மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

23.7.14

Astrology: quiz 63: Answer: அடடே, அவரா இவர்?

 

Astrology: quiz 63: Answer: அடடே, அவரா இவர்?

புதிர் எண் 63ற்கான விடை

23.7.2014

நேற்றையப் பதிவில், பிரபலமான ஒருவரின் ஜாதகத்தைக் கொடுத்து, அதை அலசி, இரண்டு கேள்விகளுக்கான பதிலை எழுதும்படி கேட்டிருந்தேன்.



கேட்கப்பெற்றிருந்த கேள்விகள்:

1. யாருடைய ஜாதகம்?
2. ஜாதகத்தின் மேன்மைக்கு முக்கியமான காரணம் என்ன?
------------------------------------
சரியான பதில் என்ன என்பதை முதலில் பார்ப்போம்.

1.அன்னை சாரதா தேவி அவர்களின் ஜாதகம் அது. 22.12.1853 ஆம் தேதியன்று மேற்கு வங்கத்தில் ஜயராம்பட்டி என்ற கிராமத்தில் பிறந்தவர் அவர்.
நேரம் மாலை 7.15 மணி

2.அவருடைய ஜாதகத்தில் 5ஆம் வீட்டில் கேது. உச்சம் பெற்ற கேது. ஐந்தில் கேது இருந்தால் ஒன்று அரச யோகம் அல்லது ஆண்டி யோகம் என்று அடிக்கடி சொல்வேன். அதைவைத்து முன்பு ஒருமுறை பதிவு ஒன்றையும் எழுதியுள்ளேன். அவர் பெண் துறவியானதும்,  பகவான் ராமகிஷ்ணருக்கு மனைவியாகி, துறவியாகி பணிவிடை செய்த்ததும், அன்னை என்று அவருடைய சீடர்களால் மட்டுமல்ல. அனைவராலும் அழைக்கப்பெற்று புகழ்பெற்றதும் அதனால்தான். கேதுவுடன் கூட்டாக இருக்கும் 3ஆம் இடத்து அதிபதி (வெற்றி ஸ்தான அதிபதி) புதனின் பங்காற்றலும் அதற்கு ஒத்துழைத்தது என்றால் மறுப்பதற்கில்லை. ஜாதகத்தின் மேன்மைக்கு முக்கிய காரணம் 5ல் உள்ள கேது மற்றும் புதனின் ஆதிக்கம்.
----------------------------------------

போட்டியில் மொத்தம் 19 பேர்கள் கலந்து கொண்டு உள்ளார்கள்.  அவர்களில்  12 பேர்கள் இரண்டு கேள்விகளுக்கும் சரியான பதிலை எழுயிருக்கிறார்கள். அவர்களுக்கு எனது மனம் உவந்த பாராட்டுக்கள். அவர்களின் பெயர்கள், அவர்களுடைய பின்னூட்டத்துடன் கீழே உள்ளது.

மேலும் கலந்து கொண்ட மற்றவர்களுக்கும் எனது பாராட்டுக்கள். Better luck for them next time!

அன்புடன்
வாத்தியார்

-------------------------------------------------------
1
//////Blogger Dallas Kannan said...

    Mother Jayrambati alias Sarada Devi.
    1. Kadaha laknam - Leaders Laknam
    2. Laknathipathi and yogakaraha both joined together in friends house. Kendrathipathi and konathipathi togther itself good yogam. They give Sasi-Mnagala yogam too. Guru's look adds more strength
    3. Uchha kethu and budan in 5th house. Kethi in 5, will give samrajyam or sanyasam. She got the second one.
    4. Sukra looks at Lakna
    5. Sukra and Sani parivarthanai.
    Looks like we can keep going on the greatness. I have listed what I can see quickly. Hope I covered all important ones.
    Tuesday, July 22, 2014 6:25:00 AM//////

------------------------------------------------------
2
/////Blogger Sivachandran Balasubramaniam said..
.
    மதிப்பிற்குரிய ஐயா,
    புதிர் எண்: 61 இற்கான பதில் !!!
    உதாரணமாக கொடுக்கப்பட்ட ஜாதகம் - holy mother என்று அழைக்கப்பட்ட சுவாமி ஸ்ரீ சாரதாதேவி அவர்கள் (ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் அவர்களின் மனைவி). ஸ்ரீ சாரதாதேவி அம்மா அவர்கள் 22.12.1853 இல் மேற்குவங்காளத்தில் ஜெயராம்பட்டி என்ற கிராமத்தில் பிறந்துள்ளார்.ஏழை விவசாய குடும்பத்தில் பிறந்து 5 வயதிலேயே குழந்தை திருமணம் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஷருடன் செய்தாலும் லௌகீக வாழ்வில் ஈடுபடவில்லை.தியானம், இறைவழிபாடு, போதனை, கணவர்சேவை, ஞானம் இப்படி இவர் வாழ்ந்த 66 ஆண்டு வாழ்வில் பெரும்பாலும் ஞான வாழ்வே வாழ்ந்தார். ஜாதகப்படி அதற்கான காரணங்கள்.
    முதலில் பூர்வ புண்ணிய ஸ்தானம் ஞானவாழ்விற்கு மிக முக்கியம். பூர்வ புண்ணியாதிபதி செவ்வாயும், லக்கினாதிபதி சந்திரனும் சேர்ந்து 2ம் வீட்டில் அமர்ந்ததால் இறைவனுக்கும் மக்களுக்கும் சேவைசெய்யப் பணித்தார்கள்.
    ஏழாம் அதிபதி சனி லக்கினத்திற்கு 11இல் வக்கிர நிலையில் மற்றும் 7ஆம் வீட்டில் சுக்கரன், ( காரகன் பாவநாசம் ), மேலும் வக்கிர சனி மற்றும் சுக்கரன் பரிவர்த்தனை யோகத்தில். இரண்டில் செவ்வாய். இவை அனைத்தும் அம்மா அவர்களுக்கு திருமணம் மற்றும் லௌகீக வாழ்வில் ஈடுபாடு இல்லாமல் செய்துவிட்டன.
    ஆதியோகம்/ கூர்ம யோகம்: லக்கினம் / சந்திரனுக்கு 5,6, 7 இல் நன்மை செய்யக்கூடிய கிரகம் இருந்தால் இந்த யோகம் உண்டாகும். இங்கே லக்கினத்திற்கு 5இல் புதன், 6இல் குரு, 7இல் சுக்கரன். சந்திரனுக்கு5 இல் குரு, 6ல் சுக்கரன் இருக்கிறார்கள். இதனால் ஒரு துறையில் அதிக ஈடுபாடும், ஞானமும், தலைமை தாங்குதல், வழிநடத்துதல் போன்றவற்றை செய்ய வைத்தது.
    சந்திரன் மற்றும் செவ்வாய் சேர்ந்ததால் சந்திர மங்கள யோகம் ஏற்பட்டது. புத்தி காரகன் புதன் 5இல் (கோணத்தில்) உடன் ஞானகாரகன் கேதுவும் உச்சமாக பூர்வபுண்ணிய ஸ்தானத்தில் உள்ளதால். ஆழ்ந்த சிந்தனை, ஞானம், உலகஅறிவு,ஞானம் போதித்தல் இவற்றில் ஈடுபடவைத்தது.
    மேலும் 3,6,8,12 வீடுகளின் பரல்களும் 110 (27.5 சராசரி) உள்ளதால் பற்றற்ற உலகியல் வாழ்க்கையை கொடுத்தது.
    தபஸ்வி யோகம், துறவி யோகம் (சுயநலமில்லாத,
    தியாக மனப்பான்மையுள்ள பொதுவாழ்க்கை - அதுவும் ஆன்மிகம்
    இறைப்பணி நிறைந்த பொது வாழ்க்கை) சுக்கிரன், சனி, கேது
    ஆகிய மூன்று கிரகங்களின் சேர்க்கை அல்லது ஒருவருக்
    கொருவரான பார்வை இருந்தால் இந்த யோகம் உண்டாகும்.இந்த ஜாதகத்தில் சுக்கரன், சனி பரிவர்த்தனை, சனியும் கேதுவும் பரஸ்பரபார்வையில் உள்ளதால் அம்மா அவர்கள் துறவற வாழ்க்கையில் ஈடுபட வைத்தது.
    சூரியன், சந்திரன், செவ்வாய் மற்றும் குரு - அம்மா அவர்களின் ஜாதகத்தில் இவை அனைத்தும் ஒன்றிற்கு ஒன்று திரிகோணத்தில். இது ஒரு சிறப்பான அமைப்பு.
    இப்படிக்கு
    சிவச்சந்திரன்.பா
    Tuesday, July 22, 2014 11:42:00 AM//////
------------------------------------------
3   
//////Blogger Chandrasekharan said...

    Respected Sir,
    This horoscope belongs to : Sri Sri Maa "Sarada Devi" born 22/Dec/1853.
    Jadhagathil Sani and Sukran Parivarthanai. 11-il 8-m adhipathyudan amarndha Raghu and 5-il kedhu-udan amarndha budhan aanigathil idupathai koduthargal.
    Thank You.
    Tuesday, July 22, 2014 12:29:00 PM/////

------------------------------------------
4
/////Blogger bg said...

    அன்னை சாரதா தேவி.
    பிறந்த நாள் : 22.12.1853
    மேன்மைகள்
    1.கேது உச்சம் + 5 ஆம் இடத்தில் உள்ளார்.
    2. லக்கினாதிபதி + யோகாதிபதியுடன் இணைந்து 2 இல் உள்ளார்.
    அந்த இடத்தை ஆட்சி பெற்ற குரு பார்க்கிறார்.
    3. மேலும் லக்கினாதிபதி + யோகாதிபதி + குரு+ சூரியன் திரிகோண அமைப்பில் உள்ளார்.
    4. ஆட்சி பெற்ற குரு ஆறில் இருந்து 12 அம் இடத்தை பார்க்கிறார்.
    5. 12 ஆம் அதிபதி புதன் உச்சம் பெற்ற கேதுவுடன் இணைந்து 5 ஆம் இடத்தில் இருக்கிறார்.
    6. நவாம்சத்தில் குரு உச்சம். அம்சத்தில் சனி ஆட்சி.
    7.சுக்கிரன் 7 இல் இருக்கிறார். மேலும் அம்சத்தில் 12 இல் இருப்பது இல்லறத்தை துறந்து துரவறம் செல்ல காரணம்.
    Tuesday, July 22, 2014 12:41:00 PM////
---------------------------------------------
5
//////Blogger GOWDA PONNUSAMY said...

    அய்யா அவர்களுக்கு வணக்கங்கள்.
    தங்களின் உடல் நலன் விரைவில் சீரடைந்தமைக்கு இறைவனுக்கு நன்றிகள்.
    1).கொடுக்கப் பட்டுள்ள ஜாதகம் அன்னை சாரதா தேவி அவர்களுடையது.
    சுவாமி ராமகிருஷ்ண பரமஹம்ஸர் அவர்களின் துணைவியார்.
    2). ஜாதகத்தின் மேண்மைக்கு முக்கியமான காரணம், லக்கினத்திற்க்கு 5ல் கேது பகவான் 12க்கு அதிபதி புதனுடன் கூட்டணி.
    ”ஐந்தில் கேது அரசனா? ஆண்டியா?” என்ற தலைப்பில் தாங்கள் அளித்த பாடமே இதன் விளக்கம்.

    நன்றியுடன்,
    -பொன்னுசாமி.
    Tuesday, July 22, 2014 1:02:00 PM//////
---------------------------------------------
6
//////Blogger Selvam Velusamy said...

    இது 22-12-1853ல் பிறந்த அன்னை ஸ்ரீ சாராத தேவி (ராமகிருஷ்ண பரமஹம்சர் அவர்களின் மனைவி) அவர்களின் ஜாதகம்.
    இந்த ஜாதகத்தில் மேன்மையான அமைப்பு என்னவெனில் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் மோட்ச காரகன் கேது பகவான் உட்சம் பெற்றுள்ளார். அதனால்தான் அன்னை அவர்கள் ஆன்மிகத்தில் ஒரு உயரிய இடத்தை பெற முடிந்தது. 5ல் கேது பகவான் இருந்தால் ஒன்று ஆண்டியாக இருப்பார்கள் அல்லது அரசனாக இருப்பார்கள் என்று தாங்கள் கூரியதுதானே. அத்துடன் லக்னாதிபதி சந்திரன் பூர்வபுன்னியதிபதி செவ்வாயுடன் சேர்க்கை கூடவே பாக்கியாதிபதி குருவின் பார்வையுடன்.
    நன்றி
    செல்வம்
    Tuesday, July 22, 2014 3:27:00 PM/////
----------------------------------------------------------
7
/////Blogger Ravichandran said...

    Ayya,
    Please find my findings.
    22 Dec 1853
    Sarada Devi
    1. Ketu placed in 5th house person will be living as king or Andi(Sanniyasi). She got Sanniyasi position following Ramakrishna devotee.
    2. She got Gnanam, because Ketu is Uccham and along with Bhudhan(rules for intelligence)
    3. Shani and Sukra Parivarthanai - Marriage life is not good.
    4. Shasi Mangla Yogam - Yogakaran and lagna owner sitting in second house. Due to that, she born in good family.
    5. Rahu is in 11th house is good placement, but Rahu is in Neecham.
    6. Shani is in 11th house. It is good placement for Shani. So she got lot of spiritual followers.
    Your Student,
    Trichy Ravi
    Tuesday, July 22, 2014 5:55:00 PM/////

-------------------------------------------
8
//////Blogger Chandrasekaran Suryanarayana said...

    QUIZ NO.63 வணக்கம்
    22/12/1853 அன்று கல்கட்டாவில் பிறந்தவர் சாரதாதேவி அம்மையார். திரு ராமகிருஷ்ண பரமஹம்சரின் மனைவி ஆவார்.
    கடக லக்கினத்தில் உத்திர நட்சத்திரத்தில் பிறந்தவர்.
    ஜாதகரின் மேன்மைக்கு காரணம்.
    1. நவாம்சத்தில் குரு உச்சமாக‌ அமைந்துள்ளது.
    2. அவ‌ருடைய 5ம் வயதில் சந்திர தசையில் ஆன்மீகத்தில் வாழ்க்கையை தொடங்கினார்.உச்சமான குருவின் 9ம் பார்வை சந்திரனின் மீது இருப்பதை காணலாம்.
    3. தனுசு ராசியில் 6ம் வீட்டு அதிபதி குரு அமர்ந்து அவருடைய பார்வை 2ம் வீட்டில் உள்ள லக்கினாதிபதி சந்திரனை 9ம் பார்வையால் பார்ப்பதாலும், 5ம் பார்வை 10ம்வீட்டில் பார்பதாலும், 7ம் பார்வை 12ம் வீட்டில் பார்ப்பதாலும் ஜாதரின் சிறந்த ஆன்மீக வாழ்க்கைக்கு குரு துனையாக இருந்தார்.
    4. அவருடைய வாழ்க்கை தனக்காக இல்லாமல் மற்றவர்களுக்காக தியாகம் செய்ததற்க்கு காரணம் லக்கினாதிபதி சந்திரன் 2ம் வீட்டில் அம‌ர்ந்து லக்கினத்தை 12ம் வீடாக அமைந்தது. (1/12 நிலை).
    5. 7ம் வீட்டில் அமர்ந்துள்ள சுக்கிரனின் 7ம் பார்வை லக்கினத்தின் மீது பார்ப்பதால் வசீகரமான தோற்றத்தை வழங்கி ஆன்மீக சேவையால் மக்களை கவரும் சக்தி அடைந்தார்.
    6. 5ம் வீட்டில் அமர்ந்துள்ள கேதுவும், புதனும் அவருக்கு ஆன்மீக வழிக்கு உதவியாக இருந்தது. 3ம் வீட்டு அதிபதி புதன் 5ம் வீட்டில் அமர்ந்தது விசேஷமாக அமைந்துள்ளது.
    7. கல்விக்கான 4ம் வீட்டு அதிபதி செவ்வாய் 2ம் வீட்டில் அமர்ந்து குருவின் 9ம் பார்வை பெற்று சந்திரனுடன் சேர்ந்து சசிமங்கள யோகத்தை அடைந்துள்ளார். அதனால் அவருக்கு ஆன்மீக ஞானம் கிடைத்தது.
    8. குருவும், சூரியனும் சேர்ந்து 7ம் பார்வையால் 12ம் வீட்டை பார்ப்பதால் மக்களுக்கு ஆன்மீக வழியில் சேவை செய்யும் அமைப்பை பெற்றார்.
    சந்திரசேகரன் சூரியநாராயணன்
    Tuesday, July 22, 2014 7:36:00 PM/////
-------------------------------------------------
9
//////Blogger Kirupanandan A said...

    அன்னை சாரதா தேவி அவ‌ர்களின் ஜாதகம். அவர் ஜாதகத்தில் ஞான/ மோட்ச காரகன் கேது புத்தி ஸ்தானமான 5ல் புத்திகாரகன் புதனுடன் இணைந்து உச்சமாக இருக்கிறார். அதனால் ஆன்மீகத்தில் உச்ச நிலையை அடைந்தார். 9ம் அதிபதி குரு ஆட்சியாகி ஆத்மகாரகன் சூரியனுடன் இருக்கிறார். இதுவும் ஒரு காரணம்.
    Tuesday, July 22, 2014 7:58:00 PM/////
------------------------------------------
10
//////Blogger S.Namasu said...

    மதிப்பிற்குரிய அய்யா,
    ஜோதிட புதிர் போட்டி எண் 63க்கான எனது கணிப்பு:-
    1.அன்னை சாரதாதேவின் ஜாதகம்.(பிறந்த தேதி 22-டிசம்பர்-1853)[ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சரின் துனைவியார்].
    2.ஜாதகத்தின் மேன்மைக்கான காரணங்கள்:-
    *கடக லக்கினம், சிம்ம ராசி, லக்கன அதிபதி "சந்திரன்" யோகக்காரனான "செவ்வாயுடன்" 2ம் வீட்டில் (சந்திர மங்கள யோகம்}உள்ளார்.
    *லக்கனத்திற்கு ராகு உடன் சேர்ந்த வக்கிர சனின் 3ம் பார்வை.(7&8ற்கு அதிபதி) மேலும் வேறு எந்த கிரக பார்வையும் இல்லை.
    *5ம் இடத்தில் உச்சம் பெற்ற "கேது"உடன் 12.3 க்கு அதிபதியான புதன் வலுவான நிலையில் உள்ளார்.கேது ஞானகாரகன் ஆகையால் துறவு வாழ்க்கைக்கு வித்திடும்.இதுதான் முக்கியமான காரணம்.
    *2ம் இடத்து அதிபதி "சூரியன்" 6ம் இடத்தில் அதிபதி "குரு"உடன் இனைந்து உள்ளார்.குருவின் 9ம் பார்வை 2ம் இடத்தின் மீது உள்ளது.இதனால் குடும்ப வாழ்க்கை இல்லாமல் பொதுசேவையில் ஈடுபட்டார்.
    *7ம் இடத்தில் களத்திர காரகன் "சுக்கிரன்" உள்ளார் இது காரகோபாவநாசா ன்படி காரகம் நன்றாக இருக்காது.
    * மேற்கண்ட காரனங்களால் இந்த ஜாதகம் மேன்மையானது.
    சுபம்.
    Tuesday, July 22, 2014 10:20:00 PM/////
------------------------------------------------
11   
//////Blogger Srinivas said...

    1. The horoscope is of Sri Sri Maa Sarada Devi who was born on 22nd December, 1853 in the evening time (6-8pm IST).
    She is the wife and spritual counterpart of Ramakrishna Paramahamsa.
    2.
    a. Lagnathipathi Moon is placed in 2nd house with yogakarakka Chevvai (lord of 5th and 10th houses). Shashi mangala yogam.
    Yogakarakka Chevvai aspects 5th, 8th and 9th house in this chart.
    b. 7th and 11th house lords (saturn and venus respectively) are in parivathanai.
    c. Ketu is along with 12th and 3rd lord Mercury in the chart which indicates spritual inclination. Yogakaraka aspects Ketu and budhan.
    d. 9th and 6th house lord is in 6th house along with 2nd house lord Sun. It indicates involvement in religious activities.
    Guru is uchham in navamsa. Saturn is in its own house in navamsa.
    e. As 2nd lord and 9th lord is in 6th house, the marriage life wasn't like regular marriage. Saturn aspects 5th house which has ketu and 3rd and 12th lord mercury and hence the native didn't have any kids.
    Wednesday, July 23, 2014 12:16:00 AM//////

---------------------------------------------
12
//////Blogger ravichandran said...

    Respected Sir,
    My answer for our today's Quiz No.63:
    1) The native of the given horoscope is Holy Mother Saradha Devi. Born on 22.12.1853.
    2) The special aspect of this horoscope is Lagna lord Moon associated with(fifth, tenth house as well as) Yoga karaga Mars and getting Jupiter(associated with Sun) aspects. This leads to Great Sanyacha yoga as well as blessed fame and many disciples.
    Reasons:.
    i) Moon and Mars associated in second house and getting jupiter aspects in second house as well as tenth house. This will give spritual work and fame.
    ii) In fifth house, Kedhu and Mercury are there and getting MArs aspects. This is also one of the reason for involving spritual life.
    iii) Saturn and Rahu is associated in eleventh house and aspecting fifth house.
    iv) In sixth house, Jupiter is sitting in its own house along with second house lord Sun. It gave lot of followers to her.
    v) In fifth house, Kedhu and Mercury are there and getting aspects of Saturn and Rahu as well as Mars aspects. These are caused to lose her "Ego" and leaded her to guide other people. (public service)
    With kind regards,
    Ravichandran M.
    Wednesday, July 23, 2014 1:18:00 AM/////

====================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

10 comments:

  1. mr suriyanarayan avargal maniikavum small confuse
    4th house athpathi ( kalvisthaanam
    is sukran not marsh( chevvai )

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. அய்யா,
    5ல் கேது பகவான் இருந்தால் ஒன்று ஆண்டியாக இருப்பார்கள் அல்லது அரசனாக இருப்பார்கள் என்று தாங்கள் கூறி இருந்தீர்கள் .
    5ல் ராகு பகவான் இருந்து அந்த ஜாதகக்காரன் ராகுவின் நட்சத்திரமாகிய சதயத்தில் பிறந்து இருந்தால் என்ன பலன் உண்டாகும்?

    ReplyDelete
  4. என் ஜாதகத்தில் 5ல் ராகு உச்ச செவ்வாயுடன் இருக்கிறார். கேது ஒருவரை ஞான மார்க்கத்தில் இழுத்து விடுவார் என்றால் ராகு உலக சுக போகங்களின் பக்கம் இழுப்பார்.

    ReplyDelete
  5. Respected Sir
    In one of the lessons, I read that Rahu does good when it is Mesham, Rishbam, Kadakam, Kanni, Makaram or Meenam. Rahu should do good in Virucchikam as gets uccham in there, right? You did not mention it as it obvious that Planet that are uccham does good or Rahu does not do good when in vircchikam? (This is in general. I agree there will be changes based on conjunction/aspect of other planets. For me Rahu is in 4th place with sukra in Meenam. Gave lots of problems, but it also let me finish my engineering and sent me to US in its Dasa).

    ReplyDelete
  6. /////Blogger Yagneswaran Ganapathyraman said...
    mr suriyanarayan avargal maniikavum small confuse
    4th house athpathi ( kalvisthaanam
    is sukran not marsh( chevvai )/////

    அது கவனப் பிசகாக இருக்கும். பொறுத்துக்கொள்ளுங்கள்!

    ReplyDelete
  7. ///////Blogger C.Senthil said...
    அய்யா,
    5ல் கேது பகவான் இருந்தால் ஒன்று ஆண்டியாக இருப்பார்கள் அல்லது அரசனாக இருப்பார்கள் என்று தாங்கள் கூறி இருந்தீர்கள் .
    5ல் ராகு பகவான் இருந்து அந்த ஜாதகக்காரன் ராகுவின் நட்சத்திரமாகிய சதயத்தில் பிறந்து இருந்தால் என்ன பலன் உண்டாகும்?///////

    பழைய பாடங்களில் நிறைய எழுதியுள்ளேன் நண்பரே!. முதலில் அதை எல்லாம் படியுங்கள்!

    ReplyDelete
  8. /////Blogger Kirupanandan A said...
    என் ஜாதகத்தில் 5ல் ராகு உச்ச செவ்வாயுடன் இருக்கிறார். கேது ஒருவரை ஞான மார்க்கத்தில் இழுத்து விடுவார் என்றால் ராகு உலக சுக போகங்களின் பக்கம் இழுப்பார்./////

    உச்ச செவ்வாயுடன் இருப்பதால் கட்டுப்பாடுடைய சுகங்களின் பக்கம் மட்டுமே நீங்கள் போகமுடியும். லகான் அவர் கையில் இருக்கும்:-))))

    ReplyDelete
  9. ////Blogger Dallas Kannan said...
    Respected Sir
    In one of the lessons, I read that Rahu does good when it is Mesham, Rishbam, Kadakam, Kanni, Makaram or Meenam. Rahu should do good in Virucchikam as gets uccham in there, right? You did not mention it as it obvious that Planet that are uccham does good or Rahu does not do good when in vircchikam? (This is in general. I agree there will be changes based on conjunction/aspect of other planets. For me Rahu is in 4th place with sukra in Meenam. Gave lots of problems, but it also let me finish my engineering and sent me to US in its Dasa)./////

    உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி டல்லாஸ்காரரே!!

    ReplyDelete
  10. //Blogger Subbiah Veerappan said...

    /////Blogger Kirupanandan A said...
    என் ஜாதகத்தில் 5ல் ராகு உச்ச செவ்வாயுடன் இருக்கிறார். கேது ஒருவரை ஞான மார்க்கத்தில் இழுத்து விடுவார் என்றால் ராகு உலக சுக போகங்களின் பக்கம் இழுப்பார்./////

    உச்ச செவ்வாயுடன் இருப்பதால் கட்டுப்பாடுடைய சுகங்களின் பக்கம் மட்டுமே நீங்கள் போகமுடியும். லகான் அவர் கையில் இருக்கும்:-))))//

    உண்மையில் எனக்கு ஆன்மீகத்தில்தான் நாட்டம் அதிகம் இருந்தது. இல்லறத்தில் ஈடுபட்டு மனைவி, இப்போது குழந்தை என்று ஆன பிறகு இதெல்லாம் சரி வராது என்பதால் அந்த எண்ணத்தை மெகா சைஸ் அழி ரப்பர் கொண்டு அழித்து விட்டேன். மற்ற கிரக நிலைகளும் இல்லற வாழ்விற்கு சாதகமாகதான் இருக்கின்றனவே ஒழிய ஆன்மீக வாழ்விற்கு அல்ல.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com