மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

8.9.10

நடப்பது நடக்கும், நடக்காதது நடக்காது!

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
நடப்பது  நடக்கும்; நடக்காதது  நடக்காது!

கேள்வி - பதில்கள் (இரண்டாவது சீஸன்) பகுதி.17
உங்களின் கேள்விகள் - வாத்தியாரின் பதில்கள்
++++++++++++++++++++++++++++++++++++++===========
மின்னஞ்சல் எண்.57
மகேஷ்
   
Dear Sir,
I like to ask one question ....how to find the ista devatha ( favourable god) from our horoscope,  please explain in detail
Regards
Mahesh

இன்று 30 வயதிற்குக் கீழ்ப்பட்டவர்கள் பலருக்கு, திரைப்பட
நட்சத்திரங்கள் தான்  இஷ்ட தெய்வம். திரிஷா, ஸ்ரேயா,
நயன்தாரா, அனுஷ்கா சர்மா, அஸின், தமன்னா என்று  இஷ்ட
தெய்வங்களின் பட்டியல் நீளும். சிலர் கோவில் கட்டியும்
கும்பிடுகிறார்கள். சிலர் மன்றங்கள்  வைத்துக் கூட்டு வழிபாடு
செய்கிறார்கள். அதுதான் நிலைமை

நீங்கள் வித்தியாசமாக வான நட்சத்திரங்களுக்குரிய இஷ்ட தெய்வங்களைக் கேட்டிருக்கிறீர்கள். மிக்க மகிழ்ச்சி. (உங்கள் வயது என்ன? அநேகமாக 30ஐத் தாண்டியிருக்க வேண்டும். என் ஊகம் சரியா?)

உங்களுக்காக 27 நட்சத்திரக்காரர்களுக்கும் உரிய தெய்வங்களைப் பட்டியல் இட்டுள்ளேன். விருப்பம் உள்ளவர்கள் வணங்கிப் பயனடையலாம்.

01. அஸ்வினி - ஸ்ரீ சரஸ்வதி தேவி
02. பரணி - ஸ்ரீ துர்கா தேவி
03. கார்த்திகை - ஸ்ரீ சரவணன் (முருகப் பெருமான்)
04. ரோகிணி - ஸ்ரீ கிருஷ்ணர். (விஷ்ணு பெருமான்)
05. மிருகசீரிடம் - ஸ்ரீ சந்திர சூடேஸ்வரர் (சிவ பெருமான்)
06. திருவாதிரை - ஸ்ரீ சிவபெருமான்
07. புனர்பூசம் - ஸ்ரீ ராமர் (விஷ்ணு பெருமான்)
08. பூசம் - ஸ்ரீ தட்சிணாமூர்த்தி ( சிவபெருமான்)
09. ஆயில்யம் - ஸ்ரீ ஆதிசேசன் (நாகம்மாள்)
10. மகம் - ஸ்ரீ சூரிய பகவான் (சூரிய நாராயணர்)
11. பூரம் - ஸ்ரீ ஆண்டாள் தேவி
12. உத்திரம் - ஸ்ரீ மகாலெட்சுமி
13. ஹஸ்தம் - ஸ்ரீ காயத்திரி தேவி
14. சித்திரை - ஸ்ரீ சக்கரத்தாழ்வார்
15. சுவாதி - ஸ்ரீ நரசிம்மமூர்த்தி
16. விசாகம் - ஸ்ரீ முருகப் பெருமான்.
17. அனுசம் - ஸ்ரீ லெட்சுமி நாராயணர்.
18. கேட்டை - ஸ்ரீ வராஹ பெருமாள் (ஹயக்கிரீவர்)
19. மூலம் - ஸ்ரீ ஆஞ்சனேயர்
20. பூராடம் - ஸ்ரீ ஜம்புகேஸ்வரர் (சிவபெருமான்)
21. உத்திராடம் - ஸ்ரீ வினாயகப் பெருமான்.
22. திருவோணம் - ஸ்ரீ ஹயக்கிரீவர் (விஷ்ணு பெருமான்)
23. அவிட்டம் - ஸ்ரீ அனந்த சயனப் பெருமாள் ( விஷ்ணு பெருமான்)
24. சதயம் - ஸ்ரீ மிருத்யுஞ்ஜேஸ்வரர் (சிவபெருமான்)
25. பூரட்டாதி - ஸ்ரீ ஏகபாதர் (சிவபெருமான்)
26. உத்திரட்டாதி - ஸ்ரீ மகா ஈஸ்வரர் (சிவபெருமான்)
27. ரேவதி - ஸ்ரீ அரங்கநாதன்.

மேலே உள்ளவை ஒவ்வொரு நட்சத்திரகாரர்களிற்கும் அதிர்ஷ்டம் தரக்கூடிய தெய்வங்கள் ஆகும். அதைவிட முக்கியமாக துன்பங்களைப் போக்கும்  அல்லது துன்பங்களைத் தாக்குப்பிடிக்கும் தன்மையைத் தரக்கூடியவை யாகும். அதை மனதில் கொள்க!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++
மின்னஞ்சல் எண்.58
S.A. பாபு
   
சார்

1. நவரத்தின  மோதிரம்  எல்லோரும் போடலாமா அல்லது ஜாதக கிரக அமைப்பிற்கு ஏற்ற கல் போட வேண்டுமா.போட்டால் எந்த விரலில் போட வேண்டும்.?

ஒவ்வொரு தசைக்கும் ஒவ்வொரு மோதிரமாக மாற்றிக்
கொண்டிருப்பதில் உள்ள பணச் செலவு காரணமாக,
ஒரே நவரத்தின மோதிரமாகப் போட்டுக் கொள்பவர்கள்
இருக்கிறார்கள். நீங்கள் எப்படி வேண்டுமென்றாலும்
போட்டுக்கொள்ளலாம். உங்கள் வங்கி இருப்பை
வைத்து நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.  
மோதிர விரல் எதற்கு இருக்கிறது? அதில் போட்டுக்
கொள்ளுங்கள்.

இந்தமாதிரி நவரத்தின மோதிரம் போட்டுக்கொண்டால், நமது
ஜாதகம் தலைகீழாக மாறிவிடும் என்ற நினைப்பு இருந்தால்
அதை விட்டு விடுங்கள். எதுவும் மாறாது. நடப்பது நடக்கும்,  
நடக்காதது நடக்காது. கிடைப்பது கிடைக்கும். கிடைக்காதது 
கிடைக்காது.

கற்கள் உங்களுக்கு வரவிருப்பதை enhance பண்ணிக்கொடுக்கும். அவ்வளவுதான்.

 2. பெயர் வைப்பது பிறந்த தேதி அல்லது மொத்த கூட்டு எண்ணுக்கு பொருத்தமாக வைப்பது நல்லது என்று சொன்னிர்கள்.அப்படி வைக்கும்போது அந்த கிரகம் ராசி கட்டத்தில் 6,8 அல்லது நவாம்சத்தில்  நீசமாக இருந்தாலும் பரவாயில்லையா?
அன்புடன்
உங்கள் மாணவன்
S.Α.BABU

நீங்கள் பெயரை மாற்றிவைத்தவுடன் நீசத்தன்மையும் மாறிவிடுமா என்றுதானே கேட்கிறீர்கள்? அதெல்லாம் மாறாது. நீசத்தன்மை அப்படியே இருக்கும். பெயரை மாற்றினாலும் மாற்றாவிட்டாலும் பலன்களும் உள்ளது உள்ளபடியே தொடரும்.

பெயர் மாற்றமும் உங்களுக்கு வரவிருப்பதை enhance பண்ணிக்கொடுக்கும். அவ்வளவுதான்.

விளக்கம் போதுமா?
+++++++++++++++++++++++++++++++++++++++++++++
மின்னஞ்சல் எண்.59
புரட்சி மணி   
ஐயா,

இதோ என்னுடைய சந்தேகங்கள்,

1.அட்டவர்கத்தில் இராகு,கேது, மாந்தி- ஐ கணக்கில் எடுத்து கொள்வது இல்லை என்று நினைக்கின்றேன். அப்படி இருக்கும் பொழுது, அவைகள் இருக்கும் மூன்று வீட்டின் வலு எப்படி அட்டவர்கத்தில் சரியாக தெரியும்?

தமிழ்நாட்டிலுள்ள பல ஜோதிடர்கள் அஷ்டகவக்கத்தையே 
கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை. மாந்தியையும் எடுத்துக் கொள்வதில்லை. அது இரண்டும் இல்லாமல் அவர்களால் பலன்
சொல்ல முடியும் என்னும் போது நீங்கள் கேட்டுள்ளது
சாத்தியமாகாதா என்ன?

2. மாந்தி இராசியில் தீங்கிழைப்பது போலவும் அம்சத்தில் நல்லது செய்வது போலவும் அமர்ந்து இருந்தால் அவன் எதை செய்வான்? நல்லது தானே?

அம்சத்தில் நல்லது செய்வது போலவா? நோ சான்ஸ். மாந்தி deadly planet. எங்கே இருந்தலும் தீமைதான்.

3.ஜகன்னாத ஹோரா மற்றும் நமது வகுப்பு மாணவர் திரு. தியாகராஜன்(என்று நினைக்கின்றேன்) இவர்களுடைய மென்பொருளில் திசையில் ஐந்து முதல் எட்டு மாதங்கள் வித்தியாசம் வருகின்றதே ஐயா? தவறு என்னுடையதா அல்லது அவர்களின் மென்போருளிலா?

தவறு உங்களுடையதுதான். எதற்காக இரண்டு மென்பொருட்களை உபயோகிக்கிறீர்கள்? சாஷ்டாங்கமாக தரையில் விழுந்து கம்ப்யூட்டரை வணங்கிவிட்டு, ஏதாவது ஒரு மென்பொருளை மட்டும் உபயோகியுங்கள்.

4. இராகு மற்றும் கேது தீய வீட்டில் இருப்பின் நல்லது என்பது 
பொது விதி. அவர்கள் தாங்கள் இருக்கும் வீட்டை சொந்த வீடாக்கிக் கொள்வதால் அவர்களும் , திரிகோண வீடுகளில் அமர்வது 
நல்லது தானே? திரிகோண வீட்டின் அதிபதி எப்போதும் சுபராகவே கருதப்படவேண்டும் என்பதும் ஒரு விதி. ஆதலால் அவர்களும் 
நல்லவர்கள் ஆகிவிடுவார்கள்தானே?

உங்கள் சந்தோஷத்திற்காகச் சொல்வதென்றால், நல்லவராகிவிடுவார்கள். ஆனால் என்னதான் பதவி கிடைத்தாலும்  உண்மையான சுபக்கிரகங்களைப் போல வாரி வழங்க மாட்டார்கள். ரேசனில்தான் வழங்குவார்கள்.

5. ஒருவனின் ஜாதகத்தில் இருக்க வேண்டியது லக்னத்தில் குரு, இருக்ககூடாதது லக்னத்தில் சனி. இருவருமே லக்னத்தில் இருந்தால் அவன் எப்படி இருப்பான்? குரு வலுவாக இருக்கும் பட்சத்தில்  நீங்கள் முன்பு சொன்னது போல  ஒரு பெண் அவனை கண்ணை மூடி கொண்டு திருமணம் செய்யலாமா?

எப்படியிருப்பான் என்பதோடு நீங்கள் நிறுத்திக்கொண்டிருக்க
வேண்டும். எதற்காக பெண்ணை உங்கள் கேள்விக்குள்
திணித்திருக்கிறீர்கள்? இருவரும் லக்கினத்தில் இருந்தால்,
ஆசாமி கலவையாக இருப்பான். வாழ்க்கையும் கலவையாக
இருக்கும். பெண்ணும் கண்னைத் திறந்து வைத்துக் கொண்டுதான்
அவனை மணக்க வேண்டும்.

6. ஒருவனுக்கு புதன் கன்னியில்  இருப்பின் அவன் அங்கே அவன் ஆட்சி, உச்சம், திரிகோணம் இதில் எந்த பலத்தில் உள்ளான் என்பதை எப்படி அறிய முடியும்? இதேபோல் மற்ற கோள்களுக்கும்ஆட்சி, திரிகோணம் கண்டு பிடிப்பது எப்படி?

இது எல்லாம் அடைப்படைப் பாடம். அடிப்படைப் பாடத்தைப்
படிக்காமல், நீங்கள் புரட்சி செய்யப் புறப்பட்டால்,  அது
அட்டைக் கத்தியுடன்  யுத்தத்திற்கு செல்வதற்குச் சமம்.
முதலில் அடைப்படைப் பாடத்தை  எல்லாம் படியுங்கள்.
புரட்சியைப் பின்னால் வைத்துக்கொள்வோம்:-))))

7. நிறைய கேள்விகள் கேட்டு விட்டேன் என்று நினைக்கின்றேன், ஒரு மாணவன் இவ்வளவு சந்தேகங்கள் தான்  கேட்க வேண்டும் என்று ஏதேனும் வரை முறை இருந்தால் சொல்லி விடுங்கள் ஐயா.
தங்களுடைய பொன்னான நேரத்திற்கு மிக்க நன்றி ஐயா.
இவன்
என்றும் அன்புடன் மற்றும் சந்தேகங்களுடன்
இரா.புரட்சிமணி

என்று அன்புடன் இருங்கள். ஆனால் என்றும் சந்தேகத்துடன் இருக்க வேண்டாம். இந்த ஸீசனுக்கு உங்களுடைய கோட்டா முடிந்துவிட்டது.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
மின்னஞ்சல் எண்.60
ஷியாம் சுந்தர்
   
Hi,

I have been reading your blog and I am follower of your wirtings. How important is birth nakshatra? Which the most powerful nakshatra? Is there a way to rank them? How does it affect a person's horoscope? Please write regarding this in your blog.
Shyam

நட்சத்திரத்தை எல்லாம் தகுதி அடிப்படையில் வரிசைப்படுத்த
முடியாது. நல்ல காலம் அவற்றிற்கு ரேங்க் அளிக்கப்படவில்லை.
அளிக்கப்பட்டிருந்தால், வானத்தில் இட ஒதுக்கீட்டில்
அவைகளுக்குள் பிரச்சினை வந்திருக்கும். கடவுள் காப்பாற்றினார்

உங்களுக்கு உங்கள் நட்சத்திரம் உயர்ந்தது. எனக்கு என் நட்சத்திரம்தான் உயர்ந்தது.

திரு என்று துவங்கும் நட்சத்திரங்கள் இரண்டு. ஒன்று திருவாதிரை. மற்றொன்று திருவோணம். திருவாதிரை ஈசனுக்கு உரிய நட்சத்திரம். திருவோணம் பெருமாளுக்கு உரிய நட்சத்திரமாகும்.

எச்சரிக்கையாக உரிய நட்சத்திரம் என்றுதான் குறிப்பிட்டுள்ளேன்.
பெருமாள் பிறந்த நட்சத்திரம் என்று எழுதியிருந்தால், கடை பெஞ்ச்
கண்மணி யாராவது, பிறப்பு சான்றிதழைக் காட்டச் சொல்லிக்
கேட்பார்கள்.

சதயம் விநாயகருக்கு உரியது. கார்த்திகை and விசாகம் முருகப்
பெருமானுக்கு உரியது. மூலம் ஆஞ்சநேயருக்கு உரியது.
புனர்பூசம் ராமபிரானுக்கு உரியது. பூசம் பரதனுக்கு உரியது.
ஆயில்யம் லெட்சுமணன் மற்றும் சத்ருக்கனனுக்கு உரியது.

மற்றபடி நட்சத்திரங்களை வைத்துப் பல சொல்லடைகள் உண்டு:

தவத்துப் பிள்ளை ‘மகத்தில்’ பிறக்கும் என்பார்கள்.
ஆண் ‘மூலம்’ அரசாளும் என்பார்கள்.
அவிட்டத்தில் பிறந்தால் வீட்டில் தவிட்டுப்பானைகூட மிஞ்சாது
என்பார்கள். அதில் (சொல்லடைகளில்) எல்லாம் உண்மையில்லை!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
(தொடரும்)

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!

49 comments:

  1. நட்சத்திரங்களுக்கான தெய்வங்களின் பட்டியல் மிக அருமை. வெளிவர இருக்கும் புத்தகத்தில் கட்டாயம் 'பரிஹார தெய்வங்கள்' என்ற தலைப்பின் கீழ்
    சேர்த்து விடுங்கள்.அந்த அத்தியாயத்தில் சுலோகங்கள் கூட சேர்க்கலாம். நன்றி அய்யா!

    ReplyDelete
  2. /////kmr.krishnan said...
    நட்சத்திரங்களுக்கான தெய்வங்களின் பட்டியல் மிக அருமை. வெளிவர இருக்கும் புத்தகத்தில் கட்டாயம் 'பரிஹார தெய்வங்கள்' என்ற தலைப்பின் கீழ் சேர்த்து விடுங்கள்.அந்த அத்தியாயத்தில் சுலோகங்கள் கூட சேர்க்கலாம். நன்றி அய்யா! /////

    சேர்த்துவிடுகிறேன். பின்னூட்டக் கணக்கைத் துவக்கி வைத்தமைக்கு நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  3. “ஆபத்துக்கு உதவாப்பிள்ளை"

    ஆம்மாம் ஐயா! முன்னோர்கள் சொல்ல கேட்டது உண்டு

    ஆபத்து காலத்தில் உதவாத பிள்ளை இருந்தும் ஒன்றுதான், இல்லாமல் இருந்தும் ஒன்றுதான் என்பர்.

    அருமையான பாடலை தந்தமைக்கு
    தங்களுக்கு வேறு என்னத்தை தர முடியும் நன்றியை தவிர!

    ReplyDelete
  4. ///////Jack Sparrow said...
    oru graham vakramaga irundhu. asta varga paralil adhu 7 irundhal . nalladha .. or oru graham vakramaga irundhu paral 2 or lessthanaga irundhal naladha./////

    வக்கிரம் பெற்ற கிரகத்திற்கு எப்படி ஏழு மார்க்குகள் வந்தன என்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?
    யோசித்து, அதற்கான பதிலை எழுதுங்கள்!
    ______________________________

    theriyavillaiye ayyaa.... vkramana graham maybe aatchiyil irundhal 7 points kidakalam..aladhu amsathil atchyil irukalam...
    i dont know whether its correct. can u correct me if above is wrong ,with the right answer .
    mothathil en kelvikum badhil solungal ayaa

    oru graham vakramaga irundhu. asta varga paralil adhu 7 irundhal . nalladha? .. or oru graham vakramaga irundhu paral 2 or lessthanaga irundhal naladha.?

    ReplyDelete
  5. வணக்கம் அய்யா.....

    கேள்வி பதில் பகுதி சிறப்பு....

    நன்றி வணக்கம்,,,

    ReplyDelete
  6. எனக்குப் புரிகிறதோ இல்லையோ, மாணவர்களின் கேள்விகளையும் அதற்குத் தாங்கள் அளிக்கும் பதில்களையும் படித்து ரசிக்கிறேன். இஷ்ட தெய்வம் பற்றிய கேள்விக்குத் தாங்கள் திரைநட்சத்திரங்களின் பெயர்களை அடுக்கியது முதலில் ரசிக்கக்கூடியது. பிறகு ஒவ்வொரு நட்சத்திரத்துக்கும் ஏற்ற கடவுளர்களையும் எழுதியிருக்கிறீர்கள். நன்று. நான் அனுமனை மிகவும் போற்றி வணங்குபவன். அவனது ஜன்ம நட்சத்திரமாக விளங்குவது மூலம். உங்கள் பதிலைப் பார்த்தபின் தான் உணர்ந்தேன் என் நட்சத்திரமும் மூலம்தான் என்று. மிகமிக நல்ல பதில். அடுத்து நட்சத்திரங்களுக்கு இடஒதுக்கீடு பற்றிய குறிப்பு. திருவாதிரை, திருவோணம் நட்சத்திரத்தின் சிறப்பு, இந்த தகவல்களும் நன்று. கல்கி அவர்கள் எழுதும்போதே ஆங்காங்கே நகைச்சுவை உதிர்ந்து கொண்டே போகும். அது போல எழுதுகிறீர்கள். வாழ்க உங்கள் பணி.

    ReplyDelete
  7. /////kannan said...
    “ஆபத்துக்கு உதவாப்பிள்ளை"
    ஆம்மாம் ஐயா! முன்னோர்கள் சொல்ல கேட்டது உண்டு
    ஆபத்து காலத்தில் உதவாத பிள்ளை இருந்தும் ஒன்றுதான், இல்லாமல் இருந்தும் ஒன்றுதான் என்பர்.
    அருமையான பாடலை தந்தமைக்கு
    தங்களுக்கு வேறு என்னத்தை தர முடியும் நன்றியை தவிர!////

    அனைவரும் படித்து ரசித்தால் போதும்! வேறொன்றும் யான் வேண்டேன்!

    ReplyDelete
  8. /////Jack Sparrow said...
    ///////Jack Sparrow said...
    oru graham vakramaga irundhu. asta varga paralil adhu 7 irundhal . nalladha .. or oru graham vakramaga

    irundhu paral 2 or lessthanaga irundhal naladha./////
    வக்கிரம் பெற்ற கிரகத்திற்கு எப்படி ஏழு மார்க்குகள் வந்தன என்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?
    யோசித்து, அதற்கான பதிலை எழுதுங்கள்!
    ______________________________
    theriyavillaiye ayyaa.... vkramana graham maybe aatchiyil irundhal 7 points kidakalam..aladhu amsathil atchyil

    irukalam...
    i dont know whether its correct. can u correct me if above is wrong ,with the right answer .
    mothathil en kelvikum badhil solungal ayaa
    oru graham vakramaga irundhu. asta varga paralil adhu 7 irundhal . nalladha? .. or oru graham vakramaga

    irundhu paral 2 or lessthanaga irundhal naladha.?/////

    அஷ்டகவர்க்கப்பரல்கள் எப்படிக் கணக்கிடப்படுகின்றன என்பதை முழுப் பாடமாக எழுதிப் பதிவிடுகிறேன். இரண்டு நாட்கள் பொறுத்துக்கொள்ளுங்கள்!

    ReplyDelete
  9. ///////astroadhi said...
    வணக்கம் அய்யா.....
    கேள்வி பதில் பகுதி சிறப்பு....
    நன்றி வணக்கம்,,,////

    நல்லது. நன்றி ஆதிராஜ்!

    ReplyDelete
  10. //////Thanjavooraan said...
    எனக்குப் புரிகிறதோ இல்லையோ, மாணவர்களின் கேள்விகளையும் அதற்குத் தாங்கள் அளிக்கும்

    பதில்களையும் படித்து ரசிக்கிறேன். இஷ்ட தெய்வம் பற்றிய கேள்விக்குத் தாங்கள் திரைநட்சத்திரங்களின்

    பெயர்களை அடுக்கியது முதலில் ரசிக்கக்கூடியது. பிறகு ஒவ்வொரு நட்சத்திரத்துக்கும் ஏற்ற கடவுளர்களையும்

    எழுதியிருக்கிறீர்கள். நன்று. நான் அனுமனை மிகவும் போற்றி வணங்குபவன். அவனது ஜன்ம நட்சத்திரமாக

    விளங்குவது மூலம். உங்கள் பதிலைப் பார்த்தபின் தான் உணர்ந்தேன் என் நட்சத்திரமும் மூலம்தான் என்று.

    மிகமிக நல்ல பதில். அடுத்து நட்சத்திரங்களுக்கு இடஒதுக்கீடு பற்றிய குறிப்பு. திருவாதிரை, திருவோணம்

    நட்சத்திரத்தின் சிறப்பு, இந்த தகவல்களும் நன்று. கல்கி அவர்கள் எழுதும்போதே ஆங்காங்கே நகைச்சுவை

    உதிர்ந்து கொண்டே போகும். அது போல எழுதுகிறீர்கள். வாழ்க உங்கள் பணி.///////

    உங்களின் மேலான அன்பிற்கும் பாராட்டுக்களுக்கும் நன்றி!. கல்கி எத்தனை பெரிய மேதை. அவருடன் என்னை ஒப்பிடுவது என்னை சங்கோஜப்பட வைக்கிறது. நான் கல்கியின் தீவிர ரசிகன். அவர் எழுத்துக்களை விரும்பிப் படித்ததால் அதன் பாதிப்பு என் எழுத்துக்களிலும் இருக்கலாம்!

    ReplyDelete
  11. இன்றைய பதிவும் எப்போதும் போல அருமை அய்யா. இன்று எனது பிறந்த நாள்.... தங்களது ஆசிர்வாதங்களை வேண்டுகிறேன்....... :)

    ReplyDelete
  12. ஐயா,
    என்னுடைய கேள்விகளுக்கு இன்று பதில் அளித்தமைக்கு மிக்க நன்றி. நீங்கள் கூறியது போல கடைசி கேள்விக்கு பதில் உங்கள் பாடத்திலேயே இருப்பதை தங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பியவுடன் தான் உணர்ந்தேன் , சிரமத்திற்கு வருந்துகிறேன். இன்றைய மற்றைய பதில்களும் பயன் அளிக்கும் வகையில் உள்ளது. நன்றி ஐயா.
    இவன்
    இரா.புரட்சிமணி

    ReplyDelete
  13. மின்னஞ்சல் எண்.58
    பெயர் வைப்பது பிறந்த தேதி அல்லது மொத்த கூட்டு எண்ணுக்கு பொருத்தமாக வைப்பது நல்லது என்று சொன்னிர்கள்.அப்படி வைக்கும்போது
    பெயருக்கு உடைய (சுக்கிரன் - ஆறு ) அந்த கிரகம் ராசி கட்டத்தில் 6,8 அல்லது நவாம்சத்தில் நீசமாக இருந்தாலும் பரவாயில்லையா?.அந்த எண்ணில் பெயர் வைக்கலாமா.

    பாபு

    ReplyDelete
  14. /////தமிழ்மணி said...
    இன்றைய பதிவும் எப்போதும் போல அருமை அய்யா. இன்று எனது பிறந்த நாள்.... தங்களது ஆசிர்வாதங்களை வேண்டுகிறேன்....... :)/////

    ஆகா, நாடும் வீடும் போற்ற நலமுடன் வாழ்க! வளர்க!
    இந்த நன்னாள் இன்னும் ஒரு நூறு முறை உங்கள் வாழ்வில் வரட்டும்!

    ReplyDelete
  15. //////R.Puratchimani said...
    ஐயா,
    என்னுடைய கேள்விகளுக்கு இன்று பதில் அளித்தமைக்கு மிக்க நன்றி. நீங்கள் கூறியது போல கடைசி கேள்விக்கு பதில் உங்கள் பாடத்திலேயே இருப்பதை தங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பியவுடன் தான் உணர்ந்தேன் , சிரமத்திற்கு வருந்துகிறேன். இன்றைய மற்றைய பதில்களும் பயன் அளிக்கும் வகையில் உள்ளது. நன்றி ஐயா.
    இவன்
    இரா.புரட்சிமணி/////

    நல்லது.நன்றி புரட்சியாரே!

    ReplyDelete
  16. /////Ram said...
    thanks for the todays answers////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  17. ////Jack Sparrow said...
    thank u . thank u ./////

    நல்லது. நன்றி ஜாக்!

    ReplyDelete
  18. //////Babu said...
    மின்னஞ்சல் எண்.58
    பெயர் வைப்பது பிறந்த தேதி அல்லது மொத்த கூட்டு எண்ணுக்கு பொருத்தமாக வைப்பது நல்லது என்று சொன்னிர்கள்.அப்படி வைக்கும்போது
    பெயருக்கு உடைய (சுக்கிரன் - ஆறு ) அந்த கிரகம் ராசி கட்டத்தில் 6,8 அல்லது நவாம்சத்தில் நீசமாக இருந்தாலும் பரவாயில்லையா?.அந்த எண்ணில் பெயர் வைக்கலாமா.
    பாபு//////

    வைக்கலாம்! வைக்கலாம்! வைக்கலாம்!

    ReplyDelete
  19. Everything is prewritten.
    But nothing can be re written in Life.
    So live the best and rest to GOD.

    Really great sir...

    ReplyDelete
  20. சார்
    குரு உச்சம் பெற்று (கடகம்) மூன்றாம் இடத்தில்(மறைவிடம்) வக்கிரமாக இருந்தால் அதன் பலன்கள் என்ன?
    அந்த திசா புத்தி பலன்கள் எப்படி இருக்கும்?

    நன்றி
    பாபு

    ReplyDelete
  21. //////Iyappan said...
    Everything is prewritten.
    But nothing can be re written in Life.
    So live the best and rest to GOD.
    Really great sir.../////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  22. /////Babu said...
    சார்
    குரு உச்சம் பெற்று (கடகம்) மூன்றாம் இடத்தில்(மறைவிடம்) வக்கிரமாக இருந்தால் அதன் பலன்கள் என்ன?
    அந்த திசா புத்தி பலன்கள் எப்படி இருக்கும்?
    நன்றி
    பாபு /////

    ”கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே; சங்கு சுட்டாலும் வெண்மை தரும்”
    குரு எந்த நிலைமில் இருந்தாலும் நன்மைகளையே செய்வார். வக்கிரம் பெற்றதால் குறைந்த அளவே செய்வார்!

    ReplyDelete
  23. ///////////////
    மின்னஞ்சல் எண்.59
    புரட்சி மணி asked
    6. ஒருவனுக்கு புதன் கன்னியில் இருப்பின் அவன் அங்கே அவன் ஆட்சி, உச்சம், திரிகோணம் இதில் எந்த பலத்தில் உள்ளான் என்பதை எப்படி அறிய முடியும்? இதேபோல் மற்ற கோள்களுக்கும்ஆட்சி, திரிகோணம் கண்டு பிடிப்பது எப்படி?

    இது எல்லாம் அடைப்படைப் பாடம். அடிப்படைப் பாடத்தைப்
    படிக்காமல், நீங்கள் புரட்சி செய்யப் புறப்பட்டால், அது
    அட்டைக் கத்தியுடன் யுத்தத்திற்கு செல்வதற்குச் சமம்.
    முதலில் அடைப்படைப் பாடத்தை எல்லாம் படியுங்கள்.
    புரட்சியைப் பின்னால் வைத்துக்கொள்வோம்:-/////////////////

    இது ரொம்ப அநியாயமா இருக்கே சார்..இப்பிடி பதில் சொன்னா எப்படி சார்..? புரட்சிமணி சார்..அபிடியே ஜூட் வுட்டுக்குங்க..
    ஆட்சி, திரிகோணம் விஷயம் மற்ற விவரங்களுக்கு மூலத்திரிகோண விஷயங்களுக்கு
    http://classroom2007.blogspot.com/2009/11/lessons-on-astrology-moolaththrikonam.html இங்கும்
    சூரியன் - சிம்மம் (ஆட்சி,திரிகோணம்)
    சந்திரன் - ரிஷபம்( உச்சம்,திரிகோணம்)
    செவ்வாய் - மேஷம் ஆட்சி,திரிகோணம்
    புதன் - கன்னி (ஆட்சி, உச்சம், திரிகோணம் )
    குரு - தனுசு (ஆட்சி,திரிகோணம்)
    சுக்கிரன் - துலாம் (ஆட்சி,திரிகோணம்)
    சனி - கும்பம் (ஆட்சி,திரிகோணம்)

    ---------------------
    ராகுவிற்கு - கன்னி
    கேதுவிற்கு - மீனம்
    இதில் எந்த பலத்தில் உள்ளான் என்பதை எப்படி அறிய முடியும்? (இதற்கு ஆசிரியர்தான் பதிலளிக்கவேண்டும்)
    மற்ற ஆட்சி,உச்ச விஷயங்களுக்கு
    http://classroom2007.blogspot.com/2008_09_07_archive.html இங்கும் பாருங்கள்..

    ReplyDelete
  24. /////////////////
    மின்னஞ்சல் எண்.59
    புரட்சி மணி
    3.ஜகன்னாத ஹோரா மற்றும் நமது வகுப்பு மாணவர் திரு. தியாகராஜன்(என்று நினைக்கின்றேன்) இவர்களுடைய மென்பொருளில் திசையில் ஐந்து முதல் எட்டு மாதங்கள் வித்தியாசம் வருகின்றதே ஐயா? தவறு என்னுடையதா அல்லது அவர்களின் மென்போருளிலா?
    தவறு உங்களுடையதுதான். எதற்காக இரண்டு மென்பொருட்களை உபயோகிக்கிறீர்கள்? சாஷ்டாங்கமாக தரையில் விழுந்து கம்ப்யூட்டரை வணங்கிவிட்டு, ஏதாவது ஒரு மென்பொருளை மட்டும் உபயோகியுங்கள்./////////////////

    நானும் இந்த இரண்டும்தான் உபயோகிக்கிறேன்..தவறு உங்களுடையதுதான். எங்கு தவறு என்பதுதான் புரியவில்லை..எனக்கு நான்கு நாட்கள் மட்டுமே தசாபுத்தி வித்தியாசம் வருகிறது..
    கரூர் ஜெயராமனின் சாப்ட்வேர்லே basic settings / preferences லே 365 .25 days / year என்று மாற்றிடுங்கள்..லஹிரி சித்ரபக்ஷ அயனாம்ச என்று மாற்றிடுங்கள்..
    kuligathi group calculation : ascendant @period start
    bhavbaala method : nature of mercury என்று மாற்றிடுங்கள்..
    கரூர் ஜெயராமனின் சாப்ட்வேர்லே தசா கணக்கு இருப்பு என்று போடப்பட்டிருக்கும்..அதாவது தசையில் கழிந்த காலம் போக இருப்பு என்று பொருள்..
    JH லே தசா full cycle கொடுக்கப்பட்டிருக்கும்..இதில் குறிப்பிட்ட மகாதசை என்று தொடங்குகிறது என்று பார்த்து அதனில் இருந்து நீங்கள் பிறந்த நாள் வரையில் கழிந்துவிட்ட காலத்தை கணக்குப்பண்ணி அந்த தசையின் மொத்த கால அளவில் கழித்தபின் வரும் கால அளவு தான் அந்த தசையில் இருப்பு.
    இந்த காலம் கரூர் ஜெயராமனின் சாப்ட்வேர்லே தசா கணக்கு இருப்பு என்று போடப்பட்டிருக்கும்
    கால அளவுடன் ஒத்துப்போகிறதா என்று கவனியுங்கள்..எனக்கு 4 நாட்கள்தான் வித்தியாசம்..மேலும் பிரச்சினைகள் இருந்தால் DOB விவரத்தை minorwall @gmail .com க்கு அனுப்பவும்..

    ஆசிரியரின் அரிய நேரத்தைக் கணக்கில் கொண்டு மாணவன் எழுதுகிறேன்..

    ReplyDelete
  25. minorwall said...
    ///////////////
    மின்னஞ்சல் எண்.59
    புரட்சி மணி asked
    6. ஒருவனுக்கு புதன் கன்னியில் இருப்பின் அவன் அங்கே அவன் ஆட்சி, உச்சம், திரிகோணம் இதில் எந்த பலத்தில் உள்ளான் என்பதை எப்படி அறிய முடியும்? இதேபோல் மற்ற கோள்களுக்கும்ஆட்சி, திரிகோணம் கண்டு பிடிப்பது எப்படி?
    இது எல்லாம் அடைப்படைப் பாடம். அடிப்படைப் பாடத்தைப்
    படிக்காமல், நீங்கள் புரட்சி செய்யப் புறப்பட்டால், அது
    அட்டைக் கத்தியுடன் யுத்தத்திற்கு செல்வதற்குச் சமம்.
    முதலில் அடைப்படைப் பாடத்தை எல்லாம் படியுங்கள்.
    புரட்சியைப் பின்னால் வைத்துக்கொள்வோம்:-/////////////////
    இது ரொம்ப அநியாயமா இருக்கே சார்..இப்பிடி பதில் சொன்னா எப்படி சார்..? புரட்சிமணி சார்..அபிடியே ஜூட் வுட்டுக்குங்க..
    ஆட்சி, திரிகோணம் விஷயம் மற்ற விவரங்களுக்கு மூலத்திரிகோண விஷயங்களுக்கு
    http://classroom2007.blogspot.com/2009/11/lessons-on-astrology-moolaththrikonam.html இங்கும்
    சூரியன் - சிம்மம் (ஆட்சி,திரிகோணம்)
    சந்திரன் - ரிஷபம்( உச்சம்,திரிகோணம்)
    செவ்வாய் - மேஷம் ஆட்சி,திரிகோணம்
    புதன் - கன்னி (ஆட்சி, உச்சம், திரிகோணம் )
    குரு - தனுசு (ஆட்சி,திரிகோணம்)
    சுக்கிரன் - துலாம் (ஆட்சி,திரிகோணம்)
    சனி - கும்பம் (ஆட்சி,திரிகோணம்)
    ---------------------
    ராகுவிற்கு - கன்னி
    கேதுவிற்கு - மீனம்
    இதில் எந்த பலத்தில் உள்ளான் என்பதை எப்படி அறிய முடியும்? (இதற்கு ஆசிரியர்தான் பதிலளிக்கவேண்டும்)
    மற்ற ஆட்சி,உச்ச விஷயங்களுக்கு
    http://classroom2007.blogspot.com/2008_09_07_archive.html இங்கும் பாருங்கள்../////

    உங்கள் கண்ணில் சம்பந்தப்பட்ட இரண்டு பாடங்கள் பட்டு அதன் சுட்டியைக் கொடுத்துள்ளீர்கள். அவர் அதைச் செய்திருக்க வேண்டாமா? புதிதாக வருகிறவர்கள், முதலில் பழைய பாடங்கள் அனைத்தையும் படிப்பது நல்லது.
    கன்னியில் இருக்கும் புதன் தன் சுயவர்க்கத்தில் எத்தனை பரல்களுடன் இருகிறது என்று பாருங்கள்.

    3ம் அதற்குக் கீழான பரல்களும் இருந்தால் சுமாரான பலன்கள்
    4 பரல்கள் இருந்தால் சராசரி
    5ம் அதற்கு மேற்பட்ட பரல்களும் இருந்தால் சிறப்பானது.
    8 பரல்களுடன் இருந்தால் சூப்பர் ஸ்டார்

    ReplyDelete
  26. /////minorwall said...
    /////////////////
    மின்னஞ்சல் எண்.59
    புரட்சி மணி
    3.ஜகன்னாத ஹோரா மற்றும் நமது வகுப்பு மாணவர் திரு. தியாகராஜன்(என்று நினைக்கின்றேன்) இவர்களுடைய மென்பொருளில் திசையில் ஐந்து முதல் எட்டு மாதங்கள் வித்தியாசம் வருகின்றதே ஐயா? தவறு என்னுடையதா அல்லது அவர்களின் மென்போருளிலா?
    தவறு உங்களுடையதுதான். எதற்காக இரண்டு மென்பொருட்களை உபயோகிக்கிறீர்கள்? சாஷ்டாங்கமாக தரையில் விழுந்து கம்ப்யூட்டரை வணங்கிவிட்டு, ஏதாவது ஒரு மென்பொருளை மட்டும் உபயோகியுங்கள்./////////////////
    நானும் இந்த இரண்டும்தான் உபயோகிக்கிறேன்..தவறு உங்களுடையதுதான். எங்கு தவறு என்பதுதான் புரியவில்லை..எனக்கு நான்கு நாட்கள் மட்டுமே தசாபுத்தி வித்தியாசம் வருகிறது..
    கரூர் ஜெயராமனின் சாப்ட்வேர்லே basic settings / preferences லே 365 .25 days / year என்று மாற்றிடுங்கள்..லஹிரி சித்ரபக்ஷ அயனாம்ச என்று மாற்றிடுங்கள்..
    kuligathi group calculation : ascendant @period start
    bhavbaala method : nature of mercury என்று மாற்றிடுங்கள்..
    கரூர் ஜெயராமனின் சாப்ட்வேர்லே தசா கணக்கு இருப்பு என்று போடப்பட்டிருக்கும்..அதாவது தசையில் கழிந்த காலம் போக இருப்பு என்று பொருள்..
    JH லே தசா full cycle கொடுக்கப்பட்டிருக்கும்..இதில் குறிப்பிட்ட மகாதசை என்று தொடங்குகிறது என்று பார்த்து அதனில் இருந்து நீங்கள் பிறந்த நாள் வரையில் கழிந்துவிட்ட காலத்தை கணக்குப்பண்ணி அந்த தசையின் மொத்த கால அளவில் கழித்தபின் வரும் கால அளவு தான் அந்த தசையில் இருப்பு.
    இந்த காலம் கரூர் ஜெயராமனின் சாப்ட்வேர்லே தசா கணக்கு இருப்பு என்று போடப்பட்டிருக்கும்
    கால அளவுடன் ஒத்துப்போகிறதா என்று கவனியுங்கள்..எனக்கு 4 நாட்கள்தான் வித்தியாசம்..மேலும் பிரச்சினைகள் இருந்தால் DOB விவரத்தை minorwall @gmail .com க்கு அனுப்பவும்..
    ஆசிரியரின் அரிய நேரத்தைக் கணக்கில் கொண்டு மாணவன் எழுதுகிறேன்..//////

    நூறாண்டு காலம் வாழ்க!
    நோய் நொடியின்றி வாழ்க!

    ReplyDelete
  27. சார்,
    நவரத்தின கற்கள் பற்றிய தங்களின் கருத்தை நானும் ஏற்றக்கொள்கிறேன்.

    ஆனாலும் எனது அனுபவ்ம் பட்றியும் சொல்ல நினைகிறேன்‌

    எனது மகன் படிது முடித்து வேலைக்கு செல்லாமல் மெல் படிப்பிற்கு வெளி நாட்டடிற்கு போயெ தீருவேன் என்ன பிடிவாதமாக இருந்தான்,2 வருட முயற்ச்சி க்கு பின் குரு விற்க்கு உரிய கல் அணீந்த பின் 6 மாதங்களில்
    வெளினாடு செல்லும் வாஇப்பும் வந்த்தது.
    இதற்காக எந்த ஜொதிடரயும் அனுகவில்லை.

    மகன் கும்ப லக்னம் என்பதால் 2,11 குரிய குரு என உத்தெசமாக தான்
    அணீவித்தென்(ஜதகதில் குரு 11 லிருக்கிற்து.)
    இப்பொது குரு திசை தான் நடக்கிற்து,சனி திசை ஆர்ற்ம்பிக்கும் பொதும் போடலாமா?

    ReplyDelete
  28. /////////
    SP.VR. SUBBAIYA said...

    நூறாண்டு காலம் வாழ்க!
    நோய் நொடியின்றி வாழ்க!////

    அப்போ நேற்றைய பாட அடிப்படையில் 100 Yrs / 3 = 33 . 33 Yrs என்று எடுத்துக்கொள்ள வேண்டுமோ?
    எனக்கு mid term இல்
    137 பாய்ண்டுகள்.
    நன்றி for your ஆசிரியர்வாதம்..ச்சே..ஆசீர்வாதம்..

    ReplyDelete
  29. //////////////
    SP.VR. SUBBAIYA said...
    உங்கள் கண்ணில் சம்பந்தப்பட்ட இரண்டு பாடங்கள் பட்டு அதன் சுட்டியைக் கொடுத்துள்ளீர்கள். அவர் அதைச் செய்திருக்க வேண்டாமா? புதிதாக வருகிறவர்கள், முதலில் பழைய பாடங்கள் அனைத்தையும் படிப்பது நல்லது.//////////
    சோதிடம் கற்பதில் அவருக்கு இருக்கும் ஆர்வம் எனக்கு இப்படிச் செய்யச் சொல்லியது..எனக்கும் பாடம் ஞாபகத்தில் இல்லை..திருப்பி பார்க்க ஒரு சந்தர்ப்பம்..
    ஏசுநாதர் சொன்னது மாத்திரம் நினைவில் இருக்கிறது..
    ' தேடுங்கள்..கிடைக்கும் ' (கூகிளில்)

    ReplyDelete
  30. rajanblogs said...
    சார்,
    நவரத்தின கற்கள் பற்றிய தங்களின் கருத்தை நானும் ஏற்று க்கொள்கிறேன்.
    ஆனாலும் எனது அனுபவம் பற்றியும் சொல்ல நினைக்கிறேன்‌
    எனது மகன் படித்து முடித்து வேலைக்கு செல்லாமல் மேல் படிப்பிற்கு வெளி நாட்டிற்குப் போயே தீருவேன் என்று பிடிவாதமாக இருந்தான்,2 வருட முயற்சிக்கு பின் குருவிற்கு உரிய கல் அணிந்த பின் 6 மாதங்களில்
    வெளினாடு செல்லும் வாய்ப்பும் வந்தது. அதற்காக எந்த ஜோதிடரையும் அனுகவில்லை.
    மகன் கும்ப லக்னம் என்பதால் 2,11 குரிய குரு என உத்தேசமாகத்தான் அணிவித்தேன் (ஜாதகதில் குரு 11 லிருக்கிறது.)
    இப்போது குரு திசை தான் நடக்கிறது, சனி திசை ஆரம்பிக்கும் போதும் போடலாமா?//////

    சனி திசைக்கு நீலக்கல் போட வேண்டும்!

    ReplyDelete
  31. minorwall said...
    /////////
    SP.VR. SUBBAIYA said...
    நூறாண்டு காலம் வாழ்க!
    நோய் நொடியின்றி வாழ்க!////
    அப்போ நேற்றைய பாட அடிப்படையில் 100 Yrs / 3 = 33 . 33 Yrs என்று எடுத்துக்கொள்ள வேண்டுமோ?
    எனக்கு mid term இல்
    137 பாய்ண்டுகள்.
    நன்றி for your ஆசிரியர்வாதம்..ச்சே..ஆசீர்வாதம்./////.

    137லால்தான் ஜப்பானில் மஞ்சள் கலர் நங்கைகளுக்கு நடுவே மகிழ்ச்சியோடு இருக்கிறீர்கள் மைனர்:-)))))))

    ReplyDelete
  32. ///minorwall said...
    //////////////
    SP.VR. SUBBAIYA said...
    உங்கள் கண்ணில் சம்பந்தப்பட்ட இரண்டு பாடங்கள் பட்டு அதன் சுட்டியைக் கொடுத்துள்ளீர்கள். அவர் அதைச் செய்திருக்க வேண்டாமா? புதிதாக வருகிறவர்கள், முதலில் பழைய பாடங்கள் அனைத்தையும் படிப்பது நல்லது.//////////
    சோதிடம் கற்பதில் அவருக்கு இருக்கும் ஆர்வம் எனக்கு இப்படிச் செய்யச் சொல்லியது..எனக்கும் பாடம் ஞாபகத்தில் இல்லை..திருப்பி பார்க்க ஒரு சந்தர்ப்பம்..
    ஏசுநாதர் சொன்னது மாத்திரம் நினைவில் இருக்கிறது..
    ' தேடுங்கள்..கிடைக்கும் ' (கூகிளில்)///////

    தேடினால், கூகுளையும் தாண்டி தேடியவை கிடைக்கும்!

    ReplyDelete
  33. ////ஒருவனுக்கு புதன் கன்னியில் இருப்பின் அவன் அங்கே அவன் ஆட்சி, உச்சம், திரிகோணம் இதில் எந்த பலத்தில் உள்ளான் என்பதை எப்படி அறிய முடியும்? இதேபோல் மற்ற கோள்களுக்கும்ஆட்சி, திரிகோணம் கண்டு பிடிப்பது எப்படி?////

    இது போன்ற கேள்விகளை விடை தெரியாமல் கேட்கிறீர்களா அல்லது வாத்தியாருக்கு பதில் தெரிகிறதா என்று சோதித்துப் பார்க்க கேட்கிறீர்களா என்று தெரியவில்லை.
    புதன் கன்னியில் 15 பாகை வரையில் உச்ச பலமும், அடுத்த 5 பகையில் மூலத்திரிகோண பலமும், கடைசி 10 பாகையில் ஆட்சி பலமும் பெறுகிறார். இந்த வகையில் பார்த்தால் கன்னியில் 21 பாகையில் இருந்து 30 பாகை வரை புதன் ஆட்சி மட்டும்தான் பெறுகிறார். இப்போதெல்லாம் யார் இவ்வளவு minuteஆக பார்க்கிறார்கள். கன்னியில் அவர் ஆட்சி உச்சம் என்பதோடு முடித்துக் கொள்கிறார்கள்.

    ReplyDelete
  34. ஆம் ..
    பாடல் ஆசிரியர் பெயர் வருகிறது
    இந்த பாடலின் ஆசிரியர்
    அவ்வையார் . .

    சரி தானே
    வாத்தியார் அய்யா

    ReplyDelete
  35. நமது வகுப்பறையில் பதிவாகும்
    கேள்விகளில் சிறந்த கேள்விக்கு பரிசு தரலாமா . .

    என்ன பரிசு என யோசிக்க . . (ஒரு கேள்வித்தாள். . அல்லது மற்ற கேள்விகளுக்கு பதில் சொல்லும் வாய்ப்பு)

    ReplyDelete
  36. என்னுடைய நலன் கருதி சுட்டி மற்றும் விளக்கம் அளித்த minorwall அவர்களுக்கு என்னுடைய நன்றி.

    Anand அவர்கள் நான் வாத்தியாரை சோதனை செய்வதாக தவறாக நினைத்து விட்டார்.....ஆனந்த் அவர்களே நான் வாத்தியாரை சோதிக்கும் அளவுக்கு வளர வில்லை,அரைகுறை தேடலால் தான் இது நிகழ்ந்தது.

    ஐயாவும் சற்று கோபமாக உள்ளது போல் தெரிகின்றது......அனைத்து பாடத்தையும் படித்து விட்டு தங்களை சந்திக்கிறேன் ஐயா.
    (எனக்கு இன்னைக்கு சந்திரஷ்ட்டமமோ?)
    என்றும் அன்புடன்
    இரா.புரட்சிமணி

    ReplyDelete
  37. Dear Sir,

    If Mercury is in virgo Navamsha, how come we calculates it power, Whether we want to consider it as Exalted or in it own house...please clarify my doubt

    Regards,
    Vinod

    ReplyDelete
  38. .////.எனக்கு 4 நாட்கள்தான் வித்தியாசம்..மேலும் பிரச்சினைகள் இருந்தால் DOB விவரத்தை minorwall @gmail .com க்கு அனுப்பவும்..

    ஆசிரியரின் அரிய நேரத்தைக் கணக்கில் கொண்டு மாணவன் எழுதுகிறேன்..
    Wednesday, September 08, 2010 4:49:00 PM////
    மைன‌ர்வாள் சொன்ன்து மேலேயுள்ள‌து.

    அவ‌ரின் உத‌வும் ப‌ண்பு பாராட்ட‌ப்ப‌ட‌ வேண்டிய‌து.

    ///.எனக்கும் பாடம் ஞாபகத்தில் இல்லை..திருப்பி பார்க்க ஒரு சந்தர்ப்பம்..
    ஏசுநாதர் சொன்னது மாத்திரம் நினைவில் இருக்கிறது..
    ' தேடுங்கள்..கிடைக்கும் ' (கூகிளில்)

    Wednesday, September 08, 2010 6:51:00 Pம்///
    இதுவும் மைன‌ர்வாள் சொன்ன‌து.

    வாத்தியாரின் பாட‌ங்களைத் தமிழில் தேட www.dosai.com; இதுவும் உத‌வும்.

    ReplyDelete
  39. /////ananth said...
    ////ஒருவனுக்கு புதன் கன்னியில் இருப்பின் அவன் அங்கே அவன் ஆட்சி, உச்சம், திரிகோணம் இதில் எந்த பலத்தில் உள்ளான் என்பதை எப்படி அறிய முடியும்? இதேபோல் மற்ற கோள்களுக்கும்ஆட்சி, திரிகோணம் கண்டு பிடிப்பது எப்படி?////
    இது போன்ற கேள்விகளை விடை தெரியாமல் கேட்கிறீர்களா அல்லது வாத்தியாருக்கு பதில் தெரிகிறதா என்று சோதித்துப் பார்க்க கேட்கிறீர்களா என்று தெரியவில்லை.
    புதன் கன்னியில் 15 பாகை வரையில் உச்ச பலமும், அடுத்த 5 பகையில் மூலத்திரிகோண பலமும், கடைசி 10 பாகையில் ஆட்சி பலமும் பெறுகிறார். இந்த வகையில் பார்த்தால் கன்னியில் 21 பாகையில் இருந்து 30 பாகை வரை புதன் ஆட்சி மட்டும்தான் பெறுகிறார். இப்போதெல்லாம் யார் இவ்வளவு minuteஆக பார்க்கிறார்கள். கன்னியில் அவர் ஆட்சி உச்சம் என்பதோடு முடித்துக் கொள்கிறார்கள்.///////

    உண்மைதான். நன்றி ஆனந்த்!

    ReplyDelete
  40. ////iyer said...
    ஆம் ..
    பாடல் ஆசிரியர் பெயர் வருகிறது
    இந்த பாடலின் ஆசிரியர் அவ்வையார் . .
    சரி தானே
    வாத்தியார் அய்யா////////

    ஆமாம் சுவாமி!

    ReplyDelete
  41. ////iyer said...
    நமது வகுப்பறையில் பதிவாகும்
    கேள்விகளில் சிறந்த கேள்விக்கு பரிசு தரலாமா .
    என்ன பரிசு என யோசிக்க . . (ஒரு கேள்வித்தாள். . அல்லது மற்ற கேள்விகளுக்கு பதில் சொல்லும் வாய்ப்பு)////

    என்னை வம்பில் மாட்டிவிடுவதற்கே யோசிக்கிறீர்களே! எழுதுகிறீர்களே!:-))))))

    ReplyDelete
  42. ////R.Puratchimani said...
    என்னுடைய நலன் கருதி சுட்டி மற்றும் விளக்கம் அளித்த minorwall அவர்களுக்கு என்னுடைய நன்றி.
    Anand அவர்கள் நான் வாத்தியாரை சோதனை செய்வதாக தவறாக நினைத்து விட்டார்.....ஆனந்த் அவர்களே நான் வாத்தியாரை சோதிக்கும் அளவுக்கு வளர வில்லை,அரைகுறை தேடலால் தான் இது நிகழ்ந்தது.
    ஐயாவும் சற்று கோபமாக உள்ளது போல் தெரிகின்றது......அனைத்து பாடத்தையும் படித்து விட்டு தங்களை சந்திக்கிறேன் ஐயா.
    (எனக்கு இன்னைக்கு சந்திரஷ்ட்டமமோ?)
    என்றும் அன்புடன்
    இரா.புரட்சிமணி////

    அய்யாவிற்குக் கோபம் வராது. வரும் குணமுடையவர் என்றால் பதிவைத் தொடர்ந்து எழுதிக்கொண்டிருக்க மாட்டார்!

    ReplyDelete
  43. ////krishnar said...
    .////.எனக்கு 4 நாட்கள்தான் வித்தியாசம்..மேலும் பிரச்சினைகள் இருந்தால் DOB விவரத்தை minorwall @gmail .com க்கு அனுப்பவும்..
    ஆசிரியரின் அரிய நேரத்தைக் கணக்கில் கொண்டு மாணவன் எழுதுகிறேன்..
    Wednesday, September 08, 2010 4:49:00 PM////
    மைன‌ர்வாள் சொன்ன்து மேலேயுள்ள‌து.
    அவ‌ரின் உத‌வும் ப‌ண்பு பாராட்ட‌ப்ப‌ட‌ வேண்டிய‌து.
    ///.எனக்கும் பாடம் ஞாபகத்தில் இல்லை..திருப்பி பார்க்க ஒரு சந்தர்ப்பம்..
    ஏசுநாதர் சொன்னது மாத்திரம் நினைவில் இருக்கிறது..
    ' தேடுங்கள்..கிடைக்கும் ' (கூகிளில்)
    இதுவும் மைன‌ர்வாள் சொன்ன‌து.
    வாத்தியாரின் பாட‌ங்களைத் தமிழில் தேட www.dosai.com; இதுவும் உத‌வும்.////

    நல்லது.மேலதிகத்தகவலுக்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  44. /////Vinodh said...
    Dear Sir,
    If Mercury is in virgo Navamsha, how come we calculates it power, Whether we want to consider it as Exalted or in it own house...please clarify my doubt
    Regards,
    Vinod /////

    புதன் கன்னியில் 15 பாகை வரையில் உச்ச பலமும், அடுத்த 5 பகையில் மூலத்திரிகோண பலமும், கடைசி 10 பாகையில் ஆட்சி பலமும் பெறுவார். ஒரு ராசிக்கு 30 பாகைகள் என்பது தெரியுமல்லவா?

    ReplyDelete
  45. SP.VR. SUBBAIYA said...
    /////Vinodh said...
    Dear Sir,
    If Mercury is in virgo Navamsha, how come we calculates it power, Whether we want to consider it as Exalted or in it own house...please clarify my doubt
    Regards,
    Vinod /////

    புதன் கன்னியில் 15 பாகை வரையில் உச்ச பலமும், அடுத்த 5 பகையில் மூலத்திரிகோண பலமும், கடைசி 10 பாகையில் ஆட்சி பலமும் பெறுவார். ஒரு ராசிக்கு 30 பாகைகள் என்பது தெரியுமல்லவா?

    நவாம்சத்தில் கிரகங்களின் இருப்பு டிகிரியை எப்படித் தெரிந்துகொள்வது?
    இது அறிவியல் பூர்வமாக ஒத்துக்கொள்ளமுடியாத ஒரு நவாம்ச அட்டவணை படி நவாம்சம் ராசியின் விரிவாக்கமாக விளக்கப் பட்டிருப்பதால் தெரிந்துகொள்ள முடியாது
    புரியவும் புரியாது..சோதிடத்தின் புரியாத விவரங்களிலே இதனையும் சேர்த்து விட வேண்டியதுதான்..
    இன்னும் சொல்லப் போனால் அந்த ராசிக்கட்டத்தை 9 பிரிவாகப் பிரித்தால் நவாம்சம் வருகிறது என்று கொண்டால் ராசியிலே உச்சமாகியிருக்கும் ஒரு கிரகம் ந்வாம்சத்திலே வேறு வகையாகிப் போவது என்பது குழப்பமான விஷயம்தான்..ஒரு ராசியை (30 டிகிரியை) எத்தனை பகுதிகளாகப் பிரித்தாலும் அது ராசியில் உச்சமென்றால் உச்சம்தானே?இந்த அட்டவணைக் குழப்பங்களின் அடிப்படையில் உருவான நவாம்சத்தில் கிரகங்களின் நிலையைப் பொருத்து பலன் மாறும் என்றால் ராசியில் உச்ச, நீச, ஆட்சி பார்த்து புண்ணியமேயில்லையே?
    இந்த அட்டவணைதான் குழப்பங்களின் மூலம்..

    ReplyDelete
  46. உங்களின் இந்த பதிவு பற்றி வலைச்சரத்தில் எழுதி உள்ளேன். இயலும் போது வாசியுங்கள்.

    http://blogintamil.blogspot.com/2010/09/blog-post_15.html

    ReplyDelete
  47. ////மோகன் குமார் said...
    உங்களின் இந்த பதிவு பற்றி வலைச்சரத்தில் எழுதி உள்ளேன். இயலும் போது வாசியுங்கள்.
    http://blogintamil.blogspot.com/2010/09/blog-post_15.html/////

    பார்த்தேன் நண்பரே! உங்களுடைய பரிந்துரைக்கு நன்றி!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com