மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

16.6.08

Astrology: சராசரி வாழ்க்கைக்கு என்ன வேண்டும்?

Astrology: சராசரி வாழ்க்கைக்கு என்ன வேண்டும்?

சிலருடைய வாழ்க்கை பார்ப்பதற்குச் சீராக இருக்கும். சிலருடையது சீர்
இல்லாமல் இருக்கும்.

சீராக இருப்பவனைக் கேட்டால், “என்னங்க உப்புச் சப்பில்லாமல் ஒரே மாதிரி
வாழ்க்கை போய்க் கொண்டிருக்கிறது - அப்ஸ் அண்ட் டவுன் இருந்தால்தானே
சுவாரசியமாக இருக்கும்” என்பான்.

அடுத்தவனைக் கேட்டால், “என்னங்க, நாய்ப் பிழைப்பாக இருக்கிறது. எப்போது
நல்ல காலம் வரும்? பணம், காசு வேண்டாங்க, நிம்மதி வேண்டும்! அந்த நிம்மதி
கிடைக்காமல் அல்லாடிக்கொண்டிருக்கிறேன்” என்பான்.

எல்லோருக்குமே ஆசைகளும், கனவுகளும் அதிகமாகி விட்டன! பணத்
தேவைகளும், தேடல்களும் அதிகமாகி விட்டன!

‘திருக்குறளைப் பற்றியும், பட்டினத்தாரைப் பற்றியும் எழுதினாலோ அல்லது
எழுதிப்புத்தகமாகப் போட்டாலோ, ஒருத்தனும் வாங்க மாட்டான். வாங்கிப் படிக்க
மாட்டான்.

'பங்குச் சந்தையில் பணம் பண்ணுவது எப்படி?', 'இருக்கின்ற பணத்தை இரட்டிப்
பாக்குவது எப்படி?' என்று எழுதினால் மாய்ந்து மாய்ந்து படிப்பான். அதுதான்
இன்றைய நிலைமை!

ஒரு மனைவி, ஒரு வீடு, ஒரு வாகனம் என்று ஒவ்வொன்று இருந்தால் போதாதா?
இல்லை பத்தாது என்பான்.

அம்பத்தூரில் வீடு இருப்பவன், அண்ணாநகரில் வீடு வேண்டும் என்பான்.
அண்ணா நகரில் வீடு இருப்பவன், நுங்கம்பாக்கத்தில் வீடு வேண்டும் என்பான்.
நுங்கம்பாக்கத்தில் வீடு இருப்பவன், தி.நகர் திருமலைப் பிள்ளை ரோட்டில் வீடு
வேண்டும் என்பான்.

மாருதி வைத்திருப்பவன், டொயோட்டா வேண்டும் என்பான், டொயோட்டா
வைத்திருப்பவன் பென்ஸ் வேண்டும் என்பான்.

மொத்தத்தில் இருப்பவனும் நிம்மதியாக இல்லை; இல்லாதவனும் உள்ளபடியே
நிம்மதியாக இல்லை.
---------------------------------------------------------------

சீரான வாழ்க்கைக்கு இரண்டு உதாரணங்களைச் சொல்கிறேன்.

ரயில்வேயில், ஆரம்பத்தில் சரக்கு ரயிலில் Guard ஆகச் சேருகிறவன், பதவி
உயர்வுகள் பெற்று, Passenger Train, Express Train, Sathapthi Super Fast என்று பல
வண்டிகளையும், பல ஸ்டேசன்களையும், பல டிவிசன்களையும் பார்த்து விட்டுக்
கடைசியில் கட்டாய ஓய்வு பெறுவான். அவனுடைய வாழ்க்கை இரயிலுடனே
இருந்திருக்கும் அல்லது முடிந்திருக்கும்.

அதேபோல சாதாரண செய்தி நிருபராகப் பத்திரிக்கையில் சேர்ந்து, பல பதவி
உயர்வுகளைப் பெற்றுக் கடைசியில் செய்தி ஆசிரியர் பதவிவரை பார்த்துவிட்டுப்
பிரிதொருவனின் வாழ்க்கை, நாளிதழ் ஒன்றில் நாராக முடிந்திருக்கும்.

அத்தனை பேர்களுக்குமா பணம் கொட்டோ கொட்டு என்று கொட்டும் சினிமா
அல்லது வியாபாரத்துறைகளில் வாழ்க்கை அமைந்து விடுகிறது?

சினிமாவில் கூட ஒரு இசையமைப்பாளரிடம் வயலின் வாசிப்பவன் கடைசிவரை
வயலின்ஸ்ட்டாகவே இருந்து மாய்ந்து விடுவதில்லையா?

இன்று பணம்தான் எல்லாவற்றையும் நிர்ணயிக்கிறது என்றாலும், பணம் வருவது
போவது நம் கையில் இல்லை!

எல்லாம் வாங்கி வந்த வரம்!

அதைத்தான் கவியரசர் கண்ணதாசன் அற்புதமாக இப்படிச் சொன்னார்

”உன்னைக்கேட்டு என்னைக் கேட்டு
எதுவும் நடக்குமா? - அந்த
ஒருவன் நடத்தும் நாடகத்தை நிறுத்த முடியுமா?”
---------------------------------------------------
சரி, வாழ்க்கையை எப்படி எதிர் கொள்வது?

அதற்கும் வழி இருக்கிறது.

ஒரு சிந்தனையாளன் இப்படிச் சொன்னான்

Life is 10 percent what you make it and 90 percent how you take it.
--Irving Berlin

வருவதை ஏற்றுக் கொள்ளுங்கள். அதுதான் - அந்தக் குணம்தான் இனிய
வாழ்க்கைக்கு வழிவகுக்கும்

அதற்கும் ஒரு தீர்வைக் கவியரசர் கண்ணதாசன் எழுதிவைத்து விட்டுப்போயிருக்கிறார்

”வந்ததை வரவில் வைப்போம்
சென்றதைச் செலவில் வைப்போம்”

என்ன, சரிதானே இது?
---------------------------------------------------------
மொத்தத்தில் வாழ்க்கை சுதந்திரமாகவும், சுயமரியாதையுடனும் இருந்தால் போதும்

விவேகானந்தர் சொன்னார்: “உன்னுடைய சுதந்திரத்தைப் பறிக்கக்கூடியது எதுவாக
இருந்தாலும் அதன்மீது எச்சரிக்கையாக இரு!”

“Beware of Everything that takes away your freedom!"
-Swami Vivekananda

தந்தை பெரியார் சுயமரியாதையைப் பற்றி நிறையவே சொல்லிவிட்டுப்போயிருக்கிறார்

ஆகவே சுதந்திரமாகவும், சுயமரியாதையுடனும் இருந்தால் போதும் என்று நினையுங்கள்
மகிழ்ச்சி தானாகவே தேடிவரும்! நிம்மதியும் அதன் பின்னாலாயே ஓடி வரும்!
-------------------------------------------------------------------------------
வாழ்க்கை சாராசரியாக இருந்தால் போதும். ரோட்டி,கப்டா, மக்கானுக்கு எவரையும்
எதிர்பார்க்காத நிலை இருந்தால் போதும்.

என் தந்தை சொல்லுவார், ”எளிமையாக இரு. எல்லா உணவும் ஒன்றுதான். தொண்டை
வரைக்கும்தான் ருசி. அதற்குப் பிறகு அது பாசுமதி அரிசியாக இருந்தாலும் ஒன்றுதான்
ஐ.ஆர் 20 அரிசியாக இருந்தாலும் ஒன்றுதான். உறக்கம் வரும் வரைதான் இடம்
வேறுபடும். வந்து விட்டால் எல்லா இடங்களும் ஒன்றுதான். ஃபைவ் ஸ்டார் ஓட்டலாக
இருந்தாலும் சரி அல்லது திண்ணையாக இருந்தாலும் சரி! உடலை மறைக்கத்தான்
உடை. அது காதியாக இருந்தாலென்ன - அல்லது பீட்டர் இங்கிலாந்து பிராண்ட்
சட்டையாக இருந்தாலென்ன?”

ஆகவே வாழ்க்கையை அதன் வழியிலேயே எதிர் கொள்ளுங்கள். எல்லாம் வசப்படும்!
--------------------------------------------------------------------
சரி, இப்போது பாடத்திற்கு வருவோம்!

பாடம் 1

சராசரி வாழ்க்கைக்கு ஜாதகத்தில் சொல்லப்பட்டிருப்பது என்ன?

கீழே கொடுத்துள்ளேன் பாருங்கள்:

ஒரு ராசியில் பரல்களின் சராசரி அளவு என்ன என்பது உங்களுக்குத் தெரியும்.
மொத்த பரல்கள் 337 வகுத்தல் 12 ராசிகள் = 28

அப்படி எல்லாம் எல்லோருக்கும் இந்த சராசரி அளவே அமைந்து விடாது.

அதனால் லக்கினத்தில் இருந்து அடுத்தடுத்துள்ள பன்னிரெண்டு வீடுகளுக்கும்
பரல்களின் குறைந்த அளவு எண்ணிக்கை எவ்வளவு இருக்க வேண்டும் என்று
நமது முனிவர்கள் குறித்து வைத்துவிட்டுப்போயிருக்கிறார்கள். அதைக் கீழே
கொடுத்துள்ளேன்.

1. லக்கினம் 25
2ஆம் வீடு - 22
3ஆம் வீடு 29
4ஆம் வீடு 24
5ஆம் வீடு 25
6ஆம் வீடு ............34
7ஆம் வீடு 19
8ஆம் வீடு 24
9ஆம் வீடு 29
10ஆம் வீடு ..........36
11ஆம் வீடு ...........54
12ஆம் வீடு 16

விளக்கம்: லக்கினத்தில் 25 பரல்கள் இருந்தால் போதும். வாழ்க்கை அர்த்தமுள்ளதாக
இருக்கும் 2ஆம் வீட்டில் 22 பரல்கள் இருந்தாலே குடும்ப வாழ்க்கை அமையும்.
4ஆம் வீட்டில் 24 இருந்தாலே போதும் கல்வி கிடைக்கும். 28 பரல்கள் இல்லாமல்
போய்விட்டதே என்று மனம் நொடிந்து போகாமல் இருப்பதற்காக, ஆராய்ந்து
இதை அவர்கள் கொடுத்திருக்கிறார்கள்.

10ஆம் வீட்டில் 36 பரல்கள் என்பது பெரும்பாலோர்களுக்குச் சாத்தியமில்லை!
அப்படியிருந்தால் நினைத்தபடி, தகுதியான, உயர்வான வேலை அமையும்.
அவ்வாறு இன்ஃபோஸிஸ் நாராயணமூர்த்தி, கலாநிதிமாறன், ஜெயலலிதா அம்மையார்
போன்றவர்களுக்கு வேண்டுமென்றால் இருக்கலாம். எல்லோருக்கும் எப்படியிருக்கும்?
ஆகவே அதை வைத்து ஸீரியசாகி விடாதீர்கள் அங்கே 30 பரல்கள் இருந்தாலே போதும்.
அதே கதைதான் 11ஆம் வீட்டிற்கும். அங்கேயும் 30 பரல்கள் இருந்தாலே போதும்

உங்களுக்கு இந்தக் குறைந்த அளவு பரல்கள் இருக்கிறதா என்று பாருங்கள்.
இருந்தால் போதும். சந்தோஷமாக இருங்கள்!
---------------------------------------------------------------------
பாடம் 2

வாழ்க்கையை மூன்று பகுதிகளாகப் பிரிக்கலாம்.

இளமை, நடு வயது, முதுமை

இந்த மூன்று பிரிவில் எந்தப் பகுதி நமக்கு நன்றாக இருக்கும் என்று தெரிந்து
கொள்ள முடியுமா?

முடியும்!

1.மீனம், மேஷம், ரிஷபம், மிதுனம் - இந்த நான்கு ராசிகளின் கூட்டல் தொகை
இளமைப் பருவம்
2.கடகம், சிம்மம், கன்னி, துலாம் - ஆகிய இந்த ராசிகளின் கூட்டல் தொகை
நடு வயதுக் காலம்.
3.விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம் - ஆகிய இந்த ராசிகளின் கூட்டல் தொகை
முதுமைக் காலம்.

இதில் எந்தப் பருவத்தில் கூட்டல்தொகை அதிகமாக உள்ளதோ அந்தப் பருவம்
தான் உங்கள் வாழ்வில் சிறப்பானதாக இருக்கும்

மூன்றில் குறைவானதாக இருக்கும் காலகட்டம் சிரமங்கள் மிகுந்ததாக இருக்கும்

-------------------------------------------------------------
பாடம் 3

பதவி, பணம், புகழ், மகிழ்ச்சி எல்லாம் உண்டா என்பதற்கு 10ம் வீட்டைவிட
11ஆம் வீட்டில் அதிகப் பரல்கள் இருக்க வேண்டும். ஆனால் 11ஆம் வீட்டை விட
12ஆம் வீட்டில் குறைந்த பரல்கள் இருக்க வேண்டும்.

ஒருவேளை 12ஆம் வீட்டில் 11ஆம் வீட்டைவிட அதிகப் பரல்கள் இருந்தால்
கிடைத்தும் பயனில்லை - ஊற்றிக்கொண்டுவிடும்

10th house >11th house <12th br="br" house="house">10th house >11th house >12th house = நல்லதல்ல
---------------------------------------------------------------
4.
லக்கினத்தில் 30 பரல்கள் இருந்து, லக்கினநாதன் 4th or 10th or 11th அதிபதி உடன்
சேர்ந்து இருந்தால் ஜாதகன் கலங்கரை விளக்கு போல (Light House) அனைவருக்கும்
உதவியாக இருப்பான்.
-----------------------------------------------------------------
5. கேந்திர ஸ்தானங்களில் தீய கிரகங்கள் இருந்து 9,10, 11ஆம் வீடுகளில் 21 அல்லது
அதற்குக் குறைவான பரல்கள் இருந்தால் நன்மையல்ல! விதி அந்த ஜாதகனைத்
திருவோட்டோடு தெருவில் நிறுத்திவிடும்.
-----------------------------------------------------------------
6.
லக்கினம், 9, 10, 11 ஆகிய நான்கு வீடுகளிலுமே 30 அல்லது அதற்கு மேற்பட்ட
பரல்கள் இருந்தால், அந்த ஜாதகனுக்கு உயர்ந்த செளகரியமான வாழ்க்கை அமையும்.
(Luxurious life) அது அவன் காலம் முடியும்வரை தொடர்ந்து இருக்கும்!
-----------------------------------------------------------------
இன்று பாடம் அதிக நீளமாக உள்ளது. பொறுத்துக்கொள்ளவும்!

மற்றவை அடுத்த பாடத்தில்

அன்புடன்
வாத்தியார்

(தொடரும்)

வாழ்க வளமுடன்!

90 comments:

  1. பாடம் நன்றாக உள்ளது.
    போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து.

    ReplyDelete
  2. நிறைய பாடம் சொல்லியிருக்கீங்க. சிலது முன்னேயே சொன்னது, சிலது புதியது... ஒரு ராசிக்காரங்க எல்லாருக்குமே ஒரு பருவத்தில் தான் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்னு சொல்ல முடியுமா, இல்லை, அவங்களோட perceptionஆ?

    //மூன்றில் குறைவானதாக இருக்கும் காலகட்டம் சிரமங்கள் மிகுந்ததாக இருக்கும்// அப்படின்னா என்ன?

    நன்றி!

    ReplyDelete
  3. //10ஆம் வீட்டில் 36 பரல்கள் என்பது பெரும்பாலோர்களுக்குச் சாத்தியமில்லை!
    அப்படியிருந்தால் நினைத்தபடி, தகுதியான, உயர்வான வேலை அமையும்.
    அவ்வாறு இன்ஃபோஸிஸ் நாராயணமூர்த்தி, கலாநிதிமாறன், ஜெயலலிதா அம்மையார்
    போன்றவர்களுக்கு வேண்டுமென்றால் இருக்கலாம். எல்லோருக்கும் எப்படியிருக்கும்?//
    வாத்தியரே எனக்கு 10 வீட்டில் 39 இருக்கு
    //10த் ஹௌஸ் >11த் ஹௌஸ் <12த் ஹௌஸ்! = நல்லது!
    10த் ஹௌஸ் >11த் ஹௌஸ் >12த் ஹௌஸ் = நல்லதல்ல//
    39<34>26 இதன் பலன் எப்ப்டி இருக்கும் வாத்தியரே?
    //லக்கினம், 9, 10, 11 ஆகிய நான்கு வீடுகளிலுமே 30 அல்லது அதற்கு மேற்பட்ட
    பரல்கள் இருந்தால், அந்த ஜாதகனுக்கு உயர்ந்த செளகரியமான வாழ்க்கை அமையும்.
    (லக்ஷூரீயஸ் லைஃப்) அது அவன் காலம் முடியும்வரை தொடர்ந்து இருக்கும்!//
    30,28,39,34 -> இதன் பலனையும் விளக்கும் படி வேண்டுகிறேன்.


    //பாடம் 2//

    சுத்தமாக புரியவில்லை, எப்ப்டி ரசிகளின் கூட்டு தோகை கணக்கு கிடுவது, உதாரணம் வேண்டுகிறேன்

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. //பாடம் 3

    பதவி, பணம், புகழ், மகிழ்ச்சி எல்லாம் உண்டா என்பதற்கு 10ம் வீட்டைவிட
    11ஆம் வீட்டில் அதிகப் பரல்கள் இருக்க வேண்டும். ஆனால் 11ஆம் வீட்டை விட
    12ஆம் வீட்டில் குறைந்த பரல்கள் இருக்க வேண்டும்.

    ஒருவேளை 12ஆம் வீட்டில் 11ஆம் வீட்டைவிட அதிகப் பரல்கள் இருந்தால்
    கிடைத்தும் பயனில்லை - ஊற்றிக்கொண்டுவிடும்

    10th house >11th house <12th house! = நல்லது!//

    10th house < 11th house >12th house! = நல்லது
    இப்படி அல்லவா இருக்க வேண்டும்?

    ReplyDelete
  6. I could not able to see my comment.....which I did before?


    -shankar

    ReplyDelete
  7. கண்ணதாசன்,இர்விங்,விவேகானந்தர்
    தந்தையார்,பெரியார்,முனிவர்,ஆசான்
    கமலுக்கு ஈடுகொடுத்து 7/10 அவதாரம்
    எடுத்துவிட்டீர்களே,ஐயா..பாடம் புரிய
    மாடு போல அசைபோடணும் நானும்!

    நீங்க சொன்ன ராசி பரல் கூட்டல்
    கணக்கு எல்லா ராசிக்கும் பொதுவா,ஐயா?

    என் நெருங்கிய நண்பன் ஒருவனுக்கு..
    1.லக்கினம்(தனுசு)28
    2ஆம் வீடு 26
    3ஆம் வீடு 22
    4ஆம் வீடு 31
    5ஆம் வீடு 32
    6ஆம் வீடு 33
    7ஆம் வீடு 19
    8ஆம் வீடு 26
    9ஆம் வீடு 28
    10ஆம் வீடு 35
    11ஆம் வீடு 35
    12ஆம் வீடு 22

    சவுதியில சந்தோசமா குப்பை கொட்டிகிட்டு
    இருக்கான்..வயசுக்கு வேண்டிய பயமோ
    பொறுப்போ இல்ல, நீங்கதான் அவனுக்கு நல்ல புத்தி சொல்லணும்.(நானும் அவனும்
    அடிக்கடி கண்ணாடிலே சந்திப்போம் :-))

    விவரமான பாடத்துக்கும்
    அதைவிட உங்க நேரத்துக்கும் ரொம்ப நன்றிங்க,ஆசானே!

    சக மாணாக்கர்கள் தர்ம அடி போட்றதுக்கு முன்னாடி, பாலா ஜூட்..

    ReplyDelete
  8. ஒரு ஆன்மீகக கூட்டத்தில் சொற்பொழிவாளர் சொல்லக் கேட்டது:
    வாழ்க்கயை இலகுவாக எடுத்துக் கொள்ள மூன்று முத்தான மூதுரைகள்

    1.இந்த உகத்தில் நமக்கு எது நடக்கணுமோ அது நடந்தே தீரும்.


    2.இந்த உலகில் நமக்கு எதுவெல்லாம் கிடக்கணுமோ அது கிடைத்தே தீரும்.

    3.இந்த பரந்த உலகில் எதுவெல்லாம் நம்மை விட்டு போகணுமோ அதுவெல்லம் போயே தீரும்.


    இவைகளின் உண்மையை அறிந்து கொண்டால் வாழ்வு என்றும் சுபமே.

    ReplyDelete
  9. இன்றைய பாடம் மிக அற்புதம் ஐயா!

    பாடம் 3படி

    எனக்கு
    10ல் 29
    11ல் 40
    12ல் 25
    ஆனால் பெரியதாக சிறப்பு இல்லையே?

    ஆனால் பாடம் 2படி
    எனக்கு நடுவயதில் குறைந்தபரல்கள் இருப்பதுதான் காரணமாக இருக்குமா?

    ReplyDelete
  10. //எளிமையாக இரு. எல்லா உணவும் ஒன்றுதான். தொண்டை
    வரைக்கும்தான் ருசி. அதற்குப் பிறகு அது பாசுமதி அரிசியாக இருந்தாலும் ஒன்றுதான்
    ஐ.ஆர் 20 அரிசியாக இருந்தாலும் ஒன்றுதான். //

    மனதை வருடும் வார்த்தைகள். எவ்வளவு பேர் இதை ஏற்றுக் கொள்கிறார்கள். 'ஸ்தேடஸ்' என்ற ஒற்றைச் சொல் மனிதனை எப்படி எல்லாம் மாற்றிவிடுகிறது.

    ReplyDelete
  11. ஆசிரியரே, வயிட்றில் புளியைக் கரைத்து விட்டிரே! எனக்கு 7ஆம் இடத்தில் 17 பரல்கள் தாம் உள்ளன. மூன்றுமுறை இறைவனை பிறாத்திக்கிறேன்.

    ReplyDelete
  12. ////ப.நவநீதகிருஷ்ணன் (Navaneethakrishnan) said...
    பாடம் நன்றாக உள்ளது.
    போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து.////

    நீங்கள் பாடம் நன்றாக உள்ளது என்கிறீர்கள். நன்றி!
    இன்னொருவர் சுத்தமாக புரியவில்லை என்கிறார் - இருங்கள்
    அவரைக் கவனித்துவிட்டு வருகிறேன்

    ReplyDelete
  13. /////ப.நவநீதகிருஷ்ணன் (Navaneethakrishnan) said...
    நான் கடைசியல்ல.////

    ஏன் உரக்கச் சொல்லுங்கள் - இன்று நீங்கள்தான் வகுப்பிற்கு முதல் வருகை!

    ReplyDelete
  14. ///கெக்கேபிக்குணி (05430279483680105313!) said...
    நிறைய பாடம் சொல்லியிருக்கீங்க. சிலது முன்னேயே சொன்னது, சிலது புதியது... ஒரு ராசிக்காரங்க எல்லாருக்குமே ஒரு பருவத்தில் தான் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்னு சொல்ல முடியுமா, இல்லை, அவங்களோட perceptionஆ?////

    மூன்று பருவத்திலுமே 112, 112, 113 என்று இருந்தால் அதாவது சமமான பரல்கள் இருந்தால்
    வாழ்க்கை ஏற்றத்தாழ்வுகள் இல்லாமல் இருக்கும்

    100, 124, 113 என்று இருக்குமேயானால் சிறு வயதில் பல துன்பங்களும் நடு வயதில்
    செழிப்பாகவும், வயதான காலத்தில் சிரமமாகவும் இருக்கும்

    இப்படிப் பொருள் கொள்ள வேண்டும்!

    ReplyDelete
  15. கோவை விமல்(vimal) said...

    //10ஆம் வீட்டில் 36 பரல்கள் என்பது பெரும்பாலோர்களுக்குச் சாத்தியமில்லை!
    அப்படியிருந்தால் நினைத்தபடி, தகுதியான, உயர்வான வேலை அமையும்.
    அவ்வாறு இன்ஃபோஸிஸ் நாராயணமூர்த்தி, கலாநிதிமாறன், ஜெயலலிதா அம்மையார்
    போன்றவர்களுக்கு வேண்டுமென்றால் இருக்கலாம். எல்லோருக்கும் எப்படியிருக்கும்?//
    வாத்தியரே எனக்கு 10 வீட்டில் 39 இருக்கு
    //10த் ஹௌஸ் >11த் ஹௌஸ் <12த் ஹௌஸ்! = நல்லது!
    10த் ஹௌஸ் >11த் ஹௌஸ் >12த் ஹௌஸ் = நல்லதல்ல//
    39<34>26 இதன் பலன் எப்ப்டி இருக்கும் வாத்தியரே?
    //லக்கினம், 9, 10, 11 ஆகிய நான்கு வீடுகளிலுமே 30 அல்லது அதற்கு மேற்பட்ட
    பரல்கள் இருந்தால், அந்த ஜாதகனுக்கு உயர்ந்த செளகரியமான வாழ்க்கை அமையும்.
    (லக்ஷூரீயஸ் லைஃப்) அது அவன் காலம் முடியும்வரை தொடர்ந்து இருக்கும்!//
    30,28,39,34 -> இதன் பலனையும் விளக்கும் படி வேண்டுகிறேன்.

    தொழில் ஸ்தானத்தைவிட பரல்கள் லாபஸ்தானத்தில் பரல்கள் அதிகமாக உள்ளன!
    அதானால் செய்யும் வேலையை விட அதிகமான பலன்கள் கிடைக்கும்

    ஆனால் 10ல் 28 பரல்கள்தானே சுவாமி உள்ளது. அதனால் முயற்சி + உழைப்பு இரண்டும் வேண்டும்
    அதாவது தானாக எதுவும் தேடி வராது!

    ReplyDelete
  16. கோவை விமல்(vimal) said...
    //பாடம் 3
    பதவி, பணம், புகழ், மகிழ்ச்சி எல்லாம் உண்டா என்பதற்கு 10ம் வீட்டைவிட
    11ஆம் வீட்டில் அதிகப் பரல்கள் இருக்க வேண்டும். ஆனால் 11ஆம் வீட்டை விட
    12ஆம் வீட்டில் குறைந்த பரல்கள் இருக்க வேண்டும்.
    ஒருவேளை 12ஆம் வீட்டில் 11ஆம் வீட்டைவிட அதிகப் பரல்கள் இருந்தால்
    கிடைத்தும் பயனில்லை - ஊற்றிக்கொண்டுவிடும்
    10th house >11th house <12th house! = நல்லது!//
    10th house < 11th house >12th house! = நல்லது
    இப்படி அல்லவா இருக்க வேண்டும்?///

    குறிய்யீட்டை வைத்துக் குழப்பிக்கொள்ளாதீர்கள். பாடத்தை மீண்டும் இரண்டு முறை நன்றாகப் படிக்கவும்!

    ReplyDelete
  17. ////Anonymous said...
    I could not able to see my comment.....which I did before?
    -shankar////
    இல்லை நண்பரே - மெயில் அக்கவுன்ட்டில் பின்னூட்டம் எதுவும் பாக்கியில்லை!
    நீங்கள் மறுபடியும் ஒருமுறை எழுதுங்கள் .Comment Box ஓப்பனாகத்தான் உள்ளது!

    ReplyDelete
  18. வாத்தியரே, இப்போது புரிந்து விட்டது, எனக்கு 127,109,101 வருகிறது, இளமை காலம் என்றால் எத்தனை ஆண்டு? அதேபோல் மற்ற இரு பருவ கால அளவு?

    கெக்கேபிக்குணி (05430279483680105313!)-ku நன்றி.

    ReplyDelete
  19. //தொழில் ஸ்தானத்தைவிட பரல்கள் லாபஸ்தானத்தில் பரல்கள் அதிகமாக உள்ளன!
    அதானால் செய்யும் வேலையை விட அதிகமான பலன்கள் கிடைக்கும்

    ஆனால் 10ல் 28 பரல்கள்தானே சுவாமி உள்ளது. அதனால் முயற்சி + உழைப்பு இரண்டும் வேண்டும்
    அதாவது தானாக எதுவும் தேடி வராது!//

    நன்றி வாத்தியரே, முயற்சி செய்து கொண்டுதான் இருக்கிறேன் ஆனால் நேரம் சரி இல்லை போலும், பலன் எதுவும் கிடைக்க மாட்டேங்குது :-(((

    //குறிய்யீட்டை வைத்துக் குழப்பிக்கொள்ளாதீர்கள். பாடத்தை மீண்டும் இரண்டு முறை நன்றாகப் படிக்கவும்!//

    படித்து விட்டேன், இப்போது விளங்கி விட்டது, நன்றி வாத்தியரே

    ReplyDelete
  20. தங்கள் தந்தையின் பொன் வரிகள் தான் இந்த பாடத்தின் சுருக்கம்.

    கழுத்துக்கு கீழே போனா கசம் என என் அப்பா அடிக்கடி சொல்ல கேட்டிருக்கிறேன்.

    தங்கள் நேரத்தை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி குருவே.

    ReplyDelete
  21. ///நானும் அவனும்
    அடிக்கடி கண்ணாடிலே சந்திப்போம் :-))//

    ஐயா,
    சுத்தி வளைச்சு சொன்னதுக்கு மன்னிக்கணும்.. என் பின்னூட்டத்துல என் பரல்களைத்தான் போட்டிருக்கேன்.. வேணும் உங்க ஆசிகளும் ஆலோசனையும்..

    அன்பு பாலா

    ReplyDelete
  22. how to calculate parals?any link is avilable.

    ReplyDelete
  23. வாழ நினைத்தால் வாழலாம்
    வழியா இல்லை பூமியில்
    ஆழக் கடலும் சோலையாகும்
    ஆசையிருந்தால் நீந்திவா

    (வாழ)

    பார்க்கத் தெரிந்தால் பாதை தெரியும்
    பார்த்து நடந்தால் பயணம் தொடரும்
    பயணம் தொடர்ந்தால் கதவு திறக்கும்
    கதவு திறந்தால் காட்சி கிடைக்கும்
    காட்சி கிடைத்தால் கவலை தீரும்
    கவலை தீர்ந்தால் வாழலாம்

    ReplyDelete
  24. ஐயா பரல்களின் மதிப்பை எளிமையாக கனக்கிடும் முறையை மீண்டும் ஒருமுறை சராசரிமாணவர்களுக்கு விளக்கவும்.

    ReplyDelete
  25. /////தமாம் பாலா said...

    சவுதியில சந்தோசமா குப்பை கொட்டிகிட்டு
    இருக்கான்..வயசுக்கு வேண்டிய பயமோ
    பொறுப்போ இல்ல, நீங்கதான் அவனுக்கு நல்ல புத்தி சொல்லணும்.(நானும் அவனும்
    அடிக்கடி கண்ணாடிலே சந்திப்போம் :-))/////

    புத்திமதி சொன்னால் யாரும் கேட்கமாட்டார்கள்.
    அதற்கு யாராவது மருந்து கண்டுபிடித்தால் நன்றாக இருக்கும்:-))))

    //// விவரமான பாடத்துக்கும்
    அதைவிட உங்க நேரத்துக்கும் ரொம்ப நன்றிங்க,ஆசானே!///

    பரவாயில்லை மிஸ்டர் பாலா!

    ReplyDelete
  26. /////திருநெல்வேலி கார்த்திக் said...
    ஒரு ஆன்மீகக கூட்டத்தில் சொற்பொழிவாளர் சொல்லக் கேட்டது:
    வாழ்க்கயை இலகுவாக எடுத்துக் கொள்ள மூன்று முத்தான மூதுரைகள்
    1.இந்த உகத்தில் நமக்கு எது நடக்கணுமோ அது நடந்தே தீரும்.
    2.இந்த உலகில் நமக்கு எதுவெல்லாம் கிடக்கணுமோ அது கிடைத்தே தீரும்.
    3.இந்த பரந்த உலகில் எதுவெல்லாம் நம்மை விட்டு போகணுமோ அதுவெல்லம் போயே தீரும்.
    இவைகளின் உண்மையை அறிந்து கொண்டால் வாழ்வு என்றும் சுபமே.////

    இதையெல்லாம் ஒருவரும் கேட்க மாட்டார்கள். அள்ள அள்ள பணம் கிடைக்கும்
    என்று பிரச்சாரம் செய்யுங்கள் - உங்கள் பின்னால் பலர் கூட்டமாக வருவார்கள்:-)))

    ReplyDelete
  27. ////கூடுதுறை said...
    இன்றைய பாடம் மிக அற்புதம் ஐயா!
    பாடம் 3படி
    எனக்கு
    10ல் 29
    11ல் 40
    12ல் 25
    ஆனால் பெரியதாக சிறப்பு இல்லையே?///

    11ஆம் இடத்தில் 40 பரல்கள் உள்ளன அல்லவா? அந்த இடத்து நாதனின் தசா புக்தி நடக்கும்போது
    சிறப்பாக இருக்கும்! அப்போதுதான் பலன் கிடைக்கும்

    ReplyDelete
  28. ////VIKNESHWARAN said...
    //எளிமையாக இரு. எல்லா உணவும் ஒன்றுதான். தொண்டை
    வரைக்கும்தான் ருசி. அதற்குப் பிறகு அது பாசுமதி அரிசியாக இருந்தாலும் ஒன்றுதான்
    ஐ.ஆர் 20 அரிசியாக இருந்தாலும் ஒன்றுதான். //
    மனதை வருடும் வார்த்தைகள். எவ்வளவு பேர் இதை ஏற்றுக் கொள்கிறார்கள். 'ஸ்டேடஸ்' என்ற ஒற்றைச் சொல் மனிதனை எப்படி எல்லாம் மாற்றிவிடுகிறது.////

    ஆமாம், ஆனால் இறப்பில் அந்த 'ஸ்டேடஸ்' இல்லாமல் போய்விடுகிறது
    எல்லோரும் சமம்! யாரும் எதையும் கொண்டு போக முடியாது.

    ReplyDelete
  29. ////Anonymous said...
    ஆசிரியரே, வயிற்றில் புளியைக் கரைத்து விட்டிரே! எனக்கு 7ஆம் இடத்தில் 17 பரல்கள் தாம் உள்ளன. மூன்றுமுறை இறைவனை பிறாத்திக்கிறேன்./////

    ஒரு காட்சியை மட்டும் வைத்து முடிவிற்கு வந்து விடாதீர்கள். மற்ற விஷயங்களையும் பாருங்கள்
    7க்கு உரியவன், களத்திரகாரகன், 7ஆம் இடத்தைப் பார்ப்பவன், 7ஆம் அதிபதியோடு சேர்ந்து இருப்பவன்......இப்படிப்பல விஷயனங்கள் உள்ளன. I am teaching only general rules. For a particular horoscope, consult a good astrologer!

    ReplyDelete
  30. /////கோவை விமல்(vimal) said...
    வாத்தியரே, இப்போது புரிந்து விட்டது, எனக்கு 127,109,101 வருகிறது, இளமை காலம் என்றால் எத்தனை ஆண்டு? அதேபோல் மற்ற இரு பருவ கால அளவு?////

    உத்தேசமாக 25 ஆண்டுகள் அல்லது 28 ஆண்டுகள் என்று வைத்துக்கொள்ளுங்கள்
    அதாவது ஒருவர் 75 வருடம் உயிரோடு இருப்பார் என்றால் 75 வகுத்தல் 3 = 25

    ReplyDelete
  31. /////கோவை விமல்(vimal) said...
    //தொழில் ஸ்தானத்தைவிட பரல்கள் லாபஸ்தானத்தில் பரல்கள் அதிகமாக உள்ளன!
    அதானால் செய்யும் வேலையை விட அதிகமான பலன்கள் கிடைக்கும்
    ஆனால் 10ல் 28 பரல்கள்தானே சுவாமி உள்ளது. அதனால் முயற்சி + உழைப்பு இரண்டும் வேண்டும் அதாவது தானாக எதுவும் தேடி வராது!//
    நன்றி வாத்தியரே, முயற்சி செய்து கொண்டுதான் இருக்கிறேன் ஆனால் நேரம் சரி இல்லை போலும், பலன் எதுவும் கிடைக்க மாட்டேங்குது :-(((
    //குறிய்யீட்டை வைத்துக் குழப்பிக்கொள்ளாதீர்கள். பாடத்தை மீண்டும் இரண்டு முறை நன்றாகப் படிக்கவும்!//
    படித்து விட்டேன், இப்போது விளங்கி விட்டது, நன்றி வாத்தியரே////

    விளங்கிவிட்டதல்லவா? அப்பாடா, இன்று தப்பித்தேன்:-)))))))

    ReplyDelete
  32. ambi said...
    தங்கள் தந்தையின் பொன் வரிகள் தான் இந்த பாடத்தின் சுருக்கம்.
    கழுத்துக்கு கீழே போனா கசம் என என் அப்பா அடிக்கடி சொல்ல கேட்டிருக்கிறேன்.
    தங்கள் நேரத்தை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி குருவே.////

    நன்றி அம்பி, உங்கள் அப்பாவும் அதைச் சொல்லியிருக்கிறார் பாருங்கள். அதனால்தான்
    old is gold என்கிறோம்

    ReplyDelete
  33. ////தமாம் பாலா said...
    ///நானும் அவனும்
    அடிக்கடி கண்ணாடிலே சந்திப்போம் :-))//
    ஐயா,
    சுத்தி வளைச்சு சொன்னதுக்கு மன்னிக்கணும்.. என் பின்னூட்டத்துல என் பரல்களைத்தான் போட்டிருக்கேன்.. வேணும் உங்க ஆசிகளும் ஆலோசனையும்..
    அன்பு பாலா////

    பொது இடத்தில் எப்படிச் சொல்வது பாலா?

    ReplyDelete
  34. ////Anonymous said...
    how to calculate parals?any link is avilable.//////

    பரல்களின் மதிப்பை உங்கள் ஜாதகத்திற்கு எழுதிக்கொடுக்க மென்பொருள் இருக்கிறது நண்பரே
    அதன் சுட்டியைப் பலமுறை கொடுத்துள்ளேன். உங்களுக்காக மீண்டும் ஒருமுறை:
    www.jagannaathahora.com/

    ReplyDelete
  35. /////Anonymous said...
    வாழ நினைத்தால் வாழலாம்
    வழியா இல்லை பூமியில்
    ஆழக் கடலும் சோலையாகும்
    ஆசையிருந்தால் நீந்திவா
    (வாழ)
    பார்க்கத் தெரிந்தால் பாதை தெரியும்
    பார்த்து நடந்தால் பயணம் தொடரும்
    பயணம் தொடர்ந்தால் கதவு திறக்கும்
    கதவு திறந்தால் காட்சி கிடைக்கும்
    காட்சி கிடைத்தால் கவலை தீரும்
    கவலை தீர்ந்தால் வாழலாம்/////

    இப்படிப்பட்ட மனநிலையுடன் இருந்து விட்டால் ஜாதகம் பார்க்கத் தேவையில்லை நண்பரே!

    ReplyDelete
  36. ////Anonymous said...
    ஐயா பரல்களின் மதிப்பை எளிமையாக கணக்கிடும் முறையை மீண்டும் ஒருமுறை சராசரிமாணவர்களுக்கு விளக்கவும்./////

    நானே சராசரி வாத்தியார்தான் நண்பரே!
    பரல்களின் மதிப்பை உங்கள் ஜாதகத்திற்கு எழுதிக்கொடுக்க மென்பொருள் இருக்கிறது நண்பரே
    அதன் சுட்டியைப் பலமுறை கொடுத்துள்ளேன். உங்களுக்காக மீண்டும் ஒருமுறை:
    www.jagannaathahora.com/

    ReplyDelete
  37. வாத்தியரே, கோவையில் அல்லது கொச்சியில் தங்களுக்கு தெரிந்த நல்ல ஜோதிடர்கள் யாராவது இருந்தால் முகவரி தரவும், நல்ல ஜோதிடர்களை கண்டுபிடிப்பது அரிதாகிவிட்டது. நானும் தேடுதல் முயற்சியில் தான் இருக்கிறேன்.

    ReplyDelete
  38. ஐயா, எனக்கு 115, 114, 108 என்ற வரிசை வருகிறது. இப்போது நடக்கும் இளமைப் பருவம்(தற்போது 22 வயது) நன்றாகத் தான் உள்ளது. இதே போல் நடு வயதிலும் நன்றாக செல்லுமா? ஒரு பரல் குறைவதால் சிறு சிறு பிரச்சனைகள் ஏற்படுமா?

    ReplyDelete
  39. ஐயா,
    இன்றைய பாடம் மிக அற்புதம், நன்றாக உள்ளது.

    நன்றி !!

    GK. BLR..

    ReplyDelete
  40. //இப்படிப் பொருள் கொள்ள வேண்டும்! // சாரி வாத்தியார் அய்யா, தசாவதாரம் படம் பார்க்கலயேன்னு கவலையில சரியா பாடத்தை கவனிக்கலை:-)

    இப்போ புரிஞ்சுது. நன்றி.

    ReplyDelete
  41. வாத்தியாரே உங்கள் தந்தை தந்த பாடம் மிகவும் பொருள் பொதிந்தது!
    நன்றி!

    ReplyDelete
  42. /////கோவை விமல்(vimal) said...
    வாத்தியரே, கோவையில் அல்லது கொச்சியில் தங்களுக்கு தெரிந்த நல்ல ஜோதிடர்கள் யாராவது இருந்தால் முகவரி தரவும், நல்ல ஜோதிடர்களை கண்டுபிடிப்பது அரிதாகிவிட்டது. நானும் தேடுதல் முயற்சியில் தான் இருக்கிறேன்.////

    ஜோதிடரிடம் போகிற அளவிற்கு என்ன கவலை?
    இருந்தாலும் தருகிறேன்.
    முன்பே கொடுத்ததுதான்; பழைய பதிவுகளைப் படிக்க மாட்டீர்களா?
    சுட்டி:
    http://classroom2007.blogspot.com/2008/04/blog-post.html
    Lesson No.63ல் நிறைய உள்ளது. பார்க்கவும்
    ----------------
    முகவரி:
    Mr.N.K.Diwakaran
    Astrologer,
    Savithri Photo Shop Building (upstairs)
    Next to Hotel Seetharam
    Kalingarayar Street, Ramnagar
    Coimbatore - 641 009

    ReplyDelete
  43. ////மணிவேல் said...
    ஐயா, எனக்கு 115, 114, 108 என்ற வரிசை வருகிறது. இப்போது நடக்கும் இளமைப் பருவம்(தற்போது 22 வயது) நன்றாகத் தான் உள்ளது. இதே போல் நடு வயதிலும் நன்றாக செல்லுமா? ஒரு பரல் குறைவதால் சிறு சிறு பிரச்சனைகள் ஏற்படுமா?////

    ஒரு பரலில் எல்லாம் பெரிய வித்தியாசம் இல்லை!
    எதற்கு யோசனை! ஜாதகங்களையெல்லாம் மீறி இறையருள் இருக்கிறது
    துணிவோடு இருங்கள்!

    ReplyDelete
  44. ////கனிமொழி said...
    ஐயா,
    இன்றைய பாடம் மிக அற்புதம், நன்றாக உள்ளது.
    நன்றி !!
    GK. BLR..///
    நீங்கள் சொல்லிவிட்டீர்கள். ஆனால் இந்த விமல் ஃபேப்ரிக்ஸ்காரர் சொல்ல மாட்டேன் என்கிறாரே!

    ReplyDelete
  45. ////கெக்கேபிக்குணி (05430279483680105313!) said...
    //இப்படிப் பொருள் கொள்ள வேண்டும்! // சாரி வாத்தியார் அய்யா, தசாவதாரம் படம் பார்க்கலயேன்னு கவலையில சரியா பாடத்தை கவனிக்கலை:-)
    இப்போ புரிஞ்சுது. நன்றி.////

    ஆகா, தாய்க்குலத்திற்கு எதற்குக் கவலை? தசாவதாரம் எங்கே போய்விடப்போகிறது?
    இன்னும் 4 மாதங்களில் அது நிச்சயம் சின்னத்திரையில் வெளியாகும். அப்போது பார்த்துக்கொண்டால் போகிறது சகோதரி!

    ReplyDelete
  46. /////திவா said...
    வாத்தியாரே உங்கள் தந்தை தந்த பாடம் மிகவும் பொருள் பொதிந்தது!
    நன்றி!////

    என் தந்தையார் சொல்லிக்கொடுத்தது நிறைய!
    சந்தர்ப்பம் வரும்போது ஒவ்வொன்றாக எழுதுகிறேன் நண்பரே!

    ReplyDelete
  47. //இதையெல்லாம் ஒருவரும் கேட்க மாட்டார்கள். அள்ள அள்ள பணம் கிடைக்கும்
    என்று பிரச்சாரம் செய்யுங்கள் - உங்கள் பின்னால் பலர் கூட்டமாக வருவார்கள்:-)))

    தங்கள் சொல்ல்வது 100/100 உண்மை

    இந்த வார இந்தியா டுடேயில் பேரசைக் குபரேர்கள், குசேலராய் ஆனது பற்றி தனிக் கட்டுரையே வந்துள்ளது.

    பங்கு வாணிகத்தில் அள்ளலாம் என்று எண்ணி கவ்ர்ச்சி விளம்பரங்களையும்,ஆசை வார்த்தைகளையும்.நம்பி நல்ல படித்த வர்க்கம் லட்ச்க் கணக்கில் ஏமாந்த சோணகிரியாய் ஆனாலும், அடுத்து ஏமாருவதற்கு தயாராகும் சிகாமணிகள்
    திருந்துவதற்கு இந்த ஜ்என்மம் முழுவதும் போறாது ஐயா.

    இந்த அறிவுஜீவிகளின்

    படுகுழிகள்,புதை மனல்,மாய வ்லை,மயக்கும் மோகினி,சுட்டெரிக்கும் செந்தழல்

    1.பசப்பும் பங்கு வாணிபத்தில் தின வர்த்தகம்
    2.மயக்கும் மல்டி லெவல் மார்க்கட்டிங்
    3.அசத்தும் அநியாவட்டி விகிதம்
    4.கிறுக்கணாக்கும் கிரடிட் கார்ட்
    5.டபாய்க்கும் டபுளிங் வர்த்தகம்
    6.முட்டாளாக்கும் 1 க்கு 3

    ReplyDelete
  48. Dear Sir

    I have couple of questions..

    (1). why specifically 6 house has to have more points than 8th or 12th houses?

    (2). Can you correlate this theory with formula 1?

    (3). You have mentioned in one answer that there are other possibilites to look for if the house doesnot have enough point to conclude? Is this paral method were used by astrologers in vedic horoscope....

    (4) how accurate this ashtravarka method while comparing to vedic astrology?

    Thanks in advance for your help.

    -Shankar

    ReplyDelete
  49. ////திருநெல்வேலி கார்த்திக் said...
    //இதையெல்லாம் ஒருவரும் கேட்க மாட்டார்கள். அள்ள அள்ள பணம் கிடைக்கும்
    என்று பிரச்சாரம் செய்யுங்கள் - உங்கள் பின்னால் பலர் கூட்டமாக வருவார்கள்:-)))
    தங்கள் சொல்ல்வது 100/100 உண்மை
    இந்த வார இந்தியா டுடேயில் பேரசைக் குபரேர்கள், குசேலராய் ஆனது பற்றி தனிக் கட்டுரையே வந்துள்ளது.
    பங்கு வாணிகத்தில் அள்ளலாம் என்று எண்ணி கவ்ர்ச்சி விளம்பரங்களையும்,ஆசை வார்த்தைகளையும்.நம்பி நல்ல படித்த வர்க்கம் லட்ச்க் கணக்கில் ஏமாந்த சோணகிரியாய் ஆனாலும், அடுத்து ஏமாருவதற்கு தயாராகும் சிகாமணிகள்
    திருந்துவதற்கு இந்த ஜ்என்மம் முழுவதும் போறாது ஐயா.
    இந்த அறிவுஜீவிகளின்
    படுகுழிகள்,புதை மனல்,மாய வ்லை,மயக்கும் மோகினி,சுட்டெரிக்கும் செந்தழல்
    1.பசப்பும் பங்கு வாணிபத்தில் தின வர்த்தகம்
    2.மயக்கும் மல்டி லெவல் மார்க்கட்டிங்
    3.அசத்தும் அநியாவட்டி விகிதம்
    4.கிறுக்கணாக்கும் கிரடிட் கார்ட்
    5.டபாய்க்கும் டபுளிங் வர்த்தகம்
    6.முட்டாளாக்கும் 1 க்கு 3//////

    இதெல்லாம் சனியின் விளையாட்டு!
    யாருக்கு 11ஆம் வீடு நன்றாக இருகிறதோ (House for specualations) அவர்களுக்கு மட்டுமே பங்கு மார்க்கெட்டில் பணம் வரும். மற்றவர்களுக்கெல்லாம் போகும்!

    ReplyDelete
  50. ////திருநெல்வேலி கார்த்திக் said...
    //இதையெல்லாம் ஒருவரும் கேட்க மாட்டார்கள். அள்ள அள்ள பணம் கிடைக்கும்
    என்று பிரச்சாரம் செய்யுங்கள் - உங்கள் பின்னால் பலர் கூட்டமாக வருவார்கள்:-)))
    தங்கள் சொல்ல்வது 100/100 உண்மை
    இந்த வார இந்தியா டுடேயில் பேரசைக் குபரேர்கள், குசேலராய் ஆனது பற்றி தனிக் கட்டுரையே வந்துள்ளது.
    பங்கு வாணிகத்தில் அள்ளலாம் என்று எண்ணி கவ்ர்ச்சி விளம்பரங்களையும்,ஆசை வார்த்தைகளையும்.நம்பி நல்ல படித்த வர்க்கம் லட்ச்க் கணக்கில் ஏமாந்த சோணகிரியாய் ஆனாலும், அடுத்து ஏமாருவதற்கு தயாராகும் சிகாமணிகள்
    திருந்துவதற்கு இந்த ஜ்என்மம் முழுவதும் போறாது ஐயா.
    இந்த அறிவுஜீவிகளின்
    படுகுழிகள்,புதை மனல்,மாய வ்லை,மயக்கும் மோகினி,சுட்டெரிக்கும் செந்தழல்
    1.பசப்பும் பங்கு வாணிபத்தில் தின வர்த்தகம்
    2.மயக்கும் மல்டி லெவல் மார்க்கட்டிங்
    3.அசத்தும் அநியாவட்டி விகிதம்
    4.கிறுக்கணாக்கும் கிரடிட் கார்ட்
    5.டபாய்க்கும் டபுளிங் வர்த்தகம்
    6.முட்டாளாக்கும் 1 க்கு 3//////

    இதெல்லாம் சனியின் விளையாட்டு!
    யாருக்கு 11ஆம் வீடு நன்றாக இருகிறதோ (House for speculations) அவர்களுக்கு மட்டுமே பங்கு மார்க்கெட்டில் பணம் வரும். மற்றவர்களுக்கெல்லாம் போகும்!

    ReplyDelete
  51. ////Anonymous said...
    Dear Sir
    I have couple of questions..
    (1). why specifically 6த் house has to have more points than 8th or 12th houses?///

    6th house is the house for debt, diseases and enemies. So, there should be more paralas to counter the evil things

    ////(2). Can you correlate this theory with formula 1?///

    Formula one is formulated by sages! It should be taken as it is given!

    ////(3). You have mentioned in one answer that there are other possibilities to look for if the house does not have enough point to conclude? Is this paral method were used by astrologers in vedic horoscope....///

    Paral is the secondary thing. There are many other things in the predictive astrology. I will come to those lessons in the later part of the serial

    ////(4) how accurate this ashtravarka method while comparing to vedic astrology?///

    It is also a part of vedic astrology!

    ReplyDelete
  52. ஐயா அவசியம் சொல்லுங்க. ஆர்வத்துடன் எதிர் பார்க்கிறேன்.
    அனுபவத்தில பெரியவங்க சொல்கிற விஷயங்களுக்கு ஈடு இணை கிடையாது!

    ReplyDelete
  53. ///திவா said...
    ஐயா அவசியம் சொல்லுங்க. ஆர்வத்துடன் எதிர் பார்க்கிறேன்.
    அனுபவத்தில பெரியவங்க சொல்கிற விஷயங்களுக்கு ஈடு இணை கிடையாது!////

    உங்கள் ஆர்வத்திற்கு நன்றி திவா!
    சொல்லிக் கொண்டுதான்
    இருக்கிறேன்.
    தொடர்ந்து சொல்வேன்!

    ReplyDelete
  54. Dear Guruji,

    Can you please tell different ways of calculations. When I go to KErala, Astrologers say that Poonarpoosam 3rd Padham (Mithuna Raasi) whereas Tamil versions and the softwares indicate as 4th Padham with Kataka Raasi. Please clarify how to calculate with Paral with Kerala version of my horoscope.

    Many Thanks

    Sridhar S

    ReplyDelete
  55. ////Anonymous said...
    Dear Guruji,
    Can you please tell different ways of calculations. When I go to KErala, Astrologers say that Poonarpoosam 3rd Padham (Mithuna Raasi) whereas Tamil versions and the softwares indicate as 4th Padham with Kataka Raasi. Please clarify how to calculate with Paral with Kerala version of my horoscope.
    Many Thanks
    Sridhar S///
    It is due to 2 type of Panjangams used by Astrologers.
    Forget them. See the sidebar in my blog.There is a site for free calculation of birth chart.Try with it
    It will give you correct data

    ReplyDelete
  56. ஐயா, கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும், ராஜயோகம். என்பதைப் பற்றியும். காலசர்பம் பற்றியும் எழுதவும்.

    ReplyDelete
  57. ///ஐயா, கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும், ராஜயோகம். என்பதைப் பற்றியும். காலசர்பம் பற்றியும் எழுதவும்.///

    Yes, sir please write about KSD in detail....

    -Shankar

    ReplyDelete
  58. ////Anonymous said...
    ஐயா, கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும், ராஜயோகம். என்பதைப் பற்றியும். காலசர்பம் பற்றியும் எழுதவும்./////

    எழுதுகிறேன் - சற்றுப் பொறுத்திருங்கள் நண்பரே!

    ReplyDelete
  59. ////Anonymous said...
    ///ஐயா, கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும், ராஜயோகம். என்பதைப் பற்றியும். காலசர்பம் பற்றியும் எழுதவும்.///
    Yes, sir please write about KSD in detail....
    -Shankar////

    I will write after completing Ashtakavarga! Mr.Sankar.Please wait!

    ReplyDelete
  60. //It is due to 2 type of Panjangams used by Astrologers.
    Forget them. See the sidebar in my blog.There is a site for free calculation of birth chart.Try with it எளிமையான வசதிக்கு நன்றிகள்.

    ReplyDelete
  61. //ஒருவேளை 12ஆம் வீட்டில் 11ஆம் வீட்டைவிட அதிகப் பரல்கள் இருந்தால் கிடைத்தும் பயனில்லை - ஊற்றிக்கொண்டுவிடும்
    10th house >11th house <12th house! = நல்லது!
    10th house >11th house >12th house = நல்லதல்ல//
    அப்படியா
    வார்த்தைகளில் கூறியது படி
    11th house > 12th house! = நல்லது!
    11th house < 12th house = நல்லதல்ல
    என்று தானே இருக்க வேண்டும்

    --

    லாபத்தை விட விரயம் குறைவாக இருந்தால் நலம்

    லாபத்தை விட விரயம் அதிகமாக இருந்தால் நல்லதல்ல

    ReplyDelete
  62. ஐயா,
    என்னுடைய வலைப்பூவை பார்த்து அதை மேன்மைபடுத்த ஆலோசனை வழங்குகள்...விஜய்-கோவை

    http://pugaippezhai.blogspot.com

    ReplyDelete
  63. பத்தாவது வீட்டை விட பதினொன்றாவது வீட்டில் அதிக பரல்கள் இருந்தால் --> கொஞ்சம் வேலை பார்த்து அதிகம் சம்பாதிக்கலாம்

    பதினொன்றாவது வீட்டை விட பத்தாவது வீட்டில் அதிக பரல்கள் இருந்தால் --> பார்க்கும் வேலைக்கு தகுந்த ஊதியம் கிடைக்காது

    --

    பன்னிரென்டாவது வீட்டை விட பதினொன்றாவது வீட்டில் அதிக பரல்கள் இருந்தால் --> சேமிப்பு கையில் இருக்கும்

    பதினொன்றாவது வீட்டை விட பன்னிரென்டாவது வீட்டில் அதிக பரல்கள் இருந்தால் --> கடன் இருக்கும்

    --

    எனவே

    10>11>12 - கஷ்டப்பட்டு வேலை. குறைவான ஊதியம். சேமிப்பு உண்டு. ஒரு சராசரி அலுவலகத்தில் வேலை பார்க்கும் சராசரி இந்தியன் !!!

    10>11<12- கஷ்டப்பட்டு வேலை. குறைவான ஊதியம். செலவு அதிகம். கடன் வாங்க வேண்டி வரலாம். மூட்டை தூக்குபவர், விவசாய கூலி போன்ற பெரும்பாலான இந்திய மக்கள்


    10<11>12 - செய்யும் வேலையை விட ஊதியம் அதிகமாக வரும். சேமிப்பு உண்டு. இது ஒரு மிகச்சிறந்த அமைப்பு. பல தலைமுறைகளுக்கு சொத்து சேர்ப்பவர்களுக்கு இந்த அமைப்பு இருக்கும்

    10<11<12 - செய்யும் வேலையை விட ஊதியம் அதிகமாக வரும். செலவு அதிகம். கடன் வாங்க வேண்டி வரலாம். அதிகம் சம்பாதித்து அதை விட அதிகம் கடன் வாங்குபவர்களுக்கு இந்த அமைப்பு இருக்கும்.

    --

    நீங்கள் கூட்டு தொழில் செய்வதாக இருந்தால், உங்களின் 10,11,12 இடங்களையும் உங்கள் தொழில் கூட்டாளியின் 10,11,12 இடங்களையும் பாருங்கள்

    உங்களின் ஜாதகத்தில் 10>11 என்றும் உங்களின் கூட்டாளியின் ஜாதகத்தில் 11>10 என்றும் இருந்தால் உங்கள் உழைப்பில் அவர் வசதியாக வாழ்கிறார் என்று பொருள்

    ReplyDelete
  64. //ஜோதிடரிடம் போகிற அளவிற்கு என்ன கவலை?//
    கவலை வருகிறது, போகிறது அது எந்த கால கட்டத்தில் என்று தெரிந்து கொள்ள தான் வாத்தியரே உங்கள் வகுப்பில் உள்ளேன், ஒரு நல்ல ஜோதிடர் இடத்தில் என் ஜாதகத்தை கணித்து வைத்து கொண்டால், இன்னும் எளிமையாக உங்கள் வகுப்பை அறிய உதவியாக இருக்கும் அதான் (எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்றிருக்கும் போது, நீ கவலைப் பட்டு என்ன ஆகப் போகிறது? ) :-))))

    //முன்பே கொடுத்ததுதான்; பழைய பதிவுகளைப் படிக்க மாட்டீர்களா?//
    பார்த்த ஞாபகம் உண்டு ஆனால் மறந்து விட்டேன். ஸாரி.

    //நீங்கள் சொல்லிவிட்டீர்கள். ஆனால் இந்த விமல் ஃபேப்ரிக்ஸ்காரர் சொல்ல மாட்டேன் என்கிறாரே//
    சொல்லிவிட்டால் போகிறது வாத்தியரே, பாடம் அருமை.
    ஃபேப்ரிக்ஸ்காரர் என்றால் என்ன வாத்தியரே?

    புருனோ-வின் விளக்கம் அருமை. நன்றி

    ReplyDelete
  65. ////திருநெல்வேலி கார்த்திக் said...
    //It is due to 2 type of Panjangams used by Astrologers.
    Forget them. See the sidebar in my blog.There is a site for free calculation of birth chart.Try with it
    எளிமையான வசதிக்கு நன்றிகள்.////

    ஆமாம், உங்கள் வசதிக்காகத்தான் மென்பொருள் தொடுப்பையெல்லாம் பதிவின் பக்க அட்டையிலேயே கொடுத்திருக்கிறேன். என்றைக்கும் இருக்கும் அல்லவா?
    எனக்கும் பதில் சொல்ல வசதி!:-)))

    ReplyDelete
  66. /////புருனோ Bruno said...
    //ஒருவேளை 12ஆம் வீட்டில் 11ஆம் வீட்டைவிட அதிகப் பரல்கள் இருந்தால் கிடைத்தும் பயனில்லை - ஊற்றிக்கொண்டுவிடும்
    10th house >11th house <12th house! = நல்லது!
    10th house >11th house >12th house = நல்லதல்ல//
    அப்படியா
    வார்த்தைகளில் கூறியது படி
    11th house > 12th house! = நல்லது!
    11th house < 12th house = நல்லதல்ல
    என்று தானே இருக்க வேண்டும்
    -----------------
    லாபத்தை விட விரயம் குறைவாக இருந்தால் நலம்
    லாபத்தை விட விரயம் அதிகமாக இருந்தால் நல்லதல்ல////

    நன்றாக விளக்கம் கொடுத்துள்ளீர்கள் டாக்டர்.
    நன்றி உரித்தாகுக!

    ReplyDelete
  67. ////Vijay said...
    ஐயா,
    என்னுடைய வலைப்பூவை பார்த்து அதை மேன்மைபடுத்த ஆலோசனை வழங்குகள்...விஜய்-கோவை
    http://pugaippezhai.blogspot.com////
    ஆகா, பார்த்துச் சொல்கிறேன் நண்பரே!

    ReplyDelete
  68. /////புருனோ Bruno said...
    பத்தாவது வீட்டை விட பதினொன்றாவது வீட்டில் அதிக பரல்கள் இருந்தால் --> கொஞ்சம் வேலை பார்த்து அதிகம் சம்பாதிக்கலாம்
    பதினொன்றாவது வீட்டை விட பத்தாவது வீட்டில் அதிக பரல்கள் இருந்தால் --> பார்க்கும் வேலைக்கு தகுந்த ஊதியம் கிடைக்காது
    பன்னிரென்டாவது வீட்டை விட பதினொன்றாவது வீட்டில் அதிக பரல்கள் இருந்தால் --> சேமிப்பு கையில் இருக்கும்
    பதினொன்றாவது வீட்டை விட பன்னிரென்டாவது வீட்டில் அதிக பரல்கள் இருந்தால் --> கடன் இருக்கும்
    எனவே
    10>11>12 - கஷ்டப்பட்டு வேலை. குறைவான ஊதியம். சேமிப்பு உண்டு. ஒரு சராசரி அலுவலகத்தில் வேலை பார்க்கும் சராசரி இந்தியன் !!!
    10>11<12- கஷ்டப்பட்டு வேலை. குறைவான ஊதியம். செலவு அதிகம். கடன் வாங்க வேண்டி வரலாம். மூட்டை தூக்குபவர், விவசாய கூலி போன்ற பெரும்பாலான இந்திய மக்கள்
    10<11>12 - செய்யும் வேலையை விட ஊதியம் அதிகமாக வரும். சேமிப்பு உண்டு. இது ஒரு மிகச்சிறந்த அமைப்பு. பல தலைமுறைகளுக்கு சொத்து சேர்ப்பவர்களுக்கு இந்த அமைப்பு இருக்கும்
    10<11<12 - செய்யும் வேலையை விட ஊதியம் அதிகமாக வரும். செலவு அதிகம். கடன் வாங்க வேண்டி வரலாம். அதிகம் சம்பாதித்து அதை விட அதிகம் கடன் வாங்குபவர்களுக்கு இந்த அமைப்பு இருக்கும்.
    நீங்கள் கூட்டு தொழில் செய்வதாக இருந்தால், உங்களின் 10,11,12 இடங்களையும் உங்கள் தொழில் கூட்டாளியின் 10,11,12 இடங்களையும் பாருங்கள்
    உங்களின் ஜாதகத்தில் 10>11 என்றும் உங்களின் கூட்டாளியின் ஜாதகத்தில் 11>10 என்றும் இருந்தால் உங்கள் உழைப்பில் அவர் வசதியாக வாழ்கிறார் என்று பொருள்/////

    அருமை டாக்டர்! சிறப்பாகச் சொல்லியிருக்கிறீர்கள்!
    இதே அமைப்பு வேலையில் இருப்பவர்களுக்கும் பொருந்தும்!
    உங்களைவிட உங்கள் மேலாதிகாரிக்கு 10 > 11 அதிகப் பரல்கள் என்றால், உங்கள் வேலையின் பலனை, நல்ல பெயரை, அவர் அடைந்து கொண்டிருப்பார்

    ReplyDelete
  69. Very useful and interesting post. Thank you sir.

    Kalkithasan
    (my tamil typing software is not working)

    ReplyDelete
  70. how can i find which raasi is in which house?(in order to see how life will be in youth, middle age and old age) thanks for these lessons

    ReplyDelete
  71. //

    Dear Guruji,
    Can you please tell different ways of calculations. When I go to KErala, Astrologers say that Poonarpoosam 3rd Padham (Mithuna Raasi) whereas Tamil versions and the softwares indicate as 4th Padham with Kataka Raasi. Please clarify how to calculate with Paral with Kerala version of my horoscope.
    Many Thanks
    Sridhar S///
    It is due to 2 type of Panjangams used by Astrologers.
    Forget them. See the sidebar in my blog.There is a site for free calculation of birth chart.Try with it
    It will give you correct data//

    Dear Guruji
    Thanks for your prompt response. In my case,my horoscope matches (with Kerala Astrologer's calculation) with only http://www.scientificastrology.com/freegrahanialaeng.htm (Free site) with AYNAMSA Chandrahari selection. Rest of the software indicate as Kataka Raasi instead of Methuna Raasi. I seem to have the "generic" behavious of Mithuna Raasi and not Kataka Raasi.

    Request you to help me to understand Aynamsa in detail.

    Best Regards


    Sridhar S

    ReplyDelete
  72. ////Kalkithasan said...
    Very useful and interesting post. Thank you sir.
    Kalkithasan
    (my tamil typing software is not working)///

    No problem! Thanks for your comment!

    ReplyDelete
  73. ////kulo said...
    how can i find which raasi is in which house?(in order to see how life will be in youth, middle age and old age) thanks for these lessons////

    Please read my old lessons.That is the only solution to understand my present writings!

    ReplyDelete
  74. ////Anonymous said...
    Thanks for your prompt response. In my case,my horoscope matches (with Kerala Astrologer's calculation) with only http://www.scientificastrology.com/freegrahanialaeng.htm (Free site) with AYNAMSA Chandrahari selection. Rest of the software indicate as Kataka Raasi instead of Methuna Raasi. I seem to have the "generic" behavious of Mithuna Raasi and not Kataka Raasi.
    Request you to help me to understand Aynamsa in detail.
    Best Regards
    Sridhar S////

    People born on the border of two rasis will face this type of problem.It is called as 'Kala Sandhi Births" Please read my old postings (lessons).You will understand what is kala sandhi!

    ReplyDelete
  75. அய்யா,
    எனக்கு 10,11,12ல் பரல்கள் முறையே 36, 40, 28 என்று இருக்கிறது. ஆனாலும் என்னுடைய உழைப்பின் பலனில் பெரும் பகுதி மற்றவருக்கே போய் சேருகிறது. மேனேஜர் அடையும் பலனை நான் குறிப்பிடவில்லை. ஏனென்றால் தனக்கு கீழே வேலை செய்பவரின் பலனை அடையும் ஸ்தானத்தில் மேனேஜர் இருக்கிறார்.

    //அருமை டாக்டர்! சிறப்பாகச் சொல்லியிருக்கிறீர்கள்!
    இதே அமைப்பு வேலையில் இருப்பவர்களுக்கும் பொருந்தும்!
    உங்களைவிட உங்கள் மேலாதிகாரிக்கு 10 > 11 அதிகப் பரல்கள் என்றால், உங்கள் வேலையின் பலனை, நல்ல பெயரை, அவர் அடைந்து கொண்டிருப்பார்//
    ஒரு திருத்தம். இந்த இடத்தில் 10 < 11 அல்லது 11 > 10 என்று இருக்க வேண்டும்.

    ReplyDelete
  76. How to calculate parals?
    the link you had given is not working.....

    ReplyDelete
  77. ////அமர பாரதி said...
    அய்யா,
    எனக்கு 10,11,12ல் பரல்கள் முறையே 36, 40, 28 என்று இருக்கிறது. ஆனாலும் என்னுடைய உழைப்பின் பலனில் பெரும் பகுதி மற்றவருக்கே போய் சேருகிறது. மேனேஜர் அடையும் பலனை நான் குறிப்பிடவில்லை. ஏனென்றால் தனக்கு கீழே வேலை செய்பவரின் பலனை அடையும் ஸ்தானத்தில் மேனேஜர் இருக்கிறார்.
    //அருமை டாக்டர்! சிறப்பாகச் சொல்லியிருக்கிறீர்கள்!
    இதே அமைப்பு வேலையில் இருப்பவர்களுக்கும் பொருந்தும்!
    உங்களைவிட உங்கள் மேலாதிகாரிக்கு 10 > 11 அதிகப் பரல்கள் என்றால், உங்கள் வேலையின் பலனை, நல்ல பெயரை, அவர் அடைந்து கொண்டிருப்பார்//
    ஒரு திருத்தம். இந்த இடத்தில் 10 < 11 அல்லது 11 > 10 என்று இருக்க வேண்டும்.///

    உஙகளூடைய மேலதிகாரிக்கு அவருடைய ஜதகத்தில் 10ஆம் வீட்டைவிட 11ஆம் வீட்டில் அதிகப் பரல்கள் இருப்பின், அவருக்கு கீழே வேலை பார்க்கும் (அவர் மேலாளர் அல்லவா?)
    அத்தனை பேரின் வேலைத் திறமையின் பலனும் அவரையே சென்றடையும்
    இப்போது குறியை எப்படி வேண்டுமென்றாலும் பொட்டுக்கொள்ளுங்கள்

    ReplyDelete
  78. ////Anonymous said...
    How to calculate parals?
    the link you had given is not working.....////

    Please see the side bar of this blog!
    I have given the site name for the free software

    ReplyDelete
  79. தந்தை சொல் மிக்க மந்திரமில்லை.
    இளமைப் பருவம்-110,நடு வயதுக் காலம்-100,முதுமைக் காலம்-127.
    10 ம் வீடு-28, 11 ம் வீடு-30,12ம் வீடு-30.நிலை எப்படி ஐயா? தேறுவோமா?

    ReplyDelete
  80. அமரபாரதி அவர்களின் கேள்வி, உங்களின் பதில் படித்ததும் எழுந்த ஐயம்:

    சுய தொழில் முனைவருக்கு எப்படி? அல்லது, எப்படி இருந்தாலும் 10ம் 11ம் பொறுத்து உழைப்பும் லாபமும் முறையே அமையுமா?

    ReplyDelete
  81. /////தியாகராஜன் said...
    தந்தை சொல் மிக்க மந்திரமில்லை.
    இளமைப் பருவம்-110,நடு வயதுக் காலம்-100,முதுமைக் காலம்-127.////

    முதுமைக்காலத்தில்தான் அதிகப் பரல்கள் வேண்டும். இருக்கிறதே! சந்தோஷப்பட்டுக்கொள்ளுங்கள்!

    /////10 ம் வீடு-28, 11 ம் வீடு-30,12ம் வீடு-30.நிலை எப்படி ஐயா? தேறுவோமா?////

    வரும் ஆனால் வராது கதைதான்.
    தேறும் ஆனால் மிஞ்சாது!

    If 12th has more parals than 10th, it is expense oriented horsocope!

    உங்கள் மனைவி பெயரில் சேருங்கள். அதுதான் தப்பிக்கும் வழி!
    அதாவது Money Management ஐ மனைவியிடம் கொடுத்து விடுங்கள்!

    ReplyDelete
  82. கெக்கேபிக்குணி (05430279483680105313!) said...
    அமரபாரதி அவர்களின் கேள்வி, உங்களின் பதில் படித்ததும் எழுந்த ஐயம்:
    சுய தொழில் முனைவருக்கு எப்படி? அல்லது, எப்படி இருந்தாலும் 10ம் 11ம் பொறுத்து உழைப்பும் லாபமும் முறையே அமையுமா?

    ஆமாம். 10 & 11ஐப் பொறுத்துதான் Result அமையும்
    பில் கேட்ஸ் என்ன சகோதரி பெரிய உழைப்பு உழைத்தார்? அம்பானி என்ன பெரிதாக உழைத்தார்? எல்லாம் ஜாதக அமைப்புத்தான்.

    ஆனால் கடவுள் கருணை மிக்கவர். முதலும் முடிவும் எல்லோருக்கும் ஒன்றுதான்
    போகும்போது யாரும் எதையும் கொண்டு போக முடியாது!
    அங்கே எல்லோரும் சமம்!

    ReplyDelete
  83. அய்யா,

    //போகும்போது யாரும் எதையும் கொண்டு போக முடியாது!
    அங்கே எல்லோரும் சமம்!//

    தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம். இப்படி சொல்வது ஒரு மனிதனை முயற்ச்சியற்றவனாக்கி விடும். பொருளிலார்க்கு இவ்வுலகமில்லை. பணம் இருந்தால்தான் மற்றவர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளைக்கூட சரியாக செய்ய முடியும். அது பெற்றோருக்காக இருந்தாலும் சரி, மற்றவர்களுக்காக இருந்தாலும் சரி.

    சைக்கிளில் போவதை விட காரில் போவதுதான் சவுகரியம். ஆனால் சைக்கிளில் செல்பவனுக்கு மன நிம்மதி அதிகம் என்று ஜல்லி அடிப்பது வெற்று வாதத்திற்கு வேண்டுமானால் உதவுமே தவிர வேறு எதற்கும் உதவாது.

    ReplyDelete
  84. அய்யா,

    நான் சொல்ல வந்தது என்னவென்றால் சட்டத்திற்கு உட்பட்டு மற்றவர்களுக்கு தீங்கு நேராமல் பணத்தை சம்பாதித்தே தீர வேண்டும். அதுதான் உலக வாழ்க்கையின் லட்சியம். அதை சரியான முறையில் சேமித்து பெருக்குவது இன்னும் மேல். லௌகீக சவுகரியங்கள் இந்த பூமியில் உள்ள ஒவ்வொரு மனிதனுக்கும் தேவை. அதை வேண்டாம் என்று சொல்ல எந்த முகாந்திரமும் இல்லை.

    ReplyDelete
  85. ////அமர பாரதி said...
    அய்யா,
    //போகும்போது யாரும் எதையும் கொண்டு போக முடியாது!
    அங்கே எல்லோரும் சமம்!//
    தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம். இப்படி சொல்வது ஒரு மனிதனை முயற்ச்சியற்றவனாக்கி விடும். பொருளிலார்க்கு இவ்வுலகமில்லை. பணம் இருந்தால்தான் மற்றவர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளைக்கூட சரியாக செய்ய முடியும். அது பெற்றோருக்காக இருந்தாலும் சரி, மற்றவர்களுக்காக இருந்தாலும் சரி.////

    ஒன்றாம் தேதியானால் Apartment Rent or Loan due கட்டப் பணம் வேண்டும். அரிசி மளிகை, பால், கிரானா பில்களுக்குப் பனம் வேண்டும். செல்போன், லாண்ட்லைன் பில் கட்டப் பணம் வேண்டும். எல்லாவற்றிற்கும் பணம் வேண்டும் சாமி! பணத்தை யார் வேண்டாம் என்று சொன்னது?

    //// சைக்கிளில் போவதை விட காரில் போவதுதான் சவுகரியம். ஆனால் சைக்கிளில் செல்பவனுக்கு மன நிம்மதி அதிகம் என்று ஜல்லி அடிப்பது வெற்று வாதத்திற்கு வேண்டுமானால் உதவுமே தவிர வேறு எதற்கும் உதவாது.///

    காரில் போகும்போது கூட நாம் ஓட்டாமல் டிரைவர் வைத்திருந்தால் இன்னமும் செளகரியம்!
    யார் இல்லை என்று சொன்னது?

    பணத்திற்காக வெறியாக அலையாதே என்பதுதான் வாதம்!
    பணம் மட்டுமே வாழ்க்கையல்ல!வாழ்க்கையில் மற்ற சந்தோஷங்களும் உள்ளன என்பதை
    உணர்ந்துகொள் என்பதுதான் வாதம்!

    உன்னிடம் அதிகமாக உள்ள பணத்தை நல்ல விதத்தில் பயன்படுத்து என்பதுதான் வாதம்!

    Earn money, enjoy the money, spend the money, save the money, circulate the money and don't accumulate money, if you accumulate the money, you will become ugly - Swamiji Dayananda Saraswathi - (இங்கே சொல்ல வந்தது இதுதான். accumulated money will not come with you!)
    சரிதானா நண்பரே?

    ReplyDelete
  86. எதிர்வாதம் செய்வதாக நினைத்துக் கொள்ள வேண்டாம். இந்த பதிவின் நோக்கத்திலிருந்து திசை திருப்ப வேண்டாம் என்று சும்மா இருந்தேன். (வாத்தியாரய்யா, அமரபாரதி தான் என் பென்சிலை எடுத்தாரு;)

    //ஒரு மனிதனை முயற்ச்சியற்றவனாக்கி விடும். // என்னைப் பொறுத்த வரையில், முயற்சி முழுதும் தேவை. திருபாய் அம்பானி (அவர் மகன்களைப் பற்றி யில்லை), பில்கேட்ஸ் ஜாதக அமைப்பு சிறந்ததாக இருக்கலாம். ஆனால், கண்ணில் தெரிவது அவர்கள் உழைப்பு, வாய்ப்புக்களைப் பயன்படுத்தும் திறமை. நான் எந்த திரைநட்சத்திரத்தையும் போல் ஆக விரும்பவில்லை. கடவுள் தந்த கட்டங்களுக்குள் வாழ்க்கையை முன்னேற்றிக் கொள்ள விரும்புகிறேன். முயற்சியில்லாமல் அது இயலாது. இன்னிக்கு, திரும்பிப் போய் 10வது வகுப்பில் ஸ்டேட் ஃபர்ஸ்ட் வாங்க முடியாது. ஆனால், "தன்னை" உயர்த்திக் கொள்ள முயற்சிக்காமல் இருந்தால், உம்மாச்சி கோச்சுப்பார். ஜட்ஜ்மென்ட் டே அது தான். என்னோட இரண்டணா.

    அடுத்த பதிவு வேற போட்டுட்டீங்க. போய் முழுசா படிக்கணும்.

    ReplyDelete
  87. ////Blogger கெக்கேபிக்குணி (05430279483680105313!) said...
    எதிர்வாதம் செய்வதாக நினைத்துக் கொள்ள வேண்டாம். இந்த பதிவின் நோக்கத்திலிருந்து திசை திருப்ப வேண்டாம் என்று சும்மா இருந்தேன். (வாத்தியாரய்யா, அமரபாரதி தான் என் பென்சிலை எடுத்தாரு;)
    //ஒரு மனிதனை முயற்ச்சியற்றவனாக்கி விடும். // என்னைப் பொறுத்த வரையில், முயற்சி முழுதும் தேவை. திருபாய் அம்பானி (அவர் மகன்களைப் பற்றி யில்லை), பில்கேட்ஸ் ஜாதக அமைப்பு சிறந்ததாக இருக்கலாம். ஆனால், கண்ணில் தெரிவது அவர்கள் உழைப்பு, வாய்ப்புக்களைப் பயன்படுத்தும் திறமை. நான் எந்த திரைநட்சத்திரத்தையும் போல் ஆக விரும்பவில்லை. கடவுள் தந்த கட்டங்களுக்குள் வாழ்க்கையை முன்னேற்றிக் கொள்ள விரும்புகிறேன். முயற்சியில்லாமல் அது இயலாது. இன்னிக்கு, திரும்பிப் போய் 10வது வகுப்பில் ஸ்டேட் ஃபர்ஸ்ட் வாங்க முடியாது. ஆனால், "தன்னை" உயர்த்திக் கொள்ள முயற்சிக்காமல் இருந்தால், உம்மாச்சி கோச்சுப்பார். ஜட்ஜ்மென்ட் டே அது தான். என்னோட இரண்டணா.
    அடுத்த பதிவு வேற போட்டுட்டீங்க. போய் முழுசா படிக்கணும்.////

    முயற்சியைப் பற்றி நான் இங்கே சொல்லவில்லை!
    முயற்சி அவசியம்!

    Actions are in your hands: Not the results = Bagavat Geetha
    அதன் அடிப்படையில்தான் பாடம் எடுத்துக் கொண்டிருக்கிறேன்

    யாரையும் ஃப்யூஸ் பிடுங்கிவிடுவது பதிவின் நோக்கமல்ல!

    பணத்திற்கும் இனிய வாழ்க்கைக்கும் உள்ள தொடர்பை விளக்க விரும்புகிறேன்
    அவ்வளவுதான்!

    There is a lot of difference between circulated money and accumulated money
    Please understand the difference!

    Accumulated money will not come with any one when he dies!
    That is the point I am stressing here!

    சரிதானா சகோதரி?

    ReplyDelete
  88. வாழ்க்கையை மூன்று பகுதிகளாகப் பிரிக்கலாம்.

    இளமை, நடு வயது, முதுமை

    இந்த மூன்று பிரிவில் எந்தப் பகுதி நமக்கு நன்றாக இருக்கும் என்று தெரிந்து
    கொள்ள முடியுமா?

    முடியும்!

    1.மீனம், மேஷம், ரிஷபம், மிதுனம் - இந்த நான்கு ராசிகளின் கூட்டல் தொகை
    இளமைப் பருவம்
    2.கடகம், சிம்மம், கன்னி, துலாம் - ஆகிய இந்த ராசிகளின் கூட்டல் தொகை
    நடு வயதுக் காலம்.
    3.விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம் - ஆகிய இந்த ராசிகளின் கூட்டல் தொகை
    முதுமைக் காலம்.

    இதில் எந்தப் பருவத்தில் கூட்டல்தொகை அதிகமாக உள்ளதோ அந்தப் பருவம்
    தான் உங்கள் வாழ்வில் சிறப்பானதாக இருக்கும்

    மூன்றில் குறைவானதாக இருக்கும் காலகட்டம் சிரமங்கள் மிகுந்ததாக இருக்கும்

    Dear Sir,

    Is the above rule is for all the lagna.That means for all the lagna we have to calculate from Meenam.
    Regards
    S.Janakiraman

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com