விரலால் தூக்கி காட்டி, இது தான் அவர் (ஒரு பெரிய நடிகரின் மகன்) கட்டியத் தாலி என்று கூறியது.... என் இருக் கண்களாலே அதைக் கண்டேன்.////

    நீங்கள் சொல்லும் பெண்மணி அடிக்கடி சர்ச்சைகளில் சிக்குபவர்தான். அவர் பெயர் K என்னும் எழுத்தில் துவங்கும். அந்த நடிகரின் பெயர் P என்னும் எழுத்தில் துவங்கும். சரிதானே?

    ReplyDelete
  9. ஆமாம் ஐயா!
    அந்த மகா....பி தான்.

    ReplyDelete
  10. sir some nadi jotheder say to do parekam.after parekar u will get all those things told in nadi.but you always told about parekaram.it will only gives standing power only waht is ur answer sir?

    ReplyDelete
  11. //காதை சற்று அருகே கொண்டு வாருங்கள். 12 வீடுகளுக்கும் பலன்
    பார்க்கும் ரகசியத்தைச் சொல்லித் தருகிறேன். //

    நன்றி ஆசானே, it was good recap to us. Thx

    ReplyDelete
  12. /////Alasiam G said...
    ஆமாம் ஐயா!
    அந்த மகா....பி தான்.///

    நல்லது. நன்றி ஆலாசியம்!

    ReplyDelete
  13. ////////மகேஷ் ராஜ் said...
    sir some nadi jotheder say to do parekam.after parekar u will get all those things told in nadi.but you always told about parekaram.it will only gives standing power only waht is ur answer sir?///////

    காசைவைத்துப் பண்ணும் பரிகாரம் எல்லாம் செல்லாது. இறைவழிபாடு மற்றும் கிரக வழிபாடுகள் மட்டுமே உண்மையான பரிகாரம். பரிகாரத்தினால் கெட்டதெல்லாம் எப்படி நல்லதாக மாறும்? மாறாது. உங்களுக்கு கிடைக்கும் மனவலிமையினால் நீங்கள் அதனுடன் போராடி வெற்றி பெற்றால்தான் உண்டு!

    ReplyDelete
  14. /////சிங்கைசூரி said...
    //காதை சற்று அருகே கொண்டு வாருங்கள். 12 வீடுகளுக்கும் பலன்
    பார்க்கும் ரகசியத்தைச் சொல்லித் தருகிறேன். //
    நன்றி ஆசானே, it was good recap to us. Thx //////

    நல்லது. நன்றி சிங்கைக்காரரே!

    ReplyDelete
  15. //வீட்டில் அதிகாரம் செய்யும் கணவன், தன்னுடைய அலுவலகத்தில், தன்னுடைய மேலதிகாரிகளுக்குப் பெட்டிப் பாம்பாக அடங்கி நடப்பதில்லையா? அது போலத்தான் இதுவும்//


    மாற்றியும் சொல்லலாம் அல்லவா?அலுவலகத்தில் ஆர்பாட்டமாக ஆணை செய்யும் மேல‌திகாரி வீட்டில் பெண்டாட்டிக்கு அடங்கி நடப்பதில்லையா?


    "நகைச்சுவை உணர்வு மட்டும் இல்லயானால் என்றோ நான் மரித்துப் போயிருப்பேன்" என்றார் தேசபிதா. உங்களின் quick wittedness பிர‌மிக்க வைக்கிறது.

    ReplyDelete
  16. kmr.krishnan said...
    //வீட்டில் அதிகாரம் செய்யும் கணவன், தன்னுடைய அலுவலகத்தில், தன்னுடைய மேலதிகாரிகளுக்குப் பெட்டிப் பாம்பாக அடங்கி நடப்பதில்லையா? அது போலத்தான் இதுவும்//
    மாற்றியும் சொல்லலாம் அல்லவா?அலுவலகத்தில் ஆர்பாட்டமாக ஆணை செய்யும் மேல‌திகாரி வீட்டில் பெண்டாட்டிக்கு அடங்கி நடப்பதில்லையா?
    "நகைச்சுவை உணர்வு மட்டும் இல்லயானால் என்றோ நான் மரித்துப் போயிருப்பேன்" என்றார் தேசபிதா. உங்களின் quick wittedness பிர‌மிக்க வைக்கிறது./////

    நகைச்சுவை உணர்வுடன் எழுதுவதால்தான் எதுவும் சுவாரசியமாகிவிடுகிறது. அதனால்தான் இந்த வகுப்பிற்கு இத்தனை பேர்கள் வந்து செல்கிறார்கள். உங்களின் பாராட்டிற்கு நன்றி சார்!

    ReplyDelete
  17. மிக்க நன்றி ஆசிரியர் அவர்களே! நாடி ஜோதிடத்தின் மூலம் தஞ்சை சரஸ்வதி மகால் என்ற செய்திக்கும், அது எப்படி வைத்தீஸ்வரன்கோயிலுக்குப் போனது என்ற செய்திக்கும் நன்றி. அந்த ஓலைகளை நானும் பார்த்தேன். மண்டை ஓட்டின் கோடுகள் போன்ற எழுத்துக்கள், அதை எப்படிப் படிக்கிறார்கள் என்பது மர்மம். நம் நாட்டின் பல கலைகள் அடுத்த வாரிசுகளுக்குக் கொடுக்காமல் போனது பெரிய இழப்பு. மீண்டும் நன்றி.

    ReplyDelete
  18. "அத்துடன் கோள்சாரச் சனி லக்கினத்திற்குப் பத்தாம் வீட்டிற்கு
    6, 8, 12ஆம் வீடுகளில் சஞ்சாரம் செய்யும் காலங்களில்"

    அய்யா கோள்சார பலன்களை பார்க்கும் பொழுது சந்திர ராசியை தானே எடுத்துக்கொள்ள வேண்டும்..நீங்கள் லக்கினத்தை வைத்து சொல்கிறீர்கள்

    ReplyDelete
  19. சார்,
    கேள்வி பதில் பகுதி மிகவும் சுவாரச்யமாகவும், informative ஆகவும்
    போய்கொண்டிருக்கிற்து,
    கேள்விகலுக்கு தஙகளின் பதில் மிகச் சிறப்பாக அமைகிற்து.
    தங்களின் ஸேவை க்கு மிகவும் நன்றி.
    basic knowledge 30% இருந்தால் போதும், தங்களின் உதவியுடன்
    ஓரளவிற்க்கு Exam இல் pass மார்க் வாங்கிவிடலாம்.

    நன்றி நன்றி நன்றி (sun tv style இல் வாசிக்க‌வும்)


    த‌ங்க‌ளின் மாணவி
    சந‌த‌ன‌க் குழ்லி நாக‌ராஜ‌ன்

    ReplyDelete
  20. ////Thanjavooraan said...
    மிக்க நன்றி ஆசிரியர் அவர்களே! நாடி ஜோதிடத்தின் மூலம் தஞ்சை சரஸ்வதி மகால் என்ற செய்திக்கும், அது எப்படி வைத்தீஸ்வரன்கோயிலுக்குப் போனது என்ற செய்திக்கும் நன்றி. அந்த ஓலைகளை நானும் பார்த்தேன். மண்டை ஓட்டின் கோடுகள் போன்ற எழுத்துக்கள், அதை எப்படிப் படிக்கிறார்கள் என்பது மர்மம். நம் நாட்டின் பல கலைகள் அடுத்த வாரிசுகளுக்குக் கொடுக்காமல் போனது பெரிய இழப்பு. மீண்டும் நன்றி.//////

    ஜோதிடத்தையும் அப்படித்தான் பலர் தங்கள் குடும்ப சொத்தாக வைத்திருந்தார்கள். பெங்களூர் வெங்கட்ராமன். சென்னை கே.பார்த்தசாரதி போன்ற நல்ல உள்ளங்கள் கொண்ட மனிதர்களால் அவைகள் நூல்களாக்கப்பட்டுப் பலரது கைகளுக்கும் சென்றதால் தான், அதைப் பலரும் அறிந்து தெளியமுடிந்தது.

    ReplyDelete
  21. //////dubai saravanan said...
    "அத்துடன் கோள்சாரச் சனி லக்கினத்திற்குப் பத்தாம் வீட்டிற்கு
    6, 8, 12ஆம் வீடுகளில் சஞ்சாரம் செய்யும் காலங்களில்"
    அய்யா கோள்சார பலன்களை பார்க்கும் பொழுது சந்திர ராசியை தானே எடுத்துக்கொள்ள வேண்டும்..நீங்கள் லக்கினத்தை வைத்து சொல்கிறீர்கள்//////

    பதிவை மீண்டும் ஒருமுறை படியுங்கள்.

    ”அத்துடன் கோள்சாரச் சனி லக்கினத்திற்குப் பத்தாம் வீட்டிற்கு 6, 8, 12ஆம் வீடுகளில் சஞ்சாரம் செய்யும் காலங்களில்” என்றுதான் எழுதியுள்ளேன். அதாவது பத்தாவது வீட்டை வைத்துப் பார்க்கச் சொல்லியிருக்கிறேன்.

    ReplyDelete
  22. /////rajanblogs said...
    சார்,
    கேள்வி பதில் பகுதி மிகவும் சுவாரசியமாகவும், informative ஆகவும்
    போய்கொண்டிருக்கிற்து,
    கேள்விகளுக்குத் தஙகளின் பதில் மிகச் சிறப்பாக அமைகிறது.
    தங்களின் ஸேவைக்கு மிகவும் நன்றி.
    basic knowledge 30% இருந்தால் போதும், தங்களின் உதவியுடன்
    ஓரளவிற்க்கு Exam இல் pass மார்க் வாங்கிவிடலாம்.
    நன்றி நன்றி நன்றி (sun tv style இல் வாசிக்க‌வும்)
    த‌ங்க‌ளின் மாணவி
    சந‌த‌ன‌க் குழலி நாக‌ராஜ‌ன் /////

    ஜோதிடம் மருந்து. அதனுடன் சுவாரசியம் என்னும் தேனைக் கலந்து கொடுப்பதினால்தான் இத்தனை பேர்கள் இங்கே வந்து படித்துக்கொண்டிருக்கிறார்கள். சில சமயம் தேன் அதிகமாகிவிடும்:-)))))

    ReplyDelete
  23. வணக்கம் ஐயா!!!

    இன்று கேள்வி பதில் பகுதி சுவராசியமாக இருந்தது.Specific question கேட்கலாம்னு சொல்லி இருக்கீங்க...கேட்கலாமா? முடியாதுன்னு மட்டும் சொல்லிடாதீங்க...

    ReplyDelete
  24. தேன் மழையில் நனையும் துளியின் கருத்து . .

    நாடி சோதிடம் கடந்த நடக்கும் மற்றும் வரும் காலத்தை மிகத்துள்ளியமாக சொல்லுவதாகவே என்னுடைய அனுபவமும் . . (சகோதரி நந்தினி நடராசன் சொல்வது போல)

    இதுவரை அவர்கள் சொன்னது . .
    அப்படியே இருக்கிறது என்பதும் அகத்தியர் நாடி சரியாக இருப்பதாக பலரின் தகவல்களும் சொல்கிறது . .

    ஒரே ஜாதகத்தை (அதாவது ஒருவருக்கே) பலமுறை பார்த்தாலும் ஒரு பலனை சொல்லும் (ஏற்கனவே பார்த்ததையும் காட்டிக் கொடுக்கும்) இந்த அகத்தியர் நாடி சோதிடம் உண்மையிலேயே வியப்பில் ஆழ்த்துகிறது

    ReplyDelete
  25. Dear Sir

    Kelviyum Padhilum Suvarasyamaga Ulladhu Sir.


    Thank you

    Loving Student
    Arulkumar Rajaraman

    ReplyDelete
  26. ////Arul said...
    வணக்கம் ஐயா!!!
    இன்று கேள்வி பதில் பகுதி சுவராசியமாக இருந்தது.Specific question கேட்கலாம்னு சொல்லி இருக்கீங்க...கேட்கலாமா? முடியாதுன்னு மட்டும் சொல்லிடாதீங்க...//////

    ஆகா கேட்கலாம். ஆனால் ஒரே கேள்வி என்பதற்காக கொக்கிக் கேள்விகள் (ஒன்றுக்குள் ஒன்றாகப் பத்துக்கேள்விகள்) இருக்கக்கூடாது?

    முதலில் உங்கள் பிரச்சினை என்ன என்பதைச் சொல்ல வேண்டும். ஒரு கேள்வியும் அது சம்பந்தப்பட்டதாக இருக்க வேண்டும்

    உங்கள் ஜாதகம், ராசி, அம்சம், அஷ்டவர்க்கங்களுடன், உங்கள் பிறந்த தேதி, பிறந்த ஊர், பிறந்த நேரம் ஆகிய முழு விவரங்களுடன் உடன் அனுப்ப வேண்டும். (as an attachment file)

    எந்த ஊரில் வசிக்கிறீர்கள், என்ன வேலை செய்கிறீர்கள் என்ற விபரங்களையும் எழுத வேண்டும்.

    அனுப்பிவிட்டு அடுத்த நாளே, ரிமைண்டர் அனுப்பக்கூடாது. குறைந்தது பத்து நாட்களாவது பொறுமையாக இருக்க வேண்டும்!

    மின்னஞ்சலில் மட்டுமே கேட்க வேண்டும்.

    உங்களின் கைபேசி (Mobile Number) எண்ணையும் கொடுக்க வேண்டும்!

    அர்த்தமாயிந்தா அருள் காரு?

    ReplyDelete
  27. //////iyer said...
    தேன் மழையில் நனையும் துளியின் கருத்து . .
    நாடி சோதிடம் கடந்த நடக்கும் மற்றும் வரும் காலத்தை மிகத்துள்ளியமாக சொல்லுவதாகவே என்னுடைய அனுபவமும் . . (சகோதரி நந்தினி நடராசன் சொல்வது போல)
    இதுவரை அவர்கள் சொன்னது . .
    அப்படியே இருக்கிறது என்பதும் அகத்தியர் நாடி சரியாக இருப்பதாக பலரின் தகவல்களும் சொல்கிறது . .
    ஒரே ஜாதகத்தை (அதாவது ஒருவருக்கே) பலமுறை பார்த்தாலும் ஒரு பலனை சொல்லும் (ஏற்கனவே பார்த்ததையும் காட்டிக் கொடுக்கும்) இந்த அகத்தியர் நாடி சோதிடம் உண்மையிலேயே வியப்பில் ஆழ்த்துகிறது////

    தகவலுக்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  28. /////Arulkumar Rajaraman said...
    Dear Sir
    Kelviyum Padhilum Suvarasyamaga Ulladhu Sir.
    Thank you
    Loving Student
    Arulkumar Rajaraman////

    நல்லது. நன்றி ராஜாராமன்!

    ReplyDelete
  29. ////shyamaladsk said...
    very informative. Thanks.////

    நல்லது. நன்றி சகோதரி!

    ReplyDelete
  30. இன்றைய ரகசியப்பகிர்வுக்கு நன்றி ஐயா

    ReplyDelete
  31. Answer refering 2 wifes was hillarious. U just made me to laugh ...I couldnt stop imagining the scenario in my mind.....
    Cutting edge answer where we cant forget the lesson behind it....Kalai

    ReplyDelete
  32. /////R.Puratchimani said...
    இன்றைய ரகசியப்பகிர்வுக்கு நன்றி ஐயா////

    பதிவில் ஏற்றிய பிறகு, அதில் ரகசியம் ஏது?

    ReplyDelete
  33. //////kalai said...
    Answer refering 2 wifes was hillarious. U just made me to laugh ...I couldnt stop imagining the scenario in my mind..... Cutting edge answer where we cant forget the lesson behind it....Kalai////

    பாடம் மனதில் பதிய வேண்டும் என்பதற்காகத்தான் அதுபோன்ற உதாரணங்கள்!

    ReplyDelete
  34. எனக்கு ஒரு சந்தேகம்.


    சுய ஜாதக கேள்வி போல தோன்றினாலும் கிரகத்தின் பலத்தை எவ்வாறு கணிப்பது என்ற பொது கேள்வி அய்யா இது :)

    ரிஷப லக்கணம், மூன்றாம் வீட்டில் (கடகத்தில்) செவ்வாய் ராகுவுடன் (செவ்வாய் நீசம்), எந்த கிரகத்தின் பார்வையும் இங்கு இல்லை.

    செவ்வாய் அஷ்டவர்க்க பலம் - 5
    மூன்றாம் வீட்டின் அஷ்டவர்க்க பலம் - 36

    நான் இங்கு செவ்வாய் இன் பலத்தை எவ்வாறு முடிவு செய்வது, ?

    குழப்பத்திற்கு காரணம் (செவ்வாய் - 5 , மூன்றம் வீடு 36 என்று ) அஷ்டவர்க்க பலம் இருந்தாலும் செவ்வாய் நீசம் உடன் ராகு வேறு.
    செவ்வாய் நீசமானத்தால் செவ்வாய் க்கு பலம் இல்லை என எடுத்துகொள்ளலமா?

    ReplyDelete
  35. ஐயா வணக்கம்...!

    மின்னஞ்சல் எண் 65 - கேள்வி எண் 1க்கான பதில் மிக அருமை... நாடி ஜோதிடம் பற்றி சகோதரி நந்தினி அவர்கள் கருத்தை நானும் ஆமோதிக்கின்றேன், காரணம், எனக்கும் நாடிஜோதிடரிடம் அதே போன்ற அனுபவம் ஏற்பட்டது. மிக்க நன்றிகள்...

    தங்கள் அன்பு மாணவன்
    மா. திருவேல் முருகன்

    ReplyDelete
  36. ஐயா வணக்கம்.

    இவள் எதற்காக நிற்கிறாள் என்று உங்களால் சொல்ல முடியுமா?

    ஒரு வேலை " கண்ணனின்" வரவை "நோக்கியோ என்னமோ" இருந்தாலும் சரியான காரணம்
    தெரியவில்லையே ஐயா

    கோகுலத்து நாயகன், கோபியரின் காதலன், கருநீல வண்ணன் கண்ணனின் உயிர் தோழி
    " ராதையும் " கண்ணனை விட வயதில் மூத்தவள் தானே!
    முன்ன பின்ன இருந்தாலும் சமாளித்துக்கொண்டு போவதில் தவறு ஒன்னும் இல்லை தானே ஐயா.

    ReplyDelete
  37. வணக்கம் அய்யா,
    இன்றைய கேள்வியும் பதிலும் மிக பிரமாதம்.
    1983ல் பழ‌னியில் அகஸ்த்திய நாடி ஜொதிடம் பார்த்தேன்.
    ஓரளவுக்கு பொருந்தி வந்தது என்ரு சொல்லாம்.முலுமையாக இல்லை.
    தாங்கல் கூரியது போல் அவர்கள‌து போகும் நேரத்தை பொருத்து அமைகிரது.
    நான்முன்னர் கேட்ட கேல்விகலுக்கும்,கேக்க நினைத்த கேல்விக்கும் பதிலும் கிடைத்தது.இதுவும் நேரம்தான்.ன
    நன்றி அய்யா,அரிபாய். வாழ்க வளமுடன்.

    ReplyDelete
  38. /////தமிழ்மணி said...
    எனக்கு ஒரு சந்தேகம்.
    சுய ஜாதக கேள்வி போல தோன்றினாலும் கிரகத்தின் பலத்தை எவ்வாறு கணிப்பது என்ற பொது கேள்வி அய்யா இது :)
    ரிஷப லக்கணம், மூன்றாம் வீட்டில் (கடகத்தில்) செவ்வாய் ராகுவுடன் (செவ்வாய் நீசம்), எந்த கிரகத்தின் பார்வையும் இங்கு இல்லை.
    செவ்வாய் அஷ்டவர்க்க பலம் - 5
    மூன்றாம் வீட்டின் அஷ்டவர்க்க பலம் - 36
    நான் இங்கு செவ்வாயின் பலத்தை எவ்வாறு முடிவு செய்வது,?
    குழப்பத்திற்கு காரணம் (செவ்வாய் - 5 , மூன்றம் வீடு 36 என்று ) அஷ்டவர்க்க பலம் இருந்தாலும் செவ்வாய் நீசம் உடன் ராகு வேறு.
    செவ்வாய் நீசமானத்தால் செவ்வாய்க்கு பலம் இல்லை என எடுத்துகொள்ளலமா?/////

    செவ்வாய்க்கு சுயவர்க்கத்தில் எப்படி 5 பரல்கள் வந்தன என்று யோசித்தீர்களா?

    ReplyDelete
  39. /////M.Thiruvel Murugan said...
    ஐயா வணக்கம்...!
    மின்னஞ்சல் எண் 65 - கேள்வி எண் 1க்கான பதில் மிக அருமை... நாடி ஜோதிடம் பற்றி சகோதரி நந்தினி அவர்கள் கருத்தை நானும் ஆமோதிக்கின்றேன், காரணம், எனக்கும் நாடிஜோதிடரிடம் அதே போன்ற அனுபவம் ஏற்பட்டது. மிக்க நன்றிகள்...
    தங்கள் அன்பு மாணவன்
    மா. திருவேல் முருகன்/////

    நல்லது. நன்றி திருவேல் முருகன்!

    ReplyDelete
  40. //////kannan said...
    ஐயா வணக்கம்.
    இவள் எதற்காக நிற்கிறாள் என்று உங்களால் சொல்ல முடியுமா?
    ஒரு வேலை " கண்ணனின்" வரவை "நோக்கியோ என்னமோ" இருந்தாலும் சரியான காரணம்
    தெரியவில்லையே ஐயா
    கோகுலத்து நாயகன், கோபியரின் காதலன், கருநீல வண்ணன் கண்ணனின் உயிர் தோழி
    " ராதையும் " கண்ணனை விட வயதில் மூத்தவள் தானே!
    முன்ன பின்ன இருந்தாலும் சமாளித்துக்கொண்டு போவதில் தவறு ஒன்னும் இல்லை தானே ஐயா.//////

    படத்தில் உள்ள பெண்மணியைத்தானே சொல்கிறீர்கள்? பாவாடை, தாவணியில் இருந்தால் சொல்லலாம். பெண்மணி கெளன் அல்லவா அணிந்திருக்கிறார்?

    மையல் கொண்டபின்னே அங்கே வயதிற்கு வேலை இல்லை:-)))))

    ReplyDelete
  41. /////aryboy said...
    வணக்கம் அய்யா,
    இன்றைய கேள்வியும் பதிலும் மிக பிரமாதம்.
    1983ல் பழ‌னியில் அகஸ்த்திய நாடி ஜொதிடம் பார்த்தேன்.
    ஓரளவுக்கு பொருந்தி வந்தது என்று சொல்லாம்..முழுமையாக இல்லை.
    தாங்கள் கூறியது போல் அவர்கள் போகும் நேரத்தை பொறுத்து அமைகிறது.
    நான் முன்னர் கேட்ட கேள்விகளுக்கும், கேக்க நினைத்த கேள்விக்கும் பதிலும் கிடைத்தது. இதுவும் நேரம்தான். நன்றி அய்யா,அரிபாய். வாழ்க வளமுடன்./////

    என்னையும் சேர்த்துக்கொள்ளுங்கள். நீங்கள் இப்படித் திருப்திப்பட்டுக்கொள்வதும் என்னுடைய நேரம்தான்:-))))

    ReplyDelete
  42. //செவ்வாய்க்கு சுயவர்க்கத்தில் எப்படி 5 பரல்கள் வந்தன என்று யோசித்தீர்களா?

    யோசித்தேன் அய்யா, ஆனால் உண்மையில் விளங்கவில்லை :( .

    ReplyDelete
  43. ///////////////
    kannan said...
    " ராதையும் " கண்ணனை விட வயதில் மூத்தவள் தானே!
    முன்ன பின்ன இருந்தாலும் சமாளித்துக்கொண்டு போவதில் தவறு ஒன்னும் இல்லை தானே ஐயா.//////

    சுக்ர தசை விட்டும் தூவானம் இன்னும் விடலை போலேருக்கே?

    இந்தப் பொண்ணைப் பார்த்தால் ஜப்பான் பொண்ணைப் போலே இருக்கு..
    உபரித்தகவல்.:
    இங்கே ஜப்பானில் தகஸாகி என்று அருகில் ஊரில் கண்ணனின் பிரம்மாண்ட சிலை ரொம்பப் பிரசித்தம்..அவர் மகிமையோ என்னவோ
    இளஞ்சிட்டுக்கள் ஜோடி போட்டுக் கொண்டு இரவு ரெண்டு மணி வரை ஒரே கொண்டாட்டம்தான்..

    ReplyDelete
  44. தமிழ்மணி said...
    //செவ்வாய்க்கு சுயவர்க்கத்தில் எப்படி 5 பரல்கள் வந்தன என்று யோசித்தீர்களா?
    யோசித்தேன் அய்யா, ஆனால் உண்மையில் விளங்கவில்லை :( .///////

    அதெப்படி விளங்கும்? பாடங்களை ஒழுங்காகப் படிக்கவில்லை என்று தெரிகிறது. ஜாதகத்தில் மற்ற கிரகங்களுடன் செவ்வாய் நல்ல அமைப்பில் இருப்பதால், அந்தப் பரல்கள் வந்துள்ளன. நல்ல பரல்களுடன் இருப்பதால் செவ்வாய் தன் தசா புத்தியில் நன்மையைச் செய்யும்

    ReplyDelete
  45. ////minorwall said...
    ///////////////
    kannan said...
    " ராதையும் " கண்ணனை விட வயதில் மூத்தவள் தானே!
    முன்ன பின்ன இருந்தாலும் சமாளித்துக்கொண்டு போவதில் தவறு ஒன்னும் இல்லை தானே ஐயா.//////
    சுக்ர தசை விட்டும் தூவானம் இன்னும் விடலை போலேருக்கே?
    இந்தப் பொண்ணைப் பார்த்தால் ஜப்பான் பொண்ணைப் போலே இருக்கு..
    உபரித்தகவல்.:
    இங்கே ஜப்பானில் தகஸாகி என்று அருகில் ஊரில் கண்ணனின் பிரம்மாண்ட சிலை ரொம்பப் பிரசித்தம்..அவர் மகிமையோ என்னவோ
    இளஞ்சிட்டுக்கள் ஜோடி போட்டுக் கொண்டு இரவு ரெண்டு மணி வரை ஒரே கொண்டாட்டம்தான்..//////

    யாரங்கே? தகஸாகிக்கு இரண்டு ஏர் டிக்கெட்...! ஒன்று சீதாராம கண்ணனுக்கு, மற்றொன்று..ஹிஹி... ஹி... வாத்தியாருக்கு!:-)))))

    ReplyDelete
  46. வணக்கம் வாத்தியார் அய்யா......
    இன்றைய செசன் சிறப்பாக அமைந்தது .....10 க்கு 6 ,8,12 இருந்தால் தண்ணி இல்லா காட்டுக்கு போக வேண்டி வரும் என்றீர்கள் 10 ம் இடதிலேயே அதாவது தொழில் ஸ்தானத்தில் சனி இருந்தால் என்ன பலன் அய்யா ......ஒவ்வொறு வீட்டுக்கும் பலன் பார்க்கும் ரகசியத்தை படிக்கும் போது இயம்பும் ஸ்தானம் அதை லக்னமாக என்று எங்கேயோ படித்தது மனதில் நிழலாடுகின்றது....

    நன்றி வணக்கம்

    ReplyDelete
  47. ///////////
    SP.VR. SUBBAIYA said...
    யாரங்கே? தகஸாகிக்கு இரண்டு ஏர் டிக்கெட்...! ஒன்று சீதாராம கண்ணனுக்கு, மற்றொன்று..ஹிஹி... ஹி... வாத்தியாருக்கு!:-)))))\\\\\\\\\\\\

    வாங்க..பழகலாம்..வாங்க..வாங்க..வாங்க..

    ReplyDelete
  48. iyaa!

    இப்பம் தான் உம்மை என்ன வென்று புரிகின்றது

    கண்ணனை காண வரும்
    ( ஜப்ப மூக்கு) கட்டழகு கன்னியரை கோகுலத்தில் கண்ணன் கோபியரை கண்ட கலை நயத்துடன் இந்த கலியுக
    மன்னன் (மைனர்) கண்டு கழிப்பது.

    கண்ணனுக்கு சரி!

    மைனர்க்கு சரியானோ?

    ReplyDelete
  49. இந்த நாடி ஜோதிட விஷயம் எனக்கு ஓரளவுக்குப் புரிகிறது. முழுவதுமாக புரிந்துக் கொள்வதற்கு வயதும் அறிவும் போதாது.

    சந்திர கலா நாடி என்னும் நூலை படிக்க நேர்ந்தது. அதில் எனக்கு என் ஜாதகத்தில் இருக்கும் ஒரு அமைப்பைப் பற்றிப் படிக்க நேர்ந்தது. அதில் இருந்ததை அப்படியே கீழே தருகிறேன்.

    Virgo Lagna: Jupitor in Scorpio occupying Virgo Navamsa will make the native even bodied. He will be resolute, righteous, skilled in the expression or interpretation of internal sentiments by external gesture i.e. skillful in understanding others mind and be truthful. He will excel in writing and studies (will be skillful writer endowed with great learning) will be talkative and be intelligent.

    அதில் சொல்லப் பட்டுள்ள பலன் 100% சரியாக இருக்கிறது. (பெருமைக்காக சொல்லவில்லை)

    மேலே சொன்னது ஒரு அமைப்பிற்கான பலன். நாடிகளில் நம் ஜாதகத்தில் உள்ள ஒவ்வொரு அமைப்புக்கும் ஒவ்வொரு பலன் இருக்கிறது. எல்லா அமைப்பிற்கான பலனும் ஒரே நாடியில் ஒரே இடத்தில் கிடைக்காது. சப்த ரிஷி நாடி, ஈஸ்வர நாடி என்று பல நாடி நூல்கள் இருக்கின்றன. அவற்றைத் திரட்டினால் ஒருவருக்கான முழு பலன்களைப் பற்றித் தெரிந்துக் கொள்ளலாம். இதில் ஒரு சூட்சுமம் இருக்கிறது. இந்த சூட்சுமம் நமக்குத் தெரிந்தால் அகத்திய நாடி போல் நாமே நம் பெயரில் ஒரு நாடியை உருவாக்கி பலன் சொல்லி அசத்தலாம்.

    இன்னும் விளங்காத ஒன்று. மேலே சொன்னது போல் கன்னி லக்னம், ராசி சக்கரத்தில் குரு விருச்சிகத்திலும், நவாம்சத்தில் குரு கன்னியிலும் இருக்கும் எல்லாருக்கும் இந்த பலன் இருக்குமா என்பதுதான். இருக்கும், இருக்கிறது என்றால் இந்த நாடிகளின் ரகசியத்தைப் பற்றி ஓரளவேனும் தெரிந்துக் கொண்டோம் என்று சொல்லிக் கொள்ளலாம்.

    ReplyDelete
  50. successfully 9 weeks viradham completed today. went to siruvapuri murugan temple evening and i distributed choclates. hhehehe. felt something great. Happy.

    ReplyDelete
  51. appadiye veru endha godsukellam eppadi viradham irupadhu , matrum enthanai vaaram endru soneergalanaal...so that everyone could benefit from it .

    ReplyDelete
  52. விஜய் டிவியில் நாடி ஜோதிடம் பற்றிய உண்மைகளை விளக்கிய நிகழ்ச்சியை பார்த்தேன். நாடியை பற்றி சென்னைப் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் விளக்கினார். பனை ஒலையை 200 வருடங்கள் பாதுகாக்க முடியாது என்றும், அந்த ஓலை சுவடிகள் போலியாக தயாரிக்கப் படுகின்றன, திறமையான கேள்விகளால் நம்மிடமிருந்தே விபரங்கள் பெறுகின்றனர் என்று கூறினார். பனை ஓலை செய்பவர்களையும் காட்டினார்கள். அதனால் அவை வெறும் கிறுக்கள்கள் தான். சாமி ஓம்கார் நாடியில் எப்படி நம்மிடம் இருந்து நாடி ஜோதிடர்கள் போட்டு வாங்குவார்கள் என்று விளக்கி உள்ளார். வகுப்பறை மாணவர்கள் ஏமாற வேண்டாம்.

    ReplyDelete
  53. //////minorwall said...
    ///////////
    SP.VR. SUBBAIYA said...
    யாரங்கே? தகஸாகிக்கு இரண்டு ஏர் டிக்கெட்...! ஒன்று சீதாராம கண்ணனுக்கு, மற்றொன்று..ஹிஹி... ஹி... வாத்தியாருக்கு!:-)))))\\\\\\\\\\\\
    வாங்க..பழகலாம்..வாங்க..வாங்க..வாங்க.////

    உபசரிப்பில், சாலமன் பாப்பையா ரேஞ்சுக்குப் போயிட்டீங்க மைனர்

    ReplyDelete
  54. kannan said...
    iyaa!
    இப்பம் தான் உண்மை என்ன வென்று புரிகின்றது
    கண்ணனை காண வரும்( ஜப்ப மூக்கு) கட்டழகு கன்னியரை கோகுலத்தில் கண்ணன் கோபியரை கண்ட கலை நயத்துடன் இந்த கலியுக மன்னன் (மைனர்) கண்டு கழிப்பது.
    கண்ணனுக்கு சரி!
    மைனர்க்கு சரியானோ?/////

    மைனர் என்ற பட்டம் எதற்கு? எல்லாம் சரிதான்.

    ReplyDelete
  55. /////ananth said...
    இந்த நாடி ஜோதிட விஷயம் எனக்கு ஓரளவுக்குப் புரிகிறது. முழுவதுமாக புரிந்துக் கொள்வதற்கு வயதும் அறிவும் போதாது.
    சந்திர கலா நாடி என்னும் நூலை படிக்க நேர்ந்தது. அதில் எனக்கு என் ஜாதகத்தில் இருக்கும் ஒரு அமைப்பைப் பற்றிப் படிக்க நேர்ந்தது. அதில் இருந்ததை அப்படியே கீழே தருகிறேன்.
    Virgo Lagna: Jupitor in Scorpio occupying Virgo Navamsa will make the native even bodied. He will be resolute, righteous, skilled in the expression or interpretation of internal sentiments by external gesture i.e. skillful in understanding others mind and be truthful. He will excel in writing and studies (will be skillful writer endowed with great learning) will be talkative and be intelligent.
    அதில் சொல்லப் பட்டுள்ள பலன் 100% சரியாக இருக்கிறது. (பெருமைக்காக சொல்லவில்லை)
    மேலே சொன்னது ஒரு அமைப்பிற்கான பலன். நாடிகளில் நம் ஜாதகத்தில் உள்ள ஒவ்வொரு அமைப்புக்கும் ஒவ்வொரு பலன் இருக்கிறது. எல்லா அமைப்பிற்கான பலனும் ஒரே நாடியில் ஒரே இடத்தில் கிடைக்காது. சப்த ரிஷி நாடி, ஈஸ்வர நாடி என்று பல நாடி நூல்கள் இருக்கின்றன. அவற்றைத் திரட்டினால் ஒருவருக்கான முழு பலன்களைப் பற்றித் தெரிந்துக் கொள்ளலாம். இதில் ஒரு சூட்சுமம் இருக்கிறது. இந்த சூட்சுமம் நமக்குத் தெரிந்தால் அகத்திய நாடி போல் நாமே நம் பெயரில் ஒரு நாடியை உருவாக்கி பலன் சொல்லி அசத்தலாம்.
    இன்னும் விளங்காத ஒன்று. மேலே சொன்னது போல் கன்னி லக்னம், ராசி சக்கரத்தில் குரு விருச்சிகத்திலும், நவாம்சத்தில் குரு கன்னியிலும் இருக்கும் எல்லாருக்கும் இந்த பலன் இருக்குமா என்பதுதான். இருக்கும், இருக்கிறது என்றால் இந்த நாடிகளின் ரகசியத்தைப் பற்றி ஓரளவேனும் தெரிந்துக் கொண்டோம் என்று சொல்லிக் கொள்ளலாம்.///////

    மேலதிகத் தகவல்களுக்கு நன்றி ஆனந்த்!

    ReplyDelete
  56. ////astroadhi said...
    வணக்கம் வாத்தியார் அய்யா......
    இன்றைய செசன் சிறப்பாக அமைந்தது .....10 க்கு 6 ,8,12 இருந்தால் தண்ணி இல்லா காட்டுக்கு போக வேண்டி வரும் என்றீர்கள் 10 ம் இடதிலேயே அதாவது தொழில் ஸ்தானத்தில் சனி இருந்தால் என்ன பலன் அய்யா ......ஒவ்வொறு வீட்டுக்கும் பலன் பார்க்கும் ரகசியத்தை படிக்கும் போது இயம்பும் ஸ்தானம் அதை லக்னமாக என்று எங்கேயோ படித்தது மனதில் நிழலாடுகின்றது....
    நன்றி வணக்கம்////

    எல்லாம் கோள்சாரத்தைவைத்து. அதை நினைவில் வையுங்கள்!

    ReplyDelete
  57. /////Jack Sparrow said...
    successfully 9 weeks viradham completed today. went to siruvapuri murugan temple evening and i distributed choclates. hhehehe. felt something great. Happy.////

    முடிந்தால், தொடர்ந்து இன்னும் ஒரு ஒன்பது வாரங்களுக்கு இருந்து பாருங்கள்!

    ReplyDelete
  58. ஐயா!

    வகுப்பறையில் அதுவும் வாத்தியார் முன்னாடி உண்மையை மட்டும் சொல்லுகின்றேன்.

    *****
    சுக்ர தசை விட்டும் தூவானம் இன்னும் விடலை போலேருக்கே?


    100% உண்மை உண்மையை தவிர வேறு ஒன்றும் இல்லை தாங்கள் சொன்னது. ஆனாலும் பாருங்கோ மாயவனுடைய பெயரை
    கொண்டதாலோ என்னவோ எல்லாமே
    சுற்றி சுற்றி வந்து மாயமாகிவிட்டது கைகூடாமல்.

    >>>>>>>>>>>><<<<<<<<<<<<<<<<<<<<,
    SP.VR. SUBBAIYA said...
    யாரங்கே? தகஸாகிக்கு இரண்டு ஏர் டிக்கெட்...! ஒன்று சீதாராம கண்ணனுக்கு, மற்றொன்று..ஹிஹி... ஹி... வாத்தியாருக்கு!:-)))))\\\\\\\\\\\\

    வாங்க..பழகலாம்..வாங்க..வாங்க..வாங்க..

    *****

    ஆமாம் ஐயா தாங்களும் கூட வேண்டும்

    ஏன்னெனில் எம்பெருமான்

    " ஸ்ரீ ராமன்"

    மிதிலை நோக்கி
    ( சீதையை சுயவரம் செய்ய ) போகும்பொழுது

    " ஸ்ரீ ராமபிரானின்" " குரு"

    உடன் இருந்ததை போல
    ***

    யாது ஊரே யாவரும் கேளீர்

    " அன்பு ஒன்றே "

    எங்களீன் தத்துவம்.

    இரு மனம் ஒரு மனம் ஆகிவிட்டால் வீடு, நாடு ஏன் உலகம் தான் ஏது ஐயா

    ஆனால் பாம்பு பல்லி பூரான் எல்லாம் சாப்பிடமுடியாது அப்படி ஒரு விரதம்

    " ஸ்ரீ பரசுராமரின் "

    மூலமாக. இந்த ஜென்மதீர்க்கு சைவம் மட்டுமே
    *****

    மையல் கொண்டபின்னே அங்கே வயதிற்கு வேலை இல்லை:-)))))
    Tuesday,September14,2010 4:34:00 PM

    ReplyDelete
  59. Dear sir,
    "சனி லக்கினத்திற்குப் பத்தாம் வீட்டிற்கு
    6, 8, 12ஆம் வீடுகளில் சஞ்சாரம் செய்யும் காலங்களில் - problem"
    could you explain what's the logic behind this calculation sir?
    thank you
    J.SENDHIL

    ReplyDelete
  60. வாத்தியார் said....

    எல்லாம் கோள்சாரத்தைவைத்து. அதை நினைவில் வையுங்கள்

    நானும் கேட்டது கோள்சாரத்தில் சனி தொழில் ஸ்தானத்தில் இருந்தால் என்ன மாதிரியான பலன் தரும் அய்யா??????

    பதிலுக்காக ஆவலுடன் காத்துஇருக்கின்றேன்

    ReplyDelete
  61. //////////////
    kannan said...
    100% உண்மை உண்மையை தவிர வேறு ஒன்றும் இல்லை தாங்கள் சொன்னது. ஆனாலும் பாருங்கோ மாயவனுடைய பெயரை
    கொண்டதாலோ என்னவோ எல்லாமே
    சுற்றி சுற்றி வந்து மாயமாகிவிட்டது கைகூடாமல். \\\\\\\\\\\\\\\

    அதுதான் ஃபோர்முலாவே..கண்ணனின் மாயம் என்றால் அதுதான்..ராஜ லீலை..
    to say it in english :
    pick up,drop,escape ....That s all..Take care.. bye..

    'மைனருக்கு சரியோ?' என்ற கேள்விக்கு சரியான பதிலை குருவே சொல்லிவிட்டார்..

    ReplyDelete
  62. நாடி சோதிடத்தில் கோள் சார பலன், பிறந்த நேர ஜாதகத்தில் ஒரு கட்டத்தில் அமர்ந்துள்ள‌ கிர‌ஹ‌த்தின் மீது கோள் சார‌ கிர‌ஹ‌ம் ஊர்வ‌தை வை‌த்து சொல்கிறார்க‌ள். நான் ப‌ய‌ன்ப‌டுத்திப் ப‌ல‌ன் சொல்லி ப‌லித்தும் உள்ளது. ஒரு மிக‌ முக்கிய‌மான‌ விஷ‌ய‌த்தில் ப‌லித்த‌ MATTER கொடுத்துள்ளேன்:

    Information received from questioner on 4th sep 2010
    ----------------------------
    In June 2010 I have asked about my daughter's health. As you predicted we came to know she had again brain tumor. So we did 3rd operation for her on 3/9/10, last friday. Still she in ICU.Thanks for making us alert by your prediction. because of your prediction we checked her health and came to know this.Thanks a lot.

    QUESTION ASKED IN JUNE2010 WAS AS GIVEN BELOW:

    Vanakkam aiyya, my daughter had undergone operation in brain for tumor in 2000. Still she is taking treatment. I need to know for her marriage life is God given or not? If given means when it will happen? When her health will get cure and I need to know her longivity ?In what ages we can do marriage? What kind of bridegroom would come for her .Details :
    DOB-29.06.1987. TOB-3 P.M. POB- CHENGALPET. GENDER- FEMALE.
    Monday, June 14, 2010

    MY REPLY IN JUNE 2010
    ---------------------
    kmr.krishnan said...

    Longivity is not a subject to be discussed. That too in a public forum like this, we should not talk about longivity.

    As per nadi rules when gochara Guru transits over birth chart raghu operation is indicated. Also serious health problems are predicted. Now Guru is in Meenam and in the native chart Raghu is in Meenam. So the native chart raghu and transit Guru are meeting in 6th(disease) place to lagna. Now the transit Raghu is in Dhanusu which is 6th to Raasi. Again the Dhanusu rasi is Guru's house which is 3rd to lagna. So, for atleast one year from now health condition of your daughter will have further set backs, again hospitalisation, operation may be necessary.In navamsa also Raghu in 6th. Do not panic.
    Postpone thoughts of marriage employment education for the next one year and attend to health. Let us review after completion of one year.Worship Thirupathi Venkatachalapathy.
    Monday, June 14, 2010
    ----------------------------------
    Saturday, September 04, 2010
    ---------------------------------
    Again my reply in Sep 2010 for reporting prediction came true:
    --------------------------------

    kmr.krishnan said...

    Astrology is only a very small guidance to take a decision at crucial moments.I wuould have felt happy if my prediction had gone wrong in your daughter's case. Anyway take it only as a caution.I am not enomoured of successful prediction in her case.I sincerely pray Almughty God to give her quick relief.May she recover early.
    Sunday, September 05, 2010

    ReplyDelete
  63. pick up drop escape என்ற தத்துவத்தைத்தான் கண்ணன் மகாபாரதத்திலே அருளியிருக்கிறார்.. இதோ அது:

    கீதாசாரம்

    எது நடந்ததோ,அது நன்றாகவே நடந்தது.
    எது நடக்கிறதோ,அது நன்றாகவே நடக்கிறது.
    எது நடக்க இருக்கிறதோ,அதுவும் நன்றாகவே நடக்கும்.
    உன்னுடையதை எதை இழந்தாய்?எதற்காக நீ அழுகின்றாய்?
    எதை நீ கொண்டு வந்தாய்,அதை இழப்பதற்கு?
    எதை நீ படைத்திருந்தாய்,அது வீணாவதற்கு?
    எதை நீ எடுத்துக் கொண்டாயோ,அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது.
    எதை கொடுத்தாயோ,அது இங்கேயே கொடுக்கப்பட்டது.
    எது இன்று உன்னுடையதோ,
    அது நாளை மற்றொருவருடையதாகிறது.
    மற்றொரு நாள், அது வேறொருவருடையதாகும்.
    இதுவே உலக நியதியும்,எனது படைப்பின் சாராம்சமுமாகும்.
    -பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்

    ஆமா கண்ணன் ஜாதகம் கிடைக்குமா?எல்லோரும் ராமர் ஜாதகம்தான் ஸ்பெஷல் ன்னு சொல்றாங்களே?ஒரு சேஞ்சுக்கு?

    ReplyDelete
  64. //////Jack Sparrow said...
    appadiye veru endha godsukellam eppadi viradham irupadhu , matrum enthanai vaaram endru soneergalanaal...so that everyone could benefit from it .//////

    சிவ பார்வதி சமேதர்களின் அருளைப் பெற விரும்புவர்கள், திங்கட்கிழமை (சோமாவாரம்) விரதம் இருக்கலாம். துர்கையின் (ராகு) அருளைப் பெற விரும்புகிறவர்கள் வெள்ளிக்கிழமை விரதம் இருக்கலாம்.தக்‌ஷிணாமூர்த்திக்கு
    வியாழன் தோறும் இருக்கலாம்.

    ReplyDelete
  65. ///////krish said...
    விஜய் டிவியில் நாடி ஜோதிடம் பற்றிய உண்மைகளை விளக்கிய நிகழ்ச்சியை பார்த்தேன். நாடியை பற்றி சென்னைப் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் விளக்கினார். பனை ஒலையை 200 வருடங்கள் பாதுகாக்க முடியாது என்றும், அந்த ஓலை சுவடிகள் போலியாக தயாரிக்கப் படுகின்றன, திறமையான கேள்விகளால் நம்மிடமிருந்தே விபரங்கள் பெறுகின்றனர் என்று கூறினார். பனை ஓலை செய்பவர்களையும் காட்டினார்கள். அதனால் அவை வெறும் கிறுக்கள்கள் தான். சாமி ஓம்கார் நாடியில் எப்படி நம்மிடம் இருந்து நாடி ஜோதிடர்கள் போட்டு வாங்குவார்கள் என்று விளக்கி உள்ளார். வகுப்பறை மாணவர்கள் ஏமாற வேண்டாம்./////

    இல்லை. முழுமையாக ஆராயமல் அவர் சொல்லியிருக்கலாம். கம்பராமாயாணம் (12ஆம் நூற்றாண்டு) திருக்குறள் மற்றும் சங்க இலக்கியங்கள் (2000 ஆண்டுகட்கு முற்பட்டது) எல்லாம் எப்படி நமது கைக்குக் கிடைத்தன? நாலந்தா பல்கலைக்கழகத்தில் 4 லட்சம் ஓலைச் சுவடிகள் (இஸ்லாமியர் படையெடுப்பில் அழிந்தது போக மிச்சம் காப்பாற்றப்பட்டவை) நமக்குக் கிடைத்தன? சொல்லுங்கள்! நூற்றாண்டுகளுக்குள் பலமுறை பலரால் (ஆர்வமுள்ளவர்களால்) பிரதி எடுக்கப்பெற்றுக் காப்பாற்றப்பட்டிருக்கலாம். அதுபோலத்தான் நாடி ஜோதிடச் சுவடிகளும் எடுக்கப்பட்டிருக்க வேண்டும்.

    ReplyDelete
  66. //////kannan said...
    ஐயா!
    வகுப்பறையில் அதுவும் வாத்தியார் முன்னாடி உண்மையை மட்டும் சொல்லுகின்றேன்.
    *****
    சுக்ர தசை விட்டும் தூவானம் இன்னும் விடலை போலேருக்கே?
    100% உண்மை உண்மையை தவிர வேறு ஒன்றும் இல்லை தாங்கள் சொன்னது. ஆனாலும் பாருங்கோ மாயவனுடைய பெயரை கொண்டதாலோ என்னவோ எல்லாமே
    சுற்றி சுற்றி வந்து மாயமாகிவிட்டது கைகூடாமல்.
    >>>>>>>>>>>><<<<<<<<<<<<<<<<<<<<,
    SP.VR. SUBBAIYA said...
    யாரங்கே? தகஸாகிக்கு இரண்டு ஏர் டிக்கெட்...! ஒன்று சீதாராம கண்ணனுக்கு, மற்றொன்று..ஹிஹி... ஹி... வாத்தியாருக்கு!:-)))))\\\\\\\\\\\\
    வாங்க..பழகலாம்..வாங்க..வாங்க..வாங்க..
    *****ஆமாம் ஐயா தாங்களும் கூட வேண்டும்
    ஏன்னெனில் எம்பெருமான்
    " ஸ்ரீ ராமன்"
    மிதிலை நோக்கி
    ( சீதையை சுயவரம் செய்ய ) போகும்பொழுது
    " ஸ்ரீ ராமபிரானின்" " குரு"
    உடன் இருந்ததை போல ***
    யாது ஊரே யாவரும் கேளீர்
    " அன்பு ஒன்றே "
    எங்களீன் தத்துவம்.
    இரு மனம் ஒரு மனம் ஆகிவிட்டால் வீடு, நாடு ஏன் உலகம் தான் ஏது ஐயா
    ஆனால் பாம்பு பல்லி பூரான் எல்லாம் சாப்பிடமுடியாது அப்படி ஒரு விரதம்
    " ஸ்ரீ பரசுராமரின் "
    மூலமாக. இந்த ஜென்மதீர்க்கு சைவம் மட்டுமே *****
    மையல் கொண்டபின்னே அங்கே வயதிற்கு வேலை இல்லை:-)))))///////

    பாம்பு பல்லிக்கு எல்லாம் பயப்படவேண்டாம். தயிர் சாதம் ஊறுகாய்க்கு மைனர் க்யாரண்டி தருவார்!

    ReplyDelete
  67. ////dhilse said...
    Dear sir,
    "சனி லக்கினத்திற்குப் பத்தாம் வீட்டிற்கு 6, 8, 12ஆம் வீடுகளில் சஞ்சாரம் செய்யும் காலங்களில் - problem"
    could you explain what's the logic behind this calculation sir?
    thank you
    J.SENDHIL/////

    6,8,12ஆம் இடங்களில் சஞ்சாரம் செய்யும் காலங்களில் ஒரு கிரகம் முழு நன்மைகளைச் செய்யாது என்ற லாஜிக்தான். அது ஏன் 6, 8, 12 ஆம் இடங்கள் என்று கேட்டால். அது அடைப்படை விதிகளில் ஒன்று. அதற்கு லாஜிக் கேட்டால் கிடைக்காது. ஜோதிடத்தை மறந்து விடலாம். உங்கள் மொழியில் சொன்னால் கடாசி விடலாம்!

    ReplyDelete
  68. /////astroadhi said...
    வாத்தியார் said....
    எல்லாம் கோள்சாரத்தைவைத்து. அதை நினைவில் வையுங்கள்
    நானும் கேட்டது கோள்சாரத்தில் சனி தொழில் ஸ்தானத்தில் இருந்தால் என்ன மாதிரியான பலன் தரும் அய்யா??????
    பதிலுக்காக ஆவலுடன் காத்துஇருக்கின்றேன்//////

    பத்தாவது வீட்டிற்கு ஒன்றாம் இடம் என்னும் போது, அந்த வீடு வலுவாக இருந்தால் செய்யும் வேலையில் (உத்தியோக) உயர்வு கிடைக்கும்.

    ReplyDelete
  69. //////minorwall said...
    //////////////
    kannan said...
    100% உண்மை உண்மையை தவிர வேறு ஒன்றும் இல்லை தாங்கள் சொன்னது. ஆனாலும் பாருங்கோ மாயவனுடைய பெயரை
    கொண்டதாலோ என்னவோ எல்லாமே
    சுற்றி சுற்றி வந்து மாயமாகிவிட்டது கைகூடாமல். \\\\\\\\\\\\\\\
    அதுதான் ஃபோர்முலாவே..கண்ணனின் மாயம் என்றால் அதுதான்..ராஜ லீலை..
    to say it in english :
    pick up,drop,escape ....That s all..Take care.. bye..
    'மைனருக்கு சரியோ?' என்ற கேள்விக்கு சரியான பதிலை குருவே சொல்லிவிட்டார்../////

    pick up,drop,escape எல்லாம் நமக்குத்தான் மைனர். பகவானுக்கு இல்லை! அவர் ஆட்கொண்டு விடுவார்.

    ReplyDelete
  70. ///////kmr.krishnan said...
    நாடி சோதிடத்தில் கோள் சார பலன், பிறந்த நேர ஜாதகத்தில் ஒரு கட்டத்தில் அமர்ந்துள்ள‌ கிர‌ஹ‌த்தின் மீது கோள் சார‌ கிர‌ஹ‌ம் ஊர்வ‌தை வை‌த்து சொல்கிறார்க‌ள். நான் ப‌ய‌ன்ப‌டுத்திப் ப‌ல‌ன் சொல்லி ப‌லித்தும் உள்ளது. ஒரு மிக‌ முக்கிய‌மான‌ விஷ‌ய‌த்தில் ப‌லித்த‌ MATTER கொடுத்துள்ளேன்:
    Information received from questioner on 4th sep 2010
    ----------------------------
    In June 2010 I have asked about my daughter's health. As you predicted we came to know she had again brain tumor. So we did 3rd operation for her on 3/9/10, last friday. Still she in ICU.Thanks for making us alert by your prediction. because of your prediction we checked her health and came to know this.Thanks a lot.
    QUESTION ASKED IN JUNE2010 WAS AS GIVEN BELOW:
    Vanakkam aiyya, my daughter had undergone operation in brain for tumor in 2000. Still she is taking treatment. I need to know for her marriage life is God given or not? If given means when it will happen? When her health will get cure and I need to know her longivity ?In what ages we can do marriage? What kind of bridegroom would come for her .Details :
    DOB-29.06.1987. TOB-3 P.M. POB- CHENGALPET. GENDER- FEMALE.
    Monday, June 14, 2010
    MY REPLY IN JUNE 2010
    ---------------------
    kmr.krishnan said...
    Longivity is not a subject to be discussed. That too in a public forum like this, we should not talk about longivity.
    As per nadi rules when gochara Guru transits over birth chart raghu operation is indicated. Also serious health problems are predicted. Now Guru is in Meenam and in the native chart Raghu is in Meenam. So the native chart raghu and transit Guru are meeting in 6th(disease) place to lagna. Now the transit Raghu is in Dhanusu which is 6th to Raasi. Again the Dhanusu rasi is Guru's house which is 3rd to lagna. So, for atleast one year from now health condition of your daughter will have further set backs, again hospitalisation, operation may be necessary.In navamsa also Raghu in 6th. Do not panic.
    Postpone thoughts of marriage employment education for the next one year and attend to health. Let us review after completion of one year.Worship Thirupathi Venkatachalapathy.
    Monday, June 14, 2010
    ----------------------------------
    Saturday, September 04, 2010
    ---------------------------------
    Again my reply in Sep 2010 for reporting prediction came true: --------------------------------
    kmr.krishnan said...
    Astrology is only a very small guidance to take a decision at crucial moments.I wuould have felt happy if my prediction had gone wrong in your daughter's case. Anyway take it only as a caution.I am not enomoured of successful prediction in her case.I sincerely pray Almughty God to give her quick relief.May she recover early.///////

    ஆமாம் ஜோதிடம் என்பது ஊறுகாய்தான். முழுச் சாப்பாடு அல்ல! உங்களின் நீண்ட கருத்துப்பகிர்விற்கு நன்றி சார்!

    ReplyDelete
  71. //////minorwall said...
    pick up drop escape என்ற தத்துவத்தைத்தான் கண்ணன் மகாபாரதத்திலே அருளியிருக்கிறார்.. இதோ அது:
    கீதாசாரம்
    எது நடந்ததோ,அது நன்றாகவே நடந்தது.
    எது நடக்கிறதோ,அது நன்றாகவே நடக்கிறது.
    எது நடக்க இருக்கிறதோ,அதுவும் நன்றாகவே நடக்கும்.
    உன்னுடையதை எதை இழந்தாய்?எதற்காக நீ அழுகின்றாய்?
    எதை நீ கொண்டு வந்தாய்,அதை இழப்பதற்கு?
    எதை நீ படைத்திருந்தாய்,அது வீணாவதற்கு?
    எதை நீ எடுத்துக் கொண்டாயோ,அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது.
    எதை கொடுத்தாயோ,அது இங்கேயே கொடுக்கப்பட்டது.
    எது இன்று உன்னுடையதோ,
    அது நாளை மற்றொருவருடையதாகிறது.
    மற்றொரு நாள், அது வேறொருவருடையதாகும்.
    இதுவே உலக நியதியும்,எனது படைப்பின் சாராம்சமுமாகும்.
    -பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்
    ஆமா கண்ணன் ஜாதகம் கிடைக்குமா?எல்லோரும் ராமர் ஜாதகம்தான் ஸ்பெஷல் ன்னு சொல்றாங்களே?ஒரு சேஞ்சுக்கு?/////

    இந்தத் தத்துவம் வாழ்க்கைக்கு. வாழ்க்கையை எளிதாக எடுத்துக்கொண்டு நிம்மதியாக இருப்பதற்கு. pick up drop escape ற்கு இது பொருந்தாது. சம்பந்தப்பட்ட பெண் (நம்மூரில்) புகார் கொடுத்தால், காவல் துறையினர் அள்ளிக்கொண்டு போய் முட்டிக்கு முட்டி தட்டி எடுத்துவிடுவார்கள். அவர்களிடம் இந்தத் தத்துவம் எடுபடாது!

    ReplyDelete
  72. நீங்கள் சொல்வது சரிதான் நாடி மோசடி என்று நிருபிக்க முயன்று ஆராய்ச்சியை திசை திருப்பி விட்டார் போல் உள்ளது. நடுநிலையில்லாமல் நிகழ்ச்சி நடத்தி என்ன பலன். மக்கள் எதையுமே எடுத்து கொள்ள மாட்டார்கள்

    ReplyDelete
  73. அன்பு krish ,
    வாத்தியார் நாடி சோதிடத் தொழில் செய்வோர் பொழப்பில் மண் போட விரும்பாதவர்.
    அதனால் நான் விவரமாக எழுதினால் அனுமதிப்பாரோ இல்லையோ தெரியாது..
    எனவே உங்கள் மெயில் id கொடுத்தால் நான் நாடி மோசடி பற்றி challenge செய்து தெளிவாக எழுதி வைத்துள்ளதை அனுப்புகிறேன்..
    மற்றபடி..எனக்குத்தெரிந்தது
    ஏமாறுகிறவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுகிறவர்களும் இருப்பார்கள்..
    திருடனைப் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது...
    உங்கள் kandathum katrathum லே மெயில் தொடர்பு கொடுத்து வையுங்கள்..

    ReplyDelete
  74. ////krish said...
    நீங்கள் சொல்வது சரிதான் நாடி மோசடி என்று நிருபிக்க முயன்று ஆராய்ச்சியை திசை திருப்பி விட்டார் போல் உள்ளது. நடுநிலையில்லாமல் நிகழ்ச்சி நடத்தி என்ன பலன். மக்கள் எதையுமே எடுத்து கொள்ள மாட்டார்கள்////

    இறைவனையே இல்லை என்று காலம் காலமாக சில மகாத்மாக்கள் கோஷ்டிகானம் பாடிக்கொண்டிருக்கிறனர். என்ன ஆயிற்று? மக்கள் நம்பிக்கை வைத்திருக்கும் விஷ்யத்தை யாராலும் எளிதில் உடைக்க முடியாது.

    ReplyDelete
  75. ////minorwall said...
    அன்பு krish ,
    வாத்தியார் நாடி சோதிடத் தொழில் செய்வோர் பொழப்பில் மண் போட விரும்பாதவர்.
    அதனால் நான் விவரமாக எழுதினால் அனுமதிப்பாரோ இல்லையோ தெரியாது..
    எனவே உங்கள் மெயில் id கொடுத்தால் நான் நாடி மோசடி பற்றி challenge செய்து தெளிவாக எழுதி வைத்துள்ளதை அனுப்புகிறேன்..
    மற்றபடி..எனக்குத்தெரிந்தது
    ஏமாறுகிறவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுகிறவர்களும் இருப்பார்கள்..
    திருடனைப் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது...
    உங்கள் kandathum katrathum லே மெயில் தொடர்பு கொடுத்து வையுங்கள்..//////

    ஆகா, க்ரீஷ் அப்படியே செய்யுங்கள்!

    ReplyDelete
  76. மைனர் இ மெயில் ஐடியை சேர்த்துவிட்டேன். பாருங்கள்

    ReplyDelete
  77. /////krish said...
    மைனர் இ மெயில் ஐடியை சேர்த்துவிட்டேன். பாருங்கள்/////

    அதெல்லாம் பார்த்துவிடுவார். கவலையை விடுங்கள்!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com