மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

29.5.08

Astrology: அடுத்த சூத்திரம்!

**************************************************************
Astrology: அடுத்த சூத்திரம்!

வாழ்க்கை ஒரு பயணம். எல்லாப் பயனத்திற்கும் ஒரு ஆரம்பமும்,
முடிவும் இருப்பதுபோல வாழ்க்கைப் பயணத்திற்கும் அது உண்டு!

ஜாதகம் என்பது நமக்குக் கொடுக்கப்பட்ட வாகனம். தசா, புக்தி என்பது
ரோடு. கோச்சாரம் என்பது நமது வாகனத்தின் ஓட்டுனர் (டிரைவர்)

வாகனங்களில் பலவகைகள் உண்டு! பழைய அம்பாசிடர், ஃபியட்டி
லிருந்து இன்றைய சொகுசு வாகனங்களான ஹோண்டா சிட்டி, பென்ஸ்,
ரோல்ஸ் ராய்ஸ் வரை!

வாகனம் (ஜாதகம்) அமைவதெல்லாம் அவரவர்கள் வாங்கிவந்த வரம்!

தேசிய நெடுந்சாலை, நான்கு வழி தங்கரதச் சாலை, மாட்டு வண்டிப்
பாதை, மண் பாதை என்று வாகனம் பயணிக்கும் வழிகளிலும் பலவகை
உண்டு.

வாகன ஓட்டிகளிலும் அப்படித்தான். பொறுப்புடன் ஓட்டுபவரிலிருந்து
கட்டடித்து ஓர்டேக் செய்து பயமுறுத்தி ஓட்டும் ஓட்டுனர்கள் உண்டு!

வாகனம், ரோடு, ஓட்டுனர் மூன்றுமே அருமையாக இருந்தால் பயணம்
சுகமாக இருக்கும்.

அதில் ஏதாவது ஒன்று குறைந்தால், பயணம் சுகப்படாது.

மூன்றுமே சரியில்லை என்றால் பயணம் அவதி நிறைந்ததாக இருக்கும்.
எப்போதடா முடியும் என்றிருக்கும்!

இருபது சதவிகிதம் பேர்களுக்குத்தான் மூன்றுமே சரியாக இருக்கும்.
இருபது சதவிகிதம் பேர்களுக்கு மூன்றுமே மோசமாக இருக்கும். மற்றவர்
களுக்கு ஒன்று மாற்றி ஒன்று வந்து வாழ்க்கைப் பயணம் சராசரியாக இருக்கும்.
--------------------------------------------------------------------------------------------------------
சரி, இதெல்லாம் எதற்குச் சொல்கிறேன்?

வண்டியை விட்டுத் தள்ளுங்கள். நம்மால் ஒன்றும் செய்ய முடியாது. மற்ற
இரண்டையும் பார்ப்போம்!

சென்னை - திருச்சி ஜி.எஸ்.டி நெடுஞ்சாலை, பகல் நேரப் பயணம் என்றால்
பயணம் நன்றாக இருக்கும். அதே பயணம் இரவில் என்றால் சற்று ரிஸ்க்
கானதுதான்.

நல்ல மற்றும் நன்மை பயக்கும் கிரகத்தின் தசாபுக்தி என்பது பகல் நேரப்
பயணம் போன்றது

தீய மற்றும் தீமை பயக்கும் கிரகத்தின் தசாபுக்தி என்பது இரவு நேரப்
பயணம் போன்றது.

சரி அதை எப்படித் தெரிந்து கொள்வது?

அதாவது இப்போது பயணிக்கும் பாதை எப்படி உள்ளது? அதேபோல
அடுத்து வரப்போகும் பாதை எப்படி உள்ளது என்பது போன்ற விவரங்
களை எப்படித் தெரிந்து கொள்வது?

அதற்கு வழியுள்ளது. அதைச் சொல்லித் தருவதற்காகத்தான் இந்தப் பதிவு!
----------------------------------------------------------------------------------------------------------
1ம் இடம், 5ம் இடம், 9ம் இடம் ஆகிய திரிகோண இடங்களிலும்,
4, 7, 10, மற்றும் 11ம் இடங்களில் இருக்கும் நாதர்களின் (கிரகங்களின்)
திசைகள் நன்றாக இருக்கும்

6, 8, மற்றும் 12ம் இடங்களில் இருக்கும் நாதர்களின் (கிரகங்களின்) திசைகள்
பயனுள்ளதாக இருக்காது. படுத்தி எடுக்கும்

திசா நாதனும், அந்த திசையில் வரும் புத்தி நாதனும் சேர்ந்துதான் பலனைத்
தருவார்கள். அதிலும் புத்தி நாதனின் கை ஓங்கி நிற்கும்.

குரு திசையில் சனி புக்தி என்றால், சனியின் கைதான் ஓங்கி நிற்கும்.
ராகு திசை சுக்கிர புக்தி என்றால் சுக்கிரனின் கைதான் வலுத்து நிற்கும்!

சரி, தசா நாதனும் புக்தி நாதனும் ஒரே இடத்தில் இருந்தால், அதில்
(இருவரில்) யார் Combust - அஸ்தமனம் ஆகாமல் - அதில் ஐந்து டிகிரிக்குள்
அடிபட்டுப்போகாமல் இருக்கிறார்களோ அவருடைய கைதான் ஓங்கி நிற்கும்

இருவரும் ஜாதகருக்கு நன்மை பயக்கும் கிரகங்கள் என்றால் அந்த புக்தி
முடிவதற்குள் போட்டி போட்டுக் கொண்டு நன்மைகளை வாரி வழங்கி
விடுவார்கள். உதாரணத்திற்கு, சிம்ம லக்கின ஜாதகம் - பதினொன்றாம்
இடத்தின் அதிபதி புதனின் மகா திசை - லக்கின அதிபதி சூரியனின் புக்தி
நடைபெற்று அதாவது புதன் திசையில் சூரிய புக்தி என்றால் - அவர்கள்
இருவரும் சேர்ந்து ஒரே இடத்தில் அதாவது ஏழில் கும்பத்தில் இருந்து
லக்கினத்தைப் பார்த்தால் - அந்த திசா புக்தி முடிவதற்குள் ஜாதகனுக்குப்
பெரும் புகழையும், விருதுகளையும் வாங்கிக் கொடுத்து விடுவார்கள்.

இதுவே பத்தாம் இட அதிபதியுடன் சேர்க்கை என்றால் தொழிலில் அசுர
வளர்ச்சியை ஏற்படுத்திக் கொடுத்து விடுவார்கள்.

இதே காம்பினேசனில் 6 அல்லது 12ம் இடத்து அதிபதி என்றால்
விளைவுகள் மோசமாக இருக்கும்

இப்படிப் பக்கம் பக்கமாக எழுதிக்கொண்டே போகலாம்
-----------------------------------------------------------------------------------------------
என்ன தலை சுற்றுகிறதா?

சுருக்கமான வழி இல்லையா?

இருக்கிறது!

இதுதான் சூத்திரம்

தசா நாதனும் புக்தி நாதனும் 6/8 அல்லது 1/12 Positionல் இருக்கக் கூடாது
அவ்வளவுதான்!

Simple. இதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள்

விளக்கம்:
உதாரணத்திற்கு குரு திசை புதன் புக்தி என்றால் குருவிற்கு ஆறாம் வீட்டில்
புதன் இருக்கக்கூடாது. (இருந்தால் புதனுக்கு எட்டாம் வீட்டில் குரு இருப்பார்
- எண்ணிப் பார்த்துக்கொள்ளுங்கள்) அதே போல ஒருவருக்கொருவர்
1/12 Positionல் இருக்கக் கூடாது
----------------------------------------------------------------------------------------------------------------
முன்பு எழுதிய இந்தப் பதிவைப் பாருங்கள். தாசா புக்தியைப் பற்ற்ி விரிவாக
எழுதியிருப்பேன்

இப்போது சூத்திரத்தைக் கொடுத்துள்ளேன். அவ்வளவுதான்

Post dated 2.4.2007

அடுத்த பாடத்தை மூன்று நாட்கள் முன்பாகவே பதிவிட்டு விட்டேன்.
இது திங்கட்கிழமைப் பாடம். திங்கட் கிழமை ஊரில் இருக்க மாட்டேன்
அதனால் முன்பாகவே பாடத்தைக் கொடுத்து விட்டேன்

இதற்கு அடுத்த பாடம் கோச்சாரம் பற்றியது அது 3.6.2008 செவ்வாயன்று!

(தொடரும்)

42 comments:

  1. Dear Sir
    //வாகனம், ரோடு, ஓட்டுனர் மூன்றுமே அருமையாக இருந்தால் பயணம்
    சுகமாக இருக்கும்.//
    Simply super my beloved teacher!

    OK,If the dasa nathan is strong or in own house even if they are in 6, 8, or 12 house then wats the cause during that dasa period? For example: if Moon in 12th house Cancer with venus for simha lagna.
    How that will effect the dasa period?

    Thanks
    Shankar

    ReplyDelete
  2. /////Anonymous said...
    Dear Sir
    //வாகனம், ரோடு, ஓட்டுனர் மூன்றுமே அருமையாக இருந்தால் பயணம்
    சுகமாக இருக்கும்.//
    Simply super my beloved teacher!
    OK,If the dasa nathan is strong or in own house even if they are in 6, 8, or 12 house then wats the cause during that dasa period? For example: if Moon in 12th house Cancer with venus for simha lagna.
    How that will effect the dasa period?
    Thanks
    Shankar/////

    தசா நாதனோ அல்லது புக்தி நாதனோ 12ல் (விரைய ஸ்தானம் - House of Loss) இருந்தால் ஒரே பலன்தான்
    அந்தப் period - waste ஆகி விடும். எந்த நல்ல பலனும் இருக்காது

    ReplyDelete
  3. ஜாதகம்,தசா புத்தி,கோச்சாரம் பற்றி இவ்வளவு எளிமையாய் சொல்லி கொடுத்ததற்கு நன்றி.

    உங்கள் மாணாக்கர்கள் அனைவரும் வரும் தேர்வில்(பின்னூட்டம் இட்டு)

    வருகைப் பதிவேடு (Updated)
    உண்மைத்தமிழன் (சட்டாம்பிள்ளை)* அமரபாரதி* அரவிந்தன்* அறிவன்* எஸ்.சி.எஸ்.சுந்தர்* கடலூர் திவா* கரூர் தியாகராஜன்* கல்கிதாசன்* கனடா சுந்தர்* கிச்சா* கூடுதுறை* கொழும்பு சரவணன்* கோவை விமல்* சங்கர்* சிங்கை கிரி* சிவ்* சென்னை சீனிவாசன்* சென்னை தினேஷ்* சென்னை மணிவேல்* சென்ஷி* டாக்டர் ப்ரூனோ* டாமம் பாலா* துபாய் தமிழ் பிரியன்* நெய்வேலி கார்த்திக்* நெல்லை* பார்த்தா* பெங்களூர் அம்பி* பெங்களூர் கோபால்* பெங்களூர் ஜி.கே* மலேஷியா விக்னேஸ்வரன்* யு.எஸ். அகில் பூங்குன்றன்* யு.எஸ். தங்ஸ்* ராசகோபால்* விஜய்* *சென்னை நானானி* *பெங்களூர் சுமதி* *ரம்யா* *ராஜி* *வல்லிசிம்ஹன்* *ஷைலஜா*

    கலக்கப் போறாங்க சார்.

    ஒரு அன்பு வேண்டுகோள்
    முன்பு செய்வதுபோல்
    பிரபலமான தலைவர்கள்,சாதனையாளர்கள் ஆகியவர்களின் ஜாதகத்தையும்,தசா புத்திகளையும் அவர்கள் பெற்ற வெற்றிகள்,அனுபவித்த கஷ்டங்களை பட்டியலிட்டு விளக்கினால் புது மானாவர்களும் 100கு 100 வாங்கிவிட ஏதுவாகுமே ஐயா.

    ReplyDelete
  4. ////நெல்வேலி கார்த்திக் said...
    ஒரு அன்பு வேண்டுகோள்
    முன்பு செய்வதுபோல்
    பிரபலமான தலைவர்கள்,சாதனையாளர்கள் ஆகியவர்களின் ஜாதகத்தையும்,தசா புத்திகளையும் அவர்கள் பெற்ற வெற்றிகள்,அனுபவித்த கஷ்டங்களை பட்டியலிட்டு விளக்கினால் புது மானாவர்களும் 100கு 100 வாங்கிவிட ஏதுவாகுமே ஐயா./////

    நல்ல யோசனை! செய்வோம் கார்த்திக்!

    ஆமாம் நெல்வேலி எந்த மாவட்டத்தில் உள்ளது?

    ReplyDelete
  5. வாத்தியார் ஐயா. இப்பொழுதெல்லாம் வகுப்பில் போட்டியோ அல்லது பாடங்களோ கொடுக்கப்படுவதில்லையே ஏன்??

    ReplyDelete
  6. /////VIKNESHWARAN said...
    வாத்தியார் ஐயா. இப்பொழுதெல்லாம் வகுப்பில் போட்டியோ அல்லது பாடங்களோ கொடுக்கப்படுவதில்லையே ஏன்??///

    பரீட்சையோ அல்லது வீட்டுப் பாடங்களோ கொடுக்கப்படுவதில்லையே - என்கிறீர்களா?
    கொடுத்தால் போகிறது!

    ReplyDelete
  7. வாத்தியரே,
    நீங்கள் அடிக்கடி வெளியூர் செல்வதால் எங்கள் வகுப்பு பாதிக்கபடுகிறது, அதற்கு பதில் ஒரு மடி கணினியை வைத்துக்கொண்டால் எங்கள் பாடங்கள் MISS ஆகதே

    விமல்

    ReplyDelete
  8. ஜாதகம்,தசா புத்தி,கோச்சாரம் பற்றி இவ்வளவு எளிமையாய் சொல்லி கொடுத்ததற்கு நன்றி.


    தங்கள் அனுமதி வேண்டி இந்த பதிவை வலை சரத்தில் இணைத்துள்ளேன்.

    http://blogintamil.blogspot.com/2008/05/blog-post_29.html

    குரு தட்சிணையாக ஏற்று கொள்வீர்களா? :))

    ReplyDelete
  9. @karthik, என்ன கார்த்திக் திரு நெல்வேலினு தைரியமா சொல்ல வேண்டியது தானே? நம்மூர்காரரா நீங்க? :p

    //நீங்கள் அடிக்கடி வெளியூர் செல்வதால் எங்கள் வகுப்பு பாதிக்கபடுகிறது,//

    விமலுக்கு ஒரு வீட்டு பாடம் குடுங்க சார், அப்ப தான் பேசாம இருப்பார். :))

    ReplyDelete
  10. //தசா நாதனும் புக்தி நாதனும் 6/8 அல்லது 1/12 Positionல் இருக்கக் கூடாது
    அவ்வளவுதான்!
    //

    நல்ல வேளை இந்த சூத்திரம் சொன்னீங்க. இல்லாட்டி பாடம் கஷ்டமா இருக்கு!ணு சொல்லியிருப்பேன். :)

    ReplyDelete
  11. /////கோவை விமல் 5* said..
    வாத்தியரே,
    நீங்கள் அடிக்கடி வெளியூர் செல்வதால் எங்கள் வகுப்பு பாதிக்கபடுகிறது, அதற்கு பதில் ஒரு மடி கணினியை வைத்துக்கொண்டால் எங்கள் பாடங்கள் MISS ஆகதே
    விமல்/////

    அது எப்படி மிஸ்சாகும்? போகுமுன்பு பாடத்தைக் கொடுத்துவிட்டுத்தானே போகிறேன் சாமி!

    ReplyDelete
  12. /////////ambi said...
    ஜாதகம்,தசா புத்தி,கோச்சாரம் பற்றி இவ்வளவு எளிமையாய் சொல்லி கொடுத்ததற்கு நன்றி.
    தங்கள் அனுமதி வேண்டி இந்த பதிவை வலை சரத்தில் இணைத்துள்ளேன்.
    http://blogintamil.blogspot.com/2008/05/blog-post_29.html
    குரு தட்சிணையாக ஏற்று கொள்வீர்களா? :))/////

    குரு தட்சிணை - சீட்டிற்கு அடியில் குண்டூசி வைக்காமல் இருந்தல் போதும்!

    ReplyDelete
  13. ///////ambi said...
    @karthik, என்ன கார்த்திக் திரு நெல்வேலினு தைரியமா சொல்ல வேண்டியது தானே? நம்மூர்காரரா நீங்க?
    //நீங்கள் அடிக்கடி வெளியூர் செல்வதால் எங்கள் வகுப்பு பாதிக்கபடுகிறது,//
    விமலுக்கு ஒரு வீட்டு பாடம் குடுங்க சார், அப்ப தான் பேசாம இருப்பார். :))///

    செய்து விடுவோம்!

    ReplyDelete
  14. ////////ambi said...
    //தசா நாதனும் புக்தி நாதனும் 6/8 அல்லது 1/12 Positionல் இருக்கக் கூடாது
    அவ்வளவுதான்!
    //
    நல்ல வேளை இந்த சூத்திரம் சொன்னீங்க. இல்லாட்டி பாடம் கஷ்டமா இருக்கு!ணு சொல்லியிருப்பேன். :)///

    எனக்குத் தெரியாதா என்ன? கொஞ்சம் ஆர்வம் இருந்தால் போதும். கஷ்டங்கள் ஏற்படாது!

    ReplyDelete
  15. உங்கள் கவனத்துக்கு
    http://surveysan.blogspot.com/2008/05/blog-post_29.html

    ReplyDelete
  16. //குரு தட்சிணை - சீட்டிற்கு அடியில் குண்டூசி வைக்காமல் இருந்தல் போதும்!
    //

    அப்படியெல்லாம் உங்களுக்கு செய்வோமா குருவே? :(

    சட்டாம் பிள்ளைக்கு தான் அந்த டெஸ்டிங்க் எல்லாம். :p

    ReplyDelete
  17. ////நீங்கள் அடிக்கடி வெளியூர் செல்வதால் எங்கள் வகுப்பு பாதிக்கபடுகிறது,//
    விமலுக்கு ஒரு வீட்டு பாடம் குடுங்க சார், அப்ப தான் பேசாம இருப்பார். :))///

    செய்து விடுவோம்!////

    எனக்கு வீட்டில் நேரம் கழிப்பது குறைவுதான், நாள் பொழுதும் ஆஃபீஸ் தான், உறங்க மட்டுமே வீடு செல்கிறேன், இதன் இடைவெளியில் எங்கே வீட்டு பாடம் செய்வது?, வேண்டும் என்றால் ஆஃபீஸ் பாடம் கொடுங்கள்.

    அம்பி நீங்கள் நல்ல அம்பிதான் போங்கள்... நான் வேறு மேசை போகிறேன். உங்கள் அருகில் இருந்தால் இப்படித்தான் சரியான சமையத்தில் மாட்டி விட்டு விடுகிரீர்கள்.

    ஒரு யோசனை சொன்னது குற்றமா? எனக்கு என்று யாரும் SUPPORT இல்லயா?

    ReplyDelete
  18. வாத்தியாரே..

    மிக எளிமை..

    துவக்கப் பள்ளி ஆசிரியர்களைப் போல அளவாகவும், அறிவாகவும் எழுதித் தள்ளுகிறீர்கள்.. இப்போது கூடுதலாக பொறுப்பான முதல்வராகவும் ஆகிவிட்டீர்கள். விடுமுறை என்றவுடன் முன்பே வந்து பதிவையும் போட்டுவிட்டு அதையும் வெளியில் சொல்லிவிட்டீர்கள்..

    வாழ்க..

    ReplyDelete
  19. //////SurveySan said...
    உங்கள் கவனத்துக்கு
    http://surveysan.blogspot.com/2008/05/blog-post_29.html
    Friday, May 30, 2008 11:26:00 AM
    ambi said...
    //குரு தட்சிணை - சீட்டிற்கு அடியில் குண்டூசி வைக்காமல் இருந்தல் போதும்!
    //
    அப்படியெல்லாம் உங்களுக்கு செய்வோமா குருவே? :(
    சட்டாம் பிள்ளைக்கு தான் அந்த டெஸ்டிங்க் எல்லாம். :p/////

    வகுப்பிலேயே பிரச்சினை இல்லாத மாணவர் அவர்தான் சாமி!
    அதனால்தான் அவரைச் சட்டாம்பிள்ளை ஆக்கியிருக்கிறேன்
    அவருக்குக் குண்டூசி வைத்தாலும் அது எனக்கு வைத்தமாதிரித்தான்
    அதை நினைவில் வையுங்கள்!

    ReplyDelete
  20. /////கோவை விமல் 5* said...
    ////நீங்கள் அடிக்கடி வெளியூர் செல்வதால் எங்கள் வகுப்பு பாதிக்கபடுகிறது,//
    விமலுக்கு ஒரு வீட்டு பாடம் குடுங்க சார், அப்ப தான் பேசாம இருப்பார். :))///
    செய்து விடுவோம்!////
    எனக்கு வீட்டில் நேரம் கழிப்பது குறைவுதான், நாள் பொழுதும் ஆஃபீஸ் தான், உறங்க மட்டுமே வீடு செல்கிறேன், இதன் இடைவெளியில் எங்கே வீட்டு பாடம் செய்வது?, வேண்டும் என்றால் ஆஃபீஸ் பாடம் கொடுங்கள்.
    அம்பி நீங்கள் நல்ல அம்பிதான் போங்கள்... நான் வேறு மேசை போகிறேன். உங்கள் அருகில் இருந்தால் இப்படித்தான் சரியான சமையத்தில் மாட்டி விட்டு விடுகிரீர்கள்.
    ஒரு யோசனை சொன்னது குற்றமா? எனக்கு என்று யாரும் SUPPORT இல்லயா?/////

    யோசனை சொல்வது குற்றமில்லை. சப்ஃபோர்ட் தேடிப் பின்வாங்குவதுதான் தவறு!
    அம்பியைப் பகைத்துக் கொள்ளாதீர்கள். மந்த்லி டெஸ்ட்டில் பார்த்து எழுதுவதற்கு உதவியாக இருப்பார்!:-)))

    ReplyDelete
  21. ////////உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
    வாத்தியாரே..
    மிக எளிமை..
    துவக்கப் பள்ளி ஆசிரியர்களைப் போல அளவாகவும், அறிவாகவும் எழுதித் தள்ளுகிறீர்கள்.. இப்போது கூடுதலாக பொறுப்பான முதல்வராகவும் ஆகிவிட்டீர்கள். விடுமுறை என்றவுடன் முன்பே வந்து பதிவையும் போட்டுவிட்டு அதையும் வெளியில் சொல்லிவிட்டீர்கள்..
    வாழ்க..///////

    மாணவர்களின் ஏகோபித்த வாழ்த்துக்களைப் பெறுகின்ற ஒரே வாத்தியார் நானாகத்தான் இருப்ப்பேன் போலிருக்கிறது! எல்லாம் பழநியப்பன் அருள்!:-))))

    ReplyDelete
  22. /////SurveySan said...
    உங்கள் கவனத்துக்கு
    http://surveysan.blogspot.com/2008/05/blog-post_29.html////

    தகவலுக்கு நன்றி அளப்பவரே! (சர்வேசன்)
    பார்த்துவிட்டேன்! பின்னூட்டமும் போட்டுள்ளேன்!

    ReplyDelete
  23. தசாநாதன்,புத்திநாதன் தொடர்புக்கான இந்த 6/8,1/12 சூத்திரம் applicable ஆவது பொதுவாக பகை,ஆயுள்,விரய ஸ்தானங்களாக இருப்பதாலா அல்லது வேறு காரணங்கள் இருக்கிறதா?

    ஒரு யோசனை.
    உங்கள் வகுப்பறை பதிவில் பதிவுகள் தோற்றத்தை(Listing of posts)பழையதை முதலில் என்ற வகைக்கு மாற்றினால்,எல்லாவற்றையும் மொத்தமாகத் தேடும் போது வரிசைப்படி வரும்.
    தற்போது கடைசியாக எழுதியது முதலிலும் முதலில் எழுதியது கடைசியாகவும் இருக்கிறது.
    ஏதாவது செய்ய முடியுமா என்று பாருங்கள்.

    ReplyDelete
  24. //////அறிவன்#11802717200764379909 said...
    தசாநாதன்,புத்திநாதன் தொடர்புக்கான இந்த 6/8,1/12 சூத்திரம் applicable ஆவது பொதுவாக பகை,ஆயுள்,விரய ஸ்தானங்களாக இருப்பதாலா அல்லது வேறு காரணங்கள் இருக்கிறதா?/////

    நீங்கள் நினைக்கின்றபடி பகை, கஷ்டம், விரையம் ஆகிய இடங்கள் என்பதனால்!
    (Eigth house is not only for life span and it is also for difficulties in life)

    //////ஒரு யோசனை.
    உங்கள் வகுப்பறை பதிவில் பதிவுகள் தோற்றத்தை(Listing of posts)பழையதை முதலில் என்ற வகைக்கு மாற்றினால்,எல்லாவற்றையும் மொத்தமாகத் தேடும் போது வரிசைப்படி வரும்.
    தற்போது கடைசியாக எழுதியது முதலிலும் முதலில் எழுதியது கடைசியாகவும் இருக்கிறது.
    ஏதாவது செய்ய முடியுமா என்று பாருங்கள்./////

    கடைசியில் எழுதியது முதலில் வருவதற்கு (labels) என்ன செய்ய வேண்டும் என்று நுட்பம் தெரிந்தவர்கள் சொல்லிக் கொடுத்தால் பரவாயில்லை! செய்து விடுவேன்

    இல்லையெண்றாலும் ஒரு வழி இருக்கிறது

    Astrological Lessons 01 - 10
    Astrological Lessons 11 - 20
    Astrological Lessons 21 - 30
    Astrological Lessons 31 - 40
    Astrological Lessons 41 - 50

    இப்படி மாற்றிவிடலாமா - யோசனை சொல்லுங்கள் நண்பரே!

    ReplyDelete
  25. //அம்பியைப் பகைத்துக் கொள்ளாதீர்கள். மந்த்லி டெஸ்ட்டில் பார்த்து எழுதுவதற்கு உதவியாக இருப்பார்!:-)))//

    பகைத்து கொள்ளவில்லை வாத்தியரே, சிறிது நொந்து கொண்டேன் என் நிலமையை எண்ணி, என்ன இருந்தாலும் அம்பி இல்லாமல் நான் எங்கெ டெஸ்ட் எழுதுவது! என்ன இருந்தாலும் அம்பி என் டெஸ்ட் கால உயிர் தோழன் இல்லயா?

    என்ன நான் சொல்வது சரிதானா அம்பி?

    ReplyDelete
  26. மிக்க மகிழ்ச்சி ஐயா!

    திங்கள்கிழமை பாடம் வெள்ளி வெளியிட்டதால் எனக்கு வார விடுமுறை நாட்களில் பயிற்சி செய்துபார்க்க மிக உபயோகமாக இருக்கும்.

    வாரவாரம் இதைப்போலவே முயலுங்களேன்

    //Astrological Lessons 01 - 10
    Astrological Lessons 11 - 20
    Astrological Lessons 21 - 30
    Astrological Lessons 31 - 40
    Astrological Lessons 41 - 50 //

    நல்ல யோசனைதான்



    நன்றி

    ReplyDelete
  27. இது தொடர்புக்கு

    இது ஒன்றுமில்லை ஐயா ஈமெயிலில் பதில் வருவதற்கு ஆக

    ReplyDelete
  28. வாத்தியார் ஐயா,
    ஜாதகம்,தசா புத்தி,கோச்சாரம் பற்றி எளிமையாய் சொல்லி கொடுத்ததற்கு

    நன்றி.

    GK, Blr

    ReplyDelete
  29. //ஆமாம் நெல்வேலி எந்த மாவட்டத்தில் உள்ளது?//


    வேணுவனத்தில் நெல்லுக்கு வேலியிட்டு
    ஆண்டவனின் நைவேத்யதற்கான (வெயிலில் காய வைத்த)
    நெல்லை மழையிலிருந்து காப்பற்றி அர்ச்சகரை
    ஆட்கொண்ட புண்ணிய பூமி.

    தரணி போற்றும் பரணி பாயும் செழிப்புச் சீமை.

    புரட்சிகவி பாரதியையும்,

    விடுதலை வேங்கை கட்டபொம்னையும்,

    செக்கிழுத்த செம்ம்மல் வ.உ.சி ஐயும்,

    தீரன் வாஞ்சிநாதனையும்,

    ரசிகமணி டி.கே.சியையும்,

    நெல்கட்டும் செவல் பூலிப் பாண்டியனையும் ,
    சரவனா ஸ்டோர்ஸ்,ஹோட்டல் ,
    v.G.p,
    vasanth & co

    போன்ற தொழிலதிபர்களையும்,
    நமது தாய்த் தமிழ்நாட்டுக்கு தந்து அருளிய, ஒருங்கினைந்த நெல்லை மாவட்டத்தின் தலைநகரே
    ( தற்போது தூத்துகுடி,நெல்லை எனப் பிரிக்கப்பட்டது)

    (திரு)நெல்வேலி


    எங்களது மாவட்டத்தை பற்றி
    பதிவதற்கு வாய்ப்பளித்த
    சுப்பையா ஆசானுக்கு நன்றி

    ReplyDelete
  30. /////கோவை விமல் 5* said...
    //அம்பியைப் பகைத்துக் கொள்ளாதீர்கள். மந்த்லி டெஸ்ட்டில் பார்த்து எழுதுவதற்கு உதவியாக இருப்பார்!:-)))//
    பகைத்து கொள்ளவில்லை வாத்தியரே, சிறிது நொந்து கொண்டேன் என் நிலமையை எண்ணி, என்ன இருந்தாலும் அம்பி இல்லாமல் நான் எங்கெ டெஸ்ட் எழுதுவது! என்ன இருந்தாலும் அம்பி என் டெஸ்ட் கால உயிர் தோழன் இல்லயா?
    என்ன நான் சொல்வது சரிதானா அம்பி?/////

    அம்பி என்றில்லை யாரையுமே பகைத்துக் கொள்ளக்கூடாது!

    ReplyDelete
  31. /////கூடுதுறை said...
    மிக்க மகிழ்ச்சி ஐயா!
    திங்கள்கிழமை பாடம் வெள்ளி வெளியிட்டதால் எனக்கு வார விடுமுறை நாட்களில் பயிற்சி செய்துபார்க்க மிக உபயோகமாக இருக்கும்.
    வாரவாரம் இதைப்போலவே முயலுங்களேன்////

    பார்க்கலாம் நண்பரே!
    ஞாயிற்றுக் கிழமை என்றால் கட்டுரைகளை எழுதித் தட்டச்சு செய்ய வசதி!:-))))

    ReplyDelete
  32. //Astrological Lessons 01 - 10
    Astrological Lessons 11 - 20
    Astrological Lessons 21 - 30
    Astrological Lessons 31 - 40
    Astrological Lessons 41 - 50 //
    நல்ல யோசனைதான் நன்றி///
    மாற்றிக்கொடுத்துள்ளேன். நன்றாக உள்ளதா - பாருங்கள்?

    ReplyDelete
  33. ////கூடுதுறை said...
    இது தொடர்புக்கு
    இது ஒன்றுமில்லை ஐயா ஈமெயிலில் பதில் வருவதற்கு ஆக////

    சரி, பிரச்சினை ஒன்றுமில்லை!

    ReplyDelete
  34. /////Geekay said...
    வாத்தியார் ஐயா,
    ஜாதகம்,தசா புத்தி,கோச்சாரம் பற்றி எளிமையாய் சொல்லி கொடுத்ததற்கு
    நன்றி.
    GK, Blr////

    நீங்கள் வகுப்பிற்குக் காலதாமதமாக வந்துள்ளீர்கள். முதல் பெஞ்ச் மாணவர், இப்படிச் செய்யலாமா?

    ReplyDelete
  35. நெல்வேலி கார்த்திக் said...

    //ஆமாம் நெல்வேலி எந்த மாவட்டத்தில் உள்ளது?//


    வேணுவனத்தில் நெல்லுக்கு வேலியிட்டு
    ஆண்டவனின் நைவேத்யதற்கான (வெயிலில் காய வைத்த)
    நெல்லை மழையிலிருந்து காப்பற்றி அர்ச்சகரை
    ஆட்கொண்ட புண்ணிய பூமி.

    தரணி போற்றும் பரணி பாயும் செழிப்புச் சீமை.

    புரட்சிகவி பாரதியையும்,

    விடுதலை வேங்கை கட்டபொம்னையும்,

    செக்கிழுத்த செம்ம்மல் வ.உ.சி ஐயும்,

    தீரன் வாஞ்சிநாதனையும்,

    ரசிகமணி டி.கே.சியையும்,

    நெல்கட்டும் செவல் பூலிப் பாண்டியனையும் ,
    சரவனா ஸ்டோர்ஸ்,ஹோட்டல் ,
    v.G.p,
    vasanth & co

    போன்ற தொழிலதிபர்களையும்,
    நமது தாய்த் தமிழ்நாட்டுக்கு தந்து அருளிய, ஒருங்கினைந்த நெல்லை மாவட்டத்தின் தலைநகரே
    ( தற்போது தூத்துகுடி,நெல்லை எனப் பிரிக்கப்பட்டது)

    (திரு)நெல்வேலி/////

    திருநெல்வேலி என்பது எவ்வளவு அழகாமன பொருத்தமான பெயர். அதில் திரு'வை வெட்டிவிட்டீர்களே நண்பரே!

    அதனால்தான் நானும் சற்றுக் குழம்பி விட்டேன்.

    நானும் சிறுவயதில் உங்கள் ஊரில் இருந்தவன்தான்

    தெற்குப் புதுத் தெரு, வாகையடி முக்கு, அங்கிருந்து நேராக குறுக்குத்துறை முருகன் கோவில்,
    பாறைகளில் அமர்ந்து கூட்டாஞ்சோறு சாப்பிட்டது - எல்லாம் சீக்கிரம் மறக்கக்கூடியவைகளா?

    திரு' என்பது இறைவன் உறைந்த/உறையும் ஊர்களைக் குறிப்பிட்டுச் சொல்வதாகும்
    திருவிடைமருதூர், திருக்கோலக்கா, திருநெல்லிக்காவல் இப்படிப் பல ஊர்கள் உள்ளன!

    திரு'வை விடாதீர்கள், சேர்த்துக்கொள்ளுங்கள்
    திரு என்றால் செல்வம் என்றும் பொருள்படும்
    செல்வம் சேரட்டும் - உங்கள் வீட்டில், ஊரில்

    ReplyDelete
  36. //////கடைசியில் எழுதியது முதலில் வருவதற்கு (labels) என்ன செய்ய வேண்டும் என்று நுட்பம் தெரிந்தவர்கள் சொல்லிக் கொடுத்தால் பரவாயில்லை! செய்து விடுவேன்

    இல்லையெண்றாலும் ஒரு வழி இருக்கிறது

    Astrological Lessons 01 - 10
    Astrological Lessons 11 - 20
    Astrological Lessons 21 - 30
    Astrological Lessons 31 - 40
    Astrological Lessons 41 - 50

    இப்படி மாற்றிவிடலாமா - யோசனை சொல்லுங்கள் நண்பரே!/////////

    சுப்பையா ஐயா,இது நல்ல யோசனையாகத் தெரியவில்லை.முதலில் சோதிடப் பாடங்கள் என்ற லேபிளை தேர்ந்தெடுத்த போது,எல்லா பாடங்களும் ஒரே நேரத்தில் தேர்ந்து அச்சடிக்கவோ,தரவிறக்கவோ முடிந்தது;இப்போது அது பல முறை செய்யப்பட வேண்டியிருக்கிறது.

    எனக்குத் தோன்றும் யோசனை-சரியான யோசனை-ஆனால் சிறிது சிக்கலானது.

    1.முதலில் சோதிடப் பாடங்கள் அனைத்துக்கும் ஒரே லேபிளே இருக்கலாம்,அது நல்லது,ஒரே நேரத்தில் அனைத்தயும் தேர்வு செய்து படிக்க முடியும்.
    2.பதிவின் டிஸ்ப்ளே செட்டிங்ஸ்'ல் முதலில் எழுதிய பதிவு மேலும்,பின்னர் எழுதும் பதிவு அதற்கடுத்தும் பார்க்கும்படி(Ascending by dates) மாற்ற வேண்டும்.(இது பதிவு எழுதும் நோக்கில் உங்களுக்கு சிரமமேற்படுத்துமா என்பது தெரியவில்லை)
    3.பாடங்கள் மட்டும் ஒரு பதிவில் தனித்து இருந்தால்தான் இந்த வகை யோசனை சரிப்படும் என்று தோன்றுகிறது.இது சிறிது கடினமான விதயம்;நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.

    ReplyDelete
  37. //திரு'வை விடாதீர்கள், சேர்த்துக்கொள்ளுங்கள்
    திரு என்றால் செல்வம் என்றும் பொருள்படும்
    செல்வம் சேரட்டும் - உங்கள் வீட்டில், ஊரில்//
    ஆசிரியரின் ஆசிர்வாதத்துக்கு
    ஆயிரம்கோடி நன்றிகள்
    ஆனையினை மதித்து
    ஆண்டவன் அமர்வினை
    ஆராதித்து வணங்கும்
    -திருநெல்வேலி கார்த்திக்

    ReplyDelete
  38. அல்லது பல்சுவைப் பதிவு முழுமைக்கும்-அதாவது இந்த பதிவில் இருக்கும் எல்லா பதிவுக்கும்(பாடங்களுக்கு லேபிளை மாற்றி ஒரே விதமாக மாற்றிய பின்),dates by ascending settings செய்யப்படவேண்டும்.
    :-)

    ReplyDelete
  39. சரியாக சொல்ல வேண்டுமென்றால்,நீங்கள் பாடங்களுக்கு 1-10 என்று additional label தான் போட்டிருக்கிறீர்கள்,முதலில் போட்ட பாடங்கள் லேபிள் அப்படியே தானிருக்கிறது.
    எனவே display settings மட்டும் மாற்றினால் சரியாகி விடும் என்று நினைக்கிறேன்.
    1-10 வேண்டுபவர்கள் அப்படி தேர்ந்தெடுக்கலாம்,மொத்தம் வேண்டுபவர்கள் பாடங்கள் லேபிளை தேர்ந்தெடுக்கலாம்...

    இந்த விதயத்தைக் கிளப்பி ஏற்பட்ட சிரமங்களுக்கு வருந்துகிறேன்.

    ReplyDelete
  40. \\\/Astrological Lessons 01 - 10
    Astrological Lessons 11 - 20
    Astrological Lessons 21 - 30
    Astrological Lessons 31 - 40
    Astrological Lessons 41 - 50 //
    நல்ல யோசனைதான் நன்றி///
    மாற்றிக்கொடுத்துள்ளேன். நன்றாக உள்ளதா - பாருங்கள்? \\\\

    தாங்கள் மேலே உள்ளபடிதான் கொடுத்துள்ளீர்கள் ஐயா.

    ஆனால் பதிவை திறந்தால் முதலில் 10 லிருந்து 9, 8 7....1 வரிசைப்படிதான் வருகிறது...

    அதனால் சற்று சிரமம்தான் டெக்னிகல் தெரிந்தவர்கள் உதவினால் நல்லது... ஒரு வேண்டுகொள் விடுத்து பாருங்கேளேன்

    நன்றி

    ReplyDelete
  41. ///நீங்கள் வகுப்பிற்குக் காலதாமதமாக வந்துள்ளீர்கள். முதல் பெஞ்ச் மாணவர், இப்படிச் செய்யலாமா?///

    நீங்கள் இந்த முறை இரண்டு நாள் முன்பே பதிவிட்டு உள்ளீர்கள் .
    அதனால் சிறிது தாமதமாகி விட்டது.

    ReplyDelete
  42. Sir, You have told that 1st, 5th & 9th place owners + 4th,7th,10th &11th place owners periods (Dasa buddhi) will be favorable, and you have told 6th,8th,&12th place owners periods (dasa buddhi) will be unfavorable, In this case if the lagna is mesham then that owners Dasa buddhi should be favorable(mars), then the 8th place i.e. Viruchigam again mars is the owner then this says unfavorable period, how to conclude or which place to be taken into account. Please explain I don’t know whether my question is right.Thanks.T.K.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com