மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

29.1.16

Astrology: Quiz 102: தங்க மழை பெய்ய வேண்டும். தமிழில் குயில் பாட வேண்டும்!!


Astrology: Quiz 102: தங்க மழை பெய்ய வேண்டும். தமிழில் குயில் 
பாட வேண்டும்!!

ஜோதிடப் புதிர் 102

கீழே உள்ள ஜாதகம் ஒரு அம்மணியின் ஜாதகம். ஜாதகத்தை நன்றாகப் பாருங்கள்:


படத்தின் மீது கர்சரை வைத்துக் கிளிக்கினால் படம் பெரிதாகத் தெரியும்

கேள்வி இதுதான்: அம்மணியின் வாழ்வில் தங்க மழை பெய்ததா? தமிழில் குயில் பாடியதா? அதாவது அம்மணியின் திருமண வாழ்வில் அதெல்லாம் நடந்ததா? ஜாதகத்தை நன்றாக அலசி உங்கள் பதிலை எழுதுங்கள்!

உங்கள் பதிலை சும்மா, காசை சுண்டிப்போட்டுப் பார்த்து எழுதாமல், காரணங்களுடன் எழுதுங்கள்!

அனைவருக்கும் வாய்ப்புக் கிடைக்க வேண்டும் என்பதற்காக பதில் எழுத 2 நாட்கள் அவகாசம் தரப்படுகிறது. பதில்கள் 31-1-2016 ஞாயிற்றுக்கிழமை 
காலையில் வெளியாகும்!

அன்புடன்
வாத்தியார்
================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

29 comments:


  1. தாமதத் திருமணம்; ஆனால் நீடிக்காத திருமண வாழ்க்கை

    1) களத்திர மற்றும் சயனபோக அதிபதி மற்றும் காரகன் ஆகிய சுக்கிரன் ராசியிலும் அம்ஸத்திலும் மறைவிடத்தில் இருக்கிறான்.
    2) பாபிகளின் பார்வை மற்றும் இருப்பு களத்திர ஸ்தானத்தில் அமைந்தது.
    3) இருப்பினும், நீசனானாலும் குருவின் பார்வை இருந்ததால் குருதசை முடிவில் (தாமதத்) திருமணம் நடந்தது.

    குடும்ப-சுக ஸ்தானாதிபதி நீசம்; மறைந்துவிட்ட எட்டாம் அதிபன் புதன் மற்றும் எட்டாம் இடத்தில் செவ்வாயின் பார்வை உள்ளதால் திருமண வாழ்க்கை சீக்கிரம் முடிந்தது. சயனபோக அதிபதியும் மறைந்ததால் தங்க மழை இல்லை!

    ReplyDelete
  2. viruchikkka lagnam....lanatipathi sevvai raaguvodu serkai...7aam athipathi sukranae kalathirakaaraganaagi 7kku 12l maraivu...thirumana vaazhvu nimmathi illai...thanga mazhaiyum illai..kuyilum paadavillai...5 aam athipathium neecham..9aaam athipathi raagu saaram..raagu dasai,gurudasai,sanidasai,bhudhn dadsai,kethudasai,sukra dasai...ena athu atduthu yogam illa dasaikall...thirumana vaazhvu sugapadaatha jathagaththukku nalla utharaanam

    ReplyDelete
  3. வணக்கம் சார்..........
    ஜாதகிக்கு விருச்சகலக்னம். செவ்வாய்+ வில்லன்ராகுவுடன்!
    7ஆம் இடத்தில்.கேடிகள் சூரி+கேதுவும்
    7ஆம்அதிபதி 6ல். 7ஆம்இடத்திற்கு12ல்(சுக்கிரன் சுகபடவில்லை)
    2ஆம்இடத்திற்கும்,7ஆம்இடத்திற்கும் யுனிவர்சல்கேடி சனியின் லேசர்பார்வை
    அம்மனிக்கு30வயதுக்குமேல். ரத்தமழை+கன்னீர்மழை பெய்திருக்கும்
    bye.......

    ReplyDelete
  4. Good Morning sir.

    intha jathagathil jathagarathu marriage life late ah agum. dasa puthi in pothu nadai petral than undu. yendral 5th hosue ila Sani irupathal um 7th house il suriyan bagai petrathanal um kedhu nejjam petrathanalum ivarukku thamatham agum.sukkiran 6th house ila irupathal late agum.

    Lagginathil Sevvai irupathal ivarukku head il adipattal athu theeratha vaduvaga irukkum.

    ReplyDelete
  5. Dear Sir,

    She got Married and She got child also.

    Reason is
    1. Guru aspects 7th place. Even though Guru neecham Guru and Saturn is exchanging their places. Guru helped the lady to get married and to get child.
    2. Exchange yoga is powerful. Guru got power due to Saturn and Guru exchanges.
    3. Lagna lord Mars is in its own place and having power.
    4. 7th place Kethu and Sun together, since that, she may be divorced or widowed later.

    Thanking you.

    ReplyDelete
  6. Vanakkam ayya,jathagar viruchiga lakanam. Kalathira karaganum sapthamathyumana sukiran ashtamathi budhanudan kuytu melum kalathiragaràn amarthuaah mesha veedu papakarthari yogathi sikkiyullathu enavay jathagiyin thirumsnam sikkal.eninum guruvum saniyum parivanai petrullathalum amsathil sani uchathil uklathalum jathagiyin sani maga tbisai guru pukthyil thirumsnam natugukkum nantri vazhga valamudan

    ReplyDelete
  7. ஜோதிடப் புதிர் 102

    பதில்:

    இந்த ஜாதகம் மரிலின்சோகோல்(மரில்ய்ன் சொகொல்) உடையது

    1. குரு மற்றும் சனி 7 மற்றும் 11 ஆம் இடத்தை பார்பது.

    2. கால சர்பதோஷம் உள்ள ஜாதகம்

    3. அவர் தமிழிலும் பாடி உள்ளார்.

    4.10 ஆம் இடத்து அதிபதி 10 க்கு 10 ல்

    5. 10 ஆம் இடத்து அதிபதியை சனி பார்பது.

    6. நவாம்சத்தில் சூரியனும் சந்திரனும்(ராஜ கிரகம்) ஒன்றை ஒன்று பார்பது.

    மு.சாந்தி

    ReplyDelete
  8. Guru out in rasi chart , navamsathilum with manthi!. 7th lord in 6th place with 8th lord bhuthan.
    sevvai in lagnam , with raghu.

    sani dasa , sukra or suriya buthiyil kalyanam nadakka vaaippu.

    athellam nada vaaippu irukku, aanal uurtri kolla vaaippu adikam!

    ReplyDelete
  9. Sir,

    Native will not be having good Marriage life. Possibility of separation after Marriage.

    Because, Kethu sits in Seventh house and Ragu in Lagnam. Karaga Sukran with 8th house owner in sixth even though Vibareeth Raja Yoga is there.

    Thanks,
    Sathishkumar GS

    ReplyDelete
  10. த ங்க ம ழை இல்லை .தமிழில் குயில் பாடவில்லை
    <<<<<<<<<<<<<<<<<<>>>

    <<<<<>>>>

    <<<,ஸ்திர லக்னத்திற்கு பாதக அதிபதி சந்திரன் சுக ஸ்தானமான 4 ல் இருப்பது தீமை >>>>>


    <<<>

    <<<7 ஆம் அதிபதியும் , களத்திர காரகனுமான சுக்ரன் ,8 ஆம் அதிபதி புதன் உடன் 6 ல் மறைந்தது நல்லதல்ல >>

    நன்றி ,
    ச.தயாநிதி , அவியனூர்

    ReplyDelete
  11. sir,
    quiz ans 102;
    antha penmaniyen vazhvil thangamazhai pozhainthathu. In sani thesa puthan putthi
    athavathu after age 34 years.
    Inda jathagiyen birth date 01.06.1937 @ 6.30 pm (chennai aga irunthal).
    kaalasarpam thosam yogamaga mariyathu.
    2&5 am vettukku udaiya guru 3 am vittil ullan. 2 am vittirku 2am vitu saniyen vetu (thanatthon veedu).5 am veetukku 11 am veedum saniyen veedu agum.,

    thankyou sir,
    this is my first attampt sir

    ReplyDelete
  12. உயர்திரு வாத்தியார் ஐயா வணக்கம்,இந்த புதிர் தாங்கள் முன்பே அலசியதுதான்,http://classroom2007.blogspot.in/2013/12/astrology.html

    ReplyDelete
  13. அம்மணியின் வாழ்வில் தங்க மழை பெய்ததா?
    தமிழில் குயில் பாடியதா?

    அதாவது அம்மணியின் திருமண வாழ்வில் அதெல்லாம் நடந்ததா?

    I am not clear on question. But I guess you ask about marriage life, wealth of the person.

    Marriage
    1. 7th house on strong kalathira dosam with all natural malefic aspects (Saturn, Mars, sun, Raghu). With 10 lord with kethu, Venus sitting on 12th from 7th house, debilitated Jupiter, Mars and confirms MARRIAGE DENIAL. Though Jupiter aspects, not strong enough getting a marriage, she should have decided to go on public service.

    2. She should be a govt servant, possibly police or military official making her shine among all her peers or male coworkers. Debilitated mars with aspect of Saturn make her stubborn and disciplined nature. Keen intelligence planet Kethu in 7th with Sun the lord of 10th house & bakyathipathi getting jupiter saturn and mars aspects notes she is incorruptible, go high positions on carrier with commanding superior position.

    3. Monetary wise, she should be good. Debilitated Mars and Jupiter and aspect of strong Saturn on 2nd house from lagna, moon, navamsa denotes continuous and surplus flow of money through her job. She may even be doing charitable works for social welfare.

    ReplyDelete
  14. அன்புள்ள வாத்தியாரிற்கு வணக்கங்கள்,
    முதலாவதாக, time extension தந்ததிற்கு மிக்க நன்றி. போனவாரத்தான் கேள்விக்கு பதிலெழுதியபின் upload பண்ணவந்தபோது உங்கள் விடை காத்திருந்தது.
    இந்த வாரத்தான் கேள்விக்கு பிறந்த திகதி கணிக்க முடியவில்லை, எனினும்...........
    செவ்வாய் லக்கினத்தில், சொந்த வீடும் கூட, ஆனால் அம்சத்தில் செவ்வாய் நீசம். லக்கினத்தில் ராகுவும் கூட.
    சனி அம்சத்தில் உச்சம். சனியும் குருவும் பரிவரத்தனை யோகம் ராசியில்.
    சூரியனும் கேதுவும் ஒன்றுசேர்ந்திருப்பது நல்லதல்ல, அதுமட்டுமல்லாமல் 7ம் வீட்டிலும். 7ம் வீட்டதிபதியாகிய சுக்கிரன் 6ம் வீட்டில் மறைந்துவிட்டார், மற்றையது பாபகர்த்தரி யோகத்திலும் இருக்கின்றார். செவ்வாயும் சனியும் 7ம் வீட்டை 7ம் பார்வையாகவும் 3ம் பார்வையாகவும் பார்க்கின்றார்கள். 7ம் வீட்டில் கேதுவும் கூட.
    குரு 7ம் வீட்டை, 5ம் பார்வையாக பாரத்தாலும், சனி 10ம் பார்வையாக குருவை பார்க்கின்றது. ஆகவே குருவின் பார்வையாலும் நன்மையில்லை.
    மொத்தமாக ஜாதகி ராகு தசையில் திருமணம் செய்து, ராகு திசையிலே முடிந்திருக்கலாம். 5ல் சனியிருப்பதனால் பிள்ளைகளாலும் பலனில்லை.
    அன்புடன்
    ராஜம் ஆனந்த்





    ReplyDelete
  15. 'முன்னால் பார்த்தால் ராவுத்தர் குதிரை;பின்னால் பார்த்தால் செட்டியார் குதிரை' என்பது போலத்தான் இந்த ஜாதகம் உள்ளது.

    ஜாதகி 1 ஜூன் 1937; மாலை 6 மணி 33 நிமிடம்,50 வினாடிக்குப் பிறந்தவர்.
    பிறந்த் இடம் சென்னை என்று எடுத்துக் கொண்டேன்.

    1.ஏழாம் அதிபன் சுக்ரன் ஆறில் மறைந்து எட்டாம் அதிபன் புதனுடன் தன் வீட்டிற்கு 12ல் நின்றது திருமண வாழ்வுக்குப் பெரிய பாதகம்.
    2. ஏழாம் வீடு சனி, செவ்வாய், ராகுவால் பார்க்கப்பட்டும், சூரியன் கேதுவால் ஆக்கிரமிக்கப்பட்டும் உள்ளதால் மண வாழ்க்கைக்கு பாதிப்பு.
    3. கேது கொடிபிடித்துச் செல்லும் சர்ப தோஷம்.
    4.ராசி நவாம்சம் இரண்டிலும் ஏழாம் இடத்திற்குக் குருவின் பார்வை என்பதே ஒரு ஆறுதலான செய்தி.ஆனாலும் வலிமையற்ற குரு.

    கால சர்பதோஷத்தால் 30 வயதுவரை திருமணம் ஆகவில்லை. பின்னர் சனிதசா வந்துவிட்டது.

    இவர் திருமணம் ஆகாமல் காலத்தைக்கழித்தார் என்று கணிக்கிறேன்.




    ReplyDelete
  16. SIR, THE ABOVE LADY LOSE HER HUSBAND IN EARLY AGE BECAUSE FIRST,
    1. THE LAGANA LORD IS IN 6TH PLACE
    2. THE 2ND LORD GURU IS IN NEECHAM AND THE 7TH LORD IS IN 6TH PLACE WITH 8TH LORD BUDHAN
    3. THE MANGALA STHANAM 8TH LORD BUDHAN IS IN 6TH PLACE WITH 12TH LORD
    4. IN NAVAMASA 7TH LORD IS IN 12TH PLACE AND RAGU IS IN SECOND PLACE
    5. IN NAVAMASA THE 12TH LORD MARS IS IN 8TH PLACE
    SO THESE INDICATION TO SHOW US HER FIRST MARRIAGE LIFE END EARLY BUT THE SECOND MARIAGE HOPE IS THERE IN RASI 7TH AND 11TH LORD IN CONJUCTION INDICATES HER SECOND MARRIAGE

    ReplyDelete
  17. குயில் கூவி என்ன, தங்க மழை பெய்தென்ன? காதும் அவுட்டாகி, கண்ணும் அவுட்டாகினால், எதுவும் உபயோகமில்லை!
    லக்கினாதிபதி ராகுவுடன் லக்கினத்தில்! எழில் சூரியனும் கேதுவும்.
    ஏழாம் அதிபதி வெள்ளி, ஆறில்! கூடவே எட்டாம் அதிபதியுடன்!
    ஏழுக்கு வியாழ பார்வை உண்டென்பதால் திருமணமாகி இருக்கும். ஆனால் அது திருப்தியை தரவோ, நீடித்திருக்கவோ வழியில்லாத கிரக நிலைகள்.

    ReplyDelete
  18. Vanakkam Iyya,

    Viruchiga lagna jathagi

    Lagnathipathi - Sevai lagnathil + raagu vudan kootani (Sevvai balam izhandhu ullar - Navamsathil neecham)

    Thirumana vaazhkai patri paarpathrku 2 + 7 aam idam paarka pada vendum

    7 aam idathu athipathi sukran antha veetiruku 12 il ullar + 8aam athipathi budhan udan kootani (lagnathiruku 6il)

    3 aam idathil amarndha neecha guru (Navamsathil - sama veetil ullar) 5 aam paarvaiaaga 7aam idathai paarkirar + 7 aam veetiruku saniswaranin 3 aam paarvaiyum ullathu + 7 aam & 8 aam veetin mel sevvai yin paarvai um ullathu

    Neecha guru aanalum, guru dasayil jaathagiku thirumanathai nadathi veithaar

    lagnathirku 6 aam idathil 7+8 athipathi kootaniyinal jathagi kanavarai pirinthu vaazhvar (Husband would have died or divorced her)

    2 aam idathu athipathi neecham petru + 2 aam idathirku saniswaranin 10aam paarvai um ullathu - Ithanal kudumba vaazhkai nandraga irukaathu...

    Chandra lagnathil irundhu 2 aam idathirku uriyavanum guru bhagavan thaan.

    Avar neecham petru 12il(chandra lagnathirku) poi irundhadhum jathagiyin thirumana vaazhkai nandraga illai enbayathai solgirathu.

    Nandri,
    Bala

    ReplyDelete
  19. வணக்கம் குரு,

    இப்பெண்ணிற்கு ஏழாமிடதில் சூரியன், கேது சேர்க்கை, சனி பார்வை, ராகு பார்வை, செவ்வாய் பார்வை, கலத்திர காரகனும் ஏழுக்குடையவனுமாகிய சுக்கிரன் மாங்கல்ய ஸ்தானாதிபதி புதனுடன் ஆறில் மறைந்து விதவை தோசம் இருந்தாலும் ஏழாமிடத்திற்கு குரு பார்வை உள்ளதால் திருமணம் நடந்திருக்க வாய்ப்பு உள்ளது.ஆனாலும் இவர் கணவரை பிரிந்தோ அல்லது இழந்தோ அல்லது விவாகரத்து பெற்றோ இருப்பார்.

    நன்றி
    செல்வம்

    ReplyDelete
  20. அய்யா வணக்கம் 30/01/2016



    ஜோதிட புதிர் -102. கால தாமத திருமணம் - திருமண வாழ்க்கை சுகமில்லை.



    ஜாதகி விருச்சிக லக்னம், கும்ப ராசி.

    லக்னாதிபதி செவ்வாய் (வக்ரம்) & நவாம்சத்தில் நீசம்.

    லக்னத்தில் ராகு உச்சம். 7ல் கேது நீசம். மாந்தி தவிர்த்து எல்லா கோள்களும் ராகு - கேதுவுக்குள் இருப்பதால் சர்ப்ப தோஷம்.

    தனம் / பூர்வபுண்ணிய காரகன் குரு ராசியில் நீசம் & நவாம்சத்தில் குரு+மாந்தி சேர்க்கை.

    களத்திரகாரகன் & களத்திர ஸ்தானதிபதி சுக்கிரன் தன் வீட்டிற்கு 12 ல் விரயத்தில்.

    அச்டமாதிபதி & லாபாதிபதி புதன் 12ல் விரயத்தில்.

    7ம் அதிபதி சுக்கிரன் நின்ற வீட்டிற்க்கு 2ல் நீச கேது.

    செவ்வாயும் சுக்கிரனும் 6/8 ஸ்தானத்தில், மேலும் 7 & 8ம் அதிபதிக்கு பாபகர்தாரி யோக அமைப்பு இருப்பதாலும் திருமண தடை & கால தாமத திருமண அமைப்பை காட்டுகிறது.

    4ம் அதிபதி சனி 5ல் இருப்பதும் குரு நீசம் பெற்றதால் சுகம் குறைவு & இல்லறம் சிறப்பாக அமையவில்லை.



    களத்திர & ஆயுள் ஸ்தானதிபதி 6ல் மறைவு பெறுவதும் சனி,செவ்வாய் பார்வை 7, 8 க்கு கிடைப்பதும் திருமண வாழ்வை சிறக்க செய்யவில்லை.



    குரு திசை ராகு புத்தியில் திருமணம் நடந்தது . ஜாதகியின் கணவருக்கு ஆயுள் பலம் சிறப்பாக இல்லாதலால் குரு திசை நிறைவில் இல்லற வாழ்க்கையில் கசப்பான நிகழ்வுகள் நடந்தது. (மாங்கல்ய ஸ்தானம் பலம் இல்லை) பின்னர் சனி திசை பிற்பகுதியில் ஓரளவு வாழ்க்கை பாதை சீரானது என்றாலும் ஜாதகியின் அடுத்தடுத்த திருமணங்கள் தோல்வியில் தான் முடிந்திருக்க வேண்டும்.



    அன்புடன்

    சோமசுந்தரம் பழனியப்பன், மஸ்கட்





















    ReplyDelete
  21. அன்புடன் வாத்தியார் அய்யாவுக்கு வணக்கம்
    ஜாதகி .லக்னம் விருசிகம் .
    லக்னத்தில் லக்னாதிபதி உடன் உச்சமாக ராஹு ...அடுத்து கேது 7ல் ஆஹா கடிகார சுற்றில் கேது கோடி பிடிக்க எல்லா கிரகங்களும் உள்ளடங்கி **விலோமா *** யோகம் அதாவது கால சர்ப்ப தோஷம்.
    அலசியாச்சு ..அய்யா ..ஏற்கெனெவே பாடம் 461 ல் மாதிரி ஜாதகம் எண் 21.
    திருமணம் ஆகி விதவை ..பொருளாதார ரீதியாக பரவா இல்லாமல் இருக்கும் ஏனென்றால் 11ல் ஜிகஜாண்டிக் வில்லன் மாந்தி .

    ReplyDelete
  22. அம்மணியின் திருமண வாழ்வில் புயல் வீசியது.
    அலசல்:
    கேது கொடி பிடிக்கும் கால சர்ப்ப தோஷமுள்ள ஜாதகம். லக்கினாதிபதி செவ்வாய் வக்கிரகதியில் ராகுவுடன் சேர்ந்து நவாம்சத்தில் நீசம் அடைந்து வலுவிழந்துள்ளார். தனாதிபதியும் குடும்ப ஸ்தானாதிபதியுமான குரு பகவான் 3மிடத்தில் வக்கிரகதியுடன் நீசமடைந்து விட்டார்.களத்திராதிபதியும், களத்திரகாரகனுமான சுக்கிர பகவான் ஆறில் அட்டமாதிபதி புதனுடன் சேர்ந்து மறைந்து விட்டார். தவிர அபகர்த்தாரியின் பிடியில் உள்ளார். களத்திர ஸ்தானத்தில் சூரியன் மற்றும் கேதுவின் கூட்டணி வேறு. சனி பகவான் தன் 3ம் தனிப்பார்வயில் 7மிடத்தை பார்க்கிறார். இவ்வளவு கெட்ட பலன்கள் இருந்தும், குரு பகவானின் 5ம் தனிப்பார்வை 7ம் இடத்தில் விழுகிற ஒரே காரணத்தினால் அம்மணிக்கு குரு தசையில் திருமணம் நடந்தது. ஆனால் திருமணம் நடந்த சில வருடங்களில் சனி தசையில் கணவரை இழந்து தனிமரமானார்.

    ReplyDelete
  23. அன்புள்ளம் கொண்ட அய்யா அவர்களுக்கு வணக்கங்கள்!
    க்விஸ் 102க்கான அலசல்.
    திருமண வாழ்வு நோயாளிக் கணவனால் சோகத்தில் முடிந்திருக்கும்!
    கேது பகவான் கொடி பிடித்துச் செல்லும் காலசர்ப்ப தோஷ ஜாதகம்!
    மகர லக்கின ஜாதகம்.லக்கினாதிபதி செவ்வாய் லக்கினத்தில் ஆட்சி பலத்துடன் இருந்தாலும் ராகுவுடன் கூட்டணி. 7மிடத்தில் அமர்ந்த சூரியன் மற்றும் கேதுவின் பார்வையால் கெட்டுள்ளார்.செவ்வாய் 6மிடத்துக்கும் அதிபதியாக, வில்லனுமாகி லக்கினத்தில் ராகுவுடன் சேர்ந்து கெட்டுள்ளார்.மூர்க்கத்தனம் மிகுந்தவராயிருப்பார்
    2,5 க்கான அதிபதி குரு பகவான் 3ல் மறைந்து,நீச்சம் பெற்று கெட்டுள்ளதால் குடும்பவாழ்க்கை இல்லை. 3ம் பதி சனியும் 5ம் பதி குருவும் பகை பெற்ற பரிவர்த்தனை.
    7மிட அதிபதி சுக்கிரன், 8ம் பதி புதனுடன் சேர்க்கை பெற்று 6மிடத்தில் அமர்வு.
    களத்திராதிபதி சுக்கிரன் 6ல் மறைந்ததால் கணவன் நோயாளியாகி, சுக்கிரன் தன் வீட்டிற்க்கு 12ல் மறைந்ததால், ஜாதகி கணவனை இழந்திருப்பார்.
    பாக்கியாதிபதி சந்திரன், பாதகாதிபதியாகி லக்கினத்திற்க்கு 4ல் பகை வீட்டில் அமர்ந்து திக் பலம் பெற்றாலும், தன் வீட்டிற்க்கு 8ல் அமர்ந்ததால் பலம் இழந்துவிட்டார்.தேய்பிறைச் சந்திரன் பாவியாகிறார்.
    கும்ப ராசிக்கு 7ம் பதி சூரியன்,ராசிக்கு 4ல் அமர்ந்தாலும், கேதுவின் சேர்க்கையால் கிரகண தோஷம் அடைந்து, லக்கினத்திற்க்கு 7மிட மாகி களத்திர தோஷமளித்துள்ளது.
    எந்த கிரகமும் நண்மை செய்யும் அமைப்பில் இல்லாதது துரதிர்ஷ்டமே!!!.
    மொத்தத்தில் “தங்க மழை பெய்தும் நிலைக்கவில்லை - தமிழில் குயில் பாடவுமில்லை”.
    அன்புடன்,
    -பொன்னுசாமி.

    ReplyDelete
  24. கால சர்ப்ப தோச ஜாதகம். லக்னாதிபதி செவ்வாய் ராகுவுடன் லக்னத்தில். 7-ல் கேது சூரியனுடன். 7-ம் அதிபதி சுக்ரன் 6-ல் மறைவு. மேலும் அது 7-ம் இடத்திற்கு 12-ல். குரு 3-ல் நீசம். கூடுதலாக சுக்ரன் பாபகர்த்தாரி யோகத்தில் சிக்கியுள்ளார்.
    ராகு திசை முடிந்தவுடன் நீச குரு திசை. பயனில்லை.

    திருமண யோகம் இல்லாத அமைப்பு.

    நன்றி
    AMG

    ReplyDelete
  25. Respected Sir,

    My answer for our Quiz No.102:-

    She did not get married.

    Reasons:

    1. Seventh lord as well as kalathrakaraga (both are Venus) is twelth place from its own house and affected by baba kathri yoga.

    2. Kalasharpa dhosa is there. Kethu is leading the front. It is not good sign.

    3. Saturn is aspecting seventh house as its third aspect as well as aspects second house as its tenth aspect.

    4. Second house lord jupiter is debliated.

    5. Lagna lord is also in Vagra position and clutched by Raghu.

    7. Bagyathipathi Sun is clutched by Kethu.

    In Navamsa also not good sign.

    Hence she did not get married. she is not blessed for getting family life long lost.

    With kind regards,
    Ravi-avn

    ReplyDelete
  26. வணக்கம் . இது ஏற்கனவே 03/12/2013ல் கேட்கப்பட்ட கேள்வி (QUIZ-26)
    கேள்வியில் மாற்றத்துடன் கேள்வி கேட்கப்பட்டுள்ளது .ஜாதகி 02/06/1937ல் 6.30.35 மணிக்கு பிறந்தவர்.
    பதில்: 1. தங்க மழை பெய்யவில்லை .
    2. குயில் பாடவில்லை
    3. திருமண வாழ்வு அதிருப்தியுடன் துவங்கி கடைசியில் சோகத்தில் முடிந்தது.

    1. விருச்சிக இலக்கின ஜாதகி. இலக்கினாதிபதி செவ்வாய் இலக்கினத்தில் அமர்ந்திருக்கிறார். யோககாரகர்கள் குரு நீசம் (3ம் இடம்), சந்திரன் (4ம் இடம்).

    2. கால சர்ப்ப தோஷம் உள்ள ஜாதகம். கேது கொடிபிடித்து செல்கிறது.7ல் கேது சூரியனுடன் கூட்டு சூரிய சண்டாள யோகம். மகிழ்ச்சியில்லாத வாழ்க்கை அமையும். ஜாதகி கோபக்காரர்.

    3. லக்கினாதிபதி செவ்வாய் நவாம்சத்தில் நீசம் (கடகத்தில் உள்ளார்) . சுக்கிரன் பாபகர்த்தாரி தோஷம். குயில் பாட வேண்டும் என்றால் செவ்வாய், சுக்கிரன் நன்றாக இருக்கவேண்டும் .

    4. 7ம் வீட்டிற்குரிய சுக்கிரன் அந்த வீட்டிற்கு 12ல் அமர்ந்து விட்டார்.அது 6ம் வீடு. அயனம் சயனம் போகம் இல்லாமல் செய்து விட்டார்.8ம் வீட்டு அதிபதி புதன் சுக்கிரனுடன் கூட்டு சேர்ந்து கணவர் இல்லாமல் செய்து விட்டார்.

    5. 2ம் அதிபதி குரு மகர ராசியில் நீசம் - குடும்ப வாழ்கையில்லாமல் செய்து விட்டார் .

    6. பாக்கியாதிபதி சந்திரன் அந்த வீட்டிற்க்கு 8ல் அமர்ந்து ஜாதகியன் பாக்கியத்தை கெடுத்து விட்டார் .

    7. திருமணமான சில மாதங்களிலேயே கணவர் இறந்துவிட்டார். கணவர் உடல் நலமில்லாதவர் என்பது திருமணத்திற்குப் பிறகுதான் அம்மணிக்குத் தெரியவந்தது. சமூக சேவைகளைச் செய்து தன் வாழ் நாட்களைப் பயன் உள்ளதாக்கிக் கொண்டார்.

    8. தங்க மழைக்கு 2ம் வீடு, 5ம் வீடு , 11ம் வீடு நன்றாக இருக்க வேண்டும். 2ம் வீடு நீசம், (36 பரல்) 11ம் வீட்டின்மீது சனியின் பார்வை (33 பரல்) 11ல் மாந்தி, 5ம் வீடு பாபகர்த்தாரி தோஷம் (25 பரல்)

    சந்திரசேகரன் சூரியநாரயணன்

    ReplyDelete
  27. Respected Sir
    Sorry for the late response.
    1. She is married because of Guru's look and Sukra in its own place in Navamsa.
    2. Late marriage because of Sani's look and Kethu in 7th house, kalasrabha dosam and Sukra and Budha in Papakarthari yogam.
    Marraied life is not that great because of the 2nd point.

    ReplyDelete
  28. ayya, thirumanam guru paarvai 7m veettilnmel padhivadhaal nadandhirukkum. aanaal nilaithirukkaadhu. kaaranam, 7m athibathy matrum kalathira kaaragar Sukkiran 7rkku 12il, 8m athibathiyudan. matrum lagnam, lagnathbathy and 7m veedu raahu -kethuvin pidiyil. kethu kodi pidithu sellum avayogam.Thanks. Mu.Prakaash.

    ReplyDelete
  29. ஜாதக கட்டத்தில் வாழ்க்கை
    அப்போ பொருத்தம் பார்ப்பதால் மாறுவதில்லையா நிலை?
    ஆனாலும் கஷ்டம் வர்றவங்களுக்கே மீண்டும் மீண்டும்?
    முன்ஜென்ம பயனென்றாலும் மனது ஆறுமா?

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com