மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

10.7.14

Astrology: quiz 62: Answer: இன்பத் தேனையும் வெல்லும் - இசை இன்பத் தேனையும் வெல்லும்!

 

Astrology: quiz 62: Answer: இன்பத் தேனையும் வெல்லும் - இசை இன்பத் தேனையும் வெல்லும்!

துள்ளாத மனமும் துள்ளும்
சொல்லாத கதைகள் சொல்லும்
இல்லாத ஆசையைக் கிள்ளும்
இன்பத் தேனையும் வெல்லும் - இசை
இன்பத் தேனையும் வெல்லும்

துன்பக் கடலைத் தாண்டும்போது
தோணியாவது கீதம்
அன்புக் குரலில் அமுதம் கலந்தே
அருந்தத் தருவது கீதம்

எங்கும் சிதறும் எண்ணங்களையும்
இழுத்து வருவதும் கீதம்
இணைத்து மகிழ்வதும் கீதம் - துயர்
இருளை மறைப்பதும் கீதம்
(துள்ளாத)

சோர்ந்த பயிரும் நீரைக் கண்டால்
தோகை விரித்தே வளர்ந்திடும்
சாய்ந்த கொடியும் கிளையைக் கண்டால்
தாவியணைத்தே படர்ந்திடும்

மங்கை இதயம் நல்ல துணைவன்
வரவு கண்டே மகிழ்ந்திடும்,
உறவு கொண்டால் இணைந்திடும் - அதில்
உண்மை இன்பம் விளைந்திடும்
(துள்ளாத)

பாடலாக்கம். கவிஞர் பட்டுக்கோட்டை பி. கல்யாணசுந்தரம்.
படம்: படம் : கல்யாணப் பரிசு (1959)
பாடியவர்: ஜிக்கி

----------------------------------------------------------
நேற்றையப் பதிவில், அன்பர் ஒருவரின் ஜாதகத்தைக் கொடுத்து, அதை அலசி, மூன்று கேள்விகளுக்கான பதிலை எழுதும்படி கேட்டிருந்தேன்.

சரியான பதில் என்ன என்பதை முதலில் பார்ப்போம்.

1. அன்பர் உயர் கல்வி கற்றவர். முதுகலைப் பட்டப்படிப்பு வரை படித்தவர். அதற்கு மேலும் வேறு துறைகளில் படித்தவர்.
2. அன்பர் திருமணம் செய்து கொள்ளவில்லை. கட்டை பிரம்மச்சாரி.
3. சுயதொழில் செய்பவர்.self employed. உடல் உழைப்பு, மூளை, பத்திசாலித்தனம் ஆகிய 3 மட்டுமே மூலதனம்!

------------------------------------------------------------
ஜாதகப்படி அதற்கு என்ன காரணம். வாருங்கள் அலசிப்பார்ப்போம்!

1. கன்னி லக்கினக்காரர். லக்கினாதிபதி புதன் 12ல். விரையம் ஏறி உள்ளார். ஆகவே ஜாதகரின் வாழ்க்கை அவருக்குப் பயன்படாது. அவரது
உறவினர்களுக்கும், அவரைச் சுற்றியுள்ளவர்களுக்கு மட்டுமே பயன்படும்.

2. லக்கினம் பாபகர்த்தாரி யோகத்தில் உள்ளது. ஒரு பக்கம் சூரியன்.
மறுபக்கம் கேது. அது ஜாதகருக்கு, லக்கினாதிபதி 12ல் இல்லாமல் இருந்தாலும்நன்மை செய்யக்கூடிய அமைப்பு அல்ல!

3. ஆறாம் அதிபதி (வில்லன்) சனி கேந்திரத்தில் அமர்ந்து லக்கினத்தைத் தன்னுடைய நேரடிப்பார்வையில் வைத்துள்ளான். அத்துடன்
களத்திரகாரகன் 12ல். மேலும் கிரகயுத்ததில். 2ல் மாந்தி குடும்ப வாழ்க்கைக்குக் கேடானது. இம்மூன்றும் சேர்ந்து ஜாதகருக்குத் திருமண வாழ்க்கை இல்லாமல் செய்துவிட்டன. அதாவது இல்லறவாழ்க்கை இல்லாமல் செய்துவிட்டன.

4. ஏழாம் அதிபதி குருவை, எட்டாம் வீட்டுக்காரன் செவ்வாய் கட்டிப்போட்டிருக்கிறான். லக்கினாதிபதியை 12ஆம் வீட்டுக்காரன் சூரியன்
கட்டிப்போட்டிருக்கிறான். ஆறாம் வீட்டுக்காரன் லக்கினத்தையே செக்கில் வைத்திருக்கிறான். ஆக இந்த 3 அமைப்புக்களுமே மோசமானது. ஆகவே
ஜாதகருக்கு இல்லற வாழ்க்கை இல்லை. ஆனாலும் அவர் அதை ஏற்றுக் கொண்டு கட்டை பிரம்மச்சாரியாகவே இருக்கிறார்.

5. பத்தாம் அதிபதி புதன் 12ல். ஆகவே ஜாதகர் வேலைக்கும் செல்லவில்லை. வியாபாரமும் செய்யவில்லை. சுய தொழில் செய்து கொண்டிருக்கிறார்.

6. வாக்கு ஸ்தானத்தில் இருக்கும் கேது ஜாதகருக்கு அறிவுபூர்வமாக வாதாடும் திறமையை கொடுத்துள்ளான்.

7. சூரியனும் புதனும் சேர்ந்துள்ளதால் ஜாதகர் தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு அரசு சம்பந்தப்பட்ட செயல்களை
செய்து  கொடுத்துக்கொண்டிருக்கிறார். (அரசாங்க வேலையில்
இருப்பவர் அல்ல) அதன் மூலம் கிடைக்கும் வருமானம் அவருக்குப் போதுமானதாக இருப்பதால்மகிழ்ச்சியோடு தன் பணிகளைச் செய்து கொண்டிருக்கிறார்.

8.ஜாதகத்தின் மிகப் பெரிய ப்ளஸ் பாயிண்ட் சந்திரன் உச்சம் பெற்று
முக்கியத் திரிகோண வீடான 9ஆம் வீட்டில் இருக்கிறார். ஜாதகரின்
 மன நிலைமிகவும் வலிமை பெற்றது அதனால்தான். எதையும்
தாங்கும் இதயம் என்று வைத்துக்கொள்ளுங்கள். அத்துடன் அந்த வீட்டுக்காரன் 12ல் மறைந்தாலும்அமர்ந்த காரணத்திற்காக சந்திரன் அவருக்குத் தேவையான விஷயங்களை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறான்.

9. ஜாதகருக்கு 9 வயது முதல் 27 வயதுவரை ராகு திசை. எட்டாம்
இடத்து ராகுவால் அந்த திசை நன்மையானதாக இருக்கவில்லை.
அதற்குப் பிறகுவந்த குரு திசை, ஜாதகருக்கு அவருடைய சுய
தொழிலில் நன்மைகளைச் செய்தது. ஜாதகரின் நிதி நிலமையை ஸ்திரப்படுத்தியது. குரு பகவான்உச்சம் பெற்றிருப்பதோடு, லாபத்தில் அமர்ந்திருப்பதையும் கவனியுங்கள்.

10. நீசமான செவ்வாய் உச்சமான குருவோடு சேர்ந்து நீச பங்க ராஜ யோகம் பெற்றுள்ளான். எட்டாம் அதிபதிக்கு ராஜ யோகம் கிடைத்து என்ன
பயன்? எட்டாம் வீட்டால் ஏற்படக்கூடிய கஷ்டங்கள் குறையும். பஸ்ஸில் நின்று கொண்டே போகாமல் உட்கார்ந்து கொண்டு போகலாம்.
அவ்வளவுதான்!

11. நான்காம் வீட்டுக்காரன் உச்சம். அந்த வீட்டிற்கு எட்டில் இருந்தாலும்
உச்சம் பெற்றதற்கான பலனில் பாதியாவது உண்டு. அதைவிட
முக்கியமாகஅவர் உயர்கல்விக்கு உரிய இடமான ஐந்தாம் வீட்டைத் தன்னுடைய நேர் பார்வையால் பார்க்கிறார். ஆகவே அவர் ஜாதகருக்கு
உயர் கல்வி கற்கும்வாய்ப்பைக் கொடுத்தார். வித்யாகரகன் புதன் 4ஆம் வீட்டிற்கு ஒன்பதாம் இடத்தில் இருப்பதால் அவரும் கல்விக்கு உதவினார். அத்துடன் அவர்நவாம்சத்தில் உச்சம் பெற்று நல்ல நிலையில் உள்ளார். ஆகவே ஜாதகர் முதுகலைப் பட்டம் வரை படித்துத் தேறினார்.

12. ஜாதகத்தில் எத்தனை யோகங்கள் இருந்தாலும் லக்கினாதிபதியும் லக்கினமும் கெட்டிருந்தால், அவைகள் பயன்படாது. அதை மனதில் வையுங்கள்

வரும் ஆனால் வராது’ என்று சொல்வதற்கு உதாரண ஜாதகம் இது. ஜோதிடம் நன்றாகத் தெரிந்தவர்களையே கவிழ்க்கக்கூடிய ஜாதகம் இது!

அ) ஏழாம் வீட்டுக்காரன் குரு உச்சமாக இருக்கிறான். அத்துடன் தன் வீட்டைப் பார்க்கிறான். ஆனாலும் ஜாதகனுக்குத் திருமணம் ஆகவில்லை ஏன்?

லக்கினாதிபதியும் குருவும் 1/12 நிலையில் முறுக்கிக்கொண்டு உள்ளார்கள்.அதுபோல களத்திரகாரனும் குருவும் 1/12 நிலையில் முறுக்கிக்கொண்டு உள்ளார்கள்.ஆகவே திருமணம் ஆகவில்லை
----------------------
ஆ) திருமணம் ஆகியிருந்தால் என்ன ஆகியிருக்கும்?

ஜாதகத்தில் புனர்பூ தோஷம் உள்ளது. சந்திரனின் மேல் வில்லன்
சனியின் விஷேசப் பார்வை. அத்துடன் 2ல் மாந்தி குடும்பம் நடத்த விடமாட்டான்.ஜாதகரைத் தள்ளிக்கொண்டு போய்விடுவான்.
மனைவியுடன் அருகில் இருந்து குடும்பம் நடத்தியிருக்க மாட்டார்!
------------------------------
இ) ஜாதகர் ஏன் வெளி நாடு செல்லவில்லை?

கடல் கடப்பதற்கு ஒன்பதாம் வீட்டுக்காரான் முக்கியம். இங்கே
அவன் 12ல் இருக்கிறான். 9ஆம் வீட்டுக்காரன் 12ல் இருந்தால் வைத்தியத்திற்காகமட்டுமே வெளி நாடு செல்ல முடியும்.
உதாரணத்திற்கு எம்.ஜி.ஆர் மற்றும் என்.டி.ஆர் ஜாதகங்கள்.
-----------------------------
ஈ) ஜாதகர் ஏன் அரசு உத்தியோகத்திற்குச் செல்லவில்லை?

சூரியனும் புதனும் சேர்ந்திருந்தால் அந்த அமைப்பு உண்டென்பது
பொதுவான விதி (Rule). ஆனால் இங்கே அவர்கள் 12ல் இருப்பதால்
அது  நடக்கவில்லை.

அலசல் போதுமா?
-------------------------------------------------------
நமது மாணவர் டல்லாஸ் கண்ணன் குறிப்பிட்டுள்ளதுபோல இது கஷ்டமான தேர்வுதான்!

மொத்தம் 35 பேர்கள் கலந்து கொண்டு உள்ளார்கள்.  அவர்களில்
ஒருவர்கூட 3 கேள்விகளுக்கும் சரியான பதிலை எழுதவில்லை.
ஆகவே கலந்துகொண்டவர்களில் 2 பதில்களைச் சரியாக அல்லது 
சரியான பதிலையொட்டி எழுதிய 9 பேர்களைத் தேர்வு செய்கிறேன். அவர்களுக்கு எனது மனம்உவந்த பாராட்டுக்கள்

அவர்களின் பெயர்கள்:
1. R.Venkatesh
2. C.Jeevanantham
3. S.N.Ganapathi Nataraja
4. Seethalrajan
5. Chandrasekaran Suryanarayana
6. Venkat Lakshmi
7. Thangaraj
8. Manikandan

9. Srinivas

மேலும் கலந்து கொண்ட மற்றவர்களுக்கும் எனது பாராட்டுக்கள். Better luck for them next time!

அன்புடன்
வாத்தியார்

-------------------------------------------------------
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

26 comments:

  1. Dear sir,
    I have a question about quiz 62.. There is a conjection between 5 th lord and 7th lord.. The why there is no love marriage didnt happen to this person.. Kindly clarify my doubt.

    Thank you
    Mohan

    ReplyDelete
  2. நானும் இரண்டு பதில் சரியாகக் கூறியவர்களில் இருக்கிறேன். என்ன புதன் நவாம்சத்தில் உச்சம் பெற்ற்தாலும்,மூன்றாம் இடத்திற்கு உச்ச சந்திரன் 11ம் அதிபதி பார்வை இருந்ததாலும் வணிகத்தில் வெற்றி என்று கூறிவிட்டேன். சுயதொழில் என்று கூறவில்லை என்பதால் என்னை பட்டியலில் சேர்க்கவில்லை போலும்.போனால் போகட்டும்.

    தங்களுடைய அலசல் அருமை என்று சொல்லவும் வேண்டுமா?

    "இந்த ஜாதகர் கட்டை பிரம்மாச்சாரி. ஏன் திருமணமே ஆகவில்லை என்பதற்கான காரணங்களை எழுதுக" என்று கேள்வி கேட்டு, 7ம் அதிபன் 8ம் அதிபன் சேர்க்கை, ஏழாம் அதிபன் களத்திரகாரகன் நின்ற‌ வீட்டுக்கு12ல் ஆகிய இரு கருத்துக்களைக் கூறியவர்களை மட்டும் தேர்ந்து எடுத்து இருக்கலாம்.அப்போது இன்னும் பலர் பாசாகி இருக்கலாம்.

    இந்த புதிர்ப் பாடங்கள் நல்ல பயிற்சி.வாரத்திற்கு இரண்டு என்ற வகையில் அதிகரிக்க வேண்டுகிறேன்.

    ReplyDelete
  3. மதிப்பிற்குறிய ஐயா, வணக்கம்.ஒரளவு சரியான பேர் எழுதியவர்கள் பெயரில் என் பெயர் venkat lakshmi க்கு varalakshmi என்று இருக்கு. நியூமரலாஜி படி மாற்றிவிட்டீர்களா?

    ReplyDelete
  4. /////Blogger mohan1981 said...
    Dear sir,
    I have a question about quiz 62.. There is a conjection between 5 th lord and 7th lord.. The why there is no love marriage didnt happen to this person.. Kindly clarify my doubt.
    Thank you
    Mohan//////

    காதல்வர வேண்டிய வயதில் அன்பர் புயலில் சிக்கி இருந்தார் (ராகு திசையில்) புயலில் சிக்கிய நிலையில் காதல் எப்படி வரும்?

    ReplyDelete
  5. /////Blogger kmr.krishnan said...
    நானும் இரண்டு பதில் சரியாகக் கூறியவர்களில் இருக்கிறேன். என்ன புதன் நவாம்சத்தில் உச்சம் பெற்ற்தாலும்,மூன்றாம் இடத்திற்கு உச்ச சந்திரன் 11ம் அதிபதி பார்வை இருந்ததாலும் வணிகத்தில் வெற்றி என்று கூறிவிட்டேன். சுயதொழில் என்று கூறவில்லை என்பதால் என்னை பட்டியலில் சேர்க்கவில்லை போலும்.போனால் போகட்டும்.
    தங்களுடைய அலசல் அருமை என்று சொல்லவும் வேண்டுமா?
    "இந்த ஜாதகர் கட்டை பிரம்மாச்சாரி. ஏன் திருமணமே ஆகவில்லை என்பதற்கான காரணங்களை எழுதுக" என்று கேள்வி கேட்டு, 7ம் அதிபன் 8ம் அதிபன் சேர்க்கை, ஏழாம் அதிபன் களத்திரகாரகன் நின்ற‌ வீட்டுக்கு12ல் ஆகிய இரு கருத்துக்களைக் கூறியவர்களை மட்டும் தேர்ந்து எடுத்து இருக்கலாம்.அப்போது இன்னும் பலர் பாசாகி இருக்கலாம்.
    இந்த புதிர்ப் பாடங்கள் நல்ல பயிற்சி.வாரத்திற்கு இரண்டு என்ற வகையில் அதிகரிக்க வேண்டுகிறேன்./////

    இந்த ஒன்றிற்கே அதிக நேரம் பிடிக்கிறது. இரண்டு நாள் பதிவிற்கும் சேர்த்து சுமார் 6 மணி நேரம் செலவாகிறது. ஆகவே வாரம் ஒன்றுதான் சாத்தியம்!

    ReplyDelete
  6. /////Blogger Venkat Lakshmi said...
    மதிப்பிற்குறிய ஐயா, வணக்கம்.ஒரளவு சரியான பேர் எழுதியவர்கள் பெயரில் என் பெயர் venkat lakshmi க்கு varalakshmi என்று இருக்கு. நியூமரலாஜி படி மாற்றிவிட்டீர்களா?/////

    மன்னிக்கவும். கவனக்குறைவு. தவறைச் சுட்டிக்காட்டிய மேன்மைக்கு நன்றி சகோதரி! பதிவில் திருத்தம் செய்துவிட்டேன். இப்போது பாருங்கள்!

    ReplyDelete
  7. சிறந்த பாடல் பகிர்வு

    ReplyDelete
  8. ///kmr.krishnan said...
    அப்போது இன்னும் பலர் பாசாகி இருக்கலாம்///

    பாஸாவதா முக்கியம்
    பயிற்சி தானே அவசியம்...

    எத்தனை முறை படித்தாலும்
    எல்லோருக்கும் படிக்க வேண்டியது

    சோதிடம், ஆன்மிகம்
    மருத்துவம் மற்றும் சட்டம் தானே

    பாஸசென்ன பெயில் என்ன?
    பயிற்சி தானே முயற்சிப்போமே.

    வெற்றியும் தோல்வியும் நிரந்தமல்ல
    வெல்வது என ஒன்றில்லையே

    ReplyDelete
  9. அன்புடன் வாத்தியார் அய்யாவுக்கு வணக்கம் ..
    நானும் 2 கேள்விகளுக்கு சரியான பதில் [அனுசரித்துதான் ] திருமணமே ஆகவில்லை. அடுத்து அரசாங்க சம்பந்த பட்ட வேலைதான் .அனால் அரசாங்க வேலை கிடையாது.. மிகவும் சிக்கலான ஜாதக அமைப்பு ...மிகுதியான நேரம் செலவிட்டேன் ...பழைய பாடங்கள் ரிவிசன் செய்து எழத வேண்டி இருந்தது.. பரீட்சை ரெம்ப கடினம் அய்யா...தயவு செய்து.வாரம் ஒன்று போதும் ....நன்றி.

    ReplyDelete
  10. இந்த ஜாதகத்தின் கிரக நிலைகள் எந்தத் தேதியோடும் ஒத்து வரவில்லை. சரியான ஜாதகம்தானா இது.

    ReplyDelete
  11. /////Blogger mohan1981 said...
    Thank you sir for clearing my doubt ////

    அதற்கெல்லாம் நன்றி எதற்கு?

    ReplyDelete
  12. ////Blogger Yarlpavanan Kasirajalingam said...
    சிறந்த பாடல் பகிர்வு////

    பாடலை மட்டும்தான் பார்ப்பது வழக்கமா நண்பரே?

    ReplyDelete
  13. Blogger வேப்பிலை said...
    ///kmr.krishnan said...
    அப்போது இன்னும் பலர் பாசாகி இருக்கலாம்///
    பாஸாவதா முக்கியம்
    பயிற்சி தானே அவசியம்...
    எத்தனை முறை படித்தாலும்
    எல்லோருக்கும் படிக்க வேண்டியது
    சோதிடம், ஆன்மிகம்
    மருத்துவம் மற்றும் சட்டம் தானே
    பாஸசென்ன பெயில் என்ன?
    பயிற்சி தானே முயற்சிப்போமே.
    வெற்றியும் தோல்வியும் நிரந்தமல்ல
    வெல்வது என ஒன்றில்லையே/////

    வெறும் பயிற்சியில் என்ன உள்ளது? பாஸாக வேண்டாமா? அதிக மதிப்பெண்கள் எடுக்க வேண்டாமா? இல்லை என்றால் அண்ணா பல்கலைக் கழகத்தில் எப்படி சீட் கிடைக்கும் வேப்பிலையாரே? Did you know about cut off mark system?

    ReplyDelete
  14. /////Blogger hamaragana said...
    அன்புடன் வாத்தியார் அய்யாவுக்கு வணக்கம் ..
    நானும் 2 கேள்விகளுக்கு சரியான பதில் [அனுசரித்துதான் ] திருமணமே ஆகவில்லை. அடுத்து அரசாங்க சம்பந்த பட்ட வேலைதான் .அனால் அரசாங்க வேலை கிடையாது.. மிகவும் சிக்கலான ஜாதக அமைப்பு ...மிகுதியான நேரம் செலவிட்டேன் ...பழைய பாடங்கள் ரிவிசன் செய்து எழத வேண்டி இருந்தது.. பரீட்சை ரெம்ப கடினம் அய்யா...தயவு செய்து.வாரம் ஒன்று போதும் ....நன்றி./////

    அதற்கு என்ன வருத்தம்? எழுதிப் பதிவிடுவதற்கு இரண்டு நாள் பதிவிற்கும் சேர்த்து எனக்கு ஆறு மணி நேரம் ஆகியுள்ளது. அதை நினைத்துப் பாருங்கள் கணபதியாரே! எல்லாம் உங்களுக்காக்கத்தான்!

    ReplyDelete
  15. /////Blogger Kirupanandan A said...
    இந்த ஜாதகத்தின் கிரக நிலைகள் எந்தத் தேதியோடும் ஒத்து வரவில்லை. சரியான ஜாதகம்தானா இது./////

    நல்ல கதையாக இருக்கிறதே ஆடிட்டர் சார். கணக்கை மீண்டும் ஒருமுறை சரிபாருங்கள்.
    அதுபோன்று சரியில்லாத ஜாதகத்தை எல்லாம் நான் வெளியிடுவேனா? ஏன் உங்களுக்கு இந்த சந்தேகம்?
    என் மீது உள்ள நம்பிக்கை அவ்வளவுதானா?
    சரியில்லை என்றால் கிண்டி கிழங்கு எடுக்கும் கண்மணிகள் விட்டுவிவார்களா என்ன?
    முதலில் லால்குடிக்காரர் சும்மா விடுவாரா?
    பின்னூட்டத்தில் சந்திரசேகரன் சூர்யநாராயணா - பிறப்பு விவரத்தை துல்லியமாக வெளியிட்டுள்ளார். அதை முதலில் பாருங்கள். அவர் எப்படிக் கண்டுபிடித்திருப்பார் என்று சற்று யோசித்துப் பாருங்கள்!
    ஓக்கேயா?

    ReplyDelete
  16. //முதலில் லால்குடிக்காரர் சும்மா விடுவாரா?
    பின்னூட்டத்தில் சந்திரசேகரன் சூர்யநாராயணா - பிறப்பு விவரத்தை துல்லியமாக வெளியிட்டுள்ளார். அதை முதலில் பாருங்கள். அவர் எப்படிக் கண்டுபிடித்திருப்பார் என்று சற்று யோசித்துப் பாருங்கள்!
    ஓக்கேயா?//

    திரு.ச‌ந்திரசேகரன் சூர்யநாராயணன் கொடுத்துள்ள பிறந்த நேரம் 'ஃபைன் ட்யூனிங்'செய்யப்படவில்லை.அவர் கொடுத்துள்ள நேரப்படி, தசா இருப்பு கூட மூன்று மாதங்கள் வரும்.

    8 செப்டம்பர் 1966; பிறந்த நேரம் 7:59:30 காலை; ஊர் சென்னை என்று நான் கணக்கிட்டேன்.வாத்தியார் கொடுத்துள்ள தசா இருப்புடன் துல்லியமாகப் பொருந்துகிறது.

    ReplyDelete
  17. /////Blogger kmr.krishnan said...
    //முதலில் லால்குடிக்காரர் சும்மா விடுவாரா?
    பின்னூட்டத்தில் சந்திரசேகரன் சூர்யநாராயணா - பிறப்பு விவரத்தை துல்லியமாக வெளியிட்டுள்ளார். அதை முதலில் பாருங்கள். அவர் எப்படிக் கண்டுபிடித்திருப்பார் என்று சற்று யோசித்துப் பாருங்கள்!
    ஓக்கேயா?//
    திரு.ச‌ந்திரசேகரன் சூர்யநாராயணன் கொடுத்துள்ள பிறந்த நேரம் 'ஃபைன் ட்யூனிங்'செய்யப்படவில்லை.அவர் கொடுத்துள்ள நேரப்படி, தசா இருப்பு கூட மூன்று மாதங்கள் வரும்./////

    தசா புத்தி மேட்டர் வித்தியாசப்படுவது ஒன்றும் பெரிய மேட்டர் இல்லை! வாக்கியம் திருக்கணிதம் என்ற குழப்பங்கள் உள்ளன!
    >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
    /////8 செப்டம்பர் 1966; பிறந்த நேரம் 7:59:30 காலை; ஊர் சென்னை என்று நான் கணக்கிட்டேன்.வாத்தியார் கொடுத்துள்ள தசா இருப்புடன் துல்லியமாகப் பொருந்துகிறது./////

    ஆடிட்டர் கிருபானந்தன் சார்! நோட் திஸ் பாயிண்ட்!
    உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி லால்குடியாரே!

    ReplyDelete
  18. உங்கள் மேல் நம்பிக்கை இருக்கிறது. தட்டச்சு பிழையோ என்று நினைத்து விட்டேன். நேரமின்மையால் பிறப்பு விவரத்தை என்னால் துள்ளியமாக கணிக்க முடியாமல் போய் விட்டது. சுட்டிக் காட்டிய அனைவருக்கும் எனது நன்றிகள்.

    ReplyDelete
  19. Respected Sir
    One of the points that made me think he was married is that Sani is not only 6th lord, he is 5th lord as well. So was thinking poorvapunyathipati would have done some consession :)

    Not sure how to determine the strength of Guru's look. Thay say it takes away "Kodi Dhosam". May be here it helps to deal with his clients.

    Punarpoo dosam is some times confuses us. We know it will not have major impact if sun is associated with sani or moon in some form. But not sure if any other parikarams are there.
    This chart owner is about 20 days younger than my brother. For my brother, hasta natchatram and Sani is looking directly with its stonger 7th look. It just delayed the marriage till 31, but it is going well (touch wood).

    Looking at lot of charts and comparing them may lead you in the wrong direction if not done very carefully.

    ReplyDelete
  20. Sir
    Good Alasal !
    One of the above comments mentions 7th and 8th lords conjunction will lead to No Marriage.
    Appreciate your views on the same.
    Thanks and keep up the Good work.
    Regards
    Ashok

    ReplyDelete
  21. //////Blogger Kirupanandan A said...
    உங்கள் மேல் நம்பிக்கை இருக்கிறது. தட்டச்சு பிழையோ என்று நினைத்து விட்டேன். நேரமின்மையால் பிறப்பு விவரத்தை என்னால் துள்ளியமாக கணிக்க முடியாமல் போய் விட்டது. சுட்டிக் காட்டிய அனைவருக்கும் எனது நன்றிகள்./////

    நல்லது. உங்களின் தன்னிலை விளக்கத்திற்கு நன்றி ஆனந்த்!!

    ReplyDelete
  22. /////Blogger Dallas Kannan said...
    Respected Sir
    One of the points that made me think he was married is that Sani is not only 6th lord, he is 5th lord as well. So was thinking poorvapunyathipati would have done some consession :)
    Not sure how to determine the strength of Guru's look. Thay say it takes away "Kodi Dhosam". May be here it helps to deal with his clients.
    Punarpoo dosam is some times confuses us. We know it will not have major impact if sun is associated with sani or moon in some form. But not sure if any other parikarams are there.
    This chart owner is about 20 days younger than my brother. For my brother, hasta natchatram and Sani is looking directly with its stonger 7th look. It just delayed the marriage till 31, but it is going well (touch wood).
    Looking at lot of charts and comparing them may lead you in the wrong direction if not done very carefully.//////

    உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி கண்ணன்! புனர்பூ தோஷம் பற்றி முன்னரே விரிவாக எழுதியுள்ளேன். பழைய பாடங்களில் உள்ளது.

    ReplyDelete
  23. /////Blogger Ashok said...
    Sir
    Good Alasal !
    One of the above comments mentions 7th and 8th lords conjunction will lead to No Marriage.
    Appreciate your views on the same.
    Thanks and keep up the Good work.
    Regards
    Ashok/////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  24. இன்னொரு சந்தேகம்...
    இந்த பாட்டிற்கும் பதிவுக்கும்

    எதாவது சம்பந்தம் இருக்கா?
    எல்லோரும் விரும்பும்

    இந்த பழம் பெரும் நடிகர்
    இங்கு வந்தது ஏனோ?

    ReplyDelete
  25. //////Blogger வேப்பிலை said...
    இன்னொரு சந்தேகம்...
    இந்த பாட்டிற்கும் பதிவுக்கும்
    எதாவது சம்பந்தம் இருக்கா?
    எல்லோரும் விரும்பும்
    இந்த பழம் பெரும் நடிகர்
    இங்கு வந்தது ஏனோ?/////

    சம்பந்தம் இருக்கிறது! கண்டு பிடியுங்கள்!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com