மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

18.4.12

Doubts: கேள்வி பதில் பகுதி இரண்டு!




..................................................................................................................
Doubts: கேள்வி பதில் பகுதி இரண்டு!

நீங்களும் உங்கள் சந்தேகங்களும் - பாடம் இரண்டு!

Question and answer session
கேள்வி பதில் வகுப்பு
-------------------------------------------------------
email no.4
இளங்கோசீனிவாசன்

அன்புள்ள வாத்தியார் ஐயா,

அடியேனின் சந்தேகம்.

Chhatra யோகம்: இந்த யோகம் பற்றி Google ஆண்டவரிடம் கேட்ட பொழுது மிஞ்சியது குழப்பம் தான்.
இது குறித்த விளக்கம் http://www.indiadivine.org/audarya/vedic-astrology-jyotisha/311012-good-article-gmy-dr-g-k-goel.html என்கிற இணைய தளத்தில் உள்ளதாவது, லக்கினத்தில் இருந்து ஏழாம் வீடு வரை கிரகங்கள் வரிசையாக இருந்தால் அது Nauka yoga என்று உள்ளது. மேலும் ஏழாம் வீடு முதல் லக்கினம் வரை அனைத்து கிரகங்களும் வரிசையாக இருந்தால் அது Chhatra யோகா என குறிப்பிட்டுள்ளது. இது குறித்து தாங்கள் மேலும் விளக்க வேண்டுகிறேன்.
நன்றி,
இளங்கோ

Chhatra Yoga - குடை யோகம் யோகத்தின் அமைப்பு: லக்கினத்தில் இருந்து முதல் ஏழு கட்டங்களுக்குள் அத்தனை கிரகங்களும் குடி கொண்டிருப்பது இந்த அமைப்பைத் தரும். யோகத்தைத் தரும்.

Nauka Yoga - படகு யோகம்
யோகத்தின் அமைப்பு: லக்கினத்தில் இருந்து முதல் ஏழு கட்டங்களுக்குள் அத்தனை கிரகங்களும் குடி கொண்டிருப்பது இந்த அமைப்பைத் தரும். ஆனால் 7ஆம் இடத்தில் நிச்சயம் ஒரு கிரகம் வேண்டும் இருக்க வேண்டும் என்பது இந்த யோகத்தின் விதி.

அதனால் இது Chhatra Yoga யோகத்தில் இருந்து வேறுபடும்.
விளக்கம் போதுமா
?
---------------------------------------------
email no.5
Mrs. உஷா சுரேஷ்
அன்புள்ள ஆசிரியர்க்கு,
வணக்கம்.
தாங்களின் வகுப்பில் சேர்ந்தப் பிறகு, ஜோதிட வல்லுனர்களான ராமன்,ராவ் ஆகியோரின் புத்தங்களை வாங்கி உள்ளேன். அதை படித்தபின் எனது ஜோதிட சந்தேங்கள் மேலும் குழப்பமாகிவிட்டது.
எனது சந்தேங்கள் அஷ்டவர்க்கம், சட பலம் ( Sad bala ), பாவ பலம் சம்பந்தப்பட்டது.

When the Sarva Astavarga paral of a house is very less ( 19 paral ) , that house is having 500 Bhava balam. Further when a planet is having four paral in astavarga, while it is having more than 10 paral/rupa in Sad bala. On this circumstance how to arrive a conclusinon about a planet or a Bhava. Will you please differentiate the above balas for better understanding.


அஷ்டவர்க்கம், சட் பலம், பாவ பலம் என்பது நடிகர்கள் சிவாஜி கணேசன், எம்,ஜி, ராமச்சந்திரன், ஜெமினி கணேசன் ஆகியவர்களின் நடிப்பைப் போன்று தனித்தன்மைகள் உடையவை. யாருடைய படங்களைப் பார்ப்பது என்றால், உங்களுக்கு யாரைப் பிடித்திருக்கிறதோ, அவருடைய படங்களைப் பாருங்கள். அதைபோல உங்களுக்குக் கிரகங்களின் வலிமையைத் தெரிந்து கொள்ள எந்த வழி சுலபமாக இருக்கிறதோ, அதில் செல்லுங்கள். மூன்றையும் போட்டுக் குழப்பிக் கொள்ளாதீர்கள்.

அஷ்டவர்க்கம்தான் சுலபமானது. அதானால்தான் அதையே நானும் கடைப்பிடிக்கிறேன். மற்றவர்களுக்கும் சிபாரிசு செய்கிறேன்.
நீங்கள் சொல்லும் சட்பலத்தின் அமைப்பைக் கீழே கொடுத்துள்ளேன்.

அதைக் கணித்துப் பலனை அறிந்து கொள்ள உங்களுக்கு நேரமும், மனத்தெம்பும் இருந்தால், அதை நீங்கள் கடைப் பிடிக்கலாம்.
ஆனால் அதையும், அஷ்டகவர்க்கத்தையும், ஒத்துப் பார்த்துக் குழம்பாதீர்கள். ஒன்று அலோபதி மருத்துவம். ஒன்று ஹோமியோபதி மருத்துவம். அர்த்தமாகியதா சகோதரி?

SHADBALA- சட் என்றால் ஆறு என்று பொருள்.
சட்பலம் என்பது கீழே உள்ள ஆறின் கூட்டல் தொகை!


1. STHANA BALA

This is the positional strength of a planet.


2. DIG BALA
Each planet is powerful when it is located in a certain direction. Dig Bala means directional strength. Example: The Sun and Mars are powerful in the South.


3. KALA BALA

This has to do with the strength which a planet has because of the time of the day. It is strength of time. example: Moon, Saturn and Mars are powerful during midnight

4. CHESTA BALA
Planets which are relatively slow (among them retrograde planets) get a high Chesta Bala value. Planets which are relatively fast get a low chesta bala value.


5. NAISARGIKA BALA

Each planet gets a certain amount of Shashtiamsas according to the luminosity it has. Because the Sun is the brightest planet it is given 60 Shashtiamsas. Saturn is the faintest and gets 8.57 Shashtiamsas. This means that the amount of Shashtiamsas a planet receives according to Naisargika Bala is in every chart the same.
6. DRIK BALA
Drik Bala is called aspect strength. If a planet is aspected by benefics the planet receives a positive Shashtiamsa value. If a planet is aspected by malefics than it gets negative Drik Bala points.

உங்களுக்குக் காய்ச்சல் என்று வைத்துக்கொள்ளுங்கள். இரண்டு மருத்துவரிடம் காட்டினால் இரண்டு விதமான மருந்துகளைப் பரிந்துரைப்பார்கள். ஒருவர் Dolobar 650 சாப்பிடச்சொல்வார். இன்னொருவர் calpol சாப்பிடச்சொல்வார். ஆகவே ஒருவரிடம் காண்பித்து மருந்து சாப்பிடுவதுதான் நல்லது. இல்லை இரண்டு மூன்று பேர்களிடம் காட்டுவேன் என்றால், அது உங்கள் விருப்பம்.
------------------------------------------------
email No.6
P.Prakshkumar, Pollachi

What is the meaning for VAKRAM?
which planet VAKRAM position is good?

செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி ஆகிய ஐந்து கிரகங்களும் வக்கிரகதியில் இயங்கைக்கூடியவை. அதாவது பின்புறச்சுற்றில் இயங்குவதைப் போன்ற தோற்றத்தைக் கொடுத்து, பூமியின் சுழற்சியால், இருக்கும் இடத்தைவிட்டுப் பின்புறப்பாகைகளில் சுழலக் கூடியவை. அது வக்கிரகதி எனப்படும்

ராகுவும், கேதுவும் எப்போதுமே பின்புறமாகத்தான் சுழலக்கூடியவை

வக்கிரகதியில் இருக்கும் கிரகங்கள் பொதுவாக நன்மையைச் செய்யாது. சுப கிரகங்கள் வக்கிரகதியில் நின்றால், அவைகள் உரிய பலனைத் தராது.

தீய கிரகங்கள் வக்கிரகதியில் நின்றால், அவைகள் ஜாதகனுக்குத்
தேவையில்லாத அலைச்சலையும், ஊர் ஊராக பெட்டி தூக்கும் வாழ்க்கையையும் கொடுத்து விடும். சனி அல்லது செவ்வாய் வக்கிரகதியில் நின்றால் அவைகள் ஜாதகனுக்குத் தேவையில்லாத துன்பங்களையும், தொல்லைகளையும், கஷ்டங்களையும் கொடுக்கும். ஜாதகன் பல வழிகளிலும் அவதிப்பட நேரிடும். தப்பித்து ஓட முடியாது. அவதிப்பட்டே ஆக வேண்டும்.
---------------------------------------------

email No.7
சேகர் வெங்கடேசன்

மிக நல்ல வாய்ப்பை தந்ததற்கு நன்றி. என்னோடைய சந்தேகங்கள்

30க்கும் அதிக பரல்கள் இருக்கும் இடங்களில் யாரும் அமரவில்லை என்றால் ( அதன் அதிபதி எப்படி இருந்தாலும்) குறைந்த பட்சம் அந்த வீட்டின் பலம் எப்படி எடுத்துக் கொள்வது?

அந்த வீட்டின் பலன் நன்மைகள் உடையதாகவே இருக்கும்

உச்சமான கிரகம் சுயவர்கத்தில் குறைவான பரல் கொண்டிருந்தால் அதன் பலன் குறையுமா?

ஆமாம்! குறையும்! பின் எதற்காக சுயவர்க்கம்?

என் மகனுக்கு இரண்டாம் வீடான தனுசு ராசியில் புதன், சூரியன்மற்றும் சனி கூட்டாக உள்ளனர். கிரக யுத்தம் இல்லை. இரண்டாம் வீட்டில் சூரியன்மற்றும் சனி என்றால் பொருள் நாசம் என்று சொல்லி இருந்தீர்கள். இங்கே பரல் 30க்கும் மேலே. புதன் 7ம் சூரியன் 4ம் மற்றும் ராசி அதிபதியான சனி 3ம் பரல். அம்சத்தில் சூரியன் உச்சம். குரு 7ஆம் வீட்டில் லக்னத்தை பார்த்து. விலக்கு உண்டா?

30, 7, 4 என்று நீங்களே நல்ல எண்ணிக்கைகளையும், குருவின் பார்வை லக்கினத்தில் விழுவதையும் சொல்லிவிட்டு, சந்தேகம் கொண்டால் எப்படி? அமைப்புக்கள் நன்மைதருவதாகவே உள்ளன! கவலையை விடுங்கள்.

குழந்தைகளின் ஜாதகம் 12 வயதுவரை வேலை செய்யாது. பெற்றொர்களின் ஜாதகப்படிதான் குழந்தைகளுக்குப் பலன்கள் இருக்கும். அதனால்தான் குழந்தைகள் மகிழ்ச்சியாக உள்ளன.

ஏழாம் பார்வையை தவிர மற்ற பார்வை உண்டா?

செவ்வாய், குரு,சனி ஆகிய கோள்களுக்கு (7ஆம் பார்வையுடன்) விஷேச பார்வைகள் உண்டு.பழைய பாடங்களைப் படியுங்கள்

மறைவிடங்களில் நன்மையை தரும் கிரகங்கள் மறையக்கூடாது எனும்போது தீய கிரகங்கள் மறைந்து போவது நல்லதில்லையா?லக்னாதிபதி கெடுதலை செய்ய மாட்டாரா?

சனி தீய கிரகம்தான். அதே நேரத்தில் அவர் ஆயுள்காரகன். கர்மகாரன். இரண்டு அமைச்சகங்கள் அவர் வசம் உள்ளன! இப்போது சொல்லுங்கள் அவர் மறைவது நல்லதா?

சந்தேகங்களை உங்களிடம் கேட்காமல் யாரிடம் உரிமையாக கேட்க முடியும்? நன்றி.

ஆகா, கேளுங்கள். ஆனால் சொந்த ஜாதகத்தை வைத்து யாரும் கேள்விகள் கேட்க வேண்டாம்!
----------------------------
email No.8
சங்கர் நாராயணன்

ஐயா!

1 . வக்கிரம் ஆன கிரகங்கள் பற்றி ........2 . ஆட்சி கிரகம் வக்கிரம் ஆனால்.......

email No.6ல் இதே கேள்வி. பதில் அளித்துள்ளேன். அதைப் படியுங்கள்

3 . சனி பாதிப்பை தவிர்க்க கருப்பு ஆடை அணிவதும், குருவிற்கு மஞ்சள் ஆடை அணிவதும் எந்த அளவிற்கு சரி ?

பாதிப்பைத் தவிர்க்க என்று ஏன் எதிர்மறையான சிந்தனை? அக்கிரகங்களால் நன்மை அடைய என்று சொல்லுங்கள். கிடைக்கலாம். எனக்கு அனுபவம் இல்லை!

4 . சத்தத்தில் சதாசிவமும் சித்தத்தில் சிவமயமும் என சாதாரண மனிதனால் இருக்க (ஜாதகம் பூர்வபுண்ணியம் தவிர்த்து) வழி?

ஏன் வழி இல்லை? எல்லாவற்றிற்கும் மனதுதான் காரணம். மனதைக் கட்டுப்படுத்தினால், சதாசிவம் வசப்படும். சிவமயம் தேடி வந்து குடி கொள்ளும்.

5 . கிறுக்குத்தனமாக வாழ்வது, கேட்பது அறியாமைதானே! அவர்கள் ஞானிகளா?

அவரவர் வழி அவரவருக்கு உயர்வானது. அதைக் கேட்பதற்கு நமக்கு உரிமை இல்லை. கேட்டால் சச்சரவுதான் மிஞ்சும்.
------------------------------------
அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்!

27 comments:

  1. ///தீய கிரகங்கள் வக்கிரகதியில் நின்றால், அவைகள் ஜாதகனுக்குத் தேவையில்லாத அலைச்சலையும், ஊர் ஊராக பெட்டி தூக்கும் வாழ்க்கையையும் கொடுத்து விடும். சனி அல்லது செவ்வாய் வக்கிரகதியில் நின்றால் அவைகள் ஜாதகனுக்குத் தேவையில்லாத துன்பங்களையும், தொல்லைகளையும், கஷ்டங்களையும் கொடுக்கும்.///

    எனக்கு சனி வக்கிரம், கணவருக்கு செவ்வாய் வக்கிரம். இருவரும் சேர்ந்து...
    "டமுக்கடிப்பா டீயாலோ
    தமுக்கடிப்பான் ஹாயாலோ
    ஏ .. சிங்கி ............ ஏ ... சிங்கா........."
    என்று பாடியவாறு ஐந்தாறு வருடங்களுக்கொருமுறை கூடராத்தை தூக்கிக்கொண்டு கிளம்பிவிடுவோம்.
    ஆனால் டால்டா டின் நிறைய 337 மருந்தை வைத்திருக்கிரோமாக்கும். நன்றி ஐயா.

    ReplyDelete
  2. உங்கள் பின்னோட்டம் சூப்பர் தேமொழி..! எனக்கு புதன் வக்கிரம்., கணவருக்கு குருவும் சனியும் வக்கிரம். நான்கு வருடங்களில் ஏழு முறை வீடு மாற்றி உள்ளோம். நாங்கள் யாருடன் பழகினாலும் , ஒன்று அவர்கள் வேற நாட்டுக்கு சென்று விடுவர். இல்லை என்றால் நாங்கள் வேறு மாநிலத்துக்கு போய் விடுவோம். ஏன்தான் இப்படி நடக்குதோ என்று நாங்கள் நொந்து கொள்வது உண்டு. இங்கு வந்த பிறகுதான் அதற்க்கான அர்த்தம் புரிந்தது. - Kalai Seattle

    ReplyDelete
  3. ///அவரவர் வழி அவரவருக்கு உயர்வானது. அதைக் கேட்பதற்கு நமக்கு உரிமை இல்லை. கேட்டால் சச்சரவுதான் மிஞ்சும். ///

    அஸ்வத்தாமன் பதில்கள் போலுள்ளது
    அய்யாவின் இந்த பதில்..

    இதைத்தான் free will என்பார்கள்
    இறைவனும் இதனை கேட்பதில்லை

    அறியாத சிலபேர்கள்
    அவர்களை வம்பிற்கிழுத்து வருந்துகின்றனர்

    கலங்கிய குளத்தில்
    கால் வைக்காமலிருந்தால்

    குளம் தெளிவடைகிறது மனக்
    குளம் கூட அப்படித்தான்

    நமது கடிகாரம் சரி என (நாமே நினைத்து)
    நாம் அடுத்தவர் கடிகாரத்தை சரிசெய்ய முயன்றால்....??

    வழக்கம் போல் சுழன்று
    வரும் இந்த பாடல் சுவைக்க, ரசிக்க



    எல்லோரும் நலம் வாழ நான் பாடுவேன்
    நான் வாழ யார் பாடுவார்

    என் பாடல் நான் பாட பலர் ஆடுவார்
    இனி என்னோடு யார் ஆடுவார்

    பூப்போன்ற என் உள்ளம் யார் கணடது
    பொன்னான மனமென்று பேர் வந்தது வழியில்லாத ஊமை

    எது சொன்னாலும் பாவம்
    என் நெஞ்சும் என்னோடு பகையானது

    கண்ணீரை நான் எங்கு கடன் வாங்குவேன்

    அது கடனாக வந்தாலும் தடை போடுவேன்

    நியாயங்கள் தெளிவாக நாளாகலாம்
    நான் யாரென்று அப்போது நீ காணலாம்
    (மனதை தொட்ட வரிகள்)

    உன் பார்வை என் நெஞ்சில் விழுகின்றது
    உன் எண்ணம் எதுவென்று தெரிகின்றது

    நான் இப்போது ஊமை மொழியில்லாத பிள்ளை
    என்றேனும் ஓர் நாளில் நான் பேசலாம்

    உன் பாதை நீ கண்டு நீ வாழலாம்
    இனி என் பாதை நன் கண்டு நான் போகலாம்

    (மனதை தொட்ட வரிகள்)

    எங்கே நீ சென்றாலும் சுகமாகலாம்
    நான் எப்போதும் நீ வாழ இசை பாடலாம்

    (மனதை தொட்ட வரிகள்)

    எல்லோரும் நலம் வாழ நான் பாடுவேன்

    ReplyDelete
  4. arumayana kelvi pathil paguthi asiriyarukku nandri

    ReplyDelete
  5. தீய கிரகங்கள் வக்கிரகதியில் நின்றால், அவைகள் ஜாதகனுக்குத் தேவையில்லாத அலைச்சலையும், ஊர் ஊராக பெட்டி தூக்கும் வாழ்க்கையையும் கொடுத்து விடும். சனி அல்லது செவ்வாய் வக்கிரகதியில் நின்றால் அவைகள் ஜாதகனுக்குத் தேவையில்லாத துன்பங்களையும், தொல்லைகளையும், கஷ்டங்களையும் கொடுக்கும்.///

    துலா லக்னத்திற்கு யோககாரன் சனி. இது நான்கில் கேந்திரத்தில் ,வக்கிரம் ஆனாலும் அதேபோல்தான் இருக்குமா அய்யா. இது எனக்கு உள்ள அமைப்புதான். சனி சுய வர்க்கம் 5 , நான்காம் வீடு 29.இந்த நிலைமையில் தேவையில்லாத துன்பங்களையும் தொல்லைகளையும் ,கஷ்டங்களையும் கொடுக்குமா அய்யா.

    ReplyDelete
  6. தேமொழி said...ஐந்தாறு வருடங்களுக்கொருமுறை கூடராத்தை தூக்கிக்கொண்டு கிளம்பிவிடுவோம்.

    எனக்கும் சனி வக்கிரம் தான், வருடத்திற்கு இரண்டு ,மூன்று, கப்பல் project பொறுத்து மாறி விடுகிறேன் , இது அந்த வக்கிரத்தால் தானா?

    ReplyDelete
  7. அன்புள்ள ஐயா, ஒரு தீய கிரகம் வக்ரம்பெற்று ராசியிலோ அல்லது நவாம்சத்திலோ நீசமும் அடைந்தால் மிக,மிக தீயபலனா அல்லது மைனசும் மைனசும் சேர்ந்து நன்மை பயக்குமா?

    ReplyDelete
  8. ஐயா வணக்கம்.

    தாங்கள் தந்த அறியுரைக்கி மிகவும் கடமைப்பட்டு உள்ளேன் வாத்தியார் ஐயா!

    எமது அக்கா தேமொழிக்கும் எமது உள்ளம் கனிந்த நன்றி. நன்றி என்ற ஒரு வார்த்தையை கூறுவதை விட பெரியத்தாக வேறு ஒன்றை கொடுக்கும் அளவிற்கு எம்மிடம் ஒன்றும் இல்லை . . மேலும் கொடுக்கும் தூரதிளையும் யாம் இல்லை சகோதரியே!

    இதில் ஒரு வேடிக்கையான விசையம் என்ன வென்றால் கடைசியில் முடிவை எடுக்கும் பொறுப்பபை எம்மிடமே தந்து விட்டிர்கள் என்பதுதான் ஐயா!

    இன்றைய கேள்வி பதில் பகுதி மிகவும் அருமை ஐயா!

    ReplyDelete
  9. " ஏங்க.. இந்த கேது பன்னிரண்டில் இருக்கிறார். அதனால உங்களுக்கு அடுத்த ஜன்மம் கிடையாது அப்படின்னு
    நேத்திக்கு வந்த ஜோசியர் சொல்றாரே !! நிசமாலுமா "

    " அப்படியா ! நான் தப்பிச்சேன் !! "

    subbu

    ReplyDelete
  10. மிக அருமையான பதிவு. மீள் பதிவானாலும் மிக அருமையான தகவல்களைத் தாங்கி வருகிறது. நன்றி. கிரகங்கள்,உதாரணமாக, பரிபூரண சுபரான குரு, வக்கிரகதியானாலும் சுய வர்க்கத்தில் ஐந்து, அல்லது அதற்கு மேற்பட்டபரல்கள் இருந்தால், நன்மையான பலன்களா ,இல்லையா ?. அதாவது வக்கிரகதி என்பதால், தீய பலன்கள் கூடும் என்று கொள்ள வேண்டுமா?

    ReplyDelete
  11. ஐயா வணக்கம்
    ஒரு கிரகம் வக்ரம் பெறும்பொது அதன் முந்தைய வீட்டு பலனை தறுமா ஆசிரியர்களெ? இப்பொது துலத்தில் வக்கரம் பெற்ற சனி கன்னி விட்டில் இருந்தால் என்ன பலனை தருவாரொ அந்த பலனை தருவாரா? மிக்க நன்றி

    ReplyDelete
  12. வக்கிர கதியில் இருக்கும் கிரகங்களுக்கு வாத்தியார் சொன்ன பலன்கள் பொதுவானவைதான். வக்கிர கதியில் இருக்கும் கிரகங்களுக்கு ஷட் பலங்களில் ஒன்றான சேஷ்ட பலம் அதிகமாகதான் இருக்கும். இதுவும் ஒரு வகையில் பலம்தானே.

    ReplyDelete
  13. நன்றி கலை:)))
    தனுசு, நம்ம மைனர் வந்து சொன்னால் இன்னமும் விவரம் கிடைக்கலாம். அவருக்கும் சனி வக்கிரம்தான். ஆனால் பாவம் அவர், தன் பெற்றோர்கள் இயக்கத்தில் "உத்தமபுத்திரன்" படம் ரீமேக்கில் நடிக்க டைட் கால்ஷீட் கொடுத்துவிட்டுத் தடுமாறிக் கொண்டிருக்கிறார்.

    இந்த தீய கிரகங்கள் லக்கினாதிபதியாகவோ, யோகக்கரனாகவோ இருந்தால் பெரிதாக துன்பத்தில் ஆடித் தள்ளுபடி எல்லாம் தரமாட்டார்கள் போலிருக்கிறது. எனக்கு சனி லக்கினாதிபதிதான். தங்கப்பதக்கம் சிவாஜி போல, வீட்லேயே இராணுவ கண்டிப்புடன் நடத்தும் பெற்றோர்கள் இருப்பது போல நம் வாழ்க்கை இருக்கும் போலிருக்கிறது.

    நல்ல கிரகங்கள் யோககாரனாகவோ, லக்கினாதிபதியாகவோ இருந்தால் பாசமலர் சிவாஜி போல நம்மை நடத்துவார்கள் என நினைக்கிறேன். வாத்தியார் ஐயா என்ன விளக்கம் சொல்கிறார் எனப் பார்ப்போம்.

    ReplyDelete
  14. ////Blogger தேமொழி said...
    ///தீய கிரகங்கள் வக்கிரகதியில் நின்றால், அவைகள் ஜாதகனுக்குத் தேவையில்லாத அலைச்சலையும், ஊர் ஊராக பெட்டி தூக்கும் வாழ்க்கையையும் கொடுத்து விடும். சனி அல்லது செவ்வாய் வக்கிரகதியில் நின்றால் அவைகள் ஜாதகனுக்குத் தேவையில்லாத துன்பங்களையும், தொல்லைகளையும், கஷ்டங்களையும் கொடுக்கும்.///
    எனக்கு சனி வக்கிரம், கணவருக்கு செவ்வாய் வக்கிரம். இருவரும் சேர்ந்து...
    "டமுக்கடிப்பா டீயாலோ
    தமுக்கடிப்பான் ஹாயாலோ
    ஏ .. சிங்கி ............ ஏ ... சிங்கா........."
    என்று பாடியவாறு ஐந்தாறு வருடங்களுக்கொருமுறை கூடராத்தை தூக்கிக்கொண்டு கிளம்பிவிடுவோம்.
    ஆனால் டால்டா டின் நிறைய 337 மருந்தை வைத்திருக்கிரோமாக்கும். நன்றி ஐயா./////

    எல்லோரும் வைத்திருப்பார்கள். ஆனால் 75% பேர்கள் அதை உபயோகிக்காமல் அப்படியே புதிதாக வைத்திருப்பார்கள். நீங்கள் உபயோகிக்கிறீர்கள். அதற்குப் பாராட்டுக்கள்!

    ReplyDelete
  15. /////Blogger Kalai said...
    உங்கள் பின்னோட்டம் சூப்பர் தேமொழி..! எனக்கு புதன் வக்கிரம்., கணவருக்கு குருவும் சனியும் வக்கிரம். நான்கு வருடங்களில் ஏழு முறை வீடு மாற்றி உள்ளோம். நாங்கள் யாருடன் பழகினாலும் , ஒன்று அவர்கள் வேற நாட்டுக்கு சென்று விடுவர். இல்லை என்றால் நாங்கள் வேறு மாநிலத்துக்கு போய் விடுவோம். ஏன்தான் இப்படி நடக்குதோ என்று நாங்கள் நொந்து கொள்வது உண்டு. இங்கு வந்த பிறகுதான் அதற்க்கான அர்த்தம் புரிந்தது. - Kalai Seattle////

    புரிதலில்தான் ஒரு மன நிம்மதி இருக்கும். பாராட்டுக்கள் சகோதரி!

    ReplyDelete
  16. /////Blogger அய்யர் said...
    ///அவரவர் வழி அவரவருக்கு உயர்வானது. அதைக் கேட்பதற்கு நமக்கு உரிமை இல்லை. கேட்டால் சச்சரவுதான் மிஞ்சும். ///
    அஸ்வத்தாமன் பதில்கள் போலுள்ளது
    அய்யாவின் இந்த பதில்..
    இதைத்தான் free will என்பார்கள்
    இறைவனும் இதனை கேட்பதில்லை
    அறியாத சிலபேர்கள்
    அவர்களை வம்பிற்கிழுத்து வருந்துகின்றனர்
    கலங்கிய குளத்தில்
    கால் வைக்காமலிருந்தால்
    குளம் தெளிவடைகிறது மனக்
    குளம் கூட அப்படித்தான்
    நமது கடிகாரம் சரி என (நாமே நினைத்து)
    நாம் அடுத்தவர் கடிகாரத்தை சரிசெய்ய முயன்றால்....??/////

    அது பொது மனித குணம் விசுவநாதன். அதுக்குப்போயி அலட்டிக்கொள்ளலாமா? விட்டுத்தள்ளுங்கள்!

    ReplyDelete
  17. ////Blogger arul said...
    arumayana kelvi pathil paguthi asiriyarukku nandri///

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  18. ///Blogger thanusu said...
    தீய கிரகங்கள் வக்கிரகதியில் நின்றால், அவைகள் ஜாதகனுக்குத் தேவையில்லாத அலைச்சலையும், ஊர் ஊராக பெட்டி தூக்கும் வாழ்க்கையையும் கொடுத்து விடும். சனி அல்லது செவ்வாய் வக்கிரகதியில் நின்றால் அவைகள் ஜாதகனுக்குத் தேவையில்லாத துன்பங்களையும், தொல்லைகளையும், கஷ்டங்களையும் கொடுக்கும்.///
    துலா லக்னத்திற்கு யோககாரன் சனி. இது நான்கில் கேந்திரத்தில் ,வக்கிரம் ஆனாலும் அதேபோல்தான் இருக்குமா அய்யா. இது எனக்கு உள்ள அமைப்புதான். சனி சுய வர்க்கம் 5 , நான்காம் வீடு 29.இந்த நிலைமையில் தேவையில்லாத துன்பங்களையும் தொல்லைகளையும் ,கஷ்டங்களையும் கொடுக்குமா அய்யா.////

    கொடுத்தால் என்ன? டாஸ்மாக் 337ல் இரண்டு பெக்கை ராவாக அடித்துவிடுங்கள்!

    ReplyDelete
  19. ////Blogger thanusu said...
    தேமொழி said...ஐந்தாறு வருடங்களுக்கொருமுறை கூடராத்தை தூக்கிக்கொண்டு கிளம்பிவிடுவோம்.
    எனக்கும் சனி வக்கிரம் தான், வருடத்திற்கு இரண்டு ,மூன்று, கப்பல் project பொறுத்து மாறி விடுகிறேன் , இது அந்த வக்கிரத்தால் தானா?////

    ஆமாம். அவன் கர்மகாரகன் என்பதை மறந்துவிட வேண்டாம்!

    ReplyDelete
  20. ////Blogger sadan raj said...
    அன்புள்ள ஐயா, ஒரு தீய கிரகம் வக்ரம்பெற்று ராசியிலோ அல்லது நவாம்சத்திலோ நீசமும் அடைந்தால் மிக,மிக தீயபலனா அல்லது மைனசும் மைனசும் சேர்ந்து நன்மை பயக்குமா?////

    தீயகிரகம் நீசமடைவதால் மகிழ்ச்சி கொள்ள முடியாது. சனி தீயகிரகம்தான். ஆனால் அவன்தான் கரமகாரகன் ப்ளஸ் ஆயுள்காரகன். அவன் நீசமடையலாமா? நீங்களே சொல்லுங்கள்!

    ReplyDelete
  21. ////Blogger Maaya kanna said...
    ஐயா வணக்கம்.
    தாங்கள் தந்த அறியுரைக்கு மிகவும் கடமைப்பட்டு உள்ளேன் வாத்தியார் ஐயா!
    எமது அக்கா தேமொழிக்கும் எமது உள்ளம் கனிந்த நன்றி. நன்றி என்ற ஒரு வார்த்தையை கூறுவதை விட பெரியத்தாக வேறு ஒன்றை கொடுக்கும் அளவிற்கு எம்மிடம் ஒன்றும் இல்லை . . மேலும் கொடுக்கும் தூரதிளையும் யாம் இல்லை சகோதரியே!
    இதில் ஒரு வேடிக்கையான விசையம் என்ன வென்றால் கடைசியில் முடிவை எடுக்கும் பொறுப்பபை எம்மிடமே தந்து விட்டிர்கள் என்பதுதான் ஐயா!
    இன்றைய கேள்வி பதில் பகுதி மிகவும் அருமை ஐயா!////

    ஆமாம், உங்கள் சாப்பாட்டை நீங்கள் சாப்பிடுவதுதானே முறை! ஊட்டிவிடும் வயதைத் தாண்டிவிட்டீர்கள் கண்ணன்!

    ReplyDelete
  22. ////Blogger sury said...
    " ஏங்க.. இந்த கேது பன்னிரண்டில் இருக்கிறார். அதனால உங்களுக்கு அடுத்த ஜன்மம் கிடையாது அப்படின்னு
    நேத்திக்கு வந்த ஜோசியர் சொல்றாரே !! நிசமாலுமா "
    " அப்படியா ! நான் தப்பிச்சேன் !! "
    subbu/////

    உங்களின் சேவை நாட்டிற்குத் தேவை! நீங்கள் தப்பிக்கக்கூடாது. அடுத்த பிறவியிலும் தமிழனாகப் பிறந்து தமிழர்க்கு சேவை செய்ய வேண்டும் சூரி சார்!

    ReplyDelete
  23. ////Blogger Parvathy Ramachandran said...
    மிக அருமையான பதிவு. மீள் பதிவானாலும் மிக அருமையான தகவல்களைத் தாங்கி வருகிறது. நன்றி. கிரகங்கள்,உதாரணமாக, பரிபூரண சுபரான குரு, வக்கிரகதியானாலும் சுய வர்க்கத்தில் ஐந்து, அல்லது அதற்கு மேற்பட்டபரல்கள் இருந்தால், நன்மையான பலன்களா ,இல்லையா ?. அதாவது வக்கிரகதி என்பதால், தீய பலன்கள் கூடும் என்று கொள்ள வேண்டுமா?////

    பரல்கள் எதற்கு இருக்கின்றன? அதையே எடுத்துக்கொள்ளுங்கள். நன்மையான பலன்கள் கிடைக்கும். வக்கிரகதி என்பதால் ரேசன்கடைச் சரக்கைப்போல அவ்வப்போது கிடைக்கும்!!

    ReplyDelete
  24. ////Blogger seethalrajan said...
    ஐயா வணக்கம்
    ஒரு கிரகம் வக்ரம் பெறும்பொது அதன் முந்தைய வீட்டு பலனை தறுமா ஆசிரியர்களெ? இப்பொது துலத்தில் வக்கரம் பெற்ற சனி கன்னி விட்டில் இருந்தால் என்ன பலனை தருவாரொ அந்த பலனை தருவாரா? மிக்க நன்றி////

    முன்வீடு, பின் வீடு என்று ஏன் குழப்பிக்கொள்கிறீர்கள்? ஜாதகத்தில் இருக்கும் இடத்தின் பலனைத் தருவார்

    ReplyDelete
  25. ////Blogger ananth said...
    வக்கிர கதியில் இருக்கும் கிரகங்களுக்கு வாத்தியார் சொன்ன பலன்கள் பொதுவானவைதான். வக்கிர கதியில் இருக்கும் கிரகங்களுக்கு ஷட் பலங்களில் ஒன்றான சேஷ்ட பலம் அதிகமாகதான் இருக்கும். இதுவும் ஒரு வகையில் பலம்தானே.////

    இருந்தாலும் அது அடிவாங்கியபின் ஒத்தடம் கொடுப்பதைப் போன்றது!

    ReplyDelete
  26. ////Blogger தேமொழி said...
    நன்றி கலை:)))
    தனுசு, நம்ம மைனர் வந்து சொன்னால் இன்னமும் விவரம் கிடைக்கலாம். அவருக்கும் சனி வக்கிரம்தான். ஆனால் பாவம் அவர், தன் பெற்றோர்கள் இயக்கத்தில் "உத்தமபுத்திரன்" படம் ரீமேக்கில் நடிக்க டைட் கால்ஷீட் கொடுத்துவிட்டுத் தடுமாறிக் கொண்டிருக்கிறார்.
    இந்த தீய கிரகங்கள் லக்கினாதிபதியாகவோ, யோகக்கரனாகவோ இருந்தால் பெரிதாக துன்பத்தில் ஆடித் தள்ளுபடி எல்லாம் தரமாட்டார்கள் போலிருக்கிறது. எனக்கு சனி லக்கினாதிபதிதான். தங்கப்பதக்கம் சிவாஜி போல, வீட்லேயே இராணுவ கண்டிப்புடன் நடத்தும் பெற்றோர்கள் இருப்பது போல நம் வாழ்க்கை இருக்கும் போலிருக்கிறது.
    நல்ல கிரகங்கள் யோககாரனாகவோ, லக்கினாதிபதியாகவோ இருந்தால் பாசமலர் சிவாஜி போல நம்மை நடத்துவார்கள் என நினைக்கிறேன். வாத்தியார் ஐயா என்ன விளக்கம் சொல்கிறார் எனப் பார்ப்போம்./////

    வாத்தியாருக்கு சூரியன் லக்கினாதிபதி. சந்திரன் ராசியாதிபதி. அப்படியொரு காம்பினேஷன். வாத்தியார் என்பதற்காக சனி விட்டுவைக்கவில்லை. தன்னுடைய திசையில் சட்டி சுட்டதடா, கைவிட்டதடா என்ற ஒரே பாடலை 19 ஆண்டுகள் பாட வைத்துவிட்டுப்போனான். நாலும் நடந்து முடிந்தபின்னே
    நல்லது கெட்டது தெரிந்ததடா - என்று வாத்தியாரும் தெரிந்து கொண்டார். ஒரே ஒரு ஆறுதல் - பரிவர்த்தனை யோகத்தில் இருக்கும் சனீஷ்வரன், வேண்டிய மட்டும் அனுபவத்தைக் கொடுத்து, வாத்தியாரை எழுத வைத்துவிட்டுப் போனான்.

    ReplyDelete
  27. ஐயா வணக்கம்.கன்னிலக்னம்,ஹஸ்தம்சாரம் ,3ல் கேது,5ல்.திருவோணம், மகரம்ராசி தெய்பிரைசந்திரன்,7ல்சனி உத்திரட்டாதி,9ல் சூரியன்,செவ்வாய்,ராகு,10ல் புதன்-மிருகசீரிடம்,குரு- திருவாதிரை, எனக்கு சனிதிசை சுபத்தை தருமா?அசுபத்தை தருமா? பிறந்ததேதி 7.6.1966 -2.20pm ஈரோடு கருணை கூர்ந்து பதில் அளிக்குமாறு வேண்டுகிறேன் ....நன்றி .. ஆ .ப.கஜகிருஷ்ணா,சித்தோடு ,ஈரோடு 9445146900 fb kajakrishna vikna , viknafotosstudio@gmail.com,

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com