மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

18.6.14

Astrology: quiz.59: இன்பம் எங்கே இன்பம் எங்கே என்று தேடு - அது எங்கிருந்த போதுமதை நாடி ஓடு!

 
Astrology: quiz.59: இன்பம் எங்கே இன்பம் எங்கே என்று தேடு - அது
எங்கிருந்த போதுமதை நாடி ஓடு!


Quiz No.59: விடைகளை இருக்கலாம், இருக்கக்கூடும் என்று யூகமாக எழுதாமல் ஆணித்தரமாக எழுதுங்கள்!

பகுதி ஐம்பத்தி ஒன்பது

18.6.2014

Write your answer to the queries: கேள்விகளுக்குரிய உங்கள் பதிலை எழுதுங்கள்!

இன்றைப் பாடத்திற்கு ஒரே ஒரு கேள்வி. அந்தக் கேள்விக்கு மட்டும் பதில் எழுதுங்கள் போதும்!
------------------------------------
இன்றைய கேள்வி:

கீழே உள்ள ஜாதகம் ஒரு அன்பரின் ஜாதகம்.

ஜாதகரின் 2,9,10,11ஆம் வீடுகளை ஆராய்ந்து பதில் எழுதுங்கள். ஜாதகரின் நிதி நிலைமை எப்படி இருக்கிறது? பணக்காரரா அல்லது ஏழையா? பணக்காரர் என்றால் பிறவிப் பணக்காரரா? அல்லது சுய சம்பாத்தியத்தில் பணக்காரர் ஆனவரா? இல்லை ஏழ்மை நிறைந்தவரா? அதாவது கைக்கும் வாய்க்குமாக வாழ்க்கை நடத்துபவரா? ஜாதகப்படி அதற்கு என்ன காரணம்?



நவாம்சம் எங்கே வாத்தியார்?’ என்று கேட்பவர்களுக்காக கீழே உள்ளது அதே ஜாதகம் - நவாம்சத்துடன்!




பதிலை எழுதி அனுப்புங்கள். கேள்விக்கு உரிய பதிலை மட்டும் எழுதுங்கள். மற்ற பாவங்களையும் (That is other houses) குடைந்து எழுதிவிட்டு, என்னைக் குடையாதீர்கள்.

சரியான பதில்களை எழுதினால் மட்டுமே 100 மதிப்பெண்கள் கிடைக்கும்.

அலசலை விரிவாகவும் (எதைவைத்துச் சொல்கிறீர்கள் என்னும் உங்களுடைய கணிப்பை விரிவாகவும்) விடையைச் சுருக்கமாகவும் எழுதுங்கள்! விடைகளை இருக்கலாம், இருக்கக்கூடும் என்று யூகமாக எழுதாமல் ஆணித்தரமாக எழுதுங்கள்!

ஆணித்தரமாக எழுதினால்தான் பாஸ்மார்க்!

உங்களின் பதிலுக்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன்!

அன்புடன்
வாத்தியார்

===================================

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

24 comments:

  1. 5க்கு உரிய சந்திரன் 9ல்
    2,9க்கு உரிய செவ்வாய் 10ல் கேந்திரத்தில்.
    லக்கினத்திற்கு 9ல் சந்திரன் இருப்பதே பெரிய யோகம். சொத்து தானாக வந்து சேரும்.

    10க்கு உரிய குருவும் 3க்கு உரிய சுக்கிரனும் பரிவர்த்தனை. ஆக 10ம் இடம் மிகவும் நன்று.

    11க்கு உரிய சனி 10ம் இடத்தில்- இதுவும் நல்லதே.

    ஆனால் 6,12க்கு உரியவன் 10ம் இடத்தில் இருப்பதால் உத்தியோகம் மிகவும் போராட்டமாகவே இருக்கும்.

    ராகு இரண்டாம் இடத்தில்,செவ்வாயின் வீட்டில்.ராகு திசை/புத்திகளில் பணம் சேரும், வெற்றியும் கிடைக்கும். செவ்வாயின் வீட்டில் ராகு நன்மை பயக்கும்.

    மனிதர் தானாக போராடி வெற்றி பெற்ற மிகுந்த செல்வந்தராக இருப்பார்.

    ReplyDelete
  2. இலக்கினாதிபதி மற்றும் தனகாரகர் குரு 3ம் வீட்டில் வர்கோத்தமம் பெற்றிருக்கிறார். 11ம் வீட்டில் உள்ள புதனும் வர்கோத்தமும் பெற்றிருக்கிறார். 9ல் சந்திரன் நீசம். 2ம் வீட்டில் இராகு. ஓட்டை அண்டா. ஆனாலும் குருவும் சுக்கிரனும் பரிவர்த்தனை. இவர்கள் 10 மற்றும் 3க்கு உரியவர்கள். 10ல் சனி, சூரியன் மற்றும் செவ்வாயும் உள்ளனர். கடுமையான கிரக யுத்தம். சந்திரன் நீசமானாலும் கஜ கேசரி யோகம் உள்ளது. குருவும் சந்திரனும் சமசப்தமாக பார்த்துக் கொள்கின்றனர். 2ம் வீட்டிற்கு எந்த சுபர் பார்வையும் இல்லை. ஆனால் 11ம் வீட்டிற்கும் 11ம் வீட்டில் இருக்கும் சுப கிரகம் புதனுக்கும் குரு பார்வை உள்ளது. ஜாதகர் பிறக்கும் போது ஏழை. ஆனால் உழைப்பால் உயர்ந்து செல்வந்தரானார். சூரிய தசையில் செல்வம் சேர்ந்திருக்கும்.

    ReplyDelete
  3. Respected Sir
    2nd Place: Rahu is there. 2nd lord Mars is in 9th place from it (10th house). But With 6th, 3rd/8th and 11/12th lords with giraha utham. Laknathipathi and Guru is in 3rd place in Enemy house and vakram. So he is not Rich.

    9th place: 5th lord Moon is there. But it is neecham. Guru's look is there. But 9th lord Mars is in 10th house with 6th, 8th ans 12th lord.

    10th house: All villans are there. 10th lord also in 6th place from 10th place. Will not have stable job.

    11th house: 11th lord is in 12th place from it. But 4th and 7th lord subha buthan is there. That is the consolation for him. Will be better off after marriage.

    ReplyDelete
  4. வணக்கம்.
    நல்ல நிதி நிலமைக்கு குரு, சந்திரன், சுக்கிரன் ஆகிய சுபக்கிரகங்கள் வலுவாக இருக்கவேண்டும். ஆனால் இந்த ஜாதகத்தில் மூன்று கிரகங்களும் வலுவாக இல்லை.

    ஜாதகன் வசதியாக இருக்க வாய்ப்பில்லை. எழ்மையான ஜாதகம். உழைத்து சம்பாதிக்கும் நிலமை.

    லக்கினத்தின் மீது செவ்வாயின் 4ம் பார்வை.
    லக்கினத்தில் 34 பரல்கள் உள்ளது. லக்கினம் பலமாக இருப்பதற்க்கு அடையாளம்.

    இந்த ஜாதகத்தில் லக்கினாதிபதி குரு (5 பரல்) 3ம் வீட்டில் மாந்தியுடன் கூட்டு. அதுவும் ரிஷப ராசியில் பகை வீட்டில்.

    சந்திரன் (3 பரல்) 9ம் வீட்டில் விருச்சிக ராசியில் நீசம். மேலும் பாபகர்த்தாரி தோஷம். நிதி மேலான்மைக்கு இது இடைஞ்சல்.

    சுக்கிரன் (3 பரல்) 10ம் வீட்டில் 6ம் வீட்டு அதிபதி வில்லன் சூரியனுடன் கூட்டு.மேலும் அதே வீட்டில் சனி, செவ்வாயுடன் கூட்டு.கிரகயுத்தம்.

    2ம் வீடு தன வீடாகும் (25 பரல்). 2ல் ராகு சிறுவயதில் கஷ்டங்களை அனுபவிக்க கூடிய சுழ்நிலை. 2ம் வீட்டு அதிபதி செவ்வாய் (3 பரல்) 6ம் வீட்டு அதிபதி வில்லன் சூரியனுடன் கூட்டு.9ம் வீட்டிற்க்கும் அவனே அதிபதி. கேதுவின் 7ம் பார்வை 2ம் வீட்டின்மீது.
    ஆகையினால், 2ம் வீடு படு சுத்தமாக கெட்டு போய்யிருக்கிறது.

    9ம் வீட்டு அதிபதி 10ல்.அதாவது 9ம்வீடு 10ம் வீட்டிற்க்கு 12ல்.

    10ம் வீடு கிரக யுத்ததில் உள்ளது. எந்த வேலையிலும் நிரந்திரமாக இருக்க வாய்ப்பில்லை. 6ம் வீட்டு அதிபதி வில்லன் 10ல் இருந்தால் வேலைக்கு போராட்டந்தான்.

    11ம் வீட்டு அதிபதி 10ம் வீட்டில் அதாவது 12ல். தன நஷ்ட்டம்.4ம் வீட்டு அதிபதி புதன் (5 பரல்) 11ம் வீட்டில் இருப்பதால், தன்னுடைய புத்திசாலிதனத்தினால் ஒரளவு பணம் கிடைக்க வாய்ப்பு உண்டு.

    மேலும் நவாம்சத்திலும் புதன் மகர ராசியில் இருப்பதால் புதன் வர்கோத்தமம் அடைந்துள்ளது. வர்கோத்தம் அடைந்த கிரகம் உச்ச அடைந்த கிரகத்திற்க்கு சமானம்.

    As per Kalyana varma, the four planet SUN-MARS-VENUS-SATURN ,
    One, who has these four planets together at birth, will be deformed, mean in conduct, obliquesighted, will hate his relatives and will always be insulted.

    சந்திரசேகரன் சூரியநாராயணன்.

    ReplyDelete
  5. 2ல் ராகு, பிறவி பணக்காரர் அல்ல. 9ல் சந்திரன், அலைச்சல் மிகுந்த வேலை.
    10ல் சூரியன் சனி சுக்கிரன் செவ்வாய் கூட்டணி, சூரியன் சனி பகைவர்கள் கூடியதால் போட்டிகள் நிறைந்த வேலை,
    10ல் செவ்வாய், நிலம் ஏஜென்சி கமிசன் மூலமாக தனவரவு, பூர்விக சொத்துக்கள் கிடைத்தல்.
    7க்கு உடைய புதன் 11ல், மனைவி மூலம் தனவரவு.
    2ல் ராகு, செவ்வாய் வீட்டில், நிலம் சம்பந்தமான தொழிலில் சில நஷ்டங்கள்.

    -blaknar

    ReplyDelete
  6. அய்யா வணக்கம்! இவரின் நிதி நிலமை மோசமாக உள்ளது ஏன் ஏனில் 2,9ம் அதிபதி செவ்வாய் 6,8ம் அதிபதிகளான சூரியன், சுக்ரன் உடன் சேர்கை மற்றும் 12ம் அதிபதி சனி சேர்கை, போதுவாக 11ம் அதிபதி 10ல் அமர்தாலே லாபம் அனைத்தும் உழைப்பாக மாறிவிடும், பயன் சுத்தமாக இருகாது. பிறவியில் எதொ நல்ல நிலமை இருந்து இருக்கும், போததற்கு 2ல் ராகு, குரு பகை விட்டில். புதன் மீன லக்னதிர்கு முதல் தர பாதகதிபதி அவர், அகவே அவரும் நல்லது சேய்ய வாய்ப்பு இல்லை, சூரியன் 6ம் அதிபதி 10ல் பலமாக அமர்ந்ததால் காவல்துறை, ரானுவம் போன்ற வேலை கிடைத்துருக்கும்.

    நன்றி, பிழை இருப்பின் மன்னிகவும்

    ReplyDelete
  7. மதிப்பிற்க்குரிய ஐயா வணக்கம்


    இன்றைய புதிருக்கான விடை:

    1.பணத்திற்கு கஷ்டபட்டு படிப்படியாக உழைத்து சம்பாதித்து இருப்பார்.


    *மீன லக்கினம் விருச்சிக ராசி.

    *லக்கினாதிபதியான குரு 10க்கும் உரியவனாகிறார்.1,10 க்குடைய குரு
    லக்கினத்திற்க்கு 3லும் 10க்கு 6ம் இடத்திலும் அமர்ந்து உள்ளார்.அத்துடன் 3,8க்கு உரிய சுக்கிரன் பரிவர்தனை கெடுதலை தரவல்லது.

    *குருவின் 5,7மற்றும் 9ம் பார்வையாக களத்திரம்,பாக்கியம் மற்றும் லாப ஸ்தானங்களை பார்ப்பது சிறப்பு.

    *5க்குரிய சந்திரன் 9ல் நீச்சம் அடைந்தாலும் குருவின் பார்வையால்
    பூர்வபுண்ணிய ஸ்தானத்தையும் பாக்கிய ஸ்தானத்தையும் வலுவடையச் செய்தார்.அதுடன் கஜகேசரி யோகத்தையும் உண்டாக்கினார்.

    *இரண்டில் அமர்ந்த ராகு இளவயது பணக்கஷ்டத்தை ஏற்படுத்தி இருப்பார்.

    *பின் படிப்படியாக முன்னேறி பண‌வசதியினை அடைந்து இருப்பார்.
    4,7க்குரிய புதன் 11ல் அமர்ந்து குருவின் பார்வையினை பெறுவது சிறப்பு.
    எனவே மனைவி மூலம் ஆதாயம் இருக்கும்.

    *எனினும் 10ல் செவ்வாய், சனி அஸ்தங்கம் ஆனதன் மூலம் அதற்க்குரிய 2,9,11ம் இடங்களுக்குரிய‌ தன் தசா புத்திகளில் பாதிப்பை கொடுக்க வல்லது.

    சரியான விடையினை தெரிந்து கொள்ள ஆவலுடன் உள்ளேன் ஐயா.


    நன்றி

    ல ரகுபதி

    ReplyDelete
  8. ஜாதகர் கைக்கும் வாய்க்குமாக வாழ்க்கை நடத்துகிறவர். வாழ்க்கையின்
    பெரும் பகுதி போராட்டமாகவே இருக்கும். சிலசமயங்களில் மட்டுமே காசு புரண்டு இருக்கும்.
    (1) 2-ம் வீடு - இரண்டாம் அதிபதியும் ஒன்பதாம் அதிபதியும் செவாய்யாக இருந்து அவர் 10-ல் இருந்தாலும் அஸ்தமனம் ஆகி இருக்கிறார். இரண்டாம் வீட்டில் ராகு. பரல்கள் 25 மட்டுமே. இது சுமாராகவே உள்ளது.
    (2) 9-ம் வீடு - மேற்கூறியபடி செவ்வாய் அஸ்தமனம். 9-ம் வீட்டில் இருக்கும் சந்திரன் தேய்பிறை சந்திரன். கடுமையான பாபாகத்ரி யோகத்தில் மாட்டி கொண்டிருக்கிறார். சந்திரன் கெட்டால் வாழ்க்கையே கெட்டது போல். அதுவும் பாக்யா ஸ்தான சந்திரன் கெடக்கூடாது !. சுய வர்கத்தில் 3 பரல்கள் மட்டுமே.குரு பார்வை காப்பாற்றினாலும் வக்ர குரு மாந்தியுடன் இருப்பதால் பலன் இல்லை.
    (3) 10-ம் வீடு - மேலும் பத்தாம் வீட்டில் நாலு கிரகங்கள். சூரியன், சுக்ரன், சனி மற்றும் செவ்வாய். எல்லாமே பலமுள்ள கிரகங்கள் ஆனால் கடுமையான கிரக யுத்தத்தில். சூரியனோடு அஸ்தமனம் வேறு. சூரியனும் இந்த கிரகங்களால் முழு பலனை தர முடியாமல் போகிறார். சில சமயங்களில் அரசு வழியில் ஆதாயம் உண்டு. கர்மகாரகன் சனி கர்ம ஸ்தானத்தில் இருப்பது நல்லது என்றாலும் கடும் பகைவனான சூரியனிடம் அஸ்தமனம். சுக்கிரனும் அவ்வாறே. மொத்தத்தில் எல்லாம் ஒன்று சேர்ந்து ஒன்றும் இல்லாமல் பண்ணி விட்டது. பத்தாம் அதிபதியும் லக்னாதிபதியும் குருவாக இருந்தாலும் அவர் மூன்றாம் ஸ்தானத்தில் வக்கிரமாகி மாந்தியோடு கூட்டணி வைத்துள்ளார். மேலும் லக்னாதிபதியே மரண காரக ஸ்தானத்தில் இருப்பது பயனை தராது ! அடிக்கடி வேலை மாற்றம் !. ups and downs நிறைய உண்டு !
    (4) 11-ம் வீட்டில் புதன் தனித்து இருந்தாலும் அவர் நட்சதிராதிபதியாக இருப்பதால் அவர் தசை பிறந்தவுடன் ஆரம்பித்து சிறு வயதிலே முடிவடைகிறது!. அவர் தன் புக்திகளில் மட்டுமே பலனை தர கூடியவர், ஆனால் அவரும் பலம் பெறவில்லை.11-ம் அதிபதி சனி அதற்கு 12-ல் (10-ம் வீட்டில்) அஸ்தமனம். கிரக யுத்தம் ! பிரயோஜனமில்லை !. ஆக 11-ம் வீடும் out !. பரல்கள் 30 இருப்பதால் மேற்கூறியபடி சில சமயங்களில் காசு புரண்டு இருக்கும் !

    ReplyDelete
  9. மதிப்பிற்குரிய வாத்தியார் அவர்களுக்கு,

    புதிர் பகுதி 59 இல் கொடுத்திருந்த ஜாதகத்தின்படி,

    தனகாரகன் குரு சுக்கிரனின் வீடான 3ல் 5ம் பதி சந்திரனின் நேரடி சமசப்தம பார்வையில் இருக்கிறார். சந்திரனும் பாக்ய ஸ்தானத்தில் இருக்கிறார். எனவே ஜாதகர் பணக்காரர். களத்திரம் மற்றும் சுகஸ்தான அதிபதி புதன் லாபஸ்தானத்தில் குருவின் பார்வையில் இருப்பதால் திருமணம் முடிந்து மனைவி வந்த பின் வசதி வாய்ப்புக்கள் பெருகி இருக்கும்.

    தனஸ்தானத்தில் ராகு இருந்தாலும், அந்த ஸ்தான அதிபதியும், பாக்யாதிபதியுமான செவ்வாய், யோக்காரகனும் ராஜயோகமும் கொடுக்கக் கூடியவர். அவர் சூரியனுடனும் லாபஸ்தான அதிபதி சனியுடனும் சேர்ந்து கர்ம ஸ்தானமான 10ல் இருப்பதால், தன் சொந்த முயற்சியிலும் நிறைய பணம் சம்பாதித்து பணக்காரராக வாழ்ந்திருப்பார்.

    ReplyDelete
  10. Respected Sir,

    Lagnadhipathy Guru 3-il Vakkiram + Maandhi.

    2-il Raagu and 9-il Neecham petra chandran. 2&9-m adhipathy Chevvai 10-il sooriyanukku 12 degree-il Asthangam.

    10-m adhipathy Guru 3-il. 11-m adhipathy Sani 10-il(Avar veetirku 12-il).

    Budhan dhasa piragu Kethu dhasa then Sukra Dhasa. 13 vayadhu mudhal 33 vayadhu varai Sukhra dhasa. Sukran 3 & 8-ku adhipathy avar 10-il. Kadinamana kaalamaga irundhirukkum.

    33-39 vayadhu varai Soorya dhasa. Sooriyan 6-m adhipathy. 39-49 chandra dhasa. Chandran 5-m adhipathy 9-il Neecham petru amarvu.

    Nalla dhasavum illai and jadhagathil nalla amippum illai.

    10-m adhipathy Vakkiram petru 3-il amarvu and 10-il 4 gragangal amarvu idhanal jadhagar sila tholilgalai seithu adhil tholviyai thaluvi iruppar.

    Kaikkum Vaaikkumana Nilai. Selvandhar Illai.

    Thank You.

    ReplyDelete
  11. Ayya vanakkam.
    In this horoscope,the Lagan lord guru in 3rd house.He is thana kaarakan also.Disappeared from Lagna.(2).Second house lord in 10th house, but Ragu sitting in second house will make him as poor.(3).Fifth house lord Chandra in 9th house in neecham but having ascending of Dhanakaaakan Guru and also made Gajakesari yogham.
    (4). 10th house is not in good shape as this house is associated with suriyan(6th lord) sukkiran(3&8),sevvay(2&9) and Sani(11&12).10th house is suffered by 3,6,8and 12th lords.
    The native IS POOR.
    SOME WEALTH BENIFITED AFTER 39 YRS BECAUSE OF CHANDA DASA, AND PLACEMENT O BUDHAN IN 11TH HOUSE.

    ReplyDelete
  12. வணக்கம் அய்யா.,

    ஜாதகரின் பிறப்பு : 29/december/1929
    நேரம் :- 11:45 am,
    கேட்டை நட்சத்திரம் ,

    பூர்விகஸ்தானம் , புண்ணியஸ்தானம் குறைந்தபரல்களுடன் உள்ளன அதன் அதிபதிகளும் குறைந்த சுய பரல்கள்., தேய்பிறை சந்திரன் நீசம், மேலும் பாபகர்த்தாரி யோகத்தில், சூரியன், சுக்கிரன் , சனி , செவ்வாய், சேர்க்கையால்
    தாய் தந்தை சொத்துக்கள் இல்லை, அல்லது அதனால் பயன் கிடைக்காது, இருந்தால் இவர் அதை அழிப்பார்


    கஜகேசரி யோகத்தில் இவருக்கு வெற்றிக்கு உரிய இடத்தில குரு ,
    குரு மற்றும் சுக்கிரன் பரிவர்த்தனை .,

    இவர்கள் இருவரும் சுபதன்மை பெற்று சுபர்கள் ஆகிவிட்டார்கள்., மேலும் தொழில்கரகணின சேர்க்கை சுக்கிரன் பெற்றிருக்கிறார்

    பத்தாமிடம் சுபகர்தாரி யோகத்தில் .,


    புத்தினாதன் புதனும் குரு பார்வையுடன் சுபராக உள்ளார் 11 ம் அதிபதி பத்தாம் இடத்தில இருப்பதால் பிறரிடத்தில் லாபம் வருவது உறுதி .,

    புதன் மற்றும் குரு வர்க்கோத்தமம் அடைகிறார்கள்., மேலும் குருவுடன் சுக்கிரன் நவாம்ஷாத்தில் பத்தாமிடத்தில் ஆட்சியாகி இணைகிறார் ., நவாம்ஷ லக்கினத்தில் லக்கினாதிபதி ஆட்சி எனவே இவர் தனது சுய சம்பாத்தியம் ,

    தனகாரகன் குரு வக்கிரம் ., ஆறாமிடம், எட்டு, மற்றும் பன்னிரண்டாம் அதிபதிகளின் சேர்க்கை பெற்று 10 ல், மற்றும் இரண்டமிடத்தில் உள்ள ராகு.. 10 மற்றும் இரண்டாமிடத்திற்கு சுபர் பார்வை இல்லாத காரணத்தினால் வரவுக்கு செலவு சரியாக இருக்கும்


    தங்கள் பதிவிட்டுள்ள நவாம்சம் சரியானதா என்பதில் எனக்கு ஐயப்பாடு உள்ளது


    ReplyDelete
  13. He would have born rish person:

    Lagnathipathi Guru sees chandran(7th) and budhan (9th)

    And he should have earned good money as 2- athipathi is in 10th position(laganathipathi_ Moreover in Guru place everybosy is neutral.10th place is good for Sani as well .sevvai in 10th place has made him to take courageous decisions.Sukran could have given him good enjoyments He could have well established in Arts

    ReplyDelete
  14. அய்யா அவர்களுக்கு வணக்கம்.
    ஜாதகர் மனைவி மூலம் வளமான வாழ்க்கை நடத்துபவர்.
    1) லக்னாதிபதி குரு 3ல் மறைவு அத்துடன் மாந்தியுடன் கூட்டு.லக்னாதிபதி கெட்டுள்ளார்.
    2).இரண்டாம் ஆதி செவ்வாய், 10ல் இருந்தாலும் ஆறாம்பதி சூரியனுடனும்,3,8க்குரிய சுக்கிரனுடனும்,12க்குரிய சனியுடனும் சேர்ந்து கெட்டுள்ளார்.
    3)5ம் பதி சந்திரன் 9ல் இருப்பினும் நீச்சம் மற்றும் பாவகர்த்தாரி யோகம். குரு பார்வை இருந்தாலும் சிறப்பில்லை.
    4).9ம் பதி செவ்வாய் 10ல் இருந்தும் தீயவர்களான 6,8,12 அதிபர்களுடன் சேர்க்கை.
    5). 10ம் பதி குரு 3ல் மறைவுடன் மாந்தியுடன் கூட்டு.அத்துடன் தன் ஸ்தானத்திற்க்கு 6ல் மறைவு.
    6).11ம் பதி சனி(விரையாதிபதியும்) 10ல், தனது வீட்டிற்க்கு 12ல் மறைவு.
    6). 4&7ம் பதியான புதன் 11ல் அமர்ந்து,லக்கினாதிபதியான,தனகாரகனாகிய குருவின் பார்வையையும் 7ம் இடத்திலும்,11ம் இடத்திலும் பெறுவதால்,மனைவி மூலம் தன வரவு பெற்று வளமாக இருக்க வேண்டும்.

    ReplyDelete
  15. Dear Sir,

    The given horoscope person is poor person. He did not earn money. He did not save money.
    7th lord is in 11th. Hence he got money through his wife. but he spent all the money which he earned.

    2nd place rahu, 2nd lord is in 10th with sani. 10th lord is with mandhi. Sani 11th lord is in 10th, which is 12th place to that position.

    Thanking you sir.

    C.Jeevanantham.

    ReplyDelete
  16. Vanakkam Aiya,

    1. Mesha raagu:raaja yogam tharum.

    2.9il poorvapuniyadhibadhi chandiran neesam; irundabodum lagnadhibadhi guruvin 7m paarvai paduvadaga ulladu yogame..

    3.10il kendiram + thozhil sthanathil suriyan,sevvai,thozilkaragan sani,sukiran amarndadal, aatchi,adigaramikka padaviyai vahipar anbar....; melum sukkiranum,guruvum parivarthanai yogathil irukirargal Aiya...

    4.11il budhan thanithu nirkirar..

    Agave, inda anbar nichayam raajabogamai vazhvar aiya...!!

    ReplyDelete
  17. அன்புடன் வாத்தியார் அய்யாவுக்கு வணக்கம்
    புதிர் எண் 51
    லக்னம் மீனம் ..குரு திசை இருப்பு புதன் 6 வ .3நா
    1..லக்னாதிபதி குரு 3 ல் ரிஷபம் .சுக்கிரன் தனுசில் பரிவர்த்தனை..
    2..2ல் ராஹு .உயர்ந்தோர்களின் தொடர்பு ..பொருளாதராம் . ..குறைவுதான்
    3. 9ம் மிடம் விருசிகம் சந்திரன் நீசம் ஆனால் குரு 7ம் பார்வை கேச கேசரி யோகம் .இருந்தாலும் 9மிடம் பாபகர்த்தாரி யோகத்தில் ..
    4.10ல் 4 பேர் சுக்கிரன் சனி செவ்வாய் சூரியன் .. சுக்கிரன் &குரு பரிவர்த்தனை யோகத்தில் உள்ளார் .
    5..11ல் புதன் ..அம்சத்திலும் அவர் அதே மகரத்தில் வர்கோத்தமம் ..மேலும் அம்சத்தில் புதன் சனி பரிவர்த்தனை. .
    ..குருவும் அம்சத்தில் வர்கோத்தமம்.
    6.8ல் கேது தலைமை பண்பு வரும்
    7.இல வய்தில் வறுமை இருந்தாலும் சுக்கிர திசை கடைசியில் நல்லதொரு செல்வாக்குடன் பொருளாதாரம் மேம்பட்டு இருக்கும்
    மிக பெரிய காரணம் 10 மிடம் சுப கர்தாரி யோகத்தில். .
    அய்யா சரியா..

    ReplyDelete
  18. He is running his life as hand to mouth.Due to
    1. 11th lord in 10th place.
    2. 10th lord in enemy place.
    3. 2nd lord also joint with suriyan,sani(papa graga)
    But he is living as comfortable.

    Thanking you,
    With best regards,
    M.Santhi

    ReplyDelete
  19. ஆசிரியருக்கு வணக்கம், ஜாதகத்தில் லாபதிபதியும், தொழில் காரகனும், விரையதிபதியுமாகன சனி 10 ல், உடன் 6 ம் அதிபதி சூரியன், மேலும் 2 மற்றும் 9 ம் அதிபதி செவ்வாய், 3 மற்றும் 8 ம் அதிபதியும் உடன் உள்ளார்கள். தனகரகன் குரு 3 ல் மாந்தியுடன். எனவே ஜாதருக்கு 10 ல் உள்ள சனி வேலை வாய்ப்பை கொடுப்பார். மேலும் செவ்வாய் சம்பாதிக்கும் ஆற்றலையும், திறமையையும் கொடுப்பார். ஆனால் 6 ம் வீட்டு அதிபதி சூரியன் உடன் இருப்பதாலும், சனி 3 ம் பார்வையாக விரைய ஸ்தானத்தை பார்ப்பதாலும் மிக பெரிய செல்வந்தராக இருக்கமுடியாது.

    ReplyDelete
  20. ஜாதகர் ஏழ்மை நிறைந்தவர். காரணம் இரண்டில் பாப கிரகமான ராகு இருக்கிறார். இரண்டாம், ஒன்பதாம் அதிபதி செவ்வாய் 3,8க்குரிய சுக்கிரனுடன் 10ல் இருக்கிறார். உடன் 6க்குரிய சூரியனும் இருப்பது நிலைமையை இன்னும் மோசமாக்கும். லக்கினாதிபதி 3ல் மாந்தியுடன் மறைவு. கேந்திராதிபத்ய தோஷம் பெற்ற புதன் 11ல் இருப்பதும் பாதகம் செய்யும் அமைப்புதான். அத்துடன் 5ம் அதிபதி சந்திரன் 9ல் நீசம்.

    ReplyDelete
  21. கொடுக்கப்பட்ட புதிர் எண் :59க்கான விடை

    1) ஜாதகர் ஏழையாகப் பிறந்தவர்.
    2) ஏழ்மையில் வாழ்பவர். அதாவது கைக்கும் வாய்க்குமாக வாழ்பவர்.
    அதற்கான காரணங்கள்:
    மீன லக்னம், விருச்சிக ராசி ஜாதகர்.
    1)லக்னாதிபதி, 10மிட அதிபதி மற்றும் தன காரகன் குரு 3ல் மாந்தியுடன் வக்கிர கதியில் உள்ளார்.
    2)தனஸ்தானமான 2ல் ராகு குடியுள்ளார். அதன் அதிபதியும் 9மிட பாக்யாதிபதியுமான செவ்வாய் 10ல் அஸ்தங்கமாகி விட்டார்.
    3)11மிடமான லாபஸ்தானத்தில் புதன் அமர்ந்துள்ளார். லாபாதிபதி சனி 11மிடத்திற்கு 12மிடமான பத்தில் அமர்ந்துவிட்டார்.
    4)2மிடத்திற்கு எந்த சுபரின் பார்வையுமில்லை.
    எனவே ஜாதகர் ஒரு ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர்.
    ஜாதகருக்கு தொழில் ஸ்தானமான 10மிடத்தில் 4 கிரகங்கள் கிரக யுத்தத்திலுள்ளன.
    1) கர்மகாரகனான சனி 10ல் அமர்ந்து காரகோ பாவ நாசாய: என்று ஒரு நிரந்தர வேலை கிடைக்காமல் கெடுத்துவிட்டார்.
    2) கர்மாதிபதி குரு 10க்கு 6மிடத்தில் மாந்தியுடன் மறைந்துவிட்டார். தவிர கஹல பரிவர்த்தனையில் சுக்கிரனுடன் சேர்ந்து ப்லமிழந்துவிட்டார்.
    3) 10மிடத்தில் ஜாதக வில்லன் 6மிட அதிபதி சூரியன் அஷ்டமாதிபதி சுக்கிரனுடன் சேர்ந்து அமர்ந்துள்ளார்.

    இவையெல்லாம் சேர்ந்து ஜாதகருக்கு நிரந்தர வேலையில்லாமல் செய்து விட்டன. தவிர, ஜாதகருக்கு அடுத்தடுத்த வந்த தசா புக்திகள் புதன் 6 வருடம் + கேது 7 வருடம் + சுக்கிரன் 20 வருடம் + சூரியன் 6 வருடம் என கிட்டத்தட்ட 39 வருடங்கள் படுத்தி விட்டன. அதற்கு அடுத்த வந்த பாக்யாதிபதி நீச சந்திர தசை 10 வருடமும் அவருக்கு உதவவில்லை. 9மிடம் பாபகர்த்தாரியில் இருப்பதை கவனிக்கவும்.
    ஆக ஜாதகர் வாழ்நாள் முழுவதும் வறுமையில் உழன்று கைக்கும் வாய்க்குமாக சிரமப்பட் டுள்ளார் என்றே சொல்லலாம். தங்களின் திறமையான அலசலுக்காக காத்திருக்கிறேன்.

    ReplyDelete
  22. ஜாதகர் 29 12 1929ல் காலை 11 45 அளவில் பிறந்தவர்.

    லக்கினாதிபதி குரு ராகு மாந்தியால் சூழப்பட்டுள்ளார்.குரு வக்கிரமாகவும் உள்ளார்.

    இரண்டாம் இடத்தில் ராகுவும்,இரண்டாம் வீட்டு அதிபதியும் ஒன்பது பாக்கிய வீட்டு ஸ்தானதிபதியும் ஆன செவ்வாய் பத்தில் அமர்ந்தாலும் 6ம் அதிபதியான சூரியனால் அஸ்தங்கம் ஆனதால் தனம்(2) பாக்கிய ஸ்தானம்(9) பலன் இல்லாமல் போனது.

    5ம் அதிபனான சந்திரன் ஒன்பதில் அமர்ந்தாலும் நீசம் ஆனதும், பல தீய கிரஹங்களால் சூழப்பட்டதும் சிறப்பல்ல.

    பத்தாம் அதிபதியும் குருவேதான்.அவர் தன் வீட்டூக்கு ஆறிலும்,மூன்றிலுமாக நின்றது அவரால் உத்தியோகத்திற்குப் பலன் இல்லாமல் போனது. மேலும் பத்தாம் இடத்தில் ஆறாம் அதிபதியும், எட்டாம் அதிபதியும் பன்னிரணடாம் அதிபதியும் அமர்ந்தது சரியான நிரந்தர வேலை கிடைக்காததைக் குறிகிறது.

    ஒன்பதாம் வீடு கேது, சூரியன்,செவ்வாய், சனி ஆகியவர்களல சூழ்ந்ததால் 9ம் இடத்திற்குண்டான பாக்கியங்கள் கிடைத்தது குறைவு.

    கர்மகாரனும், 11, 12க்குண்டான சனி பத்தில் அமர்ந்தாலும் சூரியனால் அஸ்தங்கம்.

    14 வயது வரை, கேது தசா முடியும் வரை கஷ்ட ஜீவனம்தான்.

    சுக்கிர தசாவில் எட்டாம் அதிபதி தசா ஆனதால் பெரிய லாபமில்லை. அதன்பின்னர் சூரிய தசா ஆறாம் அதிபதி தசாவும் சரியில்லை.

    40 வயதிற்குப்பின்னர் சந்திர தசாவில் சிறிது தலைதூக்கினார்.சுய தொழில் செய்து 57 வயதுவரை பொருள் ஈட்டினார்.4,7 வீட்டுக்கு உரிய புதன் 11ல் அமர்ந்ததால் சுய தொழிலில் தன்னை சமாளிக்கும் அளவு முன்னேறியிருப்பார்.

    சூரியன் 10ல் அமர்ந்ததால் அரசின் உதவித்தொகை கிடைக்க வாய்ப்பு; அல்லது அரசியல் வாதியாக நல்ல புகழ். வசதிக்குறைவான வாழ்க்கைதான்.

    ReplyDelete
  23. Answer to Quiz 59:

    Guruji my first try to answer your question.
    1.2,9,11 lords are in war
    2.Moon in 9th house and it is neecha but guru aspect will reduce evil effect.
    3.10th lord with maandi.
    4.Exchange of 3 and 10 lord will benefit business.
    5. Mercury in 11 place with Jupiter aspect - good position.
    6. Rahu in second place bad.

    Answer: He is not rich by Birth.
    Earning will be sufficient for his survival.

    ReplyDelete
  24. Respected Sir,

    My answer for our today's Quiz No.59:

    The Native of the given horoscope was not born with silver spoon.

    He struggled upto 39 years thereafter he came up in his life.

    Reasons:
    1. Lagna lord is in Third place (enemy house) along with Mandi. It's bad.
    2. It has kala sarpa dosa.
    3. 7 1/2 Saturn (transit) during his 25 to 33 age.
    4. Poorva punniyathipathi is debilitated.
    5. sixth house lord sun dasa also upto 39 years.
    6. Rahu is in second house.
    7. Eleventh lord is in twelfth house from its own house.

    Hence, all the above reasons, He had struggled upto 39 years of his age.

    Form 39 years onwards, during Moon dasa, he had come up in his life.

    With kind regards,
    Ravichandran M.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com