மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

22.6.08

Evidence இருந்தால் பேசு, இல்லையென்றால் பேசாதே!

Evidence இருந்தால் பேசு, இல்லையென்றால் பேசாதே!”

உறங்குவதுபோலும் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு
-குறள் 339

இறப்பு என்பது உறங்குவதைப்போன்றது
பிறப்பு என்பது உறங்கியவன் விழிப்பதைப் போன்றது
என்றார் வள்ளுவர் பெருந்தகை!

என்ன எளிமையாகச் சொல்லியிருக்கிறார் பாருங்கள் வள்ளுவர்
------------------------------------------------------------
”வள்ளுவர் சொன்னால் சொல்லிவிட்டுபோகிறார். Evidence இருந்தால் பேசு
இல்லையென்றால் பேசாதே!”

ஆகா, அது இல்லாமலா? பதிவுலகில் மூன்று வருடமாக சந்து சந்தாக, வீடு வீடாக
ஜன்னல் ஜன்னல் சுற்றியும், எட்டிப் பார்த்துக்கொண்டுமிருக்கிறேன்.

எனக்குத் தெரியாதா - என்ன நடக்கும் என்று?

எல்லாம் வைத்திருக்கிறேன். ஒவ்வொன்றாகத் தருகிறேன்!

இதனுடன் சம்பந்தப் பட்ட முன்பதிவைப் படித்தீர்களா? சுட்டி இங்கே!

++++++++++++++++++++++++++++++++++++++++++++++
எனக்குத் தெரியாத எதையுமே நான் எழுதுவதில்லை! அதுபோல சிக்கலான
மேட்டர்களுக்கு ஆதாரத்தைப் பிடித்து வைத்துக் கொண்ட பிறகுதான் எழுதுவேன்

பதிவுலகில் உள்ள ஒரே கோளாறு இங்கே சராசரி வயது 32 தான். அந்த வயதில்
இதையெல்லாம் படிக்க வைப்பதே பிரம்மப் பிரயத்தனம்.

தேவாரப் பாடலை எழுதிப் பதிவு போட்டால் 10 அல்லது 20 பேர்கள் படிப்பார்கள்

அதே நேரத்தில்

“சட்டை போட்ட சாத்துக்குடி
சரசம் பண்ண சேத்துக்கடி”

என்ற பாடலைப்போட்டு கூடவே நாயகனும் நாயகியும், ஆடி, ஒருவரை ஒருவர்
பிராண்டும் காட்சியைப் படமாகப் போட்டு, அதற்கு, ”சட்டைபோட்ட சாத்துக்குடியின்
சரசம்” என்று சுண்டி இழுக்கும் தலைப்பையும் கொடுத்துப் பதிவு போட்டால்,
அந்தப் பதிவு பதிந்த ஒரு மணி நேரத்திற்குள்ளாகவே சூடான இடுகைகள் பகுதிக்குப்
போய்விடும்.

மேலும் அதை அங்கேயே மூன்று நாட்களுக்கு நிறுத்தி வைக்கக் கூடிய அளவிற்குப்
பின்னூட்டட்ங்களும் மலை போலக் குவிந்து விடும்.

இன்னொரு வாய்ப்பும் இருக்கிறது அதுவே 12/20 ஹிட்ஸ் வாங்கி வாசகர்கள்
பரிந்துரைப் பகுதியிலும் போய் உட்கார்ந்து கொண்டுவிடும்.

நான் என்ன செய்வது? எனக்குக் கணினி, தமிழ் தட்டச்சும் வசதி,வலைப்பூ, தமிழ்மணம்
எல்லாம் டிக்கெட் வாங்க வேண்டிய காலத்தில் வந்து சேர்ந்திருக்கிறது.

இருபது வருடங்களுக்கு முன்னால் வந்திருக்க வேண்டும். தூள் கிளப்பியிருப்பேன்.

இப்போதும் அது போல எழுத முடியும். ஆனால், “யோவ், வாத்தி (யார்) உனக்கு
இதெல்லாம் தேவையா?” என்று பின்னூடம் வரும் அபாயம் இருக்கிறது.

இங்கே மிகவும் தெரிந்த பதிவர் ஒருவர் இருக்கிறார். அவர் வந்து உடனே பின்னூட்டம்
போடுவார். ”சார் உங்களுக்கு அவ்வளவு வயதாகிவிட்டதா?”

அவருக்காக முன்கூட்டியே இது:

ஐம்பது வயதிற்கு மேல் டிக்கெட்டும், போர்டிங் பாஸ்சும் (Boarding Pass) நம்மைக்
கேட்காமலேயே எப்போது வேண்டும் என்றாலும் வரும். கூடவே நம்மை வலுக்கட்டாயமாக
அனுப்பி வைக்க Undertaker Office இல் இருந்து ஆட்களும் வருவார்கள்.
------------------------------------------------
சொல்லவந்த விஷயத்திற்கு வருகிறேன்.

Illustrated Weekly Of India (Times of India qroup) வார இதழில்
(Dated 1st December'1985) மறுபிறவியைப் பற்றி ஒரு சிறப்பிதழ்
வெளியிட்டுருந்தார்கள்.

22 ஆண்டுகளுக்கு முன்பு வந்த கட்டுரைகள் இவைகள். அதை நினைவில்
வையுங்கள்!

அதில் அசத்தலாகப் பல கட்டுரைகள் வெளியிட்டிருந்தார்கள்.
அவற்றில் சிலவற்றை உங்களுக்கு அறியத்தருகிறேன்:

அந்த வார இதழைப்பற்றி அனைவருக்கும் தெரியும். மெகா சைஸில்
12 பக்கங்களைக் கட்டுரைகளாலும் படங்களாலும் நிறைத்திருந்தார்கள்
இடம் மற்றும் பதிவின் நீளம் கருதி சிலவற்றை மட்டுமே கொடுத்துள்ளேன்.
------------------------------------------------------------

இந்தப் படத்தில் உள்ள குழந்தை, படத்தில் உள்ள பெரியவரின் அம்மா -
அதாவது முன் பிறவியில் அந்தக் குழந்தை அவரைப் பெற்ற தாய்!

நம்ப முடிகிறதா?
-----------------------------------------------------------------------------

ஐந்து வயதிலேயே அந்தக் குழந்தைக்குத் தன் முன்பிறவி நினைவுகள் மலர,
பல போராட்டங்கள், சோதனைகளுக்குப் பிறகு தன் முன் ஜென்ம மகனை,
குடும்பத்தினரைத் தேடி வந்து விட்டது!

அவரும், அவரது சகோதரர்களும் அதிர்ச்சி கலந்த இன்பத்துடன் அதை
ஏற்றுகொண்டு விட்டார்கள்.

"My mother has come back!" என்னும் தலைப்பில் அவர் பல உண்மைகளைச்
சொல்லியிருக்கிறார். படித்துப் பாருங்கள்.

முத்தாய்ப்பாக அவர் சொல்கிறார்:

யாருக்கும் தெரியாத, யாரும் துப்பறிந்து அறிய முடியாத எங்கள் குடும்ப
ரகசியங்களை அந்தக் குழந்தை சொல்லியவுடன்தான் நாங்கள் முழுமையாக
உணர்ந்தோம்.

"When people heard that Sakshi was from a poor family, they all
suggested that I get my head examined. But I know how honest and
innocent her mother is. She or her people cloud never have
made up all this. Besides, which all the evidence I could have
possibly wanted to ascertain that Sakshi is really my mother
reincarnated is staring me in the face - personal details given by the
girl which no amount of research or spying by outsiders could have
ever produced. To deny everything and harbour thoughts of being
cheated is absolutely ridiculous!"

மேலும் படிக்க கீழே தந்துள்ளேன். படங்களின் மீது கர்சரை வைத்து அழுத்தினால்
படங்கள் பெரிதாகத் தெரியும்!




Cover of the cover story

Opening Page

Second Page

1

2

3

4


Sakshi's Story First Page

Box information 1

Son's statement by his reincarnated mother

Another interesting detail


+++++++++++++++++++++++++++++++++++++++++++++++
இதுபோல இன்னும் ஏராளமான் சேகரிப்புக்கள் கைவசம் உள்ளன!
போதும் என்றால் விட்டு விடுகிறேன். இல்லையென்றால் அவற்றையெல்லாம்
கொடுத்து உங்களைச் சிரமப்படுத்த நான் தயாராக உள்ளேன்.

ஒரு முக்கியமான விஷயம், இதையெல்லாம் படித்துவிட்டு, சிலர்
இதெல்லாம் சுத்த ஹம்பக் அல்லது உட்டாலக்கடி என்று சொல்லக்கூடும்
அப்படி சொன்னால் எனக்கு வருத்தம் வராது! ஏனென்றால் நான்
எதையும் எதிர் பார்த்து இவற்றை எல்லாம் பதிவில் இடவில்லை!
அதெல்லாம் எனக்குப் பழகியதுதான். ஆகவே மறுப்புத் தெரிவிக்கின்றவர்கள்
பின்னூட்டத்தில் தெரிவித்துவிட்டுப் போகலாம்.

அவர்களுடைய மறுப்புத்தான் என்னை மேலும் மேலும் பல விஷயங்களை
எழுதவைக்கும்!:-))))

நன்றி, வணக்கத்துடன்
SP.VR.சுப்பையா
----------------------------------------------------------
கீழே உள்ளது கொசுறு!
முடிந்தால் படிக்கலாம். இல்லையென்றால் விட்டு விடலாம்

Hinduism

Reincarnation and Hinduism

In India the concept of reincarnation is first recorded in the Upanishads (c. 800 BCE),
which are philosophical and religious texts composed in Sanskrit.
According to Hinduism, the soul (atman) is immortal, while the body is subject
to birth and death.
The Bhagavad Gita states that:
Worn-out garments are shed by the body; Worn-out bodies are shed by the dweller
within the body. New bodies are donned by the dweller, like garments.
The idea that the soul (of any living being - including animals, humans and plants)
reincarnates is intricately linked to karma, another concept first introduced in the
Upanishads. Karma (literally: action) is the sum of one's actions, and the force that
determines one's next reincarnation. The cycle of death and rebirth, governed by
karma, is referred to as samsara.

Hinduism teaches that the soul goes on repeatedly being born and dying. One is
reborn on account of desire: a person desires to be born because he or she wants to
enjoy worldly pleasures, which can be enjoyed only through a body. Hinduism does
not teach that all worldly pleasures are sinful, but it teaches that they can never bring
deep, lasting happiness or peace (ānanda). According to the Hindu sage
Adi Shankaracharya - the world as we ordinarily understand it - is like a dream:
fleeting and illusory. To be trapped in Samsara is a result of ignorance of the true
nature of our existence.

After many births, every person eventually becomes dissatisfied with the limited
happiness that worldly pleasures can bring. At this point, a person begins to seek
higher forms of happiness, which can be attained only through spiritual experience.
When, after much spiritual practice (sādhanā), a person finally realizes his or her own
divine nature—ie., realizes that the true "self" is the immortal soul rather than the
body or the ego—all desires for the pleasures of the world will vanish, since they will
seem insipid compared to spiritual ānanda. When all desire has vanished, the person
will not be reborn anymore.

When the cycle of rebirth thus comes to an end, a person is said to have attained
moksha, or salvation.[8] While all schools of thought agree that moksha implies the
cessation of worldly desires and freedom from the cycle of birth and death, the exact
definition of salvation depends on individual beliefs. For example, followers of the
Advaita Vedanta school (often associated with jnana yoga) believe that they will spend
eternity absorbed in the perfect peace and happiness that comes with the realization
and that the immortal soul is part of that existence. The followers of full or partial
Dvaita schools ("dualistic" schools, such as bhakti yoga), on the other hand, perform
their worship with the goal of spending eternity in a loka, (spiritual world or heaven),
in the blessed company of the Supreme being (i.e Krishna or Vishnu for the
Vaishnavas and Shiva for the dualistic schools of Shaivism)

வாழ்க வளமுடன்!

45 comments:

  1. எறும்பு மனிதனாய் மறுபிறவி எடுத்ததற்கு யாராலும் (எறும்பு, மனித இரண்டு பக்கத்திலுருந்தும்)ஆதாரம் காட்ட முடியாது...

    உண்மைக்குப் பல முகங்கள் என்கின்றது உபநிஷத். எனவே தான் அத்தனை (மதங்களும்/) நம்பிக்கைகளும் கைகோர்த்து வளர்ந்திருக்கின்றன. நம்பிக்கை இல்லை என்றாலும் மற்றவரின் (ஊறு செய்யாத‌) நம்பிக்கைகளை அவமதிப்பதில்லை, அவ்வளவு தான்.

    ReplyDelete
  2. ////கெக்கேபிக்குணி (05430279483680105313!) said...
    எறும்பு மனிதனாய் மறுபிறவி எடுத்ததற்கு யாராலும் (எறும்பு, மனித இரண்டு பக்கத்திலுருந்தும்)ஆதாரம் காட்ட முடியாது...////

    முற்பிறவி நினைவுவந்தால். தான் எறும்பாக
    இருந்தேன் என்று சொல்ல மட்டான்!:-)))

    /// உண்மைக்குப் பல முகங்கள் என்கின்றது உபநிஷத். எனவே தான் அத்தனை (மதங்களும்/) நம்பிக்கைகளும் கைகோர்த்து வளர்ந்திருக்கின்றன. நம்பிக்கை இல்லை என்றாலும் மற்றவரின் (ஊறு செய்யாத‌) நம்பிக்கைகளை அவமதிப்பதில்லை, அவ்வளவு தான்.////

    உண்மைக்கு ஒரே வடிவம்தான் வேலன் கையிலிருக்கும் வேலைப் போல!
    பொய்க்குதான் பல வடிவம் சகோதரி!

    ReplyDelete
  3. வணக்கம்,
    நீங்கள் குறிப்பிட்ட சில சம்பவங்கள் நான் ஏற்கனவே கேள்விப்பட்டிருந்தாலும் உங்கள் பதிவில் விளக்கமாக இருக்கின்றது. நன்று.

    -(((இதுபோல இன்னும் ஏராளமான் சேகரிப்புக்கள் கைவசம் உள்ளன!
    போதும் என்றால் விட்டு விடுகிறேன். இல்லையென்றால் அவற்றையெல்லாம்
    கொடுத்து உங்களைச் சிரமப்படுத்த நான் தயாராக உள்ளேன்.))--

    சிரமப்பட உங்கள் மாணவர்களில் சிலராவது தயாராக இருப்பார்கள்.

    ReplyDelete
  4. 50 வயசுக்குமேலே கிடைப்பதெல்லாம் போனஸ்ன்னு சொல்லிக்கிட்டு இருக்கேன்:-)


    ஆமாங்க வாத்தியார் ஐயா. காலம்போனபிறகுதான் கணினி என் கைக்குக் கிடைச்சது(-:

    ReplyDelete
  5. ////தூக்கணாங்குருவி said...
    வணக்கம்,
    நீங்கள் குறிப்பிட்ட சில சம்பவங்கள் நான் ஏற்கனவே கேள்விப்பட்டிருந்தாலும் உங்கள் பதிவில் விளக்கமாக இருக்கின்றது. நன்று.
    -(((இதுபோல இன்னும் ஏராளமான் சேகரிப்புக்கள் கைவசம் உள்ளன!
    போதும் என்றால் விட்டு விடுகிறேன். இல்லையென்றால் அவற்றையெல்லாம்
    கொடுத்து உங்களைச் சிரமப்படுத்த நான் தயாராக உள்ளேன்.))--
    சிரமப்பட உங்கள் மாணவர்களில் சிலராவது தயாராக இருப்பார்கள்./////

    உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி! பார்க்கலாம் நண்பரே!

    ReplyDelete
  6. /////துளசி கோபால் said...
    50 வயசுக்குமேலே கிடைப்பதெல்லாம் போனஸ்ன்னு சொல்லிக்கிட்டு இருக்கேன்:-)
    ஆமாங்க வாத்தியார் ஐயா. காலம்போனபிறகுதான் கணினி என் கைக்குக் கிடைச்சது(-:////

    ஆமாம் டீச்சர்! அவன் கொடுக்கும் போனஸ்தான். வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது!

    நம்ம இலவசத்திற்கு பெயரிலேயே இலவசம் இருப்பதால் நிறைய போனஸ் கிடைத்து,
    அவருடைய 150 வயதுவரை இருப்பதோடு, தொடர்ந்து பல பின்னூட்டங்கள் போட்டு
    பின்னூட்ட சரித்திரத்தில் கின்னஸ் சாதனை புரிவார் என்று நினைக்கிறேன்!

    ReplyDelete
  7. //நான் என்ன செய்வது? எனக்குக் கணினி, தமிழ் தட்டச்சும் வசதி,வலைப்பூ, தமிழ்மணம்
    எல்லாம் டிக்கெட் வாங்க வேண்டிய காலத்தில் வந்து சேர்ந்திருக்கிறது.

    இருபது வருடங்களுக்கு முன்னால் வந்திருக்க வேண்டும். தூள் கிளப்பியிருப்பேன்.
    //

    :) இப்பவும் தூள் கிளப்புறிங்க,

    உலகதலைவர்களும், பிரதமர், முதல்வர்கள் இந்த வயதில் தான் உருவாகிறார்கள்.

    //ஒரு முக்கியமான விஷயம், இதையெல்லாம் படித்துவிட்டு, சிலர்
    இதெல்லாம் சுத்த ஹம்பக் அல்லது உட்டாலக்கடி என்று சொல்லக்கூடும்
    அப்படி சொன்னால் எனக்கு வருத்தம் வராது! //

    :) வரவேண்டாம்.


    //the exact
    definition of salvation depends on individual beliefs//

    நம்பிக்கை என்று தெளிவாக சொல்லி இருப்பதால் இதுபற்றி பேச ஒன்றும் இல்லை. நம்பிக்கைகளை தகவல்களாக தருவதை குறித்து யாருக்கும் கருத்து இருக்க முடியாது, சில வலியுறுத்தல், சில கட்டமைப்புகள் செய்ய வரும் போது பலர் மறுப்பார்கள்.

    குடும்பத்தினாராலேயே கொடுராமாக கொல்லப்பட்டவர்கள் மீண்டும் பிறந்து அவர்களுக்கு பழைய ஞாபகம் வந்தால் ஏற்படும் குழப்பம், பிறந்திருக்க வேண்டாம் என்றே கூட தோன்றவைக்கும்.

    உலகில் உள்ள அத்தனை பேரும் தங்கள் மறுபிறவி பற்றி அறிந்து கொண்டால் உலகமே போர்களம் போல் தான் இருக்கும். "என் மனைவியுடன் எவனோ இந்த பிறவியில் குடித்தனம் நடத்துக்கிறான்" என்று அறிவாளைத் தூக்கிக் கொண்டு கிளம்புவார்கள்.

    :)

    ReplyDelete
  8. /////Blogger கோவி.கண்ணன் said...
    //நான் என்ன செய்வது? எனக்குக் கணினி, தமிழ் தட்டச்சும் வசதி,வலைப்பூ, தமிழ்மணம்
    எல்லாம் டிக்கெட் வாங்க வேண்டிய காலத்தில் வந்து சேர்ந்திருக்கிறது.
    இருபது வருடங்களுக்கு முன்னால் வந்திருக்க வேண்டும். தூள் கிளப்பியிருப்பேன்.
    // :) இப்பவும் தூள் கிளப்புறிங்க,
    உலகதலைவர்களும், பிரதமர், முதல்வர்கள் இந்த வயதில் தான் உருவாகிறார்கள்.
    //ஒரு முக்கியமான விஷயம், இதையெல்லாம் படித்துவிட்டு, சிலர்
    இதெல்லாம் சுத்த ஹம்பக் அல்லது உட்டாலக்கடி என்று சொல்லக்கூடும்
    அப்படி சொன்னால் எனக்கு வருத்தம் வராது! //
    :) வரவேண்டாம்.
    //the exact
    definition of salvation depends on individual beliefs//
    நம்பிக்கை என்று தெளிவாக சொல்லி இருப்பதால் இதுபற்றி பேச ஒன்றும் இல்லை. நம்பிக்கைகளை தகவல்களாக தருவதை குறித்து யாருக்கும் கருத்து இருக்க முடியாது, சில வலியுறுத்தல், சில கட்டமைப்புகள் செய்ய வரும் போது பலர் மறுப்பார்கள்.
    குடும்பத்தினாராலேயே கொடுராமாக கொல்லப்பட்டவர்கள் மீண்டும் பிறந்து அவர்களுக்கு பழைய ஞாபகம் வந்தால் ஏற்படும் குழப்பம், பிறந்திருக்க வேண்டாம் என்றே கூட தோன்றவைக்கும்.
    உலகில் உள்ள அத்தனை பேரும் தங்கள் மறுபிறவி பற்றி அறிந்து கொண்டால் உலகமே போர்களம் போல் தான் இருக்கும். "என் மனைவியுடன் எவனோ இந்த பிறவியில் குடித்தனம் நடத்துக்கிறான்" என்று அறிவாளைத் தூக்கிக் கொண்டு கிளம்புவார்கள். :)////

    அதுதான் இறைவன் செயல் என்பது! ஏதோ ஒரு மூலையில் 10 கோடிப்பேர்களில் ஒருவருக்கு
    (ஒரு உத்தேசம்) என்ற நிலையில் அந்த நினைவு ஏற்படுகிறது!

    இறைவன் கருணை மிக்கவர்! தூக்கமும், மறதியும் அவர் கொடுத்த கொடைகள்!

    Salvation Theory நன்றி கோவியாரே!

    ReplyDelete
  9. //பதிவுலகில் உள்ள ஒரே கோளாறு இங்கே சராசரி வயது 32 தான். அந்த வயதில்
    இதையெல்லாம் படிக்க வைப்பதே பிரம்மப் பிரயத்தனம்.//

    வாத்யாரே அப்போ நான் சராசரி வயதுக்கு முன்னே வந்து விட்டேனா? அல்லது இப்பவும் சிறு வயதிலேயே பிரம்மப் பிரயத்தனம் நடந்து விட்டதா எனது வாழ்க்கையில்?

    //இதுபோல இன்னும் ஏராளமான் சேகரிப்புக்கள் கைவசம் உள்ளன!
    போதும் என்றால் விட்டு விடுகிறேன். இல்லையென்றால் அவற்றையெல்லாம்
    கொடுத்து உங்களைச் சிரமப்படுத்த நான் தயாராக உள்ளேன்.//


    நான் சிரமப்பட தயாராக உள்ளேன் வாத்தியரே.(அதுதான் வகுப்பறையில் உள்ளேனே).
    ஆதாரங்கள் அருமை, சில சம்பவங்கள் மட்டுமே படித்திருக்கிறேன் முன்னமே(என் பள்ளி பருவத்தில்), எனக்கு எப்பவுமே இது மாதிரி சம்பவங்களில் ஆர்வம் ஜாஸ்தி.

    ReplyDelete
  10. சுவையான தொகுப்பு. சாதிக்கவும் தூள் கிளப்பவும் வயது ஒரு தடை இல்லை.

    அன்புடன்
    இராசகோபால்

    ReplyDelete
  11. என்ன ஐயா... இப்படி ஆங்கலத்தில் கொடுத்துள்ளீர்கள். என்னைப்பொன்ற ஆங்கிலம் புரியா தற்குறிகள் எப்படி அறிவது?

    இன்று பாடம் இல்லையா? அவ்வளவு தானா?

    ReplyDelete
  12. ///ஐயா.. said..இன்னும் ஏராளமான் சேகரிப்புக்கள் கைவசம் உள்ளன! அவற்றையெல்லாம்
    கொடுத்து உங்களைச் சிரமப்படுத்த நான் தயாராக உள்ளேன்.))--///

    குடுங்க ஐயா, தாராளமா குடுங்க
    கரும்பு தின்ன கூலியா?? :-))))

    நிறைய பல அரிய தகவல் மற்றும் புகைப்படங்கள் கொடுத்துருக்கீங்க, மாணவர் நாங்கள் கணினியில் இறக்கி நிதானமா படிச்சு புரிஞ்சுக்கணும்

    நீங்க ஒரு நடமாடும் அறிவு களஞ்சியம் (encyclopedia)தான் !!!!!

    ReplyDelete
  13. //ஆகவே மறுப்புத் தெரிவிக்கின்றவர்கள்
    பின்னூட்டத்தில் தெரிவித்துவிட்டுப் போகலாம்.

    அவர்களுடைய மறுப்புத்தான் என்னை மேலும் மேலும் பல விஷயங்களை
    எழுதவைக்கும்!:-))))//

    வாத்தியாரே கடுமையாக மறுக்கிறேன்!
    (அப்பதானே மேலும் பல விஷயங்கள் வரும்!)

    // துப்பறிந்து அறிய முடியாத//
    கொஞ்சம் உதைக்குதே! ரெண்டு அறிதல். "துப்பறிய முடியாத" ன்னு இருக்கலாமோ?

    ReplyDelete
  14. /////கோவை விமல்(vimal) said...
    //பதிவுலகில் உள்ள ஒரே கோளாறு இங்கே சராசரி வயது 32 தான். அந்த வயதில்
    இதையெல்லாம் படிக்க வைப்பதே பிரம்மப் பிரயத்தனம்.//
    வாத்யாரே அப்போ நான் சராசரி வயதுக்கு முன்னே வந்து விட்டேனா? அல்லது இப்பவும் சிறு வயதிலேயே பிரம்மப் பிரயத்தனம் நடந்து விட்டதா எனது வாழ்க்கையில்?
    //இதுபோல இன்னும் ஏராளமான் சேகரிப்புக்கள் கைவசம் உள்ளன!
    போதும் என்றால் விட்டு விடுகிறேன். இல்லையென்றால் அவற்றையெல்லாம்
    கொடுத்து உங்களைச் சிரமப்படுத்த நான் தயாராக உள்ளேன்.//
    நான் சிரமப்பட தயாராக உள்ளேன் வாத்தியரே.(அதுதான் வகுப்பறையில் உள்ளேனே).
    ஆதாரங்கள் அருமை, சில சம்பவங்கள் மட்டுமே படித்திருக்கிறேன் முன்னமே(என் பள்ளி பருவத்தில்), எனக்கு எப்பவுமே இது மாதிரி சம்பவங்களில் ஆர்வம் ஜாஸ்தி./////

    இந்தமாதிரி விஷயங்களில் யாருக்குத்தான் ஆர்வம் இருக்காது?

    ReplyDelete
  15. /////Anonymous said...
    சுவையான தொகுப்பு. சாதிக்கவும் தூள் கிளப்பவும் வயது ஒரு தடை இல்லை.
    அன்புடன்
    இராசகோபால்/////

    நன்றி நண்பரே!

    ReplyDelete
  16. ////கூடுதுறை said...
    என்ன ஐயா... இப்படி ஆங்கலத்தில் கொடுத்துள்ளீர்கள். என்னைப்பொன்ற ஆங்கிலம் புரியா தற்குறிகள் எப்படி அறிவது?
    இன்று பாடம் இல்லையா? அவ்வளவு தானா?////

    பேப்பர் கட்டிங் அத்தனையையும் மொழிபெயர்க்க நேரமில்லை கூடுதுறையாரே!
    ஆனால் முக்கியமான வரிகளைத் தமிழில் கொடுத்திருக்கிறேனே!

    ReplyDelete
  17. ////தமாம் பாலா said...
    ///ஐயா.. said..இன்னும் ஏராளமான் சேகரிப்புக்கள் கைவசம் உள்ளன! அவற்றையெல்லாம்
    கொடுத்து உங்களைச் சிரமப்படுத்த நான் தயாராக உள்ளேன்.))--///
    குடுங்க ஐயா, தாராளமா குடுங்க
    கரும்பு தின்ன கூலியா?? :-))))
    நிறைய பல அரிய தகவல் மற்றும் புகைப்படங்கள் கொடுத்துருக்கீங்க, மாணவர் நாங்கள் கணினியில் இறக்கி நிதானமா படிச்சு புரிஞ்சுக்கணும்
    நீங்க ஒரு நடமாடும் அறிவு களஞ்சியம் (encyclopedia)தான் !!!!!/////

    கற்றது பதிவிடும் அளவு! கல்லாதது கடல் அளவு!
    களஞ்சியம் என்று சொல்லும் அளவிற்குத் தகுதியில்லை!

    ReplyDelete
  18. /////திவா said...
    //ஆகவே மறுப்புத் தெரிவிக்கின்றவர்கள்
    பின்னூட்டத்தில் தெரிவித்துவிட்டுப் போகலாம்.
    அவர்களுடைய மறுப்புத்தான் என்னை மேலும் மேலும் பல விஷயங்களை
    எழுதவைக்கும்!:-))))//
    வாத்தியாரே கடுமையாக மறுக்கிறேன்!
    (அப்பதானே மேலும் பல விஷயங்கள் வரும்!)////

    ஏன் சும்மா கேட்டல் தரமாட்டேனா?
    மறுத்துத்தான் பெற வேண்டுமா?:-))))

    // துப்பறிந்து அறிய முடியாத//
    கொஞ்சம் உதைக்குதே! ரெண்டு அறிதல். "துப்பறிய முடியாத" ன்னு இருக்கலாமோ?////

    துப்பறிந்து சொல்
    துப்பறிந்து சொல்ல முடியவில்லை
    துப்பறிந்து தெரிந்து கொள்ள முடியவில்லை
    துப்பறிந்து அறிய முடியவில்லை
    சரியாகத்தானே வருகிறது நண்பரே!

    Post a Comment

    ReplyDelete
  19. டியர் சார்,

    பதிவர்களை கேரக்டராக வைத்து ஒரு காமெடி பதிவு போட்டுள்ளேன் படித்துப் பார்த்து கருத்துச் சொல்லவும்.

    வலைப்பதிவர்களுடன் விஜயகாந்த்

    ReplyDelete
  20. நான் என்ன செய்வது? எனக்குக் கணினி, தமிழ் தட்டச்சும் வசதி,வலைப்பூ, தமிழ்மணம்
    எல்லாம் டிக்கெட் வாங்க வேண்டிய காலத்தில் வந்து சேர்ந்திருக்கிறது.//

    இன்னொரு பிறவிதான் இருக்குல்லே. அப்ப அனுபவிச்சிருவோம். கவலைய விடுங்க.

    இப்படியெல்லாம் எழுதறதுக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும்னு தெரிஞ்சிருந்தா இப்படி எத்தனையோ கட்டுரைங்கள சேத்து வச்சிருக்கலாம்.

    ReplyDelete
  21. அருமையான ஆதாரங்களுடன் கோர்வையாக, கோவையில் இருந்து பதியும் குருவுக்கு கோடி வந்தனங்கள்.

    @வெண்பூ, போஸ்டர் ஒட்டியாச்சா? :p

    இப்ப எல்லோரும் விஜய் ஸ்டையிலை பின் பற்ற ஆரம்பிச்சுட்டாங்க போலிருக்கு. :))

    ReplyDelete
  22. //அவர்களுடைய மறுப்புத்தான் என்னை மேலும் மேலும் பல விஷயங்களை
    எழுதவைக்கும்!:-))))//

    சங்கு சுட்டாலும் வெண்மை தரும்... :))

    உங்களுடைய செகரிப்பை நானும் சேர்த்துக் கொண்டேன் எனது கோப்பில். தகவல் பரிமாற்றத்திற்கு மிக்க நன்றி...

    ReplyDelete
  23. ////வெண்பூ said...
    டியர் சார்,
    பதிவர்களை கேரக்டராக வைத்து ஒரு காமெடி பதிவு போட்டுள்ளேன் படித்துப் பார்த்து கருத்துச் சொல்லவும்.
    வலைப்பதிவர்களுடன் விஜயகாந்த்////

    வெண்பூவே, வேண்பூவே பார்த்துவிட்டேன். தகவலுக்கு நன்றி!

    ReplyDelete
  24. ////டி.பி.ஆர் said...
    நான் என்ன செய்வது? எனக்குக் கணினி, தமிழ் தட்டச்சும் வசதி,வலைப்பூ, தமிழ்மணம்
    எல்லாம் டிக்கெட் வாங்க வேண்டிய காலத்தில் வந்து சேர்ந்திருக்கிறது.//
    இன்னொரு பிறவிதான் இருக்குல்லே. அப்ப அனுபவிச்சிருவோம். கவலைய விடுங்க.////

    புதுக் கவலை: தமிழ் நட்டிலேயே பிறந்தால் பரவாயில்லை!
    வேறெங்காவது (உதாரணம் ஜாம்பியா, நைஜீரியாவில்) பிறந்தால் என்ன செய்வது நண்பரே?:-)))

    ///இப்படியெல்லாம் எழுதறதுக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும்னு தெரிஞ்சிருந்தா இப்படி எத்தனையோ கட்டுரைங்கள சேத்து வச்சிருக்கலாம்.///

    வங்கியில் எத்தனை காலமாய் இருக்கிறீர்கள். உங்கள் மனத்திரையில் இல்லாத விஷயங்களா?
    எழுதுங்கள் படிக்கிறோம்!

    ReplyDelete
  25. ////ambi said...
    அருமையான ஆதாரங்களுடன் கோர்வையாக, கோவையில் இருந்து பதியும் குருவுக்கு கோடி வந்தனங்கள்.
    @வெண்பூ, போஸ்டர் ஒட்டியாச்சா? :p
    இப்ப எல்லோரும் விஜய் ஸ்டையிலை பின் பற்ற ஆரம்பிச்சுட்டாங்க போலிருக்கு. :))////

    ஆமாம், இப்போது எல்லாமே குருவிகள்தான். மயில்களுக்கு வேலை இல்லாமல் செய்துவிடுவார்கள்
    போலிருக்கிறது!

    குருவிகளால்தான் அதிக உயரம் பறக்க முடியும்!

    ReplyDelete
  26. /////VIKNESHWARAN said...
    //அவர்களுடைய மறுப்புத்தான் என்னை மேலும் மேலும் பல விஷயங்களை
    எழுதவைக்கும்!:-))))//
    சங்கு சுட்டாலும் வெண்மை தரும்... :))////

    ஆனாலும் சூடு இருக்கிறதே!

    ReplyDelete
  27. ////VIKNESHWARAN said...
    சேகரிப்பை*///

    பின்னூட்டங்களில் எழுத்துப்பிழைகள் பார்ப்பதில்லை! பின்னூட்டங்கள் வந்தால் போதும்:-)))

    ReplyDelete
  28. உன்டு என்றால் உன்டு
    இல்லை என்றால் இல்லை

    உலகில்
    இதே விதிக்குள் எல்லாம்அடக்கம்.
    பொதிகைத்தென்Rல்
    புதுதில்லியிலிருந்து
    23062008

    ReplyDelete
  29. ஐயா,
    வித்தியாசமான, இதற்கு முன் கேள்விப்படாத அனுபவமாக இருந்தது.
    நல்ல பதிப்பு.நன்றி.

    ReplyDelete
  30. Good job with lot of evidences!

    -Shankar

    ReplyDelete
  31. /////பொதிகைத் தென்றல் said...
    உன்டு என்றால் உன்டு
    இல்லை என்றால் இல்லை
    உலகில்
    இதே விதிக்குள் எல்லாம்அடக்கம்.
    பொதிகைத்தென்Rல்
    புதுதில்லியிலிருந்து
    23062008/////

    Like two side of a coin. You can take head or tail!

    ReplyDelete
  32. /////Anonymous said...
    Good job with lot of evidences!
    -Shankar///

    and also with lot of strain in writing!:-))))

    ReplyDelete
  33. //அவர்களுடைய மறுப்புத்தான் என்னை மேலும் மேலும் பல விஷயங்களை
    எழுதவைக்கும்!:-))))//

    :-))

    GK BLR..

    ReplyDelete
  34. /////Anonymous said...
    Good job with lot of evidences!
    -Shankar///

    and also with lot of strain in writing!:-))))///

    of course typing in tamil, is a lot of strain....

    -Shankar

    ReplyDelete
  35. நான் வரலப்பா இந்த விளைய்யாட்டிற்க்கு. பாடத்தை சாய்சில் விட்டுடரேன்.

    ReplyDelete
  36. /////Anonymous said...
    //அவர்களுடைய மறுப்புத்தான் என்னை மேலும் மேலும் பல விஷயங்களை
    எழுதவைக்கும்!:-))))// :-))
    GK BLR../////

    நன்றி ஜி.கே!

    ReplyDelete
  37. /////Anonymous said...
    /////Anonymous said...
    Good job with lot of evidences!
    -Shankar///
    and also with lot of strain in writing!:-))))///
    of course typing in tamil, is a lot of strain....
    -Shankar////

    ஆமாம்! சமயத்தில் ஈகலப்பை சொதப்புகிறது!

    ReplyDelete
  38. /////நவநீத்(அ)கிருஷ்ணன் said...
    நான் வரலப்பா இந்த விளைய்யாட்டிற்க்கு. பாடத்தை சாய்சில் விட்டுடரேன்.////

    அதற்குத்தானே சாய்ஸ் இருக்கிறது!

    ReplyDelete
  39. உங்களை பற்றி இரண்டு வரிகள் எழுதியுள்ளேன்... வலைப்பக்கம் வந்துச் செல்லவும்...

    ReplyDelete
  40. ஐயா, வணக்கம். நம் அபிமான கவியரசரின் ஜெயந்தியான இன்று (ஜூன்24) மேலும் ஒரு சிறப்புக் கட்டுரையை எதிர் பார்த்தேன். பணிவுடன் தியாகராஜன்.

    ReplyDelete
  41. /////VIKNESHWARAN said...
    உங்களை பற்றி இரண்டு வரிகள் எழுதியுள்ளேன்... வலைப்பக்கம் வந்துச் செல்லவும்.../////

    பார்த்து, வாழ்த்தைப் பின்னூட்டமாகப் போட்டுவிட்டேன் விக்னேஷ்!
    நன்றி!

    ReplyDelete
  42. ///தியாகராஜன் said...
    ஐயா, வணக்கம். நம் அபிமான கவியரசரின் ஜெயந்தியான இன்று (ஜூன்24) மேலும் ஒரு சிறப்புக் கட்டுரையை எதிர் பார்த்தேன். பணிவுடன் தியாகராஜன்.////

    ஆகா, மறப்பேனா? இன்று அதிகாலையிலேயே எழுதிப் பதிந்துவிட்டேன் நண்பரே! பல்சுவை அரங்கத்தில் பாருங்கள்!

    ReplyDelete
  43. எனக்கு மறுபிறவியில் தத்துவம் என்ற வகையில் நம்பிக்கை உண்டு வாத்தியார் ஐயா. ஆனால் இப்படி வரும் மறுபிறவி செய்திகளில் ஐயம் உண்டு. இவை ஏமாற்றுதல் இல்லை என்றால் இவற்றிற்கு மனோதத்துவப்படி விளக்கம் தரமுடியும் என்று நினைக்கிறேன்.

    என்னுடைய 'புல்லாகிப் பூண்டாகி' தொடர்கதையைப் படித்திருக்கிறீர்களா?

    ReplyDelete
  44. Reading this post only now.. yes more than 2 and half years later i m commenting on this :)

    Dr Brian Wiess is director of psychiatry in Univ of Miami, and his book Many Lives Many Masters and Through time into Healing are two excellent books on reincarnation.

    Those books explains what is being done in Vijay TV's Mun Jenmam and much more.

    The best is, what happens after death. That would have been explained well and to be honest, it was a shocker to me. Even now the shock is there...

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com