மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

11.1.10

Doubt: வெறும் கையால் முழம் போட ஜாதகம் எதற்கு?

++++++++++++++++++++++++++++++++++++++++++++
Doubt: வெறும் கையால் முழம் போட ஜாதகம் எதற்கு?

Doubts: கேள்வி பதில் பகுதி பன்னிரெண்டு!

நீங்களும் உங்கள் சந்தேகங்களும் - பாடம் பன்னிரெண்டு!

Question & answer session
கேள்வி பதில் வகுப்பு
-------------------------------------------
email No.47
email No.
C.சுப்பையா

ஐயா வணக்கம்,
எழுத்தறிவித்தவன் இறைவன் ஆகும். என்பதற்கேற்ப கற்றுகொடுக்கும் தாங்கள் இறைவன் தான் என்பதில் நான் ஒரு ஆசிரியரின் மகனாக இதை எழுதுவதில் முழு மகிழ்ச்சி.எனக்கு ஏற்பட்டுள்ள ஒரு சில சந்தேகங்களுக்கு விடை கிடைக்கும் என நம்புகிறேன்.

அடடா, நெஞ்சைத் தொட்டுவிட்டீர்களே!:-)))) இறைவன் ரேஞ்சிற்கு என்னை உயர்த்தி, அண்டாப் பாலில் அழுத்திவிடாதீர்கள். நானும் உங்களைப் போல சாதாரண மனிதன்தான்.நான் கற்றதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். அவ்வளவுதான்!

1. சூரிய உதயத்திற்கு முன் பிறந்தவர்களுக்கு முற்காலத்தில் பெரியவர்கள் எழுதிகொடுத்த ஜாதகங்களோடு, தாங்கள் வழங்கியுள்ள மென்பொருள்களில் நட்சத்திர வேறுபாடு வருவதை தவிர்க்க தங்களின் ஆலோசனை வழங்க பணிவுடன் வேண்டுகிறேன்.

வெள்ளைக்காரனுக்கு இரவு 12 மணிக்கு அடுத்த நாள் துவங்கிவிடும். நமக்கு சூரிய உதயத்திற்குப் பிறகுதான் நாள் துவங்கும். இரவு 12 மணிக்குப் பிறகு, அதிகாலை சூரிய உதயத்திற்குள் (அதாவது 5.50AM to 6:35 AM) சுமார் 6மணி நேரத்திற்குள் பிறக்கும் குழந்தைகளுக்கு அன்றைய சூரிய உதயத்தைக் கணக்கில் எடுத்துக் கொண்டுதான் ஜாதகத்தை எழுதுவார்கள்.

சித்திரை மாதம் சூரிய உதயம் 5:55, மாசி மாதம் சூரிய உதயம் 6:39 - இடையில் சூரிய உதயம் ஒவ்வொரு மாதமும் ஒரு நேரத்தில் - இந்த நேரத்திற்கு இடைப்பட்ட நேரத்தில் இருக்கும். சூரிய உதய அட்டவணை வகுப்பறைக் கிடங்கில் உள்ளது

அப்படி எழுதும்போது அவர்கள் விரோதி வருடம் மார்கழி மாதம் 24ஆம் தேதி வெள்ளிக்கிழமை இரவு 2:00 மணி என்று எழுதிக் கூடவே 8/9.1.2010 2:00 AM என்றும் எழுதியிருப்பார்கள். அப்படி எழுதாவிட்டால் - அதாவது 8/9 என்று எழுதாவிட்டால் சிக்கல்தான். 7/8 ஆ, அல்லது 8/9 என்று ஜாதகன் மண்டையைப் பிய்த்துக்கொள்ள வேண்டியதாயிருக்கும். அதைச் சரிபார்க்க அவன் பிறந்த வருடத்திய பஞ்சாங்கம் வேண்டும். அதாவது ஜாதகன் 1984ஆம் வருடம் பிறந்திருந்தால் அந்த வருடப் பஞ்சாங்கம் வேண்டும்.

நமது வகுப்பறை மாணவர்களுக்கு அந்தப் பிரச்சினை வராது. என்னிடம் 75 ஆண்டுகளுக்கான வாக்கியப் பங்சாங்கம் உள்ளது. அதாவது 1926ஆம் ஆண்டு முதல் 2000 ஆண்டுவரை உள்ள காலத்திற்கான வாக்கியப் பங்சாங்கங்கள் உள்ளது. தமிழ்த்தேதியையும் நேரத்தையும் நீங்கள் எழுதினால், அதற்குச் சரியான ஆங்கிலத் தேதியை நான் தருகிறேன் (இலவசமாக)

விளக்கம் போதுமா அன்பரே?
-------------------------------------------
email No.48
சுனிதா நர்த்தகி

அன்புள்ள ஐயா
உங்கள் கேள்வி பதில் பகுதி அருமை. இதோ என்னுடைய கேள்விகள்.........

கேள்வி 1 :
செவ்வாய் நீசமடைந்திருந்து அவர் 4-ம் வீட்டிற்கும், 11-ம் வீட்டிற்கும் அதிபதி என்றால் சொத்து வாங்கவே முடியாதா?. இரு வீட்டின் பரல் 30 - க்கும் அதிகமாக இருந்தாலுமா?

அதிபதி நீசமடைந்திருக்கும்போது, அந்த வீட்டிற்கு 30 பரல்கள் எப்படிக் கிடைத்தது என்று யோசித்தீர்களா?

இப்படி வைத்து யோசித்துப்பருங்கள்: குடும்பத்தலைவர் வேலை வெட்டியில்லாத ஆசாமி. ஆனால் குடும்பத்திற்கு கோவை ரேஸ் கோர்ஸில் ஒரு ஏக்கரில் பங்களா இருக்கிறது. அவனாசி ரோட்டில் இரண்டு பெரிய வளாகங்கள் (மேன்சன்கள்) இருக்கின்றன!. மாதம் 4 லட்ச ரூபாய் வாடகை வருகிறது. கூடலூரில் 100 ஏக்கர் காஃபி எஸ்டேட் இருக்கிறது. தலைவர் சோம்பேறி. அதனால் எஸ்டேட்டை லீசிற்கு விட்டிருக்கிறார்கள். வருடத்திற்கு 20 லட்ச ரூபாய் வருமானம் வருகிறது. இப்போது சொல்லுங்கள். அந்தக் குடும்பம் செளகரியமாக இருக்குமா? இருக்காதா?

அப்படி, அதிபதி நீசமானாலும், 4ஆம் வீட்டில் மேல் விழும் நல்ல பார்வைகளால், அதற்கு வேறு தீய கிரகங்களின் உபத்திரவம் எதுவும் இல்லாத சூழ்நிலையில்தான் அந்த 30 பரல்கள் கிடைத்திருக்கும். அப்படிப்பட்ட 4ஆம் வீட்டை உடைய ஜாதகன் வசதிமிக்கவனாக இருப்பான். குடும்பத் தலைவனுக்கு 4ஆம் அதிபதி நீசமடைந்திருந்தபோதும் பரல்கள் அதிகமாக உள்ள வீடுகளின் பலன்கள் நன்மை உடையதாக இருக்கும். ஆகவே ஜாதகன், நீசனைக் கடாசிவிட்டு வீட்டின் அமைப்பைவைத்து சொத்தை வாங்கலாம்.
இல்லையென்றால் அதிக பரல்களுக்கு என்ன அர்த்தம் சகோதரி?

கேள்வி 2 :
குட்டி சுக்கிரன் கூடி கெடுக்கும் என்பதன் அர்த்தம்? 5 வயதில் குழந்தைக்கு சுக்கிர திசை வந்தால் பெற்றவர்களுக்கு ஆபத்தா? இதற்கு என்ன செய்ய வேண்டும்?
இப்படிக்கு
உங்கள் மாணவி

குட்டிச் சுக்கிரன் கூடிக்கெடுக்கும் என்பது சின்ன வயதில் - குழந்தைப் பருவத்தில் சுக்கிர தசை வருவதையும், அப்படி வரும் தசையால் அக்குழந்தை செல்லமாக வளர்ந்து, சுகவாசியாக இருந்து, படிப்பைக் கோட்டைவிடும் அபாயம் இருப்பதையும் மட்டுமே குறிக்கும். அக்குழந்தையால் பெற்றோர்களுக்கு எந்தவித ஆபத்தும் இல்லை. மேற்கொண்டு சொன்னால், அந்தக் குழந்தை வசதியாக வளரும் பொருட்டு அவர்களுக்கு நிறையப் பணம் வரும்.

இந்த அமைப்பையும் மீறி, சுக்கிரதிசையின் அழும்பையும் மீறி, சில குழந்தைகள், ஜாதகத்தில் வித்தியாகாரகன் புதன் நன்றாக இருக்கும் பட்சத்தில் நன்றாகப் படித்துத் தேர்ந்துவிடும்! அதுதான் ஜாதகப் பலனின் அதிசயம்!
-------------------------------------------
email No.49
ரமேஷ் வேலுச்சாமி

Sir,
For Real Estate, [lord of 4 th & 11 th ] the karaka Mars is in the 6th house[vagram] with guru parvai with less than 3 parals and in navamsa guru and mars are in parivartna. if so, is mars become powerful ? and will give good results in real estate.

நான்காம் வீடுதான் பூமி, மனைகளுக்கு உரிய இடம். அந்த வீடு நன்றாக இருந்தாலும் சரி அல்லது பதினொன்றாம் வீட்டு அதிபதி 4ஆம் வீட்டில் இருந்தாலும் சரி ரியல் எஸ்டேட் பிஸினெஸிற்கு உரிய அமைப்பு அது. அதுபோல 10ஆம் இடத்து அதிபதி 5ஆம் வீட்டில் அம்ர்ந்து பதினொன்றாம் வீட்டைப் பார்த்தாலும், ரியல் எஸ்டேட் பிஸினெஸில் வெற்றி கிடைக்கும்!

4 & 11ஆம் இடத்து அதிபதி 6ல் மறைந்துவிட்டதால் வாய்ப்புக் குறைவு. அம்சத்தில் அவர் பரிவர்த்தனையாகி உள்ளதைமட்டும் பார்க்காமல், அவர் அம்சத்தில் உச்சமாக இருக்கிறாரா அல்லது நீசமாகி இருக்கிறாரா அல்லது ஆட்சி பலத்துடன் பரிவர்த்தனையாகி இருக்கிறாரா என்று பாருங்கள்

இன்று எல்லோருக்குமே குறுகிய காலத்தில் அதீதமான பணம் சம்பாதிக்கும் ஆசை உள்ளது. ரியல் எஸ்ட்டேட் எனப்படும் இடம் வாங்கி விற்பது, கட்டிடங்கள் கட்டி விற்றுக் காசு பண்னும் தொழிலில் அனைவருக்குமே ஒரு கண் உள்ளது. எல்லோரும் அதில் வரும் வருமானத்தைத்தான் பார்க்கிறார்களோ ஒழிய, அதில் உள்ள பிரச்சினைகளை யாரும் நினைத்துப்பார்ப்பதில்லை. அதில் நுழைந்து பார்த்த பிறகுதான் பிரச்சினைகள் பூதாகரமாகத் தெரியும்.

முன்பே பலமுறை எழுதியுள்ளேன். பணம் அதிகமாகக் கையில் சேர்வதற்குச் ஜாதகத்தில் 2ஆம் வீடும், 11ஆம் வீடும் அதி முக்கியம். இரண்டாம் வீடு அண்டா. பதினொன்றாம் வீடு தண்ணிர் கொட்டும் குழாய். அது இரண்டும் இல்லாமல் தண்ணீரைப் பிடித்து வைக்க முடியாது. தண்ணீரைத் திறந்துவிடும் ஆசாமி வேண்டுமே. பத்தாம் வீட்டு அதிபதியும், கர்மகாரகன் சனியும் சேர்ந்துதான் அல்லது அந்த இருவரில் ஒருவர்தான் அந்த வேலையைச் செய்வார்கள்.அவர்கள்தான் தண்ணீரைத் திறந்துவிடும் ஆசாமிகள். சரி, எந்த ஆற்றில் இருந்து அல்லது எந்த அணைக்கட்டில் இருந்து தண்ணீர்வரும்? அதை அறியச் செய்வதுதான் மற்ற வீடுகளின் வேலை!

ஒன்பதாம் வீடு நன்றாக இருந்தால் பூர்வீகச் சொத்து என்னும் அணையில் இருந்து பணம் வரும். ஏழாம் வீடு நன்றாக இருந்தால் கூட்டு வியாபாரம், நிறுவன மேலான்மை (அதாவது 10% உங்கள் பணம். மீதம் 90% பொதுமக்கள் பணம் -share hoders money என்னும் நிலைமை) என்னும் அணையில் இருந்து பணம் வரும். ஆறாம் வீடு நன்றாக இருந்தால், தீயவழி (தாதா வேலைகள், கஞ்சாக் கடத்தல் வேலைகள் போன்ற இன்னபிற தவறான வேலைகள்) என்னும் அணையில் இருந்து பணம் வரும். 4ஆம் வீடு நன்றாக இருந்தால் ரியல் எஸ்டேட் என்னும் அணையில் இருந்து பணம் வரும்.

அணைகளை மட்டும் மனதில் வாங்கிக் கொண்டு, சார் எனக்குப் பணம் வரவில்லையே என்று கேட்காதீர்கள். அதற்கு முன் எழுதியுள்ள பகுதியையும் மனதில் வாங்கிக்கொண்டு பாருங்கள்.

Areas in which money can be earned, level of accumulation, instant financial gains and windfalls, level of rise, positive and negative period in the coming times என்று பலவிஷயங்கள் உள்ளன. ஒரு கிரகத்தின் உச்ச நீசத்தை வைத்து மட்டும் அல்லது பரிவர்த்தனையை மட்டும் வைத்து எதையும் முடிவு செய்ய முடியாது.

சரி, உங்கள் கேள்விக்கு வருவோம். காரகன் செவ்வாயை மட்டும் வைத்துக் கதை எழுதப்பார்க்கிறீர்களே? மேலே குறிப்பிட்டுள்ள மற்ற விஷயங்களையும் பாருங்கள்! எல்லாவற்றையும் அலசுங்கள்

மொத்த ஜாதகத்தையும் அலச வேண்டும். ஏன் அலச வேண்டும்? உங்களுடைய சொந்தப் பணம் எதுவுமில்லாமல் ரியல் எஸ்டேட் பிஸினசில் நீங்கள் நுழைவது சாத்தியமில்லை. அதனால் அலச வேண்டும்.

வெறும் கையால் முழம் போடும் திறமையுள்ளவரா நீங்கள்? அப்படி என்றால் பிரச்சினை இல்லை. ரியல் எஸ்ட்டேட் வியாபாரத்தில் கமிஷன் அடிப்படையில் நீங்கள் வேலை செய்யலாம். கல்லை எறிவோம்; மாங்காய் விழுந்தால் விழுகட்டும். விழாவிட்டால் கல்லிற்குப் பஞ்சமா என்னும் மனதைரியம்தான் மட்டும் அதற்குப் போதும்!

வெறும் கையால் முழம் போட ஜாதகம் எதற்கு? அதற்குச் ஜாதகத்தையே பார்க்க வேண்டாம்!:-)))))
-------------------------------------------
email No.50
லெட்சுமணன், சென்னை

அன்புள்ள வாத்தியார் அவர்களுக்கு வணக்கம்,
இது நமக்கு நாமே திசா புத்தி பலனை அறிந்து கொள்ளும் குறுக்கு வழி பற்றிய கேள்வி:
மேஷ லக்னம்,
நாலில் ராகுவும் குருவும். நாலில் 31 பரல்,
குருவின் சுய பரல் 5 , சந்திரனின் சுய பரல் 4 , சனியின் சுய பரல் 3
ராகு திசைக்கு சனியின் அஷ்ட வர்க்கத்தை பார்க்க வேண்டுமா,
ராகு நின்ற வீட்டு அதிபதி சந்திரன் அஷ்ட வர்க்கத்தை பார்க்க வேண்டுமா,
ராகுவோடு குரு சேர்ந்து இருக்கிறாரே ஆகையால் குரு அஷ்ட வர்க்கத்தை பார்க்க வேண்டுமா? ரகுவின் சுய பரல் எது?ராகு திசையின் ஒவ்வொரு புத்தியின் பலனை நமக்கு நாமே தெரிந்துகொள்ள அந்த அந்த கிரகங்கள் இருக்கும் வீட்டில் உள்ள பரல்களை வைத்து தெரிந்துகொள்ளலாம் அல்லவா? சற்று விளக்கமாக சொல்லவும்
=Lakshmanan

ராகுவிற்கு சொந்த வீடும் கிடையாது. பரல்களும் கிடையாது. ஆகவே ராகுவிற்குப் பரல்களை வைத்துப் பலனை அறிய முடியாது. ராகு திசையில் அடுத்தடுத்து வரும் புத்திகளை வைத்துத்தான் பலன்களை அறிய முடியும்.

பொதுவாக ராகு மகா தசை 80% ஜாதகர்களுக்கு மகிழ்ச்சியைத்தராது. நன்மைகள் அதிகமாக இருக்காது. தொல்லைகளே மிகுந்து இருக்கும். படுத்தி எடுக்கும். ஒரேயடியாக படித்தி எடுக்குமா என்றால். அப்படி இருக்காது. 18 வருடங்கள் தொடர்ந்து தொல்லைகள் என்றால் ஜாதகன் நொடிந்து போய் விடமாட்டானா? அதனால் இடையிடைய வரும் வேறு கிரகங்களின் புத்திகளில் ஜாதகன் சற்று பெருமூச்சு விட்டுக்கொள்ளலாம். தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ளலாம். அதேபோல ராகுதசை 18 ஆண்டுகளில் செய்யும் கெடுதல்களை கேது 7 ஆண்டுகளில் கொடுத்து விடுவார்.

ராகு தசை ராகு புத்தி - 2 ஆண்டுகள் 8 மாதங்கள் 13 நாட்கள்
ராகு தசை கேது புத்தி - 1 ஆண்டு 18 நாட்கள்
ராகு தசை சூரிய புத்தி - 10 மாதங்கள் 24 நாட்கள்
ராகு தசை சந்திர புத்தி - 1 ஆண்டு 6 மாதங்கள்
ராகு தசை செவ்வாய் புத்தி - 1 ஆண்டு 18 நாட்கள்
ஆக மொத்தம் 7 ஆண்டுகள் 2 மாதங்கள் 13 நாட்கள்
கேடான பலன்கள் அதிகமாக இருக்கும்

ராகு தசை குரு புத்தி - 2 ஆண்டுகள் 4 மாதங்கள் 24 நாட்கள்
ராகு தசை சனி புத்தி - 2 ஆண்டுகள் 10 மாதங்கள் 6 நாட்கள்
ராகு தசை சுக்கிர புத்தி - 3 ஆண்டுகள்
ராகு தசை புதன் புத்தி - 2 ஆண்டுகள் 6 மாதங்கள் 18 நாட்கள்
ஆக மொத்தம் 10 ஆண்டுகள் 9 மாதங்கள் 18 நாட்கள்
ஒரளவிற்கு நன்மையான பலன்கள் இருக்கும்

பரணி, பூரம், பூராடம் (சுக்கிரனின் நட்சத்திரங்கள்)
கார்த்திகை, உத்திரம், உத்திராடம் (சூரியனின் நட்சத்திரங்கள்)
ரோகிணி, அஸ்தம், திருவோணம் (சந்திரனின் நட்சத்திரங்கள்)
மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம் (செவ்வாயின் நட்சத்திரங்கள்)
திருவாதிரை, சுவாதி, சதயம் (ராகுவின் நட்சத்திரங்கள்)
ஆக மொத்தம் 15 நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் ராகு தசையைச் சந்திக்க நேரிடும்

புனர்பூசம், விசாகம், பூரட்டாதி (குருவின் நட்சத்திரங்கள்)
பூசம், அனுஷம், உத்திரட்டாதி (சனியின் நட்சத்திரங்கள்)
ஆயில்யம், கேட்டை, ரேவதி (புதனின் நட்சத்திரங்கள்)
அசுவினி, மகம், மூலம் (கேதுவின் நட்சத்திரங்கள்)
ஆக மொத்தம் 12 நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் கேது தசையைச் சந்திக்க நேரிடும்

சிலர் தங்களின் வயது காரணமாக இரண்டு (அதாவது ராகு & கேது) தசைகளையுமே சந்திக்க நேரிடும். அப்படிச் சந்திக்க நேரிடாதவர்களுக்குக் கூட ஒவ்வொரு கிரகத்தின் மகாதசையிலும் ராகு & கேதுவின் புத்திகளைச் சந்திக்க நேரிடும்.

மிதுனம், கன்னி, துலாம், தனுசு, கும்பம், மீனம் ஆகிய ராசிகள் ராகு & கேதுவிற்கு நட்பு ராசிகளாகும்.விருச்சிகம் உச்ச இடம். ஜாதகத்தில் இந்த 7 இடங்களில் இருக்கும் ராகு & கேதுவால் ஜாதகனுக்கு அதிகத் தொல்லைகள் இருக்காது

மேஷம், கடகம், சிம்மம், மகரம் ஆகிய ராசிகள் ராகு & கேதுவிற்குப் பகையான இடங்களாகும். ரிஷபம் நீச இடமாகும். ஜாதகத்தில் இந்த 5 இடங்களில் இருக்கும் ராகு & கேதுவால் ஜாதகனுக்கு அதிகத் தொல்லைகள் இருக்கும்.

இவை அத்தனையும் பொதுப்பலன்கள். புத்தி நாதர்கள் தங்கள் சுயவர்க்கத்தில் 5ம் அதற்கும் மேற்பட்ட பரல்களைக் கொண்டிருந்தால், கெடுதல்கள் வெகுவாகக் குறைந்துவிடும் இவை அத்தனையையும் அலசித்தான் பலனைப் பார்க்க வேண்டும்.

குறுக்கு வழி?

தசா நாதனும், புத்திநாதனும் (அவற்றிற்கு உரிய கிரகங்கள்) ஜாதகத்தில் ஒருவருக்கொருவர், 6/8 பொஸிசனில் (நிலைமையில்) அல்லது 1/12 பொஸிசனில் (நிலைமையில்) இருப்பது நன்மையைத் தராது. இது அத்தனை தசா/புத்திகளுக்கும் பொருந்தும்!

விளக்கம் போதுமா நண்பரே?
-------------------------------------------
(தொடரும்)

அன்புடன்
வாத்தியார்
அடிக்குறிப்பு: வாத்தியார் வெளியூர்ப்பயணம். ஆகவே வகுப்பறைக்கு 2 நாட்கள் விடுமுறை. அடுத்த பாடம்.14.1.2010 அன்று வெளியாகும்!


வாழ்க வளமுடன்!

52 comments:

  1. அய்யா.

    பாடம் அருமை...முளம் போட என்பது முழம் போட என வரவேண்டும் என நினைக்கின்றேன்.
    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
    Replies
    1. ஐயா வணக்கம் எனக்கு ஒரு சந்தேகம் எனது பிறந்த தேதி 27 4 ஆயிரத்து 995 நான் சரியாக ஏழு மணிக்கு பிறந்துள்ளேன் காலை எனது ராசி மீன ராசி உத்திரட்டாதி நட்சத்திரம் எனக்கு மேஷ லக்னமா அல்லது ரிஷப லக்னம் மா என்ற சந்தேகம் நீண்ட நாட்களாகவே இருந்து உள்ளது இந்த சந்தேகத்தை நான் எவ்வாறு தீர்த்துக் கொள்வது இதற்கு தீர்வை நீங்கள் தரவேண்டும்

      Delete
  2. //வெறும் கையால் முளம் போட ஜாதகம் எதற்கு?"//

    வாத்தியார் ஐய்யா., முளம் இல்லை முழம்.

    ReplyDelete
  3. ///Shyam Prasad said...
    மிக்க நன்றி////

    உங்களின் வருகைப் பதிவிற்கு நன்றி!

    ReplyDelete
  4. ////வேலன். said...
    அய்யா.
    பாடம் அருமை...முளம் போட என்பது முழம் போட என வரவேண்டும் என நினைக்கின்றேன்.
    வாழ்க வளமுடன்,
    வேலன்.////

    தட்டச்சுப்பிழை. பதிவில் திருத்திவிட்டேன். சுட்டிக்காட்டியமைக்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  5. ////சிங்கைசூரி said...
    நன்றி ஆசானே.////
    Monday, January 11, 2010 7:23:00 AM

    உங்களின் வருகைப் பதிவிற்கு நன்றி!

    ReplyDelete
  6. /////அப்பாவி முரு said...
    //வெறும் கையால் முளம் போட ஜாதகம் எதற்கு?"//
    வாத்தியார் ஐய்யா., முளம் இல்லை முழம்.////

    தட்டச்சுப்பிழை. பதிவில் திருத்திவிட்டேன். சுட்டிக்காட்டியமைக்கு நன்றி நண்பரே!
    cut & paste செய்து எழுதுவதால், அது சில இடங்களில் தொடர்ந்திருக்கிறது!

    ReplyDelete
  7. வணக்கம்

    கேள்வி 50காண பதில், என் வாழ்வில் நடந்தது பற்றி கூற விரும்புகிறேன், மகரராசி, துலா லக்கினம். லக்கினதற்கு 11ம் வீடான சிம்மத்தில் ராகு, ராகு திசையில் சூப்பரா இருக்கும் என பெரும்பாலான ஜோதிடர்கள் கூறினார்கள், வெகுசிலர் நீங்கள் அடுத்து வரும் குரு திசையில் உங்களுக்கு மிக சாதகமாக இருக்கும் என்றனர் (மறைமுகமாக ராகு நல்லதிசையில்லை என்பதை உணர்த்த)

    நடந்து என்னவோ ராகு திசையில் எவ்வளவு அவமான பட முடியுமோ அவ்வளவு அவமானங்கள் இளப்புகள்,
    இளப்புகள் இல்லாமல் வாழ்க்கை ஏது! தோழ்விகள் இல்லாத மனங்கள் ஏது!
    ஆனால் ஒன்றுமட்டும் நிதர்சனம், ராகுதிசை என்னை புடம்செய்தது மட்டும் 100% உண்மை. பதினொறாம் இடத்தின் பரல்கள் 37, இங்குதான் புரியவில்லை. ( குரு, சனி 11ல் ராகுவுடன்)

    வாழ்க வளமுடன்

    ReplyDelete
  8. //குட்டிச் சுக்கிரன் கூடிக்கெடுக்கும் என்பது சின்ன வயதில் - குழந்தைப் பருவத்தில் சுக்கிர தசை வருவதையும், அப்படி வரும் தசையால் அக்குழந்தை செல்லமாக வளர்ந்து, சுகவாசியாக இருந்து, படிப்பைக் கோட்டைவிடும் அபாயம் இருப்பதையும் மட்டுமே குறிக்கும். அக்குழந்தையால் பெற்றோர்களுக்கு எந்தவித ஆபத்தும் இல்லை. மேற்கொண்டு சொன்னால், அந்தக் குழந்தை வசதியாக வளரும் பொருட்டு அவர்களுக்கு நிறையப் பணம் வரும்.//

    குழந்தைகளின் ஜாதகம் 12 வயது வரை வேலை செயாதுஎன்றால், இது எப்படி சாத்தியமாகும் சார்?
    எதாவது விதிவிலக்கு உள்ளதா?

    ReplyDelete
  9. வணக்கம் சார்,
    Really superb questions, and especially the answers.

    Thanks
    Thanuja

    ReplyDelete
  10. அய்யா இனிய காலை வணக்கம்,
    4 மற்றும் 11 இடங்ளை பற்றிய விளக்கங்கள் தங்கள் நடையில் சிறப்பாக உள்ளது ,,,,,நான்காம் இடம் அதிக பரல்(30 அல்லது அதற்கு மேல்) மற்றும் அதிபதி நல்ல சுய வர்க பரல் ,ஆட்சி அல்லது உச்ச பலத்துடன் இருந்தால் ஜாதகன் சுகவாசி என தெரிந்து கொள்ளலாமா அய்யா?

    நன்றி

    ReplyDelete
  11. /////Success said...
    வணக்கம்
    கேள்வி 50காண பதில், என் வாழ்வில் நடந்தது பற்றி கூற விரும்புகிறேன், மகரராசி, துலா லக்கினம். லக்கினதற்கு 11ம் வீடான சிம்மத்தில் ராகு, ராகு திசையில் சூப்பரா இருக்கும் என பெரும்பாலான ஜோதிடர்கள் கூறினார்கள், வெகுசிலர் நீங்கள் அடுத்து வரும் குரு திசையில் உங்களுக்கு மிக சாதகமாக இருக்கும் என்றனர் (மறைமுகமாக ராகு நல்லதிசையில்லை என்பதை உணர்த்த)
    நடந்து என்னவோ ராகு திசையில் எவ்வளவு அவமான பட முடியுமோ அவ்வளவு அவமானங்கள் இழப்புகள், இழப்புகள் இல்லாமல் வாழ்க்கை ஏது! தோழ்விகள் இல்லாத மனங்கள் ஏது!
    ஆனால் ஒன்றுமட்டும் நிதர்சனம், ராகுதிசை என்னைப் புடம் செய்தது மட்டும் 100% உண்மை. பதினொறாம் இடத்தின் பரல்கள் 37, இங்குதான் புரியவில்லை. ( குரு, சனி 11ல் ராகுவுடன்)///////

    அதுதான் பதிவிலேயே சொல்லியிருக்கிறேனே நண்பரே! 80% பேர்களுக்கு ராகுதசை கசப்பைத்தான் கொடுக்கும்! 11ஆம் இடத்தில் பரல்கள் அதிகம் இருந்தாலும், அங்கே கிரகயுத்தம் போன்ற அமைப்புகள் இருந்தாலும் அல்லது ஜாதகத்தின் வேறு அமைப்புக்களால், புத்திநாதர்களால் அப்படி நிகழ்வதுண்டு!

    ReplyDelete
  12. ////Sas said...
    //குட்டிச் சுக்கிரன் கூடிக்கெடுக்கும் என்பது சின்ன வயதில் - குழந்தைப் பருவத்தில் சுக்கிர தசை வருவதையும், அப்படி வரும் தசையால் அக்குழந்தை செல்லமாக வளர்ந்து, சுகவாசியாக இருந்து, படிப்பைக் கோட்டைவிடும் அபாயம் இருப்பதையும் மட்டுமே குறிக்கும். அக்குழந்தையால் பெற்றோர்களுக்கு எந்தவித ஆபத்தும் இல்லை. மேற்கொண்டு சொன்னால், அந்தக் குழந்தை வசதியாக வளரும் பொருட்டு அவர்களுக்கு நிறையப் பணம் வரும்.//
    குழந்தைகளின் ஜாதகம் 12 வயது வரை வேலை செயாதுஎன்றால், இது எப்படி சாத்தியமாகும் சார்?
    எதாவது விதிவிலக்கு உள்ளதா?////

    குழந்தைகளுக்கு அந்த வயது வரை பெற்றோர்களின் ஜாதகம்தான்! அதனால்தான் அக்குழந்தை செளகரியமாக வளர பெற்றோர்களுக்குப் பணம் வரும். அல்லது பணம் இருக்கும்!

    ReplyDelete
  13. ////Thanuja said...
    வணக்கம் சார்,
    Really superb questions, and especially the answers.
    Thanks
    Thanuja////

    நல்லது.நன்றி சகோதரி!

    ReplyDelete
  14. /////astroadhi said...
    அய்யா இனிய காலை வணக்கம்,
    4 மற்றும் 11 இடங்ளை பற்றிய விளக்கங்கள் தங்கள் நடையில் சிறப்பாக உள்ளது ,,,,,நான்காம் இடம் அதிக பரல்(30 அல்லது அதற்கு மேல்) மற்றும் அதிபதி நல்ல சுயவர்கப் பரல்கள் ,ஆட்சி அல்லது உச்ச பலத்துடன் இருந்தால் ஜாதகன் சுகவாசி என தெரிந்து கொள்ளலாமா அய்யா?
    நன்றி///

    ஆமாம். சுகவாசிதான்!

    ReplyDelete
  15. குட்டி சுக்கிரன் கூடி கெடுக்கும்...இது படிப்பை சில நேரம் பாதிக்காது...உண்மைதான்.

    சுக்கிர திசையில் பிறந்த என் மகள் புத்திகூர்மை அதிகம் உள்ளவள்.காரணம் அவள் லக்னாதிபதி சந்திரன் புதனுடன் சேர்ந்து தனுசு வீட்டில் குருவின் 5ம் பார்வை பெறுவதால்.ஆனால் தினமும் 2மணி நேரம் விளையாட ஆசைபடுகிறாள்.கரூரில் ஒரு அய்யங்கார் இனத்தை சேர்ந்த ஜோதிடர் சொன்னார்...அப்போது எனக்கு ஜென்ம சனி நடந்ததால் சுக்கிரன் என் மனைவியை பிறிக்காமல் விட்டு வைத்திருக்கிறான்.அது முடியும் நேரத்தில் நீங்கள் பிரிந்து விடுவீர்கள்.என்னை கடல் ஓரத்தில் தனித்து விட்டுவிடும் என்றும் கூறினார்.அதுபோல் என் மகளுக்கு சுக்கிர திசை ராகு புத்தி வரும் போது அவளுக்கு தம்பி பிறப்பான் என்றும் அதன்பின் வாழ்வில் நல்ல மாற்றம் வரும்,அதோடு நான் உடனே கரூரை விட்டு வடகிழக்கே செல்ல வேண்டும் முயற்சி செய்தால் வேலை கிடைக்கும்,4 கேந்திரங்களிலும் கிரகங்கள் இருப்பதாலும் 2க்குடைய சனி 9க்குடைய சூரியனுடன் பரிவர்த்தனை ஆகியிருப்பதாலும் வெளிநாட்டிலும் வேலை கிடைக்கலாம் எனவும் கூறினார்.அவ்வாறே முதலில் சென்னையில் வேலை கிடத்தது.சொற்ப சம்பளம்.மகன் பிறந்தான்.ஏழரை சனி முடியும் போது லக்கினத்தில் இருந்த 10ம் அதிபனின் திசையில் மனைவியை பிறிந்து தான்சானியாவின் கடலோரத்தில் வந்து தங்கி விட்டேன்.

    குட்டி சுக்கிரன் கூடி கெடுக்க மற்ற கிரகங்களும் அவனுக்கு துணை இருக்க வேண்டும்...இல்லாவிடில் எங்கு முடியுமோ அங்கு மட்டும் அவன் வேலையை செய்வான்...சரிதானே ஐயா...

    ReplyDelete
  16. //குட்டிச் சுக்கிரன் கூடிக்கெடுக்கும் என்பது சின்ன வயதில் - குழந்தைப் பருவத்தில் சுக்கிர தசை வருவதையும், அப்படி வரும் தசையால் அக்குழந்தை செல்லமாக வளர்ந்து, சுகவாசியாக இருந்து, படிப்பைக் கோட்டைவிடும் அபாயம் இருப்பதையும் மட்டுமே குறிக்கும். அக்குழந்தையால் பெற்றோர்களுக்கு எந்தவித ஆபத்தும் இல்லை. மேற்கொண்டு சொன்னால், அந்தக் குழந்தை வசதியாக வளரும் பொருட்டு அவர்களுக்கு நிறையப் பணம் வரும்.//
    குழந்தைகளின் ஜாதகம் 12 வயது வரை வேலை செயாதுஎன்றால், இது எப்படி சாத்தியமாகும் சார்?
    எதாவது விதிவிலக்கு உள்ளதா?////

    குழந்தைகளுக்கு அந்த வயது வரை பெற்றோர்களின் ஜாதகம்தான்! அதனால்தான் அக்குழந்தை செளகரியமாக வளர பெற்றோர்களுக்குப் பணம் வரும். அல்லது பணம் இருக்கும்!
    ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
    My Dear Sir!!!!!!!!

    Good morning

    Super!!!!!!!

    (very nice)

    ReplyDelete
  17. அன்பு அய்யா அவர்களே தங்களின் பதில்களுக்கு மிக்க நன்றி.
    அன்புடன் ஜீவா

    ReplyDelete
  18. Thanks sir, as usual ur answers are excellent

    ReplyDelete
  19. ஐயா வணக்கம்

    தமிழ் - ஆங்கில தேதிகளில் குழப்பம் வருகையில் உதவுவதற்கு panchangam.com என்ற வலைத்தளம் உள்ளது.

    இன்றைய பாடங்களில் உள்ள கேள்விகளில் என் ஜாதக அமைப்பு உள்ளது

    1. குட்டி சுக்கிரன் - எனக்கு மூல நட்சத்திரம் - 3 வருடத்தில் தொடங்கி 23 வயது வரை சுக்கிரன் திசை. என் மனைவிக்கும் மூல நட்சத்திரம் அவளுக்கும் குட்டி சுக்கிரன், என் மகனுக்கு அஸ்வனி நட்சத்திரம் அவனுக்கும் குட்டி சுக்கிரன். ஆனால் நானும் என் மனைவியும் படித்தோம், ஆனால் படிப்பை முடிக்கவில்லை. எங்கள் மகன் தற்போது நன்றாக படித்து கொண்டிருக்கிறான். ஜாலியாக படித்துகொண்டிருக்கிறான் ( lawrence, lovedale - loyola, chennai ). என்ன, ஒரே ஒரு வருத்தம் அவன் எங்களுடன் இல்லாமல் விடுதியிலேயே தங்கி படித்து கொண்டிருக்கிறான். கிரக அமைப்புகள் அவன் படிப்பை கெடுக்காமல் பிரிவை கொடுத்து விட்டது போலும். அடுத்த வருடம் ஒன்று சேர்ந்து விடுவோம்.

    2. 11 -ஆம் அதிபதி 4 -ல் அதாவது கன்னி லக்னம் - 11 ஆம் அதிபதி சந்திரன் 4 -ம வீட்டில் ( தனுசு) குரு மற்றும் சனியுடன். என் 16 வயதிலிருந்து வாடகை வருமானம் வருகிறது.

    3. ராகு திசை - தற்போது நடக்கிறது.

    இன்றைய பாடத்தினால் எனக்கு நல்ல தெளிவு கிடைத்துள்ளது. மிக்க நன்றி

    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  20. சார் ந‌ல‌மா? ரொம்ப‌ நாள் க‌ழித்து வ‌ந்தால் முக‌ப்பில் உள்ள‌ ப‌ட‌மே அட்ட‌காச‌மாக‌ வ‌ர‌வேற்கிற‌து அதோடு கேள்விக‌ளுக்கு ப‌தில் விள‌க்க‌ம் நேர்த்தியாக‌ இருக்கு.என‌க்கு புரியாவிட்டாலும் சொல்லும் முறையில் தெளிவு தெரிகிற‌து.மாண‌வ‌ர்க‌ள் ப‌ய‌னடைய‌ட்டும்.

    ReplyDelete
  21. வணக்கம் அய்யா.
    இன்றைய கேள்வி பதில்
    பகுதியில் மிக விரிவான
    விளக்கங்களுடன் பொறுமையாக‌
    பதில் கொடுத்தமைக்கு
    மாணாக்கர்கள் அனைவர் சார்பிலும்
    நன்றி அய்யா.

    ReplyDelete
  22. ராகு தசை பற்றிய விளக்கம் அருமை! பொக்கிஷம் போல் காப்பாற்ற ஏற்றது.
    நேற்று இரவு விஜய் டி வியில் நீயா நானா நிகழ்ச்சியில் திரு.பழ.கருப்பையா நடுவர் போல் கலந்து கொண்டார்கள்.தாத்தா பெயர் வைப்பது வேண்டுமா
    வேண்டாமா என்பது போல விவாதம். அமாவாசை, மாடன்,போன்ற பெயர்களை வைத்துக் கொண்டு வேலை பார்க்க முடியவில்லை என்று இளைஞர்கள்
    சுய பச்சாதபத்தில் பேசினார்கள்."சொரிமுத்து என்பதெல்லாம் ஒரு பெயரா?" என்று கேட்டார்கள்.கருப்பன்.கருப்பய்யா,கருத்தம்மா, விருமாண்டி போன்ற்
    பெயர்கள் அலசப்பட்டன.பழ. கருப்பையா சொன்னதில் 3 கருத்துக்கள் இளைய சமுதாயம் சிந்திக்க வேண்டும்."1.தன் பெயரை தாங்கி நிற்பதால் பெயரன் அல்லது பேரன்.தாத்தா பெயர் வைக்காவிட்டால் பேரனை, உறவு சொல்லி எப்படி பேராண்டி என்று அழைக்க முடியும்? தாத்தாவின் வெறும் பெயரைமட்டுமல்ல, அவர் சம்பாதித்துள்ள குடிப்பெயர், நற்பெயரையும் பெயரன் காப்பாற்ற வேண்டும்.2.தாத்தா பெயர் கசக்கும் என்றால் அவர்
    கொடுக்கும் சொத்துமட்டும் இனிக்குமா? 3.பெயர்களின் உண்மையான பொருள் தெரிந்தால் சுயபச்சாதாபம் ஏற்படாது.உதாரணமாக "சொரிமுத்து"
    என்ற பெயரை சொறியுடன் சம்பத்தப்படுத்திக் கலங்குகிறார்கள். ' ர', 'ற' இடையிலான வேற்றுமை தெரியாமல் வந்த குழப்பம். சொரிமுத்து என்றால்
    முத்தை வாரிக்கொட்டுதல் என்று பொருள். பூச்சொரிதல் என்பது போல. சொறி சிரங்குடன் தொடர்பு படுத்தக்கூடாது! நகரத்தாரின் தமிழறிவு வாழ்க!"
    வரும் சனி அல்லது இரவு விஜய் டிவியில் முஸ்லிம் மகளிரின் பர்தா போடும் நடைமுறை விவாதிக்கப்படுகிறது.அனைவரும் காணத்தவறாதீர்கள்.
    (நிகழ்ச்சியை நடத்தத் தடை ஏதும் வராமல் அளவற்ற அருளாளரான அல்லா காப்பாற்ற வேண்டும்) ����

    ReplyDelete
  23. //////Arul said...
    குட்டி சுக்கிரன் கூடி கெடுக்கும்...இது படிப்பை சில நேரம் பாதிக்காது...உண்மைதான்.
    சுக்கிர திசையில் பிறந்த என் மகள் புத்திகூர்மை அதிகம் உள்ளவள்.காரணம் அவள் லக்னாதிபதி சந்திரன் புதனுடன் சேர்ந்து தனுசு வீட்டில் குருவின் 5ம் பார்வை பெறுவதால்.ஆனால் தினமும் 2மணி நேரம் விளையாட
    ஆசைபடுகிறாள்.கரூரில் ஒரு அய்யங்கார் இனத்தை சேர்ந்த ஜோதிடர் சொன்னார்...அப்போது எனக்கு ஜென்ம சனி நடந்ததால் சுக்கிரன் என் மனைவியை பிரிக்காமல் விட்டு வைத்திருக்கிறான்.அது முடியும் நேரத்தில் நீங்கள் பிரிந்து விடுவீர்கள்.என்னை கடல் ஓரத்தில் தனித்து விட்டுவிடும் என்றும் கூறினார்.அதுபோல் என்
    மகளுக்கு சுக்கிர திசை ராகு புத்தி வரும் போது அவளுக்கு தம்பி பிறப்பான் என்றும் அதன்பின் வாழ்வில் நல்ல மாற்றம் வரும்,அதோடு நான் உடனே கரூரை விட்டு வடகிழக்கே செல்ல வேண்டும் முயற்சி செய்தால் வேலை
    கிடைக்கும்,4 கேந்திரங்களிலும் கிரகங்கள் இருப்பதாலும் 2க்குடைய சனி 9க்குடைய சூரியனுடன்
    பரிவர்த்தனை ஆகியிருப்பதாலும் வெளிநாட்டிலும் வேலை கிடைக்கலாம் எனவும் கூறினார்.அவ்வாறே முதலில்
    சென்னையில் வேலை கிடத்தது.சொற்ப சம்பளம்.மகன் பிறந்தான்.ஏழரை சனி முடியும் போது லக்கினத்தில் இருந்த 10ம் அதிபனின் திசையில் மனைவியை பிரிந்து தான்சானியாவின் கடலோரத்தில் வந்து தங்கி
    விட்டேன். குட்டி சுக்கிரன் கூடி கெடுக்க மற்ற கிரகங்களும் அவனுக்கு துணை இருக்க வேண்டும்...இல்லாவிடில்
    எங்கு முடியுமோ அங்கு மட்டும் அவன் வேலையை செய்வான்...சரிதானே ஐயா...//////

    கூடி கெடுக்க மற்ற கிரகங்களும் அவனுக்கு துணை இருக்க வேண்டும் என்பது சரியல்ல! மற்ற நல்ல கிரகங்கள் விலகியிருக்கும் நிலை என்று வைத்துக்கொள்ளுங்கள்!

    ReplyDelete
  24. //////kannan said...
    //குட்டிச் சுக்கிரன் கூடிக்கெடுக்கும் என்பது சின்ன வயதில் - குழந்தைப் பருவத்தில் சுக்கிர தசை வருவதையும், அப்படி வரும் தசையால் அக்குழந்தை செல்லமாக வளர்ந்து, சுகவாசியாக இருந்து, படிப்பைக் கோட்டைவிடும் அபாயம் இருப்பதையும் மட்டுமே குறிக்கும். அக்குழந்தையால் பெற்றோர்களுக்கு எந்தவித ஆபத்தும் இல்லை. மேற்கொண்டு சொன்னால், அந்தக் குழந்தை வசதியாக வளரும் பொருட்டு அவர்களுக்கு நிறையப் பணம் வரும்.// குழந்தைகளின் ஜாதகம் 12 வயது வரை வேலை செயாதுஎன்றால், இது எப்படி சாத்தியமாகும் சார்?
    எதாவது விதிவிலக்கு உள்ளதா?////
    /////குழந்தைகளுக்கு அந்த வயது வரை பெற்றோர்களின் ஜாதகம்தான்! அதனால்தான் அக்குழந்தைசெளகரியமாக வளர பெற்றோர்களுக்குப் பணம் வரும். அல்லது பணம் இருக்கும்!//////
    My Dear Sir!!!!!!!!
    Good morning
    Super!!!!!!!
    (very nice)/////

    நல்லது.நன்றி!

    ReplyDelete
  25. ///////ஜீவா said...
    அன்பு அய்யா அவர்களே தங்களின் பதில்களுக்கு மிக்க நன்றி.
    அன்புடன் ஜீவா/////

    உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி!

    ReplyDelete
  26. /////Ram said...
    Thanks sir, as usual ur answers are excellent/////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி!

    ReplyDelete
  27. /////T K Arumugam said...
    ஐயா வணக்கம்
    தமிழ் - ஆங்கில தேதிகளில் குழப்பம் வருகையில் உதவுவதற்கு panchangam.com என்ற வலைத்தளம்
    உள்ளது. இன்றைய பாடங்களில் உள்ள கேள்விகளில் என் ஜாதக அமைப்பு உள்ளது/////

    தகவலுக்கு நன்றி நண்பரே!
    >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
    1. குட்டி சுக்கிரன் - எனக்கு மூல நட்சத்திரம் - 3 வருடத்தில் தொடங்கி 23 வயது வரை சுக்கிரன் திசை. என் மனைவிக்கும் மூல நட்சத்திரம் அவளுக்கும் குட்டி சுக்கிரன், என் மகனுக்கு அஸ்வனி நட்சத்திரம் அவனுக்கும் குட்டி சுக்கிரன். ஆனால் நானும் என் மனைவியும் படித்தோம், ஆனால் படிப்பை முடிக்கவில்லை.எங்கள் மகன் தற்போது நன்றாக படித்து கொண்டிருக்கிறான். ஜாலியாக படித்துகொண்டிருக்கிறான் ( lawrence, lovedale - loyola, chennai ). என்ன, ஒரே ஒரு வருத்தம் அவன் எங்களுடன் இல்லாமல் விடுதியிலேயே தங்கி
    படித்து கொண்டிருக்கிறான். கிரக அமைப்புகள் அவன் படிப்பை கெடுக்காமல் பிரிவை கொடுத்து விட்டது போலும். அடுத்த வருடம் ஒன்று சேர்ந்து விடுவோம்.
    2. 11 -ஆம் அதிபதி 4 -ல் அதாவது கன்னி லக்னம் - 11 ஆம் அதிபதி சந்திரன் 4 -ம வீட்டில் ( தனுசு) குரு மற்றும் சனியுடன். என் 16 வயதிலிருந்து வாடகை வருமானம் வருகிறது.
    3. ராகு திசை - தற்போது நடக்கிறது. இன்றைய பாடத்தினால் எனக்கு நல்ல தெளிவு கிடைத்துள்ளது. மிக்க நன்றி
    வாழ்த்துக்கள்////

    உங்களின் பகிர்விற்கு நன்றி!வாழ்க வளமுடன்: வளர்க நலமுடன்!

    ReplyDelete
  28. ////வடுவூர் குமார் said...
    சார் ந‌ல‌மா? ரொம்ப‌ நாள் க‌ழித்து வ‌ந்தால் முக‌ப்பில் உள்ள‌ ப‌ட‌மே அட்ட‌காச‌மாக‌ வ‌ர‌வேற்கிற‌து அதோடு
    கேள்விக‌ளுக்கு ப‌தில் விள‌க்க‌ம் நேர்த்தியாக‌ இருக்கு.என‌க்கு புரியாவிட்டாலும் சொல்லும் முறையில் தெளிவு
    தெரிகிற‌து.மாண‌வ‌ர்க‌ள் ப‌ய‌னடைய‌ட்டும்./////

    நல்லது. நன்றி வடுவூராரே!

    ReplyDelete
  29. /////thirunarayanan said...
    வணக்கம் அய்யா. இன்றைய கேள்வி பதில் பகுதியில் மிக விரிவான விளக்கங்களுடன் பொறுமையாக‌
    பதில் கொடுத்தமைக்கு மாணாக்கர்கள் அனைவர் சார்பிலும்
    நன்றி அய்யா.////

    வாத்தியாரின் சார்பில் உங்களுக்கும் நன்றி!

    ReplyDelete
  30. எனக்கு ராகு தசை சிறு வயதிலேயே நடந்து முடிந்து விட்டது. (1 வயதில் ஆரம்பித்து 19 வயதில் முடிந்து விட்டது.) அதனால் அதன் பாதிப்பு சரியாக தெரியவில்லை. குரு தசை ராகு புத்தி மிக்க அதிர்ஷ்டகரமாக அமைந்தது என்று மட்டும் இங்கே சொல்லிக் கொள்கிறேன். பொதுவாக ராகு கேதுக்கள் கேந்திர கோணங்களில் இருந்தால் அவர்களது தசை நன்மை செய்யும் என்றும் ஆனால் தான் நின்ற ஸ்தான பலனைப் பாழ்படுத்தி விடும் என்று படித்திருக்கிறேன். இது பொதுவாக சொல்லப் பட்டது. அவரவர் அனுபவத்தில் பார்த்து (அல்லது பட்டு) தெரிந்து கொள்ள வேண்டியதுதான்.

    ReplyDelete
  31. Good evening sir,
    Thanks for ur today lesson sir, all the answers are very very nice. Happy journey to u.
    sundari

    ReplyDelete
  32. /////kmr.krishnan said...
    ராகு தசை பற்றிய விளக்கம் அருமை! பொக்கிஷம் போல் காப்பாற்ற ஏற்றது.////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி!
    >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
    /////நேற்று இரவு விஜய் டி வியில் நீயா நானா நிகழ்ச்சியில் திரு.பழ.கருப்பையா நடுவர் போல் கலந்து கொண்டார்கள்.தாத்தா பெயர் வைப்பது வேண்டுமா
    வேண்டாமா என்பது போல விவாதம். அமாவாசை, மாடன்,போன்ற பெயர்களை வைத்துக் கொண்டு வேலை பார்க்க முடியவில்லை என்று இளைஞர்கள்
    சுய பச்சாதபத்தில் பேசினார்கள்."சொரிமுத்து என்பதெல்லாம் ஒரு பெயரா?" என்று கேட்டார்கள்.கருப்பன்.கருப்பய்யா,கருத்தம்மா, விருமாண்டி போன்ற்
    பெயர்கள் அலசப்பட்டன.பழ. கருப்பையா சொன்னதில் 3 கருத்துக்கள் இளைய சமுதாயம் சிந்திக்க வேண்டும்."1.தன் பெயரை தாங்கி நிற்பதால் பெயரன் அல்லது பேரன்.தாத்தா பெயர் வைக்காவிட்டால் பேரனை, உறவு சொல்லி எப்படி பேராண்டி என்று அழைக்க முடியும்? தாத்தாவின் வெறும் பெயரைமட்டுமல்ல, அவர் சம்பாதித்துள்ள குடிப்பெயர், நற்பெயரையும் பெயரன் காப்பாற்ற வேண்டும்.2.தாத்தா பெயர் கசக்கும் என்றால் அவர் கொடுக்கும் சொத்துமட்டும் இனிக்குமா? 3.பெயர்களின் உண்மையான பொருள் தெரிந்தால் சுயபச்சாதாபம் ஏற்படாது.உதாரணமாக "சொரிமுத்து" என்ற பெயரை சொறியுடன் சம்பத்தப்படுத்திக் கலங்குகிறார்கள். ' ர', 'ற' இடையிலான வேற்றுமை தெரியாமல் வந்த குழப்பம். சொரிமுத்து என்றால்
    முத்தை வாரிக்கொட்டுதல் என்று பொருள். பூச்சொரிதல் என்பது போல. சொறி சிரங்குடன் தொடர்பு படுத்தக்கூடாது! நகரத்தாரின் தமிழறிவு வாழ்க!" வரும் சனி அல்லது இரவு விஜய் டிவியில் முஸ்லிம் மகளிரின் பர்தா போடும் நடைமுறை விவாதிக்கப்படுகிறது.அனைவரும் காணத்தவறாதீர்கள்.
    (நிகழ்ச்சியை நடத்தத் தடை ஏதும் வராமல் அளவற்ற அருளாளரான அல்லா காப்பாற்ற வேண்டும்)//////

    கிராமங்களில் பூச்சொரியும் விழா என்று நடக்கும். சொரிதல் என்றால் பொழிதல் என்று பொருள். மேகங்கள் மழையைச் சொரிந்தன. பூச் சொரிந்து வரவேற்றனர். அவர் அன்பைச் சொரிவார். இப்ப்டிப் பொருள் கொள்ள வேண்டும். ர, ற குழப்பம் உள்ளது. அதானால் இளைஞர்களிடையே தவறாகச் சென்றடைகிறது. தகவலுக்கு நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  33. ////ananth said...
    எனக்கு ராகு தசை சிறு வயதிலேயே நடந்து முடிந்து விட்டது. (1 வயதில் ஆரம்பித்து 19 வயதில் முடிந்து விட்டது.) அதனால் அதன் பாதிப்பு சரியாக தெரியவில்லை. குரு தசை ராகு புத்தி மிக்க அதிர்ஷ்டகரமாக அமைந்தது என்று மட்டும் இங்கே சொல்லிக் கொள்கிறேன். பொதுவாக ராகு கேதுக்கள் கேந்திர கோணங்களில் இருந்தால் அவர்களது தசை நன்மை செய்யும் என்றும் ஆனால் தான் நின்ற ஸ்தான பலனைப் பாழ்படுத்தி விடும் என்று படித்திருக்கிறேன். இது பொதுவாக சொல்லப் பட்டது. அவரவர் அனுபவத்தில் பார்த்து (அல்லது பட்டு) தெரிந்து கொள்ள வேண்டியதுதான்./////

    நான் திருவோண நட்சத்திரக்காரன். எனக்கும் சின்ன வயதில் ராகு தசை வந்தது. அவதிப்பட்டிருக்கிறேன். (10 - 30 வயது). அனுபவப்பட்டிருக்கிறேன். அனுபவங்களையும் சேர்த்துத்தான் இங்கே எழுதுகிறேன். நன்றி ஆனந்த்

    ReplyDelete
  34. ////sundari said...
    Good evening sir,
    Thanks for ur today lesson sir, all the answers are very very nice. Happy journey to u.
    sundari////

    நல்லது.நன்றி சகோதரி!

    ReplyDelete
  35. வ‌ணக்கம் அய்யா

    நான் தனுசு லக்கினம், என்னுடைய இராசி கட்டத்தில் 2 மற்றும் 3ம் அதிபதி சனியும், 6,8ம் அதிபதி சுக்கிரனும் சேர்ந்து 12ம் இடம் ஆன விரயஸ்தானத்தில் இருக்கின்றன. மேலும் 11ம் இடமான லாபஸ்தானமன 11ல் சூரியன் நீசமடைந்து புதனுடன் சேர்ந்து உள்ளது. சனி, சுக்கிரன், ஆகியவற்றின் சுயவர்க பரல் தலா 3. சூரியன், புதன் ஆகியவற்றின் சுயவர்க பரல் தலா 4. இப்போது எனக்கு சனி திசை, சனி புத்தி நடக்கிறது. இது எந்த அளவுக்கு மோசமான பலன்களை தரும்..

    உங்களது பதிலை எதிர்நோக்கும் மாணவி,,,

    ReplyDelete
  36. //////sasi said...
    வ‌ணக்கம் அய்யா
    நான் தனுசு லக்கினம், என்னுடைய இராசி கட்டத்தில் 2 மற்றும் 3ம் அதிபதி சனியும், 6,8ம் அதிபதி சுக்கிரனும் சேர்ந்து 12ம் இடம் ஆன விரயஸ்தானத்தில் இருக்கின்றன. மேலும் 11ம் இடமான லாபஸ்தானமன 11ல் சூரியன் நீசமடைந்து புதனுடன் சேர்ந்து உள்ளது. சனி, சுக்கிரன், ஆகியவற்றின் சுயவர்க பரல் தலா 3.
    சூரியன், புதன் ஆகியவற்றின் சுயவர்க பரல் தலா 4. இப்போது எனக்கு சனி திசை, சனி புத்தி நடக்கிறது. இது எந்த அளவுக்கு மோசமான பலன்களை தரும்..
    உங்களது பதிலை எதிர்நோக்கும் மாணவி,,,////

    சொந்த ஜாதகங்களை வைத்து அனேகம் பேர்கள் கேள்விகள் கேட்டு மின்னஞ்சல் கொடுத்திருக்கிறார்கள்.
    முழு ஜாதகமும் அஷ்டகவர்க்கத்துடன் இல்லாமல்/பார்க்காமல் பலன் சொல்வது கடினம். முழு ஜாதகத்தை யும் அலசிப் பலன்சொல்வதற்கு தற்சமயம் நேரமில்லை. இரண்டு மாதங்கள் கழித்து என்னுடைய ஜோதிடப் புத்தக வேலைகள் முடிவுற்ற பிறகு, அதற்கென்று நேரம் ஒதுக்கலாம் என்றிருக்கிறேன். அதுபற்றிய முறையான அறிவிப்பு பின்னால் வரும். பொறுத்திருங்கள் சகோதரி!

    ReplyDelete
  37. ////எனக்கு ராகு தசை சிறு வயதிலேயே நடந்து முடிந்து விட்டது. (1 வயதில் ஆரம்பித்து 19 வயதில் முடிந்து விட்டது.) அதனால் அதன் பாதிப்பு சரியாக தெரியவில்லை. குரு தசை ராகு புத்தி மிக்க அதிர்ஷ்டகரமாக அமைந்தது என்று மட்டும் இங்கே சொல்லிக் கொள்கிறேன். பொதுவாக ராகு கேதுக்கள் கேந்திர கோணங்களில் இருந்தால் அவர்களது தசை நன்மை செய்யும் என்றும் ஆனால் தான் நின்ற ஸ்தான பலனைப் பாழ்படுத்தி விடும் என்று படித்திருக்கிறேன். இது பொதுவாக சொல்லப் பட்டது. அவரவர் அனுபவத்தில் பார்த்து (அல்லது பட்டு) தெரிந்து கொள்ள வேண்டியதுதான்.///////

    வாங்க ஆனந்த் சார்! நன்றாக கூறியுள்ளீர்கள்.

    எனக்கும் உங்களை போலவே ராகு தசை குழந்தை பருவத்திலே போய்விட்டது. கடந்த ஏழு நாட்களுக்கு முன் தான் குரு தசையில் கேது புத்தி முடிந்துள்ளது. கேது முடித்துவிட்டு போன காரியங்கல் ஏராளம்.

    1. சொந்த தொழிலை முடக்கினார்.
    2. அதன்பிறகு புது வேலை குடுத்து பின் அதையும் பறித்துக்கொண்டார்.
    3. காதலிக்கு மரணத்தை கொடுத்தார்.
    4. சொந்தங்களிடையே அவமானம்.

    இன்னும் பல. இத்தனைக்கும் கேது 4ம் இடத்தில். பத்தில் ஆட்சி பெற்ற குரு, உச்சம் பெற்ற ஐந்தாம் அதிபதி சுக்கிரன், நீசம் பெற்ற நான்காமதிபதி புதன் இவர்களின் பார்வை இருந்தும் கேது வேலையை காட்டி விட்டார்.

    இதன்மூலம் எந்த பொருளின் மீதும் பேராசை படாதே என ஞானம் கொடுத்துவிட்டார். அதோடு ஐந்தாம் அதிபதியின் தொடர்பு பெற்றதால் ஜோதிட கல்வியையும் தொடக்கி வைத்துவிட்டார்.

    ஹி ஹி ஹி. அடுத்து சுக்கிர திசை ஆரம்பிக்கிறது. சுக்கிரன் என்ன செய்ய போகிறார் என பார்க்கவேண்டும்.

    ReplyDelete
  38. Email no: 49 ku neengal kuriya amaipukal en jathagathil irukirathu..

    Simha lagnam..11am athipathi bhudhan 4il (Suriyan + Kethu udan).10am athipathi Sukiran 5am idathil...Sevvai Ucham 6 Suya Varga Paral udan...2,9,11 anaithu idathin paral kuda 28 ku mel..

    Anal en peyaril 1 cent nilam kuda illaiyey..Sevvai 6-il marainthu vitathanala?

    ReplyDelete
  39. தசா நாதனும், புத்திநாதனும் (அவற்றிற்கு உரிய கிரகங்கள்) ஜாதகத்தில் ஒருவருக்கொருவர், 6/8 பொஸிசனில் (நிலைமையில்) அல்லது 1/12 பொஸிசனில் (நிலைமையில்) இருப்பது நன்மையைத் தராது. இது அத்தனை தசா/புத்திகளுக்கும் பொருந்தும்!

    How do you get 1/12 position?

    ReplyDelete
  40. கிருபானந்த வாரியார் கேள்விகளுக்கு அளித்த பதில்கள்.
    1.வணங்கத் தக்கவை எவை?
    உறவின் முறை,புகழ்,தனம்,செயல் இவை வணங்கத் தக்கவை இவ‌ற்றுள் முன்சொல்லப்பட்டவையைக்காட்டிலும் பின்சொல்லப்பட்டவை உயர்ந்ததாகும்.

    2.ஊருக்கு எது தேவையில்லை?
    பெருமையுள்ளவனுக்குக் கவசமும், கோபமுள்ளவனுக்குப் பகைவனும்,நல்ல நண்பனைப் பெற்றவனுக்கு ம்ருந்தும், தீயவர் நேசமுள்ளவணுக்குப் பாம்பும்,
    படிப்பாளிகளுக்குப் பணமும் வெட்கமுள்ளோருக்கு ராஜ்யமும் தேவையில்லை.

    3. யாரிடத்தில் உலகம் நிற்கும்?
    பணியாளர்களிடத்தில் கருணையும்,தீயவர்களிடத்தில் துணிச்சலும்,குருவிடத்தில்
    பொறுமையும் கொணட அறிஞனிடத்தில் உலகம் நிற்கும்.

    4.நல்லோர் தொடர்பால் ஏற்பாடும் நன்மை என்ன?
    நல்லோர் தொடர்பு புத்திக் குழப்பத்தைப் போக்கும், வாக்கில் உண்மையை உண்டாக்கும்,கவுரவத்தைக் கொடுக்கும்,பாவங்களை போக்கும்,மனதைச் சுத்தமாக்கும்,கீர்த்தியை எல்லாத்திசைகளிலும் பரவச் செய்யும்.

    5. சொல்ல வேண்டியது எது?
    சத்தியமாயும்,இஷ்ட‌மாயும் உள்ள‌தைச் சொல்லவேண்டும். பத்திரமாவது சுபமாகையால் ஒருவன் இச்சிக்கும்போது பத்திரம் பத்திரம் என்று சொல்லவேண்டும்.பிரியமில்லாததைச் சொல்லக் கூடாது, பிரியமானதனாலும்
    பொய் சொல்ல கூடாது.
    6. உண்மை உயர்வு த்ரும் என்பதற்கு உதாரணம் சொல்ல முடியுமா?
    இடும்பி தான் ஒரு அரக்கி என்பதை ம்றைக்காமல் ஒப்பு கொண்ட் பண்பால் அவளது ஆசை நிறைவேறியது ஆனால் சூர்ப்பநகை தன்னை அருங்குல மகளாகக் காட்ட முயன்றதால் மூக்கறுபட்டு மூளியாக நேர்ந்தது.

    7.உறுதி வாக்கியம் ஒன்று சொல்லுங்கள்.
    பாரிலுள்ளோர் பசியைப் போக்கப் பருவம் அறிந்து பெய்கின்ற மழையின் சிறுதுளி,தன்போக்கில் பாடிக் கொண்டிருக்கும் வானம் பாடி(சாதகப் பற‌வை)க்
    கும் உதவியது போல யார் யாருக்கு எது எது என‌ விதிக்கப்பட்டுள்ளதோ
    அது தடையில்லாமல் அவர்களை அடையும் அதனால் நம்முடைய தேவைக்கு
    மற்றவருடைய பிரயத்தனத்தை எதிர்பார்க்க வேண்டாம். நல்ல உள்ளத்துக்கு தெய்வம் நாளும் தணை செய்யும்.

    8.மூவுலகையும் வெல்லும் தீரன் யார்?
    விஷம் போன்ற கோபத்தீயினில் குளிக்காது நின்றவன் எவனோ,ஆசை மிகுந்த
    இவ்வுலகத்தில் பாசம்றுத்து வாழும் பண்பினன் எவனோ அவனே மூவுலகையும் வெல்லும் தீரனாவான்.

    9.ஏற்பது இகழ்ச்சி என்று எதனால் கூறுகின்றீர்கள்?
    பின் என்ன? நினைத்த கனிகள் வனத்தில் மரங்களில் இருக்கின்றன. இளந்தளிர்களெல்லாம் படுக்கை போல உதவுகின்றன. புண்ணீய நதிகளோ தாகம் தீர்க்குந் தண்ணீரைத் தருகின்றன. இத்தகைய இயற்கையைப்பெற்று சுகமாடையாமல் செல்வந்தர்களின் வாயிலிற் சென்று காவல்காரனைப் போல காத்திருந்து அவர் தருவதைப் பெறுவது இகழ்ச்சிதானே?

    10.விதி வலிதா?
    சந்தேகமன்ன? பாம்புகள்,பறவைகள்,யானைகள் இவைகள் கட்டுப்படுதலையும்,
    சந்திர சூரியர் ராகு கேதுவால் பீடிக்கப்படுவதையும்,புத்திமான்களுடைய வறுமையை பார்க்கும் பொழுது விதி வலிது என்பதும் மற்ற பலங்கள் எத்தனையாயிருந்தாலும் அவை நிஷ்பலமே எனபது விளங்கும்.

    11.சத்புருஷர்களைப் பற்றி.
    சூரியன் போல சத்புருஷர்கள் மற்ற்வர்களுக்கு இத்த்தை உணடாக்கவே தாங்கள்
    பொருளைச் சொலவும் அணுபோகமும் செய்கிறார்கள்.

    ReplyDelete
  41. உள்ளேன் ஐயா
    சேர்மராஜ்

    ReplyDelete
  42. வணக்கம் அய்யா

    மூன்றாம் அதிபதி சனியும், 6ம் அதிபதி சுக்கிரனும் சேர்ந்து 12ம் இடமான விரையஸ்தானத்தில் இருந்தால் அது விபரித ராஜயோகத்தில் சேருமா?

    ReplyDelete
  43. ////karmegaraja said...
    ////எனக்கு ராகு தசை சிறு வயதிலேயே நடந்து முடிந்து விட்டது. (1 வயதில் ஆரம்பித்து 19 வயதில் முடிந்து விட்டது.) அதனால் அதன் பாதிப்பு சரியாக தெரியவில்லை. குரு தசை ராகு புத்தி மிக்க அதிர்ஷ்டகரமாக அமைந்தது என்று மட்டும் இங்கே சொல்லிக் கொள்கிறேன். பொதுவாக ராகு கேதுக்கள் கேந்திர கோணங்களில் இருந்தால் அவர்களது தசை நன்மை செய்யும் என்றும் ஆனால் தான் நின்ற ஸ்தான பலனைப் பாழ்படுத்தி விடும் என்று படித்திருக்கிறேன். இது பொதுவாக சொல்லப் பட்டது. அவரவர் அனுபவத்தில் பார்த்து (அல்லது பட்டு) தெரிந்து கொள்ள வேண்டியதுதான்.///////
    வாங்க ஆனந்த் சார்! நன்றாக கூறியுள்ளீர்கள்.
    எனக்கும் உங்களை போலவே ராகு தசை குழந்தை பருவத்திலே போய்விட்டது. கடந்த ஏழு நாட்களுக்கு முன் தான் குரு தசையில் கேது புத்தி முடிந்துள்ளது. கேது முடித்துவிட்டு போன காரியங்கள் ஏராளம்.
    1. சொந்த தொழிலை முடக்கினார்.
    2. அதன்பிறகு புது வேலை குடுத்து பின் அதையும் பறித்துக்கொண்டார்.
    3. காதலிக்கு மரணத்தை கொடுத்தார்.
    4. சொந்தங்களிடையே அவமானம்.
    இன்னும் பல. இத்தனைக்கும் கேது 4ம் இடத்தில். பத்தில் ஆட்சி பெற்ற குரு, உச்சம் பெற்ற ஐந்தாம் அதிபதி சுக்கிரன், நீசம் பெற்ற நான்காமதிபதி புதன் இவர்களின் பார்வை இருந்தும் கேது வேலையை காட்டி விட்டார். இதன்மூலம் எந்த பொருளின் மீதும் பேராசை படாதே என ஞானம் கொடுத்துவிட்டார். அதோடு ஐந்தாம் அதிபதியின் தொடர்பு பெற்றதால் ஜோதிட கல்வியையும் தொடக்கி வைத்துவிட்டார்.
    ஹி ஹி ஹி. அடுத்து சுக்கிர திசை ஆரம்பிக்கிறது. சுக்கிரன் என்ன செய்ய போகிறார் என பார்க்கவேண்டும்.////

    கார்மேகமாகப் பொழிவார்.ராஜாவாக அண்டாக்களில் பிடித்துவைத்துக் கொள்ளுங்கள்!

    ReplyDelete
  44. /////Strider said...
    Email no: 49 ku neengal kuriya amaipukal en jathagathil irukirathu..
    Simha lagnam..11am athipathi bhudhan 4il (Suriyan + Kethu udan).10am athipathi Sukiran 5am idathil...Sevvai Ucham 6 Suya Varga Paral udan...2,9,11 anaithu idathin paral kuda 28 ku mel..
    Anal en peyaril 1 cent nilam kuda illaiyey..Sevvai 6-il marainthu vitathanala?/////

    உங்களுக்கென்ன 80 வயதா ஆகிறது? அதற்குள் பொறுமை இழந்துவிட்டீர்களே? பின்னால் வாங்குவீர்கள். பொறுமையாக இருங்கள்!

    ReplyDelete
  45. /////Sas said...
    தசா நாதனும், புத்திநாதனும் (அவற்றிற்கு உரிய கிரகங்கள்) ஜாதகத்தில் ஒருவருக்கொருவர், 6/8 பொஸிசனில் (நிலைமையில்) அல்லது 1/12 பொஸிசனில் (நிலைமையில்) இருப்பது நன்மையைத் தராது. இது அத்தனை தசா/புத்திகளுக்கும் பொருந்தும்!
    How do you get 1/12 position?/////

    தசா நாதன் வீட்டிற்குப் பின்னால் (பின் வீட்டில்) புத்திநாதன் நிற்கும் நிலைமை!
    உதாரணத்திற்கு குரு தசை புதன் புத்தி என்று வைத்துக்கொள்ளுங்கள். குரு சிம்மத்தில் இருக்கிறார் என்றும் புதன் கடகத்தில் இருக்கிறார் என்றும் வைத்துக்கொள்ளுங்கள். அதுதான் 1/12 நிலைமை. புத்திநாதனுக்குப் பின் வீட்டில் தசாநாதன் இருந்தாலும் அதுதான் நிலைமை!

    ReplyDelete
  46. //////sundari said...
    கிருபானந்த வாரியார் கேள்விகளுக்கு அளித்த பதில்கள்.
    1.வணங்கத் தக்கவை எவை?
    உறவின் முறை,புகழ்,தனம்,செயல் இவை வணங்கத் தக்கவை இவ‌ற்றுள் முன்சொல்லப்பட்டவையைக்காட்டிலும் பின்சொல்லப்பட்டவை உயர்ந்ததாகும்...................................
    --------------------------- 11.சத்புருஷர்களைப் பற்றி. சூரியன் போல சத்புருஷர்கள் மற்றவர்களுக்கு இத்த்தை உணடாக்கவே தாங்கள் பொருளைச் சொலவும் அணுபோகமும் செய்கிறார்கள்.//////

    வாரியார் சுவாமிகளின் நல்ல பதில்களை அறியத்தந்தமைக்கு நன்றி சகோதரி!

    ReplyDelete
  47. /////tamiltemples said...
    உள்ளேன் ஐயா
    சேர்மராஜ்////

    உங்களின் வருகைப் பதிவிற்கு நன்றி!

    ReplyDelete
  48. ////sasi said...
    வணக்கம் அய்யா
    மூன்றாம் அதிபதி சனியும், 6ம் அதிபதி சுக்கிரனும் சேர்ந்து 12ம் இடமான விரையஸ்தானத்தில் இருந்தால் அது விபரித ராஜயோகத்தில் சேருமா?/////

    துஷ்ட ஸ்தானம் என்பது 6, 8, 12ஆம் வீடுகளைக் குறிக்கும். 3ஆம் வீட்டையும் இந்தக்
    கணக்கில் சேர்த்துக் கொள்ளலாம்.ஒரு துஷ்ட ஸ்தானத்தின் அதிபதி, மற்றொரு துஷ்ட ஸ்தானத்தில், ஒரு துஷ்டனுடன் அமர்ந்திருந்தால் இந்த யோகம் உண்டாகும்.

    உங்களுக்கு இருக்கிறது!

    ReplyDelete
  49. //மேஷம், கடகம், சிம்மம், மகரம் ஆகிய ராசிகள் ராகு & கேதுவிற்குப் பகையான இடங்களாகும். ரிஷபம் நீச இடமாகும். ஜாதகத்தில் இந்த 5 இடங்களில் இருக்கும் ராகு & கேதுவால் ஜாதகனுக்கு அதிகத் தொல்லைகள் இருக்கும்.//

    கேது தசை முடிந்து சுக்கிரதிசை சந்திர புத்தியில் உள்ளேன் ...எட்டில் கேது(குரு பார்க்கிறது) இரடில் செவ்வாய் ராகு.ஜாதகத்தை பார்த்த ஒரு ஜோதிடர் சொன்னார்.இந்த பெண் கேது திசையில் மிகவும் கஷ்டத்துக்கு ஆளாகியிருப்பார்
    என்று.ஆனால் உணம்யில் மிகவும் சுகமாகவும் வெற்றி மேல் வெற்றியும் (பள்ளி வாழ்கையில் தான்)நல்ல புகழும் இருந்தது அந்த திசையில் .மிகவும் சிறு சிறு உடல் உபாதை வந்தது ஆனாலும் தான்கிகொள்ளும் அளவுதான் இருந்தது ..

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com