மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

3.6.08

Astrology: எனக்காக அவள்.அவளுக்காக நான்! Made for each other!


*************************************************
Astrology: எனக்காக அவள்.அவளுக்காக நான்! Made for each other!

”Made for each other!” என்பதற்குச் சரியான மொழிபெயர்ப்பு என்ன?
ஒருவருக்காக ஒருவர் படைக்கப்பெற்றவர்கள் என்பது சரியாக இருக்கும்!

திருமண வாழ்வில் ஆதர்ச தம்பதிகள் அப்படித்தான் இருக்க வேண்டும்.
எனக்காக அவள். அவளுக்காக நான்!

ஆங்கிலத்தில் இப்படி ஒளிவு மறைவு இல்லாமல் சொல்வார்கள்
Better Half அல்லது Bitter Half

பழ.கருப்பையா அவர்கள் அற்புதமான மேடைப்பேச்சாளர். அவர் ஒரு முறை
சொன்னார் நாம் திருமண நாளைக் கொண்டாடுவதில்லை. அது ஆங்கிலேயர்
களிடமிருந்து நாம் கற்றுக் கொண்டது. பண்டைய தமிழ் மரபில் அவ்வழக்கம்
இல்லை!

அவர்கள் (ஆங்கிலேயர்கள்) ஏன் கொண்டாடுகிறார்கள் என்றால் அடுத்த
வருடம் அவன் யாரோடு வாழப்போகிறானோ அல்லது அவள் யாரோடு வாழப்
போகிறாளே - ஒரு நிச்சயமற்ற தன்மை. ஆகவே ஒன்றாக இருக்கும்வரை
அதைக் கொண்டாடுவார்கள்
-------------------------------------------------------------------------
'இல்லறமல்லது நல்லறமன்று' என்றார் வான்புகழ் வள்ளுவர் பெருமான்.

இல்லறம் கிடைத்துவிட்டால் போதுமா? அது நல்லறமாக அமைய அன்பான
கணவன் அல்லது மனைவி கிடைக்க வேண்டாமா?

எத்தனை பேருக்குக் கிடைத்திருக்கிறது?

ஒருவன் தன் நண்பனிடம் கேட்டான், “டேய் பிசாசைப் பார்த்திருக்கிறாயா?”

அவன் உடனே பதில் சொன்னான், “பார்த்திருக்கிறாயா என்று கேட்கிறாயே?
ஏழு ஆண்டுகளாக அதோடுதான் குடும்பம் நடத்திக்கொண்டிருக்கிறேன்”

சிரிக்காதீர்கள். இதே போல ஒரு கதையை ஒரு பெண்ணும் சொன்னாள்

அடித்து தண்ணீர் எடுக்கும் பம்ப்பைப் பார்த்துவிட்டு வீட்டிற்கு வந்த
ஊர்க்காரர் கேட்டார், “ இரண்டு பேருமே, தண்ணீர் அடிப்பீர்களா?”

அந்தப் பெண் வருத்தம் கலந்த நகைச்சுவையுடன் பதில் சொன்னாள்

“வீட்டில் நான் அடிப்பேன். அவர் கடைக்குச் சென்று அடித்துவிட்டு வருவார்!”
-----------------------------------------------------------------------------------------------------------------------
சரி, சொல்ல வந்த ்விஷயத்திற்கு வருகிறேன். எத்தனை பேருக்கு மகிழ்வைத்
தரக்கூடிய, இல்லறம் அமைந்திருக்கிறது?

உத்தேசமாக ஒரு 50 சதவிகித மக்களுக்குக் கிடைத்திருக்கலாம். அந்த ஐம்பதில்
கூடப் பாதிப்பேர்கள், தங்கள் அதிருப்தியை வெளியே சொல்லாமல், பெருந்தன்மை
யோடு வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருக்கலாம்.

நெருக்கிக் கேட்டால் சொல்வார்கள்,

“நாம் நினைத்தபடியா எல்லாம் நடக்கிறது? ஏதோ நடந்துவிட்டது. பெற்றோர்களின்
கட்டாயத்தில் தாலி கட்டிவிட்டேன் (அல்லது கழுத்தை நீட்டி விட்டேன் - இது
பெண்கள்). நான் எதிர்பார்த்த சந்தோஷம் இல்லைதான். அதற்காக வாழ்க்கையை
rewind செய்து பழையபடி துவங்க முடியுமா? அதானால் ஓட்டிக்கொண்டிருக்கிறேன்.
எல்லாம் தலைவிதி. அவ்வளவுதான். ஒன்றும் சொல்வதற்கில்லை!”

ஏன் இப்படிப் பலதரப்பட்ட நிலைமை?

எல்லாம் கிரகக் கோளாறு. வாங்கிவந்த வரம்!

வேறேன்ன சொல்ல முடியும்?

திருமணத்திற்கு முன்பு, பெரும்பாலான ஆண்கள் தங்களை மன்மதன்களாக நினைத்துக்
கொள்வார்கள். தங்களூக்குக் கழுத்தை நீட்டி மணம் செய்துகொண்டு, காலைத் தொட்டு
வணங்க சிநேகாக்களும், பிரியாமணிகளும், பாவ்னாக்களும் காத்திருப்பதாகக் கனவு
கண்டு கொண்டிருப்பார்கள்.

திருமணத்திற்கு முன்பு, பெரும்பாலான பெண்களும் அப்படித்தான் கனவுகளோடு
இருப்பார்கள். தங்களைத் தேவதைகளாக நினைத்துக்கொள்வார்கள். பண்ணுகிற
அழும்பு தாங்காது. சூரியாக்களும், அஜீத்களும், விஷால்களும் குதிரையில் வந்து
தங்களைக் கந்தர்வமணம் புரியக் காத்திருக்கும் கனவுகளுடன் இருப்பார்கள்
மணம் முடித்த பிறகு அவர்கள் தங்கள் காலடியில் கிடப்பார்கள் என்று எண்ணிக்
கொண்டும் இருப்பார்கள்.

ஆனால் உண்மை எதிர்மாறாக இருக்கும் - நடக்கும்!

கனவில் மிதக்கும் கன்னிகளுக்கு, கல்கி பட பிரகாஷ்ராஜ் போல ஒரு கணவன் வந்து
சேருவான். காளைகளுக்கு, தஞ்சாவூர் தவில் என்று புகழ்பெற்ற காந்திமதி போன்ற
நாயகி வந்து சேருவாள்.

அதுதான் வாழ்க்கை!

அதுதான் விதியின் விளையாட்டு!

விதி பாதி நேரம் எதிர் அணியோடுதான் விளையாடும். அந்த சமயங்களில் பந்தோடு
சேர்த்து நம்மையும் கோல் போஸ்டிற்குள் தள்ளிவிட்டுப் போய்விடும்!
------------------------------------------------------------------------------
கணவன், மனைவி அமைப்பு என்பது ரயிலும் தண்டவாளமும் போல இருக்கும்.
கணவன் ரயில்போல சுறுசுறுப்பாக வேகமாக செயல் படுபவனாக இருந்தால், மனைவி
அசமந்தமாக, சோம்பேறியாக, தூங்குமூஞ்சியாக இருப்பாள். அதே போல மனைவி
ரயிலாக இருந்தால், கணவன் தண்டவாளம் போல செயலற்று இருப்பான்.

இருவருமே ரயிலாக இருப்பதில்லை!

இரண்டுமே ரயிலாக இருந்தால் எப்படி ஓடும்? ஒன்றை ஒன்று முட்டிக்கொண்டு நிற்காதா?

பாடகனுக்கு, பாடகியும், நடன ஆசியருக்கு நடனமாடத்தெரிந்த பெண்ணும், எழுத்தாளனுக்கு
எழுதத் தெரிந்த பெண்ணும் கலா ரசிகனுக்கு, கலாரசிகையும், இப்படித் துறை சார்ந்த,
திறமை ஒற்றுமை, மன ஒற்றுமை நிறைந்த பொருத்தமான மனைவி அமைவதில்லை.
அதுபோல பெண்ணிற்கும் கணவன் அமைவதில்லை!

ஏட்டிக்குப் போட்டியாக சிந்துபைரவி படத்தில் இருந்ததைப் போன்றுதான் அமையும்

ஏன் இப்படி?

எல்லாம் ஒவ்வொரு ஜாதகத்தின் அமைப்பு. கிரகங்கள் பண்ணுகிற வேலை!

ஒரே வரியில் சொன்னால்: வாங்கி வந்த வரம்!

ஜாதகத்தில் இது தெரியுமா?

ஏன் தெரியாது? நன்றாகத் தெரியும்!
------------------------------------------------------------------------------------------------------
1. லக்கினத்திற்கு ஏழாம் வீட்டில் 30 பரல்களோ அல்லது அதற்கு மேற்பட்ட
பரல்களோ இருந்தால் நல்ல மணவாழ்க்கை அமையும்.

2. 25 - 30 பரல்கள் இருந்தால் சராசரியான மணவாழ்க்கை அமையும்

3, 25ற்குக் குறைவான பரல்கள் இருந்தால் சுமாரான மணவாழ்க்கை அமையும்

4. 20ம் அதற்குக் கீழேயும் இருந்தால் மணவாழ்க்கை சிறக்காது. பொதுவாகத்
திருமணமே ஆகாது. அப்படியே ஜாதகத்தின் வேறு உள் அமைப்புக்களால்
ஒருவேளை திருமணம் ஆனாலும், இழுத்துக்கொள், பறித்துக்கொள், ஒட்டிக்கொள்
ஓட்டிக்கொள் என்பது மாதிரியான மணவாழ்க்கை அமையும்

இப்படிக் குறைவாக இருக்கும் வாசகர்கள் கன்னத்தில் கைவைத்துக் கொண்டு
உட்கார்ந்து விடாதீர்கள். இது பொது விதி! சில ஜாதகங்களில் இதற்கு விதி
விலக்கு இருக்கும். அது அதன் அமைப்பைப் பொறுத்தது. சந்தேகம் இருப்பவர்கள்
நல்ல ஜோதிடரிம் காட்டி விளக்கம் கேட்டுக் கொள்ளலாம்!
---------------------------------------------------------------------------------------------
இங்கே வாழ்க்கை என்பது திருமண வாழ்க்கையை மட்டுமே குறிக்கும்
திருமண வாழ்க்கை என்பது வாழ்க்கையின் ஒரு பகுதிதான்

Married life is only a part of the life.
When we say something about the married life. It is about the benefits or losses
out of the married life. It is about the span of the married life.
About the happiness and sorrows out of the married life.
In one sentence, It is the outcome of married life!
-------------------------------------------------------------------------------------------------
திருமண வாழ்வைப்பற்றிச் சொல்லிவிட்டீர்கள். மனைவியைப் பற்றித் தனியாகச்
சொல்ல அல்லது கணவனைப் பற்றித் தனியாகச் சொல்ல ஏதாவது இருக்கிறதா?

சொல்லமுடியும்!

5. லக்கினத்தைவிட ஏழாம் வீட்டில் பரல்கள் அதிகமாக இருக்க வேண்டும்.
உதாரணமாக லக்கினத்தில் 25 பரல்கள் என்றால், ஏழாம் வீட்டில் அதைவிட
அதிகமான பரல்கள் இருக்க வேண்டும் 27 அல்லது அதற்கு மேல் எண்ணிக்
கையுடன் பரல்கள் இருக்க வேண்டும்!

அப்படி இருந்தால் உங்களைவிடத் தகுதி வாயந்த மனைவி அல்லது கணவன்
கிடைப்பான். அப்படி எண்ணிக்கை இல்லையென்றால் உங்களைவிடத் தகுதி
குறைவான மனைவி அல்லது கணவன் கிடைப்பான்.
--------------------------------------------------------------------------------------------------------------------
சரி, எதிர்பார்த்தபடி கணவன் அல்லது மனைவி கிடைக்கும் என்பதைத்
தெரிந்துகொள்ள வழி இருக்கிறதா?

எதிர்பார்த்தபடி மனைவியோ அல்லது கணவனோ அமைந்து விட்டால், வாழ்க்கை
சொர்க்கமாக அல்லவா மாறிவிடும்!

அதைத் தெரிந்து கொள்ள ஒரு வழி இருக்கிறது!

6. ஏழாம் வீடு, ஏழாம் வீட்டின் நாயகன் (Lord of the seventh house) சென்று
அமர்ந்த இடம், களத்திரகாரகன் (Authority for marriages) அமர்ந்த இடம் ஆகிய
மூன்று இடங்க்ளும் 30 பரல்களுக்குமேல் கொண்டிருந்தால் அப்படிக் கிடைக்கும்

இல்லையென்றால் எதிர்பார்ப்பு நடக்காது!

வந்ததை ஏற்றுக்கொண்டு வாழ்க்கையை ஓட்ட வேண்டியதுதான்!
--------------------------------------------------------------------------------------------------------
சிலருக்கு உரிய காலத்தில் திருமணமாவதில்லை. சிலருக்குக் கடைசிவரை
திருமணமே ஆவதில்லை. அவறிற்கு என்ன காரணம்?

தாமதத்திற்குப் பல காரணங்கள் உண்டு. Misplacement of planets concerned,
malefic planets like Saturn, Rahu or Ketu in those houses, improper Dasa
and bukthi in the young age என்று பல கண்டிஷன்கள் அல்லது நிலைமைகள்
அல்லது அமைப்புக்கள் உள்ளன. அதைத் தனிப்பதிவாக எழுத வேண்டும்
அது பத்துப் பக்கங்கள் வரும்!. இப்போது நேரமில்லை. பின்னால் எழுதுகிறேன்.

அதுபோல திருமணம் ஆகாமலேயே போய்விடுகின்ற நிலைமைக்கும் பல
காரணங்கள் உண்டு ( 6 அல்லது 8 அல்லது 12ல் - இவற்றை மறைவிடங்கள்
என்பார்கள். இந்த இடங்களில் திருமணத்திற்கு உரிய கிரகம் அமர்ந்து வலுவிழந்து
போய்விடுவது காரணமாகும்) மேலும் ஒரு முக்கியமான காரணம் 6ம் எண்ணாகச்
சொல்லியிருக்கின்ற இடங்களில் (மூன்றிலுமே) பரல்கள் மிகக் குறைவாக இருந்தாலும்
அந்த நிலைமை ஏற்படும்

உதாரணத்திற்குக் கீழே ஒரு மாதிரி ஜாதகத்தைக் கொடுத்துள்ளேன்
அதில் பாருங்கள் 7th House, 7th lord Jupiter, Karaga Venus all the 3 are
associated with only 15 (பரல்கள்) இந்த ஜாதகருக்குக் கடைசிவரை
திருமணமே நடைபெறவில்லை! It is called as denial of marriage!

படத்தின் மீது கர்சரை வைத்து அழுத்தினால் படம் பெரிதாகத் தெரியும்!
****************************************************

++++++++++++++++++++++++++++++++++++++++++++
சிலருக்கு மண வாழ்வு முறிந்து, விவாகரத்தில் கொண்டுபோய் விட்டு விடுகிறதே
அதற்கு என்ன காரணம்?

சிலர் இளம் மனைவியைக் கைக் குழந்தையுடன் இங்கே விட்டுவிட்டு, மலேஷியா,
துபாய், அபுதாபி என்று பொருள் ஈட்டப் போய் விடுகிறார்கள். வருடத்திற்கு
ஒருமுறை அல்லது இரண்டு வருடத்திற்கு ஒரு முறைதான் இங்கே வந்து
போகிறார்கள் ஒருவாரம் இருந்து விட்டு மீண்டும் போய் விடுகிறார்கள். அது
இருபது அல்லது 25 வருட காலங்கள் நீடிக்கிறது. மனைவி இங்கே. கணவன்
அங்கே. இந்த மாதிரியான அரைகுறை இல்லற வாழ்விற்கு என்ன காரணம்?

இவை இரண்டுமே சற்று விரிவாகப் பதில் எழுத வேண்டிய கேள்விகள்
தனித்தனிப் பதிவாகப் பின்னால் எழுதுகிறேன்
-----------------------------------------------------------------------------------------------------------
காதல் திருமணம் என்பதைச் சொல்ல ஜாதகத்தில் வழி இருக்கிறதா?

இருக்கிறது!

அதை மட்டும் எழுதுதாக இல்லை!

இங்கே பதிவுகளில் வளைய வருகிறவர்களில் பலர் திருமணம் ஆகாத
இளைஞர்கள் அல்லது இளம் பெண்கள்.

அவர்களைத் திசை திருப்பும் விதமாகப் பதிவில் செய்திகள் வருவதை நான்
விரும்பவில்லை.

அத்துடன், அதை விவரமாக எழுதும்போது சமூகம் பற்றிய மற்ற குறிப்புக்களையும்
எழுத வேண்டியதிருக்கும். அது இங்கே வேறு விதமான புயலைக் கிளப்பும்
ஆகவே எழுதப் போவதில்லை. யாரும் அதை வலியுறுத்த வேண்டாம்

காதல் திருமணங்களிலும் மேலே பதிவில் சொன்னபடி, பல குளறுபடிகள்
மணமுறிவு உட்பட்ட பல விவகாரங்கள் உள்ளன! அவற்றையும் சொல்ல வேண்டு
மென்றால், தனித்தனியாக - அதை அறிந்து கொள்ள விரும்புகிறவரின் அல்லது
விரும்புகிற பெண்ணின் ஜாதகத்தைப் பார்த்துத்தான் பதில் சொல்ல முடியும்
அதற்கெல்லாம் எனக்கு நேரமில்லை!

அத்துடன் ஜோதிடம் என்பது எனக்கு தொழில் அல்ல! எனக்கு வேறு தொழில்
இருக்கிறது.

நான் படித்ததை, பார்த்ததை, என் அனுபவங்களை ஒரு ஆர்வத்தில் உங்களுக்கு
அறியத் தந்து கொண்டிருக்கிறேன். அவ்வளவுதான்.

ஆகவே யாரும் அதை வலியுறுத்த வேண்டாம்!!!!!!!!!!
------------------------------------------------------------------------------------------------------------
பதிவின் நீளம் கருதி இன்று இத்துடன் நிறைவு செய்கிறேன். மற்றவை
அடுத்த பதிவில்!

அன்புடன்
வாத்தியார்




வாழ்க வளமுடன்!

67 comments:

  1. நல்ல கருத்து. :-)

    ReplyDelete
  2. ////.:: மை ஃபிரண்ட் ::. said...
    நல்ல கருத்து. :-)////

    பல கருத்துக்களைச் சொல்லியிருக்கிறேன்.
    எதை நல்ல கருத்து என்கிறீர்கள் சகோதரி?

    ReplyDelete
  3. As usual good intro before lesson...

    -Shankar

    ReplyDelete
  4. sibyappa said...
    உங்களைப் போன்ற சிறந்த பதிவர்கள் சோதிட நம்பிக்கைப் போன்ற பதிவுகள் எழுதி சமுதாயத்தின் தன்னம்பிக்கை ஆட்டிப்பார்க்க நினைப்பது சரியா அய்யா?. உலகின் எந்த நாட்டிலும் இல்லாத இந்த ஜாதக விசையங்களின் மறுபக்கத்தை அறியாதவரா அய்யா நீங்கள், ஒருவர் பிறப்பு நேரம், பெண் வயதுக்கு வரும் நேரம் யாவும் உடல் சார்ந்த அறிவியலல்லவா?.
    தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்ச்சிதன் மெய் வருத்த கூலி தரும்- என்பதைச் சொல்லிக்கொடுங்கள் அய்யா இந்தச் சமுதாயம் கொஞ்சம் பிழைத்துப் போகட்டும்.

    ReplyDelete
  5. சுப்பையா சார் பிரமாதம் சார்.
    அருமையான களத்திர ஸ்தானம் பற்றி
    யாவரும் புரியும் வண்னம் போட்ட தங்கள் பதிவுக்கு 100 க்கு 100 மார்க் போடலாம் சார். என்னடா மாணவர் வாத்தியாருக்கு மார்க் போடுவதா?
    சரி இல்லையே?

    சரி ஒரு பாமாலை சூட்டி பாராட்டி மகிழலாம்.

    மனைவி அமமைவதெல்லம் இறைவன் கொடுத்த வரமென்பார்

    கணவன் வாய்ப்பதெல்லாம் பூர்வஜென்ம
    புண்ணியம் என்பார்

    நவக்கிரக நிலைகலள் செய்யும் ரசாவாதம்
    என்பதை
    நல்ல தமிழில் பரல்களின் மதிப்போடு
    சொல்லும்

    வாத்யார் சுப்பையா அவர்களின் பெருமைமிகும் தமிழ்த்
    தொண்டு
    வாழ்வாங்கு வாழ்ந்து சிறந்து
    மனம்பரப்ப வாழ்த்துகிறேன்

    ReplyDelete
  6. ///////Anonymous said...
    As usual good intro before lesson...
    -Shankar//////

    நன்றி நண்பரே!

    ReplyDelete
  7. /////////Anonymous said...
    sibyappa said...
    உங்களைப் போன்ற சிறந்த பதிவர்கள் சோதிட நம்பிக்கைப் போன்ற பதிவுகள் எழுதி சமுதாயத்தின் தன்னம்பிக்கை ஆட்டிப்பார்க்க நினைப்பது சரியா அய்யா?. உலகின் எந்த நாட்டிலும் இல்லாத இந்த ஜாதக விசையங்களின் மறுபக்கத்தை அறியாதவரா அய்யா நீங்கள், ஒருவர் பிறப்பு நேரம், பெண் வயதுக்கு வரும் நேரம் யாவும் உடல் சார்ந்த அறிவியலல்லவா?.
    அய்யா இந்தச் சமுதாயம் கொஞ்சம் பிழைத்துப் போகட்டும்.//////

    /////தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்ச்சிதன் மெய் வருத்த கூலி தரும்- என்பதைச் சொல்லிக்கொடுங்கள்/////

    அதையும் சொல்லிக்கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறேன் என்னுடைய மற்ற இடுகைகளையும், படித்துப் பாருங்கள்!

    ஆகா, நல்லது நண்பரே! உங்கள் தன்னம்பிக்கை வாழ்க!
    உங்களுக்குத் தன்னம்பிக்கை இருக்கிறதல்லவா? ஏன் அனானியாக வருகிறீர்கள்?

    ReplyDelete
  8. ////////திருநெல்வேலி கார்த்திக் said...
    சுப்பையா சார் பிரமாதம் சார்.
    அருமையான களத்திர ஸ்தானம் பற்றி
    யாவரும் புரியும் வண்னம் போட்ட தங்கள் பதிவுக்கு 100 க்கு 100 மார்க் போடலாம் சார். என்னடா மாணவர் வாத்தியாருக்கு மார்க் போடுவதா?
    சரி இல்லையே?
    சரி ஒரு பாமாலை சூட்டி பாராட்டி மகிழலாம்.
    மனைவி அமமைவதெல்லம் இறைவன் கொடுத்த வரமென்பார்
    கணவன் வாய்ப்பதெல்லாம் பூர்வஜென்ம
    புண்ணியம் என்பார்
    நவக்கிரக நிலைகலள் செய்யும் ரசாவாதம்
    என்பதை
    நல்ல தமிழில் பரல்களின் மதிப்போடு
    சொல்லும்
    வாத்யார் சுப்பையா அவர்களின் பெருமைமிகும் தமிழ்த்
    தொண்டு
    வாழ்வாங்கு வாழ்ந்து சிறந்து
    மனம்பரப்ப வாழ்த்துகிறேன்/////

    உங்கள் அன்பிற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  9. //காதல் திருமணம் என்பதைச் சொல்ல ஜாதகத்தில் வழி இருக்கிறதா?

    இருக்கிறது!

    அதை மட்டும் எழுதுதாக இல்லை!//

    கவுத்திப்புடியே வாத்தியரே!

    என்னமோ எனக்கு இன்னும் காலம் இருக்கிறது.
    இன்னும் பிரபங்களின் உதாரணத்துடன் இருந்திருந்தால் நன்றாக இருக்கும்.

    ReplyDelete
  10. உங்கள் பதிவுகளை ஆரம்பத்தில் இருந்து படிக்கவேண்டும் என்று நினைத்திருக்கிறேன். பரல்கள் கணக்கிடுவது எவ்வாறு?

    ReplyDelete
  11. வாத்தியரே, வருகை பதிவெட்டை அப்‌டேட் செய்யும் பொழுது, நாள் குறிப்பும் கொடுத்தால் யார் யார் இந்த வார வகுப்பில் ஜூட் விட்டார்கள் என்று சுலபமாக கண்டு பிடிக்கலமே? எப்படி என்னுடய யோசனை?
    அப்படியே வாத்தியருக்கு ஒரு வருகை பதிவும் இட்டு விடுங்கள்.

    ReplyDelete
  12. அன்பு ஐயா,

    //நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்//
    //நான் என்றால் அது அவளும் நானும்//
    //வண்டி ஓட சக்கரங்கள் இரண்டு மட்டும் வேண்டும்
    அந்த இரண்டிலொன்று சிறியதென்றால் எந்த வண்டி ஓடும்//.. என்று தமிழ் திரைபாடலில் இலைமறை காய்மறையாய் கேட்டிருக்கிறோம்..

    அந்த கல்யாண ஏழாம் பொருத்த ரகசியத்தை மிக எளிமையாக தாங்கள் விளக்கியதற்கு நன்றி.

    கல்யாணம் ஆயிரங்காலத்து பயிர் என்பார்கள். சிலருக்கு அது பாசுமதி, சிலருக்கு அது பொன்னி, சிலருக்கு ஐ.ஆர்.8, எல்லாம் பிறக்கும் போது கடவுள் போட்ட மார்க்கு, வாங்கி வந்த வரம்/சாபம் :) என்று நீங்கள் சொன்னால் தான் எங்களுக்கு புரிகிறது.

    முதல் வரிசையில் நான் அமர்ந்திருப்பது, பின்னாலே யாருக்கும் மறைக்கலே தானே? :))

    என்றும் அன்புடன்
    தமாம் பாலா

    ReplyDelete
  13. ////ஆகா, நல்லது நண்பரே! உங்கள் தன்னம்பிக்கை வாழ்க!
    உங்களுக்குத் தன்னம்பிக்கை இருக்கிறதல்லவா? ஏன் அனானியாக வருகிறீர்கள்?////
    sibyappa என்று பெயரிட்டுத்தான் பின்னூட்டமிட்டிருந்தேன், கவனிக்காமல் விட்டிருப்பீர்கள் பரவாயில்லை. நன்றி வணக்கம்.

    ReplyDelete
  14. //தமாம் பாலா..
    முதல் வரிசையில் நான் அமர்ந்திருப்பது, பின்னாலே யாருக்கும் மறைக்கலே தானே? :))//

    கண்டிப்பாக இல்லை பாலா, இப்பொழுதுதான் சிறிது நிம்மதியாக உள்ளேன் பின் வரிசை வந்த பிறகு, இத்தனை காலம் உங்களை போல ஒருவருகாக காத்திருந்தேன் பின் வரிசை வர.
    பின் .கு : நான் சிறிது உயரம் கூட

    ReplyDelete
  15. வணக்கம் ஐயா!!
    நீங்கள் சொல்லிஇருபது நூற்றுக்கு நூறு உண்மை .
    எனக்கு தெரிந்த அணிவரின் ஜாதகத்தையும் பார்த்து விட்டேன் , அப்படியே ஒத்து போகிறது.
    ஒரு சந்தேகம், கனவன், மனைவி, குழந்தைகள் ஒற்றுமையாய் வாழ ஜாதக அமைப்பு எவ்வாறு இருக்க வேண்டும், கொஞ்சம் விரிவான பதில் தேவை .

    ReplyDelete
  16. //காதல் திருமணம் என்பதைச் சொல்ல ஜாதகத்தில் வழி இருக்கிறதா?

    இருக்கிறது!

    அதை மட்டும் எழுதுதாக இல்லை!

    இங்கே பதிவுகளில் வளைய வருகிறவர்களில் பலர் திருமணம் ஆகாத
    இளைஞர்கள் அல்லது இளம் பெண்கள்.

    அவர்களைத் திசை திருப்பும் விதமாகப் பதிவில் செய்திகள் வருவதை நான்
    விரும்பவில்லை.

    அத்துடன், அதை விவரமாக எழுதும்போது சமூகம் பற்றிய மற்ற குறிப்புக்களையும்
    எழுத வேண்டியதிருக்கும். அது இங்கே வேறு விதமான புயலைக் கிளப்பும்
    ஆகவே எழுதப் போவதில்லை. யாரும் அதை வலியுறுத்த வேண்டாம்

    காதல் திருமணங்களிலும் மேலே பதிவில் சொன்னபடி, பல குளறுபடிகள்
    மணமுறிவு உட்பட்ட பல விவகாரங்கள் உள்ளன!////

    I appreciate your decision on this.

    ////நான் படித்ததை, பார்த்ததை, என் அனுபவங்களை ஒரு ஆர்வத்தில் உங்களுக்கு
    அறியத் தந்து கொண்டிருக்கிறேன். அவ்வளவுதான்.///


    சோதிடம் என்பதை மூடநம்பிக்கை சார்ந்த விதயமாகக் கருத பல சோதிடர்கள் இடம் தந்துவிட்ட இந்த சூழலில்,அதை ஒரு கலையாக,அறிவுசார்ந்த விதயமாக அணுகுவதில் எனக்கு ஆர்வம் அதிகம்.

    நீங்கள் படித்தவற்றைப் பகிர்ந்துகொள்ள முன்வந்திருக்கும் உங்கள் பணி பாராட்டப்படவேண்டியது.

    மேலும் A person who learn something,become a legend in it,when he can teach the same to others' என்றொரு வாக்கியம் இருக்கிறது.

    பலரின் கேள்விக்கணைகள் எப்போதும் நம் அறிவை விசாலப்படுத்தவும் ஆழ்ந்த சிந்தனையையும் தூண்டுவன.

    ஆகவேதான் 'கேள்'-'Just Ask'- என்றார் எம்.ஆர்.காப்மேயர் , How to get whatever you want புத்தகத்தில்.

    உங்கள் செட்டிநாட்டுப்பக்கங்களில் கூடச் சொல்லும் ‘வாயுள்ள பிள்ளை பிழைக்கும்' பதம் கூட கேள்வியைத் தூண்டும் ஒரு பதம் என்றுதான் நினைக்கிறேன்.

    எனவே,நீங்கள் எழுதுங்க,நாங்க கேட்கிறோம்,அப்பப்போ கேள்வியும் கேட்கிறோம்.

    ReplyDelete
  17. ///கூடுதுறை said...
    Present sir !/////

    Noted!:-)))

    ReplyDelete
  18. /////////கோவை விமல்(vimal) said...
    //காதல் திருமணம் என்பதைச் சொல்ல ஜாதகத்தில் வழி இருக்கிறதா?
    இருக்கிறது!
    அதை மட்டும் எழுதுதாக இல்லை!//
    கவுத்திப்புடியே வாத்தியரே!
    என்னமோ எனக்கு இன்னும் காலம் இருக்கிறது.
    இன்னும் பிரபங்களின் உதாரணத்துடன் இருந்திருந்தால் நன்றாக இருக்கும்.////////

    புரிந்துகொண்டால் சரி!

    ReplyDelete
  19. //////////நிஜமா நல்லவன் said...
    உங்கள் பதிவுகளை ஆரம்பத்தில் இருந்து படிக்கவேண்டும் என்று நினைத்திருக்கிறேன். பரல்கள் கணக்கிடுவது எவ்வாறு?///////

    வெகு சுலபம். jagannaathahora.com என்ற தளத்தில் இலவச மென் பொருள் உள்ளது. தறவிரக்கம் செய்துகொள்ளுங்கள். அதோடு பழைய பதிவுகளைப் படியுங்கள் அதைப்படிக்காமல் இது எதுவும் பிடிபடாது!

    ReplyDelete
  20. //////////கோவை விமல்(vimal) said...
    வாத்தியரே, வருகை பதிவெட்டை அப்‌டேட் செய்யும் பொழுது, நாள் குறிப்பும் கொடுத்தால் யார் யார் இந்த வார வகுப்பில் ஜூட் விட்டார்கள் என்று சுலபமாக கண்டு பிடிக்கலமே? எப்படி என்னுடய யோசனை?
    அப்படியே வாத்தியருக்கு ஒரு வருகை பதிவும் இட்டு விடுங்கள்./////

    அதெல்லாம் வீண் வேலை!

    ReplyDelete
  21. //////////தமாம் பாலா said...
    அன்பு ஐயா,
    //நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்//
    //நான் என்றால் அது அவளும் நானும்//
    //வண்டி ஓட சக்கரங்கள் இரண்டு மட்டும் வேண்டும்
    அந்த இரண்டிலொன்று சிறியதென்றால் எந்த வண்டி ஓடும்//.. என்று தமிழ் திரைபாடலில் இலைமறை காய்மறையாய் கேட்டிருக்கிறோம்..
    அந்த கல்யாண ஏழாம் பொருத்த ரகசியத்தை மிக எளிமையாக தாங்கள் விளக்கியதற்கு நன்றி.
    கல்யாணம் ஆயிரங்காலத்து பயிர் என்பார்கள். சிலருக்கு அது பாசுமதி, சிலருக்கு அது பொன்னி, சிலருக்கு ஐ.ஆர்.8, எல்லாம் பிறக்கும் போது கடவுள் போட்ட மார்க்கு, வாங்கி வந்த வரம்/சாபம் :) என்று நீங்கள் சொன்னால் தான் எங்களுக்கு புரிகிறது.
    முதல் வரிசையில் நான் அமர்ந்திருப்பது, பின்னாலே யாருக்கும் மறைக்கலே தானே? :))
    என்றும் அன்புடன்
    தமாம் பாலா///////

    உங்களுக்குப் புரிந்ததில் எனக்கு மகிழ்ச்சியே!

    ReplyDelete
  22. /////சிபி அப்பா said...
    ////ஆகா, நல்லது நண்பரே! உங்கள் தன்னம்பிக்கை வாழ்க!
    உங்களுக்குத் தன்னம்பிக்கை இருக்கிறதல்லவா? ஏன் அனானியாக வருகிறீர்கள்?////
    sibyappa என்று பெயரிட்டுத்தான் பின்னூட்டமிட்டிருந்தேன், கவனிக்காமல் விட்டிருப்பீர்கள் பரவாயில்லை. நன்றி வணக்கம்.//////

    இதற்குமுன் எழுதிய பின்னூட்டத்தைப் பாருங்கள். அனானி optionல் தான் அது உள்ளிடப்பட்டுள்ளது
    கவனித்துத்தான் எழுதினேன்.

    இப்போது உங்கள் ப்ளாக்கர் கணக்கில் வந்துள்ளீர்கள். மிக்க மகிழ்ச்சி!
    அதோடு நன்றியும்கூட நண்பரே!

    ReplyDelete
  23. /////////கோவை விமல்(vimal) said..
    //தமாம் பாலா..
    முதல் வரிசையில் நான் அமர்ந்திருப்பது, பின்னாலே யாருக்கும் மறைக்கலே தானே? :))//
    கண்டிப்பாக இல்லை பாலா, இப்பொழுதுதான் சிறிது நிம்மதியாக உள்ளேன் பின் வரிசை வந்த பிறகு, இத்தனை காலம் உங்களை போல ஒருவருகாக காத்திருந்தேன் பின் வரிசை வர.
    பின் .கு : நான் சிறிது உயரம் கூட//////

    இணையப் பள்ளிக்கூடத்தில் வரிசை ஏது சாமி?

    ReplyDelete
  24. ////////Geekay said...
    வணக்கம் ஐயா!!
    நீங்கள் சொல்லிஇருபது நூற்றுக்கு நூறு உண்மை .
    எனக்கு தெரிந்த அணிவரின் ஜாதகத்தையும் பார்த்து விட்டேன் , அப்படியே ஒத்து போகிறது.
    ஒரு சந்தேகம், கனவன், மனைவி, குழந்தைகள் ஒற்றுமையாய் வாழ ஜாதக அமைப்பு எவ்வாறு இருக்க வேண்டும், கொஞ்சம் விரிவான பதில் தேவை //////

    அதெல்லாம் பின் பாடங்களில் வரும். பொறுத்திருங்கள்

    ReplyDelete
  25. //////அறிவன்#11802717200764379909 said...
    //காதல் திருமணம் என்பதைச் சொல்ல ஜாதகத்தில் வழி இருக்கிறதா?
    இருக்கிறது!
    அதை மட்டும் எழுதுதாக இல்லை!
    இங்கே பதிவுகளில் வளைய வருகிறவர்களில் பலர் திருமணம் ஆகாத
    இளைஞர்கள் அல்லது இளம் பெண்கள்.
    அவர்களைத் திசை திருப்பும் விதமாகப் பதிவில் செய்திகள் வருவதை நான்
    விரும்பவில்லை.
    அத்துடன், அதை விவரமாக எழுதும்போது சமூகம் பற்றிய மற்ற குறிப்புக்களையும்
    எழுத வேண்டியதிருக்கும். அது இங்கே வேறு விதமான புயலைக் கிளப்பும்
    ஆகவே எழுதப் போவதில்லை. யாரும் அதை வலியுறுத்த வேண்டாம்
    காதல் திருமணங்களிலும் மேலே பதிவில் சொன்னபடி, பல குளறுபடிகள்
    மணமுறிவு உட்பட்ட பல விவகாரங்கள் உள்ளன!////

    I appreciate your decision on this.

    ////நான் படித்ததை, பார்த்ததை, என் அனுபவங்களை ஒரு ஆர்வத்தில் உங்களுக்கு
    அறியத் தந்து கொண்டிருக்கிறேன். அவ்வளவுதான்.///

    சோதிடம் என்பதை மூடநம்பிக்கை சார்ந்த விதயமாகக் கருத பல சோதிடர்கள் இடம் தந்துவிட்ட இந்த சூழலில்,அதை ஒரு கலையாக,அறிவுசார்ந்த விதயமாக அணுகுவதில் எனக்கு ஆர்வம் அதிகம்.
    நீங்கள் படித்தவற்றைப் பகிர்ந்துகொள்ள முன்வந்திருக்கும் உங்கள் பணி பாராட்டப்படவேண்டியது.
    மேலும் A person who learn something,become a legend in it,when he can teach the same to others' என்றொரு வாக்கியம் இருக்கிறது.
    பலரின் கேள்விக்கணைகள் எப்போதும் நம் அறிவை விசாலப்படுத்தவும் ஆழ்ந்த சிந்தனையையும் தூண்டுவன.
    ஆகவேதான் 'கேள்'-'Just Ask'- என்றார் எம்.ஆர்.காப்மேயர் , How to get whatever you want புத்தகத்தில்
    உங்கள் செட்டிநாட்டுப்பக்கங்களில் கூடச் சொல்லும் ‘வாயுள்ள பிள்ளை பிழைக்கும்' பதம் கூட கேள்வியைத் தூண்டும் ஒரு பதம் என்றுதான் நினைக்கிறேன்.
    எனவே,நீங்கள் எழுதுங்க,நாங்க கேட்கிறோம்,அப்பப்போ கேள்வியும் கேட்கிறோம்.//////

    உங்கள் பொறுமைக்கும், நீண்ட பின்னூட்டத்திற்கும் நன்றி
    நன்றாகக் கேள்விகள் பதில் சொல்வதும் வாத்தியாரின் வேலைதான்!

    ReplyDelete
  26. //SP.VR. SUBBIAH said...
    இணையப் பள்ளிக்கூடத்தில் வரிசை ஏது சாமி?//

    இன்னையத்தில் பள்ளிக்கூடம் இருக்கும் பொழுது, வரிசை இருக்காதா வாத்தியரே!

    பின்ணூட்ட வரிசைதான் மாணவர்களின் வரிசை ஆசனே

    ReplyDelete
  27. ரொம்ப நல்லா எழதியிருக்கீங்க...

    வாழ்த்துக்கள். உங்கள் பணி தொடரட்டும்...

    ReplyDelete
  28. ///////கோவை விமல்(vimal) said...
    //SP.VR. SUBBIAH said...
    இணையப் பள்ளிக்கூடத்தில் வரிசை ஏது சாமி?//
    இன்னையத்தில் பள்ளிக்கூடம் இருக்கும் பொழுது, வரிசை இருக்காதா வாத்தியரே!
    பின்ணூட்ட வரிசைதான் மாணவர்களின் வரிசை ஆசனே/////

    ஆகட்டும் நண்பரே!

    ReplyDelete
  29. //////Durai Thiyagaraj said...
    ரொம்ப நல்லா எழதியிருக்கீங்க...
    வாழ்த்துக்கள். உங்கள் பணி தொடரட்டும்...///////

    பாராட்டுக்களுக்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  30. உங்கள் வகுப்பின் சிறப்பே ரொம்ப எளிமையா பரல்கள் வெச்சு கணக்கீடு செய்ய சொல்லி தறது தான். வீட்டுக்கு போய் பாத்துக்கறேன், எனக்கு எத்தனை பரல்கள்னு.
    ரொம்ப நன்றி குருவே.


    என்ன விமல், பின் வரிசைக்கு போயிட்டியா? :p

    ReplyDelete
  31. ஐயா,
    திருமண விஷயத்தில் தற்போது நடப்பதை மிகவும் பிராக்டிக்கலாக, யதார்த்தமாக தாங்கள் கூறியுள்ளது
    நன்றாக இருந்தது. நன்றி.

    ReplyDelete
  32. வாத்தியாரய்யா,

    //திருமண வாழ்வைப்பற்றிச் சொல்லிவிட்டீர்கள். மனைவியைப் பற்றித் தனியாகச்
    சொல்ல அல்லது கணவனைப் பற்றித் தனியாகச் சொல்ல ஏதாவது இருக்கிறதா?//

    எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்றிருக்கும் போது, நீ கவலைப் பட்டு என்ன ஆகப் போகிறது?

    இது தான் ஐய்யா நிஜம்.

    ReplyDelete
  33. /////ambi said...
    உங்கள் வகுப்பின் சிறப்பே ரொம்ப எளிமையா பரல்கள் வெச்சு கணக்கீடு செய்ய சொல்லி தறது தான். வீட்டுக்கு போய் பாத்துக்கறேன், எனக்கு எத்தனை பரல்கள்னு.
    ரொம்ப நன்றி குருவே./////

    நன்றி அம்பி

    ReplyDelete
  34. /////மணிவேல் said...
    ஐயா,
    திருமண விஷயத்தில் தற்போது நடப்பதை மிகவும் பிராக்டிக்கலாக, யதார்த்தமாக தாங்கள் கூறியுள்ளது
    நன்றாக இருந்தது. நன்றி./////

    பாராட்டிர்கு நன்றி மிஸ்டர் மணிவேல்

    ReplyDelete
  35. வணக்கம் ஐயா
    மிகநன்றாக சொன்னீகள் பிசாசுக்கதை ஆனால் அப்பிசாசை விடக்கூடாது. விட்டால் இதைவிடபெரிய பூதம் வந்துசேரும் அல்லது பூதம் கிடைக்காதா என ஏங்கும். பிசாசே மேல்

    மேலும் தண்ணீர்பம் அடிதல் கதையில் என்னும் ஒரு நகச்சுவையும் உண்டு (இது இளையோருக்கு அதிகம் பிடிக்கும்) அந்தப்பெண் சொன்னாள் பகலில் நான் அடிப்பேன் இரவில் அவர் அடிப்பார் என

    ஐயா சுடு தண்ணியும் குளிர் தண்ணியும் கலப்பது போல்தான் வாழ்கை அமையும் என்கிறீகள் அதாவது இளங்சூடு.

    மாணவன்
    சிவா

    ReplyDelete
  36. ///////Sumathi. said...
    வாத்தியாரய்யா,
    //திருமண வாழ்வைப்பற்றிச் சொல்லிவிட்டீர்கள். மனைவியைப் பற்றித் தனியாகச்
    சொல்ல அல்லது கணவனைப் பற்றித் தனியாகச் சொல்ல ஏதாவது இருக்கிறதா?//
    எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்றிருக்கும் போது, நீ கவலைப் பட்டு என்ன ஆகப் போகிறது?
    இது தான் ஐய்யா நிஜம்./////

    உண்மைதான் சகோதரி. உங்களுக்கு இருப்பதைப் போல பக்குவம் மற்றவர்களுக்கும் வரவேண்டும்
    அதற்காகத்தான் இந்தப் பதிவில் இவ்வளவு முனைந்து எழுதிக்கொண்டிருக்கிறேன்
    விதியை அனைவரும் உணரவேண்டும்
    கடவுளையே உணர மறுப்பவர்கள், விதியை எங்கே உணரப்போகிறார்கள்?
    அதுதான் சோகம்
    ஆனால் விதிவிடாது ஒரு காலகட்டத்தில் அது தன் வலிமையைக் காட்டி உணராதவனுக்கு உணரவைக்கும்!

    ReplyDelete
  37. /////siv said...
    வணக்கம் ஐயா
    மிகநன்றாக சொன்னீகள் பிசாசுக்கதை ஆனால் அப்பிசாசை விடக்கூடாது. விட்டால் இதைவிடபெரிய பூதம் வந்துசேரும் அல்லது பூதம் கிடைக்காதா என ஏங்கும். பிசாசே மேல்
    மேலும் தண்ணீர்பம் அடிதல் கதையில் என்னும் ஒரு நகச்சுவையும் உண்டு (இது இளையோருக்கு அதிகம் பிடிக்கும்) அந்தப்பெண் சொன்னாள் பகலில் நான் அடிப்பேன் இரவில் அவர் அடிப்பார் என
    ஐயா சுடு தண்ணியும் குளிர் தண்ணியும் கலப்பது போல்தான் வாழ்கை அமையும் என்கிறீகள் அதாவது இளங்சூடு.
    மாணவன்
    சிவா/////

    இரண்டு குட்டிக்கதைகளையுமே நன்றாக ரசித்துள்ளீர்கள். நன்றி நண்பரே!

    ReplyDelete
  38. ஐயா, தற்போதைய பாடங்கள் சற்றே கூர்ந்து படித்து கிரகித்துக்கொண்டால் தான் பயன்.அதை தான் செய்ய முயல்கிறேன்.இறைவன் கொடுத்த வரங்களில் மனைவி மட்டுமல்ல,குருவும் ஒரு வரம் தான்.

    "பட்டணப் பெண்ணோ பட்டிக்காடோ
    கட்டின ராஜா ஹனிமூன் போடா"
    என்ற வைர வரிகளுக்கு ஏற்றபடி கிடைத்த வாழ்வை மனமுவந்து ஏற்றால் வாழ்க்கை சொர்க்கம்.இல்லையேல்?

    ReplyDelete
  39. ///////தியாகராஜன் said...
    ஐயா, தற்போதைய பாடங்கள் சற்றே கூர்ந்து படித்து கிரகித்துக்கொண்டால் தான் பயன்.அதை தான் செய்ய முயல்கிறேன்.இறைவன் கொடுத்த வரங்களில் மனைவி மட்டுமல்ல,குருவும் ஒரு வரம் தான்.
    "பட்டணப் பெண்ணோ பட்டிக்காடோ
    கட்டின ராஜா ஹனிமூன் போடா"
    என்ற வைர வரிகளுக்கு ஏற்றபடி கிடைத்த வாழ்வை மனமுவந்து ஏற்றால் வாழ்க்கை சொர்க்கம்.இல்லையேல்?/////

    உங்களைப்போல எல்லோருமே, இறைவனை உணர்ந்து விட்டால் நான் பதிவு எழுதுவதை
    நிறுத்தி விடாலாம் நண்பரே!:-)))

    நான் முதலில் ஆன்மிகத்தைப் போதிக்கும் முகமாகத்தான் இந்த வகுப்பறையைத்
    துவங்கினேன். திசை மாறிவிட்டது. என் ராசிநாதன் சனீஸ்வரன் என்னை ஜோதிடம் எழுதவைத்துவிட்டான்:-)))

    ReplyDelete
  40. //ambi said...
    என்ன விமல், பின் வரிசைக்கு போயிட்டியா? :p//

    ஆமாம் அம்பி, ஒரு புதிய மாணவன் சேர்க்கை(தாமாம் பாலா), அதான் நன்றாக பாடம்கர்கட்டுமே என்று பின் வரிசை சென்றேன், நமது ஆசானின் சொல்படி, என்ன இருந்தாலும், மந்த்லி டெஸ்ட் சமயத்தில் முன் வரிசை வந்து விடுவேன் உயிர் தோழா.

    ReplyDelete
  41. ////கோவை விமல்(vimal) said...
    //ambi said...
    என்ன விமல், பின் வரிசைக்கு போயிட்டியா? :p//

    ஆமாம் அம்பி, ஒரு புதிய மாணவன் சேர்க்கை(தாமாம் பாலா), அதான் நன்றாக பாடம்கர்கட்டுமே என்று பின் வரிசை சென்றேன், நமது ஆசானின் சொல்படி, என்ன இருந்தாலும், மந்த்லி டெஸ்ட் சமயத்தில் முன் வரிசை வந்து விடுவேன் உயிர் தோழா.////

    வரும் திங்கட்கிழமை மந்த்லி டெஸ்ட்! ஞாபகப்படுத்துங்கள்!

    ReplyDelete
  42. // 1. லக்கினத்திற்கு ஏழாம் வீட்டில் 30 பரல்களோ அல்லது அதற்கு மேற்பட்ட
    பரல்களோ இருந்தால் நல்ல மணவாழ்க்கை அமையும்.//


    அய்யா நீங்க‌ளே இது பொது விதி என‌ச் சொல்லிவிட்டீர்க‌ள். இருப்பினும்
    இர‌ண்டொரு ச‌ந்தேக‌ங்க‌ள்
    ஒருவ‌ன‌து திரும‌ண‌ வாழ்க்கை ச‌ரியாக‌ அமைய‌:
    ராசிப்பொருத்த‌மும் ராசியாதிப‌திப் பொருத்த‌மும் தேவை ?. பைய‌ன், பெண் இருவ‌ர் ஜாத‌க‌ங்க‌ளில் ஒன்றிலோ அல்லது இரண்டிலுமோ ஏழாம் வீட்டில் 30 ப‌ர‌ல்க‌ள் இருப்பினும், இருவ‌ர‌து ராசி அதிப‌ர்க‌ள்
    ஒருவ‌ருக்கொருவ‌ர் விரோதியாக‌ இருப்பின், (அல்லது) லக்னாதிபதிகளோ அல்லது ஏழாம் இட‌த்துக்குரிய‌வ‌ர்க‌ள்
    ஷ‌ஷ்டாக‌மாக இருந்தால் திருப்தியான இய‌ல்பான‌ இனிதான‌ ம‌ண‌ வாழ்க்கை
    அமையுமா ?.
    சுப்பு
    தஞ்சை.

    ReplyDelete
  43. //வரும் திங்கட்கிழமை மந்த்லி டெஸ்ட்! ஞாபகப்படுத்துங்கள்!//

    உள்ளேன் வாத்தியரே, கண்டிப்பாக

    வழக்கம்போல அம்பி hall ticket number என் அருகில்.

    ReplyDelete
  44. ////////sury said...
    // 1. லக்கினத்திற்கு ஏழாம் வீட்டில் 30 பரல்களோ அல்லது அதற்கு மேற்பட்ட
    பரல்களோ இருந்தால் நல்ல மணவாழ்க்கை அமையும்.//
    அய்யா நீங்க‌ளே இது பொது விதி என‌ச் சொல்லிவிட்டீர்க‌ள். இருப்பினும்
    இர‌ண்டொரு ச‌ந்தேக‌ங்க‌ள்
    ஒருவ‌ன‌து திரும‌ண‌ வாழ்க்கை ச‌ரியாக‌ அமைய‌:
    ராசிப்பொருத்த‌மும் ராசியாதிப‌திப் பொருத்த‌மும் தேவை ?. பைய‌ன், பெண் இருவ‌ர் ஜாத‌க‌ங்க‌ளில் ஒன்றிலோ அல்லது இரண்டிலுமோ ஏழாம் வீட்டில் 30 ப‌ர‌ல்க‌ள் இருப்பினும், இருவ‌ர‌து ராசி அதிப‌ர்க‌ள்
    ஒருவ‌ருக்கொருவ‌ர் விரோதியாக‌ இருப்பின், (அல்லது) லக்னாதிபதிகளோ அல்லது ஏழாம் இட‌த்துக்குரிய‌வ‌ர்க‌ள். ஷ‌ஷ்டாக‌மாக இருந்தால் திருப்தியான இய‌ல்பான‌ இனிதான‌ ம‌ண‌ வாழ்க்கை
    அமையுமா ?.
    சுப்பு
    தஞ்சை./////
    Rasi match is for mutual attraction.
    Ashtama sashtamam is the lords are placed in 6 & 8th position to each other
    Normally these two particularly avoiding astama shastamam is important in fixing a marriage!

    ReplyDelete
  45. ////கோவை விமல்(vimal) said...
    //வரும் திங்கட்கிழமை மந்த்லி டெஸ்ட்! ஞாபகப்படுத்துங்கள்!//
    உள்ளேன் வாத்தியரே, கண்டிப்பாக
    வழக்கம்போல அம்பி hall ticket number என் அருகில்.////

    நீங்கள் உங்கள் ஹால் டிக்கெட்டைத் தொலைக்காமல் எடுத்துக்கொண்டு வருங்கள். அதுபோதும்

    ReplyDelete
  46. ////THE BOSS said...
    very nice sir/////

    Thanks Boss (Like telling in movies)

    ReplyDelete
  47. உள்ளேன் ஐயா!
    வகுப்புக்கு ரொம்ப லேட் :-((

    ஏழாம் வீடு,வீட்டின் அதிபதி,காரகன் மூன்றும் ஒரே கிரகமாக இருக்கும்பட்சத்தில் இவ்விதி பொருந்துமா?

    ReplyDelete
  48. /////தங்ஸ் said...
    உள்ளேன் ஐயா!
    வகுப்புக்கு ரொம்ப லேட் :-((
    ஏழாம் வீடு,வீட்டின் அதிபதி,காரகன் மூன்றும் ஒரே கிரகமாக இருக்கும்பட்சத்தில் இவ்விதி பொருந்துமா?/////

    7ம் வீட்டின் அதிபதி மற்றும் காரகனாக இருக்கும் வாய்ப்பு சுக்கிரனிற்கு மட்டுமே உண்டு. மேஷம் & விருச்சிக ராசிக்காரர்களுக்கு மட்டுமே இப்படி அமைய வாய்ப்பு உண்டு. அமைந்தால் விதி பொருந்தும்!

    ReplyDelete
  49. ///7ம் வீட்டின் அதிபதி மற்றும் காரகனாக இருக்கும் வாய்ப்பு சுக்கிரனிற்கு மட்டுமே உண்டு. மேஷம் & விருச்சிக ராசிக்காரர்களுக்கு மட்டுமே இப்படி அமைய வாய்ப்பு உண்டு. அமைந்தால் விதி பொருந்தும்!////

    Is it for only mesha and virchika lagna you mean or rasi????

    -Shankar

    ReplyDelete
  50. /////Anonymous said...
    ///7ம் வீட்டின் அதிபதி மற்றும் காரகனாக இருக்கும் வாய்ப்பு சுக்கிரனிற்கு மட்டுமே உண்டு. மேஷம் & விருச்சிக ராசிக்காரர்களுக்கு மட்டுமே இப்படி அமைய வாய்ப்பு உண்டு. அமைந்தால் விதி பொருந்தும்!////

    Is it for only mesha and virchika lagna you mean or rasi????
    -Shankar/////

    Sorry for the mistake ...மேஷ & விருச்சிக லக்கினக்காரர்களுக்கு மட்டுமே உண்டு!
    நன்றி சங்கர்!

    ReplyDelete
  51. வாத்தியாரே..

    லேட்டானதற்கு மன்னிக்கவும்.

    இந்தப் பாடத்தையும் படித்து முடித்துள்ளேன்.. உடனேயே ஹோம்வொர்க் செய்தால்தான் மனதில் நிற்கும்போலத் தெரிகிறது.

    என் கதி எனக்கேத் தெரிய மறுக்கிறது.. என்ன செய்வது..?

    பரல்கள் பற்றிய பாடங்கள் எனக்கு மட்டும் புரியவில்லை. நீங்கள் கொடுத்துள்ள சுட்டியும் வேலை செய்யவில்லை. என்ன செய்வது?

    ReplyDelete
  52. வாத்தியாரே..

    லேட்டானதற்கு மன்னிக்கவும்.

    இந்தப் பாடத்தையும் படித்து முடித்துள்ளேன்.. உடனேயே ஹோம்வொர்க் செய்தால்தான் மனதில் நிற்கும்போலத் தெரிகிறது.

    என் கதி எனக்கேத் தெரிய மறுக்கிறது.. என்ன செய்வது..?

    பரல்கள் பற்றிய பாடங்கள் எனக்கு மட்டும் புரியவில்லை. நீங்கள் கொடுத்துள்ள சுட்டியும் வேலை செய்யவில்லை. என்ன செய்வது?

    ReplyDelete
  53. /////////உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
    வாத்தியாரே..
    லேட்டானதற்கு மன்னிக்கவும்.
    இந்தப் பாடத்தையும் படித்து முடித்துள்ளேன்.. உடனேயே ஹோம்வொர்க் செய்தால்தான் மனதில் நிற்கும்போலத் தெரிகிறது.
    என் கதி எனக்கேத் தெரிய மறுக்கிறது.. என்ன செய்வது..?
    பரல்கள் பற்றிய பாடங்கள் எனக்கு மட்டும் புரியவில்லை. நீங்கள் கொடுத்துள்ள சுட்டியும் வேலை செய்யவில்லை. என்ன செய்வது?////

    சுட்டி வேலை செய்யவில்லையா?
    மொத்தமாக அல்லது சுத்தமாக நேரம் சரியில்லை போலிருக்கிறது!

    தினமும் ஒளவையார் அருளிய விநாயகர் அகவல் படியுங்கள்.
    72 வரிகள்தான். விடாமல் படியுங்கள்.
    ஒருநாள்கூட விடக்கூடாது.
    45 நாட்களில் பலன் தெரியும்!

    அதெப்படி என்று கேட்காதீர்கள். நம்பிக்கையோடு படியுங்கள்
    நம்பிக்கைதான் முக்கியம். என்ன நடக்கிறது என்று பாருங்கள்!

    அதே அகவலை சீர்காழி அற்பதமாகப் பாடியுள்ளார்
    ஒலி நாடா கிடைக்கும். கேட்டுப் பாருங்கள்

    ”என் கதி எனக்கேத் தெரிய மறுக்கிறது.. என்ன செய்வது..?”
    என்று வருத்தத்துடன் கேட்டதால் சொல்லியிருக்கிறேன்
    வகுப்பறையில் முதன் முதலாக இதை உங்களுக்குத்தான் அறியத் தந்திருக்கிறேன்!

    ReplyDelete
  54. ஏனுங்க வாத்தியார் அய்யா,
    வர்ற திங்க கெளம மந்த்லி
    டெஸ்ட்டுன்னு சொல்லிபோட்டீங்க..

    நானு..புது ஸ்டுடண்டு..சிலபசும் தெரியாது.. ஹால் டிக்கெடுங்கூட இல்ல..

    தயவு செஞ்சு கருண காட்டுங்க :))
    காப்பி மட்டும் அடிக்க மாட்டேனுங்கோ!

    நொம்ப நன்றிங்கோ..
    தமாம் பாலா

    ReplyDelete
  55. அன்பின் ஐயா,

    நீங்கள் குறிப்பிட்ட விநாயகர் அகவல், சீர்காழி கோவி. குரலில் இங்கே..

    http://www.skandagurunatha.org/deities/ganesha/audio/

    கூகுள் ஆண்டவர் கிருபையால் :-)

    ReplyDelete
  56. //////தமாம் பாலா said...
    அன்பின் ஐயா,
    நீங்கள் குறிப்பிட்ட விநாயகர் அகவல், சீர்காழி கோவி. குரலில் இங்கே..
    http://www.skandagurunatha.org/deities/ganesha/audio/
    கூகுள் ஆண்டவர் கிருபையால் :-)/////

    தகவலுக்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  57. ஜோதிடம் பற்றி அதிகம் தெரியாதெனினும், உலக நடப்பை உள்ளது உள்ளபடி தாங்கள் உரைத்திருப்பது சுவாரஸ்யமாக இருந்தது ஐயா!

    ReplyDelete
  58. /////ராமலக்ஷ்மி said...
    ஜோதிடம் பற்றி அதிகம் தெரியாதெனினும், உலக நடப்பை உள்ளது உள்ளபடி தாங்கள் உரைத்திருப்பது சுவாரஸ்யமாக இருந்தது ஐயா!//////

    வெறும் பாடம் கசக்கும். அதானால்தான் தேனோடு கலந்து தருகிறேன் சகோதரி!

    ReplyDelete
  59. வாத்தியாரே என்ன சொல்ல நினச்சேனோ அதெல்லாமே பட்டியல் போட்டு இதப்பத்தி கேக்காதீங்க வபுறுத்தாதீங்கன்னு சொல்லிட்டீங்க!
    ம்ம்ம்ம்..
    கடைபிடிக்கவில்லை என்றால் ஒரு தியரியை / விஷயத்தை தெரிந்து கொள்வதில் மட்டும் என்ன பயன்?
    இருந்தாலும் உங்க வலைப்பூ. நீங்க நினைக்கிறதும் புரியுது.
    சரி ஆகட்டும்.

    ReplyDelete
  60. ////திவா said...
    வாத்தியாரே என்ன சொல்ல நினச்சேனோ அதெல்லாமே பட்டியல் போட்டு இதப்பத்தி கேக்காதீங்க வபுறுத்தாதீங்கன்னு சொல்லிட்டீங்க!
    ம்ம்ம்ம்..
    கடைபிடிக்கவில்லை என்றால் ஒரு தியரியை / விஷயத்தை தெரிந்து கொள்வதில் மட்டும் என்ன பயன்?
    இருந்தாலும் உங்க வலைப்பூ. நீங்க நினைக்கிறதும் புரியுது.
    சரி ஆகட்டும்./////

    ஆமாம் சிலவற்றைப் பொது இடத்தில் சொல்ல இயலாது!

    ReplyDelete
  61. Thankyou Sir, Its very good article.Appreciate your decision to not tell about kind of stars postion for sucess in love life.

    But atleast you should try to explain the kind of star postion which may lead to failure in their love life.

    Based on that people can be
    careful.

    ReplyDelete
  62. //////Blogger vijayan said...
    Thankyou Sir, Its very good article.Appreciate your decision to not tell about kind of stars postion for sucess in love life. But atleast you should try to explain the kind of star postion which may lead to failure in their love life.
    Based on that people can be careful./////

    இரண்டாவதைச் சொன்னாலும், முதல் பகுதி வந்து நிற்கும்!:-))))

    ReplyDelete
  63. Dear sir,I have question in the given example horoscope, apart form astavaragha bindus,the 7 th lord jupiter is placed in the 7th house (Kendra supposed to good postion) and the Authority of marriage Venus is also exlated and placed along with 7th lord Guru, and Lord Guru aspecting the lagna the position looks good Except for the lagna lord in the 6th place and kethu in 7th place.

    Since Kethu placed in Guru's House and along with Lord Guru, should not his effect be less.
    (Like copper exhibits Gold chartertics when mixed with Gold)

    In that case with Guru's blessing the native should be get married
    or if gets married should have good married life.

    is it always the Astavaragha takes the pirority .

    Please help us to understand better.

    Thanks for your excellent work

    ReplyDelete
  64. Blogger vijayan said...
    Dear sir,I have question in the given example horoscope, apart form astavaragha bindus,the 7 th lord jupiter is placed in the 7th house (Kendra supposed to good postion) and the Authority of marriage Venus is also exlated and placed along with 7th lord Guru, and Lord Guru aspecting the lagna the position looks good Except for the lagna lord in the 6th place and kethu in 7th place.
    Since Kethu placed in Guru's House and along with Lord Guru, should not his effect be less.
    (Like copper exhibits Gold chartertics when mixed with Gold)//////

    குரு வீட்டில் கேது இருப்பது நன்மையே!
    ---------------------------------------------------------
    In that case with Guru's blessing the native should be get married
    or if gets married should have good married life.
    is it always the Astavaragha takes the pirority .///////

    அஷ்டகவர்கம் மதிப்பெண்கள் மூலம் ஒரு புரிதலைத்தரும்!
    ஏழில் இருக்கும் குருவும், உச்சமடைந்திருக்கும் சுக்கிரனும் நல்ல திருமண வாழ்க்கையைத் தருவார்கள். எதற்கு வீண் கவலை?

    ReplyDelete
  65. வணக்கம் வாத்தியார் ஐயா

    மனதுக்கு பிடித பெண் இல்லையென்ட்ரால் ஏன் திருமணம் செய்து கொள்ள வேண்டும் ?

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com