மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

4.2.08

JL.53 எவனுக்கு இங்கே இடமில்லை?

எவனுக்கு இங்கே இடமில்லை?

மீண்டும் ஜோதிடம் - பகுதி 2

இறைவன் கருணை வடிவானவர். உலகில் உள்ள ஜீவராசிகள்
அனைத்தும் - மனிதன் உட்பட - அனைத்துமே அவருக்குச்
சமமானவை தான்.

அவருக்கு வேண்டியது - வேண்டாதவை என்று எதுவும்
கிடையாது.

தன்னை நம்புகிறவனும் அல்லது நம்பாதவனும், மேலும்
தன்னை நம்புகிறவனை முட்டாள் என்று சொல்கிறவனும்
அவருக்கு ஒன்றுதான்.

தன்னை மறுத்துப் பேசுகிறவனையும் அவர் முகம் மலர்ந்து
ஏற்றுக் கொள்கிறார். அவனுக்கும் கருணை காட்டுகிறார்.
அவனுக்கும் நல்லதொரு வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கிறார்.
.
இல்லையென்றால் அவர் எப்படி இறைவனாக இருக்க முடியும்?

நம்பினாலும் அல்லது நம்பாவிட்டாலும் பாதிப்பு ஒன்றும்
அவருக்கில்லை.

சரி, அப்படியென்றால் இருவருக்கும் (நம்புகிறவன், நம்பாதவன்)
என்ன வித்தியாசம்?

நம்புகிறவன், ஒரு பிரச்சினை வரும்போது - அதை இறைவன்
பார்த்துக் கொள்வார் என்று கவலைப் படுவதை விட்டுவிட்டு
நிம்மதியாக இருப்பான். நம்பாதவன் பிரச்சினையோடு, கவலையையும்
கை பிடித்துக்கொண்டு அல்லல் படுவான்

"வேண்டுதல் வேண்டாமை இலான்அடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல"

(விருப்பும், வெறுப்பும் இல்லாத இறைவனின் அடிகளை
இடைவிடாமல் நினைப்பவர்க்கு, எவ்விடத்திலும், எக்காலத்திலும்
துன்பம் இல்லை)

என்று வள்ளுவப் பெருந்தகை எழுதிவைத்தார்.

வள்ளுவர் எழுதியதில் விருப்பு வெறுப்பு இல்லதவர் இறைவன்
என்ற முதல்வரி முக்கியம்

இறைவன் விருப்பு, வெறுப்பின்றி எல்லா மனிதர்ளையும்
சமமாகப் படைத்தார்.

நீங்கள் கேட்கலாம் - அப்படியென்றால் வாழ்க்கையில் ஏன்
பலவிதமான ஏற்றத்தாழ்வுகள்?

ஒரு குழந்தை ஏன் செல்வந்தர் வீட்டில் பிறக்கிறது?
ஒரு குழந்தை ஏன் அன்றாடம் வயிற்றுப்பசிக்கு அல்லல் படும்
ஏழைவீட்டில் பிறக்கிறது?

ஒரு குழந்தை பார்ப்பவர்கள் மகிழும் விதமாக அழாகாக
பிறக்கையில், ஒரு குழந்தை ஏன் உடல் ஊத்துடன் பிறக்கிறது?

அதைத்தான் நம் முன்னோர்கள் வாங்கி வந்த வரம் என்று
ஒரே வரியில் சொல்லியுள்ளார்கள். நாம் முன் ஜென்மத்தில்
செய்த நல் வினைகள், தீவினைகளுக்குத் தகுந்த மாதிரி
இந்தப் பிறவி அமைகிறது.

முன் பிறவியில் தான தர்மங்கள், சேவைகள் செய்தவனுக்கு
இந்தப்பிறவி அற்புதமாக அமைகிறது. அல்லாதவனுக்கு
வாழ்க்கை அல்லல்படும் விதமாக அமைகிறது.

பிறந்த மூன்றாவது நாளே, ஒரு குழந்தை தன் பெற்ற தாயாரால்
குப்பைத் தொட்டியில் போடப்படும் நிலைக்கு ஆளாகிறது என்றால்,
முன் பிறவியில் அந்தக்குழந்தை தன் தாய் தந்தையரை உதாசீனப்
படுத்திய பாவத்தைச் செய்திருக்கும். இந்தப் பிறவியில் அந்தப்
பாவத்தைக் கழிக்க அதனுடைய பிறப்பு அப்படி அமையும்.

எல்லாமே முன் ஜென்மப் பாவ, புண்ணியங்களின்படிதான்
என்றால், இங்கே, அதாவது இந்தப் பிறவியில் இறைவனின்
பங்காற்றல் என்ன?

He will give you standing power to face any situation

இறைவனின் பங்காற்றல் இல்லையென்றால் ஒருவன்
மனிதனாகவே பிறந்திருக்க முடியாது. ஏற்றத்தாழ்வுகள் இருந்தாலும்
அதைத்தாங்கும் விதமாக நஷ்ட ஈட்டைக் கொடுத்துத்தான்
அவர் நம்மைப் படைத்திருக்கிறார்

அந்த நஷ்ட ஈடும் சேரும் போதுதான் அனைவருக்கும்
337 பரல்கள் என்ற சம நிலைப்பாடு கிடைத்திருக்கிறது.

ஒருவனுக்குப் பத்தாம் வீட்டில், அதாவது ஜீவன ஸ்தானத்தில்
தேவையான பரல்கள் இன்றி அந்தவீடு அடிபட்டுபோய்
இருந்தால், நல்ல உத்தி யோகம் கிடைக்காமல் அவதிப்பட்டுக்
கொண்டிருப்பான். அதே நேரத்தில் அவனுக்கு நான்காம் வீடு
நன்றாக அமைந்திருக்கும் (சுக ஸ்தானம்)
அவனுக்கு ஒரு ஊறவினனோ அல்லது நண்பனோ உதவி
செய்து அடிப்படைத் தேவைகளுக்கு கேடு இல்லாமல் பார்த்துக்
கொள்வான்.

ஆகவே அஷ்டகவர்க்கம் கற்றுக்கொண்டபின் உங்களுக்குத்
தெரியவரும் - யாருக்கும் நீங்கள் தாழ்ந்தவரில்லை. அதேபோல
யாருக்கும் நீங்கள் உயர்ந்தவருமில்லை

உங்களுக்கு எதெது மறுக்கப்பட்டிருக்கிறதோ அதற்கு ஈடாக
வேறொன்றும் கொடுக்கப்பட்டிருக்கிறது.

ஜாதகத்தின் 12 வீடுகளும், 36 பாக்கியங்களும் மிக நன்றாக
அமைவதற்கு வாய்ப்பே கிடையாது. சரி பாதி நன்றாக அமையும்.
இருப்பதை வைத்துத் திருப்திப் பட்டுக்கொள்ள வேண்டியதுதான்.

Health இருக்கும் இடத்தி;ல் Wealth இருக்காது. Wealth இருக்கும்
இடத்தில் Health இருக்காது. இரண்டும் நன்றாக இருக்க வேண்டு
மென்றால் 1, 2, 6, 8, 9, 11, 12 ஆகிய வீடுகளில் 30 பரல்களுக்கு
மேல் அமைந்திருக்க வேண்டும். அப்படியெல்லாம் கோடியில்
ஒருவருக்குக்கூட அமையாது!

கைவண்டி இழுப்பவன், இரண்டாள் சாப்பாட்டைக் கொடுத்தால்
ஒரு வெட்டு வெட்டிவிட்டு கட்டாந்தரையில் படுத்து நன்றாகத்
தூங்குவான்.அதே சாப்பாட்டில் கால் பகுதியைக் கூட ஒரு
செல்வந்தனால் ரசித்துச் சாப்பிடமுடியாது. கேட்டால்
Blood Pressure, Sugar, என்று தனக்கிருக்கும் வியாதிகளின் பெயர்
களையும், விழுங்கும் மாத்திரைகளின் பெயர்களையும் அடுக்கிச்
சொல்வான்.

அதைத்தான் கவியரசர் கண்ணதாசன் இரண்டே வரிகளில் சுருக்கிச்
சொன்னார்.

"அது இருந்தால் இது இல்லை,இது இருந்தால் அது இல்லை
அதுவும் இதுவும் சேர்ந்திருந்தால்,அவனுக்கு இங்கே இடமில்லை!"

ஆமாம் எல்லாம் சேர்ந்து கிடைக்கப் பெற்றவனுக்கு ஆயுள் அதிகம்
இருக்காது.மேலே போய்விடுவான்.

இதையெல்லாம் உணர்ந்து நம்மை நாமே சமாதானப் படுத்திக்
கொண்டு சந்தோசமாகவும் நிம்மதியாகவும் வாழ்வதுதான்
உண்மையான வாழ்க்கை


கிராமத்தில் பெரியவர்கள் சொல்வார்கள், " டேய் சோற்றைக்
கீழே சிந்தாதே - சிந்தினால் அடுத்த ஜென்மத்தில் நீ ஈயாகப்
பிறப்பாய்"

ஈயாகப் பிறந்தால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்யும்
சிறுவன் நிச்சயாமாக அடுத்து சோற்றைச் சிந்தாமல் உண்ணப்
பழகிவிடுவான்.

"டேய் சாமி இல்லேன்னு சொல்லாதே! சொன்னால், இப்போ
வெள்ளி, சனிக்கிழமைகளிலே கோவில் வாசல்ல தட்டோட
உக்காந்திருக்கானுங்கள்ல அவனுங்க மாதிரி அடுத்த பிறவியில்
நீயும் தட்டோட உக்கார வேண்டியதிருக்கும்" இப்படியும்
சொல்லிக் கிராமத்துப் பெரியவர்கள் தங்கள் குழந்தைகளை
நெறிப்படுத்துவார்கள்.

அந்த நெறிப்படும் மனது தான் முக்கியம். அது எத்தனை
வயதில் உங்களுக்கு நெறிப்படுகிறது என்பது அதை விட முக்கியம்.

முப்பது அல்லது நாற்பது வயதிற்குள் மனது நெறிப்பட வேண்டும்.
எழுபதுவயதில் நெறிப்படுவதால் ஒன்றும் பயனில்லை!

இருபது வயதில் நண்பன் சொல்கிறான் என்பதற்காக இரண்டு
பெக் சீவாஸ் ரீகல் விஸ்கி அடித்துப் பார்ப்பது இயற்கை.
அதையே எழுபது வயது வரை செய்வதை எப்படி ஒப்புக்கொள்ள
முடியும்? நல்லது என்று எடுத்துக் கொள்ளமுடியும்? எல்லாவற்றிற்கும்
ஒரு காலகட்டம், வரைமுறை உண்டல்லவா?

சரி, மனது எதற்காக நெறிப்பட வேண்டும்?

நல்லது, கெட்டது, இன்பம், துன்பம், ஏற்றம், இறக்கம், வறுமை, செழுமை,
பெறுமை, சிறுமை என்று வாழ்க்கையின் ஒவ்வொரு பக்கத்தையும்
சமமாக எடுத்துக் கொள்ளும் பக்குவம் இருந்தால் அல்லவா வாழ்க்கை
சீராக இருக்கும். மனது எந்தச் சூழ்நிலையிலும் சந்தோஷமாக இருக்கும்.
அதைவிட முக்கியமாக நிம்மதியாக இருக்கும். அதற்குத்தான் நெறிப்படுத்தப்
பெற்ற மனது வேண்டும் Like a seasoned wood!

அதைச் சொல்லித் தருவதுதான் இந்தத் தொடரின் முக்கிய நோக்கமாகும்
--------------------------------------------------------------.
சரி, சொல்ல வந்த விஷயத்திற்கு வருகிறேன்.

அஷ்டகவர்க்கம் என்பது உங்களுடைய பிறப்பின் மதிப்பெண் சான்றிதழ்
என்று நீங்கள் வைத்துக் கொள்ளலாம். அந்தச் சான்றிதழ் பிறந்த
ஷணத்திலேயே உங்களுக்குக் கொடுக்கப்பட்டு விடுகிறது. அதை மாற்றி
எழுத யாரலும் முடியாது. எந்தக் கொம்பனுக்கும் அதிகாரமில்லை.

உங்களுடைய ஜாதகத்தின் 12 பாவங்களுக்கும் அல்லது வீடுகளுக்கும்
அந்த வீடுகளுக்கு அதிபதிகளான 7 கிரகங்களுக்கும், அவை அமைந்
துள்ள அமைப்பின்படி கணக்கிட்டு வருவதாகும். அதன் முக்கியமான
சிறப்பு யாராயிருந்தாலும் மொத்த மதிப்பெண் 337 மட்டுமே.

அதாவது எல்லோருக்குமே 337/337 தான். கூடுதல் குறைச்சலுக்கெல்லாம்
இடமில்லை.

337 வகுத்தல் 12 என்னும்போது ஒரு வீட்டின் சராசரி மதிப்பெண் 28
அந்த சராசரி மதிப்பெண்ணிற்கு மேல் இருக்கும் வீடு நல்ல நிலைமையில்
உள்ளது என்றாகிவிடும். அதேபோல ஒரு கிரகத்தின் தனி மதிப்பெண்
எட்டு. சராசரி மதிப்பெண் நான்கு. நான்கிற்கு மேல் மதிப்பெண்களுடன்
நிற்கும் கிரகம் வலுவானதாக இருக்கும். அது தன்னுடைய கோச்சாரத்
திலும் (Transit) தசா புக்தியிலும் நல்ல பலன்களைத் தரும். இல்லை
யென்றால் தீமையான பலன்களே நடைபெறும்.

Timing of events ஐக் கணக்கிடுவதற்கு இந்த அஷ்டவர்க்கம் பயன்படும்
தமிழில் இந்த மதிப்பெண்களைப் பரல்கள் என்பார்கள்.

1. 25 பரல்களுக்குக் கீழே உள்ள வீடுகள் நல்லதல்ல. அவற்றிற்குரிய
பலன்கள் சாதகமாக இருக்காது.

2. 30 பரல்கள் உள்ள வீடுகள் நல்ல பலன்களைத் தரும்.

3. 30 பரல்களுக்கு மெலே இருந்தால் மிகச் சிறந்த பலன்களைத் தரும்

4. ஆட்சி, உச்ச பலன்களோடும் அல்லது கேந்திர, திரிகோண அமைப்
போடும் ஜாதகத்தில் உள்ள கிரகங்கள்கூட தங்கள் சுய வர்க்கத்தில்
குறைந்த பரல்களோடு இருந்தால் அவைகள் நல்ல பலன்களைத் தராது

உதாரணத்திற்கு ஒரு ஜாதகனுடைய நான்காம் வீட்டில் 30 அல்லது
அதற்கு மேற்பட்ட பரல்கள் இருந்தால் ஜாதகன் நன்றாகப் படிப்பான்.

அதேபோல ஒருவனுடைய ஜாதகத்தில் ஏழாம் வீட்டில் 30ற்கும்
மேற்பட்ட பரல்கள் இருந்தால் அவனுக்கு நல்ல மனைவி கிடைப்பாள்.
உரிய காலத்தில் திருமணமாகும். பெண்ணாக இருந்தால் நல்ல, அன்பான,
அவளைப் போற்றி வைத்துக்கொள்ளக்கூடிய கணவன் கிடைப்பான்.

இப்படி ஒவ்வொரு வீட்டின் பலனையும் அதிகமான பரல்களை
வைத்துச் சிறப்பாகச் சொல்லிக் கொண்டே போகலாம்.

அதுபோல ஒருவனுடைய லக்கினத்தில் நாற்பது அல்லது அதற்கு
மேற்பட்ட பரல்கள் இருந்தால், தலைவனாகி விடுவான். அவனுக்குத்
தலைமை தாங்கும் யோகம் தேடி வரும்.

சரி ஒரு இடத்தில் 40 என்னும்போது - அங்கே 12 பரல்கள் கூடிப்
போய் விடுவதால் வேறு இடங்களில் அது குறைந்து விடுமல்லவா?
மொத்தம் 337தானே? எங்கே குறைந்து உள்ளது என்று பார்க்க
வேண்டும்!

பொதுவாகப் பார்த்தீர்கள் என்றால் தலைமை ஸ்தானத்தில் அதிகம்
பரல்கள் உள்ள தலைவர்களுக்குக் குடும்பஸ்தானத்தில் பரல்கள்
குறைவாக இருக்கும், அதனால் அவர்கள் தங்கள் குடும்பத்தை
மறந்து விட்டு தேசம், தேசம் என்று நாட்டுக்காகப் பாடு பட்டிருப்பார்கள்.


செய்யும் தொழிலுக்கு (10ஆம் வீட்டிற்கு) 30 பரல்களுக்கு மேல்
இருந்தால் சிறப்பு. நல்ல வேலை கிடைக்கும் அல்லது நல்ல தொழில்
அமையும். ஆனால் 36 ம் அதற்கு மேலும் இருந்தால் செய்யும்
வேலையில் ஒரு சபீர் பாட்டியாகவோ, அல்லது நாராயண மூர்த்தி
யாகவோ அல்லது பில் கேட்ஸாகவோ உச்சத்தைத் தொட முடியும்!

ஒவ்வொரு வீட்டிற்கும் என்னென்ன பணிகள் என்பதை முன்பே
பதிவிட்டிருக்கிறேன். தெரியாதவர்கள் சொல்லுங்கள் அடுத்த
பதிவில் அதை உள்ளிடுகிறேன்

பதிவின் நீளம் கருதி (4 பக்கங்களுக்கு மேல் வந்து விட்டது) இன்று
இத்துடன் நிறைவு செய்கிறேன். மீண்டும் அடுத்த வகுப்பில் சந்திப்போம்

படித்தவர்கள், ஒரு வரி பின்னூட்டமிடுங்கள். அடுத்த பதிவிற்கான
டானிக் அதுதான்

(தொடரும்)

55 comments:

  1. அருமையான தகவல். மிக்க நன்றி.
    //
    ஒவ்வொரு வீட்டிற்கும் என்னென்ன பணிகள் என்பதை முன்பே
    பதிவிட்டிருக்கிறேன். தெரியாதவர்கள் சொல்லுங்கள் அடுத்த
    பதிவில் அதை உள்ளிடுகிறேன்
    //
    திரும்பவும் ஒருமுறை சொல்லிவிடுங்களேன், என்னை மாதிரி புதியவர்களுக்கும் மிக உதவியாக இருக்கும்.

    ReplyDelete
  2. Sir,

    How can we calculate "Parals" in each house ? Will you teach us about it in next class ?

    Balaji

    ReplyDelete
  3. Thanks for sharing your knowledge. I truely appreciate your efforts. You are doing good job! Keep going...awaiting for more.

    Shankar

    ReplyDelete
  4. வணக்கம்,
    உள்ளேன் ஐயா
    நாலு பக்கம் என்றாலும், நானூறு தகவல்களை கொண்டது, இனி வரும் பதிவுகளும் இது போல நீளமாக இருந்தால் ஏழு நாட்கள் இடைவெளி தெரியாமல் இருக்கும். தயவு கூர்ந்து இதுபோல நீளமான பதிப்புகலாக இருக்க வேண்டுகிறேன்.

    ReplyDelete
  5. சார்
    நமஸ்காரம்
    ரொம்ப அருமையாக எழுதிகிறீர்கள் சார்.
    மிக நன்றாக இருக்கிறது.
    ஒரு துடிப்பான இளம் நபரை எட்டு வருஷம் முன் சந்தித்தேன் சார். அவர் ஒரு மேதை ஜோதிடத்தில். விச்ராந்தியாக விலாவரியாக பல செய்திகளை என்னிடம் ஜோதிடம் குறித்து அகஸ்மாத்தாக சொன்னார். இயல்பாகவே எனக்கு ஜோதிடம் மீது அதிக ஈடூபாடூம் மர்யதையும் உண்டு சார். ஆனால் தேடி ஓடி பலன் கேட்பதில்லை. இறையருள் காக்கும் என்று தந்தையார் வாக்கின் மீது நம்பி வாழ்ந்து வருகிறேன் சார். அந்த நண்பர் சொன்னார் ஜ்யோதிடம் தெரிந்து கொள்ள ஜாதகத்தில் அதற்கு அமைப்பு இருக்கோணும். சடாரென ஓரிரவு மாரடைப்பால் கஷ்டப்பட்டு அவர் என்னை கூப்பிட்டு நான் ஆச்பத்ரி அழைத்து போக, அங்கே எமேர்ஜன்சி கேர் ரூமிலே போய்ட்டார் சார் அவர். முப்பத்தஞ்சு வயசு எனக்கு. ஐம்பத்தி இரண்டு அவருக்கு. மிகவும் கலங்கிப் போனேன் சார்.
    உங்கள் பதிவுகளை படிக்க மிகவும் ஆவலாக இருக்கு. அதே சமயம் மிகவும் தயக்கமாகவும் இருக்கு சார். ஏன் என தெரியலே. இதுல உள்ள போயிட்டா வெளியே வரவே முடியாது என்று வேற ஒரு ஜாம்பவான் சொன்னார் சார். எனக்கு தெளிவு பிறக்க ஆசிர்வதிக்கவும். உங்களை வணங்கி மகிழ்கிறேன் சார்.
    நன்றி.
    God Bless You.
    அன்புடன் வணக்கம்,
    ஸ்ரீனிவாசன்.

    ReplyDelete
  6. சுப்பையா சார், உங்கள் ஜோதிட விளக்கங்கள் அனைத்தும் அருமை.
    மிகவும் பயனுள்ளதாக இருந்தது.

    ReplyDelete
  7. It is a divine effort to share this divine science with all of us.

    What is the maximum / minimum possible for a house / planet

    I pray almighty to bless u and all.

    Regards

    Partha

    ReplyDelete
  8. Sir,

    It is a really great service to share this divine knowledge with us.

    1. What is minimum/Maximum "paral" for a house / planet.

    2. 36 boons, what are they?

    Regards.

    Partha

    ReplyDelete
  9. நெறிப்படுத்துதல் பற்றி அழகாக சொல்லியுள்ளீர்கள்.
    மற்ற விஷயங்களும் நன்றாக இருக்கு.
    முழு மனிதன் என்று யாருமே கிடையாது போல் இருக்கு.

    ReplyDelete
  10. Dear Sir

    Fantastic!!!

    You are back again with a bang.

    Thanks & Very Happy sir for your come back.

    With Regards
    Kadirvel

    ReplyDelete
  11. ////Anonymous said...
    good post!//
    நன்றி அனானி நண்பரே!

    ReplyDelete
  12. ////SKumar said...
    அருமையான தகவல். மிக்க நன்றி.
    //
    ஒவ்வொரு வீட்டிற்கும் என்னென்ன பணிகள் என்பதை முன்பே
    பதிவிட்டிருக்கிறேன். தெரியாதவர்கள் சொல்லுங்கள் அடுத்த
    பதிவில் அதை உள்ளிடுகிறேன்
    //
    திரும்பவும் ஒருமுறை சொல்லிவிடுங்களேன், என்னை மாதிரி புதியவர்களுக்கும் மிக உதவியாக இருக்கும்.///

    அடுத்த பதிவில் உள்ளிடுகிறேன் நண்பரே!

    ReplyDelete
  13. ////Anonymous said...
    Sir,
    How can we calculate "Parals" in each house ? Will you teach us about it in next class ?
    Balaji////

    அது தனிப்பாடம். அதற்கான மென்பொருளைக் கொடுத்துள்ளேன். இல்லை, தனியாகத் தெரிந்து கொள்ளவேண்டுமென்றால்
    ஒரு பதிவில் அதைத் தனியாகச் சொல்லிவிடுகிறேன்

    ReplyDelete
  14. ////Anonymous said...
    Thanks for sharing your knowledge. I truely appreciate your efforts.
    You are doing good job! Keep going...awaiting for more.
    Shankar///

    நன்றி உங்களுக்கு சங்கர்!

    ReplyDelete
  15. ////விமல் said...
    வணக்கம்,
    உள்ளேன் ஐயா
    நாலு பக்கம் என்றாலும், நானூறு தகவல்களை கொண்டது,
    இனி வரும் பதிவுகளும் இது போல நீளமாக இருந்தால் ஏழு நாட்கள்
    இடைவெளி தெரியாமல் இருக்கும். தயவு கூர்ந்து இதுபோல நீளமான
    பதிப்புகலாக இருக்க வேண்டுகிறேன்.////

    ஆகட்டும் நண்பரே!

    ReplyDelete
  16. /////Srinivasan said...
    உங்கள் பதிவுகளை படிக்க மிகவும் ஆவலாக இருக்கு. அதே சமயம் மிகவும் தயக்கமாகவும் இருக்கு சார். ஏன் என தெரியலே. இதுல

    உள்ள போயிட்டா வெளியே வரவே முடியாது என்று வேற ஒரு ஜாம்பவான் சொன்னார் சார். எனக்கு தெளிவு பிறக்க ஆசிர்வதிக்கவும். உங்களை

    வணங்கி மகிழ்கிறேன் சார் நன்றி.
    God Bless You. அன்புடன் வணக்கம்,
    ஸ்ரீனிவாசன்./////

    அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை - எல்லாம் மனதைப் பொறுத்தது! தொடர்ந்து படியுங்கள்.

    ReplyDelete
  17. /////PM said...
    சுப்பையா சார், உங்கள் ஜோதிட விளக்கங்கள் அனைத்தும் அருமை.
    மிகவும் பயனுள்ளதாக இருந்தது.////

    நன்றி நண்பரே! எழுதுவதன் நோக்கமும் அதுதான்

    ReplyDelete
  18. ////Anonymous said...
    It is a divine effort to share this divine science with all of us.
    What is the maximum / minimum possible for a house / planet
    I pray almighty to bless u and all.
    Regards
    Partha////

    அடுத்தடுத்த பாடங்களில் அதெல்லாம் வரும்.

    ReplyDelete
  19. ///Partha said...
    2. 36 boons, what are they?
    Regards.
    Partha////

    முன் பதிவுகளில் எழுதியுள்ளேன். பக்கங்க¨Çப் புரட்டிப் பார்க்க வேண்டுகிறேன்

    ReplyDelete
  20. ////Anonymous said...
    good job
    go on......////

    நன்றி அனானி நண்பரே!

    ReplyDelete
  21. ////வடுவூர் குமார் said...
    நெறிப்படுத்துதல் பற்றி அழகாக சொல்லியுள்ளீர்கள்.
    மற்ற விஷயங்களும் நன்றாக இருக்கு.
    முழு மனிதன் என்று யாருமே கிடையாது போல் இருக்கு.////

    நீங்கள் சொல்லும்போதுதான் குமார் எழுதிய திருப்தி ஏற்படுகிறது.

    ReplyDelete
  22. ////kadirvel said...
    Dear Sir Fantastic!!!
    You are back again with a bang.
    Thanks & Very Happy sir for your come back.
    With Regards
    Kadirvel////

    I am writing in my usual style.
    My intention is that my write up should reach everyone who read it!

    ReplyDelete
  23. r,
    How can we calculate "Parals" in each house ? Will you teach us about it in next class ?
    Balaji////
    ////
    அது தனிப்பாடம். அதற்கான மென்பொருளைக் கொடுத்துள்ளேன். இல்லை, தனியாகத் தெரிந்து கொள்ளவேண்டுமென்றால்
    ஒரு பதிவில் அதைத் தனியாகச் சொல்லிவிடுகிறேன்
    ////
    ஆமாம். இதனையும் தனியாக சொல்லி விடுங்களேன், மிகவும் உதவியாக இருக்கும்.
    மிக்க நன்றி.

    ReplyDelete
  24. Iyya,
    Just saw you started writting again Horescope again...will read in detail and be back....

    Swetha Canada

    ReplyDelete
  25. வணக்கம் ஆசிரியர் அவர்கடகு!
    அருமையான ஒரு விளக்கம். ஒவ்வொரு வரியிலும் மனித வாழ்வின் தத்துவத்தையே விளக்கியிருக்கின்றீகள்.மேலும் அறிவதற்கு ஆவலாக உள்ளேன்.
    நன்றி
    விஜய்

    ReplyDelete
  26. ஐயா,
    முதல் வீடு என்றால், கட்டத்தின் வலது புறம் முதல் வீடா அல்ல லக்னமா, அப்படி என்றால் எதை லக்நமாக கணக்கிது வது.

    உங்கள் மக்கு மாணவன்,

    ReplyDelete
  27. ஐயா,

    விதியை மதியால் வெல்வது என்ற பழமொழிக்கு அர்த்தம் தர இயலுமா?

    ReplyDelete
  28. ///SKumar said...
    ஆமாம். இதனையும் தனியாக சொல்லி விடுங்களேன், மிகவும் உதவியாக இருக்கும்.
    மிக்க நன்றி.////

    அடுத்த பதிவில் உங்கள் வேண்டுகோள் நிறைவேறும்!

    ReplyDelete
  29. ////Swetha said... Iyya,
    Just saw you started writting again Horescope again...will read in detail and be back....
    Swetha Canada/////

    வாருங்கள் சகோதரி! உங்களைக் காணோமே என்று நினைத்தேன் - வந்து விட்டீர்கள்
    வருகைக்கு நன்றி! தொடர்ந்து படியுங்கள்!

    ReplyDelete
  30. ////Vijai said... வணக்கம் ஆசிரியர் அவர்கடகு!
    அருமையான ஒரு விளக்கம். ஒவ்வொரு வரியிலும் மனித வாழ்வின் தத்துவத்தையே விளக்கியிருக்கின்றீகள்.மேலும் அறிவதற்கு ஆவலாக உள்ளேன். நன்றி விஜய்////

    தத்துவம் தரும் மனதிற்கு ஒத்தடம்! அதனால்தான் தத்துவத்தைக் கலந்து எழுதுகிறேன்
    வெறும் பாடமென்றல் கசக்கும் நண்பரே! ஒரு கலகலப்பிற்காகத்தான் எல்லாம் கலந்து எழுதுகிறேன்

    ReplyDelete
  31. ////vimal said... ஐயா,
    முதல் வீடு என்றால், கட்டத்தின் வலது புறம் முதல் வீடா அல்ல லக்னமா, அப்படி என்றால் எதை லக்நமாக கணக்கிது வது.
    உங்கள் மக்கு மாணவன்,////

    லக்கினம்தாம் முதல் வீடு. கடிகார முள் சுற்றும் வரிசையில் அடுத்தடுத்த வீடுகள்

    ReplyDelete
  32. ////vimal said... ஐயா,
    விதியை மதியால் வெல்வது என்ற பழமொழிக்கு அர்த்தம் தர இயலுமா?////

    விதியை மதியால் வெல்வதா? No Chance
    வள்ளுவர் எழுதிய திருக்குறளில், 'ஊழ்வினை' (Destiny) அதிகாரத்தைப் படியுங்கள்
    அதில் உள்ள பத்துக் குறள்களுமே அற்புதமானவை.
    அந்த அதிகாரத்தின் பத்தாவது குறளில் சொல்கிறார் பாருங்கள்:

    "ஊழிற் பெருவலி யாஉள மற்றுஒன்று
    சூழினும் தான்முந் நுறும்

    விதியைஅ விட வலிமையானது என்ன உள்ளது? விதியை வெல்ல
    நீ மற்றொரு வழியை ஆராய்ந்தாலும் அந்த வழியில் உனக்கு முன்னரே
    அது வந்து நின்றுவிடும்.

    போதுமா சாமி?

    ReplyDelete
  33. வாத்தியாரே,

    பாடம் சுவாரசியமாகத்தான் உள்ளது. எனக்கு முருகன் மீது இருக்கிற அளவு கடந்த நம்பிக்கை ஜோஸியத்தின் மீதும் இன்னபிற துணைப் பாடங்களின் மீதும் இல்லை.

    வாழ்வியலில் ஒருவனுக்கு விதிக்கப்பட்டதுதான் நடக்கும் என்பது ஜோஸியமா அல்லது தத்துவமா என்பது எனக்குத் தெரியவில்லை. ஆனால் அதை மட்டும் நம்புகிறேன்.

    காரணம் பலரையும் கண் முன்னால் பார்த்து தெரிந்து வைத்திருக்கிறேன்.

    பாடங்களைத் தொடருங்கள்.. மாணாக்கர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். உங்களுக்கான இடம் இதுவே..

    எங்கேயும், யாரிடமும் பறி போகாத பதவி தங்களுடையதே..

    வாழ்க வளமுடன்

    ReplyDelete
  34. வாத்தியாரே,

    பாடம் சுவாரசியமாகத்தான் உள்ளது. எனக்கு முருகன் மீது இருக்கிற அளவு கடந்த நம்பிக்கை ஜோஸியத்தின் மீதும் இன்னபிற துணைப் பாடங்களின் மீதும் இல்லை.

    வாழ்வியலில் ஒருவனுக்கு விதிக்கப்பட்டதுதான் நடக்கும் என்பது ஜோஸியமா அல்லது தத்துவமா என்பது எனக்குத் தெரியவில்லை. ஆனால் அதை மட்டும் நம்புகிறேன்.

    காரணம் பலரையும் கண் முன்னால் பார்த்து தெரிந்து வைத்திருக்கிறேன்.

    பாடங்களைத் தொடருங்கள்.. மாணாக்கர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். உங்களுக்கான இடம் இதுவே..

    எங்கேயும், யாரிடமும் பறி போகாத பதவி தங்களுடையதே..

    வாழ்க வளமுடன்

    ReplyDelete
  35. அய்யா,
    பாடங்களை தொடங்கியதற்கு மிகவும் நன்றி.

    -கிச்சா.

    ReplyDelete
  36. அய்யா, திரும்பவும் சோதிடப் பாடங்களைத் தொடருவதற்கு நன்றி. அதுவும் இந்த பரல் விஷயம் அற்புதம்! நிரலியை தரவிறக்கி, பரல் எல்லாம் போட்டு வைத்து பாடத்துக்குக் காத்திருக்கிறேன் - சபீனா பாட்டியா!

    மற்ற மாணாக்கர்களுக்கு (மு.கொ.): லேபிள் என்று பதிவின் பக்கத்தில் இருக்கும் அட்டவணையில் "Astrology-ஜோதிடம்" என்பதை கிளிக்கிப் பார்த்தால், வாத்தியார் அய்யாவின் சோதிடம் பற்றிய பழைய பதிவுகள் (பழைய பாடங்கள், ஒவ்வொரு வீட்டின் பணி... எல்லாம்! ) ஒரே பக்கத்தில் வருகிறது. முயற்சி செய்யவும்.

    ReplyDelete
  37. //போதுமா சாமி?//

    போதும் (சாமி) வாத்தியரே, பழமொழி தேற்றி விட்டது,
    விதியை மதியால் வெல்ல முடியாது என கூற முற்பட்டேன், பிழை ஆகிவிட்டது,

    உங்கள் விளக்கம் அருமை, நன்றி வாத்தியரே,

    ReplyDelete
  38. வாத்தியரே,
    திருமண பொருத்தம் பற்றி இதுவரை தங்கள் ஒரு பதிப்பு கூட இடவில்லை என்று நினைக்கிறேன்.

    இந்த மக்கு மாணவனுக்காக, ஜாதகத்தில் திருமண பொருத்தம் எப்படி பார்ப்பது, மற்றும் 27 நட்சத்திரத்தில் எவைய்க்கு எவை பொருந்தும், தேவ மனுஷ அசுர கணங்கள் பற்றி விளக்கவும்.

    தனி பதிப்பாக இருந்தால் நல்லது.
    மக்கு மாணவனின் வேண்டுகோளை ஆவணம் செய்வீர்களா?

    ReplyDelete
  39. ///////உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
    பாடம் சுவாரசியமாகத்தான் உள்ளது. எனக்கு முருகன் மீது இருக்கிற அளவு கடந்த நம்பிக்கை ஜோஸியத்தின் மீதும் இன்னபிற துணைப் பாடங்களின் மீதும் இல்லை//////

    எனக்கும் முருகப்பெருமானிடம் அதீத நம்பிக்கை உண்டு! ஜோதிடம் உண்மை என்பது என் அனுபவம். அதைத்தான் சொல்லிக்
    கொடுத்துக்கொண்டிருக்கிறேன். யான் பெற்ற இன்பம், பிறரும் பெறற்றும் என்ற ஒரே நோக்கத்தில்தான் பதிவுகள்

    //////வாழ்வியலில் ஒருவனுக்கு விதிக்கப்பட்டதுதான் நடக்கும் என்பது ஜோஸியமா அல்லது தத்துவமா என்பது எனக்குத் தெரியவில்லை. ஆனால் அதை மட்டும் நம்புகிறேன்.//////

    விதிக்கப்பட்டதுதான் நடக்கும், அதில் சந்தேகம் இல்லை. முன்று வருடங்கள்தான் உனது சங்கடங்கள் - அதற்குப்பிறகு அடுத்த தசையில்
    உனது வாழ்க்கைச் சுழலே மாறும் என்று சொல்லும்போதோ அல்லது உனக்கு இந்த அளவுதான் உயரம், ஆகவே கிடைத்த வேலையில் மனத்திருப்தியோடு வலையைப் பார், என்று ஜொதிடம் அறிந்த ஒருவர் கணித்துச் சொல்லும்போது, கேட்க வந்தவனிடம் ஒரு தெளிவு பிறக்கும் பாருங்கள் - அதுதான் உன்னத நிலை. ஜோதிடம் அங்கேதான் தன் பணியைச் செய்கிறது.

    //////பாடங்களைத் தொடருங்கள்.. மாணாக்கர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். உங்களுக்கான இடம் இதுவே..
    எங்கேயும், யாரிடமும் பறி போகாத பதவி தங்களுடையதே..
    வாழ்க வளமுடன்////

    இதை உண்மைத் தமிழன் மூலமாக அந்தத் தண்டாயுதத்தான் சொல்வதாக எடுத்துக்கொள்கிறேன்
    நன்றி நண்பரே!

    ReplyDelete
  40. /////Kicha said...
    அய்யா,
    பாடங்களை தொடங்கியதற்கு மிகவும் நன்றி.
    -கிச்சா.

    அடடே, வாருங்கள் கிச்சா! உங்களையும் கானோம் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். வந்து விட்டீர்கள். நன்றி

    ReplyDelete
  41. /////கெக்கேபிக்குணி (05430279483680105313!) said...
    அய்யா, திரும்பவும் சோதிடப் பாடங்களைத் தொடருவதற்கு நன்றி. அதுவும் இந்த பரல் விஷயம் அற்புதம்! நிரலியை தரவிறக்கி, பரல் எல்லாம் போட்டு வைத்து பாடத்துக்குக் காத்திருக்கிறேன் - சபீனா பாட்டியா!
    மற்ற மாணாக்கர்களுக்கு (மு.கொ.): லேபிள் என்று பதிவின் பக்கத்தில் இருக்கும் அட்டவணையில் "Astrology-ஜோதிடம்" என்பதை கிளிக்கிப் பார்த்தால், வாத்தியார் அய்யாவின் சோதிடம் பற்றிய பழைய பதிவுகள் (பழைய பாடங்கள், ஒவ்வொரு வீட்டின் பணி... எல்லாம்! ) ஒரே பக்கத்தில் வருகிறது. முயற்சி செய்யவும்.////

    முதல் பெஞ்ச் மாணவர் கெக்கே பிக்குணி சுட்டிக்காட்டியுள்ளதை அனைவரும் பின்பற்றும்படி கேட்டுக்கொள்கிறேன்.

    ReplyDelete
  42. ////vimal said...
    //போதுமா சாமி?//
    போதும் (சாமி) வாத்தியரே, பழமொழி

    தேற்றி விட்டது,
    விதியை மதியால் வெல்ல முடியாது

    என கூற முற்பட்டேன், பிழை ஆகிவிட்டது,
    உங்கள் விளக்கம் அருமை, நன்றி

    வாத்தியரே,////

    பரவாயில்லை, விமல்!

    ReplyDelete
  43. ////vimal said...
    வாத்தியரே,
    திருமண பொருத்தம் பற்றி இதுவரை
    தங்கள் ஒரு பதிப்பு கூட இடவில்லை
    என்று நினைக்கிறேன்.
    இந்த மக்கு மாணவனுக்காக,
    ஜாதகத்தில் திருமண பொருத்தம் எப்படி
    பார்ப்பது, மற்றும் 27 நட்சத்திரத்தில்
    எவைய்க்கு எவை பொருந்தும், தேவ மனுஷ அசுர கணங்கள் பற்றி விளக்கவும்.
    தனி பதிப்பாக இருந்தால் நல்லது.
    மக்கு மாணவனின் வேண்டுகோளை
    ஆவணம் செய்வீர்களா?////

    ஒரு பதிவிலா? ஐம்பது பக்கங்களுக்கு மேல் எழுத வேண்டியதிருக்கும். கூடிய விரைவில் உங்கள் ஆசையை நிறைவேற்றுகிறேன்

    ReplyDelete
  44. //ஒரு பதிவிலா? ஐம்பது பக்கங்களுக்கு மேல் எழுத வேண்டியதிருக்கும். கூடிய விரைவில் உங்கள் ஆசையை நிறைவேற்றுகிறேன்//


    நன்றி வாத்தியரே.
    உங்களுடய அடுத்த அஷ்டவர்க்கத்தின் பதிப்புக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.

    ReplyDelete
  45. வாத்தியார் ஐயா. இந்தப் பாடத்தையும் படித்தேன். சென்ற பாடத்தின் வீட்டு வேலையை இன்னும் செய்யாததால் இந்தப் பாடம் முழுவதுமாகப் புரியவில்லை. மென்பொருளைத் தரவிறக்கி வைத்துக் கொண்டதோடு சரி. அதனை இன்னும் பயன்படுத்தவில்லை. இன்று முயன்று பார்க்கிறேன். அதைப் பார்த்தப் பின்னரும் இன்றைய பாடம் புரியவில்லை என்றால் கேட்கிறேன்.

    மிக்க நன்றி.

    ReplyDelete
  46. Madhippirkuriya Iyya,

    Oru siriya sandhegham.
    Oru grahattin thani madhippen 8 enreerghal.
    AAnal ovvoru grahathin astavarghathilum ovvonrirkkum madhippen veru padughiradhae.
    Udharanathirkku, chandran: 49, guru: 56, Sani: 39(mattum).
    Ippadi irukkayil, evvaru sani irukkum idathirkku 4kkum merpatta paralghal nirpadharku vaaippu ulladhu?

    Enenram neengal kooriyadhu pol guruvirkku: 56/12 = 4.6 varukiradhu. Aanal sanikku =3.25 dhaane varukiradhu, appadiyenral sani baghavan 4,5 madhippenghal pera vaaippughal kammi aaghinradhae..

    Naan engae thavaragha purindhirukkiraen enru , thaangal arivurutha vaendu hinraen..

    Neelamana kelvikku mannikkavum...
    Manadhil thonriyadhai kettaen...

    Siramathirkku mannikkavum.

    Anbudan,
    Maanavan,
    kandhiah.

    ReplyDelete
  47. Blogger kandhiah said...
    Madhippirkuriya Iyya,
    Oru siriya sandhegham.
    Oru grahattin thani madhippen 8 enreerghal. AAnal ovvoru grahathin astavarghathilum ovvonrirkkum madhippen veru padughiradhae.
    Udharanathirkku, chandran: 49, guru: 56, Sani: 39(mattum).
    Ippadi irukkayil, evvaru sani irukkum idathirkku 4kkum merpatta paralghal nirpadharku vaaippu ulladhu?//////

    ராசியில் சனி இருக்கும் இடத்தைக் குறித்துக்கொண்டு, அந்த இடத்தில் அவரது வர்க்கத்தில் அவரது எண் என்ன உள்ளதோ அதுதான் அவரது வர்க்க எண். எட்டு வரைக்கும் வரலாம் அவ்வளவுதான்

    Enenram neengal kooriyadhu pol guruvirkku: 56/12 = 4.6 varukiradhu. Aanal sanikku =3.25 dhaane varukiradhu, appadiyenral sani baghavan 4,5 madhippenghal pera vaaippughal kammi aaghinradhae..//////

    இப்படியெல்லாம் உங்கள் இஷ்டத்திற்கு எதற்காக வகுத்துப்பார்க்கிறீர்கள்?

    ReplyDelete
  48. அய்யா தங்களது சேவைக்கு மிகவும் நன்றி...எனக்கு மகர லக்கினம் பத்தாம் வீட்டின் பரல்கள் 37 அதன் வீட்டின் அதிபதியாகிய சுக்கிரன் ஐந்தில் புதனுடன் உள்ளார் ,,,எனக்கு எந்த துறை சிறந்தது? .ஏனென்றால் வேலைக்கு செல்லவேண்டும் என்ற தேவை இன்னும் ஏற்படவில்லை.ஆனால் லட்சியங்கள் நெறையாவே இருக்கு

    எனது அடுத்த கேள்வி .....இரண்டாம் வீட்டில் ராகுவும் செவ்வாயும் உள்ளது ஆனால் 30 பரல்கள் ...அதன் கடுமை குறையுமா.........காரணமே இல்லாமல் திருமணத்தடைகள் வருகின்றன...குடும்ப வாழ்கை பாதிக்கப்படுமா?(நான் பெண்)



    நன்றி!
    Srimano

    ReplyDelete
  49. அய்யா,



    53 ஆவது பாடத்தில், 1 , 2 , 6 , 8 ,9 ,11 , 12 ஆகிய இடங்களில் 30 பரல்களுக்கு மேல் இருந்தால் நல்லது என்று கூறி இருக்கிறீர்கள். 6 , 8 , 12 ஆகிய இடங்களில் குறைவாக பரல்கள் இருப்பதே நல்லது என்று நினைகிறேன். ஏன் என்றால், அந்த வீடுகள் பொதுவாக நல்ல பலன்களை தருவதில்லையே. அப்படி இருக்கும் போது, அதிக பரல்கள் அங்கு இருந்தால், அதிக தீமைகள் விளையாத? சற்று விளக்கம் கொடுத்தால் நன்றாக இருக்கும்.



    அன்புடன்,

    குமரன்

    ReplyDelete
  50. அய்யா ,

    எனக்கு 1ஆம் வீடு துலாம்=36 (கிரகங்கள் இல்லை,மாந்தி மட்டும்)
    2ஆம் வீடு விருச்சிகம் =30 (கிரகங்கள் இல்லை)
    3ஆம் வீடு தனுசு = 28 (சூரியன்,சுக்ரன் )
    4ஆம் வீடு மகரம் =26 (செவ்வாய்,புதன்,கேது )
    5ஆம் வீடு கும்பம்=23 (சந்திரன்)
    6ஆம் வீடு மீனம் =28 (கிரகங்கள் இல்லை)
    7ஆம் வீடு மேஷம் =27 (கிரகங்கள் இல்லை)
    8ஆம் வீடு ரிஷபம்=25 (கிரகங்கள் இல்லை)
    9ஆம் வீடு மிதுனம்=27 (கிரகங்கள் இல்லை)
    10ஆம் வீடு கடகம்=37 (ராகு)
    11ஆம் வீடு சிம்மம்=26 (கிரகங்கள் இல்லை)
    12ஆம் வீடு கன்னி =24 (குரு ,சனி )

    ReplyDelete
  51. நல்ல தகவல் அனைத்தைய்ம் படித்துவிடுவேன் உஙல் எமைல் email அனுப்பவும்

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com