மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

15.6.17

Astrology: எனக்கு ஜோதிடம் வருமா? (அதாவது மண்டையில் ஏறுமா?)

Astrology: எனக்கு ஜோதிடம் வருமா? (அதாவது மண்டையில் ஏறுமா?)

கல்வி, வைத்தியம், ஜோதிடம் ஆகிய மூன்றும் தர்மப் பணிகள். அதெல்லாம் முற்காலத்தில். அத்தொழிலைச் செய்பவர்களுக்கெல்லாம் மன்னர் மானியம் தருவார். அதனால் அன்றைய காலகட்டத்தில் அது சாத்தியப்பட்டது.

இப்போது மன்னர்களையும் ஒழித்துவிட்டார்கள். அதோடு அவர்களுக்குக் கொடுத்துவந்த மானியத்தையும் ஒழித்துவிட்டார்கள். எல்லாம் கலியுகம். கலி முற்றிக்கொண்டு வருகிறது.

இப்போது அவை மூன்றும்தான் காசு கொழிக்கும் தொழில்!

சரி, போகட்டும் சொல்ல வந்த விஷயத்திற்கு வருகிறேன். வகுப்பறைக்கு வருபவர்களில் சிலர் (தனி மின்னஞ்சல் மூலமாக) கேட்கும் முக்கியமான கேள்விகள் இரண்டு உண்டு!

1. சார், எனக்கு ஜோதிடம் வருமா? (அதாவது மண்டையில் ஏறுமா?)
2. சார், நான் ஜோதிடராகப் பணி புரிய ஆசைப் படுகிறேன். அதற்கான வாய்ப்பு (என் ஜாதகப்படி) எனக்கு உண்டா?

ஜோதிடம் கற்றுக்கொள்வதற்கு ஆர்வமும், முயற்சியும் இருந்தால் போதும். யார் வேண்டுமென்றாலும் கற்றுக்கொள்ளலாம்! அத்துடன் கற்றுக்கொண்டவை அவ்வப்போது மறந்து போகாமல் இருப்பதற்கு, நினைவாற்றல் முக்கியம். முக்கியமான விதிகளைத் திரும்பத் திரும்பவும் படிக்க வேண்டும்.

புரிதலுக்கும், நினைவாற்றலுக்கும், ஜாதகப்படி (அதைச் சொல்லாவிட்டால் கடைசி பெஞ்ச் கண்மணி விடமாட்டாரே) புதன் ஜாதகத்தில் வலுவாக இருக்க வேண்டும். வலு என்றால் என்ன என்பதைப் பலமுறை சொல்லித்தந்திருக்கிறேன். புதன் ஆட்சி அல்லது உச்சம் பெற்றிருக்க வேண்டும் அல்லது கேந்திரங்கள் அல்லது திரிகோணங்களில் இருந்தால் நல்லது.

விளக்கம் போதுமா?

போதாது!

இரண்டாவது கேள்வி பாக்கியுள்ளது.

நீங்கள் ஜோதிடத்தைக் கற்றுக்கொள்வதுடன், பலரது ஜாதகத்தைப் பார்த்து, அலசி, பலன் சொல்லி, அவர்கள் அதைக்கேட்டு முகம் மலர்ந்த அனுபவம் வேண்டும். ஜோதிடத் தொழில் முதலில் டல்’ லடிக்கும். நீங்கள் பிரபலமான பிறகு, உங்களிடம் வந்தவர்களே மீண்டும் மீண்டும் வருவார்கள். பலரையும் கூட்டிக் கொண்டு வருவார்கள். அல்லது பலரையும் அனுப்பி வைப்பார்கள். அப்போதுதான் நீங்கள் சம்பாதிக்க முடியும்!

“அந்தக் கதை எல்லாம் வேண்டாம். ஜாதகப்படி என்ன அமைப்பு வேண்டும்? அதைச் சொல்லுங்கள்”

புதன் (Planet for Astrology) வர்கோத்தமம் பெற்றிருக்க வேண்டும். அதாவது இராசியிலும், நவாம்சத்திலும் ஒரே வீட்டில் இருக்க வேண்டும்.

ஐந்தாம் அதிபதியும், பத்தாம் வீட்டுக்காரனும் ஒருவருக்கொருவர் பார்வையில் இருக்க வேண்டும்.

அதைவிட முக்கியமாக நீங்கள் அட்டை (Board) மாட்டி ஜோதிடம் சொல்லத் துவங்குவதற்கு உங்களுக்கு நல்ல தசா புத்தி நடைபெறவேண்டும்

அதெல்லாம் எதற்கு?

எதையும் கற்று அறிவதில் தவறில்லை. ஆகவே இந்தக் கட்டுரையின் ஏழாம் பத்தியை மீண்டும் ஒருமுறை தருகிறேன். அதை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

ஜோதிடம் கற்றுக்கொள்வதற்கு ஆர்வமும், முயற்சியும் இருந்தால் போதும். யார் வேண்டுமென்றாலும் கற்றுக்கொள்ளலாம்! இறையருளால் நமக்கு வேறு தொழில் இருக்கிறது. ஆகவே கற்றுக்கொள்வதுடன், அதைவைத்து நமது நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் உதவி செய்வதுடன் நிறுத்திக்கொள்ளுங்கள்!

என்ன சரிதானா?

அன்புடன்
வாத்தியார்
-------------------------------------------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

18 comments:

  1. ஐயா வணக்கம், 6ல் சுக்கிரன் மறைவு ஸ்தானம் 7ல் புதன் இருவரும்
    பாரிவார்தனை தயவு செய்து பலன் கூறுங்கள் எனக்கு 29 வயதிகும் இதுவரை வேலை
    கிடைக்கவில்லை திருமணம் ஆகவில்லை

    ReplyDelete
  2. ////Blogger K.P.Shanmuga Sundaram Sundaram said...
    Truely said sir thanks sir////

    நல்லது. நன்றி நண்பரே!!!!

    ReplyDelete
  3. ///Blogger Unknown said...
    ஐயா வணக்கம், 6ல் சுக்கிரன் மறைவு ஸ்தானம் 7ல் புதன் இருவரும்
    பாரிவார்தனை தயவு செய்து பலன் கூறுங்கள் எனக்கு 29 வயதிகும் இதுவரை வேலை
    கிடைக்கவில்லை திருமணம் ஆகவில்லை//////

    உங்கள் பெயர் என்ன? ஏன் Unknown என்று பெயர் வைத்திருக்கிறீர்கள்?
    முதலில் கிடைக்கிற வேலையில் சேருங்கள். வேலையில் இருந்தால் அல்லவா திருமணம் ஆகும்?
    என்ன லக்கினம்? அது முக்கியமில்லையா?

    ReplyDelete
  4. வணக்கம் ஐயா,நீங்கள் சொல்வது சரிதான்.ஆர்வமிருந்தாலும்,ஜாதகத்தில் அமைப்பில்லாவிடில், அதிகம் படிக்க,படிக்க குழப்பம்தான் மிஞ்சும் போலும்.நன்றி.

    ReplyDelete
  5. I agree. Sir..in my horoscope budhan in midhunam..own house along with Venus..but it is sixth house from Lagana magara laknam

    ReplyDelete
  6. ஐயா,
    My DOB 24.12.1987 TIME 6.10 am PLACE Palladam

    CONFUSION IN PREDICTING CORRECT NAKSHATRA...
    some astrologer says as AVITTAM and few says as THIRUVONNAM....
    Hope this problem is due to ayanamsam difference....what would be my correct nakshatra....

    ReplyDelete
  7. /////Blogger adithan said...
    வணக்கம் ஐயா,நீங்கள் சொல்வது சரிதான்.ஆர்வமிருந்தாலும்,ஜாதகத்தில் அமைப்பில்லாவிடில், அதிகம் படிக்க,படிக்க குழப்பம்தான் மிஞ்சும் போலும்.நன்றி./////

    உண்மைதான். உங்களின் புரிந்துணர்விற்கு நன்றி ஆதித்தன்!!!!

    ReplyDelete
  8. /////Blogger Vasanth said...
    I agree. Sir..in my horoscope budhan in midhunam..own house along with Venus..but it is sixth house from Lagana magara laknam/////

    நல்லது. நன்றி நண்பரே!!!!

    ReplyDelete
  9. /////Blogger கார்த்திக் Sree Vadivel Tex said...
    ஐயா,
    My DOB 24.12.1987 TIME 6.10 am PLACE Palladam
    CONFUSION IN PREDICTING CORRECT NAKSHATRA...
    some astrologer says as AVITTAM and few says as THIRUVONNAM....
    Hope this problem is due to ayanamsam difference....what would be my correct nakshatra..../////

    திருவோணம் 4ம் பாதம்.தனுசு லக்கினம்!!!

    ReplyDelete
    Replies
    1. ஐயா,

      எனது கேள்விக்கு பதில் அளித்ததற்க்கு மிக்க நன்றி....

      குரு பார்க்க கோடி புண்ணியம் என்பீர்களே......

      தாங்கள் (குரு) எனது ஜாதகத்தை பார்த்தமைக்கு மீண்டும் ஒருமுறை நன்றி...........

      Delete
  10. ஜோதிடர்களுக்கு 2ல் சனி,அல்லது பார்வை சம்பந்தம் இருக்கவேண்டும்.அனுபவமூலம் அறிந்துள்ளேன்

    ReplyDelete
  11. அருமை வாத்தியார் அவர்களே!!!

    கிரகங்களும், அதனால் ஏற்படும் மனித குணங்களும்ன்னு ஒரு அலசல் பாடம் தேவை...

    அதில், கோபம், கருணை, பொறுமை, தந்திரம், ஆன்மிகம், பொருளீட்டல், இவற்றுள் எது ஜாதகருக்கு அதிகம் உள்ளது என ஒரு பழரசம் தேவை, எல்லா மாணவர்கள் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்... கேள்வி தவறு எனில் மன்னிக்கவும்.



    அன்புள்ள மாணவன்,
    பா. லெக்ஷ்மி நாராயணன்.
    தூத்துக்குடி.

    ReplyDelete
  12. ////Blogger கார்த்திக் Sree Vadivel Tex said...
    ஐயா,
    எனது கேள்விக்கு பதில் அளித்ததற்க்கு மிக்க நன்றி....
    குரு பார்க்க கோடி புண்ணியம் என்பீர்களே......
    தாங்கள் (குரு) எனது ஜாதகத்தை பார்த்தமைக்கு மீண்டும் ஒருமுறை நன்றி.........../////

    பரவாயில்லை. அதற்கு ஒரு நன்றியும் பின்னூட்டமுமா?

    ReplyDelete
  13. ////Blogger angr said...
    ஜோதிடர்களுக்கு 2ல் சனி,
    அல்லது பார்வை சம்பந்தம் இருக்கவேண்டும்.அனுபவமூலம் அறிந்துள்ளேன்/////

    உங்களின் அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி!!!!

    ReplyDelete
  14. ////Blogger Lakshmi Narayanan Balasubramanian said...
    அருமை வாத்தியார் அவர்களே!!!
    கிரகங்களும், அதனால் ஏற்படும் மனித குணங்களும்ன்னு ஒரு அலசல் பாடம் தேவை...
    அதில், கோபம், கருணை, பொறுமை, தந்திரம், ஆன்மிகம், பொருளீட்டல், இவற்றுள் எது ஜாதகருக்கு அதிகம் உள்ளது என ஒரு பழரசம் தேவை, எல்லா மாணவர்கள் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்... கேள்வி தவறு எனில் மன்னிக்கவும்.
    அன்புள்ள மாணவன்,
    பா. லெக்ஷ்மி நாராயணன்.
    தூத்துக்குடி./////

    நேரம் கிடைக்கும்போது பின்னொரு நாளில் எழுதுகிறேன். பொறுத்திருங்கள். நன்றி!!!!

    ReplyDelete
  15. அருமையான விளக்கம் ஐயா!

    ReplyDelete
  16. ////Blogger தனிமரம் said...
    அருமையான விளக்கம் ஐயா!////

    நன்றி! தனிமரமாக இருக்காதீர்கள்!! ஒரு துணையைத் தேடிக்கொண்டு தோப்பாக மாறுங்கள்!!!!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com