மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

6.11.08

ஜோ.பாடம்.130: பன்னிரெண்டாம் வீடு - முதல் பகுதி!

ஏமாற்றங்கள், துரோகங்கள், நஷ்டங்கள், கவலைகள், வெளியில் சொல்ல முடியாத
பய உணர்வுகள், விரையங்கள், செலவுகள், தண்டனைகள். படுக்கை சுகங்கள்,
தூக்கம், தீய பழக்கங்கள், ரகசிய எதிரிகள், பிறந்த இடத்தில் இருந்து தொலை
தூரத்தில், வேறு இடங்களில் வசிப்பது , இடது கண், கால்கள், பாதங்கள், அடுத்த
பிறவி போன்ற பல விஷயங்களைச் சுட்டிக் காட்டுவது பன்னிரெண்டாம் வீடு.

மொத்தத்தில் பன்னிரெண்டாம் வீட்டில் குறிப்பிடப்பட்டுள்ள பல விஷயங்கள்
நம்மைக் கேட்காமலே நடக்ககூடியவை. நாம் முயன்றாலும் தடுக்க முடியாதவை.
நாம் விரும்பாவிட்டாலும் வந்து நின்று நம்மைத் தொல்லைப் படுத்துபவை.

ஆகவே இருக்கின்ற வீடுகளிலேயே மிகவும் மோசமான வீடு பன்னிரெண்டாம்
வீடுதான்.

அதை மோசமான வீடு என்று சொல்லாமல் மறைவிடம் என்று ஜோதிட வல்லுனர்கள்
குறிப்பிடுவார்கள்.

நட்பு, நட்பு என்று அலைபவன், தன் நண்பன் ஒருவனால் ஒரு துரோகத்தைச்
சந்திக்கும்பொதுதான் நட்பை முறித்துக் கொண்டு, "இறைவா, என் எதிரிகளை நான்
பார்த்துக் கொள்கிறேன்; என் நண்பர்களை நீ பார்த்துக்கொள்!" என்பான்.

சேர்த்து வைத்த பணத்தை எல்லாம், ஒரு நாள் பங்கு வணிகத்திலோ அல்லது
ரியல் எஸ்டேட்டின் வீழ்ச்சியிலோ பறி கொடுத்த பிறகுதான் ஒரு மனிதனுக்கு நஷ்டம்
என்பது என்ன வென்று தெரியவரும்.

ஆசை ஆசையாக வளர்த்த பெண், ஒரு நாள் சொல்லாமல் கொள்ளாமல், வீட்டை
விட்டுத் தனக்குப் பிடித்தமானவனுடன் ஓடிப்போய் விடும்போதுதான் அல்லது வளர்த்த
மகன், "அப்பா, உன்னை வீட்டில் வைத்து போஷிக்க என் மனைவி விரும்பவில்லை,
நான் பணம் கட்டிவிடுகிறேன், நீ முதியோர் இல்லத்தில் போய் இரு" என்று சொல்லும்
போதுதான்," தென்னையை பெத்தா இளநீரு, பிள்ளையைப் பெத்தா கண்ணீரு;
பெத்தவன் மனமே பித்தம்மா பிள்ளை மனசே கல்லம்மா" என்ற பாடல் நினைவிற்கு
வந்து அல்லாடுவான்.

"தீய பழக்கங்கள், வேலைக்காரனைப் போல முதலில் வரும்.பிறகு அது உனக்கு
எஜமானாக மாறிவிடும். ஆகவே தீய பழக்கங்கள் வேண்டாம் ' என்று பெரியவர்கள்
சொல்வதைக் கேட்காமல், "அவர்கள் கிடக்கிறார்கள், அனுபவிக்கத்தெரியாதவர்கள்"
என்று சொல்லி தீய பழக்கங்களுக்கு உள்ளாகுபவன், ஒரு நாள் கடும் நோய் வந்து
மருத்துவ மனையில் படுத்துப் பெரும் செலவுகளைச் சந்திக்கும்போதுதான், தீய
பழக்கங்களின் கொடுமையை உணருவான்.

'காதலி, காதலி என்று ஒரு தேவதைக்காக உருகியவன், உருகிப் பெற்றோர்களை
உதறிவிட்டு, அவளைக் கை பிடித்தவன், திருமணத்திற்குப் பிறகு, தோற்றத்தில்
மட்டும்தான் அவள் தேவதை, குணத்தில் அவள் பிசாசு' என்று தெரிந்து கொள்ளூம்
போதுதான், தான் ஏமாந்து போனதை உணருவான்.

இப்படிப் பக்கம் பக்கமாக எழுதிக்கொண்டே போகலாம். கட்டுரையின் நீளம் கருதி
பல உணர்த்தல்களை உங்கள் பரிசீலனைக்கு விட்டு விடுகிறேன்.

இப்படி வாழ்க்கையில் பல துன்பமான அனுபவங்களைப் பெற்று, கசப்புற்று,
இறுதியில், போனால் போகட்டும் போடா அல்லது யாரை நம்பி நான் பிறந்தேன்
போங்கடா போங்க என்று ஒருவன் சொல்லும் நிலைக்கு வருவது இந்தப்
பன்னிரெண்டாம் வீட்டை வைத்துத்தான்.

"அடும்வரை ஆட்டம், ஆயிரத்தில் நாட்டம்
கூடிவரும் கூட்டம் கொள்ளிவரை வருமா?" என்று உறவுகளைப் பற்றியும்,
நண்பர்களைப் பற்றியும் ஒருவனுக்கு உணரவைத்து, உலகில் எதுவுமே நிலையானது
அல்ல, நிலையாமைதான் நிலையானது என்கின்ற ஞானத்தைக் கொடுப்பதும்
இந்தப் பன்னிரெண்டாம் வீடு!

ஞானம் என்றால் முழுமையான அறிவு (wisdom) என்று பொருள்

இந்த ஞானம் எப்போது வரும்?

சிலருக்கு 40 வயதில் வரும், சிலருக்கு 50 வயதில் வரும், சிலருக்கு 60 வயதில்
வரும், சிலருக்கு 70 அல்லது 80 வயதில் வரும். ஆனால் வராமல் இருக்காது.
சனி, ராகு, கேது ஆகிய மூன்று கிரகங்களுக்கும் அதுதான் வேலை. அவைகள்
உணர்த்தாமல் விடாது. அந்த உணர்த்தலில் இருந்து எந்த மனிதனும் தப்பிக்க
முடியாது. சிலருக்குக் கொஞ்சம் மொஞ்சமாகப் புரியவைப்பார்கள். சிலருக்கு
அதிரடியாக ஒரே நாளில் புரிய வைப்பார்கள்! இது அவரவர்கள் ஜாதகப் பலன்!

எல்லாம் இருக்கிறது; நீ மட்டும் எங்கே போனாய்?

சட்டையைப் பிடித்து உலுக்கி. செவிட்டில் அறைவதைப்போன்று சொல்வது -
நெத்தியடியாக ஒரு விஷயத்தைச் சுருங்கச் சொல்வது எல்லாம் - சிலருக்கு
மட்டுமே கைவந்த கலை. அப்படிச் சொன்னவர்களில் பட்டினத்தாருக்கு ஈடு
இணையாக ஒருவரும் இல்லை. ஞானம் பெற பட்டினத்தார் பாடல்களைப் படிக்க
வேண்டும். அந்தப் பாடல்களை ஒரு வார்த்தையில் வர்ணிக்க வேண்டும் என்றால்
இப்படிச் சொல்ல வேண்டும்.

"புதையல் (Treasure) "
-------------------------------------------------------------------------------------
எல்லாம் இருக்கிறது; நீ மட்டும் எங்கே போனாய்?

மனித வாழ்வு, ஒருநாள் முடிந்து, ஒன்றுமில்லாமல் போய் விடும் அவலத்தை,
பட்டினத்தார் அற்புதமாக நான்கே வரிகளில் நெத்தியடியாக ஒரு பாட்டில்
சொன்னார்.

திருபானி அம்பானியாக இருந்தாலும் சரி, இந்திரா காந்தியாக இருந்தாலும்
சரி, பில் கேட்சாக இருந்தாலும் சரி அல்லது வாரன் ப்ஃபெட்டாக இருந்தாலும்
சரி, அல்லது சாதாரண குப்பன், சுப்பனாக இருந்தாலும் சரி எல்லொருக்கும்
அந்த ஒரு பாட்டு போதும். வாழ்க்கையின் அவலம் விளங்கும். முடி சார்ந்த
மன்னனும் ஒரு நாள் பிடி சாம்பலாகிப் போவான் என்ற வாழ்க்கையின்
முடிவு தெரிய வரும்!!

”வீடிருக்கத் தாயிருக்க வேண்டுமனை யாளிருக்கப்
பீடிருக்க வூணிருக்கப் பிள்ளைகளும் தாமிருக்க
மாடிருக்கக் கன்றிருக்க வைத்த பொருளிருக்கக்
கூடிருக்க நீபோன கோலமென்ன கோலமே!”
- பட்டினத்தார்

முன்பே பதிவில் எழுதியதுதான். இருந்தாலும் இந்தப் பாடத்திற்கு அது சம்பந்தம்
உடையது என்பதால் மீண்டும் அந்த வரிகளை உங்களுக்காக இன்று கொடுத்துள்ளேன்

”நீ பிறந்த வீடு இருக்கிறது. நீ பொருள் சேர்த்துக் கட்டிய வீடு இருக்கிறது
உன்னைப்பெற்றவள் இருக்கிறாள், உன் கரம் பிடித்தவளும் இருக்கிறாள்
நீ பெற்ற பிள்ளைகளும் இருக்கின்றன
நீ பெற்ற விருதுகளும், ஊர் பேசிய பெருமைகளும் இருக்கின்றன
உற்றார் உறவினர்களும் இருக்கிறார்கள், சேர்த்த பொருள்களும் இருக்கின்றன
உனக்கு அடுத்த வேளை உணவும் தயாராக இருக்கிறது. இத்தனை காலமும்
உனக்கு உருவமளித்த உடலும் இங்கே இருக்கிறது -உயிரற்ற நிலையில்!
உன்னை மட்டும் காணவில்லையே - எங்கே போனாய்?”

பீடு = பெருமை (Honour)
ஊண் = உணவு (food)
----------------------------------------------------------------------------------
இந்தப் பாட்டிலுள்ள கருத்தைக் கவியரசர் கண்ணதாசன்
அவர்கள் எளிமைப்படுத்தி இப்படிச்சொன்னார்:

ஆடிய ஆட்டமென்ன?
தேடிய செல்வமென்ன?
திரண்டதோர் சுற்றமென்ன?
பேசிய வார்த்தையென்ன?
கூடுவிட்டு ஆவிபோனால்
கூடவே வருவதென்ன?
----------------------------------------------------------------------------------
மொத்ததில் மனிதனுக்கு ஞானத்தைத் தருவது பன்னிரெண்டாம் வீடு.
அது மறைவிடம் அல்ல. மனிதன் மறைத்து வைத்துவிட்டுப் பார்க்கப்
பயப்படும் இடம்.

(பாடம் தொடரும்)

வாழ்க வளமுடன்!

62 comments:

  1. முன்னுரையே கனஜோராயிருப்பதால், பாடத்துக்கு வெயிட்டிங்கு!

    மீ த பர்ஸ்டு!

    ReplyDelete
  2. எல்லாம் இருந்தாலும் இருப்பதென்னவோ ஒன்றுமில்லைதானே!

    :)

    நல்லா இருந்தது!

    ReplyDelete
  3. பட்டினத்தார் பாடலும் விளக்கமும் அருமை!

    ReplyDelete
  4. பாட நேரத்திற்கு கரெக்டாக வந்துவிட்டேன் வாத்தியரே.

    அடுத்த வகுப்புக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்..

    ReplyDelete
  5. ஐயா வணக்கம்.
    முன்னோட்டம் முத்தாய்ப்பாக உள்ளது.
    அதிலும்,
    ///பல உணர்த்தல்களை உங்கள் பரிசீலனைக்கு விட்டு விடுகிறேன்./// இந்த வாசகம் மிக்க பொருள் பொதிந்தது.

    ReplyDelete
  6. I ENJOY ALL THESE SAME TIME FOR THE PAST 6 MONTHS....

    ReplyDelete
  7. ////கெக்கேபிக்குணி (05430279483680105313!) said...
    முன்னுரையே கனஜோராயிருப்பதால், பாடத்துக்கு வெயிட்டிங்கு!
    மீ த பர்ஸ்டு!////

    வாருங்கள் சகோதரி! ஒரு மாதத்திற்கும் மேலாக வகுப்பறைக்கு வராமல் டிமிக்கி கொடுத்துவிட்டீர்களே?
    முன் பாடங்களை எல்லாம் படித்தீர்களா?

    ReplyDelete
  8. ////நாமக்கல் சிபி said...
    எல்லாம் இருந்தாலும் இருப்பதென்னவோ ஒன்றுமில்லைதானே! :)
    நல்லா இருந்தது!/////

    ஆமாம் சிபி, பல சித்தர்களும் இந்த நிலையைத்தான் பாடி வைத்து விட்டுப் போயிருக்கிறார்கள்

    ReplyDelete
  9. /////நாமக்கல் சிபி said...
    பட்டினத்தார் பாடலும் விளக்கமும் அருமை!////

    நன்றி சிபியாரே! உங்களுக்குப் பிடித்திருப்பதால் உங்கள் கிளைகாரருக்கும் பிடிக்கும் என்று நினைக்கிறேன். எங்கே அவரைக் காணோம்?

    ReplyDelete
  10. ////கோவை விமல்(vimal) said...
    பாட நேரத்திற்கு கரெக்டாக வந்துவிட்டேன் வாத்தியரே.
    அடுத்த வகுப்புக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்..//////

    வருக! வருக! நன்றி!

    ReplyDelete
  11. //////தியாகராஜன் said...
    ஐயா வணக்கம்.
    முன்னோட்டம் முத்தாய்ப்பாக உள்ளது.
    அதிலும்,
    ///பல உணர்த்தல்களை உங்கள் பரிசீலனைக்கு விட்டு விடுகிறேன்./// இந்த வாசகம் மிக்க பொருள் பொதிந்தது.//////

    ஆமாம் உண்மைதான். அவரவர்கள் யோசிக்கும்போதுதான் பல விஷயங்கள் அவர்களுக்குப் பிடிபடும்!

    ReplyDelete
  12. /////vipoosh said...
    I ENJOY ALL THESE SAME TIME FOR THE PAST 6 MONTHS....////

    ஆனால் இன்றுதான் அதை வெளிப்படுத்தியுள்ளீர்கள்! .நன்றி!

    ReplyDelete
  13. 12-வது இடத்தைப் பற்றிய படத்திற்கான அறிமுகம்/ஆரம்பம் அமர்க்களம். அடுத்த பகுதியை எதிர்பார்த்து

    ஆவலுடன்
    இராசகோபால்

    ReplyDelete
  14. This comment has been removed by the author.

    ReplyDelete
  15. நட்பு, நட்பு என்று அலைபவன், தன் நண்பன் ஒருவனால் ஒரு துரோகத்தைச்
    சந்திக்கும்பொதுதான் நட்பை முறித்துக் கொண்டு, "இறைவா, என் எதிரிகளை நான்
    பார்த்துக் கொள்கிறேன்; என் நண்பர்களை நீ பார்த்துக்கொள்!" என்பான்.

    முற்றிலும் உண்மை அய்யா

    ReplyDelete
  16. Dear Sir

    Awesome....the way you presented the topic is excellent...every time when you write introduction...it will be eager for me for next episode,but this one was little different...it made lil heavy hearted..But every sentence has lot of meanings,I salute your writing not only for the way you write but the deep meaning which lies gives the beauty....thanks a bunch.

    -Shankar

    ReplyDelete
  17. /////Rajagopal said...
    12-வது இடத்தைப் பற்றிய படத்திற்கான அறிமுகம்/ஆரம்பம்
    அமர்க்களம். அடுத்த பகுதியை எதிர்பார்த்து
    ஆவலுடன்
    இராசகோபால்/////

    நன்றி கோபால்!

    ReplyDelete
  18. ///////ஸ்ரீதர்கண்ணன் said...
    நட்பு, நட்பு என்று அலைபவன், தன் நண்பன் ஒருவனால் ஒரு துரோகத்தைச்
    சந்திக்கும்பொதுதான் நட்பை முறித்துக் கொண்டு, "இறைவா, என் எதிரிகளை நான்
    பார்த்துக் கொள்கிறேன்; என் நண்பர்களை நீ பார்த்துக்கொள்!" என்பான்.
    முற்றிலும் உண்மை அய்யா//////

    பலவிதமான துரோகங்களையும், ஏமாற்றங்களையும், கஷ்டங்களையும், நஷ்டங்களையும்
    அனுபவித்து வளர்ந்தவன் நான். அனுபவித்து உதறிவிட்டு வந்தவன் நான். அதையெல்லாம்
    பக்கம் பக்கமாக கதைகள் போலச் சுவையாக எழுதலாம். தொடர்போல எழுதலாம்!
    நேரம்தான் இல்லை நண்பரே!

    ReplyDelete
  19. Blogger hotcat said...
    Dear Sir
    Awesome....the way you presented the topic is excellent...every time when you write introduction...it will be eager for me for next episode, but this one was little different...it made lil heavy hearted..But every sentence has lot of meanings,I salute your writing not only for the way you write but the deep meaning which lies gives the beauty....thanks a bunch.
    -Shankar/////

    கட்டுரையின் சிறப்பு, உங்கள் பின்னூட்டத்தின் மூலமாகத்தான் எனக்கே தெரியவருகிறது.
    வழக்கம்போல்தான் எழுதினேன். சிறப்பாகத்தோண்றுவதற்குக் காரணம் மனவலிகளைப்
    பற்றி எழுதியதால் இருக்கலாம். நன்றி சங்கர்!

    ReplyDelete
  20. ஐயா...
    நல்ல தெலிவான கருத்துக்கள்...

    என்னை பொருத்தவரை நீங்களும் ஞானி தான்,உங்கள் எழுத்துக்கள் பலரை ஞானியாக்கும் வல்லமை பெற்றது....நாம் சொல்வது மிகைபடுத்தின ஒன்று அல்ல.

    நன்றி.

    ReplyDelete
  21. ////மதி said...
    ஐயா...
    நல்ல தெளிவான கருத்துக்கள்...
    என்னை பொருத்தவரை நீங்களும் ஞானி தான்,உங்கள் எழுத்துக்கள் பலரை ஞானியாக்கும் வல்லமை பெற்றது....நாம் சொல்வது மிகைபடுத்தின ஒன்று அல்ல.
    நன்றி.////

    நான் அப்படி நினைக்கவில்லை! நான் பெறவேண்டியது இன்னும் இருக்கிறது.
    பெற்றது கைமண் அளவு!

    ReplyDelete
  22. Good Morning Sir,
    You have explained the 12th house very brilliantly. I am going through the Moon Dasa of the 12th Dasa lord Moon. I can understand it better. I have one doubt. What is Mandi.

    ReplyDelete
  23. உங்கள் பதிவை பார்க்கும் போது "பட்டறிவு தரும் இடம் பனிரண்டாம் இடம் " என்று நன்றாகவே உணர முடிகிறது. பட்டு அறிவதால்தான் பட்டறிவு என்று சொன்னார்கள் போல் இருக்கிறது.

    ReplyDelete
  24. ஐயா வணக்கம்.

    அடுத்த பகுதியை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.

    GK, BLR

    ReplyDelete
  25. /////krish said...
    Good Morning Sir,
    You have explained the 12th house very brilliantly. I am going through the Moon Dasa of the 12th Dasa lord Moon. I can understand it better. I have one doubt. What is Mandi.////

    மாந்தி என்பது உபகிரகம். அதைப் பற்றி விவரமாக எழுதுகிறேன். சற்றுப் பொறுத்திருங்கள்

    ReplyDelete
  26. ////Ragu Sivanmalai said...
    உங்கள் பதிவை பார்க்கும் போது "பட்டறிவு தரும் இடம் பனிரண்டாம் இடம் " என்று நன்றாகவே உணர முடிகிறது. பட்டு அறிவதால்தான் பட்டறிவு என்று சொன்னார்கள் போல் இருக்கிறது./////

    ஆமாம். தமிழில் சில சொற்கள் அழுத்தமாகப் பொருள் பொதிந்ததாக இருக்கும்!

    ReplyDelete
  27. ////Geekay said...
    ஐயா வணக்கம்.
    அடுத்த பகுதியை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.
    GK, BLR////

    நாளை மதியம் பதிவிட உள்ளேன் ஜீக்கே!

    ReplyDelete
  28. Dear Guru,

    Your explanations in various classes have been interesting and attracting and this session is no exemption. Great Work.

    I have been enjoying Kannadasan's songs that were simple for layman like me to understand. Pattinathar stuff is difficult to understand without explanation.

    Looking eagarly for the 12th house residing planet and their characteristics.

    Best Wishes

    Sridhar S

    ReplyDelete
  29. ஹலோ சார்,

    அட என்னதிது, இவ்ளோ அசத்தலா ஒரு தொடக்கம்.
    //மொத்தத்தில் பன்னிரெண்டாம் வீட்டில் குறிப்பிடப்பட்டுள்ள பல விஷயங்கள்நம்மைக் கேட்காமலே நடக்ககூடியவை. நாம் முயன்றாலும் தடுக்க முடியாதவை..//

    அப்படியா? நம்மை கேக்காமலே கூட
    நடக்குற விஷயங்களயும் அடுத்த பிறவியை பற்றியும் கூட சொல்ல முடியுமா?

    அப்ப நிஜமாவே ரொம்பவே விறுவிறுபாகத் தான் இருக்கும் னு நினைக்கிறேன். சீக்கிரமா வந்துடுங்க.

    ReplyDelete
  30. ஹலோ சார்,

    //அது மறைவிடம் அல்ல. மனிதன் மறைத்து வைத்துவிட்டுப் பார்க்கப்
    பயப்படும் இடம்.//

    ஆஹா எவ்ளோ அற்புதமான வரிகள்.
    ரொம்ப பிடிச்சிருக்கு.

    ReplyDelete
  31. வாத்தியாரே..

    பட்டினத்தாரின் பாடலுக்கு ஒரு ஜே..

    தங்களது விளக்கத்திற்கு ஒரு ஜே..

    கண்ணதாசனை காட்டியதற்கு ஒரு ஜே..

    சனி, ராகு, கேது ஆகியவர்களை அடையாளம் காட்டியமைக்கு ஒரு ஜே..

    உள்ளது உள்ளபடியே வாழ்க்கையினை படம் பிடித்துக் காட்டியதற்கு இன்னொரு ஜே..

    எல்லாப் புகழும் எங்கள் வாத்தியாருக்கே..

    வாழ்க வாத்தியார்..

    பிட் நியூஸ்

    எதுக்கு இவ்ளோ கோஷம் என்கிறீர்களா..

    எனக்கு 12-வது இடத்தில் சனியும், மாந்தியும் குத்த வைத்து உட்கார்ந்திருக்கிறார்கள் வாத்தியாரே.. என்ன செய்தும் அவர்களை எழுப்பவே முடியவில்லை..

    அதுதான் முன்கூட்டியே தங்களிடம் சரணடைகிறேன்..

    வாழ்க வளமுடன்

    ReplyDelete
  32. //பலவிதமான துரோகங்களையும், ஏமாற்றங்களையும், கஷ்டங்களையும், நஷ்டங்களையும்
    அனுபவித்து வளர்ந்தவன் நான். அனுபவித்து உதறிவிட்டு வந்தவன் நான். அதையெல்லாம்
    பக்கம் பக்கமாக கதைகள் போலச் சுவையாக எழுதலாம். தொடர்போல எழுதலாம்! நேரம்தான் இல்லை நண்பரே!//

    வாத்தியாரே.. தயவு செய்து சிரமம் பாராமல் மாதத்திற்கு ஒன்றாவது எழுதுங்கள்..

    தங்களது அனுபவங்கள் எங்களுக்கெல்லாம் ஒரு பாடமாக அமையுமல்லவா..

    ஜோதிடப் பாடத்தைவிட அனுபவப் பாடம் மிகத் தேவையானது வாத்தியாரே..

    ReplyDelete
  33. ///////krish said...
    Good Morning Sir,
    You have explained the 12th house very brilliantly. I am going through the Moon Dasa of the 12th Dasa lord Moon. I can understand it better. I have one doubt. What is Mandi.////

    மாந்தி என்பது உபகிரகம். அதைப் பற்றி விவரமாக எழுதுகிறேன். சற்றுப் பொறுத்திருங்கள்
    //

    சனியின் மகன் தானே மாந்தி?

    ReplyDelete
  34. நன்மை- தீமை செய்வதில் முக்கியமானவர் சனி மைந்தன் மாந்தி!
    -ஜாதகத்தில் கூர்ந்து கவனிக்க வேண்டியவர்!

    பிறவிப் பலனை அறிய, ஜாதகத்தில் ஸ்ரீசனீஸ்வரரைப்போல் சனியின் மைந்தன் மாந்தியின் அமைப்பும் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. சனி ஆயுள் காரகன் என்றால், மாந்தி மரணத்திற்கு காரகன் ஆவார். சர்ப்ப கிரகங்களான ராகு- கேதுவைவிட மாந்திக்கு அதிகப் பலன் உண்டு என நூல்கüல் கூறப்பட்டுள்ளது.

    ஸ்ரீவிஷ்ணு பகவான் கூர்ம அவதாரம் எடுத்த பின்னரே ராகு- கேதுக்கள் தோன்றி னர். தேவர்களுக்கெல்லாம் சிம்ம சொப்பன மாக விளங்கிய இராவணனின் அழிவுக்குப் பிறகு ராகு- கேதுக்கள் மகாவிஷ்ணுவின் ஆசியுடன் கிரகப் பதவியேற்றனர்.

    இராவணன் மகன் மேகநாதன் (எ) இந்திரஜித் பிறந்த நேரத்திலேயே மாந்தி அவதரித்தார். சர்வ வல்லமையும், அரிய அற்புதமான வரங்களையும் பெற்ற இந்திரஜித் தின் இறப்பின் பொருட்டே, அவன் பிறக்கும்போதே பிறந்தவர்தான் மாந்தி.

    ஸ்ரீசனீஸ்வரரைப்போல் சர்வ வல்லமை பெற்றவர்தான் மாந்தி. சனிக்கு நிகரானவர் எனலாம். அதனால் ஜாதகத்தில் மாந்தியின் பலன்களையும் நிர்ணயித்து அறிய வேண்டும். மாந்தி கடிகாரச் சுற்று முறையில் வலம் வரும் கிரகமாகும். மாந்தி ஆவியுலகத் தலைவர் ஆவார். சனீஸ்வரர் ஸ்ரீஐயப்பனுள் இணைந்தவர். மாந்தி ஆஞ்சனேயருள் இணைந்தவர்.

    கேரளா, ஆந்திரா போன்ற மாநிலங்கüல் மாந்திக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து ஜாதகத்தில் குறிப்பார்கள். மாந்தியினால் விளையும் நன்மை, தீமைகளையும் கூறுவார்கள். குருவாயூர் தேவஸ்தான பஞ்சாங்கத்தில், பாலக்காடு ரேகாம்சத்தைக் கணக்கிட்டு மாந்தியின் உதய நேர விவரங்கள் குறிக்கப்பட்டிருக்கும்.

    தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, மாந்தி என்ற கிரகம் இருப்பதை நன்கு அறிந்திருந்தா லும், பெரும்பாலும் அது பஞ்சாங்கங்கüல் குறிப்பிடப்படுவதில்லை. மிக அபூர்வமாக ஒரு சில ஜோதிடர்களே மாந்தியை ஜாதக ராசிக்கட்டத்தில் குறிக்கின்றனர். மேலும் ஜாதகத்தில் மாந்தி குறிக்கப்பட்டிருந்தாலும், மாந்தியைக் கண்டும் காணாததுபோல் இருந்து விடுகின்றனர்.

    ஜாதக ராசிக்கட்டத்தில் மாந்தியைக் குறிக்காவிட்டால் மாந்தி என்ற கிரகம் இல்லையென்று ஆகிவிடாது. ஜாதக ராசிக்கட்டங்களான பன்னிரண்டு வீடுகüல் ஏதாவது ஒன்றில் நிச்சயம் மாந்தி இருப்பார். மாந்தி அமர்ந்த இல்லத்திற்கேற்ப- மாந்தி சேர்க்கை பெற்ற கிரகத்திற்கேற்ப அதன் பலன்கள் நமக்கு நிச்சயம் நடைபெறும்.

    மகரம், கும்பம் ஆகிய ராசிகளை ஆட்சி வீடாகப் பெற்ற ஸ்ரீசனீஸ்வரரிடமிருந்து கும்ப ராசியை ஆட்சி வீடாகப் பெற்றவர்தான் மாந்தி. இவருக்கு உச்ச வீடு, நீச வீடு இல்லை. மாந்தி தான் அமர்ந்திருக்கும் இடத்தி-ருந்து 2, 7, 12 ஆகிய இல்லங்களைப் பார்ப்பார் என நூல்கüல் கூறப்பட்டுள்ளது.

    சனீஸ்வரர் கெடுப்பது உண்டென்றாலும், குதூகலமான சந்தோஷத்தையும் நன்மை களையும், செல்வம், செல்வாக்கு, ராஜயோகம் போன்றவற்றையும் வாரிவழங்கி, ஒருவரின் வாழ்க்கைத் தரத்தை வானளாவ உயர்த்திப் புகழ் பெற வைப்பார். இதனால்தான் "மந்தன் செய்வதைப்போல் மகேஸ்வரன்கூட செய்ய மாட்டார்' எனச் சொல்வார்கள். ஸ்ரீசனீஸ்வர ரைப்போல் மைந்தன் மாந்திக்கும் மேலே சொல்லப்பட்ட பலன்கள் யாவும் பொருந்தும்.

    ஜாதகத்தில் மாந்தியின் அமைப்பில் பூர்வீக சாபம், அதிர்ஷ்டம், குடும்பம், தொழில், மனைவி, எதிர்பாராத நன்மை, திடீரென ஏற்படும் விபத்துகள், மரண அபாயம், அவமானம், புதையல், துர்ஆவிகüனால் துன்பம் போன்றவற்றை அறியலாம்.

    பொதுவாக மாந்தி இருக்கும் கிரகத்தின் பலன் எட்டாம் வீட்டோன் பலன்போல் அசுபப் பலனாக அமையும். மாந்தி ஜாதகத்தில் எந்த பாவத்தில்- எந்த காரகர்களுடன் இருந்தாலும், சேர்ந்தாலும், பார்த்தாலும் அந்த காரகத்துவப்படி தீய பலனாகும். மாந்தியைப் பொறுத்தவரை ஜாதகத்தில் ஓரிரு இடங் களைத் தவிர, தான் இருக்கும் இடங்கüல் தீய பலன்களையே அüப்பார். பொதுவாக மாந்தி எந்த கிரகத்துடனும் சேராமல் இருப்பது சிறந்த பலனாகும்.

    ஜாதகத்தில் மாந்தியின் பலன்கள்

    ஜாதகத்தில் மாந்தி நின்ற ராசிநாதன் கேந்திரம், திரிகோணம் ஆகியவற்றில் அமையப் பெற்றால், ஜாதகர் பெரும் செல்வத்திற்கு அதிபதி யாகவும்; செல்வம், செல்வாக்கு, பூமி, மனை, வாகனம் உள்üட்ட எல்லா ஐஸ்வர்யங் களுடனும் வாழ்வார். லக்னத்திற்கு 11-ல் மாந்தி நின்றாலும் ராஜயோகம்.

    லக்னத்திற்கு 6, 8, 12-ல் சந்திரன் அமர்ந்து ஆவியுலகத் தலைவன் மாந்தி சேர்க்கை பெற்றால், ஜாதகர் துர்ஆவிகüனால் பீடிக்கப்பட்டு மரண வேதனை அடைவார். ஸ்ரீஆஞ்சனேயரை வழிபட்டால் துர்ஆவிகள் விலகும். மாந்தியினால் ஏற்பட்ட தோஷம் விலகும்.

    மாந்திக்கு 7-ல் புதன் அமர்ந்து சுபர்களால் பார்க்கப்பட்டால், ஜாதகர் தந்தை செய்த தொழில் மூலம் நிரம்ப வருமானம் பெற்று எல்லா ஐஸ்வர்யங்களுட னும் வாழ்வார்.

    ஆண் ஜாதகருக்கு, மாந்திக்கு 3-ல் சனி அமர்ந்தால், ஜாதகரின் சகோதரர் தீய பழக்கங்கள் மிகுந்தவராவார். குலப்பெருமை கெடும். அரச தண்டனைக்கு உள்ளாவார்.

    பெண் ஜாதகத்தில், மாந்திக்கு 3-ல் சனி அமர்ந்து ஜென்ம நட்சத்திரம் ரோகிணி என்றால், ஜாதகிக்கு இல்லற வாழ்க்கையில் சிறிதும் நிம்மதியிராது. வாழ்க்கையில் பெரும் பகுதி போராட்டமாக இருக்கும். பிறந்த வீட்டிற்கும் புகுந்த வீட்டிற்கும் துரதிர்ஷ்டமா கும். தோஷம் மிகுதி.

    மாந்திக்கு 5-ல் ராகு அல்லது சனி இருந்தால், ஜாதகர் ஆண்மையில்லாதவரா வார். பெண் ஜாதகம் என்றால் பிரசவத்தில் துன்பம் ஏற்படும். பெண் ஜாதகத்தில் செவ்வாய், சூரியனோடு மாந்தி சேர்க்கை பெற்றால் நெறியற்ற வாழ்க்கை வாழ்வாள்.

    லக்னத்திற்கு 5, 9-ஆம் இடங்கள் கன்னி, மிதுனம், மகரம், கும்பம் போன்ற ராசிகüல் ஒன்றாக அமைந்து, சனி- மாந்தி சேர்க்கையோ, பார்வையோ 5, 9-ஆம் இடங்களுக்கு ஏற்பட்டால் ஜாதகி மலடியாவாள்.

    லக்னத்திற்கு 3-ல் சனி உச்சம் பெற்று மாந்தியின் சேர்க்கை பெற்று சுக்கிரன் பார்த்தால், ஜாதகர் பெண் பித்தனாவான். பெண் நோயால் அவதியுறுவான்.

    லக்னத்திற்கு 4-ல் கேதுவும் மாந்தியும் சேர்க்கை பெற்றால் மிகுந்த துரதிர்ஷ்ட மாகும். வாழ்க்கையில் எல்லா விஷயங்கü லும் அதிருப்தி காணப்படும். ஒரு இடத்திலும் நிலையாக வாழ முடியாது. நாடோடி போல் வாழ்க்கை அமையும். தாய்க்கும் தோஷமாகும்.

    பெண்ணின் ஜாதகத்தில் சுக்கிரனுக்கு 4-ல் மாந்தி நின்றால் புத்திரதோஷம் மிகுதி. கணவன் நோயாü ஆவான். 4-ல் உள்ள மாந்தியுடன் சனி சேர்க்கை பெற்றாலோ பார்த்தாலோ ஜாதகி மிகுந்த துரதிர்ஷ்டசா-. லக்னத்திற்கு 2, 8-ல் சர்ப்ப கிரகங்கள் அமையப் பெற்று மாந்தி சேர்க்கை பெற்றால், நாக தோஷத்தால் மாங்கல்ய தோஷமாகும்.

    ஆண், பெண் ஜாதகங்கüல் லக்னத்திற்கு 2, 5, 8, 11 போன்ற இடங்கüல் மாந்தி இருப்பின், ஜாதகர் இந்தப் பிறவியில் செய்யும் கர்மப்பலனை அடுத்த பிறவியில் அனுபவிக்க நேரிடும்.

    லக்னத்திற்கு 1, 4, 7, 10 போன்ற இடங்கüல் மாந்தி இருப்பின், ஜாதகர் இந்தப் பிறவியில் தமக்குத் தெரிந்தே சந்தர்ப்ப சூழ்நிலையால் பல தவறுகள்- குற்றங்களைப் புரிய உள்ளார் என்பதை அறிவிப்பதாகும். அதேசமயம் ஜாதகர் செய்யக்கூடிய தவறுகள்- குற்றங்களுக்கேற்ப சரியான தண்டனைகளை உடனுக்குடன் அனுபவிக்க நேரிடும்.

    குüகையின் அற்புதப் பலன்கள்

    மாந்திக்கு குüகன் என்ற சிறப்பு பெயர் உண்டு. பொதுவாக குüகைக் காலம் நல்ல காலம்- சுபகாலம் என நூல்கüல் கூறப்பட்டுள்ளது. சனியின் மைந்தனாகிய மாந்தி ஒவ்வொரு நாüலும் தான் ஆட்சி செய்யும் குüகைக் காலத்தில் செய்யப்படும் சுபகாரியங்களை- மகிழ்ச்சிக்குரிய காரியங்களை மேன்மேலும் பன்மடங்கு அபிவிருத்தி செய்து நம்மை மகிழச் செய்வார்.

    குüகைக் காலத்தில் பூமி, மனை, வாகனம் வாங்கலாம். ஆடை, ஆபரணங்கள் வாங்கலாம்; அணிந்து மகிழலாம். புதுவீட்டிற்குக் குடிபோகலாம். கல்வி பயிலலாம். பயிர் அறுவடை செய்யலாம். மனைவியுடன் உறவு கொள்ளலாம். வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுக்கலாம். பாங்கில் புதிய கணக்கு துவங்கி சேமிக்கலாம். வெகுமதி கொடுக்கலாம். பதவியேற்கலாம். பொதுவாக நமக்கு முன்னேற்றம் தரும் மகிழ்ச்சிக்குரிய சுபகாரியங்கள் அனைத்தையும் குüகைக் காலத்தில் செய்தால் சிறப்பான முன்னேற்றம் ஏற்படும்.

    அதேபோல் நமக்குத் துன்பம் தரக்கூடியக் காரியங்களை குüகைக் காலத்தில் செய்தால் அவை பன்மடங்கு அபிவிருத்தியாகி துன்பங்கள் எல்லையில்லாமல் காணப்படும்.

    பொதுவாக ஒரு மனிதர் இறந்துவிட்டால் பிரேதத்தை மயானத்திற்கு எடுத்துச் செல்ல குüகைக்காலம் தவிர்த்துதான் எடுத்துச் செல்வார்கள் என்பது அனைவரும் அறிந்ததே!

    Balajothidam.

    ReplyDelete
  35. /////Sridhar said...
    Dear Guru,
    Your explanations in various classes have been interesting and attracting and this session is no exemption. Great Work.
    I have been enjoying Kannadasan's songs that were simple for layman like me to understand. Pattinathar stuff is difficult to understand without explanation.
    Looking eagarly for the 12th house residing planet and their characteristics.
    Best Wishes
    Sridhar S///

    நன்றி நண்பரே!

    ReplyDelete
  36. /////sumathi said...
    ஹலோ சார்,
    அட என்னதிது, இவ்ளோ அசத்தலா ஒரு தொடக்கம்.
    //மொத்தத்தில் பன்னிரெண்டாம் வீட்டில் குறிப்பிடப்பட்டுள்ள பல விஷயங்கள்நம்மைக் கேட்காமலே நடக்ககூடியவை. நாம் முயன்றாலும் தடுக்க முடியாதவை..//
    அப்படியா? நம்மை கேக்காமலே கூட
    நடக்குற விஷயங்களயும் அடுத்த பிறவியை பற்றியும் கூட சொல்ல முடியுமா?
    அப்ப நிஜமாவே ரொம்பவே விறுவிறுப்பாகத் தான் இருக்கும்னு நினைக்கிறேன். சீக்கிரமா வந்துடுங்க./////

    உங்கள் பாராட்டுக்களுக்கு நன்றி சகோதரி!

    ReplyDelete
  37. ////sumathi said...
    ஹலோ சார்,
    //அது மறைவிடம் அல்ல. மனிதன் மறைத்து வைத்துவிட்டுப் பார்க்கப்
    பயப்படும் இடம்.//
    ஆஹா எவ்ளோ அற்புதமான வரிகள்.
    ரொம்ப பிடிச்சிருக்கு./////

    உங்கள் பாராட்டுக்களுக்குமீண்டும் ஒரு நன்றி சகோதரி!

    ReplyDelete
  38. உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
    வாத்தியாரே..
    பட்டினத்தாரின் பாடலுக்கு ஒரு ஜே..
    தங்களது விளக்கத்திற்கு ஒரு ஜே..
    கண்ணதாசனை காட்டியதற்கு ஒரு ஜே..
    சனி, ராகு, கேது ஆகியவர்களை அடையாளம் காட்டியமைக்கு ஒரு ஜே..
    உள்ளது உள்ளபடியே வாழ்க்கையினை படம் பிடித்துக் காட்டியதற்கு இன்னொரு ஜே..
    எல்லாப் புகழும் எங்கள் வாத்தியாருக்கே..
    வாழ்க வாத்தியார்..
    பிட் நியூஸ்
    எதுக்கு இவ்ளோ கோஷம் என்கிறீர்களா..
    எனக்கு 12-வது இடத்தில் சனியும், மாந்தியும் குத்த வைத்து உட்கார்ந்திருக்கிறார்கள் வாத்தியாரே.. என்ன செய்தும் அவர்களை எழுப்பவே முடியவில்லை..
    அதுதான் முன்கூட்டியே தங்களிடம் சரணடைகிறேன்..
    வாழ்க வளமுடன்//////

    பழநி அப்பனின் ஆத்மார்த்தமான பக்தர் நீங்கள்! கவலை எதற்கு?
    அவனிடம் சரணடைந்த பிறகு சகலத்தையும் அவன் பார்த்துக் கொள்வான்
    என்று நம்பிக்கைவையுங்கள்.

    திருமுருகாற்றுப்படைப் பாடல்களில் ஏதாவது மூன்று பாடல்கள்
    அல்லது கந்தசஷ்டிக் கவசப் பாடலைத் தினமும் நேரம் கிடைக்கும் போது
    (10 நிமிடங்களுக்கு மேல் ஆகாது)படியுங்கள்.
    படுத்தும் கோள்களை அவன் கைவேல் பார்த்துக்கொள்ளும்!

    ReplyDelete
  39. உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
    //பலவிதமான துரோகங்களையும், ஏமாற்றங்களையும், கஷ்டங்களையும், நஷ்டங்களையும்
    அனுபவித்து வளர்ந்தவன் நான். அனுபவித்து உதறிவிட்டு வந்தவன் நான். அதையெல்லாம்
    பக்கம் பக்கமாக கதைகள் போலச் சுவையாக எழுதலாம். தொடர்போல எழுதலாம்! நேரம்தான் இல்லை நண்பரே!//
    வாத்தியாரே.. தயவு செய்து சிரமம் பாராமல் மாதத்திற்கு ஒன்றாவது எழுதுங்கள்..
    தங்களது அனுபவங்கள் எங்களுக்கெல்லாம் ஒரு பாடமாக அமையுமல்லவா..
    ஜோதிடப் பாடத்தைவிட அனுபவப்பாடம் மிகத் தேவையானது வாத்தியாரே.////

    ஆகா, எழுதினால் போயிற்று! நீங்கள் சொல்லிக் கேட்காமலா?

    ReplyDelete
  40. ////மிஸ்டர் அரட்டை said...
    ///////krish said...
    Good Morning Sir,
    You have explained the 12th house very brilliantly. I am going through the Moon Dasa of the 12th Dasa lord Moon. I can understand it better. I have one doubt. What is Mandi.////
    மாந்தி என்பது உபகிரகம். அதைப் பற்றி விவரமாக எழுதுகிறேன். சற்றுப் பொறுத்திருங்கள்
    // சனியின் மகன் தானே மாந்தி?////

    ஆமாம் நண்பரே!

    ReplyDelete
  41. /////Blogger Geekay said...
    நன்மை- தீமை செய்வதில் முக்கியமானவர் சனி மைந்தன் மாந்தி!
    -ஜாதகத்தில் கூர்ந்து கவனிக்க வேண்டியவர்! /////

    Balajothidam. கட்டுரையை இங்கே பதிவிட்டமைக்கு நன்றி
    மாந்தியைப் பற்றி என்னிடமும் சில தகவல்கள் உள்ளன
    அதைத் தனிப்பதிவாகப் பிறகு இடுகிறேன்!

    ReplyDelete
  42. வாத்தியாரையா,

    கடைசி வீடு அமர்க்களமான ஆரம்பமாக இருக்கிறதே. அடுத்த பாடத்துக்கு வெயிட்டிங்.

    ReplyDelete
  43. Waiting for next lession! Enakku 12 th, 4 th veedukal parivarthanai

    ReplyDelete
  44. திருமுருகாற்றுப்ப்டை பாடல்களுக்கு இங்கே செல்லவும்!

    http://www.tamilnation.org/literature/pattuppaatu/mp067.htm

    ReplyDelete
  45. அய்யா வந்துட்டேனுங்க.

    ReplyDelete
  46. //நாமக்கல் சிபி said...
    திருமுருகாற்றுப்ப்டை பாடல்களுக்கு இங்கே செல்லவும்!
    http://www.tamilnation.org/literature/pattuppaatu/mp067.htm//

    நன்றி தம்பி..

    அண்ணன் கேட்காமலேயே உதவி செய்கிறாயே.. வாழ்க வளமுடன்..

    ReplyDelete
  47. //////அமர பாரதி said...
    வாத்தியாரையா,
    கடைசி வீடு அமர்க்களமான ஆரம்பமாக இருக்கிறதே. அடுத்த பாடத்துக்கு வெயிட்டிங்.//////

    எனக்குப் பிடித்த வீடு அதுதான். மனிதனைப் புடம் போடும் வீடும் அதுதான். தத்துவங்களைக் கற்றுத்தரும் வீடும் அதுதான். அதனால்தான் என்னை அறியாமலேயே சிறப்பாக எழுத வருகிறது! உள்ள உணர்வுகள் எழுத வைக்கின்றன!

    ReplyDelete
  48. ////தங்ஸ் said...
    Waiting for next lession! Enakku 12 th, 4 th veedukal parivarthanai////

    நன்றி தங்ஸ்! பரிவர்த்தனை யோகம் உச்சத்திற்குச் சமமானது!அந்த இரண்டு வீடுகளுமே சிறப்புறும்!

    ReplyDelete
  49. /////நாமக்கல் சிபி said...
    திருமுருகாற்றுப்ப்டை பாடல்களுக்கு இங்கே செல்லவும்!
    http://www.tamilnation.org/literature/pattuppaatu/mp067.htm////

    நக்கீரர் எழுதியதை நாமக்கல்லார் பிடித்துக் கொடுத்துவிட்டீர். நன்றி.
    இணையத்தின் சிறப்பு இதுதான் - கேட்டது கிடைக்கிறது
    வகுப்பறையின் சிறப்பு - வாத்தியார் நினைப்பதை செயல் படுத்தும் மாணவக் கண்மணிகள்!

    ReplyDelete
  50. /////ஜே கே | J K said...
    அய்யா வந்துட்டேனுங்க.////

    வாங்க ஜே.கே! அன்பே வா படத்தில் ஜே.பி யாக வரும் தலைவரின் பெயரைப்போல உங்கள் பெயர்
    ஜே.கே என்பதும் மகிழ்வைத்தருகிறது!

    ReplyDelete
  51. /////உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
    //நாமக்கல் சிபி said...
    திருமுருகாற்றுப்ப்டை பாடல்களுக்கு இங்கே செல்லவும்!
    http://www.tamilnation.org/literature/pattuppaatu/mp067.htm//
    நன்றி தம்பி..
    அண்ணன் கேட்காமலேயே உதவி செய்கிறாயே.. வாழ்க வளமுடன்..////

    உங்களுக்கு உதவி செய்ய எத்தனை உள்ளங்கள் காத்திருக்கின்றன பாருங்கள் உனா தானா!

    ReplyDelete
  52. //அண்ணன் கேட்காமலேயே உதவி செய்கிறாயே.. //

    தம்பி உடையான் படைக்கு அஞ்சான்!
    யாமிருக்க பயமேன்!
    //வாழ்க வளமுடன்..//

    மிக்க நன்றி!

    ReplyDelete
  53. //நக்கீரர் எழுதியதை நாமக்கல்லார் பிடித்துக் கொடுத்துவிட்டீர். நன்றி.
    இணையத்தின் சிறப்பு இதுதான் - கேட்டது கிடைக்கிறது
    வகுப்பறையின் சிறப்பு - வாத்தியார் நினைப்பதை செயல் படுத்தும் மாணவக் கண்மணிகள்!
    //

    நக்கீரனார் இயற்றிய இப்பாடல்கள் பற்றி நான் முன்பே அறிந்திருந்தபடியால் சட்டென எடுத்துக் கொடுத்துவிட்டேன்! அவ்வளவே!

    குமரகாவியம் - எழுதத் தொடங்கும்போது என் தேடல்களில் கிட்டியது! அதிலும் ஒரு இடத்தில் குறிப்பிட்டிருக்கிறேன்!

    http://pithatralgal.blogspot.com/2006/03/77-02_114275205682443378.html

    ReplyDelete
  54. பன்னிரெண்டாம் வீட்டுப் பலன்கள் பற்றிய பாடத்தின் முன்னுரை அற்புதம்.
    மாந்தி பற்றி செய்திகள் போனஸ்.

    ReplyDelete
  55. ////நாமக்கல் சிபி said...
    //நக்கீரர் எழுதியதை நாமக்கல்லார் பிடித்துக் கொடுத்துவிட்டீர். நன்றி.
    இணையத்தின் சிறப்பு இதுதான் - கேட்டது கிடைக்கிறது
    வகுப்பறையின் சிறப்பு - வாத்தியார் நினைப்பதை செயல் படுத்தும் மாணவக் கண்மணிகள்!
    //
    நக்கீரனார் இயற்றிய இப்பாடல்கள் பற்றி நான் முன்பே அறிந்திருந்தபடியால் சட்டென எடுத்துக் கொடுத்துவிட்டேன்! அவ்வளவே!
    குமரகாவியம் - எழுதத் தொடங்கும்போது என் தேடல்களில் கிட்டியது! அதிலும் ஒரு இடத்தில் குறிப்பிட்டிருக்கிறேன்!
    http://pithatralgal.blogspot.com/2006/03/77-02_114275205682443378.html////

    தகவலுக்கு நன்றி. படித்தேன். பழம்திர்சோலையைப் பற்றித் தனி நடையில் எழுதியுள்ளீர்கள்.
    நன்றாக இருக்கிறது. உடன் ஜிரா' வின் முதல் பின்னூட்டமும் நன்றாக உள்ளது!

    ReplyDelete
  56. /////திருநெல்வேலி கார்த்திக் said...
    பன்னிரெண்டாம் வீட்டுப் பலன்கள் பற்றிய பாடத்தின் முன்னுரை அற்புதம்.
    மாந்தி பற்றி செய்திகள் போனஸ்.////

    நன்றி கார்த்திக்!

    ReplyDelete
  57. ஐயா வணக்கம்!

    ஒரு பொது கேள்வி.

    என் நன்பர் ஒருவர் சொன்னார் பொதுவாக ராசி கட்டம் என்பது தோராயமானது பாவத்தில் இருப்பது தான் துல்லியமானது என்று, இது சரியா?

    ராசிக்கும் பாவத்திற்கும் கிரகங்களின் அமைப்பு வேறுபடுகிறதே; எப்போது எதை எடுத்துக் கொள்வது

    தயவு செய்து விளக்க வேண்டுகிறேன்.

    ReplyDelete
  58. பன்னிரெண்டாம் வீட்டு பாடம்
    ஒரு மர்ம நாவலின் தொடக்கம்
    போல விறுவிறுப்பாக ஆரம்பம்
    அசத்துங்கள் ஆசானே,ஆனந்தம்!

    ReplyDelete
  59. Kumaresan said...
    ஐயா வணக்கம்!
    ஒரு பொது கேள்வி.
    என் நண்பர் ஒருவர் சொன்னார் பொதுவாக ராசி கட்டம் என்பது தோராயமானது பாவத்தில் இருப்பது தான் துல்லியமானது என்று, இது சரியா?
    ராசிக்கும் பாவத்திற்கும் கிரகங்களின் அமைப்பு வேறுபடுகிறதே; எப்போது எதை எடுத்துக் கொள்வது
    தயவு செய்து விளக்க வேண்டுகிறேன்.////

    பாவம் என்பது Fine Tuning செய்து பார்ப்பது. ராசி, நவாம்சக் கட்டங்களையே பயன் படுத்துங்கள்
    Fine Tuning செய்து பார்க்க பாவக் கட்டத்திப் பயன் படுத்திக்கொள்ளுங்கள்!

    ReplyDelete
  60. ////தமாம் பாலா (dammam bala) said...
    பன்னிரெண்டாம் வீட்டு பாடம்
    ஒரு மர்ம நாவலின் தொடக்கம்
    போல விறுவிறுப்பாக ஆரம்பம்
    அசத்துங்கள் ஆசானே,ஆனந்தம்!/////

    ஏன் மர்ம நாவலில் மட்டும்தான் விறுவிறுப்புக்கொடுக்க முடியுமா?:-)))))
    நன்றி பாலா!

    ReplyDelete
  61. Hello Sir ,
    Some ppl say that if lagna is less powerful than rasi sthanam , then Rasi sthanam has to be considered as first house.
    If that is correct , what should be taken seriously ?
    Jathagam or kolcharam..?
    Kindly explain

    ReplyDelete
  62. /////DevikaArul said...
    Hello Sir ,
    Some ppl say that if lagna is less powerful than rasi sthanam , then Rasi sthanam has to be considered as first house.
    If that is correct , what should be taken seriously ?
    Jathagam or kolcharam..?
    Kindly explain////

    ஜாதகம் என்பது அடிப்படை. கோள்சாரம் என்பது இன்றைய கிரக நிலையைக் குறிப்பிடுவது.
    இன்றைய நிலையைச் ஜாதகத்துடன் இணத்துப் பலன் கிடைக்கும் காலத்தை அறிய உதவுவது
    தசா புத்திகளும், கோள்சாரமும் ஆகும். மேல் விவரங்களுக்கு என்னுடைய முன் பதிவுகளைப் படியுங்கள் சகோதரி!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com