மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

19.4.12

Doubt: அம்மணியின் இளமை எதில் கழிந்தது?


....................................................................................................................
Doubt: அம்மணியின் இளமை எதில் கழிந்தது?
Doubts: கேள்வி பதில் பகுதி மூன்று!

நீங்களும் உங்கள் சந்தேகங்களும் - பாடம் மூன்று!

Question & answer session
கேள்வி பதில் வகுப்பு
-------------------------------------------------------
email No.9
வித்யா

Dear Sir,
Here are my doubts.

1) ஒரு கிரகம் ராசியில் மறைவிடத்தில் அல்லது நீச்ச வீட்டில் அமர்ந்து, தன்னுடைய சுயவர்க்கதிலும், தான் இருக்கும் வீட்டிலும், தன்னுடைய சொந்த வீட்டிலும் குறைந்த பரல்களுடன் இருந்து, அம்சத்தில் உச்ச வீட்டில் கேந்திரத்தில் அமர்ந்தால், எந்த விதமான பலன்கள் கிடைக்கும்?

Nvamsam is the magnified version of the rasi chart. இதைப் பலமுறை சொல்லியுள்ளேன். அம்சத்தில் உச்சம் பெற்று இருப்பதைக் கணக்கில் எடுத்துக்கொள்ளுங்கள். நல்ல பலன்கள் கிடைக்கும்

2) நற்பலன்கள் கிடைக்கும் என்றால், மத்திமவயதில் தான் கிடைக்குமா? அல்லது எப்போது கிடைக்கும்?

அந்தக் குறிப்பிட்ட கிரகத்தின் தசா/புத்திகளில் (Major period/sub period of that planet) கிடைக்கும். அது எந்தெந்த வயதில் வரும் என்பதை நீங்கள் கணக்கிட்டுக் குறித்து வைத்துக்கொள்ளுங்கள்

3) சூரியன் பாவகிரகமா? சூரியனின் பார்வை பெறும் இடம் கெட்டுப் போகுமா?

சூரியன் பிரதான கிரகம். தந்தைக்கு உரிய கிரகம். உடல் காரகன். இரண்டு அமைச்சகங்கள் அவர் கையில் உள்ளது. சிம்ம லக்கினக்காரர்களுக்கு அவர் லக்கின அதிபதி. அவர்களுக்கு அவர் பாவ கிரகம் அல்ல! மகர லக்கினக்
காரர்களுக்கு அவர் எட்டாம் இடத்து அதிபதி. அவர் பாபக் கிரகம். அப்படி அவருடைய செயல்கள் இடத்திற்கு இடம் மாறுபடும். அதனால் அவருக்குத் தனி முத்திரை கிடையாது/குத்தக்கூடாது!


வரும் ஆனால் வராது. அவர் பாவி ஆனால் பாவி இல்லை:-))))

Regards,
Vidhya.
------------------------------------------------------------
email No.10
தனுஜா

இனிய காலை வணக்கம் சார்,

1. எனக்கு ஒரு பொது கேள்வி இருக்கு, என்னுடய ஜாதகத்தில் வாக்கிய முறையில் துலாமில் சனி இருக்கிறார், ஆனால் திருக்கணிதப்படி அவர் விருச்சிக ராசியில் இருக்கிறார், இதில் எது சரி? சார் இதை ஜகானந்தா ஹோரவில் எப்படி வாக்கியபடி பாப்பது எண்டு எனக்கு தெரியாது, Can u please tell, if u know sir becoz I tried many times and nothing worked.

ராசி சந்திப்புக்களில் பிறந்தவர்களுக்கு (That is border births) அப்படித்தான் இருக்கும். தமிழ்நாடு, கேரள எல்லையில் இருக்கும் தோட்டக்காரர்களுக்கு, இரண்டு மாநிலங்களிலும் வாசல் இருக்கும். அப்படி வைத்துக்கொள்ளுங்கள்.

வாக்கியப்படி கணித்தால் அது சரியான ஜாதகத்தைக் கொடுக்கும்.
கணினி ஜாதகங்களில் வாக்கியத்தில் கணிப்பதற்கு உரிய வசதி இருக்கும். அதில் அயனாம்சம் = ராமன், சார்ட் ஸ்டைல் = சவுத் இந்தியன், தசா ஸிஸ்டம் = 360 நாட்கள் என்பதைத் தேர்வு செய்யுங்கள் படம் கீழே உள்ளது


+++++++++++++++++++++

2. சார், அடுத்த கேள்வி ஐந்தாம் வீட்டை பற்றிய கேள்வி, for meena lagna, katakam is fifth house, and ruler is moon, நீங்க சொன்னிங்க சந்திரன் தான் மனோகாரகர், அவர் எனக்கு ஐந்தாம் வீடுக்கு உரியவர், எனக்கு கவலையா இருக்கு சார், becoz he is in 4th house, (12th to 5th house), சில நேரங்களில் நான் சந்தோசமா ஒரு வேலை செய்ய ஆசையா போவேன், ஆனால் போன அடுத்த நிமிஷம் ஏதும் ஒரு கவலை வரும் சார், உற்சாகம் போய்விடும் சார்.

Key informations:
The moon is wanning
4th house (gemini) 24 parals only sir
5th house (katakam) 27 parals
moon suya paral 6
mercury suya paral 5
jupiter suya paral 7
mercury, jupiter, sun giving direct aspect on moon
In navamsa moon is alone in taurus( ucham)

Having some good points sir, chandiran enaku nallathu seivaaraa? chandiranuku eppoluthum maarikondu irukum manasu, I don't like him. Enaku mukiyaamana kelvi sir, fifth house deals with children, will I get good children sir after marriage since fifth lord in fourth house? Only if u get good children, life would he peaceful sir!!!

சந்திரன் தன்னுடைய வீட்டிற்குப் பன்னிரெண்டில் மறைந்தாலும், சுயவர்க்கத்தில் 6 பரல்களுடன் இருப்பதால் நன்மைகளைச் செய்வார். கவலையை விடுங்கள்.

எதையும் Take it easy என்று எடுத்துக்கொள்ளுங்கள். பிரச்சினைகளை மனதில் இருந்து அடித்து விரட்டுங்கள்.

கீழ்க்கண்ட பாடலைத் தினமும் பாராயணம் செய்யுங்கள்:


"ஊர்வசி ஊர்வசி டேக் இட் ஈசி ஊர்வசி
ஊசி போல உடம்பிருந்தா தேவையில்ல பார்மஸி
வாழ்க்கையில் வெல்லவே டேக் இட் ஈசி பாலிஸி

வானவில் வாழ்க்கையில் வாலிபம் ஒரு ஃபாண்டஸி
ஊர்வசி ஊர்வசி டேக் இட் ஈசி ஊர்வசி


ஒலியும் ஒளியும் கரண்டு போனா டேக் இட் ஈசி பாலிசி

ஒழுங்கா படிச்சும் பெயிலா போனா டேக் இட் ஈசி பாலிசி

தண்ட சோறுன்னு அப்பன் சொன்னா டேக் இட் ஈசி பாலிசி

வழுக்கைத் தலையன் திருப்பதி போனா டேக் இட் ஈசி பாலிசி

(ஊர்வசி..)
"

In fourth house only 24 parals, but budhan (lord of 4th house) suya paral is 5, naan mel padipu padipena? (becoz enaku budhan disai is starting in 4 years)

அதே பதில்தான் இதற்கும். புதன் சுயவர்க்கத்தில் 5 பரல்களுடன் இருப்பதால், உங்களுக்கு மேற்படிப்பு உண்டு.

3. சார், இது ஆறாம் வீடை பற்றிய கேள்வி, If sixth house has 31 parals, what are positive things about it having more parals, and what are the negative things? But in my case suryan (6th house lord) is neecham in navamsa? Konjam payama iruku sir?

எதற்குப் பயம்? ஆறாம் வீட்டில்தான் 31 பரல்கள் இருக்கின்றனவே. அது கைகொடுக்கும். கவலையை விடுங்கள்

4. Last question sir, if rahu is with mandi wat is effect sir? I have mandi in 3rd house taurus,(rahu neecham) with 30 parals?

மூன்றாம் வீடு தைரிய ஸ்தானம். அங்கே 30 பரல்கள் இருப்பது தேவையான துணிவைக் கொடுக்கும். நீங்கள்தான் அதைக் கை நீட்டி (முழு மனதுடன்) எடுத்துக்கொள்வதில்லை என்று தெரிகிறது!:-)))))

5.சுறு சுறுப்பாக உள்ள மனிதர், what key planets or combinations of planet provide this?

செவ்வாய் வலுவாக உள்ளவர்கள் சுறு சுறுப்பாக இருப்பார்கள். அவர்தான் ஆற்றலுக்கு உள்ள கிரகம். ஆற்றலுக்கு சுறுசுறுப்பு வேண்டுமல்லவா?

I will be thankful if you can answer all of it sir!!!

Thanks,
Thanuja
----------------------------------------------------------
email No.11
வினோத தனஞ்செயன்

ஐயா,
ராகு,கேது உச்சம் பெற்றால் இருக்கும் வீட்டை பொறுத்து அவர்களது திசைகளில் ஓரளவு நன்மைகள் செய்வார்களா? சனி இராசி, நவாம்சத்தில் ஆட்சி,உச்சம் ஆனால் இருக்கும் வீட்டை பொறுத்து சனி திசையில் நன்மைகளை அதிகமாக செய்வாரா?

உச்சம் பெற்றதற்கு அர்த்தம் வேண்டாமா? உச்சம் பெற்ற கிரகங்கள் தங்களுடைய தசா/ புத்திகளில் ஜாதகனுக்கு நன்மைகளை வாரி வழங்குவார்கள்

------------------------------------------------------------------
email No.12
விஜய் ஆனந்த்

Respected sir,
you have given 2 examples for parals(lesson 11), one is relating to marriage and the other profession.
A doubt arises here i.e;
when it comes to profession if the 10th house has less parals(<28),>30)the result is, even with less effort he/she can earn more and be successful in his/her profession( this is practically possible).But when it comes to marriage,

if the 7th house has less parals(<25)>30) it means; as per 7th house= will not get a good pair;
2nd house= will get a good family; but practically, only if a person gets a good pair, he/she can lead a good family.

I am confused......how do you explain the above case, please clarify me sir.

Thanking you,
N.Vijaianand

நல்ல மனைவி அமைந்தால்தான், நல்ல குடும்பம் அமையும் என்றால், இன்று நாட்டில் 75% குடும்பங்கள் கேள்விக்குறியதாகிவிடும்.

சரி பண்ணிக் கொண்டுபோகும்/ சகித்துக்கொண்டு போகும் மனப்பான்மை யால்தான் இன்று பல குடும்பங்களில் சந்தோஷம் நிலவிக்கொண்டிருக்கிறது.
ஒன்று ரயில், ஒன்று தண்டவாளம். அப்படித்தான் பல ஜோடிகள் அமையும். இரண்டுமே ரயில்களாக இருந்தால் என்ன ஆகும்? காலதேவன் அப்படித்தான் ஜோடிகளை உண்டாக்குவான்.

கணவன் ரயில் என்றால்,
மனைவி தண்டவாளம். மனைவி ரயில் என்றால், கணவன் தண்டவாளமாக இருப்பான்.

கணவன் சோம்பேறியாக இருந்தால், மனைவி படு சுறுசுறுப்பானவளாக இருப்பாள்.
கணவன் ஸ்மார்ட்டாக இருந்தால், மனைவி மந்தமாக இருப்பாள். மனைவி புத்திசாலியாக இருந்தால், கணவன் அவள் அளவிற்கு அறிவில்லாத
வனாக இருப்பான்.
இப்படித்தான் ஜோடிகள் அமைந்திருக்கும்.நீங்கள் சோதித்துப் பார்த்துக் கொள்ளலாம்

திரைப்படங்களில் மட்டும்தான் ஜோடிகள் சரியாக இருக்கும்!
வாழ்க்கையில் அபூர்வமாக அப்படி ஜோடிகள் இருக்கும். 1% அல்லது 2% சதவிகிதம் மட்டுமே அப்படி இருக்கும். அதைத்தான் நாம் Made for each other என்போம்!

Face Valueவை வைத்து ஒரு பெண்ணை/ஒரு ஆடவனை நீங்கள் முடிவு செய்ய முடியாது.
திருமணத்திற்குப் பிறகுதான் உண்மையான முகங்கள் தெரியும்.

7ஆம் வீடு தனி.கணவன்/மனைவி உறவுகளுக்கு மட்டும் உரியது.
2ஆம் வீடு தனி. குடும்பம் என்பதில் கணவன் மனைவி இருவரும் அங்கத்தினர்கள். shelter, Children, social status, உறவுகள், சொந்த பந்தங்கள், போன்று பல் விஷயங்களை உள்ளடக்கியது குடும்பம்.


இரண்டிற்கும் முடிச்சுப்போட்டுப் பார்க்காதீர்கள்

ஒருவருக்கு 7ஆம் வீடு நன்றாக இருந்தது. அவர் பொறியியல் படித்தவர். நல்ல மனைவி கிடைத்தாள், அம்மணி தோற்றத்தில் நடிகை தேவயானி மாதிரி அழகாக இருப்பார். 5ஆம் வீடும் நன்றாக இருந்தது. திருமணமான ஒருவருடத்திலேயே அவர்களுக்குக் குழந்தையும் பிறந்தது. எல்லாம் இரண்டுவருடம்தான் நிலைத்தது.
அவருடைய ஜாதகத்தில் இரண்டில் மாந்தி. மாந்தி அவரை அள்ளிக் கொண்டுபோய் துபாயில் விட்டு விட்டுவந்துவிட்டான். 25 வருடங்கள் ஆகிவிட்டது. அவர் அங்கே இன்னும் பொருள் ஈட்டிக் கொண்டிருக்கிறார். முடிந்தபாடில்லை. ஈட்டிக் கொண்டேடேடே இருக்கிறார்ர்ர்ர்.

இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை இங்கே வந்து ஒரு பத்து தினங்கள் மட்டும் இருந்துவிட்டுப்போவார்.
மனைவியின் இளமை, கோவையில் இடம் வாங்கி, இரண்டு வீடுகள் கட்டி, அதைப் பார்த்து மகிழ்வதில் கழிந்தது. கணவனுடைய இளமை வங்கி இருப்பைப் பார்த்து மகிழ்வதில் கழிந்தது.

அதை எப்படிக் குடும்ப வாழ்க்கை என்று சொல்வது?


அதைத்தான் ஒரு அற்புதக் கவிஞன் இப்படிச் சொன்னான்:


“மடி நிறையப் பொருள் இருக்கும்
மனம் நிறைய இருள் இருக்கும்”

தோற்றம் (appearance) , அறிவு (skill) , கல்வி (education) , திறமை (Talent) , குணம் (character), அதிர்ஷ்டம் (Luck) ஆகிய ஆறும் ஒருவருக்கு அல்லது ஒருத்திக்கு வேண்டும். அப்படி ஆறும் அமைந்த ஒருவரை அல்லது ஒருத்தியைக் காட்டுங்கள் பார்க்கலாம்.

அதில் இரண்டு அல்லது மூன்று மட்டுமே, ஒருவருக்கு அல்லது ஒருத்திக்கு இருக்கும். இருப்பதைக் கொண்டு, வந்தவரை அல்லது வந்தவளை வைத்துக் குடும்பம் நடத்துவதுதான் வாழ்க்கை!

அந்த ஆறில் மிகவும் முக்கியமானது குணம். அதை மனதில் வையுங்கள்!

உங்களுக்குப் புரிந்தால் சரி!!!!!!
=====================================================================

email No.13
வெங்கட். என். மஸ்கட்

Respected Vaathiyaar avargalukku,
For Vrishaba Lagna subject, if lagna lord is in 12th along with Uchham Sun will it form a raja yoga - can we apply 6th in 12th rule (kettavan kedugiran endru arthama)? Will it help during the lagna maha dasa?
Nandrigal pala.
Anbudan
Venkat, Muscat

என்ன குழப்பம்? 4ஆம் அதிபதி(Lord of the house of comforts) உச்சம் பெற்று மேஷத்தில் இருக்கிறார். அது 4ஆம் வீட்டில் இருந்து ஒன்பதாம் இடம். ஆகவே அவர் உங்களுக்கு சகல செளகரியங்களையும் பெற்றுத் தருவார். அதனால்தான் அவர் உங்களை மஸ்கட்வரை கொண்டுபோய் விட்டிருக்கிறார். லக்கினாதிபதி சுக்கிரன் லக்கினத்திற்குப் பன்னிரெண்டில் மறைந்ததற்கு அது ஈடாகக் கொடுக்கப்பெற்றுள்ளது. மற்றதை எல்லாம் மறந்து விட்டு சந்தோஷமாக இருங்கள்!
---------------------------------------
email No.14
செல்வா ரமேஷ்

////I have few doubt on Parivarthana yoga. The below cases are from my Jataga, I'm asking as it was missing in your lessons.
What if parivartana between Venus(4) and Jupiter(11)? (This is not specified in earlier lesson)
Assuming there is parivartana yoga between Venus and Jupiter, and during Venus dasa will it actually be Venus dasa or Jupiter dasa?
Thanks and regards
Selvaramesh//////

பரிவர்த்தனையில் இடம் மாறி அமரும் கிரகங்கள், தாங்கள் அமர்ந்த வீட்டிற்கான பலனைத் தங்களது தசா புத்திகளில் அள்ளித் தருவார்கள். ஆகவே இங்கே, அது சுக்கிரனா அல்லது குருவா என்று பார்ப்பதைவிட, அவர்கள் அமர்ந்த வீடு, 2ஆ, 10ஆ, அல்லது 11ஆ எனும் கணக்கில் பாருங்கள்

Out of all the Parivarthana yoga, the Parivarthana between the lord of Kendra and Trikona is very powerful அதையும் மனதில் வையுங்கள்

-------------------------------------------
(தொடரும்)

அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்!
 +++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

13 comments:

  1. வாத்தியார் வெளியூர்ப் பயணம்.இரண்டு நாட்கள். ஆனால் இன்றுள்ள தொழில்நுட்ப வசதியால் பாடங்கள் தொடர்ந்து வெளியாகும். பின்னூட்டங்கள் மட்டும் தாமத்மாக வெளியாகும். பின்னூட்டடப் பெட்டிக்குள் மனிதர்கள், மாணவர்களோடு, சில கழுதைகளும் நுழைகின்றன. ஆகவே பின்னூட்டப் பெட்டியை மீண்டும் பூட்டிவைத்துள்ளேன். பொறுத்துக் கொள்ளவும்!

    ReplyDelete
  2. ஐயா...கேள்வி-பதில் மீள்பதிவு பகுதி படித்ததை மீண்டும் நினைவில் கொண்டு வருகிறது. மிக்க நன்றி.

    ReplyDelete
  3. Ayya,

    Very good news about calculating as per Vakiya. But I am not able to get preference as you shown. Can you help how to select that menu. I tried my best for more than one hour, but no success. Waiting for your reply.

    Student,
    Ravu

    ReplyDelete
  4. அருமையான பதில்கள்! அதுவும் அந்த "டேக் இட் ஈசி பாலிசி" பாராயணம் சூப்பரப்ப்ப்பு !!!
    -‍ஜவகர் கோவிந்தராஜ்

    ReplyDelete
  5. வணக்கம் ஐயா,
    மின் தடையும்,இணைய கோளாறும் இன்னும் இந்த கோடையில் சுட்டெரிக்கின்றது...

    பரல்களில் வலிமையுடைய கிரகம் நீச்சபங்க இராஜயோகம் பெற்று ஆனால் மறைந்திருந்தால் அக்கிரகத்தால் நல்ல பலன்களை தர இயலுமா?

    ஐயா,கேள்வி‍ பதில் பகுதியால் வெவ்வேறு விதமான ஜாதக சந்தேகங்களை அறிந்து அதற்கான தீர்வையும் அறிய முடிகிறது...மிக்க நன்றி ஐயா...

    ReplyDelete
  6. Aiyya Vanakkam ,

    Parivarthanail 5 allathu 9 idam irunthal athanudam parivathanai agum idam namai payakkum ( Ex : 5 & 4 , soththu sugam , melpadippu ippadi ) , ithil 5 am idam 9 idam intha irandum parivarthanai aagi irunthal entha mathri nanmaigal kidaikkum ,.


    Nandri

    ReplyDelete
  7. வாக்கியப் படி கணித்தால் அது சரியான ஜாதகத்தை கொடுக்கும்///

    அய்யா அவர்களின் பழைய கேள்வி பதில்களின் பகுதியுலும் ,குறிப்பாக "சாஸ்ரா" கல்லூரியின் மாணவர் ஒருவரின் கேள்விக்கான பதிலிலும் "முன்பு திருக்கணிதத்தை தான் சிபாரிசு செய்தேன் ,ஆனால் இப்போது வாக்கியம் தான் சரியாக தெரிகிறது" ,எனும் பொருள் பட பதிலளித்து இருந்தீர்கள்.

    எங்கள் பக்கத்தில் (சிதம்பரம்) வயதில் மூத்த ஜோதிடர்கள் வாக்கியம் தான் பயன் படுத்துகிறார்கள், ஆனால் புதிதாக வந்த இளம் வயது ஜோதிடர்கள் திருக்கணிதம் பயன் படுத்துகிறார்கள்.

    மீண்டும் உங்களை கேட்பதால் தொந்திரவாக நினைக்க வேண்டாம் . உங்களின் பதிலை எனக்காக மட்டுமே எடுத்துக் கொள்கிறேன்.வாக்கியமா, திருக்கணிதமா, ஒரே வார்த்தையில் சொல்லிவிடுங்கள் அய்யா.

    ReplyDelete
  8. "தை" இங்கேயுமே..
    அ"தை"யும் சொல்லனுமா..?

    பா"தை" தெரியாததாலே இது
    போ"தை" என நினைத்து.. இருந்தால்

    கா"தை" திருகி அதன்
    ம"தை"யை அடக்கத்தான் வேண்டும்

    ReplyDelete
  9. This comment has been removed by the author.

    ReplyDelete
  10. This comment has been removed by the author.

    ReplyDelete
  11. This comment has been removed by the author.

    ReplyDelete
  12. ஐயா வணக்கம்
    நான் ஒரு ஜோதிடத்தில் கத்து குட்டிதான். எனக்கு ஒரு சந்தேகம் .சிம்மத்தில் சந்திரன்,சுக்கிரன்,புதன்,செவ்வாய் ,கேது,ஐந்து கிரகங்கள் கூட்டாக உள்ளது. இது நல்ல பலன் தருமா? அல்லது இந்த கிரகங்கள் அனைத்தும் பலன் இழக்குமா? நான் பார்த்ததில் இது ஒரு அறிய சேர்கையாக உள்ளது. இது நல்லதா?

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com