மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

27.3.16

Astrology: quiz: புதிர் எண்.106 புதிருக்கான விடை


Astrology: quiz: புதிர் எண்.106 புதிருக்கான விடை

படித்து முடித்தவுடன் வேலை கிடைத்தால் நல்லது. அதிலும் ஸ்திரமான வேலை கிடைத்தால் மிகவும் நல்லது.

எல்லோருக்கும் அப்படிக்கிடைத்துவிடுகிறதா என்ன?

ஸ்திரமான வேலை கிடைக்காமல் எத்தனை பேர் அவதிப் படுகிறார்கள்?

அதற்குக் காரணம் என்ன? நிவர்த்தி என்ன?

அது சம்பந்தமாக நேற்று ஒரு ஜாதகத்தைக் கொடுத்து அலசச் சொல்லியிருந்தேன்.

அதில் 3 கேள்விகள் கேட்டிருந்தேன். அதில் முதல் கேள்வி கொஞ்சம் கடினமானது. ஜாதகத்தைப் பார்க்கும்போது ஒவ்வொருக்கும் ஒவ்வொன்று
முக்கியமானதாகத் தோன்றும். ஆகவே அதை விட்டுவிட்டு அடுத்த 2 கேள்விகளுக்கு வந்த பதிலை மட்டும் பார்ப்போம்.

அந்த முதல் கேள்விக்கான பதில் பதில் லக்கினநாதன் திரிகோண வீட்டில் (5ல்) அமர்ந்திருப்பது. அதுவே ஜாதகனின் ஜாதகத்தில் முக்கியமான
அமைப்பாகும். அத்துடன் சனீஷ்வரன் பரிவர்த்தனை யோகத்திலும் உள்ளார். இந்தக் கருத்தை நமது மூத்த மாணவர்களில் ஒருவரான யு.எஸ்.ஏ 
சந்திரசேகரன் சூரியநாராயணா அவர்களும் சுட்டிக் காட்டியுள்ளார் (பதில் எண்.12ஐ பார்க்கவும்) அவருக்கு ஒரு விஷேசமான பாராட்டு.

போட்டியில் மொத்தம் 13 பேர்கள் கலந்து கொண்டுள்ளார்கள். அவர்களின் 12 பேர்கள் சரியான பதிலை அல்லது ஒட்டிய பதிலை எழுதி, தேர்ச்சி
பெற்றுள்ளர்கள், அவர்கள் அனைவருக்கும் எனது மனம் உவந்த பாராட்டுக்கள். உங்களுடைய பர்வைக்காக அவர்களுடைய பதிலைக் கீழே
கொடுத்துள்ளேன்.
-----------------------------------------------------------------------------------

ஜாதகத்தைப் பாருங்கள்.



கும்ப லக்கின ஜாதகம். கும்பலக்கினத்திற்கு லக்கினாதிபதியும், 12ஆம் அதிபதியும் ஒருவரே. அதாவது சனீஷ்வரன். இந்த லக்கினத்திற்கு மட்டும்

அப்படியொரு அவஸ்தையான அமைப்பு. இந்த லக்கினக்காரர்களுக்கு லக்கினாதிபதி சனீஷ்வரன் கேந்திரம் அல்லது திரிகோணங்களில்
அமர்ந்திருந்தால் வெற்றிகரமான வாழ்க்கை

இல்லையென்றால் தோல்விகள் நிறைந்த வாழ்க்கை. கும்ப லக்கினத்திற்கு லக்கினநாதன் சனீஷ்வரன் 3, 6, 8  &12 ஆம் இடங்களில் மறையக்கூடாது!

ஜாதத்தில் சனி ஐந்தாம் வீட்டில் அமர்ந்துள்ளது. அது நட்பு வீடும் கூட. அதானால் ஜாதகனின் வாழ்க்கை வெற்றிகரமான வாழ்க்கைதான்.

ஜாதகன் பொறியியல் படித்தவன்.

ஆனால் துவக்கத்தில் ஜாதகனுக்கு நிரந்தரமான வேலை கிடைக்கவில்லை. 10 ஆண்டுகளில் 9 வேலைகளுக்கு  மாறியுள்ளான்.

ஏன் அப்படி?

பத்தாம் வீட்டில் ஆறாம் அதிபதி சந்திரன் அமர்ந்துள்ளான். அது விரும்பத்தக்கதல்ல! அத்துடன் 3ல் உள்ள  செவ்வாயின் பார்வையும் (பத்தாம்
வீட்டின்மேல் உள்ளது) உள்ளது, அத்துடன் கேது திசையும் நுழைந்து ஜாதகரைப் படுத்தி விட்டது.

28 வயதிற்குப் பிறகு யோககாரகன் சுக்கிரனின் திசையில் ஜாதகனுக்கு ஸ்திரமான நல்ல வேலை கிடைத்தது.

சுக்கிரன் ஜாதகத்தில் 12ல் இருந்தாலும் நவாம்சத்தில் அதே மகரத்தில் அமர்ந்து வர்கோத்தமம் பெற்றிருப்பதால் அவர் சரி செய்து ஜாதகனின்
வாழ்க்கையை சீரமைத்தார். அத்துடன் அவர் பத்தாம் வீட்டின் அதிபதி அவர் 12ல் மறைந்தாலும் தன்னுடைய வர்கோத்தம பலத்தால் சரி செய்தார்.

விளக்கம் போதுமா?

அன்புடன்
வாத்தியார்
------------------------------------------------------
வந்த பதில்கள்:
1
//////Blogger kmr.krishnan said...
ஜாதகர் 14 மார்ச் 1974 அன்று பிறதவர். காலை 6 மணி என்றால் லக்கினம் சரியாக அமைகிறது.ஆனால் தசா இருப்பை, நேரத்தை சரி செய்து
கொடுத்துள்ள தசா இருப்புடன் பொருத்த முடியவில்லை.அப்படி தசா இருப்பை சரி செய்தால் லக்கினம் மாறிப் போகிறது.
1. கஜ கேசரி யோகம் இந்த ஜாதகத்தின் சிறப்பு.மேலும் சந்திரன் மற்றும் சுக்கிரன் ராசி நவாம்சத்தில் ஒரே இடங்களில் இருப்பது சிறப்பு.சந்திரன் நீச பங்கம் பெற்றது மேலும் சிறப்பு.
2. 6க்கு உடைய சந்திரன் பத்தில் அமர்ந்தது, 10க்கு உடைய செவ்வாய் 3லும் மேலும் தன் வீட்டுக்கு ஆறிலும், அமர்ந்தது, காரகன் சனி கேதுவுடன்
உறவு வைத்தது, பூர்வ புண்ணியத்தில் சனி கேது நின்றது ஆகியவையும், வேலைக்கு வரும் பருவமான 20 வயது போல கேதுதசா நடந்தது ஆகியவை
வேலையில் ஸ்திரத்தன்மையை கொடுக்காமல் அடிக்கடி வேலை மாறியது.
3.சுக்கிர தசா சுக்கிர புக்தி அல்லது சுக்கிர தசா சூரிய புக்தியில் நல்ல வேலையில் நிரந்தரமாக அமர்ந்தார். சுக்கிரன் இவருக்கு யோக காரகன்.
12ல் இருந்தாலும் ராசி நவாம்சத்தில் மகரத்தில் இருந்து வலிமை பெற்றதால் சுக்கிரதசாவில் நிரந்தர வேலையைக் கொடுத்து இருப்பார்.
Friday, March 25, 2016 8:57:00 AM//////
-----------------------------------------
2
//////Blogger daya nidhi said...
வணக்கம் குருஜி ,
1. கும்ப லக்னத்திற்கு யோககாரகன் சுக்ரனும் vrgotthamam .
, சந்திரனும் வர்கோத்தமம் பெற்றது மற்றும் கெஜ கேசரி யோகம் உள்ள ஜாதகம்.
2. கேது தசா , சுகர தசா சுயபுத்தி வரை நிலையான வேலை இல்லை
3. யோகாதிபதி சுகர தசையில் பத்தாம் இடத்தில உள்ள சந்திரன் புத்தியில் (சந்திரன் சுய வர்க்கம் 7 பரல்கள் ) நிலையான வலை கிடைத்தது
சு. தயாநிதி அவியனுர்
Friday, March 25, 2016 12:26:00 PM///////
-----------------------------------------
3
/////Blogger Gopal Krishnan said...
வாத்தியார் அவர்களுக்கு எனது பணிவான நமஸ்காரங்கள்.
"Astrology: Quiz: புதிர் 106: கேள்விக்கென்ன பதில்!"
எதோ எனக்கு தெரிந்த சில விவரங்களை வரிசைப்படுத்தி எழுதியிருக்கிறேன்... தவறு இருந்தால் எனது தலையில் உங்களின் மோதிர விரல் அணிந்த கையால் குட்டி... எனக்கு புரியும்படி தெளிவு படுத்துங்கள்.
# நீங்கள் குறிப்பிட்டிருந்த ஜாதகருக்கு கால சர்ப தோஷம் இருக்கிறது. 33 வயதிற்குப் பிறகுதான் சிறப்புநிலையை எட்ட முடியும்.
# கும்ப லக்கினத்தில் சனியின் வீட்டில் சூரியனோடு மற்ற இரு கிரகங்களும் கிரக யுத்தத்தில் (சூரியனுக்கு 7 பாகைக்குள் இருப்பின்) குரு , புதன்
நீசமாகும் வாய்ப்பு உள்ளது. புதன் பரிவர்த்தனை என்று பார்த்தால் சனியும் சூரியனும் எதிரிகள் ஆகவே பரிவர்த்தனை பெற்றும் பலனில்லை.
# புதன் பரிவர்த்தனை பெறுவதால், புத-ஆதித்ய யோகம் முழுமையாக கிடைக்காமல் போகிறது. பரிவர்த்தனையால் குரு சனி இணைவு சண்டாள
யோகமாக மாறும் நிலை.
# தன குடும்ப வாக்கு ஸ்தானத்தில் குருவின் வீட்டில் மாந்தன் (குளிகன்) இருப்பது விதண்டா வாதம் செய்பவராகவும், பிடிவாத குணமுடையவராகவும் இருப்பார் அதுவே அவரது செயல் திறனை கெடுக்கும்.
# எத்தனை படித்திருந்தாலும் சனியும் புதனும் பரிவர்த்தனை பெற்று, பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் கேதுவோடு சனி அல்லது பரிவர்த்தனை பெற்ற
புதன் அவரது வேலை வாய்ப்பை கெடுப்பார், அதோடு கேது அவரை பதப்படுத்தி எதிலும் நிலைத்தன்மை அற்ற நிலையில் நல்ல அனுபவத்தை
தருவார்.
# திரிகோணத்தில், தைரிய வீரிய ஸ்தானத்தில் செவ்வாய் தனது சொந்த வீட்டில் உச்சம் பெற்று ஜாதகருக்கு எதையும் தாங்கும் மன தைரியத்தை
தருகிறார்.
# கேந்திரிய மாத்துரு ஸ்தான சுக்கிரன் 12இல் மறைவு.
# சுக்கிரன் வர்கோத்தமம் பெற்று, சுப பார்வை பெறாமலும் ஜாதகரின் விரய ஸ்தானத்தை உறுதிபடுத்தியுள்ளார். ஆகவே ஜாதகரின் கையில் காசு
தங்காது. இருப்பினும் சூரியனுக்கு 12 இல் சுக்கிர- சுபகிரகம் அமைந்ததால் "சுபாவாசி யோகம்" ஏற்ப்படுவதால், வேலை சம்பாத்தியம் இல்லை
என்றாலும் ஜாதகர் சுபவாசியாக இருப்பார். மேலும் இவருக்கு இருக்கும், பரிவர்த்தனையால் நீசபங்க ராஜ யோகமும், மேலும் கஜ கேசரி யோகமும்
இதை உறுதி செய்கிறது. ஆகவே ஜாதகர் கால சர்ப தோஷம் இருக்கிற -33 வயதிற்கு பிறகு நல்ல நிலையை பெறுவார்.
# கும்ப, ஸ்திர லக்ன காரரான இவருக்கு சுக்கிரன் பாதகாதிபதியாக அமைகிறார் ஆகவே "காசு பணம் துட்டு- கோவிந்தா கோவிந்தா என"
உறுதியாகிறது
# தொழில் மற்றும் லாபஸ்தானமான குருவின் வீட்டில் ராகு இருப்பதும் தொழில் வாய்ப்புக்கள் இல்லை என்பது தெரிகிறது
# 6வது மறைவு வீட்டின் ரண, ரூன, ரோக ஸ்தான அதிபதி சந்திரன், 10வது வீட்டில் கர்ம ஸ்தானத்தில் செவ்வாயின் வீட்டில் நீச சந்திரனாக அமர்ந்து
கஷ்டங்களை தருகிறார். (விருசிக ராசிக்கு நீச சந்திரன் பிறந்த வீட்டின் பெருமை கிடைக்காமல் போகும் )
அன்புடன் கோகி என்கிற கோபால கிருஷ்ணன்- ரேடியோ மார்கோனி.
Friday, March 25, 2016 12:55:00 PM//////
-----------------------------------------
------
///////Blogger சேனா said...
கோவிலில் விளக்கு ஏற்றி அதை எடுத்து வைக்கும் போது அது கைதவறி கீழே விழுந்துள்ளது, அதற்கு என்ன பரிகாரம் செய்ய வேண்டும்? தயவு
செய்து கூறவும்.///////

கை தவறித்தானே விழுந்தது. அதற்கு ஏன் கவலைப் படுகிறீர்கள்? மீண்டும் விளக்கை ஏற்றி வையுங்கள்!
-----------------------------------------------
4
///////Blogger asbvsri said...
புதிர் 106:
ஜாதகத்தின் சிறப்புகள்: ஜாதகர் 15 / 02 / 1974 ல் காலை பிறந்தவர்.
கும்ப லக்னம். லக்னாதிபதி திரிகோணத்தில் 5 ஆம் இடத்தில் வக்ரம். குருவின் பார்வையில்.
ஐந்தாம் அதிபதி புதன் (8 ஆம் அதிபதியும் கூட) லக்னாதிபதியுடன் பரிமாற்றம்.
இரண்டுக்கும் 11க்கும் அதிபதியான குரு, ஏழாம் அதிபதி சூரியன், 5 & 8 ஆம் அதிபதி புதன் மூவரும் லக்னத்தில். குரு அஸ்தமனம்.
யோகாதிபதி சுக்ரன் 12 ல்.
சந்த்ரன் 10 ஆம் இடத்தில் நீச்ச வர்க்கோத்தமம்.
சந்த்ரன், குரு, சூரியன், புதனுக்கு கேந்த்ரத்தில்.
ராஹு 11 ஆம் வீட்டில் தனுசுவில் குருவின் வீட்டில். சனியின் பார்வையில்.
மாந்தி இரண்டாம் வீட்டில். சனியின் பார்வை.
அஷ்டவர்க பரல் – 1, 3, 5, 6, 8, 10, 11, 12 க்கு 25க்கு மேல். (10 ஆம் வீட்டிற்கு 35, 11 ஆம் வீடு 40). வீடுகள் 2 மற்றும் 7 க்கு பரல்கள் 20.
கேள்வி 2: ஜாதகர் 20 ஆவது வயது வரை புதன் தசையில் படித்து முடித்தார். பின்னர் வந்த கேது தசை அவரை ஒரு நிரந்தர வேலையை
கொடுக்காமல் 27 வயது வரை படுத்தியது. பின்னர் வந்த சுக்ர தசை சுக்ர புக்தி அவர் யோகாதிபதியாக இருந்தும் 12ல் இருந்ததாலும், சூரியன் புக்தி
லக்னாதிபதிக்கு பகையானதாலும், சந்த்ர புக்தி அவர் நீச்ச வர்கோத்தமமாயிருப்பதாலும் பெரிதும் வேலையில் படித்த பின்னர் 10 வருடங்களுக்கு உதவவில்லை.
கேள்வி 3: செவ்வாய் புக்தியில் அவர் 10 ஆம் அதிபதியாவதால் மேஷத்தில் அவர் வீட்டில் இருப்பதால் ஒரு நிரந்தர வேலையை கொடுத்தார்.
நன்றியுடன்,
க இரா அனந்தகிருஷ்ணன்
Friday, March 25, 2016 3:33:00 PM//////
-------------------------------------------
5
/////Blogger thozhar pandian said...
இலக்கினாதிபதியும் கர்மகாரகருமான சனி பகவான், 10ம் வீட்டிற்கு 8ல் மறைந்தார். உடன் கேது. 10ம் வீட்டு அதிபதியான செவ்வாய் ஆட்சி பலம்
பெற்றும் 10ம் வீட்டிற்கு 6ல் மறைந்தார். 10ம் வீட்டிற்கோ 10ம் வீட்டு அதிபதிக்கோ சுபர் பார்வை இல்லை. 10ம் வீட்டில் தேய்பிறை சந்திரன் நீசத்தில். படித்து முடித்தவுடன் இவருக்கு கேது தசை தொடங்கி இருக்கும். அதன் பின்னர் நடந்த சுக்கிர தசையில் செவ்வாய் புக்தியில் ஜாதகருக்கு நிரந்தர வேலை கிடைத்திருக்கும்.
Saturday, March 26, 2016 2:22:00 AM///////
---------------------------------------------
6
Blogger lrk said...
ஐயா வணக்கம்
புதிரின் 106 பதில்
1......ஜாதகத்தின் முக்கியமான சிறப்பு என்ன?
கும்ப லக்ன யோக்காரகன் சுக்கிரன் வர்கோத்தம்ம் அதிக வலிமை.
செயல் வீரர் செவ்வாய் ஆட்சி,
11 ல் ராகு உகந்த இடம் ,
மனக்காரகன் சந்திரன் வர்கோத்தம்
2.....ஜாதகருக்கு படித்து முடித்தவுடன் 10 ஆண்டுகளுக்கு மேல் நிரந்தமான வேலை கிடைக்கவில்லை. ஆண்டுக்கு ஒரு வேலை என்று மாறிக்
கொண்டே இருந்தார். அதற்கு என்ன காரணம்?
தசாபுத்தி யும் கர்மகாரகன் சனி கேது கூட்டணி, அம்சத்தில் சனி பகை வீட்டில், மாந்தி கூட்டணிதான் காரணம் ஐயா
சனி , புதன் ( நீசமாகியுள்ளார் ), கேது திசை வரை அலைச்சல் தான்
3......சுக்கிர திசை சுயபுக்தியில் வேலை நிரந்த மாகியுள்ளது.
நன்றி
கண்ணன்
Saturday, March 26, 2016 9:51:00 AM//////
------------------------------------------
7
///////Blogger J Sudarsan Kumar said...
வாத்தியார் அவர்களுக்கு வணக்கம்
1) ஜாதகம் கால சர்ப்ப தோஷம் அமைந்த ஜாதகம் .
சந்திரன் தவிர அனைத்து கிரகங்களும் ராஹு கேது பிடியில் .
ஆனால் கிரகங்கள் கேதுவை நோக்கி செல்கின்றன .
அதனால் 32 வயதுக்கு மேல் யோகமாக மாறும் . (அ) லக்ன பரல்கள் எத்தனையோ அத்தனை வயதுக்கு மேல் யோகமாக மாறும் .
2) 6 க்குடைய வில்லன் சந்திரன் 10ம் இடத்தில அமர்ந்ததனால் வேலையில் நிரந்தரமின்மை . ஆனால் 10 க்குடைய செவ்வாயே 10 ம் இடத்தை
பார்ப்பது பிளஸ் பாயிண்ட்
3)சுக்ரன் 12 ல் மறைந்தாலும் வர்கோத்தமம் .
அவர் 4க்கும் 9க்கும் (ஒரு கேந்திரத்துக்கும் த்ரிகோணத்துக்கும் )அதிபதியான ராஜயோகாதிபதி
மேலும் தன்னுடைய சுகஸ்தானத்துக்கு(4 ம் வீட்டிற்கு ) பாக்கியத்திலும்(9 லிலும் ) தன்னுடைய பாக்கிய ஸ்தானத்துக்கு(9 ம் வீட்டிற்கு )
சுகஸ்தானத்திலும்(4 லிலும் ) உள்ளார்
10 க்குடையவரான செவ்வாய் தன்னுடைய 10 ம் வீட்டை 8 ம் பார்வையாக பார்க்கிறார் ஆகையால் சுக்ரனின் தசையில் செவ்வாய் புத்தியில் வேலை
நிரந்திரம் ஆகியிருக்கும்
ஜெ.சுதர்சன் குமார் , செங்கல்பட்டு
Saturday, March 26, 2016 10:26:00 AM//////
-----------------------------------------
8
///////Blogger seenivasan said...
Dear sir,
1. good points are
i) lord of second,eleventh house guru is sitting in lagnam
ii)lagna lord is placed fifth house 
iii) lagna lord and fifth house lords are exchanged their house
iv) seventh lord is sitting in lagna along with mercury which gives putha adipathiya yogam
v) Ragu is sitting in eleventh house
Vi) Third place lord mars is sitting in his own sign and it gives lot of confident
2.Answer for second question
i) he must have completed his education during the start of kethu dasa ,Kethu dasa never gives good result during his period hence he got temporary job
ii) Next period venus has given some trouble during his own sub period and after that sun sub period or moon sub period would have good permanent job.
Saturday, March 26, 2016 1:43:00 PM///////
-----------------------------------------
9
////////Blogger venkatesh r said...
புதிர் எண் 106 கேள்விக்கென்ன பதிலுக்கான‌ அலசல்:
வணக்கம் அய்யா!
கும்ப லக்கினம், விருச்சிக ராசி ஜாதகர்.
1) ஜாதகத்தின் முக்கியமான அம்சம் என்ன?
ஐந்தாம் அதிபதி புதனும் 7ம் அதிபதி சூரியனும் லக்கினத்தில் அமர்ந்து வலுவான ராஜயோகத்தை கொடுக்கின்றனர்.அது அவருக்கு நல்ல படிப்பை

கொடுத்தது.லக்கினாதிபதி சனி ஐந்தில் அமர்ந்து, அதன் அதிபதி புதனுடன் பரிவர்த்தனையிலுள்ளார்.
2)ஜாதகருக்கு படித்து முடித்தவுடன் 10 ஆண்டுகள் நிரந்தரமான வேலை கிடைக்கவில்லை.அதற்கு என்ன காரணம்?
1.ஆறாம் அதிபதி சந்திரன் நீசமாகி 10மிடத்தில் அமர்ந்தது.
2.ஜாதகரின் படிப்பு முடிந்த போது அவருக்கு கேது தசை நடப்பில் இருந்தது. பிறகு வந்த‌ சுக்கிர தசை,சந்திர‌ புத்தி முடியும் வரையில் (13

வருடங்கள்)அவருக்கு நிரந்தரமான வேலை அமையவில்லை. தவிர யோககாரகனும் தசா நாயகனுமான‌ சுக்கிரன் லக்கினத்திற்கு 12ல் மறைந்தது.
3) பிற்காலத்தில் அவருக்கு நிரந்தரமான வேலை கிடைத்தது. அது எப்போது?
சுக்கிர தசை, செவ்வாய் புத்தியில் 33 வயதிற்கு மேல் வேலை நிரந்தரமானது. 10ம் அதிபதி செவ்வாய் 3ல் அமர்ந்து தன் 8ம் தனிப்பார்வையில்

10மிடத்தை பார்ப்பது ஒரு காரணம்.
ஒரு சந்தேகம். அவருக்கு திருமணமாயிற்றா?ஜாதகரின் குடும்ப வாழ்க்கை எப்படி உள்ளது? தெரிந்திருந்தால் பதில் சொல்லவும்.
Over to Vaathiyaar!
Saturday, March 26, 2016 1:53:00 PM///////
-------------------------------------------
10
/////////Blogger Sudharsan Dhamu said...
சுதர்சன்,
காஞ்சிபுரம்.
1. லக்னாதிபதியும் 5ஆம் அதிபதியும் பரிவர்தனையில் உள்ளது.செவ்வாய் ஆட்சி வீட்டில் உள்ளது.லக்கனத்தில் குரு.(venus and moon in same rasi at

both amsam and rasichakram).
2. சனி ஆரம்ப தசை(3yr), அடுத்து முறையே புதன் தசை(17yrs), அடுத்து வந்த கேது தசை(7yrs) காரணமாக வேலையில் தடுமாற்றம் இருந்திருக்கும்.
3.பிறகு வந்த சுக்கிர தசையினால் வேலை மாற்றம் நின்றிருக்கும். சுக்கிரன் ஜாதகத்தில் 12ஆம் அதிபதி. ஆகவே சுக்கிர தசையில் சந்திர (அ)

செவ்வாய் புக்தியில் வேலை மாற்றம் நின்றிருக்கும்.
Saturday, March 26, 2016 5:50:00 PM ///////
---------------------------------------------
11
//////Blogger slmsanuma said...
DOB 15.02.1974 Place of Birth Chennai Time 7 AM
In fifth place Kethu. Sanniyasi Yokam or Raja Yokam.
Mars is in Own house.
Mercury and Saturn are in Parivarthanai yokum.
Jupiter is in Lakna. So this Native is a blessed One.
Venus and Moon is in Varkothamam.
Moon is in Neecham and in 10th place. Jupiter is also in Asthankatham. 
Though the 10th place owner Mars is in his own house but the neecha Moon spoiled his opportunity to get the standard job in time. 
Karmakaragan Saturn is also in Vakkiram. 
10th Bhavgam got 34 Parals.
So delay in getting good job.
But got permanent job during sukkira Thisa Moon Bukthi
Santhanam, Salem
Saturday, March 26, 2016 10:52:00 PM//////
-------------------------------------------------
12
////Blogger Chandrasekaran Suryanarayana said...
வணக்கம் QUIZ 106 ; (முதலில் பதிவு இட்டதை நீக்கவும். கை தவறுதலாக ஏற்பட்டது மன்னிக்கவும்)
ஜாதகர் கும்ப லக்கினம், அனுஷ நட்சத்திரம் , விருச்சிக ராசி.
லக்கினாதிபதி சனி , கும்ப லக்கின யோக காரர்கள் ; சுக்கிரன்
1. முக்கியமான சிறப்பு ;
1ம் வீட்டு அதிபதியும் (சனி) , 5ம் வீட்டு திருகோண அதிபதியும் (புதன்) பரிவர்த்தனை . பலன்; ஜாதகர் புகழ் பெற்று விளங்குவார் , மகிழ்ச்சியுடன்

இருப்பார்.
[ வாத்தியார் குறிப்பு: - ஒரு வீட்டின் பலம், வீட்டு அதிபதிகள் பரிவர்த்தனை பெற்று இருத்தல். இந்த விதிதான் இருக்கும் விதிகளில் அதீத பவரானது.

உங்கள் மொழியில் சொன்னால் சூப்பர் பவரானது. மற்றதெல்லாம் அதற்கு அடுத்ததுதான். ]
அடுத்த சிறப்பு : லக்கினத்தில் குரு அமர்ந்து 9ம் பார்வையால் பாக்கியஸ்தான வீட்டை பார்ப்பது . 5ம் பார்வையால் புத்திர ஸ்தான வீட்டையும், 7ம்

பார்வையால் களத்திரஸ்தானத்தையும் பார்ப்பது விசேஷம் .
ஜாதகத்தில் புதனும், சூரியனும், இருவரில் ஒருவர், 6, 8, 12 ஆம் வீடுகளில் ஏதாவது ஒன்றிற்கு அதிபதி என்றால், யோக பலன்கள் இருக்காது.

ஆகையால் சிறப்பு கிடையாது. (இந்த ஜாதகத்தில் புதன் 8ம் வீட்டு அதிபதி)
2. நிரந்திர வேலை கிடைக்கவில்லை காரணம்:
ஜாதகருக்கு 3 வயதில் புதன் தசை ஆரம்பம் , 20 வயதில் கேது தசை ஆரம்பம் , 27 வயதில் சுக்கிரதசை ஆரம்பம்.47 வயதில் சூரிய தசை ஆரம்பம்.
1. 6ம் வீட்டு அதிபதி சந்திரன் 10ம் வீட்டில் அமர்ந்தது தான் முக்கிய காரணம் .
2. 10ம் வீடு விருச்சிகம் . அதில் சந்திரன் நீசம். நவாம்சத்திலும் சந்திரன் நீசம்.
3. 27 வயது முதல் 47 வயது வரை சுக்கிர தசை. சுக்கிரன் 12ல் விரய ஸ்தானத்தில் அமர்ந்துள்ளார் . அவர் பாக்கிய ஸ்தானத்தின் அதிபதி. 12ம் வீடு

பாப கர்தாரி தோஷம் (ஒரு பக்கம் ராகு, மறு பக்கம் சூரியன் )
4. 5ம் வீட்டில் சனி இருப்பதால் அதிர்ஷ்டமும் துரதிஷ்டமும் மாறி மாறி வரும்.
சனியும் கேதும் கூட்டு 5ம் வீட்டில் இருப்பதால் துறவு மன பான்மை ஏற்படும் . சன்யாச யோகம்.
3. நிரந்திரமான வேலை கிடைத்தது :
சுக்கிர தசை ராகு புக்தியில் .
11ம் வீட்டில் ராகு - பலம் பொருந்திய வீடு. (41 பரல்) வளம் உடைய வாழ்க்கை கிடைக்கும் , சுகங்களையும் சௌகரியங்களையும் அனுபவிப்பான்.

தொழில் காரகன் சனியின் பார்வை ராகுவின் மீது உள்ளது.
அல்லது
சுக்கிர தசை குரு புக்தியில்:
லக்கினத்தில் குரு அமர்ந்து 9ம் பார்வையால் பாக்கியஸ்தான வீட்டை பார்ப்பதால் . குருவின் 5ம் பார்வை தொழில் காரகன் சனியின் மீது உள்ளது.
யோகங்கள்: சங்க யோகம், பர்வத யோகம்,, பாச யோகம்
ஜாதகத்தில் செவ்வாய் மேஷ ராசியில் உள்ளது கம்ப்யுட்டரில் செவ்வாய் ரிஷப ராசியில் உள்ளது. (14 march 1974 5.45.02 காலை இடம்: Chennai)
மற்ற எல்லா ராசியும் சரியாக உள்ளது.
வாத்தியார் தவறு செய்யமாட்டார் என்ற அடிபடையில் கம்புயுட்டர் ஜாதகத்தை எடுத்துக்கொள்ளவில்லை .
Sunday, March 27, 2016 12:58:00 AM ///////
==========================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

9 comments:

  1. வணக்கம் ஐயா.
    நெற்றிக்கன் திறப்பின் குற்றம் குற்றமே ஐயா. எப்போதும் ஜாதகத்தின் பதில் ஞாயிறு மாலையில் தான் வருமே ஐயா.ஆனால் இன்று காலையிலே வந்தது குற்றமே ஐயா. இப்போது தான் பதில் அனுப்பினேன் ஆனால் எனது கருத்து வருவதற்கு முன்பே பதில் வத்ததால் மனம் வருத்தம் அடைகிறேன் ஐயா.

    ReplyDelete
  2. இதனால் ஓரு நன்மையும் உன்டு ஐயா. இனி புதிர் வந்தவுடன் கருத்தை பதிலே பதிந்துவிடவேண்டும் என்ற தீர்மானம் கொன்டேன் ஐயா. பதில பார்த்து நான் எவ்வாறு அலசி உள்ளேன் என்று கூறவும் ஐயா. தவறு இருந்தால் மன்னிக்கவேண்டுகிறேன் ஐயா.
    உங்கள் வகுப்பறை மாணவன்

    ReplyDelete
  3. வணக்கம் குருவே!
    இப்புதிரின் விடையை அறிந்த பிறகு மிகவும் ஆனந்தப்பட்டேன். ஏனெனில், எனது விடை 40% OK.
    விடையளித்த மாணவர்களும் அதிகரித்துள்ளனர் என்பது ப்ளஸ் பாயிண்ட்!
    அடுத்து,தாங்கள் தனனடக்கம் உள்ளவர் மட்டுமல்ல,தன் முனைப்பும் காட்டாதவர் என்பதை வேப்பிலையாருக்குத் தாங்கள் தந்த
    பதிலில் நிரூபித்துள்ளீர்கள், ஐயா! தங்களின் இமேஜும் பொதுவில் ஒருபடி உயர்ந்தது, வாத்தியாரே!

    ReplyDelete
  4. ஐயா,

    புதிரில் கலந்து கொள்ளமுடியவில்லை. ஆனால் கேள்வி பார்த்த பிறகு, 5 ல் சனி+கேது சேர்க்கை - சன்னியாசயோகம் - இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் அதை பற்றி யாருமே பேசவில்லை.


    வெ. நாராயணன் புதுச்சேரி

    ReplyDelete
  5. ///////Blogger siva kumar said...
    வணக்கம் ஐயா.
    நெற்றிக்கன் திறப்பின் குற்றம் குற்றமே ஐயா. எப்போதும் ஜாதகத்தின் பதில் ஞாயிறு மாலையில் தான் வருமே ஐயா.ஆனால் இன்று காலையிலே வந்தது குற்றமே ஐயா. இப்போது தான் பதில் அனுப்பினேன் ஆனால் எனது கருத்து வருவதற்கு முன்பே பதில் வத்ததால் மனம் வருத்தம் அடைகிறேன் ஐயா. ///////

    ஞாயிறி விடுமுறை தினம். அனறு எனக்குக் கிடைக்கும் நேர அவகாசப்படி பதிவை வலை ஏற்றுகிறேன். அவ்வளவுதான். இதில் குற்றத்து இடமிருப்பதக நான் கருதவில்லை அன்பரே!

    ReplyDelete
  6. ////Blogger siva kumar said...
    இதனால் ஓரு நன்மையும் உன்டு ஐயா. இனி புதிர் வந்தவுடன் கருத்தை பதிலே பதிந்துவிடவேண்டும் என்ற தீர்மானம் கொன்டேன் ஐயா. பதில பார்த்து நான் எவ்வாறு அலசி உள்ளேன் என்று கூறவும் ஐயா. தவறு இருந்தால் மன்னிக்கவேண்டுகிறேன் ஐயா.
    உங்கள் வகுப்பறை மாணவன்/////

    அதைச் செய்யுங்கள். உங்கள் பதிலை வெளியாகி உள்ள விடைகளுடன் ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்ளுங்கள்!

    ReplyDelete
  7. //////Blogger வரதராஜன் said...
    வணக்கம் குருவே!
    இப்புதிரின் விடையை அறிந்த பிறகு மிகவும் ஆனந்தப்பட்டேன். ஏனெனில், எனது விடை 40% OK.
    விடையளித்த மாணவர்களும் அதிகரித்துள்ளனர் என்பது ப்ளஸ் பாயிண்ட்!
    அடுத்து,தாங்கள் தனனடக்கம் உள்ளவர் மட்டுமல்ல,தன் முனைப்பும் காட்டாதவர் என்பதை வேப்பிலையாருக்குத் தாங்கள் தந்த
    பதிலில் நிரூபித்துள்ளீர்கள், ஐயா! தங்களின் இமேஜும் பொதுவில் ஒருபடி உயர்ந்தது, வாத்தியாரே!///////

    வகுப்பறைக்குத் தினமும் சுமார் 5,000 பேர்கள் வந்து செல்கிறார்கள். எல்லோரையும் அரவனைத்துக் கொண்டு செல்லும் மனம் வேண்டும். அது இல்லையென்றால் வகுப்பறையை எப்படி இத்தனை ஆண்டுகளாக நடத்திக் கொண்டு இருக்க முடியும்?

    ReplyDelete
  8. //////Blogger Narayanan V said...
    ஐயா,
    புதிரில் கலந்து கொள்ளமுடியவில்லை. ஆனால் கேள்வி பார்த்த பிறகு, 5 ல் சனி+கேது சேர்க்கை - சன்னியாசயோகம் - இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் அதை பற்றி யாருமே பேசவில்லை.
    வெ. நாராயணன் புதுச்சேரி/////

    5ல் கேது இருந்தால் மட்டுமே அந்த யோகம். சனி சேரும்போது பலன்கள் மாறுமே!

    ReplyDelete
  9. இந்தப் புதிர்ப் போட்டியில் கலந்துகொள்ள முடியவில்லை! மிக நல்ல அலசலுக்கு நன்றி!

    பல பெரியவர்கள், 12-ல் சுக்கிரன் மறைவு இல்லை என்ற கருத்துடையவர்கள். பலருக்கும் 12-சுக்கிரன் (ஸ்வதசையில்) பல நன்மைகள் புரிந்திருக்கிறார் (எனக்கு மிகவும் தெரிந்த ஒருவர் உட்பட! அழகான தோற்றமும், வசீகர முகமும் உடைய அவருக்கு 24 வயதிலேயே காதல் திருமணம் ஆனது - விரும்பிய மற்ற பல பெண்கள் ஏமாற்றமடைந்தனர்!).

    லக்கினத்தில் மற்றும் 12-ல் சுக்கிரன், அழகிய முகம் தருவார் என்பதும் ஓரளவு உண்மையாகவே இருந்திருக்கிறது (நான் பார்த்தவரை).

    நன்றி ஐயா!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com