மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

13.2.09

அதிர்ஷ்டத்தின் அளவுகோல்!

அதிர்ஷ்டத்தின் அளவுகோல்!

செழிப்பான கிராமம் ஒன்று இருந்தது. அந்தக் கிராமத்தைச் சுற்றிலும் அடர்ந்த காடுகளும், சிறு சிறு குன்றுகளும் நிறைந்து
பார்ப்பதற்கு மிகவும் ரம்மியமாக இருக்கும். பக்கத்தில் காட்டாறு ஒன்றும் ஓடி, அதன் அழகை அதிகப்படுத்திக் கொண்டிருந்தது.

அந்தக் கிராமத்திற்கு வந்திருந்த செல்வந்தர் ஒருவர், அதன் சுற்றுப்புறச் சூழலில் மயங்கி, ஒரு வாரம் தங்கி விட்டார்.

தங்கியிருந்த அவருக்கு, அந்தக் கிராமத்தைச் சேர்ந்த அவருடைய நண்பர் தடபுடலாக விருந்து உபசாரம் செய்து அவரை
மேலும் மகிழ்வித்தார்.

அந்த சின்ன கிராமத்தில் இருந்த சுமார் 200 வீட்டுக்காரர்களுக்கும் அவர் நன்கு பரீட்சயம் ஆகிவிட்டார். அதற்குக் காரணம்
அந்தக் கிராம மக்களுக்காக அவர் ஆரம்பப் பள்ளிக்கூடம் ஒன்றைக் கட்டிக் கொள்வதற்கு வேண்டிய நிதி உதவியைச் செய்வ தாக வாக்களித்ததோடு, அதற்கான பணத்தையும் கொடுத்திருந்தார்,

அவர் தங்கியிருந்த வீட்டிற்கு எதிர் வீட்டில் வெள்ளை நிறக் குதிரை ஒன்று அம்சமாக இருந்தது. வந்த நாள் முதலாகத் தினமும் அதைப் பார்த்து மகிழ்ந்த அந்த செல்வந்தர், தன் நண்பரிடம் மெதுவாகக் கேட்டார்.

"சிவசாமி, அந்தக் குதிரை மிகவும் அம்சமாக இருக்கிறது. விலைக்குக் கிடைக்குமா?"

உடனே சிவசாமி பதில் அளித்தார்.

"அந்த வீட்டுக்காரன் கட்டுப்பெட்டியான ஆசாமி. தரமாட்டான். எங்கள் கிராமத்தில் வேறு வீடுகளிலும் குதிரைகள் உள்ளன.
அவைகள் கிடைக்கும்"

"இல்லை. எனக்கு இதுதான் வேண்டும். கேட்டுப்பார். எவ்வளவு பணம் கேட்டாலும் கொடுப்போம்"

உடனே சிவசாமி, எதிர்விட்டுக் கந்தசாமியைப் போய்ப் பார்த்து விஷயத்தைச் சொல்லிக் குதிரையைக் கேட்டார். நினைத்தபடி அவன் மறுத்துவிட்டான். சந்தையை விலையைப் போல இரண்டு மடங்கு பணம் வாங்கித் தருகிறேன் என்று சொல்லிப் பார்த்தார். அதற்கும் அவன் மசியவில்லை.

திரும்பிவந்து, நடந்ததைத் தன் நண்பரிடம் சொன்னார்.

நண்பருக்கு ஒரு வேகம் வந்து விட்டது. நினைத்ததை முடிக்கும் சுபாவம் மிகுந்தவர் அவர்.

"பத்து மடங்கு பணம் கொடுப்போம்.கேட்டுப்பார்" என்றார்.

அவன் அதற்கும் மசியவில்லை. அவர் சற்று வருத்தத்துடன் கிளம்பிப் போய்விட்டார்.

பத்து மடங்கு பணம் என்பது ஐந்து லட்ச ரூபாய்.

செய்தி, உடனே காட்டுத் தீயைப் போலக் கிராமம் முழுவதும் பரவி விட்டது. விஷயத்தை அறிந்த அதே கிராமத்தைச் சேர்ந்த கந்தசாமியின் உறவினர்கள் இருவர் வந்து, அவனை பார்த்துத் திட்டித் தீர்த்தார்கள். அதோடு தங்கள் கருத்தையும் முத்தாய்ப் பாய்ச் சொன்னார்கள்.

"அட மடச்சாம்பிராணி, ஐந்து லட்சம் என்பது எவ்வளவு பெரிய தொகை? அதை வேண்டாம் என்று சொல்லி விட்டாயே!
நீ அதிர்ஷ்டமில்லாதவன்டா! (யு ஆர் லன்லக்கி!) தேடிவந்த ஸ்ரீதேவியை உணராதவன்டா! "

"ஐந்து லட்சத்தை வேண்டாம் என்று சொன்னதை வைத்து நான் அதிர்ஷ்டமில்லாதவன் என்று நீங்கள் எப்படிச் சொல்லலாம்?
அதைத் தீர்மானிக்க வேண்டியவன் இறைவன். நீங்கள் போய் வாருங்கள்" என்று சொல்லி அவர்களைக் கந்தசாமி அனுப்பி வைத்தான்.

"அடக் கிறுக்கா!" என்று அவனை மனதிற்குள் ஒருமுறை வைது விட்டு அவர்களும் போய்விட்டார்கள்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------
அடுத்த நாள் காலை!

கந்தசாமி வீட்டுக் குதிரையைக் காணவில்லை.

தன் மகனைத் துணைக்கழைத்துக் கொண்டு கிராமம் முழுவதும் கந்தசாமி தேடிப்பார்த்தான். கிடைக்கவில்லை. பேசாமல் வீட்டிற்குத் திரும்பி வந்து விட்டான்.

இந்த செய்தி கிராமம் முழுவதும் பரவி, அனைவரும் தங்களுக்குள் பேசிக் கொண்டார்கள். கந்தசாமியின் குதிரையை யாரோ லவட்டிக்கொண்டு போய்விட்டார்கள். அதாவது திருட்டுப்போயிருக்கலாம் என்று பேசிக்கொண்டார்கள்.

அன்று மாலை, முதல் நாள் வந்த கந்தசாமியின் உறவினர்கள் இருவரும் திரும்பவும் வந்தார்கள்

"அடேய், ஐந்து லட்சம் பணத்தையும் தவற விட்டாய். இப்போது உன்னுடைய குதிரையும் போய் விட்டது. இதற்கு என்ன சொல்லப்போகிறாய்? நேற்று நாங்கள் சொன்ன போது நீ ஒப்புக்கொள்ளவில்லையே? இப்போதாவது ஒப்புக்கொள்கிறாயா - நீ அதிர்ஷ்டமில்லாதவன் என்று?"

புன்னகைத்துவிட்டுக் கந்தசாமி அவர்களுக்குப் பதில் சொன்னான்:

"குதிரை இப்போது இங்கே இல்லை. அது மட்டுமே உண்மை. அதை மட்டும் வைத்து நீங்கள் என்னைக் குறை சொல்லாதீர்கள் மேலும் துரதிர்ஷ்டசாலி என்று சொல்லாதீர்கள்.அதைத் தீர்மானிக்க வேண்டியவன் இறைவன். நீங்கள் போய் வாருங்கள்"

அவர்கள் போய்விட்டார்கள்
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------
என்ன ஆச்சரியம். அதற்கு அடுத்த நாள் காலையில் கந்தசாமியின் குதிரை திரும்பி வந்து விட்டது. வந்த குதிரை சும்மா வரவில்லை. காட்டுக்குள்ளிருந்து மேலும் பத்துக் குதிரைகளைத் தன்னுடன் ஈர்த்துக் கொண்டு வந்து விட்டது. கந்தசாமி, தன் குதிரையுடன் அந்தப் பத்துக் குதிரைகளையும் சேர்த்துத் தன் தோட்டத்தில் கட்டி வைத்தான்.

ஒட்டு மொத்த கிராமமும் இந்த நிகழ்ச்சியைச் சிலாகித்துப் பேசியது.

கந்தசாமியின் உறவினர்கள் இருவரும் மீண்டும் வந்தார்கள்.

"அப்பனே எங்களை மன்னித்துவிடு. நாங்கள் சொன்னதை வாபஸ் வாங்கிக் கொள்கிறோம். நீ அதிர்ஷ்டசாலியடா!" என்று மகிழ்ந்து பாராட்டினார்கள்

கந்தசாமி அதற்கும் பொறுமையாகப் பதில் சொன்னான்.

"என் குதிரை திரும்பி வந்து விட்டது. வரும்போது பத்துக் குதிரைகளையும் கூட்டிக் கொண்டு வந்துள்ளது. அதுதான் உண்மை.
வந்த அந்த பத்துக் குதிரைகளால் என்ன நேரப்போகிறது என்பதை நாம் தீர்மானிக்க முடியாது. அதை வைத்து என்னை அதிர்ஷ்டசாலி என்று சொல்லாதீர்கள். அதைத் தீர்மானிக்க வேண்டியவன் இறைவன்"

"அட லூசுப் பயலே!" என்று மனதிற்குள் ஒருமுறை அவனை வைது விட்டு அவர்களும் போய்விட்டார்கள்.
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஒரு வாரம் சென்றது.

கந்தசாமியின் ஒரே மகனும், பதினெட்டு வயது நிரம்பிய இளைஞனுமான முருகானந்தன், வந்த குதிரைகளில் ஒன்றில் ஏறிப்
பயிற்சியை மேற்கொள்ள முயன்றபோது, அந்தக் குதிரை, முரட்டுத்தனமான அவனைக் கீழே தள்ளியதில், வலது காலில் அடிபட்டு விட்டது.

கணுக்கால் எலும்பு முறிந்து விட்டது. அருகில் இருந்த நகரத்தில் இருந்து, நுட வைத்தியர் ஒருவரை அழைத்து வந்தான் கந்தசாமி. வந்தவரும் அவனுடைய மகனுக்குச் சிகைச்சையை மேற்கொண்டார்.

விஷயத்தைக் கேள்விப்பட்ட, அவனுடைய உறவினர்கள் இருவரும் மீண்டும் கந்தசாமியை வந்து பார்த்தார்கள். அடிபட்டுப் படுத்திருந்தவனுக்கு ஆறுதல் சொன்னார்கள்.

சற்று நேரம் இருந்துவிட்டுப் போகும்போது மறக்காமல் இப்படிச் சொல்லிவிட்டுப்போனார்கள்.

"நீ அதிர்ஷ்டமில்லாதவன் என்பது மட்டும்தான் இப்போது உண்மை!"

கந்தசாமி லேசாகப் புன்னகைத்தனே தவிர, வேறு ஒன்றும் சொல்லவில்லை!
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
அடுத்த நாள் காலை.

அந்த நாட்டு அரசின் உத்தரவின் பேரில், அந்தக் கிராமத்திற்குத் தன் பரிவாரங்களுடன் வந்த ராணுவத் தளபதி, கட்டாய
ராணுவ சேவை என்ற பெயரில் கிராமத்தில் இருந்த அத்தனை இளைஞர்களையும் அள்ளிக் கொண்டு போய்விட்டார் - கந்தசாமியின் மகனைத்தவிர.

கந்தசாமியின் மகனுக்கு, எலும்பு முறிந்து சிகிச்சை நடப்பதால், அவனை மட்டும் விட்டு விட்டார்கள்.

ஒட்டு மொத்த கிராமமும், தங்கள் குழந்தைகளை வலுக்கட்டாயமாக அனுப்பி வைத்த சோகத்தில் இருந்தது.

அன்றும், கந்தசாமியைப் பார்த்துப் பேசிவிட்டுப்போக வந்த அவனுடைய உறவினர்கள் இருவரும் ஒருமித்த குரலில்
சொன்னார்கள்.

"எது அதிர்ஷ்டம்? அல்லது எது துரதிர்ஷ்டம்? என்பதைத் தீர்மானிக்கும் சக்தி நமக்கு (மனிதனுக்கு) இல்லை. அதுதான் உண்மை. அதை உணர்ந்து வைத்திருக்கும் நீ உண்மையிலேயே அதிர்ஷ்டசாலிதான். உனக்கு ஒரு குறையும் வராது."

(தொடரும்)
வாழ்க வளமுடன்!

66 comments:

  1. Dear Sir

    Attakasamana Kadhai ---- Dhool Kilapooringa sir...

    Good --- Fortune metrics by God..

    Moral Story is nice

    Thank you

    Loving Student
    Arulkumar Rajaraman

    ReplyDelete
  2. தூள் வாத்தியாரே.. தூள்..

    இது போன்ற அனுபவக் கதைகள்தான் என் போன்றவர்களுக்கு மிக, மிக தேவை.

    வாத்தியார் வாழ்க..

    ReplyDelete
  3. very well said....People have to realize that everything is up to God.

    -Shankar

    ReplyDelete
  4. ஐயா எப்படி ஐயா உங்களுக்கு மட்டும் வித்தியாசமான சிந்தனைகள். உங்களை அடிச்சுக்க ஆள் கிடையாது.வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்.

    ReplyDelete
  5. ஐயா,
    வணக்கம்.
    கண்முன் நிகழ்வது மட்டுமே உண்மை என்கிற தத்துவத்தின் அடிப்படையில் சொல்லப்படுகிற கதையினை
    தாங்கள் தமது அபாரமான கதை சொல்லும் திறத்தின் மூலம் மெருகேற்றியிருக்கிறீர்கள்.

    அந்தரங்கம் எல்லாம் அந்த ரங்கன் தான் அறிவான் என்கிறார் கந்தசாமி.
    உறவினர்களோ, அப்போதைய சூழ்நிலையை மட்டும் கண்டு கருத்து சொல்லியிருக்கிறார்கள்.
    வென்றது கந்தசாமிதானே!

    ReplyDelete
  6. ஐயா வணக்கம்

    குரு கேது சேர்க்கை பற்றி எழுதுவதற்கான‌ முத்தாய்ப்பா இது

    ReplyDelete
  7. அசத்தலான குட்டி கதை,சுருக்கமா இருந்தாலும் நறுக்குனு இறுந்துச்சு.

    'எல்லாம் அவன் செயல்' 'நடப்பது எல்லாம் நல்லதுக்கு' என்று தெளிவா புரியவச்சிதக்கு நன்றி.

    ReplyDelete
  8. //////Blogger Arulkumar Rajaraman said...
    Dear Sir
    Attakasamana Kadhai ---- Dhool Kilapooringa sir...
    Good --- Fortune metrics by God..
    Moral Story is nice
    Thank you
    Loving Student
    Arulkumar Rajaraman/////

    நன்றி ராஜாராமன்!

    ReplyDelete
  9. ///////Blogger உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
    தூள் வாத்தியாரே.. தூள்..
    இது போன்ற அனுபவக் கதைகள்தான் என் போன்றவர்களுக்கு மிக, மிக தேவை.
    வாத்தியார் வாழ்க..///////

    எழுதியவுடன், பதிவிடும்போது உங்களைத்தான் நினைத்தேன் தமிழரே! கரெக்டாக நான் நினைத்தபடியே ரீயாக்ட் செய்திருக்கிறீர்கள். நன்றி!

    ReplyDelete
  10. //////Blogger hotcat said...
    very well said....People have to realize that everything is up to God.
    -Shankar//////

    உண்மைதான் சங்கர்! நன்றி!

    ReplyDelete
  11. ///////Blogger N.K.S.Anandhan. said...
    ஐயா எப்படி ஐயா உங்களுக்கு மட்டும் வித்தியாசமான சிந்தனைகள். உங்களை அடிச்சுக்க ஆள் கிடையாது.வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்.//////

    உங்கள் பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி ஆனந்தன். எழுதுபவருக்கு சிறப்பாகக் கொடுப்பதற்கு வாசகரின் பாராட்டுக்களைத் தவிர சிறப்பானதொன்று வேறு எதுவும் இல்லை!

    ReplyDelete
  12. /////////Blogger ஸ்ரீதர்கண்ணன் said...
    Super Sir..///////

    நன்றி நண்பரே!

    ReplyDelete
  13. //////////Blogger தியாகராஜன் said...
    ஐயா,
    வணக்கம்.
    கண்முன் நிகழ்வது மட்டுமே உண்மை என்கிற தத்துவத்தின் அடிப்படையில் சொல்லப்படுகிற கதையினை
    தாங்கள் தமது அபாரமான கதை சொல்லும் திறத்தின் மூலம் மெருகேற்றியிருக்கிறீர்கள்.
    அந்தரங்கம் எல்லாம் அந்த ரங்கன் தான் அறிவான் என்கிறார் கந்தசாமி.
    உறவினர்களோ, அப்போதைய சூழ்நிலையை மட்டும் கண்டு கருத்து சொல்லியிருக்கிறார்கள்.
    வென்றது கந்தசாமிதானே!//////////////

    கதையை நன்றாக உள்வாங்கி ரசித்திருக்கிறீர்கள். அதற்குத் தனியானதொரு நன்றி தியாகராஜன்!

    ReplyDelete
  14. ///////Blogger KS said...
    ஐயா வணக்கம்
    குரு கேது சேர்க்கை பற்றி எழுதுவதற்கான‌ முத்தாய்ப்பா இது////////

    ஆமாம் நண்பரே! தொடர்ந்து அது வரும்!

    ReplyDelete
  15. ///////Blogger மதி said...
    அசத்தலான குட்டி கதை,சுருக்கமா இருந்தாலும் நறுக்குனு இறுந்துச்சு.
    'எல்லாம் அவன் செயல்' 'நடப்பது எல்லாம் நல்லதுக்கு' என்று தெளிவா புரியவைத்ததற்கு நன்றி.//////

    நன்றி மதிவாணரே!

    ReplyDelete
  16. /////Blogger YOGANANDAM M said...
    excellant story////

    பாராட்டிற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  17. அய்யா,

    நான் இந்த கதையை முன்பே கேட்டு இருக்கிறேன், இருந்தாலும் தாங்கள் சொன்ன முறையே மீண்டும் ரசிக்க வைத்து.

    Moral of the Story: எல்லன் அவன் செயல் - அவனன்றி ஒரு அணுவும் அசையாது. அவனே செயல், அவனே காரணம், அவனே கேள்வி, அவனே பதில், ஆனால், மனிதன் தான் தான் எல்லன் சாதிப்பது போல் ஒரு மாயையை உருவாக்கி உள்ளன்.

    ஆசை தான் மனிதனின் தூண்டுகோல் - அளவுக்கு அதிகமாக உள்ள ஆசை தான் அவனை துக்கத்தில் ஆழ்த்துகிறது.

    நன்றி,

    ஸ்ரீதர்

    ReplyDelete
  18. அசத்தலான அனுபவ கதை.

    நன்றி ஐயா.

    ReplyDelete
  19. சூப்பர் கதை.

    அன்புடன்
    இராசகோபால்

    ReplyDelete
  20. /////Blogger Sridhar said...
    அய்யா,
    நான் இந்த கதையை முன்பே கேட்டு இருக்கிறேன், இருந்தாலும் தாங்கள் சொன்ன முறையே மீண்டும் ரசிக்க வைத்து.
    Moral of the Story: எல்லாம் அவன் செயல் - அவனன்றி ஒரு அணுவும் அசையாது. அவனே செயல், அவனே காரணம், அவனே கேள்வி, அவனே பதில், ஆனால், மனிதன் தான்தான் எல்லாம் சாதிப்பதைப் போல் ஒரு மாயையை உருவாக்கி உள்ளன். ஆசை தான் மனிதனின் தூண்டுகோல் - அளவுக்கு அதிகமாக உள்ள ஆசை தான் அவனை துக்கத்தில் ஆழ்த்துகிறது.
    நன்றி,
    ஸ்ரீதர்/////

    உங்கள் கருத்துப் பகிர்விற்கு நன்றி ஸ்ரீதர்!

    ReplyDelete
  21. /////Blogger கனிமொழி said...
    அசத்தலான அனுபவ கதை.
    நன்றி ஐயா./////

    நன்றி சகோதரி!

    ReplyDelete
  22. //////Blogger இராசகோபால் said...
    சூப்பர் கதை.
    அன்புடன்
    இராசகோபால்//////

    நன்றி கோபால்

    ReplyDelete
  23. அருமையான கதை.

    குரு கேது சேர்க்கை பற்றிய பாடத்திற்கான கதை புரியும்படி உள்ளது.
    இப்போது எனக்கு குரு தசையில் கேது புத்தி ஆரம்பித்துள்ளது,
    கன்னி லக்ன ஜாதகம், ஐந்தில் குரு 5 பரல்களுடன், நான்கில் கேது .
    அடுத்த 2 1/2 வருடம் எவ்வாறு இருக்கும்.

    உங்கள் மாணவன் .

    ReplyDelete
  24. அய்யா,
    குட்டி சுக்கிரன் கூடி கெடுக்கும் என்பது , எல்லோருக்கும் பொருந்துமா ?
    அசத்த வர்கத்தில் சுக்கிரன் நல்ல பரல்களுடன் இருந்தால் ..??

    ReplyDelete
  25. மதிப்பிற்கு உரிய அய்யா ,
    எல்லா செயல்களையும் இறைவன் ஒரு அர்த்தத்தோடு தான் செய்வான் என்பதை உணர்த்திய அற்புதமான கதை !
    அவனன்றி ஒரு அணுவும் அசையாது !

    ReplyDelete
  26. You have written a story which all of us might have experienced at least once in our life. Ultimately God governs our life for our good.

    ReplyDelete
  27. /////Blogger Geekay said...
    அருமையான கதை.
    குரு கேது சேர்க்கை பற்றிய பாடத்திற்கான கதை புரியும்படி உள்ளது.
    இப்போது எனக்கு குரு தசையில் கேது புத்தி ஆரம்பித்துள்ளது,
    கன்னி லக்ன ஜாதகம், ஐந்தில் குரு 5 பரல்களுடன், நான்கில் கேது .
    அடுத்த 2 1/2 வருடம் எவ்வாறு இருக்கும்.
    உங்கள் மாணவன்/////

    "பாரப்பா வியாழ திசை கேது புத்தி
    பாழாகும் மாதமது பதினொன்றாகும்"

    என்று பழைய ஜோதிட நூல்கள் குரு திசை கேது புத்தியைச் சிறப்பாகச் சொல்லவில்லை. ஜஸ்ட் லைக் தட் என்று பதினோரு மாதங்கள் ஓடிவிடும். அதற்குப் பிறகு வரும் குரு திசை சுக்கிர புத்தி 2ஆண்டு 8 மாத காலங்கள் நன்றாக இருக்கும்

    ReplyDelete
  28. /////Blogger Geekay said...
    அய்யா,
    குட்டி சுக்கிரன் கூடி கெடுக்கும் என்பது , எல்லோருக்கும் பொருந்துமா ?
    அஷ்டகவர்கத்தில் சுக்கிரன் நல்ல பரல்களுடன் இருந்தால்.??////

    எல்லோருக்கும் பொருந்தாது. சுக்கிரன் தன்னுடைய சுயவர்க்கத்தில் 5ம் அதற்கு மேற்கொண்ட பரல்களுடன் இருந்தால் குட்டிச் சுக்கிரன் ஜாதகனைத் தூக்கிப் பிடித்து உயர்த்திவிடுவான். விளக்கம் போதுமா?

    ReplyDelete
  29. ///////Blogger பாஸ்கர் said...
    மதிப்பிற்கு உரிய அய்யா ,
    எல்லா செயல்களையும் இறைவன் ஒரு அர்த்தத்தோடு தான் செய்வான் என்பதை உணர்த்திய அற்புதமான கதை !
    அவனன்றி ஒரு அணுவும் அசையாது! ///////

    நன்றி பாஸ்கர்!

    ReplyDelete
  30. //////Blogger krish said...
    You have written a story which all of us might have experienced at least once in our life. Ultimately God governs our life for our good.///

    நன்றி நண்பரே!

    ReplyDelete
  31. This comment has been removed by the author.

    ReplyDelete
  32. ஹலோ சார்,
    ஆஹா, அற்புதம் போங்க.ரொம்ப அழகா கதையை சொல்லியிருக்கீங்க. எங்க அப்பா சொல்வார் ஆசை இருக்கு தாசில் பண்ண, அதிர்ஷ்டம் இருக்கு கழுத மேய்க்க னு. அத மாதிரி நமக்கு எது கிடைக்கனுமோ அத நிர்ணயம் பண்றதும் அவன் தானே.நல்லாயிருக்கு.

    ReplyDelete
  33. ஐயா,
    கதை மிக அருமை. ஜெகானந்த ஹொராவின் படி அஷ்டவர்க்கம் 2ல் 33 பரல்.
    எனது 2ம் வீட்டில் சரியான பரல் என்ன? எனது குடும்பவாழ்க்கை எப்படி இருக்கும்?
    எனது date of birத் 3/10/1977 அதி காலை 12.30 am 8N34, 81E14 5.30Est

    ReplyDelete
  34. "Each and every move have some reason by God" You explain that in an interesting story it is very nice.
    Thanks for my marriage prediction.I have obliged to invite and get wishes from you...

    ReplyDelete
  35. மிகவும் அருமையாக இருக்கிறது. செயலை செயலாகப் பார்க்கமால் வந்ததின் விளைவு. மிக்க நன்றி ஐயா.

    ReplyDelete
  36. வாத்தியாரையா,

    மாற்றுக்கருத்து சொல்வதற்கு பொறுத்துக்கொள்ள வேண்டும். சும்மா இருப்பதே சுகம் என்று நினைக்கும் ஒருவனின் செயலை கதையின் மூலம் நியாயப்படுத்த முடியாது. எனக்கு கதை பிடிக்கவில்லை. முயற்சி செய்வதே வாழ்க்கை. இந்த கதையின் நாயகன் எனக்கு பெரும் சோம்பேறியாகவும் பேராசைக்காரனுமாகவும், வந்த எந்த வாய்ப்பையும் உபயோகப்படுத்த தெரியாதவனுமாகவே தெரிகிறான். என்னுடைய பார்வை வேறாக இருப்பதற்கு மன்னிக்கவும்.

    ReplyDelete
  37. வாத்தியாரையா,

    நானும் ""அசத்திட்டீங்க", "பின்னிட்டீங்க" என்று பின்னூட்டமிட்டிருக்கலாம். ஆனால் அதை மட்டும் எடுத்து மகிழ்பவர் நீங்கள் அல்ல என்ற நம்பிக்கையில் எழுதப்பதே என்னுடைய முந்திய பின்னூட்டம்.

    ReplyDelete
  38. வாத்தியாரையா,

    நானும் ""அசத்திட்டீங்க", "பின்னிட்டீங்க" என்று பின்னூட்டமிட்டிருக்கலாம். ஆனால் அதை மட்டும் எடுத்து மகிழ்பவர் நீங்கள் அல்ல என்ற நம்பிக்கையில் எழுதப்பதே என்னுடைய முந்திய பின்னூட்டம்.

    ReplyDelete
  39. தாமதத்திற்கு மன்னிக்கவும் அய்யா,

    மின்தடை இங்கு ஆரம்பித்துவிட்டது.
    அதன் எதிரொலிதான் தாமதமான
    பின்னுட்டம். கதை அருமை அய்யா...

    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  40. ////Blogger Namakkal Shibi said..
    நல்ல கதை!////

    நன்றி சிபியாரே!

    ReplyDelete
  41. /////Blogger Sumathi. said...
    ஹலோ சார்,
    ஆஹா, அற்புதம் போங்க.ரொம்ப அழகா கதையை சொல்லியிருக்கீங்க. எங்க அப்பா சொல்வார் ஆசை இருக்கு தாசில் பண்ண, அதிர்ஷ்டம் இருக்கு கழுத மேய்க்கனும்னு. அத மாதிரி நமக்கு எது கிடைக்கனுமோ அத நிர்ணயம் பண்றதும் அவன் தானே.நல்லாயிருக்கு.//////

    உங்கள் எண்ணங்களைச் சொன்னதற்கு நன்றி சகோதரி!

    ReplyDelete
  42. //////Blogger vino, canada said...

    ஐயா,
    கதை மிக அருமை. ஜெகன்னாத ஹோராவின் படி அஷ்டவர்க்கம் 2ல் 33 பரல்.
    எனது 2ம் வீட்டில் சரியான பரல் என்ன? எனது குடும்பவாழ்க்கை எப்படி இருக்கும்?
    எனது date of birத் 3/10/1977 அதி காலை 12.30 am 8N34, 81E14 5.30Est//////

    இரண்டாம் வீட்டில் 30ம் அதற்கு மேற்பட்ட பரல்களும் இருந்தால் நல்லதொரு குடும்ப வாழ்க்கை அமையும். வீண் கவலை எதற்கு/

    ReplyDelete
  43. /////Blogger VA P RAJAGOPAL said...
    "Each and every move have some reason by God" You explain that in an interesting story it is very nice.
    Thanks for my marriage prediction.I have obliged to invite and get wishes from you.../////

    நன்றி ராஜகோபால்!

    ReplyDelete
  44. //////Blogger வெ.இராதாகிருஷ்ணன் said...
    மிகவும் அருமையாக இருக்கிறது. செயலை செயலாகப் பார்க்காமல் வந்ததின் விளைவு. மிக்க நன்றி ஐயா.//////

    நன்றி நண்பரே!

    ReplyDelete
  45. ///////Blogger அமர பாரதி said...
    வாத்தியாரையா,
    மாற்றுக்கருத்து சொல்வதற்கு பொறுத்துக்கொள்ள வேண்டும். சும்மா இருப்பதே சுகம் என்று நினைக்கும் ஒருவனின் செயலை கதையின் மூலம் நியாயப்படுத்த முடியாது. எனக்கு கதை பிடிக்கவில்லை. முயற்சி செய்வதே வாழ்க்கை. இந்த கதையின் நாயகன் எனக்கு பெரும் சோம்பேறியாகவும் பேராசைக்காரனுமாகவும், வந்த எந்த வாய்ப்பையும் உபயோகப்படுத்த தெரியாதவனுமாகவே தெரிகிறான். என்னுடைய பார்வை வேறாக இருப்பதற்கு மன்னிக்கவும்.//////

    உங்கள் கருத்தைச் சொல்லியமைக்கு நன்றி! மாற்றுக் கருத்து இல்லாவிட்டால் 'கிக்' ஏது?

    ReplyDelete
  46. ///////Blogger அமர பாரதி said...
    வாத்தியாரையா,
    நானும் ""அசத்திட்டீங்க", "பின்னிட்டீங்க" என்று பின்னூட்டமிட்டிருக்கலாம். ஆனால் அதை மட்டும் எடுத்து மகிழ்பவர் நீங்கள் அல்ல என்ற நம்பிக்கையில் எழுதப்பதே என்னுடைய முந்திய பின்னூட்டம்.//////

    எனக்குப் போற்றினாலும் ஒன்றுதான். போற்றாவிட்டாலும் ஒன்றுதான். போர்டிங்பாஸ் வாங்கும் வயதை நெருங்கி விட்டேன். அதனால் எதையுமே. "ஊர்வசி, ஊர்வசி, டேக் இட் பாலிஸி" தான். நீங்கள் என்ன சொன்னாலும் சம்மதமே.

    ""அசத்திட்டீங்க", "பின்னிட்டீங்க" என்று பின்னூட்டம் இட்டவர்கள் எல்லாம் தங்கள் இதயத்தில் இருந்து சொன்னார்கள் என்பதை மட்டும் சற்றுப் புரிந்து கொள்ளுங்கள். அந்த வார்த்தைகள் நீங்கள் நினைப்பதைப்போல வெறும் Lip Service அதாவது வாய் வார்த்தைகள் அல்ல! அப்படிச் சொல்வதால் அவர்களுக்கு என்ன கிடைக்கப் போகிறது? அல்லது எனக்குத்தான் என்ன கிடைத்துவிடப்போகிறது?

    அவைகள் எல்லாம் உவகை கொண்ட உள்ளத்தின் வெளிப்பாடு!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

    ReplyDelete
  47. ////Blogger வேலன். said...
    தாமதத்திற்கு மன்னிக்கவும் அய்யா,
    மின்தடை இங்கு ஆரம்பித்துவிட்டது.
    அதன் எதிரொலிதான் தாமதமான
    பின்னுட்டம். கதை அருமை அய்யா...
    வாழ்க வளமுடன்,
    வேலன்.////

    அதனால் என்ன பரவாயில்லை! நீங்கள் எப்போது வந்தாலும் எனக்கு மகிழ்ச்சிதான்!

    ReplyDelete
  48. Vanakkam Sir,

    This is my second time comments to your blogs Sir. Very good lesson from your entire blogs lesson Sir. If the man has a kind of attitude, he can easily pass through his life and even no need to look his astro charts for his fortune or bad timing. This maturity cannot be tought, it permanently comes only by expreincing them Sir. I am also like Kandaswamy Sir. :-) Thank you. To simply say "ஒரு நல்லதில்தான் ஒரு கெட்டது இருக்கும்; ஒரு கெட்டதில்தான் ஒரு நல்லது இருக்கும் = வாழ்கை!"

    உமாசங்கர்:-)ஆ

    ReplyDelete
  49. அவ்வியான் ஆக்கமும் செவ்வியான் கேடும் எண்ணப்படும் என்று திருக்குறளில் வருகிறது என நினைக்கிறேன்.

    பல சமயங்களில் துஷ்டர்கள் அதிர்ஷ்டமாக இருப்பதும், நல்லவர்கள் துன்பப்படுவதும் தங்கள் கிரக அமைப்பாலே என்பதை அனுபவத்தில் அறிந்தவர்கள் உயர்வு தாழ்வில் ஏற்ற இறக்கத்தில் வெற்றி தோல்வியில் நிலைகுலைந்து விடாமல் இருப்பார்கள்.

    நான்தான் ஸ்மார்ட் என்று இறுமார்ந்திருப்பவர்கள் வாழ்விலும் தோல்வி வரும் போது தாங்க முடியாது அவர்களால். இதுதான் உங்கள் கதையில் நான் கற்ற பாடம்.

    அசத்தலோ, மாற்று கருத்தோ அது அவரவர் கண்ணோட்டம்.. கண்டவர் விண்டிலர்.. விண்டவர் கண்டிலர்!

    போர்டிங் பாஸை கிழித்து போட்டு விடுங்கள் :)) நன்றி(அதற்கும் சேர்த்து)

    ReplyDelete
  50. /////Blogger Umashankar (உமாசங்கர்) said...
    Vanakkam Sir,
    This is my second time comments to your blogs Sir. Very good lesson from your entire blogs lesson Sir. If the man has a kind of attitude, he can easily pass through his life and even no need to look his astro charts for his fortune or bad timing. This maturity cannot be tought, it permanently comes only by expreincing them Sir. I am also like Kandaswamy Sir. :-) Thank you. To simply say "ஒரு நல்லதில்தான் ஒரு கெட்டது இருக்கும்; ஒரு கெட்டதில்தான் ஒரு நல்லது இருக்கும் = வாழ்கை!"
    உமாசங்கர்:-)ஆ//////

    உங்கள் கருத்துப்பகிர்விற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  51. ///////Blogger தமாம் பாலா (dammam bala) said...
    அவ்வியான் ஆக்கமும் செவ்வியான் கேடும் எண்ணப்படும் என்று திருக்குறளில் வருகிறது என நினைக்கிறேன்.
    பல சமயங்களில் துஷ்டர்கள் அதிர்ஷ்டமாக இருப்பதும், நல்லவர்கள் துன்பப்படுவதும் தங்கள் கிரக அமைப்பாலே என்பதை அனுபவத்தில் அறிந்தவர்கள் உயர்வு தாழ்வில் ஏற்ற இறக்கத்தில் வெற்றி தோல்வியில் நிலைகுலைந்து விடாமல் இருப்பார்கள்.
    நான்தான் ஸ்மார்ட் என்று இறுமார்ந்திருப்பவர்கள் வாழ்விலும் தோல்வி வரும் போது தாங்க முடியாது அவர்களால். இதுதான் உங்கள் கதையில் நான் கற்ற பாடம்.
    அசத்தலோ, மாற்று கருத்தோ அது அவரவர் கண்ணோட்டம்.. கண்டவர் விண்டிலர்.. விண்டவர் கண்டிலர்!
    போர்டிங் பாஸை கிழித்து போட்டு விடுங்கள் :)) நன்றி(அதற்கும் சேர்த்து)//////

    உங்கள் கருத்துப்பகிர்விற்கு நன்றி பாலா! போர்டிங் பெறும் வயதாகிவிட்டது என்றுதான் குறிப்பிட்டுள்ளேன். இன்னும் கைக்கு வரவில்லை! வந்தால் கிழித்துப் போடுவதற்கு ஆயுள்காரகன் சனீஷ்வரன் அனுமதிக்கமாட்டானே!:-)))

    ReplyDelete
  52. I think that the Hero name was changed in this story..The real name of Kandhasamy is nothing but Mr.Subbaiah.(Mr.Kavalai Illatha Manithan)

    ReplyDelete
  53. ///வாத்தியாரையா,
    நானும் ""அசத்திட்டீங்க", "பின்னிட்டீங்க" என்று பின்னூட்டமிட்டிருக்கலாம். ஆனால் அதை மட்டும் எடுத்து மகிழ்பவர் நீங்கள் அல்ல என்ற நம்பிக்கையில் எழுதப்பதே என்னுடைய முந்திய பின்னூட்டம்.//////

    எனக்குப் போற்றினாலும் ஒன்றுதான். போற்றாவிட்டாலும் ஒன்றுதான். போர்டிங்பாஸ் வாங்கும் வயதை நெருங்கி விட்டேன். அதனால் எதையுமே. "ஊர்வசி, ஊர்வசி, டேக் இட் பாலிஸி" தான். நீங்கள் என்ன சொன்னாலும் சம்மதமே.

    ""அசத்திட்டீங்க", "பின்னிட்டீங்க" என்று பின்னூட்டம் இட்டவர்கள் எல்லாம் தங்கள் இதயத்தில் இருந்து சொன்னார்கள் என்பதை மட்டும் சற்றுப் புரிந்து கொள்ளுங்கள். அந்த வார்த்தைகள் நீங்கள் நினைப்பதைப்போல வெறும் Lip Service அதாவது வாய் வார்த்தைகள் அல்ல! அப்படிச் சொல்வதால் அவர்களுக்கு என்ன கிடைக்கப் போகிறது? அல்லது எனக்குத்தான் என்ன கிடைத்துவிடப்போகிறது?

    அவைகள் எல்லாம் உவகை கொண்ட உள்ளத்தின் வெளிப்பாடு!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!///
    Whether in Chennai or in Bangalore, every day when I switch on the system, I check your blog first, either for astrology lesson or interesting anectodes. Our comments express our heart felt appreciation of your approach to life and its events.

    ReplyDelete
  54. ஐயா,
    கதை மிக அருமை

    ReplyDelete
  55. இந்த கதையை ஒருமுறை ஆழ்ந்து படித்து பார்த்தேன். பகவத் கீதையின் மைய கருத்தை ஒரு சிறிய கோப்பையில் juice பிழிந்து கொடுத்து விட்டிர்கள்

    ReplyDelete
  56. ம்ம்ம்ம்ம்..
    ஸ்திதப்ப்ரக்ஞன். அருமையான கதை! நன்றி!

    ReplyDelete
  57. ////Blogger Ragu Sivanmalai said...
    I think that the Hero name was changed in this story..The real name of Kandhasamy is nothing but Mr.Subbaiah.(Mr.Kavalai Illatha Manithan)///////

    இல்லை, சிவன் மலையாரே! அது தோற்றப்பிழை! கந்தசாமி என்னைவிட உயர்ந்தவர். அவருடைய மனப் பக்குவம் அசாத்தியமானது!

    ReplyDelete
  58. ////Blogger krish said...
    ///வாத்தியாரையா,
    நானும் ""அசத்திட்டீங்க", "பின்னிட்டீங்க" என்று பின்னூட்டமிட்டிருக்கலாம். ஆனால் அதை மட்டும் எடுத்து மகிழ்பவர் நீங்கள் அல்ல என்ற நம்பிக்கையில் எழுதப்பதே என்னுடைய முந்திய பின்னூட்டம்.//////
    எனக்குப் போற்றினாலும் ஒன்றுதான். போற்றாவிட்டாலும் ஒன்றுதான். போர்டிங்பாஸ் வாங்கும் வயதை நெருங்கி விட்டேன். அதனால் எதையுமே. "ஊர்வசி, ஊர்வசி, டேக் இட் பாலிஸி" தான். நீங்கள் என்ன சொன்னாலும் சம்மதமே.
    ""அசத்திட்டீங்க", "பின்னிட்டீங்க" என்று பின்னூட்டம் இட்டவர்கள் எல்லாம் தங்கள் இதயத்தில் இருந்து சொன்னார்கள் என்பதை மட்டும் சற்றுப் புரிந்து கொள்ளுங்கள். அந்த வார்த்தைகள் நீங்கள் நினைப்பதைப்போல வெறும் Lip Service அதாவது வாய் வார்த்தைகள் அல்ல! அப்படிச் சொல்வதால் அவர்களுக்கு என்ன கிடைக்கப் போகிறது? அல்லது எனக்குத்தான் என்ன கிடைத்துவிடப்போகிறது?
    அவைகள் எல்லாம் உவகை கொண்ட உள்ளத்தின் வெளிப்பாடு!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!///

    Whether in Chennai or in Bangalore, every day when I switch on the system, I check your blog first, either for astrology lesson or interesting anectodes. Our comments express our heart felt appreciation of your approach to life and its events.

    ஆமாம், நண்பரே! வாழ்க்கையில் பல துன்பங்கள், துயரங்களைக் கடந்து வந்ததால், என்னுடைய அணுகுமுறை (approach)
    முற்றிலும் பதப் படுத்தப்பட்டுவிட்டது! (That is fully treated or processed) அதைச் செய்தவன் காலதேவன்! நான் பாராட்டுவதென்றால் அவனைத்தான் பாராட்டவேண்டும்:-))))

    ReplyDelete
  59. /////Blogger dubai saravanan said...
    ஐயா,
    கதை மிக அருமை//////

    நன்றி சரவணன்!

    ReplyDelete
  60. //////Blogger Ragu Sivanmalai said...
    இந்த கதையை ஒருமுறை ஆழ்ந்து படித்து பார்த்தேன். பகவத் கீதையின் மைய கருத்தை ஒரு சிறிய கோப்பையில் juice பிழிந்து கொடுத்து விட்டிர்கள்/////

    நீங்கள் சொன்னபிறகுதான் எனக்கும் பிடிபடுகிறது!

    ReplyDelete
  61. ///Blogger திவா said...
    ம்ம்ம்ம்ம்..
    ஸ்திதப்ப்ரக்ஞன். அருமையான கதை! நன்றி!/////

    நன்றி திவா!

    ReplyDelete
  62. i am new to this blog ...but i studied all ur previous blogs its awesome. i hav so many doubts can i contact thru email?

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com