மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

17.5.12

Astrology பெயர்ச்சியால் வளர்ச்சியா அல்லது தளர்ச்சியா?

  


Astrology பெயர்ச்சியால் வளர்ச்சியா அல்லது தளர்ச்சியா?

இன்று குரு பெயர்ச்சி! குரு பகவான் மூட்டை முடிச்சுக்களுடன் மேஷ ராசியிலிருந்து ரிசப ராசிக்கு பெயர்ச்சியாகிறார். நாம் வீடு மாறும்
போதுநமக்கு Packers and movers ஆட்களின் உதவி தேவை.
குரு பகவானுக்கு அதெல்லாம் தேவையில்லை.

வாக்கிய பஞ்சாங்கத்தின்படி, குரு பகவான் மே 17ஆம் தேதி மாலை 6.25மணிக்கு, மேஷ ராசியில் இருந்து ரிஷபத்திற்கு பெயர்ச்சியாகிறார்.
2013ஆம் ஆண்டு மே 27ம்தேதி வரை அந்த ராசியில் அவர் சஞ்சாரம்
செய்வார்

ஒரு ரவுண்டடிப்பத்ற்கு (அந்த ரவுண்ட் அல்ல) குரு பகவானுக்கு
12 ஆண்டுகள் ஆகும். ஒரு ராசியில் அவர் இருக்கும் காலம்
ஒரு ஆண்டு.  12 நாட்களுக்கு ஒரு பாகை வீதம் 30 பாகைகளை
அவர் கடந்து செல்வதற்கு 360 நாட்கள் ஆகும்.

உட்கார்ந்திருக்கும் ராசியைவிட அவர் பார்க்கும் ராசிகளுக்கு பலம் அதிகம். நன்மைகள் அதிகம்.



ரிசபத்தில் இருந்து  ஐந்தாம் பார்வையாக கன்னி ராசியையும், ஏழாம் பார்வையாக விருச்சிக ராசியையும், ஒன்பதாம் பார்வையாக மகர ராசியையும்அவர் பார்க்கின்றார். அந்த மூன்று ராசிக்காரர்களுக்கும் ஒரு ஆண்டு காலத்திற்கு எல்லாம் கூடி வரும். தேடி வரும். நாடி வரும்
ஓடி வரும். பாடிவரும்.

அதுபோல மேஷ் ராசிக்காரர்களுக்கு குரு பகவான் இரண்டாம் இடத்திற்கு வருகிறார். கடக ராசிக்காரகளுக்கு 11ஆம் இடத்திற்கு வருகிறார்
அவ்விரு ராசிக்காரர்களுக்கும் நன்மையான பலன்களே நடைபெறும்!

ராசி அல்லது லக்கினத்தைக் குரு பகவான் பார்க்கும் போதுதான் ஒருவருக்கு திருமண யோகம் உண்டாகும். அதைத்தான் வியாழ நோக்கம்
என்பார்கள். நோக்கம் என்றால் இங்கே பார்வை என்று பொருள் கொள்க!

இந்த ராசிக்காரர்களுக்கு திருமணம் ஆகாதவர்களுக்கு இந்த ஆண்டு திருமணம் நடைபெறும். திருமணம் ஆனவர்களுக்கு மனைவியின் அன்பும்,
பரிவும், (கண்) பர்ர்வையும் தூக்கலாக இருக்கும். வயதான டிக்கெட்டுகளுக்கு மனைவியின் உபசாரம் கண்களைப் பனிக்க வைக்கும் அளவிற்கு
அதிகமாக இருக்கும். குழந்தைப்பேறு, வீடு, வாசல் சேர்க்கை முதலியன கிட்டும். வங்கி இருப்பு வியக்கும் வண்ணம் அதிகரிக்கும். மொத்தத்தில்
சாதனா சர்க்கத்தின் குரலில் லல லல்ல்ல் லா...லல லல்ல்ல் லா.. ஒலித்துக்கொண்டே இருக்கும்.

திரும்ணத்திற்காகக் காத்திருப்பவர்களின் காதில் ஒலிக்கும் பாடல்

தம்தன தம்தன தாளம் வரும் புது ராகம் வரும்
அதில் சந்தன மல்லிகை வாசம் வரும்
மணமாலை வரும் சுபவேளை வரும்

திரும்ணமானவர்களின் காதில் ஒலிக்கும் பாடல்

சில்லென மெல்லிய தென்றலும் வந்திசை சொல்லியது
சுவை அள்ளியது மனம் நில்லென சொல்லியும் துள்ளியது

இந்த ஐந்து ராசிக்காரர்களும் ஒரு ஆண்டிற்கு ஜமாய்க்கலாம்!
++++++++++++++++++++++++++++++++++++
மற்ற ஏழு ராசிக்காரர்களில், ரிஷபம் (1ல் குரு), சிம்மம் (10ல் குரு), துலாம் (8ல் குரு). ஆகிய மூன்று ராசிக்காரர்களுக்கும், காரியத்தடைகள்,தாமதம்,  எதிலும் ஒரு தடங்கல், எதையும் ஒன்றுக்கு இரண்டு முறை செய்ய வேண்டிய சூழ்நிலை ஆகியவைகள் இருக்கும். சலிப்பு மேலோங்கிஇருக்கும்

மிதுனம் (12ல் குரு), தனுசு (6ல் குரு), கும்பம் (4ல் குரு), மீனம் (3ல் குரு) ஆகிய ராசிக்காரர்களுக்கு சுமாரான பலன்களே கிடைக்கும்.அவற்றையும் க்யூவில் நிறு பெற வேண்டிய சூழ்நிலை இருக்கும்
++++++++++++++++++++++++++++++++++++

டானிக் (பரிகாரம்) 1

உங்களுக்கு நடக்கும் தசா புத்தியைப் பாருங்கள். நல்ல தசாபுத்தி நடந்துகொண்டிருந்தால், இந்தக் கோள்சாரங்கள் ஒன்றும் செய்யாது. ஒதுங்கி வழி விட்டு விடும். நெடுஞ்சாலையில் டிப்பர் லாரிக்காரனுக்கு வழிவிட்டு ஒதுங்கும் கார்க்காரனைப் போல அவைகள் ஒதுங்கிவிடும்.

டானிக் (பரிகாரம்) 2

அஷ்டவர்க்க சூரணம் 337 சரக்கை வாங்கி வைத்துக்கொண்டு
தினமும் இரண்டு லார்ஜ் (ராவாக) அடித்துவிட்டு
ஒரு ஆண்டு பொழுதை  ஓட்டி விடுங்கள்!

வாத்தியாருக்கு லார்ஜ் அடிக்கும் பழக்கம் கிடையாது. உங்களுக்காக உங்கள் மொழியில் சொல்லியிருக்கிறார். அப்போதுதானே நன்றாக விள்ங்கும்
சாமிகளா!

அன்புடன்
வாத்தியார்

-------------------------------

 Transit Guru on 17.5.2012

 Transit Guru as on 11.5.2012 (one week prior to the change of house
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
இன்றைய பொன்மொழி:

You can not rub anybody, without getting yourself rubbed
- Swami Dhayanadha Saraswathi

வாழ்க வளமுடன்!

42 comments:

  1. குருவிற்கு வணக்கம்

    காரியத்திற்கு ஏற்றல் போல்

    குருவின் பார்வை எனக்கில்லை

    அருமையான பொன்மொழி

    குருஅருளும் திருஅருளும் என்றுகிடைக்குமோ?
    நன்றி

    ReplyDelete
  2. குருவே சரணம். தெய்வம் கோபித்துக் கொண்டால் குரு நம்மைக் காப்பாற்றுவார். குருவானவர் கோபித்துக் கொண்டால் தெய்வத்தாலும் நம்மைக் காப்பாற்ற முடியாது என்றொரு பிரபலமான வாக்கியம் உண்டு. குருவருள் இருந்தால் திருவருள் கிட்டும்.

    'எழுத்தறிவித்தவன் இறைவன் ஆகும்' என்பது முதுமொழி. குருவும் இறைவனும் ஒருவரே. வாழ்வியல் உண்மைகளை நமக்குக் கற்றுக் கொடுப்பவர் குருஸ்தானம் வகிக்கிறார். வகுப்பறையின் குரு(வாத்தியார்)வுக்கு பணிவான வணக்கங்கள்.

    ReplyDelete
  3. ஐயா! வணக்கம்.

    இதை போகி என்னத்த சொல்ல என்று நினைத்தேன் . ஐயா வலையில் ஈற்றியதனால் கூற வந்த அனைத்தினையும் கூறுகின்றேன்.

    சொந்தங்களாக வந்த அவர்கள் கேரளத்து பெண்மணிகளின் மேலே இருந்த மோக அல்லது காம இச்சையால் பொன் பொருள் அனைத்தினையும் அந்த பெண்மணிகளிடம் கொடுத்து விட்டு தாத்தாயுடைய அப்பாவை கடன் ஆழியாக ஆக்கி விட்டு வாசுதேவநல்லூர் க்கு சென்று விட்டனர் முழு வியாபாரமும் மூடும் அளவிற்கு ஆளாக்கி விட்டு விட்டனர் ஐயா .

    பக்கத்துக்கு வீட்டில் இருந்து குடிக்க தண்ணிர் கூட கொடுத்தால் வாங்கி குடிக்காத என்னுடைய முப்பாட்டனார்
    மற்றவர்களிடம் கடன் வாங்கும் அளவிற்கு ஆளாகி விட்டார் .

    அவருக்கு இரண்டு ஆண் , ஒரு பெண்ணு , பெண்ணை கல்யாணம் செய்து கொடுத்து விட்டு தனக்கு ஏற்பட்ட நிலைமையை நினைத்து நினைத்து விரைவில் இறந்து விட்டார்.

    என்னுடைய்ய தாத்தா மற்றும் அவருடைய தம்பியை காப்பாற்ற வேண்டி என்னுடைய தாத்தா உடைய அம்மா ! செங்கோட்டையில் இருந்து (எட்டு கிலோ மீட்டர் போக மட்டும் ) ஆரின்காவுக்கு நடந்தே சென்று மண் சுமந்து அன்று கிடைத்த பணத்தை கொண்டு

    (அந்த காலத்தில் ரயில்வே பாதைக்கு அதாவது செங்கோட்டையில் இருந்து இன்றைய கொல்லம் வரைக்கு ரயில்வே வேலை நடந்து உள்ளது பாதைக்கு மண் செமந்து )

    மற்ற இரண்டு பிள்ளைகளையும் ஒரு அளவிற்கு ஆளாக்கி விட்டு விட்டு கொள்ளு ஆச்சியும் சென்று விட்டார் . இதனில் முப்பாட்டனார் முதல் அனைவரும் கல்வி கற்றவர்கள் .இதனில் ஆச்சி மார்களும் அடங்கும்.

    இதனில் என்னுடைய தாத்தா உடைய அம்மா பெயர் அண்ணாமலை அவர்கள் எதனால் இப்படி ஆகிவிட்டது என்பதனை அறிய வேண்டி ஜோதிடம் கற்று ஜோதிடத்தில் மிகவும் நிபுணத்துவம் அடையும் அளவிற்கு உயர்ந்து விட்டார்.

    என்னுடைய தாத்தா! அம்மாவிடம் இருந்து ஜோதிடத்தின் மேல் இருந்த காதலால் துல்லியமாக ஜாதகம் பார்த்து கூறும் அளவிற்கு தேயர்ட்சி பெற்றவர். வேறு சிலர் தங்களை போல குணம் உள்ளவர்களிடமும் சென்று மென்மேலும் ஞானத்தை வளர்த்து கொண்டு விட்டார்.

    அந்த காலத்திலையே sslc ( பத்தாம் வகுப்புவரைக்கும்) இங்கிலீஷ் மீடியத்தில் படித்தவர். மிகவும் கோபக்காரர் ஆன குணம் உள்ளவர் ஆகி உள்ளார். அந்த காலத்தில் ஒன்றுக்கு மூன்று அரசு வேலையில் சிறிது காலம் இருக்க , பின்னர் அடுத்த வேலை, பின்னர் அடுத்த வேலை என அனைத்து வேலையையும் விட்டு விட்டு கடைசியில் கொத்தனார்
    வேலைக்கு போகும் அளவிற்கு அவரையே அவர் ஆளாக்கி கொண்டு உள்ளார் . இதற்க்கு பெயர் தான் விதி என்பதோ ஐயா.

    என்னுடைய தாத்தாவிற்கு மூன்று ஆண்குழந்தைகள் . என்னுடைய அப்பாதான் மூத்தவர் . sslc வரை மலையாள மீடியத்தில் படித்தவர் . பின்னர் சென்னைக்கு சென்றார் இராணுவத்தில் வேலை கிடைத்த பின்னர் தாத்தாவின் பொருளாதாரம் சற்று உயர்ந்து உள்ளது. ஆனால் தாத்தாவிற்கு சிறிதும் பிடிக்கவில்லை மகன் இராணுவத்தில் வேலை பார்ப்பது . வேலையை விட்டு வா உன்னை வாத்தியார் வேலைக்கு படிக்க வைக்கின்றேன் என்று கெஞ்சி உள்ளார் . ஏனெனில் தாத்தாவிற்கு நிறைய குழந்தை பிறந்து ஒன்றும் தங்காமல் போனதினால் ( என்னுடைய தகப்பனார் மேல் உள்ள அதிகமான பாசத்தினால்) கெஞ்சி கூத்தாடியும் உள்ளார் . ஆனால், என்னுடைய தந்தையோ சுயகாலில் தான் நிற்பேன் என்று 21 வருஷம் வரைக்கு இரானுவதிலையே இருந்து விட்டு வந்தவர்.

    என்னுடைய தாத்தா அவருடைய ஜோதிட குருநாதரிடம் சென்று என்னுடைய அப்பாவை மிலிடரி வேலையைவிட்டு வருவதற்கு ஏதாவது பரிகாரம் உண்டா எனவும் கேட்டும் உள்ளார் .அதற்க்கு விதி அவ்வாறு உள்ள பொழுது எப்படி மாற்ற முடியும் என்று கூறி உள்ளார்.

    ReplyDelete
  4. ஐயா, வணக்கம்

    எனக்கு சிம்ம ராசி மகம் நட்சத்திரம் இந்த குரு பெயர்ச்சி எப்படி இருக்கும் ?

    சிம்ம ராசியில் 10ல் குரு வருவதால்

    இருக்கும் வேலையை விட்டு விட்டு நான் வெளிநாடு வேலைக்கு போகலாமா? இல்லை தற்போதைய வேலையை பார்ப்பது நல்லதா ?

    ReplyDelete
  5. ///திருமணம் ஆனவர்களுக்கு மனைவியின் அன்பும்,
    பரிவும், (கண்) பர்ர்வையும் தூக்கலாக இருக்கும். வயதான டிக்கெட்டுகளுக்கு மனைவியின் உபசாரம் கண்களைப் பனிக்க வைக்கும் அளவிற்கு அதிகமாக இருக்கும்.///

    Point noted.....
    "உபசாரம் கண்களைப் பனிக்க வைக்கும்?" ம்...ம்...ம்...இதை சரியாக புரிஞ்சுகிட்டேன்னு நினைக்கிறேன் .....
    கவனிக்க வேண்டிய விதத்தில நல்லாவே கவனிச்சுடலாம்னு முடிவு பண்ணியாச்சு...
    (கவனிக்கவும் ... இதில் எந்த உள்குத்தும் இல்லை, வெள்ளந்தியாக சொன்னது)
    நன்றி, ஐயா

    வாத்தியாருக்கு குரு வணக்கங்களை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

    ReplyDelete
  6. இன்றைய பொன்மொழி:
    You can not rub anybody, without getting yourself rubbed
    - Swami Dhayanadha Saraswathi

    So..Don't Rub It the Wrong Way

    ReplyDelete
  7. குரு பெயர்ச்சி என்றதும் கீழே உள்ள பழைய விருத்தம் ஞாபகத்திற்கு வந்தது.

    "ஜென்ம ராமர் வனத்தினிலே சீதையை சிறை வைத்ததும்
    தீதிலாதொரு மூன்றிலே துரியோதனன் படை மாண்டதும்
    இன்மையெட்டினில் வாலி பட்டமிழந்து போம்படியானதும்
    ஈசனாரொசூ பத்திலே தலையோட்டிலே யிரந்துண்டதும்
    தர்மபுத்திரர் நாலிலே வனவாசமப்படி போனதும்
    சத்திய மாமுனி யாறிலே யிருகாலிலே தலை பூண்டதும்
    வன்மையற்றிட ராவணன் முடி பன்னிரண்டினில் வீழ்ந்ததும்
    மன்னுமா குருசாரி மாமனே வாழ்விலா துனதுமென்பவே.'

    இந்த பாடலில் கோச்சார குருவின் 1,3,4,6,8,10,12 ஆகிய இடங்களின் சஞ்சாரத்திற்கு கொடுக்கப் பட்டிருக்கும் பலன் சற்று அதிகமாகதான் படுகிறது. எனினும் தன் பார்வையினால் அதிக நன்மை செய்வார் என்பதை மட்டும் எடுத்துக் கொள்வோம். இந்த பெயர்ச்சியின் மூலம் குரு எனது ராசிக்கு 11ல் இருந்து 12ம் இடத்திற்கு செல்கிறார்.

    ReplyDelete
  8. இப்பம் என்னுடைய கேள்விக்கு வருகின்றேன் ஐயா!

    முன்னரும் கூறி உள்ளேன் இப்பொழுது கூறுகின்றேன் , எனது அப்பா வீட்டில் ஒன்னும் கிடையாது . ஆனால் அம்மா வீட்டில் எல்லா வசதி வாய்ப்பு உண்டு.

    நான் பிறந்த மூன்றாவது மாதத்தில் அம்மாவோடையை அம்மா தென்காசியில் அப்பொழுது இருந்த பெரிய சோதிடரும் ( 34 வருசத்திற்கு முன்னர் ஒரு ஜாதகம் பார்க்க Rs = 10.00. ஜாதகம் பார்த்த பொழுது சொன்னாராம் . இவனுடைய ஜாதகம் நல்ல ஜாதகம். ஜாதகம் ஆனது இப்படியாவது இருக்க வேண்டும் என்றாராம்.

    மெயின் பாய்ந்க்கு வருகின்றேன் .
    என்னுடைய ஜாதகத்தை மற்றும் எடுத்து கொண்டு பார்த்து உள்ளார்கள் மேலே கூறிய ஜோதிடரீம் பார்த்ததிற்கு இந்த ஜாதக கார பையனின் தந்தை ஒரு ஜமிந்தார் போல இப்பம் எல்லா வசதியுடன் ஆள்கள் படை சூழ இருக்கவேண்டுமே என்று.

    மேலே கூறிய ஜோதிடர் போல தான் வட இந்தியாவில் ஹவில்தார் மேஜர் ஆக இருந்தவரிடம் ஒரு கண்ட்ரோல் மென்ட் டையே கொடுத்து உள்ளார்கள் . அதற்க்கு உரிய ஆபீசர் வரும் வரைக்கு பார்த்துக்கொள்ள வேண்டி வருடங்கள் 4 ஆகியும் ஒருவரும் வராததை பார்த்த பின்னர் தானாகவே வேறு இடத்திற்கு சென்று விட்டார்கள் . ( வெளியில் இருந்து வந்து போகும் ஆபீசருக்கு எல்லா செலவையும் தன்னுடைய பணத்தில் இருந்து கொடுக்க வேண்டியதனால் வேறு இடத்திக்கு என்னுடைய தந்தையாரின் பதவிக்கி ஏற்றார் போல சென்று விட்டார்கள் பணம் ஒன்னும் சேமிக்க முடியாமல் போனதினால் )

    மேலே கூரியவற்றிக்கு வாத்தியார் ஐயா தக்க பதில் கூற வேண்டும் என்று வேண்டி விரும்பி kedduk

    கிட்டதட்ட 45 வருடத்திற்கு முன்னர் என்னுடைய தாய் தகப்பனாருக்கு கல்யாணம் ஆகி நான்கு மாதத்தில் என்னுடைய அம்மா கற்பம் தரித்து உள்ளார் . ஆனால் நான்கு மாதத்திலையே கருவானது அழிந்து விடும் என்று என்னுடைய தகப்பனார் ஜாதகத்தை பார்த்து கடிதம் எழுதி போட்டு உள்ளார் என்னுடைய தாத்தா ஐயா!


    தாத்தா கூறியது போல 45 வருடத்திற்கு முன்னர் இன்றைய பூனாவில் உள்ள ஆஸ்பத்திரியில் கரு கலைந்து நான்கு வாரம் ஆஸ்பத்திரியில் தங்கி குணம் ஆகி வந்து உள்ளார் என்னுடைய அம்மா ஐயா!

    மேலும் என் தகப்பனார் ஜாதக படி ஆண்வாரிசிக்கு மிகவும் வாய்ப்பு இல்லாமல் உள்ளது . இராமேஸ்வரம் சென்று காராம் பசு வாங்கி தானம் செய்து வந்தால் ஆண்வாரிசு கிடைக்க வாய்ப்பு உள்ளது . ஆனால் நான் சொன்னாள் முரட்டு பிடிவாதம் பிடிப்பானே என்ன செய்வது என்று எனக்கே தெரியவில்லை என்று தாத்தா கண்ணிர் வடித்து உள்ளார் ஐயா!.

    அம்மா வயிற்றில் எனக்கு முன்னர் கரு உற்றது ஐந்து ஜீவன்கள் பின்னர் ஒரு தானமும் செய்யாமலே நான் ஜனித்தது ஆறாவதாக! இதனில் ஒன்று நான்கு மாதத்தில் வயிற்றில் உள்ள பொழுது இறந்து போனது, அடுத்த ஒரு அக்கா எனக்கு நேரே மூத்தது சில வருடம் கழித்து மேலே போகிவிட்டது.

    இதனில் கிராமத்தில் ஒரு பழம் சொல் உண்டு . அது என்ன வென்றால்!, ஐந்தாவது பிள்ளை ஆண் ஆக இருந்தாலும் ஆகாது என்று . பிறக்க போறது ஆணே ஆனாலும் ஆகாதே என்று முதலில் இங்கிலீஷ் மெடிசின் மாத்திரையை சாப்பிட்டு உள்ளார்கள் , பின்னர் சமையலுக்கு பயன்படுத்தும் கடுகையும் சாப்பிட்டு உள்ளாகள் அதனையும் மீறி சித்திரை 31 விடிந்தால் வைகாசியில் நான் ஜனனம் ஆனது.

    என்னுடைய தாத்தா கூறியதில் சில!.

    ௧. என்னுடைய தந்தையார் 58 ல் மரணம் அடைவார் என்பது.

    ௨. எனக்கு மூன்று ஆண்மக்கள் உள்ளது ஆனால், உயிர் போகும் பொழுது ஒரு வாய் தண்ணிர் கொடுத்து தகப்பனை வழி அனுப்ப ஒரு பிள்ளை கூட என்னுடன் இருக்காது என்பது.

    ௩. செங்கோட்டையில் உள்ள சில நாத்திக வாதிகள் கேட்டு உள்ளனர் நீர் பெரிய ஜோதிடர் என்று எல்லோரும் கூறுகின்றனரே எங்கே பார்க்கலாம் எப்பம் மழை வரும் என்று கூறும் பார்க்கலாம் என்ற வுடன் பஞ்சாகத்தை எடுத்து இந்த நாள் , இத்தனை மணிக்கி மழை வரும் என்று கூறிய படி அந்தநாளில் பெரும் மழை வந்ததாக இன்றும் கூட செங்கோட்டையில் உள்ளவர்கள் கூறுவார்.

    ௪. பேரன் பேத்திகள் கூட கொஞ்சி விளையாடவேண்டும் என்பது எனக்கு மிகவும் ஆசை ஆனால் எனது ஜாதக அமைப்பு படி எனக்கு அந்த பாக்கியம் கிடையாது என்று கூறி உள்ளார். எனது அம்மா மிகவும் வசதியான குடும்பத்தில் பிறந்து விட்டு என்னுடைய தந்தையின் மிலிடரி பணத்தை வைத்து கொண்டு ஆறு ஜீவன்களின் சாப்பாடிர்க்கே கஷ்டம் படுவதை பார்ப்பதை விட அப்பா வீட்டிற்க்கே செல்லுவது தான் ஒரே தீர்வு சென்று விட்டார்.

    ௫. மூன்று மகன்களில் மூத்தவன் லட்சாதிபதியாக இருப்பான் ஆனால் கஷ்டபடுவான்

    ௬ . இரண்டாவன் எல்லோரையும் போல வாழ்வான்
    ௭. மூன்றாது உள்ளவனிடம் எல்லோரும் கைகட்டி நிற்கும் அளவிற்கு மிகவும் சிறப்பாக இருப்பான் என்பது ஆகும். தலைமை செயலகத்தில் நல்லதொரு பதவியில் உள்ளார்கள். அவர்களை பார்க்க வருபவர்கள் எல்லாம்.MBBS, MD, MS ............be coz health and welfer dept ஆகும்.

    இன்னும் நிறைய சொல்லலாம்.

    ReplyDelete
  9. அதுபோல மேஷ் ராசிக்காரர்களுக்கு குரு பகவான் இரண்டாம் இடத்திற்கு வருகிறார். கடக ராசிக்காரகளுக்கு 11ஆம் இடத்திற்கு வருகிறார்
    அவ்விரு ராசிக்காரர்களுக்கும் நன்மையான பலன்களே நடைபெறும்!

    ராசி அல்லது லக்கினத்தைக் குரு பகவான் பார்க்கும் போதுதான் ஒருவருக்கு திருமண யோகம் உண்டாகும். அதைத்தான் வியாழ நோக்கம்
    என்பார்கள். நோக்கம் என்றால் இங்கே பார்வை என்று பொருள் கொள்க!///////////

    நமக்கு மேஷ ராசி வாத்தியார் அய்யா...

    ReplyDelete
  10. திருமணம் ஆனவர்களுக்கு மனைவியின் அன்பும்,
    பரிவும், (கண்) பர்ர்வையும் தூக்கலாக இருக்கும். ///////////


    ஹி...ஹி...ஹி...

    ReplyDelete
  11. ராசி அல்லது லக்கினத்தைக் குரு பகவான் பார்க்கும் போதுதான் ஒருவருக்கு திருமண யோகம் உண்டாகும். அதைத்தான் வியாழ நோக்கம்
    என்பார்கள். நோக்கம் என்றால் இங்கே பார்வை என்று பொருள் கொள்க!///////////


    எனக்கு விருச்சிக லக்னம் வாத்தியார் அய்யா...நேரடிய பாக்குறார் நம்ம குரு பகவான்...

    ஒரு கொண்டாட்டம் தான்னு நினைகிறேன்...

    ReplyDelete
  12. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  13. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  14. ////Blogger Udhaya Kumar said...
    குருவிற்கு வணக்கம்
    காரியத்திற்கு ஏற்றல் போல்
    குருவின் பார்வை எனக்கில்லை
    அருமையான பொன்மொழி
    குருஅருளும் திருஅருளும் என்றுகிடைக்குமோ?
    நன்றி////

    நேரம் வரும்போது தன்னிச்சையாக எல்லாம் கிடைக்கும்! பொறுமையோடு இருங்கள்!

    ReplyDelete
  15. /////Blogger Parvathy Ramachandran said...
    குருவே சரணம். தெய்வம் கோபித்துக் கொண்டால் குரு நம்மைக் காப்பாற்றுவார். குருவானவர் கோபித்துக் கொண்டால் தெய்வத்தாலும் நம்மைக் காப்பாற்ற முடியாது என்றொரு பிரபலமான வாக்கியம் உண்டு. குருவருள் இருந்தால் திருவருள் கிட்டும்.
    'எழுத்தறிவித்தவன் இறைவன் ஆகும்' என்பது முதுமொழி. குருவும் இறைவனும் ஒருவரே. வாழ்வியல் உண்மைகளை நமக்குக் கற்றுக் கொடுப்பவர் குருஸ்தானம் வகிக்கிறார். வகுப்பறையின் குரு(வாத்தியார்)வுக்கு பணிவான வணக்கங்கள்.//////

    சுபகிரகமான குரு பகவானுக்கு வணக்கம் சொன்னால் போதும் சகோதரி! கோள்சாரம் எதுவுமின்றி நான் உங்களோடு (மாணவர்களோடு) எப்போதும் இருப்பவன்!

    ReplyDelete
  16. /////Blogger arul said...
    superb post////

    நல்லது. நன்றி!

    ReplyDelete
  17. ////Blogger latestcinema said...
    ஐயா, வணக்கம்
    எனக்கு சிம்ம ராசி மகம் நட்சத்திரம் இந்த குரு பெயர்ச்சி எப்படி இருக்கும் ?
    சிம்ம ராசியில் 10ல் குரு வருவதால் இருக்கும் வேலையை விட்டு விட்டு நான் வெளிநாடு வேலைக்கு போகலாமா? இல்லை தற்போதைய வேலையை பார்ப்பது நல்லதா ?//////

    இருக்கும் வேலையை யாராவது விடுவார்களா? அதுவும் கோள்சாரம் கட்டையோடு நிற்கும்போது!

    ReplyDelete
  18. /////Blogger தேமொழி said...
    ///திருமணம் ஆனவர்களுக்கு மனைவியின் அன்பும்,
    பரிவும், (கண்) பர்ர்வையும் தூக்கலாக இருக்கும். வயதான டிக்கெட்டுகளுக்கு மனைவியின் உபசாரம் கண்களைப் பனிக்க வைக்கும் அளவிற்கு அதிகமாக இருக்கும்.///
    Point noted.....
    "உபசாரம் கண்களைப் பனிக்க வைக்கும்?" ம்...ம்...ம்...இதை சரியாக புரிஞ்சுகிட்டேன்னு நினைக்கிறேன் .....
    கவனிக்க வேண்டிய விதத்தில நல்லாவே கவனிச்சுடலாம்னு முடிவு பண்ணியாச்சு...
    (கவனிக்கவும் ... இதில் எந்த உள்குத்தும் இல்லை, வெள்ளந்தியாக சொன்னது)
    நன்றி, ஐயா
    வாத்தியாருக்கு குரு வணக்கங்களை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்./////

    குரு பகவானுக்குச் சொன்னால் போதும்!

    ReplyDelete
  19. Blogger தேமொழி said...
    இன்றைய பொன்மொழி:
    You can not rub anybody, without getting yourself rubbed
    - Swami Dhayanadha Saraswathi
    So..Don't Rub It the Wrong Way//////

    even in the right way!:-)))))

    ReplyDelete
  20. ////Blogger ananth said...
    குரு பெயர்ச்சி என்றதும் கீழே உள்ள பழைய விருத்தம் ஞாபகத்திற்கு வந்தது.
    "ஜென்ம ராமர் வனத்தினிலே சீதையை சிறை வைத்ததும்
    தீதிலாதொரு மூன்றிலே துரியோதனன் படை மாண்டதும்
    இன்மையெட்டினில் வாலி பட்டமிழந்து போம்படியானதும்
    ஈசனாரொசூ பத்திலே தலையோட்டிலே யிரந்துண்டதும்
    தர்மபுத்திரர் நாலிலே வனவாசமப்படி போனதும்
    சத்திய மாமுனி யாறிலே யிருகாலிலே தலை பூண்டதும்
    வன்மையற்றிட ராவணன் முடி பன்னிரண்டினில் வீழ்ந்ததும்
    மன்னுமா குருசாரி மாமனே வாழ்விலா துனதுமென்பவே.'
    இந்த பாடலில் கோச்சார குருவின் 1,3,4,6,8,10,12 ஆகிய இடங்களின் சஞ்சாரத்திற்கு கொடுக்கப் பட்டிருக்கும் பலன் சற்று அதிகமாகதான் படுகிறது. எனினும் தன் பார்வையினால் அதிக நன்மை செய்வார் என்பதை மட்டும் எடுத்துக் கொள்வோம். இந்த பெயர்ச்சியின் மூலம் குரு எனது ராசிக்கு 11ல் இருந்து 12ம் இடத்திற்கு செல்கிறார்.//////

    இதுபோன்ற பாடல்கள் புலிப்பாணியாரின் நூல்களிலும் உள்ளது. பகிர்விற்கு நன்றி ஆனந்த்!

    ReplyDelete
  21. ஐயா!

    தங்களுடைய வகுப்பறையில் என்னுடைய ஜாதகத்தையே தந்து உள்ளேன் . ஜோதிடத்தில் ஆராட்சி படிப்பு படிக்கும் எண்ணம் உள்ளவர்கள் என்னுடைய ஜாதகத்தை உதாரணதிற்கு எடுத்து கொள்ளட்டும் என்ற ( என்னுடைய எண்ணம் ) எண்ணத்தில் தான் .

    தேவர் மகன் படத்தில் ஒரு அருமையான வசனம் வரும் , அது என்னவென்றால் நடிப்பு திலகம் உயர் திரு சிவாஜி கணேசன் அவர்கள் கூறுவார்கள் தன்னுடைய மகனான கமலஹாசனிடம்

    " வாழ்வது முக்கியம்"! தான் ஆனால் மற்றவருக்கு

    " பயன் உள்ள வாழ்க்கையாக வாழ்வதுதான் எல்லாவற்றிலும் மேன்மை"! என்பது .

    மேலே கூறிய வசனம் எனக்கு மிகவும் பிடித்தது ஆகும் ஐயா!

    கடந்த இரண்டு தினமாக யான் கூறியுள்ள கருத்து ஆனது என்னுடைய குடுப்பதை பற்றியது .

    இப்பொழுது இல்லை சில வருடங்களுக்கு முன்னர் அடியவன் ஜனித்த அனைத்து விபரத்தையும் வகுப்பறையில் கூறி உள்ளேன்.

    இதற்க்கு முக்கியமான காரணம் ஜோதிடம் பொய் என்னும் கூறும் ஆத்மாவிற்கு வேண்டி ஆகும்.

    மேலும் இறைவன் மேல் பக்தி இல்லாதவருக்கு மண்டையில் சிறிது அளவாவது ஏறட்டும் என்று தான்.

    வாத்தியாருக்கு என்னுடைய கேள்வி ?

    ௧. தாங்கள் கூருகின்றிர்கள் 12 வயதிற்கு மேல் தான் குழந்தைக்கு சொந்த ஜாதகம் வேலை செய்யும் என்பது.

    ௨. மேலே கூறிய தென்காசி ஜோதிடர் கூறி உள்ளார் அடியவன் பிறந்த யோகத்தில் தான் இவனுடைய தந்தைக்கு ஜமிந்தார் போல இருப்பதற்கு யோகம் வந்தது என்பது.

    ஆதாரம் புதன் திசை இருப்பு நான்கு வருடம் , பதினோரு மாதம், நாட்கள் மறந்து விட்டது . பதினோரு நாள் என்று நினைக்கின்றேன்.

    ௩. எனக்கு மூத்ததோ அல்லது இளையதோ ஆண் வாரிசு ஆக இருக்க கூடாது என்பது ஆகும் . அப்படியே இருந்தாலும் அவர்களுக்கு தான் பெரும் பிரச்சனை வரும் என்பது ஆகும் .

    ௪. கேரள ஜோதிடர்கள் மற்றும் கேரளாவில் உள்ள அனைத்து மதத்தினரும் கூற கேட்டு உள்ளேன் பொதுவான ஒரு கருத்து அது என்ன வென்றால் ஆயில்ய நட்சத்திரத்தின் பக்கத்தில் உள்ளவருக்கு ஆகாது என்பது ஆகும் . ( நின்னை தொட்டடுத்து உள்ளவரின் காரியம் போக்குதான் ) என்பது.

    ௪. எனக்கு இளையது பெண்ணாக இருந்தாலும் என்னுடைய ஜாதகத்தின் படி நல்ல வாழ்க்கை அமையாது என்பது ஆகும் .

    இது உண்மையிளையும் பெரிய உண்மை . ஏனெனில், கல்யாணம் செய்து கொடுத்த வீடு எனது தங்கை இருக்கும் கிராமதிலையே பெயர் வாங்கிய குடும்பம். ஆனால். தங்கையின் மாப்பிளையோ ஊதாரி தனமானவராக வந்து அமைந்து விட்டார். ( இரண்டு ஆண் குழந்தைகைகள் உள்ளன ) எல்லோரும் ரத்த கண்ணிர் வடிக்கின்றோம் தெரியாத்தனமாக கொடுத்து விட்டமே என்று .

    ஐயாவின் பதிலுக்காக

    அன்பு மாணவன்

    மாயக்கண்ணா !

    என்னுடைய ஒருஜினல் பெயர் ஐயா ! அடியவன் ஜனித்த பின்னர் மொத்த குடும்பமும் இராமேஸ்வரம் சென்று காராம் பசு வாங்கி அனைத்து விதமான பரிகாரம் எல்லாம் செய்து தலை முடி இறக்கி வந்து உள்ளனர் .

    நடை முறை வாழ்க்கைக்கு மாயக்கண்ணா என்பது நகை சுவையாகிவிடும் என்பதனால் கண்ணன் என்றுதான் அனைத்து சான்றிதழையும் உள்ளது .

    ReplyDelete
  22. பரிகாரம் 3 சொல்லவில்லையே...
    அது..

    இறைவழிபாடு..அது ஒன்றே
    இன்னல்கள் எதுவானாலும்

    இல்லாமல் செய்து விடும்
    இன்பங்கள் கூடி வரும்..

    இன்பமே எந்நாளும் துன்பமில்லை
    இது அப்பர் வாக்கல்லவா..

    ReplyDelete
  23. இறை வழிபாடு என்றதும்
    இது என்ன என மைனர் வருவார் கோளுடன்

    முதலில் நம் சப்பான் மைனர்வால் அவர்கள் "எதை" அல்லது "யாரை" கடவுள் அல்லது தெய்வம் அல்லது இறைவன் அல்லது ஆண்டவன் என தெளிவாக சொல்லாத வரையில் அவரின் எண்ணங்களுக்கு பதில் சொல்வது சிரமம்

    காத்திருக்கின்றோம்..
    காலம் கனியும் என்றே...

    ReplyDelete
  24. ///Parvathy Ramachandran said...
    குருவே சரணம். தெய்வம் கோபித்துக் கொண்டால் குரு நம்மைக் காப்பாற்றுவார். குருவானவர் கோபித்துக் கொண்டால் தெய்வத்தாலும் நம்மைக் காப்பாற்ற முடியாது என்றொரு பிரபலமான வாக்கியம் உண்டு.////

    இந்த வாக்கியம் தவறு என்றால்
    இன்னமும் அய்யருக்கு கோபம் என்பீர்

    தெய்வம் வேறு
    கடவுள் வேறு
    இறைவன் வேறு
    (உங்கள் பின் ஊட்டத்தில் இந்த 3 சொல்லாட்சியினையும் பயன் படுத்தி உள்ளீர் ஆனால் வேறுபடுத்தி காட்டவில்லை)

    நம் எல்லோருக்கும் 4 குரு உண்டு
    ஒருவர் மற்றொருவர் இல்லை..

    தெளிவாக இல்லாமல் சொல்வதினால்
    கறுப்பு சட்டைகாரர்கள் மட்டுமல்ல செள்ளைச் சட்டை காரார்களுக்கும் தெளிவாக புரியாது..

    இனிய உளவாக இன்னாத கூறல் கனியிருப்ப காய் கவந்தற்று
    என்பது தாங்கள் அறியாத திருக்குறளா..

    சிச்சடியாக இருக்க வேண்டாமே

    ReplyDelete
  25. அய்யா

    தங்களிடம் தற்போதய குரு பெயர்ச்சி, வக்ர சனி பற்றிய பொதுக் கேள்வி !

    ஏற்கெனவே ஏழரை சனியின் பிடியில் இருக்கும் துலா ராசிக் காரர்களுக்கு
    தற்போதய குருப்பெயற்சியினால், அஷ்டமகுரு குருவின் பலன்கள் எப்படி இருக்கும்?

    3,6 க்கு அதிபதி எட்டில் மறைவதால் கெட்டவன் கெட்டிடில் ராஜ யோகமா?

    அல்லது எழரை சனி வக்ரகதி க்கு, சென்றதால் கிடைக்கும் 5 ம் பார்வையினாலும் நன்மை
    கிடைக்குமா?
    நன்றி

    வணக்கம்

    ReplyDelete
  26. குருவிற்கு வணக்கம். உங்களின் ஆசிர்வாதம் பெற வேண்டும் என்று ஆசை. ரிஷபத்தில் குருபகவான் பகை அதனால் குரு பலன் குறையுமா? நன்றி.

    ReplyDelete
  27. ஐயா அவர்களுக்கு வணக்கம்.
    குரு பெயர்ச்சி பதிவு அருமை. எனக்கு மீன ராசி ஐயா. இந்த குரு பெயர்ச்சியால் அனுகூலம் குறைவு என்பதை அறிந்து கொண்டேன்.

    ஜகன்னாத ஹோரா-வில் அயனாம்ச முறையை வாக்கிய பஞ்சாங்க படி(ராமன் அயனாம்சம்) மாற்றி பார்த்ததில் குரு மே 11 அன்றே பெயர்ச்சி ஆனதாக காட்டுகிறது. திருக்கணித முறைப்படி(சித்திரபக்ஷ அயனாம்சம்) பார்த்ததில் நேற்று காலை பெயர்ச்சி ஆனதாக காட்டுகிறது. அது மட்டும் இல்லாமல் திருக்கணித முறைப்படி சனி பகவான் மே 16 அன்று வக்கிர நிலையில் கன்னி ராசிக்கு சென்று விட்டதாக காட்டுகிறது. இது சரி தானா அல்லது மென் பொருளில் குறையா என்பதை தயவு கூர்ந்து சொல்லுங்கள் ஐயா.

    ReplyDelete
  28. ஐயா அவர்களுக்கு வணக்கம். குரு பெயர்ச்சி பதிவு அருமை.

    புதன் மற்றும் சுக்ரன் இவற்றின் சுற்றுக்காலம் முறையே 88 மற்றும் 225 நாட்கள் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

    ஆனால் அவை சூரியனுடனே சுற்றுகின்றன. ஒரு சுற்றை முடிக்க சராசரியாக 1 ஆண்டு காலம் எடுத்து கொள்கின்றன. எந்த கணக்கில் அவற்றின் சுற்றுக்காலம் அவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது?

    உதாரணத்திற்கு, (ஜகன்னாத ஹோரா-வில்)
    ஜனவரி 18 ,2012 இல் புதன் தனுசு ராசி-இல் இருந்தது.
    மார்ச் 18 ,2012 இல் புதன் மீன ராசி-இல் இருந்தது.
    மே 18 ,2012 இல் புதன் மேஷ ராசி-இல் இருக்கிறது.
    ஜூலை 18 ,2012 இல் புதன் கடக ராசி-இல் இருக்கிறது.
    செப்டம்பர் 18 ,2012 இல் புதன் கன்னி ராசி-இல் இருக்கிறது.
    நவம்பர் 18 ,2012 இல் புதன் விருச்சிக ராசி-இல் இருக்கிறது.
    ஜனவரி 18 ,2013 இல் புதன் மகர ராசி-இல் இருக்கிறது.

    ReplyDelete
  29. வணக்கம் ஐயா,

    தங்களின் பதிவுகள் அனைத்தும் அருமை. இதனை நாளாய் அமைதியான மாணவியாக வந்து சென்று கொண்டிருந்த எனக்கு ஒரு சின்ன சந்தேகம். குரு பெயர்ச்சி பலன்கள் பார்க்கும் போது எதை வைத்து பார்க்க வேண்டும் லக்னமா இல்லை ராசியா. உதரணத்திற்கு, விருச்சிக லக்னத்திற்கு ரிஷபம் ஏழாம் இடம், பலன் பார்த்தல் ஏழாம்இட குரு மிகுந்த நன்மையை செய்யும் ஆனால் ராசியை வைத்து பார்த்தால் ஒன்றாம் இட குருவால் அவ்வளவு நன்மை கிடையாது. இந்த அமைப்பில் எது விஞ்சி நிற்கும்?

    ReplyDelete
  30. ////Blogger அய்யர் said...
    பரிகாரம் 3 சொல்லவில்லையே...
    அது..
    இறைவழிபாடு..அது ஒன்றே
    இன்னல்கள் எதுவானாலும்
    இல்லாமல் செய்து விடும்
    இன்பங்கள் கூடி வரும்..
    இன்பமே எந்நாளும் துன்பமில்லை
    இது அப்பர் வாக்கல்லவா..////

    அது சொல்லாமலேயே அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய பரிகாரம்!

    ReplyDelete
  31. ////Blogger அய்யர் said...
    இறை வழிபாடு என்றதும்
    இது என்ன என மைனர் வருவார் கோளுடன்
    முதலில் நம் சப்பான் மைனர்வால் அவர்கள் "எதை" அல்லது "யாரை" கடவுள் அல்லது தெய்வம் அல்லது இறைவன் அல்லது ஆண்டவன் என தெளிவாக சொல்லாத வரையில் அவரின் எண்ணங்களுக்கு பதில் சொல்வது சிரமம்
    காத்திருக்கின்றோம்..
    காலம் கனியும் என்றே...//////

    மைனர்கள் அப்படித்தான் இருப்பார்கள் சுவாமி! மேஜரான பிறகு கனிந்து வருவார். அதுவரை பொறுமையாக இருங்கள். அதற்குள் நம் இருவருக்கும் சனீஷ்வரன் போர்டிங் பாஸ் கொடுக்காமல் இருக்க வேண்டும்!

    ReplyDelete
  32. ////Blogger eswari sekar said...
    guruva vanakam////

    நல்லது. நன்றி சகோதரி!

    ReplyDelete
  33. ////Blogger santhanakuzhali said...
    அய்யா
    தங்களிடம் தற்போதய குரு பெயர்ச்சி, வக்ர சனி பற்றிய பொதுக் கேள்வி !
    ஏற்கெனவே ஏழரை சனியின் பிடியில் இருக்கும் துலா ராசிக் காரர்களுக்கு
    தற்போதய குருப்பெயற்சியினால், அஷ்டமகுரு குருவின் பலன்கள் எப்படி இருக்கும்?
    3,6 க்கு அதிபதி எட்டில் மறைவதால் கெட்டவன் கெட்டிடில் ராஜ யோகமா?
    அல்லது எழரை சனி வக்ரகதி க்கு, சென்றதால் கிடைக்கும் 5 ம் பார்வையினாலும் நன்மை
    கிடைக்குமா?
    நன்றி
    வணக்கம்////

    நடக்கும் தசாபுத்தியைப் பாருங்கள். தசாபுத்தி நன்றாக இருந்தால், கோள்சாரம் எல்லாம் ஒரு மேட்டரே அல்ல!

    ReplyDelete
  34. ////Blogger seethalrajan said...
    குருவிற்கு வணக்கம். உங்களின் ஆசிர்வாதம் பெற வேண்டும் என்று ஆசை. ரிஷபத்தில் குருபகவான் பகை அதனால் குரு பலன் குறையுமா? நன்றி./////

    குளு குளுவென்று மாமரங்கள், எலுமிச்சை மரங்கள் நிறைந்த அமபத்தூரில் இருக்கிறீர்கள். குறைந்தால் குறைந்து விட்டுப்போகிறது. கவலைப் படாமல் சந்தோஷமாக இருங்கள்!

    ReplyDelete
  35. ////Blogger Poornaa said...
    ஐயா அவர்களுக்கு வணக்கம்.
    குரு பெயர்ச்சி பதிவு அருமை. எனக்கு மீன ராசி ஐயா. இந்த குரு பெயர்ச்சியால் அனுகூலம் குறைவு என்பதை அறிந்து கொண்டேன்.
    ஜகன்னாத ஹோரா-வில் அயனாம்ச முறையை வாக்கிய பஞ்சாங்க படி(ராமன் அயனாம்சம்) மாற்றி பார்த்ததில் குரு மே 11 அன்றே பெயர்ச்சி ஆனதாக காட்டுகிறது. திருக்கணித முறைப்படி(சித்திரபக்ஷ அயனாம்சம்) பார்த்ததில் நேற்று காலை பெயர்ச்சி ஆனதாக காட்டுகிறது. அது மட்டும் இல்லாமல் திருக்கணித முறைப்படி சனி பகவான் மே 16 அன்று வக்கிர நிலையில் கன்னி ராசிக்கு சென்று விட்டதாக காட்டுகிறது. இது சரி தானா அல்லது மென் பொருளில் குறையா என்பதை தயவு கூர்ந்து சொல்லுங்கள் ஐயா.////

    ஐந்து நாட்கள் வேறுபாடெல்லாம் சாதாரண மேட்டர். மேஷத்திற்கும் ரிஷபத்திற்கும் இடையில் உள்ள பார்டரைக் கடக்க வேண்டாமா? எத்தனை செக் போஸ்ட்டுக்கள் உள்ளன!

    ReplyDelete
  36. /////Blogger Arun said...
    ஐயா அவர்களுக்கு வணக்கம். குரு பெயர்ச்சி பதிவு அருமை.
    புதன் மற்றும் சுக்ரன் இவற்றின் சுற்றுக்காலம் முறையே 88 மற்றும் 225 நாட்கள் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
    ஆனால் அவை சூரியனுடனே சுற்றுகின்றன. ஒரு சுற்றை முடிக்க சராசரியாக 1 ஆண்டு காலம் எடுத்து கொள்கின்றன. எந்த கணக்கில் அவற்றின் சுற்றுக்காலம் அவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது?
    உதாரணத்திற்கு, (ஜகன்னாத ஹோரா-வில்)
    ஜனவரி 18 ,2012 இல் புதன் தனுசு ராசி-இல் இருந்தது.
    மார்ச் 18 ,2012 இல் புதன் மீன ராசி-இல் இருந்தது.
    மே 18 ,2012 இல் புதன் மேஷ ராசி-இல் இருக்கிறது.
    ஜூலை 18 ,2012 இல் புதன் கடக ராசி-இல் இருக்கிறது.
    செப்டம்பர் 18 ,2012 இல் புதன் கன்னி ராசி-இல் இருக்கிறது.
    நவம்பர் 18 ,2012 இல் புதன் விருச்சிக ராசி-இல் இருக்கிறது.
    ஜனவரி 18 ,2013 இல் புதன் மகர ராசி-இல் இருக்கிறது./////

    விடிய விடிய ராமாயண கதாகால்ச்சேபம் கேட்ட்வன், விடிந்ததும் சொன்னானாம் - சீதைக்கு ராமர் சித்தப்பா!
    இந்தக் கோள்களின் சுற்றுக் கணக்கையெல்லாம் ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த நம் கொள்ளுத்தா ஆர்யபட்டா கணக்கிட்டுக் கொடுத்திருக்கிறார் சுவாமி. அவர்தான் உலகின் முதல் வான சாஸ்திர மேதை! பழைய படங்களில் அவற்றை எழுதியுள்ளேன் படித்துப்பாருங்கள்

    மேலதிகத்தகவல்:
    Aryabhata
    Aryabhata (IAST: Āryabhaṭa, Sanskrit: आर्यभट) (476–550 CE) was the first in the line of great mathematician-astronomers from the classical age of Indian mathematics and Indian astronomy. His most famous works are the Āryabhaṭīya (499 CE, when he was 23 years old) and the Arya-siddhanta.
    URL: http://en.wikipedia.org/wiki/Aryabhata

    ReplyDelete
  37. ////Blogger Anandhiselva said...
    வணக்கம் ஐயா,
    தங்களின் பதிவுகள் அனைத்தும் அருமை. இத்தனை நாளாய் அமைதியான மாணவியாக வந்து சென்று கொண்டிருந்த எனக்கு ஒரு சின்ன சந்தேகம். குரு பெயர்ச்சி பலன்கள் பார்க்கும் போது எதை வைத்து பார்க்க வேண்டும் லக்னமா இல்லை ராசியா. உதரணத்திற்கு, விருச்சிக லக்னத்திற்கு ரிஷபம் ஏழாம் இடம், பலன் பார்த்தல் ஏழாம்இட குரு மிகுந்த நன்மையை செய்யும் ஆனால் ராசியை வைத்து பார்த்தால் ஒன்றாம் இட குருவால் அவ்வளவு நன்மை கிடையாது. இந்த அமைப்பில் எது விஞ்சி நிற்கும்?////

    இத்தனை நாளாய் அமைதியாக இருந்தது சரி, பாடங்களைப் படித்தீர்களா? படித்திருந்தால் இந்தக் கேள்வி வந்திருக்காது. கோள்சாரத்திற்கு (Transit of planets) எப்போதும் ராசியை வைத்துத்தான் பலனைப் பார்க்க வேண்டும்!

    ReplyDelete
  38. ///மைனர்கள் அப்படித்தான் இருப்பார்கள் சுவாமி! மேஜரான பிறகு கனிந்து வருவார். அதுவரை பொறுமையாக இருங்கள். அதற்குள் நம் இருவருக்கும் சனீஷ்வரன் போர்டிங் பாஸ் கொடுக்காமல் இருக்க வேண்டும்!...////

    அவர் மாறுவதற்கு
    அவ்வளவு நாள் ஆகும் என எடுத்துக் கொள்ளவா... அல்லது

    அதிவிரைவில்
    அங்கே செல்ல take off என எடுத்துக் கொள்ளவா..

    மாறித்தானே ஆக வேண்டும் இம்
    மண்ணில் பிறந்தவராயிற்றே அந்த வால்

    ReplyDelete
  39. ஐயா அதிகமாக கோள்சாரத்தில் நம்பிக்கை இல்லாதவர்கள்.குருப்பெயர்ச்சிக்கு தினமலரை சுட்டுவதுதானே வழமை? இந்தமுறை தாங்களே எழுதியுள்ள்து
    மகிழ்ச்சி அளிக்கிறது.

    17 மே 2012 நிலையக் காட்டியுள்ள ராசிக் கட்டத்தில் சனி துலாத்திலேயே இருக்கிறது. வாக்கியபடி இப்போது சனி வக்கிரகதியில் கன்னியில் உலாவுகிறது.
    இது செப்டெம்பெர் 2012 வரை அப்படிதான்.

    பதிவுக்கு நன்றி ஐயா!

    ReplyDelete
  40. Vankam Iyya

    I have joined your blog recently and reading all the archived lessons. I have only completed 100 lessons in this week. I have few doubts sir,

    1. On the guru peyarchi. Guru has moved to Rishabam and his parvi places 5,7,9 will have the effect is the general reading everywhere. But if we have to see for personal horoscope should we interept this way. Assuming a person is having Simham lagnam then 3 places from that lagnam 2,4,6 will have effect.
    If yes then what role dasa and pokthi play here.

    2. Second doubt is I couldnt understand the paralkal lesson. I tried doing the same for me in the website given by you. There are individual marks given for all guru, mercury etc and an overall marks so how do we read it.

    Sir, my questions might be very silly but consider me as ur makku student and teach me sir.

    thanks
    sarguna
    chennai

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com