மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

17.10.16

Humour; நகைச்சுவை: மனைவி முடிவு செய்து விட்டால் என்ன ஆகும்?

Humour; நகைச்சுவை: மனைவி முடிவு செய்து விட்டால் என்ன ஆகும்?

நகைச்சுவையை நகைச்சுவையாக மட்டும் பாருங்கள். வேறு விவகாரம் வேண்டாம்!

1
ஒரு நாள் சவப்பெட்டிகளைத் தயார் செய்து விற்கும் அன்பர் ஒருவர், தான் செய்து முடித்த சவப்பெட்டி ஒன்றைத் தன்னுடைய வேன் அமைப்பில் உள்ள கார் ஒன்றில் எடுத்துக் கொண்டு, அதை கேட்ட மனிதருக்கு டெலிவரி செய்வதற்காகப் போய்க் கொண்டிருந்தார். போகும் வழியில் கார் மக்கர் செய்து வழியில் நின்று விட்டது.

அதை ஓரமாக நிறுத்திய அவர், தாமதம் ஆகக் கூடாது என்பத்ற்காக பெட்டியை மட்டும் தலைச் சுமையாக எடுத்துக் கொண்டு நடந்து செல்ல ஆரம்பித்தார்.

அது நடு நிசி நேரம். நன்றாகக் கவனிக்கவும் நடுநிசி நேரம்.

எதிரே தன்னுடைய மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்த போலீஸ் அதிகாரி ஒருவர், அவரை மடக்கிப் பிடித்து, பணம் பறிக்கும் நோக்கத்துடன், விசாரனை செய்யத் துவங்கினார்.

“யோவ் சவப்பெட்டியைத் தூக்கிக் கொண்டு, இந்த வேளையில் எங்கே போகிறாய்?”

நம் ஆசாமி பதில் சொன்னார் (அதைக் கேட்டால் நீங்கள் மிகவும் ரசிப்பீர்கள்)

”என்னைப் புதைத்திருந்த இடம் எனக்குப் பிடிக்கவில்லை. வேறு நல்ல இடத்தைத் தேடிப் பெட்டியுடன் போய்க் கொண்டிருக்கிறேன்.”

போலீஸ்காரார் மயங்கி விழுந்து விட்டார்!
-------------------------------------------------------
2
மனைவியின் சேட்டை!

Husband: " கூட்டுல உப்பு அதிகமா இருக்கு..."

Wife: "உப்பு சரியாதான் இருக்கு... காய் கொறஞ்சு போச்சு, காய் நெறய வாங்க சொன்னா எங்க கேக்றீங்க....."

Point: Wife is always right!
😜😜😜😜😜😜

Husband: "கோழி பிரியாணில கோழிய தேடிதான் பார்க்க வேண்டியிருக்கு," 😧

Wife: "இருக்றத சாப்பிடுங்க!!
இனி மைசூர்பாக் ல மைசூரை தேடுவீங்களாக்கும்....???" 😳

Point: சொன்னேன்ல, wife is always right!!
😜😜😜😜😜😜😜😜

Husband: "3நாளா தொடர்ந்து பீன்ஸ் பொரியல் பண்ணுறீயே, இனி ஒரு மாசம் நான் பீன்ஸ் சாப்பிட மாட்டேன்!!!!"

Wife: "இதையே, தினம் பீர் குடிக்கும்போதும் நினைக்கலாமே..????"

Husband: "நாளைக்கும் பீன்ஸ் பொரியல் பண்ணும்மா" 😁

Point: Accept it, wife is always right!
😜😜😜😜😜😜😜😜😜
-----------------------------
3
மனைவி : ஏங்க...! கிச்சன்ல அந்த உப்பு டப்பாவ எடுத்துக்கிட்டு
வாங்க.

கணவன் : எங்க வச்சிருக்கு காணமே?

மனைவி : உங்களால எந்த வேல தான் செய்ய முடியும்?

கணவன் : நல்லா தேடிட்டேன் பா.கிடைக்கல.
மனைவி : உங்கம்மா உங்கள எப்பிடித் தான் வளத்தாங்களோ?
உருப்படியா ஒரு வேலை செய்ய முடியுதா.உங்களை என் தலைல கட்டிவச்சு எங்க வீட்டுக்காரங்க என்னை ரொம்ப ஏமாத்திட்டாங்க.
நீங்கல்லாம் ஆபீஸ்ல பத்து பேரை எப்பிடித்தான் கட்டி மேய்க்கிறீங்க.
இதுல மேனேஜர்ன்னு ஒரு பட்டம் வேற.!!

கணவன்: இல்ல...நெஜமாவே உப்பு டப்பாவே காணலடி.

மனைவி: உங்களால ஒரு வேலையும் உருப்படியாச் செய்ய
முடியாதுன்னு தெரிஞ்சு தான் உப்பு டப்பாவ முதல்லயே இங்க கொண்டு வந்துட்டேன்.

கணவன் : ?????🙄

அனைத்து கணவர்களுக்கும் சமர்ப்பணம்....

நீதி - இன்னைக்கு சண்டை போட்டே தீரனும்னு முடிவு பன்னிட்டா,யாரு வந்தாலும் உங்கள காப்பாத்த முடியாது..!
-----------------------------------------
4
தனது வீட்டு கேட் முன் நின்று கொண்டு இருந்த உயர்சாதி நாயை அப்போது தான் கவனித்தார் அவர். அது நீண்ட நேரமாக நின்று கொண்டு இருப்பதாக தோன்றியது.

அவரையே கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டு இருந்தது சற்று வியப்பை தந்தது. மேலும் ஐந்து நிமிடம் கழிந்தது.

மெதுவாக விசிலடித்து கூப்பிட்டார். உடனே அது நாலுகால் பாய்ச்சலில் உள்ளே ஓடி வந்து அவரருகே நின்றது. வாஞ்சையுடன் அதன் கழுத்தை தடவிக்கொடுத்தார். பதிலுக்கு அதுவும் அவரது கால்களை நக்கியது. பின்னர் மாடிப்படிக்கு கீழே சென்று படுத்து நிமிடத்தில் சுகமாக உறங்கிப்போய் விட்டது.

இவருக்கோ குழப்பம். எதோ செல்வந்தருடைய நாய் என்பது அதன் தோற்றம், கட்டியிருந்த பெல்ட், தாட்டியான உடம்பு போன்றவற்றில் இருந்து புரிந்தது. இங்கே எதற்காக வந்தது.?

எழுந்து குளித்து உடைமாற்றி காலை உணவு முடித்துஅலுவலகம் புறப்பட்டு செல்லும் வரை அது தூங்கிக்கொண்டு இருந்தது. வேலையாளிடம் சொல்லிவிட்டு புறப்பட்டு சென்றார்.

மாலை வந்து பார்க்கும் போது நாய் அங்கில்லை. விசாரிக்கும் போது மதியமே சென்று விட்டதாக சொன்னார் பணியாள்.

மறுநாள் காலை. மறுபடியும் அதே நேரம். அதே நாய். அதே போல் உள்ளே வந்து இவரிடம் சற்று குலாவிவிட்டு அதே இடத்தில் தூங்கி விட்டது.

மாலை வந்து பார்க்கும் போது நாய் அங்கில்லை.
இந்த சம்பவம் பல நாட்கள் தொடர்ந்தது. வேலையாளை விட்டு பின் தொடர்ந்தும் நாய் எங்கிருந்து வந்தது என்று கண்டுபிடிக்க முடியவில்லை.

ஒருநாள் ஒரு துண்டு சீட்டில் விபரம் எழுதி கழுத்தில் கட்டி அனுப்பினார். மறுநாள் அந்த நாய் வரும்போது கழுத்தில் வேறு ஒரு துண்டு சீட்டு இருந்தது. படித்து விட்டு உருண்டு புரண்டு சிரிப்பதை பார்த்து வேலையாளுக்கு ஒன்றும் புரியவில்லை. அப்படி என்ன தான் எழுதியிருந்தது?..

"அன்பு மிக்கவருக்கு
வணக்கம். இந்த நாய் என்னுடையது தான். இது என்னுடைய மனைவியின் காட்டு கூச்சலால் விடிய விடிய தூங்காமல் கஷ்டப்பட்டு கொண்டிருந்தது. சில நாட்களாக காலை வேளைகளில் காணாமல் போய்க்கொண்டு இருந்தது. தங்கள் கடிதம் மூலம் தங்கள் வீட்டில் அது நிம்மதியாக உறங்கி எழுந்து வருவது அறிந்து கொண்டேன். தங்களது அன்பிற்கு மிக்க நன்றி".

இப்படிக்கு
...................

பி.கு.

ஒரு விண்ணப்பம். நாளை முதல் நாயுடன் நானும் வரலாமா?.. நானும் நன்றாக தூங்கி பல ஆண்டுகள் ஆகின்றன
========================================================
5
புரிந்தால் சரி :::

சில உண்மைகள்.....

*அந்தக் காலத்துல வெளியூர் பயணம் போறவங்கள கொள்ளையனுங்க மடக்கி வழிப்பறி பண்ணுவானுங்க.. இப்ப அதைத்தான் டீசெண்டா ‘டோல் கேட்’னு சொல்றாங்க…*


*வீட்ல ஃப்ரிட்ஜ் வாங்கின பிறகு, தினமும் மூன்று வகையான சட்னி கிடைக்குது.. காலைல வச்சது, நேற்று வச்சது, முந்தாநாள் வச்சது…!!*


*வாழ்ந்து முடித்த கோழியும் வாழ வேண்டிய முட்டையும் ஒரே தட்டில் செத்துக் கிடப்பதையே பிரியாணி என்கிறோம்…*


*யோசிச்சுப்பாத்தா, இந்த யோசிக்கிற பழக்கம்தான் எல்லா பிரச்சனைக்கும் காரணம்னு தோணுது…*

*இந்தியாவின் அனைத்து நதிகளுக்கும் பெண்கள் பெயரை வைத்துவிட்டு இணை என்றால், நதிகள் எப்படி இணையும்..!!*


*உண்மை, சுளீரென ஒரு அடி கொடுத்து விட்டு விடும்.. பொய், டைம் கிடைக்கும் போதெல்லாம் கூப்பிட்டு அடிக்கும்..!*


*நாம வாழ்க்கைல எதாச்சும் சாதிக்கனும்னு நினைக்கும் போதுதான் கடவுள் நமக்கு காதலியோ, மனைவியோ கொடுத்து சோதித்துவிடுகிறார்,” ‘முதல்ல இதை சமாளி மகனே’னு..!!*


*அன்று தாத்தா சாப்பிட்டதும் பாட்டி கைநிறைய வெற்றிலை மடிச்சி கொடுத்தாங்க.. இப்ப அப்பா சாப்பிட்டதும் அம்மா கைநிறைய மாத்திரை கொடுக்குறாங்க..!!*


*ஏழைக்கும் பணக்காரனுக்கும் ஒரே வித்தியாசம் தான்… ஒருத்தன் நாயா அலஞ்சா அவன் “ஏழை”.. ஒருத்தன் நாயோட அலஞ்சா அவன் “பணக்காரன்”..!!!*

--------------------------------------------
6
ஒரு கண்ணை எப்போது மூடிக் கொள்ள வேண்டும்?

திருமணம் செய்வதற்கு முன் இரண்டு கண்களையும் திறந்து வைத்துக்கொள்; திருமணம் ஆனபின் ஒன்றை மூடிக்கொள்.
- அமெரிக்கா

மணவாழ்க்கை என்பது இரும்புக் கோட்டை மாதிரி. மனைவி - வீட்டின் ஆபரணம்
- இந்தியா

கெட்டிக்காரப் பெண் - தான் காதலிப்பவனை விட்டு விட்டுத் தன்னை காதலிப்பவனைத்தான் மணப்பாள்.
- செக்கோஸ்லோவேகியா

திருமணம் செய்து கொள்ளும் முன்பும், கோர்ட்டுக்குச் செல்லும் முன்பும் தீர்க்கமாக யோசிக்க வேண்டும்.
- டென்மார்க்

திருமணத்துக்குப் பெண்ணை நாடும்போது கண்களை மூடிக் கொண்டு கடவுளை தியானம் செய்.
- வேல்ஸ்

அழுது கொண்டே வரும் மணமகள், சிரித்து கொண்டிருக்கும் மனைவியாகிறாள்.
- ஜெர்மனி

பணத்திற்காகக் கல்யாணம் செய்து கொள்ள வேண்டாம்; பணம் குறைந்த வட்டிக்கு வெளியே கிடைக்கும்!
- ஐரோப்பா

திருமணம் என்பது - மூடிய தட்டிலிருக்கும் உணவு போன்றது
- ஸ்காட்லாந்து

மணம் செய்யும் போதும், மாத்திரை சாப்பிடும்போதும் மிக அதிகமாகச் சிந்திக்கக் கூடாது.
- ஹாலந்து

கணவனின் அன்பே, பெண்ணிற்குப் பொக்கிஷம்
- தமிழ் நாடு
-------------------------------------
7
Marwadi calls Newspaper office to print death news of his Grandpa.

Clerk: Rs.50/word

Marwadi: Grandpa Dead

Clerk: Sorry sir, Minimum 5 words... 😌

Marwadi: "Grandpa Dead, wheelchair for sale"😃😃😃😃😃😃😂😂😂

🏆 Awarded As Best Joke 🏆
-------------------------------------------
இந்த 7ல் எது மிகவும் நன்றாக உள்ளது சாமிகளா?

அன்புடன்
வாத்தியார்
====================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

12 comments:

  1. ஆறாவது நகைச்சுவை (தத்துவங்கள்) மிகவும் அருமை அய்யா

    ReplyDelete
  2. Respected Sir,

    Happy morning.. All is well. especially no.5.

    Have a great day.

    Thanks & Regards,
    Ravi-avn

    ReplyDelete
  3. வணக்கம் ஐயா,ஏழாவதாக சொன்ன மார்வாடி நகைச்சுவை அருமை.மற்றதெல்லாம் 7ம் அதிபதியின் சதி.சதி(மனைவி)யால் வந்த விதி.நன்றி.

    ReplyDelete
  4. வணக்கம் குருவே!
    அனைத்துமே அசத்தல் நகைச்சுவை!

    ReplyDelete
  5. ////Blogger ravichandran said...
    Respected Sir,
    Happy morning.. All is well. especially no.5.
    Have a great day.
    Thanks & Regards,
    Ravi-avn/////

    நல்லது. நன்றி அவனாசி ரவி!

    ReplyDelete
  6. ////Blogger Sanjai said...
    last one :) Marwadi joke!////

    நல்லது. நன்றி சஞ்சை!

    ReplyDelete
  7. /////Blogger Sivakumar Selvaraj said...
    ஆறாவது நகைச்சுவை (தத்துவங்கள்) மிகவும் அருமை அய்யா////

    நல்லது. நன்றி சிவகுமார்!

    ReplyDelete
  8. ////Blogger வேப்பிலை said...
    9//////

    நல்லது. நன்றி வேப்பிலையாரே!

    ReplyDelete
  9. //////Blogger adithan said...
    வணக்கம் ஐயா,ஏழாவதாக சொன்ன மார்வாடி நகைச்சுவை அருமை.மற்றதெல்லாம் 7ம் அதிபதியின் சதி.சதி(மனைவி)யால் வந்த விதி.நன்றி./////

    நல்லது. நன்றி ஆதித்தன்!

    ReplyDelete
  10. /////Blogger வரதராஜன் said...
    வணக்கம் குருவே!
    அனைத்துமே அசத்தல் நகைச்சுவை!/////

    நல்லது. நன்றி வரதராஜன்!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com