மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

26.11.11

வாருங்கள், வாரணாசியில் ஷாப்பிங் செய்வோம்!

----------------------------------------------------------------------------------------
வாருங்கள், வாரணாசியில் ஷாப்பிங் செய்வோம்!
நம் நாடு மொத்தமும் ஆன்மிக பூமி. பல மகான்கள் அவதரித்த பூமி. எல்லா இடங்களிலும் இறைவன் இருக்கிறார் என்பதுதான் நமது சித்தாந்தம். ஒட்டு மொத்த இந்தியாவும் புண்ணிய ஸ்தலம்தான். எல்லா இடங்களிலும் இறைவன் இருக்கிறார் என்னும்போது எல்லா இடங்களும் புண்ணிய ஸ்தலம்தான். அதில் மாற்றுக் கருத்திற்கு இடமில்லை!

மோட்சத்தையும், முக்தியை நாம் தேடிப்போக வேண்டாம். முக்தி நம்மைத் தேடி வர வேண்டும். நாம் செய்யும் நல்ல செயல்களால், அறச் செயல்களால், தர்மச் செயல்களால் அது சாத்தியப்படும். பணம் படைத்தவர்கள் பணத்தை வைத்து பல அறச் செயல்களைச் செய்யலாம். பணவசதி இல்லாதவர்கள். உடல் உழைப்பால் பல தர்மச் செயல்களைச் செய்யலாம். வலிமையான மனம் மற்றும் அறிவு படைத்தவர்கள் அதைவைத்துப் பல அறச் செயல்களைச் செய்யலாம்.

வலைப்பதிவில் என் அரிய நேரத்தைச் செலவழித்து ஆறு ஆண்டுகளாக நான் எழுதிக்கொண்டிருப்பதும் ஒரு அறச் செயல்தான்! பாடம் நடத்திக்கொண்டிருப்பதும் ஒரு அறச் செயல்தான்!

நாம் பிறந்த பூமிதான் நமக்குப் புண்ணிய பூமி. அதுதான் நமக்கு சொர்க்க பூமி. அதை மனதில் கொள்க!

எத்தனையோ இடங்களைப் பற்றிய செய்திகளைப் படிக்கின்றோம். அத்தனை இடங்களுக்கும் நம்மால் செல்ல முடியாது. பார்க்க முடியாது. ஆகவே சென்ற வரைக்கும், பார்த்தவரைக்கும் சந்தோஷப்படுவோம். அது மட்டுமே நாம் செய்ய வேண்டியதும் திருப்திப்பட வேண்டியதும் ஆகும்!
-----------------------------------------------------------------------------------------------------
சரி, இனி இன்றைய கட்டுரைக்குப் போவோம்.

வாரணாசியைப் பற்றி நிறைய எழுதிவிட்டேன். ஜோதிர்லிங்க ஸ்தலங்களில் வாரணாசிக்குத்தான் முதல் இடம். வாய்ப்புக் கிடைக்கும்போது சென்று வாருங்கள்.

கருட புராணம் ஏழு ஸ்தலங்களை மோட்சம் கொடுக்கும் இடங்களாகச் சொல்கிறது.

1. அயோத்யா (உத்திரப்பிரதேசம்)
2. மதுரா (உத்திரப்பிரதேசம்)
3. ஹரித்துவார் (மாயா - உத்திரகாண்ட் மாநிலம்)
4. காசி (வாரணாசி - உத்திரப்பிரதேசம்)
5. காஞ்சி (தமிழ்நாடு)
6. உஜ்ஜெயின் (அவந்திகா - மத்தியப்பிரதேசம்)
7. துவாரகை (ஜாம்நகர் மாவட்டம், குஜராத்)

ஏழு இடங்களுக்கும் சென்றால்தான் மோட்சம் என்றில்லை. அவற்றில் ஒரு இடத்திற்குச் சென்றாலும் அந்தப் பலன் உண்டு!

செல்வதால் மட்டுமே மோட்சம் கிடைத்துவிடுமா? கிடைக்காது.

டாஸ்மாக் பார்ட்டிகள், அஜால்-குஜால் பார்ட்டிகள், ஊரை அடித்து உலையில் போடும் ஆசாமிகள் போன்றவர்கள், எத்தனை முறை அந்த இடங்களுக்குச் சென்றாலும் மோட்சம் கிடைக்காது.

தீய செயல்களைச் செய்யாமல் இருந்தாலே போதும். மோட்சம் கிடைக்கும். மோட்சம் நம்மைத் தேடி வரும்

கங்கா தேவிக்கு ஆராதனை நடைபெறுகிறது Ganga Arti
 ------------------------------------------------------------------------------------------------------
வாரணாசியைப் பார்த்துவிட்டீர்கள். அடுத்து என்ன?



வாரணாசிக்குச் செல்பவர்களுக்கு ராமபிரானின் ஜென்ம பூமியான அயோத்திக்குச் சென்றுவரும் ஆசை இருக்கும். வாரணாசியில் இருந்து
அயோத்யா 180 கிலோ  மீட்டர் தூரத்தில் உள்ளது. நான்கு சக்கர வாகனத்தில் சென்றால் 4 மணி நேரப் பயணம்.

அயோத்தியாவின் இணையதள முகவரியைக் கீழே கொடுத்துள்ளேன். அதிலேயே அயோத்தியாவைப் பற்றிப் படித்துவிடுங்கள் போதும். அங்கே நீங்கள் செல்ல வேண்டாம். ராமர் ஒன்றும் கோபித்துக்கொள்ள மாட்டார். அங்கே அநியாயத்திற்குக் கெடுபிடி என்று கேள்விப்பட்டேன்.  Security check. 3,000 மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் உள்ளார்களாம்.

அவர்களில் 2 பேர்கள், செல்லும் வழியில் 3 அல்லது 4 இடங்களில் உங்கள் சட்டைப்பைகளில் கை விடுவார்கள். இடுப்பு, அக்குள் பிரதேசங்களில் தடவிப்பார்ப்பார்கள். பெண்கள் என்றாலும் தப்பிக்க முடியாது. பணியில் பெண்காவலர்கள் உள்ளார்கள். ராமபிரானும், சீதாபிராட்டியாரும் வந்தாலும் அவர்களுக்கும் இந்த செக்யூரிட்டி செக் உண்டு! அந்த அளவிற்குக் கெடுபிடி!

அத்தனை சிரமங்களுக்கிடையே சென்று எதைப் பார்க்கப்போகிறீர்கள்? 200 அடி தூரத்தில் இருந்து, இராமர் - பாபர் மசூதி தகராறில் இடிபட்ட கட்டட மிச்சங்களைப் பார்த்துவரலாம். அவ்வளவுதான்.

வேஸ்ட். அதனால் செல்லாதீர்கள். இருந்த இடத்தில் (அதாவது வாரணாசியில்) இருந்தே ராமரை நினைத்துக்கொள்ளுங்கள் போதும்!

URL for the Article on Ayodhya: http://en.wikipedia.org/wiki/Ayodhya

அதெல்லாம் முடியாது சென்று வருவேன் என்று அடம் பிடிப்பவர்களுக்காக அயோத்தியாவில் உள்ள நகரத்தார் விடுதியின் முகவரியைக் கீழே கொடுத்துள்ளேன். தாராளமாகச் சென்று, தங்கி, அதிகாலையில் எழுந்து திவ்யமாக ராமஜென்ம பூமியைத் தரிசித்து விட்டு வாருங்கள்.
வாழ்த்துக்கள்!!!!

Nattukkottai Nagara Satram
Natkot Sri Ram Mandhir
Baboo Bazar
Ayodhya - 224123
Faizabad
Uttar Pradesh
Phone No: 05278 - 232703
-------------------------------------------------------------------------------------------------------------
அடுத்து?
காயாவில் உள்ள ஃபல்கு நதி!

வாரணாசியில் இருந்து கயா 210 கிலோ  மீட்டர் தூரத்தில் உள்ளது. இந்துக்கள், பெளத்தர்கள் என்று இரு சாராருக்குமே கயா ஒரு புனித ஸ்தலம். கயாவைப் பற்றிய விவரங்களுக்கான சுட்டியைக் கீழே படித்துப் பாருங்கள்.

URL for the Article on Gaya: http://en.wikipedia.org/wiki/Gaya,_India

கயாவில் நகரத்தார் விடுதி உள்ளது. அதன் முகவரி:

Nattukkottai Nagara Satram,
No.171, Chand Chowra
Gaya - 823 001
Bihar State
Telephone No: 0632 - 2226480
-----------------------------------------------------------------------------------------------------------------
அடுத்து?


மூன்று நதிகள் சங்கமிக்கும் அலாகாபாத்!

வாரணாசியில் இருந்து அலாகாபாத் 125 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. நான்கு சக்கர வாகனத்தில் சென்றால் 3 மணி நேரப் பயணம்.

அலகாபாத் முப்புறமும் யமுனை, கங்கை ஆகிய இரண்டு பெரிய நதிகளால் சூழப்பெற்ற ஊர். எங்கே சென்றாலும் வழியில் பிரமாண்டமான, நீண்ட பாலங்கள் உள்ளன.

யமுனை, கங்கை மற்றும் ஊற்றாக உள்ள சரஸ்வதி ஆகிய 3 நதிகளும் சங்கமிக்கும், அதாவது ஒன்றுடன் ஒன்று சேரும், கலக்கும் இடத்திற்குத் திரிவேணி சங்கமம் என்று பெயர். படகில் அழைத்துச் செல்வார்கள். சுற்றிலும் பார்ப்பதற்கு நம்மியமாக இருக்கிறது. அவசியம் சென்று வாருங்கள்.

அலாகாபாத்தில் உள்ள மற்றுமொரு முக்கியமான இடம். இரண்டு முன்னாள் பிரதமர்கள் பிறந்த மாளிகையான ஆனந்தபவனம். ஆமாம் திரு.ஜவஹர்லால் நேரு மற்றும் அவருடைய அன்பு மகள் திருமதி.இந்திரா பிரியதர்சினி ஆகியோர் பிறந்த மாளிகை அது. இப்போது அந்த மாளிகை நாட்டிற்கு அர்ப்பணிக்கபெற்று, தேசிய வரலாற்றுச் சின்னமாகிவிட்டது.

பரத்வாஜர் ஆசிரமம் உள்ளது. அதையும் பார்த்து வாருங்கள்

Bharadwaja was one of the greatest Hindu sages (Maharshis) descendant of rishi Angirasa, whose accomplishments are detailed in the Puranas. He was one of the Saptarshis (Seven Great Sages Rishi) in the present Manvantara; with others being Atri, Vashishtha, Vishvamitra, Gautama, Jamadagni, Kashyapa. Bhardwaj Rishi was father of Guru Dronacharya and grandfather of Ashwatthama. Bhardwaj Maharishi, a sage of the Vedic period, is renowned for his thirst for knowledge. He attained extraordinary scholarship and the power of meditation.

அனுமார் கோவில் ஒன்று உள்ளது. சிறப்பானது. அதையும் பார்த்து வாருங்கள்
http://en.wikipedia.org/wiki/Allahabad

அலாகாபாத்தில் நகரத்தார் விடுதி உள்ளது. யமுனை ஆற்றங்கரையில் உள்ளது. 200 பேர்கள் வரை தங்கும் அளவிற்கு வசதியானது. 3 வேளை உணவு வசதியும் அங்கே உள்ளது. ஆனால் முன் கூட்டியே வருகையைத் தொலைபேசியில் சொல்லி விட்டுச் செல்ல வேண்டும்! அதுதான் நல்லது.அதன் முகவரி:

Nattukkottai Nagara Satram,
149, Mori, Daraganj,
Allahabad - 211 006 (U.P)
Telephone No: 0532 - 2501275
----------------------------------------------------------------------
வாரணாசியில் இருந்து இந்த இடங்களுக்கெல்லாம் சென்று வர வாகனங்கள் தாராளமாகக் கிடைக்கும். 4 பேர்கள் வரை செல்வதென்றால் இண்டிகா கார் கிடைக்கும், 8 பேர்கள்வரை சென்று திரும்புவதென்றால் டாடா சுமோ வண்டி கிடைக்கும். அதற்கும் மேலான எண்ணிக்கை என்றால் அவற்றிற்குத் தகுந்தார்ப் போல பெரிய வேன்கள் மற்றும் பேருந்துகள் கிடைக்கும்.

வாரணாசி நகர விடுதியில் சொன்னால் ஏற்பாடு செய்து தருவார்கள்.

செலவு: வாரணாசியில் இருந்து அலாகாபாத்திற்கு நாங்கள் 7 பேர்கள் சென்று வந்தோம், தலைக்கு 300 ரூபாய்கள் ஆயிற்று

வாரணாசியை முழுமையாக சுற்றிக் காட்டவும் வாகனங்கள் கிடைக்கும்

உங்களுக்காக Travels  நடத்தும் அன்பரின் முகவரியைக் கொடுத்துள்ளேன். அவர் பெயர் ‘பிமல்’. தெளிவான ஆங்கிலத்தில் பேசுகிறார். ஆகவே பிரச்சினை இல்லை. அவர் மூலமாகவும் நீங்கள் வாகனத்தை ஏற்பாடு செய்து கொள்ளலாம்.

 +++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
காசியில் வாங்க வேண்டிய சாமான்கள்

1. ருத்திராட்சம்
ஐந்துமுக, ஆறுமுக உத்திராட்சங்கள் நிறையக் கிடைக்கும். ஒரு உத்திராட்சத்தின் விலை ஒரு ரூபாய் மட்டுமே!

2. மாலையாக அணிந்து கொள்ள 108 சிறு உத்திராட்சங்கள். ஒரு செட்டின் விலை ரூபாய் நூறு மட்டுமே. பெரிய சைஸ் உத்திராட்சமும் கிடைக்கும் ஒரு செட்டின் விலை இருநூறு ரூபாய். அவற்றை வாங்கிக் கொண்டு வந்து செப்புக்கம்பி அல்லது வெள்ளிக் கம்பியில் கட்டி, கழுத்தில் அணிந்து கொள்ளலாம்.

3. காசித் திருநீறு & குங்குமம். சின்னச் சின்ன கவர்களில் அழகாகக் கிடைக்கின்றது. 10 சின்ன பாக்கெட் அடங்கிய செட்டின் விலை பத்து ரூபாய்கள் மட்டுமே!

4. கையில் அணியும் காசிக்கயிறு. 50 கயிறுகள் கொண்ட செட்டின் விலை பதினைந்து ரூபாய்கள் மட்டுமே

5. காசித் தீர்த்தம். சிறு செம்புகளில் அடைக்கப்பெற்ற கங்கை நீர். பல அளவுகளில் கிடைக்கின்றது. விலை 15ல் துவங்கி 120 வரை செல்கிறது
விருப்பம்போல் வாங்கிக் கொள்ளலாம்.

மேற்கூறிய அனைத்தும் நகரத்தார் விடுதியில் கிடைக்கும்.

அங்கேதான் வாங்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. தெருக்களில் பல கடைகள் உள்ளன. பார்த்து, பேரம் பேசி வாங்கிக் கொள்ளலாம்.

பிறகு பித்தளையில் அன்னபூரணி பதுமைகள், பசுமாடு-கன்றுக்குட்டி பதுமைகள், காப்பர் தட்டுக்கள், சின்னச் செம்புகள், சின்னச் சின்ன விளக்குகள் எல்லாம் கடைகளில் கிடைக்கும். மனதை அள்ளும் விதமாக இருக்கும் பார்த்து வாங்கி வரலாம். நான் வாங்கிய இடம் ஒரு மொத்த வியாபார ஸ்தலம். விடுதியின் அருகில் உள்ளது. அதன் முகவரியைக் கொடுத்துள்ளேன்.



தேனில் ஊறிய நெல்லிக்கனி கிடைக்கும். சுவையாக இருக்கும் ஒரு கிலோ வாங்கினால் 20 முதல் 22 கனிகள் இருக்கும் விலை கிலோ 100 ரூபாய்.
அதை விற்கும் கடைகளில் ஒன்றின் முகவரியைக் கீழே தந்துள்ளேன்.

----------------------------------------------------------------------------
வாராண்சியில் தடுக்கி விழுந்தால் சேலைகள், சுடிதார்கள் விற்கும் கடைகள்தான். விடுதிக்கு  அருகில் உள்ள கடை ஒன்றின் முகவரியைக் கீழே கொடுத்துள்ளேன்

--------------------------------------------------------------------------------

மேற்கூரிய ஐயிட்டங்கள் அனைத்தையுமே அல்லது உங்களுக்குப் பிடித்ததை வாங்கிக்கொண்டு வந்தால், வாராணசிக்குச் சென்று திரும்பிவுடன், உங்களைச் சந்திக்க வரும் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்குக் கொடுப்பதற்குச் செளகரியமாக இருக்கும்.

அவர்கள் மகிழ்வார்கள். கொடுப்பதால் உங்களுக்கும் மகிழ்ச்சி ஏற்படும்.

கொடுப்பதால் எப்போதுமே மகிழ்ச்சிதான் ஏற்படும். அதை உணருங்கள்
---------------------------------------------------------------------------
-------------------------------------------------------------------------------
மேலதிகத் தகவல்கள்





காசி பயணக்கட்டுரை நிறைவுறுகிறது

அன்புடன்
வாத்தியார்

-------------------------------------------------------------------------------





வாழ்க வளமுடன்!

58 comments:

  1. ஐயா காலை வணக்கம்.
    இனிதான பயணக்கட்டுரையை தெளிவாக விளக்கியமைக்கு நன்றிகள் பல.
    பயணத்தின் போது மிகவும் உபயோகமாக இருக்கும்.

    ReplyDelete
  2. ///ராமபிரானும், சீதாபிராட்டியாரும் வந்தாலும் அவர்களுக்கும் இந்த செக்யூரிட்டி செக் உண்டு! அந்த அளவிற்குக் கெடுபிடி!///
    ஹ..ஹ..ஹா... நல்ல நகைச்சுவை.

    ///ஊரை அடித்து உலையில் போடும் ஆசாமிகள் போன்றவர்கள் எத்தனை முறை அந்த இடங்களுக்குச் சென்றாலும் மோட்சம் கிடைக்காது///
    சரியாகச் சொன்னீர்கள்... மோட்சம் கிடைக்கும் என்றால் போட்டுத் தள்ளிய ஆயுதத்தை கங்கை நீரில் கழுவி விட்டு, கையோடு முழுக்கும் போட்டு விட்டு வந்து விடுவார்கள் புண்ணியவான்கள்!!!

    ///கொடுப்பதால் எப்போதுமே மகிழ்ச்சிதான் ஏற்படும். அதை உணருங்கள்///
    நல்ல அறிவுரை ...நன்றி

    சிரத்தையுடன் வரைந்து வெளியிட்ட "காசி கயா வரைபடம்" பதிவிடும் உங்கள் அறச் செயலின் ஆர்வத்திற்கு சான்று, நல்ல தகவல்களுக்கு நன்றி ஐயா.

    ReplyDelete
  3. தங்கள் காசி யாத்திரை கட்டுரைத் தொடரைப் படித்தவர்கள், அங்கெல்லாம் செல்லும்போது சிரமமின்றி சென்று வரலாம். எங்கு தங்குவது, என்னென்ன அங்கு சிறப்பானது, எப்படிச் செல்ல வேண்டும், என்னவெல்லாம் வாங்க வேண்டும், மொழிச் சிக்கல் இல்லாமல் தமிழிலேயே பேசி பொருட்கள் வாங்கக்கூடிய இடங்கள் இவை அனைத்தையும் தெரிந்து கொள்ள முடிந்தது. எல்லோருமே காசிக்கோ, வேறு முக்கிய இடங்களுக்கோ சென்று வரலாம்; அது பெரிதல்ல. அங்கு சென்று வந்த விவரங்களை இத்தனை விரிவாகப் பிறருக்குப் பயன்படும் வகையில் சொன்னதும், படங்கள் மூலம் பல விவரங்களை எடுத்துச் சொன்னதும் மிகவும் சிறப்பான பணி. சிலரால் மட்டுமே எடுத்துக்கொண்ட காரியங்களை உருப்படியாக செய்து முடிக்க முடியும். அதில் ஆசிரியர் ஒருவர். தங்கள் சாதனைகள் தொடரட்டும். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. Dear sir,
    Thanks for your valuable information.
    J.SENDHIL

    ReplyDelete
  5. பயணக்கட்டுரையை தெளிவாக விளக்கியமைக்கு நன்றிகள் பல.

    ReplyDelete
  6. புனித பயணத்தை
    நிறைவாக தந்தமைக்கு நன்றிகள்..

    முறையாக பட்டியலிட்டு..
    முத்தாய்ப்பாக வேண்டியதை வாங்க

    ஆலோசனையையும் தந்து
    அனைத்தையும் அள்ளிதந்த உங்களுக்கு

    ஓராயிரம் நன்றிகளை தமிழ் எழுத்து
    ஒவ்வொன்றும் சொல்லும், ஐயமில்லை

    வாழ்க.. வாழ்க,,, வாழ்க...
    உம்மோடு நாங்களும்..

    ReplyDelete
  7. //நம் நாடு மொத்தமும் ஆன்மிக பூமி. பல மகான்கள் அவதரித்த பூமி. எல்லா இடங்களிலும் இறைவன் இருக்கிறார் என்பதுதான் நமது சித்தாந்தம்.//

    எல்லார் மனதிலும் இறைவன் இருக்கிறார் என்றும் சேர்த்துக்கொள்ளலாமே. காசி பயணம் செய்தது மட்டுமல்லாமல் தான் பெற்ற இன்பம் (அ) புண்ணியம் எல்லோரும் பெற வேண்டும் என்ற நல் நினைப்பு தான் இறைவன். விரிவான 4 போஸ்ட் தட்டச்சு, ஸ்கேனிங் செய்து பதிவிட எடுத்துக் கொண்ட முயற்சி தான் இறைவன்.
    எல்லார் வீட்டிலும் இறைவன் வசிக்கிறார். அம்மையப்பன்....அம்மா அப்பா என்ற இரு ரூபத்தில்.... அம்மாவுக்கு கணபதியாகவும், அப்பாவிற்கு முருகனாகவும் இருங்கள்....எல்லாம் வசப்படும். அதைவிட்டு விட்டு, ராமா, கிருஷ்ணா என்றால் எதுவும் புரிபடவில்லை என்று தான் அர்த்தம். கணபதியையும், முருகனையும் ஆராய்ந்து பார்த்தால் எல்லாம் புரிபடும்.

    //மோட்சத்தையும், முக்தியை நாம் தேடிப்போக வேண்டாம். முக்தி நம்மைத் தேடி வர வேண்டும். நாம் செய்யும் நல்ல செயல்களால், அறச் செயல்களால், தர்மச் செயல்களால் அது சாத்தியப்படும்.//
    நன்றாகச் சொன்னீர்கள். முக்தி என்பது கடையில் விற்கும் பொருள் அல்ல. முக்தி என்பது நமது செயல்களின் விளைவு, இங்கு செயல் என்பது மனது, சிந்தை, சொல், உடம்பு என்று அனைத்துயும் உள்ளடங்கியது.

    //கருட புராணம் ஏழு ஸ்தலங்களை மோட்சம் கொடுக்கும் இடங்களாகச் சொல்கிறது.//
    ஏதோ போன ஜென்ம புண்ணியமோ என்னவோ, இதுவரை காஞ்சி, மதுரா, உஜ்ஜெய்ன் தரிசினம் ஆகிவிட்டது. உஜ்ஜெயின் மகா காலேஸ்வர் அதிகாலை மயான சாம்பல் பூஜை காண வேண்டிய ஓன்று. இந்த டிசம்பர் நடுவில் ஹரித்துவார் தர்சனமும் ஆகி விடும் என்று நினைக்கிறேன். அயோத்யாவும், துவாரகாவும் வெயிட்டிங் லிஸ்ட் இருக்கட்டும். ஆகா! இங்கும் ராமா, கிருஷ்ணா ...எங்கு சென்றாலும் ஹரே ராமா ஹரே கிருஷ்ணா ...

    அயோத்யாவில் ராம ஜயம் எழுதும் பக்தர்களுக்கான ஒரு இண்டர்நேஷனல் பாங்க் உள்ளது. ராம ஜயம் எழுதி அதில் டிபாஸிட் செய்யலாம். ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கை தாண்டியவுடன், சில்வர் மற்றும் தங்க காசு பெறலாம். குழந்தை பிராயத்திலிருந்தே பழக்கப்படுத்தினால் காசுடன் புண்ணியமும் சேரும்.

    வாரணாசி, அலகாபாத், கயா உடன் சாரனாத், புத்கயா, நாலந்தா, ராஜ்கிர் என்று ஒரு சர்க்யூட் அய்யர் சொன்னது போல் போட்டுக்கொண்டால் எல்லாவற்றையும் பார்க்கலாம்.

    thanks a lot to you sir...for this detailed travelogue....after manian, leno tamilvanan, your style is something very unique....

    வைஷ்ணோ தேவி யாத்திரை செய்தவர்கள் தங்கள் அனுபவங்களை கருத்துக்களாக இட்டால் எனக்கு உதவியாய் இருக்கும். டிசம்பரில் டில்லியில் இருக்கும் போது போய் வரலாம் என்று ஒரு ஐடியா

    ReplyDelete
  8. நல்ல பயணக்கட்டுரை, ஐயா. தகவல்களுக்கு நன்றி.

    ReplyDelete
  9. தகவல் களஞ்சியம்... புண்ணிய யாத்திரைப் பற்றிய அறியத் தகவல்கள் கொடுப்பதே அறச்செயல் தானே... அதை அருமையாகச் செய்த ஆசிரியருக்கு நன்றிகள்..
    அன்புடன்,
    ஆலாசியம் கோ.

    ReplyDelete
  10. கொடுப்பதில் கிடைக்கும் ஒரு சந்தோசம் வேறுஎதிலும் கிடைக்காது.வெளி இடங்களுக்கு சென்றுவிட்டு வரும்போது வாங்கிவரும் சில அன்பளிப்புகள் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் கொடுக்கும் போது அவர்களும் சந்தோசப்படுவார்கள் நமக்கும் சந்தோசம் கிடைக்கும்.இன்னும் ஒரு வகையும் இருக்கிறது அது உதவி கேட்டு வருபவர்களுக்கு இல்லை என்று சொல்லாமல் கொடுக்கும்போது அவர்கள் வாங்கிக்கொண்டு அடிவயிறு குளிர்ந்து இதயம் நிறைந்து கண்கள் கலங்க பொண்டாட்டி புள்ளையோடு நல்லாஇருப்பா என்று சொல்வார்கள் பாருங்கள் ஒருவார்த்தை அதை கேட்கும்போது நாம்அடையும் சந்தோசம் இருக்கிறதே அதை சொல்லதெரியவில்லை வாத்தியார் சொன்னதுபோல் கொடுக்கும் போது தான் தெரியும்.இந்தமாதிரி வார்த்தைகளை கேட்கும் போது பொண்டாட்டி புள்ளைக்காக சம்பாரிகிறோமோ இல்லையோ இந்த வார்த்தைகளை கேட்பதர்காகவாவது சம்பாதித்து கொடுக்க வேண்டும் என்று தோணும் .

    ReplyDelete
  11. thank you sir for providing a lot of information about varanasi and other important shrines

    ReplyDelete
  12. Very good information. Very useful for those who travel to varanasi.

    Thanking you.

    ReplyDelete
  13. /////Blogger Sathish K said...
    ஐயா காலை வணக்கம்.
    இனிதான பயணக்கட்டுரையை தெளிவாக விளக்கியமைக்கு நன்றிகள் பல.
    பயணத்தின் போது மிகவும் உபயோகமாக இருக்கும்./////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  14. /////Blogger தேமொழி said...
    ///ராமபிரானும், சீதாபிராட்டியாரும் வந்தாலும் அவர்களுக்கும் இந்த செக்யூரிட்டி செக் உண்டு! அந்த அளவிற்குக் கெடுபிடி!///
    ஹ..ஹ..ஹா... நல்ல நகைச்சுவை.
    ///ஊரை அடித்து உலையில் போடும் ஆசாமிகள் போன்றவர்கள் எத்தனை முறை அந்த இடங்களுக்குச் சென்றாலும் மோட்சம் கிடைக்காது///
    சரியாகச் சொன்னீர்கள்... மோட்சம் கிடைக்கும் என்றால் போட்டுத் தள்ளிய ஆயுதத்தை கங்கை நீரில் கழுவி விட்டு, கையோடு முழுக்கும் போட்டு விட்டு வந்து விடுவார்கள் புண்ணியவான்கள்!!!
    ///கொடுப்பதால் எப்போதுமே மகிழ்ச்சிதான் ஏற்படும். அதை உணருங்கள்///
    நல்ல அறிவுரை ...நன்றி
    சிரத்தையுடன் வரைந்து வெளியிட்ட "காசி கயா வரைபடம்" பதிவிடும் உங்கள் அறச் செயலின் ஆர்வத்திற்கு சான்று, நல்ல தகவல்களுக்கு நன்றி ஐயா.//////

    பதிவை முழுமையாகப் படித்து, இரசித்த பகுதிகளைக் குறிப்பிட்டுப் பின்னூட்டமிட்ட மேன்மைக்கு நன்றி சகோதரி!

    ReplyDelete
  15. //////Blogger Thanjavooraan said...
    தங்கள் காசி யாத்திரை கட்டுரைத் தொடரைப் படித்தவர்கள், அங்கெல்லாம் செல்லும்போது சிரமமின்றி சென்று வரலாம். எங்கு தங்குவது, என்னென்ன அங்கு சிறப்பானது, எப்படிச் செல்ல வேண்டும், என்னவெல்லாம் வாங்க வேண்டும், மொழிச் சிக்கல் இல்லாமல் தமிழிலேயே பேசி பொருட்கள் வாங்கக்கூடிய இடங்கள் இவை அனைத்தையும் தெரிந்து கொள்ள முடிந்தது. எல்லோருமே காசிக்கோ, வேறு முக்கிய இடங்களுக்கோ சென்று வரலாம்; அது பெரிதல்ல. அங்கு சென்று வந்த விவரங்களை இத்தனை விரிவாகப் பிறருக்குப் பயன்படும் வகையில் சொன்னதும், படங்கள் மூலம் பல விவரங்களை எடுத்துச் சொன்னதும் மிகவும் சிறப்பான பணி. சிலரால் மட்டுமே எடுத்துக்கொண்ட காரியங்களை உருப்படியாக செய்து முடிக்க முடியும். அதில் ஆசிரியர் ஒருவர். தங்கள் சாதனைகள் தொடரட்டும். வாழ்த்துக்கள்.////

    உங்களின் மேலான அன்பிற்கும், பாராட்டிற்கும் நன்றி கோபாலன் சார்!

    ReplyDelete
  16. //////Blogger dhilse said...
    Dear sir,
    Thanks for your valuable information.
    J.SENDHIL//////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  17. /////Blogger nellai ram said...
    பயணக்கட்டுரையை தெளிவாக விளக்கியமைக்கு நன்றிகள் பல./////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  18. ///////Blogger iyer said...
    புனித பயணத்தை
    நிறைவாக தந்தமைக்கு நன்றிகள்..
    முறையாக பட்டியலிட்டு..
    முத்தாய்ப்பாக வேண்டியதை வாங்க
    ஆலோசனையையும் தந்து
    அனைத்தையும் அள்ளிதந்த உங்களுக்கு
    ஓராயிரம் நன்றிகளை தமிழ் எழுத்து
    ஒவ்வொன்றும் சொல்லும், ஐயமில்லை
    வாழ்க.. வாழ்க,,, வாழ்க...
    உம்மோடு நாங்களும்..//////

    உங்களின் மேலான அன்பிற்கும் பாராட்டிற்கும் நன்றி விசுவநாதன்!

    ReplyDelete
  19. ////Blogger sriganeshh said...
    //நம் நாடு மொத்தமும் ஆன்மிக பூமி. பல மகான்கள் அவதரித்த பூமி. எல்லா இடங்களிலும் இறைவன் இருக்கிறார் என்பதுதான் நமது சித்தாந்தம்.//
    எல்லார் மனதிலும் இறைவன் இருக்கிறார் என்றும் சேர்த்துக்கொள்ளலாமே. காசி பயணம் செய்தது மட்டுமல்லாமல் தான் பெற்ற இன்பம் (அ) புண்ணியம் எல்லோரும் பெற வேண்டும் என்ற நல் நினைப்பு தான் இறைவன். விரிவான 4 போஸ்ட் தட்டச்சு, ஸ்கேனிங் செய்து பதிவிட எடுத்துக் கொண்ட முயற்சி தான் இறைவன்.
    எல்லார் வீட்டிலும் இறைவன் வசிக்கிறார். அம்மையப்பன்....அம்மா அப்பா என்ற இரு ரூபத்தில்.... அம்மாவுக்கு கணபதியாகவும், அப்பாவிற்கு முருகனாகவும் இருங்கள்....எல்லாம் வசப்படும். அதைவிட்டு விட்டு, ராமா, கிருஷ்ணா என்றால் எதுவும் புரிபடவில்லை என்று தான் அர்த்தம். கணபதியையும், முருகனையும் ஆராய்ந்து பார்த்தால் எல்லாம் புரிபடும்.
    //மோட்சத்தையும், முக்தியை நாம் தேடிப்போக வேண்டாம். முக்தி நம்மைத் தேடி வர வேண்டும். நாம் செய்யும் நல்ல செயல்களால், அறச் செயல்களால், தர்மச் செயல்களால் அது சாத்தியப்படும்.//
    நன்றாகச் சொன்னீர்கள். முக்தி என்பது கடையில் விற்கும் பொருள் அல்ல. முக்தி என்பது நமது செயல்களின் விளைவு, இங்கு செயல் என்பது மனது, சிந்தை, சொல், உடம்பு என்று அனைத்துயும் உள்ளடங்கியது.
    //கருட புராணம் ஏழு ஸ்தலங்களை மோட்சம் கொடுக்கும் இடங்களாகச் சொல்கிறது.//
    ஏதோ போன ஜென்ம புண்ணியமோ என்னவோ, இதுவரை காஞ்சி, மதுரா, உஜ்ஜெய்ன் தரிசினம் ஆகிவிட்டது. உஜ்ஜெயின் மகா காலேஸ்வர் அதிகாலை மயான சாம்பல் பூஜை காண வேண்டிய ஓன்று. இந்த டிசம்பர் நடுவில் ஹரித்துவார் தர்சனமும் ஆகி விடும் என்று நினைக்கிறேன். அயோத்யாவும், துவாரகாவும் வெயிட்டிங் லிஸ்ட் இருக்கட்டும். ஆகா! இங்கும் ராமா, கிருஷ்ணா ...எங்கு சென்றாலும் ஹரே ராமா ஹரே கிருஷ்ணா ...
    அயோத்யாவில் ராம ஜயம் எழுதும் பக்தர்களுக்கான ஒரு இண்டர்நேஷனல் பாங்க் உள்ளது. ராம ஜயம் எழுதி அதில் டிபாஸிட் செய்யலாம். ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கை தாண்டியவுடன், சில்வர் மற்றும் தங்க காசு பெறலாம். குழந்தை பிராயத்திலிருந்தே பழக்கப்படுத்தினால் காசுடன் புண்ணியமும் சேரும்.
    வாரணாசி, அலகாபாத், கயா உடன் சாரனாத், புத்கயா, நாலந்தா, ராஜ்கிர் என்று ஒரு சர்க்யூட் அய்யர் சொன்னது போல் போட்டுக்கொண்டால் எல்லாவற்றையும் பார்க்கலாம்.
    thanks a lot to you sir...for this detailed travelogue....after manian, leno tamilvanan, your style is something very unique....
    வைஷ்ணோ தேவி யாத்திரை செய்தவர்கள் தங்கள் அனுபவங்களை கருத்துக்களாக இட்டால் எனக்கு உதவியாய் இருக்கும். டிசம்பரில் டில்லியில் இருக்கும் போது போய் வரலாம் என்று ஒரு ஐடியா//////

    தங்களின் விரிவான பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  20. /////Blogger Subbaraman said...
    நல்ல பயணக்கட்டுரை, ஐயா. தகவல்களுக்கு நன்றி.//////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  21. ////Blogger தமிழ் விரும்பி said...
    தகவல் களஞ்சியம்... புண்ணிய யாத்திரைப் பற்றிய அறியத் தகவல்கள் கொடுப்பதே அறச்செயல் தானே... அதை அருமையாகச் செய்த ஆசிரியருக்கு நன்றிகள்..
    அன்புடன்,
    ஆலாசியம் கோ./////

    நல்லது. நன்றி ஆலாசியம்!

    ReplyDelete
  22. /////Blogger thanusu said...
    கொடுப்பதில் கிடைக்கும் ஒரு சந்தோசம் வேறு எதிலும் கிடைக்காது.வெளி இடங்களுக்கு சென்றுவிட்டு வரும்போது வாங்கிவரும் சில அன்பளிப்புகள் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் கொடுக்கும் போது அவர்களும் சந்தோசப்படுவார்கள் நமக்கும் சந்தோசம் கிடைக்கும்.இன்னும் ஒரு வகையும் இருக்கிறது அது உதவி கேட்டு வருபவர்களுக்கு இல்லை என்று சொல்லாமல் கொடுக்கும்போது அவர்கள் வாங்கிக்கொண்டு அடிவயிறு குளிர்ந்து இதயம் நிறைந்து கண்கள் கலங்க பொண்டாட்டி புள்ளையோடு நல்லாஇருப்பா என்று சொல்வார்கள் பாருங்கள் ஒருவார்த்தை அதை கேட்கும்போது நாம்அடையும் சந்தோசம் இருக்கிறதே அதை சொல்லத் தெரியவில்லை வாத்தியார் சொன்னதுபோல் கொடுக்கும் போது தான் தெரியும்.இந்தமாதிரி வார்த்தைகளை கேட்கும் போது பொண்டாட்டி புள்ளைக்காக சம்பாரிகிறோமோ இல்லையோ இந்த வார்த்தைகளை கேட்பதற்காகவாவது சம்பாதித்து கொடுக்க வேண்டும் என்று தோணும்/////

    ஆகா, தோன்றுவதைச் செயல்படுத்துங்கள் நன்றி!

    ReplyDelete
  23. /////Blogger arul said...
    thank you sir for providing a lot of information about varanasi and other important shrines////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  24. //////Blogger CJeevanantham said...
    Very good information. Very useful for those who travel to varanasi.
    Thanking you./////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி ஜீவானந்தம்!

    ReplyDelete
  25. Ayya,

    Enna oru useful information. I think very useful information provided about Kaasi by you during your Varanaasi visit. I think you are very good guide as well apart from teacher.

    Your Student,
    Ravi

    ReplyDelete
  26. நகரத்தார் சங்கங்கள் எங்ஞெங்கும் வியாபித்திருப்பது (enakku)மிகுந்த ஆச்சரியத்தை அளிக்கிறது.வளரட்டும் அவர்களது தொண்டு

    ReplyDelete
  27. அய்யா,

    காசி பயண அனுபவங்க‌ள் பல அறீய தகவலுடன் மிகவும் பயனுள்ளதாக‌
    அமைந்துள்ளது. யாம் பெற்ற இன்பம், பெறுக இவ்வையகம்.
    என்ற தங்களின் சேவை மனபான்மைக்கு , தலை வணங்குகிறோம்.
    நினைத்தவுடன் செல்லக்கூடிய வாய்ப்பு எல்லொருக்கும் கிடைக்காது.
    இது எனது அனுபவத்தில் கிடைத்த உண்மை, கன்யாகுமரி முதல்
    கஷ்மிர், டார்ஜிலிங், கங்டொங் ‍‍_ சைனா,நெபாள எல்லை சென்று
    வந்தும் ‍‍காசி வாய்ப்பை நழுவ விட்டோம்.சரியாக சொல்ல வேண்டுமானால்
    போக முடியாமல் ட்ரிப் கென்செல் ஆகிவிட்டது.
    டேல்லி யில் 3 வருடங்கள் இருந்தும் காசி போகமுடியவில்லை.
    காசிக்கு போனால் சுன்டைக்காய்,பாவக்காய், பொன்ற ஏதாவது விடவேண்டூம்
    என்ற கூற்று உண்டு,புனித கங்கையில் பாவங்கை விட்டு வந்தொம் என்பது
    தான் சரியாக இருக்க்கும் என நினைக்கிறேன்.

    தங்களின் அறிய தகவலுக்கு மீண்டும் நன்றி.

    ReplyDelete
  28. இட்லி சாம்பாரே சாப்பிட்டு முடிக்கவில்லை.அதற்குள் ஷாபிங் என்பதால் கைகழுவி வர நேரமாகிவிடது.

    பொருள் இருப்போர், இல்லாதோர், உடல்வலியுள்ளோர், அறிவு பலமுள்ளோர் எவ்வாறு நற்செயல் புரியலாம் என்பதற்கு உங்கள் எழுத்து,
    "நிதிமிகுந்தவர் பொற்குவை தாரீர், நிதி குறைந்த‌வர் காசுகள் தாரீர், அதுவும் அற்றவர் வாய்ச்சொல் அருளீர்,ஆண்மையாளர் உழைப்பினை நல்கீர்" என்ற
    மஹாகவியின் பாடலை நினைவு படுத்துகிறது.

    அங்கே கிடைத்த முகவரி அட்டைகளை அப்படியே ஸ்கேன் செய்து வெளியிட்டது ஒரு புதுமை.ஆம்! நாம் மீண்டும் தட்டச்சு செய்யப் போய், தொலைபேசி எண்களில் நாம் அறியாத தவ‌றுகள் வந்து, மேலும் நமக்கு தேவை அற்ற விசாரணைகள் வராமல் செய்யும் என்று யோசித்து.... ஆகா!

    அயோத்தியாவில் இப்போது பார்க்க ஒன்றும் இல்லை என்றாலும், சரயு நதியையும் தசரதரும்,ராமரும், தம்பிகளும், அன்னையரும்,சீதாப்பிராட்டியும்,
    நடந்த புண்ய பூமியில் இருக்கிறோம் என்ற எண்ணமே நம்மைப் புனிதமாக்கும்.

    திரிவேணி சங்கமத்தில் சரஸ்வதி நதி இப்போது கலப்பதில்லை.அது மறைந்து விட்டது.கங்கையும், யமுனையும்தான் கலக்கின்றன.ஆனாலும் சரஸ்வதி இருந்ததற்கான ஆதாரம் சாடலைட் படங்கள் கொடுக்கின்றன.சிந்துவெளி நாகரீகத்திற்கு முன்னதாக சரஸ்வதிக் கரை நாகரீகம் இருந்துள்ளது என்ற
    கருத்தோட்டம் இப்போது வலுப்பெற்று வருகிறது.

    கயாவில் உள்ள பல்கு நதியில் எப்போதும் தண்ணீர் இருக்காது. ஆனாலும் அதன் மணலை சிறிது அகற்றினாலும் ஊற்று நீர் எப்போதும் கிடைக்கும்.
    நமது வைகையைப் போன்றது பல்கு நதி.

    ருத்திராட்சத்தைப் பொருத்தவரை நல்ல நாணயமான கடையில் வாங்கவும்.
    முகம் குறையக் குறைய விலை அதிகம். ஒற்றை முக ருத்திராட்சம் 10000/=ஆகும்.அதேபோல ருத்திராட்சத்தின் சைஸ் குறைந்தால் விலை அதிகம்.நேபாள்ம் சென்றால் ருத்திராட்சம் ஒரிஜினல் வாங்கலாம். அதுவரை இங்கே கிடைப்பதைக் கொண்டு திருப்தி அடையலாம்.

    பனாரஸ் பட்டு சிந்தடிக் கலக்காமல் வாங்குவது சிரமம். அரசு அங்கீகாரம் பெற்ற கடைகளில் வாங்கினால் ஒரிஜினல் வாங்கலாம்.

    ReplyDelete
  29. One of the most informative travelogue. Thanks for sharing.

    ReplyDelete
  30. மோட்சத்தையும், முக்தியை நாம் தேடிப்போக வேண்டாம். முக்தி நம்மைத் தேடி வர வேண்டும்.
    நாம் பிறந்த பூமிதான் நமக்குப் புண்ணிய பூமி. அதுதான் நமக்கு சொர்க்க பூமி. அதை மனதில் கொள்க!

    எத்தனையோ இடங்களைப் பற்றிய செய்திகளைப் படிக்கின்றோம். அத்தனை இடங்களுக்கும் நம்மால் செல்ல முடியாது. பார்க்க முடியாது. ஆகவே சென்ற வரைக்கும், பார்த்தவரைக்கும் சந்தோஷப்படுவோம். அது மட்டுமே நாம் செய்ய வேண்டியதும் திருப்திப்பட வேண்டியதும் ஆகும்!

    மிக சிறந்த அறிவுரை! இது தங்களுக்கே உரித்தனாது!

    மேலும் காசி யாத்திரை பற்றிய சிறப்பான,நிறைவான கட்டுரை மூலம் காசிக்கே சென்று வந்தது போன்ற அனுபவத்தை தந்த எமது வாத்தியருக்கு கோடானக்கோடி நன்றிகள்!!!

    ReplyDelete
  31. //வைஷ்ணோ தேவி யாத்திரை செய்தவர்கள் தங்கள் அனுபவங்களை கருத்துக்களாக இட்டால் எனக்கு உதவியாய் இருக்கும். டிசம்பரில் டில்லியில் இருக்கும் போது போய் வரலாம் என்று ஒரு ஐடியா//

    முதலில் டெல்லியில் இருந்து ரயிலில் ஜம்முவை அடைய வேண்டும். ஜம்முவிலிருந்து டாக்சி, வான், அல்லது அர‌சு பஸ் மூலம் காட்ரா(katra)
    செல்ல வேண்டும்.டாக்சி 700/=ஆகலாம். ஷேர் டாக்சி 200/= ஆகலாம்.

    யாத்ரி நிவாஸ்,காட்ரா என்று கூகுளாரைக் கேட்டால் ஹோட்டல் பற்றித் த‌கவல் கிடைக்கும்.
    Yatri Niwas Booking, Katra
    Yatri Niwas operated by JKTDC is located at SMVDSB( Sri Mata Vaishno Devi Shrine Board) Counter no. 2 in the holy town of Katra. Yatri Niwas is a good option for those looking for budget class accommodation at Katra.The Yatri Niwas is a JKTDC property, consisting of different room catgories. These categories include 5 bedded rooms, dormitory hall with the capacity to hold 10 passengers, and 10 bedded room with a common bathroom. Other categories in this hotel are of 2 bedded regular rooms and double bed rooms. These rooms categories can surely be availed with subject to availability and requirement. Blessed with all the necessary amenities, Yatri Niwas is assured to provide travelers with excellent holidaying experience. It has large halls with/without beds. Amenities obviously are basic but clean. An in-house Restaurant provides pure vegetarian food. Other facilities include free parking and a cloak room.

    ஆன் லைனில் புக்கிங் பண்ணிக்கொள்ளலாம்.

    கட்ராவில் வைஷ்னோதேவி மலை ஏறுமுன் பணம் செலுத்தி டோகென் பெற வேண்டும்.

    மலை ஏற நமது கால்நடை, குதிரை, டோலி என்ற பல்லக்கு உள்ளன.ஹெலிகாப்டர் உண்டு. ஆன் லைனில் புக் பண்ண வேண்டும்.இறக்கிவிடும் இட‌த்தில் இருந்து 2கிமி நடக்கத்தான் வேண்டும்.

    குதிரை இருக்கும் இடம் அடையவே 2 கிமி நடக்க வேண்டும்.குதிரை 2009ல் 300/= ஆயிற்று..இப்போது 500/=இருக்கலாம்.டோலி அப்போது 1200/=இப்போது 1700/=இருக்கலாம்.

    கால் நடையாகச் செல்வதற்கான‌ கட்டணம் உயரவில்லை.உங்கள் கால் என்ன கட்டணம் கேட்கிறதோ அதைக் கொடுக்கலாம்.நல்ல பாதை உள்ளது.குதிரைகளும் மனிதர்களும் சேர்ந்தே செல்ல வேண்டும். குதிரைச் சாணத்தில் கால் வழுக்காமல் செல்வதே ஒரு அனுபவம் தான்.

    என் 59 வது வயதில் நான் நடந்தே மலை ஏறினேன்.மனைவி(54) குதிரைப் பயணம் செய்தார்கள்.எனக்குப் போய் தரிசனம் முடிந்து திரும்பிவர 11 மணி நேரம் ஆயிற்று. மனைவி 7 மணி நேரத்தில் இருப்பிடம் திரும்பி விட்டார்கள்
    கேதார்நாத்தில் குதிரை சவாரி அனுபவம் பிடிக்காததல் வைஷ்ணோதேவியில் நடையை மேற்கொண்டேன்.

    குதிரை பாதையில் செல்லும் போதே நடுவில் படிக்கட்டுக்கள் வரும். அவற்றில் ஏறுவது காலத்தை சேமிக்கும். ஆனால் செங்குத்தான படிகள். இளைஞர்களுக்கு
    ஏற்றது.அந்த ஏற்றத்தில் எத்தனை படிகள் என்ற எண்ணிக்கைப் பலகை இருக்கும். அதைப் பார்த்துக் கொண்டு முடிந்த இடத்தில் படியில் ஏறலாம். நான் 1000 படி உள்ள எல்லா ஏற்றத்தையும் ஏறுவது என்று வைத்துக் கொண்டேன்.

    நான் டிராவெல்ஸ் காரர்களுடன் சென்றதால் சாப்பாடு அவர்கள் கொடுத்துவிட்டார்கள்.தனியாகச் செல்பவர்கள் சப்பாத்தி பூரி, சமோசா
    சாயா சாப்பிட்டு சமளிக்க‌ வேண்டியதுதான்.இட்லியெல்லாம் எதிர்பார்க்ககூடாது.

    வைஷ்ணோதேவி மிலிடரி கண்ட்ரோலில் இருக்கிறாள்.ஆகவே நிறைய செக்யூரிடி செக் இருக்கும்.

    நடந்துசென்றால் தலைக்கு ஒரு கேப் கைக்கு ஒரு தடி வாங்கிக் கொள்ளவும்.கீழேயே கிடைக்கும்.

    'ஜெய் மாதா தீ!" என்ற மந்திரத்தை சொல்லிக் கொண்டு மலை ஏறுங்கள்.
    நல்ல அனுபவம்

    நாம் மலை ஏறுவதை சைனாக்காரன் வாட்ச் பண்ணிக்கொண்டே இருக்கிறான். ஆம். கூப்பிடும் தூரத்தில் சீனா எல்லை.

    ReplyDelete
  32. வணக்கம் ஐயா,
    நல்ல பல தகவல்களுடன் அருமையான பதிவு ஐயா.
    //செல்வதால் மட்டுமே மோட்சம் கிடைத்துவிடுமா? கிடைக்காது.
    தீய செயல்களைச் செய்யாமல் இருந்தாலே போதும். மோட்சம் கிடைக்கும். மோட்சம் நம்மைத் தேடி வரும்//
    காசியிலும் சிலர் கொலை போன்று பாவங்களை செய்துவிட்டு தண்டணைக்கு அஞ்சியோ அல்லது உணர்ந்தோ தங்களை அகோரிகளாகவோ அல்லது சாமியார்களாகவோ மாற்றி கொள்கிறார்களாம்.ஐயா கூறியதை போன்றே தீயதை செய்யாது இருந்தால் தான் மோட்சம் கிடைக்கும்.இல்லையெனில் "வால்மீகி" முனிவரை போன்று உண்மையான பக்தியினால் இறைவனை அடையலாம்.
    ஐயா,இந்த அளவுக்கு காசி யாத்திரை பற்றி "கைடு"கூட தெளிவாக சொல்லிக் கொடுக்கமாட்டார்.மிக்க நன்றி ஐயா!

    ReplyDelete
  33. //////Blogger Ravichandran said...
    Ayya,
    Enna oru useful information. I think very useful information provided about Kaasi by you during your Varanaasi visit. I think you are very good guide as well apart from teacher.
    Your Student,
    Ravi///////

    பழநிஅப்பன் அருளால் சுவையாக எழுதும் ஆற்றலைப் பெற்றுள்ளேன். கட்டுரைகள் சிறப்பதற்கு அதுதான் முக்கியக்காரணம். நன்றி நண்பரே!

    ReplyDelete
  34. Blogger rajakala said...
    நகரத்தார் சங்கங்கள் எங்ஞெங்கும் வியாபித்திருப்பது (enakku)மிகுந்த ஆச்சரியத்தை அளிக்கிறது. வளரட்டும் அவர்களது தொண்டு//////

    ஆமாம். கோவில்களுக்குத் திருப்பணிகள் பலவற்றைச் செய்த நகரத்தார்கள், இதுபோன்று பல ஸ்தலங்களிலும் தங்கும் இடங்களைத் தர்மமாகக் கட்டி வைத்துள்ளார்கள். இன்றைய காலகட்டத்தில் சென்று தங்குவதற்கு அது வசதியாக இருக்கிறது

    ReplyDelete
  35. ////Blogger santhanakuzhali said...
    அய்யா,
    காசி பயண அனுபவங்க‌ள் பல அரிய தகவலுடன் மிகவும் பயனுள்ளதாக‌ அமைந்துள்ளது. யாம் பெற்ற இன்பம், பெறுக இவ்வையகம்.
    என்ற தங்களின் சேவை மனபான்மைக்கு , தலை வணங்குகிறோம். நினைத்தவுடன் செல்லக்கூடிய வாய்ப்பு எல்லொருக்கும் கிடைக்காது.
    இது எனது அனுபவத்தில் கிடைத்த உண்மை, கன்யாகுமரி முதல் கஷ்மிர், டார்ஜிலிங், கங்டொங் ‍‍_ சைனா,நெபாள எல்லை சென்று
    வந்தும் ‍‍காசி வாய்ப்பை நழுவ விட்டோம்.சரியாக சொல்ல வேண்டுமானால் போக முடியாமல் ட்ரிப் கென்செல் ஆகிவிட்டது.
    டெல்லியில் 3 வருடங்கள் இருந்தும் காசி போகமுடியவில்லை. காசிக்கு போனால் சுண்டைக்காய்,பாவக்காய், பொன்ற ஏதாவது விடவேண்டும் என்ற கூற்று உண்டு,புனித கங்கையில் பாவங்களை விட்டு வந்தோம் என்பதுதான் சரியாக இருக்க்கும் என நினைக்கிறேன்.
    தங்களின் அறிய தகவலுக்கு மீண்டும் நன்றி./////

    அடுத்து ஒரு வாய்ப்பை அன்னபூரணி நல்குவார். தவறவிடாமல் சென்று வாருங்கள் சகோதரி1. நன்றி!

    ReplyDelete
  36. Blogger kmr.krishnan said...
    இட்லி சாம்பாரே சாப்பிட்டு முடிக்கவில்லை.அதற்குள் ஷாபிங் என்பதால் கைகழுவி வர நேரமாகிவிடது.
    பொருள் இருப்போர், இல்லாதோர், உடல்வலியுள்ளோர், அறிவு பலமுள்ளோர் எவ்வாறு நற்செயல் புரியலாம் என்பதற்கு உங்கள் எழுத்து,
    "நிதிமிகுந்தவர் பொற்குவை தாரீர், நிதி குறைந்த‌வர் காசுகள் தாரீர், அதுவும் அற்றவர் வாய்ச்சொல் அருளீர்,ஆண்மையாளர் உழைப்பினை நல்கீர்" என்ற மஹாகவியின் பாடலை நினைவு படுத்துகிறது.
    அங்கே கிடைத்த முகவரி அட்டைகளை அப்படியே ஸ்கேன் செய்து வெளியிட்டது ஒரு புதுமை.ஆம்! நாம் மீண்டும் தட்டச்சு செய்யப் போய், தொலைபேசி எண்களில் நாம் அறியாத தவ‌றுகள் வந்து, மேலும் நமக்கு தேவை அற்ற விசாரணைகள் வராமல் செய்யும் என்று யோசித்து.... ஆகா!
    அயோத்தியாவில் இப்போது பார்க்க ஒன்றும் இல்லை என்றாலும், சரயு நதியையும் தசரதரும்,ராமரும், தம்பிகளும், அன்னையரும்,சீதாப்பிராட்டியும், நடந்த புண்ய பூமியில் இருக்கிறோம் என்ற எண்ணமே நம்மைப் புனிதமாக்கும்.//////

    ஆமாம். இது என்னவோ உண்மைதான் நன்றி கிருஷ்ணன் சார்!
    >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
    திரிவேணி சங்கமத்தில் சரஸ்வதி நதி இப்போது கலப்பதில்லை.அது மறைந்து விட்டது.கங்கையும், யமுனையும்தான் கலக்கின்றன.ஆனாலும் சரஸ்வதி இருந்ததற்கான ஆதாரம் சாடலைட் படங்கள் கொடுக்கின்றன.சிந்துவெளி நாகரீகத்திற்கு முன்னதாக சரஸ்வதிக் கரை நாகரீகம் இருந்துள்ளது என்ற கருத்தோட்டம் இப்போது வலுப்பெற்று வருகிறது.
    கயாவில் உள்ள பல்கு நதியில் எப்போதும் தண்ணீர் இருக்காது. ஆனாலும் அதன் மணலை சிறிது அகற்றினாலும் ஊற்று நீர் எப்போதும் கிடைக்கும். நமது வைகையைப் போன்றது பல்கு நதி.
    ருத்திராட்சத்தைப் பொருத்தவரை நல்ல நாணயமான கடையில் வாங்கவும்.
    முகம் குறையக் குறைய விலை அதிகம். ஒற்றை முக ருத்திராட்சம் 10000/=ஆகும்.அதேபோல ருத்திராட்சத்தின் சைஸ் குறைந்தால் விலை அதிகம்.நேபாளம் சென்றால் ருத்திராட்சம் ஒரிஜினல் வாங்கலாம். அதுவரை இங்கே கிடைப்பதைக் கொண்டு திருப்தி அடையலாம்.
    பனாரஸ் பட்டு சிந்தடிக் கலக்காமல் வாங்குவது சிரமம். அரசு அங்கீகாரம் பெற்ற கடைகளில் வாங்கினால் ஒரிஜினல் வாங்கலாம்.////

    நகரத்தார் விடுதியில் கிடைக்கும் உத்திராட்சங்கள் நீங்கள் சொல்லும் இடத்தில் இருந்தும் அவர்களுக்கு வருகிறது!ஹரித்துவார் பகுதிகளில் இருந்தும் வருகிறது!

    ReplyDelete
  37. ////Blogger Damodar said...
    One of the most informative travelogue. Thanks for sharing.////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  38. /////Blogger முருகராஜன் said...
    மோட்சத்தையும், முக்தியை நாம் தேடிப்போக வேண்டாம். முக்தி நம்மைத் தேடி வர வேண்டும்.
    நாம் பிறந்த பூமிதான் நமக்குப் புண்ணிய பூமி. அதுதான் நமக்கு சொர்க்க பூமி. அதை மனதில் கொள்க!
    எத்தனையோ இடங்களைப் பற்றிய செய்திகளைப் படிக்கின்றோம். அத்தனை இடங்களுக்கும் நம்மால் செல்ல முடியாது. பார்க்க முடியாது. ஆகவே சென்ற வரைக்கும், பார்த்தவரைக்கும் சந்தோஷப்படுவோம். அது மட்டுமே நாம் செய்ய வேண்டியதும் திருப்திப்பட வேண்டியதும் ஆகும்!
    மிக சிறந்த அறிவுரை! இது தங்களுக்கே உரித்தனாது!
    மேலும் காசி யாத்திரை பற்றிய சிறப்பான,நிறைவான கட்டுரை மூலம் காசிக்கே சென்று வந்தது போன்ற அனுபவத்தை தந்த எமது வாத்தியருக்கு கோடானக்கோடி நன்றிகள்!!!/////

    சிறப்பான பின்னூட்டம். நன்றி முருகராஜன்!

    ReplyDelete
  39. Blogger kmr.krishnan said...
    //வைஷ்ணோ தேவி யாத்திரை செய்தவர்கள் தங்கள் அனுபவங்களை கருத்துக்களாக இட்டால் எனக்கு உதவியாய் இருக்கும். டிசம்பரில் டில்லியில் இருக்கும் போது போய் வரலாம் என்று ஒரு ஐடியா//
    முதலில் டெல்லியில் இருந்து ரயிலில் ஜம்முவை அடைய வேண்டும். ஜம்முவிலிருந்து டாக்சி, வான், அல்லது அர‌சு பஸ் மூலம் காட்ரா(katra) செல்ல வேண்டும்.டாக்சி 700/=ஆகலாம். ஷேர் டாக்சி 200/= ஆகலாம்.
    யாத்ரி நிவாஸ்,காட்ரா என்று கூகுளாரைக் கேட்டால் ஹோட்டல் பற்றித் த‌கவல் கிடைக்கும்.
    Yatri Niwas Booking, Katra
    Yatri Niwas operated by JKTDC is located at SMVDSB( Sri Mata Vaishno Devi Shrine Board) Counter no. 2 in the holy town of Katra. Yatri Niwas is a good option for those looking for budget class accommodation at Katra.The Yatri Niwas is a JKTDC property, consisting of different room catgories. These categories include 5 bedded rooms, dormitory hall with the capacity to hold 10 passengers, and 10 bedded room with a common bathroom. Other categories in this hotel are of 2 bedded regular rooms and double bed rooms. These rooms categories can surely be availed with subject to availability and requirement. Blessed with all the necessary amenities, Yatri Niwas is assured to provide travelers with excellent holidaying experience. It has large halls with/without beds. Amenities obviously are basic but clean. An in-house Restaurant provides pure vegetarian food. Other facilities include free parking and a cloak room.
    ஆன் லைனில் புக்கிங் பண்ணிக்கொள்ளலாம்.
    கட்ராவில் வைஷ்னோதேவி மலை ஏறுமுன் பணம் செலுத்தி டோகென் பெற வேண்டும்.
    மலை ஏற நமது கால்நடை, குதிரை, டோலி என்ற பல்லக்கு உள்ளன.ஹெலிகாப்டர் உண்டு. ஆன் லைனில் புக் பண்ண வேண்டும்.இறக்கிவிடும் இட‌த்தில் இருந்து 2கிமி நடக்கத்தான் வேண்டும்.
    குதிரை இருக்கும் இடம் அடையவே 2 கிமி நடக்க வேண்டும்.குதிரை 2009ல் 300/= ஆயிற்று..இப்போது 500/=இருக்கலாம்.டோலி அப்போது 1200/=இப்போது 1700/=இருக்கலாம்.
    கால் நடையாகச் செல்வதற்கான‌ கட்டணம் உயரவில்லை.உங்கள் கால் என்ன கட்டணம் கேட்கிறதோ அதைக் கொடுக்கலாம்.நல்ல பாதை உள்ளது.குதிரைகளும் மனிதர்களும் சேர்ந்தே செல்ல வேண்டும். குதிரைச் சாணத்தில் கால் வழுக்காமல் செல்வதே ஒரு அனுபவம் தான்.
    என் 59 வது வயதில் நான் நடந்தே மலை ஏறினேன்.மனைவி(54) குதிரைப் பயணம் செய்தார்கள்.எனக்குப் போய் தரிசனம் முடிந்து திரும்பிவர 11 மணி நேரம் ஆயிற்று. மனைவி 7 மணி நேரத்தில் இருப்பிடம் திரும்பி விட்டார்கள்
    கேதார்நாத்தில் குதிரை சவாரி அனுபவம் பிடிக்காததல் வைஷ்ணோதேவியில் நடையை மேற்கொண்டேன்.
    குதிரை பாதையில் செல்லும் போதே நடுவில் படிக்கட்டுக்கள் வரும். அவற்றில் ஏறுவது காலத்தை சேமிக்கும். ஆனால் செங்குத்தான படிகள். இளைஞர்களுக்கு
    ஏற்றது.அந்த ஏற்றத்தில் எத்தனை படிகள் என்ற எண்ணிக்கைப் பலகை இருக்கும். அதைப் பார்த்துக் கொண்டு முடிந்த இடத்தில் படியில் ஏறலாம். நான் 1000 படி உள்ள எல்லா ஏற்றத்தையும் ஏறுவது என்று வைத்துக் கொண்டேன்.
    நான் டிராவெல்ஸ் காரர்களுடன் சென்றதால் சாப்பாடு அவர்கள் கொடுத்துவிட்டார்கள்.தனியாகச் செல்பவர்கள் சப்பாத்தி பூரி, சமோசா
    சாயா சாப்பிட்டு சமளிக்க‌ வேண்டியதுதான்.இட்லியெல்லாம் எதிர்பார்க்ககூடாது.
    வைஷ்ணோதேவி மிலிடரி கண்ட்ரோலில் இருக்கிறாள்.ஆகவே நிறைய செக்யூரிடி செக் இருக்கும்.
    நடந்துசென்றால் தலைக்கு ஒரு கேப் கைக்கு ஒரு தடி வாங்கிக் கொள்ளவும்.கீழேயே கிடைக்கும்.
    'ஜெய் மாதா தீ!" என்ற மந்திரத்தை சொல்லிக் கொண்டு மலை ஏறுங்கள்.
    நல்ல அனுபவம்
    நாம் மலை ஏறுவதை சைனாக்காரன் வாட்ச் பண்ணிக்கொண்டே இருக்கிறான். ஆம். கூப்பிடும் தூரத்தில் சீனா எல்லை.///////

    விரிவான வைஷ்ணோதேவி யாத்திரை விளக்கங்களுக்கு நன்றி கிருஷ்ணன் சார்! ஆத்துக்கார அம்மையார் இருந்ததால் சமர்த்தாகத் திரும்பிவந்து விட்டீர்கள். இல்லை என்றால் சைனா பிடித்துவைத்திருக்கும் பகுதிக்குள்ளும் எட்டிப் பார்த்துவிட்டு வந்திருப்பீர்கள் - இல்லையா?

    ReplyDelete
  40. ///////Blogger R.Srishobana said...
    வணக்கம் ஐயா,
    நல்ல பல தகவல்களுடன் அருமையான பதிவு ஐயா.
    //செல்வதால் மட்டுமே மோட்சம் கிடைத்துவிடுமா? கிடைக்காது.
    தீய செயல்களைச் செய்யாமல் இருந்தாலே போதும். மோட்சம் கிடைக்கும். மோட்சம் நம்மைத் தேடி வரும்//
    காசியிலும் சிலர் கொலை போன்று பாவங்களை செய்துவிட்டு தண்டணைக்கு அஞ்சியோ அல்லது உணர்ந்தோ தங்களை அகோரிகளாகவோ அல்லது சாமியார்களாகவோ மாற்றி கொள்கிறார்களாம்.ஐயா கூறியதை போன்றே தீயதை செய்யாது இருந்தால் தான் மோட்சம் கிடைக்கும்.இல்லையெனில் "வால்மீகி" முனிவரை போன்று உண்மையான பக்தியினால் இறைவனை அடையலாம்.
    ஐயா,இந்த அளவுக்கு காசி யாத்திரை பற்றி "கைடு"கூட தெளிவாக சொல்லிக் கொடுக்கமாட்டார்.மிக்க நன்றி ஐயா!/////

    உங்களின் மனம் திறந்த பின்னூட்டத்திற்கு நன்றி சகோதரி!

    ReplyDelete
  41. Uma S umas1234@gmail.com
    to "SP.VR.SUBBIAH"
    date 26 November 2011 12:06
    subject comment

    காசி பயணத்தொடர் முழுவதுமே அருமை.

    இன்னொன்று கேள்விப்பட்டிருக்கிறேன், காசிக்கு முதலில் சென்றால் அங்கிருந்து கங்கை நீரை கொண்டு ராமேஸ்வரம் சென்று அங்கு சிவனுக்கு அபிஷேகம் செய்துவிட்டு திரும்ப அங்கிருந்து மண் எடுத்துக்கொண்டு காசி சென்று கங்கையில் கரைக்கவேண்டும், அப்போதுதான் காசி பயணம் முழுமையடையும். இல்லை முதலில் ராமேஸ்வரம் சென்று, பின் காசி, ராமேஸ்வரம் செல்லவேண்டும். தெரிந்தவர்கள் சொல்லலாம்.

    குழந்தை இல்லாத தம்பதியினர் காசியில் மூன்று நாட்கள் தங்கி விஸ்வநாதருக்கு அபிஷேகம் செய்து வழிபடுமாறு திரு ஏ. எம். ராஜகோபாலன் நிறைய பேருக்கு பரிகாரம் குமுதம் ஜோதிடத்தில் சொல்லி படித்திருக்கிறேன்.

    S.உமா, தில்லி

    ReplyDelete
  42. இன்றைய பதிவுடன் வாரணாசி ட்ரிப் முடிவடைந்து விட்டாலும்..இந்தத் தொடர் மற்றும் பலரின் பின்னூட்டங்கள் எல்லாமே சேர்ந்து தொடர்ந்து படித்த எனக்கு சற்று ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது..

    இந்தியாவை விட்டு ரொம்பதூரம் உடலளவில் விலகியிருப்பது என்னவோ உண்மைதான் என்றாலும்

    மனதளவிலுமே விலகித்தான் இருந்திருக்கிறேன்..அதுவும் சமீபத்திய வருடங்களில்..

    இது கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்திருப்பதுதான் உண்மை..

    தமிழகத்தை விட்டு இந்தியாவின் வேறு பகுதிகளுக்குள் நுழைந்ததுமே

    ஏதோ ஒரு முற்றுமுழுதான அன்னியப் பிரதேசத்துக்குள் பிரவேசிக்கிறோம் என்கிற உணர்வே பெரும்பாலும் எழுந்த /எழுகிறதென்னவோ உண்மை..

    வெளிநாடுகளுக்குள் நுழையும் போது கூட இந்த அளவு அந்நியத்தனம் எனக்கு உணர்வில் உறைத்தது இல்லை..

    தாய் நாட்டிலிருந்து இந்த அளவு அந்நியப்பட்டுப் போயிருப்பதாக உணர்வதற்கு அங்கிருந்து கிடைத்த கசப்பான அனுபவங்களின் தொகுப்புதான் காரணமா

    மொழி மட்டும்தான் காரணமா

    அல்லது ஆழமாய் உணர்வில் ஊறியிருக்கும் மொழிசார்ந்த அரசியலுமா என்று புரியவில்லை..

    இந்த பக்திமார்க்கம் சார்ந்த பயணத்தேடல்தான் இந்தியனை ஒன்றிணைக்கும் இணைவுப் பாலத்துக்கான துருப்புச் சீட்டு என்று உணர்கிறேன்..

    ReplyDelete
  43. My sincere thanks to you sir for made this trip useful for us as well and for the detailed information. I really feel as experienced with Varanasi.
    Thanks,
    vanathan

    ReplyDelete
  44. Guru Vanakkam,

    Thanks for sharing your Experience in a way that is unique to you.

    Regards
    RAMADU

    ReplyDelete
  45. காசி சென்றால்தான் மோட்சம் என்றால்
    நான் காசி சென்றுவந்துவிட்டேன் சில நிமிடங்களுக்கு
    முன்னால்தான். காசில்லாமல் காசி பயணம் சாத்தியம்தான்!
    காசிநாதன் அருளை எங்களுக்கும் பகிர்ந்து .....

    ReplyDelete
  46. காசி சென்றால்தான் மோட்சம் என்றால்
    நான் காசி சென்றுவந்துவிட்டேன் சில நிமிடங்களுக்கு
    முன்னால்தான். காசில்லாமல் காசி பயணம் சாத்தியம்தான்!
    காசிநாதன் அருளை எங்களுக்கும் பகிர்ந்து .....

    ReplyDelete
  47. ///இந்த பக்திமார்க்கம் சார்ந்த பயணத்தேடல்தான் இந்தியனை ஒன்றிணைக்கும் இணைவுப் பாலத்துக்கான துருப்புச் சீட்டு என்று உணர்கிறேன்..///

    தன் உணர்வு மிக்க எழுத்துக்கள்
    கண்களினை நீரில் மிதக்க வைத்தது

    பல வெளிநாட்டு இந்தியர்கள்
    சிலர் தாமிருக்கும் நாட்டில்

    திருக்கோயில்களை அமைத்திருப்பதும்
    பெருஞ்சேவையன்றல்லவா..

    இங்கிருப்பவர்களுக்கு அது பச்சை
    அங்கிருப்பவர்களுக்கு இதுவே இச்சை

    காலங்கள் மாறும்.. புதிய
    கோலங்கள் உருவாகும்..

    கைகோர்க்கும் தோழைமையோடு
    பையவே உடன் வரும் நட்போடு

    அய்யரும் அவரின்
    அன்பான வணக்கமும் வாழ்த்துக்களும்

    ReplyDelete
  48. ஆத்துக்கார அம்மையார் இருந்ததால் சமர்த்தாகத் திரும்பிவந்து விட்டீர்கள். இல்லை என்றால் சைனா பிடித்துவைத்திருக்கும் பகுதிக்குள்ளும் எட்டிப் பார்த்துவிட்டு வந்திருப்பீர்கள் //

    எட்டிப்பார்ப்பதுமட்டுமல்லமல் அவனிடம்," ஏண்டா, உலகச்சந்தையில் உங்கள் பொருட்கள் விற்கணும் என்பதற்காக கோடிக்கணக்கான தோழிலாளர்களை கிட்டத்தட்ட எங்கள் ஊர் கொத்தடிமை முறை போல‌ வைத்து வேலை வாங்கறீங்க?அதுவும் ஒசத்தியான கம்யூனிஸ்டு கொள்கையைச்சொல்லிக்கொண்டு?நாளைக்கே அமெரிக்க, ஐரோப்பிய சந்தயில சரிவு வந்தா என்னாடா பண்ணுவீங்க?அப்ப உங்க பொருட்கள் எல்லாம் விற்காமப் போனா எப்படிடா அந்த அடிமைத் தொழிலாளிகளுக்கு கொடுக்கிற சொற்ப சம்பளத்தை எப்படிடா கொடுப்பீங்க? சுத்தமா உள்ளூர் சந்தையை ஒதுக்கிட்டு ஏற்றுமதியவே நம்பி வாழற உங்க 'எகானமி' என்ன ஆகும் எதிர்காலத்தில்?"என்று நான் சுத்தத் தமிழில் கேள்வி கேட்க, அவன் 'ஞை முய் ஙை சொய்'என்று சுத்த சைனீஸில் கத்த அங்கே ஒரு சொற்போர் நடத்திவிட்டு திரும்பி ஓடி வந்திருப்பேன்.

    ReplyDelete
  49. //இன்னொன்று கேள்விப்பட்டிருக்கிறேன், காசிக்கு முதலில் சென்றால் அங்கிருந்து கங்கை நீரை கொண்டு ராமேஸ்வரம் சென்று அங்கு சிவனுக்கு அபிஷேகம் செய்துவிட்டு திரும்ப அங்கிருந்து மண் எடுத்துக்கொண்டு காசி சென்று கங்கையில் கரைக்கவேண்டும், அப்போதுதான் காசி பயணம் முழுமையடையும். இல்லை முதலில் ராமேஸ்வரம் சென்று, பின் காசி, ராமேஸ்வரம் செல்லவேண்டும். தெரிந்தவர்கள் சொல்லலாம். //

    என்னுடைய 2 செப் 2011 வகுப்பறை பக்திமலர் 'துறவின் மகத்துவம்' கட்டுரையில் காணும் செய்தி:

    "கா‌சியாத்திரை துவ‌ங்கும் முன் நாம் இராமேஸ்வ‌ர‌ம் சென்று அங்கு ம‌ண் எடுத்துக் கொண்டு திருவேணி சங்க‌‌ம‌த்தில்(அலகாபாத்) கொண்டு சேர்க்க‌ வேண்டும்.அங்கிருந்து காசி சென்று கங்கையில் நீராடி காசி விஸ்வநாதரை தரிசித்துவிட்டு,காலபைரவர், பிந்துமாதவர் எல்லோரையும் தரிசித்து மீண்டும் அலகாபாத் சங்கமத்தில் கங்கை நீரை எடுத்துக்கொண்டு இராமேஸ்வரம் வந்து அந்தப் புனித நீரால் இராமநாதருக்கு அபிடேகம் செய்தல் வேண்டும்.அப்போதுதான் காசி யாத்திரை நிறைவு பெறும்."

    வடக்கில் இருந்து வருபவர்கள் சங்கமத்தில் கங்கை நீர் எடுத்துக்கொண்டு ராமேஸ்வரம் வந்து அபிஷேகம் செய்துவிட்டு,அங்கிருந்து மண் எடுத்துக் கொண்டு சென்று வேணியில் கலக்க வேண்டும்.

    ராமேஸ்வரத்தில் பிதுர் தர்பணம் செய்துவிட்டு, 'காசி யாத்திரைக்கு மண் கொண்டு செல்ல வேண்டும்' என்று சாஸ்திரிகளிடம் சொன்னால் அதற்கான பூஜை நடத்திவைப்பார்.

    ராமேஸ்வரம் அக்னி தீர்த்தம் மண் எடுத்து மூன்று பகுதியாகப் பிரித்து
    அதற்கு பூஜை செய்து கொடுப்பார்.சேது மாதவர் என்ற பகுதியை அவரே தானம் வாங்கி கொண்டு விடுவார். வெறும் மண்ணை தானமாகக் கொடுப்பது ராமேஸ்வரத்தில் மட்டுமே.(மண்ணோடு தட்சணையும் கொடுப்பது நமது கடமை)வேணி மாதவர், பிந்து மாதவர் என்ற இரண்டு பகுதிகளையும் தனித்தனியே ஈரம் போகக் காய வைத்து தனிதனியாக இரண்டு புதுத்துணியில் பொதிந்து கட்டி எடுத்துக்கொண்டு காசி யத்திரை அங்கிருந்தே கிளம்புவது நல்லது. முடியாவிட்டால் உங்கள் ஊர் திரும்பி எப்போ செள‌கரியமோ அப்போ வேணி,பிந்து மாத‌வர் மூட்டைகளுடன் யாத்திரை துவங்க வேண்டும்.

    முதலில் திருவேணி சங்கமத்தில் வேணி மாதவரை கரைக்க வேண்டும்.
    காசியில் கங்கையில் பிந்து மதவரை விட வேண்டும்.அங்கு உள்ள சாஸ்திரிகளும் 'வேணி ,பிந்து மாதவர் கொண்டு வந்திருக்கேளா?'என்று கேட்டு மண்களை கங்கையில் கரைக்க ச‌ங்கலபம், மந்திரம் சொல்லி முறையாக அந்த 'இம்மெர்ஷ'னை முடித்து வைப்பார்.

    டெல்லிக்காரவுக என்னுடைய கட்டுரைகளை வாசிப்பது இல்லை என்பது வெட்ட வெளிச்சமாயிற்று. நன்றி!

    ReplyDelete
  50. //ஆழமாய் உணர்வில் ஊறியிருக்கும் மொழிசார்ந்த அரசியலுமா என்று புரியவில்லை..

    இந்த பக்திமார்க்கம் சார்ந்த பயணத்தேடல்தான் இந்தியனை ஒன்றிணைக்கும் இணைவுப் பாலத்துக்கான துருப்புச் சீட்டு என்று உணர்கிறேன்..//

    அது, மைனர் அது! பாயின்டை 'சக்'குனு புடிச்சுட்டீருங்காணும்.
    பல்வேறு மொழிகளாலும்,மாறுபட்ட கலாசாரங்களாலும், வேறுபட்ட பழக்க வழக்க‌ங்களாலும் பிரிந்துள்ள இந்தியா, பாரதம் என்னும் புண்ணிய பூமியை இணைக்கும் கயிறு பக்தியே.

    மீண்டும் எனது 2 செப் 2011 துறவின் மகத்துவம் கட்டுரையில் இருந்து.

    "'ஆசேது ஹிமாச்சலம்' என்று புராணக்கதைகள் உபன்யாசம் செய்பவர்கள் சொல்வார்கள்.அதாவது 'இராமேஸ்வரத்திலிருந்து இமயமலை வரை' என்று பொருள்.

    எப்படி தெற்கே உள்ள நமக்குக் காசியாத்திரை முக்கியமோ அதுபோல வடக்கே உள்ளவர்க‌ளுக்கு ஒருமுறையாவது இராமேஸ்வரம் வர வேண்டும் என்பது பேராவ‌ல்.

    இத்த‌னைக்கும் அங்குள்ள சாமானியர்க‌‌ளுக்கு இராமநாத‌ சுவாமி சிவ‌பெருமான் என்ப‌து கூடத் தெரிய‌வில்லை. நாங்க‌ள் காசி யாத்திரை சென்ற‌போது முக‌ல்ச‌ராயிலிருந்து காசிக்குச் செல்லும் ரயிலில் சில சாதாரண மக்கள் 'இராமேஸ்வரத்தில் உறையும் தெய்வம் யாது?' என்று கேட்டனர். நான் 'ஷிவ்ஜி' என்று கூறியவுடன் 'அதெப்படி ஷிவ்ஜிக்கு ராமர் பெயர்?' என்று கேட்டனர். இராமர், இராவணன் என்ற பிராமணனைக் கொன்ற‌தால்(சம்ஹாரம் செய்ததால்) ஏற்பட்ட‌ தனது பிரமஹத்தி தோஷம் போக இராமேஸ்வரத்தில் சிவனை வழிபட்டதாகச் சொல்லப்படும் ஸ்தலபுராணக் கதையை அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. நான் 'ராம் கா ஈஷ்வர் ராமேஷ்வர்' என்று சொல்லியவுடன் அவர்கள் 'காரே மூரே'என்று கூச்சல் போட ஆரம்பித்துவிட்டனர்.நாங்கள் இடம் மாற்றி உட்கார வேண்டியதாகிவிட்டது."

    ஒரு பேச்சுக்காகச் சொல்கிறேன். ரஷியா துண்டு துண்டாகப்போன மாதிரி இந்தியாவும் ஒரு நாள் போனாலும், மக்களுடைய இந்த பக்தி ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக எப்படி, எதனால் இணைக்கப்பட்டதோ அது அப்படியே இருக்கும்.மாறாது. யாராலும் மாற்றவும் முடியாது.

    மொழி சார்ந்த அரசியலைத் தூண்டி விட்டவர்கள், அந்த மொழியை நன்கு அறிந்து கொண்டு 'அண்டர் ஹாண்ட் டீலிங்'எல்லாம் இந்தியிலேயே பேசுகிறார்கள்.ஏனெனில் அங்கே இருப்பவன் பலருக்கும் அங்கிலம் பேச வராது.
    தெரிந்தாலும் பேச மாட்டான்.அதுதான் நாட்டுப்பற்று என்ற முட்டாள் தனமான நம்பிக்கை அவனுக்கு.

    ReplyDelete
  51. //காசியிலும் சிலர் கொலை போன்று பாவங்களை செய்துவிட்டு தண்டணைக்கு அஞ்சியோ அல்லது உணர்ந்தோ தங்களை அகோரிகளாகவோ அல்லது சாமியார்களாகவோ மாற்றி கொள்கிறார்களாம்.ஐயா கூறியதை போன்றே தீயதை செய்யாது இருந்தால் தான் மோட்சம்//

    'நான் கடவுள்' படத்திற்கு இப்படி ஒரு கோண‌மா? கதாசிரியர் எழுத்தாளர் ஜெயமோகனிடம் கேட்டால் ஒரு 10 பக்க விளக்கம் அளிப்பார். அதில் மீண்டும் சந்தேகங்கள் வரும் .அதையும் தெளிவுபடுத்தி ஒரு 700 பக்க புத்தகத்தைப் போட்டுவிடுவார்.இன்று அவர் புத்தகங்க‌ள் மட்டும் தான் சீக்கிரம் விற்கின்றன.

    ReplyDelete
  52. ////////// iyer said...
    ///இந்த பக்திமார்க்கம் சார்ந்த பயணத்தேடல்தான் இந்தியனை ஒன்றிணைக்கும் இணைவுப் பாலத்துக்கான துருப்புச் சீட்டு என்று உணர்கிறேன்..///

    தன் உணர்வு மிக்க எழுத்துக்கள்
    கண்களினை நீரில் மிதக்க வைத்தது

    பல வெளிநாட்டு இந்தியர்கள்
    சிலர் தாமிருக்கும் நாட்டில்

    திருக்கோயில்களை அமைத்திருப்பதும்
    பெருஞ்சேவையன்றல்லவா..

    இங்கிருப்பவர்களுக்கு அது பச்சை
    அங்கிருப்பவர்களுக்கு இதுவே இச்சை

    காலங்கள் மாறும்.. புதிய
    கோலங்கள் உருவாகும்..

    கைகோர்க்கும் தோழைமையோடு
    பையவே உடன் வரும் நட்போடு

    அய்யரும் அவரின்
    அன்பான வணக்கமும் வாழ்த்துக்களும்////////

    அய்யரின் விமர்சனத்துக்கும் நட்புக்கும் நன்றி..

    ReplyDelete
  53. இப்படி அண்டர் ஹான்ட் டீலிங் பண்ணித்தான் மத்தியிலே காரியங்களைச் சாதிக்க வேண்டியிருக்கு என்றும் அதற்காக ஒருங்கிணைந்த இந்தியாவில் தன் தாய்மொழியை விடுத்து வடமாநில அரசியல் ஆதிக்கம் பெற்ற ஹிந்தியை பயில வேண்டிய இந்த நிலை தென்மாநில வேற்று மொழி மாநிலத்தாருக்கு தொடர்கிறது என்றும் தெளிவுறுத்தி இந்த நிலை தொடர்ந்தால் ஒரு கட்டத்தில் ரஷியா துண்டு துண்டாகப்போன மாதிரி இந்தியாவும் ஒரு நாள் சிதறிப்போகும் வாய்ப்பும் இருக்கிறது என்றும் தங்கள் கருத்துக்களாலேயே தெளிவுபடுத்தியிருக்கிறீர்கள்..உண்மைதான்..

    ReplyDelete
  54. @KMR Krishnan,

    Thanks a lot and Hats off to you sir, at 59, it is really amazing..
    am young (42) and always prefer walk which provides lot of time for relaxed sight seeing besides providing time for chanting or reciting stotra...

    வைஷ்ணோ தேவி யாத்திரை பற்றி விரிவான விபரம் அளித்ததற்கு நன்றி. அருகில் வேறு ஏதாவது கோயில் அல்லது பார்க்க வேண்டிய இடம் உள்ளதா? சக்தி பீடங்களில் ஒன்று ஜம்முவில் இருக்கிறது என்று படித்த ஞாபகம்..அது வைஷ்ணோ தேவி கோயில் தானா அல்லது தனியாக தேவி கோயில் அமைந்துள்ளதா....தங்களுக்கு விபரம் தெரிவிக்கவும். சனி, ஞாயிறு இரண்டு நாட்கள் லீவில் போய் வரலாம் என்று ஐடியா.

    மலை ஏறும் போது கால்களில் செருப்பு இருக்கலாமா ஏனென்றால் திருப்பதி மலை ஏறும் போது கால்களில் செருப்பு அணிவதில்லை. அது போல் இங்கும் செல்லலாமா..?

    இரவு நேரம் மலை ஏற அனுமதி உண்டா..?

    is there any specific darshan one should not miss in vaishnao devi temple....for example kakad aarthi in shirdi, morning bhasma aarthi in ujjain etc..

    on china watching, gone to nathu la pass (sikkim) which is much closer (face to face) and if you are lucky, can shake hands with chinese military in charge of that side watch post....the route is known as silk route.

    ReplyDelete
  55. //மலை ஏறும் போது கால்களில் செருப்பு இருக்கலாமா ஏனென்றால் திருப்பதி மலை ஏறும் போது கால்களில் செருப்பு அணிவதில்லை. அது போல் இங்கும் செல்லலாமா..?//

    செருப்பு அணிந்து செல்லலாம். மேலே செருப்பு, செல்போன் மாற்றும் பொருட்களை வைக்க இடம் லாக்கர் வசதி உள்ளது. பாட்டரி கார் வசதி ஒரு குறிப்பட்ட தூரத்துக்கு உள்ளது 3 கார்கள் தான் ஓடுகின்றன. இடம் கிடைத்தால்
    அதிர்ஷடமே.

    மற்ற தகவல்கள் எனக்கு பதில் தெரியவில்லை. நாங்கள் டிராவல்ஸில் சென்றதால் அவர்களுடைய நடைமுறை சார்ந்து எல்லாம் செய்ய வேண்டி இருந்தது.

    ஒருமுறை போனால் தான் அனுபவம் வரும் இந்த 2 வருடத்தில் என்னென்ன மாற்றங்களோ? யாருக்குத் தெரியும்?

    ReplyDelete
  56. Uma S umas1234@gmail.com
    to "SP.VR.SUBBIAH"
    date 28 November 2011 16:43
    subject வாருங்கள், வாரணாசியில் ஷாப்பிங் செய்வோம்!" / comment

    திரிவேணி சங்கமத்தில் சரஸ்வதி நதி இப்போது கலப்பதில்லை.அது மறைந்து விட்டது.//

    சரஸ்வதி கண்ணிற்குத் தெரியாமல் வந்து கலப்பதாகத்தான் படித்துள்ளேன், இது என்ன புதிதாக இருக்கிறது?

    டெல்லிக்காரவுக என்னுடைய கட்டுரைகளை வாசிப்பது இல்லை என்பது வெட்ட வெளிச்சமாயிற்று.//

    படித்த எல்லாமே நினைவில் இருக்காது இல்லையா? நான் படிப்பது அதிகம் என்பதால் எல்லாமே நினைவில் இருப்பது இல்லை. தேவைப்படும்போது தேடுவது வழக்கம்.


    S.உமா, தில்லி

    ReplyDelete
  57. //நான் படிப்பது அதிகம் என்பதால் எல்லாமே நினைவில் இருப்பது இல்லை.//

    படிப்பது அதிகம் என்பது சந்தோஷம். நினைவில் நிற்பதில்லை என்பது ....
    அப்போ கொஞ்சமாப் படிச்சு நிறய நினைவுல வச்சுண்டா?

    ReplyDelete
  58. மிக அருமையான் பதிவு
    இன்று தான் கண்டுபிடித்தேன்.
    மிகவும் பயனுள்ள தகவல்கள்.
    நானும் ஒரு கட்டுரை எழுதியுள்ளேன். படித்து பார்க்கவும்.
    http://neysamy.blogspot.in/2008/10/varanasi-tour_14.html

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com