மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

15.7.15

புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே எங்கள் விஸ்வநாதன் புகழ் பாடுங்களேன்!


புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே எங்கள் விஸ்வநாதன் புகழ் பாடுங்களேன்!

மெல்லிசை மன்னருக்கு ஒரு அஞ்சலி!

சுமார் 60 ஆண்டு காலம் திரையுலகில் கோலோச்சிய திருவாளர்
M.S. விஸ்வநாதன் அவர்கள் இறைவனடி சேர்ந்து விட்டார். அவர்
ஆன்மா சாந்தியடைய நம் வகுப்பறையின் சார்பில் நமது அஞ்சலியைப்
பதிவு செய்கிறேன். எல்லாம் வல்ல இறைவனையும் பிரார்த்தனை செய்கிறேன்.

சுமார் 1,200 படங்களுக்கு அவர் இசையமைத்துள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன. அவற்ரில் பல பாடல்கள் நம் மனதில் தங்கியுள்ளன.

பல கவிஞர்கள் அவருடைய இசைக்கு உறுதுணையாக அற்புதமான
பல பாடல்களை எழுதிக் கொடுத்துள்ளார்கள். அவர்களில் கவியரசர்
கண்ணதாசன் அவர்களும் கவிஞர் வாலி அவர்களும் குறிப்பிடப் பட வேண்டியவர்களாகும்.

அவர்கள் எல்லாம் வாழ்ந்து பல ஆக்கங்களைக் கொடுத்து காலத்தில்
நாமும் வாழ்ந்திருந்தோம் என்பதே நாம் மகிழ்ச்சி அடையக்கூடிய விஷயமாகும்.

வாழ்க அவர்களுடைய புகழ்!

மறக்க முடியாத, மறுக்க முடியாத மேதை M.S. விஸ்வநாதன்.

அவர் இறக்கவில்லை. திரையிசை வடிவில் அவர் என்றும் நம்முடன்
வாழ்ந்து கொண்டிருப்பார்!

கவியரசர் கண்ணதாசன் இன்று இருந்தால் இப்படித்தான் சொல்வார்:

புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே எங்கள்
விஸ்வநாதன் புகழ் பாடுங்களேன்
வண்டாடும் கங்கை மலர் தோட்டங்களே-எங்கள்
மெல்லிசை மன்னன் புகழ் பாடுங்களேன்!

அன்புடன்,
வாத்தியார்
================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

15 comments:

  1. Vathiyar ayya vanakkam ...
    Real musical hero... Our total class students 1 minute silent for his soul. One request.. If his horoscope available please ..show inthe class.

    ReplyDelete
  2. படம்: கிருஷ்ண கானம்
    இயற்றியவர் : கண்ணதாசன்
    பாடியவர்: எம் .ஸ் .விஸ்வநாதன்

    அமர ஜீவிதம் ஸ்வாமி அமுத வாசகம்
    பதித பாவனம் ஸ்வாமி பக்த ஸாதகம்
    ஓம் ஹரி ஓம்
    ஓம் ஹரி ஓம் .......

    நளின தெய்வதம் ஸ்வாமி மதன ரூபகம்
    நாக நர்தனம் ஸ்வாமி மார பக்திரம்
    பஞ்ச சேவகம் ஸ்வாமி பாஞ்ச ஜன்னியம்
    ஜீவா போதகம் ஸ்ரீ கிருஷ்ண மந்திரம் ..

    ஓம் ஹரி ஓம்
    ஓம் ஹரி ஓம் .......

    ReplyDelete
  3. ஆம் ஐயா! எம் எஸ் வி அவர்கள் ஒரு பெரிய சகாப்தம் தான். அவர் ஆன்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறேன்.

    ReplyDelete
  4. கலை துறையில்
    கால் பதித்த பெயர் விசுவநாதன்

    விசுவநாதன் முத்தமிழில்
    விளங்கி நிற்கும் பெயர்

    நாடகத்தில் பூர்ணம் "விசுவநாதன்"
    நடிப்பில் வசனத்தில் "விசு"

    இசையில்
    இந்த மெல்லிசை மன்னர் "விசுவநாதன்"

    இந்த பெயருக்கும் எனக்கும்
    இப்போ கலைதுறைக்கும் தொடர்பு உண்டு.

    ReplyDelete
  5. வந்தவரெல்லாம் தங்கி விட்டால் இந்த
    மண்ணில் நமக்கே இடமேது?
    வாழ்க்கை என்பது வியாபாரம் - அதில்
    ஜனனம் என்பது வரவாகும் - வரும்
    மரணம் என்பது செலவாகும்
    போனால் போகட்டும் போடா...!

    ReplyDelete
  6. வணக்கம் குரு,

    மெல்லிசை மன்னரின் ஆத்மா சாந்தியடைய உங்கலுடன் சேர்ந்து நானும் பிரார்த்திக்கிறேன்.

    நன்றி,
    செல்வம்

    ReplyDelete
  7. ஐயா ..இந்த இணைப்பில் பழங்காலத்து ஜோதிடநூல்கல் pdf வடிவில் கிடைக்கிறது..பயன்படுத்திக் கொள்ளாவும்..https://www.facebook.com/photo.php?fbid=1042753032409031&set=a.221921974492145.62054.100000230332057&type=1

    ReplyDelete
  8. நேற்று காலை செய்திகளை வாசித்தால் ஒரு அதிர்ச்சி. மெல்லிசை மன்னரின் மறைவு பற்றி. அவர் உடல் நலம் சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் இசைஞானி அவரை வந்து சந்தித்தது பற்றியெல்லாம் செய்திகள் படித்திருந்ததால் அவரது முடிவு நெருங்குகிறதோ என்று ஒரு அச்சம் இருந்தது. ஆனாலும் அவரது மறைவு பற்றிய செய்தி ஒரு சிறு கலக்கத்தை ஏற்படுத்தியது உண்மை. இசைஞானியின் இசையோடு வளர்ந்திருந்தாலும் மெல்லிசை மன்னரின் இசையும் எங்கள் தலைமுறையை பெரிதும் கவர்ந்தது என்பதில் ஐயமில்லை. அவரும் கவியரசரும் சேர்ந்து படைத்த விருந்துகளை உண்ட நமக்கு அவரது பிரிவு ஈடு செய்ய இயலாதது. 87 வயது காலம் வாழ்ந்து எண்ணற்ற இதயங்களுக்கு இசை சேவை செய்த இந்த மாமேதைக்கு இந்திய அரசு எந்த பத்ம விருதுகளையும் அளித்து கவுரவிக்க‌வில்லையே என்று எண்ணும் போதுதான் மனம் வலிக்கிறது. வாழ்க இந்த மாமேதையின் புகழ். அவரது ஆத்மா அமைதியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

    ReplyDelete
  9. /////Blogger hamaragana said...
    Vathiyar ayya vanakkam ...
    Real musical hero... Our total class students 1 minute silent for his soul. One request.. If his horoscope available please ..show inthe class./////

    நல்லது. உங்கள் பரிந்துரைக்கு நன்றி கணபதியாரே

    ReplyDelete
  10. ///Blogger Chandrasekaran Suryanarayana said...
    படம்: கிருஷ்ண கானம்
    இயற்றியவர் : கண்ணதாசன்
    பாடியவர்: எம் .ஸ் .விஸ்வநாதன்
    அமர ஜீவிதம் ஸ்வாமி அமுத வாசகம்
    பதித பாவனம் ஸ்வாமி பக்த ஸாதகம்
    ஓம் ஹரி ஓம்
    ஓம் ஹரி ஓம் .......
    நளின தெய்வதம் ஸ்வாமி மதன ரூபகம்
    நாக நர்தனம் ஸ்வாமி மார பக்திரம்
    பஞ்ச சேவகம் ஸ்வாமி பாஞ்ச ஜன்னியம்
    ஜீவா போதகம் ஸ்ரீ கிருஷ்ண மந்திரம் ..
    ஓம் ஹரி ஓம்
    ஓம் ஹரி ஓம் ......./////

    ஆஹா...! அற்புதம்! நினைவு படுத்தியமைக்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  11. /////Blogger kmr.krishnan said...
    ஆம் ஐயா! எம் எஸ் வி அவர்கள் ஒரு பெரிய சகாப்தம் தான். அவர் ஆன்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறேன்./////

    ஆமாம். அந்த நல்ல மனிதரின் ஆன்மா சாந்தியடையட்டும் கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  12. /////Blogger Visu Iyer said...
    கலை துறையில்
    கால் பதித்த பெயர் விசுவநாதன்
    விசுவநாதன் முத்தமிழில்
    விளங்கி நிற்கும் பெயர்
    நாடகத்தில் பூர்ணம் "விசுவநாதன்"
    நடிப்பில் வசனத்தில் "விசு"
    இசையில்
    இந்த மெல்லிசை மன்னர் "விசுவநாதன்"
    இந்த பெயருக்கும் எனக்கும்
    இப்போ கலைதுறைக்கும் தொடர்பு உண்டு./////

    ஏன் ஆன்மீகத்தை விட்டு விட்டீர்கள். வாரணாசியிலும் விஸ்வநாதன் இருக்கிறாரே!

    ReplyDelete
  13. /////Blogger Visu Iyer said...
    வந்தவரெல்லாம் தங்கி விட்டால் இந்த
    மண்ணில் நமக்கே இடமேது?
    வாழ்க்கை என்பது வியாபாரம் - அதில்
    ஜனனம் என்பது வரவாகும் - வரும்
    மரணம் என்பது செலவாகும்
    போனால் போகட்டும் போடா...!//////

    கரெக்ட். ஆனாலும் அவரது பிரிவு வலிக்கிறதே சுவாமி!

    ReplyDelete
  14. ///Blogger selvam velusamy said...
    வணக்கம் குரு,
    மெல்லிசை மன்னரின் ஆத்மா சாந்தியடைய உங்களுடன் சேர்ந்து நானும் பிரார்த்திக்கிறேன்.
    நன்றி,
    செல்வம்/////

    நல்லது. நன்றி செல்வம்!

    ReplyDelete
  15. //////Blogger thozhar pandian said...
    நேற்று காலை செய்திகளை வாசித்தால் ஒரு அதிர்ச்சி. மெல்லிசை மன்னரின் மறைவு பற்றி. அவர் உடல் நலம் சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் இசைஞானி அவரை வந்து சந்தித்தது பற்றியெல்லாம் செய்திகள் படித்திருந்ததால் அவரது முடிவு நெருங்குகிறதோ என்று ஒரு அச்சம் இருந்தது. ஆனாலும் அவரது மறைவு பற்றிய செய்தி ஒரு சிறு கலக்கத்தை ஏற்படுத்தியது உண்மை. இசைஞானியின் இசையோடு வளர்ந்திருந்தாலும் மெல்லிசை மன்னரின் இசையும் எங்கள் தலைமுறையை பெரிதும் கவர்ந்தது என்பதில் ஐயமில்லை. அவரும் கவியரசரும் சேர்ந்து படைத்த விருந்துகளை உண்ட நமக்கு அவரது பிரிவு ஈடு செய்ய இயலாதது. 87 வயது காலம் வாழ்ந்து எண்ணற்ற இதயங்களுக்கு இசை சேவை செய்த இந்த மாமேதைக்கு இந்திய அரசு எந்த பத்ம விருதுகளையும் அளித்து கவுரவிக்க‌வில்லையே என்று எண்ணும் போதுதான் மனம் வலிக்கிறது. வாழ்க இந்த மாமேதையின் புகழ். அவரது ஆத்மா அமைதியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்./////

    ஆமாம்! அந்த மேதையின் ஆத்மா சாந்தியடையட்டும்!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com