மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

20.3.16

Astrology: புதிர் எண்.Q.105 புதிருக்கான பதில்!

Astrology: புதிர் எண்.Q.105 புதிருக்கான பதில்

20-3-2016

கொடுக்கப்பெற்றிருந்த ஜாதகம் குழந்தையின்மைக்கு ஒரு உதாரண ஜாதகம்

குழந்தை இன்மை என்பது ஒரு சாபம்தான். சாபம் என்றாலும் குழந்தை இல்லாதவர்கள் வருந்தாதீர்கள். காலதேவன் கொடுக்கும் சாபங்களுக்கெல்லாம், இறைவன் நஷ்ட ஈட்டையும் கொடுத்துத்தான் மனிதர்களைப் படைக்கிறார். இல்லை என்றால் அனைவருக்கும் 337 என்ற மந்திரம் எப்படி வரும்?

தங்கள் குழந்தைகளைக் கண்ணும் கருத்துமாகப் பார்த்து, தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்து, அவர்களுக்கு எந்தப் பிரச்சினையும் ஏற்படாமல் பாதுகாத்து வளர்த்த பெற்றோர்களை எத்தனை பிள்ளைகள உதாசீனப் படுத்துகின்றன தெரியுமா? எத்தனை பெற்றோர்கள் உரிய அன்பு பாசம் அரவணைப்பு கிடைக்காமல் முதியோர் இல்லங்களில் வாடிக்கொண்டிருக்கிறார்கள் தெரியுமா?

அவர்களைப் பார்க்கும் போது, குழந்தை இல்லாதவர்களின் நிலைமை எவ்வளவோ மேல்!

என்ன, சமூகம் அவர்களைச் சீண்டும். அது ஒன்றுதான் வருத்தத்திற்கு உரியது! உறவினர்களோ அல்லது நண்பர்களோ திடீரென்று உங்கள் குழந்தைகள் என்ன செய்கின்றன என்று கேட்டு அவர்களைச் சங்கடத்திற்கு ஆளாக்குவார்கள்

லைசென்ஸ் இல்லாத வாகன ஓட்டியைப் போலீஸ்காரன் மடக்கிக் கேள்வி கேட்பதைப் போல கேள்வி கேட்பார்கள்!

கேட்டால் என்ன? அடக்கமாகப் பதில் சொல்லுங்கள்

“I do not have a child. I don't know whether it is a curse or boon. But i accepted the out come of the life destined to me, happily!”

“எனக்குக் குழந்தை இல்லை. அது சாபமா அல்லது வரமா என்று தெரியவில்லை. விதிக்கப்பெற்றதை ஏற்றுக்கொண்டு வாழும் மனப்பக்குவம் எனக்கு உள்ளது. அதனால் நான் குழந்தையின்மைக்காக வருந்தவில்லை”. என்று சொல்லுங்கள்!

குழந்தை இருப்பவனுக்கு அவன் குழந்தைகள் மட்டுமே குழந்தைகளாக இருக்கும். குழந்தை இல்லாதவனுக்கு, அவன் செலுத்தும் அன்பினால் உறவினர்கள், நண்பர்கள் என்று மற்ற வீட்டுக் குழந்தைகளும் அவனுடைய குழந்தைகள்தான் என்ற பெருந்தன்மையால் நிறையக் குழந்தைகள். ஆகவே குழந்தையின்மை சாபமல்ல ஒரு விதத்தில் அது வரம்தான்!
----------------------------------------------------------------
சரி சொல்ல வந்த விஷயத்திற்கு வருகிறேன்!

கொடுக்கப்பட்டுள்ள ஜாதகத்தைப் பாருங்கள்



கடக லக்கின ஜாதகம். லக்கினாதிபதி சந்திரன் லக்கினத்திலேயே இருக்கிறார்.

குடும்ப ஸ்தான அதிபதி (Lord of the 2nd house) சூரியன் பாக்கியத்தில் (9ஆம் வீட்டில்) ஆகவே நல்ல குடும்ப வாழ்க்கை அமைந்தது

குழந்தையின்மைக்கான காரணங்கள் என்ன என்பதைக் கீழே பட்டியலிட்டுள்ளேன்.

1
குழந்தை பாக்கியத்திற்கான வீட்டில் (ஐந்தில்) ராகு,
2
அந்த (ஐந்தாம்) வீட்டு அதிபதி செவ்வாய் கேதுவுடன் சேர்ந்து கெட்டிருக்கிறார். வீக்காக உள்ளார்
3
குழந்தைக்குக் காரகன் குரு  (authority for children) அஷ்டமத்தில் மறைந்துவிட்டார் அதாவது எட்டாம் இடத்தில் அமர்ந்து விட்டார். அத்துடன் விரையாதிபதி புதனுடன் சேர்ந்து செல்லாக் காசாகிவிட்டார்.
4
அத்துடன் அதே குரு பகவான்தான் இந்த ஜாதகத்திற்கு பாக்கியாதிபதி அதாவது Ninth Lord அவர் தன்னுடைய இடத்திற்குப் பன்னிரெண்டில் அமர்ந்திருக்கிறார். அது மோசமான இடமாகும் (It is the most melefic place for a house lord)
5
மேலும் இயற்கையாகவே சுபக்கிரகங்களான சுக்கிரன், குரு, மற்றும் புதன் ஆகிய மூவரும் எட்டில் அமர்ந்ததால் எந்தப் பயனும் இல்லாமல் போய்விட்டது!

விளக்கம் போதுமா?
-------------------------------
இன்றைய போட்டியில் 30 அன்பர்கள் கலந்து கொண்டுள்ளார்கள். பதிலையும் சரியாக எழுதியுள்ளார்கள். அவர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள்.
ஆனால் முக்கியமான காரணம்: இயற்கையாகவே சுபக்கிரகங்களான சுக்கிரன், குரு, மற்றும் புதன் ஆகிய மூவரும் எட்டில் அமர்ந்ததால் எந்தப் பயனும் இல்லாமல் போய்விட்டது!

இதைக் குறிப்பிட்டு எழுதியவர்கள் இரண்டு பேர்கள். அவர்களுடைய பதில்கள் கீழே உள்ளன. அவர்களுக்கு எனது விஷேச பாராட்டுக்கள்!

அன்புடன்
வாத்தியார்
---------------------
1
///////Blogger Sivachandran Balasubramaniam said...
மதிப்பிற்குரிய ஐயா !!!
புதிர் எண்: 105 இற்கான பதில் !!!
ஜாதகி கடக ராசி, ஆயில்யம் நட்சத்திரம், கடக லக்கினத்தில் பிறந்தவர். லக்கினாதிபதி சந்திரன் லக்கினத்தில். ஐந்தாம்அதிபதி செவ்வாய் லாபம் மற்றும் பாதகஸ்தானமான 11 இல் உடன் கேது. கிரகயுத்தம். ஐந்தில் ராகு. ஐந்தாம் வீடு 26 பரல். குழந்தைகாரகன் குரு எட்டில் மறைவு. குரு அம்சத்தில் நீசம்.ராசிக்கு பன்னிரெண்டில். குருவின் பரல்கள் 3. ஐந்தாம் வீட்டிற்கு சுபகிரக பார்வை இல்லாமல் போனதும், குரு,சுக்கிரன்,புதன் ஆகிய சுபகிரகங்கள் எட்டில் மறைந்ததாலும் 40 வயது வரை எட்டாம் வீடு சம்பந்தப்பட்ட திசைகள் நடந்ததால் குழந்தை பாக்கியம் இல்லை. இப்பொழுது சூரியன் திசை நடப்பதால் குழந்தை பாக்கியம் கிடைக்கலாம் !!!!
இப்படிக்கு
சிவச்சந்திரன். பா
Friday, March 18, 2016 4:54:00 PM//////
------------------------------------
2
//////////Blogger siva kumar said...
வணங்குகிறேன் குருவே
105 புதிர்: கான விடைகள்
1.ஜாதகிக்கு ஏன் குழந்தை இல்லை?
பதில்: கடக லக்கினம், கடக ராசி லக்கின அதிபதி சந்திரன் லக்கினத்தில் இருப்பதால் ஜாதகி அழகிய தோற்றம் உடையவர்.
கடக லக்கினத்திற்கு யோககாரர் செவ்வாய் மற்றும் பூர்வபுன்னிய அதிபதியும் அவறே. அவர் ராகு மற்றும் கேது அகியோர் பார்வை மற்றும் சேர்க்கையால் பலம் இழந்து கெட்டுபோய் உள்ளார்.
ஐந்தாம் இடத்தில் ராகு வந்து அமர்ந்து அதுவும் உச்சம்பெற்று அந்த ஐந்தாம் வீட்டை கெடுத்தான்.
குழந்தைக்கு காரகர் குரு பகவான் அந்த வீட்டிற்கு 4ல் அமர்ந்தாலும் அவர் லக்கினத்திற்கு 8ல் மறைந்ததும் 12ம் இடத்து காரர் புதனுடன்சேர்ந்து கெட்டுள்ளார்.
2ம் இடமான குடும்ப வாழ்க்கைக்கு உரிய இடத்திற்கு மிகவும் கேடான செவ்வாய் மற்றும் சனி பகவானின் பரஸ்பர பார்வை வேற உள்ளது. இது குடும்ப வாழ்க்கைக்கு ஏற்ற அமைப்பு இல்லை. ஜாதகி விவாகரத்து பெற்றோ அல்லது கனவரை இழந்தோ இருப்பார்.
ஆகிய காரனங்கலால் ஜாதகிக்கு குழந்தை கிடையாது சார்.
2 ஜாதகத்தில் பல கிரஹக் கோளாறுகள் உள்ளன. அவைகள் என்னென்ன?
ஜாதகத்தில் சுபகிரகங்கள் குரு சுக்கிரன் புதன் ஆகியவை கெட்டுவிட்டது
யோககாரர் செவ்வாய் ராகு கேது உடன் சேர்ந்து கெட்டார்
7,8ம் அதிபதி சனி பகவான் 12,3ம் அதிபதி புதனுடன் பரிவர்தனை ஆகியுள்ளார்
மனகாரன் சந்திரனுடன் மாந்தி சேர்ந்து ஜாதகிக்கு பிடிவாத குனத்தை கொடுத்தது.
2ம் வீட்டதிபதி அந்த வீட்டிற்கு 6ல் மறைந்ததும்.
Sunday, March 20, 2016 7:06:00 AM //////
================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

6 comments:

  1. .your lessons are soooo good ;இண்டரஸ்டிங்;understanding sir ;உங்கள் மாணவி

    ReplyDelete
  2. அருமையான விளக்கம் வாத்தியார் அவர்களே...

    நன்றி.


    ReplyDelete
  3. குருவே சரணம்.
    ஜாதகப் புதிரில் இதுவரை கலந்து கொள்ளவில்லை. பாடங்களையும் புதிர்களின் விளக்கங்களையும் விடாமல் படித்தும் வருகிறேன்.35 சதவிகிதம் வரை நான் எழுதி வைக்கும் விடைகள் ஓகே. போகப் போக தெளிவேனோ,என்னவோ?

    ReplyDelete
  4. //////Blogger Hema Thiru said...
    your lessons are soooo good ;இண்டரஸ்டிங்;understanding sir ;உங்கள் மாணவி//////

    நல்லது. தொடர்ந்து படியுங்கள் சகோதரி! நன்றி!

    ReplyDelete
  5. ///Blogger B. Lakshmi Narayanan, Tuticorin said...
    அருமையான விளக்கம் வாத்தியார் அவர்களே...
    நன்றி./////

    நல்லது. உங்களின் பாராட்டிற்கு நன்றி தூத்துக்குடிக்காரரே!

    ReplyDelete
  6. /////Blogger வரதராஜன் said...
    குருவே சரணம்.
    ஜாதகப் புதிரில் இதுவரை கலந்து கொள்ளவில்லை. பாடங்களையும் புதிர்களின் விளக்கங்களையும் விடாமல் படித்தும் வருகிறேன்.35 சதவிகிதம் வரை நான் எழுதி வைக்கும் விடைகள் ஓகே. போகப் போக தெளிவேனோ,என்னவோ?/////

    நம்பிக்கையோடு இருங்கள். தொடர்ந்து படியுங்கள். கூடிய விரைவில் தெளிவடைவீர்கள்!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com