மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

31.5.12

Astrology எது நம்பிக்கைக்கு உரியது - வாக்கியமா? திருக்கணிதமா?


அங்கும் இங்கும் அலைபோலே - தினம்
ஆடிடும் மானிட வாழ்விலே
எங்கே நடக்கும் எது நடக்கும் - அது
எங்கே முடியும் யாரறிவார்!
-- கவியரசர் கண்ணதாசன்!
============================================
Doubt: எது நம்பிக்கைக்கு உரியது - வாக்கியமா? திருக்கணிதமா?

Doubts: கேள்வி பதில் பகுதி 20

நீங்களும் உங்கள் சந்தேகங்களும் - பாடம் எண் இருபது!

Question &  answer session
கேள்வி பதில் வகுப்பு
----------------------------------------------------
email.No.81

அருள் முருகன்,
தஞ்சையில் உள்ள சாஸ்த்ரா பல்கலைகழகத்தில்
ஜோதிடம் பயின்று கொண்டிருக்கும் மாணவர்
(ஒரு நல்ல கேள்வியைக் கேட்டு, என்னை விரிவாகப் பதில் எழுத வைத்தமைக்கு, அவருக்கு முதற்கண் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்!)

கேள்வி:
Sir, why so many conflicts and changes in your opinion within two years?
In the beggining stages of lessons, you told that thirukanitha panchanga is the right one by citing an example of horoscope of a child born in chennai. Later on you said to cast horoscopes by both the methods, and take vakiya panchanga if the lagna changes or else take thirukanitha. To my surprise in an answer given three days ago, you have told that for casting horoscopes vaakiya is only right one, thirukanitha is suitable only for mathematical calculations, why so many contradictions? As I am going to seriously pursue diploma course offered by Sastra University, Tanjore in Astrology I am really confused and surprised by the statements. My intention is not to blame you or find fault. But I tell openly what I feel, as in my horoscope Guru is in dhanus lagna. ( 15.07.1984, 5:20 pm, madurai).

நீங்கள் சொல்வது உண்மை. துவக்க காலங்களில், வகுப்பறையில், மாணவக் கண்மணிகளுக்கு, திருக்கணிதத்தைப் பயன்படுத்த அறிவுரை சொல்லியிருக்கிறேன். பிறகு, மாணவர்கள் எண்ணிக்கை
அதிகமாகி, உள்ளே நுழைந்தவர்களில் பலபேர்கள், தங்கள் வீடுகளில்
தங்கள் பெற்றோர்கள் எழுதிவைத்திருக்கும் ஜாதகத்திற்கும்,
கணினியில் கணிக்கும் ஜாதகத்திற்கும் லக்கினம் வித்தியாசமாக
இருக்கிறதே என்று கூறிய போது, நிலைமையை உணர்ந்தேன்.

அதாவது 1990ஆம் ஆண்டிற்கு முன்பாக எழுதப்பெற்ற ஜாதகங்கள் அனைத்தும் பொதுவாக வாக்கியமுறைப்படிதான் எழுதப்பெற்றிருக்கும். தமிழ்நாட்டு ஜோதிடர்கள் தங்களுக்கு வழிவழியாக வந்த வாக்கியப் பஞ்சாங்கத்தை வைத்துக் கணித்துத்தான் எழுதியிருப்பார்கள். இன்றும் எழுதுவார்கள்.
அதனால் கணினியில் கணிக்கும்போது சிலருக்கு (எல்லோருக்கும் அல்ல) லக்கினம் வித்தியாசப்படும்

யார் அந்த சிலர்?

ஒரு லக்கினத்திற்கு 30 பாகைகள் - காலம் சுமார் 120 நிமிடங்கள் - 2.25 நட்சத்திரங்கள் - 9 நட்சத்திரப்பாகைகள்.

லக்கினத்தின் கடைசி நட்சத்திரப்பாகையின் பின் பகுதியில், அதாவது அந்த லக்கினத்தின் முடிவில் பிறக்கும் ஜாதகக் காரர்களுக்கு, லக்கினம் மாறிவிடும். திருக்கணிதத்தில் கடக லக்கினம் என்பது, வாக்கியத்தில் சிம்ம லக்கினம் என்று மாறிக்காட்சியளிக்கும்.

அதற்குக் காரணம் திருக்கணிதத்திற்கும், வாக்கியத்திற்கும் உள்ள பாகை வித்தியாசம் 1 பாகை 57 விநாடிகள். மணியில் சொல்வதென்றால் 6 நிமிடமும் 28 விநாடிகளும் ஆகும். நட்சத்திரத்தின் அளவு 13.3 பாகைகள் அதை 4ஆல் வகுத்தால் ஒரு பாகையின் அளவு 3.33 பாகைகள். மணியில் சொன்னால் 120 நிமிடங்கள் வகுத்தல் 9 பாதங்கள் = 13.33 நிமிடங்கள்.

அதனால் கடைசிப் பாதத்தின் பின் பகுதியில் (அதாவது காலசந்தியில்) பிறந்த ஜாதகனுக்கு, இரண்டு முறைகளிலும் கணித்துப் பார்த்தால் மேலே கூறியுள்ளபடி லக்கினம் மாறியிருக்கும். இது எல்லாக் கால சந்திப் பிறப்புக்களுக்கும் உள்ள பிரச்சினை!

அதற்கு என்ன தீர்வு?

காலசந்திப்புப் பிறப்புக்களுக்கு, இரண்டு லக்கினங்களின் குணங்களும் இருக்கும். கேரளா - தமிழ்நாடு எல்லையில் உள்ள மக்கள் இரண்டு மாநில மொழிகளையும் சரளமாகப் பேசுவார்கள். இரண்டு மாநிலக் கலாச்சாரங்களும் அவர்கள் வாழ்க்கையில் கலந்திருக்கும். அதுபோலத்தான் இதுவும்.

அதனால் காலசந்திப்பில் பிறந்தவர்கள், அந்த இரண்டில் எந்த முறையை வேண்டுமென்றாலும் பின்பற்றலாம். பெரிய வித்தியாசம் இருக்காது.
-------------------------------------------------------------------
சரி, எந்தமுறை சரியானது?

அது பற்றி பெரிய யுத்தம் நடத்தும் அளவிற்கு இரண்டு முறைகளுக்குமே ஆதரவாளர்கள் இருக்கிறார்கள்.

முதலில் திருக்கணிதத்திற்கும் (Lahiri Ayanamsa), வாக்கியத்திற்கும் (Raman's Ayanamsa) உள்ள வேறுபாட்டைப் பார்ப்போம்

Lahiri Ayanamsa.its value is 23 degrees, 51 minutes, 10 seconds.
Raman's Ayanamsa its value is 22 degrees, 24 minutes, 44 seconds.
Diffrence 1 degree, 27 minutes

இந்த வித்தியாசத்தின் காரணமாக நட்சத்திரத்தின் ஒரு பாதத்தில் பதிப்பாகம் வித்தியாசம் இருக்கும். ஒரு ராசியில் உள்ள ஒன்பது பாதங்களில் கடைசி பாதத்தில் பிறந்த ஜாதகனின் நட்சத்திரப்பாதம் (உதாரணத்திற்கு) லஹிரியில் சிம்ம லக்கினம் (உத்திரம் ஒன்றாம் பாதம்) என்றும், ராமன் முறையில் கன்னி லக்கினம் (உத்திரம் 2ம் பாதமாகவும்) என்றும் இருக்கும்.

ஜாதகன் குழம்பிப்போவான். தான் சிம்ம லக்கின ஜாதகனா? அல்லது கன்னி லக்கின ஜாதகனா என்று குழம்பிப்போவான். கால சந்திப்பில் (அதாவது லக்கின சந்திப்பில்) பிறந்த ஜாதகர்களுக்கு இந்தக் குழப்பம் இருக்கும்.

அதேபோல ராசி சந்திப்பில் உள்ள, புதன், சுக்கிரன் போன்ற கிரகங்களும் இடம் மாறி (ராசி மாறி) உட்கார்ந்து நம் கழுத்தை அறுக்கும்!

என்னுடைய ஜாதகத்தில் அந்தக் குழப்பம் உண்டு. நான் காலசந்திப்பில் பிறந்தவன். லஹிரி (திருக்கணித) முறையில் என்னுடைய லக்கினம் கடகம் என்று வரும். வாக்கிய முறையில் (ராமன் அயனாம்சப்படி) சிம்மம் என்று வரும்.

என் அன்னைவழிப் பாட்டனார், அந்தக் காலத்தில் மிகவும் பிரபலமான அரியக்குடி ராமானுஜ ஐயங்கார் என்னும் பிரபல ஜோதிடரிடம், எங்கள் ஜாதகத்தை எல்லாம் கணித்து எழுதிவைத்துள்ளார். அதில் சிம்ம லக்கினம் என்றுதான் குறிப்பிடப்பட்டுள்ளது. 1982ஆம் ஆண்டு பெங்களூர் வெங்கட்ராமன் (அவர்தான் இந்த ராமன் அயனாம்சத்தின் நந்தை என்று பகழப்படுபவர். இந்தியாவின் முதல் நிலை ஜோதிடராகத் திகழ்ந்தவர்) அவர்களுக்கு என்னுடைய பிறப்பு விவரங்களை அனுப்பி ஜாதகத்தை எழுதி வாங்கினேன்.(பணம் அனுப்பித்தான் சுவாமி)

அதுவும் என்னுடைய பாட்டனார் எழுதி வைத்துள்ள ஜாதகமும் (மிகத் துள்ளியமாகச்) சரியாக இருந்தது. பின்னால்தான் தெரிந்தது. அவர் இந்தியாவின் புராதன ஜோதிட முறையான வாக்கியப் பஞ்சாங்கத்தைத்தான் உபயோகிக்கிறார் என்று! அதனால் முழு நம்பிக்கையுடன் நானும் அதைத்தான் உபயோகித்து வருகிறேன். எனக்கு என்னுடைய லக்கினத்தின்படி பலன்களும் சரியாக உள்ளன! (அதானால் அந்த நம்பிக்கை பலமடங்கு கூடிவிட்டது)

என்னைப் பொறுத்தவரை, அவர்தான் அற்புதமான ஜோதிட ஞானம் உடைவராகத் திகழ்ந்தவர். விற்பன்னர். ஜோதிடத்தின் காரகராகப் போற்றப்பெற்றவர் (authority of vedic astrology). எனக்குத் தெரிந்து, தமிழ் நாட்டிலுள்ள அத்தனை ஜோதிடர்களும் வாக்கியப் பஞ்சாங்கத்தைத்தான் உபயோகிக்கின்றார்கள்.

இந்தக் கணினியில் ஜோதிடம் கணிக்கும் முறைகள் எல்லாம் 1990ஆம் ஆண்டிற்குப் பிறகுதான் நமது பிரதேசத்திற்குள் அடியெடுத்து வைத்தது.

ஆகவே அதற்கு முன்பாகப் (அதாவது 1990ற்கு முன்பாகப்) பிறந்தவர்கள் அனைவருடைய ஜாதகங்களும் வாக்கிய முறையிலேயே கணிக்கப் பெற்றதாக இருக்கும்.

கணினி ஜாதகத்தில் உள்ள option தெரியாமல், திருக்கணிதத்தில் கணித்துவிட்டு, பல இளைஞர்கள் என்னிடம் லக்கினம் மற்றும் கிரக அமைப்புக்கள், தங்கள் பெற்றோர்கள் கணித்து அல்லது எழுதி வைத்துள்ளதுபோல இல்லையே எனும்போது, நான் அவர்களுக்கு, உங்கள் பெற்றோர் எழுதிவைத்துள்ளதையே உபயோகியுங்கள் என்று சொல்வேன்.

ஆனால், தற்சமயம் உள்ள கணினி மென்பொருட்களில், வாக்கிய முறைகளிலும் கணிக்கும் வசதி வந்துவிட்டதால், அனைவருக்கும் அதன்படியே கணிக்கும்படி பரிந்துரைக்கிறேன்.

வாக்கிய முறைப் பஞ்சாங்கம் நூற்றுக் கணக்கான ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளது. முனிவர்களால் உருவாக்கப்பெற்றது. அதை நீங்கள் அனைவரும் நம்பலாம். திருக்கணிதத்தை மறந்துவிட்டு, நீங்கள் அனைவரும், வாக்கிய முறையில் உங்கள் ஜாதகத்தைக் கணித்து/எழுதி வைத்துக் கொள்வது நல்லது!

இந்த இரண்டு முறைகளுக்கும் உள்ள வித்தியாசம் சுமார் ஆறரை நிமிடங்கள் மட்டுமே எனும்போதும், நமது வீடுகளில் அந்தக் காலத்தில் இருந்த கடிகாரங்களை நம்பி அவர்கள் பிறந்த நேரத்தைக் குறித்துவைத்தார்கள் - அது 5 நிமிடங்கள் முன் பின்னாக நேரத்தைக் காட்டவில்லை என்பதற்கு ஆதாரம் இல்லாததாலும், நான் அலட்டிக்கொள்ளாமல், இரண்டு முறைகளுக்குமே கொடிகாட்டி வருகிறேன்.

ஆகவே பழைய பிறப்புக்களுக்கு, அவரவர் விருப்பப்படி எதை வேண்டு மென்றாலும் உபயோகியுங்கள். சராசரியாக 9 பேர்களில் ஒருவர்தான் காலசந்திப்பில் பிறந்திருப்பார். அவருக்கு மட்டும்
இரண்டு மனைவிகள். அதாவது இரண்டு லக்கினங்கள்:-))))))
-----------------------------------------------------------
சில இடங்களில் வேஷ்டியுடன் செல்வது உபயோகமாக இருக்கும். சில இடங்களில் கால்சட்டையுடன் (pant)செல்வது உபயோகமாக இருக்கும். நீங்கள் ஒரு சமயம் வேஷ்டி அணிந்து கொள்கிறீர்கள், ஒரு சமயம் கால் சட்டை அணிந்து கொள்கிறீர்கள் என்று கேட்டால் நான் என்ன சொல்ல முடியும்? ஒரே வரியில், என் வசதிக்காக அணிந்து கொள்கிறேன் என்றுதான் சொல்ல முடியும். தேவகோட்டையில் வேஷ்டிதான் செளகரியமான ஆடை. கோவையில் கால்சட்டைதான் செளகரியமான ஆடை.

இந்த இரட்டைமுறை கணிக்கும் வசதி ஆரம்பகால மென்பொருட்களில் இல்லாததால், நான் கணினி ஜாதகங்களுக்கு திருக்கணிதத்தை சிபாரிசு செய்தேன். இப்போது வந்துவிட்டதால், குழப்பம் இல்லாமல் இருக்க வாக்கியமுறையையைச் சிபாரிசு செய்கிறேன்.

விளக்கம் போதுமா அன்பரே?
----------------------------------------------------------------------
உபரித் தகவல்கள்:

கணிதம், வானவியல், ஜோதிடம் ஆகிய மூன்றும் இந்தியாவில் இருந்துதான் மற்ற நாடுகளுக்குப் பரவியது. நமது நாட்டிற்கு முற்காலத்தில் வணிகத்திற்காக வந்த கிரேக்கர்கள் மற்றும் சீனர்கள் மூலமாகப் பரவியது.

நமது ஜோதிடம் வேதகாலத்தில் உருவானது. அதை Indian Vedic Astrology என்பார்கள். நமது ஜோதிடமுறை சந்திரனையும், அதன் சுற்றுப்பாதையில் உள்ள நட்சத்திரங்களையும் அடிப்படையாகக் கொண்டது. நமது முறைக்கு Sidereal astrology என்று பெயர்.

மேலை நாட்டவர்களின் ஜோதிடம் சூரியனின் எழுச்சியை அடைப்படையாகக் கொண்டது. அதை அவர்கள் Sun Signs என்பார்கள். அவர்களுடைய முறைக்கு Tropical astrology என்று பெயர்.

The difference between the Tropical ( Western ) & The Sidereal ( Indian ) Zodiacs is round about 23 degrees this year. Sidereal Astrology is based on the immovable Zodiac- the Sidereal Zodiac - and Western Tropical Astrology is based on the Tropical Zodiac which is movable.

Jyotish (Sanskrit meaning “Science of Light”), is based on the Sidereal, or Nirayana, zodiac, which is fixed in relation to the stars, as opposed to the symbolic Tropical, or Sayana, zodiac, which is based on the Vernal, or Spring, Equinox. The difference between the two zodiacs lies in the ayanamsa, the difference in degrees and minutes between 0° Aries in the sidereal zodiac, and the Vernal Equinox. Since the earth's rotational axis moves slowly in a circular, or “precessional,” motion, the Vernal Equinox, the point where the Sun crosses the celestial equator each year, moving from south declination to north declination, never quite returns to its starting place.
---------------------------------------------------------------------------------------------

Unlike Western astrology that is based on the Tropical zodiac, the Vedic system of astrology (jyotish) employs the Sidereal (or true) position of the planets. The difference between the two, due to the precession of equinox, is called the "Ayanamsa".

However the apparent position of the planets (including Sun) in relation to the constellations is subject to this precession of the equinox which, basically, is the earth's slight backward movement through the constellations (aprox. 50.25 seconds per year) as it wobbles on it's axis.

There are several different Ayanamsa in use today but the one most widely used by traditional astrologers is the Lahiri ayanamsa which is sanctioned by the Indian government. This puts the degree of precession for (Oct) 2002 at approximately 23:53:26.

இந்த லஹிரி அயனாம்சம் என்பதைத்தான் நாம் திருக்கணிதம் என்கிறோம். கணினிகளில் இதன் முறைப்படி கணிப்பதற்கு option கொடுக்கப்பட்டிருக்கும். வாக்கியம் என்பது இதற்கெல்லாம் முற்பட்டது. காலம் காலமாக நாம் பாவிப்பது (உபயோகிப்பது)
---------------------------------------------------------------------------------
URL for ayanamsa calculation
---------------------------------------------------------------------
கணினி மென் பொருட்களில் இரண்டு முறைகளுக்கும் உள்ள வசதியைக் (option) காட்டும் படங்கள் கீழே உள்ளன. படஙகளின் மீது கர்சரை வைத்து அழுத்தினால், படங்கள் பெரிதாகத் தெரியும்!


1. லஹரி முறை (அதாவது திருக்கணித முறை)

2. ராமன் அயனாம்ச முறை (வாக்கிய முறை)

3. அயனாம்சத்தைக் கண்க்கிட உதவும் தளம்

4. ஒரு குறிப்பிட்ட நேரத்தில் பிறந்த ஜாதகத்திற்கு லஹரி மற்றும் வாக்கிய முறையில் கணிக்கப்பெற்ற ஜாதகத்தின் கிரக பாதாச்சாரங்கள் (லக்கினத்தைக் கவனியுங்கள்) இரண்டு முறைகளுக்கும் உள்ள , கிரக பாகைகளைக் கவனியுங்கள்

அதே குறிப்பிட்ட நேரத்தில் பிறந்த ஜாதகத்திற்கு லஹரி முறையில் கணிக்கப்பெற்ற ஜாதகத்தின் ராசிச் சக்கரம் (லக்கினத்தைக் கவனியுங்கள்)

அதே குறிப்பிட்ட நேரத்தில் பிறந்த ஜாதகத்திற்கு வாக்கிய முறையில் கணிக்கப்பெற்ற ஜாதகத்தின் ராசிச் சக்கரம் (லக்கினத்தைக் கவனியுங்கள்)

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

(தொடரும்)

அன்புடன்
வாத்தியார்
-------------------------------------------------------------------------------
இன்றைய பொன்மொழி:

Failure seldom stops you, What stops you is the fear of failure.
------------------------------------------------------------------------
வாழ்க வளமுடன்!


44 comments:

  1. எல்லாம் சரி ஐயா. வாக்கிய பஞ்சாங்கத்திற்கும், ராமன் அயனாம்சத்திற்கும் எந்த சம்பந்தமும் இருப்பது போல் தெரியவில்லை. அதை சற்று கவனியுங்கள். ராமன் அயனாம்ச முறைப்படி குரு பெயர்ச்சி மே 15ம் தேதி நடந்ததாக இருக்கிறது. வாக்கிய முறைப் படி மே 17ம் தேதியாக இருக்கிறது.

    ReplyDelete
  2. ஐயாவிற்கு வணக்கம்!

    மிகவும் எளிதாக ஜோதிட மாணாக்கர்களுக்கும்,மற்றவர்க்கும் விளக்கம் அளித்துள்ளமைக்கு நன்றி!

    ReplyDelete
  3. விளக்கம் தரமாக உள்ளது.

    நன்றிகள்.

    ReplyDelete
  4. குருவிற்கு வணக்கம்
    நன்றாக விளக்கம் கொடுத்துயிருக்கிர்கள்

    படிக்கவேண்டும் படித்துகொண்டேயிருக்க
    வேண்டும்.
    நன்றி

    ReplyDelete
  5. வாக்யம் அல்லது திருகணித பஞ்சாங்க அடிப்படையில் லக்னங்கள் வேறுபடும்பொழுது
    ஒரு பஞ்சாங்க அடிப்படையில் கன்னி லக்னமாகவும், இன்னொன்றின் அடிப்படையில்
    துலா லக்னமாகவும் இருப்பது, லக்ன சந்தியாக எடுத்துக்கொள்ளவேண்டும் என பொருள்படும்
    வகையில் எழுதியிருக்கிறீர்கள். ( நான் புரிந்து கொண்ட வகையில் )

    இது அன்னியில், ஒரே பஞ்சாங்க அடிப்படையிலும், உதாரணமாக, ஒருவன் லக்னம் ரேவதி 4ன் இறுதியில், அதுவும்
    கிட்டத்தட்ட, அசுவதி 1ம் பாதம் துவங்கும் நிலையில் பிறந்திருந்தால் மீன மேஷ லகன சந்தியில் லக்னம் இருக்கும் வாய்ப்புகள் அதிகம்.

    அண்மையில் ஒரு ஜாதகத்தில் லக்னம் தீர்க்காம்சம் பா.க.வி.149.59.10 எனக்குறித்து சிம்மம் உத்திரம் 1 ம் பாதம் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. பிறந்தது ஒரு கிராமத்தில். தோராயமாக நேரம் சொல்லப்பட்டதாகத் தெரிந்தது. ஜாதகரின்
    வாழ்வின் நிகழ்வுகள் சிம்ம லகனமா இருக்குமா என்ற கேள்விக்குறியையும் எழுப்பியது.

    சந்தி என கிரந்தங்களில் கூறப்படுவது இது போன்றவைகளைத் தான் குறிக்கின்றது என பலர் சொல்கிறார்கள்.
    இந்த மாதிரியான சந்தர்ப்பங்களில் ராசி சக்ரத்தை அடுத்து, ஸ்ரீபதி பத்ததியில் குறிப்பிட்டது போல, ஒரு பாவ‌
    சக்கிரத்தை வரைதல் அதன் அடிப்படையில் பலன்களைச் சொல்தல் சரியாக இருக்கும் என்றும் கருத்து
    அறிந்தோர் இடையே நிலவுகிறது. பாவ சக்ரம் எப்படி கணக்கிடுவது என்பதை நான் சொல்லவேண்டியதில்லை. நன்றாகத்தெரிந்தது ஒன்றே.
    , ராசியில் 8 ல் உள்ள சுக்ரன் பாவத்தில் 7 ல் இருக்கிறான். அப்பொழுது 7ம் பாவ பலன்கள் அஷ்டமாதிபன் தசையில் நடக்க வாய்ப்புகள் உள்ளன.

    சந்திகளில் முக்கியத்துவம் வாய்ந்தது, கடக-சிம்மம், விருச்சிக-தனுசு, மீனம் - மேஷம்.

    இவைகளில் மீன மேஷ சந்தியில் பிறந்தவர்கள் அல்லாடுவர்கள் அதிகம

    சந்திலே நிக்கறேண்டா சனீச்வரா ! என நவகிருஹ சன்னத்தியில் ஒருவர் அண்மையில் சத்தமாகச் சொன்னார்.
    பாவமாக இருந்தது.

    நீரில் இருந்து நெருப்புக்குத் தாவும் நேரத்தில் பிறந்த லக்ன சந்திக்காரர்களை
    பிள்ளையாரப்பா !! காப்பாத்துடா !!

    சுப்பு தாத்தா.

    ReplyDelete
  6. ஜோதிடம் அறிந்துக்கொள்ள வந்த என் போன்ற புதியவர்களுக்கு இந்த பிரச்சினை குழப்பம் உண்டு பன்னியது. இந்த பதிலை பல முறை நான் திரும்ப திரும்ப படித்து பார்த்துள்ளேன்.

    இன்றைய பகுதி பழைய படத்தை புதுக்காப்பியில் பார்த்தது போல் இருந்தது.

    எங்கள் பக்கத்தில் (சிதம்பரம்) வாக்கியம் முறைதான். வயதான ஜோதிடர்கள் இன்றைக்கும் இதைதான் பயன் படுத்துகிறார்கள். ஆனால் புதிதாக வந்த இளம் வயது ஜோதிடர்கள் கனினியில் லஹிரியைதான் கனிக்கிறார்கள்.

    வாத்தியார் சொல்படி கேட்கும் மாணவன் என்பதால் நான் வாக்கிய பஞ்சாங்கத்தையே பின்பற்றுகிறேன்.

    எனக்கு ஜோதிடம் தெரியாது என்பது வாத்தியாருக்கும் நனகு தெரியும், தெரிந்து கொள்ளவே வந்துள்ளேன். ஜகன்னாத் ஹொராவில் உள்ள ராமன் அயனாம்சத்திற்கும், ஊரில் வாக்கியம் முறையில் கனித்த ஜாதகத்துக்கும் சில வேருபாடுகள் உள்ளது.இது எனக்கு மேலும் குழப்பமாக தெரிகிறது.

    ஆனால் www.astraura.org இந்த தளத்தில் ஜாதகம் கனிக்க பல option இருக்கிறது. இதில் லஹிரி, ராமன், திருக்கனிதா, வாக்கியம், அனைத்தும் இருக்கிறது இதில் கனித்தால் ராமனுக்கு வேறும், வாக்க்யாவிற்கு வேறும் என்று இரண்டு மாறுபட்ட ஜாதகம் கிடைக்கிறது.

    ஊரில் வாக்யம் முறையில் கனித்ததற்கும், இதில் உள்ள வாக்கியத்திற்கும் 100 சதவீதம் சரியாக இருக்கிறது,

    அய்யா அவர்கள் இதனை எனக்கு கொஞ்சம் தெளிவாக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்,

    ReplyDelete
  7. விளக்கம் எளிமையாக இருந்தது.ஆனால் ராமன் அயனாம்ச முறை, வருடம் - 360 நாட்கள், தென்னிந்திய முறைப்படி மே 11ம் தேதி, மாலை 6 மணிக்கு, குரு ரிசபத்திற்கு பெயர்ச்சி ஆகிவிட்டதாக கணிப்பு வருகிறது. ஜகன்னாத மென்பொருளிலும் ராமன் அயானம்சத்தை தேர்வு செய்து கணித்தால் இதே போல்தான் வருகிறது.இந்த 6 நாட்கள் வித்யாசம் எதனால் வருகிறது?

    ReplyDelete
  8. இன்று சுழல விடும்
    இந்த பாடல் சுவைக்க ரசிக்க

    ஆசையே அலை போலே
    நாமெல்லாம் அதன் மேலே

    ஓடம் போலே
    ஆடிடுவொமே.....வாழ்நாளிலே

    பருவம் என்னும் காட்டிலே
    பறக்கும் காதல் தேரிலே

    ஆணும் பெண்ணும் மகிழ்வார்...
    சுகம் பெறுவார்...அதிசயம் காண்பார்!

    நாளை உலகின் பாதையை இன்றே.........
    யார் காணுவார்

    வாழ்க்கை எல்லாம் தீர்ந்ததே
    வடிவம் மட்டும் வாழ்வதேன்...

    இளமை மீண்டும் வருமா....
    மணம் பெறுமா.....முதுமையே சுகமா...

    காலம் போகும் பாதையை
    இங்கே...........யார் காணுவார்

    சூறைக்காற்று மோதினால்
    தோணி ஓட்டம் மேவுமோ

    வாழ்வில் துன்பம் வரவு...
    சுகம்செலவு....இருப்பது கனவு

    காலம் வகுத்த கணக்கை
    இங்கே........யார் காணுவார்

    ReplyDelete
  9. ////////Blogger அய்யர் said...
    ///Bhogar said...
    தற்பொழுது சாஸ்திரங்களையும் விஷமாக்கி கொண்டிருக்கிறார்கள்.///
    உண்மை உண்மை...
    அதை விட முக்கியமாக
    தான் சொல்வதே சாத்திரம் என்று வேறு சொல்லிக் கொள்கிறார்கள்...
    தான் செய்வதினை சாத்திரத்தில் தேடி எடுத்து இது சாத்திரத்தில் சொல்லி இருக்கிறது என்பவர்கள் அநீதிமான்கள்
    சாத்திரத்தில் உள்ளபடி வாழ்க்கையினை நடத்துபவர் இருப்பவர் எண்ணிக்கையில் குறைவு
    தோழர் புவனேஷ்வர் மற்றும்
    தோழி பார்வதியாரின் கருத்துக்களுக்கு
    நாளைய பின் ஊட்டத்தில் சொல்கிறோம்..
    வணக்கங்களுடன்
    வழக்கமான வாழ்த்துக்களுடன்/////

    நல்லது. வந்து சொல்லுங்கள் சுவாமி!.////


    நேற்றைய வகுப்பில் கிடைத்த
    அனுமதியுடன்...

    இவருக்கு இது தெரியுமா என்று
    இன்று ஒரு செய்தி

    அது இருக்கட்டும்
    அந்த செய்திகளை சொல்கிறோம்

    தோழர் புவனேஷ் சொல்வது
    கேவல அத்வதைம்

    இந்த கருத்து அறிவுக்கு ஏற்புடையதாகாது
    நான் கடவுள் என்றால் ஊரில் அவனவன் தொடங்கிவிடுவான்...

    தோழருக்கு ஒரு வேண்டுகோள்
    முடிந்தால் அறிவுக்கு ஏற்புடையதை சொல்லுங்கள் இல்லையென்றால் அமைதி கொள்ளுங்கள்...

    வேதத்தில் உள்ளது உபநிடத்தில் உள்ளது என்று சாதகமானதை கையில் எடுத்துக் கொண்டு சமய சீர்குலைவுகள் செய்யாதீர்கள்..

    மீறி அப்படித்தான் செய்வேன் என்றால்
    அதனால் பாதிப்பு இறை சிந்தனையாளர்களுக்கோ இறைவனுக்கு இல்லை...

    அதன் பாதிப்பு உங்களுக்குத்தான்...
    அது உங்களுக்கு வந்து சுடக் கூடாது என்ற நல்லெண்னத்தில் சொல்கிறோம்..

    கடவுள் கொள்கையில் அடிப்படை தெரியாமல் பேசுவது
    building a castle in the air and lying foundation later என்பது போல் இருக்கும்..

    மற்றவர்களுக்கு தெரியாத வடமொழியில் இரண்டு சுலேகங்களை சொல்லி அதற்கு பொருளையும் தனக்கு சாதகமாக சொல்லி இத்தனை 100 ஆண்டுகளை கடத்தி விட்டீர்களே... இன்னும் எத்தனை காலம் இந்த வேலைகள்...

    எதற்காக இந்த வேலைகள்..
    பாரட்டுக்களையும் புகழையும் யாசிக்க இப்படி ஒன்றை செய்து தான் ஆகனுமா?

    அறிவுக்கு விளக்கம் கேட்டோம்
    அமைதி தாண்டவமாடுகிறது

    உயிருக்கு விளக்கம் கேட்டோம்
    உண்மை ஊமையாகிவிட்டது

    இப்படித்தான் அவர்களிடம்
    பகுத்தறிவுக்கு விளக்கம் கேட்டோம்

    பயந்து ஓடி விட்டனர் அறிவுக்கு ஏற்ப அவர்களால் பதில் சொல்ல
    தெரியவில்லை என்பதால்..

    முடிந்தால் சரியானதைசொல்லுங்கள்
    முடியாது அல்லது தெரியாது என்றால்

    மௌனமாக இருங்கள்..(அமைதி வேறு மௌனம் வேறு - பொருள் புரிந்தால் மகிழ்ச்சி இல்லையெனில் புரிந்து கொள்ளும் வரை அமைதியாக காத்திருப்போம்)

    இது சரி இல்லை என்று சொல்லும் உமக்கு எது சரி என சொல்லத் தெரியுமா என கேட்பவர்களுக்காக ஒரு செய்தி ...
    சொன்னால் புரிந்து கொள்ள தெரியுமா
    ம்.. என்றால் empty mug உடன் வாருங்கள்...

    தோழி பார்வதியாருக்கு அடுத்த பின் ஊட்டத்தில் பதில் தருகிறோம்

    ReplyDelete
  10. தோழி பார்வதியார்
    தற்சமயம் வாரமலரில்
    ஷன்மதங்களை பற்றி எழுதி வருகிறார்

    அவர்கள் பதிப்பில் எதையும் ஆதரிக்க வில்லை எதையும் எதிர்க்க வில்லை..

    அங்கங்கே இது இப்படி இருக்கிறது என சொல்கிறார் அதனாலே..

    முன்னரே அவருக்கு சொன்னோம்
    ஆறையும் கடக்கட்டும் அப்புறம் கருத்து சொல்கிறோம் என்று..

    ஷன்மதங்களை தொடர்ந்து அவர்
    புத்தம் சமனம் இஸ்லாம் கிருத்துவம்
    கடவுள் மறுக்கும் கொள்கை என எல்லாவற்றையும் எழுதி முடித்த பிறகு...

    இவைகளில் சொன்னவையெல்லாம் உண்மையில்லை என சொல்லுவார்கள் என்றே காத்திருக்கின்றோம்..

    TAO OF PHYSICS by FRITJ of CAPRO என்ற புத்தகத்தில் கடைசி பக்கத்தில் எழுதப்பட்டிருக்கும் வாசகம்..

    இதில் சொல்லப்பட்டவை எல்லாம் உண்மையல்ல அது போல

    தோழி பார்வதியாரும் சொல்லுவார் என எதிர்பார்க்கின்றோம்..

    பரபக்கம் பேசுவதில் இது ஒரு மரபு அதனை கையாலும் அவர் இதனை சொல்லும் வரையில் அமைதி கொள்கிறோம்..

    அறிவுக்கு ஏற்றுக் கொள்ள முடியாதவைகள் இருந்தால் எதிர்க்கவும் தயங்க மாட்டோம்

    அஞ்சுவது யாதொன்றும் இல்லை
    என நமது வகுப்பறை தோழர் பண்புள்ள நரியார் சொல்வது போலவே..

    எழுதுங்கள்.. சொன்னதை
    எண்ணிப் பார்த்து எழுதுங்கள்..

    எழுத்தின் முடிவில்
    எதிர்பார்த்ததையில்லை எனில்

    மறுக்கவும்
    மாற்றவும் தயங்கமாட்டோம்...

    ReplyDelete
  11. கேழ்வரகில் நெய் வடிகிறது என்றால்
    கேட்பவருக்கு மதி எங்கே என கேட்பார்கள்

    அது போல
    தமிழுக்கு சங்கம் அமைத்தவன்
    தமிழ் தோன்றிய வரலாறு
    கல்தோன்றி மண் தோன்றா காலத்தில் முன் தோன்றி மூத்த குடியில் தோன்றியவன் மனிதன்..
    என எதுவும் அறியாத இவர் சொல்வது எப்படி சரியாக இருக்கும்...

    திருக்குறளில் கடவுள் என்ற சொல் இல்லை என்பதற்காக திருவள்ளுவர் கடவுள் கொள்கையை மறுக்கின்றார் என்று சொன்னால் எப்படி அறிவுக்கு பொறுந்தாதோ அப்படியே இவர் சொல்லும் இந்த கருத்தும்...

    துவர் ஆடை உடுத்துவது
    நம் கலாச்சாரத்தில் இல்லையே..

    இதற்கும் பொய்யான ஒரு கருத்தை சொல்லப் போகிறார்களா..
    அதற்கும் வடமொழி சுலோகம் ஒன்றை சொல்லி ஏமாற்றப் போகிறார்களா..

    எதையும் logicalஆக விளக்கத் தெரியாத இவர்களை expelled out செய்ய வேண்டும்

    அது கூடாது என சொல்ல வடமொழி வேதத்தில் உள்ளது என film காட்டினால் ஏமாறுவதற்கு இங்கு யாரும் கோழையில்லை...

    இவரை இங்கிருந்து வெளியேற்ற
    கூட்டு பிரார்த்தனையில் கலந்து கொள்ள வகுப்பறை தோழர்களை அன்புடன் அழைக்கின்றோம்...

    அவரவர் இருப்பிடத்திலிருந்தே இந்த பிரார்த்தனையில் கலந்து கொள்ளலாம்..
    ஒரு மின்னஞ்சல் மட்டும் போதும்
    arulalaya@gmail.com

    சமயத்திற்கு இழுக்கு ஏற்பட அனுமதிக்கலாமா..
    தோழர்களே.. வாருங்கள் திருவருளின் துணையுடன் வெல்வோம்...

    ReplyDelete
  12. அயனாம்சம் என்பதற்கும் பஞ்சாங்க வகைக்கும் வேறுபாடுகள் உள்ளன என்று கருதுகிறேன்.

    வாக்கிய பஞ்சாங்கம் என்பது வருடத்திற்கு 360 நாட்கள் என்ற கணக்கை அடிப்படையாகக் கொண்டது. திருக்கணித பஞ்சாங்கம் என்பது வருடத்திற்கு 365.25 நாட்கள் என்ற முறையை அடிப்படையாகக் கொண்டது. வாக்கிய பஞ்சாங்கம் முனிவர்களின் ஞான திருஷ்டி கணிப்புகளை அடிப்படையாகக் கொண்டது. திருக்கணிதம் பிளானடோரியம் கணக்குகளை அடிப்படையாகக் கொண்டது.

    அயனாம்சம் என்பது ஒரு வகையான அட்ஜஸ்ட்மென்ட்.

    மேற்கத்திய ஜோதிடம் ராசிகள் அசையும் தன்மை கொண்டவை என்கிறது (Movable zodiac). இதற்கு சயன முறை எனப் பெயர்.

    இந்திய சோதிடம் ராசிகள் நிலையான தன்மை கொண்டவை என்கிறது (Fixed zodiac) . இதற்கு நிராயன முறை என்று பெயர்.

    பொதுவாக ஜாதகம் கணிக்கும்போது மேற்கத்திய முறையிலான longitudes வைத்துக் கணிப்பர். பின்னர் அதை இந்திய முறைக்கு மாற்ற அயனாம்சத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அளவு longitude ஐக் கழிப்பர். இதுதான் அயனாம்சத்தின் பலன்.

    ஜகன்னாத ஹோராவில் வாக்கிய பஞ்சாங்கம் பயன்படுத்துவதென்றால் ஸ்ரீ சூர்ய சித்தாந்த அயனாம்சத்தைப் பயன்படுத்துமாறுப் பரிந்துரைக்கிறார். இதுதான் முனிவர்கள் பயன்படுத்திய அயனாம்ச முறை.
    ஆனால் பிற்காலத்தில் பெர்சியர்கள் இதில் சில மாற்றங்களைச் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

    திருக்கணித பஞ்சாங்க முறைக்கு லஹிரி (சித்ரபக்ஷ) அயனாம்சம் பரிந்துரைக்கப்படுகிறது.

    ராமன் அவர்கள் தன் காலத்தில் துல்லியமான கணிப்புகளுக்காகத் தானே ஒரு அயனாம்சத்தை உருவாக்கினார். அது கூட 2000வருடம் வரைதான் இருப்பதாக ஞாபகம். ஆனால் ராமன் அயனாம்சம் நவாம்சம் மற்றும் வர்க்க சக்கரங்களில் மிகப் பெரிய வேறுபாடுகளைக் கொண்டு வருவதாக கே.என்.ராவ் குறிப்பிட்டிருந்தார். ராமன் மற்றும் KP அயனாம்சங்கள் மிகுந்த ஜோதிட ஞானம் மிக்கவர்கள் பயன்படுத்த வேண்டியது.

    365.25 நாட்களை மற்றும் பிளானடோரியம் கணக்குகளை அடிப்படையாகக் கொண்டிருப்பதால் திருக்கணித முறையையும், இந்திய அரசாங்கம் 1956 இல் அங்கீகரித்த லஹிரி (சித்ரபக்ஷ) அயனாம்ச முறையை பயன்படுத்துவதே சரியாக இருக்கும்.

    என் அனுபவத்தில் திருக்கணித, லஹிரி (சித்ரபக்ஷ) அயனாம்ச முறையிலான தசா புக்தி கணக்குகள் மற்றும் பலன்கள் பெரும்பாலும் சரியாக இருக்கின்றன.

    சில ஜோதிடர்களின் கருத்துப்படி தசா புக்திப் பலன்களைக் கணிப்பதற்கு KP அயனாம்ச முறையும் வர்க்க சக்கரங்களை கணிப்பதற்கு லஹிரி அயனாம்ச முறையும் சரியாக இருக்கிறது என்கிறார்கள்.

    ReplyDelete
  13. This comment has been removed by the author.

    ReplyDelete
  14. The issue with respect to ayanamsa was discussed as early in 1957. Govt of India at that time appointed eminent astrologers which includes N.C. Lahiri, Vaidya, Banerji and few other astrologers. Saha headed the team. (http://www.vigyanprasar.gov.in/scientists/saha/sahanew.htm) The project was taken by CSIR. Finally confirmed Lahiri is the best one to and same is adopted in our official Govt. Calendar. And till now for scientific purpose and to record govt related info we use the same as "official calendar of India".

    ReplyDelete
  15. Addl. info: Most of the calendars followed in Temples across Tamilnadu to celebrate the festivals are based on Vakya.

    We do give importance to birth star to celebrate 60th (sashti abtha boorthi) / ~82nd brithday. (after 1000 full moons) whereas in North the people celebrate using the "thithi".

    ReplyDelete
  16. The horoscope as cast using vakya ayanamsa of www.astraura.org(suggested by Thanusu) gives the same result as written in my old horoscope. But maybe for getting a matching dasa palan I think KP system or Raman system may be more correct.Even after casting the dasa palan from different sites it is difficult to pinpoint one as correct.

    ReplyDelete
  17. திருக்கணிதத்துக்கும் வாக்கிய பஞ்சாங்கத்துக்கும் லக்ன சந்திப்பில் பிறந்தவர்களுக்கு இரண்டு லக்னமாக காட்டும் என்றால் எனக்கு ராசியை வேறாக காட்டுகிறது. அதாவது உத்திராடம் முதல் பாகம் தனுசு ராசி என்று திருக்கணிதத்தில் காட்டுகிறது.

    ராமன் முறைப்படி கணிணியில் கணித்தால் லக்னம் துலாம் என்பதற்கு பதிலாக வித்தியாசப்படும் பாகைகளைக்கொண்டு விருச்சிகம் (இதில் விசாகம் 4 ஆனால் வாக்கிய முறைப்படி விசாகம் 3ஆம் பாகத்தில் லக்னம் நிற்பதாக குறித்துக்கொடுத்திருக்கிறார்கள்.) என்று காட்டுகிறது.

    இந்த குழப்பத்துக்கிடையிலும் நான் கவனித்த விஷயம் என்னவென்றால் நீங்கள் முன்பு கொடுத்த ஒரு அட்டவணையில் சூரிய உதய நேரத்தைப் பார்த்தேன். புரட்டாசி மாதம் 21ஆம் தேதி முதல் சூரிய உதய நேரம் 6 மணி 4 நிமிடம் என்று போட்டிருந்தது. ஆனால் கணிணியில் உள்ள சாப்ட்வேர்கள் சூர்ய உதயத்தை மாறா அளவாக 6 மணி என்று எடுத்துக்கொள்வதால் இந்த வித்தியாசம் வருவதாக நினைக்கிறேன்.

    கடந்த 10 ஆண்டுகளாக நன்கு மிகவும் பிரபலமாகியிருக்கும் ஒரு சிவாலயத்தின் அர்ச்சகர் எனது நண்பர். அவர் கோயம்புத்தூரில் உள்ள கலைமகள் நிறுவனத்தில் வாக்கிய பஞ்சாங்கம் மூலம் ஜாதகம் கணிக்கும் சாப்ட்வேர் வாங்கியிருந்தார். அதில் என் ஜாதகத்தை கணித்தபோது சூரிய உதய நேரத்தை வைத்து நான்கு நிமிடங்கள் கழித்துதான் கணக்கிடப்பட்டிருந்தது.

    ராமன் முறைப்படி
    தீர்க்காம்சம் - 079.43 கிழக்கு
    அக்ஷாம்சம் - 10.48 வடக்கு
    சூர்ய உதய நேரம் காலை 6 மணி என்று எடுத்துக்கொண்டது.

    கலைமகள் சாப்ட்வேரில் கணித்தபோது
    தீர்க்காம்சம் - 079.38 கிழக்கு
    அக்ஷாம்சம் - 10.44 வடக்கு
    சூர்ய உதய நேரம் காலை 6 மணி 43 விநாழிகை என்று எடுத்துக்கொண்டது. (இந்த விநாழிகை கணக்கு மட்டும் இன்னும் சரிவர பிடிபடவில்லை)

    ஜோதிடர் மேனுவலாக நான் பிறந்த போது எழுதிக்கொடுத்த ஜாதகம், எனது நண்பர் மற்றொரு ஆலய அர்ச்சகர் கையால் கணக்கிட்டு (இவரும் தொழில்முறை ஜோதிடர்) எழுதிக்கொடுத்த ஜாதகம், 6 ஆண்டுகளுக்கு முன்பு வைத்தீஸ்வரன் கோவிலில் நாடி ஜோதிடம் மூலம் பலன் பார்த்தபோது அங்கே அவர்கள் குறித்துக்கொடுத்த ஜாதகம் எல்லாவற்றிலுமே

    உத்திராடம் 2ஆம் பாகம்
    மகர ராசி
    துலாம் லக்னம்

    2 - விருச்சிகத்தில் சுக்கிரன் (சமம்)
    4 - மகரத்தில் சந்திரன் (சமம்), கேது (நட்பு)
    10 - கடகத்தில் செவ்வாய்(நீசம்), ராகு(பகை)
    12 - கன்னியில் சூரி(நட்பு), சனி(நட்பு), குரு (நட்பு) புதன்(உச்சம்) -வ

    பழங்கால முறைப்படி வாக்கியப்பஞ்சாங்கத்தின் மூலம் கணித்ததே சரியாக இருக்கும். அதைப் பயன்படுத்துங்கள் என்று நீங்கள் சொன்னது சரிதான் ஐயா.

    ஆனால் எனக்கு மற்றும் ஒரு குழப்பம் வந்துவிட்டது. அஷ்ட வர்க்கம் கணிக்க சாப்ட்வேரை பயன்படுத்தினால் லக்னம், ராசி மாறி வருவதை அடிப்படையாக கொண்டுதான் அதுவும் வருகிறது. இதனால் சரியான பலன் கள் கணிப்பதில் சிரமம் உள்ளன.

    ReplyDelete
  18. பிறந்த நேரமும் அதன் பலன்களும் முரண்படுவதாக தோன்றுபவர்கள் சுப்பு தாத்தா அவர்கள் சொன்னது போல தாங்கள் வாழ்வின் நிகழ்சிகளை கவனத்தில் கொண்டு ஒரு தோராயமான முடிவுக்கு வரலாம்தானே.
    ________________________________________________________
    ///ananth said... வாக்கிய பஞ்சாங்கத்திற்கும், ராமன் அயனாம்சத்திற்கும் எந்த சம்பந்தமும் இருப்பது போல் தெரியவில்லை. அதை சற்று கவனியுங்கள். ராமன் அயனாம்ச முறைப்படி குரு பெயர்ச்சி மே 15ம் தேதி நடந்ததாக இருக்கிறது. வாக்கிய முறைப் படி மே 17ம் தேதியாக இருக்கிறது.///

    //Arul said... /ராமன் அயனாம்ச முறை, வருடம் - 360 நாட்கள், தென்னிந்திய முறைப்படி மே 11ம் தேதி, மாலை 6 மணிக்கு, குரு ரிசபத்திற்கு பெயர்ச்சி ஆகிவிட்டதாக கணிப்பு வருகிறது. ஜகன்னாத மென்பொருளிலும் ராமன் அயானம்சத்தை தேர்வு செய்து கணித்தால் இதே போல்தான் வருகிறது.///

    எனக்கும் அருள் சொன்னது போலத்தான் வருகிறது.
    Indian Syandard Time Zone
    Raman method May 11, 2012 6:19
    Lahiri method May 17, 2012 8:43
    ஆனந்த் சொன்னது போல மே 15 வரவில்லை
    ________________________________________________________
    ///thanusu said... www.astraura.org இந்த தளத்தில் ஜாதகம் கனிக்க பல option இருக்கிறது. ///

    தனுசு, தவலுக்கு நன்றி
    ________________________________________________________
    /// Jagannath said... ஜகன்னாத ஹோராவில் வாக்கிய பஞ்சாங்கம் பயன்படுத்துவதென்றால் ஸ்ரீ சூர்ய சித்தாந்த அயனாம்சத்தைப் பயன்படுத்துமாறுப் பரிந்துரைக்கிறார். இதுதான் முனிவர்கள் பயன்படுத்திய அயனாம்ச முறை.///

    இதனைக் கவனித்துள்ளேன்...ஆனால் இன்றுதான் ஏன் என்று புரிகிறது, நன்றி ஜெகநாத்.
    ________________________________________________________
    ///சரண் said... கணிணியில் உள்ள சாப்ட்வேர்கள் சூர்ய உதயத்தை மாறா அளவாக 6 மணி என்று எடுத்துக்கொள்வதால் இந்த வித்தியாசம் வருவதாக நினைக்கிறேன். ///

    சரண், இது மிக முக்கியமான செய்தி, நன்றாக கவனித்துள்ளீர்கள், நன்றி.
    It reminds me the saying "Garbage in, garbage out"....thanks for your observation.
    ________________________________________________________
    மேலும் தங்களை குழப்பிக்கொள்ள விரும்புபவர்களுக்காகவும் மற்றும் ஜோதிட ஆர்வலர்களுக்க்காகவும் இந்த சுட்டி:

    http://nirmukta.com/2011/02/22/precession-ayanamsa-and-the-fundamental-error-in-astrological-calculation-of-the-zodiac/

    ReplyDelete
  19. ஐயா, ஹையோ என் தலை சுத்துதே ...(இன்றைய பதிவையும் கருத்துக்களையும் படித்தபின்பு), நான் எல்லாவற்றையும் கொஞ்சம் சுலபமாக புரிந்து கொள்ள நினைக்கும் பேர்வழி.

    இந்தியாவின் புராதன ஜோதிட முறையான வாக்கியப் பஞ்சாங்கம் என்பதாலும்;
    நம் முன்னோர்கள் வாக்கியப் பஞ்சாங்கம் துணையுடன் ஒவ்வொரு நேரத்தில் காணும் நிகழ்வுகளை கவனித்து, இந்த நேரத்தில் பிறந்தால் இது இது நடக்கும் என்று புலிப்பாணி போல் அவர்கள் கவனித்ததை குறிப்பு எழுதி வைத்து சென்றிருப்பதாலும்;
    அந்த குறிப்புக்கள் நம் ஜாதக பலன்களுடன் பிழையின்றி சரியாகப் பொருந்த வேண்டுமென்றால் நாம் வாக்கிய பஞ்சாங்க முறையைத்தானே பயன் படுத்த வேண்டும்? இல்லாவிட்டால் கூட்டல் வாய்ப்பாடை வைத்துக் கொண்டு பெருக்கல் கணக்கு போடுவது போல தோன்றுகிறது.
    மீள்பதிவிற்கு நன்றி ஐயா

    ReplyDelete
  20. /////Blogger ananth said...
    எல்லாம் சரி ஐயா. வாக்கிய பஞ்சாங்கத்திற்கும், ராமன் அயனாம்சத்திற்கும் எந்த சம்பந்தமும் இருப்பது போல் தெரியவில்லை. அதை சற்று கவனியுங்கள். ராமன் அயனாம்ச முறைப்படி குரு பெயர்ச்சி மே 15ம் தேதி நடந்ததாக இருக்கிறது. வாக்கிய முறைப்படி மே 17ம் தேதியாக இருக்கிறது./////

    ராமன் அயனாம்சத்திற்கும், வாக்கியத்திற்கும் என்ன வேறுபாடு உள்ளது என்பதை தயவுசெய்து சற்று ஆதாரத்துடன் சொல்லுங்கள் நண்பரே!

    ReplyDelete
  21. /////Blogger ரமேஷ் வெங்கடபதி said...
    ஐயாவிற்கு வணக்கம்!
    மிகவும் எளிதாக ஜோதிட மாணாக்கர்களுக்கும்,மற்றவர்க்கும் விளக்கம் அளித்துள்ளமைக்கு நன்றி!/////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  22. /////Blogger krishnar said...
    விளக்கம் தரமாக உள்ளது.
    நன்றிகள்.//////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  23. /////Blogger Udhaya Kumar said...
    குருவிற்கு வணக்கம்
    நன்றாக விளக்கம் கொடுத்துயிருக்கிர்கள்
    படிக்கவேண்டும் படித்துகொண்டேயிருக்க
    வேண்டும்.
    நன்றி/////

    ஆகா! எல்லாம் உங்களுக்காகத்தான். தொடர்ந்து இதே ஆர்வத்துடன் படித்துவாருங்கள் நண்பரே!

    ReplyDelete
  24. /////Blogger sury said...
    வாக்யம் அல்லது திருகணித பஞ்சாங்க அடிப்படையில் லக்னங்கள் வேறுபடும்பொழுது
    ஒரு பஞ்சாங்க அடிப்படையில் கன்னி லக்னமாகவும், இன்னொன்றின் அடிப்படையில்
    துலா லக்னமாகவும் இருப்பது, லக்ன சந்தியாக எடுத்துக்கொள்ளவேண்டும் என பொருள்படும்
    வகையில் எழுதியிருக்கிறீர்கள். ( நான் புரிந்து கொண்ட வகையில் )
    இது அன்னியில், ஒரே பஞ்சாங்க அடிப்படையிலும், உதாரணமாக, ஒருவன் லக்னம் ரேவதி 4ன் இறுதியில், அதுவும்
    கிட்டத்தட்ட, அசுவதி 1ம் பாதம் துவங்கும் நிலையில் பிறந்திருந்தால் மீன மேஷ லகன சந்தியில் லக்னம் இருக்கும் வாய்ப்புகள் அதிகம்.
    அண்மையில் ஒரு ஜாதகத்தில் லக்னம் தீர்க்காம்சம் பா.க.வி.149.59.10 எனக்குறித்து சிம்மம் உத்திரம் 1 ம் பாதம் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. பிறந்தது ஒரு கிராமத்தில். தோராயமாக நேரம் சொல்லப்பட்டதாகத் தெரிந்தது. ஜாதகரின்
    வாழ்வின் நிகழ்வுகள் சிம்ம லகனமா இருக்குமா என்ற கேள்விக்குறியையும் எழுப்பியது.
    சந்தி என கிரந்தங்களில் கூறப்படுவது இது போன்றவைகளைத் தான் குறிக்கின்றது என பலர் சொல்கிறார்கள்.
    இந்த மாதிரியான சந்தர்ப்பங்களில் ராசி சக்ரத்தை அடுத்து, ஸ்ரீபதி பத்ததியில் குறிப்பிட்டது போல, ஒரு பாவ‌
    சக்கிரத்தை வரைதல் அதன் அடிப்படையில் பலன்களைச் சொல்தல் சரியாக இருக்கும் என்றும் கருத்து
    அறிந்தோர் இடையே நிலவுகிறது. பாவ சக்ரம் எப்படி கணக்கிடுவது என்பதை நான் சொல்லவேண்டியதில்லை. நன்றாகத்தெரிந்தது ஒன்றே.
    , ராசியில் 8 ல் உள்ள சுக்ரன் பாவத்தில் 7 ல் இருக்கிறான். அப்பொழுது 7ம் பாவ பலன்கள் அஷ்டமாதிபன் தசையில் நடக்க வாய்ப்புகள் உள்ளன.
    சந்திகளில் முக்கியத்துவம் வாய்ந்தது, கடக-சிம்மம், விருச்சிக-தனுசு, மீனம் - மேஷம்.
    இவைகளில் மீன மேஷ சந்தியில் பிறந்தவர்கள் அல்லாடுவர்கள் அதிகம
    சந்திலே நிக்கறேண்டா சனீச்வரா ! என நவகிருஹ சன்னத்தியில் ஒருவர் அண்மையில் சத்தமாகச் சொன்னார்.
    பாவமாக இருந்தது.
    நீரில் இருந்து நெருப்புக்குத் தாவும் நேரத்தில் பிறந்த லக்ன சந்திக்காரர்களை
    பிள்ளையாரப்பா !! காப்பாத்துடா !!
    சுப்பு தாத்தா./////

    உங்கள் வருகையும் பின்னூட்டமும் மகிழ்ச்சியைத் தருகிறது சுப்பு அய்யா (சார்)
    தாத்தா என்று சொல்லாதீர்கள். வகுப்பறையில் ஈடுபாடுகொண்டுள்ள உற்சாகத்தின் காரணமாக அனைவருமே - இங்கே வந்து செல்லும் அனைவருமே இளைஞர்கள்தான்!
    கால சந்திப்பில் பிறக்கின்ற அனைவருக்குமே இந்தக் குளறுபடி இருக்கத்தான் செய்யும். அதைத் தவிர்க்க நம் முனிவர்கள் கணித்துவைத்துவிட்டுப்போன வாக்கிய பஞ்சாங்கத்தை (அவர்கள்) கடைப் பிடிப்பதுதான் ஒரே தீர்வாகும்!

    ReplyDelete
  25. /////Blogger thanusu said...
    ஜோதிடம் அறிந்துக்கொள்ள வந்த என் போன்ற புதியவர்களுக்கு இந்த பிரச்சினை குழப்பம் உண்டு பன்னியது. இந்த பதிலை பல முறை நான் திரும்ப திரும்ப படித்து பார்த்துள்ளேன்.
    இன்றைய பகுதி பழைய படத்தை புதுக்காப்பியில் பார்த்தது போல் இருந்தது.
    எங்கள் பக்கத்தில் (சிதம்பரம்) வாக்கியம் முறைதான். வயதான ஜோதிடர்கள் இன்றைக்கும் இதைதான் பயன் படுத்துகிறார்கள். ஆனால் புதிதாக வந்த இளம் வயது ஜோதிடர்கள் கனினியில் லஹிரியைதான் கனிக்கிறார்கள்.
    வாத்தியார் சொல்படி கேட்கும் மாணவன் என்பதால் நான் வாக்கிய பஞ்சாங்கத்தையே பின்பற்றுகிறேன்.
    எனக்கு ஜோதிடம் தெரியாது என்பது வாத்தியாருக்கும் நனகு தெரியும், தெரிந்து கொள்ளவே வந்துள்ளேன். ஜகன்னாத் ஹொராவில் உள்ள ராமன் அயனாம்சத்திற்கும், ஊரில் வாக்கியம் முறையில் கனித்த ஜாதகத்துக்கும் சில வேருபாடுகள் உள்ளது.இது எனக்கு மேலும் குழப்பமாக தெரிகிறது.
    ஆனால் www.astraura.org இந்த தளத்தில் ஜாதகம் கனிக்க பல option இருக்கிறது. இதில் லஹிரி, ராமன், திருக்கனிதா, வாக்கியம், அனைத்தும் இருக்கிறது இதில் கனித்தால் ராமனுக்கு வேறும், வாக்க்யாவிற்கு வேறும் என்று இரண்டு மாறுபட்ட ஜாதகம் கிடைக்கிறது.
    ஊரில் வாக்யம் முறையில் கனித்ததற்கும், இதில் உள்ள வாக்கியத்திற்கும் 100 சதவீதம் சரியாக இருக்கிறது,
    அய்யா அவர்கள் இதனை எனக்கு கொஞ்சம் தெளிவாக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்//////

    கால சந்திப்பில் பிறக்கின்ற அனைவருக்குமே இந்தக் குளறுபடி இருக்கத்தான் செய்யும். அதைத் தவிர்க்க நம் முனிவர்கள் கணித்துவைத்துவிட்டுப்போன வாக்கிய பஞ்சாங்கத்தை (அவர்கள்) கடைப் பிடிப்பதுதான் ஒரே தீர்வாகும்!

    ReplyDelete
  26. //////Blogger Arul said...
    விளக்கம் எளிமையாக இருந்தது.ஆனால் ராமன் அயனாம்ச முறை, வருடம் - 360 நாட்கள், தென்னிந்திய முறைப்படி மே 11ம் தேதி, மாலை 6 மணிக்கு, குரு ரிசபத்திற்கு பெயர்ச்சி ஆகிவிட்டதாக கணிப்பு வருகிறது. ஜகன்னாத மென்பொருளிலும் ராமன் அயானம்சத்தை தேர்வு செய்து கணித்தால் இதே போல்தான் வருகிறது.இந்த 6 நாட்கள் வித்யாசம் எதனால் வருகிறது?//////

    அந்த இரண்டு பாகை வித்தியாசத்தினால் அப்படி வரும். வாக்கிய பஞ்சாங்கத்தை (அவர்கள்) கடைப் பிடிப்பதுதான் ஒரே தீர்வாகும்! தமிழகத்தில் உள்ள அத்தனை திருக்கோவில்களிலும் வாக்கியப் பஞ்சாங்கத்தைத்தான் கடைப்பிடிக்கின்றார்கள்

    ReplyDelete
  27. //////Blogger அய்யர் said...
    இன்று சுழல விடும்
    இந்த பாடல் சுவைக்க ரசிக்க
    ஆசையே அலை போலே
    நாமெல்லாம் அதன் மேலே
    ஓடம் போலே
    ஆடிடுவொமே.....வாழ்நாளிலே
    பருவம் என்னும் காட்டிலே
    பறக்கும் காதல் தேரிலே
    ஆணும் பெண்ணும் மகிழ்வார்...
    சுகம் பெறுவார்...அதிசயம் காண்பார்!
    நாளை உலகின் பாதையை இன்றே.........
    யார் காணுவார்
    வாழ்க்கை எல்லாம் தீர்ந்ததே
    வடிவம் மட்டும் வாழ்வதேன்...
    இளமை மீண்டும் வருமா....
    மணம் பெறுமா.....முதுமையே சுகமா...
    காலம் போகும் பாதையை
    இங்கே...........யார் காணுவார்
    சூறைக்காற்று மோதினால்
    தோணி ஓட்டம் மேவுமோ
    வாழ்வில் துன்பம் வரவு...
    சுகம்செலவு....இருப்பது கனவு
    காலம் வகுத்த கணக்கை
    இங்கே........யார் காணுவார்//////

    இளமை மீண்டும் வராவிட்டால் தொலைகிறது! அதற்காக இன்றே போய் இடுகாட்டில் படுத்துக்கொள்ள முடியுமா? முதுமையிலும் ஒரு சுகம் இருக்கிறது. எதற்காக நம்பிக்கையை இழக்கிறீர்கள்? உங்கள் வயது என்ன? சொல்லுங்கள்.
    அதற்குத் தகுந்தாற்போன்ற பாடலை நான் சுழல விடுகிறேன்!

    ReplyDelete
  28. Blogger அய்யர் said...
    ////////Blogger அய்யர் said...
    ///Bhogar said...
    தற்பொழுது சாஸ்திரங்களையும் விஷமாக்கி கொண்டிருக்கிறார்கள்.///
    உண்மை உண்மை...
    அதை விட முக்கியமாக
    தான் சொல்வதே சாத்திரம் என்று வேறு சொல்லிக் கொள்கிறார்கள்...
    தான் செய்வதினை சாத்திரத்தில் தேடி எடுத்து இது சாத்திரத்தில் சொல்லி இருக்கிறது என்பவர்கள் அநீதிமான்கள்
    சாத்திரத்தில் உள்ளபடி வாழ்க்கையினை நடத்துபவர் இருப்பவர் எண்ணிக்கையில் குறைவு
    தோழர் புவனேஷ்வர் மற்றும்
    தோழி பார்வதியாரின் கருத்துக்களுக்கு
    நாளைய பின் ஊட்டத்தில் சொல்கிறோம்..
    வணக்கங்களுடன்
    வழக்கமான வாழ்த்துக்களுடன்/////
    தோழி பார்வதியாருக்கு அடுத்த பின் ஊட்டத்தில் பதில் தருகிறோம்//////

    வகுப்பறையில் வாத்தியார் உட்பட அனைவரும் சமம். இங்கே வாத்தியாரைவிட அறிவிலும், அனுபவத்திலும், வயதிலும் மூத்த பெரியவர்கள் நிறையப்பேர்கள் வந்து போகின்றார்கள். தோழி பார்வதியார் கேட்டால் மட்டும் நீங்கள் பதில் சொன்னால் போதும். வீண் சர்ச்சைகளுக்கு இங்கே அனுமதியில்லை. அதை அனைவரும் மனதில் கொள்ள வேண்டுகிறேன். ஒரு ஆக்கத்திற்கு மாற்றுக்கருத்து இருந்தால் கட்டுரையாக எழுதி அனுப்புங்கள். பின்னூட்டங்களில் மறைமுகமாக எழுதி மற்றவர்களை வருத்தப்பட வைக்க வேண்டாம் ! அனைவரும் இதைப் புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

    ReplyDelete
  29. //////Blogger அய்யர் said...
    தோழி பார்வதியார்
    தற்சமயம் வாரமலரில்
    ஷன்மதங்களை பற்றி எழுதி வருகிறார்
    அவர்கள் பதிப்பில் எதையும் ஆதரிக்க வில்லை எதையும் எதிர்க்க வில்லை..
    அங்கங்கே இது இப்படி இருக்கிறது என சொல்கிறார் அதனாலே..
    முன்னரே அவருக்கு சொன்னோம்
    ஆறையும் கடக்கட்டும் அப்புறம் கருத்து சொல்கிறோம் என்று..
    ஷன்மதங்களை தொடர்ந்து அவர்
    புத்தம் சமனம் இஸ்லாம் கிருத்துவம்
    கடவுள் மறுக்கும் கொள்கை என எல்லாவற்றையும் எழுதி முடித்த பிறகு...
    இவைகளில் சொன்னவையெல்லாம் உண்மையில்லை என சொல்லுவார்கள் என்றே காத்திருக்கின்றோம்..//////

    எதற்காக இது? உங்கள் கருத்துக்களை மட்டும் சொல்லுங்கள். அதுவும் சம்பந்தப்பட்ட பதிவில் மட்டும் சொல்லுங்கள்.
    அவர் அப்படிச் சொல்வார்...இப்படிச் சொல்வார் என்னும் அனுமானங்கள்.....விமர்சனங்கள் எதற்காக? அடுத்தவரை விமர்சிக்க இங்கே யாருக்கும் உரிமை இல்லை. இப்படி விமர்சித்துவரும் பின்னூட்டங்கள் இனி பதிவில் வெளியாகாது! இதை அனைவரும் மனதில் கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்!

    ReplyDelete
  30. //////Blogger அய்யர் said...
    இவரை இங்கிருந்து வெளியேற்ற
    கூட்டு பிரார்த்தனையில் கலந்து கொள்ள வகுப்பறை தோழர்களை அன்புடன் அழைக்கின்றோம்...
    அவரவர் இருப்பிடத்திலிருந்தே இந்த பிரார்த்தனையில் கலந்து கொள்ளலாம்.. ஒரு மின்னஞ்சல் மட்டும் போதும்
    arulalaya@gmail.com
    சமயத்திற்கு இழுக்கு ஏற்பட அனுமதிக்கலாமா..
    தோழர்களே.. வாருங்கள் திருவருளின் துணையுடன் வெல்வோம்...//////

    என்ன ஆயிற்று உங்களுக்கு? வகுப்பறைக்கு மூடுவிழா நடத்த திருவருளின் துணையை வேண்டுங்கள். அனைவரும் நிம்மதியாக இருப்போம்!

    ReplyDelete
  31. Blogger Jagannath said...
    அயனாம்சம் என்பதற்கும் பஞ்சாங்க வகைக்கும் வேறுபாடுகள் உள்ளன என்று கருதுகிறேன்.
    வாக்கிய பஞ்சாங்கம் என்பது வருடத்திற்கு 360 நாட்கள் என்ற கணக்கை அடிப்படையாகக் கொண்டது. திருக்கணித பஞ்சாங்கம் என்பது வருடத்திற்கு 365.25 நாட்கள் என்ற முறையை அடிப்படையாகக் கொண்டது. வாக்கிய பஞ்சாங்கம் முனிவர்களின் ஞான திருஷ்டி கணிப்புகளை அடிப்படையாகக் கொண்டது. திருக்கணிதம் பிளானடோரியம் கணக்குகளை அடிப்படையாகக் கொண்டது.
    அயனாம்சம் என்பது ஒரு வகையான அட்ஜஸ்ட்மென்ட்.
    மேற்கத்திய ஜோதிடம் ராசிகள் அசையும் தன்மை கொண்டவை என்கிறது (Movable zodiac). இதற்கு சயன முறை எனப் பெயர்.
    இந்திய சோதிடம் ராசிகள் நிலையான தன்மை கொண்டவை என்கிறது (Fixed zodiac) . இதற்கு நிராயன முறை என்று பெயர்.
    பொதுவாக ஜாதகம் கணிக்கும்போது மேற்கத்திய முறையிலான longitudes வைத்துக் கணிப்பர். பின்னர் அதை இந்திய முறைக்கு மாற்ற அயனாம்சத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அளவு longitude ஐக் கழிப்பர். இதுதான் அயனாம்சத்தின் பலன்.
    ஜகன்னாத ஹோராவில் வாக்கிய பஞ்சாங்கம் பயன்படுத்துவதென்றால் ஸ்ரீ சூர்ய சித்தாந்த அயனாம்சத்தைப் பயன்படுத்துமாறுப் பரிந்துரைக்கிறார். இதுதான் முனிவர்கள் பயன்படுத்திய அயனாம்ச முறை.
    ஆனால் பிற்காலத்தில் பெர்சியர்கள் இதில் சில மாற்றங்களைச் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
    திருக்கணித பஞ்சாங்க முறைக்கு லஹிரி (சித்ரபக்ஷ) அயனாம்சம் பரிந்துரைக்கப்படுகிறது.
    ராமன் அவர்கள் தன் காலத்தில் துல்லியமான கணிப்புகளுக்காகத் தானே ஒரு அயனாம்சத்தை உருவாக்கினார். அது கூட 2000வருடம் வரைதான் இருப்பதாக ஞாபகம். ஆனால் ராமன் அயனாம்சம் நவாம்சம் மற்றும் வர்க்க சக்கரங்களில் மிகப் பெரிய வேறுபாடுகளைக் கொண்டு வருவதாக கே.என்.ராவ் குறிப்பிட்டிருந்தார். ராமன் மற்றும் KP அயனாம்சங்கள் மிகுந்த ஜோதிட ஞானம் மிக்கவர்கள் பயன்படுத்த வேண்டியது.
    365.25 நாட்களை மற்றும் பிளானடோரியம் கணக்குகளை அடிப்படையாகக் கொண்டிருப்பதால் திருக்கணித முறையையும், இந்திய அரசாங்கம் 1956 இல் அங்கீகரித்த லஹிரி (சித்ரபக்ஷ) அயனாம்ச முறையை பயன்படுத்துவதே சரியாக இருக்கும். என் அனுபவத்தில் திருக்கணித, லஹிரி (சித்ரபக்ஷ) அயனாம்ச முறையிலான தசா புக்தி கணக்குகள் மற்றும் பலன்கள் பெரும்பாலும் சரியாக இருக்கின்றன.
    சில ஜோதிடர்களின் கருத்துப்படி தசா புக்திப் பலன்களைக் கணிப்பதற்கு KP அயனாம்ச முறையும் வர்க்க சக்கரங்களை கணிப்பதற்கு லஹிரி அயனாம்ச முறையும் சரியாக இருக்கிறது என்கிறார்கள்.////////

    வீட்டில் பெற்றோர்கள் எழுதிவைத்துள்ள ஜாதகத்தின் மீது நம்பிக்கை உள்ளவர்களுக்கு, வாக்கிய முறைதான் சரியாக இருக்கும். லஹிரியைப் பயன்படுத்தச் சொன்னால் அவர்களுக்குக் குழப்பம்தான் மேலிடும். அவர்களை அவர்கள் வழியிலேயே விட்டுவிடுவோம். எனது ஜாதகம் வாக்கியமுறையில் கணித்துவைக்கப்பெற்றதாகும். தசாபுத்திப் பலன்கள் சரியாக உள்ளன! (வீட்டில் இருந்த பெரியவர்கள் கணித்து வைத்துவிட்டுப்போனதாகும்)

    ReplyDelete
  32. ////Blogger Ravi said...
    The issue with respect to ayanamsa was discussed as early in 1957. Govt of India at that time appointed eminent astrologers which includes N.C. Lahiri, Vaidya, Banerji and few other astrologers. Saha headed the team. (http://www.vigyanprasar.gov.in/scientists/saha/sahanew.htm) The project was taken by CSIR. Finally confirmed Lahiri is the best one to and same is adopted in our official Govt. Calendar. And till now for scientific purpose and to record govt related info we use the same as "official calendar of India"./////

    உண்மைதான். ஆனால் அரசு சொல்வதை, நம் திருக்கோவில்களில் கடைப் பிடிப்பது இல்லை. காலம் காலமாக இன்றுவரை அவர்களுக்கு வாக்கியப் பஞ்சாங்கதான் வேதம். அது மட்டுமல்ல பல மாவட்டங்களில் உள்ள ஜோதிடர்கள் இன்றும் உபயோகிப்பது வாக்கியப் பஞ்சாங்கத்தைத்தான். காலசந்திப்பில் பிறந்தவர்கள். ஏதாவது ஒன்றை தீர்க்கமாகக் கடைபிடித்தால் குழப்பம் இருக்காது. அலோபதியா? ஹோமியோபதியா? சித்த வைத்தியமா? எது வேண்டும்? நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும்? அதற்கும் அரசைக் கேட்பதில் என்ன நியாயம் இருக்கிறது?

    ReplyDelete
  33. /////Blogger Ravi said...
    Addl. info: Most of the calendars followed in Temples across Tamilnadu to celebrate the festivals are based on Vakya.
    We do give importance to birth star to celebrate 60th (sashti abtha boorthi) / ~82nd brithday. (after 1000 full moons) whereas in North the people celebrate using the "thithi"./////

    பிறப்பு விழாக்களுக்கெல்லாம் நட்சத்திரம் மட்டுமே! நீத்தார் கடன்களுக்கு மட்டுமே திதிகள்!

    ReplyDelete
  34. //////Blogger Subramanian said...
    The horoscope as cast using vakya ayanamsa of www.astraura.org(suggested by Thanusu) gives the same result as written in my old horoscope. But maybe for getting a matching dasa palan I think KP system or Raman system may be more correct.Even after casting the dasa palan from different sites it is difficult to pinpoint one as correct./////

    தசாபுத்தி அனுபவங்களால் அதை தீர்மானிக்க முடியும்!

    ReplyDelete
  35. Blogger சரண் said...
    திருக்கணிதத்துக்கும் வாக்கிய பஞ்சாங்கத்துக்கும் லக்ன சந்திப்பில் பிறந்தவர்களுக்கு இரண்டு லக்னமாக காட்டும் என்றால் எனக்கு ராசியை வேறாக காட்டுகிறது. அதாவது உத்திராடம் முதல் பாகம் தனுசு ராசி என்று திருக்கணிதத்தில் காட்டுகிறது.
    ராமன் முறைப்படி கணிணியில் கணித்தால் லக்னம் துலாம் என்பதற்கு பதிலாக வித்தியாசப்படும் பாகைகளைக்கொண்டு விருச்சிகம் (இதில் விசாகம் 4 ஆனால் வாக்கிய முறைப்படி விசாகம் 3ஆம் பாகத்தில் லக்னம் நிற்பதாக குறித்துக்கொடுத்திருக்கிறார்கள்.) என்று காட்டுகிறது.
    இந்த குழப்பத்துக்கிடையிலும் நான் கவனித்த விஷயம் என்னவென்றால் நீங்கள் முன்பு கொடுத்த ஒரு அட்டவணையில் சூரிய உதய நேரத்தைப் பார்த்தேன். புரட்டாசி மாதம் 21ஆம் தேதி முதல் சூரிய உதய நேரம் 6 மணி 4 நிமிடம் என்று போட்டிருந்தது. ஆனால் கணிணியில் உள்ள சாப்ட்வேர்கள் சூர்ய உதயத்தை மாறா அளவாக 6 மணி என்று எடுத்துக்கொள்வதால் இந்த வித்தியாசம் வருவதாக நினைக்கிறேன்.
    கடந்த 10 ஆண்டுகளாக நன்கு மிகவும் பிரபலமாகியிருக்கும் ஒரு சிவாலயத்தின் அர்ச்சகர் எனது நண்பர். அவர் கோயம்புத்தூரில் உள்ள கலைமகள் நிறுவனத்தில் வாக்கிய பஞ்சாங்கம் மூலம் ஜாதகம் கணிக்கும் சாப்ட்வேர் வாங்கியிருந்தார். அதில் என் ஜாதகத்தை கணித்தபோது சூரிய உதய நேரத்தை வைத்து நான்கு நிமிடங்கள் கழித்துதான் கணக்கிடப்பட்டிருந்தது.
    ராமன் முறைப்படி
    தீர்க்காம்சம் - 079.43 கிழக்கு
    அக்ஷாம்சம் - 10.48 வடக்கு
    சூர்ய உதய நேரம் காலை 6 மணி என்று எடுத்துக்கொண்டது.
    கலைமகள் சாப்ட்வேரில் கணித்தபோது
    தீர்க்காம்சம் - 079.38 கிழக்கு
    அக்ஷாம்சம் - 10.44 வடக்கு
    சூர்ய உதய நேரம் காலை 6 மணி 43 விநாழிகை என்று எடுத்துக்கொண்டது. (இந்த விநாழிகை கணக்கு மட்டும் இன்னும் சரிவர பிடிபடவில்லை)
    ஜோதிடர் மேனுவலாக நான் பிறந்த போது எழுதிக்கொடுத்த ஜாதகம், எனது நண்பர் மற்றொரு ஆலய அர்ச்சகர் கையால் கணக்கிட்டு (இவரும் தொழில்முறை ஜோதிடர்) எழுதிக்கொடுத்த ஜாதகம், 6 ஆண்டுகளுக்கு முன்பு வைத்தீஸ்வரன் கோவிலில் நாடி ஜோதிடம் மூலம் பலன் பார்த்தபோது அங்கே அவர்கள் குறித்துக்கொடுத்த ஜாதகம் எல்லாவற்றிலுமே
    உத்திராடம் 2ஆம் பாகம்
    மகர ராசி
    துலாம் லக்னம்
    2 - விருச்சிகத்தில் சுக்கிரன் (சமம்)
    4 - மகரத்தில் சந்திரன் (சமம்), கேது (நட்பு)
    10 - கடகத்தில் செவ்வாய்(நீசம்), ராகு(பகை)
    12 - கன்னியில் சூரி(நட்பு), சனி(நட்பு), குரு (நட்பு) புதன்(உச்சம்) -வ
    பழங்கால முறைப்படி வாக்கியப்பஞ்சாங்கத்தின் மூலம் கணித்ததே சரியாக இருக்கும். அதைப் பயன்படுத்துங்கள் என்று நீங்கள் சொன்னது சரிதான் ஐயா.
    ஆனால் எனக்கு மற்றும் ஒரு குழப்பம் வந்துவிட்டது. அஷ்ட வர்க்கம் கணிக்க சாப்ட்வேரை பயன்படுத்தினால் லக்னம், ராசி மாறி வருவதை அடிப்படையாக கொண்டுதான் அதுவும் வருகிறது. இதனால் சரியான பலன் கள் கணிப்பதில் சிரமம் உள்ளன.//////

    குழப்பம் ஏது? அஷ்டகவர்க்கத்திற்கும் கணினி மென்பொருளில் வாக்கிய optionஐயே தெரிவு செய்யுங்கள். பிறகு அதை லஹிரியோடு ஒப்பிட்டுப்பார்ப்பதைத் தவிர்த்துவிடுங்கள்.

    ReplyDelete
  36. //////OpenID Themozhi said...
    பிறந்த நேரமும் அதன் பலன்களும் முரண்படுவதாக தோன்றுபவர்கள் சுப்பு தாத்தா அவர்கள் சொன்னது போல தாங்கள் வாழ்வின் நிகழ்சிகளை கவனத்தில் கொண்டு ஒரு தோராயமான முடிவுக்கு வரலாம்தானே.
    ________________________________________________________
    ///ananth said... வாக்கிய பஞ்சாங்கத்திற்கும், ராமன் அயனாம்சத்திற்கும் எந்த சம்பந்தமும் இருப்பது போல் தெரியவில்லை. அதை சற்று கவனியுங்கள். ராமன் அயனாம்ச முறைப்படி குரு பெயர்ச்சி மே 15ம் தேதி நடந்ததாக இருக்கிறது. வாக்கிய முறைப் படி மே 17ம் தேதியாக இருக்கிறது.///
    //Arul said... /ராமன் அயனாம்ச முறை, வருடம் - 360 நாட்கள், தென்னிந்திய முறைப்படி மே 11ம் தேதி, மாலை 6 மணிக்கு, குரு ரிசபத்திற்கு பெயர்ச்சி ஆகிவிட்டதாக கணிப்பு வருகிறது. ஜகன்னாத மென்பொருளிலும் ராமன் அயானம்சத்தை தேர்வு செய்து கணித்தால் இதே போல்தான் வருகிறது.///
    எனக்கும் அருள் சொன்னது போலத்தான் வருகிறது.
    Indian Syandard Time Zone
    Raman method May 11, 2012 6:19
    Lahiri method May 17, 2012 8:43
    ஆனந்த் சொன்னது போல மே 15 வரவில்லை
    ________________________________________________________
    ///thanusu said... www.astraura.org இந்த தளத்தில் ஜாதகம் கனிக்க பல option இருக்கிறது. ///
    தனுசு, தவலுக்கு நன்றி
    ________________________________________________________
    /// Jagannath said... ஜகன்னாத ஹோராவில் வாக்கிய பஞ்சாங்கம் பயன்படுத்துவதென்றால் ஸ்ரீ சூர்ய சித்தாந்த அயனாம்சத்தைப் பயன்படுத்துமாறுப் பரிந்துரைக்கிறார். இதுதான் முனிவர்கள் பயன்படுத்திய அயனாம்ச முறை.///
    இதனைக் கவனித்துள்ளேன்...ஆனால் இன்றுதான் ஏன் என்று புரிகிறது, நன்றி ஜெகநாத்.
    ________________________________________________________
    ///சரண் said... கணிணியில் உள்ள சாப்ட்வேர்கள் சூர்ய உதயத்தை மாறா அளவாக 6 மணி என்று எடுத்துக்கொள்வதால் இந்த வித்தியாசம் வருவதாக நினைக்கிறேன். ///

    சரண், இது மிக முக்கியமான செய்தி, நன்றாக கவனித்துள்ளீர்கள், நன்றி.
    It reminds me the saying "Garbage in, garbage out"....thanks for your observation.
    ________________________________________________________
    மேலும் தங்களை குழப்பிக்கொள்ள விரும்புபவர்களுக்காகவும் மற்றும் ஜோதிட ஆர்வலர்களுக்க்காகவும் இந்த சுட்டி:
    http://nirmukta.com/2011/02/22/precession-ayanamsa-and-the-fundamental-error-in-astrological-calculation-of-the-zodiac/////

    நல்லது. உங்களின் நீண்ட மற்றும் தகவல்களுடன் கூடிய பின்னூட்டத்திற்கு நன்றி சகோதரி!

    ReplyDelete
  37. /////OpenID Themozhi said...
    ஐயா, ஹையோ என் தலை சுத்துதே ...(இன்றைய பதிவையும் கருத்துக்களையும் படித்தபின்பு), நான் எல்லாவற்றையும் கொஞ்சம் சுலபமாக புரிந்து கொள்ள நினைக்கும் பேர்வழி.
    இந்தியாவின் புராதன ஜோதிட முறையான வாக்கியப் பஞ்சாங்கம் என்பதாலும்;
    நம் முன்னோர்கள் வாக்கியப் பஞ்சாங்கம் துணையுடன் ஒவ்வொரு நேரத்தில் காணும் நிகழ்வுகளை கவனித்து, இந்த நேரத்தில் பிறந்தால் இது இது நடக்கும் என்று புலிப்பாணி போல் அவர்கள் கவனித்ததை குறிப்பு எழுதி வைத்து சென்றிருப்பதாலும்;
    அந்த குறிப்புக்கள் நம் ஜாதக பலன்களுடன் பிழையின்றி சரியாகப் பொருந்த வேண்டுமென்றால் நாம் வாக்கிய பஞ்சாங்க முறையைத்தானே பயன் படுத்த வேண்டும்? இல்லாவிட்டால் கூட்டல் வாய்ப்பாடை வைத்துக் கொண்டு பெருக்கல் கணக்கு போடுவது போல தோன்றுகிறது.
    மீள்பதிவிற்கு நன்றி ஐயா/////

    வாக்கியப் பஞ்சாங்கத்தையே பயன்படுத்துங்கள். தலை சுற்றல் நின்றுவிடும்!

    ReplyDelete
  38. என்ன ஆயிற்று உங்களுக்கு? வகுப்பறைக்கு மூடுவிழா நடத்த திருவருளின் துணையை வேண்டுங்கள். அனைவரும் நிம்மதியாக இருப்போம்!

    எமது நோக்கம் இதுவல்ல..
    சைவத்திற்கு கலங்கம் ஏற்படும் போது கலங்காமல் இருக்க முடியுமா..

    அன்று சமணர்களால் சைவத்திற்கு ஊறு வந்த போது ஆளுடைபிள்ளையார் இல்லையென்றால் இன்று நமக்கு திருநீறு ஏது..

    இன்று அடிப்படை உணர்வே இல்லாத நீதி மன்றத்தின் முன் குற்றவாளி என சொல்லப்பட்ட ஒருவர் சொல்லும்
    மாற்றுக் கருத்தை ஏற்கத் தான் முடியுமா..

    அதனால் தானே
    திருவருளினால் வெல்வோம் என சொன்னோம்..

    மேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம்

    ReplyDelete
  39. பிறந்த நாட்கள் - திதி மற்றும் நட்சத்திரம் - முருகன் - விசாகம், ஆண்டாள் - பூரம், சிவன் - திருவாதிரை, ... நாயன்மார்கள், ஆழ்வார்கள் - பிறந்த நாட்கள் (தென்னிந்தியா வழக்கம்) - கணேஷ் சதுர்த்தி , ராம நவமி, கிருஷ்ணா அஷ்டமி, விவேகானந்தர், ராமகிருஷ்ண பரமஹம்சர், துகாரம், ராமதாசர், பிறந்த திதிகள் (வட இந்திய வழக்கம்)

    ReplyDelete
  40. பிறந்த நாட்கள் - திதி மற்றும் நட்சத்திரம் - முருகன் - விசாகம், ஆண்டாள் - பூரம், சிவன் - திருவாதிரை, ... நாயன்மார்கள், ஆழ்வார்கள் - பிறந்த நாட்கள் (தென்னிந்தியா வழக்கம்) - கணேஷ் சதுர்த்தி , ராம நவமி, கிருஷ்ணா அஷ்டமி, விவேகானந்தர், ராமகிருஷ்ண பரமஹம்சர், துகாரம், ராமதாசர், பிறந்த திதிகள் (வட இந்திய வழக்கம்)

    ReplyDelete
  41. புரட்டாசி மாதம் 21ஆம் தேதி முதல் சூரிய உதய நேரம் 6 மணி 4 நிமிடம் என்று போட்டிருந்தது. ஆனால் கணிணியில் உள்ள சாப்ட்வேர்கள் சூர்ய உதயத்தை மாறா அளவாக 6 மணி என்று எடுத்துக்கொள்வதால் இந்த வித்தியாசம் வருவதாக நினைக்கிறேன். //

    எனக்கும் லக்னத்தில் வேறுபாடு இருந்தபோது இதைக் கவனித்தேன். பின் manual வைகாசி மாதம் சூரிய உதயத்தை வைத்து கணித்துப் பார்த்தபோது வீட்டில் கணித்த ஜாதகம் சரியாக வந்தது. எங்கள் ஜாதகங்களையும் தாத்தா வாக்கிய முறையிலேயே கணித்துள்ளார்.

    ReplyDelete
  42. அன்பிற்குரிய அய்யரே,
    தத்துவங்களில் நம்பிக்கைகளில் நமக்குள் வேறுபாடுகள் இருக்கலாம். விவாதிக்கலாம் தவறில்லை.
    பதில் அளிக்காமை அச்சமன்று. பணி நிமித்தம் வெளியூரில் இருக்கிறேன். தாமதத்திற்கு மன்னிக்கவும். பின்னூட்டங்கள் விரிவாக இட இயலாது. இன்னும் சில நாட்களில் ஊருக்கு வந்த பின் உங்கள் கேள்விகளுக்கு ஏன் அறிவுக்கு எட்டிய வரை விடை தருகிறேன்.
    நீங்கள் பேசியது குறித்து எனக்கு எள்ளளவும் வருத்தமில்லை. அதிர்ச்சி தரும் அளவுக்கு வெளியேற்ற வேண்டும் என்று எல்லாம் சொல்லி இவ்வளவு கோபமாக இருக்கிறீர்களே, ஒரு வேளை நான் தான் உங்கள் மனம் புண்படும் அளவுக்கு ஏதாவது பிசகாக சொல்லி விட்டேனோ?
    இருந்தால் சொல்லுங்கள்.....
    -----
    Bhuvaneshwar D
    www.bhuvaneshwar.com

    ReplyDelete
  43. அய்யா, ஒரு சுப க்ரஹம் வக்ரமாக இருக்கும் பொழுது அதன் பார்வையின் சுப தன்மையும் மாறி (வக்ரமாகி) விடுமா?

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com