மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

3.4.12

ரிஸ்க் எடுப்பது ரஸ்க் சாப்பிடுவதைப் போன்றது!



++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
ரிஸ்க் எடுப்பது ரஸ்க் சாப்பிடுவதைப் போன்றது!

எண் ஐந்தைப் பற்றிய எண் ஜோதிடம்!
------------------------------------------------------------
எண் 5 புதனுக்கு உரியது. இந்த எண்காரர்கள் எதையும் துணிச்சலோடு எதிர்கொள்ளக்கூடியவர்கள்.வடிவேல் மொழியில் சொன்னால் ரிஸ்க் எடுப்பது இவர்களுக்கு ரஸ்க் சாப்பிடுவதைப் போன்றது. முடியாதது என்பதே இவர்கள் அகராதியில் கிடையாது. எதையும் உற்சாகத்தோடு முயன்று பார்ப்பார்கள்.தங்கள் புத்திசாலித்தனத்தால் முடித்தும் காட்டுவார்கள்.

இவர்களுடைய புத்திசாலித்தனம் மின்னல் வேகத்தில் வேலை செய்யும். வாழ்க்கையில் வெற்றியாளனாகவும், புகழ் மிக்கவர்களாகவும் வலம் வருவார்கள்.

5, 14, 23, ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் எல்லாம் இந்த எண்ணிற்கு உரியவர்கள். பிறப்பு எண் 5 வந்தாலும் சரி அல்லது கூட்டல் எண் (விதி எண்) 5 வந்தாலும் சரி, அவர்களுக்கு இந்தக் குணாதிசயங்கள் இருக்கும்.

மற்றவர்களுக்கு மாதக் கணக்கில் யோசித்து முடிவெடுக்கும் யோசனைகள் (ஐடியாக்கள்) இவர்களுக்கு நொடியில் தோன்றும். இன்றைய விஞ்ஞான உலகத்தின் பல சாதனைகள் எல்லாம் பெரும்பாலும் இந்த எண்ணிற்கு உரியவர்களால் ஏற்பட்டதுதான்.

இந்த எண்காரர்கள் மன வலிமை கொண்டவர்கள். சிந்தனைகள், எண்ணங்கள், செயல்பாடுகள் என்று எல்லாவற்றிலும் ஒரு வேகம் இருக்கும். அந்தக் குணத்தால், பணம் பண்ணுவதில் ஒரு வல்லமை இருக்கும்.
இந்த எண்காரர்களுக்குப் பங்குச்சந்தை ஒரு சிறப்பான ஏற்றத்தைக் கொடுக்கும். அதில் நுழைந்து, தங்களுடைய ஆற்றலைக் காட்டினால் ஆதீதப் பொருள் குவியும் அல்லது அதிக அளவில் செல்வம் சேரும். அதனால்தான் ரிஸ்க் எடுப்பது இவர்களுக்கு ரஸ்க் சாப்பிடுவதைப்போன்றது என்று சொல்லப்படுகிறது.

இந்த எண்காரர்களின் வீக்னெஸ் என்ன? வீக்னெஸ் இல்லாமல் இருக்குமா? ஒரு காரியம் ஆகவில்லை என்றால் சீக்கிரம் தளர்ந்து போய்விடுவார்கள். மனப் போராட்டம் வந்தால் தங்களை இழந்துவிடுவார்கள். தாங்கமாட்டார்கள். மற்றவர்களின் முட்டாள்தனத்தையும் இவர்களால் பொறுத்துக்கொள்ள முடியாது.

இந்த எண்காரர்களுக்குப் புதுப்புது புத்திசாலித்தனமான எண்ணங்கள் தோன்றும் யோசனைகள் வரும். அதன் காரணமாகப் புதுப்புது வியாபாரங்களையும், தொழில்களையும் விரும்பிச் செய்வார்கள். தோல்வியைப் பற்றிய பயமே இருக்காது. எதையும் ஒருகை பார்ப்போம் என்று இறங்குவார்கள். இறங்கி முழுவேகத்துடன் செய்வார்கள்

இந்த எண்ணில் பிறந்தவர்கள், பொதுவாகத் தங்கள் வாழ்க்கையின் பிற்பகுதியில்தான் பிரபலமடைவார்கள்

ஐந்தாம் எண்ணில் பெயரை உடையவர்கள், அல்லது பெயரை உடைய நிறுவனங்கள் மற்றவர்களை ஈர்க்கும்படியாக இருக்கும். அதன் காரணமாகவே வெற்றிபெற நினைக்கும் பலர் இந்த எண்ணில் பெயரைத் தேர்ந்தெடுப்பார்கள். தோல்வி என்பது இருக்காது. இருந்தாலும், வாங்கிய அடியை மறந்துவிட்டு, எழுந்து போராடி, வெற்றியடைவார்கள்.

மாற்றத்தை விரும்புவார்கள். அன்றாட வேலைகள் ஒன்று போலிருந்தால், சீக்கிரம் போரடித்துவிடும் bored by routine. உணவு, உடை, போன்ற நடைமுறை விஷயங்களில்கூட அடிக்கடி மாற்றங்களைச் செய்வார்கள்

மனைவியாக வருபவளும், இவர்களுடைய இந்த குணத்தை அறிந்துகொண்டு, இவர்களுக்குத் தகுந்தமாதிரி விதம் விதமாகப் பணிவிடை செய்ய வேண்டும். முக்கியமாக இவர்களை விதம் விதமாகக் கொஞ்சி உறவாட வேண்டும்:-)))

She has to display her affection in different ways and She has to retain his affection by cooking tasty dishes, and impress him with changes in her personality.

தொழில் அல்லது வியாபாரத்தில் மிகவும் சிறந்து விளங்குவார்கள். நிறைய சம்பாதிப்பார்கள். நிறைய செலவும் செய்வார்கள்.

ஐந்தாம் எண்ணில் பிறந்ததோடு மட்டும் அல்லாமல், ஜாதகத்தில் புதன் உச்சம் பெற்றும் இருந்தால், அதீதப் பணம், பெயர், புகழ் என்று எல்லாவற்றையும் தேடிப்பிடிப்பார்கள். புதிய யுக்திகளை உபயோகித்து வழ்க்கையில் முன்னேற்றம் காண்பார்கள். போற்றக்கூடிய, நினைவில் வைக்கக்கூடிய, பல செயல்களைச் செய்வார்கள்

இந்த எண்காரர்கள் சீக்கிரம் காதலில் விழக்கூடியவர்கள் (fall in love). It will be instant love out of passion rather than reason. 9,16,27 எண்காரர்கள் இவர்களைக் காந்தம்போல கவரக்கூடியவர்கள். அந்த எண்காரர்களை மணந்துகொள்ள நேரிட்டால், வாழ்க்கை கசந்துவிடலாம். நீண்ட வாழ்க்கைப் பயணத்தில் அவர்கள் இவர்களை ஓவர்டேக் செய்து ஓரங்கட்டிவிடுவார்கள்.

5, 14, 23 ஆகிய தேதிகளும், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளும் இவர்களுக்கு உகந்த நாட்களாகும். Light grey, white, Light shades ஆகிய நிறங்கள் உகந்த நிறங்களாகும். இருட்டான நிறங்களை இவர்கள் தவிர்க்க வேண்டும். சிறந்த கல் பச்சை நிறக்கல் - மரகதம் emerald

சுருக்கமாகச் சொன்னால், இந்த எண்காரர்கள் யாருடனும் எளிதில் நட்புக் கொள்ளக்கூடியவர்கள். யாராலும் எளிதில் விரும்பப்படக்கூடியவர்கள். எதையும் ரசிக்கக்கூடியவர்கள். எதையும் செய்து முடிக்கக்கூடியவர்கள். சீட்டுக் கட்டில் உள்ள ஜோக்கரைப் போன்றவர்கள் இவர்கள். ஆட்டத்தில் அது எந்தச் சீட்டுடனும் சேர்வதைப் போல இவர்களும் யாருடனும் சேர்ந்து பணியாற்றக்கூடியவர்கள்

கவியரசர் கண்ணதாசன் மொழியில் இவர்களைப் பற்றிச் சொன்னால் இப்படிச் சொல்லலாம்:

"என்னைத் தெரியுமா..... ?
என்னைத் தெரியுமா..
நான் சிரித்துப் பழகி கருத்தைக் கவரும்
ரசிகன் என்னைத் தெரியுமா..
உங்கள் கவலை மறக்க கவிதை பாடும்
கவிஞன் என்னைத் தெரியுமா..

ஆஹா ரசிகன் ஆஹா ரசிகன்
நல்ல ரசிகன் நல்ல ரசிகன்
உங்கள் ரசிகன் உங்கள் ரசிகன்..

நான் புதுமையானவன் உலகைப் புரிந்து கொண்டவன்
நல்ல அழகைத் தெரிந்து மனதைக் கொடுத்து
அன்பில் வாழ்பவன்
ஆடலாம்.. பாடலாம்.. அனைவரும் கூடலாம்..
வாழ்வை சோலையாக்கலாம்..
இந்தக் காலம் உதவி செய்ய
இங்கு யாரும் உறவு கொள்ள
அந்த உறவைக் கொண்டு மனித இனத்தை
அளந்து பார்க்கலாம்
இசையிலே மிதக்கலாம்
எதையுமே மறக்கலாம்
( என்னை )"

(படம்: குடியிருந்த கோவில்)
+++++++++++++++++++++++++++++
இந்த எண்காரர்களுக்கான மேலதிகத் தகவல்கள்:

1. The direction of growth in lifetime will be toward change, freedom, and progressive thought and action.
2. The number 5 Destiny potentially endows the native with the wonderful characteristic of mulch-talents
3. Good at presenting ideas and knowing how to approach people to get what you want.
4. That will give an edge in any sort of selling and easy success when it comes
to working with people in most jobs.
5. Whatever they do, they have the capacity to be clever, analytical, and a very quick thinker.
6. The Destiny 5 will be welcome in many varied professional environments.
7. The public sector is a natural for you because you must administer to all peoples.
8. The media, advertising, promotion, publicity, all types of selling, and entertainment are all potential
fields for this number
9. Settling on a single career may not be in the cards for them, as they are in a
continuous state of flux brought by constantly changing interests.
10. If there is too much of the 5 energy in their makeup or if they develop negatively, the
negative side of the number may appear. It is restless
++++++++++++++++++++++++++++++++++++++++++++++

அன்புடன்,
வாத்தியார்
+++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!


82 comments:

  1. அய்யா 5ம் எண்ணிற்கு உரிய பலனை பார்க்கும் போது நாம் வாங்கி வந்த வரம் அவ்வளவுதான் என்று சொல்லி மனதை தேத்த வேண்டி இருக்கு... ம்ம்ம்ம்ம்ம்ம்...... ஆயிரம் பொற்காசுகள் நமக்கில்லை...

    பதிவு மிகவும் அருமை அய்யா.. மிக்க நன்றி.

    ReplyDelete
  2. ஐயா,

    5ம் எண்ணைப் பற்றிய தகவல்கள் அனைத்துமே அருமை.அசத்திவிட்டீர்கள். எளிதில் உணர்ச்சிவசப்படக்கூடியவர்கள்,அதுவும் இவர்களது ஒரு வீக்னஸ். திடீரென்று உணர்ச்சிவசப்படும் இவர்கள் உடனடியாக நார்மலாக‌ மாறியும் விடுவார்கள்.
    ///இதைச் சற்று அறிவியல் ரீதியாகப் பார்த்தால் புதன் கிரகம் சூரியனைச் சுற்றியே கும்மியடிக்கும் கிரகம்.
    புதன் கிரகத்தின் பகல் நேரவெப்பநிலை கிட்டத்தட்ட 470 டிகிரிக்கும் மேல்,இரவு நேரவெப்பநிலை மைனஸ் 182 டிகிரிக்கும் குறைவாக இருக்கும். நினைத்துப் பார்க்கவே எவ்வளவு பிரமிப்பாக இருக்கிறது. பூமியின் வெப்ப நிலை போல் 4 மடங்கு அதிகமாக இருக்கும் பகல்நேர வெப்பநிலை இரவில் அதற்கு நேர்மாறாக மைனஸ் 182 டிகிரி .பனிக்கட்டியின் உருகுநிலை வெப்பநிலையே வெறும் மைனஸ் 23 டிகிரி தான். மேலும் சூரியனில் இருந்து விழும் கற்கள் வேறு புதன் கிரகத்தின் மேற்பகுதியை ஒரு ஒழுங்கற்ற நிலப்பகுதியாக‌த் தோற்றுவிக்கின்றனவாம்///.

    \\\சுருக்கமாகச் சொன்னால், இந்த எண்காரர்கள் யாருடனும் எளிதில் நட்புக் கொள்ளக்கூடியவர்கள். யாராலும் எளிதில் விரும்பப்படக்கூடியவர்கள். எதையும் ரசிக்கக்கூடியவர்கள். எதையும் செய்து முடிக்கக்கூடியவர்கள். சீட்டுக் கட்டில் உள்ள ஜோக்கரைப் போன்றவர்கள் இவர்கள். ஆட்டத்தில் அது எந்தச் சீட்டுடனும் சேர்வதைப் போல இவர்களும் யாருடனும் சேர்ந்து பணியாற்றக்கூடியவர்கள்\\\.

    புத‌ன் ஒரு நியூட்ர‌ல் பிளானெட்.குறிப்பாக‌ ஒருவ‌ர‌து சுய‌ ஜாத‌க‌த்தில் புத‌ன் சுப‌கிர‌க‌ங்க‌ளுட‌ன் சேர்ந்தால் சுப‌னாக‌வும்,பாவிக‌ளுட‌ன் சேர்ந்தால் பாவியாக‌வும் ப‌ல‌ன்க‌ளைத் த‌ருவார்.அது போல் புத‌ன் ஆதிக்க‌ம் நிறைந்த இந்த‌ எண்காரர்க‌ள் ஆளுக்குத்தகுந்தாற் போல் வேஷ‌ம் க‌ட்டுவ‌தில் வ‌ல்ல‌வ‌ர்க‌ள். ஒரு முழுக்கிறுக்க‌னோடு சேன்தால் அவ‌ன் என்னென்ன செய்வானோ அது அனைத்தையும் செய்வார்க‌ள்.ஒரு புத்திசாலியோடு சேர்ன்தால் த‌ன்னுடைய அதிமேதாவித் த‌ன‌த்தையெல்லாம் காட்டுவார்க‌ள்.
    எல்லோரோடும் ஒத்துப்போக‌க் கூடிய‌வ‌ர்க‌ள்.இவ‌ர்க‌ள் ஒரு ஜோக்க‌ர் மாதிரி யாரோடும் ஒட்டிக்கொள்வார்க‌ள்.

    ந‌கைச்சுவை உண‌ர்வு அதிக‌ம் நிர‌ம்பிய‌வ‌ர்க‌ள்.க‌ல‌க‌ல‌ப்பான‌ ஆசாமிக‌ள்.இவ‌ர்க‌ளை ஏமாற்றுவ‌து மிக‌வும் சுல‌ப‌ம். ஆனால் ஒருமுறை ஏமாந்தால் அதற்குப்பின் சுதாரித்துவிடுவார்க‌ள்.அன்த‌ ஒரு ஏமாற்ற‌த்தை வாழ்க்கையின் ஒவ்வொரு க‌ண‌த்திலும் நினைத்து வ‌ருந்துவார்க‌ள்.

    மிதுன‌ம்,க‌ன்னி ஆகிய‌ ராசிக‌ளும்,ஆயில்ய‌ம்,கேட்டை,ரேவ‌தி ந‌ட்ச‌த்திர‌ங்களும் புத‌னின் க‌ட்டுப்பாட்டில் உள்ளவை.இவ‌ர்க‌ளிட‌மும் இத்த‌கைய‌ குணங்க‌ள் நிறைந்து காண‌ப்ப‌டும்.இதில் மிதுன‌ம் யாரிட‌மும் ப‌ழ‌கும் முன்பு த‌ராத‌ர‌ம் பார்க்கும்,க‌ன்னி எதையும் பார்க்காது.

    ப‌ல‌வ‌கையான திற‌மைக‌ளுட‌ன் இருப்ப‌ர்.இவ‌ர்க‌ள் தூண்டினால் ம‌ட்டுமே எரியும் தீப‌ம் போல் இவ‌ர்க‌ளைத் தூண்ட‌ எப்போதும் ஒரு தூண்டுகோல் தேவை.இவ‌ர்க‌ள் அவ‌மான‌ம் தாங்க‌மாட்டார்க‌ள்.அவ‌மான‌ப்ப‌டுத்தினால் தான் இவ‌ர்க‌ளின் சுய‌ரூப‌ம் தெரியும்.அத‌ன் பின் வீறுகொண்டு எழுந்து அவ‌மான‌ப்ப‌டுத்திய‌வ‌ன் முக‌த்தில் க‌றியைப்பூசி விடுவார்க‌ள்.(இத‌ற்கு புராணத்துட‌ன் சேர்ந்த‌ ஒரு க‌தையும் உள்ள‌து).

    புத‌ன் ம‌த்திய‌ நர‌ம்பும‌ண்டல‌த்தைக்குறிக்கும் கிர‌க‌ம் ஆதலால் ந‌ர‌ம்பு ச‌ம்ப‌ந்த‌மான‌ பிர‌ச்சினைக‌ளால் பாதிக்கப்படலாம்.

    ReplyDelete
  3. இன்று காந்தம்.

    துணிச்சலும் வேகமும் கொண்டவர்கள்

    யாருடனும் உடனே ஒட்டிக்கொள்வார்கள். புதியதை தொட்டு பார்ப்பார்கள்.

    இந்த குணம் ஐந்துக்கு உள்ளதால் 5 என்னில் பிறந்தவர்களை குறிப்பாக குழந்தைகளை நாம் கூடுதல் கவனம் எடுத்து கவனிக்க வேண்டும் .விளையாட்டைப் பார்த்தால் விளையாடுவான், நல்லதைப் பார்த்தால் உள் வாங்குவான், அதேபோல் தீயதை பார்த்தாலும் உள் வாங்குவான்.

    துணிச்சலும் வேகமும் கொண்ட நம் ஊர் காந்தங்கள் ;நேதாஜி, நேரு மாமா, பால கங்காதர திலகர்.

    ReplyDelete
  4. Rajaram said...புதன் கிரகத்தின் பகல் நேரவெப்பநிலை கிட்டத்தட்ட 470 டிகிரிக்கும் மேல்,இரவு நேரவெப்பநிலை மைனஸ் 182 டிகிரிக்கும் குறைவாக இருக்கும். நினைத்துப் பார்க்கவே எவ்வளவு பிரமிப்பாக இருக்கிறது. பூமியின் வெப்ப நிலை போல் 4 மடங்கு அதிகமாக இருக்கும் பகல்நேர வெப்பநிலை இரவில் அதற்கு நேர்மாறாக மைனஸ் 182 டிகிரி .பனிக்கட்டியின் உருகுநிலை வெப்பநிலையே வெறும் மைனஸ் 23 டிகிரி தான். மேலும் சூரியனில் இருந்து விழும் கற்கள் வேறு புதன் கிரகத்தின் மேற்பகுதியை ஒரு ஒழுங்கற்ற நிலப்பகுதியாக‌த் தோற்றுவிக்கின்றனவாம்///.

    நல்ல பகிர்வு. புதிய கோணத்தில் புதனின் அருமையான செய்தி.

    Rajaram said...புத‌ன் ஒரு நியூட்ர‌ல் பிளானெட்.குறிப்பாக‌ ஒருவ‌ர‌து சுய‌ ஜாத‌க‌த்தில் புத‌ன் சுப‌கிர‌க‌ங்க‌ளுட‌ன் சேர்ந்தால் சுப‌னாக‌வும்,பாவிக‌ளுட‌ன் சேர்ந்தால் பாவியாக‌வும் ப‌ல‌ன்க‌ளைத் த‌ருவார்.அது போல் புத‌ன் ஆதிக்க‌ம் நிறைந்த இந்த‌ எண்காரர்க‌ள் ஆளுக்குத்தகுந்தாற் போல் வேஷ‌ம் க‌ட்டுவ‌தில் வ‌ல்ல‌வ‌ர்க‌ள். ஒரு முழுக்கிறுக்க‌னோடு சேன்தால் அவ‌ன் என்னென்ன செய்வானோ அது அனைத்தையும் செய்வார்க‌ள்.ஒரு புத்திசாலியோடு சேர்ன்தால் த‌ன்னுடைய அதிமேதாவித் த‌ன‌த்தையெல்லாம் காட்டுவார்க‌ள்.
    எல்லோரோடும் ஒத்துப்போக‌க் கூடிய‌வ‌ர்க‌ள்.இவ‌ர்க‌ள் ஒரு ஜோக்க‌ர் மாதிரி யாரோடும் ஒட்டிக்கொள்வார்க‌ள்.

    ராஜாராம் அவர்களே நல்ல அலசல் .புதனையும் ஐந்தையும் ஒரே தராசில் இரண்டு தட்டில் வைத்து எடை போட்டது போல் உள்ளது.

    ReplyDelete
  5. நன்றி ஐயா, கவியரசர் கண்ணதாசன் மொழியில் சொல்லிவிட்டீர்கள், ஐந்தாம் எண் மனிதர்களின் குணநலன்கள் இனி மனதில் நன்கு பதிந்துவிடும் :)))

    இந்த ஐந்தாம் எண் பதிவின் ஒவ்வொரு வரிக்கும் மிகவும் பொருந்தக் கூடிய ஒரே மனிதர் என மனதில் தவிர்க்க முடியாமல் வருபவர் ஆப்பிள் புகழ் ஸ்டீவ் ஜாப்ஸ் மட்டுமே. அவருக்கு ஜாதகத்தில் புதனின் சுயவர்கப் பரல்கள் எட்டு. ஆனால் ....ஏனோ எண்கணிதத்தில் அவருக்கும் ஐந்திற்கும் எந்த தொடர்பும் இல்லையே!!! அவர் பிறவிஎண் 6 விதிஎண் 1.

    சோ அவர்களுக்கு பிறவி எண்ணும் விதிஎண்ணும் 5.

    ReplyDelete
  6. ////Blogger krishnan51972 said...
    very nice, I am in the boat./////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  7. ////Blogger Balamurugan Jaganathan said...
    அய்யா 5ம் எண்ணிற்கு உரிய பலனை பார்க்கும் போது நாம் வாங்கி வந்த வரம் அவ்வளவுதான் என்று சொல்லி மனதை தேத்த வேண்டி இருக்கு... ம்ம்ம்ம்ம்ம்ம்...... ஆயிரம் பொற்காசுகள் நமக்கில்லை...
    பதிவு மிகவும் அருமை அய்யா.. மிக்க நன்றி./////

    எதற்கு வருத்தம்? 337 டானிக்கில் ஒரு மொடக்கைக் குடித்துவிட்டு நிம்மதியாக இருங்கள்!:-)))))

    ReplyDelete
  8. /////Blogger Rajaram said...
    ஐயா,
    5ம் எண்ணைப் பற்றிய தகவல்கள் அனைத்துமே அருமை.அசத்திவிட்டீர்கள். எளிதில் உணர்ச்சிவசப்படக்கூடியவர்கள்,அதுவும் இவர்களது ஒரு வீக்னஸ். திடீரென்று உணர்ச்சிவசப்படும் இவர்கள் உடனடியாக நார்மலாக‌ மாறியும் விடுவார்கள்.
    ///இதைச் சற்று அறிவியல் ரீதியாகப் பார்த்தால் புதன் கிரகம் சூரியனைச் சுற்றியே கும்மியடிக்கும் கிரகம்.
    புதன் கிரகத்தின் பகல் நேரவெப்பநிலை கிட்டத்தட்ட 470 டிகிரிக்கும் மேல்,இரவு நேரவெப்பநிலை மைனஸ் 182 டிகிரிக்கும் குறைவாக இருக்கும். நினைத்துப் பார்க்கவே எவ்வளவு பிரமிப்பாக இருக்கிறது. பூமியின் வெப்ப நிலை போல் 4 மடங்கு அதிகமாக இருக்கும் பகல்நேர வெப்பநிலை இரவில் அதற்கு நேர்மாறாக மைனஸ் 182 டிகிரி .பனிக்கட்டியின் உருகுநிலை வெப்பநிலையே வெறும் மைனஸ் 23 டிகிரி தான். மேலும் சூரியனில் இருந்து விழும் கற்கள் வேறு புதன் கிரகத்தின் மேற்பகுதியை ஒரு ஒழுங்கற்ற நிலப்பகுதியாக‌த் தோற்றுவிக்கின்றனவாம்///.
    \\\சுருக்கமாகச் சொன்னால், இந்த எண்காரர்கள் யாருடனும் எளிதில் நட்புக் கொள்ளக்கூடியவர்கள். யாராலும் எளிதில் விரும்பப்படக்கூடியவர்கள். எதையும் ரசிக்கக்கூடியவர்கள். எதையும் செய்து முடிக்கக்கூடியவர்கள். சீட்டுக் கட்டில் உள்ள ஜோக்கரைப் போன்றவர்கள் இவர்கள். ஆட்டத்தில் அது எந்தச் சீட்டுடனும் சேர்வதைப் போல இவர்களும் யாருடனும் சேர்ந்து பணியாற்றக்கூடியவர்கள்\\\.
    புத‌ன் ஒரு நியூட்ர‌ல் பிளானெட்.குறிப்பாக‌ ஒருவ‌ர‌து சுய‌ ஜாத‌க‌த்தில் புத‌ன் சுப‌கிர‌க‌ங்க‌ளுட‌ன் சேர்ந்தால் சுப‌னாக‌வும்,பாவிக‌ளுட‌ன் சேர்ந்தால் பாவியாக‌வும் ப‌ல‌ன்க‌ளைத் த‌ருவார்.அது போல் புத‌ன் ஆதிக்க‌ம் நிறைந்த இந்த‌ எண்காரர்க‌ள் ஆளுக்குத்தகுந்தாற் போல் வேஷ‌ம் க‌ட்டுவ‌தில் வ‌ல்ல‌வ‌ர்க‌ள். ஒரு முழுக்கிறுக்க‌னோடு சேன்தால் அவ‌ன் என்னென்ன செய்வானோ அது அனைத்தையும் செய்வார்க‌ள்.ஒரு புத்திசாலியோடு சேர்ன்தால் த‌ன்னுடைய அதிமேதாவித் த‌ன‌த்தையெல்லாம் காட்டுவார்க‌ள்.
    எல்லோரோடும் ஒத்துப்போக‌க் கூடிய‌வ‌ர்க‌ள்.இவ‌ர்க‌ள் ஒரு ஜோக்க‌ர் மாதிரி யாரோடும் ஒட்டிக்கொள்வார்க‌ள்.
    ந‌கைச்சுவை உண‌ர்வு அதிக‌ம் நிர‌ம்பிய‌வ‌ர்க‌ள்.க‌ல‌க‌ல‌ப்பான‌ ஆசாமிக‌ள்.இவ‌ர்க‌ளை ஏமாற்றுவ‌து மிக‌வும் சுல‌ப‌ம். ஆனால் ஒருமுறை ஏமாந்தால் அதற்குப்பின் சுதாரித்துவிடுவார்க‌ள்.அன்த‌ ஒரு ஏமாற்ற‌த்தை வாழ்க்கையின் ஒவ்வொரு க‌ண‌த்திலும் நினைத்து வ‌ருந்துவார்க‌ள்.
    மிதுன‌ம்,க‌ன்னி ஆகிய‌ ராசிக‌ளும்,ஆயில்ய‌ம்,கேட்டை,ரேவ‌தி ந‌ட்ச‌த்திர‌ங்களும் புத‌னின் க‌ட்டுப்பாட்டில் உள்ளவை.இவ‌ர்க‌ளிட‌மும் இத்த‌கைய‌ குணங்க‌ள் நிறைந்து காண‌ப்ப‌டும்.இதில் மிதுன‌ம் யாரிட‌மும் ப‌ழ‌கும் முன்பு த‌ராத‌ர‌ம் பார்க்கும்,க‌ன்னி எதையும் பார்க்காது.
    ப‌ல‌வ‌கையான திற‌மைக‌ளுட‌ன் இருப்ப‌ர்.இவ‌ர்க‌ள் தூண்டினால் ம‌ட்டுமே எரியும் தீப‌ம் போல் இவ‌ர்க‌ளைத் தூண்ட‌ எப்போதும் ஒரு தூண்டுகோல் தேவை.இவ‌ர்க‌ள் அவ‌மான‌ம் தாங்க‌மாட்டார்க‌ள்.அவ‌மான‌ப்ப‌டுத்தினால் தான் இவ‌ர்க‌ளின் சுய‌ரூப‌ம் தெரியும்.அத‌ன் பின் வீறுகொண்டு எழுந்து அவ‌மான‌ப்ப‌டுத்திய‌வ‌ன் முக‌த்தில் க‌றியைப்பூசி விடுவார்க‌ள்.(இத‌ற்கு புராணத்துட‌ன் சேர்ந்த‌ ஒரு க‌தையும் உள்ள‌து).
    புத‌ன் ம‌த்திய‌ நர‌ம்பும‌ண்டல‌த்தைக்குறிக்கும் கிர‌க‌ம் ஆதலால் ந‌ர‌ம்பு ச‌ம்ப‌ந்த‌மான‌ பிர‌ச்சினைக‌ளால் பாதிக்கப்படலாம்.///

    நீண்டபின்னூட்டத்திற்கும் கருத்துப்பகிர்விற்கும் நன்றி நண்பரே!

    ReplyDelete
  9. /////Blogger thanusu said...
    இன்று காந்தம்.
    துணிச்சலும் வேகமும் கொண்டவர்கள்
    யாருடனும் உடனே ஒட்டிக்கொள்வார்கள். புதியதை தொட்டு பார்ப்பார்கள்.
    இந்த குணம் ஐந்துக்கு உள்ளதால் 5 என்னில் பிறந்தவர்களை குறிப்பாக குழந்தைகளை நாம் கூடுதல் கவனம் எடுத்து கவனிக்க வேண்டும் .விளையாட்டைப் பார்த்தால் விளையாடுவான், நல்லதைப் பார்த்தால் உள் வாங்குவான், அதேபோல் தீயதை பார்த்தாலும் உள் வாங்குவான்.
    துணிச்சலும் வேகமும் கொண்ட நம் ஊர் காந்தங்கள் ;நேதாஜி, நேரு மாமா, பால கங்காதர திலகர்./////

    கப்பலில் ப்ளாக் படிப்பதுதான் வேலையா?:-))))

    ReplyDelete
  10. /////Blogger thanusu said...
    Rajaram said...புதன் கிரகத்தின் பகல் நேரவெப்பநிலை கிட்டத்தட்ட 470 டிகிரிக்கும் மேல்,இரவு நேரவெப்பநிலை மைனஸ் 182 டிகிரிக்கும் குறைவாக இருக்கும். நினைத்துப் பார்க்கவே எவ்வளவு பிரமிப்பாக இருக்கிறது. பூமியின் வெப்ப நிலை போல் 4 மடங்கு அதிகமாக இருக்கும் பகல்நேர வெப்பநிலை இரவில் அதற்கு நேர்மாறாக மைனஸ் 182 டிகிரி .பனிக்கட்டியின் உருகுநிலை வெப்பநிலையே வெறும் மைனஸ் 23 டிகிரி தான். மேலும் சூரியனில் இருந்து விழும் கற்கள் வேறு புதன் கிரகத்தின் மேற்பகுதியை ஒரு ஒழுங்கற்ற நிலப்பகுதியாக‌த் தோற்றுவிக்கின்றனவாம்///.
    நல்ல பகிர்வு. புதிய கோணத்தில் புதனின் அருமையான செய்தி.
    Rajaram said...புத‌ன் ஒரு நியூட்ர‌ல் பிளானெட்.குறிப்பாக‌ ஒருவ‌ர‌து சுய‌ ஜாத‌க‌த்தில் புத‌ன் சுப‌கிர‌க‌ங்க‌ளுட‌ன் சேர்ந்தால் சுப‌னாக‌வும்,பாவிக‌ளுட‌ன் சேர்ந்தால் பாவியாக‌வும் ப‌ல‌ன்க‌ளைத் த‌ருவார்.அது போல் புத‌ன் ஆதிக்க‌ம் நிறைந்த இந்த‌ எண்காரர்க‌ள் ஆளுக்குத்தகுந்தாற் போல் வேஷ‌ம் க‌ட்டுவ‌தில் வ‌ல்ல‌வ‌ர்க‌ள். ஒரு முழுக்கிறுக்க‌னோடு சேன்தால் அவ‌ன் என்னென்ன செய்வானோ அது அனைத்தையும் செய்வார்க‌ள்.ஒரு புத்திசாலியோடு சேர்ன்தால் த‌ன்னுடைய அதிமேதாவித் த‌ன‌த்தையெல்லாம் காட்டுவார்க‌ள்.
    எல்லோரோடும் ஒத்துப்போக‌க் கூடிய‌வ‌ர்க‌ள்.இவ‌ர்க‌ள் ஒரு ஜோக்க‌ர் மாதிரி யாரோடும் ஒட்டிக்கொள்வார்க‌ள்.
    ராஜாராம் அவர்களே நல்ல அலசல் .புதனையும் ஐந்தையும் ஒரே தராசில் இரண்டு தட்டில் வைத்து எடை போட்டது போல் உள்ளது./////

    நல்லது. நன்றி தனுசு! (இது ராஜாராமின் சார்பாக்!)

    ReplyDelete
  11. ////Blogger தேமொழி said...
    நன்றி ஐயா, கவியரசர் கண்ணதாசன் மொழியில் சொல்லிவிட்டீர்கள், ஐந்தாம் எண் மனிதர்களின் குணநலன்கள் இனி மனதில் நன்கு பதிந்துவிடும் :)))
    இந்த ஐந்தாம் எண் பதிவின் ஒவ்வொரு வரிக்கும் மிகவும் பொருந்தக் கூடிய ஒரே மனிதர் என மனதில் தவிர்க்க முடியாமல் வருபவர் ஆப்பிள் புகழ் ஸ்டீவ் ஜாப்ஸ் மட்டுமே. அவருக்கு ஜாதகத்தில் புதனின் சுயவர்கப் பரல்கள் எட்டு. ஆனால் ....ஏனோ எண்கணிதத்தில் அவருக்கும் ஐந்திற்கும் எந்த தொடர்பும் இல்லையே!!! அவர் பிறவிஎண் 6 விதிஎண் 1.
    சோ அவர்களுக்கு பிறவி எண்ணும் விதிஎண்ணும் 5.////

    எண் கணிதத்தின் தாக்கத்தைவிட, சுயவர்க்கத்தில் உள்ள 8 பரல்களின் தாக்கம் அதிகம்! அதனால்தான் அவர் பொருந்திவருகிறார்!

    ReplyDelete
  12. பச்சை பச்சையாய் வந்த
    பதிவில் எல்லாம் சரி காதலை தவிர

    பத்தாம் அதிபதியாக புதன் அமைந்தால்
    பார்த்துச் சொல்ல மைனர் தான் வரணும்

    மரகத கல் மோதிரத்தை
    மயக்கத்தில் உள்ள சுன்டு விரலில் தானே

    வெள்ளியில் போட்டால்
    விலை குறைவாம்

    தங்கமென்றால் என்ன
    தலையா சுற்றுகிறது..

    தங்க தட்டிலும்
    தரமான வெள்ளி தட்டிலும் சாப்பிட

    வேண்டுகோள் விடுத்தோம்
    வேடிக்கையாக கொள்ளாமல்

    வியக்க வைக்கும் படி
    விருந்து படைக்க வேணும்

    அதுவரையில்..
    அன்பு வணக்கங்களுடன்

    அய்யர்

    ReplyDelete
  13. ஐயா,
    நான் எல்லாவ‌ற்றிலும் புத‌ன் ஆதிக்க‌ம் தான்.ராசி க‌ன்னி, பிற‌ந்த‌ தேதி-5,கிழ‌மை-புத‌ன், ந‌வாம்ச‌ ச‌ந்திர‌னும் மிதுன‌த்தில்.ஆனால் விதி எண் 3ஐ அனுச‌ரித்தே வ‌ருகிற‌து. என்னுடைய‌ ப‌ல‌ விஷ‌ய‌ங்க‌ளில் 3ம் எண் தான் ஆதிக்க‌ம் செலுத்துகிற‌து.ஆனால் 5 க்குரிய‌ குணங்க‌ளும் தென்ப‌டும்.
    புதன் ஆதிக்கம் நிறைந்தவர்கள் வாசிப்பதில் அதிகம் ஆர்வமுடையவர்கள்.எப்போதும் புத்தகமும்,கையுமாக அலைவார்கள்.அதிலும் எந்த ராசி, நட்சத்திரமாகயிருந்தாலும் நவாம்ச சந்திரன் மிதுனம்,கன்னியில் அமையப்பெற்றவர்கள் நன்கு படித்தவர்களாகவும் நல்லப்பேச்சுத்திறமை,எழுத்து,படிப்புத்திறமையும் உடையவர்களாகவும் உள்ளனர்.குறிப்பாக மிதுனம்,கன்னி ராசியில் பிறந்து நவாம்ச சந்திரனும் மிதுனம்,கன்னியில் அமையப்பெற்றால் (புனர்பூசம்-3ம் பாதம்,ஹஸ்தம்-3ம் பாதம்,சித்திரை-2ம் பாதம் இந்த நட்சத்திரப்பாதம் உடையவர்களுக்கு அமையும்)முழு நேரப்புத்தகப் புழுக்களாகவே இருக்கின்றனர்.அதாவது குப்பைத்தொட்டியில் ஒரு பேப்பர் கிடந்தாலும் எடுத்துப் படிப்பார்கள்.அதை நானும் செய்திருக்கிறேன்.எத்தனையோ பேர் கேலியும் செய்திருக்கின்றனர்.

    கணிதப்புலமையும் அதிகம்,மற்றவர்கள் கால்குலேட்டர் உதவியுடன் போடும் கணக்குகளைக் கூட மனக்கணக்கில் போட்டுவிடுவர்.

    ReplyDelete
  14. This comment has been removed by the author.

    ReplyDelete
  15. அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு,
    என் நண்பர் ஐந்தாம் தேதியில் பிறந்தவர்.
    தாங்கள் கொடுத்துள்ள பலன்கள்
    பெரும்பகுதி அவருக்கு பொருந்தி வருகிறது.
    பிறந்த தேதி தெரியாதவர்களுக்கு ஐந்தாம் எண்ணில் பெயர் வைக்கலாம், என்று படித்த ஞாபகம்.
    நன்றி!!

    ReplyDelete
  16. Guru Vanakkam,

    my daughter falls under this catg.
    she is just 12 for her age she has done so many things in art and culture. Completed arangetram in bharatanatyam, Gold medal winner in Tap and Ballet, A very good vocalist and trained in piano and Violin. She also reginal winner in spelling bee competetions and interested in journalism

    No.5 has a magic, I belive.

    Regards
    RAMADU

    ReplyDelete
  17. என்னுடைய பிறந்த தேதி 14. நீங்கள் கூறியது அனைத்தும் பொருந்துகிறது. கொஞ்சம் பொறுமைதான் மிகக் குறைவு.
    -ஜவகர் கோவிந்தராஜ்

    ReplyDelete
  18. மிக அருமையான பதிவு. என் கணவரின் எண் ஐந்துதான். நீங்கள் குறிப்பிட்டு உள்ளவற்றில் பெரும்பாலனவை என் கணவரின் குணாதிசங்களில் ஒத்து போகிறது.
    தோல்வி பிடிக்காது. technical விஷயங்களில் ரொம்ப ஈடுபாடு . செயலில் வேகம், பேச்சை விட.(நமக்கு பேச்சில் வேகம், எண் இரண்டு ஆயிrறே).
    எனக்கு தெரிந்த வரை தானாக யாரிடமும் சென்று பேச மாட்டார். பழகிய நண்பர்களுக்கு முக்கியாமான நண்பராய் இருப்பார். டக் டகென்று problem solve செய்வார்.
    குடும்ப விஷங்களில் மட்டும் காலம் பண்ணுவார். சமைப்பதை சாப்பிடுவார். ஆனால் வித விதமாக சமைத்தால் முகத்தில் மலர்ச்சி இருக்கும். But I reached his heart through
    my talk whereas sustained through his stomach and mind. Need to serve his mind with different talks, different disciplines. Need to read and gather more info and knowledge. கோபம் எபோதாவது வரும். சீகிரமும் போய் இருக்கும். ஆனால் அதற்கான காரணத்தை மறக்க மாட்டார். loose talk-யும் ஞாபகம் வெச்சி இருப்பார். அது கொஞ்சம் dangerous.

    -kalai seaatle

    ReplyDelete
  19. //////இந்த ஐந்தாம் எண் பதிவின் ஒவ்வொரு வரிக்கும் மிகவும் பொருந்தக் கூடிய ஒரே மனிதர் என மனதில் தவிர்க்க முடியாமல் வருபவர் ஆப்பிள் புகழ் ஸ்டீவ் ஜாப்ஸ் மட்டுமே. அவருக்கு ஜாதகத்தில் புதனின் சுயவர்கப் பரல்கள் எட்டு. ஆனால் ....ஏனோ எண்கணிதத்தில் அவருக்கும் ஐந்திற்கும் எந்த தொடர்பும் இல்லையே!!! அவர் பிறவிஎண் 6 விதிஎண் 1./////

    சாரி டு சே திஸ்.

    அஞ்சுக்கு ஒன்று,ஆறுக்குறிய தலைமைப் பண்புகள் மிஸ்ஸிங்..

    அதுதான் ஸ்டீவ் ஜாபின் அவரின் தனித்தன்மையை வெளிக்காட்டிய விஷயமாக இருக்க முடியும் ..

    அஞ்சு ஆட்களுக்கு இயல்பாகவே எதிர்பார்த்த நல்ல விஷயங்கள் நடந்துவிடும் காரணத்தால் போராடி ஒன்றை இலக்கு நிர்ணயித்து சாதித்ததாகப் பெருமை கொள்ளும் அளவுக்கு வாய்ப்புகள் வாழ்வில் வழங்கப்படுவதில்லை என்பதால் தனித்தன்மை,தலைமைப் பண்புகள் என்பதைத்தவிர்த்து அதிர்ஷ்டக்காரர்கள் என்பதே பொருத்தமாக இருக்கும்..

    ReplyDelete
  20. //////அய்யர் said...
    பச்சை பச்சையாய் வந்த
    பதிவில் எல்லாம் சரி காதலை தவிர

    பத்தாம் அதிபதியாக புதன் அமைந்தால்
    பார்த்துச் சொல்ல மைனர் தான் வரணும்////////

    அஸ்ட்ராலஜியையும் நுமேராலாஜியையும் இணைத்துப்பார்த்தால் குழப்பம்தான் வரும்..
    முடிந்தவரை தவிர்ப்பதே நல்லது..

    நுமேராலாஜி ஃபில்ட்டேர்ட்
    கன்டென்ட்..என்பதே எனது கணிப்பு..

    ReplyDelete
  21. ///RAMADU Family said...
    Guru Vanakkam,

    my daughter falls under this catg.
    she is just 12 for her age she has done so many things in art and culture. Completed arangetram in bharatanatyam, Gold medal winner in Tap and Ballet, A very good vocalist and trained in piano and Violin. She also reginal winner in spelling bee competetions and interested in journalism

    No.5 has a magic, I belive.

    Regards
    RAMADU////

    மிகவும் அருமை, கேட்கும் போதே இனிமையாக இருக்கிறது...
    தங்களின் ஜாதகத்தில் ஐந்தாம் இடத்தில் நல்ல கிரகம் அமர்ந்தோ பார்வைபெற்றோ இருக்க வேண்டும்.

    எங்களது இதயம் கணிந்தப் பாராட்டுக்களும், வாழ்த்துக்களையும் உங்கள் பெண்ணிற்கு உரியதாக்குங்கள். ராமுடு சார்.

    ReplyDelete
  22. ஐந்தாம் எண்ணின் அதிசயங்களை அறியத் தந்த ஆசிரியர் ஐயாவிற்கு நன்றிகள் பல.

    ReplyDelete
  23. //அஞ்சு ஆட்களுக்கு இயல்பாகவே எதிர்பார்த்த நல்ல விஷயங்கள் நடந்துவிடும் காரணத்தால் போராடி ஒன்றை இலக்கு நிர்ணயித்து சாதித்ததாகப் பெருமை கொள்ளும் அளவுக்கு வாய்ப்புகள் வாழ்வில் வழங்கப்படுவதில்லை என்பதால் தனித்தன்மை,தலைமைப் பண்புகள் என்பதைத்தவிர்த்து அதிர்ஷ்டக்காரர்கள் என்பதே பொருத்தமாக இருக்கும்..//

    நூற்றுக்கு நூறு உண்மை. என் அண்ணா, ஜஸ்ட், நாலு நிமிஷம் படிச்சுட்டு வாங்கின மார்க்கை நான் நாலு நாள் படிச்சுத்தான் வாங்கினேன். (டார்கெட் அவர் மார்க்கை மீறி வாங்குறதுதான்.)
    ஐந்தாம் நம்பரில் ஆன்மீகப் பிரபலங்களும் உண்டே. பகவான் ஸ்ரீசத்ய சாயி பாபா (நவம்பர் 23) .

    ReplyDelete
  24. ///ஐந்தாம் நம்பரில் ஆன்மீகப் பிரபலங்களும் உண்டே. பகவான் ஸ்ரீசத்ய சாயி பாபா (நவம்பர் 23) .///

    ஓசை தரும் அஞ்செழுத்து என
    ஒப்பில்லா மெய்கண்ட சாத்திரமும்

    அஞ்சுபதம் சொல்லி என
    அப்பர் சுவாமிகளின் தேவாரமும்

    அந்தியில் மந்திரம்
    அஞ்செழுத்தே என சம்பந்தரும்

    பாசம் நிறைந்த பாமரரும் சொல்லும்
    பஞ்சாட்ஷரமும் அஞ்செழுத்தே

    அய்யரின் எண்ணத்தில் வந்த
    அக்னி ஸ்டீல் விளம்பரமும்

    அஞ்சைக் கொண்டே..
    அஞ்சு கோட்டை கொண்டு வருவதை

    வளைத்தாலும் வளையும்
    வளைக்காமல் நீட்டினாலும் நிமிரும்

    எட்டுதா ஏதேனும் அறிவுக்கு என
    எட்டை நோக்கி காத்திருக்கின்றோம்

    ReplyDelete
  25. ///அஸ்ட்ராலஜியையும் நுமேராலாஜியையும் இணைத்துப்பார்த்தால் குழப்பம்தான் வரும்..
    முடிந்தவரை தவிர்ப்பதே நல்லது..

    நுமேராலாஜி ஃபில்ட்டேர்ட்
    கன்டென்ட்..என்பதே எனது கணிப்பு...///

    சரி தான் மைனர் வால்
    மருத்துவத்தில்

    அலோபதி, ஹோமியோபதி, சித்தா, யுனானி, ரெய்கி, சைக்கோ, மலர், இயற்கை, கிளி, முயல் என பல

    எல்லாவற்றிலுமா ஆலோசனை பெறுவது?

    யாருக்கு எதுவோ
    அவருக்கு அதுவே..

    அது சரி..
    இந்த முறை சோதிடத்தை விரும்புபவர் என செல்லவரும் சோதிடமும் உண்டோ..?

    ReplyDelete
  26. பச்சை நிறமே, பச்சை நிறமே.................. இன்னிக்கு நம்ம நம்பர்!!! என் மகனுக்கும் அதே.

    முன்னரே பின்னூட்டத்தில் குறிப்பிட்டது போல பிறந்த தேதி 5 , தேதி, மாதம், வருடங்களின் கூட்டுத்தொகை ஐந்து, பிறந்தது புதன்கிழமை, பெயரின் கூட்டுத்தொகை (திருமணத்திற்கு முன்பும், பின்பும்) ஐந்து, நட்சத்திரம் கேட்டை, அதுவும் புதனின் நட்சத்திரம் என எல்லாமே புதன் ஆதிக்கம்தான். ஜாதகத்தில் ஆறு, ஒன்பதுக்கு அதிபதியாக, லக்ன / தனாதிபதியான சனியுடன் (நட்புக்கிரகம்) சேர்ந்து ஆறில் ஆட்சி, இந்தக் கூட்டணிக்கு குருவின் ஐந்தாம் பார்வை. நவாம்சத்தில் நட்புக்கிரகமான சனியின் வீட்டில் (கும்பத்தில்).

    ReplyDelete
  27. இந்த எண்காரர்கள் எதையும் துணிச்சலோடு எதிர்கொள்ளக்கூடியவர்கள்.வடிவேல் மொழியில் சொன்னால் ரிஸ்க் எடுப்பது இவர்களுக்கு ரஸ்க் சாப்பிடுவதைப் போன்றது. முடியாதது என்பதே இவர்கள் அகராதியில் கிடையாது. எதையும் உற்சாகத்தோடு முயன்று பார்ப்பார்கள்.தங்கள் புத்திசாலித்தனத்தால் முடித்தும் காட்டுவார்கள்//

    உண்மை, எதையும் முயன்று பார்க்காமல் முடியாது என்று சொல்லமாட்டேன், கடைசி முயற்சி வரை (வெற்றியோ, தோல்வியோ) திரும்பமாட்டேன். அதுவும் யாராவது சவால் விட்டால் கேட்கவே வேண்டாம். அதை அசட்டு தைரியம் என்று கூட சொல்வார்கள். இப்போது நினைத்துப்பார்த்தால் கூட மலைப்பாக இருக்கும் ஏகப்பட்ட பிரச்சனைகளைத் தைரியமாக எதிர்கொண்டு வெற்றியும் பெற்றிருக்கிறேன். எந்தப் பிரச்சனையிலும் இதுவரை பின்வாங்கியது இல்லை.

    இவர்களுடைய புத்திசாலித்தனம் மின்னல் வேகத்தில் வேலை செய்யும்.//

    ரொம்ப புகழாதீங்க சார்!! கூச்சமா இருக்கு ஹி ஹி!!

    மற்றவர்களுக்கு மாதக் கணக்கில் யோசித்து முடிவெடுக்கும் யோசனைகள் (ஐடியாக்கள்) இவர்களுக்கு நொடியில் தோன்றும். //

    இது உண்மையோ உண்மை!!!! அப்படியே ஐடியா சும்மா அருவி மாதிரி பாய்ந்து வரும். நிறைய ஐடியாக்களை டாகுமென்ட் செய்தும் வைத்திருக்கிறேன் (எப்பவாவது உபயோகப்படும்).

    இந்த எண்காரர்கள் மன வலிமை கொண்டவர்கள்.//

    100 %.

    சிந்தனைகள், எண்ணங்கள், செயல்பாடுகள் என்று எல்லாவற்றிலும் ஒரு வேகம் இருக்கும்.//

    இதுவும் உண்மை. எந்த வேலையாக இருந்தாலும் சீக்கிரம் அதை முடித்துவிட்டு வெளியே வந்துவிடவேண்டும், அதே நேரம் ஏனோதானோவென்றும் செய்யமாட்டேன். எல்லாவற்றிலும் perfection இருக்கும்.

    அந்தக் குணத்தால், பணம் பண்ணுவதில் ஒரு வல்லமை இருக்கும்.//

    இதுவரை இந்த ஆட்டத்தை ஆரம்பிக்கவில்லை, ஆனால் ஆரம்பிக்கும் எண்ணமிருக்கிறது. சனிபகவானை நம்ம ராசிலேர்ந்து அனுப்புவதற்காகக் காத்திருக்கிறேன்!!!

    ReplyDelete
  28. இந்த எண்காரர்களுக்குப் பங்குச்சந்தை ஒரு சிறப்பான ஏற்றத்தைக் கொடுக்கும். //

    இதை என் ஜாதகத்தைப்பார்த்த நிறைய பேர் சொல்லியிருக்கிறார்கள் (ஆலாசியம் உட்பட). பதினொன்றில் நீச்ச சந்திரனும், உச்ச ராகுவும், இதற்கு ஏற்ற அமைப்பு. ஆனால் இன்றும், என்றும் அதில் நுழையும் எண்ணமில்லை. என் பாலிசிப்படி உழைத்து வரும் பணத்தை மட்டுமே விரும்புவதால் இதில் ஆர்வமில்லை.

    வீக்னெஸ் இல்லாமல் இருக்குமா? ஒரு காரியம் ஆகவில்லை என்றால் சீக்கிரம் தளர்ந்து போய்விடுவார்கள். மனப் போராட்டம் வந்தால் தங்களை இழந்துவிடுவார்கள். தாங்கமாட்டார்கள்//

    இது உண்மை என்றாலும் அதிலிருந்து விரைவில் வெளியேயும் வந்துவிடுவேன். ஜாதகத்தில் புதன் / சந் முறையே 5 / 6 பரல்களுடன். கவலைப்பட்டாலும் எல்லாம் ஒரு ஸ்டேஜ் வரைதான். அதன்பின் 'தலைக்கு மேலே வெள்ளம் போனா சாணென்ன முழமென்ன' அப்படின்னு பாட்டுதான்!!!!! அதேபோல் எவ்வளவு மனவருத்தம் என்றாலும் ஏதாவது பிடித்த பாட்டு மண்டைக்குள் ஓடிக்கொண்டேயிருக்கும்!!!

    மற்றவர்களின் முட்டாள்தனத்தையும் இவர்களால் பொறுத்துக்கொள்ள முடியாது.//

    இதுவுமிருக்கிறது!!!

    ReplyDelete
  29. இந்த எண்காரர்களுக்குப் புதுப்புது புத்திசாலித்தனமான எண்ணங்கள் தோன்றும் யோசனைகள் வரும். //

    உதாரணத்திற்கு ஒண்ணே ஒண்ணு எடுத்துவிடுகிறேன்!!

    ஞாயிறன்று பூரி / பாலக் பனீர் செய்யலாம் என பாலக்கை வேகவைத்துவிட்டுப் பார்த்தால் அளவு மிகவும் குறைவாக இருந்தது. என் கணவரும் சும்மா இருக்காமல் இது எப்படி எல்லாருக்கும் போதும் என்று குழப்பிவிட மின்னல் வேகத்தில் மூளை வேலை செய்தது. கணவரிடம் எல்லாம் போதும், சாப்பிடும்போது பாருங்கோ என்று அனுப்பிவிட்டு ரெண்டு நாள் முன்பு செய்திருந்த கொத்துமல்லித் தொகை கொஞ்சம் கலந்துவிட்டேன் (ரெண்டுமே பச்சையாதானே இருக்கும், கண்டிபிடிக்க முடியாதுல்ல, ஹிஹி). ஆனாலும் இத்தனை வருடங்களாக என்னுடன் கூட இருந்து புத்திசாலித்தனம் வந்துவிட்டதால் சாப்பிடும்போது கண்டுபிடித்துவிட்டார். இப்ப அதால என்ன, taste நல்லா இருக்கா இல்லையா என்று கேட்கவும், தலையில் அடித்துக்கொள்ளாத குறையாகச் சாப்பிட்டு எழுந்தார்.

    அதன் காரணமாகப் புதுப்புது வியாபாரங்களையும், தொழில்களையும் விரும்பிச் செய்வார்கள். தோல்வியைப் பற்றிய பயமே இருக்காது. எதையும் ஒருகை பார்ப்போம் என்று இறங்குவார்கள். இறங்கி முழுவேகத்துடன் செய்வார்கள்//

    எப்போது பார்த்தாலும் வியாபாரம் / தொழில் பற்றிய ஐடியாவே ஓடிக்கொண்டிருக்கும். கூடிய விரைவில் (????!!!!) இறங்கும் எண்ணமும் இருக்கிறது.

    ReplyDelete
  30. மாற்றத்தை விரும்புவார்கள். அன்றாட வேலைகள் ஒன்று போலிருந்தால், சீக்கிரம் போரடித்துவிடும் bored by routine. உணவு, உடை, போன்ற நடைமுறை விஷயங்களில்கூட அடிக்கடி மாற்றங்களைச் செய்வார்கள்//

    சரி!

    நிறைய செலவும் செய்வார்கள்.//

    நான் செலவாளி கிடையாது, எது அவசியமோ அதற்கு மட்டுமே செலவு செய்வேன், இன்னும் சொன்னால் நான் வாழ்வது, விரும்புவது எளிமையான வாழ்க்கையையே. ஆடம்பரப்பொருட்கள் மீது சிறிதும் விருப்பம் கிடையாது. ஒருவேளை லக் அதிபதி சனி காரணமாக இருக்கலாம்.

    இந்த எண்காரர்கள் சீக்கிரம் காதலில் விழக்கூடியவர்கள் (fall in love). //

    இதுவும் பொருந்தவில்லை. நட்பில் கூட நான் ரொம்ப choosy , எல்லோரிடமும் ஆத்மார்த்தமாக, கலகலப்பாகப் பழகினாலும் எனக்கு மிகவும் பிடித்திருந்து, என் குணநலன்களுடன் ஒத்துப்போகிறவர்களுடன் மட்டுமே நெருக்கமாகப் பழகுவேன். அவர்களின் ஒரு குணநலன் என் பாலிசியுடன் ஒத்துப்போகாது என்று தெரிந்தாலும் கொஞ்சம் விலகியே இருப்பேன்.

    சுருக்கமாகச் சொன்னால், இந்த எண்காரர்கள் யாருடனும் எளிதில் நட்புக் கொள்ளக்கூடியவர்கள். யாராலும் எளிதில் விரும்பப்படக்கூடியவர்கள். எதையும் ரசிக்கக்கூடியவர்கள்.//

    சரி!

    ReplyDelete
  31. நீங்கள் எழுதிய மேலதிகத் தகவல்களும் பொருந்துகின்றன. என் பையனிடமும் எல்லா குணநலன்களும் இருக்கின்றன.

    இப்போது வீக்னெஸ்:

    என் தாத்தா அடிக்கடி சொல்வார். எந்தத் துறையாக இருந்தாலும் அதில் உன்னால் shine பண்ணமுடியும் என்று. அது உண்மை என்பதை நான் உணர்ந்திருக்கிறேன், இருப்பினும் நிறைய துறைகளில் எனக்கு ஆர்வம் கிடையாது, அதனால் அதைத் தெரிந்துகொள்ள முயற்சியும் மேற்கொண்டதில்லை (குறிப்பாக டெக்னிகல் விஷயங்கள்). எனக்கு ஆர்வம் இருந்தால் மட்டுமே நுழைவேன்.

    எப்போது பார்த்தாலும் ஏதோ சிந்தனை / யோசனை மூளையில் ஓடிக்கொண்டே இருக்கும். செயல்படுத்துவதில்தான் சிக்கல். நானாகப்போய் handle செய்யும் விஷயங்களைவிட என் தலைக்குமேல் தொங்கிக்கொண்டிருக்கும் விஷயங்களை handle செய்வதில் என் திறமை பளிச்சிடுவதைப்பார்த்துள்ளேன்.

    அடுத்து ராஜதந்திரம் வராத ஒன்று. எல்லோரிடமும் தன்மையாகவே பேசுவேன் என்றாலும் சில சமயம் எதிராளி எகிறினால் நானும் ஒரு கட்டத்திற்கு மேல் எகிறிவிடுவேன். (இரண்டு மூன்று அலுவலகங்களில் எம்.டி. இடமே 'நீயாச்சு, உன் வேலையாச்சு' என்று பேசிவிட்டு வெளியில் வந்த அனுபவமும் இருக்கிறது). சுயமரியாதை பங்கப்படும் எந்த இடத்திலும் அதற்குமேல் இருப்பதில்லை. எதுவாக இருந்தாலும் முகத்திற்கு நேராகவே சொல்லிவிடுவது (அவர்கள் மனம் புண்படாவண்ணம்). எதுவும் சொல்லவேண்டாம் என்று தோன்றினால் அங்கிருந்து நகர்ந்துவிடுவேன். வாயால் பேசுவதைவிட செயலில் காண்பிப்பது அதிகம்.

    ReplyDelete
  32. /// Uma said...
    இந்த எண்காரர்களுக்குப் பங்குச்சந்தை ஒரு சிறப்பான ஏற்றத்தைக் கொடுக்கும். //

    இதை என் ஜாதகத்தைப்பார்த்த நிறைய பேர் சொல்லியிருக்கிறார்கள் (ஆலாசியம் உட்பட). பதினொன்றில் நீச்ச சந்திரனும், உச்ச ராகுவும், இதற்கு ஏற்ற அமைப்பு. ஆனால் இன்றும், என்றும் அதில் நுழையும் எண்ணமில்லை. என் பாலிசிப்படி உழைத்து வரும் பணத்தை மட்டுமே விரும்புவதால் இதில் ஆர்வமில்லை///

    பங்கு சந்தையில் உழைப்பில்லை என
    சங்கடித்து சொன்னது யார்..

    அது ஒரு தொழில்
    முதல் போட்டு லாபத்தினை எதிர் நோக்கி நட்டமும் பெறும் நல்லதொரு தொழில்..

    இன்னொரு முறை உழைப்பில்லா வருமானம் என சொல்லாதீர்கள்..

    அரசுத் துறைகளில் பணிசெய்பவர்கள் (சிலரை) நாம் அப்படி சொல்ல விரும்புவதில்லை தானே..

    பிச்சை எடுப்பதிலும் பிறரிடமிருந்து
    பிடுங்கி திண்பதிலும் உழைப்பு உள்ளது தோழியே...

    ReplyDelete
  33. எளிதில் உணர்ச்சிவசப்படக்கூடியவர்கள்,அதுவும் இவர்களது ஒரு வீக்னஸ். திடீரென்று உணர்ச்சிவசப்படும் இவர்கள் உடனடியாக நார்மலாக‌ மாறியும் விடுவார்கள். //

    இதுவும் சரி, மேலதிகத் தகவல்களுக்கு நன்றி ராஜாராம்!

    ஒரு முழுக்கிறுக்க‌னோடு சேன்தால் அவ‌ன் என்னென்ன செய்வானோ அது அனைத்தையும் செய்வார்க‌ள்.ஒரு புத்திசாலியோடு சேர்ன்தால் த‌ன்னுடைய அதிமேதாவித் த‌ன‌த்தையெல்லாம் காட்டுவார்க‌ள்.//

    அவ்........ இதை ஒத்துக்கொள்ளாமல் இருக்கமுடியாது, ஹூம்!!!!

    இவ‌ர்க‌ளை ஏமாற்றுவ‌து மிக‌வும் சுல‌ப‌ம். ஆனால் ஒருமுறை ஏமாந்தால் அதற்குப்பின் சுதாரித்துவிடுவார்க‌ள்.அன்த‌ ஒரு ஏமாற்ற‌த்தை வாழ்க்கையின் ஒவ்வொரு க‌ண‌த்திலும் நினைத்து வ‌ருந்துவார்க‌ள்.
    ப‌ல‌வ‌கையான திற‌மைக‌ளுட‌ன் இருப்ப‌ர்.இவ‌ர்க‌ள் தூண்டினால் ம‌ட்டுமே எரியும் தீப‌ம் போல் இவ‌ர்க‌ளைத் தூண்ட‌ எப்போதும் ஒரு தூண்டுகோல் தேவை.இவ‌ர்க‌ள் அவ‌மான‌ம் தாங்க‌மாட்டார்க‌ள்.அவ‌மான‌ப்ப‌டுத்தினால் தான் இவ‌ர்க‌ளின் சுய‌ரூப‌ம் தெரியும்.அத‌ன் பின் வீறுகொண்டு எழுந்து அவ‌மான‌ப்ப‌டுத்திய‌வ‌ன் முக‌த்தில் க‌றியைப்பூசி விடுவார்க‌ள்.(இத‌ற்கு புராணத்துட‌ன் சேர்ந்த‌ ஒரு க‌தையும் உள்ள‌து).//

    உண்மை, அது என்ன கதை? முடிந்தால் எழுதுங்கள்.

    ReplyDelete
  34. புதன் ஆதிக்கம் நிறைந்தவர்கள் வாசிப்பதில் அதிகம் ஆர்வமுடையவர்கள்.எப்போதும் புத்தகமும்,கையுமாக அலைவார்கள்.//

    இது உண்மை!

    அதாவது குப்பைத்தொட்டியில் ஒரு பேப்பர் கிடந்தாலும் எடுத்துப் படிப்பார்கள்..//

    குப்பைத்தொட்டியிலிருந்து எடுக்கமாட்டேன், இருந்தாலும் மளிகை சாமான் சுற்றிவரும் பேப்பரைக்கூட விடாமல் படித்ததுண்டு!!!

    கணிதப்புலமையும் அதிகம்,மற்றவர்கள் கால்குலேட்டர் உதவியுடன் போடும் கணக்குகளைக் கூட மனக்கணக்கில் போட்டுவிடுவர்.//

    எனக்கு மிகவும் பிடித்தது கணிதம், அதில் எப்போதுமே முழு மதிப்பெண்தான். இப்போதும் அவசியமென்றால்தான் கால்குலேட்டர் உபயோகப்படுத்துவேன்.

    ReplyDelete
  35. அஞ்சுக்கு ஒன்று,ஆறுக்குறிய தலைமைப் பண்புகள் மிஸ்ஸிங்..

    இதில் சில குழப்பமிருக்கிறது. பிறகு ஆராய்ச்சி செய்கிறேன்.

    அஞ்சு ஆட்களுக்கு இயல்பாகவே எதிர்பார்த்த நல்ல விஷயங்கள் நடந்துவிடும் காரணத்தால் போராடி ஒன்றை இலக்கு நிர்ணயித்து சாதித்ததாகப் பெருமை கொள்ளும் அளவுக்கு வாய்ப்புகள் வாழ்வில் வழங்கப்படுவதில்லை என்பதால் தனித்தன்மை,தலைமைப் பண்புகள் என்பதைத்தவிர்த்து அதிர்ஷ்டக்காரர்கள் என்பதே பொருத்தமாக இருக்கும்..//

    என் முந்தைய பின்னூட்டங்களில் இதற்கான பதில் இருக்கிறது.

    ReplyDelete
  36. இன்னொரு முறை உழைப்பில்லா வருமானம் என சொல்லாதீர்கள்..
    அரசுத் துறைகளில் பணிசெய்பவர்கள் (சிலரை) நாம் அப்படி சொல்ல விரும்புவதில்லை தானே..
    பிச்சை எடுப்பதிலும் பிறரிடமிருந்து பிடுங்கி திண்பதிலும் உழைப்பு உள்ளது தோழியே...//

    ஐயர் அவர்களே! இதை எனது கருத்தாக மட்டுமே எடுத்துக்கொள்ளுங்கள், ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்றைப்பற்றியும் ஒவ்வொரு அபிப்பிராயம் இருக்குமல்லவா? அதுபோல்தான் இது.

    ReplyDelete
  37. அச்சச்சோ!!!! தனுசு வந்து டைம் நோட் பண்றதுக்கு முன்னாடி கொஞ்சம் அலுவலக வேலையைக் கவனிப்போம்!!!!!!!!!!!!!

    ReplyDelete
  38. 5ம் எண் அதிர்ஷ்டகரமானது, அந்த தேதியில் ஆரம்பிக்கப் படும் காரியங்கள் நல்ல பலனைத் தரும், என்றாலும் திருமணம் மட்டும் இந்த தேதியில் வைக்கக் கூடாது என்பார்கள்.

    எனது பெயர் கூட்டினால் 41 வரும். குணம்? நான் பிறந்த 8ம் எண் பாதி, 5ம் எண் பாதி கலந்த கலவை. உள்ளே 8ம், வெளியே 5ம் எண்ணா என்று யாரும் கேட்காமல் இருந்தால் சரி.

    ReplyDelete
  39. ஒருவருடைய பிறந்த தேதி எண், கூட்டு எண், பெயர் எண் இவற்றிற்குரிய கிரகங்கள் அவருடைய ஜாதகத்தில் முக்கியத்துவம் பெறுகின்றன. அதிகம் எழுத போதிய அவகாசம் இல்லை. வேறொரு சமயத்தில் சற்று விரிவாக சொல்கிறேன்.

    ReplyDelete
  40. //இதை என் ஜாதகத்தைப்பார்த்த நிறைய பேர் சொல்லியிருக்கிறார்கள் (ஆலாசியம் உட்பட). பதினொன்றில் நீச்ச சந்திரனும், உச்ச ராகுவும், இதற்கு ஏற்ற அமைப்பு. ஆனால் இன்றும், என்றும் அதில் நுழையும் எண்ணமில்லை. என் பாலிசிப்படி உழைத்து வரும் பணத்தை மட்டுமே விரும்புவதால் இதில் ஆர்வமில்லை///

    உமா, பங்கு சந்தை வெற்றிக்கு 11 இட நீச சந்திரன் மற்றும் பலனளிக்காது. 5 ம் இடம் அல்லது அதன் அதிபதி வலிமையாக இருக்கவேண்டும் அப்போது தான் 11 இடத்தின் பலன் கிடைக்கும். மேலும் ராகுவுடன் சேர்ந்த நீச சந்திரன் அதிக பேராசை பட வைத்து இருப்பதையும் தொலைக்க வைக்கலாம். பொதுவாக, புதன் வலிமையாக இருந்தால் பங்கு சந்தை லாபம் காட்டும்.

    ReplyDelete
  41. @uma..

    correction
    "மற்றும்" என்பதை திருத்தி "மட்டும்"
    என வாசிக்கவும்.

    ReplyDelete
  42. ஒருவருடைய பிறந்த தேதி எண், கூட்டு எண், பெயர் எண் இவற்றிற்குரிய கிரகங்கள் அவருடைய ஜாதகத்தில் முக்கியத்துவம் பெறுகின்றன. அதிகம் எழுத போதிய அவகாசம் இல்லை. வேறொரு சமயத்தில் சற்று விரிவாக சொல்கிறேன்.//

    நேரம் கிடைக்கும்போது எழுதுங்கள் ஆனந்த்!

    ReplyDelete
  43. உமா, பங்கு சந்தை வெற்றிக்கு 11 இட நீச சந்திரன் மற்றும் பலனளிக்காது. 5 ம் இடம் அல்லது அதன் அதிபதி வலிமையாக இருக்கவேண்டும் அப்போது தான் 11 இடத்தின் பலன் கிடைக்கும். மேலும் ராகுவுடன் சேர்ந்த நீச சந்திரன் அதிக பேராசை பட வைத்து இருப்பதையும் தொலைக்க வைக்கலாம். பொதுவாக, புதன் வலிமையாக இருந்தால் பங்கு சந்தை லாபம் காட்டும்.//

    ஓஓஓஒ! நன்றி ஸ்ரீ கணேஷ்!

    ReplyDelete
  44. SP.VR. SUBBAIYA said...கப்பலில் ப்ளாக் படிப்பதுதான் வேலையா?:-))))

    இரவு 9.30 முதல் 10.30 வரல் வீட்டுக்கு சாட்டிங் செய்யும் நேரம் .அதோடு இந்திய நேரத்தை விட 2.30 மணி நேரம் கூடுதல். அய்யா புதிய பதிவை இந்தியாவில் வெளியுடும் நேரம் சுமார் 7.00 இங்கு 9.30 . புதிய பதிவு வெளியுடும் நேரம் எனக்கு சரியாக பொருந்தி வருகிறது, முன்பு அதிகாலையில் வெளியிடுவது என்னால் உடனே காண முடியாது. அனைத்திற்கும் மேலாக கடல் கொந்தளிப்போ, சீற்றமோ இல்லாமல்இணையம் கிடைத்துக் கொண்டே இருக்கிறது.

    இடையில் வருவது டீ, காபி சாப்பிடுவதுபோல். அதை கணக்கில் எடுத்துக்கொள்ள கூடாது.

    ReplyDelete
  45. Uma said...பச்சை நிறமே, பச்சை நிறமே......

    Uma said...ரொம்ப புகழாதீங்க சார்!! கூச்சமா இருக்கு ஹி ஹி!........

    Uma said...இது உண்மை என்றாலும் அதிலிருந்து விரைவில் வெளியேயும் வந்துவிடுவேன். ஜாதகத்தில் புதன் / சந் முறையே 5 / 6 பரல்களுடன். ......

    Uma said...ஞாயிறன்று பூரி / பாலக் பனீர் செய்யலாம் என .....

    Uma said...நான் செலவாளி கிடையாது, எது அவசியமோ அதற்கு ......

    Uma said...என் தாத்தா அடிக்கடி சொல்வார். எந்தத் ....

    Uma said...அவ்........ இதை ஒத்துக்கொள்ளாமல் இருக்கமுடியாது, ஹூம்!!!!...

    Uma said...அதாவது குப்பைத்தொட்டியில் ஒரு பேப்பர் கிடந்தாலும் ....

    Uma said...இதில் சில குழப்பமிருக்கிறது. பிறகு ஆராய்ச்சி செய்கிறேன். ..

    Uma said...ஐயர் அவர்களே! இதை எனது கருத்தாக மட்டுமே எடுத்துக்கொள்ளுங்கள், ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்றைப்பற்றியும....

    Uma said...அச்சச்சோ!!!! வேலையைக் கவனிப்போம்!!!!!!!!!!!!!

    Uma said...நேரம் கிடைக்கும்போது எழுதுங்கள் ஆனந்த்!

    Uma said...ஓஓஓஒ! நன்றி ஸ்ரீ கணேஷ்!...

    என்ன இது இல்ல என்னா இதுங்கிறேன்.

    நான் ஒரு கம்மான்ட் விட்டதற்கே வாத்தியார் எப்படி சொல்லயுள்ளார் paarunkal

    SP.VR. SUBBAIYA said...
    கப்பலில் ப்ளாக் படிப்பதுதான் வேலையா?:-))))

    ReplyDelete
  46. என்ன இது இல்ல என்னா இதுங்கிறேன்.
    நான் ஒரு கம்மான்ட் விட்டதற்கே வாத்தியார் எப்படி சொல்லயுள்ளார் paarunkal //

    ஹி ஹி, என்னப்பத்தி வாத்தியாருக்கு நல்லாத் தெரியும் என்பதால் என்னிடம் இந்தக் கேள்வியைக் கேட்கமாட்டார் (அதாவது அலுவலகத்தில் என் முழுநேர வேலை பிளாக் படிப்பது, பகுதி நேர வேலை அலுவலக வேலையைக்கவனிப்பது அப்படின்னு அவருக்கு நல்லாத் தெரியும்). ஹி ஹி பப்ளிக்ல திரும்ப இந்த மாதிரிக் கேள்வியை எல்லாம் கேட்காதீங்க.

    ReplyDelete
  47. thanusu said...
    Uma said...அச்சச்சோ!!!! வேலையைக் கவனிப்போம்!!!!!!!!!!!!!

    Uma said...நேரம் கிடைக்கும்போது எழுதுங்கள் ஆனந்த்!

    Uma said...ஓஓஓஒ! நன்றி ஸ்ரீ கணேஷ்!...

    என்ன இது இல்ல என்னா இதுங்கிறேன்.

    நான் ஒரு கம்மான்ட் விட்டதற்கே வாத்தியார் எப்படி சொல்லயுள்ளார் paarunkal

    SP.VR. SUBBAIYA said...
    கப்பலில் ப்ளாக் படிப்பதுதான் வேலையா?:-))))

    உமாவை நிறுத்த சொல்லுங்க நாங்க நிறுத்துறோம் ,சரியாய் தனுஸ்...!!!!

    ReplyDelete
  48. உமாவை நிறுத்த சொல்லுங்க நாங்க நிறுத்துறோம் ,சரியாய் தனுஸ்...!!!!//

    என்ன நேத்துலேர்ந்து தனுசு பக்கமே பேசிக்கிட்டிருக்கார்?? இதை இப்படியே விடக்கூடாது.

    ReplyDelete
  49. Rajaram said...
    கணிதப்புலமையும் அதிகம்,மற்றவர்கள் கால்குலேட்டர் உதவியுடன் போடும் கணக்குகளைக் கூட மனக்கணக்கில் போட்டுவிடுவர்


    அம்சத்தில் எழில்(ரிசபம் ) உச்சமான சந்தரனும்,புதனும், பிறந்த நாள் புதன்கிழமை 3,5 இரண்டும் கலந்தது அரை வேக்காடு ஆக்கிவிட்டதோ....! கணக்கிற்கும் நமக்கும் காததூரம்..!

    one step back போயிடுச்சு!!!எவ்வளவு கட்டம் குறையுதோ ..!அவ்வளவு,குறைசிக்கிட்டு பாக்கி தரமாட்டாங்கலோ..???

    ReplyDelete
  50. வணக்கம் ஐயா,
    5ம் எண்காரர்களின் பற்றிய பதிவு அருமை...அதீத புத்திசாலிகள் என்றவுடன் எனக்கு மிகவும் பிடித்த,பலருக்கும் பிடித்த‌ ஐன்ஸ்டீன் தான் என் நினைவிற்கு வந்தது...அவரது பிறந்த தேதி 14 என்றவுடன் இந்த எண்ணின் சிறப்பை உணர முடிகிறது...

    என்னுடைய பெயர் எண் ஐந்து என்றாலும் பிறந்த எண் 2 மற்றும் 5ம் எண்களின் கலவையாகவே பலன்கள் உள்ளன...எனக்கு பிடித்த நிறங்களில் பச்சை நிறமும் ஒன்று...நல்ல பதிவிற்கு மிக்க நன்றி...

    ReplyDelete
  51. 5ம் எண் பதிவு வாசித்து மகிழ்ந்தேன்.நன்றி ஐயா!

    உமா இவ்வளவு பின்னூட்டத்தையும் ஒரு பதிவாகவே தந்திருக்காலாம்.

    பச்சைக்காளி பவ‌ளக்காளிக்குச் சரியான ஆள் தஞ்சாவூரார்தான்.அவர்தான் சரித்திரப்பேராசிரியர்.

    ReplyDelete
  52. 5ம் எண் பதிவு வாசித்து மகிழ்ந்தேன்.நன்றி ஐயா!

    உமா இவ்வளவு பின்னூட்டத்தையும் ஒரு பதிவாகவே தந்திருக்காலாம்.

    பச்சைக்காளி பவ‌ளக்காளிக்குச் சரியான ஆள் தஞ்சாவூரார்தான்.அவர்தான் சரித்திரப்பேராசிரியர்.

    ReplyDelete
  53. ananth said... ஒருவருடைய பிறந்த தேதி எண், கூட்டு எண், பெயர் எண் இவற்றிற்குரிய கிரகங்கள் அவருடைய ஜாதகத்தில் முக்கியத்துவம் பெறுகின்றன. அதிகம் எழுத போதிய அவகாசம் இல்லை. வேறொரு சமயத்தில் சற்று விரிவாக சொல்கிறேன்.

    ஆனந்த் அவர்களே உங்களுக்கு வகுப்பில் சின்ன வாத்தியார் என்றே பெயர் உண்டு .போதிய அவகாசம் எடுத்துக் கொண்டு எழுதுங்கள் .

    ஆனால் கண்டிப்பாக எழுதுங்கள். காத்திருக்கிறோம் .

    ReplyDelete
  54. Ananthamurugan said... உமாவை நிறுத்த சொல்லுங்க நாங்க நிறுத்துறோம் ,சரியாய் தனுஸ்...!!!!

    சரியா சொன்னீர்கள்

    .Uma said...ஹி ஹி, என்னப்பத்தி வாத்தியாருக்கு நல்லாத் தெரியும் என்பதால் என்னிடம் இந்தக் கேள்வியைக் கேட்கமாட்டார் (அதாவது அலுவலகத்தில் என் முழுநேர வேலை பிளாக் படிப்பது, பகுதி நேர வேலை அலுவலக வேலையைக்கவனிப்பது அப்படின்னு அவருக்கு நல்லாத் தெரியும்). ஹி ஹி பப்ளிக்ல திரும்ப இந்த மாதிரிக் கேள்வியை எல்லாம் கேட்காதீங்க.

    என்ன கொடுமை ஆப்ரிகன்ஸ் .

    Uma said...என்ன நேத்துலேர்ந்து தனுசு பக்கமே பேசிக்கிட்டிருக்கார்??

    பக்கத்து ஊர் பாசம்.

    ReplyDelete
  55. ////Blogger அய்யர் said...
    பச்சை பச்சையாய் வந்த
    பதிவில் எல்லாம் சரி காதலை தவிர
    பத்தாம் அதிபதியாக புதன் அமைந்தால்
    பார்த்துச் சொல்ல மைனர் தான் வரணும்
    மரகத கல் மோதிரத்தை
    மயக்கத்தில் உள்ள சுன்டு விரலில் தானே
    வெள்ளியில் போட்டால்
    விலை குறைவாம்
    தங்கமென்றால் என்ன
    தலையா சுற்றுகிறது..
    தங்க தட்டிலும்
    தரமான வெள்ளி தட்டிலும் சாப்பிட
    வேண்டுகோள் விடுத்தோம்
    வேடிக்கையாக கொள்ளாமல்
    வியக்க வைக்கும் படி
    விருந்து படைக்க வேணும்
    அதுவரையில்..
    அன்பு வணக்கங்களுடன்
    அய்யர்/////

    அரை கிலோவில் தட்டு என்றாலும் முப்பதாயிரம் ஆகுமே சுவாமி!

    ReplyDelete
  56. /////Blogger Rajaram said...
    ஐயா,
    நான் எல்லாவ‌ற்றிலும் புத‌ன் ஆதிக்க‌ம் தான்.ராசி க‌ன்னி, பிற‌ந்த‌ தேதி-5,கிழ‌மை-புத‌ன், ந‌வாம்ச‌ ச‌ந்திர‌னும் மிதுன‌த்தில்.ஆனால் விதி எண் 3ஐ அனுச‌ரித்தே வ‌ருகிற‌து. என்னுடைய‌ ப‌ல‌ விஷ‌ய‌ங்க‌ளில் 3ம் எண் தான் ஆதிக்க‌ம் செலுத்துகிற‌து.ஆனால் 5 க்குரிய‌ குணங்க‌ளும் தென்ப‌டும்.
    புதன் ஆதிக்கம் நிறைந்தவர்கள் வாசிப்பதில் அதிகம் ஆர்வமுடையவர்கள்.எப்போதும் புத்தகமும்,கையுமாக அலைவார்கள்.அதிலும் எந்த ராசி, நட்சத்திரமாகயிருந்தாலும் நவாம்ச சந்திரன் மிதுனம்,கன்னியில் அமையப்பெற்றவர்கள் நன்கு படித்தவர்களாகவும் நல்லப்பேச்சுத்திறமை,எழுத்து,படிப்புத்திறமையும் உடையவர்களாகவும் உள்ளனர்.குறிப்பாக மிதுனம்,கன்னி ராசியில் பிறந்து நவாம்ச சந்திரனும் மிதுனம்,கன்னியில் அமையப்பெற்றால் (புனர்பூசம்-3ம் பாதம்,ஹஸ்தம்-3ம் பாதம்,சித்திரை-2ம் பாதம் இந்த நட்சத்திரப்பாதம் உடையவர்களுக்கு அமையும்)முழு நேரப்புத்தகப் புழுக்களாகவே இருக்கின்றனர்.அதாவது குப்பைத்தொட்டியில் ஒரு பேப்பர் கிடந்தாலும் எடுத்துப் படிப்பார்கள்.அதை நானும் செய்திருக்கிறேன்.எத்தனையோ பேர் கேலியும் செய்திருக்கின்றனர்.
    கணிதப்புலமையும் அதிகம்,மற்றவர்கள் கால்குலேட்டர் உதவியுடன் போடும் கணக்குகளைக் கூட மனக்கணக்கில் போட்டுவிடுவர்./////

    உங்களுடைய ஆர்வத்திற்கும் மேலதிகத் தகவல்களுக்கும் நன்றி ராஜாராம்!

    ReplyDelete
  57. /////Blogger V Dhakshanamoorthy said...
    அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு,
    என் நண்பர் ஐந்தாம் தேதியில் பிறந்தவர்.
    தாங்கள் கொடுத்துள்ள பலன்கள்
    பெரும்பகுதி அவருக்கு பொருந்தி வருகிறது.
    பிறந்த தேதி தெரியாதவர்களுக்கு ஐந்தாம் எண்ணில் பெயர் வைக்கலாம், என்று படித்த ஞாபகம்.
    நன்றி!!////

    நல்லது. நன்றி த்டசணாமூர்த்தி!

    ReplyDelete
  58. ////Blogger RAMADU Family said...
    Guru Vanakkam,
    my daughter falls under this catg.
    she is just 12 for her age she has done so many things in art and culture. Completed arangetram in bharatanatyam, Gold medal winner in Tap and Ballet, A very good vocalist and trained in piano and Violin. She also reginal winner in spelling bee competetions and interested in journalism
    No.5 has a magic, I belive.
    Regards
    RAMADU////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கும் பதிவை ஒட்டிய மேலதிகத் தகவல்களுக்கும் நன்றி ராமுடு அவர்களே!!

    ReplyDelete
  59. ////Blogger Jawahar Govindaraj said...
    என்னுடைய பிறந்த தேதி 14. நீங்கள் கூறியது அனைத்தும் பொருந்துகிறது. கொஞ்சம் பொறுமைதான் மிகக் குறைவு.
    -ஜவகர் கோவிந்தராஜ்/////

    நல்லது. நன்றி மிஸ்டர் ஜவஹர்!

    ReplyDelete
  60. /////Blogger Kalai said...
    மிக அருமையான பதிவு. என் கணவரின் எண் ஐந்துதான். நீங்கள் குறிப்பிட்டு உள்ளவற்றில் பெரும்பாலனவை என் கணவரின் குணாதிசங்களில் ஒத்து போகிறது.
    தோல்வி பிடிக்காது. technical விஷயங்களில் ரொம்ப ஈடுபாடு . செயலில் வேகம், பேச்சை விட.(நமக்கு பேச்சில் வேகம், எண் இரண்டு ஆயிrறே).
    எனக்கு தெரிந்த வரை தானாக யாரிடமும் சென்று பேச மாட்டார். பழகிய நண்பர்களுக்கு முக்கியாமான நண்பராய் இருப்பார். டக் டகென்று problem solve செய்வார்.
    குடும்ப விஷங்களில் மட்டும் காலம் பண்ணுவார். சமைப்பதை சாப்பிடுவார். ஆனால் வித விதமாக சமைத்தால் முகத்தில் மலர்ச்சி இருக்கும். But I reached his heart through
    my talk whereas sustained through his stomach and mind. Need to serve his mind with different talks, different disciplines. Need to read and gather more info and knowledge. கோபம் எபோதாவது வரும். சீகிரமும் போய் இருக்கும். ஆனால் அதற்கான காரணத்தை மறக்க மாட்டார். loose talk-யும் ஞாபகம் வெச்சி இருப்பார். அது கொஞ்சம் dangerous.
    -kalai seaatle////

    உங்களுடைய தகவ்ல் பகிர்விற்கு நன்றி சகோதரி!

    ReplyDelete
  61. ////Blogger Maaya kanna said...
    Vanakkam Iyaa.////

    (பதில்) வணக்கம் கண்ணன்!

    ReplyDelete
  62. ////Blogger minorwall said...
    //////இந்த ஐந்தாம் எண் பதிவின் ஒவ்வொரு வரிக்கும் மிகவும் பொருந்தக் கூடிய ஒரே மனிதர் என மனதில் தவிர்க்க முடியாமல் வருபவர் ஆப்பிள் புகழ் ஸ்டீவ் ஜாப்ஸ் மட்டுமே. அவருக்கு ஜாதகத்தில் புதனின் சுயவர்கப் பரல்கள் எட்டு. ஆனால் ....ஏனோ எண்கணிதத்தில் அவருக்கும் ஐந்திற்கும் எந்த தொடர்பும் இல்லையே!!! அவர் பிறவிஎண் 6 விதிஎண் 1./////
    சாரி டு சே திஸ்.
    அஞ்சுக்கு ஒன்று,ஆறுக்குறிய தலைமைப் பண்புகள் மிஸ்ஸிங்..
    அதுதான் ஸ்டீவ் ஜாபின் அவரின் தனித்தன்மையை வெளிக்காட்டிய விஷயமாக இருக்க முடியும் ..
    அஞ்சு ஆட்களுக்கு இயல்பாகவே எதிர்பார்த்த நல்ல விஷயங்கள் நடந்துவிடும் காரணத்தால் போராடி ஒன்றை இலக்கு நிர்ணயித்து சாதித்ததாகப் பெருமை கொள்ளும் அளவுக்கு வாய்ப்புகள் வாழ்வில் வழங்கப்படுவதில்லை என்பதால் தனித்தன்மை,தலைமைப் பண்புகள் என்பதைத்தவிர்த்து அதிர்ஷ்டக்காரர்கள் என்பதே பொருத்தமாக இருக்கும்../////

    நீங்கள் குறிப்பிடுவது உண்மைதான் மைனர்! நன்றி!

    ReplyDelete
  63. ////Blogger ஜி ஆலாசியம் said...
    ஐந்தாம் எண்ணின் அதிசயங்களை அறியத் தந்த ஆசிரியர் ஐயாவிற்கு நன்றிகள் பல.////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  64. /////Blogger Parvathy Ramachandran said...
    //அஞ்சு ஆட்களுக்கு இயல்பாகவே எதிர்பார்த்த நல்ல விஷயங்கள் நடந்துவிடும் காரணத்தால் போராடி ஒன்றை இலக்கு நிர்ணயித்து சாதித்ததாகப் பெருமை கொள்ளும் அளவுக்கு வாய்ப்புகள் வாழ்வில் வழங்கப்படுவதில்லை என்பதால் தனித்தன்மை,தலைமைப் பண்புகள் என்பதைத்தவிர்த்து அதிர்ஷ்டக்காரர்கள் என்பதே பொருத்தமாக இருக்கும்..//
    நூற்றுக்கு நூறு உண்மை. என் அண்ணா, ஜஸ்ட், நாலு நிமிஷம் படிச்சுட்டு வாங்கின மார்க்கை நான் நாலு நாள் படிச்சுத்தான் வாங்கினேன். (டார்கெட் அவர் மார்க்கை மீறி வாங்குறதுதான்.)
    ஐந்தாம் நம்பரில் ஆன்மீகப் பிரபலங்களும் உண்டே. பகவான் ஸ்ரீசத்ய சாயி பாபா (நவம்பர் 23) ./////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி சகோதரி!

    ReplyDelete
  65. ////Blogger அய்யர் said...
    ///ஐந்தாம் நம்பரில் ஆன்மீகப் பிரபலங்களும் உண்டே. பகவான் ஸ்ரீசத்ய சாயி பாபா (நவம்பர் 23) .///
    ஓசை தரும் அஞ்செழுத்து என
    ஒப்பில்லா மெய்கண்ட சாத்திரமும்
    அஞ்சுபதம் சொல்லி என
    அப்பர் சுவாமிகளின் தேவாரமும்
    அந்தியில் மந்திரம்
    அஞ்செழுத்தே என சம்பந்தரும்
    பாசம் நிறைந்த பாமரரும் சொல்லும்
    பஞ்சாட்ஷரமும் அஞ்செழுத்தே
    அய்யரின் எண்ணத்தில் வந்த
    அக்னி ஸ்டீல் விளம்பரமும்
    அஞ்சைக் கொண்டே..
    அஞ்சு கோட்டை கொண்டு வருவதை
    வளைத்தாலும் வளையும்
    வளைக்காமல் நீட்டினாலும் நிமிரும்
    எட்டுதா ஏதேனும் அறிவுக்கு என
    எட்டை நோக்கி காத்திருக்கின்றோம்/////

    எட்டு அடுத்தவாரம் எட்டும் சுவாமி!

    ReplyDelete
  66. ////Blogger eswari sekar said...
    vannakam .sir///

    நல்லது சகோதரி!

    ReplyDelete
  67. ////Blogger Uma said...
    பச்சை நிறமே, பச்சை நிறமே.................. இன்னிக்கு நம்ம நம்பர்!!! என் மகனுக்கும் அதே.
    முன்னரே பின்னூட்டத்தில் குறிப்பிட்டது போல பிறந்த தேதி 5 , தேதி, மாதம், வருடங்களின் கூட்டுத்தொகை ஐந்து, பிறந்தது புதன்கிழமை, பெயரின் கூட்டுத்தொகை (திருமணத்திற்கு முன்பும், பின்பும்) ஐந்து, நட்சத்திரம் கேட்டை, அதுவும் புதனின் நட்சத்திரம் என எல்லாமே புதன் ஆதிக்கம்தான். ஜாதகத்தில் ஆறு, ஒன்பதுக்கு அதிபதியாக, லக்ன / தனாதிபதியான சனியுடன் (நட்புக்கிரகம்) சேர்ந்து ஆறில் ஆட்சி, இந்தக் கூட்டணிக்கு குருவின் ஐந்தாம் பார்வை. நவாம்சத்தில் நட்புக்கிரகமான சனியின் வீட்டில் (கும்பத்தில்)./////

    வாழ்த்துக்கள் சகோதரி உமா!

    ReplyDelete
  68. /////Blogger Uma said...
    இந்த எண்காரர்கள் எதையும் துணிச்சலோடு எதிர்கொள்ளக்கூடியவர்கள்.வடிவேல் மொழியில் சொன்னால் ரிஸ்க் எடுப்பது இவர்களுக்கு ரஸ்க் சாப்பிடுவதைப் போன்றது. முடியாதது என்பதே இவர்கள் அகராதியில் கிடையாது. எதையும் உற்சாகத்தோடு முயன்று பார்ப்பார்கள்.தங்கள் புத்திசாலித்தனத்தால் முடித்தும் காட்டுவார்கள்//
    உண்மை, எதையும் முயன்று பார்க்காமல் முடியாது என்று சொல்லமாட்டேன், கடைசி முயற்சி வரை (வெற்றியோ, தோல்வியோ) திரும்பமாட்டேன். அதுவும் யாராவது சவால் விட்டால் கேட்கவே வேண்டாம். அதை அசட்டு தைரியம் என்று கூட சொல்வார்கள். இப்போது நினைத்துப்பார்த்தால் கூட மலைப்பாக இருக்கும் ஏகப்பட்ட பிரச்சனைகளைத் தைரியமாக எதிர்கொண்டு வெற்றியும் பெற்றிருக்கிறேன். எந்தப் பிரச்சனையிலும் இதுவரை பின்வாங்கியது இல்லை.
    இவர்களுடைய புத்திசாலித்தனம் மின்னல் வேகத்தில் வேலை செய்யும்.//
    ரொம்ப புகழாதீங்க சார்!! கூச்சமா இருக்கு ஹி ஹி!!
    மற்றவர்களுக்கு மாதக் கணக்கில் யோசித்து முடிவெடுக்கும் யோசனைகள் (ஐடியாக்கள்) இவர்களுக்கு நொடியில் தோன்றும். //
    இது உண்மையோ உண்மை!!!! அப்படியே ஐடியா சும்மா அருவி மாதிரி பாய்ந்து வரும். நிறைய ஐடியாக்களை டாகுமென்ட் செய்தும் வைத்திருக்கிறேன் (எப்பவாவது உபயோகப்படும்).
    இந்த எண்காரர்கள் மன வலிமை கொண்டவர்கள்.//
    100 %.
    சிந்தனைகள், எண்ணங்கள், செயல்பாடுகள் என்று எல்லாவற்றிலும் ஒரு வேகம் இருக்கும்.//
    இதுவும் உண்மை. எந்த வேலையாக இருந்தாலும் சீக்கிரம் அதை முடித்துவிட்டு வெளியே வந்துவிடவேண்டும், அதே நேரம் ஏனோதானோவென்றும் செய்யமாட்டேன். எல்லாவற்றிலும் perfection இருக்கும்.
    அந்தக் குணத்தால், பணம் பண்ணுவதில் ஒரு வல்லமை இருக்கும்.//
    இதுவரை இந்த ஆட்டத்தை ஆரம்பிக்கவில்லை, ஆனால் ஆரம்பிக்கும் எண்ணமிருக்கிறது. சனிபகவானை நம்ம ராசிலேர்ந்து அனுப்புவதற்காகக் காத்திருக்கிறேன்!!!/////

    வரும்போது வந்துவிட்டுப் போகிறது! நீங்கள் எப்போதும் போலவே இருங்கள்!

    ReplyDelete
  69. ////Blogger Uma said...
    இந்த எண்காரர்களுக்குப் பங்குச்சந்தை ஒரு சிறப்பான ஏற்றத்தைக் கொடுக்கும். //
    இதை என் ஜாதகத்தைப்பார்த்த நிறைய பேர் சொல்லியிருக்கிறார்கள் (ஆலாசியம் உட்பட). பதினொன்றில் நீச்ச சந்திரனும், உச்ச ராகுவும், இதற்கு ஏற்ற அமைப்பு. ஆனால் இன்றும், என்றும் அதில் நுழையும் எண்ணமில்லை. என் பாலிசிப்படி உழைத்து வரும் பணத்தை மட்டுமே விரும்புவதால் இதில் ஆர்வமில்லை.
    வீக்னெஸ் இல்லாமல் இருக்குமா? ஒரு காரியம் ஆகவில்லை என்றால் சீக்கிரம் தளர்ந்து போய்விடுவார்கள். மனப் போராட்டம் வந்தால் தங்களை இழந்துவிடுவார்கள். தாங்கமாட்டார்கள்//
    இது உண்மை என்றாலும் அதிலிருந்து விரைவில் வெளியேயும் வந்துவிடுவேன். ஜாதகத்தில் புதன் / சந் முறையே 5 / 6 பரல்களுடன். கவலைப்பட்டாலும் எல்லாம் ஒரு ஸ்டேஜ் வரைதான். அதன்பின் 'தலைக்கு மேலே வெள்ளம் போனா சாணென்ன முழமென்ன' அப்படின்னு பாட்டுதான்!!!!! அதேபோல் எவ்வளவு மனவருத்தம் என்றாலும் ஏதாவது பிடித்த பாட்டு மண்டைக்குள் ஓடிக்கொண்டேயிருக்கும்!!!
    மற்றவர்களின் முட்டாள்தனத்தையும் இவர்களால் பொறுத்துக்கொள்ள முடியாது.//
    இதுவுமிருக்கிறது!!!////

    நல்லது. பதிவை அப்படியே உள்வாங்கிப் பின்னூட்டம் இட்டமைக்கு நன்றி!

    ReplyDelete
  70. ////Blogger Uma said...
    இந்த எண்காரர்களுக்குப் புதுப்புது புத்திசாலித்தனமான எண்ணங்கள் தோன்றும் யோசனைகள் வரும். //
    உதாரணத்திற்கு ஒண்ணே ஒண்ணு எடுத்துவிடுகிறேன்!!
    ஞாயிறன்று பூரி / பாலக் பனீர் செய்யலாம் என பாலக்கை வேகவைத்துவிட்டுப் பார்த்தால் அளவு மிகவும் குறைவாக இருந்தது. என் கணவரும் சும்மா இருக்காமல் இது எப்படி எல்லாருக்கும் போதும் என்று குழப்பிவிட மின்னல் வேகத்தில் மூளை வேலை செய்தது. கணவரிடம் எல்லாம் போதும், சாப்பிடும்போது பாருங்கோ என்று அனுப்பிவிட்டு ரெண்டு நாள் முன்பு செய்திருந்த கொத்துமல்லித் தொகை கொஞ்சம் கலந்துவிட்டேன் (ரெண்டுமே பச்சையாதானே இருக்கும், கண்டிபிடிக்க முடியாதுல்ல, ஹிஹி). ஆனாலும் இத்தனை வருடங்களாக என்னுடன் கூட இருந்து புத்திசாலித்தனம் வந்துவிட்டதால் சாப்பிடும்போது கண்டுபிடித்துவிட்டார். இப்ப அதால என்ன, taste நல்லா இருக்கா இல்லையா என்று கேட்கவும், தலையில் அடித்துக்கொள்ளாத குறையாகச் சாப்பிட்டு எழுந்தார்.
    அதன் காரணமாகப் புதுப்புது வியாபாரங்களையும், தொழில்களையும் விரும்பிச் செய்வார்கள். தோல்வியைப் பற்றிய பயமே இருக்காது. எதையும் ஒருகை பார்ப்போம் என்று இறங்குவார்கள். இறங்கி முழுவேகத்துடன் செய்வார்கள்//
    எப்போது பார்த்தாலும் வியாபாரம் / தொழில் பற்றிய ஐடியாவே ஓடிக்கொண்டிருக்கும். கூடிய விரைவில் (????!!!!) இறங்கும் எண்ணமும் இருக்கிறது.////

    அப்போது சிங்கப்பூர் அல்லது டோக்கியோ நண்பர்களை பார்ட்னராக சேர்த்துக்கொள்ளுங்கள்!

    ReplyDelete
  71. ////Blogger Uma said...
    மாற்றத்தை விரும்புவார்கள். அன்றாட வேலைகள் ஒன்று போலிருந்தால், சீக்கிரம் போரடித்துவிடும் bored by routine. உணவு, உடை, போன்ற நடைமுறை விஷயங்களில்கூட அடிக்கடி மாற்றங்களைச் செய்வார்கள்//
    சரி!
    நிறைய செலவும் செய்வார்கள்.//
    நான் செலவாளி கிடையாது, எது அவசியமோ அதற்கு மட்டுமே செலவு செய்வேன், இன்னும் சொன்னால் நான் வாழ்வது, விரும்புவது எளிமையான வாழ்க்கையையே. ஆடம்பரப்பொருட்கள் மீது சிறிதும் விருப்பம் கிடையாது. ஒருவேளை லக் அதிபதி சனி காரணமாக இருக்கலாம்.
    இந்த எண்காரர்கள் சீக்கிரம் காதலில் விழக்கூடியவர்கள் (fall in love). //
    இதுவும் பொருந்தவில்லை. நட்பில் கூட நான் ரொம்ப choosy , எல்லோரிடமும் ஆத்மார்த்தமாக, கலகலப்பாகப் பழகினாலும் எனக்கு மிகவும் பிடித்திருந்து, என் குணநலன்களுடன் ஒத்துப்போகிறவர்களுடன் மட்டுமே நெருக்கமாகப் பழகுவேன். அவர்களின் ஒரு குணநலன் என் பாலிசியுடன் ஒத்துப்போகாது என்று தெரிந்தாலும் கொஞ்சம் விலகியே இருப்பேன்.
    சுருக்கமாகச் சொன்னால், இந்த எண்காரர்கள் யாருடனும் எளிதில் நட்புக் கொள்ளக்கூடியவர்கள். யாராலும் எளிதில் விரும்பப்படக்கூடியவர்கள். எதையும் ரசிக்கக்கூடியவர்கள்.//
    சரி!/////

    உங்களுக்கு சரி என்றால் எங்களுக்கும் மகிழ்ச்சிதான்!

    ReplyDelete
  72. ////Blogger Uma said...
    நீங்கள் எழுதிய மேலதிகத் தகவல்களும் பொருந்துகின்றன. என் பையனிடமும் எல்லா குணநலன்களும் இருக்கின்றன.
    இப்போது வீக்னெஸ்:
    என் தாத்தா அடிக்கடி சொல்வார். எந்தத் துறையாக இருந்தாலும் அதில் உன்னால் shine பண்ணமுடியும் என்று. அது உண்மை என்பதை நான் உணர்ந்திருக்கிறேன், இருப்பினும் நிறைய துறைகளில் எனக்கு ஆர்வம் கிடையாது, அதனால் அதைத் தெரிந்துகொள்ள முயற்சியும் மேற்கொண்டதில்லை (குறிப்பாக டெக்னிகல் விஷயங்கள்). எனக்கு ஆர்வம் இருந்தால் மட்டுமே நுழைவேன்.
    எப்போது பார்த்தாலும் ஏதோ சிந்தனை / யோசனை மூளையில் ஓடிக்கொண்டே இருக்கும். செயல்படுத்துவதில்தான் சிக்கல். நானாகப்போய் handle செய்யும் விஷயங்களைவிட என் தலைக்குமேல் தொங்கிக்கொண்டிருக்கும் விஷயங்களை handle செய்வதில் என் திறமை பளிச்சிடுவதைப்பார்த்துள்ளேன்.
    அடுத்து ராஜதந்திரம் வராத ஒன்று. எல்லோரிடமும் தன்மையாகவே பேசுவேன் என்றாலும் சில சமயம் எதிராளி எகிறினால் நானும் ஒரு கட்டத்திற்கு மேல் எகிறிவிடுவேன். (இரண்டு மூன்று அலுவலகங்களில் எம்.டி. இடமே 'நீயாச்சு, உன் வேலையாச்சு' என்று பேசிவிட்டு வெளியில் வந்த அனுபவமும் இருக்கிறது). சுயமரியாதை பங்கப்படும் எந்த இடத்திலும் அதற்குமேல் இருப்பதில்லை. எதுவாக இருந்தாலும் முகத்திற்கு நேராகவே சொல்லிவிடுவது (அவர்கள் மனம் புண்படாவண்ணம்). எதுவும் சொல்லவேண்டாம் என்று தோன்றினால் அங்கிருந்து நகர்ந்துவிடுவேன். வாயால் பேசுவதைவிட செயலில் காண்பிப்பது அதிகம்.////

    நல்லது. தகவல் பகிர்விற்கு நன்றி!

    ReplyDelete
  73. ////Blogger ananth said...
    5ம் எண் அதிர்ஷ்டகரமானது, அந்த தேதியில் ஆரம்பிக்கப் படும் காரியங்கள் நல்ல பலனைத் தரும், என்றாலும் திருமணம் மட்டும் இந்த தேதியில் வைக்கக் கூடாது என்பார்கள்.
    எனது பெயர் கூட்டினால் 41 வரும். குணம்? நான் பிறந்த 8ம் எண் பாதி, 5ம் எண் பாதி கலந்த கலவை. உள்ளே 8ம், வெளியே 5ம் எண்ணா என்று யாரும் கேட்காமல் இருந்தால் சரி.////

    யாரும் கேட்க மாட்டார்கள்! ஆனந்தமாக இருங்கள்!

    ReplyDelete
  74. ////Blogger ananth said...
    ஒருவருடைய பிறந்த தேதி எண், கூட்டு எண், பெயர் எண் இவற்றிற்குரிய கிரகங்கள் அவருடைய ஜாதகத்தில் முக்கியத்துவம் பெறுகின்றன. அதிகம் எழுத போதிய அவகாசம் இல்லை. வேறொரு சமயத்தில் சற்று விரிவாக சொல்கிறேன்.////

    ஆகா, எழுதுங்கள். பொறுத்திருக்கிறோம்!

    ReplyDelete
  75. ////Blogger thanusu said...
    SP.VR. SUBBAIYA said...கப்பலில் ப்ளாக் படிப்பதுதான் வேலையா?:-))))
    இரவு 9.30 முதல் 10.30 வரல் வீட்டுக்கு சாட்டிங் செய்யும் நேரம் .அதோடு இந்திய நேரத்தை விட 2.30 மணி நேரம் கூடுதல். அய்யா புதிய பதிவை இந்தியாவில் வெளியுடும் நேரம் சுமார் 7.00 இங்கு 9.30 . புதிய பதிவு வெளியுடும் நேரம் எனக்கு சரியாக பொருந்தி வருகிறது, முன்பு அதிகாலையில் வெளியிடுவது என்னால் உடனே காண முடியாது. அனைத்திற்கும் மேலாக கடல் கொந்தளிப்போ, சீற்றமோ இல்லாமல்இணையம் கிடைத்துக் கொண்டே இருக்கிறது.
    இடையில் வருவது டீ, காபி சாப்பிடுவதுபோல். அதை கணக்கில் எடுத்துக்கொள்ள கூடாது./////

    Take it easy!

    ReplyDelete
  76. /////Blogger R.Srishobana said...
    வணக்கம் ஐயா,
    5ம் எண்காரர்களின் பற்றிய பதிவு அருமை...அதீத புத்திசாலிகள் என்றவுடன் எனக்கு மிகவும் பிடித்த,பலருக்கும் பிடித்த‌ ஐன்ஸ்டீன் தான் என் நினைவிற்கு வந்தது...அவரது பிறந்த தேதி 14 என்றவுடன் இந்த எண்ணின் சிறப்பை உணர முடிகிறது...
    என்னுடைய பெயர் எண் ஐந்து என்றாலும் பிறந்த எண் 2 மற்றும் 5ம் எண்களின் கலவையாகவே பலன்கள் உள்ளன...எனக்கு பிடித்த நிறங்களில் பச்சை நிறமும் ஒன்று...நல்ல பதிவிற்கு மிக்க நன்றி.../////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி ஷோபனாஜி!

    ReplyDelete
  77. /////Blogger kmr.krishnan said...
    5ம் எண் பதிவு வாசித்து மகிழ்ந்தேன்.நன்றி ஐயா!
    உமா இவ்வளவு பின்னூட்டத்தையும் ஒரு பதிவாகவே தந்திருக்காலாம்.
    பச்சைக்காளி பவ‌ளக்காளிக்குச் சரியான ஆள் தஞ்சாவூரார்தான்.அவர்தான் சரித்திரப்பேராசிரியர்./////

    சரித்திரப் பேராசியரா? தகவ்ல் புதிதாக உள்ளதே சுவாமி!

    ReplyDelete
  78. ஐந்தாம் எண்ணைப் பற்றிய தகவல்களில் நான் குறிப்பிட மறந்தது அவர்களது dual personality . ஜோதிடப்படி புதன் ஓர் அலிக்கிரகம். இதைப்பற்றிய மேலதிகத்தகவல்கள் யாருக்காவது தெரிந்தால் பகிரவும்.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com