மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

11.2.13

Astrology.Popcorn Post: வாசல்படியில் உட்கார்ந்து கொண்டு ஏன்டா வம்பு செய்கிறாய்?


Astrology.Popcorn Post: வாசல்படியில் உட்கார்ந்து கொண்டு ஏன்டா வம்பு செய்கிறாய்?

பாப்கார்ன் போஸ்ட் எண்.36 

பாவ சந்திப்பில் இருக்கும் கிரகத்திற்கு என்ன சாமி பலன்?

ஒரு பாவத்திற்கு அல்லது ஒரு வீட்டிற்கு அல்லது உங்களுக்குப் புரியும்படி சொல்வதென்றால் ஒரு ராசிக்கு 30 பாகைகள் என்பது உங்களுக்குத் தெரியும்.

ஒரு வீட்டின் முடிவுப் பகுதியில் அதாவது 28 பாகைகள் அல்லது அதற்கு மேலான பாகையில் இருக்கும் கிரகம் பாவசந்தியில் இருப்பதாகக் கொள்வார்கள். அதாவது ஒரு பாவத்திற்கும் அடுத்த பாவத்திற்கும் இடையில் இருப்பதாகக் கொள்வார்கள். Border Position என்று கொள்ளலாம். சில ஜாதகங்களில் இந்த நிலைமை இருக்கும்.

அதாவது வீட்டிற்கு உள்ளேயும் இல்லாமல் அல்லது வெளியேயும் இல்லாமல், நிலைப்படி அருகே உட்கார்ந்திருக்கும் நிலைமை.

திருக்கணிதம் அல்லது வாக்கியப் பஞ்சாங்கப்படி ஜாதகங்களைக் கணிக்கும்போது, இந்த நிலைப்படி கிரகங்கள் படுத்தி எடுக்கும்.

ஒரு அட்டவணையில் (Chart) சிம்மத்தில் இருக்கும் கிரகம் அடுத்த அட்டவணையில் (Chart) கன்னியில் இருப்பதாகக் காட்டும். ஜாதகன் குழம்பிப்போவான்.

எதை எடுத்துக்கொள்வது?

நம் முனிசாமிகள் (அதாங்க நம் முனிவர்கள்) எழுதி வைத்துவிட்டுப்போனபடி வாக்கிய பஞ்சாங்கக் கணிப்புக்களையே எடுத்துக்கொள்வது நல்லது.

பாவசந்திப்பில் இருக்கும் கிரகம் எவ்வாறு பலன் கொடுக்கும்?

ஒரு பாவத்தின் மத்தியில் இருக்கும் கிரகம அந்த பாவத்திற்கு உரிய முழுப்பலனையும் கொடுக்கும். அதாவது உதாரணமாக ஒன்பதாம் வீட்டின் மத்தியில் இருக்கும் கிரகம்  தன் தசாபுத்தியில் தனக்குரிய பலனை முழுமையாகக் கொடுக்கும். (Both by placement and by ownership)

உதாரணமாக ஐந்தாம் வீட்டு அதிபதி குரு பகவான் ஒன்பதாம் வீட்டில் (திரிகோண வீடு) அமர்ந்திருந்தால், ஐந்தாம் வீட்டிற்கான பலனையும், ஒன்பதாம் வீட்டிற்கான பலனையும் ஒருசேரத் தன்னுடைய தசாபுத்திகளில் தருவார். அதேவீட்டில் அவர் வாசற்படியில் அமர்ந்திருந்தால் பலன்கள் வெகுவாகக் குறைந்துவிடும். மத்தியப் பகுதியில் இருந்து வாசற்படி நோக்கி ந்கர ந்கரவே அதற்குத் தகுந்தாற்போல பலன்கள் குறைந்து கொண்டே வரும்

ஆசாமி வாசற்படியில் அமர்ந்திருப்பதைக் கவனிக்காமல் பலன் சொன்னால, பலன்கள் தவறாகிப் போகும்.

ஏழாம் வீட்டில் சுபக்கிரகம் இருப்பதைப் பார்த்துவிட்டு, உனக்கு நல்லமனைவி, நீ விரும்பும்படி அழகான மனைவி கிடைப்பாள் என்று ஜோதிடர் சொன்னதை வைத்து, நம்ம நாயகன்  ஊ...லல்லல்லா என்று கனவுலகில் பாடிக்கொண்டிருப் பான். ஆனால் அதே சுபக்கிரகம் அந்த வீட்டின் வாசற்படியில் இருந்தால், அவன் பாட்டு திருமணத்தோடு முடிவிற்கு வந்து விடும். தொடராது! அதாவது ஜோதிடர் சொன்னது தவறான கணிப்பாகிவிடும்!

அர்த்தமாயிந்தா சாமிகளா?

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

34 comments:

  1. அன்புக்குரிய, மேன்மை தங்கிய வாத்தியாருக்கு,

    காலை வணக்கங்கள் பல.

    பாடம் அருமையாக இருந்தது.

    +++++++

    Quote: //ஒரு பாவத்திற்கு அல்லது ஒரு வீட்டிற்கு அல்லது உங்களுக்குப் புரியும்படி சொல்வதென்றால் ஒரு ராசிக்கு 30 பாகைகள் என்பது உங்களுக்குத் தெரியும்.

    ஒரு வீட்டின் முடிவுப் பகுதியில் அதாவது 28 பாகைகள் அல்லது அதற்கு மேலான பாகையில் இருக்கும் கிரகம் பாவசந்தியில் இருப்பதாகக் கொள்வார்கள். அதாவது ஒரு பாவத்திற்கும் அடுத்த பாவத்திற்கும் இடையில் இருப்பதாகக் கொள்வார்கள். Border Position என்று கொள்ளலாம். சில ஜாதகங்களில் இந்த நிலைமை இருக்கும்.//

    +++++++

    நீங்கள் பாவத்தை சொல்கிறீர்களா இல்லை ராசி வீட்டை சொல்கிறீர்களா?

    ராசி வீட்டில் ஒரு கிரகம் வாசல் படியில் இருக்கிறது என்றால், கோச்சாரப்படி அப்போது தான் அந்த ராசியில் நுழைந்தோ (அ) இன்னும் சற்று நேரத்தில் வெளியே அடுத்த வீட்டிற்கு பெயர்ச்சி ஆகி விடும் என்னும் நிலையிலோ இருக்கும்.

    பாவம் என்றால், லக்கினம் கடிகார முள் போன்று ராசிச் சக்கரத்தினை சுற்றி sweep செய்து கொண்டே வரும் பொழுது, ஒரு குறிப்பிட்ட வீட்டில் நிற்கும் கிரகம் இந்த பாவத்தில் அடங்கும் போழ்து பாவத்தின் முன்னால்/கடைசியில் நிற்கும்.

    The lagna does not change in a flash after every 2 hours like a digital clock nor does it's middle (0 degrees) coincide with the middle of the house it happens to be passing through at the time of event (birth usually). It rather sweeps across the rasi chakra, much like a seconds hand in an analogue clock. The rasi chakra and the planets housed there in are static (compared to the rate of sweep of Lagna bhava - 30 degrees). So it is only natural and logical, if we expect part of the next house to be included in the lagna and the following bhavas. When a part of the next house is included, any planet positioned in it may also get included in the sweeping bhaava, much like a shadow of a cloud moving over a town, including and passing over buildings stationary beneath.

    இது தான் "லைட்டாக" குழப்புகிறது.

    நானே உட்கார்ந்து யோசித்து யோசித்து தெளிந்ததில், எந்த பாவத்தில் கிரகம் இருக்கிறதோ அதன் பலனை, தன தசா புக்திகளில், தான் அமர்ந்த வீட்டின் பலனோடு சேர்ந்து பண்ணும் (தனது வீட்டு பலனும் தான்) எனபது.

    கூடிய சீக்கிரம் மதுரை புது மண்டபத்துக்கு போக வேண்டி வரும் என உள்ளுகிறேன்.

    ஆராய்ச்சி மாணவன் என்பதால் மூளையை போட்டு குடைந்து குடைந்து இப்போதெல்லாம் தூக்கம் வருவதில்லை. பிடித்த வேலையை செய்வதால் களைப்பும் தெரிவதில்லை. காதலியுடன் கதைப்பதில் களைப்பு இருப்பதில்லையே, அது போலத்தான்.

    It is my duty as a discerning student (or rather as a person that wants to be one)to ask here, the doubts that arise in my mind. Perhaps, I am wrong in my understanding. Which is why I am a novice. I have these doubts. Kindly clear them, O learned Sir.

    சுய ஜாதகத்தினை ஏனோ இப்போதெல்லாம் (சில மாதங்களாக) பார்ப்பது இல்லை. நான் காலகாலரை மனதார நம்புகிறேன். அவருக்குத் தெரியாமலா நடக்கிறது? அவர் மேல் பாரத்தை போட்டு விட்டு, ஜாலியாக சுற்றுகிறேன். எல்லாப் புகழும் இறைவருக்கே. I am now learning astrology as a science. And that's all it is! you know it's like driving classes. They teach you how to interpret the road signs. :-)))

    ஆரம்பத்தில் வகுப்பறையில் எனது ஜாதகத்தினை மையமாக கொண்டு படித்ததுண்டு. இப்போது அது பண்ணுவதில்லை.

    இந்த வாரமும் இனி வரும் நாட்களும் பயன் செறிந்ததாக இருக்க காலகாலரை வேண்டுகிறேன்.

    +++++

    அன்புடன்,
    காலகாலதாசன் புவனேஷ்

















    ReplyDelete
  2. காலகாலன் இருக்க பயம் ஏன்?

    சில வெண்பாக்கள்!

    +++++

    மேனி யழகும் முதன்மையெ னுந்நிலையும்
    பேணிய நாளும் நிலையோ - தேமொழிநல்
    தோணிய வன்பதம் பிறவிக் கடல்தாண்ட
    காலகா லன்பதம் சேர்.

    தனமும் வாக்கும் கொண்டகு டும்பமும்
    சினம்கொண்ட கூற்றின்முன் நில்லா - தேமொழிநல்
    கணம்கொண்ட நாதனா மாலகாலம் லம்முண்ட
    காலகா லன்பதம் சேர்.

    வீரமும் வெற்றிச் செருக்கும் பாரிலோர்
    தீரமுடன் சேர் தம்பியும் - தேமொழிநல்
    பூரமது போல்கரையும் கண்டாய் வாழிநீ
    காலகா லன்பதம் சேர்.

    கற்ற கல்வியும் பெற்ற மனைசுகமும்
    நற்றவம் போலவ ருமா - தேமொழிநல்
    உற்றதாயும் உடன்வாராள் பற்றறுத்து
    காலகா லன்பதம் சேர்.

    நுண்ணிய நல்லறிவும் திண்ணிய தோள்தவழும்
    ஒண்ணுதல் பிள்ளைகளும் நிலையா - தேமொழிநல்
    புண்ணியப் பயன்றுய்த் துய்ய கண்ணுதலோன்
    காலகா லன்பதம் சேர்.

    +++++
    காலகாலதாசன் புவனேஷ்வர்

    ReplyDelete
  3. குருவிற்கு வணக்கங்கள்,
    பாப்கார்ன் போஸ்ட் சுவை அருமை.பதிவிற்கு நன்றிகள், உங்கள் மாணவன் ரெங்கா

    ReplyDelete
  4. Border Position ல் இருக்கும் கிரஹங்கள் பற்றி நச் என்று சுருக்கமாக கொடுத்த விளக்கம் நன்கு புரிந்தது ஐயா.

    உச்சி வெயிலின் வெப்பம் உதயத்திலோ அந்தியிலோ இருப்பதில்லை என்ற உண்மையை புரிந்து கொண்டவர்களுக்கு இந்த பாப்கார்ன் பதிவு பட்டென்று புரியும்.

    ReplyDelete
  5. குருவுக்கு வணக்கம்.
    பாவச்சந்திப்பை பற்றிய பாடம் நன்று.சிறப்பு.ரொம்ப நன்றிகள்

    ReplyDelete
  6. வருகை பதிவுடன் சுழல விடுகிறோம்
    வழக்கம் போல் இந்த பாடலை

    ....
    வீட்டுக்கு வீடு வாசப்படி
    விஷயங்கல் ஆசைப்படி

    எங்கெங்கும் போராட்டந்தான் எல்லாரும் ஒன்னாட்டந்தான்

    கல்யானம் கடவுள் செயல்
    கண்ணீரும் அவன் செயலே

    நடந்தது மரப்பது
    நல்லதம்மா

    சீதைக்கும் துன்பம் உண்டு
    ராதைக்கும் துன்பம் உண்டு

    எப்பொதும் தாங்கிக் கொண்டால் எல்லோர்க்கும் மேன்மை உண்டு

    ஆசைகள் கொடி உண்டு
    ஆனாலும் எல்லை உண்டு

    பாதைகள் நூறு உண்டு
    பயணங்கள் வேறு வேறு

    ReplyDelete
  7. வணக்கம் ஐயா,12 வீட்டிற்கும் வாசப்படி பின்வாசலில்தான்(28பாகையிலிருந்து 30வரை) உள்ளதா? அல்லது முன் வாசலிலும்(முதல் 2பாகைகள்)உள்ளதா? அல்லது 30 பாகை முடிந்தவுடன் அடுத்தவீட்டில் புகுந்ததாக எடுத்துக்கொள்வதாங்க ஐயா.ஒரே வீட்டில் லக்ன‌த்திற்கு முன்னர் இருக்கும் கிரஹ்ம் 12ம் வீட்டில் இருப்பதாக எடுத்துக்கொள்வதாங்க ஐயா. நன்றி ஐயா.

    ReplyDelete
  8. /////Blogger Bhuvaneshwar said...
    அன்புக்குரிய, மேன்மை தங்கிய வாத்தியாருக்கு,
    காலை வணக்கங்கள் பல.
    பாடம் அருமையாக இருந்தது.
    +++++++
    Quote: //ஒரு பாவத்திற்கு அல்லது ஒரு வீட்டிற்கு அல்லது உங்களுக்குப் புரியும்படி சொல்வதென்றால் ஒரு ராசிக்கு 30 பாகைகள் என்பது உங்களுக்குத் தெரியும்.
    ஒரு வீட்டின் முடிவுப் பகுதியில் அதாவது 28 பாகைகள் அல்லது அதற்கு மேலான பாகையில் இருக்கும் கிரகம் பாவசந்தியில் இருப்பதாகக் கொள்வார்கள். அதாவது ஒரு பாவத்திற்கும் அடுத்த பாவத்திற்கும் இடையில் இருப்பதாகக் கொள்வார்கள். Border Position என்று கொள்ளலாம். சில ஜாதகங்களில் இந்த நிலைமை இருக்கும்.//
    +++++++
    நீங்கள் பாவத்தை சொல்கிறீர்களா இல்லை ராசி வீட்டை சொல்கிறீர்களா?
    ராசி வீட்டில் ஒரு கிரகம் வாசல் படியில் இருக்கிறது என்றால், கோச்சாரப்படி அப்போது தான் அந்த ராசியில் நுழைந்தோ (அ) இன்னும் சற்று நேரத்தில் வெளியே அடுத்த வீட்டிற்கு பெயர்ச்சி ஆகி விடும் என்னும் நிலையிலோ இருக்கும்.
    பாவம் என்றால், லக்கினம் கடிகார முள் போன்று ராசிச் சக்கரத்தினை சுற்றி sweep செய்து கொண்டே வரும் பொழுது, ஒரு குறிப்பிட்ட வீட்டில் நிற்கும் கிரகம் இந்த பாவத்தில் அடங்கும் போழ்து பாவத்தின் முன்னால்/கடைசியில் நிற்கும்./////

    பிறந்த ஜாதகத்தில் (Natal Chart) எப்படி சுழற்சி எல்லாம் இருக்கும்? குழப்புகிறீர்களே? கோள்சாரத்தை எல்லாம் எதற்குக் கூட்டிக்கொண்டு வருகிறீர்கள்?

    ReplyDelete

  9. Blogger Bhuvaneshwar said...
    காலகாலன் இருக்க பயம் ஏன்?
    சில வெண்பாக்கள்!
    +++++
    மேனி யழகும் முதன்மையெ னுந்நிலையும்
    பேணிய நாளும் நிலையோ - தேமொழிநல்
    தோணிய வன்பதம் பிறவிக் கடல்தாண்ட
    காலகா லன்பதம் சேர்.
    தனமும் வாக்கும் கொண்டகு டும்பமும்
    சினம்கொண்ட கூற்றின்முன் நில்லா - தேமொழிநல்
    கணம்கொண்ட நாதனா மாலகாலம் லம்முண்ட
    காலகா லன்பதம் சேர்.
    வீரமும் வெற்றிச் செருக்கும் பாரிலோர்
    தீரமுடன் சேர் தம்பியும் - தேமொழிநல்
    பூரமது போல்கரையும் கண்டாய் வாழிநீ
    காலகா லன்பதம் சேர்.
    கற்ற கல்வியும் பெற்ற மனைசுகமும்
    நற்றவம் போலவ ருமா - தேமொழிநல்
    உற்றதாயும் உடன்வாராள் பற்றறுத்து
    காலகா லன்பதம் சேர்.
    நுண்ணிய நல்லறிவும் திண்ணிய தோள்தவழும்
    ஒண்ணுதல் பிள்ளைகளும் நிலையா - தேமொழிநல்
    புண்ணியப் பயன்றுய்த் துய்ய கண்ணுதலோன்
    காலகா லன்பதம் சேர்.
    +++++
    காலகாலதாசன் புவனேஷ்வர்////

    காலனைப் பற்றிய தகவல்களுக்கு நன்றி!

    ReplyDelete
  10. /////Blogger eswari sekar said...
    vanakam sir.////

    உங்களின் வருகைப் பதிவிற்கும் வணக்கத்திற்கும் நன்றி!

    ReplyDelete
  11. /////Blogger renga said...
    குருவிற்கு வணக்கங்கள்,
    பாப்கார்ன் போஸ்ட் சுவை அருமை.பதிவிற்கு நன்றிகள், உங்கள் மாணவன் ரெங்கா////

    ஆமாம். சுவையாக இருந்தால்தானே படிக்க முடியும். அதனால் எழுதும்போது சுவை குறையாமல் பார்த்துக்கொள்வேன். நன்றி!

    ReplyDelete
  12. Blogger சரண் said...
    Border Position ல் இருக்கும் கிரஹங்கள் பற்றி நச் என்று சுருக்கமாக கொடுத்த விளக்கம் நன்கு புரிந்தது ஐயா.
    உச்சி வெயிலின் வெப்பம் உதயத்திலோ அந்தியிலோ இருப்பதில்லை என்ற உண்மையை புரிந்து கொண்டவர்களுக்கு இந்த பாப்கார்ன் பதிவு பட்டென்று புரியும்.//////

    ஆமாம், பகலும் இரவும் சந்திக்கும் நேரம் என்பதை மனதில் தக்க வைத்துக்கொண்டால் போதும். நன்றி!

    ReplyDelete
  13. ////Blogger Thava Kumaran said...
    குருவுக்கு வணக்கம்.
    பாவச்சந்திப்பை பற்றிய பாடம் நன்று.சிறப்பு.ரொம்ப நன்றிகள்////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete

  14. /////Blogger Gnanam Sekar said...
    அய்யா காலை வணக்கம்/////

    உங்களின் வருகைப் பதிவிற்கும் வணக்கத்திற்கும் நன்றி!

    ReplyDelete
  15. ////Blogger அய்யர் said...
    வருகை பதிவுடன் சுழல விடுகிறோம்
    வழக்கம் போல் இந்த பாடலை
    ....
    வீட்டுக்கு வீடு வாசப்படி
    விஷயங்கள் ஆசைப்படி
    எங்கெங்கும் போராட்டந்தான்
    எல்லாரும் ஒன்னாட்டந்தான்
    கல்யாணம் கடவுள் செயல்
    கண்ணீரும் அவன் செயலே
    நடந்தது மறப்பது
    நல்லதம்மா
    சீதைக்கும் துன்பம் உண்டு
    ராதைக்கும் துன்பம் உண்டு
    எப்பொதும் தாங்கிக் கொண்டால்
    எல்லோர்க்கும் மேன்மை உண்டு
    ஆசைகள் கோடி உண்டு
    ஆனாலும் எல்லை உண்டு
    பாதைகள் நூறு உண்டு
    பயணங்கள் வேறு வேறு/////

    பாடல் சரிதான். ஆனால் எழுத்துப் பிழைகள் நிறைய இருந்தன. உங்கள் எழுத்துக்களில் அது இருக்காது. இன்று இருந்தது. திருத்தியிருக்கிறேன். படித்துப்பாருங்கள்!

    ReplyDelete
  16. ////Blogger Geetha Lakshmi A said...
    வணக்கம் ஐயா,12 வீட்டிற்கும் வாசப்படி பின்வாசலில்தான்(28பாகையிலிருந்து 30வரை) உள்ளதா? அல்லது முன் வாசலிலும்(முதல் 2பாகைகள்)உள்ளதா? அல்லது 30 பாகை முடிந்தவுடன் அடுத்தவீட்டில் புகுந்ததாக எடுத்துக்கொள்வதாங்க ஐயா.ஒரே வீட்டில் லக்ன‌த்திற்கு முன்னர் இருக்கும் கிரஹ்ம் 12ம் வீட்டில் இருப்பதாக எடுத்துக்கொள்வதாங்க ஐயா. நன்றி ஐயா./////

    அதுதான் பதிவிலேயே சொல்லியிருக்கிறேன். இருக்கும் பாகையை வைத்துப் பார்த்தால் முன் வாசலில்தான் குழப்பம் இருக்கும்!

    ReplyDelete
  17. //பிறந்த ஜாதகத்தில் (Natal Chart) எப்படி சுழற்சி எல்லாம் இருக்கும்? குழப்புகிறீர்களே? கோள்சாரத்தை எல்லாம் எதற்குக் கூட்டிக்கொண்டு வருகிறீர்கள்?//

    +++++

    நான் சொல்ல வந்தது என்ன எனில்: ஒரு வீட்டில் கிரகம் எப்படி வரும்? கோசாரத்தில் சுற்றும் போழ்து தானே?

    ஆக, ராசி வீட்டில் வாசல் படி என்றால் என்ன? முதல் இரண்டு பாகை மற்றும் கடைசி இரண்டு பாகை. அங்கே ஒரு கிரகம் இருக்கிறது எனில் - கோசாரப்படி அப்போது தான் அவ்வீட்டினுள் நுழைந்து இருக்கும், அல்லது அடுத்த பெயர்ச்சிக்கு ரெடியாக இருக்கும்.

    பாவம் எனபது லக்கினம் சுற்றும் பொழுது ஜீரோ பாகை plus/minus பதினைந்து பாகை அப்படியே ராசி சக்கரம் மீது படர்ந்து சுற்றுகையில், அந்த முப்பது பாகைக்குள் என்ன கிரகம் விழுகிறதோ அந்த கிரகங்கள் அந்த பாவத்தில் உள்ளதாக வைத்திக்கொள்வோம். ஜீரோ பாயின்ட் எந்த வீட்டில் அப்போது உள்ளதோ அவ்வீடு லக்கினம் என்போம். இதை தான் நான் எனது சிற்றறிவுக்கு புலப்பட்டவாறு சொன்னேன்.

    தவறு இருப்பின் தெளிவிக்கவும்.

    நன்றி ஐயா.

    காலகாலதாசன்,
    புவனேஷ்வர்

    ReplyDelete
  18. //பிறந்த ஜாதகத்தில் (Natal Chart) எப்படி சுழற்சி எல்லாம் இருக்கும்? குழப்புகிறீர்களே? கோள்சாரத்தை எல்லாம் எதற்குக் கூட்டிக்கொண்டு வருகிறீர்கள்?//

    No, there would not be any revolution of planets in the natal chart. I never meant that at all.

    what I meant was: If a planet is near the beginning of a house (not Bhava), it must have hust entered that house via its kochaaram. And if it is near the cusp of a house, it must be about to exit that rasi and move to the next rasi in kocharam.

    In contrast, with respect to bhava, if s planet is in the start of the bhava (for example lagna bhava, this applies to all other bhavas as well), it means the -15th degree otf the sweeping lagna bhava has passed over the planet which is situated in a particular house, making it sit in the next bhava. Is this not the reason, sometimes planets lag behind in the Bhava chart (except Rahu/Ketu)?

    So, I was asking whether you were referring to the door step of the bhava or that of the rasi house.

    The middle of the sweeping bhavas led by the lagna coincide with the middle of the rasi house for a moment. That's all, right? So...... I hope I am making my doubt clear here.......

    காலகாலதாசன்

    புவனேஷ்




    ReplyDelete
  19. குருவிற்கு வணக்கம் ' பாவசந்திப்பு பற்றி பாடம் அருமையாகயுள்ளது.
    நன்றி

    ReplyDelete
  20. ஐயா அவர்களுக்கு வணக்கம்.
    பாவ சந்திப்பு பற்றிய பாடம் அருமை.
    ஆயினும் சில சந்திப்புகள் அதிகமாக குழப்புகின்றன.உதாரணமாக, மிதுன லக்னத்தில் குரு.லக்னமும் குருவும் இரண்டுமே புனர்பூசம் 3ம் பாதத்தில் முறையே 89-37 மற்றும் 89-13 பாகை,கலைகள்.
    வாக்கியப்படி கடக லக்னம்.திருக்கணிதபடி மிதுன லக்னம்.
    நடைமுறை பலன்களோ இரண்டுக்குமே முரண்பாடு.அருமையான விளக்கமான பாடத்திற்கு நன்றிகள்.
    அன்புடன்
    -Peeyes.

    ReplyDelete
  21. ///பாடல் சரிதான். ஆனால் எழுத்துப் பிழைகள் நிறைய இருந்தன.///

    திருத்தத்திற்கு நன்றி.. ஒரு
    திருத்தம்..

    இந்த பாடல் இடம் பெற்ற படம் வீட்டுக்கு வீடு வாசபடி

    இதில் சுமன் கதாநாயகன்
    இந்த பாட்டு வரும் காட்சியில்

    சுருளி ராஜன் உடம்பை வளைத்துக் கொண்டு ஒரு மாதிரியாக பாடுவார்

    அவர் பாடும் அந்த காட்சியை
    அவர் பாடுவது போலவே படம் பிடித்துக் காட்ட

    அந்த லகர ழகர பிழைகள்..
    அது தெரியாமல் வந்ததல்ல என்பதை

    தெரிந்து கொண்டால் மகிழ்ச்சி
    தெரிந்து கொள்ளும் மற்றவர்களுக்கும்.

    ReplyDelete
  22. Blogger Bhuvaneshwar said...
    //பிறந்த ஜாதகத்தில் (Natal Chart) எப்படி சுழற்சி எல்லாம் இருக்கும்? குழப்புகிறீர்களே? கோள்சாரத்தை எல்லாம் எதற்குக் கூட்டிக்கொண்டு வருகிறீர்கள்?//
    +++++
    நான் சொல்ல வந்தது என்ன எனில்: ஒரு வீட்டில் கிரகம் எப்படி வரும்? கோசாரத்தில் சுற்றும் போழ்து தானே?
    ஆக, ராசி வீட்டில் வாசல் படி என்றால் என்ன? முதல் இரண்டு பாகை மற்றும் கடைசி இரண்டு பாகை. அங்கே ஒரு கிரகம் இருக்கிறது எனில் - கோசாரப்படி அப்போது தான் அவ்வீட்டினுள் நுழைந்து இருக்கும், அல்லது அடுத்த பெயர்ச்சிக்கு ரெடியாக இருக்கும்.
    பாவம் எனபது லக்கினம் சுற்றும் பொழுது ஜீரோ பாகை plus/minus பதினைந்து பாகை அப்படியே ராசி சக்கரம் மீது படர்ந்து சுற்றுகையில், அந்த முப்பது பாகைக்குள் என்ன கிரகம் விழுகிறதோ அந்த கிரகங்கள் அந்த பாவத்தில் உள்ளதாக வைத்திக்கொள்வோம். ஜீரோ பாயின்ட் எந்த வீட்டில் அப்போது உள்ளதோ அவ்வீடு லக்கினம் என்போம். இதை தான் நான் எனது சிற்றறிவுக்கு புலப்பட்டவாறு சொன்னேன்.
    தவறு இருப்பின் தெளிவிக்கவும்.
    நன்றி ஐயா.
    காலகாலதாசன்,
    புவனேஷ்வர்//////

    ராசிச் சக்கரம், நவாம்சச் சக்கரம், பாவச் சக்கரம் எல்லாம் fixed. அதை உங்கள் நோக்கத்திற்கு ஒடிக்காதீர்கள்

    ReplyDelete
  23. /////Blogger Bhuvaneshwar said...
    //பிறந்த ஜாதகத்தில் (Natal Chart) எப்படி சுழற்சி எல்லாம் இருக்கும்? குழப்புகிறீர்களே? கோள்சாரத்தை எல்லாம் எதற்குக் கூட்டிக்கொண்டு வருகிறீர்கள்?//
    No, there would not be any revolution of planets in the natal chart. I never meant that at all.
    what I meant was: If a planet is near the beginning of a house (not Bhava), it must have hust entered that house via its kochaaram. And if it is near the cusp of a house, it must be about to exit that rasi and move to the next rasi in kocharam.
    In contrast, with respect to bhava, if s planet is in the start of the bhava (for example lagna bhava, this applies to all other bhavas as well), it means the -15th degree otf the sweeping lagna bhava has passed over the planet which is situated in a particular house, making it sit in the next bhava. Is this not the reason, sometimes planets lag behind in the Bhava chart (except Rahu/Ketu)?
    So, I was asking whether you were referring to the door step of the bhava or that of the rasi house.
    The middle of the sweeping bhavas led by the lagna coincide with the middle of the rasi house for a moment. That's all, right? So...... I hope I am making my doubt clear here.......
    காலகாலதாசன்
    புவனேஷ்/////

    Natal Chartஐப் பொறுத்தவரை உங்களுடைய சந்தேகங்கள் எல்லாம் தேவையற்றது!

    ReplyDelete
  24. ////Blogger kmr.krishnan said...
    Present, sir////

    உங்களின் வருகைப் பதிவிற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  25. /////Blogger Udhaya Kumar said...
    குருவிற்கு வணக்கம் ' பாவசந்திப்பு பற்றி பாடம் அருமையாகயுள்ளது.
    நன்றி/////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி உதயகுமார்!

    ReplyDelete
  26. /////Blogger GOWDA PONNUSAMY said...
    ஐயா அவர்களுக்கு வணக்கம்.
    பாவ சந்திப்பு பற்றிய பாடம் அருமை.
    ஆயினும் சில சந்திப்புகள் அதிகமாக குழப்புகின்றன.உதாரணமாக, மிதுன லக்னத்தில் குரு.லக்னமும் குருவும் இரண்டுமே புனர்பூசம் 3ம் பாதத்தில் முறையே 89-37 மற்றும் 89-13 பாகை,கலைகள்.
    வாக்கியப்படி கடக லக்னம்.திருக்கணிதபடி மிதுன லக்னம்.
    நடைமுறை பலன்களோ இரண்டுக்குமே முரண்பாடு.அருமையான விளக்கமான பாடத்திற்கு நன்றிகள்.
    அன்புடன்
    -Peeyes./////

    ஒரு தாரம் என்றால் குழப்பம் இருக்காது. ஏதாவது ஒன்றை வைத்துக்கொள்ளுங்கள்

    ReplyDelete
  27. ////Blogger அய்யர் said...
    ///பாடல் சரிதான். ஆனால் எழுத்துப் பிழைகள் நிறைய இருந்தன.///
    திருத்தத்திற்கு நன்றி.. ஒரு
    திருத்தம்..
    இந்த பாடல் இடம் பெற்ற படம் வீட்டுக்கு வீடு வாசபடி
    இதில் சுமன் கதாநாயகன்
    இந்த பாட்டு வரும் காட்சியில்
    சுருளி ராஜன் உடம்பை வளைத்துக் கொண்டு ஒரு மாதிரியாக பாடுவார்
    அவர் பாடும் அந்த காட்சியை
    அவர் பாடுவது போலவே படம் பிடித்துக் காட்ட
    அந்த லகர ழகர பிழைகள்..
    அது தெரியாமல் வந்ததல்ல என்பதை
    தெரிந்து கொண்டால் மகிழ்ச்சி
    தெரிந்து கொள்ளும் மற்றவர்களுக்கும்./////

    இதை முன்பே ஏன் சொல்லவில்லை சுவாமி?

    ReplyDelete
  28. //ராசிச் சக்கரம், நவாம்சச் சக்கரம், பாவச் சக்கரம் எல்லாம் fixed. அதை உங்கள் நோக்கத்திற்கு ஒடிக்காதீர்கள்//

    ஐயகோ! சுவாமி! ஐயா... வாத்தியாரையா....... நான் அவை fixed அல்ல என்றா சொன்னேன்? நான் ஒன்று சொன்னால் நீங்கள் ஒன்றை நினைத்துக்கொல்கிரீரே...... உங்களுக்கு எப்படி என்னுடைய சந்தேகத்தை புரிய வைப்பது?

    வகுப்பறை மாணவர்களே, இங்கே என் உதவிக்கு வரவும்..... என போனீங்க எல்லாரும்?

    charts fixed தான். அவை ஒரு snapshot. அவை மாறுமா? அப்படி மாறும் என்று சொன்னேன் ஆயின் நானெல்லாம் ஒரு ஜோதிட மாணவனா?

    நான் சொன்னது, வாசல்படி ராசியின் வாசல் படியா இல்லை பாவத்தின் வாசல் படியா என்று.....

    :((((((((((

    ReplyDelete
  29. ////Blogger Bhuvaneshwar said...
    //ராசிச் சக்கரம், நவாம்சச் சக்கரம், பாவச் சக்கரம் எல்லாம் fixed. அதை உங்கள் நோக்கத்திற்கு ஒடிக்காதீர்கள்//
    ஐயகோ! சுவாமி! ஐயா... வாத்தியாரையா....... நான் அவை fixed அல்ல என்றா சொன்னேன்? நான் ஒன்று சொன்னால் நீங்கள் ஒன்றை நினைத்துக்கொல்கிரீரே...... உங்களுக்கு எப்படி என்னுடைய சந்தேகத்தை புரிய வைப்பது?
    வகுப்பறை மாணவர்களே, இங்கே என் உதவிக்கு வரவும்..... என போனீங்க எல்லாரும்?
    charts fixed தான். அவை ஒரு snapshot. அவை மாறுமா? அப்படி மாறும் என்று சொன்னேன் ஆயின் நானெல்லாம் ஒரு ஜோதிட மாணவனா?
    நான் சொன்னது, வாசல்படி ராசியின் வாசல் படியா இல்லை பாவத்தின் வாசல் படியா என்று.....
    :((((((((((

    ராசிச் சக்கரத்தின் விரிவாக்கம்தான் பாவச் சக்கரம். Bhava chart is the magnified version of rasi chart!

    ReplyDelete
  30. ஐயா , புவனேஷ்வர் சொல்வதும் சரி தான் !. நீங்கள் சொல்வதும் சரி தான் !. ஆனால் நீங்கள் ரத்ன சுருக்கமாக சொல்லி விட்டீர்கள். அவர் மிகுந்த பிரயத்தனப்பட்டு விளக்கி கேட்டு இருக்கிறார்கள் . உங்களுக்கு இது ரொம்ப basic ஆகா இருக்கிறது. அவர் ஒரு மாணவர் தானே !. அதனால் விளக்கி கேட்டு இருக்கிறார் !.

    ReplyDelete
  31. மேலும் வாசல் படி என்பது நான் புரிந்த வரையில் ராசியின் வாசல் படி தான். பாவத்துக்கு வாசல் படி கிடையாது !. இது சரியா என்று வாத்தியார் தான் சொல்ல வேண்டும். !.

    ReplyDelete
  32. what about planet are in Vargothamam when it is in 28-30 degree or 0-3 degree e.g. Punarphosam 3,4 patham or Chithirai 2,3 patham ?

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com