மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

22.7.09

Lesson No.216. கைக் காசில் மீனா? கையால் பிடிக்கும் மீனா? பகுதி இரண்டு!



Lesson No.216. கைக் காசில் மீனா? கையால் பிடிக்கும் மீனா? பகுதி இரண்டு!

ஜோதிடத்தில், ஜோதிட ஞானத்தில், பல லெவல்கள் உள்ளன! என்னுடைய
லெவல் என்னவென்று எனக்குத் தெரியாது.

பல ஜோதிட நூல்களைப் படித்த படிப்பறிவும், பலருடைய ஜாதகங்களையும்
பார்த்த பட்டறிவும் முக்கியம்.

ஜோதிடம் கற்பதற்கு முதலில் நல்ல நினைவாற்றல் முக்கியம். மனதில்
உற்சாகமும், கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வமும் முக்கியம்.
உத்வேகம் என்று சொல்லலாம். உங்கள் மொழியில் சொன்னால்
killing instinct வேண்டும். ஒரு கை பார்த்துவிடுவோம் எனும் தன்முனைப்பு
வேண்டும்.

அவனுக்கு ஏறுகிறது நமக்கு ஏன் ஏறாது எனும் நம்பிக்கை வேண்டும்.

சமீபத்தில் ஒரு சினிமாப் பாடலைக் கேட்டேன்:

”படிச்சுப் பார்த்தேன் ஏறவில்லை
குடிச்சுப் பார்த்தேன் ஏறிடுச்சு”

இந்த மாதிரி மஸ்கா ஆசாமிகள் எதைப் படித்தாலும் ஏறாது. பன்னிரெண்டாம்
வீட்டுக் காரனும், சனீஷ்வரனும் சேர்ந்து, அவர்களுடைய லக்கினத்தில் வீடு
கட்டிக் குடியிருப்பார்கள். ஏறக்கூடாதவைகள் மட்டுமே அவர்கள் மண்டையில்
ஏறும். அவர்கள் வாங்கி வந்த வரம் அப்படி!

அதை விடுங்கள், விஷயத்திற்கு வருகிறேன்.

ஆகவே முதல் இரண்டு பத்தியில் சொன்னவற்றை மனதில் வைத்துக் கொண்டு
பாடங்களைப் படியுங்கள்.

இதுவரை 215 ஜோதிடப் பாடங்களை எழுதியுள்ளேன். எத்தனை பாடங்களைப்
படித்தீர்கள்?. எத்தனை பாடங்களை மனதில் ஏற்றியிருக்கிறீர்கள் என்று நீங்களே
யோசித்துப் பாருங்கள். அடிப்படை விஷயங்கள் அத்தனையும் மனதில்
ஏறியிருக்க வேண்டும்.

ஒரு டாக்டர் தன்னிடம் வரும் நோயாளியைப் பரிசோதித்தவுடன், அவனுக்கு என்ன
மருந்து கொடுக்கலாம் என்று தான் படித்த புத்தகங்களைப் பக்கத்தில் வைத்துக்
கொண்டு, அவற்றைப் புரட்டிப் பார்த்து மருந்து கொடுத்தால் எப்படி இருக்கும்?

ஒரு Heart Specialist Doctor என்றால் இருதயம் சம்பந்தப்பட்ட நூறு மாத்திரை
களையாவது அவர் கடகடவென்று சொல்ல வேண்டும்!

27 நட்சத்திரங்களின் பெயர்களையும் கடகடவென்று சொல்ல வருகிறதா
என்று பாருங்கள்! 12 ராசிகளின் பெயர்களையும், அவற்றின் அதிபதிகளின்
பெயர்களையும் சொல்ல வருகிறதா என்று பாருங்கள்! வீடுகளின்
காரகத்துவங்களையும் (portfolios), 9 கிரங்களின் ஆட்சி, உச்ச, நீச, பகை
வீடுகளை மனப்பாடமாகச் சொல்ல வருகிறதாவென்று பாருங்கள்.

வரவில்லையா?

அட்லீஸ்ட் முயற்சி செய்து, இனியாவது அவற்றை மனதில் ஏற்றி, வேண்டும்
போது அடித்துச் சொல்ல முயற்சி செய்யுங்கள்.
-----------------------------------------------------------------------------
இனி, அலசல்!
இது இரண்டாவது வாளி!

ஒரு நண்பர் வந்தார். ஆசாமிக்கு ஓரளவு ஜோதிடம் தெரியும். மூடிற்குத் தகுந்த
மாதிரிப் பேசுவார். ஒரு நாள் ஜாதகப்படிதான் எல்லாம் நடக்கும் என்பார்.
அடுத்த நாள் ஒன்றுமே நடக்க மாட்டேன் என்கிறது. ஜோதிடம் எல்லாம்
பொய். சுத்த ஹம்பக் என்பார்.

நான் பிடித்துக் கொண்டு விட்டேன். “விளக்கமாகச் சொல்லுங்கள்!”

”என் இரண்டாம் வீட்டுக்காரன் திரிகோணம் ஏறி 9ல் நல்ல நிலைமையில்
இருக்கிறான். தனகாரகன் குருவும் உச்சம். எனக்கு ஏன் எப்போது பார்த்தாலும்
பணக் கஷ்டம்?”

”சிட்டி பேங்க் கிரிடிட் கார்டு வைத்துக் கொள்ளச் சொன்னது யார்? தனகாரகனா?
உன் சம்பளத்திற்கு, உனக்கு ஹோண்டா மோட்டார் சைக்கிளே அதிகம். உன்னை
மாருதி கார் வாங்கச் சொன்னது யார்? சுக்கிரனா? மாதம் இரண்டு பாட்டில் பீட்டர்
ஸ்காட் வாங்கி, வீட்டில் வைத்து மஜா பண்ணுகிறாயே? அதைச் செய்யச்
சொன்னது யார்? ராகு பகவானா?”

ஆசாமி பேச வில்லை. எஸ்கேப்பாகிவிட்டார்.
--------------------------------------------------
இதை எதற்காகச் சொன்னேன் என்றால், பணம் வரும். அதை வீண் செலவுகளைப்
பண்ணாமல் காப்பாற்றி வைத்துக் கொள்வது உங்கள் கடமையாகும்.

எறும்புகள் வெய்யில் காலத்தில் உணவை சேமித்து வைத்து மழை காலத்தில் பயன்
படுத்தும். அதுபோல ஒரு தசா புத்தியில் வரும் பணத்தைச் சேர்த்து வைத்து, பணம்
வராத தசா புத்தி காலங்களுக்குப் பயன் படுத்தவேண்டும்.

இரண்டாம் வீட்டில் சனி, ராகு, கேது, மாந்தி ஆகிய நால்வரில் ஒருவர்
இருந்தாலும்/கையில் பணம் சேராது. அது ஓட்டைக் கை. ஓட்டை வாளி!

அப்படி கிரக அமைப்புள்ள ஜாதகர்கள், வரும் பணத்தை, மனைவி. மக்கள்
பெயர்களில் முதலீடு செய்து வைத்தால் கையில் காசு தங்கும்!

சில பெண்ணிகளிடம் போன பணம் திரும்ப வராது என்றாலும்,
மகராசி உட்கார
வைத்து சோறாவது போடுவாள்:-)))))

அதீத பணம் வருவதற்குப் பதினொன்றாம் வீடு நன்றாக இருக்க வேண்டும்.

கையில் காசு சேர்வதற்கு இரண்டாம் வீடு நன்றாக இருக்க வேண்டும்.

முதலில் உள்ளது குழாய்.இரண்டாவது உள்ளது அண்டா!

வீடு நன்றாக இருப்பதென்றால், வெள்ளையடித்துப் பளிச் சென்று இருப்பதாக
அர்த்தமில்லை. அந்த இரண்டு வீடுகளின் அஷ்டகவர்க்கப் பரல்கள் 30
அல்லது 30ற்கு மேற்பட்டு இருக்க வேண்டும். அந்த இரண்டு வீட்டு நாயகர்களும்
தங்கள் சுய வர்க்கத்தில் 5 அல்லது அதற்கு மேற்பட்ட பரல்களுடன்
இருக்க வேண்டும். அந்த இரண்டு வீடுகளும் தீய கிரகங்களின் ஆளுகைக்கு
உட்பட்டோ அல்லது பார்வைக்கு உட்பட்டோ இருக்கக்கூடாது!
------------------------------------------------------
சரி பணம் எப்போது வரும். எப்பொது போகும்?

அரசியல்வாதிகளுக்கு எப்போதும் வரும். என்றும் போகாது.
அவர்கள் இருக்கும் ஃபீல்டு அப்படி. அவர்கள் எல்லாம் மகா புருஷ யோகம்
அல்லது லக்‌ஷ்மி யோகம் போன்ற யோகங்கள் உள்ளவர்கள். அல்லது அவர்களின்
ஜாதகத்தில் 3 அல்லது அதற்கு மேற்பட்ட கிரகங்கள் உச்சமாக இருக்கும்.
அல்லது அவர்களுடைய ஜாதகத்தில் ராஜ யோகங்கள் இருக்கும்.

யோகங்கள் 200 க்கும் மேல் உள்ளன. பின்னால் அவற்றை எழுத உள்ளேன்.
இன்றைய பின்னூட்டத்தில் அவைகளைப் பற்றிக் கேட்டு என்னைக் கலக்கி
விடாதீர்கள். பொறுத்திருங்கள். இப்போது அலசலை மட்டும் பாருங்கள்.

மற்றவர்களுக்கு எப்போது வேண்டுமென்றாலும் வரும்;அல்லது போகும்!

அந்த இரண்டு வீட்டு நாயகர்களின் தசா புத்திக் காலங்களில் வரும்.
ஆறாம் அல்லது எட்டாம் அல்லது 12ஆம் அதிபதிகளின் தசா புத்திக்
காலங்களில் போகும்.

எப்படிப் போகும்?

எப்படி வேண்டுமென்றாலும் போகும். இடம் வாங்கி வைத்திருந்தால், போலி
டாக்குமெண்ட்டால் போகும். நகைகள் வாங்கி வைத்திருந்தால் திருட்டால்
போகும். கம்பெனிகளில் முதலீடாகப் போட்டு வைத்திருந்தால், போட்டுவைத்த
கம்பெனிக்காரனின் தலைமறைவால் போகும். இப்படி எழுதிக் கொண்டே
போகலாம்.

வேலி போட்டுத் தடுத்தாலும் போகும்.
வீட்டைப் பூட்டிக்கொண்டு படுத்தாலும் போகும்!

அதி புத்திசாலியாக இருந்து காப்பாற்றி வைத்திருப்பவனை, கிரகங்கள்
அடித்துப் படுக்க வைத்து, மருத்துவச் செலவுகள் செய்ய வைத்து அதன்
வழியாகப் போக்கவும் செய்யும்!

இன்றைய மருத்துவமனைகளைப் பற்றி உங்களுக்குத் தெரியும்!
சில மருத்துவ மனைகளில் சிகிச்சை முடிந்து திரும்பி வரும்போது
சொத்தையே எழுதிக் கொடுத்துவிட்டு வரும்படி ஆகிவிடும்!

ஸ்வாமிஜி தயானந்த சரஸ்வதி சொல்வார்:

For a single body manifested by God, we are having society of Doctors
If yama comes, only the prana will go: if a doctor comes prana and
money will go!

கடவுளால் படைக்கப்பெற்ற மனித உடம்பிற்கு அறுபது விதமான மருத்துவர்கள்
உள்ளார்கள். எமன் வந்தால், உயிர் மட்டும்தான் போகும். மருத்துவர் வந்தால்
(அதாவது மருத்துவமனைக்குப் போனால்) உயிருடன் சேர்ந்து பணமும் போகும்!

(நமது வகுப்பறை மாணவர் டாக்டர் திரு.ப்ரூனோ அவர்கள் மன்னிப்பாராக!)

எல்லா மருத்துவ மனைகளும் அப்படியல்ல என்றாலும் சராசரிக்கும் அதிகமாக
அப்படித்தான் நடந்து கொண்டிருக்கிறது!

”சேர்த்த பணத்தை சிக்கனமா
செலவு பண்ண பக்குவமா

அம்மா கையில கொடுத்துப் போடு செல்லக்கண்ணு

அவ ஆறை நூறு ஆக்கிடுவா செல்லக்கண்ணு”


என்னும் பழைய பாடலை மனதில் கொண்டு வரும் பணத்தை உங்கள்
வீட்டுப் பெண்களிடம் (அன்னை அல்லது மனைவி) கொடுத்து பாதுகாப்புடன்
வையுங்கள்.

இருப்பதைவைத்து, எளிமையாக வாழ்பவனுக்குப் பணக் கஷ்டமே வராது!

கடவுள் உங்கள் தேவைகளுக்கு மட்டும்தான் உதவிக்கு வருவார்!
உங்கள் ஆசைகளுக்கு உதவ மாட்டார்!


God doesn't give you what you want, He gives you what you need!

உலகில் யார் செல்வந்தன் என்றால்,நோயும், கடனும் இல்லாதவனே
செல்வந்தன்!


(அலசல் தொடரும்)




வாழ்க வளமுடன்!

45 comments:

  1. வணக்கம் ஐயா,பாடம் அருமை.பலரின் ஜாதகத்தில் யோகங்கள் இருந்தும் பலன் இல்லை.அத்ர்க்கான காரணங்களையும் யோகத்திற்க்கான பதிவுடன் பின்நாளில் தர வேண்டுகிரேன்.பணம் விரயமாவது விதிப்பலன்,எனினும் சேமிக்க முயற்சிப்பது நம் கடமையென விளக்கையமைக்கு நன்றிகள்.

    அன்புடன்,
    மதுரை தனா.

    ReplyDelete
  2. ''படித்துப்பார்த்தேன் ஏறவில்லை. அடித்துப்பார்த்தேன் ஏறிடுச்சு."
    -
    "சேர்த்த பணத்தை சிக்கனமா செலவு பண்ண பக்குவமா அம்மா கையிலே கொடுத்துவிடு செல்லக்கண்ணு அவ ஆறை நுறாக ஆக்கிடுவா செல்லக்கண்ணு"

    ஜோதிட விளக்கத்திற்கு அருமையாக பாடல்களை தேர்வு செய்துள்ளீர்கள்.

    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  3. எனக்கு 12 ராசியும் எந்தெந்த கட்டம் என்ன ராசி என்பது ஞாபகம் இருக்கிறது. நட்சத்திரங்கள் ஞாபகம் இருக்கிறது. வரிசையாக சொல்வதென்றால் சற்று சிரமம். கிரகங்களின் ஆட்சி உச்ச வீடு ஞாபகம் இருக்கிறது. மூலதிரிகோணம், நட்பு, பகை வீடுகள் ஒரு சில தவிர்த்து மற்றவை ஞாபகமில்லை. இன்னும் ஒரு வாரத்தில் அனைத்தையும் மனப்பாடம் செய்கிறேன். எனக்கு புதன் 8ல் மறைந்திருக்கிறார். மண்டையில் ஏறுவதற்கு சற்று சிரமம்தான்.

    ReplyDelete
  4. பதிவு நன்றாக இருக்கிறது. முன்பெல்லாம் ஜாதகத்தில் அவ்வளவு விருப்பம் இருந்ததில்லை. உங்கள் பதிவுகளைப் படித்த பிறகு அதிக ஆர்வம் ஏற்படுகிறது. புலிப்பாணி சோதிடத்தில் எந்த பதிப்பு(நிறைய பதிப்புகள் இருக்கின்றன) நல்ல விளக்க உரையுடன் கூடியது?
    ஐயா ஒரு கேள்வி
    எனது நண்பருக்கு திருமணம் தள்ளிக்கொண்டே போகிறது அவருடைய விபரம் கீழே:
    பெயர்: கொளஞ்சியப்பன்
    பிறந்த தேதி: 24-4-1979
    பிறந்த நேரம்: 4:31 PM
    பிறந்த ஊர்: லால்பேட்டை
    தீர்க்க ரேகை: 79:33 கிழக்கு
    அட்ச ரேகை: 11:17 வடக்கு
    எப்போது திருமணம்?

    ReplyDelete
  5. ரெம்ப நாளாவே எனக்கு ஒரு சந்தேகம்,

    4ல சுக்கரன், 8ல் குரு(ஒரு எடுத்துக்காட்டுக்கு சொல்றேன்) என்பது மாதிரி நீங்கள் பதிவு போடும்பொழுது இது எப்படி நம்ம ஜாதகத்தைப் பாத்து தெரிஞ்சிக்கறதுன்னு யோசனையாவே இருக்கும்..

    இதைப் பத்தி முன்ன பதிவு ஏதும் போட்டிருக்கீங்களா?

    வகுப்புக்கு இடையில் சேர்ந்ததால் மன்னிக்கவும்.

    ReplyDelete
  6. Dear Sir
    //இரண்டாம் வீட்டில் சனி, ராகு, கேது, மாந்தி ஆகிய நால்வரில் ஒருவர்
    இருந்தாலும்/கையில் பணம் சேராது. அது ஓட்டைக் கை. ஓட்டை வாளி!//
    இது உண்மைதான் சார். அத்துடன் அவங்கட குடும்பதிலும் வாக்குவாதங்கள் இருதுகொண்டே இருப்பதை அவதானித்திருக்கிறேன்.

    ReplyDelete
  7. ////Blogger dhanan said...
    வணக்கம் ஐயா,பாடம் அருமை.பலரின் ஜாதகத்தில் யோகங்கள் இருந்தும் பலன் இல்லை.அதற்கான காரணங்களையும் யோகத்திற்கான பதிவுடன் பின்நாளில் தர வேண்டுகிறேன்.பணம் விரயமாவது விதிப்பலன்,எனினும் சேமிக்க முயற்சிப்பது நம் கடமையென விளக்கியமைக்கு நன்றிகள்.
    அன்புடன்,
    மதுரை தனா.////

    அப்படியே செய்கிறேன். நன்றி!

    ReplyDelete
  8. ////Blogger வேலன். said...
    ''படித்துப்பார்த்தேன் ஏறவில்லை. அடித்துப்பார்த்தேன் ஏறிடுச்சு." -
    "சேர்த்த பணத்தை சிக்கனமா செலவு பண்ண பக்குவமா அம்மா கையிலே கொடுத்துவிடு செல்லக்கண்ணு அவ ஆறை நுறாக ஆக்கிடுவா செல்லக்கண்ணு"
    ஜோதிட விளக்கத்திற்கு அருமையாக பாடல்களை தேர்வு செய்துள்ளீர்கள்.
    வாழ்க வளமுடன்,
    வேலன்.////

    எல்லாம் உங்களுக்காகத்தான் வேலன்!

    ReplyDelete
  9. ////Blogger ananth said...
    எனக்கு 12 ராசியும் எந்தெந்த கட்டம் என்ன ராசி என்பது ஞாபகம் இருக்கிறது. நட்சத்திரங்கள் ஞாபகம் இருக்கிறது. வரிசையாக சொல்வதென்றால் சற்று சிரமம். கிரகங்களின் ஆட்சி உச்ச வீடு ஞாபகம் இருக்கிறது. மூலதிரிகோணம், நட்பு, பகை வீடுகள் ஒரு சில தவிர்த்து மற்றவை ஞாபகமில்லை. இன்னும் ஒரு வாரத்தில் அனைத்தையும் மனப்பாடம் செய்கிறேன். எனக்கு புதன் 8ல் மறைந்திருக்கிறார். மண்டையில் ஏறுவதற்கு சற்று சிரமம்தான்./////

    முயற்சி திருவினையாக்கும்! மனப்பாடம் செய்யுங்கள் ஆனந்த்!

    ReplyDelete
  10. Blogger Lakshmanan said...
    பதிவு நன்றாக இருக்கிறது. முன்பெல்லாம் ஜாதகத்தில் அவ்வளவு விருப்பம் இருந்ததில்லை. உங்கள் பதிவுகளைப் படித்த பிறகு அதிக ஆர்வம் ஏற்படுகிறது. புலிப்பாணி சோதிடத்தில் எந்த பதிப்பு(நிறைய பதிப்புகள் இருக்கின்றன) நல்ல விளக்க உரையுடன் கூடியது?

    புலிப்பாணியின் பாடல்கள் உரையில்லாமலேயே புரியும்படியாகத்தான் இருக்கும். கிடைப்பதை வாங்கிக் கொள்ளூங்கள்
    >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
    ஐயா ஒரு கேள்வி
    எனது நண்பருக்கு திருமணம் தள்ளிக்கொண்டே போகிறது அவருடைய விபரம் கீழே:
    பெயர்: கொளஞ்சியப்பன்
    பிறந்த தேதி: 24-4-1979
    பிறந்த நேரம்: 4:31 PM
    பிறந்த ஊர்: லால்பேட்டை
    தீர்க்க ரேகை: 79:33 கிழக்கு
    அட்ச ரேகை: 11:17 வடக்கு
    எப்போது திருமணம்?/////

    அவருக்கு கடந்த 7 ஆண்டுகளாக கேது திசை நடந்திருக்கிறது.அதானால்தான் தாமதம் அதுவும் நல்லதிற்குத்தான். இப்போது 29.3.2009 முதல் சுக்கிரதிசை ஆரம்பித்துள்ளது. அடுத்த ஆண்டு திருமணம் நடக்கும். 7ஆம் வீட்டில் பரல்கள் மிகவும் குறைவாக உள்ளன. விரும்பும் அமைப்பில் பெண் கிடைக்க மாட்டாள். கிடைக்கிற பெண்ணைக் கேள்வி கேட்காமல் கட்டிக்கொள்ளச் சொல்லுங்கள்

    ReplyDelete
  11. /////Blogger புதுகைத் தென்றல் said...
    ரெம்ப நாளாவே எனக்கு ஒரு சந்தேகம்,
    4ல சுக்கரன், 8ல் குரு(ஒரு எடுத்துக்காட்டுக்கு சொல்றேன்) என்பது மாதிரி நீங்கள் பதிவு போடும்பொழுது இது எப்படி நம்ம ஜாதகத்தைப் பாத்து தெரிஞ்சிக்கறதுன்னு யோசனையாவே இருக்கும்..
    இதைப் பத்தி முன்ன பதிவு ஏதும் போட்டிருக்கீங்களா?
    வகுப்புக்கு இடையில் சேர்ந்ததால் மன்னிக்கவும்.////

    பொன்னியின் செல்வனை நான்காம் பாகத்தில் இருந்து படிக்கத்துவங்கியதை போலத்தான் இதுவும்.
    துவக்கத்தில் இருந்து பாடத்தைப் படியுங்கள் சகோதரி! இதுவரை மொத்தம் 215 பாடங்கள். கொஞ்சம் கஷ்டம்தான். பரவாயில்லை. படியுங்கள். படிக்கும்போது குறிப்பெடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.
    பிறகு பயன்படும்!

    ReplyDelete
  12. ////Blogger செல்லி said...
    Dear Sir
    //இரண்டாம் வீட்டில் சனி, ராகு, கேது, மாந்தி ஆகிய நால்வரில் ஒருவர்
    இருந்தாலும்/கையில் பணம் சேராது. அது ஓட்டைக் கை. ஓட்டை வாளி!//
    இது உண்மைதான் சார். அத்துடன் அவங்கட குடும்பதிலும் வாக்குவாதங்கள் இருதுகொண்டே இருப்பதை அவதானித்திருக்கிறேன்./////

    இலங்கைத்தமிழ் இனிமையாக உள்ளது.

    ReplyDelete
  13. ////Blogger hotcat said...
    as usual lesson super!!
    -Shankar////

    as usual பின்னூட்டம்!:-)))))

    ReplyDelete
  14. Dear Sir,

    Apart from as usual....

    If jupiter is with any malefics in second house....does the effect change or still the same?

    -Shankar

    ReplyDelete
  15. கடவுள் உங்கள் தேவைகளுக்கு மட்டும்தான் உதவிக்கு வருவார்!
    உங்கள் ஆசைகளுக்கு உதவ மாட்டார்!

    உலகில் யார் செல்வந்தன் என்றால்,நோயும், கடனும் இல்லாதவனே
    செல்வந்தன்!

    அருமையாகச் சொன்னீர்கள் அய்யா.

    ReplyDelete
  16. //இரண்டாம் வீட்டில் சனி, ராகு, கேது, மாந்தி ஆகிய நால்வரில் ஒருவர்
    இருந்தாலும்/கையில் பணம் சேராது. அது ஓட்டைக் கை. ஓட்டை வாளி!//
    இது உண்மைதான் சார். அத்துடன் அவங்கட குடும்பதிலும் வாக்குவாதங்கள் இருதுகொண்டே இருப்பதை அவதானித்திருக்கிறேன்//

    2ம் வீடு வாக்குஸ்தானமாயிற்றே. அங்கு பாப கிரகம் இருந்தால் வாக்குவாதத்திற்கு குறைவிருக்காதுதான். ஓட்டைவாளி என்பதால் ஆடை அணிகலன் வாங்கிக் கொடுப்பதில்லை என்று மனைவியும், நச்சரிப்பு தாங்கவில்லை என்று கணவனும் வாக்குவாதம் புரிவார்களோ என்னவோ. எனக்கு இந்த நிலை இல்லை. ஏனென்றால் 2ம் இடமும், 7மிடமும் திருமண வாழ்க்கைக்கான வர்கமான நவாம்சமும் நல்ல நிலையில் இருக்கிறன. நைசர்கிக சுப கிரகங்களான அந்தந்த ஸ்தானாதிபர்களே அந்த வீடடைப் பார்க்கிறார்கள்.

    ReplyDelete
  17. /////Blogger hotcat said...
    Dear Sir,
    Apart from as usual....
    If jupiter is with any malefics in second house....does the effect change or still the same?
    -Shankar//////

    குரு இருப்பதால் தீமைகள் குறையும்!

    ReplyDelete
  18. /////Blogger thirunarayanan said...
    கடவுள் உங்கள் தேவைகளுக்கு மட்டும்தான் உதவிக்கு வருவார்!
    உங்கள் ஆசைகளுக்கு உதவ மாட்டார்!
    உலகில் யார் செல்வந்தன் என்றால்,நோயும், கடனும் இல்லாதவனே
    செல்வந்தன்!
    அருமையாகச் சொன்னீர்கள் அய்யா.////

    நன்றி நாராயணன்!

    ReplyDelete
  19. ////Blogger ananth said...
    //இரண்டாம் வீட்டில் சனி, ராகு, கேது, மாந்தி ஆகிய நால்வரில் ஒருவர்
    இருந்தாலும்/கையில் பணம் சேராது. அது ஓட்டைக் கை. ஓட்டை வாளி!//
    இது உண்மைதான் சார். அத்துடன் அவங்கட குடும்பதிலும் வாக்குவாதங்கள் இருதுகொண்டே இருப்பதை அவதானித்திருக்கிறேன்//
    2ம் வீடு வாக்குஸ்தானமாயிற்றே. அங்கு பாப கிரகம் இருந்தால் வாக்குவாதத்திற்கு குறைவிருக்காதுதான். ஓட்டைவாளி என்பதால் ஆடை அணிகலன் வாங்கிக் கொடுப்பதில்லை என்று மனைவியும், நச்சரிப்பு தாங்கவில்லை என்று கணவனும் வாக்குவாதம் புரிவார்களோ என்னவோ. எனக்கு இந்த நிலை இல்லை. ஏனென்றால் 2ம் இடமும், 7மிடமும் திருமண வாழ்க்கைக்கான வர்கமான நவாம்சமும் நல்ல நிலையில் இருக்கிறன. நைசர்கிக சுப கிரகங்களான அந்தந்த ஸ்தானாதிபர்களே அந்த வீடடைப் பார்க்கிறார்கள்.////

    தகவலுக்கு நன்றி ஆனந்த்!

    ReplyDelete
  20. ///Blogger balaji said...
    பாடம் சூப்பர்////

    நன்றி பாலாஜி!

    ReplyDelete
  21. 7ஆம் அதிபதி சனி 2ல் வந்து அமர்ந்தது.இருவருக்குமே நட்ஷதிர அதிபன்

    சனீஸ்வரன்.திருமணத்திர்குப்பின் மனைவிக்கு வேலை, அரசாஙக வேலை

    கிடைத்து இரண்டு சம்பளம்!!!

    kmr.krishnan
    http://parppu.blogspot.com

    ReplyDelete
  22. நோய் கடன் இல்லை என்றால் அதுவே போதும்! போதும் என்ற மனமே பொன் செய்யும்!

    ReplyDelete
  23. நோயும் கடனும் இல்லாதவர்கள்தான் செல்வந்தர்கள் என்பதை பெரும்பாலானோர் நோயும் கடனும் வந்தவுடன் உணர்வார்கள் அய்யா :-))

    ReplyDelete
  24. ////Blogger kmr.krishnan said...
    7ஆம் அதிபதி சனி 2ல் வந்து அமர்ந்தது.இருவருக்குமே நட்ஷதிர அதிபன்
    சனீஸ்வரன்.திருமணத்திற்குப்பின் மனைவிக்கு வேலை, அரசாஙக வேலை
    கிடைத்து இரண்டு சம்பளம்!!!
    kmr.krishnan
    http://parppu.blogspot.com////

    தகவலுக்கு நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  25. ///Blogger Dinesh babu said...
    நோய் கடன் இல்லை என்றால் அதுவே போதும்! போதும் என்ற மனமே பொன் செய்யும்!////

    நன்றி தினேஷ் பாபு!

    ReplyDelete
  26. ////Blogger chaks said...
    நோயும் கடனும் இல்லாதவர்கள்தான் செல்வந்தர்கள் என்பதை பெரும்பாலானோர் நோயும் கடனும் வந்தவுடன் உணர்வார்கள் அய்யா :-))////

    ’பட்ட பின்பே ஞானி’ என்று கவியரசரும் சொல்வார்!

    ReplyDelete
  27. Anbu Aiyya,
    Kanya lakkinam, Erandil Guruvudan Maandi irunthaal Palan eppadi. Appothum ottai vaali thana? Additional info. Lakkinathil Sani, Suriyanudan, Buthan utcham.

    Anbudan ,
    Sara

    ReplyDelete
  28. ////Blogger R.Saravanakumar said...
    Anbu Aiyya,
    Kanya lakkinam, Erandil Guruvudan Maandi irunthaal Palan eppadi. Appothum ottai vaali thana? Additional info. Lakkinathil Sani, Suriyanudan, Buthan utcham.
    Anbudan ,
    Sara////

    2ல் மாந்தி தனித்து நின்றால் தொல்லை. குருவுடன் இருப்பதால் அடக்கி வாசிப்பார் mixed result!

    ReplyDelete
  29. ayya rendam veetil ragu irukka athu mennam guru veedaka irunthalum then guruvin 8am parvai pertralum kuda selavu akuma.

    Thankal sollvathu pola evalo kasu vanthalum nikka matinkuthu sir.

    ReplyDelete
  30. Dear Sir

    Ungal Padangal Ellam Arumai Arumai...

    Adhai vida ungal eluthu nadai enakku migavum Pidikum...

    """2 ikkuriyavan 9il amarthalum (Adhu 2il irundhu 8th place) and 9il irudhu 2 midam - 6th place..Agaiyal than Panakastum(not all the time and utgarum girahangal poruthu)..."""

    Could you please tell me my explanation is correct?

    Thank you

    Loving Student
    Arulkumar Rajaraman

    ReplyDelete
  31. Dear Sir

    Enakku Innum Mudhal Padam Kidaikkavillai. Neengal ungal pathippu Anupiyadhaga Solgireergal.

    Could you please send to me.

    my email id:

    arulkumar.rajaraman@gmail.com

    Thank you

    Loving Student
    Arulkumar Rajaraman

    ReplyDelete
  32. ///Blogger IMSAI ILAVARASAN said...
    ayya rendam veetil ragu irukka athu mennam guru veedaka irunthalum then guruvin 8am parvai pertralum kuda selavu akuma.
    Thankal sollvathu pola evalo kasu vanthalum nikka matinkuthu sir.////

    மூன்று படி ஏறினால் இரண்டுபடி சறுக்கலா? கவலை வேண்டாம். கஜினியைப்போல் 17 முறை ஏறுங்கள். கையில் காசு சேரமலா போய்விடும்? அதைத்தான் முயற்சி திருவினையாக்கும் என்பார்கள்

    ReplyDelete
  33. Blogger Arulkumar Rajaraman said...
    Dear Sir
    Ungal Padangal Ellam Arumai Arumai...
    Adhai vida ungal eluthu nadai enakku migavum Pidikum...
    """2 ikkuriyavan 9il amarthalum (Adhu 2il irundhu 8th place) and 9il irudhu 2 midam - 6th place..Agaiyal than Panakastum(not all the time and utgarum girahangal poruthu)..."""
    Could you please tell me my explanation is correct?
    Thank you
    Loving Student
    Arulkumar Rajaraman

    ஒரு வீட்டைப்பற்றிப் பேசும் போது, அதைத்தான் முதலிடமக வைத்துக் கணக்குப் பண்ண வேண்டும். If the owner of the second house, placed in the 8th house is not desirable! But you will get relief during the main or the sub-period of the 11th lord in your horoscope

    ReplyDelete
  34. ayya,
    enakku budhdhi
    oru idaththil nilaiyaga illai. idhu aen?

    ReplyDelete
  35. ////Blogger thoppae said...
    ayya,
    enakku budhdhi
    oru idaththil nilaiyaga illai. idhu aen?////

    மனதை ஒருமுனைப் படுத்துவது?
    பயிற்சி மேற்கொள்ளுங்கள். தினமும் தியானம் செய்யுங்கள்

    ReplyDelete
  36. manadhil padhiymaru sonneerghal iyya. Mika nanri.

    maanavan,
    kandhiah

    ReplyDelete
  37. Thanks for giving details of the period of money coming and going, easy and simple formula, so we can be cautious in those periods(dasa or buddhi of 6th, 8th and 12th house owners.)
    Thanks sir. T.Kasinathan.

    ReplyDelete
  38. Ungaludaiya kadhaigal mattrum pal suvai migavum nandraga iruppathaga Junior sakthi ganesh (my daugter)solli ungalukkau special thanks solla sonnargal.so Thanks to Vaathiyar from my daughter.

    ReplyDelete
  39. ////Blogger kandhiah said...
    manadhil padhiymaru sonneerghal iyya. Mika nanri.
    maanavan,
    kandhiah/////

    அப்படிக் கதைத்தால்தான் மனதில் பதியும். நன்றி கந்தையா!

    ReplyDelete
  40. ////Blogger Sakthi Ganesh said...
    Thanks for giving details of the period of money coming and going, easy and simple formula, so we can be cautious in those periods(dasa or buddhi of 6th, 8th and 12th house owners.)/////

    Thanks for your comment! (பின்னூட்டம்)

    ReplyDelete
  41. ////Blogger Sakthi Ganesh said...
    Ungaludaiya kadhaigal mattrum pal suvai migavum nandraga iruppathaga Junior sakthi ganesh (my daugter) solli ungalukkau special thanks solla sonnargal.so Thanks to Vaathiyar from my daughter./////

    தகவலுக்கு நன்றி! தொடர்ந்து படிக்கச் சொல்லுங்கள்! தமிழ் நன்றாகப் பயிற்சியாகும்

    ReplyDelete
  42. Dear Sir

    பாடத்தில் 2ம் அதிபதியின் சுயவர்க பரல்கள் 5க்கு மேல் பரல்கள் இருக்க என்று சொன்னிர்கள். for ex 2ம் அதிபதி புதன் 6ம் விட்டில் இருக்கிறார். புதனின் சுயவர்க பரல்கள் எப்படி கண்டுபிடிப்பது புதனின் அஷ்டவர்கதில் மொத்த பரல்கள் 54
    புதன் ராசியில் மகரத்தில் இருக்கிறார் SO அஷ்டவர்கதில் மகரத்தில் 3 பரல்கள் இருக்கிறது அது புதனில் பரல்களா இல்லை புதனின் வீடு மிதுனம் 6 பரல்கள் கன்னி 8 பரல்கள் மொத்தம் 14 பரல்கள் எது புதனின் சுயவர்க பரல்கள் விளக்கமுடன் தெரிவிக்கும்.

    ReplyDelete
  43. Blogger arumuga nainar said...
    Dear Sir
    பாடத்தில் 2ம் அதிபதியின் சுயவர்க பரல்கள் 5க்கு மேல் பரல்கள் இருக்க என்று சொன்னிர்கள். for ex 2ம் அதிபதி புதன் 6ம் விட்டில் இருக்கிறார். புதனின் சுயவர்க பரல்கள் எப்படி கண்டுபிடிப்பது புதனின் அஷ்டவர்கதில் மொத்த பரல்கள் 54
    புதன் ராசியில் மகரத்தில் இருக்கிறார் SO அஷ்டவர்கதில் மகரத்தில் 3 பரல்கள் இருக்கிறது அது புதனில் பரல்களா இல்லை புதனின் வீடு மிதுனம் 6 பரல்கள் கன்னி 8 பரல்கள் மொத்தம் 14 பரல்கள் எது புதனின் சுயவர்க பரல்கள் விளக்கமுடன் தெரிவிக்கும்.////

    Please see the side bar:
    1. Jagannathahora என்னும் மென்பொருளைப் பயன் படுத்துங்கள். அது உங்களுக்கு வேண்டிய எல்லா வர்க்கங்களையும் தரும்!
    2. அஷ்டகவர்க்கம் சம்பந்தமாக எழுதியுள்ள பாடங்களைப் படியுங்கள்

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com