மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

27.12.13

வேண்டியதைத் தந்திட வேங்கடேசன் இருக்கையில், வேறு யார் வேண்டும்?

 
வேண்டியதைத் தந்திட வேங்கடேசன் இருக்கையில், வேறு யார் வேண்டும்?

பக்தி மலர்

இன்று மார்கழி மாதம் இரண்டாவது வெள்ளிக்கிழமை.
இன்று ஏழுமலையானைப் போற்றிப் பாடுவோம்.
திரு ராஜாஜி அவர்கள் எழுதி, கர்நாடக இசையரசி
திருமதி எம்.எஸ்.சுப்புலெட்சுமி அவர்களால்
பாடப்பெற்று புகழடைந்த பாடல் இது.
1969ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையில் ஒலித்தபாடல் இது.
ஆமாம், திருமதி.எம்.எஸ்.சுப்புலெட்சுமி அவர்களின் குரல்
அங்கேயும் ஒலித்து அனைவரையும் மெய்மறக்கச் செய்தது.
இந்தப் பாடலில் உள்ள மூன்று பத்திகளுமே மூன்று விதமான
ராகங்களில் ஒலிக்கும். அதையும் கவனியுங்கள்.

அன்புடன்
வாத்தியார்

----------------------------------------------------------
குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
குறை ஒன்றும் இல்லை கண்ணா
குறை ஒன்றும் இல்லை கோவிந்தா

குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
குறை ஒன்றும் இல்லை கண்ணா
குறை ஒன்றும் இல்லை கோவிந்தா

கண்ணுக்குத் தெரியாமல் நிற்கின்றாய் கண்ணா
கண்ணுக்குத் தெரியாமல் நின்றாலும் எனக்குக்
குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா

வேண்டியதைத் தந்திட வேங்கடேசன் என்றிருக்க
வேண்டியது வேறில்லை மறைமூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா

திரையின்பின் நிற்கின்றாய் கண்ணா
கண்ணா திரையின்பின் நிற்கின்றாய் கண்ணா - உன்னை
மறையோதும் ஞானியர் மட்டுமே காண்பார்
திரையின்பின் நிற்கின்றாய் கண்ணா - உன்னை
மறையோதும் ஞானியர் மட்டுமே காண்பார்
என்றாலும் குறை ஒன்றும் எனக்கில்லை கண்ணா
என்றாலும் குறை ஒன்றும் எனக்கில்லை கண்ணா
குன்றின்மேல் கல்லாகி நிற்கின்ற வரதா
குன்றின்மேல் கல்லாகி நிற்கின்ற வரதா
குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா

கலிநாளுக்கிரங்கி கல்லிலே இறங்கி
நிலையாகக் கோவிலில் நிற்கின்றாய் கேசவா
கலிநாளுக்கிரங்கி கல்லிலே இறங்கி
நிலையாகக் கோவிலில் நிற்கின்றாய் கேசவா
குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
யாதும் மறுக்காத மலையப்பா
யாதும் மறுக்காத மலையப்பா உன் மார்பில்
ஏதும் தர நிற்கும் கருணைக் கடல் அன்னை
என்றும் இருந்திட ஏது குறை எனக்கு
என்றும் இருந்திட ஏது குறை எனக்கு
ஒன்றும் குறையில்லை மறை மூர்த்தி கண்ணா
ஒன்றும் குறையில்லை மறை மூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா
கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா

------------------------------------------------
Our sincere thanks to the person who uploaded this song in the net 




வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
=========================================================

10 comments:

  1. குறை ஒன்றும் இல்லை


    அழகான பாடல் பதிவுக்குப் பாராட்டுக்கள்..!

    ReplyDelete
  2. அய்யா
    அருமையான பாடல் பதிவு.தயவு செய்து திருப்பாவை ஒலி நாடாவை ஒருதரம் பதிவிடவும்

    ReplyDelete
  3. சில மாறுபட்ட கருத்திருப்பதால்
    சிரம் தாழ்ந்த வணக்கங்களுடன்

    வருகை பதிவினை மட்டும்
    வழக்கம் போல் பதிவு செய்கிறோம்..

    வளமுடன் வளர்க
    நலமுடன் வாழ்க

    ReplyDelete
  4. sir, I am very happy on reading this, eventhough i had a intrest to learn astrology, now only i got a excellent guru, thats you. For the past 20 days i am reading your lessons from starting, very excellent and i am too happy. Now i am in Jan 2009, will come and join with the regular classes shortly. Thanks a lot for your service.
    S.Padmanabhan

    ReplyDelete
  5. //////Blogger இராஜராஜேஸ்வரி said...
    குறை ஒன்றும் இல்லை
    அழகான பாடல் பதிவுக்குப் பாராட்டுக்கள்..!////

    பாராட்டுக்கள் பாடிய அம்மையாரையே சேரும் சகோதரி!

    ReplyDelete
  6. /////Blogger Kalai Rajan said...
    அய்யா
    அருமையான பாடல் பதிவு.தயவு செய்து திருப்பாவை ஒலி நாடாவை ஒருதரம் பதிவிடவும்/////

    நல்லது. உங்கள் விருப்பத்தை நிறைவேற்றுகிறேன். நன்றி!

    ReplyDelete
  7. /////Blogger சே. குமார் said...
    அழகான பாடல்... அருமை...////

    பாராட்டுக்கள் பாடிய அம்மையாரையே சேரும்!

    ReplyDelete
  8. /////Blogger வேப்பிலை said...
    சில மாறுபட்ட கருத்திருப்பதால்
    சிரம் தாழ்ந்த வணக்கங்களுடன்
    வருகை பதிவினை மட்டும்
    வழக்கம் போல் பதிவு செய்கிறோம்..
    வளமுடன் வளர்க
    நலமுடன் வாழ்க/////

    மாறுபட்ட கருத்து என்ன என்பதைச் சொல்லியிருக்கலாமே சுவாமி? கேட்டுக்கொள்வோம் அல்லவா?

    ReplyDelete
  9. ///Blogger Padmanabhan Subbaraman said...
    sir, I am very happy on reading this, eventhough i had a intrest to learn astrology, now only i got a excellent guru, thats you. For the past 20 days i am reading your lessons from starting, very excellent and i am too happy. Now i am in Jan 2009, will come and join with the regular classes shortly. Thanks a lot for your service.
    S.Padmanabhan/////

    நல்லது. அப்படியே செய்யுங்கள் நண்பரே! வாழ்த்துக்கள்!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com