மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

11.2.09

முழுப் பணமும் முக்கால் கிழவியும்!


முழுப் பணமும் முக்கால் கிழவியும்!

மனிதனுக்கு எது முக்கியம்?

மில்லியன் டாலர் கேள்வி இது!

சரியான பதிலை ஒருவரும் சொல்ல மாட்டார்கள்.

ஒவ்வொருவரிடம் இருந்தும் ஒரு பதில் வரும். ஒருமித்த கருத்து என்பது
இருக்காது

ஏன் இருக்காது?

ஒவ்வொருவரின் புத்தி அளவும், எண்ணங்களும், ஆசாபாசங்களும்,
கண்ணோட்டங்களும் வெவ்வேறானது.

நல்ல பெற்றோர்கள் இருந்தால் வாழ்க்கையின் துவக்கம் நன்றாக இருக்கும்.
துவக்கம் நன்றாக இருந்தால் மற்றதும் நன்றாக இருக்கும் என்பான் ஒருவன்.

நல்ல கல்வி கிடைக்க வேண்டும் என்பான் இன்னொருவன். பிட்ஸ், பிலானியில்
படித்தவனுக்கு எத்தனை வாய்ப்புக்கள் கொட்டிக் கிடக்கின்றன தெரியுமா?
என்பான் இன்னொருவன்.

படிப்பு என்ன சாமி படிப்பு? நல்ல வேலை கிடைக்க வேண்டும் என்பான்
இன்னொருவன். நல்ல நிறுவனத்தில் சேர்ந்துவிட்டால், சேர்ந்த பிறகு உங்கள்
கல்வியின் அடையாளம் எல்லாம் காணாமல் போய்விடும். உங்களை
எல் அண்ட் டி ஊழியர் என்றோ அல்லது இன்ஃபோசிஸில் பணியாற்றுபவர்
என்றோதான் இந்த உலகம் பெருமையாகப் பார்க்கும். நீங்கள் ஐ.ஐ.டி யில்
படித்திருந்தால் என்ன? இல்லை அமிர்தாவில் படித்திருந்தால் என்ன?
எதுவுமே அங்கே சேர்ந்த பிறகு சொல்லப்படுவதில்லை என்பான் இன்னொருவன்.

அழகான பெண் காதலியாகக் கிடைக்க வேண்டும் என்பான் இளைஞன்.
அனுஷ்கா சர்மாவைப்போன்ற அல்லது நயன்தாராவைப் போன்ற பெண்
காதலியாகக் கிடைத்தால் வாழ்க்கை எப்படி இருக்கும் தெரியுமா? என்பான்
அவன்.

அதுவும் இவன் ஓமக்குச்சி நரசிம்மனைப்போல சுமாராக இருந்தாலும்,
கிடைக்கின்ற காதலி இவனை உருகி உருகிக் காதலிக்க வேண்டும் என்பான்.

"எனக்கு மட்டும் சொந்தம் உன் இதழ் சிந்தும் முத்தம்
உனக்கு மட்டும் கேட்கும் என் உயிர் உருகும் சத்தம்"

என்று அவள் அனுதினமும் பாட வேண்டும் என்பான்.

முகேஷ் அம்பானி போன்ற செல்வந்தர் வீட்டில் பிறக்க வேண்டும் என்பான்
இன்னொருவன், வாழ்க்கை முழுவதும் வேலை செய்யாமல் சாப்பிடலாம்.
தண்ணி அடிக்கலாம். பணத்தைக் காட்டிப் பலரைச் சாய்க்கலாம்.

இப்படி ஆளாளுக்கு ஒன்றைச் சொல்லி நம்மைக் குழப்புவார்கள்
--------------------------------------------------------------------------------
சரி, உண்மையில் மனிதனுக்கு முக்கியமாக என்ன வேண்டும்?

புத்தி வேண்டும்!

அதுதான் முக்கியம்!

எந்த நிலையிலும், எந்தச் சுழலிலும் மனிதனைக் காப்பதும், தகுந்தாற்போலச்
செயல்பட வைப்பதும், சந்தோஷமாக இருக்க வைப்பதும் எதுவென்றால்,
சந்தேகமில்லாமல் சர்வ நிச்சயாமகச் சொல்லலாம் - அது புத்தி ஒன்றுதான்!

புத்திக்கு என்ன செய்வது?

நீங்கள் ஒன்றும் செய்ய முடியாது!

அது வாங்கி வந்த வரம்!

ஜாதகப் பலன். ஜாதகத்தில் புதன் நன்றாக இருந்தால் புத்தி நன்றாக இருக்கும்
இல்லையென்றால் இல்லை!

புத்தி என்பது இங்கே knowledge, intelligence and smartnessஐக் குறிக்கும்!

நன்றாக இருப்பது என்பது என்ன?

1. புதன் சொந்த வீட்டில் இருப்பது
2. புதன் உச்சம் பெற்று இருப்பது
3. நட்பு வீடுகளில் இருப்பது.
அத்துடன் லக்கினத்திற்குக் கேந்திர, திரிகோண வீடுகளாகவும் அந்த வீடுகள்
அமைந்து விட்டால் பலன் இரட்டிப்பாகிவிடும். புதன் மிகவும் வலிமை பெற்றவர்
ஆகிவிடுவார்.

சுபக்கிரகங்களுடன் கூட்டாக இருக்கும் புதனும் வலிமையாக இருப்பார்

அஷ்டகவர்கத்தில் புதன் இருக்கும் வீடு, 30 அல்லது அதற்கு மேற்பட்ட பரல்
களுடன் இருந்தால் வலிமை உண்டு. அதேபோல தன்னுடைய சுயவர்க்கத்தில்
5ம் அல்லது அதற்கு மேற்பட்ட பரல்களுடன் இருக்கும் புதனும் வலிமையானவரே!
------------------------------------------------------------------------------------------
அஷ்டகவர்கத்தின் முக்கியத்துவத்தைப் பற்றிப் பலமுறை நான் உங்களுக்கு
வலியுறுத்திச் சொல்லியிருக்கிறேன்.

அதை யாரும் கண்டு கொண்டதாகத் தெரியவில்லை!

எனக்கு எப்படித் தெரியும் என்கிறீர்களா?

உங்களின் பின்னூட்டங்களை வைத்தும், தனிப்பட்ட மின்னஞ்சல்களை வைத்தும்
அது எனக்குத் தெரியும்.

அஷ்டகவர்க்கம் நன்றாகத் தெரிந்தால், நம் ஜாதகத்தின் பலனை, நாமே
பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். யாரையும் கேட்க வேண்டாம்.

30ம் அதற்கு மேற்பட்ட பரல்களையும் கொண்ட வீடுகள் நன்றாக இருக்கும்
நன்றாக இருந்தால்தான் பரல் அப்படி வரும்.

25 முதல் 30 பரல்களைக் கொண்ட வீடுகள் சாராசரியாக இருக்கும்

20 முதல் 25 வரை பரல்களைக் கொண்ட வீடுகள் சுமாரான பலன்களையே
தரும்

20ம் அதற்குக் கீழான பரல்களையும் கொண்ட வீடுகள் மோசமாக இருக்கும்
மோசமான பலன்களே கிடைக்கும்.

அதேபோல ஒரு கிரகம் தன்னுடைய சுய வர்க்கத்தில் 5ம் அல்லது அதற்கு
மேற்பட்ட பரல்களையும் (Maximum 8) கொண்டிருத்தல் நன்மை தரும்

4 பரல்கள் என்பது சராசரி

3 என்பது சுமாரானது

2ம் அதற்குக் கீழாகவும் இருந்தால் பலனில்லை. மோசமானது. வலிமையில்லாது
போய்விடும்

அனைவருக்கும் 337 பரல்கள்தான். அதை மறந்து விடாதீர்கள்.

அதிகமாகப் பரல்கள் கொண்ட வீடுகள் மூன்றோ அல்லது நான்கோ இருந்தால்
ஜாதகன் அதிர்ஷ்டமானவன்.

அதாவது 1, 9, 10, 11 ஆகிய நான்கு வீடுகளிலும் 30 அல்லது அதற்கு மேற்பட்ட
பரல்கள் இருந்தால் ஜாதகன் அதிர்ஷ்டமானவன். அவனுடைய ஜாதகத்தைப்
புரட்டிப் பார்க்க வேண்டாம். அவனுடைய வாழ்க்கை செழிப்பாகவும் மகிழ்ச்சி
கரமாகவும் இருக்கும்.

அதேபோல எல்லா வீடுகளிலேயும் 25 அல்லது அதற்கு மேற்பட்ட பரல்களைக்
கொண்ட ஜாதகனின் வாழ்க்கையும் சிறப்பாக இருக்கும்
--------------------------------------------------------------------------
புதனுடன் கேது சேர்ந்திருந்தால் கிடைக்ககூடிய பலன்:

இன்றையப் பாடம் அதுதான் சுவாமி!

பொதுவாக புதனுடன் சுபக்கிரகங்கள் சேர்ந்திருப்பது நன்மை பயக்கும்.
The native will get positive reults

தீய கிரகங்கள் சேர்ந்தால் நல்லதல்ல!

புதன் புத்திநாதன் என்பதால் ஜாதகனின் புத்தி தீய வழிகளில் நன்றாக
வேலை செய்யும். புதனுடன், சனி அல்லது ராகு அல்லது கேது சேர்ந்தால்
ஜாதகனின் புத்தி கிரிமினல் வேலைகளை நன்றாகச் செய்யும். ஜாதகன்
யாரையும் தந்திரமாக அல்லது நயவஞ்சகமாக அல்லது அசத்தலான
பேச்சால் கவிழ்ப்பதில் சூரனாக இருப்பான்.

எல்லோருமே அப்படியா?

இல்லை!

வீக்காக உள்ள புதனுடன் சேரும் கிரகங்களினால் மட்டுமே ஜாதகன் அப்படி
இருப்பான். வலிமையாக உள்ள புதன் சேரும் தீய கிரகங்களையும் தன்னுடன்
சேர்த்து தன்னுடைய புத்தியை ஆக்க வழியிலேயே செலவழிக்கும். இருந்தாலும்
சேர்கின்ற தீய கிரகத்தால் அவனுடைய செயல்பாடுகள் முழுமையான பலனைத்
தராது.

உதாரணத்திற்கு லக்கினத்தில் புதனும் கேதுவும் இருந்தால் ஜாதகன் மிகவும்
கெட்டிக்காரனாக இருப்பான். highly intellignt ஆக இருப்பான். இருந்தாலும்
அடிக்கடி மனச்சோர்வு ஏற்படும். செயல்களின் வேகம் குறையும். உடல்
உபத்திரவங்களால் (லக்கினம் உடல் சம்பந்தப்பட்ட வீடு) பல செயல்களைக்
கைவிட நேரிடும்.

வீட்டின் பரலும், புதனின் பரலும் அதிகமாக இருந்தால் மேற்கூறிய தொல்லை
இருக்காது
--------------------------------------------------------------------------------
இரண்டாம் வீட்டில் இந்த அமைப்பு இருந்தால் ஜாதகனுக்குக் கல்வியில்,
வித்தைகளில், சாஸ்திரங்களில் மிகுந்த ஈடுபாடு இருக்கும்.

இரண்டாம் வீட்டைப் பார்ப்பதற்கு, இப்படி ஒவ்வொரு கிரகமாக நினைவில்
வைத்துப் பலன் பார்த்து அல்லாடுவதைவிட வேறு ஒரு குறுக்கு வழி
இருக்கிறது.

குறுக்கு வழி என்றால்தான் நமக்குப் பிடிக்குமே!

வாருங்கள் முதலில் அதைப் பார்ப்போம்
------------------------------------------------------------------------------
இரண்டாம் வீட்டை வைத்துத்தான் ஒருவனுடைய நிதி நிலை தெரியவரும்
It is called as house of finance

இரண்டாம் வீட்டில் 25ற்குக் கீழான பரல்கள் இருந்தால் ஜாதகனுக்கு
எப்போது பார்த்தாலும் பணப் பிரச்சினை இருக்கும்.

எவ்வளவு பணம் வந்தாலும் பத்தாது; கையில் தங்காது

அந்த வீட்டிற்கு இன்னொரு பணியும் உண்டு. ஆமாம் அது குடும்ப ஸ்தானம்
அங்கே 25ற்குக் கீழான பரல்கள் இருந்தால் ஜாதகனுக்குக் குடும்ப வாழ்வு
மகிழ்ச்சியாக இருக்காது.

20 அல்லது அதற்குக் குறைவான பரல்கள் இருந்தால் ஜாதகன் குடும்பம்
நடத்த மாட்டான். ஐஷ்வர்யாராயைப் போன்ற அழகான பெண்னைத் திருமணம்
செய்து வைத்தாலும் அவன் குடும்பம் நடத்தமாட்டான். அவளை இங்கே படுக்க
வைத்துவிட்டு அவன் தூர தேசம் ஒன்றிற்குப் பொருள் ஈட்டப் போய்விடுவான்
அல்லது வேலை நிமித்தமாகப் போய்விடுவான்.

பணம் சம்பாதிப்பதற்காக தூர தேசங்களுக்குச் சென்றவர்களில் 90% திரும்பி
வந்ததாகச் சரித்திரம் இல்லை. பணத்தை மட்டுமே பிரதானமாகத் தேடுபவன்
திருப்தியடைந்ததாக வரலாறு இல்லை. ஆகவே பணத்தின் மேலே மட்டும்
குறியாக இருப்பவன் வாழ்க்கையின் மற்ற சந்தோஷங்களை இழந்துவிடுவான்.

எனக்குத் தெரிந்த ஒருவர் திருமணமாகி ஒரு இரண்டுவருட காலம் மட்டுமே
குடும்பம் நடத்தினார். திருமணத்திற்கு அடையாளமாக ஒரு குழந்தை பிறந்தது.
மனைவியும், குழந்தையும் நலமாக வாழ வேண்டும் என்று பொருள் ஈட்டலுக்காக
அரபு தேசத்திற்குச் சென்றார். சென்றவர் சென்றவர்தான். ஆண்டுகள் முப்பது
ஆகிவிட்டன. இன்றுவரை திரும்பவில்லை. என்.ஆர்.ஐக் கணக்கில் இருப்பு
ஏறிக்கொண்டே இருக்கிறது. மனம் மட்டும் Blank ஆகவே இன்னும் இருக்கிறது
இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை தாயகத்திற்கு வருவார். ஒரு பத்து தினங்கள்
மட்டும் இங்கே இருந்துவிட்டு மீண்டும் விமானம் ஏறிப் பறந்து விடுவார். அதாவது
730 நாட்களுக்கு ஒருமுறை 10 தினங்கள் மட்டுமே இங்கே இருப்பார்.

அதைக் குடும்ப வாழ்க்கை என்று எப்படிச் சொல்ல முடியும்?

சரி, ஈட்டிய பொருள் போதும் என்று இப்போதாவது வரலாமே?

வரமாட்டார்! கிரகங்கள் விட்டால்தானே?

அவருடைய ஐஷ்வர்யாவிற்கு மாதவிடாயெல்லாம் நின்று, மெனோபாசெல்லாம்
தாவிக் குதித்துச் சென்று இப்போது அவர் முக்கால் கிழவியாகிவிட்டார்.
அய்யன் திரும்பி வந்தாலும் அம்மணி பயன் படமாட்டார்.

அவருக்குக் கிடைத்தது பணம். போனது மனையாள் சுகம்!

இரண்டில் எது முக்கியம் என்பதை நீங்களே சொல்லுங்கள்!

சிலருடைய இரண்டாம் வீட்டின் அவல நிலைக்கு இது ஒரு சின்ன உதாரணம்.
---------------------------------------------------------------------------------
இதே பரல்களை வைத்து ஒருவருடைய பத்தாம் வீட்டையோ அல்லது ஏழாம்
வீடையோ அலசலாம். அதை எல்லாம் வேறு ஒரு தலைப்பில் தனியாக எழுத
உள்ளேன். அப்போது பார்ப்போம்
---------------------------------------------------------------------------------
புதனும் கேதுவும் சேர்ந்து 3ஆம் வீடு, 9ஆம் வீடு, 10ஆம் வீடு, 11ஆம் வீடு
ஆகிய வீடுகளில் இருந்தால் மட்டுமே சில நற்பயன்கள் கிடைக்கும். மற்ற
வீடுகளில் அவர்களின் சேர்க்கையால் நன்மை இல்லை!

(தொடரும்)



வாழ்க வளமுடன்!

29 comments:

  1. செருப்புக்கு இருக்கும் மரியாதை மனிதனுக்கு இல்லை.நிதர்சனமான
    உண்மை.மனிதன் உணர்ந்தால் சரி.
    எனக்கு கேதுஉடன் சந்திரன் கூட்டணிவைக்கவில்லை. சந்திரன் எதிர் அணியில்(ராகு உடன்) கூட்டணி வைத்துள்ளார்.
    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  2. //மனச் சிக்கல் இல்லாத மனிதன் யார்?

    யாருமில்லை!

    இங்கே எத்தனை பேர் வந்து போகிறீர்கள்?

    ஒருவராவது சொல்லுங்கள், பார்க்கலாம் - "சார், எனக்கு மனச் சிக்கல் எதுவும்
    இல்லை!"

    முடியாது. ஒருவராலும் சொல்ல முடியாது!

    இருந்தால் ஏன் ஜோதிடத்தைப் பாடமாக விரும்பிப் படிக்கப்போகிறீர்கள்?:-))))//

    என்ன பண்ணுவது எங்கள் தலையெழுத்து வேறு என்ன நான் சொல்ல?

    ReplyDelete
  3. aiyo aiyo

    I have moon and ketu in 2nd in vrischika rasi?

    Enakku ponnu yaraavadhu tharuvargala?

    ReplyDelete
  4. you said the positive side of ketu is medition,introspection?

    Some people associate ketu with ghosts,spirits etc

    Can you please elaborate on this?

    Thank you

    Dr.Vinoth

    ReplyDelete
  5. Dear Sir

    Kethu and Moon Combination lesson is good.

    "paravaikalukkum Thuravikalukkum nirandharamana idamillai" like that if man can't be able to control his mind(Manadhu), then he will not find the real happiness.

    Thank you

    Loving Student
    Arulkumar Rajaraman

    ReplyDelete
  6. ///////Blogger வேலன். said...
    செருப்புக்கு இருக்கும் மரியாதை மனிதனுக்கு இல்லை.நிதர்சனமான
    உண்மை.மனிதன் உணர்ந்தால் சரி.
    எனக்கு கேதுஉடன் சந்திரன் கூட்டணிவைக்கவில்லை. சந்திரன் எதிர் அணியில்(ராகு உடன்) கூட்டணி வைத்துள்ளார்.
    வாழ்க வளமுடன்,
    வேலன்.//////

    நன்றி வேலன்!

    ReplyDelete
  7. /////Blogger N.K.S.Anandhan. said...
    //மனச் சிக்கல் இல்லாத மனிதன் யார்?
    யாருமில்லை!
    இங்கே எத்தனை பேர் வந்து போகிறீர்கள்?
    ஒருவராவது சொல்லுங்கள், பார்க்கலாம் - "சார், எனக்கு மனச் சிக்கல் எதுவும்
    இல்லை!"
    முடியாது. ஒருவராலும் சொல்ல முடியாது!
    இருந்தால் ஏன் ஜோதிடத்தைப் பாடமாக விரும்பிப் படிக்கப்போகிறீர்கள்?:-))))//
    என்ன பண்ணுவது எங்கள் தலையெழுத்து வேறு என்ன நான் சொல்ல?///////

    உங்களுக்கு என்று ஏன் பிரித்துச் சொல்கிறீர்கள் ஆனந்தன்? எல்லோருக்கும் தலையெழுத்து உண்டு பதிவை எழுதுகின்ற எனக்கும் சேர்த்து!

    ReplyDelete
  8. ////Blogger Dr.Vinothkumar said.. aiyo aiyo
    I have moon and ketu in 2nd in vrischika rasi?
    Enakku ponnu yaraavadhu tharuvargala?//////

    அதெல்லாம் தருவார்கள். டிஸ்கியை பார்க்கவில்லையா நீங்கள்? சொல்லப்பட்டிருப்பது அனைத்தும் பொது விதிகள். உங்கள் ஜாதகத்தின் அஷ்டகவர்க்கம் மற்றும் சுபக்கிரகங்களின் பார்வை, ஆகியவற்றை வைத்து எல்லாமே மாறக்கூடியனவாகும்.
    அதோடு இதே அமைப்பை உடைய பெண் இல்லாமலா போய்விடுவார்?

    ReplyDelete
  9. /////Blogger Dr.Vinothkumar said...
    you said the positive side of ketu is medition,introspection?
    Some people associate ketu with ghosts,spirits etc
    Can you please elaborate on this?
    Thank you

    Dr.Vinoth/////
    பேய், பிசாசு, பில்லி சூன்யம் ஆகியவற்றில் எனக்கு அனுபவமும் இல்லை அதோடு நம்பிக்கையும் இல்லை டாக்டர்!
    நீங்கள் பாஸிட்டிவ் சைடையே எடுத்துக்கொள்ளுங்கள்!

    ReplyDelete
  10. Blogger Arulkumar Rajaraman said...
    Dear Sir
    Kethu and Moon Combination lesson is good.
    "paravaikalukkum Thuravikalukkum nirandharamana idamillai" like that if man can't be able to control his mind(Manadhu), then he will not find the real happiness.
    Thank you
    Loving Student
    Arulkumar Rajaraman/////

    நன்றி நண்பரே!

    ReplyDelete
  11. ஐயா,
    வணக்கம்
    என் ஜாதகத்தில் சூரியனும், செவ்வாயும் லக்னத்தில் 2ல் அதாவது மகரத்தில் உள்ளது. செவ்வாய் உச்சம், அஸ்தங்கமும் அடைந்துள்ளது. குரு(வ) கடகத்தில் உள்ளது. இதன் பலன் என்ன?

    ReplyDelete
  12. Dear sir,
    I am reading your posting from last 2 months. It is very interesting...I inspired and follow with you. sir one doubt,In my horoscope, kethu 2nd place(kumbam)in rasi chakkara and 3rd place(menam) in bhava chakkra. Which will be take for palan? Is it 2nd or 3rd place kethu?

    ReplyDelete
  13. /////Blogger bhaskar said...
    ஐயா,
    வணக்கம்
    என் ஜாதகத்தில் சூரியனும், செவ்வாயும் லக்னத்தில் 2ல் அதாவது மகரத்தில் உள்ளது. செவ்வாய் உச்சம், அஸ்தங்கமும் அடைந்துள்ளது. குரு(வ) கடகத்தில் உள்ளது. இதன் பலன் என்ன?//////

    இன்றைய பாடத்திற்குச் சம்பந்தம் இல்லாத கேள்வி.

    நீங்கள் தனுசு லக்கினம். லக்கினாதிபதி குரு கடகத்தில் உச்சம் பெற்றுள்ளார். நல்லது. ஆனால் அது லக்கினத்திற்கு எட்டாம் இடம் மறைவிடம். ஆகவே அவர் ஜாதகனுக்கு முழுப்பலனையும் நல்க முடியாது. அவருடைய தசாபுத்தியில் பல நன்மைகளைச் செய்வார்.

    ReplyDelete
  14. Blogger VA P RAJAGOPAL said...

    Dear sir,
    I am reading your posting from last 2 months. It is very interesting...I inspired and follow with you. sir one doubt,In my horoscope, kethu 2nd place(kumbam)in rasi chakkara and 3rd place(menam) in bhava chakkra. Which will be take for palan? Is it 2nd or 3rd place kethu?

    இரண்டாம் இடம் என்று எடுத்துக்கொள்ளவும்! பாவச் சக்கரம் Fine tuning செய்வதற்கு மட்டுமே பயன்படும். கிரக யுத்தம் போன்றவற்றையும் கால சந்திப்பில் உள்ள கிரகங்களைப் பார்க்க அதைப் பயன் படுத்த வேண்டும்!

    ReplyDelete
  15. /////Blogger Geekay said...
    Present Sir,/////

    நன்றி ஜீக்கே!

    ReplyDelete
  16. /////Blogger krish said...
    Thanks for the lesson./////

    நன்றி க்ரீஷ்!

    ReplyDelete
  17. அய்யா,

    கேது+சந்திரன் பாட விளக்கம் புரிந்தது.

    மனிதன் தன் நண்பன் விட்ட பிஞ்ச செருப்பை திரும்ப எடுக்க வராவிட்டால் போலீஸ் கேஸ் ஆகாது (குப்பை தொட்டியில் கூட போடலாம்). அனால், அதுவே, ஒரு பிரேதத்தை யாரும் திரும்ப வாங்க வராவிட்டால், என்ன ஆகும் என நினைக்கவே ஒரு பயத்தை உண்டு பண்ணுகிறது. How to dispose?

    ஆகவே, செருப்பையும் பிரேதத்தையும் ஒப்பிட கூடாது என்பது என் தாழ்மையான கருத்து.

    நன்றி,

    ஸ்ரீதர் S

    ReplyDelete
  18. Sir in my horoscope rishbha lagnam. kethu and moon in 10th house. Your lesson is 100% correct sir.

    ReplyDelete
  19. I am being reading your post for last one year Sir. This is first time I am writing it. Ketu and Moon combination would be 50 % Saint. Yes, Sir. What a true information. And that too after serious trouble and life loses in life. Its true. At my 26.5 yrs old, I exprenced this after tragedic incident in my life. Now I am 27 yrs....:-) Ketu and moon in my 10th house. I am doing the same what its said in your blog. Thank you, Sir. உமசங்கர்:-)ஆ

    ReplyDelete
  20. ////Blogger Sridhar said...
    அய்யா,
    கேது+சந்திரன் பாட விளக்கம் புரிந்தது.
    மனிதன் தன் நண்பன் விட்ட பிஞ்ச செருப்பை திரும்ப எடுக்க வராவிட்டால் போலீஸ் கேஸ் ஆகாது (குப்பை தொட்டியில் கூட போடலாம்). அனால், அதுவே, ஒரு பிரேதத்தை யாரும் திரும்ப வாங்க வராவிட்டால், என்ன ஆகும் என நினைக்கவே ஒரு பயத்தை உண்டு பண்ணுகிறது. How to dispose?
    ஆகவே, செருப்பையும் பிரேதத்தையும் ஒப்பிட கூடாது என்பது என் தாழ்மையான கருத்து.
    நன்றி,
    ஸ்ரீதர் S//////

    கேள்வி அதுவல்ல! விட்டால் உங்கள் நண்பர் சற்று நேரம் அவர் வீட்டில் வைத்துக்கொள்வாரா? அல்லது மாட்டாரா?
    நேரடியாகப் பதில் சொல்லுங்கள்!

    ReplyDelete
  21. //////Blogger sridhar said...
    Sir in my horoscope rishbha lagnam. kethu and moon in 10th house. Your lesson is 100% correct sir./////

    தகவலுக்கு நன்றி!

    ReplyDelete
  22. 1
    //////Blogger Umashankar (உமாசங்கர்) said...
    I am being reading your post for last one year Sir. This is first time I am writing it. Ketu and Moon combination would be 50 % Saint. Yes, Sir. What a true information. And that too after serious trouble and life loses in life. Its true. At my 26.5 yrs old, I exprenced this after tragedic incident in my life. Now I am 27 yrs....:-) Ketu and moon in my 10th house. I am doing the same what its said in your blog. Thank you, Sir!/////

    2
    ///////Blogger Umashankar (உமாசங்கர்) said...
    Sorry, in 9th house./////

    தகவலுக்கும், அடுத்துள்ள திருத்தத்திற்கும் நன்றி நண்பரே!!

    ReplyDelete
  23. Dear Sir,

    Present sir, and back to class

    -Shankar

    ReplyDelete
  24. hello sir,

    ennakku lagnam and rashi - dhanusu, in lagnam moon and ketu is there.

    ur lessons good.

    Yoga

    ReplyDelete
  25. ////Blogger hotcat said...
    Dear Sir,
    Present sir, and back to class
    -Shankar/////

    It is all right Shankar!

    ReplyDelete
  26. ////Blogger YOGANANDAM M said...
    hello sir,
    ennakku lagnam and rashi - dhanusu, in lagnam moon and ketu is there.
    ur lessons good.
    Yoga////

    நன்றி நண்பரே!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com