மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

22.7.19

மாணவன் எழுதிய அடிக்குறிப்பு!


மாணவன் எழுதிய அடிக்குறிப்பு!

காட்சி 1

நகரப் பேருந்து ஒன்றில் பயணித்துக் கோண்டிருந்தேன்

உள்ளே நல்ல கூட்டம். நெருக்கடி.

பல கல்லூரிக் காளைகள் படியில் தொற்றிப் பயணித்துக் கொண்டிருந்தார்கள்.

படி எதிரே உள்ள ஒரு எழுத்து வாசகம் மிக அழகாக படிப்பயணத்தை எச்சரிக்கை செய்து கொண்டிருந்தது.

"படியில் பயணம்
நொடியில் மரணம்!"

அதையும் மீறிப் படியில் பயணிப்பவர்களை, நடத்துனர் எச்சரிக்கை செய்தும், அவர்கள் கேட்டபாடில்லை. கோபம் கொண்ட அவர் கிண்டலாக இப்படிச் சொன்னார்.

"என்னம்மா கண்ணுங்களா, எல்லாரும் வீட்டில சொல்லிட்டு வந்திட்டீங்களா?"

அவர்கள் சளைத்தவர்களா?

அதில் ஒருவன் சொன்னான்,  "ஆ...சொல்லாம வருவமா? சொல்லிட்டுத்தான் வந்திருக்கோம். பின்னாடிப் பாரு நம்மளை பாலோ பண்ணி வந்திக்கிட்டிருக்கில்ல ஆம்புலன்ஸ் அதுவும் நாங்க சொல்லித்தான் பின்னாடி வந்திக்கிட்டிருக்கு!"

"ஓ, அப்ப சங்கு ஊதுரவனுக்கு மட்டும் சொன்னாப் போதும் - இல்லையா?" இது நடத்துனர்.

பேருந்தில் கொல்லென்று சிரிப்பு

அடடா! என்னே நகைச்சுவை உணர்வு.
---------------------------------
காட்சி 2

ஒவ்வொரு நாளும் காலையில், வகுப்புத் துவங்கு முன்பாக கரும்பலகையில் பொன்மொழி ஒன்றை அல்லது மாணவர்களைச் சிந்திக்க வைக்கும் வாசகம் ஒன்றை எழுதி வைக்க வேண்டும் என்று தலைமை ஆசிரியர் உத்தரவு
போட்டு வைத்திருக்கிறார்.

தினம் ஒரு பொன்மொழியா - அதற்கு நான் எங்கே போவேன்?

என் வகுப்புக் கண்மணி ஒருவன்தான் "சார் கவலைப் படாதீர்கள். உங்கள் பிரச்சினையைத் தீர்த்து வைக்கிறேன்" என்று புது மண்டபத்தில் உள்ள பழைய புத்தகக் கடையில் இருந்து பொன்மொழிக்களஞ்சியம் என்ற புத்தகம் ஒன்றை வாங்கிக் கொடுத்தான். அதிலிருந்துதான் தினம் ஒன்றைப் படித்து அல்லது பிடித்துக் கரும்பலகையில் எழுதிச் சமாளித்து விடுவது என் வழக்கம்.

இன்று போதாத காலம் குறித்துக் கொண்டு வரவில்லை.

என்ன செய்யலாம் என்று யோசித்தேன்
.
பேருந்தில் படித்த வாசகம் நினைவிற்கு வர, அதையே எழுதிவிட்டேன்.

"படியில் பயணம்
நொடியில் மரணம்!
----------------------------
காட்சி 3

தலைமை ஆசிரியர் அழைத்திருந்ததால், அவரைப் பார்த்துவிட்டு ஐந்து நிமிடங்களில் வகுப்பிற்குத் திரும்பி வந்தேன்
.
என்ன நினைத்தேனோ அது நடந்து விட்டது!

எவனோ ஒரு கண்மணி நான் எழுதியிருந்த அந்த வாசகங்களுக்கு கீழே அடிக்குறிப்பு ஒன்றை எழுதி விட்டானய்யா,

எழுதி விட்டான்!

நீங்களே பாருங்கள்:

"படியில் பயணம்
நொடியில் மரணம் :

"பிடியில் கவனம்
போகுமே மரணம்!"

அதாவது நல்லாக் கம்பியைக் கெட்டியாப் பிடிச்சிக்கிட்டுப் படியில நீ பாட்டுக்குப்போடா - எப்படிடா மரணம் வரும் -

வந்தாலும் - பிடிச்சிருக்கிற பிடியைப் பாத்திட்டு அது ஓடிப்போயிரும்டான்னு எழுதியிருக்கானய்யா எழுதியிருக்கான்

இந்த மாதிரி எது செஞ்சாலும் அதுக்கொரு அடிக்குறிப்பு வச்சிருக்கிறவங்களையெல்லாம் வச்சிக்கிட்டு எப்படி சாமி
பாடம் நடத்தறது - நீங்களே சொல்லுங்கள்!
----------------------------------------------
அன்புடன்
வாத்தியார்
==================================================

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

8 comments:

  1. Good morning sir touching humour thanks sir vazhga valamudan

    ReplyDelete
  2. Respected sir,

    Good morning sir. Thank you for your message. After long gap, again our blog comes to a normal and we are also happy to receive and read your messages. A lot of thanks to The GOD Palani Andavar to bring normalcy to your health. continue your service in this country.

    N Visvanathan

    ReplyDelete
  3. வணக்கம் குருவே,

    "படியில் பயணம்
    நொடியில் மரணம் :

    "பிடியில் கவனம்
    போகுமே மரணம்!"
    பிரமாதமான அடிக்குறிப்பு!👍👌
    பலே வாத்தியாரையா!

    ReplyDelete
  4. /////Blogger kmr.krishnan said...
    very nice writing Sir./////

    நல்லது. நன்றி கிருஷ்ணன் சார்!!!!!

    ReplyDelete
  5. //////Blogger Shanmugasundaram said...
    Good morning sir touching humour thanks sir vazhga valamudan/////

    நல்லது. நன்றி நண்பரே!!!!!

    ReplyDelete
  6. ////Blogger Visvanathan said...
    Respected sir,
    Good morning sir. Thank you for your message. After long gap, again our blog comes to a normal and we are also happy to receive and read your messages. A lot of thanks to The GOD Palani Andavar to bring normalcy to your health. continue your service in this country.
    N Visvanathan/////

    உங்களின் மேலான அன்பிற்கும் பரிவிற்கும் நன்றி விஸ்வநாதன்!!!!!

    ReplyDelete
  7. //////Blogger வரதராஜன் said...
    வணக்கம் குருவே,
    "படியில் பயணம்
    நொடியில் மரணம் :
    "பிடியில் கவனம்
    போகுமே மரணம்!"
    பிரமாதமான அடிக்குறிப்பு!👍👌
    பலே வாத்தியாரையா!//////

    நல்லது. நன்றி வரதராஜன்!!!!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com