மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

5.3.18

செல்போனை படுக்கை அருகில் வைத்துக் கொண்டு தூங்க வேண்டாம்!!!

செல்போனை படுக்கை அருகில் வைத்துக் கொண்டு தூங்க வேண்டாம்!!!

பள்ளி சிறுமிகள் 5 பேர் தங்கள் வகுப்புத் தேர்வுக்காக செய்த ஒரு சிறிய ஆராய்ச்சி, உலக உயிரியல் மற்றும் கதிரியக்க விஞ்ஞானிகளின் கவனத்தை அவர்கள் பக்கம் திருப்பியுள்ளது.

🌾 டென்மார்க் நாட்டில் உள்ள வடக்கு ஜட்லேண்ட் தீவில் 9-ஆம் வகுப்பு படிக்கும் 5 மாணவிகளுக்கு உயிரியல் வகுப்பில் செய்முறைத் தேர்வு வந்தது.

🌾 அந்த செய்முறைத் தேர்வுக்கு சிறிய அளவில் ஆய்வை மேற்கொள்ளத் திட்டமிட்டனர்.

🌾ஐந்து மாணவிகளும் ஸெஸ் எனப்படும் புல்வகையில் 400 விதைகளை 12 தட்டுகளில் விதைத்தனர்.

🌾 தட்டுகளை ஆறு ஆறாகப் பிரித்து, ஆறு தட்டுகளை சாதாரண அறையில் வைத்தனர்.

🌾 மீதம் ஆறு தட்டுகளை வைஃபை கருவி உள்ள அறையில் வைத்தனர்.

👉🏻இந்த வைஃபை கருவியும் செல்போன் வெளியேற்றும் அதே அளவிலான கதிர் வீச்சைத் தான் வெளியேற்றும்.

🌾இரண்டு அறைகளில் உள்ள தட்டுகளுக்கும் ஒரே அளவிலான தண்ணீர், சூரிய ஒளி ஆகியவற்றை அளித்தனர்.

🌾12 நாள்களுக்குப் பின்னர் ஆய்வு முடிவுகளைப் பார்த்த சிறுமிகள் வியந்துவிட்டனர்.

🌾 சாதாரண அறையில் வைத்திருந்த தட்டுகளில் உள்ள விதைகள் முளைத்து செழிப்பாக வளர்ந்திருந்தன.

🌾 வைஃபை கருவி உள்ள அறையில் வைத்திருந்த தட்டுகளில் விதைக்கப்பட்ட விதைகள் வளராமலும், சில விதைகள் அழுகி உயிரிழந்தும் போயிருந்தன.

🌾 இந்த ஆய்வு முடிவுகள் உலக அளவில் உள்ள ஆராய்ச்சியாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

 🌾இங்கிலாந்து, ஹாலேண்ட், ஸ்வீடன் ஆகிய நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள் இந்த ஆய்வை பெரிய அளவில் மேற்கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர்.

 🌾ஸ்வீடன் நாட்டிலுள்ள கரோலின்ஸ்கா மருத்துவப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஓல் ஜொஹன்சன் என்ற பேராசிரியர் இது குறித்து கூறுகையில், "இந்தச் சிறுமிகள் மிகவும் புத்திசாலித்தனமாகவும் நேர்த்தியாகவும் இந்த ஆராய்ச்சியை மேற்கொண்டுள்ளனர்.

🌾 இதுபற்றி மாணவிகள் கூறியது,
"எங்களில் சிலர் இரவில் செல்போனை அருகில் வைத்துக் கொண்டே தூங்குவதால் அடுத்த நாள் வகுப்பைக் கவனிப்பதில் சிரமம் ஏற்பட்டது.

🌾சிலருக்கு செல்போன் இரவில் அருகில் இருப்பதால் தூங்குவதில் பிரச்னை இருந்தது.

இதுகுறித்து சாதாரணமாக பேசிக் கொண்டிருக்கையில், அதைப் பற்றியே ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.

🌾தற்போது இந்த ஆய்வு முடிவுகளைப் பார்த்த பிறகு யாரும் செல்போனை அருகில் வைத்துக்கொண்டு தூங்க மாட்டோம். செல்போன், லேப்டாப் உள்ளிட்டவற்றை வேறு அறையில் வைத்துவிட வேண்டும் அல்லது தூரமாக வைத்து விட வேண்டும் என்று முடிவு செய்துள்ளோம்.

🌾 வைஃபை கருவிக்கு அருகில் உங்கள் படுக்கை இருந்தாலும் அதனை உடனே மாற்றிவிடுங்கள்.

தூங்கும்போது தொழில்நுட்ப கருவிகளுக்கு விடை கொடுங்கள்'' என்கின்றனர் அந்தச் சிறுமிகள்.

சிறிய புல்லுக்கு விதைத்த விதை மிகப்பெரிய மரமாக முளைத்துள்ளது!

படித்தேன்; பகிர்ந்தேன்
அன்புடன் 
வாத்தியார்
=====================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

16 comments:

  1. Dear Guru,
    At the standard of 9th the Students perform research work. This is great issue. Above all cell phone radiation is creating many problems in our body,mind,soul. This is proved by the girls undoubtedly. Thanks for good message at good time. Blessed guru. Thanks.

    ReplyDelete
  2. வணக்கம் குருவே!
    ஓ! அப்பப்பா! அவ்வளவு கெடுதல் உண்டா?!
    இனி எமது மொபைல் மற்றும் கணினிப் பெட்டிகளை இரவில் வேறு
    அறைகளுக்கு மரியாதையாக மாற்றி
    விடுகிறேன்!
    வடக்கு ஜட்லேண்ட் தீவில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் அந்த ஐந்து மாணவிகளுக்கும், தங்களுக்கும்
    மனமார்ந்த நன்றிகள்!!7

    ReplyDelete
  3. குழந்தையைக் கூட தனி அறையில் தூங்க வைப்போம். செல்போனை விட்டுப் பிரிய மாட்டோமே..

    ReplyDelete
  4. It is true Sir. Thank you for Sharing.

    ReplyDelete
  5. Good morning sir very useful information thanks sir vazhga valamudan

    ReplyDelete
  6. Respected sir,

    Good morning sir. Good message on modern communication device. Avoiding these modern devices into the bed room. Thank you very much for your good message.

    regards,

    Visvanathan N

    ReplyDelete
  7. வணக்கம் ஐயா,மிக்க பயனுள்ள பதிவு.நண்பர்கள், உறவுகளிடம் பகிர்ந்து கொண்டேன்.நன்றி.

    ReplyDelete
  8. /////Blogger Kesavaraj & Kalaivani said...
    Dear Guru,
    At the standard of 9th the Students perform research work. This is great issue. Above all cell phone radiation is creating many problems in our body,mind,soul. This is proved by the girls undoubtedly. Thanks for good message at good time. Blessed guru. Thanks.////

    நல்லது, உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!!!!!

    ReplyDelete
  9. /////Blogger வரதராஜன் said...
    வணக்கம் குருவே!
    ஓ! அப்பப்பா! அவ்வளவு கெடுதல் உண்டா?!
    இனி எமது மொபைல் மற்றும் கணினிப் பெட்டிகளை இரவில் வேறு
    அறைகளுக்கு மரியாதையாக மாற்றி
    விடுகிறேன்!
    வடக்கு ஜட்லேண்ட் தீவில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் அந்த ஐந்து மாணவிகளுக்கும், தங்களுக்கும்
    மனமார்ந்த நன்றிகள்!!///////

    நல்லது, உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி வரதராஜன்!!!!!

    ReplyDelete
  10. /////Blogger ஸ்ரீராம். said...
    குழந்தையைக் கூட தனி அறையில் தூங்க வைப்போம். செல்போனை விட்டுப் பிரிய மாட்டோமே../////

    நல்லது, உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!!!!!

    ReplyDelete
  11. ////Blogger kmr.krishnan said...
    It is true Sir. Thank you for Sharing./////

    நல்லது, உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி கிருஷ்ணன் சார்!!!!!

    ReplyDelete
  12. /////Blogger K.P.Shanmuga Sundaram Sundaram said...
    Good morning sir very useful information thanks sir vazhga valamudan/////

    நல்லது, உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி சண்முகசுந்தரம்!!!!!

    ReplyDelete
  13. ////Blogger Visvanathan N said...
    Respected sir,
    Good morning sir. Good message on modern communication device. Avoiding these modern devices into the bed room. Thank you very much for your good message.
    regards,
    Visvanathan N/////

    நல்லது, உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி விஸ்வநாதன்!!!!!

    ReplyDelete
  14. ////Blogger adithan said...
    வணக்கம் ஐயா,மிக்க பயனுள்ள பதிவு.நண்பர்கள், உறவுகளிடம் பகிர்ந்து கொண்டேன்.நன்றி.////

    நல்லது, உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி ஆதித்தன்!!!!!

    ReplyDelete
  15. பயநுள்ள தகவல் சகோதரரே. நன்றி

    ReplyDelete
  16. ////Blogger Kamala said...
    பயநுள்ள தகவல் சகோதரரே. நன்றி////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி சகோதரி!!!!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com