மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

27.2.13

Astrology: பிறப்பும் இறப்பும் ஒருமுறைதானா?

Astrology: பிறப்பும் இறப்பும் ஒருமுறைதானா?

அலசல் பாடம்

தலைப்பு: இரண்டாம் கல்யாணம்!

வாழ்க்கையில் முக்கியமான நிகழ்வுகள் எல்லாம் ஒருமுறைதான் நடக்கும். பிறப்பும் ஒருமுறைதான். இறப்பும் ஒருமுறைதான். அதுபோல் இன்னும் சில நிகழ்வுகளும் ஒருமுறை நடப்பதுதான் சிறப்பாக இருக்கும். உதாரணம் திருமணம்.

ஆனால் சிலருக்கு துரதிர்ஷ்டவசமாக முதல் திருமணம் அவலத்தில் முடிந்துவிடுவது உண்டு! விவாகரத்தில் முடிந்திருக்கலாம் அல்லது முதல் மனைவி இறந்து போயிருக்கலாம். அவர்களிடம் இந்த ஒருமுறை விதி எடுபடாது. தக்க காரணத்துடன் அவர்கள் இரண்டாவது திருமணம் செய்து கொள்வதில் தவறில்லை

ஆனால் அதற்கு ஒரு வயது வரம்பு உண்டு. அதிக பட்சம் நாற்பது வயது வரை அது சாத்தியப்படும். அதற்கு மேற்பட்ட வயது என்றால் ஒரு சிக்கல் உள்ளது.
மணந்து கொள்ள ஒரு மகராசி கிடைக்க வேண்டுமே?

பெரிய செல்வந்தர் என்றாலும், அவருடைய செல்வத்திற்காக அவரை மணந்துகொள்ள ஒருத்தி முன் வர வேண்டுமே?

ஒரு ஜாதகருக்கு அவருடைய 32ஆவது வயதில் மனைவி இறந்து போய் விட்டாள். அவர் தன்னுடைய 40ஆவது வயதில் மறுமணத்திற்கு முயற்சி செய்தார். என்ன ஆயிற்று? சாத்தியமாயிற்றா?

ஜாதகம் எப்படியோ அப்படித்தானே ஆகும்?

வாருங்கள், அவருடைய ஜாதகத்தை அலசுவோம்!
------------------------------------------------------
கீழே உள்ள ஜாதகத்தைப் பாருங்கள்:


1. சிம்ம லக்கின ஜாதகம். ரோஹிணி நட்சத்திரக்காரர்.
2. லக்கினாதிபதி கேந்திரத்தில் (4ல்)
3. இரண்டில் (குடும்ப் ஸ்தானத்தில்) ராகு
4. களத்திரகாரகன் சுக்கிரன் பாபகர்த்தாரி யோகத்தில்.
5. யோககாரகன் செவ்வாய் அஸ்தமன்ம் ஆகியுள்ளான்.
6. லக்கினாதிபதி சூரியனும், ஏழாம் அதிபதி சனியும் 2/12 என்னும் பாதக நிலையில் உள்ளார்கள்.
7. அவருக்கு அவருடைய மத்திய வயதில் குரு மகா திசை நடந்து
கொண்டிருந்தது. குரு பகவானும் சூரியனால் அஸ்தமித்துவிட்டார். 8.அஸ்தமனமான கிரகத்தின் திசை நன்மையைச் செய்யாது.
அவர் பல வழிகளில் முயற்சி செய்தும் உரிய பெண் கிடைக்கவில்லை. அவரது இரண்டாவது திருமண ஆசை நிறைவேறவில்லை.

இரண்டாவது திருமணத்திற்கு வேண்டிய அமைப்பு அவர் ஜாதக்த்தில் இல்லை!
-------------------------------------------------------------------------------------------------
இது மேல்நிலை வகுப்பில் எழுதப்பெற்ற பாடம். நான்கு நாட்களாக சில சொந்த வேலைகள் காரணமாகப் புதிதாக எதுவும் எழுத முடியாத சூழ்நிலை. ஆகவே
இந்தப் பாடத்தை இன்று வலை ஏற்றியுள்ளேன். அனைவருக்கும் பயன்படும் என்று நினைக்கிறேன். இதை நான் முன்பே படித்திருக்கிறேன் என்று யாரும்
சொல்ல வேண்டாம். தினமும் என் பதிவிற்கு வந்து செல்லும் சுமார் 4,000 பேர்களும் இதைப் படித்திருக்க வாய்ப்பில்லை. அவர்களுக்கு இது பயன் படட்டும் என்றுதான் பதிவில் ஏற்றியுள்ளேன்.

இதைப்போன்ற அலசல் பாடங்களை இந்தத் தளத்தில் ஏற்றுவதற்குத் தயக்கமாக உள்ளது. இணையத்தில் உலவும் பதிவுத் திருடர்கள்தான் அதற்குக் காரணம். பதிவைப் படித்த மறு நிமிடமே அதைத் திருடிக்கொண்டுப்போய் தங்கள் தளங்களில் காயப் போடுகிறார்கள்.

அதைத் தடுப்பதற்கு ஒரு வழி உள்ளது. இதுபோன்ற பாடங்கள் அனைத்தும் புத்தக வடிவில் வரவுள்ளது. அப்போது அனைவரும் படிக்கலாம். ஆகவே இது
போன்ற அலசல் பாடங்களுக்குப் பொறுத்திருங்கள்.

அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++

20 comments:

  1. இந்த ஜாதகத்தைப் பார்த்து திருமணம் நடக்காது, அப்படி நடந்தாலும் அது நிலைக்காது என்று தாராளமாக சொல்லலாம்.

    ReplyDelete
  2. குருவுக்கு வணக்கம்
    நல்ல பாடம் ஐயா..தொடருங்கள்.நன்றி.

    ReplyDelete
  3. Dear Sir,

    Apart from the points you have mentioned, I have noticed these points as well:
    1) From chandra lagna, 7th house contains 3 malefics (Malefic association of mercury makes it a malefic.) Jupiter's beneficient nature is lost because of combustion with sun. Planetary war(graha yuddham) is taking place in 7th from Moon 2) Another exceptional feature of this horoscope is KalatraKaraka(Venus) is placed in a dusthana from all the three lagnas (3rd from lagna(Vidhi), 6th from chandra(Madhi), 12th from surya(Gadhi))

    I have a suggestion to subbiah sir, In advanced lessons, It would be great if sir can provide Navamsha chart (Placement of 7th lord, venus in navamsha is very important when discussing natives marriage life) and ashtakavarga (Importance of which cannot be ignored). rasi, navamsha, ashtakavarga with running dasa bukthis provide wholistic picture of a chart instead of just a single dimensional view of Rasi chart(in advanced lessons).

    ReplyDelete
  4. வணக்கம் ஐயா, இன்றைய அலசல் பாடம் அருமை, நன்றி ஐயா

    ReplyDelete
  5. ஐயா அவர்களுக்கு வணக்கங்கள்.
    பாடம் நல்ல விளக்கத்துடன் உள்ளது.
    நல்ல விதமான அலசல்.
    மிக்க நன்றியுடன்,
    -Peeyes.

    ReplyDelete
  6. முதல் சில வரிகளை படித்ததும்

    "பிறப்பதற்கே தொழிலாகி
    இறக்கின் றாரே" என்ற

    ஆறாம் திருமுறையான
    அப்பர் தேவார வரிகள் நிழலாடியது

    இன்றைய சூழலில்
    இருபாலருக்கும் என

    விவாகரத்து நடந்த பின் மறு
    விவாகத்தில் தான் தம்பதிகள்

    நலமாக வாழ்வதாக சொல்லபடுகிறது
    நலம் வாழ வாழ்த்துவதா..

    சரியாக யோசித்தால் காலப்போக்கில்
    சாத்திரத்தில் விவாகரத்து சேர்க்கப் படலாம்

    வலமாக சுழல விட
    வழக்கம் போல் இந்த பாடல் ரசிக்க
    ...

    நிலவே என்னிடம் நெருங்காதே
    நீ நினைக்குமிடத்தில் நானில்லை.

    மலரே என்னிடம் மயங்காதே
    நீ மயங்கும் வகையில் நான் இல்லை

    கோடையில் ஒரு நாள் மழை வரலாம்
    என் கோலத்தில் இனிமேல் எழில் வருமோ

    பாலையில் ஒரு நாள் கொடி வரலாம்
    என் பார்வையில் இனிமேல் சுகம் வருமோ

    அமைதியில்லாத நேரத்திலே
    அந்த ஆண்டவன் என்னையே படைத்து விட்டான்

    நிம்மதி இழந்து நான் அலைந்தேன்
    இந்த நிலையில் உன்னை ஏன் தூது விட்டான்

    ReplyDelete
  7. அய்யா அவர்களுக்கு வணக்கங்கள்.
    அன்றைய,முந்தைய தலைமுறையில் நமது காதல் மன்னனான திரு.ஜெமினி கணேசன் அவர்களின் திருமணங்களுக்கு காரணமாயிருந்த அவருடைய ஜாதக அமைப்பையும், இன்றைய தலைமுறையில் உலக நாயகனான திரு.கமல் அவர்களின் திருமணங்களுக்கான ஜாதக அமைப்பையும் அலசலுக்கு உரியதாக கொள்ளலாமல்லவா?.
    நன்றியுடன்,
    -Peeyes.

    ReplyDelete
  8. /////Blogger Ak Ananth said...
    இந்த ஜாதகத்தைப் பார்த்து திருமணம் நடக்காது, அப்படி நடந்தாலும் அது நிலைக்காது என்று தாராளமாக சொல்லலாம்.////

    உங்களின் அனுபவப் பகிர்விற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  9. ////Blogger Thava Kumaran said...
    குருவுக்கு வணக்கம்
    நல்ல பாடம் ஐயா..தொடருங்கள்.நன்றி./////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete

  10. ////Blogger arul said...
    very good lesson////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி அருள்!

    ReplyDelete
  11. ////Blogger eswari sekar said...
    vanakam sir inrya popcorn post super./////

    பாப்கார்ன இல்லையம்மா. விருந்துச் சாப்பாடு. அலச்ல் பாடம்

    ReplyDelete
  12. Blogger Sathyanarayanan said...
    Dear Sir,
    Apart from the points you have mentioned, I have noticed these points as well:
    1) From chandra lagna, 7th house contains 3 malefics (Malefic association of mercury makes it a malefic.) Jupiter's beneficient nature is lost because of combustion with sun. Planetary war(graha yuddham) is taking place in 7th from Moon 2) Another exceptional feature of this horoscope is KalatraKaraka(Venus) is placed in a dusthana from all the three lagnas (3rd from lagna(Vidhi), 6th from chandra(Madhi), 12th from surya(Gadhi))
    I have a suggestion to subbiah sir, In advanced lessons, It would be great if sir can provide Navamsha chart (Placement of 7th lord, venus in navamsha is very important when discussing natives marriage life) and ashtakavarga (Importance of which cannot be ignored). rasi, navamsha, ashtakavarga with running dasa bukthis provide wholistic picture of a chart instead of just a single dimensional view of Rasi chart(in advanced lessons).

    எல்லாம் தெரிந்தவர்களுடைய ஜாதகங்கள். நீங்கள் சொல்கின்ற விவரங்களைக் கொடுத்தால், யாரை வைத்து எழுதினேன் என்று தெரிந்து கொள்வார்கள். மன வருத்தம் வரும்!

    ReplyDelete

  13. /////Blogger Geetha Lakshmi A said...
    வணக்கம் ஐயா, இன்றைய அலசல் பாடம் அருமை, நன்றி ஐயா////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி சகோதரி!

    ReplyDelete
  14. ////Blogger GOWDA PONNUSAMY said...
    ஐயா அவர்களுக்கு வணக்கங்கள்.
    பாடம் நல்ல விளக்கத்துடன் உள்ளது.
    நல்ல விதமான அலசல்.
    மிக்க நன்றியுடன்,
    -Peeyes./////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி பொன்னுசாமி!

    ReplyDelete
  15. ////Blogger அய்யர் said...
    முதல் சில வரிகளை படித்ததும்
    "பிறப்பதற்கே தொழிலாகி
    இறக்கின் றாரே" என்ற
    ஆறாம் திருமுறையான
    அப்பர் தேவார வரிகள் நிழலாடியது
    இன்றைய சூழலில்
    இருபாலருக்கும் என
    விவாகரத்து நடந்த பின் மறு
    விவாகத்தில் தான் தம்பதிகள்
    நலமாக வாழ்வதாக சொல்லபடுகிறது
    நலம் வாழ வாழ்த்துவதா..
    சரியாக யோசித்தால் காலப்போக்கில்
    சாத்திரத்தில் விவாகரத்து சேர்க்கப் படலாம்////

    செர்த்தால் நல்லது தான்!

    ReplyDelete
  16. ///Blogger GOWDA PONNUSAMY said...
    அய்யா அவர்களுக்கு வணக்கங்கள்.
    அன்றைய,முந்தைய தலைமுறையில் நமது காதல் மன்னனான திரு.ஜெமினி கணேசன் அவர்களின் திருமணங்களுக்கு காரணமாயிருந்த அவருடைய ஜாதக அமைப்பையும், இன்றைய தலைமுறையில் உலக நாயகனான திரு.கமல் அவர்களின் திருமணங்களுக்கான ஜாதக அமைப்பையும் அலசலுக்கு உரியதாக கொள்ளலாமல்லவா?.
    நன்றியுடன்,
    -Peeyes./////

    அவர்களுக்கும் 337தான் அதை மறந்து விடாதீர்கள்!


    ReplyDelete
  17. /////Blogger kmr.krishnan said...
    Studied the lesson,Sir. Thank you, Sir/////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com