மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

27.4.10

குழந்தை பாக்கியத்திற்கான அஷ்டகவர்க்க ஃபார்முலா என்ன?



+++++++++++++++++++++++++++++++++++++++++++++
"வெள்ளிமலை மன்னவா
வேதம் நீயல்லவா!"
-கவியரசர் கண்ணதாசன்

குழந்தை பாக்கியத்திற்கான அஷ்டகவர்க்க ஃபார்முலா என்ன?

குழந்தை பாக்கியத்திற்கான அஷ்டகவர்க்க ஃபார்முலா இதுதான்.

5ஆம் வீடு, 5ஆம் அதிபதி இருக்கும் இடம், காரகன் குரு இருக்கும் இடம் ஆகிய மூன்று வீடுகளும், 28 பரல் களுக்கு மேல் இருக்கவேண்டும். இருந்தால் உடனே (திருமணமான மறு வருடமே) குழந்தை பிறக்கும்.

இல்லையென்றால்?

அந்த மூன்று வீடுகளில் ஒரு வீட்டிலாவது 28ற்கு மேற்பட்ட பரல்கல்கள் இருக்க வேண்டும். அப்படியிருந்தால் தாமதமாகக் குழந்தை பிறக்கும்!

எப்போது பிறக்கும்?

ஐந்தாம் அதிபதி அல்லது காரகன் அல்லது லக்கினாதிபதி ஆகியவர்களின் தசாபுத்தியில் பிறக்கும்.

மூன்று வீடுகளிலுமே நீங்கள் சொல்லும் 28 பரல்கள் இல்லையென்றால்?

அவசரப்படவேண்டாம். 25 முதல் 28 பரல்களுக்குள் இருக்கலாம். சற்றுத்தாமதமாகப் பிறக்கும்.

மூன்று வீடுகளுலும் 25 பரல்கள் இல்லை - அதற்குக் கீழான பரல்கள்தான் உள்ளன என்றால்?

கணவன் அல்லது மனைவி இருவரில் ஒருவருக்கு அந்த வீடுகள் நன்றாக இருந்தால் போதும். அவரை வைத்து - அவருக்காகப் பிறக்கும்!

இருவருக்குமே அப்படியில்லையென்றால்?

கஷ்டம்தான். இறைவனை வழிபடுவதைத் தவிர வேறு வழியில்லை! பூர்வ புண்ணியத்தைச் சொல்லும் திறமை எந்த ஜோதிடனுக்கும் இல்லை. பூர்வ புண்ணியப் பலனால் (மேலும் இறைவழிபாட்டால்) எல்லாவற்றையும் பொய்யாக்கி விட்டுக் குழந்தை பிறக்கும்.

காசில்லாத பரிகாரஸ்தலம் எது?

ராமேஸ்வரம்!

Okayயா?

நட்புடன்
வாத்தியார்

(திருமணமாகாதவர்கள் இந்தப் பாடத்தைப் படித்துவிட்டுக் குழம்ப வேண்டாம். பெண் பார்க்கும்போது மகேந்திரப் பொருத்தம் பார்த்து, அது பொருந்துகின்ற பெண்ணைத் திருமணம் செய்துகொள்ளுங்கள்.)


வாழ்க வளமுடன்!

43 comments:

  1. ஆசிரியருக்கு வணக்கம்,
    குழலினிது யாழினிது என்பர்தம் மக்கள்
    மழலைச் சொல் கேளாதவர். - வள்ளுவர்.
    பதினாறில் ஒன்று, அக் குழந்தைப் பற்றிய
    பாடத்திற்கு நன்றிகள் குருவே!

    ReplyDelete
  2. Dear Sir

    Feb 2008 il Thirumanam. Next Feb 2009 il Aan Varisu.

    Unmai than Sir..

    Thank you

    Loving Student
    Arulkumar Rajaraman

    ReplyDelete
  3. Vanakam sir,

    Present sir, for long time I could not come because I am working now time iruku poathu I will come for sure sir....

    Interesting lessons to read one more time (thriupiyum).....


    Thanks
    Thanuja

    ReplyDelete
  4. அன்புள்ள அய்யா,

    நல்ல பாடம். சந்தேகம்? ஐந்தாம் இடத்தில் ராகு & கேது இருந்தாலும், ஐந்தாம் அதிபதி ராகு & கேது உடன் இணைந்தாலும், காரகன் குரு ராகு & கேது உடன் இணைந்தாலும், இந்த அஷ்டவர்க்க பார்முலா workout ஆகுமா அய்யா?

    நம் பாடத்தில் ஐந்தாம் அதிபதி 6 இல் இருக்க கூடாது என்று படித்து இருக்கிறேன். அனாலும் ஐந்தாம் அதிபதி 6 இல் இருக்க, அந்த 6 ஆம் இடத்தில் 31 பரல்கள் இருந்தால் நல்லதா?

    நன்றி
    சரவணா
    கோவை

    ReplyDelete
  5. பதிவிற்கு நன்றி...

    ரத்தினச் சுருக்கமாக இருத்தது.

    ReplyDelete
  6. Sir, some of my american friends asked me some doubts on adopted children and donor edd/sperm born children.. how these kind of children horoscope make influence on parents?

    Eg: donor egg child
    if 4th place(moms place) is good, which mom will be benefited? mom who donored the egg? or the mom who carried the child??

    ReplyDelete
  7. /////Alasiam G said...
    ஆசிரியருக்கு வணக்கம்,
    குழலினிது யாழினிது என்பர்தம் மக்கள்
    மழலைச் சொல் கேளாதவர். - வள்ளுவர்.
    பதினாறில் ஒன்று, அக்குழந்தைப் பற்றிய
    பாடத்திற்கு நன்றிகள் குருவே!//////

    உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி ஆலாசியம்!

    ReplyDelete
  8. /////Arulkumar Rajaraman said...
    Dear Sir
    Feb 2008 il Thirumanam. Next Feb 2009 il Aan Varisu.
    Unmai than Sir..
    Thank you
    Loving Student
    Arulkumar Rajaraman////

    தகவலுக்கு நன்றி ராஜாராமன்!

    ReplyDelete
  9. /////Thanuja said...
    Vanakam sir,
    Present sir, for long time I could not come because I am working now time iruku poathu I will come for sure sir.... Interesting lessons to read one more time (thriupiyum).....
    Thanks
    Thanuja/////

    நல்லது. நன்றி சகோதரி!

    ReplyDelete
  10. /////Saravana said...
    அன்புள்ள அய்யா,
    நல்ல பாடம். சந்தேகம்? ஐந்தாம் இடத்தில் ராகு & கேது இருந்தாலும், ஐந்தாம் அதிபதி ராகு & கேது உடன் இணைந்தாலும், காரகன் குரு ராகு & கேது உடன் இணைந்தாலும், இந்த அஷ்டவர்க்க பார்முலா workout ஆகுமா அய்யா?/////

    இருந்தாலும் ஒர்க் அவுட் ஆகும்!
    >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
    நம் பாடத்தில் ஐந்தாம் அதிபதி 6 இல் இருக்க கூடாது என்று படித்து இருக்கிறேன். அனாலும் ஐந்தாம் அதிபதி 6 இல் இருக்க, அந்த 6 ஆம் இடத்தில் 31 பரல்கள் இருந்தால் நல்லதா?
    நன்றி
    சரவணா
    கோவை////

    எத்தனை பரல்கள் அங்கே இருந்தால் என்ன? ஐந்தாம் அதிபதி அந்த வீட்டிற்குப் பன்னிரெண்டில் சென்றமர்வது நன்மையளிக்காது!

    ReplyDelete
  11. ////மதி said...
    பதிவிற்கு நன்றி...
    ரத்தினச் சுருக்கமாக இருந்தது./////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி!

    ReplyDelete
  12. /////Jey said...
    Sir, some of my american friends asked me some doubts on adopted children and donor edd/sperm born children.. how these kind of children horoscope make influence on parents?
    Eg: donor egg child
    if 4th place(moms place) is good, which mom will be benefited? mom who donored the egg? or the mom who carried the child??////////

    donor & carrier எல்லாம் வேத காலத்தில் இல்லை. அதனால் அதுபற்றிய செய்திகளும் ஜோதிட நூல்களில் இல்லை!

    ReplyDelete
  13. அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,

    குழந்தை பாக்கியத்திற்கான பாடம் சுருக்கமாகவும்,தெளிவாகவும் உள்ளது.

    குழந்தை பாக்கியம் கிடைப்பதற்கு
    பரிகாரஸ்தலம் ராமேஸ்வரம்....

    தஞ்சாவூருக்கு அருகேஉள்ள "திருக்கருகாவூர்",கோவிலுக்கு சென்று வருமாறும் கூறுகிறார்கள்.

    நான் சென்றது இல்லை,தகவலுக்காக தெரிவித்தேன்.


    நன்றி!
    வணக்கம்.

    தங்களன்புள்ள மாணவன்

    வ.தட்சணாமூர்த்தி

    2010-04-27

    ReplyDelete
  14. வணக்கம் ஜயா,
    இன்றைய பாடம் நன்று.
    ......................
    மகர லக்னம்,7 ல் கேது,7 ஆம் வீட்டில் 20 பரல்கள். 7 ற்கு உரிய சந்திரன் ராசியில் 11 ல் நீசமும்,அம்சத்தில் ஆட்சியும் பெற்றுள்ளார்.சந்திரனின் சுயவர்கப்பரல்கள் 3.
    கேள்வி:-
    திருமண வாழ்கை அமையுமா ?
    அப்படியே அமைந்தால் அது நிலைக்குமா?.
    நன்றி.....

    ReplyDelete
  15. நம் பாடத்தில் ஐந்தாம் அதிபதி 6 இல் இருக்க கூடாது என்று படித்து இருக்கிறேன். அனாலும் ஐந்தாம் அதிபதி 6 இல் இருக்க, அந்த 6 ஆம் இடத்தில் 31 பரல்கள் இருந்தால் நல்லதா?
    நன்றி
    சரவணா
    கோவை////

    எத்தனை பரல்கள் அங்கே இருந்தால் என்ன? ஐந்தாம் அதிபதி அந்த வீட்டிற்குப் பன்னிரெண்டில் சென்றமர்வது நன்மையளிக்காது!
    ==================================
    மேலுள்ள உங்கள் பதில் தொடர்ச்சியுடன், ஐந்தாம்(சூரியன்) அதிபதி 6 இல் இருக்க - அந்த ஐந்தாம் இடத்திற்கு குருவின் ஐந்தாம்
    பார்வை உள்ளது அய்யா, மேலும் நவாம்சத்தில் ஐந்தாம் அதிபதி ஐந்திலேயே உட்சம் அடைகிறார். (லக்னம்-மேஷம், அதில் குரு வர்கோதமம்)
    சுயவர்க்கம் ஐந்தாம் அதிபதி - 7 பரல்கள். தங்கள் அறிவரை வேண்டும்? எதாவது பரிகாரம் உண்டா?

    நன்றி
    சரவணா
    கோவை

    ReplyDelete
  16. sir

    i m dhanus lagna. 5th lord mars is in 11th house with saturn & 31 paral. guru with mandi & vakram in lagna with 30 paral. fifth house has moon with mercury & paral 22.

    guru 6 paral
    mars 6 paral
    saturn 3 paral

    what would be the effect? sir.

    ReplyDelete
  17. என் அனுபவம். timing of event கணிப்பது சற்று கடினமான காரியம். மற்றும் குழந்தை பாக்கியத்திற்கு இந்த ஃபார்முலா எல்லாருக்கும் சரி வருவதாக தெரியவில்லை. என் உறவினர் ஒருவருக்கு இந்த மூன்றிலும் பரல் குறைவு. ஆனால் குழந்தை பாக்கியம் திருமணமான மறு ஆண்டே ஏற்பட்டது. தங்களையோ, இந்த ஃபார்முலாவையோ குறை சொல்லவில்லை. இந்த விதிக்கு விதி விலக்கும் இருக்கிறது என்பற்காக சொல்கிறேன். இதைப் பற்றி ஆராய்ந்து வருகிறேன். எதுவும் தெரிய வந்தால் கண்டிப்பாக இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.

    ReplyDelete
  18. அறிவியல் சம்பந்தமான கேள்வி இங்கே உள்நுழைந்துவிட்டதனால்..

    //donor & carrier எல்லாம் வேத காலத்தில் இல்லை. அதனால் அதுபற்றிய செய்திகளும் ஜோதிட நூல்களில் இல்லை//

    கிரகங்களின் சஞ்சாரப்படி ஒருவரின் வாழ்வில் மாற்றம் ஏற்படும்போது, கிரக நிலைகளை சரியாக கணித்து மருத்துவ முறைப்படி மகப்பேறு உருவாக்கம் செய்தால், எந்த நாளில் செய்யலாம் ? அரசனுக்கு ஒரு ஜாதகம், ஆண்டிக்கொரு ஜாதகம் உண்டல்லவா ? நாம் ஏன் அரசர்களை வரிசைவரிசையாக உருவாக்கக்கூடாது ?

    அறிவியலால் படைப்பில் மாற்றம் ஏற்படுத்த முடியாது என்று சொல்வீர்களா

    ReplyDelete
  19. //////V Dhakshanamoorthy said...
    அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,
    குழந்தை பாக்கியத்திற்கான பாடம் சுருக்கமாகவும்,தெளிவாகவும் உள்ளது.
    குழந்தை பாக்கியம் கிடைப்பதற்கு
    பரிகாரஸ்தலம் ராமேஸ்வரம்....
    தஞ்சாவூருக்கு அருகேஉள்ள "திருக்கருகாவூர்",கோவிலுக்கு சென்று வருமாறும் கூறுகிறார்கள்.
    நான் சென்றது இல்லை,தகவலுக்காக தெரிவித்தேன்.
    நன்றி!
    வணக்கம்.
    தங்களன்புள்ள மாணவன்
    வ.தட்சணாமூர்த்தி/////

    மைசூருக்கு அருகே கிருஷ்ணன் கோவில் உள்ளதாகச் சொல்வார்கள். அங்கேயும் சென்று பிரார்த்தனை செய்துவரலாம். குருவாயூருக்கும் சென்று வரலாம்.

    ReplyDelete
  20. ///////Nareshkumar said...
    வணக்கம் ஜயா,
    இன்றைய பாடம் நன்று. ......................
    மகர லக்னம்,7 ல் கேது,7 ஆம் வீட்டில் 20 பரல்கள். 7 ற்கு உரிய சந்திரன் ராசியில் 11 ல் நீசமும்,அம்சத்தில் ஆட்சியும் பெற்றுள்ளார்.சந்திரனின் சுயவர்கப்பரல்கள் 3.
    கேள்வி:-
    திருமண வாழ்க்கை அமையுமா ?
    அப்படியே அமைந்தால் அது நிலைக்குமா?.
    நன்றி.....//////

    Delay of marriage & denial of marriage என்பதற்கெல்லாம் பல அமைப்புக்கள் உள்ளன. முழுஜாதகத்தையும் அலசினால் மட்டுமே அது தெரியும். இப்படி உதிரிக் கிரக நிலைகளை வைத்துக்கொண்டு பலன் சொல்வது தவறாகிவிடும்!

    ReplyDelete
  21. Saravana said...
    நம் பாடத்தில் ஐந்தாம் அதிபதி 6 இல் இருக்க கூடாது என்று படித்து இருக்கிறேன். அனாலும் ஐந்தாம் அதிபதி 6 இல் இருக்க, அந்த 6 ஆம் இடத்தில் 31 பரல்கள் இருந்தால் நல்லதா?
    நன்றி
    சரவணா
    கோவை////
    எத்தனை பரல்கள் அங்கே இருந்தால் என்ன? ஐந்தாம் அதிபதி அந்த வீட்டிற்குப் பன்னிரெண்டில் சென்றமர்வது நன்மையளிக்காது!
    ==================================
    மேலுள்ள உங்கள் பதில் தொடர்ச்சியுடன், ஐந்தாம்(சூரியன்) அதிபதி 6 இல் இருக்க - அந்த ஐந்தாம் இடத்திற்கு குருவின் ஐந்தாம்
    பார்வை உள்ளது அய்யா, மேலும் நவாம்சத்தில் ஐந்தாம் அதிபதி ஐந்திலேயே உச்சம் அடைகிறார். (லக்னம்-மேஷம், அதில் குரு வர்கோதமம்)
    சுயவர்க்கம் ஐந்தாம் அதிபதி - 7 பரல்கள். தங்கள் அறிவரை வேண்டும்? எதாவது பரிகாரம் உண்டா?
    நன்றி
    சரவணா
    கோவை/////

    நவாம்சத்தில் உச்சம் அடைந்துள்ளார். அத்துடன் சுயவர்ககத்தில் 7 பரல்களுடன் உள்ளார் அல்லவா? நன்மைதான். கவலையை விடுங்கள்!

    ReplyDelete
  22. Jack Sparrow said...
    sir
    i m dhanus lagna. 5th lord mars is in 11th house with saturn & 31 paral. guru with mandi & vakram in lagna with 30 paral. fifth house has moon with mercury & paral 22.
    guru 6 paral
    mars 6 paral
    saturn 3 paral
    what would be the effect? sir.

    இப்படி உதிரிக் கிரக நிலைகளை வைத்துக்கொண்டு random கேள்விகளுக்கு பலன் சொல்ல முடியாது!
    The question should be specific with full birth details of the native!

    ReplyDelete
  23. /////ananth said...
    என் அனுபவம். timing of event கணிப்பது சற்று கடினமான காரியம். மற்றும் குழந்தை பாக்கியத்திற்கு இந்த ஃபார்முலா எல்லாருக்கும் சரி வருவதாக தெரியவில்லை. என் உறவினர் ஒருவருக்கு இந்த மூன்றிலும் பரல் குறைவு. ஆனால் குழந்தை பாக்கியம் திருமணமான மறு ஆண்டே ஏற்பட்டது. தங்களையோ, இந்த ஃபார்முலாவையோ குறை சொல்லவில்லை. இந்த விதிக்கு விதி விலக்கும் இருக்கிறது என்பற்காக சொல்கிறேன். இதைப் பற்றி ஆராய்ந்து வருகிறேன். எதுவும் தெரிய வந்தால் கண்டிப்பாக இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.//////

    பதிவில் உள்ளது பொதுப்பலன். தனிப்பட்ட ஜாதகங்களுக்கு, பரல்கள் குறைந்தாலும், கிரகங்களின் அமைப்பை வைத்துப் பலன்கள் மாறுபடும். நன்றி ஆனந்த்!

    ReplyDelete
  24. /////செந்தழல் ரவி said...
    அறிவியல் சம்பந்தமான கேள்வி இங்கே உள்நுழைந்துவிட்டதனால்..
    //donor & carrier எல்லாம் வேத காலத்தில் இல்லை. அதனால் அதுபற்றிய செய்திகளும் ஜோதிட நூல்களில் இல்லை//
    கிரகங்களின் சஞ்சாரப்படி ஒருவரின் வாழ்வில் மாற்றம் ஏற்படும்போது, கிரக நிலைகளை சரியாக கணித்து மருத்துவ முறைப்படி மகப்பேறு உருவாக்கம் செய்தால், எந்த நாளில் செய்யலாம் ? அரசனுக்கு ஒரு ஜாதகம், ஆண்டிக்கொரு ஜாதகம் உண்டல்லவா ? நாம் ஏன் அரசர்களை வரிசைவரிசையாக உருவாக்கக்கூடாது ?
    அறிவியலால் படைப்பில் மாற்றம் ஏற்படுத்த முடியாது என்று சொல்வீர்களா?////

    வாருங்கள் செந்தழலாரே! உங்கள் வரவு நல்வரவாகட்டும். உங்கள் வரவிற்கு நன்றி!
    அரசர்களையும், அறிவியல் வல்லுனர்களையும், அரிய விஞ்ஞானிகளையும் ஏன் வரிசை வரிசையாக உருவாக்க வேண்டும்.? இப்போது இருப்பவர்களை அறிவியல் மூலம் காப்பாற்றினால் போதாதா? அதாவது இப்போது இருக்கும், அத்தனை பிரபலங்களுக்கும் மரணமே ஏற்படாமல் காப்பாற்றினால் போதாதா? மரணமில்லாப் பெருவாழ்வு எப்போது சாத்தியமாகிறதோ, அப்போது நீங்கள் சொல்லும் படைப்பும் நம் வசம் வந்துவிடும்.

    கோடிக்கணக்கான (in billion & zillion dollaars) பணத்தைச் செலவழித்து, விண்வெளியையும், பூமியின் துகளையும் ஆராய்ச்சி செய்யும் நல்ல உள்ளங்கள் மனிதனின் உயிர் உடலில் எந்தப் பகுதியில் இருக்கிறது? அது உடம்பை விட்டு வெளியேறாமல் தடுக்க என்ன வழி? அத்துடன், மனிதனுக்கு முதுமை ஏற்படாமல் உடம்பின் செல்களையும், நரம்புகளையும், உடலின் இதர பகுதிகளையும் எப்படிப் புதுப்பிப்பது? சுருக்கமாக, இருக்கும் மனிதனுக்கு மரணமே ஏற்படாமல் எப்படிப் பாதுகாப்பது? என்று ஆராய்ந்து அதற்கு ஒரு வழியைக் கண்டு பிடித்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்?

    செந்தழல் ரவியும் ஒரு ஆயிரம் ஆண்டுகள் உயிரோடு இருக்க வேண்டும். சுப்பையா வாத்தியாரும் ஒரு ஆயிரம் ஆண்டுகள் உயிரோடு இருக்க வேண்டும்.

    சாத்தியமா சொல்லுங்கள்?
    அறிவியலால் இது சாத்தியம் என்றால், நீங்கள் கேட்கும் அதுவும் சாத்தியமே!

    ReplyDelete
  25. Dear sir
    Child birth would happen in which dasa / bhukthi is well explained in the article...thanks a lot...Is it possible to tell which antharam of bhukthi, the child birth would happen

    Satya

    ReplyDelete
  26. dob is 28/05/1984 . place. tirunelvelli. time = 9.2pm

    how abotu the child birth?
    ///////
    Jack Sparrow said...
    sir
    i m dhanus lagna. 5th lord mars is in 11th house with saturn & 31 paral. guru with mandi & vakram in lagna with 30 paral. fifth house has moon with mercury & paral 22.
    guru 6 paral
    mars 6 paral
    saturn 3 paral
    what would be the effect? sir.

    இப்படி உதிரிக் கிரக நிலைகளை வைத்துக்கொண்டு random கேள்விகளுக்கு பலன் சொல்ல முடியாது!
    The question should be specific with full birth details of the native!
    ////////////////

    ReplyDelete
  27. Sir,
    I have been following you for sometime and you are doing a wonderful job for both people and the art of jyotisha. I have couple of questions that I would like to ask you... My details are below...
    DOB:24-sep-1976
    TOB: 19.10 PM
    POB: Chennai

    I am without a job for a long time now - one and half years. (I am well qualified). I don't why I am not able to find it till today. Can you pls let me know when I will get it and will I get a stable and good job to my liking?
    Is it better for me to stay here in India or go abroad?
    Can you pls answer this question? Also I have a question related to babys i.e. my baby boy died in Oct 2008 just before my wife's due date. Why it happened? Now I am blessed with a baby girl in Jan 2010. (wife detail - DOB - 12-Oct-1980, TOB: 22.40PM, POB: Chennai)

    ReplyDelete
  28. ////satya said...
    Dear sir
    Child birth would happen in which dasa / bhukthi is well explained in the article...thanks a lot...Is it possible to tell which antharam of bhukthi, the child birth would happen
    Satya/////

    காரகன் அல்லது ஐந்தாம் அதிபதியின் அந்தரத்தில் குழந்தை பிறக்கும்!

    ReplyDelete
  29. Jack Sparrow said...
    dob is 28/05/1984 . place. tirunelvelli. time = 9.2pm
    how about the child birth?
    ///////

    உங்களுக்குத் திருமணமாகிவிட்டதா? திருமணமாகியிருந்தால் மனைவின் பிறப்பு விவரங்கள் எங்கே?
    மனைவி இல்லாமல் குழந்தை பாக்கியம் எப்படி? தனிப்பட்ட கேள்விகளுக்கான கேள்வி பதில் பகுதி பின்னால்வர உள்ளது. அப்போது கேளுங்கள். இப்போது ஜோதிட புத்தக வேலைகள், மற்றும் என் சொந்தத் தொழில் வேலைகள் எல்லாம் உள்ளபடியால் அதற்குத் தற்சமயம் நேரம் இல்லை. என் மின்னஞ்சல் பெட்டியில் இதுபோன்ற கேள்விகள் நூற்றுக் கணக்கில் உள்ளன.

    ReplyDelete
  30. //////Sara said...
    Sir,
    I have been following you for sometime and you are doing a wonderful job for both people and the art of jyotisha. I have couple of questions that I would like to ask you... My details are below...
    DOB:24-sep-1976
    TOB: 19.10 PM
    POB: Chennai
    I am without a job for a long time now - one and half years. (I am well qualified). I don't why I am not able to find it till today. Can you pls let me know when I will get it and will I get a stable and good job to my liking?
    Is it better for me to stay here in India or go abroad?
    Can you pls answer this question? //////

    சந்தடி சாக்கில் உள்ளே நுழைந்து உங்கள் சொந்தஜாதகத்தைவைத்து இரண்டு கேள்விகள் கேட்டுள்ளீர்கள். இப்படி எல்லோரும் கேட்கத்துவங்கினால், நான் எப்படிப் பொது நன்மை கருதி பதிவுகளை எழுதுவது? எனக்கு உரிய நேரம் கிடைக்க வேண்டாமா? எனக்கும் நாள் ஒன்றிற்கு 24 மணி நேரம்தானே உள்ளது!

    சரி, போனால் போகிறது, உங்கள் கேள்விக்கான பதிலுக்கு வருவோம். நீங்கள் ஹஸ்த நட்சத்திரம், மேஷ லக்கினம். காலசர்ப்ப தோஷம் 28 வயதுவரை இருந்துள்ளது. தொடர்ந்து ஏழரைச் சனி நடக்கிறது. இந்தக் கோளாறுகள் 26.11.2011ல் முடியும். ஏழரைச் சனி நடைபெறும் இடங்களில் (சிம்மம் முதல் துலாம் வரை) உள்ள பரல்கள் 20, 28, 23. அனுகூலமாக இல்லை. உங்களுக்கு நல்ல வேலை 36 வயதிற்கு மேல் கிடைக்கும். அதுவரை கிடைக்கும் வேலையைப் பாருங்கள். இருக்கும் வேலையிலேயே நீடித்து இருங்கள்.
    >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
    Also I have a question related to babys i.e. my baby boy died in Oct 2008 just before my wife's due date. Why it happened? Now I am blessed with a baby girl in Jan 2010. (wife detail - DOB - 12-Oct-1980, TOB: 22.40PM, POB: Chennai)

    உங்களுடைய ஐந்தாம் வீட்டின் இருபுறமும் தீய கிரகங்கள். பாப கர்த்தாரி யோகம். அத்துடன் ஏழரைச் சனி. அதனால்தான் முதல் குழந்தை இறந்தே பிறந்துள்ளது. இறைவனின் கருணையால் அடுத்துக் குழந்தை பிறந்துவிட்டதல்லவா? சந்தோஷமாக இருங்கள். பழசை எல்லாம் தோண்டித் துருவிக்கொண்டிருக் காதீர்கள்! ஓக்கேயா?

    ReplyDelete
  31. Vanakam sir,
    Sir for the fifth house lord sitting in fourth house is not good because this position I have in my chart plus this makes me take long time for to make decisions......will this change after some age or ippidithan life fulla irukuma sir?

    my fifth lord moon has 6 parals still it's not easy to think fast and to make my decsions...

    27 parals in 5th house
    24 parals in 4th house

    Thanks
    thanuja

    ReplyDelete
  32. அன்புள்ள அய்யா,
    நன்றி.

    ReplyDelete
  33. Dear Sir,
    :). Thanks. I understand that you have finite time but it is just that I am desparate I had to ask you. Sorry for that. Also when I checked both using the online software and the jadagam that I have, my jadagam has Meena ascendant and not Mesha ascendant... Lagna is at around 29 degree in Pisces. Can you please check and clarify it? If that is the case then lagna will be out of kala sarpa dosha, right? Since it is lagna lord's and 10th lord's dasa will it be any better in job front?

    Thanks

    ReplyDelete
  34. /////
    Thanuja said...
    Vanakam sir,
    Sir for the fifth house lord sitting in fourth house is not good because this position I have in my chart plus this makes me take long time for to make decisions......will this change after some age or ippidithan life fulla irukuma sir?
    my fifth lord moon has 6 parals still it's not easy to think fast and to make my decsions...
    27 parals in 5th house
    24 parals in 4th house
    Thanks
    thanuja////////

    பெண்களே முடிவெடுப்பதற்கு நேரம் எடுத்துக்கொள்வார்கள். அதனால் என்ன? நல்ல முடிவாக எடுத்தால் சரிதான்!

    ReplyDelete
  35. /////NEMILI BALA said...
    அன்புள்ள அய்யா,
    நன்றி.//////

    நல்லது நன்றி!

    ReplyDelete
  36. Sir,

    This might be the temple which you mentioned ,
    Dodda Mallur Krishna temple .
    Details at
    http://temples-india.blogspot.com/search/label/Karnataka

    ReplyDelete
  37. ////Sowmya said...
    Sir,
    This might be the temple which you mentioned ,
    Dodda Mallur Krishna temple .
    Details at
    http://temples-india.blogspot.com/search/label/Karnataka/////

    100% சரிதான். இந்தக் கோவிலைத்தான் குறிப்பிட்டிருந்தேன். பதிவை எழுதும்போது பெயர் சட்டென்று நினைவிற்கு வரவில்லை! தங்களுடைய உதவிக்கு நன்றி சகோதரி!

    ReplyDelete
  38. வணக்கம்

    காசில்லாத பரிகாரஸ்தலம் எது?
    ராமேஸ்வரம்!

    உண்மை வாத்யார் ஐயா

    சாட்சி அடியவன்

    அடியவனின் தாத்தா எனது தந்தையின் வாழ்க்கை முறை மற்றும் மரணத்தை கூட மிகவும் துல்லியமாக கணித்து வைத்து இருந்தார் .

    இதில் சிறப்பு! ஆண் பிள்ளைக்கு மத்தியம் என்றும் இராமேஸ்வரம் சென்றால் உறுதல் என்றும் எழுத்து மூலம் எழுதி இருந்தார் அதன் படியே முன்னோர்களின் மற்றும் பெற்றவர்களின் வீட்டில் இருந்து வேண்டிய வேண்டுதலில் என்னை பெற்றதாகவும் கோவிலுக்கு சென்று எனக்கு மாயகண்ணா என்றும் பெயரும் வைத்து உள்ளார் .

    ReplyDelete
  39. /////kannan said...
    வணக்கம்
    காசில்லாத பரிகாரஸ்தலம் எது?
    ராமேஸ்வரம்!
    உண்மை வாத்யார் ஐயா
    சாட்சி அடியவன்
    அடியவனின் தாத்தா எனது தந்தையின் வாழ்க்கை முறை மற்றும் மரணத்தை கூட மிகவும் துல்லியமாக கணித்து வைத்து இருந்தார் .
    இதில் சிறப்பு! ஆண் பிள்ளைக்கு மத்தியம் என்றும் இராமேஸ்வரம் சென்றால் உறுதல் என்றும் எழுத்து மூலம் எழுதி இருந்தார் அதன் படியே முன்னோர்களின் மற்றும் பெற்றவர்களின் வீட்டில் இருந்து வேண்டிய வேண்டுதலில் என்னை பெற்றதாகவும் கோவிலுக்கு சென்று எனக்கு மாயக்கண்ணா என்றும் பெயரும் வைத்து உள்ளார் .////////

    உங்களிடம் கண்ணன் மட்டும்தானே இருக்கிறார். மாயம் எங்கே?:-)))))

    ReplyDelete
  40. sir
    Dasa / bhukthi period indicated by you is for child delivery...Is it possible to compute through ashtaka varga, in which period, child would be conceived ?...thanks

    ReplyDelete
  41. /////satya said...
    sir
    Dasa / bhukthi period indicated by you is for child delivery...Is it possible to compute through ashtaka varga, in which period, child would be conceived ?...thanks/////

    அதே காலகட்டத்தில்தான் கரு உருவாகும். அதுதான் முக்கியம். குழந்தை பிறப்பு, அந்த புக்தி முடிந்த பிரகு கூட நிகழலாம்!

    ReplyDelete
  42. sir my name is prakaash d, dob 12/7/1982 time 12.50 am place karur,
    my wife name kokila DOB 11/12/1984 TIME 10.30am Place - dindigul.we got married on 8th march 2009, till now no child, pls tell me about our child birth possibility.

    ReplyDelete
  43. //////////Prakaash Duraisamy said...
    sir my name is prakaash d, dob 12/7/1982 time 12.50 am place karur,
    my wife name kokila DOB 11/12/1984 TIME 10.30am Place - dindigul.we got married on 8th march 2009, till now no child, pls tell me about our child birth possibility.///////

    திருமணமாகி ஒரு ஆண்டுதானே ஆகிறது? அதற்குள் என்ன சந்தேகம்? ஜாதகத்தை எல்லாம் மூட்டைகட்டிவைத்துவிட்டு, மணையாளுடன் மகிழ்ச்சியோடு இருங்கள். கூடிய் சீக்கிரம் குழந்தை பிறக்கும்!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com