மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

5.7.15

Half Quiz பாதிப் புதிர்: என்னதான் நடக்கும் நடக்கட்டுமே!


Half Quiz பாதிப் புதிர்: என்னதான் நடக்கும் நடக்கட்டுமே!

Quiz 89  பதில் 

5.7.2015
-----------------------------
சின்ன வயதில் சிலருக்கு படிப்பு வராது. படிக்கும் சூழ்நிலை இருந்தாலும் படிப்பு ஏறாது. எட்டாம் வகுப்பைக்கூடத் தாண்ட மாட்டார்கள். வீட்டில் பெற்றோர்கள் கண்டித்து, அடித்தால் பையன் வீட்டை விட்டு ஓடிவிடுவான். பிறகு பல சிரமங்களுக்கிடையே தேடிப்பிடித்துக் கூட்டிக் கொண்டு வருவார்கள். வந்தாலும் திரும்பவும் படிக்கச் சொல்லி வற்புறுத்த மாட்டார்கள். ஒரு ஸ்கூட்டர் ஒர்க் ஷாப்பிலோ அல்லது ஒரு மளிகை/ ஜவுளிக்கடையிலோ அல்லது ஒரு அச்சகத்திலோ அல்லது அதுபோன்ற சிறு தொழில் செய்பவர்களிடம் வேலைக்குச் சேர்த்துவிடுவார்கள். அதில் ஒரு ஐந்து அல்லது ஆறு ஆண்டுகள் பயிற்சி பெற்றதும், தங்கள் சொத்தில் எதையாவது விற்று அல்லது எங்காவது பணத்தைப் புரட்டி சம்பந்தப்பட்டவனுக்கு ஒரு சொந்தத் தொழிலை வைத்துக் கொடுப்பார்கள். அவன் தன்னுடைய பிழைப்பை அதன் மூலம் செய்ய வேண்டியதாயிருக்கும்

அவனுடன் ஒன்றாகப் படித்தவன், பின்னால் சிரத்தையாகப் படித்துப் பொறியியல் பட்டம் பெற்று எங்காவது பெரிய தொழிற்சாலையில் மாதம் ரூபாய் முப்பதாயிரம் சம்பாதித்துக்கொண்டிருப்பான். நம்மாளும் பின்னால் பெரிய மெக்கானிக்காகி கார் அல்லது மோட்டார் சைக்கிள்களைப் பழுது பார்க்கும் தொழிலைச் செய்து, பலரையும் வேலைக்கு வைத்துத் தன் நண்பனைவிட அதிகமாகச் சம்பாதிப்பான். 2, 10, & 11ஆம் வீடுகளைவைத்து அவையெல்லாம் அவனுக்கு ஒரு உயர்வைக் கொடுக்கும். ஆனால் படிப்பு போனது போனதுதான்.

என்ன காரணம்?

எல்லாம் ஜாதகக் கோளாறுதான்!

அது சம்பந்தமான ஒரு ஜாதகம்தான் இப்போது கொடுத்துள்ளது.
------------------------------------------------------------------------------------

மேலே உள்ள ஜாதகத்தைப் பாருங்கள்.

மிதுன லக்கினம். 4ஆம் வீடான கன்னிக்கு அதிபதியான புதன் அந்த வீட்டிற்கு எட்டில்.அதுவும் சனியுடன் கூட்டணி. கூட்டணி சேர்ந்துள்ள சனி ஜாதகத்தில் எட்டாம் வீட்டிற்கு உரியவன். ஆறாம் அதிபதியின் பார்வை கேடானது. ஜாதகத்தில் ஆறாம் அதிபதியான செவ்வாய் எட்டில் அமர்ந்து, தனது நான்காம் பார்வையால் புதனைத் தன் பார்வையில் வைத்திருப்பதைக் கவனிக்கவும்.

நான்காம் அதிபதி பூரணமாகக் கெட்டிருக்கிறார். அதனால்தான் ஜாதகனுக்குப் படிப்பு ஏறவில்லை. ஆறாம் அதிபதியின் சேர்க்கை அல்லது பார்வை மிகவும் தீங்கானது. எதையும் அலசும்போது அதை மனதில் வைத்துக்கொள்ளவேண்டும்!

மொத்தம் 37 பேர்கள் கலந்துகொண்டுள்ளார்கள். அவர்களில் 34 பேர்கள் சரியான பதிலை அல்லது ஒட்டிய பதிலை எழுதியுள்ளார்கள். அவர்கள் அனைவருக்கும் எனது பாராட்டுக்கள். மேலும் கலந்து கொண்ட மற்றவர்களுக்கும் எனது பாராட்டுக்கள்.

அன்புடன்
வாத்தியார்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++==
1
////Blogger Thirumal Muthusamy said...
quiz 89 answer.
1. 2ம் இடத்தில் கேது பகை பெற்றது.
2. 2ம் அதிபதி லக்கினத்திற்கு 6ல் நீசம் பெற்றது.
3. லக்னாதிபதி மற்றும் வித்யாகாரகன் லக்கினத்திற்கு மாரக இடத்தில் அமர்ந்து அட்டமாதிபதி சேர்க்கை பெற்றது.
4. 2ம் இடத்திற்கு ராகுவுடன் இணைந்த மாரகாதிபதி நேர்பார்வை.
எம். திருமால்.
Friday, July 03, 2015 6:57:00 AM //////
------------------------------------------------
2
//////Blogger B. Lakshmi Narayanan, Tuticorin said...
Quiz.89 ற்கான பதில்..
வணக்கம் வாத்தியாரே!
மிதுன லக்னம், படிப்பு ஸ்தானமான 4ம் அதிபதி புதன் அந்த இடத்திற்கு 8ல் மறைந்து நீட்ச சனியுடன் சேர்ந்து கெட்டு விட்டார், மேலும் அதன் மீது 6ம் அதிபதி வில்லன் செவ்வாயின் பார்வை, பள்ளி படிப்பை கைவிட்டார்.
அனுபவ கல்வி அதிபதி 5ம் அதிபதி சுக்கிரனும் அந்த இடத்திற்கு 6ல் மறைந்து விட்டார். அதுவும் இல்லாமல் போயிற்று.
அன்புள்ள மாணவன்,
பா. லக்ஷ்மி நாராயணன்.
தூத்துக்குடி.
Friday, July 03, 2015 8:33:00 AM ///////
-----------------------------------------
3
/////Blogger Srinivasa Rajulu.M said...
1) கல்விக்குக் காரகனும், ஸ்தானாதிபதியுமான புதன், நாலுக்கு எட்டாம் இடமான 11-ஆம் இடத்தில்- மூன்று மற்றும் அட்டமாதிபதிகளுடன் கூடி நின்றது - இரண்டு சுபாவ பாபிகளின் கூட்டணிக்கு நடுவில்.
2) அத்தகைய புதனை, உச்சனான அவரின் பகையாளி செவ்வாய் பார்த்தது.
3) குருவானவர், ஆறில் மறைந்தது.
4) வாக்குஸ்தானத்தில் நின்ற கேதுவையும் உச்ச செவ்வாய் நோக்கியது. (பலவீனமான குரு பார்வை உதவி செய்யவில்லை)
5) கற்கும் காலத்தில் வந்த அட்டமாதிபதி (அல்லது) பாதிக்கப்பட கல்வி ஸ்தானாதிபதியின் தசை படிப்பிற்குத் தடா போட்டது.
6) கல்விஸ்தானத்தைப் பார்க்கும் உச்சனான விரைய ஸ்தானாதிபதி சுக்கிரன், படிப்பில் நாட்டமில்லாமல் செய்தது.
7) வாக்குஸ்தானாதிபதி நீச்சமாகிப் போனது.
ஆகிய காரணங்கள், ஜாதகரை பள்ளி செல்லவிடாமல் செய்து விட்டன.
ஆனாலும் மூன்று உச்ச கிரகங்கள், நிபுண யோகம், சனியின் நீசபங்கம், கஜகேசரி போன்றவற்றால் ஜாதகருக்கு உன்னத வாழ்க்கை.
Friday, July 03, 2015 8:49:00 AM //////
------------------------------------------------
4
/////Blogger Govindasamy said...
லக்கினாதிபதியும் நான்காம் இடத்திற்குரியவனுமாகிய புதன் எட்டு ஒன்பதுக்குரிய சனியுடனும் மூன்றாமிட அதிபதி சூரியனுடனும் கூட்டு. மேல் படிப்புக்குரிய ஒன்பதாமிட சனி நீச்சம். மூன்றாம் அதிபதி சூரியன் உச்சம்.
நான்காமிட புதன் நான்காம் வீட்டிற்கு எட்டாம் இடத்தில். இது பள்ளீப்படிப்பையும் கெடுத்து விட்டது.
சனி, சூரியன் கூட்டு லக்கினாதிபதியையும் நான்காம் அதிபதியையும் (புதன்) கெடுத்து விட்டது.
ஒன்பதாம் இடத்து சனி ஒன்பதாம் இடத்திற்கு மூன்றாம் வீட்டில். இது மேல் படிப்பையும் கெடுத்துவிட்டது.
மேலும் மன காரகன் சந்திரன் ஆறில் நீச்சம்.
குருவும் நீச்சம். எனவே பலனில்லை.
Friday, July 03, 2015 9:48:00 AM //////
------------------------------------------------
5
/////Blogger amuthavel murugesan said...
Answer to Quiz.89
ஆரம்ப கல்வி 4 ஆம் இடம்.4 ஆம் அதிபதி 4 க்கு எட்டு மற்றும் எட்டாம்
அதிபதியாகிய நீச்சமான சனி உடன்.
மற்றும் 12ஆம் அதிபதயின்(விரயஸ்தான அதிபதி) பார்வை.
மு.சாந்தி
Friday, July 03, 2015 9:59:00 AM /////
----------------------------------------------
6
////////Blogger data entry said...
kethu 2nd house, 2nd house owner kethu in 6th place and 4th house house owner budhan 8th from 4th house so discontinue his studies.
Friday, July 03, 2015 10:22:00 AM //////
-----------------------------------------
7
////Blogger M.R said...
வணக்கம் ஐயா .
மிதுன லக்னத்திற்கான நான்காம் ஆதி புதன் இயற்கை பாவிகளான அஷ்டமாதி சனி மற்றும் மூன்றாம் ஆதியான சூரியன் உடன் சேர்க்கை பெற்றுள்ளது .
இரண்டாம் ஆதி சந்திரன் விருச்சிகத்தில் நீசம் மற்றும் பாதகாதிபதி குருவுடன் சேர்க்கை .
மிதுன லக்னத்திற்கு ஆறாம் அதிபதி செவ்வாயின் உச்ச பார்வை கல்விகாரகன் புதனுக்கு .
அதனால் தான் ஜாதகர் படிக்கவில்லை .
நன்றி ஐயா .
Friday, July 03, 2015 10:49:00 AM //////
------------------------------------------
8
////Blogger slmsanuma said...
1. Elementary Education is given by 2nd house and the owner of the second house who is in Neecha Bangam and in 6th place to Laknam.
2. Neecham Bangam is like a handicapped Graham and thus the Chandiran failed to give the benefits of the second house as he is the owner of the house.
3. 2nd house spoiled by the presence of Kethu and aspect of Ucha Sevvai who is also associated with Raghu.
4. Karagan Budhan is in Asthangatham by Suriyan and also in Vakkiram.
So the connected 2nd House is spoiled and the Karagan is also spoiled and thus the native could not complete his education.
Friday, July 03, 2015 12:29:00 PM ////
--------------------------------------------------
9
/////Blogger Hari Krishna said...
இரண்டில் கேது. இரண்டுக்குரிய சந்திரன் ஆறில் மறைவு. குருவும் ஆறில் மறைவு. இது போதாதா படிப்பை ஒரு வழியாக்க.
Friday, July 03, 2015 12:38:00 PM /////
---------------------------------------------
10
/////Blogger Goutham Mylsamy said...
Primary education is seen from 2nd bhavam
Second lord debliated in 6th house,
Ketu in second house
Exalted 6th lord Mars and rahu aspecting second house
affecting early education,person will be a school dropout
Friday, July 03, 2015 1:50:00 PM /////
----------------------------------------
11
//////Blogger Arul said...
வணக்கம் ஐயா..
கல்வி காரகன் மற்றும் நான்காமிட அதிபதியுமான‌ புதன், 4ம் இடத்துக்கு 12ம் இடமான மூன்றாமிட‌ அதிபதி சூரியனால் அஸ்தமனமாகி விட்டான். அதுவுமில்லாமல் எட்டாமிட அதிபதி சனியுடன் கூட்டணி போட்டுள்ளான். குருவும், நீசமான மனகாரன் சந்திரனும் ஆறாம் இடத்தில் மறைந்துள்ளனர்.
சரியா ஐயா?
Friday, July 03, 2015 2:05:00 PM //////
------------------------------------------------
12
/////Blogger GOWDA PONNUSAMY said...
அய்யாவவிற்க்கு வணக்கங்கள்.
புதிர் விடை Q-33, 31-12-2013 & 1/01/2014 ல் தாங்களே விடையும் அளித்துள்ளீர்கள்.
நன்றியுடன்,
-பொன்னுசாமி.
Friday, July 03, 2015 2:40:00 PM ////////
-------------------------------------
தங்களின் நினைவாற்றலுக்கு நன்றி!
-----------------------------------------
13
/////Blogger kmr.krishnan said...
தசா இருப்பு கொடுக்காததால் சரியான ஜாதகத்தைக் கணிக்க முடியவில்லை.
1.நான்காம் அதிபன் புதன் தன் வீட்டிற்கு எட்டில் மறைந்து, 2.லக்கினத்திற்கு எட்டாம் அதிபதி சனியால் பாதிக்கப்பட்டு,3. சூரியனால் அடிவாங்கி,4, செவ்வாயால் நான்காம் பார்வையாகப் பார்க்கப்பட்டு கெட்டுவிட்டதால் படிப்பு வ‌ரவில்லை.
செவ்வாய் சனி தைன்யபரிவர்தனையும், வாக்கு ஸ்தான கேதுவும் எரியும் கொள்ளியில் எண்ணை ஊற்றின.
Friday, July 03, 2015 4:20:00 PM /////
-------------------------------------------------
14
/////Blogger SSS CONSTRUCTION said...
SIR,1. THE MIDDLE EDUCATION THAT IS SECOND PLACE THE LORD MOON IS IN 6TH PLACE IS IN NEECHAM
2. THE EDUCATION PLACE THAT IS 4TH PLACE THE 4TH LORD BUDHAN IS IN 8TH PLACE FROM 4TH AND HE IS IN BOTH SIDE BAD PLANNET
3. THE 9TH PLACE THAT IS BAKASTHANAM SANI IS IN NEECHAM, AND GURU IS 7TH LORD IS IN 6TH PLACE THAT IS 12TH PLACE FROM 7TH SO THESE FACTORS ARE AFFECTING HIS EDUCATION LIFE.
Friday, July 03, 2015 6:42:00 PM /////
----------------------------------------
15
/////Blogger daya nidhi said...
1. லக்னாதிபதி, மற்றும் 4 ஆம் இடத்துக்கு உரிய புதன்,4 க்கு 12 ஆம் அதிபதியான( 4 ஆம் வீட்டுக்கு விரயம்), உச்சம் பெற்ற சூரியனுடன் சேர்க்கை பெற்றார்.
2.உடன் நீச்சம் பெற்றசனி( 8 ஆம்வீட்டிற்கு உரியவர்)புதனை தழுவுகிறார்
3 .கூட்டனியை உச்சம் பெற்ற செவ்வாய் பார்க்கிரார்
முடிவு: சனி, செவ்வாய் ( பரிவர்த்தனை )பார்வையால் புதன் முற்றிலும் கெட்டார்.படிப்பு நாசமானது.
நன்றி, தயாநிதி, அவியனூர்
Friday, July 03, 2015 6:45:00 PM//////
-------------------------------------------------
16
//////Blogger Sakthivel K said...
வணக்கம் சார்.......
மிதுனலக்னம். 2ஆம் அதிபதி6ல் நீசம்..
சூரி+சனி யுத்தத்தில் புதன் தடுமாரிபோனான்(கல்விகாரகன்)
வில்லன்செவ்வாயின் பார்வையில் புதனுக்கு நாயடிபேயடி!!!
2ல் கேது. கேடிகள் ராகு+செவ்.நேரடிபார்வையில் 2ஆம் இடம்(அப்கானிஸ்தான் போல)
எப்படி படிப்பான் ஜாதகன்...கொடுப்பினை இல்லை............
Friday, July 03, 2015 7:12:00 PM /////
------------------------------------------
17
//////Blogger venkatesh r said...
2மிடம் முதல் நிலைக் கல்விக்கான பாவம். அதன் அதிபதி சந்திரன் 6ல் நீசடைந்து வலுவிழந்துள்ளார். 2ல் கேது பகவான் அமர்ந்து அந்த பாவத்தை கெடுத்து விட்டார். புத்திகாரகனும் லக்கினாதிபதியுமான புதனோ 11ல் அட்டமாதிபதி நீச சனி மற்றும் சூரியயனுடன் உள்ளார்.
மேற்கண்ட காரணங்ளால் ஜாதகருக்கு படிப்பு ஏறவில்லை.
Friday, July 03, 2015 9:32:00 PM //////
--------------------------------------------
18
/////Blogger AMG said...
Guru hiding in 6th house, mercury lord of 4th house in combustion; also with needs sevvai. These are the main reasons.
AMG
Friday, July 03, 2015 9:57:00 PM //////
----------------------------------------
19
//////Blogger Raja R said...
Iya....
2-m itathil kethu....
2- m itathil chndran 6-il neecham.....
Ithuve padippu keduvatharkku karanam..
Friday, July 03, 2015 10:59:00 PM /////
------------------------------------------
20
/////Blogger selvam velusamy said...
வணக்கம் குரு,
ஆரம்ப கல்வியை குறிப்பிடும் ஜனன லக்னதிர்க்கு இரண்டாம் பாவாதிபதி சந்திரன் லக்னதிர்க்கு ஆறில் மறைந்தார். அவர் வீட்டில் கேது அமர்ந்தார். மேலும் அந்த வீட்டை செவ்வாயும் ராகுவும் ஒருசேர பார்த்து கெடுத்தார்கள். வித்யா காரகனும் கல்வி ஸ்தானதிபதியுமான புதனோ சனியோடு கூட்டு சேர்ந்ததோடு செவ்வாயின் பார்வையும் பெற்று பள்ளிக்கு செல்லும் வயதில் தசையை நடத்தினார். அத்தோடு புதனுக்கு நான்காமிடம் கேது அமர்வு, ராகு மற்றும் செவ்வாய் பார்வையும் பெற்று கெட்டது.
நன்றி
செல்வம்
Friday, July 03, 2015 11:09:00 PM /////
----------------------------------------------
21
/////Blogger Chandrasekaran Suryanarayana said...
வணக்கம்.
ஜாதகர் படிக்கவில்லை. கல்வி மறுக்கப்பெற்ற ஜாதகம்.
4ம் வீட்டு அதிபதி புதன்(லக்கினாதிபதி)11ம் வீட்டில்,8ம் வீட்டு அதிபதி சனி, புதனுடன் கூட்டு.புதன் அசுப கிரகமாக மாறியது. அதனால், படிப்பில் தடங்கல்.
6ம் வீட்டு அதிபதி செவ்வாய் 8ல் அமர்ந்து 4ம் பார்வையால் புதனை பார்க்கிறார்.
6ம் வீட்டு அதிபதியின் பார்வை மிகவும் மோசமானது.
11ம் வீடு 4ம் வீட்டிலிருந்து 8வது வீடு. அதனால், புத்தி அமைதியில்லாமல் இருக்கும். புத்தி எப்பொழுதும் தடுமாற்றத்துடன் இருக்கும்.
வித்தியாகாரகன் குரு 6ம் வீட்டில் வக்கிரமாக அமர்ந்துள்ளார். அவருடைய பார்வை லக்கினத்தையோ, 4ம் வீட்டையோ, 4ம் வீட்டு அதிபதியையோ பார்க்கவில்லை. துரதிருஷ்ட்டம். படிக்கமுடியாமல் போனதர்க்கு இது ஒரு முக்கியமான காரணம்.
2ம் வீட்டில் கேது இருப்பதால், படிப்பை பாதியில் விட்டு விடும் நிலைமை, விரும்பிய வண்ணம் படிப்பை அடையமுடியாது. மேலும், நாவன்மை பங்கு எற்படும்.
Friday, July 03, 2015 11:24:00 PM /////
-------------------------------------
22
////Blogger hamaragana said...
Anbudan vathiyar ayya vanakkam ...
Mithuna laknam laknaathipathi Puthan with sani..
2...kedhu in second house..vakkushthaanam.
3...mankaarakan chandran at 6th house.
4..education house4.. &kalvikarakan Puthan jointly with sani
So school dropout...
Sorry ayya..my computer under repair so this is from my iPad ...
Saturday, July 04, 2015 7:01:00 AM /////
-----------------------------------------------
23
/////Blogger GOWDA PONNUSAMY said...
அய்யா அவர்களுக்கு வணக்கங்கள்.
ஜாதகர் படிக்கவில்லை. படிப்பு ஏறவில்லை. கல்வி மறுக்கப் பெற்ற ஜாதகம்.
1). மிதுன லக்கினம்.லக்கினாதிபதி புதன், 4ம் வீட்டு கல்வி ஸ்தானத்திற்கும் அதிபதியாகி தன்னுடைய வீட்டிற்கு 8ல் மறைந்துவிட்டார். அவரே புத்திகாரகனும் ஆவார்.புதனுடன் சேர்ந்த சனீஷ்வரன் 8மிடத்திற்கு அதிபதியானதால் படிப்பை கெடுத்து விட்டார்.2மிடத்தில் அமர்ந்த மாந்தி அதற்க்கு உறுதுணையாக இருந்தார். 6ம் வீட்டு அதிபதி செவ்வாய் 8ல் அமர்ந்து தன் கொடூரமான 4ம் பார்வையால் புதனையும் சனீஷ்வரனையும் கெடுத்தால் படிப்பும் போயே போச்.
மற்ற படி குரு பகவான் (வாத்தியார்) வேறு மறைவு ஸ்தானமான 6மிடத்தில் அமர்ந்து விட்டதால்,திகைத்துப் போய் கம்மென்று உட்கார்ந்துவிட்டார்.
ஆனாலும் குரு வாத்தியாராயிற்றே? சும்மாவா இருப்பார்.தன் 5ம் பார்வையால் தொழில் ஸ்தானத்தை ஆசீர்வதித்துள்ளார்.7ம் பார்வையால் அயன சயன சுகத்தையும், 9ம் பார்வையால் 2மிடமான தன ஸ்தானத்தையும் பலப்படுத்தியுள்ளார்.
லக்கினாதிபதி புதனும் பாக்கியாதிபதி சனிபகவானும் (பாக்கியாதிபதி சனி நீச்சபங்க ராஜயோகம்) 11ல் அமர்ந்து,தைரியத்திற்க்கு 3ம் வீட்டுக்காரர் உச்ச சூரியனையும் கூட்டு சேர்த்துக் கொண்டுள்ளதால் தன் தொழிலில் உச்சத்தைத் தொட்டிருப்பார். 10ல் அமர்ந்த உச்ச சுக்கிரன் தொழில் ஸ்தான அதிபதி வாத்தியாரின்(குருங்க) பார்வையைப் பெற்று உறுதி செய்கின்றார்.(இது அதிக பிரசங்கித்தனம். வாத்தியார் அடிச்சுப் போடுவாருங்கோ!!!)
நன்றியுடன்,
-பொன்னுசாமி.
Saturday, July 04, 2015 12:58:00 PM /////
---------------------------------------------
24
////Blogger trmprakaash@gmail.com said...
AYYA,
2m Veettil Kethu. Kethu amarndhulla veettathibathi lagnathirkku 6il maraivu. Lagnathibathi, 4m Athibathi matrum Buthi Kaaragararaana Budhan 8m Athibathi Saniyudan. 6m Athibathi Ucha Sevvayin Paarvai, Budhan matrum 2m veettinmel. Indha kaaranangalaal, jadhagar School Drop out. Thanks.
Saturday, July 04, 2015 4:52:00 PM ////
----------------------------------------------
25
Blogger MOHAN SETHURAMAN said...
அய்யா,
கல்விக்கான நாலாம் இட அதிபதி புதன் நாலாம் இடத்துக்கு எட்டில் மறைந்து விட்டார். உடன் சனி வேறு.செவ்வாய் நாலாம் பார்வையாக புதனை பார்க்கிறார். உடன் உள்ள சூரியன் புதனை வலுவிலக்க செய்துள்ளது.
மோகன்‍‍, காரைக்கால்
Saturday, July 04, 2015 5:06:00 PM /;/////
----------------------------------------
26
/////Blogger Jaya Prakash said...
1.மிதுன லக்னம்,.விருச்சிக ராசி..லக்னப்படி வித்யாகாரகனும்,கல்வி ஸ்தானாதிபதியுமான புதன் 4ம் வீட்டிற்கு 8ல் மறைவு 4ம் வீட்டுக்கு 12,6க்கு உடைய சூரியன் சனி சேர்க்கை.லக்னத்திற்கு முதல் பாவியான செவ்வாய் 8ல் உச்சம் பெற்று 4 ம் அதிபதியின் மேல் பார்வை.
2.ராசிப்படியும் 4 ஆம் அதிபதி 6ல் நீச்சம்,.இதனால் பள்ளிகல்வி இல்லை.
Saturday, July 04, 2015 6:26:00 PM //////
----------------------------------------
27
////Blogger Dallas Kannan said...
Respected sir
This chart looks familiar and I check old post. Fount it in Last December. Sorry I cheated. Will not look older posts next time.
Saturday, July 04, 2015 6:44:00 PM /////
------------------------------------------
உங்களின் நினைவாற்றல் வாழ்க!
---------------------------------------------------
28
////Blogger Velu R said...
வணக்கம் ஐயா,
1. அடிப்படை கல்விக்கு காரகம் 2ம் வீடு.
2. 2ம் வீட்டில் கேது இருந்து அந்த பாவகத்தை கெடுத்தது.
3. 2ம் வீட்டின் அதிபதி (சந்திரன்) நீசபங்கம் பெற்று என்ன பயன் 6ல் மறைவு.
4. கல்விக்கு கரகன் (புதன்) சூரியனுடன் சேர்ந்து அஸ்தமனம் பெற்றத்தோடு 8ம்
(சனி) அதிபதியுடன் கூடி கேடுகிறார்.
ஆகவே இந்த ஜாதகத்தில் பிறந்தவர்க்கு அடிப்படை கல்வியே பெற முடியாமல் போனது.
Saturday, July 04, 2015 9:07:00 PM //////
-----------------------------------------
29
//////Blogger parameshwaran said...
1.புதன்_செவ்வாய் வீட்டில் இருப்பது.
2.8ஆம் அதிபதி சனியின் சேர்க்கை.
3.6ஆம் அதிபதி செவ்வாய் பார்வை.
4.புதன் தன்னுடைய வீட்டிற்கு எட்டில்.
5.புதன் தன்னுடைய எதிரி வீட்டில் இருப்பது.
6.4ஆம் இடத்திற்கும் புதனுக்கும் குரு பார்வை இல்லை.
Saturday, July 04, 2015 9:30:00 PM ///////
Blogger Venkat Lakshmi said...
உயர்திரு ஐயா வணக்கம் புதிர்க்கான எனது பதில் நான்காம் வீட்டு அதிபதியும் கல்விக்கு அதிபதியும் ஒருவரே புதன் அவர் நான்காம் வீட்டிற்க்கு எட்டில் மற்றும் அஸ்தமனம் அதனால் ஜாதகர் படிக்கவில்லை.
Saturday, July 04, 2015 9:53:00 PM //////
--------------------------------------------------
30
////Blogger Senthil Kumar said...
கேது 2 இல் , அந்த வீடு அதிபதி(Chandran) நீசம். And also that is in 6th house from laknam.
Saturday, July 04, 2015 10:11:00 PM /////
------------------------------------------------
31
////Blogger lrk said...
ஐயா வணக்கம்.
கல்வி ஸ்தான 4ம் அதிபதி அந்த இடத்துக்கு 8 ஆம் இடத்தில் இருக்கிறார்
வித்தைகாரகன் புதன் அஸ்தமனம்
4 ஆம் இட அதிபதிக்கு செவ்வாய் பார்வை
ஆகிய காரணங்களால் படிப்பு ஏறவில்லை.
ஆனால், உச்ச செவ்வாய், உச்ச சுக்கிரன், உச்ச சூரியன் - உச்சத்திற்கு சென்று விடுவார்
கண்ணன்.
Saturday, July 04, 2015 10:21:00 PM //////
-----------------------------------------------
32
/////Blogger mohan said...
ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம். இது எனது கன்னி முயற்சி. கத்துக்குட்டி முயற்சி. ஆவல் காரணமாக ஆசைப்பட்டு எழுதுகின்றேன்.
மிதுன லக்கினம்.
விருச்சிக ராசி.
பிறந்த தேதி 10.5.1971
சூரியன் - உச்சம்.
சுக்கிரன் - உச்சம்.
செவ்வாய் - உச்சம்
மகரச்செவ்வாய் எட்டில் இருப்பதினால் செவ்வாய் தோஷம் இல்லை.
சந்திரன் - நீசம்.
சனிபகாவான் - நீசம்.
அசுப கிரகங்கங்களான சூரியன் மற்றும் நீசச்சனியுடன் அஸ்தமனமாகியுள்ளார் கல்விகாரன் புதன். அதனால் படிப்பு ஏறவில்லை.
மற்றபடி குருசந்திர யோகம். அமலா யோகம் உடையவர். வாழ்வில் வெற்றி பெற்றிருப்பார்.
ஐயா. இது ஆர்வக்கோளாறில் எழுதியது.
தவறு இருந்தால் மன்னிக்கவும்.
அன்பன்
வேந்தன்பட்டி ந.மோகனசுந்தரம், திருநெல்வேலி.
Saturday, July 04, 2015 11:17:00 PM //////
------------------------------------------------
33
/////Blogger Pethaperumal said...
வணக்கம் ஐயா:
1. 2 க்கு உடைய சந்திரன் 6 ல் நீசம்.
2. 4 க்கு உடைய புதன் அஸ்தமம்.
நன்றி
Sunday, July 05, 2015 11:08:00 AM /////
---------------------------------------
34
//////Blogger Sakthivel Duraiswamy said...
1.லக்னாதிபதியும், 4க்கு உரியவனும் அஸ்டமாதிபதிமான சனி, சேர்க்கை
2.கல்விக்காரன் குரு நீசம் பெற்ற சந்திரனுடன் மறைவு ஸ்தானமாஸ்தானமான 6 ல்.
3.2ல் கேது.
Sunday, July 05, 2015 4:48:00 PM //////
-------------------------------------------

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

8 comments:

  1. அய்யா அவர்களுக்கு வணக்கங்கள்.
    இதே ஜாதகத்தை ஜாதக இருப்பு திசையுடன் குறிப்பிட்டு, 2ம் வீடு, 5ம் வீடு, 7ம் வீடு,10ம் வீடு 11ம் வீடு பற்றியும் அலசலாமே.
    இதுவரை கொடுத்துள்ள ஜாதகங்களின் பல வித சாதக பாதகங்களைப் பற்றி அலசலாமே!!!.
    குரு தன் இருப்பிடத்தை மாற்ற உள்ளாரே!.புது வீடு அவரின் சொந்த வீடுகளுக்கு 6 & 9ம்
    வீடாக, நட்பு வீடும் ஆவதால் குரு ( வாத்தியார் ) என்னென்ன மாற்றங்களைச் செய்யப் போகிறார் என்ற ஆவல் அதிகரித்துள்ளது.
    நன்றியுடன்,
    -பொன்னுசாமி.

    ReplyDelete
  2. Sir,

    Couple clarifications,
    1) you mentioned 4th aspect of Mars. I thought it only aspects 7&8
    2) Budan in 11th house, that is best placement for a lagnathipathi. With Ucha sun n neechapanga Saturn, how it have gone bad completely? Doesn't it mean, he is sharp and shrud in making his knowledge as money?

    3) I agree on 2 nd house lord gone neecha and Kethu and Mars aspect completely ruined his schooling. At the same time, doesn't moon get neechapanga by sitting with Guru?

    4) In text books the aspects are given only few. But many astrologer see trine and Kendra of each planet, house and raasi to tell few. It raises many questions. If possible, it will be great if you can make a post on it.

    ReplyDelete
  3. வாத்தியாரர் அவர்களின் குரு பெயர்ச்சி பலன்களை ஆவல் உடன் எதிர் நோக்குகின்றோம்

    ReplyDelete
  4. /////Blogger GOWDA PONNUSAMY said...
    அய்யா அவர்களுக்கு வணக்கங்கள்.
    இதே ஜாதகத்தை ஜாதக இருப்பு திசையுடன் குறிப்பிட்டு, 2ம் வீடு, 5ம் வீடு, 7ம் வீடு,10ம் வீடு 11ம் வீடு பற்றியும் அலசலாமே.
    இதுவரை கொடுத்துள்ள ஜாதகங்களின் பல வித சாதக பாதகங்களைப் பற்றி அலசலாமே!!!.
    குரு தன் இருப்பிடத்தை மாற்ற உள்ளாரே!.புது வீடு அவரின் சொந்த வீடுகளுக்கு 6 & 9ம்
    வீடாக, நட்பு வீடும் ஆவதால் குரு ( வாத்தியார் ) என்னென்ன மாற்றங்களைச் செய்யப் போகிறார் என்ற ஆவல் அதிகரித்துள்ளது.
    நன்றியுடன்,
    -பொன்னுசாமி.//////

    ஜோதிட புத்தகத் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளதால், வேறு பணிகளுக்கு நேரமில்லை. அதாவது அலசல் பாடங்களுக்கு தற்சமயம் நேரமில்லை. பிறகு ஒரு சமயம் செய்வோம். பொறுத்திருங்கள் அன்பரே!

    ReplyDelete
  5. //////Blogger selvaspk said...
    Sir,
    Couple clarifications,
    1) you mentioned 4th aspect of Mars. I thought it only aspects 7&8
    2) Budan in 11th house, that is best placement for a lagnathipathi. With Ucha sun n neechapanga Saturn, how it have gone bad completely? Doesn't it mean, he is sharp and shrud in making his knowledge as money?
    3) I agree on 2 nd house lord gone neecha and Kethu and Mars aspect completely ruined his schooling. At the same time, doesn't moon get neechapanga by sitting with Guru?
    4) In text books the aspects are given only few. But many astrologer see trine and Kendra of each planet, house and raasi to tell few. It raises many questions. If possible, it will be great if you can make a post on it./////

    ஜோதிட புத்தகத் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளதால், வேறு பணிகளுக்கு நேரமில்லை. அதாவது அலசல் பாடங்களுக்கு தற்சமயம் நேரமில்லை. பிறகு ஒரு சமயம் செய்வோம். பொறுத்திருங்கள் அன்பரே!

    ReplyDelete
  6. //////Blogger selvaspk said...
    Sir,
    Couple clarifications,
    1) you mentioned 4th aspect of Mars. I thought it only aspects 7&8
    2) Budan in 11th house, that is best placement for a lagnathipathi. With Ucha sun n neechapanga Saturn, how it have gone bad completely? Doesn't it mean, he is sharp and shrud in making his knowledge as money?
    3) I agree on 2 nd house lord gone neecha and Kethu and Mars aspect completely ruined his schooling. At the same time, doesn't moon get neechapanga by sitting with Guru?
    4) In text books the aspects are given only few. But many astrologer see trine and Kendra of each planet, house and raasi to tell few. It raises many questions. If possible, it will be great if you can make a post on it./////

    ஜோதிட புத்தகத் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளதால், வேறு பணிகளுக்கு நேரமில்லை. அதாவது அலசல் பாடங்களுக்கு தற்சமயம் நேரமில்லை. பிறகு ஒரு சமயம் செய்வோம். பொறுத்திருங்கள் அன்பரே!

    ReplyDelete
  7. /////Blogger SELVARAJ said...
    வாத்தியாரர் அவர்களின் குரு பெயர்ச்சி பலன்களை ஆவல் உடன் எதிர் நோக்குகின்றோம்/////

    பொறுத்திருங்கள். எழுதுகிறேன்!

    ReplyDelete
  8. /////Blogger SELVARAJ said...
    வாத்தியாரர் அவர்களின் குரு பெயர்ச்சி பலன்களை ஆவல் உடன் எதிர் நோக்குகின்றோம்/////

    பொறுத்திருங்கள். எழுதுகிறேன்!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com