மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

19.7.19

எதற்காகச் செருப்பைக் கழற்றினான்?


எதற்காகச் செருப்பைக் கழற்றினான்?

செருப்பு என்ன சாதாரண சமாச்சாராமா - நம் கால்களின் பாதுகாவலன் அல்லவா - இடம் பொருள்

ஏவல் என்று பார்க்காமல் அதைக் கழற்றலாமா ?

கழற்றிவிடக்கூடாதுதான். ஆனால் கழற்றிவிட்டவனிடம் கேட்டாலல்லவா - உண்மைக் காரணம் தெரியும்!

வாருங்கள் என்னவென்று பார்ப்போம்

அடர்ந்த காடுகள் - மலைகள் சூழ்ந்த ரம்மியமான கிராமம் அது. அங்கே இரண்டு நண்பர்கள்.

விடுமுறை நாட்களில் இருவரும் அருகிலுள்ள காட்டிற்கு வேட்டைக்குப் போவார்கள். காட்டில் முயல், ஆடு என்று கிடைப்பதைப் பிடித்துக் கொண்டு திரும்புவார்கள்.

காட்டின் முன் பகுதில் முதல் 2 கிலோ மீட்டர் தூரம் வரைக்கும்தான் செல்வார்கள். அதற்குப் பிறகு மிகவும் அடர்ந்த காடு. கொடிய வனவிலங்குகளிடம் மாட்டிக்கொள்ளும்படி நேரிட்டுவிடும்.அதெல்லாம் அவர்களுக்குத் தெரியும்.பாதுகாப்பிற்கு ஒரு ஏர் கன் மட்டும்தான்.

சத்தம் மட்டும்தான் அது எழுப்பும்.

அப்படித்தான் அன்றும் சென்றார்கள். நான்கு முயல்கள் கிடைத்தன. வலை, சாக்கு சகிதமாகத வேட்டையை முடித்துவீட்டுத் திரும்பிக் கொண்டிருந்தார்கள்

விதி பாருங்கள். அடர்ந்த காட்டுப்பகுதியில் திரியவேண்டிய புலி ஒன்று வழி தவறி காட்டின் முன் பகுதிக்கு வந்து விட்டது.

புலி இவர்கள் இருவரையும் பார்த்து விட்டது: இவர்களும் புலியைப் பார்த்துவிட்டார்கள்!

அப்புறம்?

அப்புறம் என்ன- துண்டைக்காணேம் துணியைக் காணேமென்று வலை, பிடித்த முயல்கள் எல்லாவற்றையும் கீழே போட்டுவிட்டு, ஓட ஆரம்பித்தார்கள்

புலி துரத்தும் போது ஓடித்தப்பிப்பதற்கு ஒரு டெக்னிக் இருக்கிறது. நேர் கோட்டில் ஓடக்கூடாது.

ஜிக் ஜாக்காக வளைந்து, புதர்களில் மறைந்து ஆட்டம் காட்டித்தான் ஓட வேண்டும்.

அவர்களும் அப்படித்தான் ஓடினார்கள். புலியும் மோப்பம் பிடித்துத் துரத்திக்கொண்டு வந்தது.

அப்பொது ஓடிக்கொண்டிருந்த இருவரில் ஒருவன், தன் செரூப்புக்களைக் கழற்றி எறிந்துவிட்டு ஓட ஆரம்பித்தான்

கூட ஓடிக்கொண்டிருந்தவனுக்கு அதிர்ச்சி ! என்னடா மடையனாக இருக்கிறானே - காட்டில் முற்கள் நிறையக்கிடக்குமே - காலில் குத்தினல் என்னாவது?

ஓடிக்கொண்டே வருத்தத்துடன் அவனிடம் கேட்டான்

"ஏண்டா, செருப்பில்லாமல் ஓடினால் புலியைவிட வேகமாக ஓட முடியுமா?"

அவன் கூலாகச் சொன்னாண்,"அதெப்படி முடியம்?"

"பின் ஏண்டா நாயே, செருப்பைக் காழற்றி எறிந்தாய்?"

அவன் முன்பைவிடக்கூலாக இப்படி சொன்னான்,

"புலியைவிட வேகமாக ஓட முடியது - ஆனால் உன்னைவிட வேகமாக ஓடமுடியுமல்லவா?"
----------------------------------------------------------------------------
அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

7 comments:

  1. mul kuthinal othuvathu thadaipadhum....

    ReplyDelete
  2. வணக்கம் குருவே,
    நன்றாக ரசித்தேன்!

    ReplyDelete
  3. /////Blogger Unknown said...
    super/////

    நல்லது. நன்றி நண்பரே!!!

    ReplyDelete
  4. /////Blogger Nagendra Bharathi said...
    அருமை///////

    நல்லது. நன்றி நண்பரே!!!

    ReplyDelete
  5. //////Blogger dhanasekar said...
    mul kuthinal othuvathu thadaipadhum....//////

    நல்லது. நன்றி நண்பரே!!!

    ReplyDelete
  6. /////Blogger வரதராஜன் said...
    வணக்கம் குருவே,
    நன்றாக ரசித்தேன்!/////

    நல்லது. நன்றி வரதராஜன்!!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com