மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

30.4.10

ஆணவத்திற்கு விழுந்த அடி!



++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
ஆணவத்திற்கு விழுந்த அடி!

ஒரு சாமியார் இருந்தார். வேண்டாம் ...ஒரு சந்நியாசி இருந்தார். ..அதுவும் வேண்டாம்...ஒரு துறவி இருந்தார்.

நல்ல விஷய ஞானம் உள்ளவர். எல்லா விஷயங்களையும் அறிந்தவர். எல்லா நாடுகளுக்கும் சென்று வந்தவர். அவருக்கு ஏராளமான தொண்டர்கள், சீடர்கள், பின்பற்றுபவர்கள் இருந்தார்கள்.

மைக்கைப் பிடித்தால் மணிக்கணக்கில் பேசுவார். சுவாரசியமாகப் பேசுவதில் கில்லாடி. சபையை நிறைக்கும் கூட்டமும், மெய்மறந்து அவருடைய
உரையைக் கேட்கும்.

இறைவனைப் பற்றியும் பேசுவார். இயல்பு வாழ்க்கையைப் பற்றியும் பேசுவார்.

பிரதான சீடன் ஒருவன் கூடவே இருப்பான்.

அவர் நல்லவர். வல்லவர்.ஆனாலும் பேச்சில் கொஞ்சம் அகராதி இருக்கும். சில சமயங்களில் ஆணவம் தலைதூக்கும்.

ஒரு சமயம் மேடையில் பேசும்போது இப்படி சொன்னார்:

“இந்த உலகில் நான் பார்க்காத இடமே இல்லை. என் கண்படாத இடமே இல்லை!”

அவருக்குப் பின்புறம் மிக அருகில் அமர்ந்திருந்த பிரதான சீடன், குறுக்கிட்டு மெல்லிய குரலில் சொன்னான்:

“ஒரு இடம் இருக்கிறது சுவாமிஜி!”

மைக்கைச் சட்டென்று தன் கைகளால் மூடிக்கொண்டு, அவனை நோக்கித் திரும்பிய சுவாமிஜி, கோபத்துடன், அதே நேரத்தில் மெல்லிய குரலில், உறுமும் தொனியுடன் கேட்டார்:

“எந்த இடம்?”

சீடன் பதில் சொன்னான்:
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
“உங்கள் முதுகு!”
--------------------------------------------------------------------
அன்புடன்,
வாத்தியார்




வாழ்க வளமுடன்!

21 comments:

  1. ஆசிரியருக்கு வணக்கம்,
    ஆணவம் எதிரிகளை விதைக்கிறது
    ஒழுக்கமின்மை அவற்றிற்கு உரமிடுகிறது.....
    சாமியார் .. சந்நியாசி... வேண்டாம் துறவி...
    என்று தாங்கள் தயங்கியதுப் போலவே
    பதில் இதுவா? இல்லை அதுவா? என்று எனக்குள் கேள்விகள்,
    கடைசியில் அது அல்ல; இது என நீங்கள் எழுதக்கண்டேன்..
    இந்தக்காலத்தில் பெரும்பாலும்
    துறவிகளும் கூட.... பார்த்து விடுகிறார்களே. மன்னிக்கணும்,
    ஓ... அவர்கள் எல்லாம் துறவிகளாக முயற்சித்தவர்களா?....
    பாவம் விதி யாரை விட்டது......
    மகாத்மா காந்தியா என்ன? ஹரிச்சந்திரா நாடகம் பார்த்ததற்கே.....
    பொய்யிற்கு துறவு கொடுக்க....

    தாங்கள் அடிக்கடி கூறுவது போல்,
    அறிவு என்னும் உயரிய ஒன்று ஒழுக்கம்
    என்னும் மேலாடையிலே ஜொலிக்கும்...... இல்லையேல் சலிச்சுவிடும்....
    நன்றிகள் குருவே!

    ReplyDelete
  2. அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,
    கதை மிகவும் அருமை,
    நன்றாக உள்ளது. நன்றி!
    வணக்கம்.
    தங்கள் அன்புள்ள மாணவன்
    வ.தட்சணாமூர்த்தி
    2010-04-30

    ReplyDelete
  3. நறுக்கெனச் சொல்லிவிட்டீர் = அதை
    நயமாகவும் சொல்லிவிட்டீர்.

    முதுகைக் கண்டவரும் இல்லை = தன்
    முதுமையில் என்ன வருமென நினைத்தவருமில்லை.

    சுப்பு ரத்தினம்.

    ReplyDelete
  4. "சொல்லுவது எல்லோர்க்கும் சுலபமாகும்..
    சொன்னபடி நடப்பவர்க்கள் மிகவும் சொற்பம்..
    எல்லையற்ற நீதிகளை எழுதுவார்கள்..
    எழுதுவது பிறர்க்கே தம‌க்கென்று எண்ணார்..
    தொல்லுலகில் சொன்னதுபோல் செயல் முயன்ற மோகன்தாஸ் கரம்ச‌ந்த் காந்தி........"........................நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை.

    "ஏதிலார் குற்றம் போல் தன்குற்றம் காண்கிற்பின்
    தீதுண்டோ மன்னும் உயிர்க்கு"...................அய்ய்ன் திருவள்ளூவர்


    "த‌ன் குறை தெரியாத மேதாவிகளுக்கெல்லாம்
    என் குறை தெரிந்து இருக்கும் போது
    என் குறை தெரிந்த‌ என‌க்கு
    என் நிறை தெரியாதா?"..........................ஜெ‌ய‌காந்த‌ன்

    ReplyDelete
  5. //“ஒரு இடம் இருக்கிறது சுவாமிஜி!”




    இதில் ஏதோ உள் குத்து இருக்கோ

    ReplyDelete
  6. வாத்தியார் அவர்களுக்கு,

    ஜாதக பொருத்தம் பார்க்கும் பொலுது, திசை சந்திப்பு இருந்தால், நல்லதா அல்லது கெட்டதா?.

    ithu thirumana vaalkayai paathikkuma?

    நன்றி

    ReplyDelete
  7. தொலைகாட்சி ராமாயணத் தொடரில் சீதையாக வந்த ஒரு நடிகை பட பிடிப்பின் ஓய்வின் போது தனது வேஷம் கலைக்காது புகைபிடித்ததை கேட்டு ஆதங்கப் பட்டோம், ராகவேந்திரராக நடித்த திருவாளர் ரஜினி அவர்கள் விரதம் இருந்து அப்பாத்திரத்தை (ஆன்ம திறத்தை) நடித்தார் என்று கேள்விப் பட்டு பெருமிதம் (அவரின் மீது மரியாதைக்) கொண்டோம்.இப்படி தனது நிலை கொண்ட பாத்திரத்தை அறிந்து அந்த பாத்திரத்திற்கு (தமக்கு அல்ல) பங்கம் வராது பார்த்துக் கொள்வது அவரவரின் பொறுப்பு.

    சில நேரம் விதியே அதுவாகலாம்; தவறு தவறே தான், தவறு செய்தவர்கள்; தரம்கெட்டவர்கள் பேசும் பேச்சையும் கேட்டுத்தானே ஆகவேண்டும். விதி வழித்தானே பரசு ராமர் தன் தாயை கொன்றார், விஸ்வாமித்திரர் அவதியுற்றார், பாண்டியன் கண்ணகிக்கு இழைத்ததை எண்ணி தன்னையே மாய்த்துக் கொண்டார், ஓவியமாய் வளர்த்த தன மகனை பதினான்கு ஆண்டுகள் வனவாசம் போகச் சொன்னாள் கைகேகி. தவறு தவறு தான். அறிந்தோ, அறியாமலோ, விதியோ அல்லது மதி கெட்டோ. அண்ணா! இது மற்றவர் குற்றம் என்று (கைகேயியையோ, பரதனையோ....) லக்குமணன் கூறும்போது ஸ்ரீ ராமபிரான் என்னக் கூறினார். தம்பி நதியில் நீரில்லை என்றால் அது நதியின் குற்றம் ஆகாது என்றார். அதைத் தான் கவியரசு இப்படிச் சொன்னார் "நதி வெள்ளம் காய்ந்து விட்டால் நதி செய்தக் குற்றம் இல்லை விதி அன்றி வேறு ஏதம்மா?". தவம் துறவு இரண்டும் கடினம் தான் முடியாதவர்கள் களங்கப் படுத்தாமல் இருக்கட்டுமே. ஆட்டிவைப்பது அவனே, ஆடுவது மட்டுமே நாம். நன்றி!

    ReplyDelete
  8. ////Alasiam G said...
    ஆசிரியருக்கு வணக்கம்,
    ஆணவம் எதிரிகளை விதைக்கிறது.ஒழுக்கமின்மை அவற்றிற்கு உரமிடுகிறது..... சாமியார் .. சந்நியாசி... வேண்டாம் துறவி... என்று தாங்கள் தயங்கியதுப் போலவே பதில் இதுவா? இல்லை அதுவா? என்று எனக்குள் கேள்விகள், கடைசியில் அது அல்ல; இது என நீங்கள் எழுதக்கண்டேன்..
    இந்தக்காலத்தில் பெரும்பாலும் துறவிகளும் கூட.... பார்த்து விடுகிறார்களே. மன்னிக்கணும், ஓ... அவர்கள் எல்லாம் துறவிகளாக முயற்சித்தவர்களா?.... பாவம் விதி யாரை விட்டது...... மகாத்மா காந்தியா என்ன? ஹரிச்சந்திரா நாடகம் பார்த்ததற்கே.... பொய்யிற்கு துறவு கொடுக்க...
    தாங்கள் அடிக்கடி கூறுவது போல், அறிவு என்னும் உயரிய ஒன்று ஒழுக்கம் என்னும் மேலாடையிலே ஜொலிக்கும்...... இல்லையேல் சலிச்சுவிடும்.. நன்றிகள் குருவே!//////

    நல்லது. நன்றி ஆலாசியம்!

    ReplyDelete
  9. ////V Dhakshanamoorthy said...
    அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,
    கதை மிகவும் அருமை, நன்றாக உள்ளது. நன்றி!
    வணக்கம்.
    தங்கள் அன்புள்ள மாணவன்
    வ.தட்சணாமூர்த்தி///

    உங்களின் பாராட்டிற்கு நன்றி நண்பரே!!

    ReplyDelete
  10. ////sury said...
    நறுக்கெனச் சொல்லிவிட்டீர் = அதை
    நயமாகவும் சொல்லிவிட்டீர்.
    முதுகைக் கண்டவரும் இல்லை = தன்
    முதுமையில் என்ன வருமென நினைத்தவருமில்லை.
    சுப்பு ரத்தினம்./////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி நண்பரே!!

    ReplyDelete
  11. ////kmr.krishnan said...
    "சொல்லுவது எல்லோர்க்கும் சுலபமாகும்..
    சொன்னபடி நடப்பவர்க்கள் மிகவும் சொற்பம்..
    எல்லையற்ற நீதிகளை எழுதுவார்கள்..
    எழுதுவது பிறர்க்கே தம‌க்கென்று எண்ணார்..
    தொல்லுலகில் சொன்னதுபோல் செயல் முயன்ற மோகன்தாஸ் கரம்ச‌ந்த் காந்தி........"........................நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை.
    "ஏதிலார் குற்றம் போல் தன்குற்றம் காண்கிற்பின்
    தீதுண்டோ மன்னும் உயிர்க்கு"...................அய்ய்ன் திருவள்ளூவர்
    "த‌ன் குறை தெரியாத மேதாவிகளுக்கெல்லாம்
    என் குறை தெரிந்து இருக்கும் போது
    என் குறை தெரிந்த‌ என‌க்கு
    என் நிறை தெரியாதா?"..........................ஜெ‌ய‌காந்த‌ன்////

    இவற்றுள் ஜெயகாந்தன் அவர்கள் சொன்னது அற்புதமாக உள்ளது. அறியத்தந்தமைக்கு நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  12. /////தமிழ் வெங்கட் said...
    //“ஒரு இடம் இருக்கிறது சுவாமிஜி!”
    இதில் ஏதோ உள் குத்து இருக்கோ/////

    உள்குத்தா? அப்படியென்றால் என்ன ராசா?

    ReplyDelete
  13. ////Vaalga valamudan-Saravanan said...
    வாத்தியார் அவர்களுக்கு,
    ஜாதக பொருத்தம் பார்க்கும் பொழுது, திசை சந்திப்பு இருந்தால், நல்லதா அல்லது கெட்டதா?.
    ithu thirumana vaalkayai paathikkuma?
    நன்றி/////

    திசை சந்திப்பு இருக்கும் ஜாதகங்களை ஒதுக்கி விடுவார்கள். தசை சந்திப்பு இருக்கக்கூடாது. தெரியாமல் திருமணம் செய்துகொண்ட ஜோடிகளுக்கு, தசா சந்திப்புக்களில் ஒரே மாதிரியான பிரச்சினைகள் வரும். கணவன் மனைவி இருவருக்கும். தண்டவாளத்தில் அடுத்தடுத்து இரண்டு ரயில்கள் போவதற்குச் சமம் அது! இரண்டு ரயில்களுக்கும் ஒரு பத்து நிமிட இடைவெளியாவது வேண்டாமா?

    ReplyDelete
  14. //////Alasiam G said...
    தொலைகாட்சி ராமாயணத் தொடரில் சீதையாக வந்த ஒரு நடிகை பட பிடிப்பின் ஓய்வின் போது தனது வேஷம் கலைக்காது புகைபிடித்ததை கேட்டு ஆதங்கப் பட்டோம், ராகவேந்திரராக நடித்த திருவாளர் ரஜினி அவர்கள் விரதம் இருந்து அப்பாத்திரத்தை (ஆன்ம திறத்தை) நடித்தார் என்று கேள்விப் பட்டு பெருமிதம் (அவரின் மீது மரியாதைக்) கொண்டோம்.இப்படி தனது நிலை கொண்ட பாத்திரத்தை அறிந்து அந்த பாத்திரத்திற்கு (தமக்கு அல்ல) பங்கம் வராது பார்த்துக் கொள்வது அவரவரின் பொறுப்பு.
    சில நேரம் விதியே அதுவாகலாம்; தவறு தவறே தான், தவறு செய்தவர்கள்; தரம்கெட்டவர்கள் பேசும் பேச்சையும் கேட்டுத்தானே ஆகவேண்டும். விதி வழித்தானே பரசு ராமர் தன் தாயை கொன்றார், விஸ்வாமித்திரர் அவதியுற்றார், பாண்டியன் கண்ணகிக்கு இழைத்ததை எண்ணி தன்னையே மாய்த்துக் கொண்டார், ஓவியமாய் வளர்த்த தன மகனை பதினான்கு ஆண்டுகள் வனவாசம் போகச் சொன்னாள் கைகேகி. தவறு தவறு தான். அறிந்தோ, அறியாமலோ, விதியோ அல்லது மதி கெட்டோ. அண்ணா! இது மற்றவர் குற்றம் என்று (கைகேயியையோ, பரதனையோ....) லக்குமணன் கூறும்போது ஸ்ரீ ராமபிரான் என்னக் கூறினார். தம்பி நதியில் நீரில்லை என்றால் அது நதியின் குற்றம் ஆகாது என்றார். அதைத் தான் கவியரசு இப்படிச் சொன்னார் "நதி வெள்ளம் காய்ந்து விட்டால் நதி செய்தக் குற்றம் இல்லை விதி அன்றி வேறு ஏதம்மா?". தவம் துறவு இரண்டும் கடினம் தான் முடியாதவர்கள் களங்கப் படுத்தாமல் இருக்கட்டுமே. ஆட்டிவைப்பது அவனே, ஆடுவது மட்டுமே நாம். நன்றி!//////

    நன்றாகச் சொல்லியுள்ளீர்கள். இதைத்தான் சுருக்கமாக ‘ஊழ்வினை வந்து உறுத்தும்’ என்றும் சொல்வார்கள். நன்றி ஆலாசியம்!

    ReplyDelete
  15. Respected Sir..!
    The story and the moral of the story both are very good. The main purpose of spiritual path is to eradicate the arrogance and selfishness. But most of the nowadays Priests are not keeping these and often make News-Headlines. Thankyou very much for enhancing our moral and spiritual values.
    Yours sincere Student
    M. Thiruvel Murugan,
    Shimla, (H.P.)

    ReplyDelete
  16. //இதில் ஏதோ உள் குத்து இருக்கோ//

    நம் வாத்தியாருக்கு உள் குத்து, வெளி குத்து, நடு குத்து இப்படி எந்த குத்தும் தெரியாது. அவர் ஒரு அப்பிராணி. என்ன நான் சொல்வது சரிதானே ஐயா.

    ReplyDelete
  17. ////M. Thiruvel Murugan said...
    Respected Sir..!
    The story and the moral of the story both are very good. The main purpose of spiritual path is to eradicate the arrogance and selfishness. But most of the nowadays Priests are not keeping these and often make News-Headlines. Thankyou very much for enhancing our moral and spiritual values.
    Yours sincere Student
    M. Thiruvel Murugan,
    Shimla, (H.P.)/////

    உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  18. ////ananth said...
    //இதில் ஏதோ உள் குத்து இருக்கோ//
    நம் வாத்தியாருக்கு உள் குத்து, வெளி குத்து, நடு குத்து இப்படி எந்த குத்தும் தெரியாது. அவர் ஒரு அப்பிராணி. என்ன நான் சொல்வது சரிதானே ஐயா.////

    உண்மைதான் நண்பரே! எனக்குக் குத்துவிடவும் தெரியாது. குத்து வாங்கியும் பழக்கமில்லை!

    ReplyDelete
  19. வாத்தியார் ஐயா!

    இன்றைய பாடம் மிக மிகவும் நன்றாக உள்ளது.

    கந்தபுராணத்தின் 'எம்பெருமான் முருகன் '! சொல்லும் உள்கருத்தே! நான் என்ற ஆணவத்தை ஒழித்து! அதான், ஆணவம் கண்மம், மாயை என்ற முன்மலன்களை ஒழித்து அடக்கத்துடன் வாழவேண்டும் என்பதுதானே ஐயா.

    ஆனால்! மனது ஆனது அனைத்தும் அறிந்து இருந்தும் சில சமயங்களில் தனது நிலையை மறந்து விடுகின்றது இங்குதான் தவறு நடக்கின்றது

    சரிதானே ஐயா!

    ReplyDelete
  20. Dear Sir

    Enakkum En manaivikku Ore madhiriyana dasai(Guru dasai ) Dasai Vidudhi -Idaiveli 23 to 25 natkal.

    Idhil Edhavadhu Padhippu Unda.

    Enakku Viruchiga Lagnam Mithuna Rasi

    Manaivikku Midhuna Lagnam Thula rasi.

    Dasa Vidudhi Idhil Edhavadhu Padhippu Unda.

    Note: Jeyakanthan Varigal Arumai.

    Thank you

    Loving Student
    Arulkumar Rajaraman

    ReplyDelete
  21. Nice Story Sir,

    I am remembering "Ravanan Vs Agastiya - Veena competition" same kind of story.

    Thanks For your post sir.

    BR,
    Sabarinathan TA

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com