மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

22.5.12

Astrology மெய்ஞானமும் புண்ணாக்கும்!

Astrology மெய்ஞானமும் புண்ணாக்கும்!

மெய்ஞானமும் பிண்ணாக்கும்!

புண்ணாக்கு என்றால் நம் அனைவருக்கும் தெரியும். 

“அவன் கெடக்கான் புண்ணாக்கு!” என்று சிலர் சிலரைத் திட்டுவதையும் பார்த்திருக்கிறோம். சக்கையானவன், மட்டையானவன் என்று சமூகத்தில் இருக்கும் பலரை புண்ணாக்கு என்று சொல்வதையும் பார்த்திருக்கிறோம்.

அதுபோல மெய்ஞானம் என்றால் என்னவென்று தெரியாதவர்கள் இருக்கிறார்கள். தெரிந்து அதை ஒப்புக்கொள்ளாதவர்களும் இருக்கிறார்கள்.

முதலில் மெய்ஞானம் என்றால் என்னவென்று பார்த்துவிட்டு, பிறகு அவர்களைப் பார்ப்போம்.

புண்ணாக்கு என்பது பேச்சுத்தமிழ். இலக்கணத் தமிழில் அதன் பெயர் பிண்ணாக்கு. பிண்ணாக்கு என்பது, நிலக்கடலை, எள் முதலிய வித்துக்களில் இருந்து எண்ணெய் எடுத்தபிறகு மிஞ்சும் சக்கை

மெய்’ என்றால் உண்மை, truth, fact, என்று பொருள்படும். மெய்ஞானம் என்பது உண்மையான அறிவைக் குறிக்கும் - true knowledge. ஞானம் என்பது அனைத்தும் அறிந்த நிலை. முழுமையான அறிவு. wisdom, full knowledge

விஞ்ஞானம் என்பது அறிவியல் science. தர்க்க முறையால் சோதித்து (reasoning) அறிவது விஞ்ஞானம்.

எல்லாம் இங்கே இருக்கிறது. இருப்பதைக் கண்டுபிடித்து, முறைப்படுத்திச் சொல்வதுதான் விஞ்ஞானம்.

புவி ஈர்ப்பு விசையைக் கண்டு பிடித்து, சர் ஐசக் நியூட்டன் அதை முறைப்படுத்திச் சொன்னார். அதற்கு Newton's law of universal gravitation என்று பெயர். அதுபோல அவருடைய Three Laws of Motion என்னும் கண்டு பிடிப்பும் மிகவும் பிரபலம். மிதத்தல் விதிக்கு விளக்கம் சொன்னவர் ஆர்க்கிமிடீஸ் law of Archimedes - (hydrostatics) the apparent loss in weight of a body immersed in a fluid is equal to the weight of the displaced fluid என்று  அதற்குப் பெயர். இதுபோல ஐன்ஸ்டீனின் Einstein's Theory of Relativity யும் பிரபலமானது.  இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம்.   

ஒன்றைக் கவனிக்க வேண்டும்  நீங்கள். இவர்கள் அனைவரும் இருப்பதைத்தான் கண்டு பிடித்துச் சொன்னார்கள். புதிதாக எதையும் உருவாக்கவில்லை.

ஏற்கனவே இருப்பதுதான். மிதத்தல்விதி முன்பே இருப்பதுதான்.

யாரும் எதையும் உருவாக்க முடியாது. ஒன்றில் இருந்துதான் மற்றொன்று.

இறைவனும், அவன் படைத்தவைகளும் ஒன்றுதான். ஒன்றை ஒன்றிலிருந்து வேறு படுத்திக்காட்ட முடியாது.  The creator and his creations are one and the same. அதைத்தான் நாம் எல்லாம் ஈசன் செயல் என்கிறோம். இறைவன் தூணிலும் இருக்கிறான். துரும்பிலும் இருக்கிறான் என்கிறோம்.

நீங்கள் பிறந்தபோதே உங்களுக்கு வேண்டியது எல்லாம் இங்கே படைக்கப்பட்டுள்ளது. உங்களுக்குக் கொடுக்கப் பெற்றுள்ளது.

நீங்கள் சுவாசிப்பதற்குக் காற்று, நீர், உணவுப்பொருட்கள், தானியங்கள், காய்கறிகள், கனிகள், என்று எல்லாமே உள்ளன. நீங்கள் புதிதாக எதையும் உருவாக்க வேண்டாம். every thing is given!

"பறவையைக்கண்டான் விமானம் படைத்தான்
பாயும் மீன்களில் படகினைக் கண்டான்
எதிரொலி கேட்டான் வானொலி படைத்தான்
எதனைக்கண்டான் பணம்தனைப் படைத்தான்"

என்று கவியரசர் அற்புதமாகப் பாட்டில் சொன்னார்.

பறவைகள் பறக்கின்றன. பெட்ரோல் செலவு இல்லாமல் பறக்கின்றன. எந்தவிதப் பராமரிப்புச் செலவும் அவைகளுக்கு இல்லை. சைபீரியாவில் இருந்து வேடந்தங்கலுக்கு வந்துவிட்டுப்போகின்றன. ஆஸ்திரேலியாவில் இருந்து இங்கே வந்துவிட்டுப்போகின்றன. ராடார், மற்றும் வழிகாட்டும் கருவிகள் அவைகளுக்கு இல்லை. இறைவன் படைப்பின் அதிசயங்கள் அவை.

எந்தப் பறவையும் வேலைக்குச் செல்வதில்லை. மாதச் சம்பளத்தையோ, அல்லது தன் தந்தை சேர்த்து வைத்துவிட்டு போனதையோ எதிர்பார்த்து அவைகள் இல்லை. மனிதனின் அவலங்கள் அவைகளுக்கு இல்லை.

எதிரொலியைக் கேட்ட மனிதனின் சிந்தனையில் உருவானதுதான் வானொலி. வானொலியின் அடுத்த பரிணாம வளர்ச்சிதான் தொலை பேசி, அடுத்தடுத்து வந்து இன்று அலைபேசியில் நிற்கிறான்.

மனிதனின் குரல் வளம்தான் முதற்கருவி. அது கடவுள் கொடுத்தது. அந்தக் குரல் எழுப்பும் ஓசைகளை, பேச்சுக்களைக் கடத்துவதற்கு காற்று இருக்கிறது. வெற்றிடமாக இல்லாமல் இருக்கிறது.

தான் படைத்த ஜீவராசிகளுக்கெல்லாம் வேண்டிய உணவை இறைவன் படைத்திருக்கிறான். எந்தப்பறவையாவது பசியில் விழுந்து செத்துப் போனதாக சரித்திரம் இருக்கிறதா? இல்லை. கல்லிற்குள் இருக்கும் தேரையையும் அவன் உயிர்வாழ வைத்திருக்கிறான். வைத்துக் கொண்டிருக்கிறான்.

எந்தப் பறவையும் தான் சாப்பிட்ட பழத்தின் மீதியைக் கொண்டுபோய் தன் கூட்டில் வைப்பதில்லை. கிடைக்கும் தானியங்களை அள்ளிக்கொண்டுபோய் கூண்டிற்குள் மூட்டைகட்டி வைப்பதில்லை. கிடைப்பதை, கிடைத்த இடத்திலேயே உண்ணுகின்றன.

மனிதனைப்போல எதையும் சேமித்துவைப்பதில்லை. வற்றலாக்கி வைப்பதில்லை.

அதைக் கண்ட கவியரசர் இப்படிப்பாடினார்.

“அதோ அந்தப் பறவைபோல வாழவேண்டும்
இதோ இந்த அலைகள் போல ஆடவேண்டும்”

மனிதருக்கு என்னவொரு சிந்தனை இருந்திருக்கிறது பாருங்கள்.

பறவைகளைப்போல கவலைப் படாமல் இரு என்று சொன்னார்.

உலகின் சீதோஷ்ண நிலைமை இடத்திற்கு இடம் மாறுவதைப் பார்த்திருப்பீர்கள். சென்னையில் 36 டிகிரி வெய்யில் என்றால், அதே நேரத்தில் கோவையில் 32 டிகிரி ஊட்டியில் 22 டிகிரி. அட்ச ரேகை தீர்க்க ரேகைகளை வைத்தும், மலைப்பிரதேசங்கள் போன்ற உயரங்களை வைத்தும், காற்றின் அழுத்ததைவைத்தும் சீதோஷ்ணம் மாறுபடுகிறது.

அதே நிலைப்பாட்டில், காற்றில் உள்ள ஆக்சிஸனின் அளவும் மாறுபட வேண்டுமல்லவா? கடற்கரைப் பிரதேங்களில், அடர்ந்த வனப் பகுதிகளில், மலைப் பிரதேசங்களில், பாலவனங்களில் என்று இடத்திற்கு இடம் காற்றில் உள்ள ஆக்சிஸனின் அளவு மாறுபடவேண்டுமல்லவா? மாறுபடாது.

இறைவன் கருணை மிக்கவர். தான் படைத்த ஜீவராசிகள் சுவாசிப்பதற்காக காற்றில் உள்ள ஆக்சிஸனின் அளவு 21% என்பதை அத்தனை இடங்களிலும் ஒரே மாதிரி இருக்கும்படியாகப் பார்த்துக்கொண்டுள்ளார். உயர்ந்த பனிப்பிரதேசங்களில் காற்றின் அளவு குறையுமே தவிர, காற்றில் உள்ள ஆக்சிஸனின் அளவு மாறாது.

The actual percentage of oxygen doesn't change, but there is just less air at higher altitudes. Our climate varies regionally, and the temperature and precipitation tend to be influenced by local geographical characters such as latitude, altitude, distance from the coast, nearby ocean currents, prevailing winds, mountain ranges and vegetation. Different local and regional climate characteristics were classified.

ஆயிரக்கணக்கான மலர்கள் அனுதினமும் பூக்கின்றன. அந்த மலர்களுக்கு விதம் விதமான நிறங்களும், வாசனையும் எங்கிருந்து கிடைக்கின்றன. என்றைக்காவது யோசித்திருக்கிறீர்களா? பலவிதமான கனிகளும், காய்கறிகளும் கிடைக்கின்றன. அவற்றில் உள்ள விதம் விதமான சுவைகள் எப்படி உண்டாகின்றன?

அதே மண்தான். அதே நீர்தான். ஒரே இடத்தில் விளையும், மிளகாயும், பாகற்காயும் வெவ்வேறு சுவையுடன் இருக்கின்றன. மிளகாய்க்கு காரம் எங்கிருந்து கிடைக்கிறது? பாகற்காய்க்குக் கசப்பு எங்கிருந்து கிடைக்கிறது?
என்றைக்காவது யோசித்திருக்கிறீர்களா?

இப்படி எழுதிக்கொண்டே போகலாம்.

இந்தக் கட்டுரையின் நோக்கம் இறைவன் இருக்கிறான். அவன் பார்த்துக்கொள்வான் என்ற நம்பிக்கை உங்களுக்கு ஏற்பட வேண்டும்.

உடனே ஒருவர் கேட்டார்: “இறைவனையும், சூரியனையும் வணங்கிவிட்டு வீட்டில் இருந்தால் நெல் எப்படி விளையும்?”

“ஏரால் உழுது அல்லது இன்றையத் தேதியில் உள்ள வசதிகளை வைத்து டிராக்டரால் உழுது, விதைகளைத்தூவி, உரமிட்டுவளர்த்தாலும், பயிர் வளர்வதற்கு நீரும், சூரிய வெப்பமும் அல்லவா முக்கியம். அவை இரண்டையும் தருவது சூரியன் அல்லவா? வளர்ந்த பயிர்களை (வாழை, தென்னை போன்றவை) புயல் சூராவளி வந்து சாய்க்கலாம் அல்லவா? கடும் மழையால் பயிர்கள் அழியலாம் இல்லையா? ஆகவே இறைவனும் சூரியனும் இல்லாமல் எதுவும் இல்லை. அதை உணரவேண்டும்”

இதைத்தான் பகவான் கண்ணபரமாத்மா இப்படி சொன்னார்: “செயல்கள் உன் கையில் இருக்கின்றன். விளைவுகள் உன் கையில் இல்லை”

Actions are in your hand; Not the results

பிண்ணாக்கைத் தெரிந்து வைத்திருக்கும் மனிதன், இறைவனின் சக்தியை முழுமையாகத் தெரிந்து கொள்ளவில்லை. பிண்ணாக்கு, மாடுகளுக்குப் பயன்படும். கோழிகளுக்குப் பயன்படும். அதைவைத்துக் காசு பண்ணலாம்.

காசுபண்ணக்கூடிய அனைத்தையும் தெரிந்து வைத்திருக்கும் மனிதன் காசைத்தான் கடவுள் என்பான்.

“காசேதான் கடவுளடா - அந்த
கடவுளுக்கும் இது தெரியுமடா”
என்பான். 

கடவுள் அவனை மன்னிப்பாராக!

ஆகவே நம்பிக்கையோடு இருங்கள். சுயவர்கத்தில் பரல்கள் குறைந்தாலும், மொத்த அஷ்டகவக்கத்தின் கூட்டல் அனைவருக்கும் 337 தான். ஒருவருக்குக்கூட வந்துள்ளது. ஒருவருக்குக் குறைவாக வந்துள்ளது என்ற பேச்சுக்கே இடமில்லை. இறைவனின் படைப்பில் அனைவரும் சமம்தான்.

நமது மெய்ஞானம் அதைத்தான் சொல்கிறது.

விஞ்ஞானம் உட்பட அத்தனை ஞானமும் மெய்ஞானத்திற்குள் அடக்கம். அதை மனதில் வையுங்கள்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
அஷ்டகவர்க்கப் பலாபலன்கள்:

சூரியன்தான் பிரதான கிரகம். சூரியன் பிரதான கிரகமாக இருந்தாலும், முதல் நிலை சுபக்கிரகம் என்று போற்றப் படும் குரு பகவான்தான் ஜாதகத்தில் முக்கிய பங்காற்றுவார்.

ஜாதகத்தில் குரு வலுவாக இருந்தால் போதும். குரு பகவான், உச்சம் பெற்றோ அல்லது திரிகோண இடங்கள் அல்லது கேந்திர இடங்களில் இருப்பது நல்லது. சுயவர்க்கத்தில் 5 அல்லது அதற்கு மேற்பட்ட பரல்களுடன் இருப்பது நல்லது.

குருபகவான் எப்போது நன்மைகளைச் செய்வார். தனது தசா புத்திகளில் செய்வார். அத்துடன் கோள்சாரத்தில் உரிய இடங்களில் பயணிக்கும்போது அதாவது சுற்றிவரும்போது செய்வார்.

அவருக்கு உரிய இடங்கள் எது?

(தொடரும்.)

அன்புடன்
வாத்தியார்

-----------------------------------------------------------------------------
வாத்தியார், வெளியூர்ப் பயணம். நாளை ஒரு நாள் வகுப்பறைக்கு விடுமுறை!
-----------------------------------------------------------------------------
இன்றைய நன்மொழி

Your Death !!!!

When a bird is alive, It eats Ants,
When the bird is dead, Ants eat the bird!
Time & Circumstances can change at any time 
Don’t devalue or hurt anyone in life.
You may be powerful today
But Remember, Time is more powerful than You!!!
One tree makes a million match stick
But when the time comes, Only one match stick is needed to burn million trees

Moral: One day you will die and will be eaten by ants. The only thing you take is your Deeds, So be good and do good, Thank Almighty for everything and don’t disrespect others. You are lucked that you have been blessed
 
வாழ்க வளமுடன்!

144 comments:

  1. நல்ல சிந்தனைகள் ஐயா! நன்றி!

    சேமிப்பதில் எறும்பும் தேனியும் முதலில் உள்ளன.சேமிப்பைத் திருடுவதில் முதல் இடத்தில் மனிதன் உள்ளான்.பஞ்ச காலங்களில் மனிதன் எறும்புப் புற்றையும் கலைத்து தானியம் தேடுவானம.தேனியைப் பற்றிக் கேட்கவே வேண்டாம்.தன் சேமிப்பில் சிறு பகுதியைக் கூட அது அடைவதில்லை.முற்றிலும் மனிதனுக்கே!

    நீசமான குருவாக இருந்தாலும்(ராசி நவாம்சம் இரண்டிலும் நீசம்) சுய வர்கத்தில் 7 பெற்றுள்ளார். அதனால் தான் வண்டி நன்றாக ஒடியது போலும்.

    நானும் ஒரு ஆராய்ச்சியாகவே பார்த்து வருகிறேன். ராசிக்கட்டத்தில் நீசம் பெற்ற கிரஹங்கள் சுய வர்கத்தில் 5க்கு மேல் பெறுகின்றன.எதை எடுத்துக் கொள்வது என்ற குழப்பம் வருகிறது.

    ReplyDelete
  2. "போடா...போடா புண்ணாக்கு போடாத தப்புக் கணக்கு" என்று தலைப்பு போடத்தான் முதலில் நினைத்திருப்பீர்கள் என நினைக்கிறேன்.
    வாழ்வில் முதன் முதலாக எண்ணை எடுக்கும் செக்கு இயந்திரத்தைப் பார்கிறேன்.

    “செயல்கள் உன் கையில் இருக்கின்றன். விளைவுகள் உன் கையில் இல்லை” என்பதை என் அம்மா எனக்கு அறிவுறுத்திய பொழுது எனக்கு வயது இருபத்தி ஐந்து. "உன் திட்டமெல்லாம் நல்லாத்தான் இருக்கு, ஆனா நீ நினைப்பது மாதிரியே நடக்கும் என்று எதிபார்ப்பது தப்பு" என்று சொன்னார்கள், அது எவ்வளவு உண்மை என்று எனக்கு சில ஆண்டுகளிலேயே புரிந்தது.

    எனக்கு குருவும் சந்திரனும் சேர்ந்து இரண்டாம் இடத்தில், பாகை வித்தியாசம் பத்திற்கும் மேல், அஸ்தமனம் இல்லை. குரு தன் வீட்டிற்கு 12 இல் இருப்தாலோ (கும்பத்தில்) என்னமோ அந்த வீட்டில் பரல்கள் 27 தான். குருவின் சுய பரல்கள் ஐந்து. அம்சத்தில் ஆட்சி. குரு திசையும் முடிந்துவிட்டது. கிறிஸ்துமஸுக்கு அடுத்த நாள் சனிதிசையில் குருபுத்தி தொடங்குவதை ஆவலுடன் எதிர்பார்திருக்கிறேன்.
    (மேலே குறிபிட்டுள்ளதைப்போல சென்ற ஆண்டு இதே நாளில் எழுதும் அளவுக்கு எனக்கு இந்தத் துறையைப் பற்றி தெரிந்திருக்கவில்லை, கற்றுக் கொடுப்பதற்கு நன்றி ஐயா)

    ReplyDelete
  3. ஞானம் என்றால் என்ன ?
    தனக்குள்ளே தன்னை தேடும் முயற்சி,
    ஆன்மீகத்தில் ஒரு முக்கியமான நிலையாகும்.
    இதற்கு அடுத்து இறுதி நிலை ஒன்று உள்ளது.
    * அது தேடியவன் தன்னையே தேடப்பட்டவனாக உணர்வதாகும் *
    இறைவனைக் காணும் முயற்சியில்,
    கடுமையாக தனக்குள்ளே பயணப்படும் யோக சாதகன்,
    பயணத்தின் முடிவில்,
    இதுவரையில் தான் தேடி வந்த இறைவனே தான் என்பதை அறிவான்.
    'அஹம்பிரம்மாஸ்மி' என்பதை உணர்வான்.
    அதுவே ஞானம்.

    ஓம் சரவணபவ நம

    ReplyDelete
  4. இன்றைய பதிவு மிக மிக மனமகிழ்வு தருவதாக இருந்தது. ஒவ்வொரு வார்த்தையும் குறி தப்பாது விழுகிற சம்மட்டி அடிபோல். விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளுக்கு மாதிரி வடிவத்தை புராணங்களில் பல கோடி வருடங்களுக்கு முன்பே எழுதி வைத்து விட்டார்கள். ஒரு அம்பை, அக்னி பகவானின் மந்திரதிரத்தைச் சொல்லிப் பிரயோகிக்கும் போது அது அது அளவிட முடியாத நெருப்புச் சுவாலைகளைக் கக்கி, அழிக்கும் என்றால் யார் நம்புகிறார்கள். அதை ஏவுகணை என்றால் விஞ்ஞானம் கண்முன் காட்டுகிறது என்பார்கள்.

    இறைவன் ஒருவன் எல்லா உயிர்களிடத்தும் உறைகிறான். கோவில் கும்பாபிஷேகங்களின் போது தவறாது கருடபகவான் வட்டமிடுகிறாரே அவருக்கு யார் மின்னஞ்சலில் தகவல் சொன்னது?. அதே போல், முறையாக, இராமேசுவரம் போன்ற தலங்களில் முன்னோர் ப்ரீதிக்காக, தில ஹோமம் முதலியவை செய்யும் போதும் கருட பகவான் வட்டமிடுகிறார். இதற்கு விஞ்ஞான பூர்வமாக விளக்கமளிக்க இயலுமா?. இந்தக் கலிகாலத்திலும், வருணஜபம் செய்தால், விராடபர்வம் படித்தால் மழை பொழிகிறதே?. மந்திரங்களின் பீஜ சப்தங்கள் (ஒலி அலைகள்) காற்றில் கலந்து இந்தப் பலனைக் கொடுக்கிறதே.

    இங்கு போஸ்டாபீஸில் செய்யும் மணியார்டர் வேண்டுவோருக்குச் சென்று சேர்வது போல், நாம் இங்கு செய்யும் நற்செயல்கள், இறைவனைச் சென்றடைந்து, நல்ல பலன் என்ற ரூபத்தில் அக்னாலெட்ஜ்மென்ட் நம்மை
    வந்தடையும். நல்லவன் வாழ்வான். நல்லதை நினைத்து நல்லதைப் பேசினால் நல்லன நடக்கும். அவர்களுக்கு இறைவன் பாதுகாப்பளிப்பான் என்பதை தங்களைப் போன்றவர்கள் விமரிசனங்களைப் பற்றிக் கவலைப் படாது, தவறாது எடுத்துச் சொல்லும் மிகப் பெரிய சேவைக்கு என் நமஸ்காரங்கள்.

    ReplyDelete
  5. பின்னால் வேறு ஒரு பொருளாக்கு என
    பிண்ணாக்கு பற்றிய குறிப்பு அருமை..

    மெய் என்றால் அன்பு என்று சொல்வது
    பொய்யில்லைதானே..

    கடவுள் கொள்கையில் மாற்றுக் கருத்து வந்தால்
    கண்டுகொள்ளாமல் இருக்க முடிவதில்லை அது

    பதிவில் கொப்பளித்த உணர்வுகளில்
    புரிகிறது..இதிலும் சில அப்படியிருந்தும்

    இந்த செய்தியை சொல்லி
    இன்று அமைதி கொள்கிறோம்..

    தமிழ்நாட்டில்...

    இருவர் மலையாளத்தில் பேசினால் அவர்கள் கேரளத்தை சேர்ந்தவர்கள்

    இருவர் தெலுங்கில் பேசினால்
    அவர்கள் ஆந்திராவை சேர்ந்தவர்கள்

    இருவர் குஜராத்தியில் பேசினால்
    அவர்கள் குஜராத்தை சேர்ந்தவர்கள்

    இருவர் ஆங்கிலத்தில் பேசினால்
    அவர்கள் தமிழராக இருப்பர்
    (என கண்ணன் சொல்லுவார்)

    ஆம்
    மொழி தெரியாதவரிடம் நம்
    மொழியில் பேசுவது சரியல்ல

    அது நாம் சொல்ல வருவது சொன்னபடியே
    அவர்களுக்கு புரியாது

    ஆனால் மொழி தெரிந்தவரிடம்
    அதே மொழியில் பேசினாலும் ஏற்றுக் கொள்ளவில்லையென்றால்...????

    சொல்வது புரிந்தால் மகிழ்ச்சி இல்லையென்றால்
    சொன்னபடிபுரியும் வரை காத்திருக்கிறோம்

    பாடலை சுழல விட்டபடி
    பழையபடியே அமைதி கொள்கிறோம்

    போனால் போகட்டும் போடா; இந்த
    பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா?

    வந்தது தெரியும் போவது எங்கே
    வாசல் நமக்கே தெரியாது!

    வந்தவரெல்லாம் தங்கிவிட்டால் இந்த
    மண்ணில் நமக்கே இடமேது?

    வாழ்க்கை என்பது வியாபாரம்; வரும்
    ஜனனம் என்பது வரவாகும்; அதில்

    மரணம் என்பது செலவாகும்
    போனால் போகட்டும் போடா.

    இரவல் தந்தவன் கேட்கின்றான் ; அதை
    இல்லை என்றால் அவன் விடுவானா?

    உறவைச் சொல்லி அழுவதனாலே
    உயிரை மீண்டும் தருவானா?

    கூக்குரலாலே கிடைக்காது; இது
    கோர்ட்டுக்கு போனால் ஜெயிக்காது; அந்த

    கோட்டையில் நுழைந்தால் திரும்பாது
    போனால் போகட்டும் போடா.

    ReplyDelete
  6. குருவிற்கு வணக்கம்

    மெய்ஞானமும் பிண்ணாக்கும்!

    அற்புதமான விளக்கங்கள்

    தெளிவான கருத்துக்கள்

    நன்றி

    ReplyDelete
  7. குருவிற்கு வணக்கம்

    மெய்ஞானமும் பிண்ணாக்கும்!

    அற்புதமான விளக்கங்கள்

    தெளிவான கருத்துக்கள்

    நன்றி

    ReplyDelete
  8. வாத்தியாருக்கு வணக்கம்.

    எதை வேண்டுமானாலும் என்னால் படைக்க முடியும் என்று மனிதன் சொன்னதும் "எங்கே...ஒரு பொம்மையை செய்து காட்டு" என்று கடவுள் சொன்னாராம். உடனே மனிதன் ஆர்வமாக களிமண்ணை எடுத்து பொம்மை செய்ய முயற்சிக்க, கடவுள் சிரித்துக்கொண்டே''மனிதா...இந்த களிமண் நான் படைத்தது. எங்கே இந்த களிமண்ணைப்போல் ஒன்றை நீயே உருவாக்கு''என்றாராம்.

    மனிதர்களின் நிலை இதுதான். எல்லாவற்றையும் கடவுள் ஏற்கனவே வைத்துவிட்டுப்போயிருக்கிறார். அதை நமது வசதிக்கேற்ப மாற்றம் செய்து பயன்படுத்துகிறோம். அவ்வளவுதான். இந்த உண்மையை உணர்வதுகூட ஜாதக அமைப்பில்தான் இருக்கிறது போலிருக்கிறது.

    தினமும் நான் கோவிலுக்குப்போவதையும், ஜோதிடத்தில் நம்பிக்கை கொள்வதையும் மாற்றுக்கருத்துடைய சிலர் ''இது தவறு" என்று அழுத்தமாக வாதிட்டார்கள்.

    அதற்கு என்னுடைய ஒரே பதில், நாலும் மூணும் சேர்ந்தால் ஏழுதான் விடை. எட்டு என்றால் விடை சொல்பவரின் தப்பு. அமாவாசை,பௌர்ணமி, சூரிய கிரகணம், சந்திரகிரஹணம் போன்ற விஷயங்கள் எல்லாம் பஞ்சாங்கத்தில் கணிக்கப்பட்டிருக்கின்றனவே. அது பொய்யா. மனிதன் என்றால் ஒரு வாய் (நாக்கு சுழலும் திசைக்கு மட்டும் அளவே இல்லை), இரண்டு கை, கால், காது, கண்கள் என்று எல்லாம் ஒரு வரையறைக்குட்பட்டு ஏன் மிகச்சரியான கணக்கில் இருக்க வேண்டும் என்று கேட்பேன்.

    சுருக்கமாக சொன்னால், மனித வாழ்க்கையில் இருக்கும் இந்த அதிசயங்கள் நாம் தெரிந்து கொண்டாலும், தெரிந்து கொள்ளாவிட்டாலும் தன் கடமையை மிகச் சரியாக செய்யும். இதற்கு மேல் எனக்கு சொல்லத்தெரிய வில்லை.

    ReplyDelete
  9. ஐயா அவர்களுக்கு வணக்கம்.

    ஐயா உங்களது பழைய பாடங்களை படித்து பார்த்தேன். இதற்கு பதில் கிடைக்கவில்லை. தயவு கூர்ந்து உங்களுக்கு தெரிந்திருந்தால் சொல்லுங்கள். என்னுடைய கேள்வி உங்களுக்கு புரிகிறதா அல்லது இன்னும் தெளிவாக கேட்க வேண்டுமா? உங்களுக்கு பதில் தெரியவில்லை என்றால் தொந்தரவுக்கு மன்னிக்கவும்.

    புதனின் சுற்றுக்காலம் 88 நாட்கள் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

    ஒரு சுற்றை 88 நாட்களில் முடிக்க வேண்டுமே.ஆனால் அது சூரியனுடனே சுற்றுகின்றது. 12 ராசிகளை கடக்க சராசரியாக 1 ஆண்டு காலம் எடுத்து கொள்கின்றது. இது சரியா?

    மீண்டும் அதே உதாரணத்தை கொடுத்துள்ளேன்.
    (ஜகன்னாத ஹோரா-வில்)
    ஜனவரி 18 ,2012 இல் புதன் தனுசு ராசி-இல் இருந்தது.
    மார்ச் 18 ,2012 இல் புதன் மீன ராசி-இல் இருந்தது.
    மே 18 ,2012 இல் புதன் மேஷ ராசி-இல் இருக்கிறது.
    ஜூலை 18 ,2012 இல் புதன் கடக ராசி-இல் இருக்கிறது.
    செப்டம்பர் 18 ,2012 இல் புதன் கன்னி ராசி-இல் இருக்கிறது.
    நவம்பர் 18 ,2012 இல் புதன் விருச்சிக ராசி-இல் இருக்கிறது.
    ஜனவரி 18 ,2013 இல் புதன் மகர ராசி-இல் இருக்கிறது.

    ReplyDelete
  10. அற்புதமான விளக்கம் அழகான மொழியில்
    சொற்பதம் நிறைந்த நடை அதில்
    தேன் சொட்டும் உரை - சத்தியம்
    என்பதால் இது சாத்திய மானதோ
    காத்திருந்த கணங்கள் மலராக
    பூத்து குலுங்குதே -தென்றல்
    காத்தும் சிந்தையில் வீசுதே...

    விஞ்ஞானி என்பான் யார்
    மெஞ்ஞானி என்பான் யாரென்ற
    அஞ்ஞானம் இங்கே அவிழ்ந்து
    பெரும்ஞானம் பெருகி பேதைமை
    உறும் மனமாயை கலைத்ததே
    கோள்களைக் கண்டான் அதன்
    கோட்பாடு இதென்று கொண்டான்
    எத்தனை எத்தனை கருவி
    எத்தனை எத்தனை ஆய்வு
    அத்தனையும் இருந்த இடத்திலே
    மெத்தன அளந்து சொன்னானே...

    மெஞ்ஞானி அவன் எதனைக்
    கொண்டளந்தான் எண்ணியதுண்டா?
    எப்போதே அதை சொன்னானே
    எப்போதேனும் சிந்தித்ததுண்டா?
    அப்போது அவன் விஞ்ஞானியா
    இப்போது அதையே வழிமொழிபவன்?...

    விஞ்ஞானம் அல்ல... எல்லா
    அஞ்ஞானமும் அந்த பெரும்
    ஞானத்தில் அடக்கம் அறிவாய்
    நெஞ்சே அமைதியில் தெளிவாய்
    நெஞ்சே அத்தனையும் அழகாய்
    அளவாய் அறிவாய் இருப்பது ஏனோ?
    ஒருகணம் நினைப்பாய் நெஞ்சே
    ஆச்சரியத்தில் மூழ்கும் நெஞ்சே.
    சாதித்தவன் எல்லாம் இதைத் தானே
    போதித்தான் தனக்குத் தானே!...
    அவனின்றி அணுவும் அசையாதென்று.

    'கடவுள் நீயென்று உணர்'
    அப்படி உணர்ந்தவன் எப்படி அவனிலிருந்து
    அன்னியப்பட்டு மனக்கண்ணில் கண்டேன்
    கடவுளை என்பான்...

    பேரொளியில் திளைத்த
    அறுபத்து மூவரும் ஆழ்வாரும்,
    ராமானுஜரும், சங்கரரும் இன்னும்
    எத்தனையோ கோடி மகான்களும்
    பொய்யர்களா? பொறுமையோடு உண்மை
    ஏதென்று புரிவாய் நன்னெஞ்சே!

    'பூவுக்குள் தேனை வைத்த ஆண்டவனே
    வண்டுக்கும் ஏனதைச் சொல்லி வச்சான்'

    கணுக்குள் தூசி விழுந்தால்
    கண்ணீர் பெருக்கி அதைக்
    கழுவ வைத்தான் அதை
    பாதுகாக்க அங்கே இமை
    என்னும் பாது கப்பும் வைத்து
    பகலிரவா காவலுக்கு ரோமத்தை
    நிறுத்தியும் வைத்தான்.

    இதயம் என்றொரு உறுப்பைப்
    படைத்தான் அதில் எத்தனை எத்தனை
    இயந்திரம் திணித்தான் அத்தனையும்
    பார்த்து தானே மனிதன் அற்புதம் செய்தான்.

    மூளை என்னும் பெரும்
    அறிவுக் கருவூலம் படைத்தான்
    அதில் எத்தனை எத்தனை
    விசயங்களை திணிக்க வழியும்
    செய்தான்... அத்தனையும் கொண்டுத்தானே
    விஞ்ஞானி வெளிக் கொணர்ந்தான்.

    இப்படி எத்தனையோ அற்புதங்களை
    செய்தவன் எங்கே என்று தேட
    மனமில்லையோ? நெஞ்சே
    தேடி அடைந்தோர் கூற்றை
    நம்ப இன்னும் மனமில்லையோ?
    இத்தனையும் போதாதென்று இங்கே....

    மகான்கள் சொன்னார்கள் மண்ணில் வாழ்ந்த
    மகாத்மாக்கள் சொன்னார்கள் எனையீன்ற
    மாதா சொன்னாள் இவர்கள் கூற்றில் எனக்கு
    மாளாத நம்பிக்கை உண்டு அதனாலே
    மயங்கவில்லை மனம்திசை திரும்பவில்லை
    படைப்பின் காரண காரியம் அறிய முயலவில்லை
    எத்தனை துயரம் வந்தாலும் எங்கே என்னை
    கொண்டு போட்டாலும் அத்தனையும் நினது
    செயலன்றோ? அதில் குற்றம்
    ஏதும் இருப்பதும் உண்டோ?
    அப்படி நினைப்பதுவும் தவறன்றோ!

    இருப்பது ஒரே எண்ணம் அது
    இருப்பதை என்னுள் காண்பது திண்ணம்.
    நன்றியோடு நாடுகிறேன் நற்கதி அளிப்பாயே!
    நாளும் உனைப் பாடுகின்றேன் - அப்பனே
    வேலும் மயிலும் கொண்டவனே
    வேதனையிலா மனமதை அருள்வாயே!

    உங்களின் அழகும் அறிவும் எழில் கொஞ்சும் கட்டுரை என்னை இப்படி கிறுக்கச் செய்தது ஐயா!
    யாவருக்கும் பழனியப்பன் அருளட்டும்.
    மிக்க நன்றி.

    ReplyDelete
    Replies
    1. மிகச் சிறப்பு..தெளிவு..தயைக் கூர்ந்து தொடர்புக் கொள்ளவும்..

      Delete
  11. Excellent way to ensure the people are devoted to God. A different write up but most striking. Good Job.

    ReplyDelete
  12. @arun,
    you are not considering retrograde motion of mercury...
    take it that into calculation.

    ReplyDelete
  13. Dear Arun,
    Good question.

    Please note that the movement of planets on the Rasi chart is not a true and direct representation of the orbital motion of the planets themselves.

    It is, rather, the projection (yes, the geometric projection we all learnt in analytical geometry) of the planet's motion as seen by an observer on earth.

    If you draw a diagram of the solar system and visualise the projection, you will know what I mean.

    That will also explain why Mercuty with its smallest orbit never moves more than 2 houses on either side of the Sun, why Venus moves the way it does, with an orbit smaller than that of Earth.

    The same will also guide you to understand the rather complex dance steps of Jupiter and Saturn on the celestial ball room!

    ReplyDelete
  14. Dear Arun,
    Good question.

    Please note that the movement of planets on the Rasi chart is not a true and direct representation of the orbital motion of the planets themselves.

    It is, rather, the projection (yes, the geometric projection we all learnt in analytical geometry) of the planet's motion as seen by an observer on earth.

    If you draw a diagram of the solar system and visualise the projection, you will know what I mean.

    That will also explain why Mercuty with its smallest orbit never moves more than 2 houses on either side of the Sun, why Venus moves the way it does, with an orbit smaller than that of Earth.

    The same will also guide you to understand the rather complex dance steps of Jupiter and Saturn on the celestial ball room!

    ReplyDelete
  15. Dear Arun,
    Good question.

    Please note that the movement of planets on the Rasi chart is not a true and direct representation of the orbital motion of the planets themselves.

    It is, rather, the projection (yes, the geometric projection we all learnt in analytical geometry) of the planet's motion as seen by an observer on earth.

    If you draw a diagram of the solar system and visualise the projection, you will know what I mean.

    That will also explain why Mercuty with its smallest orbit never moves more than 2 houses on either side of the Sun, why Venus moves the way it does, with an orbit smaller than that of Earth.

    The same will also guide you to understand the rather complex dance steps of Jupiter and Saturn on the celestial ball room!

    ReplyDelete
  16. A clarification, folks. I said Mercury never moves more then two houses on either side of the sun. That was inclusive of the house sun sits in.

    So if Sun is in Kanyaa raasi, Mercury would not stray farther than Simham or Thulaam.

    Just like a calf never strays far from its mother's watchful eyes. :)

    ReplyDelete
  17. That explains why many do not enjoy Budhaadhithya yogam, although both Sun and Mercury occupy the same house.

    Considering the motion of Mercury, it is bound to accompany sun more often than not.

    So it not only takes mere occupancy of the same house by the two planets but also certain aspects from other well wishers.... I mean, subha graham......

    :-)

    ReplyDelete
  18. சகோதரி பார்வதி அவர்களின் விளக்கமும் பின்னூட்டமும் அருமை! :)

    அவர் வருண ஜபம் பற்றி கூறியிருந்தார். அதில் இன்று சிலர் பண்ணும் தவறு (எல்லா அனுஷ்டானங்களிலும் கர்மாக்களிலும் எதையாவது ஒரு விதியை கோட்டை விடுவது இன்று சகஜமாகி விட்ட அவல நிலை) அலவண விதியை (ஜபம் பண்ணுபவர்கள் ஒரு குறிப்பிட்ட நாட்களுக்கு உப்பு சேர்க்காமல் சாப்பிட வேண்டும்) பின்பற்றுவதில்லை. அப்புறம் மழை வராது தான். பண்ணுகிறதை ஒழுங்காக பண்ண வேண்டும் இல்லையா? அதை விட்டு விட்டு பலன் கிடைக்கவில்லை என்று தூற்றினால் சிரிப்பு தான் வருகிறது.

    இன்னொரு உதாரணம் திருநாம பொருத்தம். "திருமண பொருத்தம் பார்ப்பது எப்படி" என்ற பாத்து ரூபாய் குட்டி புத்தகத்தை சுப்பன் டீ கடையில் வாங்கி அதன் படு கலியாணம் பண்ணுவது. அங்கே ஏதாவது கிரக சேர்க்கையால் துன்பம் விளைந்தால் ஜாதகம் பொய் என்று உறுமுவது...... மன்னிக்கவும், ஊளையிடுவது.....

    செய்வன திருந்த செய்யணும்!
    -----
    Bhuvaneshwar D
    www.bhuvaneshwar.com

    ReplyDelete
  19. Dear sir,
    Really a good message & one can say good write up.
    I wonder that you have good knowledge in Science along with other field like sale Tax, vat, life science and simple doctorate writing.
    If you don`t mind please let us know, what is your basic qualification. I have read almost all the articles & lessons in classroom but never observed that
    a] imposing your thought process to others
    b]you never hurt anybody`s sentiments
    that shows a grown up man`s quality.
    Good Namaskar to you.
    Thank you very much for the lessons and other articles.

    G.Srinivasan.Bharuch.

    ReplyDelete
  20. ஆசிரியரின் கட்டுரை அருமை.

    அவனின்றி அணுவும் அசையாது என்ற உண்மையை போட்டு உடைத்து இருக்கிறார்.

    அவ்வளவும் செய்த இறைவன், நம்மிடம் கருணையோடு இருப்பது தானே அவன் சிறப்பு.

    இதனை வகையான ஜீவன்கள், தாதுக்கள், இன்னும் கண்டுபிடிக்கப்படாத எத்தனையோ உயிர் வகைகள் இருக்கின்றன. இத்தனையையும் செய்தவன் மகா கெட்டிக்காரனாக இருக்க வேண்டும். அவன் ரொம்ப கெட்டிக்காரன் மட்டும் அல்ல, மகா நல்லவனும் தான். அதனால் தானே ஒவ்வொரு உயிருக்கும் ஏதோ ஒன்றை கொடுத்து அனுப்பி உள்ளான்? புலிக்கு பல், குதிரைக்கு கால்களில் வேகம், யானைக்கு பலம், குளிர் பிரதேச மிருகங்களுக்கு போர்வை, மனிதனுக்கு இவர்கள் கொண்ட அத்தனையையும் பயன்படுத்தும் புத்தி பலம்.........

    இவ்வளவும் செய்த அந்த ஆண்டவன் கூப்பிட்ட குரலுக்கு வரும் எளியவன்.

    "மனத்தகத்தான் தலைமேலான் வாக்கிலுள்ளான்
    வாயாரத் தன்னடியைப் பாடும் தொண்டர்
    இனத்தகத்தான்" - அப்பர் பெருமான் கூற்று.........

    "விறகில் தீயினன் பாலில் படு நெய்போல்
    மறைய நின்றுளன் மாமணி ஜ்யோதியான்
    உறவுக்கோல்நட்டு உறுதிக்கயிற்றினால்
    முருக வாங்கி கடைய முன்னிற்குமே......."

    இதுவும் அப்பர் கூற்று........

    விறகில் தீயும் பாலில் நெய்யும் மறைந்துள்ள போல், அண்டம் யாவையும் வியாபித்து அதன் உருவாக இருப்பவன் இறைவன்......... பக்தி எனும் மத்தினால் முயற்சி எனும் கயிறு கொண்டு முனைந்து கடைய அந்த அத்வைத உண்மை வெளிப்படும்.

    "மரத்தில் மறைந்தது மாமத யானை
    மரத்தை மறைத்தது மாமத யானை
    பரத்தில் மறைந்தது பார்முதல் பூதம்
    பரத்தை மறைத்தது பார்முதல் பூதம்" என்பார் திருமூலர்.

    அலங்கலில் தோன்றும் பொய்மை அரவு என, பூதம் ஐந்தும்
    விலங்கிய விகாரப் பாட்டின் வேறுபாடு உற்ற வீக்கம்
    கலங்குவது எவரைக் கண்டால்
    அவர் என்பர்-கை வில் ஏந்தி
    இலங்கையில் பொருதார்அன்றே
    மறைகளுக்கு இறுதி ஆவர்

    என்று கம்பரும் விளக்குகிறார்..........
    அலங்கல் - மாலை
    அரவு - பாம்பு

    ஒழி இல்லாத அந்தி வேளையில் முன்னே கிடக்கும் பூமாலை ஒன்றில் தோன்றும் பாம்பு விளக்கினால் அழியும்.......
    அது போல் இந்த உலகமெல்லாம் வேறு வேறாக தோன்றினாலும் அது அதனையுமாகவும் ஆகியிருப்பது மொலமான ஒரு வஸ்து....... அது எது? அது தான் கையில் வில்லை எடுத்துக்கொண்டு இளைனையில் போர் பண்ணி ராவணனை முடித்து (திருமால்) என்கிறார்........ சிவன் திருமாலோ....... விஷயம் ஒன்று தானே......

    ReplyDelete
  21. Folks,
    Here is something interesting you may want to try. A real time observation of the movements of planets, sitting right at your desk.

    1. Open Jagannaatha Hora software; It will show the current planetary position for the day (you must det the latitude and longitude for a place you like); On the RH side, it will have a tabular column showing the longitude of all the planets and satellites.

    2. Click on the NEW icon (located on the upper left cornet, on the tool bar - the white page icon below NEW menu item)

    3. You will see that the longitudes of certain planets have changed whilst some have not. For instance Saturn will be as is, but Venus will change every second.

    4. Clich continuously the icon and see how the longitude changes.

    5. Do this for long enough and you will see the pattern evolving......

    I tried.

    You?

    PS: Our friend Arun might like this exercise :)

    ----
    Bhuvaneshwar D
    www.bhuvaneshwar.com

    ReplyDelete
  22. /////Blogger kmr.krishnan said...
    நல்ல சிந்தனைகள் ஐயா! நன்றி!
    சேமிப்பதில் எறும்பும் தேனியும் முதலில் உள்ளன.சேமிப்பைத் திருடுவதில் முதல் இடத்தில் மனிதன் உள்ளான்.பஞ்ச காலங்களில் மனிதன்

    எறும்புப் புற்றையும் கலைத்து தானியம் தேடுவானம.தேனியைப் பற்றிக் கேட்கவே வேண்டாம்.தன் சேமிப்பில் சிறு பகுதியைக் கூட அது

    அடைவதில்லை.முற்றிலும் மனிதனுக்கே!
    நீசமான குருவாக இருந்தாலும்(ராசி நவாம்சம் இரண்டிலும் நீசம்) சுய வர்கத்தில் 7 பெற்றுள்ளார். அதனால் தான் வண்டி நன்றாக ஒடியது

    போலும்.
    நானும் ஒரு ஆராய்ச்சியாகவே பார்த்து வருகிறேன். ராசிக்கட்டத்தில் நீசம் பெற்ற கிரஹங்கள் சுய வர்கத்தில் 5க்கு மேல் பெறுகின்றன.எதை

    எடுத்துக் கொள்வது என்ற குழப்பம் வருகிறது./////

    அஷ்டகவர்க்கத்தின் மேன்மை அதுதான். நீசமானாலும், மற்ற கிரகங்களின் தொடர்பும், பார்வையும் பெற்றுத்தரும் எண்ணிக்கையால்தான்

    சுயவர்கத்தில் அதிக பரல்கள் வரும். அதனால் நீசத்தனமை அடிபட்டுப்போய்விடும். நீங்கள் சுயவர்கத்தையே க்ணக்கில் எடுத்துக்கொள்ளலாம்!

    ReplyDelete
  23. /////Blogger தேமொழி said...
    "போடா...போடா புண்ணாக்கு போடாத தப்புக் கணக்கு" என்று தலைப்பு போடத்தான் முதலில் நினைத்திருப்பீர்கள் என நினைக்கிறேன்.
    வாழ்வில் முதன் முதலாக எண்ணை எடுக்கும் செக்கு இயந்திரத்தைப் பார்கிறேன்.
    “செயல்கள் உன் கையில் இருக்கின்றன். விளைவுகள் உன் கையில் இல்லை” என்பதை என் அம்மா எனக்கு அறிவுறுத்திய பொழுது எனக்கு வயது இருபத்தி ஐந்து. "உன் திட்டமெல்லாம் நல்லாத்தான் இருக்கு, ஆனா நீ நினைப்பது மாதிரியே நடக்கும் என்று எதிபார்ப்பது தப்பு" என்று
    சொன்னார்கள், அது எவ்வளவு உண்மை என்று எனக்கு சில ஆண்டுகளிலேயே புரிந்தது.
    எனக்கு குருவும் சந்திரனும் சேர்ந்து இரண்டாம் இடத்தில், பாகை வித்தியாசம் பத்திற்கும் மேல், அஸ்தமனம் இல்லை. குரு தன் வீட்டிற்கு 12 இல் இருப்தாலோ (கும்பத்தில்) என்னமோ அந்த வீட்டில் பரல்கள் 27 தான். குருவின் சுய பரல்கள் ஐந்து. அம்சத்தில் ஆட்சி. குரு திசையும்

    முடிந்துவிட்டது. கிறிஸ்துமஸுக்கு அடுத்த நாள் சனிதிசையில் குருபுத்தி தொடங்குவதை ஆவலுடன் எதிர்பார்திருக்கிறேன்.
    (மேலே குறிபிட்டுள்ளதைப்போல சென்ற ஆண்டு இதே நாளில் எழுதும் அளவுக்கு எனக்கு இந்தத் துறையைப் பற்றி தெரிந்திருக்கவில்லை,
    கற்றுக் கொடுப்பதற்கு நன்றி ஐயா)/////

    சனி மகாதிசையில் குரு புத்தி என்பது கடைசி புத்தியாகும். அது நன்மை அளிக்கக்கூடிய புத்தியாகும் (Sub period) அதன் காலம் 30 மாதங்கள்
    மற்றும் 12 நாட்கள். நீங்கள் பலவிதமான நன்மைகளைப் பெற வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  24. /////Blogger Bhogar said...
    ஞானம் என்றால் என்ன ?
    தனக்குள்ளே தன்னை தேடும் முயற்சி,
    ஆன்மீகத்தில் ஒரு முக்கியமான நிலையாகும்.
    இதற்கு அடுத்து இறுதி நிலை ஒன்று உள்ளது.
    * அது தேடியவன் தன்னையே தேடப்பட்டவனாக உணர்வதாகும் *
    இறைவனைக் காணும் முயற்சியில்,
    கடுமையாக தனக்குள்ளே பயணப்படும் யோக சாதகன்,
    பயணத்தின் முடிவில்,
    இதுவரையில் தான் தேடி வந்த இறைவனே தான் என்பதை அறிவான்.
    'அஹம்பிரம்மாஸ்மி' என்பதை உணர்வான்.
    அதுவே ஞானம்.
    ஓம் சரவணபவ நம/////

    நல்லது. உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  25. /////Blogger Parvathy Ramachandran said...
    இன்றைய பதிவு மிக மிக மனமகிழ்வு தருவதாக இருந்தது. ஒவ்வொரு வார்த்தையும் குறி தப்பாது விழுகிற சம்மட்டி அடிபோல். விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளுக்கு மாதிரி வடிவத்தை புராணங்களில் பல கோடி வருடங்களுக்கு முன்பே எழுதி வைத்து விட்டார்கள். ஒரு அம்பை, அக்னி பகவானின் மந்திரதிரத்தைச் சொல்லிப் பிரயோகிக்கும் போது அது அது அளவிட முடியாத நெருப்புச் சுவாலைகளைக் கக்கி, அழிக்கும் என்றால் யார் நம்புகிறார்கள். அதை ஏவுகணை என்றால் விஞ்ஞானம் கண்முன் காட்டுகிறது என்பார்கள்.
    இறைவன் ஒருவன் எல்லா உயிர்களிடத்தும் உறைகிறான். கோவில் கும்பாபிஷேகங்களின் போது தவறாது கருடபகவான் வட்டமிடுகிறாரே அவருக்கு யார் மின்னஞ்சலில் தகவல் சொன்னது?. அதே போல், முறையாக, இராமேசுவரம் போன்ற தலங்களில் முன்னோர் ப்ரீதிக்காக, தில ஹோமம் முதலியவை செய்யும் போதும் கருட பகவான் வட்டமிடுகிறார். இதற்கு விஞ்ஞான பூர்வமாக விளக்கமளிக்க இயலுமா?. இந்தக் கலிகாலத்திலும், வருணஜபம் செய்தால், விராடபர்வம் படித்தால் மழை பொழிகிறதே?. மந்திரங்களின் பீஜ சப்தங்கள் (ஒலி அலைகள்) காற்றில் கலந்து இந்தப் பலனைக் கொடுக்கிறதே.
    இங்கு போஸ்டாபீஸில் செய்யும் மணியார்டர் வேண்டுவோருக்குச் சென்று சேர்வது போல், நாம் இங்கு செய்யும் நற்செயல்கள், இறைவனைச் சென்றடைந்து, நல்ல பலன் என்ற ரூபத்தில் அக்னாலெட்ஜ்மென்ட் நம்மை
    வந்தடையும். நல்லவன் வாழ்வான். நல்லதை நினைத்து நல்லதைப் பேசினால் நல்லன நடக்கும். அவர்களுக்கு இறைவன் பாதுகாப்பளிப்பான்
    என்பதை தங்களைப் போன்றவர்கள் விமரிசனங்களைப் பற்றிக் கவலைப் படாது, தவறாது எடுத்துச் சொல்லும் மிகப் பெரிய சேவைக்கு என்
    நமஸ்காரங்கள்./////

    நல்லது. உங்களின் பாராட்டிற்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி சகோதரி!

    ReplyDelete
  26. ////Blogger அய்யர் said...
    பின்னால் வேறு ஒரு பொருளாக்கு என
    பிண்ணாக்கு பற்றிய குறிப்பு அருமை..
    மெய் என்றால் அன்பு என்று சொல்வது
    பொய்யில்லைதானே..
    கடவுள் கொள்கையில் மாற்றுக் கருத்து வந்தால்
    கண்டுகொள்ளாமல் இருக்க முடிவதில்லை அது
    பதிவில் கொப்பளித்த உணர்வுகளில்
    புரிகிறது..இதிலும் சில அப்படியிருந்தும்
    இந்த செய்தியை சொல்லி
    இன்று அமைதி கொள்கிறோம்..
    தமிழ்நாட்டில்...
    இருவர் மலையாளத்தில் பேசினால் அவர்கள் கேரளத்தை சேர்ந்தவர்கள்
    இருவர் தெலுங்கில் பேசினால்
    அவர்கள் ஆந்திராவை சேர்ந்தவர்கள்
    இருவர் குஜராத்தியில் பேசினால்
    அவர்கள் குஜராத்தை சேர்ந்தவர்கள்
    இருவர் ஆங்கிலத்தில் பேசினால்
    அவர்கள் தமிழராக இருப்பர்
    (என கண்ணன் சொல்லுவார்)
    ஆம்
    மொழி தெரியாதவரிடம் நம்
    மொழியில் பேசுவது சரியல்ல
    அது நாம் சொல்ல வருவது சொன்னபடியே
    அவர்களுக்கு புரியாது
    ஆனால் மொழி தெரிந்தவரிடம்
    அதே மொழியில் பேசினாலும் ஏற்றுக் கொள்ளவில்லையென்றால்...????
    சொல்வது புரிந்தால் மகிழ்ச்சி இல்லையென்றால்
    சொன்னபடிபுரியும் வரை காத்திருக்கிறோம்/////

    ஏற்றுக் கொள்ளவில்லையென்றால் என்றால் என்ன நஷ்டம்? விட்டுவிட வேண்டியதுதான்!

    ReplyDelete
  27. ////Blogger Udhaya Kumar said...
    குருவிற்கு வணக்கம்
    மெய்ஞானமும் பிண்ணாக்கும்!
    அற்புதமான விளக்கங்கள்
    தெளிவான கருத்துக்கள்
    நன்றி////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  28. /////Blogger சரண் said...
    வாத்தியாருக்கு வணக்கம்.
    எதை வேண்டுமானாலும் என்னால் படைக்க முடியும் என்று மனிதன் சொன்னதும் "எங்கே...ஒரு பொம்மையை செய்து காட்டு" என்று கடவுள் சொன்னாராம். உடனே மனிதன் ஆர்வமாக களிமண்ணை எடுத்து பொம்மை செய்ய முயற்சிக்க, கடவுள் சிரித்துக் கொண்டே' 'மனிதா...இந்த களிமண் நான் படைத்தது. எங்கே இந்த களிமண்ணைப்போல் ஒன்றை நீயே உருவாக்கு''என்றாராம்.
    மனிதர்களின் நிலை இதுதான். எல்லாவற்றையும் கடவுள் ஏற்கனவே வைத்துவிட்டுப்போயிருக்கிறார். அதை நமது வசதிக்கேற்ப மாற்றம் செய்து பயன்படுத்துகிறோம். அவ்வளவுதான். இந்த உண்மையை உணர்வதுகூட ஜாதக அமைப்பில்தான் இருக்கிறது போலிருக்கிறது.
    தினமும் நான் கோவிலுக்குப்போவதையும், ஜோதிடத்தில் நம்பிக்கை கொள்வதையும் மாற்றுக்கருத்துடைய சிலர் ''இது தவறு" என்று
    அழுத்தமாக வாதிட்டார்கள்.
    அதற்கு என்னுடைய ஒரே பதில், நாலும் மூணும் சேர்ந்தால் ஏழுதான் விடை. எட்டு என்றால் விடை சொல்பவரின் தப்பு.
    அமாவாசை,பௌர்ணமி, சூரிய கிரகணம், சந்திரகிரஹணம் போன்ற விஷயங்கள் எல்லாம் பஞ்சாங்கத்தில் கணிக்கப்பட்டிருக்கின்றனவே. அது
    பொய்யா. மனிதன் என்றால் ஒரு வாய் (நாக்கு சுழலும் திசைக்கு மட்டும் அளவே இல்லை), இரண்டு கை, கால், காது, கண்கள் என்று எல்லாம் ஒரு வரையறைக்குட்பட்டு ஏன் மிகச்சரியான கணக்கில் இருக்க வேண்டும் என்று கேட்பேன்.
    சுருக்கமாக சொன்னால், மனித வாழ்க்கையில் இருக்கும் இந்த அதிசயங்கள் நாம் தெரிந்து கொண்டாலும், தெரிந்து கொள்ளாவிட்டாலும் தன்
    கடமையை மிகச் சரியாக செய்யும். இதற்கு மேல் எனக்கு சொல்லத்தெரிய வில்லை./////

    நேரம் காலம் வரும்போது எல்லோரும் பெட்டியைத் (ஜாதகத்தைக்) தூக்கிவிடுவான்.பணத் தேடலில் வாழ்க்கையைத் தொலைத்தை ஒரு நாள்
    உணர்வான். ணரவைத்துவிட்டுத்தான் சனீஷ்வரன் போர்டிங் பாசைக் கையில் கொடுப்பான்.

    ReplyDelete
  29. ////Blogger Arun said...
    ஐயா அவர்களுக்கு வணக்கம்.
    ஐயா உங்களது பழைய பாடங்களை படித்து பார்த்தேன். இதற்கு பதில் கிடைக்கவில்லை. தயவு கூர்ந்து உங்களுக்கு தெரிந்திருந்தால் சொல்லுங்கள். என்னுடைய கேள்வி உங்களுக்கு புரிகிறதா அல்லது இன்னும் தெளிவாக கேட்க வேண்டுமா? உங்களுக்கு பதில் தெரியவில்லை என்றால் தொந்தரவுக்கு மன்னிக்கவும்.
    புதனின் சுற்றுக்காலம் 88 நாட்கள் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
    ஒரு சுற்றை 88 நாட்களில் முடிக்க வேண்டுமே.ஆனால் அது சூரியனுடனே சுற்றுகின்றது. 12 ராசிகளை கடக்க சராசரியாக 1 ஆண்டு காலம் எடுத்து கொள்கின்றது. இது சரியா?
    மீண்டும் அதே உதாரணத்தை கொடுத்துள்ளேன்.
    (ஜகன்னாத ஹோரா-வில்)
    ஜனவரி 18 ,2012 இல் புதன் தனுசு ராசி-இல் இருந்தது.
    மார்ச் 18 ,2012 இல் புதன் மீன ராசி-இல் இருந்தது.
    மே 18 ,2012 இல் புதன் மேஷ ராசி-இல் இருக்கிறது.
    ஜூலை 18 ,2012 இல் புதன் கடக ராசி-இல் இருக்கிறது.
    செப்டம்பர் 18 ,2012 இல் புதன் கன்னி ராசி-இல் இருக்கிறது.
    நவம்பர் 18 ,2012 இல் புதன் விருச்சிக ராசி-இல் இருக்கிறது.
    ஜனவரி 18 ,2013 இல் புதன் மகர ராசி-இல் இருக்கிறது.////

    அது சூரியனுடனே சுற்றுகின்றது. 12 ராசிகளை கடக்க சராசரியாக 1 ஆண்டு காலம் எடுத்து கொள்கின்றது. என்று நீங்களே ஒப்புக்கொள்கிறீர்கள்! நீங்கள் குறிப்பிட்டுள்ள மாதங்களில் சூரியன் எந்தெந்த ராசிகளில் உள்ளது என்பதையும் பாருங்கள். குழப்பம் தீர்ந்துவிடும்!

    ReplyDelete
  30. ////Blogger ஜி ஆலாசியம் said...
    அற்புதமான விளக்கம் அழகான மொழியில்
    சொற்பதம் நிறைந்த நடை அதில்
    தேன் சொட்டும் உரை - சத்தியம்
    என்பதால் இது சாத்திய மானதோ
    காத்திருந்த கணங்கள் மலராக
    பூத்து குலுங்குதே -தென்றல்
    காத்தும் சிந்தையில் வீசுதே...

    விஞ்ஞானி என்பான் யார்
    மெஞ்ஞானி என்பான் யாரென்ற
    அஞ்ஞானம் இங்கே அவிழ்ந்து
    பெரும்ஞானம் பெருகி பேதைமை
    உறும் மனமாயை கலைத்ததே
    கோள்களைக் கண்டான் அதன்
    கோட்பாடு இதென்று கொண்டான்
    எத்தனை எத்தனை கருவி
    எத்தனை எத்தனை ஆய்வு
    அத்தனையும் இருந்த இடத்திலே
    மெத்தன அளந்து சொன்னானே...

    மெஞ்ஞானி அவன் எதனைக்
    கொண்டளந்தான் எண்ணியதுண்டா?
    எப்போதே அதை சொன்னானே
    எப்போதேனும் சிந்தித்ததுண்டா?
    அப்போது அவன் விஞ்ஞானியா
    இப்போது அதையே வழிமொழிபவன்?...

    விஞ்ஞானம் அல்ல... எல்லா
    அஞ்ஞானமும் அந்த பெரும்
    ஞானத்தில் அடக்கம் அறிவாய்
    நெஞ்சே அமைதியில் தெளிவாய்
    நெஞ்சே அத்தனையும் அழகாய்
    அளவாய் அறிவாய் இருப்பது ஏனோ?
    ஒருகணம் நினைப்பாய் நெஞ்சே
    ஆச்சரியத்தில் மூழ்கும் நெஞ்சே.
    சாதித்தவன் எல்லாம் இதைத் தானே
    போதித்தான் தனக்குத் தானே!...
    அவனின்றி அணுவும் அசையாதென்று.

    'கடவுள் நீயென்று உணர்'
    அப்படி உணர்ந்தவன் எப்படி அவனிலிருந்து
    அன்னியப்பட்டு மனக்கண்ணில் கண்டேன்
    கடவுளை என்பான்...

    பேரொளியில் திளைத்த
    அறுபத்து மூவரும் ஆழ்வாரும்,
    ராமானுஜரும், சங்கரரும் இன்னும்
    எத்தனையோ கோடி மகான்களும்
    பொய்யர்களா? பொறுமையோடு உண்மை
    ஏதென்று புரிவாய் நன்னெஞ்சே!

    'பூவுக்குள் தேனை வைத்த ஆண்டவனே
    வண்டுக்கும் ஏனதைச் சொல்லி வச்சான்'

    கணுக்குள் தூசி விழுந்தால்
    கண்ணீர் பெருக்கி அதைக்
    கழுவ வைத்தான் அதை
    பாதுகாக்க அங்கே இமை
    என்னும் பாது கப்பும் வைத்து
    பகலிரவா காவலுக்கு ரோமத்தை
    நிறுத்தியும் வைத்தான்.

    இதயம் என்றொரு உறுப்பைப்
    படைத்தான் அதில் எத்தனை எத்தனை
    இயந்திரம் திணித்தான் அத்தனையும்
    பார்த்து தானே மனிதன் அற்புதம் செய்தான்.

    மூளை என்னும் பெரும்
    அறிவுக் கருவூலம் படைத்தான்
    அதில் எத்தனை எத்தனை
    விசயங்களை திணிக்க வழியும்
    செய்தான்... அத்தனையும் கொண்டுத்தானே
    விஞ்ஞானி வெளிக் கொணர்ந்தான்.

    இப்படி எத்தனையோ அற்புதங்களை
    செய்தவன் எங்கே என்று தேட
    மனமில்லையோ? நெஞ்சே
    தேடி அடைந்தோர் கூற்றை
    நம்ப இன்னும் மனமில்லையோ?
    இத்தனையும் போதாதென்று இங்கே....

    மகான்கள் சொன்னார்கள் மண்ணில் வாழ்ந்த
    மகாத்மாக்கள் சொன்னார்கள் எனையீன்ற
    மாதா சொன்னாள் இவர்கள் கூற்றில் எனக்கு
    மாளாத நம்பிக்கை உண்டு அதனாலே
    மயங்கவில்லை மனம்திசை திரும்பவில்லை
    படைப்பின் காரண காரியம் அறிய முயலவில்லை
    எத்தனை துயரம் வந்தாலும் எங்கே என்னை
    கொண்டு போட்டாலும் அத்தனையும் நினது
    செயலன்றோ? அதில் குற்றம்
    ஏதும் இருப்பதும் உண்டோ?
    அப்படி நினைப்பதுவும் தவறன்றோ!

    இருப்பது ஒரே எண்ணம் அது
    இருப்பதை என்னுள் காண்பது திண்ணம்.
    நன்றியோடு நாடுகிறேன் நற்கதி அளிப்பாயே!
    நாளும் உனைப் பாடுகின்றேன் - அப்பனே
    வேலும் மயிலும் கொண்டவனே
    வேதனையிலா மனமதை அருள்வாயே!

    உங்களின் அழகும் அறிவும் எழில் கொஞ்சும் கட்டுரை என்னை இப்படி கிறுக்கச் செய்தது ஐயா!
    யாவருக்கும் பழனியப்பன் அருளட்டும்.
    மிக்க நன்றி./////

    உங்களுடைய நீண்ட, மனம் நெகிழ்ந்த பின்னூட்டத்திற்கு நன்றி ஆலாசியம்!

    ReplyDelete
  31. ////Blogger arul said...
    arumai////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  32. ////Blogger Ravi said...
    Excellent way to ensure the people are devoted to God. A different write up but most striking. Good Job.////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  33. /////Blogger seenivasan said...
    Dear sir,
    Really a good message & one can say good write up.
    I wonder that you have good knowledge in Science along with other field like sale Tax, vat, life science and simple doctorate writing.
    If you don`t mind please let us know, what is your basic qualification. I have read almost all the articles & lessons in classroom but never observed that
    a] imposing your thought process to others
    b]you never hurt anybody`s sentiments
    that shows a grown up man`s quality.
    Good Namaskar to you.
    Thank you very much for the lessons and other articles.
    G.Srinivasan.Bharuch./////

    basic qualification: கல்லூரியில் ஒரு ஆண்டு மட்டுமே படிக்க முடிந்தது. அன்றைய குடுமப சூழ்நிலை காரணமாக படிப்பைக் கைவிட்டுவிட்டு வேலக்குச் செல்ல நேரந்தது. நான் ஒரு தீவிர வாசகன். அது மட்டுமே என் தகுதி. கல்லூரியில் படிக்க முடியாத பல விஷயங்களை அந்த தீவிர வாசிப்பு கொடுத்தது.கல்கி.ரா.கீருஷ்ணமூர்த்தி, எஸ்.ஏ.பி, ராகி.ரங்கராஜன், ஜ.ரா சுந்தரேசன், சாவி, நா.பார்த்தசாரதி, சாண்டில்யன், நாடோடி, சுஜாதா, பாலகுமாரன், அனுராதா ரமணன், பட்டுக்கோட்டை பிரபாகர், கவியரசர் கண்ணதாசன், கவிஞர் வாலி, வாரியார் சுவாமிகள், ஓஷோ, தயானந்த சரஸ்வதி, James Hadley Chase, Jeffery Archer என்று எனது ஆசிரியர்களின் பட்டியல் நீளும்! பக்கோடா கட்டி வரும் காகிதம் முதல், விக்கிபீடியா, க்கூள் காமாட்சி வரை எனது வாசிப்பிற்குத் தீனி போடுபவர்கள் ஏராளமாக இருக்கிறார்கள்.

    ReplyDelete
  34. ////Blogger Bhuvaneshwar said...
    ஆசிரியரின் கட்டுரை அருமை.
    அவனின்றி அணுவும் அசையாது என்ற உண்மையை போட்டு உடைத்து இருக்கிறார்.
    அவ்வளவும் செய்த இறைவன், நம்மிடம் கருணையோடு இருப்பது தானே அவன் சிறப்பு.
    இதனை வகையான ஜீவன்கள், தாதுக்கள், இன்னும் கண்டுபிடிக்கப்படாத எத்தனையோ உயிர் வகைகள் இருக்கின்றன. இத்தனையையும் செய்தவன் மகா கெட்டிக்காரனாக இருக்க வேண்டும். அவன் ரொம்ப கெட்டிக்காரன் மட்டும் அல்ல, மகா நல்லவனும் தான். அதனால் தானே ஒவ்வொரு உயிருக்கும் ஏதோ ஒன்றை கொடுத்து அனுப்பி உள்ளான்? புலிக்கு பல், குதிரைக்கு கால்களில் வேகம், யானைக்கு பலம், குளிர் பிரதேச மிருகங்களுக்கு போர்வை, மனிதனுக்கு இவர்கள் கொண்ட அத்தனையையும் பயன்படுத்தும் புத்தி பலம்.........
    இவ்வளவும் செய்த அந்த ஆண்டவன் கூப்பிட்ட குரலுக்கு வரும் எளியவன்.
    "மனத்தகத்தான் தலைமேலான் வாக்கிலுள்ளான்
    வாயாரத் தன்னடியைப் பாடும் தொண்டர்
    இனத்தகத்தான்" - அப்பர் பெருமான் கூற்று.........
    "விறகில் தீயினன் பாலில் படு நெய்போல்
    மறைய நின்றுளன் மாமணி ஜ்யோதியான்
    உறவுக்கோல்நட்டு உறுதிக்கயிற்றினால்
    முருக வாங்கி கடைய முன்னிற்குமே......."
    இதுவும் அப்பர் கூற்று........
    விறகில் தீயும் பாலில் நெய்யும் மறைந்துள்ள போல், அண்டம் யாவையும் வியாபித்து அதன் உருவாக இருப்பவன் இறைவன்......... பக்தி எனும் மத்தினால் முயற்சி எனும் கயிறு கொண்டு முனைந்து கடைய அந்த அத்வைத உண்மை வெளிப்படும்.
    "மரத்தில் மறைந்தது மாமத யானை
    மரத்தை மறைத்தது மாமத யானை
    பரத்தில் மறைந்தது பார்முதல் பூதம்
    பரத்தை மறைத்தது பார்முதல் பூதம்" என்பார் திருமூலர்.
    அலங்கலில் தோன்றும் பொய்மை அரவு என, பூதம் ஐந்தும்
    விலங்கிய விகாரப் பாட்டின் வேறுபாடு உற்ற வீக்கம்
    கலங்குவது எவரைக் கண்டால்
    அவர் என்பர்-கை வில் ஏந்தி
    இலங்கையில் பொருதார்அன்றே
    மறைகளுக்கு இறுதி ஆவர்
    என்று கம்பரும் விளக்குகிறார்..........
    அலங்கல் - மாலை
    அரவு - பாம்பு
    ஒழி இல்லாத அந்தி வேளையில் முன்னே கிடக்கும் பூமாலை ஒன்றில் தோன்றும் பாம்பு விளக்கினால் அழியும்.......
    அது போல் இந்த உலகமெல்லாம் வேறு வேறாக தோன்றினாலும் அது அதனையுமாகவும் ஆகியிருப்பது மொலமான ஒரு வஸ்து....... அது எது? அது தான் கையில் வில்லை எடுத்துக்கொண்டு இளைனையில் போர் பண்ணி ராவணனை முடித்து (திருமால்) என்கிறார்........ சிவன் திருமாலோ....... விஷயம் ஒன்று தானே....../////

    உங்களின் நீண்ட பின்னூட்டங்களுக்கும் பாராட்டிற்கும் நன்றி நண்பரே!

    ReplyDelete
  35. //இருவர் ஆங்கிலத்தில் பேசினால்
    அவர்கள் தமிழராக இருப்பர்
    (என கண்ணன் சொல்லுவார்)// Ayyar.

    திரு ஐயர் எழுதியுள்ள இந்த வரிகள் படித்த நகர்ப்புற தமிழ்நாட்டு மக்களுக்கு நச்சென்று விழுந்த குட்டு. அறிஞர் வ.ரா. கல்லூரிப் படிப்பு முடிந்து வீட்டில் இருந்த நிலையில் கொடியாலம் ரங்கசாமி ஐயங்கார் அவரை புதுச்சேரிக்குச் சென்று, அங்கு வந்து தங்கியிருக்கும் அரவிந்தரைச் சந்தித்து அவருக்கு எந்தவித உதவிகள் தேவை என்பதை தெரிந்து வரப் பணித்தார். வ.ரா.வும் புதுச்சேரி சென்று ரயில் நிலையத்துக்கு வெளியே நின்று கொண்டிருந்த புஷ் வண்டிக்காரனிடம் சென்று பாரதியார் வீட்டுக்குப் போகவேண்டும் என்றார். அவன் ஓ அந்த பாட்டுக்கார ஐயர் வீடா தெரியும் என்று சொல்லி அவரை ஈஸ்வரன் தர்மராஜா தெருவில் பாரதி வீட்டுக்குக் கொண்டு சென்றான். அப்போது பாரதி உணவு உண்டபின் வெற்றிலை போட்டுக் கொண்டு வாயில் திண்ணையில் அமர்ந்திருந்தார். புஷ் வண்டியில் வந்தவரைப் பார்த்து யார் அது? என்றார். உடனே வ.ரா. தன்னை ஆங்கிலத்தில் அறிமுகம் செய்து கொண்டார். பாரதி வீட்டுக்குள் பார்த்து உதவியாளராக இருந்தவரை அழைத்து, அடே பாலு, இங்கே வா, உன்னைப் போலவே இங்கிலீஷில் ஒருவர் பிளந்து கட்டுகிறார். நீ வந்து அவரோடு பேசு என்றார். வ.ரா.வெட்கி தலை குனிந்து மன்னிப்பு கேட்டார். பாரதி சொன்னார் இன்னும் எத்தனை நாட்கள் ஒரு தமிழன் மற்றொரு தமிழனிடம் ஆங்கிலத்தில் பேசுவார்கள் என்று வேதனைப் பட்டார். அது நடந்து நூறு ஆண்டுகள் ஓடிவிட்டன. ஆனால் அந்த இழிநிலை இன்னமும் நீங்கின பாடில்லை.

    ஆலாசியம் அவர்கள் எழுதியது ஆழ்ந்த கருத்துச் செறிவு மிக்க பகுதி. பிண்ணாக்கு என்பது எண்ணெய் நீக்கிய சக்கை. மனிதனுக்கு எண்ணெய் தான் தேவை. ஆகவே சக்கையை மதிக்கவில்லை. ஆனால் அந்த சக்கையான பிண்ணாக்கு மாடுகளுக்குத் தீவனம். ஆகவே இறைவன் படைப்பில் எதுவும் மட்டம் இல்லை.

    மனிதன் இறைவன் என்ற பரம்பொருளைப் பற்றிய உணர்வைக் கொண்டிருக்கிறான். தனக்கு நன்மை விளைய இறைவனை வேண்டுகிறான். நன்மை அதனால் கிட்டியது என நினைக்கிறான். தீமை செய்கிறான், அதன் விளைவுகளை இறைவனால்கூட மாற்ற முடிவதில்லை. ஆனால் மிருகங்களுக்கும், பறவைகளுக்கும் பாவங்கள் இல்லை, அவர்கள் செயல்களுக்கு ஏற்ற பலாபலன்களை அவை அனுபவிப்பதாகத் தெரியவில்லை. காரணம் பகுத்தறிவு எனும் எது நன்மை எது தீமை என்பதை அவை உணர்வதில்லை. ஆகவே பாவ புண்ணியங்கள் அனைத்தும் பகுத்தறிவு இருந்தும் நன்மை தீமைகளைச் செய்யும் மனிதர்களுக்குத்தான். தவறிழைத்துவிட்டு இறைவனைக் கும்பிட்ட மாத்திரத்தில் அவன் அதை மன்னித்து விடுவதில்லை. இறைவன் தீர்ப்பு அவனைக் கும்பிட்டாலும் கும்பிடாவிட்டாலும் நிச்சயம் உண்டு. ஒரேவழி எவருக்கும் தீமை செய்யாதிருத்தல். எவருக்கும் நன்மையே செய்து விடல். இதுதான் நான் உணர்ந்து கொண்ட இறை வழிபாடு.

    ReplyDelete
  36. சிலர் தங்களுக்கு வேண்டியதெல்லாம் கிடைத்தால் கடவுள் நல்லவர் அல்லது கடவுள் இருக்கிறார் என்பார்கள். இல்லாவிட்டால் கடவுள் இல்லை என்றோ கடவுளை தூற்றிக் கொண்டோ இருப்பார்கள்.

    நமக்கு முன் வினை காரணமாக வாழ்க்கையில் எதாவது வாய்க்கவில்லையானால் (திருமண/ குழந்தை பாக்கியங்களை சொல்லலாம்) இறை வழிபாடு மூலம் தங்களுக்கிருக்கும் குறைகளை நிவர்த்தி செய்து கொள்ள முன் வர வேண்டும். அதை விடுத்து இறைவனை தூற்றி பாவ பலனை அதிகப் படுத்திக் கொண்டு போக கூடாது. பழைய பாடலைச் சொல்லி முடித்துக் கொள்கிறேன்.

    ’பாவமென்ற கல்லறைக்கு பல வழி, என்று தர்மதேவன் கோயிலுக்கு ஒரு வழி.’ அந்த ஒரு வழி நம் வழியாக இருக்கட்டும்.

    ReplyDelete
  37. தீக்குச்சி பொன்மொழி ஏதோ ஒரு தமிழ் படத்தில் கேட்ட சமீபத்திய பாடலை நினைவுபடுத்தியது.

    /////உலகின் சீதோஷ்ன நிலை இடத்திற்கு இடம் மாறுபடும், 32,31,21 ////

    அதாவது அஷ்டவர்க பாடத்திற்கு ஏற்ற உவமை இது .உலகுக்கும் 337 தான்.அப்படித்தான் வாத்தியார் சொல்ல வருகிறார் என நினைகிறேன்.

    கடவுள் இருப்பது உண்மை. எங்கும் நிறைந்திருப்பது சத்தியமான உண்மை.

    ReplyDelete
  38. ////Blogger ஜி ஆலாசியம் said...
    ....உங்களின் அழகும் அறிவும் எழில் கொஞ்சும் கட்டுரை என்னை இப்படி கிறுக்கச் செய்தது ஐயா!///

    ஹாங் ....என்னது? கிறுக்கினீங்களா ??? தம்பி, ஆனாலும் இது கொஞ்சம் ஓவர். தன்னடக்கத்துக்கும் ஒரு லிமிட் உண்டு.

    அப்பரையும், கம்பரையும் அழைத்து வந்து வாத்தியாரின் பதிவிற்கு புவனேஷ்வர் எழுதிய பொழிப்புரையும் நன்றாக இருந்தது.

    ///Thanjavooraan said... தவறிழைத்துவிட்டு இறைவனைக் கும்பிட்ட மாத்திரத்தில் அவன் அதை மன்னித்து விடுவதில்லை. இறைவன் தீர்ப்பு அவனைக் கும்பிட்டாலும் கும்பிடாவிட்டாலும் நிச்சயம் உண்டு. ஒரேவழி எவருக்கும் தீமை செய்யாதிருத்தல். எவருக்கும் நன்மையே செய்து விடல். இதுதான் நான் உணர்ந்து கொண்ட இறை வழிபாடு.///

    பிடித்திருந்தது. எப்பொழுதும் தஞ்சாவூர் ஐயாவின் கருத்துக்கள், அவரது சிந்தனை வழி எனக்கு உடன்பாடாகவே இருந்து வருகிறதே என்று வியந்ததுண்டு. இப்பொழுது உறுதியாகிவிட்டது.

    ReplyDelete
  39. மிக ஆனந்தமாக இன்றைய பதிவை படித்தேன். சரியான வார்த்தைகள், சரியான வரிகள் , சரியானா உதாரணகள். அறிவியலையும் , பூலோகத்தையும் சரிவிகததில், கொஞ்சம் வரலாறையும் , கொஞ்சம் கணக்கையும் போட்டு முழுமையாக்கி மிக தெளிவான மெய்ஞானம் வகுப்பை நடத்தி உள்ளீர்கள் அய்யா. ஏனோ மனதிருக்கு அளபரியாத சந்தோஷமும் நிம்மதியும் இன்று உங்கள் பதிவை படிக்கும் போது. என்னவெல்லாம் என் மனதில் உதித்ததோ , இறைவனை எப்படியெல்லாம் பார்த்து உருகிநேனோ அல்லது ரசித்தேனோ அதே பார்வையில் நீங்கள் அதை கோர்வையாகி எழுதி இருப்பது மனதிற்கு மிக அருகில் வந்து விட்டது.
    நேரம் வித்தியாசம் காரணமாக நீங்கள் போடும் பதிவை அடுத்த நாள் தான் படிக்கச் முடிகிறது. முன்பெல்லாம் அதிகாலையில் பதிவை வலை ஏற்றுவீர், முதல் ஆளாய் (என்னுடயம் மதியம் )படிப்தற்கு தனி சுகமாக இருக்கும். (விகடனை முதல் ஆளாய் வீட்டில் படிபோமே அதுபோல்). ஏன் இப்போது லேட் அல்லது வெகு சீக்கிரம்?
    kalai seattle

    ReplyDelete
  40. தர்மதேவன் கோவிலுக்கு ஒருவழி..அது நம் வழி என்று பாடுபவர்கள் குடும்பத்தோடு,குழந்தைகளோடு கடைசிப் பயணத்தில் சென்று சேர்வதில்லை..தனியாகத்தான் செல்லமுடியும்..

    கண்ணதாசனின் பாடல் 'வீடு வரை உறவு...வீதிவரை மனைவி..காடு வரை பிள்ளை.. கடைசி வரை யாரோ?' என்றுதான் பாடலைப் பாடினான்..

    வாழ்க்கை முடிவு என்பது கடவுள் இருப்பதாகச் சொல்பவருக்கும்,
    இல்லையென்று சொல்வாருக்கும் வேறு வேறு வழிகளில் இல்லை..
    337 விஷயங்களைப் பற்றிப் புரியாதவர்களின் புலம்பல்தான் இது..

    கடவுள் இல்லை என்பது திருமணம்,குழந்தை பாக்கியம் என்று கிடைக்காதவர்கள் புலம்பல் என்று கொண்டால்
    தன்னம்பிக்கை இல்லாதவர்கள், நோயாளிகள் வாழ்க்கையைக் கண்டு பயந்து கடவுள் இருக்கிறார் அவர்தான் என் நோயைக் குணப்படுத்த வல்லவர் என்று புலம்புகிறார்கள் என்று கொள்ளலாம்..

    ReplyDelete
  41. ///minorwall said... கடவுள் இல்லை என்பது திருமணம்,குழந்தை பாக்கியம் என்று கிடைக்காதவர்கள் புலம்பல் என்று கொண்டால்
    தன்னம்பிக்கை இல்லாதவர்கள், நோயாளிகள் வாழ்க்கையைக் கண்டு பயந்து கடவுள் இருக்கிறார் அவர்தான் என் நோயைக் குணப்படுத்த வல்லவர் என்று புலம்புகிறார்கள் என்று கொள்ளலாம்.. ///

    கேள்வியின் நாயகனே மைனர், உங்கள் கருத்துக்களோடு பெரும்பாலோர் ஒத்துப்போகாவிட்டாலும் நீங்கள் விவாதத்தில் சிறந்தவர் என்று ஒத்துக்கொள்வார்கள்.

    ReplyDelete
  42. இறைவனின் அருளாற்றலின் மேல் நம்பிக்கை கொண்டவர்களுக்கு பெரும் துன்பம் வந்தால், வாங்குகிற வசைகளுக்கு கணக்குக் கிடையாது. 'ஐயோ, பாவம், இவ்வளவு பக்தியாயிருக்கிற உனக்கா இப்படி, கடவுளுக்குக் கண்ணே இல்லையா' என்று பரிதாபப்படுவதுபோல், கடவுளைப் புழுதிவாரித் தூற்றுவதோடு, பின்னால் போய், ' இது என்ன பாவம் செஞ்சதோ, இல்லைன்னா, இப்படி ஒரு நிலை எதுக்கு?' என்று எள்ளி நகையாடுவதைப் பொறுக்கத் தான் அசாத்தியத் தன்னம்பிக்கை வேண்டும்.

    நம் வினையின் காரணமாக ஏற்பட்ட இந்தத் துன்பம் கட்டாயம் தீரக் கூடியது. இதைக் கடக்கக் கடவுள் கருணை செய்வார் என்ற நம்பிக்கை, துன்பத்தால் துவளாத மனநிலையைத் தருவதோடு, நம்மை விடவும் நல்ல நிலையில் இருப்பதாக நாம் கருதுவோர்,(எல்லாருக்கும் 337) மீது நாம் காழ்ப்புணர்ச்சி கொள்ளாமல் இருக்கவும் உதவும்.

    வந்த துன்பம் எதுவென்றாலும்
    வாடி நின்றால் ஓடுவதில்லை.

    சந்தோஷத்தைப் பகிர்ந்து கொள்ள ஓடோடி வருகிற மனிதர்கள் துயரத்தினால் கலங்கும் போது தூர நின்று வேடிக்கை பார்க்கும் போது, இறை நம்பிக்கை ஒன்றே, எவருமற்ற விரக்தி மனப்பான்மை ஏற்படாமல் வாழ்க்கையை எதிர்கொள்ள உதவும்.

    துன்பத்திலிருந்து மீண்டு வர உதவும் வழியைச் சிந்திக்க, மாற்று இல்லாத துயரங்களை அமைதியாக எதிர்கொள்ள, நம் துயரம் நம் மனதில் வெறுப்புணர்ச்சியைக் கூடுகட்டி, அதன் காரணமாக, நாம் நம்மைச் சுற்றி இருப்போருக்குப் ப்ரச்னையாக மாறாதிருக்க, முக்கியமாக, மற்றையோரது
    வாழ்வுக்கு, முன்னேற்றத்துக்கு உதவுவதில் பெருமகிழ்ச்சி கொள்ள உதவுவது, 'நமக்கு மேலே ஒருவன் இருந்து நம்மைக் காக்கின்றான்' என்ற நம்பிக்கையே.


    //ஒவ்வொரு உயிருக்கும் ஏதோ ஒன்றை கொடுத்து அனுப்பி உள்ளான்? புலிக்கு பல், குதிரைக்கு கால்களில் வேகம், யானைக்கு பலம், குளிர் பிரதேச மிருகங்களுக்கு போர்வை, மனிதனுக்கு இவர்கள் கொண்ட அத்தனையையும் பயன்படுத்தும் புத்தி பலம்.........//

    தம்பி திரு.புவனேஷ்வர் சொன்னது போல், ஒன்று இல்லாவிட்டால் ஒன்றைக் கொடுத்திருப்பான் இறைவன். எல்லோருக்கும் 337 தான். புலியின் பல்லைப்பார்த்து, யானை நம்க்கு இல்லையே என்று வருந்துவதில்லை.கடவுளின் மேல் முழுநம்பிக்கை வைத்துச் சரணாகதி அடைந்த மனிதன், துயரங்களின் போது, புலம்பாமல் அமைதி காப்பான்.

    ReplyDelete
  43. Dear all,
    Today's morning poem from me :)
    Wsh you a prosperous day!


    மயங்கிய நிலை:
    தீதிது செய்ய நலமிதென் றறியோம்
    மோதிடு மதங்கொள் கரியன்ன மதியோம்;
    சோதியன் திருவடி சிந்தனை செய்யோம்
    சேரா தன செய்வோம்;
    உய்யும் வழிசெயல் செய்யோம் மெய்யின்
    பொய்யா ரனுபவம் மெய்யாய்க் கொண்டே
    செய்யா தனபல செய்துழி வீழ்வோம்
    மெய்யா னதுகா ணோம்.
    அண்டங் கொண்டது பிண்டங் கொள்ளும்
    கண்டங் கருத்தவன் கார்முகில் வண்ணன்
    உண்டான் உலகம் உலகே ழானான்
    உண்மை யதை யுணரோம்;

    உய்த நிலை:
    போற்றியெனப் பணிந்துவிட் டோமெம் மம்மை
    பொன்னடிக்குப்பல் லாயிரம் போற்றி காண்;
    தாயெனக் கொண்டுவிட் டோம் - பெற்ற
    சேய்பண்ணும் சேட்டைகள் தாய்பொறுப் பாள்!
    உய்வித் தெமைக் காப்பாள்கா ணன்னை
    கொய்மலர் வண்டார் குழலி காமாக்ஷி;
    வேறென்ற நிலை களைவா ளொருமாயத்
    திரை கிழித்தேகிட கரந் தருவாள் .

    -----
    Bhuvaneshwar D
    www.bhuvaneshwar.com

    ReplyDelete
  44. Some of you might have found the close formatting difficult to read. So here again, with a few changes to the words :)


    மயங்கிய நிலை:

    தீதிது செய்ய நலமிதென் றறியோம்
    மோதிடு மதங்கொள் கரிபோல் மதியோம்;
    சோதியன் செவ்வடி சிந்தனை செய்யோம்
    செய்யா தன செய்வோம்;

    உய்யும் வழிசெயல் செய்யோம் மெய்யின்
    பொய்யா ரனுபவம் மெய்யாய்க் கொண்டே
    செய்யா தனபல செய்துழி வீழ்வோம்
    மெய்யா னதுகா ணோம்.

    அண்டங் கொண்டது பிண்டங் கொள்ளும்
    கண்டங் கருத்தவன் கார்முகில் வண்ணன்
    உண்டான் உலகம் உலகே ழானான்
    உண்மை யதை யுணரோம்;

    உய்த நிலை:

    போற்றியெனப் பணிந்துவிட் டோமெம் மம்மை
    பொன்னடிக்குப்பல் லாயிரம் போற்றி காண்;
    தாயெனக் கொண்டுவிட் டோம் - பெற்ற
    சேய்பண்ணும் சேட்டைகள் தாய்பொறுப் பாள்!

    உய்வித் தெமைக் காப்பாள்கா ணன்னை
    கொய்மலர் வண்டார் குழலிகா மாக்ஷி;
    வேறென்ற நிலை களைவா ளொருமாயத்
    திரை கிழித்தேகிட கரந் தருவாள் .

    ----
    Bhuvaneshwar D
    (www.bhuvaneshwar.com)

    ReplyDelete
  45. முன்பு நான் உடல் நலம் குன்றியிருந்த சமயத்தில், மருத்துவ சிகிச்சையின் ஒரு கட்டத்தில் மருத்துவர்களே கைவிரித்து இன்னும் சில மாதங்கள் என்று கெடு விதித்திருந்தார்கள். ஆனால் நான் எதைப் பற்றியும் கவலைப் படாமல், தியானம், ஜபம் இவற்றில் நேரத்தை செலவிட்டு இவற்றால் எனக்கு குணமாகி விடும் என்று முழுதுமாக நம்பினேன். ஏதோ அதிசயம் நிகழ்ந்தது போல் குணமாகி வந்தேன். இது இறையருள் இல்லாமல் தன்னால் நடந்தது என்று சொன்னால் நான் என்னை நானே ஏமாற்றுவதோடு அல்லாமல் பிறரையும் ஏமாற்றுவதாகதான் இருக்கும்.

    அதற்கு பிறகுதான் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய அளவுக்கு எனக்கு இன்னொரு நோயும் இருப்பது கண்டுபிடிக்கப் பட்டு அறுவை சிகிச்சையும் செய்து கொண்டு முழுதுமாக குணமாகி நன்றாக இருக்கிறேன். இது சம்பந்தப் பட்ட மருத்துவ சான்றிதழ்களும் இன்னும் என்னிடம் இருக்கின்றன. ஏன் சொல்கிறேன் என்றால் நான் பொய் சொல்வதாக யாராவது சொல்லக் கூடும். நம்பாதவர்களுக்கு நான் எதையும் நிரூபிக்க வேண்டி அவசியமும் இல்லை. நான் கடந்து வந்த அனுபவங்களைச் சொல்வதானால் இன்னும் நிறைய இருக்கின்றன.

    ReplyDelete
  46. சகோதரர் புவனேஷ்வரின் கவிதை திரிவிக்ரமரைப் போல் மண்ணளந்து விண்ணளந்து கண்முன் விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. எண்ணிலா வடிவுடையோன் எல்லா உயிரிலும் அவனே.

    'அண்டங் கொண்டது பிண்டங் கொள்ளும்'

    எத்தனை பொருளார்ந்த வரிகள்.

    'வேறென்ற நிலை களைவா ளொருமாயத்
    திரை கிழித்தேகிட கரந் தருவாள் '.

    என்ற எங்கள் எல்லோருக்குமான தங்களது இன்றைய பிரார்த்தனை பலிக்க வேண்டுகிறேன். இறையருள் பரிபூரணமாகத் தங்களுடன் இருக்கிறது. நல்ல கவிதை தந்ததற்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  47. தேமொழி said...
    ////Blogger ஜி ஆலாசியம் said...
    ....உங்களின் அழகும் அறிவும் எழில் கொஞ்சும் கட்டுரை என்னை இப்படி கிறுக்கச் செய்தது ஐயா!///

    ஹாங் ....என்னது? கிறுக்கினீங்களா ??? தம்பி, ஆனாலும் இது கொஞ்சம் ஓவர். தன்னடக்கத்துக்கும் ஒரு லிமிட் உண்டு.////
    ஹா... ஹா... ஹா...

    ஆமாமல்ல...ரொம்ப வளைந்திட்டேன்ல

    கருத்து ஒத்துப் போனால் அது கவிதையின் சாயல்!
    இல்லையாயின் அது கிறுக்கல் (என்று) தானே :):):)))

    சரி பின்னூட்டத்தை ரசித்தீர்களா....
    கவனம் கடைசி வரியில் மட்டும் தானா!

    நன்றி அக்கா:):))))

    ReplyDelete
  48. கவிஞர் புவனேஸ்வர் மாணவர் மலரிலே தங்களின் கவிதைகளைப் படித்து அதிசயித்துப் போனேன்...
    (மற்ற ஆக்கங்களை படிக்க அவகாசம் இல்லாததால் நான் பின்னூட்டம் இடவில்லை)
    மற்ற ஆக்கங்களை வாசிக்கவில்லை என்றுக் கூறவும் அப்போது மனமில்லை.

    எனினும் அருமை... தங்களின் கவிதை என்னை ஆனந்தத்தில் ஆழ்த்துகிறது.

    ''உய்யும் வழிசெயல் செய்யோம் - மெய்யின்
    பொய்யா ரனுபவம் மெய்யாய்க் கொண்டே
    செய்யா தனபல செய்துழி வீழ்வோம்
    மெய்யா னதுகா ணோம்.''

    ''போற்றியெனப் பணிந்துவிட் டோமெம் மம்மை
    பொன்னடிக்குப்பல் லாயிரம் போற்றி காண்;
    தாயெனக் கொண்டுவிட் டோம் - பெற்ற
    சேய்பண்ணும் சேட்டைகள் தாய்பொறுப் பாள்!''

    பெற்ற சேய் பண்ணிய சேட்டைகளை தாய் பொறுப்பாள் என்றால் அது அறியாது செய்த தவறாக இருக்கும்....:):)))
    அருமையான வரிகள். அழகானக் கவிதை.

    இத்தனை நாளாய் எங்கிருந்தாய் கவியே என்றேக்
    கேட்கத் தோன்றுகிறது உமையே!

    பகிர்விற்கு நன்றிகள் கவிஞரே!

    ReplyDelete
  49. This comment has been removed by the author.

    ReplyDelete
  50. கலாத்மிகா கலாநாதா காவ்யாலாப -வினோதினி

    அம்பாளுடைய நாமங்களிலே இவை வரும். கலைகளுக்கெல்லாம் ஆதாரமாகவும், கலைகளின் வடிவமாகவும் கவிதைகளை ரசிப்பவளாகவும் அம்பிகை அன்னை விளங்குகிறாள்.

    அவளுக்கே இது சமர்ப்பணம்.

    இதில் விசேஷம் என்ன தெரியுமா? இந்த கவிதையை நான் பதிவு செய்த பின்னர் (என் வலைத்தளம் உட்பட) நான் மனதுக்குள் நினைத்துகொண்டேன், இந்த கவிதையை அம்பாள் ஏற்று கொண்டாளாயின் எனக்கு சூசகமாக தெரிவிக்கட்டும் என்று. ஒரு குழந்தைத்தனமான நினைப்பு மனதுக்குள். ஒரு குறுகுறுப்பு...... அவளிடம் போய் சேர்ந்ததா இல்லையா என்ற நினைப்பு.

    சிறிது நேரத்தில் பார்க்கிறேன், முகநூலில் ஒரு பெரியவர் லலிதா சஹஸ்ரநாமத்துக்கு உரை எழுதுபவர், சரியாக இந்த நாமாவளிக்கு உரை எழுதி இருந்தார். (கலாத்மிகா கலாநாதா காவ்யாலாப -வினோதினி)

    நெகிழ்ந்து தான் போனேன். எல்லாருக்கும் அம்மா தானே அவள். எனக்கும் அம்மா. அப்பொழுது என்னை அவள் நிராகரிக்க மாட்டாள் தானே...... :)

    இது கட்டாயம் என் நினைப்பு கேள்விக்கு அவளின் பதில் தான். கவலைப்படாதே, நான் இருக்கிறேன் என்று அவள் கூறியதாகவே இது அமைகிறது.

    இந்த சுட்டியை நீங்கள் அழுத்தினால் அது அங்கே உங்களை அழைத்து செல்லும், நீங்களே பார்த்துக்கொள்ளலாம்.

    https://www.facebook.com/groups/5040892251/permalink/10150852453067252/


    கட்டாயம் இந்த கவிதையைப் படித்த யாருக்கும் அவள் அருள் நிச்சயம் உண்டு என நம்புகிறேன்.

    ReplyDelete
  51. அன்பு சகோதரி பார்வதி அவர்களே,

    தங்கள் அன்புக்கும் ஊக்கஞளுக்கும் நன்றி, தலை வணங்குகிறேன் :)

    அன்பு சகோதரர் ஆலாசியம் அவர்களே,

    தங்கள் உளமார்ந்த பாராட்டுக்களுக்கு நன்றிகள் பல :)

    நான் ஒரு வருஷமாக வகுப்பறையில் தான் இருக்கிறேன், பின்னூட்டம் போட வெட்கப்பட்டு/கூச்சப்பட்டு கொண்டு ஒளிந்திருந்தேன் :)

    தங்கள் வலைத்தளம் பார்த்தேன், முக அருமையாக இருக்கிறது :)

    நல்ல பணி தொடரட்டும்!

    ReplyDelete
  52. எனது பொதுவான கருத்து / அனுபவம்...

    "கொடிது கொடிது வறுமை கொடிது அதனினும்
    கொடிது இளமையில் வறுமை கொடிது"

    இது யாருக்கு நிகழும் கொடும் பாவிக்கு...
    அப்படி என்றால் நானும் கொடும் பாவியே...
    (நான் பிறந்தது கேது திசையில்... ஆறுவருடம் இருப்பு..
    அதன் பிறகு சுக்கிர திசை இளமையில் வந்த சுக்கிரதிசைக்கு
    இறைவன் போட்ட வேலி இந்த வறுமை என்று
    நான் இப்போதுப் புரிந்துக் கொள்கிறேன்....

    எங்கள் வீட்டில் நான் எட்டாவது பிள்ளை... எனது மூத்த சகோதரிக்கும் எனக்கும் பதினான்கு வயது வித்தியாசம் இருக்கும் இடையில் பிறந்த எழுவரில் மூவர் ஆண் மக்கள் மூவர் பெண் மக்கள்... இதில் என்னக் கொடுமை என்றால் பிறந்த பெண் மக்கள் யாவரும் நிலைத்து இருக்கிறார்கள்... இடையில் பிறந்த எனது அண்ணன்கள் மூவர் மட்டும் பிறந்து ஒரு வார இடைவெளியில் இறந்துப் போய்விட்டிருக் கிறார்கள். இருந்தும் கொல்லி போட ஒரு பிள்ளை வேண்டு மென்றும்... ஊர், உறவு வாயை அடைக்க வேண்டுமென்றும் இன்னும் பலக் காரணங் களுக்காகவும் எட்டாவதாக என்னை எனது தந்தை அவரது நாற்பத்து ஒன்றாவது வயதில் இப்படித் தான் தவமாய் தவமிருந்து..... அப்பா விரக்தியில் நாத்திக மனதோடும்.. இருந்தும் அம்மாவும் ஆத்திக தீவிவாதத்திற்கு தடை போடாமலும்.... என் அன்னை தவமாய் தவமிருந்து என்னைப் பெற்றார்.

    அதெல்லாம் சரி.... நான் வளர வளர வறுமையும் கூடவே வளர்ந்தது... பெண்களை மணம் முடித்துக் கொடுக்க ஒவ்வொரு முறையும் உலக யுத்தமே நடந்தது... அதோடு மட்டுமா.. யுத்தம் முடிந்தாலும் நிவாரணம் இருக்கிறதே... அது அதைவிடக் கொடுமை.

    சரி நிவாரணத்தை சரியாக செய்யாத போது கிடைத்த ஏச்சும் பேச்சும் இருக்கே மானம் உள்ளவன் உயிரோடு இருக்கவே மாட்டான்...செத்தேப் போவான்..... பணக்கார பங்காளிகள் பலமைல் தூரம். பாவம் பஞ்சாலைத் தொழிலாளி என் தந்தை மட்டும் பஞ்சத்தில் ஊர்கோலம்....

    தொடரும்...

    ReplyDelete
  53. குடும்ப வறுமை.... மற்றவைகளை எல்லாம் நீங்களே அனுமானிக்கலாம்... (ஆறிலிருந்து அறுபது வரை).... இப்படி வறுமை புடம் போட்ட சமயங்களிலே நான் பல முறை எனது அம்மாவிடம் கூறியதுண்டு.. நான் கல்யாணம் செய்து கொள்ள மாட்டேன்... அப்படி செய்தால் அது விதவைத் திருமணமாக இருக்கும்... அப்படியே செய்தாலும் நிச்சயமாக குழந்தையே பெற்றுக் கொள்ள மாட்டேன் என்று.... என் அம்மா பல முறை நான் கூறுவதைக் கேட்டு அழுதும் இருக்கிறார்கள். இந்த எண்ணமெல்லாம் சிறு வயதிலே எனக்கு என் வாழ்வு கற்றுத் தந்து... நான் சிறு வயதிலே பெரிய மனிதனைப் போல பேசுவதாக என்னை பலரும் கூறி இருக்கிறார்கள்... இருந்தும் சிலருக்கு எங்கே இவன் என்று பயந்தும் இருக்கிறார்கள்... "அப்நார்மல்" எப்போதும் ஒரு அச்சத்தைத் தரும் அல்லவா!

    நானும் பதின்ம வயதில் நாத்திக உணர்வோடு இருந்திருக்கிறேன் / முழங்கியதில்லை.... ஒரு நிலையில் ஒருத் தனிமையான சூழலில் எனது அனுபவம் என்னை ஆத்திகனாக்கியது என்பதைவிட உண்மையை உணர்த்தியது.... அதுப் பேருங்க கதை... அதை வேறொரு நாளில் கிறுக்குகிறேன்.... ஆனால் எனது நாத்திக, ஆத்திக எண்ணங்களுக்கு எனது குடும்ப வறுமை ஒருக் காரணமாக இருக்க வில்லை என்பது தான் உண்மை.

    வாங்கி வந்த வரம் அது.... வாழ்க்கையை மூன்றாகப் பிரித்தால் ஏதோ ஒருப் பிரிவில் நாம் தாங்க முடியாத துயரத்தை தாங்கித் தான் ஆக வேண்டிய நிலை யாவருக்கும் வருகிறது என்பது தான் எனது அனுபவம். அதை முன் ஜன்ம கர்மா.. என்பார்கள். பாவம் செய்யாது இருந்தால் அப்போதே முக்தி ஆகி இருப்போம். அதனால் மனிதனாக பிறந்தவர்கள் யாவரும் பாவத்தை செய்ததால் தான்... இதில் ஒரு வரை ஒருவர் ஏளனமாக பார்க்க பேச எதுவும் இல்லை.... அப்படி செய்பவர்கள் யாவரும் அறிவிலிகள் தான்.

    தெய்வத்திடம் நன்றி பாராட்ட மட்டும் அல்ல, கோபப் படவும் உரிமை இருக்கிறது. காரணம் தெய்வம் எனக்கு மட்டும் உரிமை என்று சொந்தம் கொண்டாட யாருக்கும் தனிப் பட்ட உரிமை இல்லை. காரணம் நாம் யாவரும் அதனின் குழந்தைகளே. என்ன சில குழந்தை அழுதே காரியம் சாதிக்கும், சில குழந்தைகள் கோவித்துக் கொண்டு ஓடிவிடும்...

    சிலக் குழந்தை அவளை விட்டு விலக மனமில்லாமலும் கூடவே இருந்துக் கொண்டு, என்னையேன் பெற்றாய்... பெற்றேடுக்கத் தெரிந்த உனக்கு எனது தேவையை சரி செய்ய தெரியாதா? நீ எல்லாம் ஒருத் தாயா! என்னை மட்டும் என் இப்படி ஆக்கினாய்.. அண்ணனைப் பார் தம்பியைப் பார் எப்படி இருக்கிறார்கள் என்று கோபம் கொள்வதோடு... மிகுந்த உரிமையில் நீ எனது தாயே இல்லை... இல்லை எனக்குத் தாயே இல்லை.. என்றெல்லாம் பேசும் சிலக் குழந்தைகள்...

    என்னதான் எனக்கு உரிமை இருந்தாலும் எனது மனைவியிடம் கோபப் படும் போது அருகில் இருக்கும் எனது மகனையும் கவனத்தில் கொள்கிறேன் காரணம் எனது கோபம் நியாயமானது என்றாலும்.. அவனின் தாயை அவன் முன்பேக் கோபிப்பதால் அவனின் மனம் வாடுகிறது... ஒரு முறை மயக்கமே போட்டும் விட்டான்.... எனது கோபத்தைப் புரிந்துக் கொள்ள அவனுக்கு வயது இன்னும் வரவில்லை... 'இம் மெச்சூரிட்டி' ஆகவே நானல்ல நாங்கள் இருவரும் அதைக் கணக்கில் கொள்கிறோம்... அப்படித் தான் இறைவனைக் கோபிப்பவர்களை என்னால் புரிந்துக் கொள்ள முடிகிறது.. அதற்காக நான் கோபமும் பட முயலவில்லை.... காரணம் அவள் யாவருக்கும் தாய்.. எனக்குள்ள உரிமை யாவருக்கும் உண்டு என்பதே எனது எண்ணம்.. என்ன!!!? அக்கரையில் கூறு வது என்றால் நாம் யாவரும் கண்ட அனுபவம்... கொஞ்சம் பொறுமையாக இரைந்தும் கரைந்தும் பெறுவது எளிதாக இருக்கும் என்பதே எனது எண்ணம்.... அன்பால் இதையும் சொல்கிறேன்...

    ReplyDelete
  54. பேரறிவு.. இல்லை பேரொளி இல்லை.. என்பதையும் விட்டு விட வேண்டும்... மேலும் இறைவழிபாட்டில் இறை சிந்தனை மட்டுமே இருக்க வேண்டுமே தவிர... அங்கே கூட நிற்ப்பவன் கோணிக் கொண்டு இருக்கிறான்.... இவன் ஏன் அவனை கீழுருக்கிறான்.... என்பதை எல்லாம் நினைத்துக் கொண்டால் அங்கே வழிபாடு நடக்காது.. அதெல்லாம் இறைவனால் நடப்பது அல்ல மனிதன் நடத்துகிறான்.. இறைவனை வணங்கி கொண்டு இருப்பவன் எல்லோரும் நல்லவனும் அல்ல... இன்னு சொன்னால் நாத்திகனில் பலரும் நல்லவர்கள் அந்த விகிதம் ஆத்திகனில் குறைவு. இறைத் தத்துவம் நல்லதையே சொல்கிறது... கோவிலையே கட்டிக் கொண்டு இருக்கிறவனை விட ஓடி உழைப்பவனுக்குத் தான் இறைவனின் பலன் அதிகம் காரணம் அவன் தான் இறைவனின் என்னத்தை செயல் படுத்த அல்லாடுகிறான்... இயங்கும் பொம்மைமேல் தான் அதை உருவாக்கியவன் மிகுந்த மகிழ்ச்சியும் கவனமும் கொள்வான் என்பதே உண்மை..

    எல்லோருக்கும் 337 . தான்... வாழ்வில் ஏற்றமும் இறக்கமும் உண்டு யாரும் தப்பிக்க முடியாது.... ஐந்தாம் இடமென்று ஓன்று இருக்கிறது... அதை மனதில் கொண்டு கடுமையாக நமது குறைகளையெல்லாம், நமக்கு அப்பாற் பட்ட சக்தி ஓன்று இருக்கிறது என்பதை மட்டும் நம்பி அதனிடம் வேண்டிக் கொள்வோம்.... அன்னை அவள் பாலூட்ட எண்ணமிருந்தாலும்... நாம் பசியால் கதறும் போது... அவளும் சேர்ந்தே கதறுகிறாள்... இருந்தும் குழந்தையின் வயிற்றுப் போக்கு சரியாகும் வரை குழந்தைக்கு பாலூட்டக் கூடாது என்று மருத்துவர் கூறிய வார்த்தைகள்அவளைத் தடுக்கிறது....

    எந்த சிரமமும் நிச்சயம் மாறும்... வயிற்றுப் போக்கு தீரும் அன்னை மீண்டும் பாலூட்டுவாள்.. அது வரை அவளின் மடியிலாது அமர்ந்துக் கொள்வோம்.... அவளை விட்டு ஓடிப் போக வேண்டாம்... அவளை வசைப் பாட வேண்டாம்... நிச்சயம் அருள்வாள்.... எதற்கும் காரணம் அவளைத் தவிர வேறு யார் அறிவர். இது தான் நான் இங்கேக் கூற விரும்புவது...

    இது தான் எனது அனுபவமும்,... கருத்தும்... பகிர்ந்துக் கொள்ள நினைத்தேன். பகிர்ந்தேன். நன்றிகள் சகோதர சகோதரிகளே...

    ReplyDelete
  55. ////Bhuvaneshwar said...
    அன்பு சகோதரி பார்வதி அவர்களே,

    தங்கள் அன்புக்கும் ஊக்கஞளுக்கும் நன்றி, தலை வணங்குகிறேன் :)

    அன்பு சகோதரர் ஆலாசியம் அவர்களே,

    தங்கள் உளமார்ந்த பாராட்டுக்களுக்கு நன்றிகள் பல :)

    நான் ஒரு வருஷமாக வகுப்பறையில் தான் இருக்கிறேன், பின்னூட்டம் போட வெட்கப்பட்டு/கூச்சப்பட்டு கொண்டு ஒளிந்திருந்தேன் :)

    தங்கள் வலைத்தளம் பார்த்தேன், முக அருமையாக இருக்கிறது :)

    நல்ல பணி தொடரட்டும்!////

    மிக்க நன்றி சகோதரரே!

    ReplyDelete
  56. எதற்கும் காரணம் அவளைத் தவிர வேறு யார் அறிவர். இது தான் நான் இங்கேக் கூற விரும்புவது...//

    உங்களின் கருத்துக்களை தெளிவாக கோர்வையாக எழுதியிருந்தீர்கள். காரணம் என்ற ஒரு வார்த்தையைப் படித்ததும் நினைவில் வந்த ஒன்றை இங்கே பகிர விரும்புகிறேன்:

    ஆப்பிரிக்காவின் சோமாலியா நாட்டில் பிறந்த வாரிஸ் என்ற புகழ்பெற்ற ஒரு மாடலைப்பற்றி (இதைப்படிக்கும் முன் நான் இவர்களைப்பற்றி அறிந்ததில்லை, உங்களில் நிறைய பேருக்கு ஒருவேளை முன்பே தெரிந்திருக்கலாம்) ஒரு பத்திரிகையில் படித்தேன். வினவு என்ற தளத்தில் இதை முழுதும் படிக்கலாம் என அதில் குறிப்பிட்டிருந்தது. விருப்பமுள்ளவர்கள் தேடிப்படிக்கலாம்.

    ஏழ்மையான படிப்பறிவில்லாத குடும்பத்தில் பிறந்தவர். அவரது ஐந்தாவது வயதில் அந்த நாட்டில் எல்லா பெண்களுக்கும் செய்வதுபோல் அவரது கன்னித்தன்மையைக் காக்க என்று (இந்த நூற்றாண்டிலும்) கொடுமைகள் இழைக்கப்பட்டன. அவருக்கு பதிமூன்று வயதானபோது அவரது தந்தையின் வயதையொட்டிய ஒரு கிழவருக்கு மணம் முடித்துவைக்க அவர் தந்தை முடிவு செய்தார். தாயின் அனுமதியுடன் தப்பிய வாரிஸ் நீண்ட நெடிய பாலைவனத்தில் தப்பி ஓடத்தொடங்கினார். ஒரு கட்டத்தில் அவர் தந்தை நெருங்கிவிட மீண்டும் அசுர ஓட்டம். கால் பூராவும் கொப்புளங்கள், பசி மயக்கம், அசதி என எல்லாம் சேர்ந்ததில் ஒரு மரத்தினடியில் ஒய்வு எடுத்தார். கண்விழித்துப் பார்த்தபோது ஒரு சிங்கம் அவருக்கு மிக அருகில். விரக்தியுடன், மரண பயமும் ஓடிவிட பாலைவனப்பயணம் முடியப்போகிறது எனக் கண்மூடிப் படுத்தார். அருகில் சுற்றி வந்த சிங்கம் என்ன காரணத்தாலோ சென்றுவிட்டது. அதன்பின் தொடர்ந்த பயணம், லண்டன் சென்று வீட்டுவேலை செய்தது, ஒரு போடோக்ராபர் மூலம் பிரபல மாடல் ஆனது, ஒரு மருத்துவரிடம் சென்று தனக்கு ஏற்பட்ட கொடுமையை சரிசெய்துகொண்டது என நீள்கிறது. ஒரு பிரபல பத்திரிக்கைப் பேட்டியின்போது தன் சொந்தக்கதையைப் பகிரங்கமாக வெளியிட, அப்போதுதான் உலகத்திற்கு இவை தெரியவந்தன. நிறைய பெண்கள் இதன்பின் அதிர்ச்சியாலும், ரத்தப்போக்காலும், வேறு சிலர் தோற்று நோய் ஏற்பட்டும் இறக்க தான் மட்டும் அதிர்ஷ்டவசமாக பிழைத்ததாகக் குறிப்பிட்டிருக்கிறார்.அதன்பின் பெண் உறுப்புகள் சிதைத்தலுக்கு எதிரான இயக்கத்தின் சிறப்புத் தூதுவராக ஐ. நா. அவரை நியமித்தது. அதன்பின் அவர் சொன்னதுதான் எனக்கு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அடிப்படை மதவாதிகளால் என் உயிருக்கு ஆபத்து என எனக்குத் தெரியும். இருந்தும் முதன்முறை கிழவனிடமிருந்தும், இரண்டாவது முறை சிங்கத்திடமிருந்தும் தப்பியபோது ஏதோ ஒரு காரணத்திற்காக கடவுள் என்னை விட்டு வைத்திருக்கிறார் என்று தோன்றியது. அந்தக் காரணம் இதுதான். என்னைப்போன்ற லட்சக்கணக்கான சகோதரிகள் சுதந்திரத்தை அனுபவிக்கவேண்டும் என்பதற்காக இந்த வாரிஸ் தொடர்ந்து உழைத்துக்கொண்டிருப்பாள்.

    ReplyDelete
  57. சார், மைனரின் கடிதம் பதிவில் நான் இட்ட இரண்டு பின்னூட்டங்களும், வாரமலரில் ஒரு பின்னூட்டமும் வெளிவரவில்லை, என்ன காரணம்?

    ReplyDelete
  58. தில்லி எதிர்கட்சி தலைவியவர்கள் எங்கே போய் விட்டார் யோசித்துக் கொண்டிருதேன். மைனர் ஜப்பானிலிருந்து ஏதாவது வைரஸை அனுப்பி தனக்கு எதிரானவர்களின் பின்னூட்டம் வெளி வராதபடி bloggerஐ corruptedஆக வைத்து விட்டாரோ என்னவோ.

    ReplyDelete
  59. உள்ளேன் அய்யா...

    ReplyDelete
  60. ////////Uma said...
    சார், மைனரின் கடிதம் பதிவில் நான் இட்ட இரண்டு பின்னூட்டங்களும், வாரமலரில் ஒரு பின்னூட்டமும் வெளிவரவில்லை, என்ன காரணம்?/////

    பின்னூட்டத்தை கமென்ட் பாக்ஸ்லே போடணும்..
    நீங்க 'ரி-சைக்கிள் பின்'ன்னுலே போட்டிருந்தா எப்புடி வெளிவரும்?

    ReplyDelete
  61. ananth said...
    தில்லி எதிர்கட்சி தலைவியவர்கள் எங்கே போய் விட்டார் யோசித்துக் கொண்டிருதேன். மைனர் ஜப்பானிலிருந்து ஏதாவது வைரஸை அனுப்பி தனக்கு எதிரானவர்களின் பின்னூட்டம் வெளி வராதபடி bloggerஐ corruptedஆக வைத்து விட்டாரோ என்னவோ.////////

    நல்ல வேளை..மைனரே வைரஸ் என்று சொல்லாமல் போனாரே சின்ன வாத்தியார்..ப்ளோக்கரை கர்ரப்ட் பண்ற அளவுக்கு இன்னும் டெக்னாலஜி வரலைன்னு நினைக்குறேன்..

    இப்புடி வேலை பண்ற ஆளா இருந்தா நான் எனக்குன்னு சொந்தமா பேஜ் மெயிண்டயின் பண்ணிட்டு இருக்கணும்..அப்புடியெல்லாம் ஒண்ணுமே பண்ணாத போது உங்களுக்கு இந்த சந்தேகம் வேணவே வேணாம்..

    ReplyDelete
  62. இந்த பதிவின்,பல அனுபவ
    பின்னூட்டங்களை பார்த்து மனம் நெகிழ்ந்தேன்.
    ஜி ஆலாசியம் அவர்கள் இளமையில்,
    வரும் வறுமையை பற்றி சொல்லி இருந்தார்.
    இளமையில் வரும் வறுமை வன்முறையை
    கற்று தந்தால் அது சாபமாகும்.
    அதே வறுமை பக்தி,மற்றும் நன்னெறிகளை கற்று,
    தந்தால் அது வரமாகும்.
    காரணம்,
    வறுமை துன்பம் பசி வியாதி இவையெல்லாம்,
    நம் கர்மவினையின் சாட்டைகளாகும்.
    இவை தான் நம்மை கடைசியில்,
    வாழ்வின் உண்மையான பொருளை தேட தூண்டுகின்றன.
    இதை அனுபவசாலிகள் உணர்வார்கள்.

    ஓம் சரவணபவ நம

    ReplyDelete
  63. மைனர்வாள் மொக்கை போடாதீருங்காணும் :P he he

    ReplyDelete
  64. அண்ணன் ஆலாசியம்,சின்ன வாத்தியார்,தேமொழி அம்மையார்,உமா மேடம் அவர்கள் என்று எல்லோரின் கமென்ட்டுகளையும்
    படித்த போது ஏதோ சீரியஸாக சில விஷயங்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறீர்கள் என்று புரிகிறது..
    அது என்ன, எதைப் பற்றி என்றுதான் புரியவில்லை..எதுவாக இருந்தாலும் வகுப்பறை வழக்கம் போலே களை கட்டி இருக்கிறது குறித்து சந்தோஷமே..

    வாத்தியாரின் மாற்றுக்கருத்துக்கு மதிப்பளித்துப் பதிவிலே வாய்ப்பளித்த பெருந்தன்மையால்
    கடவுள் பற்றிய எனது லெட்டர் ஏற்படுத்திய சர்ச்சைகள் இன்னும் அடங்கவில்லை என்பதுதான் காரணமோ என்று நினைக்கிறேன்..

    ஆரம்ப நாள் முதல் நான் ஆராய்ச்சி ஈடுபாட்டிலேயே ஜோதிட கிளாஸ்லே கலந்து கொண்டேன்..அவ்வபோது தெளிவாக இதை வெளியிட்டும் உள்ளேன்..
    எனது கல்லூரிக் காலங்களில் இருந்தே கடவுள் பற்றிய மறுப்பு சிந்தனை நிழலாடாமல் இல்லை..
    மனதிலே ஆழமாக ஓடாமலும் இல்லை..வெளிப்படுத்தத் தவறியதும் இல்லை..

    வாத்தியாருக்காக ஆன்மிகக் குழுவினர் மட்டுமே கூடிக் களிக்கும் இங்கே மாற்றுக்கருத்தை
    வெளிப்படுத்தி குழப்பம் ஏற்படுத்த வேண்டாமே என்று இதுநாள் வரை பகிரங்கமாக மறுப்பு நிலைப்பாட்டை அறிவிக்க தவிர்த்து வந்தேனே தவிர உணர்வு,அனுபவ அடிப்படையிலே
    மனதில் எந்தக் குழப்பமும் இல்லை..

    அய்யர் அவர்களின் தூண்டலால் இது குறித்து ஒரு சிறிய விளக்கக் கடிதத்தை எழுதினேனே தவிர தோண்டினால் எவ்வளவோ எழுதலாம்..

    இணையத்திலும் வகுப்பறையில் இங்கே தவிர்த்தேனே தவிர மீதி இடங்களில்
    ஆங்காங்கே ஓரிரண்டு இடங்களில் எனது பதிலைப் படித்தால் எனது நிலைப்பாடு உங்களுக்குத் தெரிய வரலாம்..உதாரணம் http://oviya-thamarai.blogspot.jp/2009/08/2.html
    http://nanduandnorandu.blogspot.jp/2009/08/blog-post_13.html#கமெண்ட்ஸ் 2009 ஆகஸ்ட்டிலே வந்த எனது பின்னூட்டத்தைப் படித்தால் புரியலாம்..

    பார்வதி ராமச்சந்திரன் அவர்கள் குறிப்பிட்ட படி
    விவாதங்களிலே கலந்துகொள்ளும் யாராவது சீண்டலிலேஇழுத்து விடும்போது மென்மையாக நாகரீகப் போக்கை கையாள்வது சாத்தியமாகாத பட்சத்திலே தொடர்ந்து
    விவாதத்தின் தன்மை தரமிழந்து கலந்து கொள்வோர் அனைவரின் தரத்தையுமே பாதிக்கும் அம்சங்கள் அதிகம் என்பதால் தனிமனித அனுபவங்கள்,சாடல்களைத் தவிர்த்து,
    தத்துவார்த்த ரீதியிலே விவாதப் போக்கைத் தொடர்ந்தால் வழக்கம் போலே களை கட்டும்..
    வகுப்பறையிலே வைத்து வேண்டாமே என்றுதான் இன்னமும் தோன்றுகிறது..
    வேறு வலைப்பக்கத்தை உருவாக்கி வேண்டுமென்றால் ஆட்டத்தை ஆரம்பிக்கலாம்..தனியாள் என்றெல்லாம் அசருபவன் நானில்லை..
    கூப்பிடா விட்டாலும் பெரிய கூட்டமே வாதாட வந்து நிற்கும்..
    ஒரே பிரச்சினை..நேரமின்மைதான்..

    ReplyDelete
  65. மேலிடமே!!!, நான் வாரமலரில் உங்களுக்குப் பதிலளித்துப் போட்ட பின்னூட்டமும் காணோம் (கட்சியிலிருந்து தூக்கிராம இருக்கணும்ல)

    ReplyDelete
  66. ///////Bhuvaneshwar said...
    மைனர்வாள் மொக்கை போடாதீருங்காணும் :P he he///////

    டில்லி மேடத்துக்கும் ஆனந்துக்கும் சொல்லுங்க..

    ReplyDelete
  67. ////வேறு வலைப்பக்கத்தை உருவாக்கி வேண்டுமென்றால் ஆட்டத்தை ஆரம்பிக்கலாம்..தனியாள் என்றெல்லாம் அசருபவன் நானில்லை..////

    அது தானே...
    அப்போ நாமெல்லாம்

    சுனாமியிலே
    சுவிம்மிங் செய்யறவங்க தானே...

    அய்யர் தூண்டலால் என
    அங்கே குறிப்பிட்டீர்

    தூண்டலால் போட்டது
    தூண்டில் தான் என்றால்

    வாருங்கள் தர்க்க ரீதியில்
    வழக்கத்தில் உள்ளது தவறு என சுட்ட

    இந்த பாடல் வரிகளை
    இப்போ சுழல விட்டபடி..

    என்ன கட்சி நம்ம கட்சி
    என்ன கட்சி நம்ம கட்சி

    கட்சியெல்லாம் இப்பொ நமக்கெதுக்கு காலத்தின் கையில் அது இருக்கு

    கனியட்டும் காலம் நேரம் உமக்கு என்னவோ திட்டம் இருக்கு

    ReplyDelete
  68. This comment has been removed by the author.

    ReplyDelete
  69. This comment has been removed by the author.

    ReplyDelete
  70. This comment has been removed by the author.

    ReplyDelete
  71. மைனர்வாளுக்கு ஒரு கவிதை எழுதினேன்:

    குன்றின்மீ தகலேற்றி வைத்தா லங்கு
    சென்றிடும் யாவர்க்கு மொளி காட்டு மன்றோ;
    அன்பெனும் குன்றேறி நின்றுவிட் டாரவர்
    கண்களில் பண்புசெய் பேதங்க ளுண்டோ?

    உரை:

    உயர்ந்து பலரும் காணுமாறு விளங்கும் பெருமை பொருந்திய குன்றின் முகட்டில் அன்பு பொருந்திய அறிஞர் ஒரு பெரும் அகல் விளக்கினை ஏற்றுவாராயின், ஒளி பொருந்திய அழகிய அவ்விளக்கு, காண்போருக்கு அச்சத்தை விளைவிக்கும் இயல்பினை உடைய அந்த காட்டு வழியே செல்லும் மாந்தர்க்கு ஒளியினை நல்கும். இவன் நல்லவன், இவன் பொல்லான் என்று வேறுபாடு பார்த்தா அவ்விளக்கு சிறந்த ஒளியினை வழங்கும்? யாவர்க்கும் அன்றோ? அங்ஙனம், தம் நெஞ்சகத்தே அன்பெனும் அமுதத்தை கொண்ட பண்புடைய கற்றவர், அவ்வன்பினை பேதம் பார்க்காது அனைவர்க்கும் அளித்து தாமும் இனிது மகிழ்ந்திருப்பர்.

    ஆத்திகன் நாத்திகன் என்ற கொள்கை வேறுபாடு எல்லாம் அன்பிற்கு ஒரு தடை அல்ல. ஆதால் இதை எல்லாம் ஒரு பொருட்டாக எடுத்துக்கொண்டு உங்களை ஓரம் கட்டுவதாகவோ வம்புக்கு இழுப்பதாகவோ நினைக்க வேண்டாம். அப்படிப்பட்டவன் நானல்ல. மற்றவர்களும் அப்படிதான்! :)

    பிரியங்களுடன்,
    புவனேஷ்வர்

    ReplyDelete
  72. ///Bhuvaneshwar said...
    குன்றின்மீ தகலேற்றி வைத்தா லங்கு
    சென்றிடும் யாவர்க்கு மொளி காட்டு மன்றோ;
    அன்பெனும் குன்றேறி நின்றுவிட் டாரவர்
    கண்களில் பண்புசெய் பேதங்க ளுண்டோ?..////

    பாடல் அருமை
    சொல்லில் குறையில்லை இருந்தாலும் அது மன்னிக்கப்படலாம்
    பொருளில் தான் குறை என (திருவிளையாடல் வசனம் போல்) வரிந்து கட்டி வருவதாக எண்ண வேண்டாம்...

    விளக்கின் ஒளியை சொல்லும் விளக்கே
    விளக்குக்கு ஒளி தந்த ஒளியை மறைத்ததேனோ-

    முதல் ஒளி விளக்கை யேற்றாதிருந்தால்..
    முன்னமே விளக்கு பற்றிக் கொள்ளாதிருந்தால்..

    முன்னொளியை விட்டு
    பின்னொளியை சொல்வதால்

    காணொலி எங்கே என
    காணாதவர் கேட்கலாகதே என

    இன்னமும் முன்னே இருப்பதால்
    இங்கே வருவதை இப்படி பார்க்க தோன்றுகிறதல்லவா..

    ஒரு குட்டிக் கதை...

    இரண்டடி வெளிச்சம் தரும் ஒரு
    கைவிளக்கை கொண்டு இருட்டில் செல்ல வேண்டிய ஒருவன்..

    (குறைந்த வெளிச்சம்) இரண்டடி மட்டுமே வெளிச்சம் தரும் இந்த விளக்கினை கொண்டு இருட்டை கடக்க முடியாது பொழு புலர்ந்ததும் போகலாம் என படுக்க திண்ணையில் அமரும் போது..

    பின்னால் ஒருவர் ஒரு அடி வெளிச்சம் காட்டும் சின்ன விளக்கை கொண்டு உற்சாகமாக செல்கிறார்..

    அவரை மடக்கி முன்னவர் கேட்கிறார்....

    "என்னுடன் இரவில் இங்கு தங்கிவிடுங்கள்.."

    "இரண்டி வெளிச்சம் தரும் விளக்கை கொண்டு போக முடியாமல் நானே இங்கு தங்குகையில் .."

    "நீர் ஓரடி வெளிச்சம் தரும் விளக்கினை கொண்டு போவது எங்ஙன்னம்?"

    பதிலுக்கு அவர்...

    "ஒரு அடி வெளிச்சம் தரும் விளக்கு தான் இது ... சரி தான்..."

    "ஆனால் ஒரு அடி வெளிச்சம் தரும் இந்த விளக்கை கொண்டு ஒரு அடி கடந்து விட்டால் அது மீண்டும் ஒரு அடி வெளிச்சம்" தரும் அல்லவா...?

    பொருள் புரிந்தால் மகிழ்சி..
    புரியவில்லையெனில் புரியும் வரை காத்திருக்கின்றோம்..

    ReplyDelete
  73. ஒவ்வொரு பாடலையும் அக்குவேறு ஆணிவேறு என்று ஆராய்ந்தால் அங்கு பதம் இருக்கலாம், பாடலிருக்காது..... :)

    ReplyDelete
  74. ஜி ஆலாசியம் said...////எங்கள் வீட்டில் நான் எட்டாவது பிள்ளை......இது தான் எனது அனுபவமும்,... கருத்தும்//////

    ஆலாசியம் அவர்களே "இதுவும் கடந்து போகும்" என்றோரு வாக்கியக் கதை உண்டு,அதைத்தான் நினைவுபடித்தி மனம் கனக்கவைத்தது.ஆனால் நீங்கள் எதையும் கடந்து வருவீர்கள் என்று உங்களின் அனுபவம் சொல்கிறது.

    பழைய பழமொழிதான் இது தான் உங்களுக்கு பொருந்தும்.

    ""கடவுள் நல்லவர்களை சோதிப்பான்,ஆனால் கை விட மாட்டான்."

    ReplyDelete
  75. Uma said...வாரிஸ் என்ற புகழ்பெற்ற.......

    நல்ல பகிர்வு.இதுவரை நான் அறிந்ததில்லை .

    ReplyDelete
  76. //////// Bhuvaneshwar said...
    மைனர்வாள்,
    உங்கள் கருத்துகளை சொல்ல இங்கு யாரும் தடை சொல்லப்போவதில்லை.
    இவர்கள் பேசிக்கொண்டிருப்பது நான் போட்ட பின்னூட்டத்தினால் வந்த கருத்தாய்வுகள்.////////

    வாத்தியாரின் வலைப்பக்கத்திலே அவரின் முடிவே இறுதியானது என்பதைப் புரிந்துகொள்ளுதல் நல்லது..

    'யாரும் தடை சொல்லப்போவதில்லை' என்று 'எடிட்டோரியல் ரைட்ஸ்' தாங்களாகவே எடுத்துக் கொள்வதும் தவறு..

    ReplyDelete
  77. ///////minorwall said...
    அண்ணன் ஆலாசியம்,சின்ன வாத்தியார்,தேமொழி அம்மையார்,உமா மேடம் அவர்கள் என்று எல்லோரின் கமென்ட்டுகளையும் ///////////

    உங்கள் பெயரை நான் குறிப்பிடவே இல்லை..
    உங்கள் கவிதைகளில் இருக்கும் தெளிவு உங்களுக்குப் பின்னூட்ட விவரங்களைப் புரிந்து கொள்வதிலே இல்லையோ எனத் தோன்றுகிறது புவனேஷ்..

    ஒரு வருடமாக கூச்சப்பட்டு,வெட்கப்பட்டுக்கொண்டு, ஒளிந்திருந்த உங்களுக்குத் தெரியாத விஷயங்கள் பலவும் மேற்கண்டவர்களின் பின்னூட்டத்திலே அடக்கம்..

    ReplyDelete
  78. //// Bhuvaneshwar said... நெகிழ்ந்து தான் போனேன். எல்லாருக்கும் அம்மா தானே அவள். எனக்கும் அம்மா. அப்பொழுது என்னை அவள் நிராகரிக்க மாட்டாள் தானே...... :)/////
    //////Bhuvaneshwar said...உங்களை ஓரம் கட்டுவதாகவோ வம்புக்கு இழுப்பதாகவோ நினைக்க வேண்டாம். அப்படிப்பட்டவன் நானல்ல. மற்றவர்களும் அப்படிதான்! :///////

    உங்களை யாரும் கேட்கவே இல்லாதபோது நீங்களாகவே கற்பனை பண்ணிக்கொண்டு 'அப்படிப்பட்டவன் நானல்ல' என்று சொல்லிக் கொண்டு

    'மற்றவர்களும் அப்படித்தான்' என்று
    அவர்களுக்கும் சேர்த்து செர்ட்டிபிகேட் கொடுத்து,

    'ஓரம் கட்டுவதாகவோ, வம்புக்கு இழுப்பதாகவோ' நான் நினைப்பதாகக் கற்பனை வேறு செய்து பெரும் குழப்பவாதி என்று
    இந்தப் பின்னூட்டத்து மூலம் தெளிவு படுத்தி உள்ளீர்கள்..

    எதற்கோ யாருக்கோ ஏங்கித் தவித்து 'நிராகரிக்க மாட்டாள் தானே' என்ற புலம்பல் பேர்வழியான ஒரு ஆள் என்னை ஓரம்கட்டுவது ,வம்புக்கு இழுப்பது
    என்று நினைத்து எழுதியிருப்பது கூட தரம் குறைந்த கற்பனையாகவே நான் நினைக்கிறேன்..

    புதியவர்களிடம் பழகும்போது எப்படிப்பழக வேண்டும் என்று கொஞ்சம் படித்தாலும் நல்லதே...உங்கள் வயதுக்கு அது நல்லது..

    ReplyDelete
  79. ////////அய்யர் said...
    வாருங்கள் தர்க்க ரீதியில்
    வழக்கத்தில் உள்ளது தவறு என சுட்ட/////
    கிட்டத்தட்ட நெருங்கி விட்டோம் என்றே நினைக்கிறேன்..
    சித்தம் போக்கு சிவன் போக்கு என்று இருக்க விட மாட்டார்கள் என்றே தோன்றுகிறது..
    சிவவாக்கியார் பாடல் சிலவற்றை நீங்க எடுத்து வுட்டாத்தான் சரியா வரும்ன்னு நினைக்குறேன்..

    ///////அய்யர் said...
    என்ன கட்சி நம்ம கட்சி
    என்ன கட்சி நம்ம கட்சி

    கட்சியெல்லாம் இப்பொ நமக்கெதுக்கு காலத்தின் கையில் அது இருக்கு

    கனியட்டும் காலம் நேரம் உமக்கு என்னவோ திட்டம் இருக்கு////////

    அன்னிக்கு என்னடான்னா 'நம்ம மண்ணைச் சேர்ந்தவர்' 'டேக் ஆஃப்' என்றெல்லாம் கொஞ்சம் ஸ்டார்ட் பண்ணுனீங்க..இன்னிக்கு இப்புடிப் பாட்டு..
    ஏன் நான் சமீப காலமா கொஞ்சம் நிம்மதியாத் தூங்குறது உங்களுக்குப் புடிக்கலையா?
    இருபது வயசுலே ஆயரம் பேரு கூட்டத்துலே கிங்,கிங் மேக்கர்ன்னு ஆளுங்கட்சியாவும், எதிர்க்கட்சியாவும் இருந்து நல்ல அனுபவம்..
    அதுனாலே நானா இந்த வேலையை நிச்சயமா செய்யமாட்டேன்..


    உங்களால் அல்ல..வேறு யாராலுமே ஆண்டவனை நேரில் காண்பிக்க முடியாது என்று நன்கு அறிந்திருந்தும்..உணர்த்தவாவது முடிகிறதா
    தங்கள் அன்புடைய விடாமுயற்சிக்கு தங்கள் ஆண்டவர் செவி சாய்ப்பாரா என்று ஆவலுடன் நாளை ஒரு நாளைக் கடத்த முயற்சிக்கிறேன்..

    இப்போ சீன்லே இருக்குறது.இது மட்டும்தான்..

    ReplyDelete
  80. This comment has been removed by the author.

    ReplyDelete
  81. Dear Minorwall,
    இங்கே நான் ஒன்றும் எடிட்டோரியல் ரைட்ஸ் எடுத்து கொள்ளவில்லை. எனக்கு தோன்றியதை சொன்னேன்.
    தேவை இல்லாமல் aggression காட்டும் உங்களிடம் வாதிட எனக்கு விருப்பமும் இல்லை!

    ReplyDelete
  82. This comment has been removed by the author.

    ReplyDelete
  83. மைனர்வாள்:

    உங்கள் நாத்திக உணர்வுகளை கேள்வி கேட்பதை விரும்பாமல் சிலும்பும் நீங்கள், நான் மதம் சார்ந்து எழுதியதை விமர்சிக்க வேண்டிய அவசியம் இல்லை. கண்ணியமுள்ள மனிதன் செய்யும் காரியமும் அது இல்லை.

    நான் நெகிழ்ந்ததையோ இல்லை ஜகன்மாதாவின் அங்கீகாரத்தை விரும்பியதையோ விமர்சிக்கும் உரிமை உங்களுக்கு இல்லை. முற்றுப்புள்ளி. Period.

    இது ஆசிரியரின் வலைப்பக்கம் ஆதலால் நான் மேலும் வாதிட விரும்பவில்லை. இந்த அளவுக்கு நான் எழுதியது கூட உங்கள் provocation காரணமாகவே.

    உங்களிடமும் எல்லாரிடமும் போல் இனிமையாக பழக வேண்டும் என்பதே என் விருப்பு. அதற்கு வாய்ப்பளிக்கும் வகையில் நீங்களும் இனி இருப்பீர்களானால்.

    மேலும் வாதமிட விரும்பினால் எனது மின்னஞ்சலுக்கு (bhuvaneshwar.d@gmail.com) அனுப்பவும்.

    நன்றி, விடை பெறுகிறேன்.

    அன்புடன்
    புவனேஷ்வர்.

    ReplyDelete
  84. This comment has been removed by the author.

    ReplyDelete
  85. This comment has been removed by the author.

    ReplyDelete
  86. /////அய்யர் said...
    ///Bhuvaneshwar said...
    குன்றின்மீ தகலேற்றி வைத்தா லங்கு
    சென்றிடும் யாவர்க்கு மொளி காட்டு மன்றோ;
    அன்பெனும் குன்றேறி நின்றுவிட் டாரவர்
    கண்களில் பண்புசெய் பேதங்க ளுண்டோ?..////

    பாடல் அருமை
    சொல்லில் குறையில்லை இருந்தாலும் அது மன்னிக்கப்படலாம்
    பொருளில் தான் குறை என (திருவிளையாடல் வசனம் போல்) வரிந்து கட்டி வருவதாக எண்ண வேண்டாம்...

    விளக்கின் ஒளியை சொல்லும் விளக்கே
    விளக்குக்கு ஒளி தந்த ஒளியை மறைத்ததேனோ-//////



    பூரணத்தில் இருந்து வந்த பூரணம் இதற்கு ஏது முந்தியது பிந்தியது பெருந்தகையீரே!

    ReplyDelete
  87. This comment has been removed by the author.

    ReplyDelete
  88. This comment has been removed by the author.

    ReplyDelete
  89. This comment has been removed by the author.

    ReplyDelete
  90. அன்புள்ள சகோதரர் ஆளாசியம் அவர்களுக்கு,

    அது தான் உபநிஷத்திலிருந்து சொல்லி விட்டீர்களே.

    அது ஈசாவாஸ்ய உபநிஷத்திலும் வரும், ப்ருஹதாரண்ய உபநிஷத்திலும் வரும். ஷாந்தி மந்த்ரம்.

    ஓம் பூர்ணமத பூர்ணமிதம் பூர்ணாத் பூர்ணமுதச்யதே|
    பூர்ணஸ்ய பூர்ணமாதாய பூர்ணமேவா வசிஸ்யதே||

    என்று வரும்.

    இதன் நேரடி அர்த்தம் - அங்கிருப்பதும் பூர்ணம், இங்கிருப்பதும் பூர்ணம், பூர்ணத்தில் இருந்து பூர்ணமான வஷ்துவே உதயமானது........ அப்படி பூர்ணத்தில் இருந்து பூர்ணம் வெளிப்பட்டாலும் எஞ்சுயதும் பூர்ணமே.

    இதன் பொருள் உட்கருத்து என்னவெனில்,
    பரம்பொருள் பௌதிக கணக்குகளுக்கு அப்பாற்ப்பட்ட ஒன்று. (கடவுள் இருக்கிறாரா என்று கேட்பவர்களுக்கு இது புரியாது தான்).

    சரி. மேலோட்டமாக பார்த்தல் ஏதோ ஏறுக்கு மாறாக உள்ளது போலவே தோன்றும்.

    ஆனால் இதை அணுகுவது சுலபம்.

    ஒன்றில் இருந்து இன்னொன்றை எடுத்தால், மீதி குறைவாக தானே இருக்க வேண்டும்? அது தானே விதி? ஆனால்

    இங்கே என்னடா என்றல் பூரணத்திலிருந்து பூர்ணம் உதயமானதாம், அந்த பூர்ணம் அப்படியே இருந்ததாம்.

    அப்படி என்றால் என்ன அர்த்தம்?

    ஒரே வாய்ப்பு தான் இருக்கிறது. ஒன்று அந்த பூர்ணம் பூஜ்யமாக இருக்க வேண்டும். அல்லது அளவற்றதாக இருக்க வேண்டும் (infinity).

    சூன்யமாக இருந்தால் சூன்யத்தில் இருந்து எப்படி இன்னொன்று "உதயமாக" முடியும்? முடியாது இல்லையா?

    அப்பொழுது அந்த ஆதி பூர்ண வஸ்து infinite வஸ்துவாக தானே இருக்க வேண்டும்?

    ஆம்.

    அது தான் இந்த ஸ்லோகத்தின் அர்த்தம்.

    எந்த மூல பிரகிருதி ஆதார பிரம்மமாக ஆத்ம ஸ்வரூபமாக இருக்கிறதோ அதே பூர்ண வஸ்து தான், தனது சங்கல்பமாகிய சக்தியினால் இத்தனை ஜகத்தாகவும் வெளிப்படுகிறது.

    அதனால் ஜகம் வேறு, பரமாத்மா வேறு அல்ல.
    எந்த பரம்பொருள் ஆத்ம ஸ்வரூபமாக அனைத்தையும் வியாபித்து சூக்ஷ்மமாக இருக்கிறாரோ அவரே தான் இந்த ஜகத்தாகவும் இருக்கிறார்......

    இதை தான் நான் எனது கவிதையில் "அண்டங் கொண்டது பிண்டங் கொள்ளும்" என வெளிப்படுத்தியது......

    ஏதோ என்னால் இயன்றதை, எனக்கு தெரிந்ததை எழுதினேன்.
    ----
    Love,
    Bhuvaneshwar D
    www.bhuvaneshwar.com]

    ReplyDelete
  91. அன்புச் சகோதரர்களே,

    தயவு செய்து அமைதி கொள்ளுமாறு, இருகரம் கூப்பிக் கேட்டுக் கொள்கிறேன். இதைச் சொல்ல, வகுப்பறையின் சக தோழி என்பதால் எனக்கு உரிமை உண்டென்றே நினைக்கிறேன்.

    பெருமதிப்பிற்குரிய மைனர் அவர்களே,

    //பார்வதி ராமச்சந்திரன் அவர்கள் குறிப்பிட்ட படி
    விவாதங்களிலே கலந்துகொள்ளும் யாராவது சீண்டலிலேஇழுத்து விடும்போது மென்மையாக நாகரீகப் போக்கை கையாள்வது சாத்தியமாகாத பட்சத்திலே தொடர்ந்து விவாதத்தின் தன்மை தரமிழந்து கலந்து கொள்வோர் அனைவரின் தரத்தையுமே பாதிக்கும் //

    என்று சொல்லிவிட்டு, உங்களிடமிருந்து கோப வார்தைகளை நான் மட்டுமல்ல, யாரும் எதிர்பார்த்திருக்க முடியாது. நான் யார் பக்கமாகவும் பேசவில்லை.
    புதியவர் என்றாலும், நமது வகுப்பறை, நமது நண்பர் என்ற நினைப்பில்
    புவனேஷ்வர் இரண்டொரு வார்த்தைகள் சொல்லியிருக்கலாம்.

    திட்டுவதில் கூட நாகரிகம் கடைப்பிடிப்பவர் நீங்களல்லவா. நாம் அனைவரும் ஒரு குடும்பம் என்றே நாம் நடந்து வந்திருக்கிறோம். கருத்துக்களுக்குத் தான் மோதல் என்பதைக் கடைபிடிக்கும் நீங்களா வயது என்றெல்லாம் சொல்கிறீர்க‌ள்.

    திரு. புவனேஷ்வர் அவர்களே, தயவு செய்து, விவாதங்களின் போது, நிறைய யோசித்துப் பின் வார்த்தைகளைப் பயன்படுத்துவது தங்கள் மனது புண்படாதிருக்க உதவும். நீங்கள் புதியவரல்லவா.

    நான் அதிகமாகச் சொல்லி விட்டதாக நினைத்தால் சம்பந்தப்பட்ட இரு தரப்பினரும் என்னை மன்னிக்க மிக வேண்டுகிறேன்.

    ReplyDelete
  92. சகோதரர் ஆலாசியம் அவர்களே, தங்கள் பெயரை தவறாக இடையின ளகர நெடில் கொண்டு எழுதி விட்டேன். மன்னிக்கவும். அது தட்டச்சு தவறு.
    ---
    Bhuvaneshwar D
    www.bhuvaneshwar.com

    ReplyDelete
  93. ////Bhuvaneshwar said...
    அன்புள்ள சகோதரர் ஆளாசியம் அவர்களுக்கு,

    அது தான் உபநிஷத்திலிருந்து சொல்லி விட்டீர்களே.

    அது ஈசாவாஸ்ய உபநிஷத்திலும் வரும், ப்ருஹதாரண்ய உபநிஷத்திலும் வரும். ஷாந்தி மந்த்ரம்.

    ஓம் பூர்ணமத பூர்ணமிதம் பூர்ணாத் பூர்ணமுதச்யதே|
    பூர்ணஸ்ய பூர்ணமாதாய பூர்ணமேவா வசிஸ்யதே||

    என்று வரும்./////

    நம்ம மதுரையம்பதி நக்கீரர் அய்யர் அவர்கள் அறிந்தது தான் இருந்தாலும் அவருக்காக ஒரு அடி எழுதினேன்...
    ஆனால் நீங்களோ, ஒரே அடியாக அதன் விளக்கத்தை அற்புதமாக சொல்லி.... ஏதோ நான் அறிந்ததை என்று மிகவும் சாதாரணமாக சொல்லி விட்டீர்கள்.
    மிக்க நன்றி சகோதரரே!

    தங்களுக்கு இன்னொரு வேண்டுகோளும் விடுக்கிறேன்... கேட்பீர்கள் என்று நம்புகிறேன்.
    ////Wednesday, May 23, 2012 8:11:00 பம்////
    இந்தப் பின்னூட்டத்தை தயவு செய்து...அழித்து விட வேண்டுகிறேன்... செய்வீர்களா? செய்வீர்கள் என்று நம்பி கூறுகிறேன்.

    அன்புடன் சகோதரன்,
    கோ.ஆலாசியம்.

    ReplyDelete
  94. தங்களின் அன்பிற்கு மிக்க நன்றி சகோதரரே!

    ReplyDelete
  95. ////Bhuvaneshwar said...
    சகோதரர் ஆலாசியம் அவர்களே, தங்கள் பெயரை தவறாக இடையின ளகர நெடில் கொண்டு எழுதி விட்டேன். மன்னிக்கவும். அது தட்டச்சு தவறு. ///

    மன்னிப்பெல்லாம் எதற்கு அறியாது வந்த தவறென்று அறிந்தமையால் அமைதியா இருந்தேன். இருந்தும் தாங்கள் தவித்து வந்த விதத்தால் மெய் சிலிர்த்தும் போனேன்.

    நன்றி...

    ReplyDelete
  96. ///Bhuvaneshwar said... ஆத்திகன் நாத்திகன் என்ற கொள்கை வேறுபாடு எல்லாம் அன்பிற்கு ஒரு தடை அல்ல. ஆதால் இதை எல்லாம் ஒரு பொருட்டாக எடுத்துக்கொண்டு உங்களை ஓரம் கட்டுவதாகவோ வம்புக்கு இழுப்பதாகவோ நினைக்க வேண்டாம். அப்படிப்பட்டவன் நானல்ல.///

    ஓஹ்ஹோ..ஹோ.. அப்பா நீங்கதான் அந்த குன்றிலிட்ட விளக்கா? கவிதையைப் படித்த பின்பு மைனர் எல்லோரையும் சமச்சீராய் வாருவதை நீங்கள் அப்படி குறிப்பிடுவதாக நினைத்தேன். சரி... சரி.... புரியுது....புரியுது....குன்றிலிட்ட விளக்கு யார் என்ற விளக்க உரைக்கு நன்றி .

    காலம் காலமாக இதே உதாரணம்தானா? ஹாவ்வ்....(கொட்டாவி).
    சுனாமின்னு வந்தா நல்லவங்க, கெட்டவங்க, சின்னவங்க, பெரியவங்க, நாத்திகம் பேசறவங்க, ஆத்திக வழி போறவங்க, ஏழைகள், செல்வந்தவர்கள் என எல்லோரையும் சரி சமமா போட்டுத் தள்ளிட்டு போறத இனிமே யாரவது எழுதுங்க.

    ///
    இங்கே என்னடா என்றல் பூரணத்திலிருந்து பூர்ணம் உதயமானதாம், அந்த பூர்ணம் அப்படியே இருந்ததாம்.
    அப்படி என்றால் என்ன அர்த்தம்?///

    கல்வி... கொடுத்தாலும் குறையாது....
    ________________________________

    ///Parvathy Ramachandran said... அன்புச் சகோதரர்களே,
    தயவு செய்து அமைதி கொள்ளுமாறு, இருகரம் கூப்பிக் கேட்டுக் கொள்கிறேன். இதைச் சொல்ல, வகுப்பறையின் சக தோழி என்பதால் எனக்கு உரிமை உண்டென்றே நினைக்கிறேன். ////

    உரிமை இருக்குதான் ஒத்துக்கறேன்...ஆனால் பார்வதி கொஞ்சம் இந்தப் பக்கமா வந்திருங்க... ஒருத்தர் மீது ஒருத்தர் பன்னீர் தெளித்துக் கொண்டிருந்தால் குறுக்கே போனால் உங்கள் மீது பன்னீர் விழும். முட்டை, செருப்பு என வீசிக்கொண்டிருக்கும் பொழுது போனால் உங்கள் மீது அது விழ வாய்ப்புள்ளது. சிறிது நேரம் கழித்து அவர்களுக்கு என்ன செய்கிறோம் எனப் புரியும் வயதுதான் இருவருக்கும். உங்கள் மனமும்புண்பட்டு வகுப்பறையை தவிர்க்க ஆரம்பித்து விடுவீர்களோ என்ற ஆதங்கம்தான்.

    ReplyDelete
  97. Themozhi said:
    //காலம் காலமாக இதே உதாரணம்தானா? ஹாவ்வ்....(கொட்டாவி).
    சுனாமின்னு வந்தா நல்லவங்க, கெட்டவங்க, சின்னவங்க, பெரியவங்க, நாத்திகம் பேசறவங்க, ஆத்திக வழி போறவங்க, ஏழைகள், செல்வந்தவர்கள் என எல்லோரையும் சரி சமமா போட்டுத் தள்ளிட்டு போறத இனிமே யாரவது எழுதுங்க. //


    =====


    அன்பு சகோதரி தேமொழி அவர்களின் ஆசையை நாம் நிறைவேற்றுவோமே!

    ஆழிப் பேரலை அடங்கா துயர்ந்து
    ஊழித் தாண்டவ மாடிய வேளை
    அக்கினிக் கொழுந்து பட்டினி கிடந்தது
    புக்கிடஞ் சுட்டுப்பொ சுக்கிய வேளை
    கற்றவர் வற்றா கேள்வியு ரைத்திட
    உற்றவர் செற்றவர் பற்றறு வேளை
    நல்லோர் தீயவர் வல்லார் இல்லார்
    கல்லார் பொல்லார் பேதங் கொள்ளார்!

    உரை:
    ஆழிப்பேரலை ஊழிக்காலத்தே வருவது போல உயர்ந்து ஆடி ஊரை அழிக்க நிலம் புகும் காலமும், செவ்விய நாக்குகளை உடைய அக்கினி பசிகொண்டது போல சென்ற இடமெல்லாம் சினந்து சுட்டுப் பொசுக்கும் வேளையிலும், கற்றவர் தமது உயர்ந்த அறிவினை உரைக்கும் பொழுது, வேண்டியவர் வேண்டாதவர் என நினைக்காத வேளையிலும், இந்த மூவர் (கடல், நெருப்பு, சான்றோர்) நல்லவர், தீயவர், வலியவர், மேலியவர், கற்றவர், பொல்லாதவர் என்ற பாகுபாடின்றி, தமது கடமையை முடிப்பர் (அதாவது கடல் எல்லாரையும் மூழ்கடிக்கும், தீ எல்லாவற்றையும் எரிக்கும், சான்றோர் யாவர்க்கும் அமுதம் போன்ற இன்னுரைகளை நவில்வர்!)

    என்ன தேமொழி, உங்கள் ஆசை நிறைவேறியதா?

    -----

    Bhuvaneshwar D
    www.bhuvaneshwar.com

    ReplyDelete
  98. அய்யா கொஞ்சம் பேச்சு தமிழ்ல எழுதுங்க அய்யா...ஒன்றுமே புரிய மாட்டேன் என்கிறது...ஆவ்...

    ReplyDelete
  99. //உங்கள் மனமும்புண்பட்டு வகுப்பறையை தவிர்க்க ஆரம்பித்து விடுவீர்களோ என்ற ஆதங்கம்தான்.//

    நான் வகுப்பறைக்கு வருவதில் தங்களுக்கு இருக்கும் ஆர்வத்துக்கு என் நெஞ்சார்ந்த நன்றி. வகுப்பறையைத் தவிர்ப்பதற்கு மனம் புண்படுவதும் ஒரு காரணம் என்பதைப் புரிந்து தெரிவித்த மேன்மைக்கும் நன்றி.

    ReplyDelete
  100. நமக்குள்ள எதுக்கு பாஸ் சண்டை...

    ReplyDelete
  101. மேலும் புதிய மாணவர்கள் தங்களுக்கு வகுப்பரையின் சக மாணவர்கள் பர்சனல் ஆக தெரியும் வரை கவுன்ட்டர் கமெண்ட் அடிப்பதை தவிர்க்கலாம்...மேலும் இங்கு வரும் அனைவரும் நன்றாக படித்தவர்கள் என்பைதயும் மனதில் கொண்டு பொறுமை காக்கலாம்...

    ReplyDelete
  102. நல்ல கவிதை புவனேஷ்வர், நன்றி. ஆழிப் பேரலையுடன் அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் என்று அதையும் சேர்த்து விட்டது அபாரம்.
    பேதமில்லாமல் நடத்துவதில் பஞ்ச பூதங்களை மட்டும், அதாவது இயற்கை சீற்றங்களை மட்டும் சேர்த்துக் கொள்கிறேன்.

    ஏகலைவனுக்கு கற்றுக் கொடுக்காத வித்தைக்கு கட்டை விரல் காணிக்கை கேட்ட துரோணர், ஏதோ ஆர்வக் கோளாறில் பொய் சொல்லி வித்தை கற்ற கர்ணனை மன்னிக்காமல் சாபம் விட்ட பரசுராமன் இவர்கள் எல்லோரும் ஆன்றோர்கள், சான்றோர்கள் இல்லையா என்ற கேள்விகள் மனதில் தோன்றுவதைத் தவிர்க்க முடியவில்லை. அதனால் சான்றோர்களை இந்த வரிசையில் வைக்க என் மனம் ஒத்துக்கொள்ள மறுக்கிறது.

    ReplyDelete
  103. /////////Bhuvaneshwar said...
    மைனர்வாள்:

    உங்கள் நாத்திக உணர்வுகளை கேள்வி கேட்பதை விரும்பாமல் சிலும்பும் நீங்கள், நான் மதம் சார்ந்து எழுதியதை விமர்சிக்க வேண்டிய அவசியம் இல்லை. கண்ணியமுள்ள மனிதன் செய்யும் காரியமும் அது இல்லை.//////////

    'மதம் சார்ந்து' என்று மதப் பிரச்சினைக்கு வழிகோலும் உமது அடுத்த குறுக்குபுத்தியும் வெளி வந்துவிட்டது..இந்தப் பூச்சாண்டிக்கெல்லாம் பயப்படுகிறவர்களிடம் இதனை வைத்துக் கொளது நல்லது..

    கண்ணியத்தைப்பற்றிக் குறிப்பிடும் அடிப்படைத் தகுதி இல்லாத ஆளிடம் இந்த அளவு கண்ணியத்துடன் செயல்பட்டது என் குற்றம்தான்..

    ReplyDelete
  104. This comment has been removed by the author.

    ReplyDelete
  105. //////// Parvathy Ramachandran said...
    என்று சொல்லிவிட்டு, உங்களிடமிருந்து கோப வார்தைகளை நான் மட்டுமல்ல, யாரும் எதிர்பார்த்திருக்க முடியாது. நான் யார் பக்கமாகவும் பேசவில்லை.
    புதியவர் என்றாலும், நமது வகுப்பறை, நமது நண்பர் என்ற நினைப்பில்
    புவனேஷ்வர் இரண்டொரு வார்த்தைகள் சொல்லியிருக்கலாம். ///////
    சோதிட வகுப்பறை அளவுக்கு வந்து விட்டோம் என்பதற்காக மழுங்கலாகவும் இருந்துவிடமுடியாதல்லவா.?

    /////திட்டுவதில் கூட நாகரிகம் கடைப்பிடிப்பவர் நீங்களல்லவா. நாம் அனைவரும் ஒரு குடும்பம் என்றே நாம் நடந்து வந்திருக்கிறோம். கருத்துக்களுக்குத் தான் மோதல் என்பதைக் கடைபிடிக்கும் நீங்களா வயது என்றெல்லாம் சொல்கிறீர்க‌ள்./////////
    தஞ்சைப் பெரியவர்,KMRK ,அய்யர், வாத்தியார் என்று வயது அடிப்படையிலேயே மரியாதையை எதிர்பார்க்கும் நமது கலாச்சாரத்திலே பல சமயங்களிலே கடினமான வாதங்களைத் தவிர்த்தும் வந்திருக்கிறேன்..

    புவநேஷுக்கும் வயதிலே மரியாதையை எதிர்பார்க்கும் தன்மைகளும் சேர்ந்தே வளர்ந்திருக்கும் என்று தப்புக்கணக்கு போட்டுவிட்டேன்..

    ReplyDelete
  106. //வினவு என்ற தளத்தில் இதை முழுதும் படிக்கலாம் என அதில் குறிப்பிட்டிருந்தது. விருப்பமுள்ளவர்கள் தேடிப்படிக்கலாம்.//

    'வினவு' சில சமயங்லைல் 'வசவு' என்றும் பெயர்கொள்ளும்படி உள்ளது.டெல்லிக்காரவுகளுக்குப் பிடிக்குமானால் அவசியம் படித்துவிட்டு கருத்துக்களை மட்டும் இங்கே பகிர்ந்து கொள்க.

    ReplyDelete
  107. //தஞ்சைப் பெரியவர்,KMRK ,அய்யர், வாத்தியார் என்று வயது அடிப்படையிலேயே மரியாதையை எதிர்பார்க்கும் நமது கலாச்சாரத்திலே பல சமயங்களிலே கடினமான வாதங்களைத் தவிர்த்தும் வந்திருக்கிறேன்..//

    இதற்காக மைனர்வாளுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.என்னைப் பொருத்தவரை வயதின் அடிப்படையில் மரியாதையை எதிர்பார்க்கவில்லை.

    கடினமான வாதங்கள் இல்லாவிட்டாலும்,இனிமையான வாதங்களை, செய்திகள் அறியப்படும் வகையில் விவாதிக்கவே விரும்புகிறேன்.சம்வாதம் என்று நமது மரபே வாதப் பிரதிவாதங்களை அனுமதிப்பதுதான். தர்க சாத்திரம் இங்கே முன்னெடுக்கப்பட்டது.

    'பிரதிவாதி பயங்கரம்'என்றே ஒரு ஸ்ரீவைஷ்ணவருக்குப் பட்டம் உண்டு.

    பாரதத்தில் மற்ற நாடுகளைப் போல் அல்லாமல் நாஸ்திகக் கருத்தும் உலகாயதம் பேசுபவர்களையும் உள் வாங்கி கொள்ளும் போக்கே இருந்துள்ளது.
    இப்போதும் கூட ஒரு சில ம‌தங்களில் நாஸ்திகர்கள் அனுமதிக்கப்
    படுவதில்லை. ஆனால் இங்கே ஒருவர் நாஸ்திகர் என்பதால் சமூகத்தில்
    அந்தஸ்தை இழப்பதில்லை. சில சமயங்களில் பலருடைய பாராட்டுக்களையும் கூடப் பெற முடிகிறது.

    திக்க‌ற்றவனுக்கு தெய்வமே துணை. தன்னம்பிக்கை உடையவர்கள் தெய்வ நம்பிக்கை இல்லாவிட்டாலும் சமாளித்துக் கொள்ளட்டும். தன்னம்பிக்கை மட்டுமே போறவில்லை என்னும் போது அவர்கள் தாமாகவே 'எல்லாம் அவன் செயல்' என்பர். விவாதம் சும்மா 'டைம் பாஸா'க உதவலாம்.ஏதோ கொஞ்சம் புரியலாம். இறைவனின் இருப்பை அறிந்துகொள்ளும் சமயம் ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு சமயம் அமையும்.

    ReplyDelete
  108. //ஏகலைவனுக்கு கற்றுக் கொடுக்காத வித்தைக்கு கட்டை விரல் காணிக்கை கேட்ட துரோணர், ஏதோ ஆர்வக் கோளாறில் பொய் சொல்லி வித்தை கற்ற கர்ணனை மன்னிக்காமல் சாபம் விட்ட பரசுராமன்//

    நீங்கள் கூறும் இரு கதைகளின் நோக்கமும் குரு பகதியை அழுத்தமாகச்சொல்வதே. எனவே ஏகலைவனும் கர்ணனையும் மைய்யக் கதை மாந்தர்களாக வைக்க வேண்டுமே அல்லாது துரோணரையும், பரசுராமனையும் முன் வைத்துப் பார்க்கக் கூடாது..

    தலைவனுக்காக, ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டால்கூட, தீக்குளிக்கும் தொண்டனுக்கு இங்கே தியாகிப் பட்டம் கொடுக்கும் பகுத்தறிவு, குருவுக்குப் பணிந்து நின்ற இருவரைப் பாராட்ட வேண்டுமே அல்லாது, கதையில் உப பாத்திரமான குருக்களை முன் நிறுத்தக் கூடாது.

    ReplyDelete
  109. ///ஏகலைவனும் கர்ணனையும் மைய்யக் கதை மாந்தர்களாக வைக்க வேண்டுமே அல்லாது துரோணரையும், பரசுராமனையும் முன் வைத்துப் பார்க்கக் கூடாது.....குருவுக்குப் பணிந்து நின்ற இருவரைப் பாராட்ட வேண்டுமே அல்லாது, கதையில் உப பாத்திரமான குருக்களை முன் நிறுத்தக் கூடாது. ///

    KMRK ஐயா அவர்கள் விவாதத்தின் பின்னணிக் கருத்தை மனதில் கொள்ள வேண்டுகிறேன்.
    அது புவனேஷ்வர் எழுதிய கவிதையின் கருத்தைத் தொடர்ந்தது.
    குன்றிலிட்ட விளக்கு = யாராக இருந்தாலும் பேதமிலாமல் ஒளி கொடுக்கும் விளக்கு (நெல்லுக்கும், புல்லுக்கும் என எல்லோருக்கும் பெய்யும் மழையினைப் போல)
    சான்றோர்கள் = அனைவரையும் சமமாக கருதி பேதமிலாமல் இன்மொழி சொல்வார்கள் ("சான்றோர் யாவர்க்கும் அமுதம் போன்ற இன்னுரைகளை நவில்வர்" என்பது கவிஞரின் விளக்கம்)
    அதற்கு புராணத்தில் இருந்து எல்லோரும் சான்றோர்கள் என ஒத்துக்கொள்ளும் குருக்களை உதாரணம் காட்டினேன், அவர்கள் கல்வியறிவு கொடுத்ததில் பேதம் காட்டினார்கள் என்றேன். அதனால் விவாதக் கருத்தில் அவர்கள்தான் முக்கிய பாத்திரம்/முதல் பாத்திரம். அவர்களால் பயனடைந்தவர்கள் (பயனடையாதவர்கள் ?) கருத்தில் உபபாத்திரம்/துணைபாத்திரம்.
    புராணத்தில் உண்மையில் அவர்களுக்கு என்ன பாத்திரம் கொடுக்கப்பட்டது, அந்தக் கதையினால் மக்களுக்கு என்ன நீதி எடுத்துரைக்கப் பட்டது என்பது விவாதத்தில் இல்லை.

    சான்றோர்கள் என்று மக்கள் ஒத்துக்கொள்வோரும் பேதத்துடன் நடந்து கொண்டனர் அதனால் பேதமில்லாமல் நடந்து கொள்ளும் இயற்கை சீற்றங்களின் வரிசையில் சான்றோர்களை வைப்பது எனக்கு உடன்பாடாக இல்லை என்று குறிப்பிட்டேன்.

    சான்றோர்கள் என்பதற்கு நான் எடுத்துக்கொண்டவர்கள் சரியான உதாரணம் இல்லையென்றால் அனைவரையும் பேதமின்றி நடத்திய சான்றோரை நீங்களே உதாரணத்திற்கு கொடுத்துவிடுங்களேன்.

    ///தலைவனுக்காக, ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டால்கூட, தீக்குளிக்கும் தொண்டனுக்கு இங்கே தியாகிப் பட்டம் கொடுக்கும் பகுத்தறிவு///

    தொண்டனுக்கு இங்கே தியாகிப் பட்டம் கொடுக்கும் பகுத்தறிவு?....என்ன ஒரு குழப்பம்...?

    இவ்வாறு உணர்ச்சி வசத்தில் முடிவெடுத்து தற்கொலை செய்பவர்களுக்கு பகுத்தறிவாளர்கள் என சொல்லிக்கொள்பர்கள் தியாகிகள் பட்டத்தை கொடுத்தார்கள் என்பது வேடிக்கையாக இருக்கிறது.
    பெரும்பாலான மனிதர்கள் ( = தங்களுக்கு இருப்பது பகுத்தறிவா அல்லது மெய்ஞான அறிவா என்று நடைமுறை வாழ்க்கையில் ஆராய்ச்சியில் ஈடுபடாதவர்கள்) அவர்களுக்கு முட்டாள்கள் எனத்தான் பட்டம் கொடுப்பார்கள்.

    மதவாதிகள் போர்வையில் ருத்திராட்சப் பூனைகள் இருப்பது போல பகுத்தறிவாளர்கள் போர்வையில் கபட சுயநலக் கூட்டங்கள் உலாவுவதையும் மக்கள் மறந்துவிடக் கூடாது. இரண்டு பொய் புரட்டுக்காரர்களும் அவரவர் சார்ந்த குலத்தை அழிக்க வந்த கோடாலிக் கம்புகள்.

    ReplyDelete
  110. This comment has been removed by the author.

    ReplyDelete
  111. This comment has been removed by the author.

    ReplyDelete
  112. அன்பு சகோதரி தேமொழி,

    தங்கள் ஊக்கங்களுக்கு நன்றி.

    பரசுராமரிடம் கர்ணன் பொய் கூறி ஏமாற்றி கற்றான். அந்த காலத்தில் பொய் கூறுவது, அதுவும் குருவிடமே பொய் கூறுவது மகா பாதகமான செயல். மேலும், பரசுராமருக்கு கர்ணனை பற்றி தெரியும்.

    கர்ணன் துரோணரிடம் பயின்றவன். அந்நாள் முதலே அர்ஜுனன் மீது பொறாமை மிகுந்தவன்.
    அர்ஜுனனுக்கு துரோணர் பிரம்மசிரஸ் என்னும் அஸ்திர பிரயோகத்தை கற்று தந்தார். (அவர் மகனுக்கே கூட அவர் இதை கற்று தரவில்லை, பின்னாளில் அவன் நச்சரித்து கற்று கொண்டான் - அப்போது கூட துரோணர் சொன்னார் - மகனே அஸ்வத்தாமா, உன் நச்சரிப்பினால் இதை நான் கற்று தருகிறேன், ஆனால் இதை கற்றுகொண்டதினால் நீ பின்னாளில் வருந்துவாய் என நினைக்கிறேன்)

    இதை கர்ணன் பார்த்தான். அவரிடம் சென்று கேட்டான் எனக்கும் வேண்டும் என்று.
    கேட்டவன் சும்மாவா கேட்டான்? அர்ஜுனனை நான் போர் செய்து கொல்ல வேண்டும், அதனால் எனக்கும் இந்த அஸ்திரம் வேண்டும் என்றான். நீங்களே சொல்லுங்கள் தனது உயிர் போன்ற சீடனான பண்பாளன் பார்த்தனை கொல்ல இவன் கேட்டால் அவர் ஒப்புவாரா? மறுத்தார்.
    இவன் பரசுராமரிடம் சென்றான். பொய்யுரைத்தான்.
    அதனால் இவன் செய்ததற்கு பெற்ற தண்டனை சரி.
    பரசுராமர் க்ஷத்ரியர்களுக்கு சொல்லி கொடுக்க மாட்டார் என்பது பொய். பீஷ்மர் அவரது மாணவர் தான்!

    ஏகலவ்யன் விஷயத்துக்கு வருவோம்:

    பலரும் நினைப்பது போல அவன் வேடனல்ல. நிஷாத ராஜகுமாரன்.

    துரோணர் தனிப்பட்ட குருகுலம் வைத்து சொந்த விருப்பத்தில் பாடம் சொல்லித்தரவில்லை.
    அவரை அங்கு குருகுலம் நடத்த வைத்து பீஷ்மர். அவர் நாட்டுக்காக கௌரவ பாண்டவர்களுக்கு சொல்லிக்கொடுக்க தான் அந்த குருகுலம்.

    ஏகலவ்யன் மற்ற நாட்டு இளவரசன். திறமை மிக்க அவன் பின்னாளில் குரு வம்சத்துக்கு எதிராக போரிட்டால் என்ன பண்ணுவது? அதற்காக தான் அவனை மறுத்தது. அவன் கட்டை விரலை வாங்கியது.
    தான் எந்த குலத்துக்கு குல குருவாக இருக்குராரோ அந்த குளத்தை காக்க வேண்டியது அவர் கடமை. அக்குலத்துக்கு அபாயம் பின்னாளில் விளைவிக்க கூடிய ஒருத்தனுக்கு அவர் சொல்லி கொடுப்பாரா?

    இதே துரோணர், பாண்டவர்களுக்கு பயன் படுவான், என்று துருபதன் மகனுக்கு சொல்லி கொடுத்தார். அவருக்கு நன்றாக தெரியும், தன் மரணம் அவன் கையில் தான் நிகழும் என்று. அவன் அப்படி தானே வரம் வாங்கி பெற்றான்? இருந்தாலும் தான் குலகுருவான குலத்துக்கு நன்மை செய்யும் பொருட்டு தன் உயிரை திரணமாக மதித்த பெருந்தகை துரோணர். இவனால் தனக்கு மரணம், தான் சொல்லி கொடுக்கும் விதியால் இவன் தன்னையே கொள்ளுவான் என தெரிந்தும் கற்று தந்தார்!


    மேலும், நான் சான்றோர் இன்னுரை என்று சொன்னது அறவுரை பற்றி.

    நீங்கள் குறிப்பிடும் இரண்டும் ரகசியமாக வைக்க பட வேண்டிய போர் முறை.

    என்ன தான் ஜனநாயகம் என்றாலும் நீங்களும் நானும் அணு ஆயுதம் இயக்க முடியுமா?

    அதை விட சக்தி வாய்ந்த அஸ்திரங்களை ஒழுக்கமும் சீலமும் மன அடக்கமும் உடையவனிடம் தான் தர முடியுமே தவிர ஆர்வம் இருக்கிறது என்பதற்காக கேட்கிறவனுக்கு எல்லாம் கொடுத்தால் மனித குலமே அழிந்து போயிருக்கும்.

    அஸ்வத்தாமன் என்ன பண்ணினான்? சொந்த பழிக்காக பிரம்ம சிரஸ் பிரயோகம் பண்ணினான். ஆனால் அர்ஜுனன்? கர்ணனோடு உயிர் போகிற சமயம் (கர்ணனின் அம்பு அர்ஜுனன் மார்பை துளைத்த போது கண்ணன் எப்படியோ சிகிச்சை செய்து அவனை காத்தார்) கூட பிரம்ம சிரஸ் பயன் படுத்தவில்லை.
    ஜயத்ரதனை கொள்ளா விட்டால் சபதப்படி தீப்பாய நேரிடும் என்ற போது, மாலை நெருங்கிய போதும் அவன் பயன் படுத்தவில்லை. அவன் ஒரே ஒரு முறை தான் அதை விட்டான். எப்போது? அஸ்வதாமனின்அஸ்திரத்தை தடுக்க, அதுவும் ரிஷிகள் எல்லாம் கேட்டு கொண்டதினால்.

    கர்ணனோ, அர்ஜுனனை கொல்ல வேண்டும் என்பதற்காகவே அதை வேண்டும் என்றான். அவனிடம் கொடுத்து இருந்தால் என்ன ஆவது?

    வித்தியாசம் புரிகிறதா?

    துரோணர், பரசுராமர் இடத்தில் இப்பொழுது உங்களை வைத்து பாருங்கள்!

    ReplyDelete
  113. This comment has been removed by the author.

    ReplyDelete
  114. இதே துரோணர், பாண்டவர்களுக்கு பயன் படுவான், என்று துருபதன் மகனுக்கு சொல்லி கொடுத்தார். அவருக்கு நன்றாக தெரியும், தன் மரணம் அவன் கையில் தான் நிகழும் என்று. அவன் அப்படி தானே வரம் வாங்கி பெற்றான்? இருந்தாலும் தான் குலகுருவான குலத்துக்கு நன்மை செய்யும் பொருட்டு தன் உயிரை திரணமாக மதித்த பெருந்தகை துரோணர். இவனால் தனக்கு மரணம், தான் சொல்லி கொடுக்கும் வித்தையால் இவன் தன்னையே கொல்லுவான் என தெரிந்தும் சோத பகையை பொருட்படுத்தாமல் அரசனுக்காக கற்று தந்தார்! உண்மையில் துரோணர் ஒரு தியாகி. போர்க்களத்தில் அவர் சொல்லுவார் அச்வதாமனிடம்: "மகனே, எந்த தகப்பனுக்கு தன் ஆசை இருக்காது, தன் மகன் நூறு ஆண்டுகள் வாழ வேண்டும் என? ஆயினும் அரசனுக்காவ, அவனை காப்பதற்காக என் உயிரினும் மேலான உன்னையும் போரில் கொண்டு வந்திருக்கிறேன்"..... இவரா சான்றோன் இல்லை? உயிரை விட பிரியமான மாணவன் அர்ஜுனன். அவனை புண் படுத்தும் அம்புகளை எய்தாரே கடமைக்காக, அவரா சான்றோர் இல்லை?

    ReplyDelete
  115. This comment has been removed by the author.

    ReplyDelete
  116. This comment has been removed by the author.

    ReplyDelete
  117. பின்னூட்டத்தை கமென்ட் பாக்ஸ்லே போடணும்..
    நீங்க 'ரி-சைக்கிள் பின்'ன்னுலே போட்டிருந்தா எப்புடி வெளிவரும்?//

    ஜோக்கு....................????????????? ம்ம்ம்மம்ம்ம்மம்ம்ம்ம்

    ReplyDelete
  118. கர்ணனை பற்றி நான் கொஞ்சம் சொல்லி விடுகிறேன். ஏன் என்றால் தென்னாட்டில் கர்ணனை பற்றி ஒரு மிக நல்ல அபிப்ராயம் இருந்து வருகிறது. அதிலும் நம் தமிழ் நாட்டிலும் ஆந்திரத்திலும் கர்ணனை கதாநாயகனாகவே வைத்து விட்டார்கள். (அவர்களும் தான வீருடு கர்ணன் என்று சொல்வார்கள்).

    ஒவ்வொரு மனிதனிடமும் ஒரு நல்ல குணம் இருந்தே தீரும். முழு personality பார்க்கும் போது தான் அவன் லக்ஷணம் புரியும்.

    முதலில் அவன் கொடை:

    கர்ணன் பிறந்ததில் இருந்தே கொடையாளி எல்லாம் கிடையாது. அவன் கொடை கொடுக்க ஆரம்பித்ததே அவன் நாற்பதாவது வயதுக்கு அப்புறம் தான். பாண்டவர்கள் வனவாசம் ஆரம்பித்த நாட்களில் துர்யோதனன் ராஜசூயம் செய்ய ஆசைப்பட்டான். ஆனால் அதை செய்த யுதிஷ்டிரன் இருக்கும் போது அவன் அதை செய்ய முடியாது என அனைவரும் கூற, அவன் வைஷ்ணவம் என்ற வேள்வியை செய்தான். அனைவரும் புகழ்ந்தனர். அப்போது கர்ணன் சொன்னான் - "நீ சீக்கிரத்தில் பாண்டவர்களை கொல்வாய், ராஜசூய யாகமும் செய்வாய்; அர்ஜுனனை நான் கொல்வேன். அது வரை என் கால்களை தண்ணீர் விட்டு கழுவமாட்டேன். எவன் வந்து எதை யாசகமாக கேட்டாலும் இல்லை என்று சொல்ல மாட்டேன், இது எனது சபதம்." என்று சபதம் செய்தான்.

    அதனால் அவன் கொடையும் ஏதோ நல்ல எண்ணத்துடன் புண்ணிய ஆத்மா பண்ணிய கொடை என்று கொல்ல முடியாது.

    -----

    ஏதோ அவன் பிறப்பினால்/வளர்ப்பினால் அவனுக்கு கல்வி மறுக்கப்பட்டது என்று பலரும் சொல்கிறார்கள்.
    இல்லை.

    அவன் துரோணரிடம் தான் படித்தான்.

    சூத புத்திரன் என்பது இழிவான வார்த்தை அல்ல.

    தேரோட்டி என்பது நம்ம ஊர் கார் ஓட்டுனர் போல அல்ல.

    அவனும் போர்க்கலையில் கைதேர்ந்தவனாக இருக்க வேண்டியது அவசியம்.

    மேலும் ஒரு தேருக்கு மூன்று ஓட்டிகள் உண்டு.

    போரில் யார் பணியை யார் செய்ய வேண்டி வரும் என்று சொல்ல முடியாது. ஆகையால் அர்ஜுனனுக்கும் தேரோட்ட மிக நன்றாக தெரியும் அதே சமயம் ஒரு தேரோட்டிக்கும் போர்க்கலை தெரியும்.

    ஏன், மகா வீரனான வில்லாளியான கிருஷ்ணன் தேரோட்டவில்லையா? பீமனுக்கு அடுத்தபடியான பலசாலியான வீரன் சல்லியன் தேரோட்டவில்லையா? அர்ஜுனன் உத்திரனுக்கு தேரோட்டவில்லையா?
    ஆகையால் சூதன் என்ற வார்த்தை இழிந்த வார்த்தை அன்று.

    பெரிய சேனாதிபதியான கீசகன் சூத புத்திரன் தானே. அவன் அக்காவான சுதேஷ்ணா தேவி விராட அரசனின் பட்ட மகிஷி. தாழ்ந்த குலமாக இருந்தால் இப்படி இருக்குமா?

    அதனால் குதர்க்கம் பேசுபவர்கள் தான் இப்படி திரித்து விட்டார்கள். ஏன் ரிஷிகளுக்கே புராணங்களை உபதேசம் பண்ணியது சூத மகரிஷி தானே........

    ReplyDelete
  119. ஏதோ அவன் நிராயுதபாணியாக இருந்த போது அவனை கொன்றதாக கூறுவதும் பொய். அவன் தேர் ஆடாமல் நின்றவுடன் கிருஷ்ணன் அர்ஜுனன் தேரையும் நிறுத்தி விட்டார். இருவர் தேரும் நின்ற படி யுத்தம் செய்தனர். சமமானது தானே?

    கர்ணன் வில்லோடு இருந்த போது யுத்தம் பண்ணிய போது தான் அர்ஜுனன் அம்பினால் அவன் தலையை கொய்தான். அவன் தேர் சக்கரத்தை தூக்கும் போது சும்மா இருந்து தாமதித்தான். வியாச பாரதம் படித்தால் இது விளங்கும்.

    தர்ம தேவதை அம்பை மலராக ஆக்கியது சினிமாவுக்கு நன்றாக மக்கள் உணர்ச்சியை தூண்டும். அப்படி எதுவும் வியாசர் கூறவில்லை.

    அவர் கூறியதை இங்கே சுருக்கமாக மொழி பெயர்க்கிறேன்:

    "கிருஷ்ணரின் இந்த வார்த்தைகளை கேட்ட கர்ணனின் முகம் குற்ற உணர்வால் குனிந்தது. அவன் தன் தேரேறி அம்புகளை எய்தான். கர்ணனின் அம்புக்கூட்டதால் பார்த்தனின் தேர் மறைந்தது.பார்த்தனின் வில் வன்மையால் கர்ணனின் அம்புகள் வெட்டப்பட்டு, புற்றினுள் செல்லும் பாம்புகள் போல கர்ணனின் தேர் உள் காண்டீபதின் அம்புகள் பாய்ந்தன. கர்ணனின் உடல் நடுங்க, அவன் "நீ செத்தாய்" என கர்ஜித்து கண்டவர் நடுங்கும் ஒரு கூரிய அம்பினை எய்தான். அது அர்ஜுனன் மார்பை துளைக்க அவன் மயங்கி வீழ்ந்தான். அந்த சமயம் தன் தேரின் சக்கரத்தை கர்ணன் தூக்க முயன்றான். கண்ணனால் தேற்றப்பட்ட பார்த்தன் எழுந்தான். அதன் பின் பாய்ந்து வந்த கர்ணனின் அம்புகளை வெட்டி, தன் அம்புறா தூணியில் இருந்து அழகிய ஒரு அம்பினை எடுத்தான். கண்டவர் நெஞ்சம் நடுங்கும் வண்ணம் ரத்தமும் சதையும் தோய்ந்த அஞ்சலிகம் என்ற அம்பினை அவன் சினத்துடன் கைப்பற்றினான்.அச்சமயம் பரசுராமரின் சாபத்தால் அஸ்திரங்கள் கர்ணனுக்கு மறந்து போயின.

    மாலை வேளை நெருங்கியது. இவனுடன் போரிட்டது போதும் என எண்ணிய பார்த்தன், ஒரு அம்பினால் கர்ணனின் தேரின் கோடியை வீழ்த்தினான். பின் அழகிய தங்க முலாம் பூசப்பட்ட அந்த அஞ்சலிகம் எனும் அம்பினை காண்டீபத்தில் பொருத்தி "நான் தேவர்களையும் பித்ருக்களையும் குருமார்களையும் திருப்தி செய்திருப்பேனாயின், நான் ஏன் குருவிடம் கொண்ட பக்தி உண்மை ஆயின், இந்த அம்பு என் பகைவனான கர்ணனின் உடலை அழித்து அவன் உயிரை யமனுக்கு விருந்தாளி ஆக்கட்டும்" என ஆணை இட்டு எய்தான். மாலை மயங்கும் அந்த பின் பகல் பொழுதில், வில் பிடித்து நின்ற கர்ணனின் தலையை அந்த அம்பு உடலினின்று பிரித்தது."

    இதில் எங்கே இருக்கிறது அநியாய யுத்தம்?

    ஆரம்ப நாள் முதலே பாண்டவர்களை கொல்ல விஷம் வைத்தல், ஆற்றில் தள்ளுதல், அரக்கு மாளிகை, சூதாட்டம் போன்ற முறைகளை கையாண்டது கர்ணன் தான். சூதாட்டம் தவிர (அந்த பெருமை சகுனிக்கு) அவன் கொடுத்த யோசனைகள் தான் இத்தனையும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

    அவனை துரோணர் நிராகரித்ததும், இவ்வளவும் அறிந்த பரசுராமர் இந்த கர்ணன் எல்லாவற்றிற்கும் மேலாக நம்மிடமும் பொய் சொன்னான் என்று அறிந்ததால் சாபம் கொடுத்ததிலும் என்ன தவறு?

    ReplyDelete
  120. கடவுள் பற்றிய எனது லெட்டர் ஏற்படுத்திய சர்ச்சைகள் இன்னும் அடங்கவில்லை என்பதுதான் காரணமோ என்று நினைக்கிறேன்..//

    முதலில் இதை ஒரு சர்ச்சையாக நான் இதுவரை பார்க்கவில்லை என்பதைக் குறிப்பிட விரும்புகிறேன். அவரவர்கள் வழி அவரவர்களுக்கு என்ற தெளிவு எனக்கு இருக்கிறது. அவர்களின் கருத்துக்களை மதிக்கும் பண்பும் இருக்கிறது. நான் உங்களையோ நீங்கள் என்னையோ எப்போதும் மாற்ற இயலாது. உங்களின் கடவுள் மறுப்புக் கொள்கையை நான் ஆரம்பத்திலிருந்தே அறிந்திருக்கிறேன் என்று உங்களுக்கு நன்கு தெரியும். இப்போதெல்லாம் வாதத்தில் ஆர்வமும் மிகவும் குறைந்துவிட்டது கடந்த சில மாதங்களாக. அவற்றால் எந்த பயனும் இல்லை என்று மண்டையில் உரைத்திருப்பதால். வேறு சிலவற்றைத் தெரிந்து கொள்ளும் ஆர்வம், அவை தொடர்பான அரைவேக்காட்டு ஆராய்ச்சிகள், சுயபரிசோதனை எனக் கவனம் திரும்பிவிட்டதும் ஒரு காரணம். உங்கள் கடிதம் வகுப்பறையில் வெளிவந்ததால் எனது கருத்துக்களை எழுதினேன். யாருடைய கருத்தையும் யாரும் ஏற்கவேண்டிய நிர்ப்பந்தம் எதுவும் இல்லை. இதை சர்ச்சைகள் என நீங்கள் குறிப்பிட்டதால் தன்னிலை விளக்கமாகவே எழுதுகிறேன்.

    ReplyDelete
  121. என்னைப்பொறுத்தவரை உலகில் நடக்கும் எந்த நிகழ்வுக்கும் பின்னால் ஏதோ ஒரு காரணம் இருக்கிறது எனத் தீவிரமாக நம்புகிறேன். அதை சில சமயங்களில் என் அனுபவத்தில் உணர்ந்தும் இருக்கிறேன். நான் பகிர்ந்த ஒரு விஷயமும் அதையொட்டியே இருந்ததால் எழுதினேன்.

    ReplyDelete
  122. இவர்கள் பேசிக்கொண்டிருப்பது நான் போட்ட பின்னூட்டத்தினால் வந்த கருத்தாய்வுகள்.///

    நான் இட்ட பின்னூட்டம் ஆலாசியத்தின் பின்னூட்டத்தைக் குறிப்பிட்டு எழுதியது.

    ReplyDelete
  123. வினவு' சில சமயங்லைல் 'வசவு' என்றும் பெயர்கொள்ளும்படி உள்ளது.//

    கிருஷ்ணன் சார், இந்த தளத்தை நானிதுவரை கண்ணால் கூட பார்த்தது கிடையாது. அந்தப் புத்தகத்தில் குறிப்பிட்டிருந்ததை எழுதினேன். எனக்கு இப்போது இருக்கும் நேரமின்மையில் வகுப்பறை தவிர எதையும் படிப்பதில்லை.

    ReplyDelete
  124. மதவாதிகள் போர்வையில் ருத்திராட்சப் பூனைகள் இருப்பது போல பகுத்தறிவாளர்கள் போர்வையில் கபட சுயநலக் கூட்டங்கள் உலாவுவதையும் மக்கள் மறந்துவிடக் கூடாது. இரண்டு பொய் புரட்டுக்காரர்களும் அவரவர் சார்ந்த குலத்தை அழிக்க வந்த கோடாலிக் கம்புகள்.//

    தெளிவான கருத்து தேமொழி! உண்மைதான்.

    ReplyDelete
  125. ///வித்தியாசம் புரிகிறதா?///
    ///மேலும், நான் சான்றோர் இன்னுரை என்று சொன்னது அறவுரை பற்றி.
    நீங்கள் குறிப்பிடும் இரண்டும் ரகசியமாக வைக்க பட வேண்டிய போர் முறை.///

    சுருக்கமாக எனக்குப் புரிந்தது....
    சான்றோரின் அறவுரையாக இருந்தாலும் கூட, ஒரு சிலருக்கு ஒரு சில சிறப்புப் பாடங்கள் "sorry, it's off the limit, not for you" என்று மறுக்கப்படும் என்பது.
    இதற்கு பதிலாக திருவள்ளுவர்தான் அந்த சான்றோர், எல்லோருக்கும் பொது மறை கொடுத்தார் என்று சொல்லியிருந்திருக்கலாம். என்னைபோல ஒரு சிலருக்கு (அவரவர் கண்ணோட்டத்தைப் பொருத்து) அதிலும் உடன்பாடு இல்லாமல் இருக்கிறது.

    பாரதப்போர் பற்றிய விளக்கத்திற்கு நன்றி, மன்னிக்கவும் ...ஆனால் அது தேவையற்றது. நான் புராண நாயகர்களை ஆதரிப்பதுமில்லை, எதிர்ப்பதுமில்லை, புகழ்வதுமில்லை, இகழ்வதுமில்லை. புராணக் கதைகளால் சொல்லப்படும் கருத்துக்களை மட்டும் புரிந்து கொள்வதுடன் சரி. நான் புரிந்து கொண்டதில், குடும்பப் பகையில், சொத்து தகராறில் ஏற்படும் சண்டை சச்சரவுகள் அந்த காலத்திலேயே இருந்திருக்கிறது. அதில் சமபந்தம் இல்லாதவர்கள் கூட உயிரை விட்டிருக்கிறார்கள். தகப்பன் பெயர் தெரியாத குழந்தையாக, யார் பெற்றோர் எனத் தெரியாத குழந்தையாக வளர்ந்த கர்ணன் என்ன மன உளைச்சலுக்கு ஆளானான். இந்தக் கால அரசியல்வாதிகள் இலவசம் தந்து தங்கள் குறைகளை மக்கள் மறக்க மனோதத்துவ ரீதியில் செயல்படுவதை அவனும் செய்திருக்கிறான் என்பதே.

    ReplyDelete
  126. This comment has been removed by the author.

    ReplyDelete
  127. This comment has been removed by the author.

    ReplyDelete
  128. ////thanusu said...
    ஜி ஆலாசியம் said...////எங்கள் வீட்டில் நான் எட்டாவது பிள்ளை......இது தான் எனது அனுபவமும்,... கருத்தும்//////

    ஆலாசியம் அவர்களே "இதுவும் கடந்து போகும்" என்றோரு வாக்கியக் கதை உண்டு,அதைத்தான் நினைவுபடித்தி மனம் கனக்கவைத்தது.ஆனால் நீங்கள் எதையும் கடந்து வருவீர்கள் என்று உங்களின் அனுபவம் சொல்கிறது.

    பழைய பழமொழிதான் இது தான் உங்களுக்கு பொருந்தும்.

    ""கடவுள் நல்லவர்களை சோதிப்பான்,ஆனால் கை விட மாட்டான்."////

    தங்களின் அன்பிற்கும், கனிவிற்கும் மிக்க நன்றி சகோதரரே!

    ReplyDelete
  129. தேமொழி said...// மன்னிக்கவும் ...ஆனால் அது தேவையற்றது//

    ஹ்ம்ம்.... அது உங்கள் அபிப்ராயம்.

    உங்கள் தேவைகளுக்காக மட்டும் நான் இங்கு பின்னூட்டம் போடுவதில்லை :)

    அதாவது, அந்தபின்னூட்டத்தின் மூலம் பிறருக்கு சுவாரஸ்யமானதாக இருக்க கூடிய விஷயங்கள் வெளிப்படலாம். மூவாயிரம் பேர் இங்கு படிக்கிறார்கள். எல்லோரும் பின்னூட்டம் போடுவதில்லை. யாருக்காவது உபயோகப்படட்டும். தேவையற்றது என்று judgemental ஆக இருப்பதை தவிர்க்கலாமே என பணிவன்புடன் வேண்டுகிறேன்.

    குறைந்த பக்ஷம் "தேவை அற்றது என்று கருதுகிறேன்" என சொல்லி இருக்கலாம். ஏதோ இங்கே பின்னூட்டங்களுக்கு நீங்கள் தான் moderator போல தேவை அற்றது என judgement சொல்வது தான் தேவை அற்றது என்பது என் கருத்து. உங்கள் மனம் புண்பட வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. ஆனால் சொல்லவேண்டியது என தோன்றியது.

    ReplyDelete
  130. ///Bhuvaneshwar said... ஏதோ இங்கே பின்னூட்டங்களுக்கு நீங்கள் தான் moderator போல தேவை அற்றது என judgement சொல்வது தான் தேவை அற்றது என்பது என் கருத்து///

    so be it.......என் கருத்து பற்றிய உங்கள் கருத்திற்கு நன்றி, எப்படி கருத்து சொல்வது என்று பயிற்சி வகுப்பில் சேரவேண்டியவர்கள் பட்டியலில் நானும் சேர்ந்திருப்பதில் மகழ்ச்சி.

    ReplyDelete
  131. இன்னொரு உதாரணம் திருநாம பொருத்தம். "திருமண பொருத்தம் பார்ப்பது எப்படி" என்ற பாத்து ரூபாய் குட்டி புத்தகத்தை சுப்பன் டீ கடையில் வாங்கி அதன் படு கலியாணம் பண்ணுவது. அங்கே ஏதாவது கிரக சேர்க்கையால் துன்பம் விளைந்தால் ஜாதகம் பொய் என்று உறுமுவது...... மன்னிக்கவும், ஊளையிடுவது....//

    புவனேஸ்வர், தங்களின் இந்த கமெண்ட் படித்தபோதே இதுபோன்ற வார்த்தைகளைத் தவிர்க்கலாமே என ஒரு பின்னூட்டம் போட நினைத்தேன், பிறகு விட்டுவிட்டேன். இதுபோன்ற வார்த்தைப் பிரயோகங்கள் விவாதத்தை வேறெங்கோ கொண்டுசெல்லவே செய்யும். சற்றே யோசியுங்கள்!

    மிகுந்த யோசனைக்குப் பிறகே இதை எழுதுகிறேன்.

    ReplyDelete
  132. Dear Uma,
    Thanks for your feedback. I appreciate that.

    My wit or sarcasm has never been directed at an individual, unlike some pungent attacks on me that have been rather un-called for.

    A general statement is one thing, and a personal remark/judgement is quite another.

    I am against the latter, not the former.

    Moreover, the comment that you've just mentioned was not decrying any one here but those that abuse astrologers having followed a wrong and rather ill-informed course of action they thought was astrology.

    I am against personal attacks. And I have made none, without a provocation.

    I hope I have made my stance clear here.

    Love,
    Bhuvaneshwar D
    www.bhuvaneshwar.com

    ReplyDelete
  133. There are FEW yet to read or understand what basic courtesy means...so dis-appointed in the last 2-3 day class.

    ReplyDelete
  134. தேமொழிsaid...

    so be it.......என் கருத்து பற்றிய உங்கள் கருத்திற்கு நன்றி, எப்படி கருத்து சொல்வது என்று பயிற்சி வகுப்பில் சேரவேண்டியவர்கள் பட்டியலில் நானும் சேர்ந்திருப்பதில் மகழ்ச்சி.////

    SO impressive AKKA...

    ReplyDelete
  135. Please, everybody should understand this platform is just to read, share and ofcourse to gain knowledge however we don't want anybody to express their supreme intensity.,I hope Vaathiyar will take necessary actions.

    ReplyDelete
  136. I agree with Mr. Pandian totally.
    This should be a place where we share knowledge and make friends. Not a place to flaunt and taunt others esp. new comers.

    PS: I did not attack anyone first. I was unnecessarily attacked by a gentleman here.

    If exchange of views is to be considered a fight then I don't know what a fight really is.

    Take it easy guys.

    ReplyDelete
  137. Anyways,

    I don't keep acrimonies in my heart.

    If anyone thinks I had offended them, please accept my apologies.

    Take care!

    Love,
    Bhuvaneshwar D

    ReplyDelete
  138. Wherever I go, I end up in fight/argument or others come to fight with me. Jaathaga visheshamo?

    12 la Saturn + Maandhi! Saturn is my 2nd and 3rd house Lord.

    ReplyDelete
  139. ////Uma said... வேறு சிலவற்றைத் தெரிந்து கொள்ளும் ஆர்வம், அவை தொடர்பான அரைவேக்காட்டு ஆராய்ச்சிகள், சுயபரிசோதனை எனக் கவனம் திரும்பிவிட்டது...///

    உமா, ஒய்ஜா பலகை வைத்து ஆராய்ச்சியைத் தொடர்கிறீர்களோ... என்ன கண்டுபிடித்தீர்கள் என தெரிந்து கொள்ள ஆவல் :))

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com