மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

27.1.10

Doubt: எது நம்பிக்கைக்கு உரியது - வாக்கியமா? திருக்கணிதமா?

அங்கும் இங்கும் அலைபோலே - தினம்
ஆடிடும் மானிட வாழ்விலே
எங்கே நடக்கும் எது நடக்கும் - அது
எங்கே முடியும் யாரறிவார்!
-- கவியரசர் கண்ணதாசன்!
============================================
Doubt: எது நம்பிக்கைக்கு உரியது - வாக்கியமா? திருக்கணிதமா?

Doubts: கேள்வி பதில் பகுதி 20

நீங்களும் உங்கள் சந்தேகங்களும் - பாடம் எண் இருபது!

Question & answer session
கேள்வி பதில் வகுப்பு
----------------------------------------------------
email.No.81

அருள் முருகன்,
தஞ்சையில் உள்ள சாஸ்த்ரா பல்கலைகழகத்தில்
ஜோதிடம் பயின்று கொண்டிருக்கும் மாணவர்
(ஒரு நல்ல கேள்வியைக் கேட்டு, என்னை விரிவாகப் பதில் எழுத வைத்தமைக்கு, அவருக்கு முதற்கண் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்!)

கேள்வி:
Sir, why so many conflicts and changes in your opinion within two years?
In the beggining stages of lessons, you told that thirukanitha panchanga is the right one by citing an example of horoscope of a child born in chennai. Later on you said to cast horoscopes by both the methods, and take vakiya panchanga if the lagna changes or else take thirukanitha. To my surprise in an answer given three days ago, you have told that for casting horoscopes vaakiya is only right one, thirukanitha is suitable only for mathematical calculations, why so many contradictions? As I am going to seriously pursue diploma course offered by Sastra University, Tanjore in Astrology I am really confused and surprised by the statements. My intention is not to blame you or find fault. But I tell openly what I feel, as in my horoscope Guru is in dhanus lagna. ( 15.07.1984, 5:20 pm, madurai).

நீங்கள் சொல்வது உண்மை. துவக்க காலங்களில், வகுப்பறையில், மாணவக் கண்மணிகளுக்கு, திருக்கணிதத்தைப் பயன்படுத்த அறிவுரை சொல்லியிருக்கிறேன். பிறகு, மாணவர்கள் எண்ணிக்கை
அதிகமாகி, உள்ளே நுழைந்தவர்களில் பலபேர்கள், தங்கள் வீடுகளில்
தங்கள் பெற்றோர்கள் எழுதிவைத்திருக்கும் ஜாதகத்திற்கும்,
கணினியில் கணிக்கும் ஜாதகத்திற்கும் லக்கினம் வித்தியாசமாக
இருக்கிறதே என்று கூறிய போது, நிலைமையை உணர்ந்தேன்.

அதாவது 1990ஆம் ஆண்டிற்கு முன்பாக எழுதப்பெற்ற ஜாதகங்கள் அனைத்தும் பொதுவாக வாக்கியமுறைப்படிதான் எழுதப்பெற்றிருக்கும். தமிழ்நாட்டு ஜோதிடர்கள் தங்களுக்கு வழிவழியாக வந்த வாக்கியப் பஞ்சாங்கத்தை வைத்துக் கணித்துத்தான் எழுதியிருப்பார்கள். இன்றும் எழுதுவார்கள்.
அதனால் கணினியில் கணிக்கும்போது சிலருக்கு (எல்லோருக்கும் அல்ல) லக்கினம் வித்தியாசப்படும்

யார் அந்த சிலர்?

ஒரு லக்கினத்திற்கு 30 பாகைகள் - காலம் சுமார் 120 நிமிடங்கள் - 2.25 நட்சத்திரங்கள் - 9 நட்சத்திரப்பாகைகள்.

லக்கினத்தின் கடைசி நட்சத்திரப்பாகையின் பின் பகுதியில், அதாவது அந்த லக்கினத்தின் முடிவில் பிறக்கும் ஜாதகக் காரர்களுக்கு, லக்கினம் மாறிவிடும். திருக்கணிதத்தில் கடக லக்கினம் என்பது, வாக்கியத்தில் சிம்ம லக்கினம் என்று மாறிக்காட்சியளிக்கும்.

அதற்குக் காரணம் திருக்கணிதத்திற்கும், வாக்கியத்திற்கும் உள்ள பாகை வித்தியாசம் 1 பாகை 57 விநாடிகள். மணியில் சொல்வதென்றால் 6 நிமிடமும் 28 விநாடிகளும் ஆகும். நட்சத்திரத்தின் அளவு 13.3 பாகைகள் அதை 4ஆல் வகுத்தால் ஒரு பாகையின் அளவு 3.33 பாகைகள். மணியில் சொன்னால் 120 நிமிடங்கள் வகுத்தல் 9 பாதங்கள் = 13.33 நிமிடங்கள்.

அதனால் கடைசிப் பாதத்தின் பின் பகுதியில் (அதாவது காலசந்தியில்) பிறந்த ஜாதகனுக்கு, இரண்டு முறைகளிலும் கணித்துப் பார்த்தால் மேலே கூறியுள்ளபடி லக்கினம் மாறியிருக்கும். இது எல்லாக் கால சந்திப் பிறப்புக்களுக்கும் உள்ள பிரச்சினை!

அதற்கு என்ன தீர்வு?

காலசந்திப்புப் பிறப்புக்களுக்கு, இரண்டு லக்கினங்களின் குணங்களும் இருக்கும். கேரளா - தமிழ்நாடு எல்லையில் உள்ள மக்கள் இரண்டு மாநில மொழிகளையும் சரளமாகப் பேசுவார்கள். இரண்டு மாநிலக் கலாச்சாரங்களும் அவர்கள் வாழ்க்கையில் கலந்திருக்கும். அதுபோலத்தான் இதுவும்.

அதனால் காலசந்திப்பில் பிறந்தவர்கள், அந்த இரண்டில் எந்த முறையை வேண்டுமென்றாலும் பின்பற்றலாம். பெரிய வித்தியாசம் இருக்காது.
-------------------------------------------------------------------
சரி, எந்தமுறை சரியானது?

அது பற்றி பெரிய யுத்தம் நடத்தும் அளவிற்கு இரண்டு முறைகளுக்குமே ஆதரவாளர்கள் இருக்கிறார்கள்.

முதலில் திருக்கணிதத்திற்கும் (Lahiri Ayanamsa), வாக்கியத்திற்கும் (Raman's Ayanamsa) உள்ள வேறுபாட்டைப் பார்ப்போம்

Lahiri Ayanamsa.its value is 23 degrees, 51 minutes, 10 seconds.
Raman's Ayanamsa its value is 22 degrees, 24 minutes, 44 seconds.
Diffrence 1 degree, 27 minutes

இந்த வித்தியாசத்தின் காரணமாக நட்சத்திரத்தின் ஒரு பாதத்தில் பதிப்பாகம் வித்தியாசம் இருக்கும். ஒரு ராசியில் உள்ள ஒன்பது பாதங்களில் கடைசி பாதத்தில் பிறந்த ஜாதகனின் நட்சத்திரப்பாதம் (உதாரணத்திற்கு) லஹிரியில் சிம்ம லக்கினம் (உத்திரம் ஒன்றாம் பாதம்) என்றும், ராமன் முறையில் கன்னி லக்கினம் (உத்திரம் 2ம் பாதமாகவும்) என்றும் இருக்கும்.

ஜாதகன் குழம்பிப்போவான். தான் சிம்ம லக்கின ஜாதகனா? அல்லது கன்னி லக்கின ஜாதகனா என்று குழம்பிப்போவான். கால சந்திப்பில் (அதாவது லக்கின சந்திப்பில்) பிறந்த ஜாதகர்களுக்கு இந்தக் குழப்பம் இருக்கும்.

அதேபோல ராசி சந்திப்பில் உள்ள, புதன், சுக்கிரன் போன்ற கிரகங்களும் இடம் மாறி (ராசி மாறி) உட்கார்ந்து நம் கழுத்தை அறுக்கும்!

என்னுடைய ஜாதகத்தில் அந்தக் குழப்பம் உண்டு. நான் காலசந்திப்பில் பிறந்தவன். லஹிரி (திருக்கணித) முறையில் என்னுடைய லக்கினம் கடகம் என்று வரும். வாக்கிய முறையில் (ராமன் அயனாம்சப்படி) சிம்மம் என்று வரும்.

என் அன்னைவழிப் பாட்டனார், அந்தக் காலத்தில் மிகவும் பிரபலமான அரியக்குடி ராமானுஜ ஐயங்கார் என்னும் பிரபல ஜோதிடரிடம், எங்கள் ஜாதகத்தை எல்லாம் கணித்து எழுதிவைத்துள்ளார். அதில் சிம்ம லக்கினம் என்றுதான் குறிப்பிடப்பட்டுள்ளது. 1982ஆம் ஆண்டு பெங்களூர் வெங்கட்ராமன் (அவர்தான் இந்த ராமன் அயனாம்சத்தின் நந்தை என்று பகழப்படுபவர். இந்தியாவின் முதல் நிலை ஜோதிடராகத் திகழ்ந்தவர்) அவர்களுக்கு என்னுடைய பிறப்பு விவரங்களை அனுப்பி ஜாதகத்தை எழுதி வாங்கினேன்.(பணம் அனுப்பித்தான் சுவாமி)

அதுவும் என்னுடைய பாட்டனார் எழுதி வைத்துள்ள ஜாதகமும் (மிகத் துள்ளியமாகச்) சரியாக இருந்தது. பின்னால்தான் தெரிந்தது. அவர் இந்தியாவின் புராதன ஜோதிட முறையான வாக்கியப் பஞ்சாங்கத்தைத்தான் உபயோகிக்கிறார் என்று! அதனால் முழு நம்பிக்கையுடன் நானும் அதைத்தான் உபயோகித்து வருகிறேன். எனக்கு என்னுடைய லக்கினத்தின்படி பலன்களும் சரியாக உள்ளன! (அதானால் அந்த நம்பிக்கை பலமடங்கு கூடிவிட்டது)

என்னைப் பொறுத்தவரை, அவர்தான் அற்புதமான ஜோதிட ஞானம் உடைவராகத் திகழ்ந்தவர். விற்பன்னர். ஜோதிடத்தின் காரகராகப் போற்றப்பெற்றவர் (authority of vedic astrology). எனக்குத் தெரிந்து, தமிழ் நாட்டிலுள்ள அத்தனை ஜோதிடர்களும் வாக்கியப் பஞ்சாங்கத்தைத்தான் உபயோகிக்கின்றார்கள்.

இந்தக் கணினியில் ஜோதிடம் கணிக்கும் முறைகள் எல்லாம் 1990ஆம் ஆண்டிற்குப் பிறகுதான் நமது பிரதேசத்திற்குள் அடியெடுத்து வைத்தது.

ஆகவே அதற்கு முன்பாகப் (அதாவது 1990ற்கு முன்பாகப்) பிறந்தவர்கள் அனைவருடைய ஜாதகங்களும் வாக்கிய முறையிலேயே கணிக்கப் பெற்றதாக இருக்கும்.

கணினி ஜாதகத்தில் உள்ள option தெரியாமல், திருக்கணிதத்தில் கணித்துவிட்டு, பல இளைஞர்கள் என்னிடம் லக்கினம் மற்றும் கிரக அமைப்புக்கள், தங்கள் பெற்றோர்கள் கணித்து அல்லது எழுதி வைத்துள்ளதுபோல இல்லையே எனும்போது, நான் அவர்களுக்கு, உங்கள் பெற்றோர் எழுதிவைத்துள்ளதையே உபயோகியுங்கள் என்று சொல்வேன்.

ஆனால், தற்சமயம் உள்ள கணினி மென்பொருட்களில், வாக்கிய முறைகளிலும் கணிக்கும் வசதி வந்துவிட்டதால், அனைவருக்கும் அதன்படியே கணிக்கும்படி பரிந்துரைக்கிறேன்.

வாக்கிய முறைப் பஞ்சாங்கம் நூற்றுக் கணக்கான ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளது. முனிவர்களால் உருவாக்கப்பெற்றது. அதை நீங்கள் அனைவரும் நம்பலாம். திருக்கணிதத்தை மறந்துவிட்டு, நீங்கள் அனைவரும், வாக்கிய முறையில் உங்கள் ஜாதகத்தைக் கணித்து/எழுதி வைத்துக் கொள்வது நல்லது!

இந்த இரண்டு முறைகளுக்கும் உள்ள வித்தியாசம் சுமார் ஆறரை நிமிடங்கள் மட்டுமே எனும்போதும், நமது வீடுகளில் அந்தக் காலத்தில் இருந்த கடிகாரங்களை நம்பி அவர்கள் பிறந்த நேரத்தைக் குறித்துவைத்தார்கள் - அது 5 நிமிடங்கள் முன் பின்னாக நேரத்தைக் காட்டவில்லை என்பதற்கு ஆதாரம் இல்லாததாலும், நான் அலட்டிக்கொள்ளாமல், இரண்டு முறைகளுக்குமே கொடிகாட்டி வருகிறேன்.

ஆகவே பழைய பிறப்புக்களுக்கு, அவரவர் விருப்பப்படி எதை வேண்டு மென்றாலும் உபயோகியுங்கள். சராசரியாக 9 பேர்களில் ஒருவர்தான் காலசந்திப்பில் பிறந்திருப்பார். அவருக்கு மட்டும்
இரண்டு மனைவிகள். அதாவது இரண்டு லக்கினங்கள்:-))))))
-----------------------------------------------------------
சில இடங்களில் வேஷ்டியுடன் செல்வது உபயோகமாக இருக்கும். சில இடங்களில் கால்சட்டையுடன் (pant)செல்வது உபயோகமாக இருக்கும். நீங்கள் ஒரு சமயம் வேஷ்டி அணிந்து கொள்கிறீர்கள், ஒரு சமயம் கால் சட்டை அணிந்து கொள்கிறீர்கள் என்று கேட்டால் நான் என்ன சொல்ல முடியும்? ஒரே வரியில், என் வசதிக்காக அணிந்து கொள்கிறேன் என்றுதான் சொல்ல முடியும். தேவகோட்டையில் வேஷ்டிதான் செளகரியமான ஆடை. கோவையில் கால்சட்டைதான் செளகரியமான ஆடை.

இந்த இரட்டைமுறை கணிக்கும் வசதி ஆரம்பகால மென்பொருட்களில் இல்லாததால், நான் கணினி ஜாதகங்களுக்கு திருக்கணிதத்தை சிபாரிசு செய்தேன். இப்போது வந்துவிட்டதால், குழப்பம் இல்லாமல் இருக்க வாக்கியமுறையையைச் சிபாரிசு செய்கிறேன்.

விளக்கம் போதுமா அன்பரே?
----------------------------------------------------------------------
உபரித் தகவல்கள்:

கணிதம், வானவியல், ஜோதிடம் ஆகிய மூன்றும் இந்தியாவில் இருந்துதான் மற்ற நாடுகளுக்குப் பரவியது. நமது நாட்டிற்கு முற்காலத்தில் வணிகத்திற்காக வந்த கிரேக்கர்கள் மற்றும் சீனர்கள் மூலமாகப் பரவியது.

நமது ஜோதிடம் வேதகாலத்தில் உருவானது. அதை Indian Vedic Astrology என்பார்கள். நமது ஜோதிடமுறை சந்திரனையும், அதன் சுற்றுப்பாதையில் உள்ள நட்சத்திரங்களையும் அடிப்படையாகக் கொண்டது. நமது முறைக்கு Sidereal astrology என்று பெயர்.

மேலை நாட்டவர்களின் ஜோதிடம் சூரியனின் எழுச்சியை அடைப்படையாகக் கொண்டது. அதை அவர்கள் Sun Signs என்பார்கள். அவர்களுடைய முறைக்கு Tropical astrology என்று பெயர்.

The difference between the Tropical ( Western ) & The Sidereal ( Indian ) Zodiacs is round about 23 degrees this year. Sidereal Astrology is based on the immovable Zodiac- the Sidereal Zodiac - and Western Tropical Astrology is based on the Tropical Zodiac which is movable.

Jyotish (Sanskrit meaning “Science of Light”), is based on the Sidereal, or Nirayana, zodiac, which is fixed in relation to the stars, as opposed to the symbolic Tropical, or Sayana, zodiac, which is based on the Vernal, or Spring, Equinox. The difference between the two zodiacs lies in the ayanamsa, the difference in degrees and minutes between 0° Aries in the sidereal zodiac, and the Vernal Equinox. Since the earth's rotational axis moves slowly in a circular, or “precessional,” motion, the Vernal Equinox, the point where the Sun crosses the celestial equator each year, moving from south declination to north declination, never quite returns to its starting place.
---------------------------------------------------------------------------------------------

Unlike Western astrology that is based on the Tropical zodiac, the Vedic system of astrology (jyotish) employs the Sidereal (or true) position of the planets. The difference between the two, due to the precession of equinox, is called the "Ayanamsa".

However the apparent position of the planets (including Sun) in relation to the constellations is subject to this precession of the equinox which, basically, is the earth's slight backward movement through the constellations (aprox. 50.25 seconds per year) as it wobbles on it's axis.

There are several different Ayanamsa in use today but the one most widely used by traditional astrologers is the Lahiri ayanamsa which is sanctioned by the Indian government. This puts the degree of precession for (Oct) 2002 at approximately 23:53:26.

இந்த லஹிரி அயனாம்சம் என்பதைத்தான் நாம் திருக்கணிதம் என்கிறோம். கணினிகளில் இதன் முறைப்படி கணிப்பதற்கு option கொடுக்கப்பட்டிருக்கும். வாக்கியம் என்பது இதற்கெல்லாம் முற்பட்டது. காலம் காலமாக நாம் பாவிப்பது (உபயோகிப்பது)
---------------------------------------------------------------------------------
URL for ayanamsa calculation
---------------------------------------------------------------------
கணினி மென் பொருட்களில் இரண்டு முறைகளுக்கும் உள்ள வசதியைக் (option) காட்டும் படங்கள் கீழே உள்ளன. படஙகளின் மீது கர்சரை வைத்து அழுத்தினால், படங்கள் பெரிதாகத் தெரியும்!


1. லஹரி முறை (அதாவது திருக்கணித முறை)

2. ராமன் அயனாம்ச முறை (வாக்கிய முறை)

3. அயனாம்சத்தைக் கண்க்கிட உதவும் தளம்

4. ஒரு குறிப்பிட்ட நேரத்தில் பிறந்த ஜாதகத்திற்கு லஹரி மற்றும் வாக்கிய முறையில் கணிக்கப்பெற்ற ஜாதகத்தின் கிரக பாதாச்சாரங்கள் (லக்கினத்தைக் கவனியுங்கள்) இரண்டு முறைகளுக்கும் உள்ள , கிரக பாகைகளைக் கவனியுங்கள்

அதே குறிப்பிட்ட நேரத்தில் பிறந்த ஜாதகத்திற்கு லஹரி முறையில் கணிக்கப்பெற்ற ஜாதகத்தின் ராசிச் சக்கரம் (லக்கினத்தைக் கவனியுங்கள்)

அதே குறிப்பிட்ட நேரத்தில் பிறந்த ஜாதகத்திற்கு வாக்கிய முறையில் கணிக்கப்பெற்ற ஜாதகத்தின் ராசிச் சக்கரம் (லக்கினத்தைக் கவனியுங்கள்)

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

(தொடரும்)

அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்!

68 comments:

  1. சரியான கேள்வி அருமையான பதில். டெலெஸ்கோப் இல்லாத காலத்திலேயே
    நம் முன்னோர்கள் எப்படி கிரஹங்களின் போக்கினைக் கணித்தார்கள் என்பது
    ஆச்சரியமே!
    Nancy Wilson Ross (1901 -1986) made her first trip to Japan, China, Korea and India in 1939. She was the author of several books including The World of Zen and Time's Left Corner. Miss Ross lectured on Zen Buddhism at the Jungian Institute in Zurich. She served on the board of the Asia Society of New York which was founded by John D. Rockefeller III since its founding in 1956 and was on the governing board of the India Council. In private life she was known as Mrs. Stanley Young.
    She has written:
    "Anachronistic as this labyrinthine mythology may appear to the foreign mind, many of India’s ancient theories about the universe are startlingly modern in scope and worthy of a people who are credited with the invention of the zero, as well as algebra and its application of astronomy and geometry; a people who so carefully observed the heavens that, in the opinion of Monier-Williams, they determined the moon’s synodical revolution much more correctly than the Greeks."

    " Many hundreds of years before those great European pioneers, Galileo and Copernicus, had to pay heavy prices in ridicule and excommunication for their daring theories, a section of the Vedas known as the Brahmanas contained this astounding statement:

    “The sun never sets or rises. When people think the sun is setting, he only changes about after reaching the end of the day and makes night below and day to what is on the other side. Then, when people think he rises in the morning, he only shifts himself about after reaching the end of the day night, and makes day below and night to what is on the other side. In truth, he does not see at all.”

    "The Indians, whose theory of time, is not linear like ours – that is, not proceeding consecutively from past to present to future – have always been able to accept, seemingly without anxiety, the notion of an alternately expanding and contracting universe, an idea recently advanced by certain Western scientists. In Hindu cosmology, immutable Brahman, at fixed intervals, draws back into his beginningless, endless Being the whole substance of the living world. There then takes place the long “sleep” of Brahaman from which, in course of countless aeons, there is an awakening, and another universe or “dream” emerges. "

    "This notion of the sleeping and waking, or contracting and expanding, of the Life Force, so long a part of Hindu cosmology, has recently been expressed in relevant terms in an article written for a British scientific journal by Professor Fred Hoyle, Britain’s foremost astronomer. "

    ReplyDelete
  2. அய்யா மிக நீண்ட அருமையான மற்றும் அவசியமான விளக்கம்.
    நன்றி அய்யா !
    by
    ஸ்ரீதர்

    ReplyDelete
  3. வாக்கிய பஞ்சாங்கப் படி வருடத்திற்கு 360 நாட்கள் தான். ஆனால் திருக்கணிதப் படி வருடத்திற்கு 365 நாட்கள் . திருக்கணிதம் தான் "Astronomy " யோடு ஒத்து போகிறது . (இருந்தாலும் தமிழ்நாட்டில் உள்ள சிவகோவில்கள் வாக்கிய பஞ்சாங்கத்தை தான் நடைமுறையில் பின்பற்றுகிறார்கள் )

    தாங்கள் விளக்கம் கூறவும் .

    ReplyDelete
  4. Present Sir.
    Thank you very much for your very clear explanations and doubtless opinions.

    Alasiam G

    ReplyDelete
  5. வணக்கம் சார்,
    இவளவு விரிவான விளக்கமான பதில் நான் இப்போ தான் பார்திரிகிரன். Good work sir!!!

    Thanks
    Thanuja

    ReplyDelete
  6. ஜோதிட பிதாமகர்!

    ஜோதிட வித்தகர்கள்!! மற்றும் பெருமக்கள்!!! அமர்ந்துருக்கும் அவைக்கு, அடியேனின் சிரசு தாழ்ந்த
    முதற்க்கண் வணக்கத்தை உரித்து ஆக்கி கொள்கின்றேன்!

    பொதிகை மலை சாரலிலே! அமர்திருக்கும் அகத்திய மாமுனிவர்! மற்றும் திருமூலர்! பாம்பாட்டிச்சித்தர்! புலிபானிசித்தர்!, போகர்!, கொங்கணர்!,இடைக்காடார்! கடம்புறார்!, உட்பட 18 மாபெரும் சித்த முனிவர்கள்! வழிவழியாக போற்றி வந்த முறைதான், வாக்கிய பஞ்சாங்க முறை என்பது அவையில்
    உள்ள அனைவருக்கும் நன்கு தெரியும். ஆதலால், அனைவரும் வாக்கியபஞ்சாங்க முறையை சிபாரிசு செய்ய இச்சிறு பாலகன் வேண்டி வணங்கி கொள்கின்றேன்.

    மேலும் எழுத்தி(பிழையி)ல் சிறிய திருத்தம் செய்ய வேண்டி? ஜோதிட பிதாமகர்!!! எமது
    ஆஸ்தான ஜோதிட சக்ரவர்த்தியை! சிரசுபணிந்து வேண்டிக்கொள்கின்றேன்
    ஐயா!

    அதுவந்து வேறு ஒன்றும் இல்லை, ஐயா!

    வாக்கிய முறைப் பஞ்சாங்கம் நூற்றுக் கணக்கான ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளது.
    முனிவர்களால் உருவாக்கப்பெற்றது. அதை நீங்கள் அனைவரும் நம்பலாம். என்பதே!

    தாங்களே! எழுத்து மூலம் சொல்லி உள்ளீர்கள்

    கணிதம், வானவியல், ஜோதிடம் ஆகிய மூன்றும் இந்தியாவில் இருந்துதான் மற்ற நாடுகளுக்குப் பரவியது. நமது நாட்டிற்கு முற்காலத்தில் வணிகத்திற்காக வந்த கிரேக்கர்கள் மற்றும் சீனர்கள் மூலமாகப் பரவியது என்று,

    பல ஆயிரகணக்கான ஆண்டுகளாக என்பது! பொருத்தமாக இருக்கும் என்பது! அடியேனின் விருப்பம் ஐயா!!!

    வாக்கிய பஞ்சாகத்தை! திருநெல்வேலி பஞ்சாங்கம்!!! என்று எங்களின் நெல்லை மண்ணில் கேட்டதுபோல் ஞாபகம் உண்டு ஐயா!!!

    பிழை இருப்பின் மன்னிக்கவும் !

    ReplyDelete
  7. அய்யா இனிய காலை வணக்கம்,

    வாக்கியம் திருக்கணிதம் அவற்றின் விளக்கம் விரிவாகவும் தெளிவாகவும் அமைந்துள்ள்து .....

    நன்றி வணக்கம்

    ReplyDelete
  8. kmr.krishnan said...
    சரியான கேள்வி. அருமையான பதில். டெலெஸ்கோப் இல்லாத காலத்திலேயே
    நம் முன்னோர்கள் எப்படி கிரஹங்களின் போக்கினைக் கணித்தார்கள் என்பது
    ஆச்சரியமே!//////

    அவர்களுக்கெல்லாம் தெய்வ அருள் இருந்தது. Intuition Power இருந்தது
    1. The act or faculty of knowing or sensing without the use of rational processes; immediate cognition. See synonyms at reason. 2. Knowledge gained by the use of this faculty; a perceptive insight.
    2. A sense of something not evident or deducible; an impression.

    உங்கள் பின்னூட்டத்திற்கும், Mrs. Stanley Young அவர்கள் இந்தியாவைப் பற்றிச் சொல்லிய கருத்துக்களை அறியத்தந்தமைக்கும் மிக்க நன்றி!

    ReplyDelete
  9. ////Shyam Prasad said...
    மிக்க நன்றி////

    உங்களின் வருகைப் பதிவிற்கு நன்றி!

    ReplyDelete
  10. ////sridhar said...
    அய்யா மிக நீண்ட அருமையான மற்றும் அவசியமான விளக்கம்.
    நன்றி அய்யா !
    by
    ஸ்ரீதர்///

    எல்லாம் உங்கலைப் போன்ற மாணவச் செல்வங்களுக்காகத்தான்!

    ReplyDelete
  11. /////Shyam Prasad said...
    வாக்கிய பஞ்சாங்கப் படி வருடத்திற்கு 360 நாட்கள் தான். ஆனால் திருக்கணிதப் படி வருடத்திற்கு 365 நாட்கள் . திருக்கணிதம் தான் "Astronomy " யோடு ஒத்து போகிறது . (இருந்தாலும் தமிழ்நாட்டில் உள்ள

    சிவகோவில்கள் வாக்கிய பஞ்சாங்கத்தை தான் நடைமுறையில் பின்பற்றுகிறார்கள் )
    தாங்கள் விளக்கம் கூறவும் ./////

    வாக்கியத்தில், சூரியதசை 6 ஆண்டுகள், சந்திர தசை 10 ஆண்டுகள், செவ்வாய் தசை 7 ஆண்டுகள், ராகு தசை 18 ஆண்டுகள் என்று ஆண்டுக்கணக்கில் கூட்டப்பட்டுத்தான் ஜாதகனின் நடப்பு தசை கணக்கிடப் படுகிறது. ஆகவே அந்த 5ஆண்டிற்கு 5.25 நாட்கள் என்னும் வித்தியாசம் காணாமல் போய்விடும்!

    ReplyDelete
  12. ////Alasiam G said...
    Present Sir.
    Thank you very much for your very clear explanations and doubtless opinions.
    Alasiam G/////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி!

    ReplyDelete
  13. /////Thanuja said...
    வணக்கம் சார்,
    இவ்வளவு விரிவான விளக்கமான பதிலை நான் இப்போதான் பார்க்கிறேன்!. Good work sir!!!
    Thanks
    Thanuja////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி சகோதரி!

    ReplyDelete
  14. //வாக்கியத்தில், சூரியதசை 6 ஆண்டுகள், சந்திர தசை 10 ஆண்டுகள், செவ்வாய் தசை 7 ஆண்டுகள், ராகு தசை 18 ஆண்டுகள் என்று ஆண்டுக்கணக்கில் கூட்டப்பட்டுத்தான் ஜாதகனின் நடப்பு தசை கணக்கிடப் படுகிறது. ஆகவே அந்த 5ஆண்டிற்கு 5.25 நாட்கள் என்னும் வித்தியாசம் காணாமல் போய்விடும் //
    **************************************
    "ஆகவே அந்த 5ஆண்டிற்கு 5.25 நாட்கள் என்னும் வித்தியாசம் காணாமல் போய்விடும் "

    -- புரிய வில்லை . இதற்கு தாங்கள் விளக்கமாக கூறவும்

    ReplyDelete
  15. ஜகந்நாத ஹோராவில் கிரக அவஸ்தைகளைப் பார்க்க ஒரு (குறுக்கு) வழி print preview சென்று 2ம் பக்கம் zoom in செய்து பார்த்தால் தெரியும். அதில் கிரக அவஸ்தை மட்டுமின்றி பல விஷயங்கள் இருக்கிறது.

    ReplyDelete
  16. kannan said...
    ஜோதிட பிதாமகர்!
    ஜோதிட வித்தகர்கள்!! மற்றும் பெருமக்கள்!!! அமர்ந்துருக்கும் அவைக்கு, அடியேனின் சிரசு தாழ்ந்த
    முதற்க்கண் வணக்கத்தை உரித்து ஆக்கி கொள்கின்றேன்!
    பொதிகை மலை சாரலிலே! அமர்திருக்கும் அகத்திய மாமுனிவர்! மற்றும் திருமூலர்! பாம்பாட்டிச்சித்தர்! புலிபானிசித்தர்!, போகர்!, கொங்கணர்!,இடைக்காடார்! கடம்புறார்!, உட்பட 18 மாபெரும் சித்த முனிவர்கள்! வழிவழியாக போற்றி வந்த முறைதான், வாக்கிய பஞ்சாங்க முறை என்பது அவையில்
    உள்ள அனைவருக்கும் நன்கு தெரியும். ஆதலால், அனைவரும் வாக்கியபஞ்சாங்க முறையை சிபாரிசு செய்ய இச்சிறு பாலகன் வேண்டி வணங்கி கொள்கின்றேன்.
    மேலும் எழுத்தி(பிழையி)ல் சிறிய திருத்தம் செய்ய வேண்டி? ஜோதிட பிதாமகர்!!! எமது
    ஆஸ்தான ஜோதிட சக்ரவர்த்தியை! சிரசுபணிந்து வேண்டிக்கொள்கின்றேன்
    ஐயா!
    அதுவந்து வேறு ஒன்றும் இல்லை, ஐயா!
    வாக்கிய முறைப் பஞ்சாங்கம் நூற்றுக் கணக்கான ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளது.
    முனிவர்களால் உருவாக்கப்பெற்றது. அதை நீங்கள் அனைவரும் நம்பலாம். என்பதே!
    தாங்களே! எழுத்து மூலம் சொல்லி உள்ளீர்கள்
    கணிதம், வானவியல், ஜோதிடம் ஆகிய மூன்றும் இந்தியாவில் இருந்துதான் மற்ற நாடுகளுக்குப் பரவியது. நமது நாட்டிற்கு முற்காலத்தில் வணிகத்திற்காக வந்த கிரேக்கர்கள் மற்றும் சீனர்கள் மூலமாகப் பரவியது என்று, பல ஆயிரகணக்கான ஆண்டுகளாக என்பது! பொருத்தமாக இருக்கும் என்பது! அடியேனின் விருப்பம் ஐயா!!!
    வாக்கிய பஞ்சாகத்தை! திருநெல்வேலி பஞ்சாங்கம்!!! என்று எங்களின் நெல்லை மண்ணில் கேட்டதுபோல் ஞாபகம் உண்டு ஐயா!!!
    பிழை இருப்பின் மன்னிக்கவும் !///

    நல்லது.நன்றி முருகா! அது எழுத்துப் பிழையல்ல. நூற்றுக்கணக்கான ஆண்டுகள் என்று சொல்லும்போதும் நீங்கள் நினைக்கின்ற காலம் வரும். சக்கரவர்த்தி, சர்க்கரை வள்ளிக்கிழங்கு, குச்சிக்கிழங்கு, உருளைக்கிழங்கு என்று எல்லாம் சொல்லி என்னை உசுப்பேத்த வேண்டாம். நான் உசுப்பேறும் வயதை எல்லாம் தாண்டி வந்துவிட்டேன்:-))) நான் எளியவன். ஜோதிடம் பெரிய கடல். நானும் ஒரு மாணவன்தான். கற்றது கைமண் அளவு!

    ReplyDelete
  17. //////astroadhi said...
    அய்யா இனிய காலை வணக்கம்,
    வாக்கியம் திருக்கணிதம் அவற்றின் விளக்கம் விரிவாகவும் தெளிவாகவும் அமைந்துள்ளது .....
    நன்றி வணக்கம்/////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி!

    ReplyDelete
  18. /////dhana said...
    Thanks for the explanation/////

    நல்லது.நன்றி!

    ReplyDelete
  19. குருவே ஏஏஏஏஏஏஏஏஏஏஏஎ!!!!!!!!!!!!!!!!!!!

    அவர்களுக்கெல்லாம் தெய்வ அருள் இருந்தது. Intuition Power இருந்தது
    1. The act or faculty of knowing or sensing without the use of rational processes; immediate cognition. See synonyms at reason. 2. Knowledge gained by the use of this faculty; a perceptive insight.
    2. A sense of something not evident or deducible; an impression.

    தாங்கள் கூறுவது 100 % உண்மை!

    தாங்கள் சொல்லியதை போல் புண்ணிய மகான்கள் இன்றும் உண்டு என்பதை அனைவரும் அறிவிர்கள் என்பது அடியேனுக்கு நன்கு தெரியும். .

    அடியேன்! சந்நியாசியாக!! தனியே பாத யாத்திரை (பழனிக்கு) செல்லும் போது, 11 மாதத்திக்கு மேல் முடிவளர்த்து
    ( பொறியல் கல்லூரி படிக்கும் போது ) 1997 ம் வருடம் , ஜனவரி மாதம் போகி பொங்கல் அன்று
    குருவாக வந்து உபதேசம் ( தீர்சை) தந்தார்கள் ஐயா!.

    அடியேனை! வடக்கு நோக்கி இருக்க வைத்து, அவ்மகான்!
    தெற்கு நோக்கி இருந்து நிறைய (மூச்சு முட்ட) கூறினார்!

    "அம்மா! அப்பா!!! தான் உலகம்"!!! என்று

    அவ்மகான் சொல்லியதிக்கு பொருள் விளக்கம் அனுபவத்தில் கிடைக்க ஆரம்பித்து!

    தந்தையின் சொல்படி கேக்கலாம் என்று வெகு தொலைவில் பொருள் ஈட்ட சென்ற நான்! பாதி தொலைவிற்கு வர!

    தந்தையோ உடல்முடியாமல்
    பாதி தொலைவிற்கு என்னை நோக்கி வர, கடைசியில் நாங்கள் சந்தித்த இடத்தில் சிறுது காலத்தில் காலதேவன் கொண்டு சென்றுவிட்டான் ஐயாவின் மூச்சை .
    (1998 வருடம் மார்ச்- க்குமேல்)

    தந்தையின் மரணதிக்கு பின்னர் தான் புத்திகெட்ட எனக்கு தெரிந்தது அடியேனுக்கு உபதேசம் செய்தவர் மகான் என்று ஐயா !!! !

    தற்பொழுது தினமும் ரத்தகண்ணீர் வடிக்கின்றேன்!

    பெற்ற மனது! என்ன என்ன அசை எல்லாம் மனதில் கோட்டை கட்டி கொண்டு சென்றதோ? நிறைவேறாமல் ஐயா !!!!!!!!!!!!!!!!!!!!!

    ReplyDelete
  20. வணக்கம் அய்யா.
    அருமையான விளக்கம்.
    அனேகமா உங்களை சாஸ்த்ரா
    பல்கலைகழகத்தில் வகுப்பு எடுக்க‌
    கூப்பிட வாய்ப்பு உள்ளது.
    நன்றி அய்யா.

    ReplyDelete
  21. உங்கள் விளக்கம் மிகவும் தெளிவாக உள்ளது. கிருஷ்ணன் அவர்கள் தகவலுக்கு நன்றி. அருள் முருகன் அவர்கள் ஜோதிடபாடத்திட்டம் மற்றும் பரிந்துரைக்கப்பட்ட புத்தகங்கள் பற்றி இங்கே பகிர்ந்து கொண்டால் எல்லோருக்கும் உபயோகமாகயிருககும்.
    வாக்கிய முறை ராமன் அயனாம்சம் என்று இப்போது தான் எனக்கு தெரிந்தது. இந்திய அயனாம்ச குழுவில் ராமனும், K.N.RAO இடம் பெற்ற போது ராமன் தனது அயனாம்சத்தை முன்னிலை படுத்தவில்லை என்று K.N.ராவ் எழுதியுள்ளார்.அதனால்தான் லகரி முறையே பின் பற்ற வேண்டும் என்பது அவர் கருத்து.

    ReplyDelete
  22. Shyam Prasad said...
    //வாக்கியத்தில், சூரியதசை 6 ஆண்டுகள், சந்திர தசை 10 ஆண்டுகள், செவ்வாய் தசை 7 ஆண்டுகள், ராகு தசை 18 ஆண்டுகள் என்று ஆண்டுக்கணக்கில் கூட்டப்பட்டுத்தான் ஜாதகனின் நடப்பு தசை கணக்கிடப் படுகிறது. ஆகவே அந்த 5ஆண்டிற்கு 5.25 நாட்கள் என்னும் வித்தியாசம் காணாமல் போய்விடும் //
    **************************************
    "ஆகவே அந்த 5ஆண்டிற்கு 5.25 நாட்கள் என்னும் வித்தியாசம் காணாமல் போய்விடும் "
    -- புரிய வில்லை . இதற்கு தாங்கள் விளக்கமாக கூறவும்////

    தசைகளைக் கூட்டும்போது யாரும் நாட்களை வைத்துக் கூட்டுவதில்லை. ஆண்டுகளாகத்தான் கூட்டிப் பார்ப்பார்கள். இப்போதும் புரியவில்லை என்றால் 25 ரூபாய்க்கு வாக்கியப் பஞ்சாங்கம் கிடைக்கும். வாங்கிப் பாருங்கள்

    ReplyDelete
  23. /////ananth said...
    ஜகந்நாத ஹோராவில் கிரக அவஸ்தைகளைப் பார்க்க ஒரு (குறுக்கு) வழி print preview சென்று 2ம் பக்கம் zoom in செய்து பார்த்தால் தெரியும். அதில் கிரக அவஸ்தை மட்டுமின்றி பல விஷயங்கள் இருக்கிறது./////

    தகவலுக்கு நன்றி ஆனந்த்!

    ReplyDelete
  24. kannan said...
    குருவே ஏஏஏஏஏஏஏஏஏஏஏஎ!!!!!!!!!!!!!!!!!!!
    அவர்களுக்கெல்லாம் தெய்வ அருள் இருந்தது. Intuition Power இருந்தது
    1. The act or faculty of knowing or sensing without the use of rational processes; immediate cognition. See synonyms at reason. 2. Knowledge gained by the use of this faculty; a perceptive insight.
    2. A sense of something not evident or deducible; an impression.
    தாங்கள் கூறுவது 100 % உண்மை!
    தாங்கள் சொல்லியதை போல் புண்ணிய மகான்கள் இன்றும் உண்டு என்பதை அனைவரும் அறிவிர்கள் என்பது அடியேனுக்கு நன்கு தெரியும். .
    அடியேன்! சந்நியாசியாக!! தனியே பாத யாத்திரை (பழனிக்கு) செல்லும் போது, 11 மாதத்திக்கு மேல் முடிவளர்த்து ( பொறியல் கல்லூரி படிக்கும் போது ) 1997 ம் வருடம் , ஜனவரி மாதம் போகி பொங்கல் அன்று
    குருவாக வந்து உபதேசம் ( தீர்சை) தந்தார்கள் ஐயா!.
    அடியேனை! வடக்கு நோக்கி இருக்க வைத்து, அவ்மகான்!
    தெற்கு நோக்கி இருந்து நிறைய (மூச்சு முட்ட) கூறினார்!
    "அம்மா! அப்பா!!! தான் உலகம்"!!! என்று அவ்மகான் சொல்லியதிக்கு பொருள் விளக்கம் அனுபவத்தில் கிடைக்க ஆரம்பித்து! தந்தையின் சொல்படி கேக்கலாம் என்று வெகு தொலைவில் பொருள் ஈட்ட சென்ற நான்! பாதி தொலைவிற்கு வர! தந்தையோ உடல்முடியாமல்
    பாதி தொலைவிற்கு என்னை நோக்கி வர, கடைசியில் நாங்கள் சந்தித்த இடத்தில் சிறுது காலத்தில் காலதேவன் கொண்டு சென்றுவிட்டான் ஐயாவின் மூச்சை .
    (1998 வருடம் மார்ச்- க்குமேல்) தந்தையின் மரணத்திற்குப் பின்னர் தான் புத்திகெட்ட எனக்கு தெரிந்தது அடியேனுக்கு உபதேசம் செய்தவர் மகான் என்று ஐயா !!!
    தற்பொழுது தினமும் ரத்தகண்ணீர் வடிக்கின்றேன்!
    பெற்ற மனது! என்ன என்ன ஆசை எல்லாம் மனதில் கோட்டை கட்டி கொண்டு சென்றதோ? நிறைவேறாமல் ஐயா !!!!!!!!!!!!!!!!!!!!!////////

    பெற்ற மனசு என்ன நினைக்கும்? தன் மகன் நன்றாக (நல்ல நிலைமைக்கு) வரவேண்டும். மனைவி, பிள்ளைகள்,குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்றுதான் ஆசைப்படும். அதை முதலில் நிறைவேற்றுங்கள்!

    ReplyDelete
  25. /////thirunarayanan said...
    வணக்கம் அய்யா. அருமையான விளக்கம். அனேகமா உங்களை சாஸ்த்ரா பல்கலைகழகத்தில் வகுப்பு எடுக்க‌ கூப்பிட வாய்ப்பு உள்ளது. நன்றி அய்யா./////

    அய்யா, சாமி, அதெல்லாம் எனக்கு வேண்டாம். எனக்கு நமது வகுப்பறை ஒன்றே போதும்! இங்கே இன்றையத் தேதியில் 1129 மாணவர்கள் இருக்கிறார்கள். இதைவிட அதிக எண்ணிக்கையில் மாணவர்களைக் கொண்டு எந்தப் பள்ளியில்/பல்கலைக் கழகத்தில் ஜோதிட வகுப்பு நடக்கிறது?

    ReplyDelete
  26. //////krish said...
    உங்கள் விளக்கம் மிகவும் தெளிவாக உள்ளது. கிருஷ்ணன் அவர்கள் தகவலுக்கு நன்றி. அருள் முருகன் அவர்கள் ஜோதிடபாடத்திட்டம் மற்றும் பரிந்துரைக்கப்பட்ட புத்தகங்கள் பற்றி இங்கே பகிர்ந்து கொண்டால் எல்லோருக்கும் உபயோகமாகயிருககும்.
    வாக்கிய முறை ராமன் அயனாம்சம் என்று இப்போது தான் எனக்கு தெரிந்தது. இந்திய அயனாம்ச குழுவில் ராமனும், K.N.RAO இடம் பெற்ற போது ராமன் தனது அயனாம்சத்தை முன்னிலை படுத்தவில்லை என்று K.N.ராவ் எழுதியுள்ளார்.அதனால்தான் லகரி முறையே பின் பற்ற வேண்டும் என்பது அவர் கருத்து.//////

    செய்வார் என்று நினைக்கிறேன். பார்க்கலாம்!

    ReplyDelete
  27. அய்யா வணக்கம்.
    நீங்கள் குறிப்பிட்டது போல் , கணினி மென்பொருளில் நீங்கள் சொன்ன ராமன் முறை படி போட்டு பார்த்தேன் , அது சரியாக வரவில்லை . அந்த மென்பொருள் வாக்கிய பஞ்சாங்கத்தை சரியாக கணிப்பது இல்லை . பாம்பு பஞ்சாங்கத்தை பார்த்து போடுவதே உத்தமம். கணினியில் போடுவது என்றுமே தவறாகவே இருக்கிறது. அதை செய்தவர்கள் சரியாக செய்யவில்லை .எனது ஜாதகத்தில் இரண்டு முறையிலும் போட்டு பார்த்தேன் .நெறைய வித்யாசங்கள் உள்ளது. நான் கால சந்திப்பில் பிரதவன் அல்ல . இருந்தாலும் வித்யாசங்கள் உள்ளது

    ReplyDelete
  28. அன்பு அய்யாவுக்கு வணக்கம்,கேள்விக்கான தங்களின் விளக்கவுரை
    தெள்ள‌தெளிவாக‌வும், அருமையாக‌வும் இருந்த‌து, மிக்க‌ ந‌ன்றி
    அன்புடன் ஜீவா

    ReplyDelete
  29. Dear sir,

    Very good explanation.
    And I got email lessons. Thanks a lot sir.

    ReplyDelete
  30. Dear sir,
    Thirukanitham = 365.25 Days
    Vakkiam = 360 Days
    For a year 365.25 days, it matches with astronomy.
    Now a days, science has advanced well. Astronauts are saying that to complete a single rotation around sun, earth takes 365.25 days.
    In my point of view, I strongly believe thirukanitham is right.
    It gives exact prediction of a horoscope.
    With warm regards,
    J.SENDHIL

    ReplyDelete
  31. ////Dinesh said...
    அய்யா வணக்கம்.
    நீங்கள் குறிப்பிட்டது போல் , கணினி மென்பொருளில் நீங்கள் சொன்ன ராமன் முறை படி போட்டு பார்த்தேன் , அது சரியாக வரவில்லை . அந்த மென்பொருள் வாக்கிய பஞ்சாங்கத்தை சரியாக கணிப்பது இல்லை . பாம்பு பஞ்சாங்கத்தை பார்த்து போடுவதே உத்தமம். கணினியில் போடுவது என்றுமே தவறாகவே இருக்கிறது. அதை செய்தவர்கள் சரியாக செய்யவில்லை .எனது ஜாதகத்தில் இரண்டு முறையிலும் போட்டு பார்த்தேன் .நெறைய வித்யாசங்கள் உள்ளது. நான் கால சந்திப்பில் பிறந்தவன் அல்ல . இருந்தாலும் வித்யாசங்கள் உள்ளது/////

    என்ன கணினி மென்பொருள் வைத்திருக்கிறீர்கள்? அதைச் சொல்லுங்கள். வகுப்பறை மாணவர் கரூர் தியாகராஜன் அவர்கள் கொடுத்துள்ள மென்பொருள் நன்றாக இருக்கும். அதைத்தான் நான் பயன் படுத்துகிறேன். அதற்கான சுட்டி பதிவின் அடிப் பகுதியில் உள்ளது

    ReplyDelete
  32. /////NARESH said...
    Good After Noon sir!/////

    உங்களின் வருகைப் பதிவிற்கு நன்றி!

    ReplyDelete
  33. /////ஜீவா said...
    அன்பு அய்யாவுக்கு வணக்கம்,கேள்விக்கான தங்களின் விளக்கவுரை
    தெள்ள‌தெளிவாக‌வும், அருமையாக‌வும் இருந்த‌து, மிக்க‌ ந‌ன்றி
    அன்புடன் ஜீவா/////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி!

    ReplyDelete
  34. ////Anbu said...
    Dear sir,
    Very good explanation.
    And I got email lessons. Thanks a lot sir./////

    நல்லது.நன்றி!

    ReplyDelete
  35. /////dhilse said...
    Dear sir,
    Thirukanitham = 365.25 Days
    Vakkiam = 360 Days
    For a year 365.25 days, it matches with astronomy.
    Now a days, science has advanced well. Astronauts are saying that to complete a single rotation around sun, earth takes 365.25 days. In my point of view, I strongly believe thirukanitham is right.
    It gives exact prediction of a horoscope.
    With warm regards,
    J.SENDHIL////////

    நல்லது. உங்கள் விருப்படியே செய்யுங்கள். அதில் ஒன்றும் தவறில்லை!

    ReplyDelete
  36. Sir,Your explanation is really useful! I have that Tamil Astrovision software.In that,while using Lahiri method as well as Raman method differences arise in navamsa chart but not in rasi chart for some birth details that i got.But when checking for Famous personalities charts in that software, using Raman method for some even difference arise even in rasi chart when compared with the original that you used in the lessons..Can you please clarify how it happens?

    ReplyDelete
  37. பாடம் மிக அருமை ஆசிரியரே
    ஒரு சின்ன சந்தேகம்
    ராசி சந்தியில் இருக்கும் கிரகத்துக்கு எப்படி பலன் எடுத்துக்கு கொள்ள வேண்டும் .
    உதரணமாக திருக்கணிதப்படி 269.5 பாகை ,வாக்கியப்படி 270.5 பாகை .
    இப்பொது அது எந்த வீட்டில் இருக்கிறது

    ReplyDelete
  38. ராமன் அயனாம்சம் எதை அடிப்படையாக கொண்டது என்பது தெரியாது. ஆனால் வாக்கிய பஞ்சாங்கத்திற்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் இருப்பதாக தெரியவில்லை. இதை என்னால் உறுதியாகக் கூற முடியும். ஏனென்றால் கிரக நிலைகள் வாக்கிய பஞ்சாங்கத்தில் ஒரு மாதிரியாகவும் ராமன் அயனாம்சத்தில் வேறு மாதிரியாகவும் இருக்கிறன.

    நட்சத்திர பாதத்திற்கு பாகைகளை 60ஆல் வகுக்க வேண்டும். தாங்கள் காட்டியிருப்பது போல் 100ஆல் அல்ல. அப்படி செய்தால் ஒரு பாதத்திற்கு 3.20 பாகை என்றுதான் வரும். இப்படியாக ஒரு ராசிக்கு 9 நட்சத்திர பாதங்கள் முறையே 3.20, 6.40, 10.00, 13.20, 16.40, 20.00, 23.20, 26.40, 30.00 பாகைகள் என்றுதான் வரும்.

    ReplyDelete
  39. ஐயா வணக்கம்,

    என்னுடய ஜாதகம் 1980-ல் எழுத பட்டது. அதனுடய அமைப்பும், இறாமன் அயனாம்ச கட்ட அமைப்பும் அதிகம் மாறுபடுகிறது.

    கிரகங்கள் அமர்ந்த வீடுகள் மிகவும் வேறுபடுகின்றது.

    நான் கருர் தியாகரஜன் வழங்கிய மென்பொருள் பயன்படுதினேன்.

    ஏன் இந்த வேறுபாடு?

    ReplyDelete
  40. ////thirunarayanan said...
    வணக்கம் அய்யா. அருமையான விளக்கம். அனேகமா உங்களை சாஸ்த்ரா பல்கலைகழகத்தில் வகுப்பு எடுக்க‌ கூப்பிட வாய்ப்பு உள்ளது. நன்றி அய்யா./////

    அய்யா, சாமி, அதெல்லாம் எனக்கு வேண்டாம். எனக்கு நமது வகுப்பறை ஒன்றே போதும்! இங்கே இன்றையத் தேதியில் 1129 மாணவர்கள் இருக்கிறார்கள். இதைவிட அதிக எண்ணிக்கையில் மாணவர்களைக் கொண்டு எந்தப் பள்ளியில்/பல்கலைக் கழகத்தில் ஜோதிட வகுப்பு நடக்கிறது?///
    சார் வண்க்கம்,
    அப்பா பெரிய்ய.......... பதிவு அருமையான பதில் ரொம்ப நன்றி சார் ஐயா வாய்ப்பு வ்ந்தாலும் நீஙக எங்களை விட்டு விட்டு எங்கும் போக மாட்டிங்க
    என்று எனக்கும் தெரியும் நீங்களும் சொல்லிவிட்டீர்கள் ரொம்ப நன்றி சார்.
    நம்ப வகுப்பறை பெரியது.இன்னும் ரொம்ப பேர் வருவங்க சார் ஐயா இன்று பிரதோஷம் சிவன் கோவிலுக்கு போங்க சார்.
    சுந்தரி.

    ReplyDelete
  41. பொன்மொழிகள்:
    1.தெய்வத்தின் விருப்பத்திற்கு எதிராக எந்த ஒரு மனித சக்த்தியும் நிற்க முடியாது (எனவே, சோதனையான நேரங்களிலும் நேர்மையாக வாழ்வோம்.)
    2.சூரிய ஒளிபோல யாருடன் பழகினாலும் அந்துஸ்து பார்க்காமல் ஒரே மாதரியான அணுகுமுறையுடன் உள்ளன்பு குறையாமல் ப்ழகுங்கள்.
    3.வாழ்வின் வெற்றி என்பது ஒரு மனிதன் பின்பற்றும் சத்தியத்தைப் பொருத்தது.
    4.அன்பு அனைத்தையும் பொறுத்துககொள்ளூம, அனைத்தையும் நம்பும், அனைத்தையும் எதிர் நோக்கியிருக்கும், அனைத்திலும் மன உறுதியாய் இருக்கும்.
    5.நம்பிக்கை என்பது மனித வாழ்வின் உயிர் மூச்சாகும்
    6.பக்தியோடு இருப்பதைவிட, நல்லவனாய் இருப்பதே மேல்.

    ReplyDelete
  42. ஐயா.

    நீண்ட விடுப்பு. Himalaya Yatra சென்றிருந்தேன். நீங்கள் அனுமதித்தால் உங்களுக்கு பிரசாதங்களை நேரில் கொடுக்க விரும்புகின்றேன்.

    இந்த பத்து நாட்களும் என் வாழ்நாள் முழுவதும் நினைவில் இருக்கும்.

    வாழ்க வளமுடன்.

    ReplyDelete
  43. அன்பிற்குரிய அய்யா வணக்கம்,
    வாக்கியம்,திருக்கணிதம் குறித்து அணைவருக்கும் மிக மிக சிறப்பாக புரிய வைத்த தங்களுக்கு என் நன்றி
    பவானி கே.ராஜன்.

    ReplyDelete
  44. வகுப்பறை மாணவர் கரூர் தியாகராஜன் அவர்கள் கொடுத்துள்ள மென்பொருளைத்தான் நானும் உபயோகிக்கிறேன் . நீங்கள் படத்தில் குரிப்பிடுள்ளது போலத்தான் உபயோகிக்கிறேன். (திருகனித முறையிலும் சரி, வாக்கிய முறையிலும் சரி ) ஆனாலும் தவறாகத்தான் உள்ளது .

    ReplyDelete
  45. migavum nalla pathil ayya... explanation is good!!!!!

    ReplyDelete
  46. /////Nithya said...
    Sir,Your explanation is really useful! I have that Tamil Astrovision software.In that,while using Lahiri method as well as Raman method differences arise in navamsa chart but not in rasi chart for some birth details that i got.But when checking for Famous personalities charts in that software, using Raman method for some even difference arise even in rasi chart when compared with the original that you used in the lessons..Can you please clarify how it happens?//////

    நீங்கள் சொல்லும் பிரபலங்களின் ஜாதகம் எந்தமுறையில் கணிக்கப் பட்டுள்ளதோ, அந்தமுறையில் கணித்தால் மட்டுமே சரியாக வரும்.

    ReplyDelete
  47. /////saravanan said...
    பாடம் மிக அருமை ஆசிரியரே
    ஒரு சின்ன சந்தேகம் ராசி சந்தியில் இருக்கும் கிரகத்துக்கு எப்படி பலன் எடுத்துக்கு கொள்ள வேண்டும் .
    உதாரணமாக திருக்கணிதப்படி 269.5 பாகை ,வாக்கியப்படி 270.5 பாகை .
    இப்பொது அது எந்த வீட்டில் இருக்கிறது!////

    இரண்டு முறைகளையும் பயன்படுத்தி ஏன் ஒத்துப் பார்க்கிறீர்கள்? நம்பிக்கையோடு ஏதாவது ஒன்றைப் பயன் படுத்துங்கள்

    ReplyDelete
  48. ////ananth said...
    ராமன் அயனாம்சம் எதை அடிப்படையாக கொண்டது என்பது தெரியாது. ஆனால் வாக்கிய பஞ்சாங்கத்திற்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் இருப்பதாக தெரியவில்லை. இதை என்னால் உறுதியாகக் கூற முடியும். ஏனென்றால் கிரக நிலைகள் வாக்கிய பஞ்சாங்கத்தில் ஒரு மாதிரியாகவும் ராமன் அயனாம்சத்தில் வேறு மாதிரியாகவும் இருக்கிறன.//////

    எனக்கு அவர்கள் கணித்துக் கொடுத்த ஜாதகத்தில் சரியாக இருக்கின்றன!

    /////நட்சத்திர பாதத்திற்கு பாகைகளை 60ஆல் வகுக்க வேண்டும். தாங்கள் காட்டியிருப்பது போல் 100ஆல் அல்ல. அப்படி செய்தால் ஒரு பாதத்திற்கு 3.20 பாகை என்றுதான் வரும். இப்படியாக ஒரு ராசிக்கு 9 நட்சத்திர பாதங்கள் முறையே 3.20, 6.40, 10.00, 13.20, 16.40, 20.00, 23.20, 26.40, 30.00 பாகைகள் என்றுதான் வரும்./////

    லக்கினப் பாகைகளை நான் 100ஆல் வகுக்கவில்லை. 9ஆல் வகுத்துள்ளேன். மீண்டும் ஒருமுறை பதிவைப் பார்க்க வேண்டுகிறேன். மணியில் சொன்னால் 120 நிமிடங்கள் வகுத்தல் 9 பாதங்கள் = 13.33 நிமிடங்கள் என்று கால அளவிலும் அதைக் கொடுத்துள்ளேன். உங்கள் கருத்துக்களுக்கு நன்றி!

    ReplyDelete
  49. Vaalga valamudan-Saravanan said...
    ஐயா வணக்கம்,
    என்னுடய ஜாதகம் 1980-ல் எழுத பட்டது. அதனுடய அமைப்பும், இராமன் அயனாம்ச கட்ட அமைப்பும் அதிகம் மாறுபடுகிறது. கிரகங்கள் அமர்ந்த வீடுகள் மிகவும் வேறுபடுகின்றது.
    நான் கருர் தியாகராஜன் வழங்கிய மென்பொருள் பயன்படுதினேன்.
    ஏன் இந்த வேறுபாடு?

    அதை ஸ்கேன் செய்து மின்னஞ்சலில் அனுப்புங்கள். பார்த்துச் சொல்கிறேன்

    ReplyDelete
  50. ////sundari said...
    ////thirunarayanan said...
    வணக்கம் அய்யா. அருமையான விளக்கம். அனேகமா உங்களை சாஸ்த்ரா பல்கலைகழகத்தில் வகுப்பு எடுக்க‌ கூப்பிட வாய்ப்பு உள்ளது. நன்றி அய்யா./////
    அய்யா, சாமி, அதெல்லாம் எனக்கு வேண்டாம். எனக்கு நமது வகுப்பறை ஒன்றே போதும்! இங்கே இன்றையத் தேதியில் 1129 மாணவர்கள் இருக்கிறார்கள். இதைவிட அதிக எண்ணிக்கையில் மாணவர்களைக் கொண்டு எந்தப் பள்ளியில்/பல்கலைக் கழகத்தில் ஜோதிட வகுப்பு நடக்கிறது?///
    சார் வணக்கம், அப்பா பெரிய்ய.......... பதிவு அருமையான பதில் ரொம்ப நன்றி சார் ஐயா வாய்ப்பு வந்தாலும் நீஙக எங்களை விட்டு விட்டு எங்கும் போக மாட்டிங்க என்று எனக்கும் தெரியும் நீங்களும் சொல்லிவிட்டீர்கள் ரொம்ப நன்றி சார். நம்ப வகுப்பறை பெரியது.இன்னும் ரொம்ப பேர் வருவங்க சார் ஐயா இன்று பிரதோஷம் சிவன் கோவிலுக்கு போங்க சார்.
    சுந்தரி./////

    நல்லது.நன்றி சகோதரி!

    ReplyDelete
  51. ///sundari said...
    பொன்மொழிகள்:
    1.தெய்வத்தின் விருப்பத்திற்கு எதிராக எந்த ஒரு மனித சக்த்தியும் நிற்க முடியாது (எனவே, சோதனையான நேரங்களிலும் நேர்மையாக வாழ்வோம்.)
    2.சூரிய ஒளிபோல யாருடன் பழகினாலும் அந்துஸ்து பார்க்காமல் ஒரே மாதரியான அணுகுமுறையுடன் உள்ளன்பு குறையாமல் ப்ழகுங்கள்.
    3.வாழ்வின் வெற்றி என்பது ஒரு மனிதன் பின்பற்றும் சத்தியத்தைப் பொருத்தது.
    4.அன்பு அனைத்தையும் பொறுத்துககொள்ளூம, அனைத்தையும் நம்பும், அனைத்தையும் எதிர் நோக்கியிருக்கும், அனைத்திலும் மன உறுதியாய் இருக்கும்.
    5.நம்பிக்கை என்பது மனித வாழ்வின் உயிர் மூச்சாகும்
    6.பக்தியோடு இருப்பதைவிட, நல்லவனாய் இருப்பதே மேல்.////

    உங்களுடைய பொன்மொழிகளுக்கு நன்றி!

    ReplyDelete
  52. ///Success said...
    ஐயா. நீண்ட விடுப்பு. Himalaya Yatra சென்றிருந்தேன். நீங்கள் அனுமதித்தால் உங்களுக்கு பிரசாதங்களை நேரில் கொடுக்க விரும்புகின்றேன்.
    இந்த பத்து நாட்களும் என் வாழ்நாள் முழுவதும் நினைவில் இருக்கும்.
    வாழ்க வளமுடன்./////

    உங்கள் அன்பிற்கு நன்றி சுரேந்திர பிரபு! பழநியப்பனின் விபூதி பிரசாதம் மட்டுமே நான் விரும்பும் பிரசாதம்.
    வருடத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறைகள் நானே நேரில் சென்று, அவன் தாள் வணங்கி, பிரசாதத்தை வேண்டிய அளவு அள்ளிக் (வாங்கிக்) கொண்டு வந்துவிடுவது வழக்கம்! அதனால் பிரசாதத்தைத் தூக்கிக் கொண்டு வந்து, நம் இருவர் நேரத்தையும் நீங்கள் வீணாக்க வேண்டாம்!

    ReplyDelete
  53. ////krajan said...
    அன்பிற்குரிய அய்யா வணக்கம்,
    வாக்கியம்,திருக்கணிதம் குறித்து அணைவருக்கும் மிக மிக சிறப்பாக புரிய வைத்த தங்களுக்கு என் நன்றி
    பவானி கே.ராஜன்./////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி!

    ReplyDelete
  54. /////sundinesh1 said...
    வகுப்பறை மாணவர் கரூர் தியாகராஜன் அவர்கள் கொடுத்துள்ள மென்பொருளைத்தான் நானும் உபயோகிக்கிறேன் . நீங்கள் படத்தில் குரிப்பிடுள்ளது போலத்தான் உபயோகிக்கிறேன். (திருக்கணித முறையிலும் சரி, வாக்கிய முறையிலும் சரி ) ஆனாலும் தவறாகத்தான் உள்ளது .

    உங்கள் ஜாதகத்தை ஸ்கேன் செய்து மின்னஞ்சலில் அனுப்புங்கள். பார்த்துச் சொல்கிறேன்

    ReplyDelete
  55. ////Karthi said...
    migavum nalla pathil ayya... explanation is good!!!!!///

    நல்லது நன்றி நண்பரே!

    ReplyDelete
  56. ஐயா, தங்களின் விளக்கத்திற்கு நன்றி.
    திருக்கணிதப்படி ஜாதகத்தில் (தனுசு லக்னம்)2-ல் கேது,7-ல் புதன் (சூரியனுடன்), 8-ல் ராகு இருந்தது. இப்பொழுது நீங்கள் கூறிய பிறகு வாக்கியப்படி கணித்ததில், 3-ல் கேது, 8-ல் புதன், 9-ல் ராகு என்று மாறிவிட்டது :)

    ReplyDelete
  57. மாத வருட கிரக பெயர்ச்சி உதாரணமாக சமீபத்திய குரு, சனி பெயர்ச்சி போன்றவை ராமன் அயனாம்ச முறையில் ஒரு நாளும் வாக்கிய பஞ்சாங்கத்தின் படி வேறு ஒரு நாளுமாக இருந்தது. இரண்டையும் ஒப்பிட்டு பார்த்து விட்டுதான் சொல்கிறேன். இரண்டும் ஒன்றுக்கொன்று சம்பந்தம் இல்லாதது போல்தான் இருக்கிறது.

    ReplyDelete
  58. ////Subbaraman said...
    ஐயா, தங்களின் விளக்கத்திற்கு நன்றி.
    திருக்கணிதப்படி ஜாதகத்தில் (தனுசு லக்னம்)2-ல் கேது,7-ல் புதன் (சூரியனுடன்), 8-ல் ராகு இருந்தது. இப்பொழுது நீங்கள் கூறிய பிறகு வாக்கியப்படி கணித்ததில், 3-ல் கேது, 8-ல் புதன், 9-ல் ராகு என்று மாறிவிட்டது :)/////

    உங்கள் பிறப்பு விவரங்களை மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்துங்கள். ஆராய்ந்து பார்க்கிறேன்!

    ReplyDelete
  59. /////ananth said...
    மாத வருட கிரக பெயர்ச்சி உதாரணமாக சமீபத்திய குரு, சனி பெயர்ச்சி போன்றவை ராமன் அயனாம்ச முறையில் ஒரு நாளும் வாக்கிய பஞ்சாங்கத்தின் படி வேறு ஒரு நாளுமாக இருந்தது. இரண்டையும் ஒப்பிட்டு பார்த்து விட்டுதான் சொல்கிறேன். இரண்டும் ஒன்றுக்கொன்று சம்பந்தம் இல்லாதது போல்தான் இருக்கிறது.//////

    என்னிடம் ராமனின் அயனாம்ச நூல் உள்ளது. நேரம் கிடைக்கும்போது ஒப்பிட்டுப் பார்த்து அதை ஒரு தனிக் கட்டுரையாக எழுதுகிறேன்.பொறுத்திருங்கள்!

    ReplyDelete
  60. அன்பு ஆசிரியருக்கு,
    வணக்கம். நீங்கள் சொன்ன அரியக்குடி ராமானுஜ ஐயங்கார் அவர்கள் கர்நாடக சங்கீதப் புகழ் ராமானுஜ ஐயங்காரா?
    அப்படி எனில் கர்நாடக சங்கீதம், ஜோதிடம் என இரு துறைகளில் புலமை பெற்றதை நினைத்து வியக்கிறேன்.
    ஆமாம் சங்கீதத்தில் புலமை பெற என்ன அமைப்பு இருக்க வேண்டும் :)---------

    ReplyDelete
  61. //////prince said...
    அன்பு ஆசிரியருக்கு,
    வணக்கம். நீங்கள் சொன்ன அரியக்குடி ராமானுஜ ஐயங்கார் அவர்கள் கர்நாடக சங்கீதப் புகழ் ராமானுஜ ஐயங்காரா? அப்படி எனில் கர்நாடக சங்கீதம், ஜோதிடம் என இரு துறைகளில் புலமை பெற்றதை நினைத்து வியக்கிறேன். ஆமாம் சங்கீதத்தில் புலமை பெற என்ன அமைப்பு இருக்க வேண்டும் :)---------/////

    அவரில்லை இவர். இவர் ஜோதிடவிற்பன்னர் மட்டுமே. கலைகளில் நிபுனத்துவம் பெற ஜாதகத்தில் சுக்கிரனும், புதனும் நன்றாக இருக்க வேண்டும்!

    ReplyDelete
  62. Hello Sir,

    The website
    http://www.astraura.org/Home/
    casts Horoscope using Ayanamsa values as below
    (Dirukanitham - 23° 31' 17")
    ( vakyam - 24° 31' 29" )
    (Lahiri - 23° 38' 29" )
    (Raman Ayanamsa - 22° 11' 29")
    SOME OF THE ABOVE VALUES DIFFERS IN THE FOLLOWING WEBSITE:
    http://www.lunarplanner.com/siderealastrology.html

    As per KP, The ayanamsa seems to vary per year

    ReplyDelete
  63. ////karthik said...
    Hello Sir,
    The website
    http://www.astraura.org/Home/
    casts Horoscope using Ayanamsa values as below
    (Dirukanitham - 23° 31' 17")
    ( vakyam - 24° 31' 29" )
    (Lahiri - 23° 38' 29" )
    (Raman Ayanamsa - 22° 11' 29")
    SOME OF THE ABOVE VALUES DIFFERS IN THE FOLLOWING WEBSITE:
    http://www.lunarplanner.com/siderealastrology.html
    As per KP, The ayanamsa seems to vary per year////

    தகவலுக்கு நன்றி கார்த்திக்!

    ReplyDelete
  64. ராமன் அயனாம்சமே சரியானதும் சிறந்ததும் ஆகும். காரணம் அவரின் க்ணிப்பு தனிநபருக்கும் சரி, இந்தியாவுக்கும் சரி, உலக அளவிலும் சரி நடந்துள்ளது. எனவே அவர் இந்தியாவுக்கு எடுத்துக் கொண்ட அயனாமசமே சரியானது. திருக்கணிதம் நமக்கு குழப்பத்தையே தரும்.

    ReplyDelete
  65. ராமன் இந்த அயனாம்சம் சில காலம் கழித்து மாற்ற வேண்டும் என அதற்கு ஒரு கணிதமும் கொடுத்திருப்பார்.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com