மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

5.2.16

ஜோதிடம்: மனித முயற்சி என்பதற்குப் பலன் எதுவும் கிடையாதா?



ஜோதிடம்: மனித முயற்சி என்பதற்குப் பலன் எதுவும் கிடையாதா?

ஏன் இல்லை? முயற்சிக்குப் பலன் உண்டு.
-------------------------------------------------
அதைத் தெளிவுபடுத்தத்தான் இன்றையப் பாடம்!

இன்று வரவேண்டிய புதிர் பாடம் அடுத்த வாரம் வரும். வாத்தியாரின் உடல்நிலை காரணமாக எழுதிப் பதிவிட முடியவில்லை. ஆகவே 
பொறுத்துக்கொள்ளுங்கள்.

இந்தப் பாடம் அஷ்டகவர்க்க வகுப்பில் வந்த பாடங்களில் ஒன்றுதான். முக்கியமான பாடம் என்பதால் மீள்பதிவாகக் கொடுத்துள்ளேன். முன்பே
படித்தவர்கள், படித்ததுதான் என்று பின்னூட்டம் இடாமல் மீண்டும்
ஒருமுறை படியுங்கள். படித்திராதவர்கள், நன்றாகப் படித்து மனதில் ஏற்றுங்கள்
=================================================
அஷ்டகவர்க்கப்பாடம் எண்.10
முக்கியமான விதிகள் - பகுதி 1

அடிப்படை விதிகள் - பகுதி ஒன்று

பரல்கள் என்றால் என்ன?

அஷ்டகவர்க்கத்தில் மொத்த மதிப்பெண் 337 என்பது அனைவருக்கும் தெரிந்தது. அந்த மதிப்பெண் 12 வீடுகளுக்கும் பொதுவானது என்னும்போது,
337 வகுத்தல் 12 = ஒரு வீட்டின் சராசரி மதிப்பெண் 28 அந்த சராசரி மதிப்பெண்ணிற்கு மேல் இருக்கும் வீடு நல்ல நிலைமையில் உள்ளது என்றாகிவிடும்.

அதேபோல ஒரு கிரகத்தின் தனி மதிப்பெண் எட்டு. சராசரி மதிப்பெண் நான்கு. நான்கிற்கு மேல் மதிப்பெண்களுடன் நிற்கும் கிரகம் வலுவானதாக
இருக்கும். அது தன்னுடைய கோச்சாரத்திலும் (Transit) தசா புக்தியிலும்
நல்ல பலன்களைத் தரும். இல்லையென்றால் தீமையான/சுமாரான
பலன்களே நடைபெறும்.

Timing of events ஐக் கணக்கிடுவதற்கும் இந்த அஷ்டவர்க்கம் பயன்படும்.
தமிழில் இந்த மதிப்பெண்களைப் பரல்கள் என்பார்கள்.

1.  25 பரல்களுக்குக் கீழே உள்ள வீடுகள் நல்லதல்ல. அவற்றிற்குரிய
பலன்கள் சாதகமாக இருக்காது.
2. 30 பரல்கள் உள்ள வீடுகள் நல்ல பலன்களைத் தரும்.
3. 30 பரல்களுக்கு மேலே இருந்தால் மிகச் சிறந்த பலன்களைத் தரும்
4. ஆட்சி, உச்ச பலன்களோடும் அல்லது கேந்திர, திரிகோண அமைப் போடும் ஜாதகத்தில் உள்ள கிரகங்கள்கூட தங்கள் சுய வர்க்கத்தில் குறைந்த
பரல்களோடு இருந்தால் அவைகள் நல்ல பலன்களைத் தராது

உதாரணத்திற்கு ஒரு ஜாதகனுடைய நான்காம் வீட்டில் 30 அல்லது
அதற்கு மேற்பட்ட பரல்கள் இருந்தால் ஜாதகன் நன்றாகப் படிப்பான்.

அதேபோல ஒருவனுடைய ஜாதகத்தில் ஏழாம் வீட்டில் 30ற்கும் மேற்பட்ட பரல்கள் இருந்தால் அவனுக்கு நல்ல மனைவி கிடைப்பாள். உரிய
காலத்தில் திருமணமாகும். பெண்ணாக இருந்தால் நல்ல அன்பான,
அவளைப் போற்றி வைத்துக் கொள்ளக் கூடிய கணவன் கிடைப்பான்.

இப்படி ஒவ்வொருவீட்டின் பலனையும் அதிகமான பரல்களை வைத்துச் சிறப்பாகச் சொல்லிக் கொண்டே போகலாம்.

அதுபோல ஒருவனுடைய லக்கினத்தில் நாற்பது அல்லது அதற்கு
மேற்பட்ட பரல்கள் இருந்தால், ஜாதகன் தலைவனாகி விடுவான்.
அவனுக்குத்  தலைமை தாங்கும் யோகம் தேடி வரும்.

சரி ஒரு இடத்தில் 40 என்னும்போது - அங்கே 12 பரல்கள் கூடிப்போய் விடுவதால் வேறு இடங்களில் அது குறைந்து விடுமல்லவா?
மொத்தம்  337தானே? எங்கே குறைந்து உள்ளது என்று பார்க்க வேண்டும்!

பொதுவாகப் பார்த்தீர்கள் என்றால் தலைமை ஸ்தானத்தில் அதிகம்
பரல்கள் உள்ள தலைவர்களுக்குக் குடும்பஸ்தானத்தில் பரல்கள்
குறைவாக  இருக்கும், அதனால் அவர்கள் தங்கள் குடும்பத்தை மறந்து
விட்டு தேசம், தேசம் என்று நாட்டுக்காகப் பாடு பட்டிருப்பார்கள்.

செய்யும் தொழிலுக்கு (10ஆம் வீட்டிற்கு) 30 பரல்களுக்கு மேல் இருந்தால் சிறப்பு. நல்ல வேலை கிடைக்கும் அல்லது நல்ல தொழில் அமையும்.
ஆனால் 36 ம் அதற்கு மேலும் இருந்தால் செய்யும் வேலையில் ஒரு சபீர் பாட்டியாகவோ, அல்லது நாராயண மூர்த்தியாகவோ அல்லது பில்
கேட்ஸாகவோ உச்சத்தைத் தொட முடியும்!

உங்கள் வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும்?

இந்தக் கேள்வியைக் கேட்டால் ஒரே மாதிரியான பதில் சர்வ நிச்சயமாக வராது. ஒவ்வொருவரிடம் இருந்து ஒவ்வொரு மாதிரியான பதில் வரும்.

அன்புமிக்க தாய், அறிவுமிக்க தந்தை, பாசமிக்க சகோதரர்கள்,
சகோதரிகள், பரிவுமிக்க மனைவி, உள்ளத்தைக் கொடுக்கும்
குழந்தைகள், உயிரைக்கூட கொடுக்கும் நண்பர்கள், இவற்றோடு பாரதி
பாடிய காணி நிலம், வற்றாத கேணி, பத்துப்பதினைந்து தென்னை மரங்கள், கத்தும் குயிலோசை, அதோடு...!

என்ன அதோடு? இது போதாதா?

சற்றுப் பொறுங்கள் சொல்லி முடித்துவிடுகிறேன்.

அதோடு இணைப்பாக அசையா சொத்துக்கள், வற்றாத வங்கிக் கணக்கு இருப்பு, பிடித்தமான ஊரில் வசிக்கும் வசதி, போட்டியில்லாத தொழில்,
இன்னோவா, டாட்டா சுமோ அல்லது ஹோண்டா சிட்டி கார்கள், பாரத
ரத்னா வேண்டாம், அட்லீஸ்ட் பத்மபூஷன் பட்டம் கிடைக்கும் கெளரவம்.
 ஒரு வட்டம் அல்லது மாவட்டச் செயலாளர் பதவி, என்று பலரும்
பலவற்றை ஏக்கத்துடன் அல்லது ஆசையுடன் சொல்வார்கள்.

அவ்வளவும் கிடைத்து விடுமா என்ன?

கிடைக்காது!

அதெல்லாம் எப்படிக் கிடைக்கும். அதற்கு உரிய தகுதி நமக்கு இருக்கிறதா என்று பார்க்க வேண்டாமா?

ஆசையிருக்குத் தாசில் பண்ண; அதிர்ஷ்டம் இருக்கு கழுதை மேய்க்க'
என்று கிராமங்களில் சொல்வார்கள் 80% மக்களின் வாழ்க்கை அப்படித்தான் இருக்கும்! இருப்பதை வைத்துத் திருப்திப் பட்டுக்கொள்ள வேண்டியதுதான்.

சரி மனித முயற்சி என்பதற்குப் பலன் எதுவும் கிடையாதா?

ஏன் இல்லை? முயற்சிக்குப் பலன் உண்டு.

நீ மாட்டை வைத்துதான் பிழைப்பு நடத்த வேண்டுமென்பதுதான் விதியென்றால் நீ மாட்டை வைத்துத்தான் பிழைப்பை நடத்தியாக
வேண்டும். ஆனால் மாட்டின் எண்ணிக்கையை இறைவன் தீர்மானிப்பதில்லை.

அது உன் கையில்தான் உள்ளது. உன் முயற்சியில்தான் உள்ளது.
4 மாடுகளா அல்லது 40 மாடுகளா என்பது உன் முயற்சியால் நிர்ணயிக்கப்படும்.

ஒரு ஏழைப் பால் வியாபாரி இருந்தான். இரண்டு மாடுகளை வைத்துப்
பால் வியாபாரம் செய்து கொண்டிருந்தான். வருமானம் போதவில்லை.

பற்றாக்குறை. வீட்டில் அவன் மனைவி, பிள்ளைகளைச் சேர்த்து ஐந்து ஜீவன்கள் வீட்டு வாசல் திண்ணையில் கவலையோடு அவன் அமர்ந்திருந்தபோது, அந்த வழியாகச் சென்ற முனிவர் ஒருவர்,
அவனை நோக்கிக் கேட்டார்,

”தம்பி, சற்றுக் களைப்பாக இருக்கிறது, பசியாற ஏதாவது கிடைக்குமா?”

அவன் பதறிவிட்டான். பசியின் கொடுமை அறிந்தவனல்லவா? உடனே திண்ணையை விட்டுக் குதித்துக் கீழே வந்தவன், “அய்யா நல்ல மோர்
இருக்கிறது, தரட்டுமா?” என்று கேட்டான்.

அவர் சம்மதம் சொல்ல, ஒரு செம்பு நிறைய மோரைக் கொண்டு வந்து கொடுத்தான்.

வாங்கி அமைதியாகக் குடித்தார் முனிவர். குடித்தபிறகுதான் அவனை
உற்று நோக்கினார். அவன் முகத்தில் கவலை குடிகொண்டிருந்தது.

தன் ஞானக்கண்ணால் அவனுடைய நிலைமையை முழுதாக உணர்ந்தவர் சொன்னார்:

“நாளை அதிகாலை என்னை வந்துபார். உன் கவலைகளை ஓட்டும்
வழியைச் சொல்லித் தருகிறேன்”

அவன் அவருடைய இருப்பிடத்தை அறிந்து கொண்டு, அடுத்த நாள் உதயத்தில், நம்பிக்கையுடன், அவரைச் சென்று பார்த்தான்.

அவர் அவனுடன் அதிகமாகப் பேசவில்லை. ஆனால் தீர்க்கமாக
ஒன்றைச் சொன்னார் “உன்னிடம் இருக்கும் இரண்டு மாடுகளையும்
ஓட்டிக் கொண்டு  போய் பக்கத்து ஊர்ச் சந்தையில் விற்று விட்டு வந்து,
விற்ற பணத்தை உன் வீட்டில் பத்திரமாக வை.”

அவன் அதிர்ந்து போய் விட்டான்.

மாடுகள் இரண்டையும் விற்று விட்டால் வயிற்றுப் பிழைப்பிற்கு என்ன செய்வது என்று அவரிடமே கேட்டுத் தெரிந்து கொள்ளும் முனைப்பில்,
“அய்யா...” என்று இழுத்தான்.

அது தெரியாதா அவருக்கு? கையைக் உயர்த்திக் காட்டியதோடு, சொன்னார், “ சொன்னதைச் செய், மற்றது தானாக நடக்கும், மீண்டும் நீயே வந்து
என்னைப் பார்ப்பாய், இப்போது போ!”

அவன் அவர் சொன்னபடியே செய்தான். இரண்டு மாடுகளும் நல்ல விலைக்குப் போயிற்று. விற்ற பணத்தைக் கொண்டு வந்து, வீட்டுப்
பரணின் மேலிருந்த பானைக்குள் வைத்து மூடினான். பிறகு நன்றாகச் சாப்பிட்டுவிட்டு, பாயைப் போட்டு படுத்து உறங்கிவிட்டான்.

தூக்கம் என்றால் அப்படியொரு தூக்கம்.

மாலை ஆறு மணிக்குத்தான், ”அம்மா...” என்று தன் மாடுகள் கத்தும் ஒலி கேட்டுத் திடுக்கிட்டு எழுந்தவன், ஓடிப்போய் தன் வீட்டிற்குப் பின் புறம்

இருந்த தொழுவத்தில் பார்த்தான். அங்கே அவனுடைய மாடுகள் இரண்டும் நின்று கொண்டிருந்தன. மயக்கம் வராத குறை அவனுக்கு.

அதோடு அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. விற்று விட்டு வந்த மாடுகள் எப்படித் திரும்பி வந்தன?

இருட்டி விட்டதால் வீட்டிலேயே தங்கி விட்டு, அடுத்த நாள் காலையில் ஒட்டமும் நடையுமாகச் சென்று முனிவரைப் பார்த்தான்.

தியானத்தில் இருந்த அவர் இவன் உள்ளே வந்த ஒலி கேட்டு, கண்களைத் திறந்து பார்த்தார். பார்த்தவர் கேட்டார்,” என்ன உன்னுடைய மாடுகள்
இரண்டும் திரும்பி வந்து விட்டனவா?”

அவன் ஆச்சரியத்தின் எல்லைக்கே போய் விட்டான்.

சலனமற்று காட்சியளித்த அவர் சொன்னார்,”நேற்றுச் செய்ததுபோல
இன்றும் செய்; ஒன்றும் கேட்காதே, பிறகு சொல்கிறேன் இப்போது
போய் வா”

வந்த வேகத்திலேயே திரும்பியவன், அவர் சொல்லியபடியே அன்றும் செய்தான். மறுபடியும் கிட்டத்தட்ட அதே அளவு தொகை கிடைத்தது.

வீட்டிற்குக் கொண்டு வந்து, பானைக்குள் போட்டுப் பரணுக்குள் வைத்து
விட்டு, எப்போதும் போல சாப்பிட்டு விட்டுக் கண் அயர்ந்தான்.

நேற்று நடந்தது போலவே இன்றும் நடந்தது. அவன் அதிசயப்படும் விதமாக அவனுடைய இரண்டு மாடுகளும் இன்றும் திரும்பி வந்து தொழுவத்தில்
நின்று கொண்டிருந்தன!

இது தொடர்ந்தது. ஒரு நாள் அல்ல இரு நாள் அல்ல பத்து நாட்கள் தொடர்ந்தது. வழக்கப்படி பதினோறாம் நாள் காலையில் முனிவரைச்
சென்று  பார்த்தான்

அவர் சொன்னார், “இனிமேல் அந்த அதிசயம் தொடராது. உன்னிடம்
இப்போது 20 மாடுகளுக்கான தொகை இருக்கிறது. இன்று சந்தைக்குப்
போ; நல்ல மாடுகளாகக் கிடைக்கும் 20 மாடுகளை வாங்கி வந்து இன்று
முதல் உன் பால் வியாபாரத்தை நல்லபடியாகச் செய்!”

அவன் நெகிழ்ந்து விட்டான். கண்கள் பனிக்கக் கேட்டான், “அய்யா
உங்களுக்கு நான் மிகுந்த நன்றிக் கடன் பட்டவனாக இருப்பேன்.
இதுவரை அந்த அதியசம் எப்படி நடந்தது என்பதைச்சொன்னீர்கள்
என்றால் நான் சற்று மன நிம்மதியோடு போவேன்.”

“உன் தலையெழுத்து மாடுகளை வைத்து பிழைப்பதுதான். ஆனால்
 நீ முயற்சி எதுவும் செய்யாமல், இருப்பதை வைத்து இதுவரை உன் வாழ்க்கையை ஓட்டிக் கொண்டு வந்திருக்கிறாய். உனக்கு உதவும்
பொருட்டே, எனது சித்து வேலையால் நான் அப்படிச் செய்தேன்.
எதற்கும் ஒரு அளவு உண்டு. அது தெரிந்து நான் நேற்றோடு நிறுத்தி
விட்டேன். இனிமேல் நான் நினைத்தால்கூட உனக்கு உதவ முடியாது. இறைவனை வேண்டிக்கொள். உன்  பிரச்சினைகள் எல்லாம் தீரும்
அதோடு இனிச் சோம்பியிருக்காமல் முயற்சி செய்து கடுமையாக உழைத்தாய் என்றால் உன் மாடுகளின் எண்ணிக்கை  கூடிய சீக்கிரம்
100 ஆகும், பிறகு 200 ஆகும். போய்ப் பிழைத்துக் கொள்!” என்று முடித்தார்.

கதை அவ்வளவுதான். முயற்சி எப்படி வேலை செய்யும் என்பதற்குத்தான் இந்தக் கதை!

நமக்கும் ஒரு முனிவர் வருவாரா என்று யாரும் காத்துக் கொண்டிருக்க வேண்டாம். இது கலியுகம். முனிவரெல்லாம் வரமாட்டார்.
முனி வேண்டும்  என்றால் வரும்.

முனி என்றால் என்னவா? அதுதான் நட்பு என்ற பெயரில் வரும்
டாஸ்மார்க், சல்பேட்டா பார்ட்டிகள் அதாவது தண்ணியடிக்கும்
ஆசாமிகள்.சரி துவக்கத்திற்கு வருகிறேன். நல்ல வாழ்க்கைக்கு
ஜாதகம் எப்படியிருக்க வேண்டும்?

ஒன்று, ஒன்பது, பத்து, மற்றும் பதினோறாம் வீடுகளில் 30ற்கும்
மேற்பட்ட பரல்கள் இருக்க வேண்டும்.

அதவது First House (Lagna), Ninth House (House of gains), 10th House
(House of Profession) 11th House (House of Profit) ஆகிய நான்கு
இடங்களிலும் 30 பரல்களோ அல்லது 30ற்கு மேற்பட்ட
எண்ணிக்கையில் பரல்கள் இருக்க வேண்டும்.

மற்ற இடங்களெல்லாம் முக்கியமில்லையா? இல்லை!

அப்படியிருந்தால் வாழ்க்கை எப்படியிருக்கும்?

சூப்பராக இருக்கும்!

படிக்கும் வாசகர்கள் யாருக்காவது அப்படியிருக்கிறதா? இருந்தால் சொல்லுங்கள்

எனக்குத் தெரிந்து என்னுடைய உறவினர்கள் இரண்டு பேருக்கு இருக்கிறது. அவர்களது வாழ்க்கையும் சூப்பராக இருக்கிறது. அவர்களுடைய

ஜாதகத்தை நான் பர்த்திருக்கிறேன். அதனால்தான் அடித்துச் சொல்கிறேன்.

சொத்துக்கள் இரண்டு வகைப்படும்; கஷ்டங்களும் இரண்டு வகைப்படும்.

அசையாத சொத்து (Fixed asset) அசையும் சொத்து (Movable asset) என்று சொத்துக்களைப் பிரித்துப் பார்க்கலாம். இடம், வீடு, நிலம், தோட்டம்

எல்லாம் முதல் வகையில் சேரும். நகைகள், பணம், வைப்புநிதிச் சான்றிதழ்கள், பங்குப் பத்திரங்கள் எல்லாம் இரண்டாம் வகையில் சேரும்.

நம்மைப் பெற்ற அன்னையும் அசையும் சொத்துதான். அனால் சொத்துக்களில் எல்லாம் முதன்மையான சொத்து.

அதுபோல கஷ்டங்களும் இரண்டு வகைப்படும். நிரந்தரமான கஷ்டங்கள், தற்காலிகமான கஷ்டங்கள்.

நிரந்தரமான கஷ்டங்கள் எதெது? தற்காலிகமான கஷ்டங்கள் எதெது?

கஷ்டங்களைப் பட்டியலிடுவது கஷ்டமானது. கர்மகாரகன் சனியிடம் என்ன மென்பொருள் இருக்கிறதென்று தெரியவில்லை என்ன சர்வர்
இருக்கிறதென்று தெரியவில்லை இந்தியாவில் உள்ள 120 கோடி ஜனங்களுக்கும் 120 கோடி விதமான கஷ்டங்களைக் கொடுத்திருக்கிறான்.

எப்படி மனித முகம் வேறு படுகிறதோ, எப்படி வலது கை கட்டை விரல் ஆளாளுக்கு வேறு படுகிறதோ, அப்படி கஷ்டங்களும் ஒரே மாதிரி
இருப்பதில்லை.

அதுபோல கஷ்டங்களும் தீர்ந்த பாடில்லை. ஒரு கஷ்டம் போனால்
அடுத்த கஷ்டம் கதவைத் திறந்து கொண்டு வந்து விடுகிறது. கஷ்டம்
என்பதை எளிமைப் படுத்திப் பிரச்சினை என்று கொள்ளலாம்.

சிலருக்குப் பிரச்சினைகள் ஒவ்வொன்றாக வரும். சிலருக்கு ஒட்டு மொத்தமாக வரும். சிலருக்கு க்யூவில் நின்று அடுத்தடுத்து இடைவெளியில்லாமல்  வரும்.

அதனால் பிரச்சினை இல்லாதவர்களே கிடையாது. பிரச்சினைகளே இல்லாதவர் இவரென்று நீங்கள் ஒருவரையாவது காட்டுங்கள் - நான்
இந்தத்  தொடர் எழுதுவதையே நிறுத்தி விடுகிறேன்.

கவியரசர் கண்ணதாசன் சொல்வார்.

”தொடர்ந்த கதை முடிவதில்லை மனிதன் வீட்டினிலே
முடிந்த கதை தொடர்வதில்லை இறைவன் ஏட்டினிலே!”

என்னவொரு அற்புதமான வெளிப்பாடு பாருங்கள். இரண்டே வரிகளில் வாழ்க்கையைப் புரிந்து கொள்ளும்படி சொன்னார் பாருங்கள்.
அதனால்தான்  அவரைக் கவியரசர் என்கின்றோம்.

ஆகவே இங்கே கஷ்டங்கள் என்பதை நான் சற்று Fine Tuning செய்து, கட்டுரைக்கு வசதியான முறையில் உங்கள் அனுமதியுடன்
பிரச்சினைகள்  என்று மாற்றிக்கொள்கிறேன்.

உடல் ஊனம், மன நோய், வறுமை, தீராத பிணி இவைகள் ஜாதகத்தின்
வேறு பகுதியில் பார்க்கப் பட வேண்டியவை ஆகும். ஆகவே அவற்றை
இங்கே நான் எடுத்துக்கொள்ளவில்லை

பொதுவாக உள்ள பிரச்சினைகளை அல்லது கஷ்டங்களை மட்டுமே
நான் இங்கே வகைப் படுத்திப் பேச உள்ளேன்
------------------------------------------------------------------------------------------
1. வளர்கின்ற வயதில், தாய் அல்லது தந்தை இல்லாமல் வளர்வது

2. படிக்கவேண்டிய வயதில் சூழ்நிலை காரணமாக அல்லது சேர்க்கை காரணமாக படிக்க முடியாமல் போய்விடுவது.

3. வேலை கிடைக்க வேண்டிய வயதில் சரியான அல்லது தோதான வேலை கிடைக்காமல் அல்லாடுவது.

4. திருமணமாக வேண்டிய வயதில் ஏதாவதொரு காரணத்தினால் திருமணம் தள்ளிக் கொண்டே போவது.

5. திருமணம் ஆனாலும், அன்பு செலுத்தாத, அரவனைக்காத கணவன், கூட இருந்தும் உதவியாக இல்லாத மாமனார் மாமியார், மற்றும் இன் லாக்கள்.

6. வேலை கிடைத்தாலும் திருப்தியில்லாத வேலை, தகுதிக்கு ஒத்துவராத வேலை, நிறைவில்லாத சம்பளம்.

7. வாடகை வீடு - அதுவும் வீடு ஓரிடம், வேலை ஓரிடம், தினமும் 40 கிலோமீட்டர் தூரம் பயணிக்க வேண்டிய அலுப்பு

8. வாழ்க்கையில் நிலவும் கடுமையான போட்டியின் காரணமாகக் கவலைப்பட்டு, குழந்தைகளைப் படி, படி என்று அனுதினமும் விரட்டிப்
படிக்க  வைக்க வேண்டிய அவதி

9. பருவம் வந்த பெண் குழந்தையாக இருந்தால் அவளை வெளியே அனுப்பும்போது ஏற்படும் பரிதவிப்பு

10. அத்தியாவசியத் தேவைக்குக் கூட செலவு செய்ய முடையாமல் ஏற்பட்டு விடும் கடன் சுமைகள்

இப்படிப் பிரச்சினைகளைப் பட்டியல் இட்டுக்கொண்டே போகலாம்.

ஆகவே ஒன்றை மட்டும் மனதில் வையுங்கள் பிரச்சினை என்பது
உங்களுக்கு மட்டுமில்லை. ஒவ்வொருவருக்கும் இருக்கிறது.
பெரும்பாலான  பிரச்சினைகள் பணத்தைச் சார்ந்து இருக்கும்.

“பணம் இருந்தால் போதும் சார்! எல்லாப் பிரச்சினைகளையும் ஒரே
நொடியில் தீர்த்து விடுவேன்!” என்று சிலர் சொல்வதைக் கேட்கலாம்.

அது உண்மையல்ல! பணத்தால் சில பிரச்சினைகளைத் தீர்க்க முடியும். ஆனால் அது உருமாறி வேறு விதத்தில் நம்மிடமே திரும்பவும் வந்து
நிற்கும்.

இன்று பணம் இல்லாதவனை விட, பணக்காரனிடம்தான் அதிகமான பிரச்சினைகள் உள்ளன!

மெத்தையை வாங்கலாம், ஸ்பிளிட் ஏர்கண்டிஷன் இயந்திரத்தை வாங்கலாம் - ஆனால் தூக்கத்தை வாங்க முடியாது. பணம் கொடுத்துப் பசியை வாங்க
முடியாது! பணம் கொடுத்து அரண்மனையை வாங்கலாம். அன்பு செலுத்தும் இல்லாளை வாங்க முடியாது. சொன்னதைக் கேட்கும் குழந்தையை வாங்க

முடியாது. துரோகம் இல்லாத நட்பை வாங்க முடியாது. இப்படி முடியாதது எவ்வளவோ இருக்கின்றன!
-----------------------------------------------------------------------------
சரி, உங்களுக்குப் புரியும் படியாக ஒரே வரியில் சொல்கிறேன்.

பிரச்சினை தீரவே தீராது.

ஒன்றைத் தீர்க்க அடுத்தது வந்து நிற்கும். பிர்ச்சினை என்பது சீட்டாட்டத்தைப்போல! உங்கள் கையில் எப்போதுமே 13 சீட்டுக்கள்
இருந்து  கொண்டே இருக்கும். ஒன்றைக்கிழே கழற்றி விட்டால், அங்கேயிருந்து பதிலுக்கு நீங்கள் ஒரு கார்டை எடுத்துத்தான் ஆக
வேண்டும்.

கேஸ் ஸ்டவ், பிரஷ்சர் குக்கர், மிக்ஸி, வெட் கிரைண்டர், வாட்டர்
ஹீட்டர், வாஷிங்மெஷின், டெலிவிஷன், டி.வி.டி. பிளேயர்,
ஸ்டெபிலைசர், ஸ்பிளிட் ஏர்கண்டிஷனர் அல்லது மின் விசிறிகள்,
மோட்டார் சைக்கிள் அல்லது கார், கணினி, யு.பி.எஸ் என்று வீட்டிலுள்ள சாதனங்கள் ஒன்று மாற்றி ஒன்று ரிப்பேராகிக் கொண்டே இருக்கும்.

பணம் இருப்பவன் எல்லாவற்றையும் தூக்கிக் கடாசிவிட்டு ஒரே நாளில் அத்தனை சாதனங்களையும் புதிதாக மாற்றிவிட்டு, நிம்மதியாக இருப்போம்
என்று நினைத்தால், விதி அவனை விடாது. அவனேயே நோய்க்கு ஆளாக்கி அல்லது எங்காவது விபத்தில் புரட்டி எடுத்து மருத்துவமனையில்
கொண்டுபோய் படுக்க வைத்துவிடும். அவனையே ரிப்பேர் செய்ய
வேண்டிய நிலைமைக்கு ஆளாக்கி விடும்.

ஆகவே பிரச்சினை என்பது, நமது இரத்த ஓட்டம்போல, சுவாசம் போல
உடன் இருப்பது ஆகும்!
------------------------------------------------------------------------------------------------
இந்தக் கட்டுரையின் அவசியமென்ன?

இரண்டு வழிகளில் உங்களுக்குப் பதில் சொல்வதற்குத்தான் இந்தக்கட்டுரை!

1. பிரச்சினையைத் தாங்கக் கூடிய திறன் இருக்கிறதா?

2. அடுத்த பிரச்சினையை அப்போது பார்த்துக்கொள்வோம், இப்போதுள்ள பிரச்சினை எப்போது தீரும்?
---------------------------------------------------------------------------------------------------------------
ஜாதகத்தில் திரிகோண வீடுகளான ஒன்றாம் வீடு (லக்கினம்) ஐந்தாம் வீடு (House of Mind) ஒன்பதாம் வீடு (House of Gains - பாக்கிய ஸ்தானம்)

ஆகிய வீடுகள் நன்றாக - அதாவது வலுவாக இருந்தால் - உங்களுக்குப் பிரச்சினைகளைத் தாங்கக்கூடிய திறன் இருக்கிறது என்று கொள்ளலாம்.
அதுதான் முக்கியம் - தாங்கும் வல்லமை இருந்தால் போதாதா?

சரி, அதை எப்படித் தெரிந்து கொள்வது?

மூன்று வீடுகளும் ஒட்டு மொத்தமாக நன்றாக இருப்பது என்பது ஆயிரத்தில் ஒருவருக்குத்தான் இருக்கும். சராசரியாக, மனிதனுக்கு மூன்றில் ஒன்று
நன்றாக இருந்தாலும் போதும்!

முன்பே சொல்லியிருக்கிறேன் உலகில் அனைவருக்கும் உள்ள மொத்த பரல்கள் 337 மட்டுமே அதை 12 ஆல் (ராசிகளால்) வகுத்தால் சராசரியாக
28  வரும். சராசரிக்கும் மேலே கூடுதலாக இரண்டு பரல்களுடன் - அதாவது
30 பரல்கள் அந்த வீடுகளில் - அல்லது ஒன்றிலாவது இருத்தல் நல்லது.
அதோடு ஒரு கிரகத்தின் தனிப்பட்ட வலிமைக்குரிய பரல்கள் எட்டு. நான்கு என்பது சராசரி. 4ற்கு மேற்பட்ட பரல்களுடன் அந்த கிரகம் இருந்தால்
நல்லது

உதாரணம் சிம்ம லக்கின ஜாதகனுக்கு, சூரியன்தான் லக்கின அதிபதி. ஜாதகத்தில் சூரியன் அதன் சுய வர்க்கத்தில் 4ற்கு மேற்பட்ட பரல்களுடன்
இருக்க வேண்டும்.

அதே சிம்ம லக்கின ஜாதகனுக்கு ஐந்தாம் வீடு, தனுசு வீடாகும், தனுசிவின் அதிபதி குரு பகவானும் 4ற்கு மேற்பட்ட பரல்களுடன் இருக்க வேண்டும்.

அதே சிம்ம லக்கின ஜாதகனுக்கு ஒன்பதாம் வீடு, மேஷமாகும், மேஷத்தின் அதிபதி செவ்வாயும் 4ற்கு மேற்பட்ட பரல்களுடன் இருக்க வேண்டும்.

இவ்வாறு ஒவ்வொரு லக்கினக்காரர்களும் தங்களுக்குரிய லக்கினத்தை வைத்து அந்த மூன்று இடங்களையும் தாங்களே மதிப்பிட்டுக்கொள்ள
வேண்டுகிறேன்

இவ்வாறு ஒரு வீடும், வீட்டின் அதிபதியும் அமைந்து விட்டால் போதும். உங்களை ஒன்றும் சீண்ட முடியாது. எது வந்தாலும் தாங்கக்கூடிய உத்தம
மனிதர் அல்லது பெண்மணி நீங்கள். அந்த கிரகங்கள் உங்களுக்குக் கடைசிவரை கை கொடுக்கும்!

அன்புடன்
வாத்தியார்
==========================================================


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

28 comments:

  1. மிக்க நன்றி வாத்தியார் அவர்களே...

    ReplyDelete
  2. வணக்கம் ,அய்யா .
    இந்த பதிவில் ,. யாருக்காவது 1,9,10,11 ராசிகளில் 30 க்கு மேற்பட்ட பரல்கள் இருந்தால் தெரியப்படுத்த இருந்தீர்கள் ,.குருவின் கட்டளைக்கு பணிந்து கீழ்கண்ட தகவலை தருகிரேன்

    என் அண்ணன் மகன் R...ஜகன் ஜாதகத்தில்

    1ல் (32ம்) , 9ல் (30ம் ) , 10ல்( 33) ம் , 11ல் (35 ) பரல்கள் உள்ளன .

    data of birth: ( .23/07/1995 am 5.35 )

    எதிர்காலம் நன்றாக அமையுமா ?

    முன்னாள் ஜனாதிபதி DR. RADAHAKRISHNAN அவர்களின் ஜாதகத்திலும்
    1ல் (34) 9ல் (31) 10ல் (37) 11ல் (31) பரல்கள் உள்ளன .
    நன்றி
    ச. தயாநிதி ,,
    அவியனூர்

    ReplyDelete
  3. குரு வந்தனம்.
    இன்று காலை முதல் எனது மொபைல் இன்டர்நெட் வேலை செய்யாமலிருந்தது.ஏங்கிப் போனேன்.எமது மனையாள் வந்து,விபரம் கேட்டு, உடனடியாக "Bill Gates formula"follow
    பண்ணுங்கள் என்று கூறிவிட்டு, மொபைலை off செய்துவிட்டு kitchenக்குப் போனபின் மொபைலை on பண்ணச் சொன்னார்கள்.சரியாகி விட்டது!!! இதோ,முதல் கடிதம்!!
    உடல் நிலை இன்னும் ஐயாவுக்கு normalக்கு வரவில்லையே என்ற வருத்தம் ஒருபுறம், ஆயினும், வகுப்பறை மாணவர்க்குத் தவறாது பாடங்கள் தருவதோ மறுபுறம்!! இன்றைய பதிவை இதுவரை படிக்கவில்லை.அதற்கு முன் வாத்தியாரின் இத்தகைய அன்புக்காக குமரகுருபரனிடம் ஒரு வேண்டுதல் விடுகிறோம்.முருகப் பெருமானே, வல்லளே, எங்கள் வாத்தியாருக்கு normal உடல் நலத்தை நடப்பாக்கு, அன்னார் பூரண நலம் தந்து, எங்கள் பிரார்த்தனைக்கு வலிமை தாருங்கள்.
    முருகா சரணம், சண்முகனே சரணம்

    ReplyDelete
  4. அன்புடன் வாத்தியார் அய்யாவுக்கு வணக்கம்

    அஷ்டவர்க்க பரல் பலன் மிக அருமை. !!! சில கிரகங்கள் நீசமாக இருந்தாலும் சுயவர்க்க வர்க்க பரல் 4 என இருந்து சுமாராக வாழ்க்கை ஓடிவிடும் என்பதில் சந்தேகமில்லை. அனுபவத்தில் கண்டது..!!!

    இந்த பதிவு சரி நமக்கு இவ்வளவுதான் என மனதை தேற்றி கொள்ள வைக்கிறது ...நன்றி.!!!

    ReplyDelete
  5. லக்னத்தில் 22 பரல்கள்
    ஒன்பதாம் இடத்தில் 30 பரல்கள்
    பத்தாம் இடத்தில் 43 பரல்கள்
    பதினோராம் இடத்தில் 26 பரல்கள்

    இந்த ஜாதகனுக்கு எந்த வேலை செய்தாலும் பெயர் புகழுக்கு பஞ்சமில்லை ஆனால் அதனால் அவன் அடையும் லாபம் - பூஜ்ஜியம்.

    இதுதான் விதி என்று ஆண்டவன் எழுதிவிட்டானோ.

    ReplyDelete
  6. Per my vakya jadagam
    1-34, 9-22, 10-37, 11-33.

    How do one take when software calculated numbers differ from written numbers? On playing with different softwares with Raman, lagiri, Surya..ayanamsa I get 1st house strength from 24-42.
    For those who don't have written jadagam (one of my friend lost his jadagam) how precise these numbers can come play?

    Just take the one gives good numbers? :)

    ReplyDelete
  7. குரு வந்தனம்.
    இப்போது மணி இரவு பன்னிரண்டு
    இன்றைய பரல்கள் பதிவை இப்போது தான் படிக்க முடிந்தது!மிக ஆதாரமான விபரங்களுடன் கூடிய ஜோதிட பதிவு! எவ்வளவு அழகான விளக்கங்கள்!ஜோதிடத்தின் nerve center இது தான் போலும்! மகவும் விறுவிறுப்பாகச் செல்கிறது, ஏனஎனில் நான் இப்பாடம் படித்திராதவன்.இதன் அடுத்தபாடங்களை தொடர்ச்சியாக வெளியிடுங்கள்
    தங்கள் உடல.

    ReplyDelete
  8. வணக்கம் ஐயா, பரல்களில் ஜோதிடம்..அருமை..
    என் மூத்த மகள் 1, 9, 10, 11 வீட்டு பரல்கள்
    முறையே 30, 27, 31, 31... அவள் வாழ்க்கை எப்படி இருக்கும்...21/11/2009, 9.30 PM Chennai....நன்றி.,.

    ReplyDelete
  9. This comment has been removed by the author.

    ReplyDelete
  10. ஐயா,வணக்கம்.பிறப்பு- வினை என்றும், முயற்சி- திருவினை என்றும் எடுத்துக் கொள்ளலாமா?

    ReplyDelete
  11. This comment has been removed by the author.

    ReplyDelete
  12. பொதுவாக எந்த கட்டங்களிலும் பரங்களின் எண்ணிக்கை கூடவோ குறையவோ இல்லாமல் 26 - 30 க்குள்ளும் 4 - 5 ஆகவும் இருப்பதே நன்மையாக தோன்றுகிறது எனக்கு. ஏனெனில் இவர்கள் தான் எந்த குறையும் இல்லாமல் வாழ Normal Life கிடைக்கும் என தோன்றுகிறது.

    ஏதேனும் கட்டத்தில் பரல்கள் ஏறும் பட்டசத்தில் சில கட்டங்கள் கவலைக்கிடம் ஆகிவிடுவதாகவே தோன்றுகிறது.

    ReplyDelete
  13. This comment has been removed by the author.

    ReplyDelete
  14. குருவே
    எனக்கு 1ல் 33, 2 ல் 31, 3ல் 38 பரல்கள் உள்ளது. எனக்கு பலன் கூறுமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன்

    ReplyDelete
  15. /////Blogger B. Lakshmi Narayanan, Tuticorin said...
    மிக்க நன்றி வாத்தியார் அவர்களே.../////

    நல்லது. நன்றி லெட்சுமிநாராயணன்!

    ReplyDelete
  16. /////Blogger daya nidhi said...
    வணக்கம் ,அய்யா .
    இந்த பதிவில் ,. யாருக்காவது 1,9,10,11 ராசிகளில் 30 க்கு மேற்பட்ட பரல்கள் இருந்தால் தெரியப்படுத்த இருந்தீர்கள் ,.குருவின் கட்டளைக்கு பணிந்து கீழ்கண்ட தகவலை தருகிறேன்
    என் அண்ணன் மகன் R...ஜகன் ஜாதகத்தில்
    1ல் (32ம்) , 9ல் (30ம் ) , 10ல்( 33) ம் , 11ல் (35 ) பரல்கள் உள்ளன .
    data of birth: ( .23/07/1995 am 5.35 )
    எதிர்காலம் நன்றாக அமையுமா ?//////

    சூப்பராக இருக்கும்!
    >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
    முன்னாள் ஜனாதிபதி DR. RADAHAKRISHNAN அவர்களின் ஜாதகத்திலும்
    1ல் (34) 9ல் (31) 10ல் (37) 11ல் (31) பரல்கள் உள்ளன .
    நன்றி
    ச. தயாநிதி ,,
    அவியனூர்/////
    தகவலுக்கு நன்றி!
    >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

    ReplyDelete
  17. /////Blogger வரதராஜன் said...
    குரு வந்தனம்.
    இன்று காலை முதல் எனது மொபைல் இன்டர்நெட் வேலை செய்யாமலிருந்தது.ஏங்கிப் போனேன்.எமது மனையாள் வந்து,விபரம் கேட்டு, உடனடியாக "Bill Gates formula"follow
    பண்ணுங்கள் என்று கூறிவிட்டு, மொபைலை off செய்துவிட்டு kitchenக்குப் போனபின் மொபைலை on பண்ணச் சொன்னார்கள்.சரியாகி விட்டது!!! இதோ,முதல் கடிதம்!!
    உடல் நிலை இன்னும் ஐயாவுக்கு normalக்கு வரவில்லையே என்ற வருத்தம் ஒருபுறம், ஆயினும், வகுப்பறை மாணவர்க்குத் தவறாது பாடங்கள் தருவதோ மறுபுறம்!! இன்றைய பதிவை இதுவரை படிக்கவில்லை.அதற்கு முன் வாத்தியாரின் இத்தகைய அன்புக்காக குமரகுருபரனிடம் ஒரு வேண்டுதல் விடுகிறோம்.முருகப் பெருமானே, வல்லளே, எங்கள் வாத்தியாருக்கு normal உடல் நலத்தை நடப்பாக்கு, அன்னார் பூரண நலம் தந்து, எங்கள் பிரார்த்தனைக்கு வலிமை தாருங்கள்.
    முருகா சரணம், சண்முகனே சரணம்/////

    உங்களின் பிரார்த்தனைகளுக்கு நன்றி வரதராஜன்!

    ReplyDelete
  18. ////Blogger hamaragana said...
    அன்புடன் வாத்தியார் அய்யாவுக்கு வணக்கம்
    அஷ்டவர்க்க பரல் பலன் மிக அருமை. !!! சில கிரகங்கள் நீசமாக இருந்தாலும் சுயவர்க்க வர்க்க பரல் 4 என இருந்து சுமாராக வாழ்க்கை ஓடிவிடும் என்பதில் சந்தேகமில்லை. அனுபவத்தில் கண்டது..!!!
    இந்த பதிவு சரி நமக்கு இவ்வளவுதான் என மனதை தேற்றி கொள்ள வைக்கிறது ...நன்றி.!!!/////

    உங்களின் மனதைத் தேற்றிக் கொள்ளும் அனுபவ வழிமுறைக்கு நன்றி கணபதியாரே!

    ReplyDelete
  19. ////Blogger திருவாரூர் சரவணன் said...
    லக்னத்தில் 22 பரல்கள்
    ஒன்பதாம் இடத்தில் 30 பரல்கள்
    பத்தாம் இடத்தில் 43 பரல்கள்
    பதினோராம் இடத்தில் 26 பரல்கள்
    இந்த ஜாதகனுக்கு எந்த வேலை செய்தாலும் பெயர் புகழுக்கு பஞ்சமில்லை ஆனால் அதனால் அவன் அடையும் லாபம் - பூஜ்ஜியம்.
    இதுதான் விதி என்று ஆண்டவன் எழுதிவிட்டானோ.//////

    லக்கினம் வீக்காக இருக்கிறதே - அதுதான் காரணம்!

    ReplyDelete
  20. ///Blogger selvaspk said...
    Per my vakya jadagam
    1-34, 9-22, 10-37, 11-33.
    How do one take when software calculated numbers differ from written numbers? On playing with different softwares with Raman, lagiri, Surya..ayanamsa I get 1st house strength from 24-42.
    For those who don't have written jadagam (one of my friend lost his jadagam) how precise these numbers can come play?
    Just take the one gives good numbers? :)/////

    ஆஸ்ட்ரோவிஷன் மென்பொருள் சரியாக இருக்கும்!

    ReplyDelete
  21. ////Blogger வரதராஜன் said...
    குரு வந்தனம்.
    இப்போது மணி இரவு பன்னிரண்டு
    இன்றைய பரல்கள் பதிவை இப்போது தான் படிக்க முடிந்தது!மிக ஆதாரமான விபரங்களுடன் கூடிய ஜோதிட பதிவு! எவ்வளவு அழகான விளக்கங்கள்!ஜோதிடத்தின் nerve center இது தான் போலும்! மகவும் விறுவிறுப்பாகச் செல்கிறது, ஏனஎனில் நான் இப்பாடம் படித்திராதவன்.இதன் அடுத்தபாடங்களை தொடர்ச்சியாக வெளியிடுங்கள்////

    அதெல்லாம் மேல்நிலைப் பாடங்களில் வந்த பதிவுகள். புத்தக வடிவில் தயாராகிக் கொண்டிருக்கிறது. கூடிய சீக்கிரம் வெளிவரும். வந்தவுடன் படித்து மகிழுங்கள். அதுவரை பொறுத்திருங்கள்

    ReplyDelete
  22. ////Blogger Santhanam Raman said...
    வணக்கம் ஐயா, பரல்களில் ஜோதிடம்..அருமை..
    என் மூத்த மகள் 1, 9, 10, 11 வீட்டு பரல்கள்
    முறையே 30, 27, 31, 31... அவள் வாழ்க்கை எப்படி இருக்கும்...21/11/2009, 9.30 PM Chennai....நன்றி.,.////

    ஒன்பதாம் வீட்டில் (பாக்கிய ஸ்தானம்) மட்டும் சராசரிக்கும் குறைவான பரல் உள்ளது. அதனால் கிடைக்கும் பாக்கியங்கள் தாமதமாகக் கிடைக்கும்

    ReplyDelete
  23. ////Blogger adithan said...
    ஐயா,வணக்கம்.பிறப்பு- வினை என்றும், முயற்சி- திருவினை என்றும் எடுத்துக் கொள்ளலாமா?/////

    விதியை வினை என்றும். முயற்சியைத் திருவினை என்றும் எடுத்துக்கொள்ளுங்கள் சரியாக இருக்கும்!

    ReplyDelete
  24. /////Blogger Mrs Anpalagan N said...
    நன்றி ஐயா./////

    நல்லது. நன்றி சகோதரி!

    ReplyDelete
  25. ////Blogger A. Anitha said...
    பொதுவாக எந்த கட்டங்களிலும் பரங்களின் எண்ணிக்கை கூடவோ குறையவோ இல்லாமல் 26 - 30 க்குள்ளும் 4 - 5 ஆகவும் இருப்பதே நன்மையாக தோன்றுகிறது எனக்கு. ஏனெனில் இவர்கள் தான் எந்த குறையும் இல்லாமல் வாழ Normal Life கிடைக்கும் என தோன்றுகிறது.
    ஏதேனும் கட்டத்தில் பரல்கள் ஏறும் பட்டசத்தில் சில கட்டங்கள் கவலைக்கிடம் ஆகிவிடுவதாகவே தோன்றுகிறது./////

    ஆமாம். அதுதான் உண்மை!

    ReplyDelete
  26. //////Blogger Bala said...
    குருவே
    எனக்கு 1ல் 33, 2 ல் 31, 3ல் 38 பரல்கள் உள்ளது. எனக்கு பலன் கூறுமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன்/////

    லக்கினம், 2ம் வீடு, 3ம் வீடு வெற்றி ஸ்தானம். ஆகியவை நன்றாக உள்ளனவே! கவலையை விடுங்கள். லக்கினத்தில் 28 பரல்களுக்குமேல் இருந்தால் எல்லாவற்றையும் சமாளிக்கும் திறமை இருக்கும்!

    ReplyDelete
  27. ஐயா ராசியில் பார்ப்பது முறையாக நவாம்சத்தில் பார்ப்பது முறையா?

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com