மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

14.5.12

Astrology அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்; யார் யாரைப் பார்த்தார்கள்?


===========================================
Doubt: அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்; யார் யாரைப் பார்த்தார்கள்?

Doubts: கேள்வி பதில் பகுதி 13

நீங்களும் உங்கள் சந்தேகங்களும் - பாடம் எண் பதிமூன்று!

Question & answer session
கேள்வி பதில் வகுப்பு
----------------------------------------------------
email.No.51
அரியப்பன் சாத்தப்பன்

வணக்கம் அய்யா,
பெஞ்சுமேல் நிற்கச் சொன்னதற்கு மிக்க நன்றி.தனுசு லக்கனத்துக்குத்தான் சந்திரன்,செவ்வாய் தான் பரிவர்த்தனை. சரிதான்.

1,சந்திரன் கேதுவும்(விருச்சிகம்),குருவும் செவ்வாயும்(கடகம்)இவ்வாறு இருந்தால் பலம்பெறுமா(தனு.லக்)?

விருச்சிகத்தில் சந்திரன் நீசம். அவருடன் உச்ச கேதுவும் சேர்ந்து நீச பங்க ராஜ யோகத்தில் உள்ளார். கடகத்தில் செவ்வாய் நீசம், உச்ச குருவுடன் சேர்ந்து நீச பங்க ராஜ யோகத்தில் உள்ளார். ஆனால் தனுசு லக்கினத்திற்குக் கடகம் எட்டாம் இடம். விருச்சிகம் 12ஆம் இடம். முழுப் பலன்கள் இல்லை. பஸ்ஸில் இடம் கிடைத்தும், பணம் கொடுத்து டிக்கெட் வாங்கியும் நின்று கொண்டே பயணிக்க வேண்டிய நிலைமை!

2,உச்சம், நீசம் பரிவர்த்தனை (சனி,செவ்வாய்) பலம் அடையுமா?

பரிவர்த்தனை அடைந்த பிறகுதானே, உச்ச நீசக் கணக்கு வரும்! உச்சன் அதற்கான பலனைத்தருவார். நீசனால் பலன்கள் இருக்காது.
-----------------------------------------------------
email.No.52
AG.பாலகுமாரன்

Dear Sir,
Can you kindly clarify my doubt.

1. It's said that the strength of the planets conjuncting Yogakarakas or Lagnathipathi will be absorbed by themselves (Yogakarakas or Lagnathipathi). Is that true. Can you clarify.
Regards,
Balakumaran A G

கிரகங்கள் கையில் என்ன பெப்ஸியா வைத்திருக்கின்றன? ஸ்ட்ரா போட்டு ஒன்றின் பலனை இன்னொன்று உறிஞ்சிக்குடிப்பதற்கு? லக்கினதிபதியாகட்டும் அல்லது யோககாரகனாகட்டும், அவர்களுடன் கூட்டணி போடும் கிரகத்தை வைத்து அவர்களுடைய நிலைமை மாறும். பலன்களும் வேறுபடும். அதற்காக சேரும் கிரகங்கள் தங்கள் கையில் அவற்றை எப்படி எடுத்துக்கொள்ளும்? உதாரணத்திற்கு லக்கினாதிபதியுடன் சனி ஒன்றாக இருந்தால், லக்கினாதிபதியோடு அவரும் சேர்ந்து லக்கினத்திற்கான பலன்களைத் தரமாட்டார். சேரும் லக்கினாதிபதி வலுவாக இருந்தால் அடக்கி வாசிப்பார். லக்கினாதிபதி வலுவாக இல்லையென்றால் இருப்பதையும் கெடுத்து விடுவார்!
---------------------------------------------------
email.No.53
செல்லபிரசாத் ராமசாமி

அன்புள்ள அய்யா,
என்னுடைய சந்தேகங்கள் (2)

1. வாக்ய பஞ்சாங்கத்தின்படி நட்சத்திர பாதசாரங்களை கொண்டு தசாம்ச சக்கரம் எழுதுவது எப்படி?

பஞ்சாங்கத்தை வைத்து ஜாதகம் எழுதுவதற்கு நல்ல பாண்டித்யம் வேண்டும். அதோடு ஜாதகனின் பிறந்த வருட வாக்கியப் பஞ்சாங்கமும் வேண்டும்.அதை இப்போது கணினி மென்பொருட்கள் எழுதித்தருவதால், அவற்றைப் பயன் படுத்துங்கள். Gas Stove, Induction Stove, Oven, mixie, wet grinder என்று எல்லாவற்றிற்கும் சாதனங்கள் வந்து விட்டன!. நான் விறகு அடுப்பில்தான் சமைக்க விரும்புகிறேன் என்று சொன்னால் எப்படி?

2. மிதுனம், தனுசு லக்னங்களிற்கு தர்ம/கர்மாதிபதி யோகம் அமைந்து, முறையே குரு, புதன் (உபய ராசியின் பாதகாதிபதிகள் மற்றும் யோகத்தை தருபவர்கள்) தசைகள் நடைபெறும் போது, யோகம்தான் வலிமை தருமா? அல்லது பாதகாதிபதி பாதகம் செய்வாரா?

யோகம் அமைந்துவிட்டது. அமைந்த யோகத்தில் சந்தேகம் எதற்கு? தங்கள் தசா/புத்திகளில் யோகத்திற்கான பலன்களைத் தருவார்கள். பாதக அமைப்பும் சேர்வதால், பலன்கள் குறையலாம். ஆனால் இல்லாமல் போகாது!

3.தங்களுடைய இமெயில் கேள்வி 33ற்கு பதிலில் பார்வைகளே இல்லாத வீட்டிற்கு பலன் சொல்லவில்லை. என்னுடைய ஜாதகத்தில் லக்னம், 6வது வீடு மற்றும் 8வது வீடுகளில் எந்த கிரகமும் இல்லை. எந்த பார்வையும் இல்லை (சனி, செவ்வாய் மற்றும் குரு ஓர பார்வை உட்பட). என்ன பலன்கள் ஏற்படும்? (இது சொந்தக் கேள்வி ஆனால் சொந்த கேள்வி இல்லை)

அங்கே எந்த கிரகமும் இல்லை என்பதற்காக நீங்கள் தப்பிக்க முடியுமா? 6ஆம் வீட்டு அதிபதி மற்றும் 8ஆம் வீட்டு அதிபதிகள் எங்கே இருக்கிறார்கள் என்று பாருங்கள். யாருடன் இருக்கிறார்கள் என்று பாருங்கள். எவருடைய பார்வைகளைப் பெற்றிருக்கிறார்கள் என்று பாருங்கள். அதை வைத்துப் பலன்கள் கிடைக்கும். அதிபதிகள் இல்லாமல் வீடுகள் இல்லை. வீடுகள் இல்லாமல் ஜாதகம் இல்லை! முதலில் அதை உணருங்கள்!

4.வெளிநாட்டு பயணங்களை கணக்கிடுவதற்கு சந்திரன், ராகு மற்றும் கேது இவர்களின் பங்கு என்ன?

ஒரு பெண்ணின் திருமணத்தில், அண்ணன், தம்பிகளின் பங்கு என்ன என்று கேட்பதைப்போல உள்ளது உங்கள் கேள்வி. காதல் திருமணம் என்றால், அவளுடைய பங்கு மட்டுமே முக்கியம். மற்றவர்களுடைய பங்கு தேவையில்லை. பெற்றோர்கள் நடத்திவைக்கும் திருமணம் என்றால், அவர்களுடைய பங்கு முக்கியம். அத்துடன் பெண்ணின் சம்மதமும் முக்கியம். (பிடிக்காத மாப்பிள்ளையைக் கட்டிவைக்க முடியாது)
அதுபோல வெளிநாட்டுப் பயணங்களுக்கு ஒன்பதாம் வீடும், அதன் சாராம்சங்களும் மட்டுமே முக்கியம். அதைப்பற்றிய விரிவான பாடம் என்னுடைய முன்பதிவில் உள்ளது. தேடிப்பிடித்துப் படியுங்கள்

5.வாக்ய பஞ்சாங்கத்தின்படி ஜாதகம் கணிக்கும்போது (கணினி மூலம் அல்ல) பாதசாரங்களை கொண்டுதான் எழுதுகிறோம். அனைத்து கட்டங்களும் 9 நட்சத்திர பாதங்களை கொண்டுள்ளது. ஓவ்வொரு நட்சத்திரமும் ஓவ்வொரு நேரங்களை கொண்டுள்ளது. சந்திரனின் வேகமோ ஒரே மாதிரியானது. என்னுடைய சந்தேகம் என்னவெனில் அனைத்து கட்டங்களும் சரிசமமாகதான் (30 டிகிரி) பிரிக்கப்பட்டுள்ளதா? இல்லை வித்தியாசங்கள் உள்ளதா?

சரியாகத்தான் பிரிக்கப்பட்டுள்ளது சாமி! அதிலென்ன சந்தேகம்? விமானத்தில் ஏறும் முன்பு, அந்த விமானம் ஒழுங்ககத்தான் தயாரிக்கப்பட்டுள்ளதா? (வடிவமைக்கப்படுள்ளதா?) என்று பார்த்துவிட்டா ஏறுவீர்கள். அதில் சந்தேகம் கொண்டால், நீங்கள் எப்படிப் பயணிக்க முடியும்?

6.ஆறு மற்றும் எட்டாம் அதிபதிகள் ஒன்று கூடுவது விபரீத ராஜயோகத்தை கொடுக்குமா?
அன்புடன்
செல்லபிரசாத் ராமசாமி

விபரீத ராஜயோகம் என்றால் என்னவென்று பாடம் நடத்தியுள்ளேன். அதைச் சரியாகப் படிக்காமல் கேள்விகேட்டால் என்ன செய்வது? ஒரு துஷ்ட ஸ்தானத்தின் அதிபதி, மற்றொரு துஷ்ட ஸ்தானத்தில், ஒரு துஷ்டனுடன் அமர்ந்திருந்தால் அந்த யோகம் உண்டாகும்.

நீங்கள் வெறுமனே கூடினால் என்று மட்டும் சொல்லியிருக்கிறீர்கள். கூட வேண்டிய இடத்தில் கூட வேண்டும் அல்லவா? அதைப் பாருங்கள். காதலனும், காதலியும் கூட வேண்டிய இடத்தில்தான் கூட வேண்டும். பொது இடத்தில் கூடினால் பிரச்சினையாகிவிடும். அதைப்போலத்தான் இதுவும்!
--------------------------------------------
email.No.54
G.ஆலாசியம்

அன்புள்ள ஆசிரியருக்கு வணக்கம்,
இது பொதுவான கேள்வி.....

1.எல்லா கிரகங்களுக்கும் நேரடிப் பார்வை என்பது, 7- ஆம் பார்வை; இதில் எதை எது பார்க்கிறது என்று கொள்ளவேண்டும்? 1.எதிரெதிரே பார்க்கும் கிரகங்கள் ஒன்றை ஒன்றுப் பார்க்கும் போது எதனுடையப் பலன் மிகும்? உம்:- தனுசு லக்னம், 5-இல் குரு 11-இல் சந்திரன்.

அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள். இது கம்ப ராமாயணத்தில் வரும் வரி. யார் யாரைப் பார்த்தார்கள் சொல்லுங்கள்? எதனுடைய பார்வை பவர்புஃல்லாக இருக்குமா? காதலர்களின் பார்வை என்றால், பெண்ணின் பார்வைதான் கிறங்கவைக்கும். அதில் பெண்கள்தான் கில்லாடிகள். ஆனால் கிரகங்களின் பார்வைகளில் அப்படி எல்லாம் பேதப் படுத்திப் பார்க்கமுடியாது!

2.எதிரெதிரே பார்க்கும் கிரகங்கள் பார்ப்பது கிரகங்களை மட்டும் அல்லாது அதன் வீட்டையும் பார்க்கும் அதில் எதன் பலன் மிகும்? உம்:- 3-க்கும், 4-க்கும் அதிபதி சனி 5-இல் மீனத்தில் இருந்து 9-க்கு அதிபதி சந்திரனை (கன்னியில்) பார்த்தல்.

திருடன் வந்தான் வீட்டிலுள்ள பணத்தையும் நகைகளையும் சுருட்டிக்கொண்டு போனான். அதோடு வீட்டில் இருந்த பெருசுகள் இரண்டுபேர்களின் மண்டையிலும் கட்டையால் ஒரு போடு போட்டு, மருத்தவமனையில் படுக்கும் படியாகப், படுக்கவைத்துவிட்டுப் போனான். இதில் எந்த வலி அதிகம்? பொருளைப் பறி கொடுத்த வலியா? அல்லது மண்டையில் அடிவாங்கிய வலியா? நீங்களே சொல்லுங்கள்?

பார்ப்பது கிரகங்களை மட்டும் அல்லது அது இருக்கும் வீட்டையுமா? எப்படி சாமி இப்படியெல்லாம் யோசிக்கிறீர்கள்? தனி அறையில் உட்கார்ந்து யோசிப்பீர்களா? இனிமேல் அப்படி எல்லாம் யோசிக்காதீர்கள்!

வீட்டின் முற்றத்தில் விழுகும் சூரிய ஒளி முற்றத்துத் தரையின் மீதும் விழுகும், அங்கே நிற்பவரின் மேலும் விழுகும் இல்லையா? அப்படித்தான் அதுவும்!

3.நல்ல கிரகத்தை தீயக் கிரகம் பார்க்கிறது என்றால் அந்தத் தீயக் கிரகம் அந்த ஜாதகனுக்கு நல்லவனாக இருந்தால் அதன் விளைவு என்ன? மேல் உள்ள உதாரணமே:- 3-க்கும், 4-க்கும் அதிபதி சனி 5-இல் மீனத்தில் இருந்து 9-க்கு அதிபதி சந்திரனை (கன்னியில்) பார்த்தல்.

ஒரு மனநிலை சரியில்லாதவனுக்கு மருத்துவர் ஒருவர் வைத்தியம் பார்க்கிறார். அவருக்கும் மனநிலை சரியில்லாமல் இருந்தால் விளைவு என்ன ஆகும்? என்று கேட்பதைப் போல இருக்கிறது உங்கள் கேள்வி!
உங்கள் கேள்வியிலேயே பதில் இருக்கிறது. யோசித்துப் பாருங்கள்.

4. 10-க்கும் 11-க்கும் அதிபதி சனி 8-இல் இருந்து 7- ஆம் வீட்டை பார்க்கிறார் (காலியாக உள்ள ரிசபத்தைப்). அது அந்த 2- ஆம் வீட்டிற்கு பாதகமா? அப்படியானால் அது பெண் ஜாதகமானால் அதைப் போன்ற அமைப்பு (அதனை ஒத்த அமைப்பு உண்டா?) உள்ள ஆணை மனம் முடித்தாள் அவர்களுடைய 2-வது வீட்டுப் பலன் மேம்படுமா?.என்னுடைய கேள்விகள் எந்த அளவுக்கு ஆழமானது எந்த அளவுக்கு மற்றவர்களுக்குப் பயன் படும் என்றும் தெரிய வில்லை.
அன்புடன்,
ஆலாசியம் கோ.

சனியின் பார்வையால் பாதகம் இல்லாமல் இருக்குமா? இருக்கும்!!!
ஒத்த அமைப்பு இருந்தால், இருவருக்கும் ஒத்துப் போகும்.
ஒருவரை ஒருவர் சரிபண்ணிக் கொண்டு (adjust) போவார்கள் .

--------------------------------------------------------------
(தொடரும்)

இன்றைய பொன்மொழி!
வாழ்க்கை அவனவன் வாழ்வதற்கு என்று மட்டும் கருதக் கூடாது மற்றவர்கள் நலனுக்கும் என்று கருத வேண்டும்.
- பெரியார் ஈ.வெ.ரா

அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்!


56 comments:

  1. //ஆறு மற்றும் எட்டாம் அதிபதிகள் ஒன்று கூடுவது விபரீத ராஜயோகத்தை கொடுக்குமா?//

    குறிப்பிட்ட ஒரு ராஜயோகம் நல்ல பலனைக் கொடுக்க வேண்டுமானால் அதில் சம்பந்தப் பட்ட கிரகங்கள் பலமாக இருக்க வேண்டும். பலத்திற்கு தகுந்த பலன். விபரீத ராஜயோகம் என்பதால் பலவீனமாக இருக்க வேண்டும் போலும்.

    ReplyDelete
  2. //எல்லா கிரகங்களுக்கும் நேரடிப் பார்வை என்பது, 7- ஆம் பார்வை; இதில் எதை எது பார்க்கிறது என்று கொள்ளவேண்டும்? 1.எதிரெதிரே பார்க்கும் கிரகங்கள் ஒன்றை ஒன்றுப் பார்க்கும் போது எதனுடையப் பலன் மிகும்? உம்:- தனுசு லக்னம், 5-இல் குரு 11-இல் சந்திரன்.//

    நண்பர் லக்னாதிபதி குரு 8ம் அதிபதி சந்திரனைப் பார்ப்பதால், 8ம் அதிபதியின் கெடுபலன் குறையுமா அல்லது 8ம் அதிபதி லக்னாதிபதியைப் பார்ப்பதால் லக்னாதிபதி கொடுக்கக் கூடிய நல்லபலன் குறையுமா என்று கேட்கிறார் என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
  3. எட்டாம் இடம்/12ஆம் இடம் நீச பங்க ராஜ யோகம்: முழுப் பலன்கள் இல்லை. பஸ்ஸில் இடம் கிடைத்தும், பணம் கொடுத்து டிக்கெட் வாங்கியும் நின்று கொண்டே பயணிக்க வேண்டிய நிலைமை!.

    கிரகங்கள் கையில் என்ன பெப்ஸியா வைத்திருக்கின்றன? ஸ்ட்ரா போட்டு ஒன்றின் பலனை இன்னொன்று உறிஞ்சிக்குடிப்பதற்கு?

    வாக்ய பஞ்சாங்கத்தின்படி நட்சத்திர பாதசாரங்களை கொண்டு தசாம்ச சக்கரம் எழுதுவது: Gas Stove, Induction Stove, Oven, mixie, wet grinder என்று எல்லாவற்றிற்கும் சாதனங்கள் வந்து விட்டன!. நான் விறகு அடுப்பில்தான் சமைக்க விரும்புகிறேன் என்று சொன்னால் எப்படி?

    காதலனும், காதலியும் கூட வேண்டிய இடத்தில்தான் கூட வேண்டும். பொது இடத்தில் கூடினால் பிரச்சினையாகிவிடும். அதைப்போலத்தான் விபரீத ராஜயோகம்!

    அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள். ஆனால் கிரகங்களின் பார்வைகளில் அப்படி எல்லாம் பேதப் படுத்திப் பார்க்கமுடியாது!

    இப்படி உதாரணத்தோட சொன்னாதானே நம்ம மண்டையில ஏறுது. ஹி.ஹி. ஹீ . நன்றி ஐயா

    ReplyDelete
  4. "வாழ்க்கை அவனவன் வாழ்வதற்கு என்று மட்டும் கருதக் கூடாது மற்றவர்கள் நலனுக்கும் என்று கருத வேண்டும்." நன்றாகத்தான் சொல்லியிருக்கிறார்...ஆனால் பாவம் அவரை திட்ட ஒரு கூட்டமே இருக்கிறதே.

    ReplyDelete
  5. ////தேமொழி said...
    ஆனால் பாவம் அவரை திட்ட ஒரு கூட்டமே இருக்கிறதே.////

    அது தவறு என
    அய்யர் சொல்வதால் தான்

    புரியாமலே அய்யர்
    புலம்புவதாக பலர் சொல்கின்றனர்..

    இருக்கின்ற பொருளைத்தான்
    இல்லை என்று மறுக்க முடியும்

    அது போலவே
    அவர் கடவுள் இல்லை எனும் போது

    வெளியில் இல்லை..
    வெளிச்சம் போட்டு பார்

    உள்ளே இருக்கின்றார்
    உள்ளத்துக்குள்ளே இருக்கின்றார்

    என்றார் அந்த வென்தாடி வேந்தர்
    வென்றார் கொன்றார் என

    தமிழினம் அழிந்ததும் போதும்
    தமிழகம் அழுததும்.. போதும் இப்போ..

    அம்மா கையில கொடுத்துப் போடு செல்லக்கண்ணு

    அவங்க ஆற 100 ஆக்குவாங்கன்னு சொல்லுகண்ணுன்னு

    ஆனந்தம் பொங்க
    ஆங்காங்கே பாடுவதும் தெரியும் தானே

    ReplyDelete
  6. லக்கின அதிபன் 6,8,12-ல்
    இருப்பதை விட 6,8,12-ம்
    அதிபதிகளுன் இணைந்து
    இருந்து திசை நடத்துவது,
    அதிகம் தீமையே தருகிறது.
    உதாரணமாக,மீன லக்கனம்
    லக்கின அதிபதி குரு
    அஷ்டமாபதி,சுக்கிரனோடு
    ரிஷப்பதில் சேர்க்கை.
    குரு திசையில் சுக்கிர புக்தியில்
    காதல் தோல்வியால் இறந்து விட்டார்.
    லக்கினாதிபதி அஷ்டமாதிபதியுடன்
    அஷ்டமத்திற்கு அஷ்டம ஸ்தனாத்தில்
    இருந்து திசை நடத்தியதால்
    காரகத்தின் அடிபடையில்
    (சுக்கிரன் -காதல்)
    மரணத்தை தந்து விட்டது.

    OM SARAVANABAVA NAMA

    ReplyDelete
  7. ஐயா விற்கு முதற்க்கண் வணக்கம். !


    email.No.53
    செல்லபிரசாத் ராமசாமி

    (இது சொந்தக் கேள்வி ஆனால் சொந்த கேள்வி இல்லை)

    இந்த மெயிலுக்கு தாங்கள் பதில் கூறியதை படித்த உடனையே வடிவேலுடைய நகை சுவைதான் பட்டுன்னு மனதிற்கு வந்தது. ( ரூம் போட்டு தின்க் பண்ணுவாங்களோ).
    நிற்க!
    அடுத்த மெயிலுக்கு போகி பார்த்தால் ஐயாவே அருமையாக பதில் கூறி உள்ளீர்கள் .

    ஐயா! அப்பார்ட்மெண்டில் , அதுவும் தனி பிளாட்டில் , அதுவும் தனி படுக்கை அறையில் என்னுடைய நகை சுவை ப்லாட்டையே அதிரும் அளவிற்கு சிரிக்கும் அளவிற்கு தாங்கள் பதில் கூறி இருகின்றிகள். மிக்க நன்றி ஐயா! -;)))

    email.No.54
    G.ஆலாசியம்
    ? எப்படி சாமி இப்படியெல்லாம் யோசிக்கிறீர்கள்? தனி அறையில் உட்கார்ந்து யோசிப்பீர்களா? இனிமேல் அப்படி எல்லாம் யோசிக்காதீர்கள்!

    ReplyDelete
  8. ஐயா! அப்பார்ட்மெண்டில் , அதுவும் தனி பிளாட்டில் , அதுவும் தனி படுக்கை அறையில் என்னுடைய நகை சுவை ப்லாட்டையே அதிரும் அளவிற்கு சிரிக்கும் அளவிற்கு தாங்கள் பதில் கூறி இருகின்றிகள். மிக்க நன்றி ஐயா! -;)))

    email.No.54
    G.ஆலாசியம்
    ? எப்படி சாமி இப்படியெல்லாம் யோசிக்கிறீர்கள்? தனி அறையில் உட்கார்ந்து யோசிப்பீர்களா? இனிமேல் அப்படி எல்லாம் யோசிக்காதீர்கள்!////////

    நானும் அதே situation-ல் அப்படித்தான் சிறித்தேன்... கண்ணில் நீர் வரும் அளவிற்க்கு...

    ReplyDelete
  9. இன்றைய புலம்பல்...

    கால்காட்டி கைகாட்டிக் கண்கள் முகம்காட்டி

    மால்காட்டு மங்கையரை மறந்து இருப்பது எக்கலாம் ?

    ReplyDelete
  10. ஜூன் 1 -ம் தேதி எனது திருமணத்திருக்கு வகுப்பறை மாணவர்கள் அனைவரையும் அழைக்கின்றேன்...

    ReplyDelete
  11. ஆனந்த் அண்ணா ரொம்ப நாள் ஆச்சு...ஒரு பதிவு போடுங்க...

    ReplyDelete
  12. //////Blogger ananth said...
    //ஆறு மற்றும் எட்டாம் அதிபதிகள் ஒன்று கூடுவது விபரீத ராஜயோகத்தை கொடுக்குமா?//
    குறிப்பிட்ட ஒரு ராஜயோகம் நல்ல பலனைக் கொடுக்க வேண்டுமானால் அதில் சம்பந்தப் பட்ட கிரகங்கள் பலமாக இருக்க
    வேண்டும். பலத்திற்கு தகுந்த பலன். விபரீத ராஜயோகம் என்பதால் பலவீனமாக இருக்க வேண்டும் போலும்.//////

    விபரீதம் என்ற சொல்லில் அது அடங்கியுள்ளதே சுவாமி!

    ReplyDelete
  13. /////Blogger ananth said...
    //எல்லா கிரகங்களுக்கும் நேரடிப் பார்வை என்பது, 7- ஆம் பார்வை; இதில் எதை எது பார்க்கிறது என்று
    கொள்ளவேண்டும்? 1.எதிரெதிரே பார்க்கும் கிரகங்கள் ஒன்றை ஒன்றுப் பார்க்கும் போது எதனுடையப் பலன் மிகும்? உம்:-
    தனுசு லக்னம், 5-இல் குரு 11-இல் சந்திரன்.//
    நண்பர் லக்னாதிபதி குரு 8ம் அதிபதி சந்திரனைப் பார்ப்பதால், 8ம் அதிபதியின் கெடுபலன் குறையுமா அல்லது 8ம் அதிபதி
    லக்னாதிபதியைப் பார்ப்பதால் லக்னாதிபதி கொடுக்கக் கூடிய நல்லபலன் குறையுமா என்று கேட்கிறார் என்று
    நினைக்கிறேன்.////

    இரண்டுமே சுப கிரகங்கள். முழுப் பலனுக்கு அவைகள் அமரும் இடங்கள் முக்கியம்!

    ReplyDelete
  14. //////Blogger தேமொழி said...
    எட்டாம் இடம்/12ஆம் இடம் நீச பங்க ராஜ யோகம்: முழுப் பலன்கள் இல்லை. பஸ்ஸில் இடம் கிடைத்தும், பணம் கொடுத்து டிக்கெட் வாங்கியும் நின்று கொண்டே பயணிக்க வேண்டிய நிலைமை!.
    கிரகங்கள் கையில் என்ன பெப்ஸியா வைத்திருக்கின்றன? ஸ்ட்ரா போட்டு ஒன்றின் பலனை இன்னொன்று உறிஞ்சிக்குடிப்பதற்கு?
    வாக்ய பஞ்சாங்கத்தின்படி நட்சத்திர பாதசாரங்களை கொண்டு தசாம்ச சக்கரம் எழுதுவது: Gas Stove, Induction Stove, Oven, mixie, wet grinder என்று எல்லாவற்றிற்கும் சாதனங்கள் வந்து விட்டன!. நான் விறகு அடுப்பில்தான் சமைக்க
    விரும்புகிறேன் என்று சொன்னால் எப்படி?
    காதலனும், காதலியும் கூட வேண்டிய இடத்தில்தான் கூட வேண்டும். பொது இடத்தில் கூடினால் பிரச்சினையாகிவிடும்.
    அதைப்போலத்தான் விபரீத ராஜயோகம்!
    அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள். ஆனால் கிரகங்களின் பார்வைகளில் அப்படி எல்லாம் பேதப் படுத்திப் பார்க்க முடியாது!
    இப்படி உதாரணத்தோட சொன்னாதானே நம்ம மண்டையில ஏறுது. ஹி.ஹி. ஹீ . நன்றி ஐயா////////

    மருந்துடன் தேனைக் கலக்கித்தருவார்கள். குழந்தைகள் தேனுக்காக மருந்தை சாப்பிட்டு விடுவார்கள். நான் மருந்து
    சாப்பிட்ட காலத்தில் (ஜோதிடத்தைப் பயின்ற காலத்தில்) வெறும் மருந்துதான். தேனெல்லாம் கிடையாது!

    ReplyDelete
  15. //////Blogger தேமொழி said...
    "வாழ்க்கை அவனவன் வாழ்வதற்கு என்று மட்டும் கருதக் கூடாது மற்றவர்கள் நலனுக்கும் என்று கருத வேண்டும்."
    நன்றாகத்தான் சொல்லியிருக்கிறார்...ஆனால் பாவம் அவரை திட்ட ஒரு கூட்டமே இருக்கிறதே.////

    திட்ட திட்ட திண்டுக்கல். வைய வைய வைரக்கல்!

    ReplyDelete
  16. /////Blogger sundari said...
    vannakkam sir,//////

    நல்லது. உங்களின் வருகைப் பதிவிற்கு நன்றி சகோதரி!!

    ReplyDelete
  17. ////Blogger eswari sekar said...
    vankam sir///////

    நல்லது. உங்களின் வருகைப் பதிவிற்கு நன்றி சகோதரி!

    ReplyDelete
  18. ////Blogger அய்யர் said...
    ////தேமொழி said...
    ஆனால் பாவம் அவரை திட்ட ஒரு கூட்டமே இருக்கிறதே.////
    அது தவறு என அய்யர் சொல்வதால் தான் புரியாமலே அய்யர் புலம்புவதாக பலர் சொல்கின்றனர்..
    இருக்கின்ற பொருளைத்தான் இல்லை என்று மறுக்க முடியும். அது போலவே அவர் கடவுள் இல்லை எனும் போது
    வெளியில் இல்லை.. வெளிச்சம் போட்டு பார் உள்ளே இருக்கின்றார் உள்ளத்துக்குள்ளே இருக்கின்றார்
    என்றார் அந்த வென்தாடி வேந்தர் வென்றார் கொன்றார் என தமிழினம் அழிந்ததும் போதும் தமிழகம் அழுததும்.. போதும்
    இப்போ..அம்மா கையில கொடுத்துப் போடு செல்லக்கண்ணு அவங்க ஆற 100 ஆக்குவாங்கன்னு சொல்லுகண்ணுன்னு
    ஆனந்தம் பொங்க ஆங்காங்கே பாடுவதும் தெரியும் தானே/////////

    மின்வெட்டு நீங்கினால், வெளிச்சத்தில் நன்றாகத் தெரியும் சுவாமி!

    ReplyDelete
  19. ////Blogger Bhogar said...
    லக்கின அதிபன் 6,8,12-ல் இருப்பதை விட 6,8,12-ம் அதிபதிகளுன் இணைந்து இருந்து திசை நடத்துவது,
    அதிகம் தீமையே தருகிறது.
    உதாரணமாக,மீன லக்கனம் லக்கின அதிபதி குரு அஷ்டமாபதி,சுக்கிரனோடு ரிஷப்பதில் சேர்க்கை.
    குரு திசையில் சுக்கிர புக்தியில் காதல் தோல்வியால் இறந்து விட்டார்.
    லக்கினாதிபதி அஷ்டமாதிபதியுடன் அஷ்டமத்திற்கு அஷ்டம ஸ்தனாத்தில்
    இருந்து திசை நடத்தியதால் காரகத்தின் அடிபடையில்
    (சுக்கிரன் -காதல்) மரணத்தை தந்து விட்டது.
    OM SARAVANABAVA NAMA///////

    உங்களின் அனுபவப் பகிர்விற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  20. /////Blogger Maaya kanna said...
    ஐயா விற்கு முதற்கண் வணக்கம். !
    email.No.53
    செல்லபிரசாத் ராமசாமி
    (இது சொந்தக் கேள்வி ஆனால் சொந்தக் கேள்வி இல்லை)
    இந்த மெயிலுக்கு தாங்கள் பதில் கூறியதை படித்த உடனையே வடிவேலுடைய நகை சுவைதான் பட்டுன்னு மனதிற்கு வந்தது. ( ரூம் போட்டு திங்க் பண்ணுவாங்களோ).
    நிற்க!
    அடுத்த மெயிலுக்கு போகி பார்த்தால் ஐயாவே அருமையாக பதில் கூறி உள்ளீர்கள் .
    ஐயா! அப்பார்ட்மெண்டில் , அதுவும் தனி பிளாட்டில் , அதுவும் தனி படுக்கை அறையில் என்னுடைய நகை சுவை ப்லாட்டையே அதிரும் அளவிற்கு சிரிக்கும் அளவிற்கு தாங்கள் பதில் கூறி இருகின்றிகள். மிக்க நன்றி ஐயா! -;)))
    email.No.54
    G.ஆலாசியம்
    ? எப்படி சாமி இப்படியெல்லாம் யோசிக்கிறீர்கள்? தனி அறையில் உட்கார்ந்து யோசிப்பீர்களா? இனிமேல் அப்படி எல்லாம் யோசிக்காதீர்கள்! ///////

    பழகி விட்டது. திடீரென்று நிறுத்தச் சொன்னால் எப்படி...கண்ணன்?

    ReplyDelete
  21. /////Blogger வலைஞன் said...
    வணக்கம் உறவே
    உங்களின் அருமையான இடுகையை இன்னும் பல பார்வையாளர்கள் படிக்க இங்கே இணைக்கவும்
    http://www.valaiyakam.com/
    ஓட்டுப்பட்டையை உங்கள் தளத்தில் இணைக்க: http://www.valaiyakam.com/page.php?page=votetools
    நன்றி
    வலையகம்//////

    அழைப்பிற்கு நன்றி! இணைத்துள்ளேன். எனது பதிவைப் பாருங்கள்.

    ReplyDelete
  22. ////Blogger Pandian said...
    ஐயா! அப்பார்ட்மெண்டில் , அதுவும் தனி பிளாட்டில் , அதுவும் தனி படுக்கை அறையில் என்னுடைய நகைச் சுவை ப்ளாட்டையே அதிரும் அளவிற்கு சிரிக்கும் அளவிற்கு தாங்கள் பதில் கூறி இருகின்றிகள். மிக்க நன்றி ஐயா! -;)))
    email.No.54
    G.ஆலாசியம்
    ? எப்படி சாமி இப்படியெல்லாம் யோசிக்கிறீர்கள்? தனி அறையில் உட்கார்ந்து யோசிப்பீர்களா? இனிமேல் அப்படி எல்லாம் யோசிக்காதீர்கள்! ////////
    நானும் அதே situation-ல் அப்படித்தான் சிரித்தேன்... கண்ணில் நீர் வரும் அளவிற்கு.../////

    சரி..சரி...அதே சிரிப்போடு ஊருக்குப் பஸ் ஏறுங்கள். மற்றதை எல்லாம் பிறகு பார்த்துக் கொள்ளலாம். புதுப் பெண்டாட்டிக்கு பூ வாங்கிக் கொடுத்தவன் கதை தெரியுமா? அதையும் படித்துவிட்டுச் செல்லுங்கள்!

    ReplyDelete
  23. ////Blogger Pandian said...
    இன்றைய புலம்பல்...
    கால்காட்டி கைகாட்டிக் கண்கள் முகம்காட்டி
    மால்காட்டு மங்கையரை மறந்து இருப்பது எக்கலாம் ?/////

    புலம்பலை நிறுத்துங்கள். இன்னும் 17 நாட்களில் கல்யாணத்தை வைத்துக்கொண்டு புலம்பினால் பெண்ணின் அப்பா என்ன
    நினைப்பார்? கழுத்தை நீட்டக் காத்திருக்கும் மங்கை நல்லாள் என்ன நினைப்பாள்?

    ReplyDelete
  24. //////Blogger Pandian said...
    ஜூன் 1 -ம் தேதி எனது திருமணத்திற்கு வகுப்பறை மாணவர்கள் அனைவரையும் அழைக்கின்றேன்.../////

    எந்த ஊரில்? எந்த மண்டபத்தில்? அதைச் சொல்லாமல் அழைத்தால் எப்படி? வரும்போது carrier meals நாங்களே கொண்டு வரவேண்டுமா? அல்லது அதற்கு வழி செய்யப்பட்டுள்ளதா?:-))))))

    ReplyDelete
  25. ///////Blogger Pandian said...
    ஆனந்த் அண்ணா ரொம்ப நாள் ஆச்சு...ஒரு பதிவு போடுங்க...//////

    முதலில் தேன் நிலவு! ஓஹோ எந்தன் பேபி! வாராய் எந்தன் பேபி பாட்டு! ஆனந்த அண்ணாவை எல்லாம் கொஞ்ச நாள் மறந்து
    விடுங்கள். எங்கே போகப் போகிறார்? பிறகு பார்த்துக்கொள்ளலாம். ஓக்கேயா?

    ReplyDelete
  26. கோபால கிருஷ்ண பாரதியார் நந்தனார் சரித்திரம் கதாகாலட்சேபம் தானே எழுதி செய்து கொண்டிருந்தவர். 'எப்போவருவாரோ...?'போன்ற அழியாத‌ சாஹித்யங்களைச் செய்தவர். அவரது பாடலை முழுதும் வெளியிட்டமைக்கு நன்றி. கேள்வி பதில் மீள் பதிவு அருமை.

    ReplyDelete
  27. ///நன்றாகத்தான் சொல்லியிருக்கிறார்...ஆனால் பாவம் அவரை திட்ட ஒரு கூட்டமே இருக்கிறதே.////


    அவரும் திட்டுவதில் மற்றவர்களுக்குச் சளைத்தவரில்லையே!

    ReplyDelete
  28. குருவிற்கு வணக்கம்

    உள்ளேன் ஐயா,

    வாழ்த்துகள் பல பாண்டியன் அவர்களுக்கு

    ReplyDelete
  29. பாண்டியனுக்கு மன்றல் வாழ்த்துக்கள்...

    புலம்பல் வந்ததும் மன்றல் வந்ததா?
    மன்றல் என்றதும் புலம்பல் வந்ததா?
    .......என்று பாடத் தோன்றுகிறது

    ReplyDelete
  30. நிந்தா ஸ்துதி என்பது இதுதான். சிவபெருமானை நிந்தனை செய்வது போல் அவன் பெருமைகளை எடுத்துக் கூறும் மிக அரிய பாடல் இது. இந்தப் பாடலின் முழு வடிவத்தையும் சகோதரி தேமொழி கொடுத்திருக்கிறார். ஆனால் மேடையில் பாடும் கலைஞர்கள் இந்த வரிகள் அனைத்தையும் அப்படியே பாடுவதில்லை. கல்லால் ஒருவன் அடிக்க (சாக்கிய நாயனாரைக் குறிப்பிடுவது); காலால் ஒருவன் உதைக்க (கண்ணப்ப நாயனார். அடுத்த வரியிலுள்ள செருப்புக் காலால் என்பது ரசப்படவில்லை); வில்லால் ஒருவன் அடிக்க (அர்ஜுனன் காண்டீபத்தால் போரிட்டது); பிரம்பால் ஒருவன் அடிக்க (மதுரையில் பிட்டுக்கு மண் சுமந்து பாண்டியனின் பிரம்பினால் அடிபட்டது) இவைகளை மட்டுமே பாடுவார்கள். அதிலும் இந்தப் பாடலை பிரபலப்படுத்தியது என்.சி.வசந்தகோகிலம் அவர்கள்தான். நாகப்பட்டினத்தில் மிக எளிய குடும்பத்தில் இருந்த இவர் சென்னை சென்று திரைப்படங்களில் பாடியும் நடித்தும் பிரபலமானது ஒரு வரலாறு. இவரைப் பற்றிய வாழ்க்கைக் குறிப்பை என்னுடைய வலைப்பூவான http://www.bharathipayilagam.blogspot.com எனும் இந்தத் தளத்தில் பார்க்கலாம். மிக இளம் வயதில் இவர் இறக்காமல் இருந்திருந்தால் கர்நாடக இசை உலகை இவர் ஒரு அசைப்பு அசைத்திருப்பார் என்பதில் ஐயமில்லை. உங்கள் அனைவரின் கூட்டு முயற்சிக்குப் பாராட்டுக்கள்.

    ReplyDelete
  31. Email : 54

    question:

    1.எல்லா கிரகங்களுக்கும் நேரடிப் பார்வை என்பது, 7- ஆம் பார்வை; இதில் எதை எது பார்க்கிறது என்று கொள்ளவேண்டும்? 1.எதிரெதிரே பார்க்கும் கிரகங்கள் ஒன்றை ஒன்றுப் பார்க்கும் போது எதனுடையப் பலன் மிகும்? உம்:- தனுசு லக்னம், 5-இல் குரு 11-இல் சந்திரன்.
    answer:

    பலன் எது மிகும் என்பதற்கு, சுய அட்டகவர்க பலனை பாருங்கள். சந்திரனின் பரல்கள் அதிகமெனில் சந்திரனுக்கு மார்க் - இல்லை என்றால் குருவுக்கு மார்க்.

    ReplyDelete
  32. பதிவுக்கு நன்றி ஐயா.

    வேண்டுவோர்க்கருளும் வேலவனின் ஆசியால்
    பூண்டநல் அன்பும் பொலிவும் மாறாமல்
    மாண்புடைய மனையறம் மகிழ்வுடன் காத்து
    பாண்டியனும் அவர்தம் மாதேவியும் வாழ்க பல்லாண்டு.!!!!!!

    வாழ்த்துக்கள் பாண்டியன்.

    ReplyDelete
  33. ///Blogger அய்யர் said...
    ////தேமொழி said...
    ஆனால் பாவம் அவரை திட்ட ஒரு கூட்டமே இருக்கிறதே.////
    அது தவறு என அய்யர் சொல்வதால் தான் புரியாமலே அய்யர் புலம்புவதாக பலர் சொல்கின்றனர்..
    இருக்கின்ற பொருளைத்தான் இல்லை என்று மறுக்க முடியும். அது போலவே அவர் கடவுள் இல்லை எனும் போது
    வெளியில் இல்லை.. வெளிச்சம் போட்டு பார் உள்ளே இருக்கின்றார் உள்ளத்துக்குள்ளே இருக்கின்றார்
    என்றார் அந்த வென்தாடி வேந்தர் வென்றார் கொன்றார் என தமிழினம் அழிந்ததும் போதும் தமிழகம் அழுததும்.. போதும்
    இப்போ..அம்மா கையில கொடுத்துப் போடு செல்லக்கண்ணு அவங்க ஆற 100 ஆக்குவாங்கன்னு சொல்லுகண்ணுன்னு
    ஆனந்தம் பொங்க ஆங்காங்கே பாடுவதும் தெரியும் தானே/////////

    வெங்காயம்..
    உள்ளுக்குள்ளே என்னவோ இருக்குன்னு உரித்து உரித்துப் பார்த்தால் என்ன இருக்குமோ அது போலத்தான் இந்தக் கடவுளும்..வெங்காயம்..

    ReplyDelete
  34. //லக்கின அதிபன் 6,8,12-ல்
    இருப்பதை விட 6,8,12-ம்
    அதிபதிகளுன் இணைந்து
    இருந்து திசை நடத்துவது,
    அதிகம் தீமையே தருகிறது.//

    இதாவது பரவாயில்லை. எனக்கு லக்னாதிபதி 8ல் இருக்கிறார். 8ம் அதிபதியின் சேர்க்கை இல்லை. பார்வையில் இருக்கிறாரே.

    ReplyDelete
  35. ////minorwall said...
    வெங்காயம்..
    உள்ளுக்குள்ளே என்னவோ இருக்குன்னு உரித்து உரித்துப் பார்த்தால் என்ன இருக்குமோ அது போலத்தான் இந்தக் கடவுளும்..வெங்காயம்..///

    அரை குடம் ததும்பாது
    நிறை குடமும் ததும்பாது..

    atheistகள் என தன்னை காட்டிக்கொள்பவர்கள் NOTHING என்பதில் தொடங்கி அங்கேயே இருப்பார்கள்

    spiritualistகள் என அடையாளம் காண்பவர்கள் EVERYTHINGஎன்பதில் நிலையாக இருப்பார்..

    இருவர் இருப்பிடமும் ஒன்று தான்
    இது NOTHING (no other things)
    அது EVERYTHING

    அய்யர் சொல்வது மைனர் வாலுக்கு புரிந்துள்ளதா என தோழி தேமொழியாரே சொல்லட்டும்..

    ReplyDelete
  36. It depends on how you perceive "GOD"

    God is now here
    God is nowhere

    God is nowhere
    God is now here

    God is now here
    God is nowhere

    ReplyDelete
  37. என்.சி.வசந்தகோகிலம் அவர்களைப் பற்றிய தஞ்சாவூர் ஐயாவின் பதிவின் சுட்டி:
    http://bharathipayilagam.blogspot.com/2011/06/blog-post_05.html
    நினைவு படுத்திய தஞ்சாவூர் ஐயாவிற்கு நன்றி

    ReplyDelete
  38. Indian Copyright Act of 1957, இந்தியக் காப்புரிமை சட்டத்தின்படி பாடலை இயற்றிய கோபாலகிருஷ்ணா பாரதி (மறைவு 1896) பாடிய N.C. வசந்த கோகிலம் (மறைவு 1951) மறைந்து அறுபதாண்டுகள் முடிந்துவிட்டதாலும் மற்றும் Sound records those are sixty years from the beginning of the calendar year next following the year in which the work is first published என்ற பிரிவின் கீழும் தந்தை தாய் இருந்தால் என்ற பாடல் மக்களின் பொது உபயோகத்திற்கு வந்துவிட்டது. குறிப்பாக N.C. வசந்த கோகிலம் அவர்கள் பாடிய பாடல்கள் அனைத்துமே 60 ஆண்டுகளுக்கு முன்பே வெளியிடப் பட்டதால், இறுதியில் குறிப்பிட விதியின் படி காப்புரிமை நீங்கியுள்ளது

    ReplyDelete
  39. ///Blogger kmr.krishnan said...
    கோபால கிருஷ்ண பாரதியார் நந்தனார் சரித்திரம் கதாகாலட்சேபம் தானே எழுதி செய்து கொண்டிருந்தவர். 'எப்போவருவாரோ...?'போன்ற அழியாத‌ சாஹித்யங்களைச் செய்தவர். அவரது பாடலை முழுதும் வெளியிட்டமைக்கு நன்றி. கேள்வி பதில் மீள் பதிவு அருமை./////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கும், பாராட்டிற்கும் நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  40. ////Blogger kmr.krishnan said...
    ///நன்றாகத்தான் சொல்லியிருக்கிறார்...ஆனால் பாவம் அவரை திட்ட ஒரு கூட்டமே இருக்கிறதே.////
    அவரும் திட்டுவதில் மற்றவர்களுக்குச் சளைத்தவரில்லையே!/////

    அதனால்தான் அவரால் நிலைத்து நிற்க முடிந்தது!

    ReplyDelete
  41. Blogger Udhaya Kumar said...
    குருவிற்கு வணக்கம்
    உள்ளேன் ஐயா,/////

    உங்களின் வருகைப் பதிவிற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  42. /////Blogger தேமொழி said...
    பாண்டியனுக்கு மன்றல் வாழ்த்துக்கள்...
    புலம்பல் வந்ததும் மன்றல் வந்ததா?
    மன்றல் என்றதும் புலம்பல் வந்ததா? .......என்று பாடத் தோன்றுகிறது//////

    எது முன்னால் வந்ததாக இருந்தால் என்ன? அம்மணி வந்ததும் புலம்பல் நின்றால் சரிதான்!

    ReplyDelete
  43. //////Blogger Thanjavooraan said...
    நிந்தா ஸ்துதி என்பது இதுதான். சிவபெருமானை நிந்தனை செய்வது போல் அவன் பெருமைகளை எடுத்துக் கூறும் மிக அரிய பாடல் இது. இந்தப் பாடலின் முழு வடிவத்தையும் சகோதரி தேமொழி கொடுத்திருக்கிறார். ஆனால் மேடையில் பாடும் கலைஞர்கள் இந்த வரிகள் அனைத்தையும் அப்படியே பாடுவதில்லை. கல்லால் ஒருவன் அடிக்க (சாக்கிய நாயனாரைக் குறிப்பிடுவது); காலால் ஒருவன் உதைக்க (கண்ணப்ப நாயனார். அடுத்த வரியிலுள்ள செருப்புக் காலால் என்பது ரசப்படவில்லை); வில்லால் ஒருவன் அடிக்க (அர்ஜுனன் காண்டீபத்தால் போரிட்டது); பிரம்பால் ஒருவன் அடிக்க (மதுரையில் பிட்டுக்கு மண் சுமந்து பாண்டியனின் பிரம்பினால் அடிபட்டது) இவைகளை மட்டுமே பாடுவார்கள். அதிலும் இந்தப் பாடலை பிரபலப்படுத்தியது என்.சி.வசந்தகோகிலம் அவர்கள்தான். நாகப்பட்டினத்தில் மிக எளிய குடும்பத்தில் இருந்த இவர் சென்னை சென்று திரைப்படங்களில் பாடியும் நடித்தும் பிரபலமானது ஒரு வரலாறு. இவரைப் பற்றிய வாழ்க்கைக் குறிப்பை என்னுடைய வலைப்பூவான http://www.bharathipayilagam.blogspot.com எனும் இந்தத் தளத்தில் பார்க்கலாம். மிக இளம் வயதில் இவர் இறக்காமல் இருந்திருந்தால் கர்நாடக இசை உலகை இவர் ஒரு அசைப்பு அசைத்திருப்பார் என்பதில் ஐயமில்லை. உங்கள் அனைவரின் கூட்டு முயற்சிக்குப் பாராட்டுக்கள்.//////

    உங்களின் நீண்ட தகவல்கள் பொதிந்த பின்னூட்டத்திற்கு நன்றி கோபாலன் சார்!

    ReplyDelete
  44. //////Blogger Ravi said...
    Email : 54
    question:
    1.எல்லா கிரகங்களுக்கும் நேரடிப் பார்வை என்பது, 7- ஆம் பார்வை; இதில் எதை எது பார்க்கிறது என்று கொள்ளவேண்டும்? 1.எதிரெதிரே பார்க்கும் கிரகங்கள் ஒன்றை ஒன்றுப் பார்க்கும் போது எதனுடையப் பலன் மிகும்? உம்:- தனுசு லக்னம், 5-இல் குரு 11-இல் சந்திரன்.
    answer:
    பலன் எது மிகும் என்பதற்கு, சுய அட்டகவர்க பலனை பாருங்கள். சந்திரனின் பரல்கள் அதிகமெனில் சந்திரனுக்கு மார்க் - இல்லை என்றால் குருவுக்கு மார்க்.///////

    கரெக்ட். புரிதலுக்கு நன்றி!

    ReplyDelete
  45. ////Blogger minorwall said...
    ///Blogger அய்யர் said...
    ////தேமொழி said...
    ஆனால் பாவம் அவரை திட்ட ஒரு கூட்டமே இருக்கிறதே.////
    அது தவறு என அய்யர் சொல்வதால் தான் புரியாமலே அய்யர் புலம்புவதாக பலர் சொல்கின்றனர்..
    இருக்கின்ற பொருளைத்தான் இல்லை என்று மறுக்க முடியும். அது போலவே அவர் கடவுள் இல்லை எனும் போது
    வெளியில் இல்லை.. வெளிச்சம் போட்டு பார் உள்ளே இருக்கின்றார் உள்ளத்துக்குள்ளே இருக்கின்றார்
    என்றார் அந்த வென்தாடி வேந்தர் வென்றார் கொன்றார் என தமிழினம் அழிந்ததும் போதும் தமிழகம் அழுததும்.. போதும்
    இப்போ..அம்மா கையில கொடுத்துப் போடு செல்லக்கண்ணு அவங்க ஆற 100 ஆக்குவாங்கன்னு சொல்லுகண்ணுன்னு
    ஆனந்தம் பொங்க ஆங்காங்கே பாடுவதும் தெரியும் தானே/////////
    வெங்காயம்..
    உள்ளுக்குள்ளே என்னவோ இருக்குன்னு உரித்து உரித்துப் பார்த்தால் என்ன இருக்குமோ அது போலத்தான் இந்தக் கடவுளும்..வெங்காயம்../////

    வாழ்க்கையும் வெங்காயம்தான் மைனர். எல்லாம் மாயை (illusion) கடைசியில் என்ன மிஞ்சுகிறது?

    ReplyDelete
  46. /////Blogger ananth said...
    //லக்கின அதிபன் 6,8,12-ல்
    இருப்பதை விட 6,8,12-ம்
    அதிபதிகளுன் இணைந்து
    இருந்து திசை நடத்துவது,
    அதிகம் தீமையே தருகிறது.//
    இதாவது பரவாயில்லை. எனக்கு லக்னாதிபதி 8ல் இருக்கிறார். 8ம் அதிபதியின் சேர்க்கை இல்லை. பார்வையில் இருக்கிறாரே.//////

    அப்படி எல்லாம் இடக்கு மடக்காக இருப்பதனால்தான் அந்த 337 என்ற மதிப்பெண் அனைவருக்கும் சமமாகக் கிடைக்கிறது!

    ReplyDelete
  47. Blogger அய்யர் said...
    ////minorwall said...
    வெங்காயம்..
    உள்ளுக்குள்ளே என்னவோ இருக்குன்னு உரித்து உரித்துப் பார்த்தால் என்ன இருக்குமோ அது போலத்தான் இந்தக் கடவுளும்..வெங்காயம்..///
    அரை குடம் ததும்பாது
    நிறை குடமும் ததும்பாது..
    atheistகள் என தன்னை காட்டிக்கொள்பவர்கள் NOTHING என்பதில் தொடங்கி அங்கேயே இருப்பார்கள்
    spiritualistகள் என அடையாளம் காண்பவர்கள் EVERYTHINGஎன்பதில் நிலையாக இருப்பார்..
    இருவர் இருப்பிடமும் ஒன்று தான்
    இது NOTHING (no other things)
    அது EVERYTHING
    அய்யர் சொல்வது மைனர் வாலுக்கு புரிந்துள்ளதா என தோழி தேமொழியாரே சொல்லட்டும்..//////

    ஒரு உதாரணத்துடன் சொல்லியிருக்கலாமே விசுவநாதன்!

    உண்டு என்றால் அது உண்டு
    இல்லை என்றால் அது இல்லை
    தெய்வம் என்றால் அது தெய்வம்
    வெறும் சிலை என்றால் அது சிலைதான்!
    - கவியரசர் கண்ணதாசன்

    ReplyDelete
  48. ////Blogger தேமொழி said...
    It depends on how you perceive "GOD"
    God is now here
    God is nowhere

    God is nowhere
    God is now here

    God is now here
    God is nowhere/////

    God is not an object to see:It is to be felt!
    Swamiji Dayanandha Sarasvathi

    ReplyDelete
  49. Blogger தேமொழி said...
    Indian Copyright Act of 1957, இந்தியக் காப்புரிமை சட்டத்தின்படி பாடலை இயற்றிய கோபாலகிருஷ்ணா பாரதி (மறைவு 1896) பாடிய N.C. வசந்த கோகிலம் (மறைவு 1951) மறைந்து அறுபதாண்டுகள் முடிந்துவிட்டதாலும் மற்றும் Sound records those are sixty years from the beginning of the calendar year next following the year in which the work is first published என்ற பிரிவின் கீழும் தந்தை தாய் இருந்தால் என்ற பாடல் மக்களின் பொது உபயோகத்திற்கு வந்துவிட்டது. குறிப்பாக N.C. வசந்த கோகிலம் அவர்கள் பாடிய பாடல்கள் அனைத்துமே 60 ஆண்டுகளுக்கு முன்பே வெளியிடப் பட்டதால், இறுதியில் குறிப்பிட விதியின் படி காப்புரிமை நீங்கியுள்ளது/////

    மேலதிகத் தகவல்களுக்கு சகோதரி!

    ReplyDelete
  50. ///God is not an object to see:It is to be felt!
    Swamiji Dayanandha Sarasvathi///

    அறிவது வேறு
    புரிவது வேறு
    தெரிவது வேறு
    உணர்வது வேறு

    கடவுள் வேறு
    தெய்வம் வேறு
    ஆண்டவன் வேறு
    இறைவன் வேறு

    பேதம் வேறு
    வாதம் வேறு
    தீவிரவாதம் வேறு
    விதண்டா வாதம் வேறு

    இப்படி வேறுபடுத்தி
    ஆழ்ந்து தெளிந்தால்

    நமக்குள் ஏன் பேதம்
    நம்மிடத்தில் யார் செய்வார் வாதம்

    தெய்வம் என்றால் அது தெய்வம் - வெறும்
    சிலையென்றால் அது சிலைதான்

    உண்டென்றால் அது உண்டு
    இல்லையென்றால் அது இல்லை

    என சொல்லும்

    கண்ணதாசனின் பாடல் வரிகள்
    சுழல விடுகிறோம்..

    உள்ளம் என்பது ஆமை - அதில்
    உண்மை என்பது ஊமை

    சொல்லில் வருவது பாதி - நெஞ்சில்
    தூங்கிக் கிடக்குது நீதி (உள்ளம் என்பது)

    தெய்வம் என்றால் அது தெய்வம் - வெறும்
    சிலையென்றால் அது சிலைதான்
    (மனதை தொடும் வரிகள்)

    உண்டென்றால் அது உண்டு
    இல்லையென்றால் அது இல்லை

    தண்ணீ தணல் போல் எரியும் - சென்
    தணலும் நீராய்க் குளிரும்

    நண்பரும் பகை போல் தெரியும் - அது
    நாட்பட நாட்படப் புரியும்

    ReplyDelete
  51. /////கடவுள் வேறு
    தெய்வம் வேறு
    ஆண்டவன் வேறு
    இறைவன் வேறு//////

    எந்த வெங்காயமாக இருப்பினும் உரித்துப் பிரித்து ஆராய்ந்தால் இறுதி ஆராய்ச்சி முடிவு ஒன்றுதான்..

    ////அறிவது வேறு
    புரிவது வேறு
    தெரிவது வேறு
    உணர்வது வேறு /////
    கடவுளை அறிந்தேன் /புரிந்தேன்/தெரிந்தேன்/உணர்ந்தேன் என்பார் சித்தப் பிரமை பிடித்தவருக்கு ஒப்பானவரே..

    ReplyDelete
  52. //////அரை குடம் ததும்பாது
    நிறை குடமும் ததும்பாது../////

    தன்னைத் தானே நிறைகுடம் என்று சொல்லிக் கொண்டுவிட்டால் நிறைகுடம் ஆகிவிடலாம் என்று மனப்பால் குடிப்பது தவறு..

    'முற்றறக் கல்லாரும்,
    முற்றும் கற்றாரும் இலர்' என்ற பொருளிலே இருக்கும் பழைய வரிகளை அய்யருக்கு நினைவூட்டுகிறேன்..

    ////வென்தாடி வேந்தர் வென்றார் கொன்றார் என தமிழினம் அழிந்ததும் போதும் தமிழகம் அழுததும்.. போதும்
    இப்போ..அம்மா கையில கொடுத்துப் போடு செல்லக்கண்ணு அவங்க ஆற 100 ஆக்குவாங்கன்னு சொல்லுகண்ணுன்னு
    ஆனந்தம் பொங்க ஆங்காங்கே பாடுவதும் தெரியும் தானே/////////

    சமீபத்து நாடகத்திலே விடுதலை ஆன பெரியவர் நடராசனார் டிவி பேட்டியிலே கேட்டிருக்கும் கேள்விகளுக்குப் பதில் தெரியாத ஆட்களின் புலம்பலைக் கேட்க விரும்பவில்லை..

    அதிலே முக்கியமான விஷயமாக ஒன்றைச் சொல்லுகிறார்..

    ஒரு மணிநேரம் நின்று சுயமாக அறிக்கை எழுதி வாசிக்கக்கூடத் தெரியாதவர்தான் நீங்கள் கொண்டாடும் அம்மா என்றும், இதுநாள் வரை அவரை இயக்கி வந்ததே தான்தான் என்றும் பகிரங்கமாகச் சவால் விடுகிறார்..

    சிரிப்புத்தான் வருகிறது..

    ReplyDelete
  53. minorwall said...
    /////எந்த வெங்காயமாக இருப்பினும் உரித்துப் பிரித்து ஆராய்ந்தால் இறுதி ஆராய்ச்சி முடிவு ஒன்றுதான்.. ///

    அதைத்தானே நாம் எல்லோரும் சொல்லிக்கொண்டிருக்கின்றோம்..

    இதில் நீங்களோ அய்யரோ எங்கே வேறுபடுகின்றார் என்பது உங்கள் வார்த்தைகளில் புரியவில்லை..

    ////கடவுளை அறிந்தேன் /புரிந்தேன்/தெரிந்தேன்/உணர்ந்தேன் என்பார் சித்தப் பிரமை பிடித்தவருக்கு ஒப்பானவரே.///

    முழுக்க முழுக்க சரி..யே...
    கடவுளை கண்டுபிடித்தவன் காட்டுமிராண்டி இது தானே பெரியாரின் கூற்று..

    ReplyDelete
  54. minorwall said...
    //////தன்னைத் தானே நிறைகுடம் என்று சொல்லிக் கொண்டுவிட்டால் நிறைகுடம் ஆகிவிடலாம் என்று மனப்பால் குடிப்பது தவறு....////

    ஆம்.. சரி தான்..
    நிறைந்த குடத்தில் பால் மட்டுமல்ல எதை ஊற்றினாலும் வழிந்து ஓடும்..


    ///'முற்றறக் கல்லாரும்,
    முற்றும் கற்றாரும் இலர்' என்ற பொருளிலே இருக்கும் பழைய வரிகளை அய்யருக்கு நினைவூட்டுகிறேன்..///

    இதனை சில நாட்களுக்கு முன்னர்
    தோழி பார்வதியாரின் எண்ணங்களுக்கு பதில் அளிக்கையில் எழுதி இருந்தது
    அப்படியானால் அரைகுறைகள் பட்டியலில் மேலும் இரண்டை சேர்த்துக் கொள்ளலாம்..


    ///ஒரு மணிநேரம் நின்று சுயமாக அறிக்கை எழுதி வாசிக்கக்கூடத் தெரியாதவர்தான் நீங்கள் கொண்டாடும் அம்மா என்றும், இதுநாள் வரை அவரை இயக்கி வந்ததே தான்தான் என்றும் பகிரங்கமாகச் சவால் விடுகிறார்.. சிரிப்புத்தான் வருகிறது...////

    இதில் சிரிப்பதற்கு எதுவும் இருப்பதாக தெரியவில்லை....
    எதுவும் தெரியாமலே இப்படி கொண்டாடும் நிலையில் இருப்பவரை எண்ணி பாராட்டும் நல்ல மனது உடையவர்கள் நம்மவர்களில் குறைவு தான்...

    அது சரி..
    எல்லாம் தெரிந்தவரும் இல்லை
    எதுவும் தெரியாதவரும் இல்லை..

    இது தெரியாததா என்ன..?

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com